Monday, October 31, 2005

சொந்த விடயத்தில் இரண்டாம் வாக்கெடுப்பு

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????



மற்றுமொரு எண்ண அலை இன்று என்னை அனாலாக தீண்டிப்போனது. சொந்த விடயங்களின் பொருட்டு நாம் முடிவு எடுக்கும் பொழுது இரண்டாவது அல்லது மூன்றாவது என்று தொடர் கருத்து கணிப்பு எந்த வகையில் தமக்கு நலம் அல்லது நலம் பயக்காது என்பதனை பற்றிய ஒரு சிறு பதிவு. வள்ளுவம் கூறுகிறது:

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.

மற்றுமொரு இடத்தில் படித்ததில் பிடித்த வரிகள்:

'Adventure without risk is Disnelyland.'

'Do what you will, this life is a fiction/And is made up of contradiction.'

மேலே கூறிய இரண்டு ஆங்கில வரிகளும் "Shaving The Inside of Your Skull" என்ற புத்தகத்திலிருந்து சுட்டது. இருப்பினும் கவனத்தில் நிறுத்தத் தகுந்த வரிகள்.

இப்பொழுது விடயத்திற்கு வருகிறேன். தமக்கு கிட்டிய உலகறிவும் உள்ளார்ந்த ஆன்மா விழிப்புணர்வும் மனிதனுக்கு மனிதன் சில வேறு நிலைகளில் (தட்டுகளில்) அமர்ந்து நாம் பார்க்கும் விடயங்களை அலசிபார்த்து எதனை எடுத்தால் நம்மால் செய்து முடிக்க முடியும் அது நம் வாழ்வு முறைக்கு உகந்ததா என்பதனை உள் மனம் கூற நாம் அதனை செயலாக படுத்துகிறோம் என்பது எனது நிலைப்பாடு. இதற்காக நான் Sigman Freud_யை உதவிக்கு அழைக்கும் எண்ணம்மில்லை இங்கு.

உண்மை இப்படியாக இருக்க நாம் எடுக்கும் முடிவுகளை மற்றவர்கள் நம்மை போலவே சிந்தித்து அவ் முடிவு எதிர் பார்த்தது போலவே அமையும் என்று அடுத்தவர்கள் கூற வேண்டும் அல்லது அம் முடிவை அங்கீகரிக்க வேண்டும்மென்று நினைப்பது தவறு என்பதும் கடந்த காலங்களில் நான் (வயதுக்கு வந்தபிறகு) தெரிந்து தெளிந்தவைகளில் ஒன்று.

அப்படி எடுத்த முடிவுகளுக்கு ஒரு உருவமும் கொடுத்து அதன் பயன்பாடும் வெளிக்கொணரும் பட்சத்தில் வேண்டுமானால் நீ என்ன சொல்ல வந்தாய் என்பதனை உனக்கருகமையிலிருந்தும் குறைந்த உலக அனுபவமே கிடைத்த உனது நெருங்கிய நண்பனோ அல்லது கூட பிறந்த சகோதரனோ கூட புரிந்து கொள்ளக் கூடும்.

பெரியப் பெரிய வெற்றிகள், ஏன் வாழ்வின் பயணப்பாடும் கூட இப்படி முரண்பாடுற்ற தீர்க்கமான முடிவுகளின் பொருட்டே அமைந்திருப்பதை நம் அன்றாட வாழ்வில் காண/கேட்டிருக்கக் கூடும். தனிப்பட்ட ஒருவரின் வாழ்வு ஏன் திறன்பட்டதாகவும் மற்றொருவரின் வாழ்வு அதாளபாதளத்தில் வீழ்ந்து கிடப்பதாகவும் கேள்வியுறுகிறோம் இவ்வளவுக்கும் அந்த இரண்டு அன்பர்களுக்கும் ஒரே மாதிரியான கல்வி, வாழ்வு சூழ்நிலை அமைந்தும். அவ் விடத்தில் தான் இந்த "decision making art" ஊடுருவி அவர்களிடத்தே உள்ள வித்தியாசங்களை வெளிச்சம் போட்டு காட்டி விடுவதாக எனக்குத் தோன்றுகிறது.

உங்களுக்கு எப்படியோ...?

0 comments:

Related Posts with Thumbnails