Friday, June 08, 2007

உலக வியபாரச் சந்தையில் *மனிதம்*...

இன்றைய தினத்தில் குழந்தை கருவிலிருக்கும் பொழுதே நம்ம ஊரு ஜனங்க பில் கேட்ஸ் பேரைச் சொல்லிச் சொல்லி அவரு மாதிரியே ஒரு பெரிய ஆளா (திருடனா) வரணும் என்ன சொல்றது கேக்குதா அப்படின்னு சொல்லிச் சொல்லி வளர்க்கிறாங்கப்பா. எனக்கு என்னமோ இந்த ஊர் புடிக்கிற புஷ்க்கும், இந்த ஆளுக்கும் ஒரு பெரிய வித்தியாசமில்லைன்னுதான் படுது.

என்ன கொஞ்ச வித்தியாசம் இருக்கு. இந்த முதல்ல குறிப்பிட்ட ஆள் ரத்தம் பார்க்கிறார் தான் அடைய வேண்டிய இலக்கை நோக்கி செல்லும் பாதையில. ஆனா, இந்த இரண்டாமாவர், தான் புஷ்யைக் காட்டிலும் புத்திசாலிங்கிற முறையில கொஞ்சம் கொஞ்சமா இந்த முழு உலகத்தையுமே தனது கண்டுபிடிப்பின் பரிணாம வளர்ச்சியின் அடிமைகளாக்கி அவர்களின் பொருளாதாரத்தை சுரண்டி, தனது வர்த்தகத்தின் மீது அசைக்க முடியா நம்பி இருக்கக் கூடிய (dependency) சூழலை வளர்த்து அதன் மீது தனது அரசாட்சியை தனக்காகவும், தன் நாட்டிற்காகவும் நிலை நாட்டி வருகிறார்.

இதில் எது எதுதெல்லாம் வியாபார உக்திகளாக மாற வேண்டும் என்ற விவஸ்தை இல்லாமல் எல்லாமே வியபாரமாக ஆகிப் போனதுதான் மனிதம் இறந்து கொண்டிருப்பதற்கான ஒரு சாட்சி.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சினிமா பாணியில் ஒரு ஸ்டண்ட் அடித்து ஒரு 60 மில்லியன் டாலர்களை மக்களின் நலத்திற்காக அள்ளி விடுகிறேன் என்று விட்டுவிட்டு, பில்லியன்களை திரும்பப் பெரும் ஒரு உக்தியும் இதில் அடக்கம் தானே. இந்த "Monopoly" மக்களை சிறுகச் சிறுக சுரண்டி முழுதுமாக கொள்ளை அடிக்கும் எண்ணத்தை தவிர வேறு என்னாவாக இருக்க முடியும்.

இந்த லட்சனத்தில் நமது கிளிப்பிள்ளை அப்பா அம்மாக்கள், தனது பிள்ளைகள், தன்னால் முடியாத ஒரு ஆசையை அதுவும் மற்றவர்களுக்காக நிகழ்த்தி காட்ட வேணுமென்று இபொழுது டாக்டர், இஞ்சினியர் ஆகும் பாட்டை நிறுத்தி விட்டு, மா திருடன் பில்லு கேட்ஸு மாதிரி நீயும் ஆகணுமென்று சொல்லி வருகிறார்கள்.

இப்பொழுது இந்தியாவில் முக்கால் வாசி குழுந்தைகளுக்கும் மேலாக தனது "ரோல் மாடலாக" இவரைத்தான் சொல்லிக் கொள்கிறார்கள் (சொல்லிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்...). இவரே தாதா, எல்லா உலக "monopoly"களுக்கும் வழிகாட்டி என்பதனை மறந்து, நினைக்கவே எரிச்சலாக வருகிறது. இந்த மக்களை என்னவென்று சொல்லுவது.



P.S: ஒரு கொசுருச் செய்தி இப்பொழுது இந்தியாவில் இந்த Windows Monopolyயை வளர்க்கும் உத்தியில் piratedபிரதியை எல்லா பயனாளிகளும் பயன்படுத்தி மக்களை பழக்கும் உத்தியில் ஈடுப்பட்டிருப்பதாக ஒரு பேச்சும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

Related Posts with Thumbnails