Friday, February 07, 2014

நமக்கும் சிம்பன்சிக்கும் இடைப்பட்ட மனித இனங்கள் எங்கே??

யு.கே டெலிகிராஃப்ல மனித பரிணாமம் சார்ந்த ஒரு கட்டுரை வாசிச்சேன். படிக்கும் பொழுது எனக்குள் தோன்றிய சில எண்ணங்களை இதுக்கு முன்பே இங்கே பேசி கேள்விகளாக முன் வைத்து கேள்விகளுக்கு பல இடங்களில் பதில்கள் வழங்கப்பட்டிருந்தாலும், இந்த படத்துடன் கூடிய டெலிகிராஃப் கட்டுரை சில கூர்ந்த அவதானத்தை பக்கம் பக்கமாக வைத்து எளிதாக பலருக்கு விளங்கிக் கொள்ள வாய்ப்பளிக்கலாம் என்பதால் இதோ மீண்டும் பரிணாம அக்கப்போர் :).  அந்த கட்டுரைக்கான சுட்டி- The evolution of man. http://www.telegraph.co.uk/science/10623993/The-evolution-of-man.html

************

மனித இன பரிணாமத்தில அடிக்கடி புத்திசாலித் தனமாக கேட்கப்படும் ஒரு கேள்வி. நாம் குரங்குகளின் இனத்திலிருந்து வந்தது உண்மையென்றால், ஏன் நமக்கும் நமக்கு இடைப்பட்ட மனித பிற இனங்களை இணைக்கும் குரங்குகளை அல்லது மனிதர்களை ஒத்த இனங்கள் காணப் பெறவில்லை என்பது. அதாவது குரங்கு, சிம்பன்சி (வாலில்லா மனித குரங்கு) வகைகளில் இன்று காணப்படுவதனைப் போன்றுங்கிறது கேள்வியா இருக்கும். அதுக்கு எத்தனை விதமா பதில் கொடுத்தாலும் விசயம் சென்று சேருவதில்லை.

கீழே உள்ள தொகுக்கப்பட்ட படக்கட்டுரையில் வரும் ஆண்டுகளை கொண்டு நன்றாக கவனித்தால் நாம் ஒன்றை உணர்ந்து கொள்ளலாம். அதாவது மனித இனத்திற்கு மிக நெருக்கமாக வரும் எதுவும் இன்று சைட் பை சைடாக இல்லை. உதாரணமாக நியாண்டர்தால் கடைசியாக ஐரோப்பாவில் 30 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வரை வாழ்ந்தது. ஆனால், அவைகள் நம்மை விட மூளை அளவிலும், உடல் பருமனிலும் பலசாலிகளாக இருந்தாலும் நாம் அவைகளை வெற்றி கொண்டோம்.

அதற்கான காரணங்களாக நமது சமூக அமைப்பு, உணவு பழக்கம், கூடிப் பேசி வேட்டையாடும் திறன், உடல் பருமனை மட்டும் நம்பி இருக்காமல் மூளையை செயல்படுத்தும் திறன், சீதோஷ்ண நிலையை நேர் கொண்ட திறன் அப்படி இப்படின்னு பல காரணங்கள் ஏன் நாம முன்னேறி கடைசியா தப்பி பிழைத்து நின்னு இருக்கோங்கிறது இருக்கு.

ஆனால் இந்த போட்டியில் தோல்வி உற்றவைகள் ஏதோ ஒரு வகையில் நம்மை விட திறன் குறைந்ததாகவே இருந்ததால் இந்த தப்பிப் பிழைத்துக் கிடக்கும் ஆட்டத்தில் தோற்று மண்ணுக்கு உரமாகி இருக்கிறது, சில எலும்புகளை மட்டும் விட்டுச் சென்றபடி.

ஏன் நமக்கு மிக அருகாமையில் வரும் சிம்பன்சி வகை மட்டும் ஆறு மில்லியன் வருடங்களுக்கு முன்பே நம்முடைய பரிணாமக் கிளையிலிருந்து பிரிந்து சென்றிந்தாலும் இன்றும் கூடவே இருக்கிறதுன்னு கேக்குறீங்களா. நமக்கு அவைக்குமான உணவு பழக்க வழக்கம், வாழ்வமைப்பு, அதன் கம்யூனிகேஷன் திறன், மூளை வளர்ச்சி பெருமளவில் பின் தங்கி இருப்பதே காரணமாக இருக்கிறது (மரபணு மேட்சில நமக்கும் அதுக்கும் 98.5% தொடர்பிருப்பினும்).

அப்போ ஏன் இன்னும் வளராமயே இருக்கிறதின்னு இன்னொரு கேள்வியை போட்டிங்கன்னா- அதற்கான சரியான சூழ்நிலை இன்னமும் தேவைப்படாததும், அவைகளுக்கு தேவையான வாழ்வுச் சூழல் பெரிய மாற்றங்களை சந்திக்காமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது நாமே அவைகளை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்து இந்த பூமியை நமது ஆளுமைக்குள் வைத்திருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

நம்முடைய சுற்றுப் புறச் சூழல் அழிவுற வைக்கும் திறனுக்கு முன்பு இந்த பரிணாம சுழற்சியின் பெரிய சக்கரம் சுழற்ற போதுமற்றதாகவே பிற உயிரினங்கள் அழிந்து வருவதும் ஒரு காரணமாக இருக்குமென்று எண்ணச் செய்கிறேன்.

We don't give them enough time and space to evolve on its own pace! We alter every single strand of DNA of every living single organisms on this globe!!

Related Posts with Thumbnails