Monday, May 07, 2018

ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்: மனிதர்களைக் கற்போம்!

என்ன படித்து, எத்தனை நாடுகள் சுற்றி, எவ்வளவு சாமி கும்பிட்டு என்ன பயன். என்றேனும் ஒரு நாள் நாம் ஒரு சராசரி மிருக குணங்களைக் கொண்ட மனிதன் தான் என்று தன்னைப் பற்றிய சுவடை விட்டு விட்டுச் செல்லும் நாளும் வருகிறது தானே!
நான் ஒரு முறை கருப்பர்களும், செவ்விந்தியர்களும் தாங்கள் எதற்காக இத்தனை வலிகளுனூடாக அலைக்கழிக்கப்பட்டு கொல்லப்படுகிறோம் என்று தெரியாமல் செத்து மடிந்த வரலாற்று பாதையின் ஊடாக பயணம் ஒன்று மேற்கொண்டேன்.
அந்தப் பயணத்தின் இறுதி இலக்காக அமைந்து போனது க்ராண்ட் கன்யான், அரிசோனா. அந்த பூகோளத்து மலைச் சுவடுகளின் மீதாக நின்று கொண்டு பரந்து விரிந்து கிடந்த பள்ளத் தாக்குகளை நடுக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது மாலை மங்கி, சூரியன் கூடடையும் நேரத்தில் அங்கு வந்திருந்த ஒரு சிவப்பிந்தியர் புல்லாங்குழல் ஒன்றை வைத்து வாசித்து பெரும் பாரத்துடன் அந்த சூரியனை வழி அனுப்பினார்.
அது மேலும் சுமையை இரட்டிப்பாக்கியது. மற்றுமொரு சிவப்பிந்திய பெண்ணுடன் பேசும் பொழுது, எங்கெல்லாம் இந்தப் பரப்பில் உங்களுடைய முன்னோடிகள் வாழ்ந்தார்கள் என்று வினவினேன். அதற்கு அந்தம்மா, அவர்கள் எல்லா இடங்களிலும் இருந்திருப்பார்கள், இருக்கிறார்கள் என்றார். அதாவது அந்த பள்ளத்தாக்கின் சரிவான மலைப் பிளவுகளில் கூட வாழ்ந்திருக்கிறார்கள் என்றார். என்னால் என்னுள் எழுந்த மலைப்பை விலக்கி வைக்கவே முடியவில்லை.
எதனை அவர்கள் தங்களுக்குப் பின்னால் விட்டுப்போக இப்படி ஒரு கடினமான தட்ப வெப்ப சுற்றுப் புறச் சூழலில் வாழத் தலைப்பட்டிருக்க முடியும் என்ற எண்ணம் என்னை வதைக்கத் தொடங்கியது? அவர்களைப் பற்றி மென்மேலும் வாசிக்க வாசிக்க அவர்கள் வரலாற்றில் செய்த மிகப் பெரிய பிழை, அன்னிய மனிதர்களை நம்பியதும், இயற்கையை அளவுக்கு மீறி காதலித்ததுமே காரணமென்பதாக இருந்தது. நிலத்தின் மீது சிறிதும் பற்றற்று அத்தனை பெரிய நிலப்பரப்பில் வாழ்ந்திருக்கிறார்கள்.
பிரிதொரு நாள் வெள்ளையர்கள் வந்து, மூத்த குடிமக்களிடம் நிலச் சுரண்டல் செய்ய ஆரம்பித்து, எழுதி வாங்க பேனா நீட்டும் போது கூட நகைத்துக் கொண்டே “சுப்ரீம் ஃஸ்பிரிட்டோட” இடத்தை யார், யாருக்கு எழுதி கொடுப்பது என்று எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.
இது போன்ற ஒரு கூட்டம் இந்த பூமிப் பந்தில் இருக்க தகுதியானதா? விட்டு வைப்பார்களா? இடப் பற்றாக் குறையாலும், மக்கள் தொகை பெருக்கத்தாலும், வறுமை, நோய், பசி, பட்டினி என்று மரணித்துக் கொண்டிருக்கும் ஒரு காடையர் கூட்டம், அனைத்தும் லாகவமாக அமைந்து போன ஒரு புதிய இடத்தை கண்டதும், இது போன்ற அப்பாவி மனிதர்கள் இதனை அனுபவிப்பதைப் பற்றி என்ன நினைத்திருக்கக் கூடும்? சூழ்ச்சியாலும், வஞ்சகத்தாலும் கூடிப் பழகியும், பிரிந்து சூழ்ந்தும் அழிதொழித்து விட்டார்கள்.
இயற்கையோடு ஒன்றித்து பேராசை எனும் பேயை அடக்கி வாழ்ந்த ஒரு பெரும் கூட்டம் தன்னுடைய அழிவின் விளிம்பில் கண்டதெல்லாம், வலி, வலி, வலி மற்றும் சாக்காடு.
போலவே, நம்முடைய நிலப்பரப்பிலும் அப்படியானதொரு கூட்டம் கூடி களித்து, சேர்ந்து, பிரிந்து என்று பல அரிதாரங்களை பூசி வரலாறு தோரும் கூடவே நடந்து வருகிறது. சூழ்ச்சியும், வஞ்சகமும் எப்படியோ ஒரு மூலையில் எச்சமாக இருந்து கருகருவென காலத்திற்காக காத்திருந்து நம்பிப் பழகுபவர்களை சாய்த்து விடுகிறது. வரலாற்று புத்தகங்களை புரட்டும் பொழுது டையரி குறிப்புகளாக கிடைக்கும் வலி மிகுந்த முனகல்களை, வரிகளுக்கிடையே வாசிக்கும் பொழுது நமக்கு அவைகள் ஒரு சங்கேத குறிப்பாக கிடைக்கப்பெறுகிறது.
இன்று நாம் அழுது புலம்பும் அத்தனையும் ஏற்கெனவே அந்த வஞ்சகத்திற்கும், சூழ்ச்சிக்கும் இரையாகிப் போன நம் முன்னோடிகளின் வலி மிகுந்த முனங்கல்தான். மீண்டும் மீண்டும் அதே பாசத்தில் வழிக்கி வழிக்கி விழுந்து கொண்டே இருக்கிறோம். ஏனெனில் அந்த நோயின் மூலக் கூறு நானோ பார்டிகில்ஸ்களுக்கு இணையானது. உள்ளிருந்தே மெள்ளக் கொல்லக் கூடிய வாக்கில் பாவனையாக்கப்பட்டிருக்கிறது.
ஒரு எதிரியின் குணம் தன்னிருப்பை அறிவித்து விட்டு நேருக்கு நேராக சந்திப்பது. ஒரு ஒட்டுண்ணியின் குணம் சார்ந்திருந்து மெல்ல அனுபவித்துக் கொண்டே கொல்லுவது. இதில் இரண்டாவது ரகம் நம்மை ஆரோக்கியமாக வாழவே விடாது. நோஞ்சானாக நம்மை வைத்து தனக்குத் தேவையானதை அடைந்து கொள்வதற்கான அத்தனை தகவமைவுகளையும் பெருக்கிக் கொள்ளும். நோய் கூறு அறிந்தாலே ஒழிய இதற்கு வைத்தியமே இல்லை.
நம்முடைய சமூகத்தின் சாபக்கேடு இது. சிவப்பிந்தியர்கள் ஓரளவிற்கு நேராடியான எதிரியை நிராயுதபானிகளாக சந்தித்தார்கள். போராடினார்கள், மாண்டார்கள். ஆனால், நாம் எதிர் கொள்ளும் ஒட்டுண்ணிகளோ பச்சோந்தித் தனமானது, கூடவே இருந்து நிறத்தை மாற்றி இரண்டர கலந்து விட்டது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சற்றே தனது இருப்பை புரண்டு காமித்தாலும், மீண்டும் தேவையானதை அடைந்து கொண்டு ஹைபர்னேசன் மோடிற்கு சென்று விடுகிறது. என்னதான் செய்வது.
விசயத்திற்கு வாரேன். பல ஆண்டுகளாக நானும் ப்ரீ மெச்சூர்டாக வயசுக்கு வந்திட்டதாக அறிவிச்சிக்க வேண்டாம்னு காலம் கொடுத்து கொடுத்து ஒவ்வொரு கதவா தட்டித் தட்டி மாதிரி எடுத்துப் பார்க்கிறேன், ஒண்ணு சொன்ன மாதிரியே அந்த குணம் ஏதோ ஒரு பாயிண்டுல வெளிக்காமிச்சிடுது.
இப்பொழுது நீட், நுழைவுத் தேர்வு, வெறுப்பு அரசியல், காவேரி நதி நீர் பங்கீட்டு விசயம்னு நடக்கிற அனைத்து சமூக நீதி சார்ந்த விசயத்திலும் கொலகாரத்தனமாக எதுவுமே தவறாக தெரியாமல், முட்டுக் கொடுத்து ஒண்ணுமே தெரியாத அப்பாவிகளாக அதே நேரத்தில் தெளிவா எடுக்கிற நிலையைப் பார்த்து, நான் வயசுக்கு வந்துட்டேன்னு அறிவிச்சு கதவை இழுத்து சாத்திக்கலாம்னு ஒரு முடிவிற்கு வந்திருக்கேன்.
அன்பர்களே, நீங்கள் எனக்கு நிறைய கத்துக் கொடுத்திருக்கீங்க. அதெல்லாம் பெரும் வாசிப்பினாலே நீங்களே எடுத்த முடிவா, இல்ல நான் டவுசர் போட்டுக்கிட்டு நாலாப்பு படிக்கும் போது, அதே வகுப்பில நீங்க இருந்தாலும் பத்தாப்பு படிக்கிற அளவிற்கு உலகறிவு புகுத்தப்பட்டு வெளிக்கிடுறீங்களான்னு தெரியாது. ஆனா, இது நானாவே விரலை சுட்டுச் சுட்டு கத்துகிட்டது. நாய் வால நிமிர்த்த முடியாதுன்னு!
சிவப்பிந்தியர்களுக்கும் நம் முன்னோடிகளுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிது. ஆனா, அது காலவதியாகிப் போனது. மூளையை பலப்படுத்தணும், சூழ்ச்சி வெல்லும்!

Friday, May 04, 2018

புதன் கெரகத்திற்கு ஆள் எடுக்கிறோம்: கொச்சைப் பதிவு!

ஊர்க்காட்டில ஒரு சொலவடை உண்டு ”பிச்சை எடுத்துச்சாம் பெருமாளு அதை தட்டிப்பிடிங்கினிச்சாம் அனுமாருன்னு.” அப்படி இருக்கிறது கதை.
ஒரு காலத்தில் சென்னையில அமெரிக்கன் கன்சூலேட்லயே வைச்சு நிரந்தரமா அமெரிக்காவிற்கு குடியேற்றதிற்கும் நேர்க்காணல் செஞ்சு விசா கொடுத்தாங்க. இப்போ அந்த சர்வீசை சென்னையில நிப்பாட்டிட்டு மும்பாய்க்கு எடுத்திட்டு போயிட்டாங்க.
ஏற்கெனவே அமெரிக்கா குடியுரிமை வழங்கும் கன்சூலேட் மற்றும் எம்பசிகளில் நம்மை போன்ற சப்ஹூயுமன் பிறவிகளை ஒரு மசிரும் மதிக்கிறதில்ல. தெருவிலயே நிப்பாட்டி வைச்சு வதைத்துத்தான் உள்ளரயே கூப்பிடுவாய்ங்க.
அப்படி அடி உதை, சொரணைய விட்டுக்கொடுத்து போறதுக்கு தயாராக நிக்கிற கூட்டம் தன்னோட நாட்டு மக்களை மரியாதையோட நடத்தணும்னு எதிர்பார்த்தா கவைக்கு ஆகுமா?
ஏன் இதையெல்லாம் சொல்லுறேன்னா, நாம எல்லாத்தையும் நகல் எடுத்தே பழகிப்போன கூட்டம். தன்னைச் சுத்தி என்ன நல்லது கெட்டது கெடக்கின்னு கூட ஊன்றிப் பார்க்காம கிடைக்கிறதையெல்லாம் அப்படியே திண்ணு வைக்கிறது.
இப்போ அதிகாரத்தை கையில வைச்சுக்கிட்டு தலைகால் புரியாம ஆடுற கூட்டம் தன்னை என்னவோ தொட முடியாத உசரத்தில இருக்கிறதா நினைச்சிக்கிட்டு ஆடுதுங்க.
அதுங்க என்னமோ அகதிகளை நடத்துறது மாதிரித்தான் நடந்துகிறதா இந்த நீட் சம்பந்தமான பிரச்சினையை பார்க்கிறேன். முதல்ல ஒரு தேசமா தனக்கு வேணுங்கிற துறைகள்ல தன்னிரைவை நீக்கமுற எப்படி அடைஞ்சிக்கிறதுங்கிற தொலை நோக்கு கொஞ்சமும் இல்லாம, அடுத்தவன்கிட்ட இருந்து அடிச்சு பிடிங்கித் திங்க பார்க்கிறது. இந்தியா என்ன அமெரிக்காவாடா? அமெரிக்காவில இருக்கிற மாதிரியா இங்கே மக்கட் தேசத்தை (demographic, community structure) கொண்டிருக்கிறது?
கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் அறைகுறை பசங்க ‘ஓவர் நைட்ல’ பணம் மூட்டை ஒன்றை கண்டெடுத்து அதை வைக்கிற முறை தெரியாமல் ஆடுவது போல, ஒரு தேசம், ஒரு மொழி கத்திரிக்க வெண்டைக்கான்னு, பக்கர்ஸ். அவனவன் மொழியில தன்னுடைய பிராந்திய மக்களுக்கு நோய், நொடி இல்லாம இருக்க சொந்த உழைப்பில கட்டி எழுப்பின சோர்சஸை வைச்சு கல்வி பழகி உயர்ந்து வர்றானுங்கன்னா, அதை ஒரு ரோல் மாடலுக்கான மூலமாக வைத்து உங்க உங்க பிராந்தியங்கள்ல உருவாக்கிக் கொள்வீர்களா, அதனைத் தவிர்த்து முழு தேசதுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு மசிரு மட்டைன்னு அதுவும் ஒண்ணாப்புல இருந்து சி.பி.எஸ்.இன்னு பெரிய புடுங்கி சிலபஸ்ல படிக்க வைச்சேன்னு பிகில் விட்டு படிக்க வைக்கிறவிங்க சிலபஸ்ல இருக்கிற கேள்விகளை கொண்டு போய் அரசாங்க பள்ளி கூடங்கள்ல படிக்கிறவன்கிட்ட திணிச்சு ஏண்ட வன்புணர்வு செய்றீங்க (வேற என்னவாம் அது?)
கேட்டா மனனம் செஞ்சு படிக்கிறதுன்னு ஒரு நொன்னை வாதம். சரி நீங்க சி.பி.எஸ்.இல நொட்டி எத்தனை நோபல் பரிசும், அண்டத்தில புதுக் கோள்கலையும், நட்சத்திரத்தையும் உருவாக்கி வைச்சிருக்கீங்க?
இப்படிச் சுரண்டித் திங்கிறதெல்லாம் ஒரு பொழப்பாடா? இந்த கருமாந்திர பிடிச்ச செயல்பாட்டில வேற நுழைவுத் தேர்வு நடத்துர ஹால்ஸ் கண்டிபிடிக்கிறதில வேற குளறுபடி. நல்ல கெட்ட கெட்ட வார்த்தையா வாயில வருது, ஆனா, ரொம்ப நல்லவிங்க கோவிச்சுக்குவாய்ங்களேன்னு அடக்கி வாசிச்சு எழுதுறேன்.
எவனாவது இப்படித்தான் அமெரிக்காவில ஒரு முறை நான் எக்சாம் எழுதப் போக ஐந்து மணி நேரம் ட்ராவல் செஞ்சு போனேன், அப்படி இப்படின்னு வந்தீங்க, கம்னாட்டி பயலுகளான்னு திட்டிப் புடுவேன்.
ஒரு எக்சாம் ஹால் கண்டுபிடிச்சு அதுக்குத் தேவையான வசதிகளை அமைச்சிக்க எத்தனை மணி நேரம்டா முறையா செஞ்சா தேவைப்படும்? அப்போ தமிழ்நாட்டில இது வரைக்கும் நடத்தப்பட்ட தேர்வுகள் அனைத்தும் தில்லுமுல்லு செஞ்சுதான் உருவாக்கினாங்கன்னு சொல்ல வாரீங்களா? சட்டியில இருக்கிறதுதானே அகப்பையில வரும்... உங்களோட நாள் பட்ட சீழ் பிடிச்ச புத்திப்படிதானே மூளையும் வேலை செய்யும்?
என்னமோ வேற்று கிரகத்திற்கு ஆள் எடுக்கிற தோரனை மசிருல ஒரு தேவையற்ற நுழைவுத் தேர்வு அதுக்கு இத்தனை பில்டப். காதுக்குள்ளர லைட்டு அடிச்சி என்னடா செக் செஞ்சீங்க போன ஆண்டு? காக்லீயா இருக்கான்னா பார்க்கவா? முண்டக் கலைப்பைகளா? சட்டை கிழிச்சு, முடியை வெட்டி கரும்புள்ளி செம்புள்ளி மட்டும்தாண்டா குத்தி ஏண்டா படிக்கிறீங்கன்னு கேக்கல. உங்களோட இந்த பூமிய பகிர்ந்துக்கிறதுக்கே கேவல மசிரா வருது.
இதில வேற அமெரிக்காவில இருக்கேன், அண்டார்டிக்காவில இருக்கேன்னு ஒரு வாழ்க்கை மசிரு வேற. கூட இருக்க கூட்டத்தை ஒரு மனுசப்பிறவிகளா மதிச்சு கூட்டிக்கிட்டு தானும் உயர ஒரு மனசில்ல பின்ன என்ன மரியாதை மசிரு தேவைப்படுதுங்கிறேன்.
இதெல்லாம் ஒரு பிரச்சினைன்னு உச்ச நீதி மன்ற தீர்ப்பு வேற. முடியலடா. இந்த கூத்தையெல்லாம் பார்த்துக்கிட்டு நாமளும் ஒரு மனுசப் பொறப்புன்னு சொல்லிக்க. ஏண்டா, உங்களுக்கெல்லாம் வெக்கம், மனசாட்சிங்கிற மசிரே இருக்காதா?

Wednesday, May 02, 2018

வாயால் வடை சுடுவது எப்படி?

முதலில் 2020ல் இந்தியாவை சூப்பர் பவராக வளர்த்தெடுப்போம் என்றார்கள். ஆனால், இப்பொழுதோ நம்மைச் சுற்றி நடந்தேறும் நிகழ்வுகளை காணும் பொழுது 1920களுக்கு முன்பிருந்த காலத்திற்கு முன்பாக நம்மை கடத்திச் சென்று விட்டார்கள் என்பது கண்கூடாகத் தெரிகிறது.
வாயால் வடை சுட முடியுமா? முடியும் என்கிறார்கள் முழித்துக் கொண்டே கனவு காணச் சொல்பவர்கள். கடந்த நான்கு வருடங்களில் என்ன மாதிரியான அடிப்படை கட்டமைப்புகள் அனைவரும் பயன்பெறும் வண்ணம் சென்றடைந்திருக்கிறது.
எந்தப் பக்கம் திரும்பினாலும் எதிர் மறையான செயல்பாடுகளும் அதனையொட்டிய ஓலங்களும் தான் காதில், கண்ணில் விழுகிறது. வெற்று மாயையைக் கொண்டு ஊதிப் பெருக்குவதால் யாருக்கு லாபம்? அவர்களைச் சுற்றி உடனடியாக லாபமடையும் ஒரு சில சதவிகிதத்தினரைத் தவிர. அது உண்மையான வளர்ச்சியா, நிலைக்குமா? வந்த மாதிரியே ஒரு நாள் அதற்கும் கூடுதலாக பிய்த்துக் கொண்டு சென்று விடாதா?
அப்படிச் சமச்சீரற்ற ஒரு வளர்ச்சிக்குள் வாழ எத்தனிப்பவர்களும் அதே நிலப்பரப்பையும் இயற்கை வளங்களையும், சாலைகளையும் தானே பகிர்ந்து கொண்டு ஒரு தேசத்து மக்களாக வாழ வேண்டும். எப்படி ஆயிரம் ஆண்டு காலங்களாக அதே மனிதமற்ற முறையில் மேல் கீழ் என மக்களை பிரித்து, பகிர்ந்து கொண்டு வாழ மனமற்ற மடையர்களாக வாழ்ந்தோமோ அப்படியே மீண்டும் இந்த நவீன காலத்திலும் எப்படி ஒப்பேத்த முடியும்?
நடிப்பும், பொய்யும் புரட்டும் செய்து மக்களை என்னவோ நேற்றே அமேசான் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட காட்டு வாசிகளைப் போல நினைத்துக் கொண்டு அத்தனை சூழ்ச்சிகளோடு தங்களுக்கு வேண்டியதை இன்று அரசு அதிகாரம் தங்கள் கைகளில் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக எப்படிச் சுரண்டி வஞ்சிக்க முடியும்?
இது அனைவருக்குமான தேசமில்லையா? எப்படி வெக்கமே இல்லாமல் நாடு நாடாக சென்று அதுவும் தனிவொரு விமானத்தில் பறந்து ஏதோ வேற்றுக் கிரகத்திலிருந்து இறங்கி வரும் தேவ தூதனைப் போல கைகளை ஆட்டிக் கொண்டே உலாவித் திரிய முடிகிறது?
நீ வரும் ஊரிலிருந்துதானே பத்து வயதிற்கும் குறைந்த வயதுடைய சிறுமிகளை கூட்டு வன்புணர்வு செய்கிறார்கள்? இன்னொரு இடத்தில் இன்னொரு சிறுமியை வன்புணர்ந்து கொன்றவனுக்கு தண்டனையாக ஆறு மாதம் தண்ணீர் சப்ளை செய்யச் சொல்வதும், மாட்டுக்கறி வைத்திருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் அடித்துக் கொல்வதும், தன் மதம் சாரா தன்னுடைய நாட்டு குடிமக்களை வேற்றொரு நிலத்து மக்களாக பாவிக்கச் சொல்லி வெறுப்பு அரசியல் பேசுவதும், அனைவருக்கும் சென்றடைய வேண்டிய கல்வியை தட்டிப் பறித்து நுழைவுத் தேர்வு என்ற பெயரில் பிற மாநில கல்வி திட்டத்தில் படித்து தேர்ந்த மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கி இத்தனை பெரிய மக்கட் தொகை கொண்ட தேசத்தில் எது போன்ற கூட்டு பங்களீப்பு கடைசி கிராமம் வரை சென்றடையும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற வாக்கில் செய்து முடித்திருக்க முடியும்.
மோடியைப் பற்றி இது வரையிலும் நேரடியான எது போன்ற விமர்சனங்களும் என்னிடமிருந்து வைத்தது கிடையாது. ஆனால், இப்பொழுது வைக்கிறேன். இது வரையிலும் ஊதிப் பெருக்கிய அளவிற்கு கட்டியெழுப்பப் பட்ட பிம்பத்திற்கு பைசாவிற்கும் உபயோகமற்ற ஒரு பிரதமரே இவர். தன்னுடைய தேசம் பொருத்தும், அதன் பிரச்சினைகள் குறித்தும், தன்னையொத்த பிற்படுத்தப்பட்ட மிகவும் கீழ் நிலையில் வாழும் சக தேச மனிதர்களைப் பற்றியும் கிஞ்சித்தும் அறிவற்ற ஒரு மூடராகத்தான் ஓடித் தேய்கிறார்.
நல்ல உடைகளையும், உணவையும் வழங்கி, எழுதிக் கொடுப்பதை பல நாள் பழக்கிக் கொண்ட (எரிச்சலூட்டும்) உடல் மொழியைக் கொண்டு வழங்குவதற்காக, ஒரு வாடகைக்கு அமர்த்திக் கொண்ட உள்ளீடற்ற ஒரு மனிதராகாத்தான் இவரை என்னால் பார்க்க முடிகிறது.
நாம் 1980களிலேயே கவர்ச்சி அரசியல் என்றால் என்ன அதன் விளைவுகள் எது போன்றது என்பதனை எம்.ஜி.ஆரிடமிருந்து கற்றுக் கொண்டோம். இவர் இப்பொழுதே இந்த இணைய பலூனை நம்பி சாலையை பெருக்கிறார். கங்கையை சுத்தம் செய்கிறார். கழிவரைக்கு குழி தோண்டி செங்கல் வைத்து சிமெண்ட் பூசுகிறார். கிழவிக்கு செருப்பு போட்டு விடுவது என்று காலாவதியாகிப் போன மயக்க அரசியல் அதுவும் உலகம் விழித்துக் கொண்ட வேலையில் செய்து வருகிறார். இது யாரை ஏமாற்ற? தன்னையே ஏமாற்றிக் கொள்கிறோமே ஒரு பிரதமராக என்று ஒரு நொடி மின்னலாக தோன்றி மறையாதா?
அத்தனையும் வெற்று வார்த்தைகள். அண்மையில் வந்த ஒரு செய்தி- உலகில் வாழ
லாயக்கற்ற அதி மாசுப்பட்ட நகரங்களில் 15ல், பதினான்கு நகரங்கள் இந்தியாவில் இருக்கிறது என்று ஓர் அறிக்கை தெரிவித்திருக்கிறது. அனைத்தும் இவருடைய ஆட்கள் ஆளும் மாநிலங்கள். இப்படி தலை வெட்டுப்பட்ட கோழி போல ஓடும் திசையறியாமல் ஓடிக் கொண்டும், தன்னுடைய மக்களுக்கிடையே வெறுப்பு அரசியலை விதைத்து “கொள்ளிக்கட்டையால் தலையை சொறிந்து கொள்வதற்கு” இணையாக அரசியல் செய்து கொண்டிமிருந்தால், அவைகள் கடைசியாக நம்மை எங்கே கொண்டு நிறுத்தும்?

ஆஃப்கனிஸ்தான், பாகிஸ்தனுக்கும் கீழே... அதி விரையில் அது சாத்தியமே. வரும் 2019ல் மட்டும் வெற்றியை அவர் தலையில் தூக்கி வைத்து விட்டால், புரோகிதர் இல்லாமலே காரியம் செய்து விடுவார்கள்.

Related Posts with Thumbnails