Wednesday, September 09, 2020

மனிதனின் நாளைய பரிணாமம்: Future of Sapiens

கேள்வி: குரங்குகளின் பரிணாமம் தான் மனிதன் என்றால் இப்பவும் குரங்குகளின் பரிணாமம் தொடர்ந்திருக்க வேண்டும் அதான் அறிவியல் கோட்பாடு. அப்படி இருக்க ஏன் இப்பொழுது குரங்கிலிருந்து மனிதன் இன்னும் பரிணாமம் ஆகாமல் இருக்கிறான்? இதற்கு தயவுசெய்து அறிவியல் evidence மூலம் பதில் அளிக்க வேண்டும் சும்மா அது இது னு சமாளிக்க கூடாது. 

இப்பவும் நாம் படிமலர்ச்சி பாதையில் தான் பயணிக்கிறோங்கிறதிற்கு ஒரு சிறு உதாரணம். இதைப் படிக்கிறவங்க கோவிச்சிக்கப்பிடாது.

பதில்: நாம இன்றைய வாலில்லா குரங்கினங்களிலிருந்து பிரிந்து படிமலர்ச்சியடைய ஆரம்பித்து பல மில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த பரிணாமக் கிளையிலிருந்து பிரிந்து நமக்கு இணையான நமது மூதாதையர்கள் வழிப் பாதையில் பெற்றும், இழந்து மென நடந்த மென் நடையில் இன்று சற்றேறக் குறைய ஒன்னரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய நவீன வடிவை எட்டி, ஜஸ்ட் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கும் குறைவான ஆண்டுகளாகவே நாகரீகமடைந்த கூட்டமாக வாழ்ந்து வருகிறோம்.
Image may contain: one or more peopleஇப்போ நீங்க பரிணாமத்தை நம்பல. நான் அறிவியல் பின்னணியில், கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் ஒப்புக்கொள்கிறவன்னு வைச்சிப்போம். இங்கே இரண்டு விதமான மனித குழுக்கள் பிளவுற்ற நிலையில், ஆனால், சைட் பை சைடாக வாழ்கிறது.
காலப் போக்கில் என்னாகும் இதில் யார் அறிவியலை உள்வாங்கி அடுத்தக் கட்டத் தகவமைவிற்கு தயார் ஆகிறோமோ (உதாரணமாக, ⚠️கோவிட்-19, பொய் - உண்மை, ⚠️தடுப்பூசி, தேவை - தேவையற்றது, ⚠️பூமிச் சூடேட்றம், பொய் - உண்மை, ⚠️ஜாதி, தேவை - தேவையற்றது, ⚠️மதம், தேவை - தேவையற்றது), அவர்கள் முன்னேறுவார்கள். பிறர் மரபணு ரீதியில் கொஞ்சம் கொஞ்சமாக கழிக்கப்பட்டு அழிந்து பட்டு போவர்கள்.
No photo description available.இதுவே எதிர்கால பரிணமிப்பு! அப்போ அந்த அழிந்து போன ஆள் எங்கே காட்டு என்று கேட்க முடியுமா? குரூட் பரிணாமக் கால கட்டத்தில், அலை அலையாக கிளம்பிய போதுதான் அந்த ஹோமினிட்ஸ் இன வகைகள் தேவைப்பட்டது (அவைகளில் சில, ஆஸ்ட்ரோல பித்திகஸ் அ•பரென்சிஸ் ↔️ ஹோமோ எரக்டஸ்↔️ஹோமோ ஹாபிலிஸ்↔️ஹோமோ நாலேடி↔️ஹோமோ நியாண்டர்தாலென்சிஸ்,↔️ ஹோமோ சாபியன்ஸ் சாபியன்ஸ்➡️). 

நீங்கள் எதிர்பார்ப்பது இதில 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்த நியாண்டர்தால் வெர்சஸ் மாடர்ன் ஹுயுமன் போன்று நேருக்கு நேரான சான்று. நியாண்டர்தால்கள் இன்றைய நவீன சாப்பியன்ஸை, முகம் கொடுத்த போது அவர்களே கூட போட்டியில், மரபணு பின்தங்கிய தகவமைபுக் குறைபாட்டால் மாண்டழிந்தவர்கள் போக, மிஞ்சியவர்கள் இன்றைய வெள்ளையினத்தில் குறிப்பாக ஜெர்மனி பகுதியில் வாழ்பவர்களுடன் இனக் கலப்பு கொண்டு மரபணுக்களாக வாழ்கிறார்கள்.
இன்று அறிவியலை நம்புறவர் வெர்சஸ் நம்பாதவர் என்று மெதுவாக ஊர்ந்து நாளைய மனிதன் படிமலர்ச்சியடைவான். 
ஆர்வம் உள்ளவர்கள் மேலும் வாசிக்க எனது பழைய பதிவுகள்-

Sunday, September 06, 2020

படிமலர்ச்சிக் கூண்டிற்குள் கடவுள்: Why evolution is true? Part 4

படைத்த கடவுளுக்கு தொழில் சுத்தமாக படைக்கத் தெரியாதா? பறக்கத் தெரியாத பறவைக்கு இறக்கைகள் எதற்கு? வாலில்லாம வாழப் போற நமக்கு எதற்கு வால் எலும்பு? புல்லு, பூண்டு, இலை, தழை, கொடி சாப்பிடாம இருக்கப் போற நமக்கு குடல்வால் எதற்கு? வாங்க படைத்தவனை கூண்டுல நிப்பாட்டி கேள்வி கேட்போம்.
படிமலர்ச்சி நிகழ்ந்தது, நிகழ்ந்து கொண்டிருக்கிறக்கிறது என்பதற்கு என்ன சான்று இருக்கிறது?
எப்பொழுதாவது எண்ணிப்பார்த்திருக்கீர்களா ஏன் கோழிக்கும், மயிலுக்கும்,
ஆஸ்ட்ரிச்சிற்கும் இறக்கைகள் இருந்தாலும் அவைகள் நீண்ட தூரம் பறக்க உதவுதில்லைன்னு? அதிலும் குறிப்பாக தீவுகளில் வாழும் பல பறவையினங்கள் நில வாழ்வன‌ வகைகளாகத்தான் இருக்கிறது. ஏன் அப்படி? தான் சார்ந்து வாழும் சுற்றுப்புறச் சுழலுக்கு தகுந்த மாதிரிதான் உயிரினங்களின் படிமலர்ச்சி அமைகிறது என்று பார்த்தோம்.
அவ்வாறான தீவுப் பறவை வகைளுக்கு மரங்கள் அதிகமாக இருக்கக் கூடிய வாழ்விடமோ, அங்கு ஆபத்து அதிகமில்லாத பகுதியாகவோ இருந்து போவதால் நாள் போக அவைகளுக்கான பறக்கும் மரபியல் பண்பு தேவையற்றதாகிறது. அந்தப் பின்னணியில் உயிரினங்களின் வாழ்விடத் தேவைகள் பொருட்டே தன்னுடைய இருத்தலை நிலை நிறுத்திக் கொள்ள மரபணுப் பிறழ்ச்சியின் (genetic mutation) ஊடாக சிறப்பியல்புகளை பெற்றும், இழந்தும் அடுத்த நிலைக்கு நகர்கிறது.
நிலத்தில் வாழும் பறவையான‌ ஆஸ்ட்ரிச் ஓடும் பொழுது கவனித்தீர்களேயானால் தன்னை சமநிலைப் படுத்திக் கொள்ள இறக்கைகளை விரித்தவாறே விரைந்து ஓடும். அது போலவே பென்குயின்களுக்கு இறக்கைகள் இருக்கிறது, ஆனால், அதனை தண்ணீருக்குள் அதி விரைவில் நீந்தும் தன்மை கொண்டதாக பயன்படுத்துகிறது. இது ஒரு புறம் என்றால் நமக்கும், திமிங்கிலத்திற்கும் மூதாதைகளால் பயன்பாட்டில் இருந்து வந்த பல (பாக)‌ உறுப்புகள் இப்பொழுது சான்றுறுப்புகளாக (Vegtigial) மட்டுமே இருந்து வருகிறது.
Image may contain: one or more people, text that says 'Lemuy Human an $5 FIGURE 14. Vestigial and atavistic tails. Top left: ruffed lemur (Varecia variegates), the tail (caudal) vertebrae our relatives that have tails, unfused first are labeled But the "tail" coccyx top right the caudal vertebrae fused form vestigial structure. Bottom atavistic tail three month Israeli infant. vertebrae are much larger right)'உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் திமிங்கிலங்கள் நான்கு கால்களை கொண்ட தரைவாழ் விலங்கிலிருந்துதான் படிமலர்ச்சி அடைந்தது என்பதின் எச்சமாக‌ பின்னங்கால்களும், இடுப்பெலும்பும் முற்றிலும் வளர்ச்சியுறா நிலையில் உடலின் உள்ளாகவே ஏதோ நிலையில் இருந்து விடுகிறது. அது போலவே நம்முடைய தூரத்து உறவுகளான குரங்குகளிருந்துதான் நாம் படிமலர்ச்சியடைந்தோம் என்பதனை சான்றளிக்க குடல்வாலும் (appendix), வால் எலும்பும் (tail bone) முழுமையடையா நிலையில் சான்றுறுப்பாக இருக்கிறது. குடல்வால் நம்முடைய தூஊஊரத்து சொந்தக்காரய்ங்களான இலை சாப்பிடும் குரங்களில் செல்லுலோசை செரிப்பதற்கென வாழும் பாக்டீரியாக்களை கொண்ட குடல் பகுதியாக இருந்திருக்கிறது. இப்பொழுது நமக்கு அது தேவையற்ற ஓர் ஆணி.
இன்னும் ஒரு படி மேலே சென்று திடுக்கென அந்த முழு வளர்ச்சியடையா சான்றுறுப்புகள் ஒரு சிலரில் மட்டும், குறிப்பிட்ட‌ மரபணுக்கள் பழைய நினைவிலிருந்து உயிர் பெற்று புற உறுப்புகளாக வளர ஆரம்பித்து விடுவதும் உண்டு. மனித குழந்தைகளில் வாலுடன் பிறப்பது, ஒவ்வொரு 500 திமிங்கிலங்களில் ஒரு திமிங்கிலம் பின்னங்கால்களுடன் வெளிப்புறமாக வளர்ந்த நிலையில் பிறப்பது இவையெல்லாம் அதில் அடங்கும்; இந்த நிலை, மீளுறுப்பு (Atavism) என்றயறிப்படுகிறது.
இவைகளெல்லாம் எதனை நோக்கி நம் கவனத்தைக் கோரி நிற்கிறது? கடவுள்தான் இந்த
உலகத்தை, உயிரினத்தை படைத்தான் என்றால் ஏன் இது போன்று விட்டக் குறை தொட்ட குறை உறுப்புகளை ஒன்றிற்கு மற்றொன்று தொடர்பில்லாத இனங்களிலும் வைத்து படைக்க வேண்டும்? ஏன் படைத்தவனுக்கு சுத்தமாக‌ எந்த கோளாறுகளும் இல்லாமல் படைக்கத் தெரியாதா?
விசயம் அதுவல்ல. படிமலர்ச்சியில் மரபணு பிறழ்வின் போது தேவையானதை அடுத்தக் கட்ட இயற்கை தேர்ந்தெடுப்பின் (Natural Selection) போது ஆதரித்தும், தேவையற்றதை ஊக்கப்படுத்தாமலும் எடுத்துச் செல்கிறது. அவ்வாறு தேவையற்ற மரபணு பண்புகள் முற்றும் முழுதாக நம்முடைய செல்களிலிருந்து துடைத்தழிக்கப்படுவது கிடையாது. செயல்பாட்டில் உள்ளதாகவும், அற்றதாகவும் சில புரதப் பொருட்களால் தூண்டப்படுகிறது. செயல்பாட்டில் இல்லாமல் இருக்கும் அது போன்ற மரபணுக்களை போலி மரபணு (psuedogene) என்கிறார்கள்.
நவீன மரபணு ஆராய்ச்சி முன்னேற்றத்தில் இன்று நாம் கிட்டத்தட்ட நம்முடைய அனைத்து மரபணுக்களையும் அதன் பண்புகளையும் வரைவாக கண்டறிந்திருக்கிறோம். அதில் கிட்டத்தட்ட 3000ம் வகையான மரபணுக்கள் இறந்த மரபணுக்களாக இருப்பதை கண்டறிந்திருக்கிறார்கள். எலிகளில் இருக்கின்ற நுகர்வாற்றல் (Olfactory receptor) நம்மை விட பலப்பல மடங்கு அதிகம். ஆனால், அந்தப் பண்பு நம்மில் மிகக் குறைவு. ஏன் அப்படி? எலிகளுக்கு இரையை, நெருங்கி வரும் ஆபத்தை, இணையை கண்டறிவதில் மிகை நுகவுணர்வு உதவுகிறது. அதே அளவில் நமக்கு தேவையற்றதாகுகிறது. ஏனெனில் நாம் நம்முடைய பார்வையை அதிகளவில் நம்பி இருப்பதால் அதீத நுகர்ச்சி பண்பு சுமையாக அமைகிறது.
சரி உபரியாக அது போன்ற பண்புகளை வைத்துக் கொண்டால் தான் என்ன? என்று ஒரு கேள்வி வரலாம். உதாரணமாக குகைகளில் உள்ள நீர்நிலைகளில் வாழும் மீன்களுக்கு கண்கள் தேவையற்றது. கண்கள் இருந்தால் அதனை பயன்படுத்தப் போவது இல்லை என்றாலும் பாதுகாக்க வேண்டும். அதனை மேலாண்மை செய்ய சக்தி தேவை. இப்படி பல ஆணிகள். எனவேதான் காலப்போக்கில் அது போன்ற மரபணுக்களை செயலற்றதாகவோ, அல்லது மரணித்த நிலையிலேயோ படி எடுக்கப்படுகிறது. இருப்பினும் நமக்கு விட்டுச் செல்லும் ஒரு மரபணு சார்ந்த படிமலர்ச்சி சுவடுகள் இவை.
இதற்கு மேலும் படிமலர்ச்சிக் கோட்பாடு ஒரு பிதற்றல் எனக் கூற முடியுமா?

Ref: Why Evolution Is True by Jerry A. Coyne
Photo Courtesy: Net

Related Posts with Thumbnails