Monday, July 21, 2008

நீரிழிவு நோயின் ஒன்பது முன் அடையாளங்கள்: Diabetes Symptoms!

நீரிழிவு நோய் கிட்டத்தட்ட எல்லோராலும் பொதுவாகவே டேக் இட் ஈசியாக எடுத்துக் கொள்ளப்படும் வியாதிகளில் ஒன்று. ஆனால், இதன் தாக்கத்தின் விளைவு நாம் நினைப்பதனைக் காட்டிலும் மோசமான நிலையில் தலை முதல் கால் வரை கிட்டத்தட்ட எல்லா உறுப்புகளையும் சிறிது சிறிதாக செயலிழக்க வைத்து இறுதியில் மரணமே முடிவாக நிகழ்த்தி விட்டுச் சென்று விடுகிறது.

நேற்று ஒரு ஆர்வமூட்டு கட்டுரை ஒன்று இதன் பொருட்டு வாசிக்க நேர்ந்தது அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப் பதிவு. நீரிழிவு நோய் பற்றிய விரிவான கட்டுரையை வாசிக்க நம்ம பத்மா அர்விந்தின் பதிவிற்கு சென்றால் காணலாம்.

இங்கே நீரிழிவு நோய் இருக்க நேரிடின் அல்லது எட்டிப் பார்க்க ஆரம்பிக்கும் பொழுது எது போன்ற முன் அடையாளங்களாக காட்டிக் கொண்டிருக்கிறது என்று பார்க்கலாம்.

1. கண் புருவத்தின் நிறம் - (Eyebrow Color):

உடல் ரோமங்கள் பொதுவாகவே நரைக்க ஆரம்பித்துருக்கும் பட்சத்தில் கண் புருவம் மட்டும் மறுத்தால், நீரிழிவு நோய் இருப்பதற்கான வாய்ப்பதிகமாம்.

2. மார்பக அளவு(பெண்களுக்கு) - (Breast Size):

பெண்களில் இருபது வயதடையும் பொழுதே D அளவிற்கும் பெரிதான உள்ளாடை அணிய நேர்ந்தால், சக வயதில் அதனை விட சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண் நண்பிகளைக் காட்டிலும் அதிக வாய்ப்பிருக்கிறதாம் இவ் நோய் தாக்க. ஏனெனில், மார்பக எடை வந்து ஆளின் உயரம் மற்றும் எடைக்கு (BMI = Body Mass Idex) சம்பந்தமில்லாத வகையில் தனியாக கணக்கிடப் படுவதால் அப்படி எடுத்துக் கொள்ளப் படுகிறதாம்.

3. பிறந்த மாதம் அல்லது காலம் - (Birth Month or Season):

குழந்தை பிறந்த மாதத்திற்கும் நீரிழிவு நோயின் தாக்கத்திற்கும் ஏதோ காரணமில்லா காரணமிருப்பதாக பத்து ஆயிரம் குழந்தைகளில் நடத்திய ஆய்வுகளில் கண்டிபிடிக்கப் பட்டிருப்பதாக அட்லாண்டாவை மையமாக கொண்ட நோய் தடுப்புக் கழகம் (Center for Disease Control - CDC) கண்டறிந்திருக்கிறதாம். இதில் இலையுதிர்(Fall) காலத்தில் பிறந்த குழந்தைகளைக் காட்டிலும் வசந்த(Spring) காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் தாக்கும் அபாயம் அதிகமுள்ளதாம் அதுவும் வட மாநிலங்களில் பிறந்த குழந்தைகளில். காரணமாக தற்காலிகமா தாய் உட் கொள்ளும் உணவும், மேல் விழும் சூரியக் கதிர்களின் அளவீடுமாக கருதப் படுகிறது.

4. காது கேளாமை - (Hearing Loss):

இதற்கு முன்னால் இது வரையிலும் காது கோளாமையை நீரிழிவு நோயுடன் சம்பந்தப் படுத்தி பார்த்தது கிடையாதாம். ஆனால், இப்பொழுது நீரிழிவு நோயல் பீடிக்கப் பட்டவர்களுக்கு அதிக அளவில் காது கேளாமை நிகழும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

5. குறுகிய கால்கள் - (Short Legs):

குறுகிய கால்களைப் பெற்றவர்களுக்கு நீண்ட கால்களை பெற்றவர்களைக் காட்டிலும் அதிகமான வாய்ப்புகள் நீரிழிவு வகை - 2 தாக்க வாய்ப்புள்ளதாம்.

6. மெதுவாக புண் ஆறும் தன்மை - (Slow-healing Cut):

இரண்டாம் வகை நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு பொதுவாக புண் ஆறும் காலம் சற்று கால தாமதமே ஆகும், இந்த நிலைக்கு Atherosclerosis என்று பெயராம். இதனில் என்ன நடைபெறுகிறதெனில் ரத்த குழாய்கள் தடித்து விடுவதும்(thickening), இரத்தச் செல்கள் இளகுவதும்(thinning) நடைபெறுவதால், ஒரு புண் ஏற்படும் பொழுது அங்கே இரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் தட்டுக்கள் அதிகளவில் பாதிக்கப் பட்ட இடத்திற்கு சென்று சண்டையிடும் நிலை குறைந்து போன நிலையில் புண் ஆறும் காலம் அதிகமெடுத்து கொள்கிறதாம்.

7. பல் இழப்பு - (Tooth Loss): மற்றும்

8. ரோம இழப்பு - (Hair Loss):

இங்கும் நமது 6வது அடையாளத்தில் பேசப்பட்ட Atherosclerosis நடைபெறுவதனாலும், அதன் மூலமாக பிராணவாயுவேற்றமும் குறைவதனாலும் விரைவாக கலக்க முடி இருக்கும் நிலைக்குப் செல்வதும் இவ் நோய் இருப்பதற்கான அறிகுறியாம்.

9. பூச்சிக்கொல்லியினால் விளைவு - (Pesticide's Exposure):

அதிகப் படியான பூச்சிக்கொல்லிகளில் கிடந்து உழல்பவர்களுக்கும் இவ் நோய் தாக்கும் அபாயக் கூறுகள் அதிகம் இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.



பி.கு: மேலே கூறப்பட்டுள்ள ஒன்பது முன் அறிவிப்பு நோய் அடையாளங்களில் ஒன்றிரண்டு நம்மில் பலபேருக்கு சாதரணமாகவே காணப் பெறலாம்... உ.தா: ரோம உதிர்வு, காது கேளாமை, பல்லிழப்பு போன்றவைகள் அதனால் இவைகள் காணப்பட்டால் அபாய மணி அடித்து விட்டதாக பொருள் கொள்ள வேண்டியதில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது. இருந்தாலும், இரத்தம் சார்ந்த சர்க்கரை அளவு கண்டறிந்தால் நல்லா நிம்மதியா தூங்கலாம் போல.

Saturday, July 19, 2008

கருவாச்சி காவியம் விட்டுச் சென்ற தடயங்கள்

இன்னையோட வைரமுத்துவோட "கருவாச்சிய" நெஞ்சில தூக்கிச் சுமக்க ஆரம்பிச்சு மூணு வாரம் ஓடிப்போச்சு. படிச்சு முடிச்சக் கையோட மனசில பட்டதை எழுதி இங்கு பதிஞ்சு வைச்சிரணுமின்னு கொண்டு வந்திருக்கேன். இந்தக் "கருவாச்சி காவியம்" முதலில் எப்பொழுது புத்தக வடிவமாக வெளி வந்ததுன்னு எனக்குத் தெரியலை. ஆனா, எனக்கு நினைவிலிருக்கு போன வருடம் புதுகையில் போடப்பட்டிருந்த ஒரு சிறிய புத்தகக் கண்காட்சியில் இதனையும், கள்ளிக்காட்டு இசிகாசத்தையும் பார்த்துவிட்டு, முதலில் இரண்டாவது புத்தகத்தை வாங்கியதனை.

ஆனால், படிக்க படிக்க எழுத வருபவர்கள் எதற்காக எழுத முன் வர வேண்டுமென்ற உணர்வை வரி தவறாமல் கருவாச்சிக் காவியம் உணர்த்திக் கொண்டே வரத் தவறவில்லை. தமிழகத்தின் வறண்ட பூமிக் கிராமங்களில் இப்படியும் மூர்க்கமான நம்பிக்கையும், அன்பும், மனித விகாரங்களில் சகிப்புத்தன்மைமிக்க மனிதர்களும் ஒருங்கே பின்னிக் கிடப்பதனை படிக்க படிக்க நெஞ்சில் நமக்கே ஈரமும் நம்பிக்கையும் ஒருங்கே சுரக்கிறது. மேலும் வட்டார வழக்க மொழிகளில் மேலும் இது போன்ற படைப்புகள் எழுத வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துவதாகவே பட்டது.

உலகத்தின் கடைக் கோடியில் உள்ள ஏதோ ஒரு சொக்கத்தேவன் பட்டியில் வாழும் ஒரு பெண்ணின் வாழ்வியலைக் கொண்டு ஒட்டு மொத்த மனிதக் கூட்டத்தின் ஆசா பாசங்களையும், மன விகாரங்களையும் இந்தக் காவியம் தூக்கிச் சுமக்கிறது. எழுத்தாளனின் பெரும் ஆசையைப் போலவே இது கால வெள்ளச் சுழிப்புகளைக் கடந்து இந்தக் காவியம் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ளுமென்ற நம்பிக்கை எனக்குமிருக்கிறது.

கதையின் ஓட்டத்தில் கருவாச்சி சந்திக்கும் நம்பிக்கை துரோகங்களும், காலம் அவளுக்கு முன்னால் வைக்கும் சவால்களையும், மரணங்களையும், வறட்சியையும்,

பட்டினியையும் அவள் முகம் கொடுத்து சந்திக்கும் பாங்கு மீதமுள்ள மனுச ஜீவராசிகளுக்கு

ஒரு நம்பிக்கையூட்டும் விதமாகவுள்ள கடற்கரையோர ஒளி விளக்கு. கடைசி அத்தியாங்களில் அவள் வழி வருகின்ற ஒரு சுவாமிஜிக்கும், கருவாச்சிக்கும் நடைபெறும் சம்பாஷனைகளைக் கொண்டு ஒட்டு மொத்த வாழ்வியல் சார்ந்த கேள்விகளுக்கும் பதில் வழங்கப்பட்டுள்ளது. அதன் எச்சம் சமா காலத்தில் வாழும் கருவாச்சிகளிடத்தே நம்மை சம்பாஷனைத் நிகழ்த்த ஊண்டு கோலாக அமையலாம்.

சுவாமிஜி, கருவாச்சிப் பேசப் பேச தன்னோட படிப்பறிவில் நிற்கும் ஒரு உபதேசத்தை நினைவில் நிறுத்துவதாக வரும் இந்த வரிகள் ரொம்பப் பிடிச்சிருந்துச்சு, என்னோட குறிப்பேட்டில் நிறந்தரமாக இருத்தல் எண்ணி இங்கு பதிந்து வைக்கிறேன்...

...பொருளே பற்றுறுத்தும்;
பற்று ஆசையாய் முற்றும்;
அவ்வாசை தடைப்படின்
சினமே தீயாய்ப் பரவும்;
சினம் சித்தம் குழப்பும்;
சித்தக் குழப்பம் புத்தியழிக்கும்;
புத்தி அழிவுறின் சரீரம் ஆத்மம் சரியும்."

ஏண்டா படிச்சு சீக்கிரமே முடிச்சிட்டோமின்னு இருக்கு.

Related Posts with Thumbnails