Sunday, April 08, 2012

வசந்த கால ஒளிச் சிதறல்கள்: Lake Photography - 1

ஓர் ஐந்து நிமிட நடை என் வீட்டருகே எனக்கு இத்தனை புதிதான கண்ணாடி படிகங்களலான ஒளிச் சித்திரங்களை நிரந்தரமாக சுருட்டிக் கொள்ள உதவிச் சென்றது.

கற்றதை, பெற்றதை அதன் மூலமாக அறிந்து கொண்டதை பகிர்ந்து கொள்ளவே இந்த மொழியும், அதற்கான எழுத்து குறியீடுகளும் தோன்றி இருக்கக் கூடுமென்ற அடிப்படையிலேயே இங்கே நான் கண்ட ஒளிக் காட்சிகளை பதிந்து வருகிறேன்.

இப்பொழுது இங்கே வசந்த காலம். சூரியனாரின் காத்திரமான ஒளியும் கூட புதுப் பெண்ணாக பளிச்சிட்டு நிற்கும் மரங்களின் பசுமையின் மீது படும்பொழுது அந்த வெளிச்சம் வெட்கி மேலும் அழகூட்டி நிற்கிறது.


மரங்களுக்கும் கண்ணாடி காமிக்கும் முயற்சியில்...


பெரியவன் ஒருவன் அப்படியே நெடுக விழுந்து அழகிற்கு அழகு சேர்த்து, நீந்திச் செல்லும் பறவைகளுக்கு ஒய்வெடுக்கும் சுமைதாங்கியாகிப்போனான் ...



தூரத்தில் தெரியும் மரங்களுக்கு டார்ச் அடிச்சுப் பார்க்கும் சூரியனார். அப்படியே ஆயில் பெயிண்டிங்காக தூரிகை இல்லாமல் வரைந்து காட்டும் வேளையில்...

#1


#2


மேகத்திற்கு பட்டுடுத்தி, தரையிறக்கி கண்ணாடியிலும் பொதித்து...

a)


b)


பளிங்கித் தரையில் சிறிதே தண்ணீர் தெளித்து வெளிச்சத்தின் ஊடாக காணும் பொழுதாக...

c)


d)


e)


இந்த காட்சிகளை மிக அருகிலேயே ஏகாந்தத்தின் உச்சத்தில் அமர்ந்து பருக காத்திருக்கும் ஓர் அமைதிக் குடில்...


Related Posts with Thumbnails