Monday, August 11, 2008

ஒலிம்பிக்ஸ், சைனா, இந்தியா = Where Is India?

நேற்று மாலை 4X100 நீச்சல் போட்டியில் ஃப்ரான்ஸை அமெரிக்கா தோற்கடிக்கும் பொழுது மைக்கேல் ஃபெல்ப்ஸின் உற்சாக கூச்சல் ஒரு கொரில்லாவின் கொக்கரிப்பைக் காட்டிலும் அதீதமாகவே கொப்பளித்தது, உணர்வுப் பூர்வமாக இருந்தது. அதே சமயத்தில், பார்த்துக் கொண்டிருந்த சானலில் விளம்பர இடைவெளியில் நம்மூர் ட்டி.வி சானல் பக்கம் திருப்பினால் அய்யகோ சூப்பர் டான்சர்-2 என்ன எழவோ ஓடிக் கொண்டிருந்தது.

1.2 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நாட்டிலிருந்து வெறும் 54 வீரர்கள் அதுவும் என்னவோ ட்டி.வி விளம்பரங்களில் நடிப்பதற்கு செல்பவர்களைப் போல தழுக், மொளுக்கென்று நாம் கண்ணுரும் அதே ட்டி.வி விளம்பர மக்களின் தோல் நிறத்துடன். இவ்வளவு பெரிதாக பரந்து விரிந்து கிடக்கும் ஒரு நாட்டிலிருந்து நம்மால் பல துறை விளையாட்டு விளையாடும் வீரர்களை ஏன் அனுப்ப முடியவிலை? என்ன நடக்கிறது?

நம்மூரில் விளையாட்டென்றாலே அது கிரிக்கெட் மட்டுமே என்பது போல ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்து அதிலிருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தை கூடி நின்று பங்குபிரித்துக் கொள்வதிலேயே வாழ் நாளை கடத்திக் கொண்டிருக்கிறோமோ? இந் நிலையில், உலக அரங்கில் நாகரீகமான முறையில் தன் பிற ஆளுமையைக் காட்டிக் கொள்ளும் வாய்ப்புகளாகக் கருதப்படும் இது போன்ற ஒலிம்பிக்ஸ்ல் எங்கே கவனம் செலுத்த நேரமிருக்கு. நாட்டை மாநிலங்களாக பிரித்து தன்னால் எவ்வளவுக்கெவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவுகவ்வளவு சுரண்டத் தான் நேரமிருக்கிறதே ஒழிய எங்கே இது போன்ற தருணங்களை ஒரு நாடு என்ற கட்டமைப்பில் தேசியம் சார்ந்து பெருமை பட்டுக்கொள்ளும் விசயங்களில் கவனம் செலுத்த நமக்கு நேரமிருக்கும்.

நான் நினைக்கிறேன் ஏதேனும் பாகிஸ்தான் ஒலிம்பிக்ஸில் கவனம் செலுத்தி நம்மை விட கோல்ட் மெடல்கள் வாங்கி உசுப்பேத்தினால்தான் நமக்கு சூடு வருமோ. ஐ. நாவில் நிரந்தர குழும உரிமை கேட்டுப் போய் நிற்கிறோம், ஆனால் சத்தமில்லாமல் இது போன்ற வாய்ப்புகள் கிடைக்கும் தருணம் தோரும் நம்மை நிரூபித்துக் கொள்கிறோமா? சைனாவுடன் நம்மை தினம் தோரும் ஒப்பிட்டுளவில் பேசி நாட்களை கடத்தி வருவதில் என்ன பெருமை இருக்கப் போகிறது?

அவர்களும் பல சூழ்நிலைகளில் சத்தமே இல்லாமல் பெரிய பெரிய காரியங்களை சாதித்துக் கொள்வதனைப் போல் உள்ளது. ஒலிம்பிக்ஸின் 100 வருட வரலாற்றையே புரட்டிப் போடுவதனைப் போல ஒரு ஒலிம்பிக்ஸ் திறப்பு விழாவை நடத்திக் காமித்து உலகத்தையே வாயடைக்க வைத்திருக்கிறார்கள். இதன் மூலமாக அவர்கள் தங்களின் ஆளுமையை சத்தமில்லாமல் உலகரங்கில் மேலும் நிரூபித்துக் காமித்திருக்கிறார்கள். தீரன் புஷும் அங்கே டெண்ட் அடித்து உட்கார்ந்திருக்கிறது, காரணம் சைனா ஒரு மார்க்கமாக இருப்பதாக இருக்குமோ என்று எண்ண வைக்கிறது.

நம்மூரில் தனிப்பட்ட ஒன்றிய, மாவட்ட, மாநில, நாட்டு அரசியல் வாதிகளுக்கு பணத்தாசை என்று ஒழிந்து இது போன்ற உலகரங்கில் நம்மை தூக்கி நிறுத்திப் பார்க்க வேண்டுமென்ற ஆசை, வெறி வரப்போகிறதோ, என்று நாமும் சத்தமில்லாமல் பாகிஸ்தானைக் காட்டிலும் இதிலெல்லாம் வளர்ந்துவிட்டோமென்று சத்தமில்லாமல் நிரூபித்துக் காட்டிக் கொள்ளப் போகிறோமோ, தெரியவில்லையே. எல்லாமே கனவு நிலையிலேயே தேக்கமுற்றுப் போய்விட்டதே! இந்த பணத்தாசை பிடித்த பித்தர்களால்!!

இந்த தனியார் தொலைக்காட்சிகளும் கிரிக்கெட்டையும் தாண்டி கொஞ்சம் சிறு நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் சென்று மற்ற விளையாட்டுக்கள் நடை பெறும் பட்சத்தில் அவர்களை வெளிக்கொணர்ந்து மக்களுக்கேனும் ஒரு நம்பிக்கை வழங்குவதின் மூலம் ஏதாவது மாற்றம் நடக்க வாய்ப்புண்டா?

இல்லை ஓவ்வொரு ஒலிம்பிக்ஸ் சீசனிலும் இப்படி பெருமூச்சு விட்டுக்கொண்டே, வாய் வீச்சில் மட்டும் நாங்க எம்பூட்டு பெரிய ஆள்னு காத்தில கத்தி வீசிட்டு இருக்க வேண்டியதுதானா? சகிக்கவில்லை, நம் நிலமை :-(.

Tuesday, August 05, 2008

கருக்கலைப்பு சட்டம் இது நியாயமா? : Abortion Rights...

நேற்று ஒரு நண்பரோட பேசிட்டு இருக்கும் பொழுது தெரிய வந்தது இந்தச் செய்தி, அது மும்பையில் வாழ்ந்து வரும் தம்பதிகளுக்கு கருவில் இருக்கும் தனது 24 வார கால சிசுவிற்கு இதய சம்பந்தமான பிரச்சினை இருப்பதாகவும் அதனை கருக்கலைப்பு செய்ய அனுமதிக்குமாறும் நீதி மன்றத்தை அணுகியிருக்கிறார்கள், ஆனால் நீதி மன்றம் அதனை மறுத்துவிட்டதாம். மேலதிக முழுச் செய்திக்கு இங்கே சொடுக்கவும் - அபார்ஷன் சட்டத்தை திருத்த முடியாது-அன்புமணி.

எனது நண்பர்களுக்கும், வீட்டு அன்பர்களுக்கும் கூட அப்படி அந்த தம்பதியர்களுக்கு கருக்கலைப்பிற்கு அனுமதி வழங்குவது நியாயமாகவே படுவதாக கூறினார்கள். ஆனால், இதனை இந்திய அரசியல் சட்டம் தடுக்கிறது. அதாவது ஒரே ஒரு பெண்மணிக்காக இந்தத் சட்டத்தை திருத்த வேண்டியதில்லை என்று.

அதாவது, இது போன்று ஒரு குழந்தை கருவிலேயே உடல் ரீதியாக சரியான வளர்ச்சியை எட்டாமலோ, அல்லது உறுப்புகளின் செயல் திறன் குறைபாடுகளோட பிறக்க சாத்தியமிருக்கும் பட்சத்தில் குழந்தையை எதிர்காலத்தில் வைத்து, அதற்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுக்கப் போகும் பெற்றோர்களின் கையில் ஏன் அம் முடிவை எடுக்கும் உரிமையை வழங்கக் கூடாது? அதுவும் இது போன்ற ஒரு சிறப்பு சூழ்நிலையில், என்பதுதான் எனது கேள்வி.

இது போன்ற உறுப்பு குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தை எதிர்காலத்தில் தன்னையும் வருத்திக் கொண்டு, தன்னோட ஒட்டி வாழ்பவர்களையும் பல இன்னல்களின் வழி நடத்திச் செல்லலாம் பொருளாதார, மன உளைச்சல், ஆள் தேவை என பல படிகளில், இல்லையா? அதிலும் குறிப்பாக பணத் தேவை தொடர்ந்து தேவைப்படும் பட்சத்தில் இந்த சட்டமோ, அல்லது சிசுவை கருவில் கலைப்பது இறைத்தன்மையற்றது அல்லது கருணையற்றத்தனம் என்று கூறுபவர்களின் வாதமெல்லாம் அன்று அவர்களுக்கு துணை நிற்காது. அது அந்த குறிப்பிட்ட குடும்பத்தின் மீது விழுந்த பாரமேயன்றி எவருடைய கருசணையும் அவர்களுக்கு தினப்படியாக கிட்டப் போவது கிடையாது, என்பது நிசர்சனம்.

அப்படியே இந்தச் சட்டம் பெற்றோர்களின் கோரிக்கையை தாண்டியும் வலியுருத்தி அந்தக் கருவை வளர்த்து பிள்ளையாக பெற்றெடுக்க வைக்கும் பட்சத்தில் வேண்டா வெறுப்பாக பிள்ளையை நடத்தினாலோ, அல்லது பெற்றோர்களே மன உளைச்சலில் சிக்கித் தவிக்கும் பொழுது என்ன ஆறுதலை வழங்கப் போகிறது? ஏன், பெற்றோர்களின் முடிவில் இது போன்ற சூழ்நிலையில் பக்கம் நிற்கக் கூடாது இந்தச் சட்டம்? புரியவில்லையே...





ஒரு கொசுறுச் செய்தி: தட்ஸ்தமிழில், படிக்கும் பொழுது ஒரு க்ரிஸ்துவ மிஷனரி குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள முன்வருவதாக தெரிவித்தமைக்கு, அங்கே வந்த பின்னூட்டங்களில் ஒருவர் உடனே அந்த மிஷனரியின் நோக்கத்தை அதாவது தத்தெடுத்து மதம் மாற்றுவதற்காவே செய்ய முன் வந்திருக்கிறார்கள் என்று கோபப்பட்டிருக்கிறார். அதனைப் படித்தவுடன் அட இப்படியும் மனிதர்களா என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

Related Posts with Thumbnails