Tuesday, August 24, 2010

பாகிஸ்தான் வெள்ளத்தில் மிதக்கிறது இந்திய நாட்டின் அமைதி!!

ஒரு ஞாயிற்றுக் கிழமையில் என்னை இன்செப்ஷன் படம் பார்க்கத் தூண்டிய தாத்தா இன்று வந்திருந்தார். நானும் தொலைபேசியில் எப்பொழுதும் போல வெட்டி அரட்டையில மூழ்கி கிடந்தேன். தாத்தா சுத்தி சுத்தி வந்து எதனையோ பேச முயற்சிக்கிற மாதிரி ஓர் உணர்வைக் கொடுத்தார். தொலைபேசியை மூர்ச்சையாக்கிட்டு அவரை பார்த்தேன். அவரும் அதுக்காகவே காத்துக்கிட்டு இருந்த மாதிரி, பாகிஸ்தான்ல வெள்ளம் சொல்ல முடியாத அளவிற்கு பெரும் அழிவைக் கொடுத்துருக்கு கவனிச்சிட்டு வாரீயா அப்படின்னு ஒரு கேள்விய தூக்கிப் போட்டார்.

விசயத்திற்குள்ளர போறதிற்கு முன்னாடி அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. அவர் ஒரு வெள்ளையர். அறுபதிகளில் ஹிப்பி இயக்கம் அதி தீவிரமா இயங்கிக் கொண்டிருந்த சமயத்தில் அதன் ஊடாக பயணித்து உலகத்தின் பால் ஒரு தனி அக்கறையை உருவாக்கிக் கொண்டவர். இன்னமும், அதன் விட்டக் குறை தொட்டக் குறையாக போருக்கு எதிரான அமைதி ஊர்வலங்களில் கலந்து கொள்வதும் அது தொடர்பாக சில நேரங்களில் கைதாகும் நிலைக்குக் கூட தன்னை முன் நிறுத்திக் கொள்பவராகவும் இருந்து வருபவர். அது மட்டுமின்றி உள்நாட்டில் அநீதி இழைக்கும் வழியில் ஏதாவது சட்ட மசோதாக்கள் இயற்றப்பட்டு கடத்தப்படும் நிலைக்கெதிராக அதனையொட்டிய கருத்தரங்கங்கள், கூட்டங்களில் கலந்து கொள்வது, சைட்ல உலகப் படங்களும் அறிவியல் புனைவு படங்களையும் பார்த்து திளைப்பதுவெமென வாழ்க்கையை ஜரூராக நடத்தி வருகிற அறுபதுளின் தொடக்கத்தில் இருக்கும் ஓர் இளங்காளையவர்.

மீண்டும் விசயம் பேசுவோமா? பாகிஸ்தானின் வெள்ளத்தினை ஒட்டிய பேரழிவைப் பற்றி கேள்வியைக் கேட்டாரா. எனக்கு போன வாரத்தில் சி. என். என் -ல் ஒரு நழுவும் செய்தியாக பார்த்ததோட முடிந்து போனது, அந்தச் செய்தி. இருப்பினும் எனக்கு அந்த வாரத்தில கொஞ்சம் ஆட்டம், ஓட்டமென்று சொந்த விசயங்கள் காரணமாகவும் உலக விசயங்களில் கவனம் செலுத்த முடியவில்லை ;). இங்கு தமிழ் ப்ளாக்குகளிலும் அவ்வளவாக அதனையொட்டிய பதிவுகளை பார்த்த மாதிரியாக ஞாபகமில்லை. இருந்தாலும் பாகிஸ்தான்ல அதுவும் நம்ம எதிரிங்க கஷ்டப்பட்டா நமக்கு கொண்டாட்டமாத்தானே இருக்கணும்ங்கிற சின்னப் புள்ளத்தனமான நாட்டுப் பற்றும் அவிங்க பண்ணுற அழும்பிற்கு கடவுளே பார்த்து தண்டனைக் கொடுக்கிற ரேஞ்சிற்கு யோசிக்கிற புத்தியும் சேர்ந்திருக்கிறதாலே, இதெல்லாம் நம்மோட பிரச்சினையான்னு விட்டிருப்போம் போல.

ஆனா, அன்னிக்கு அவர் கேட்ட தொனியே ஏதோ பெரிய அளவில் பிரச்சினை இருப்பதாக எண்ணச் செய்தது. ஒவ்வொரு முறையும் அவருடன் பேசும் பொழுதும் பலத்த சிந்தனைகள் எழும்பும்மாரு கேள்விகளையோ அல்லது சம்பாஷணைகளையோ நிகழ்த்திவிட்டு சென்றுவிடுவார். அப்படியே இன்று என்னிடம் அவர் கேட்ட கேள்வி - இந்தியாவும் பாகிஸ்தானும் எலியும் பூனையுமாக இருப்பதாக அந்தப் பிராந்தியத்தில் காட்டிக் கொள்கிறார்கள். நல்லுறவை பேணும் பொருட்டு நட்புறவை மேம்படுத்திக் கொள்ள இரு நாடுகளுமே பாடுபட வேண்டிய கட்டாயத்திலுள்ளது. மக்களின் மனத்தில் அது போன்ற நன்னம்பிக்கையை விதைத்து தொலை தூர நட்புறவு பாதையில் நடந்து செல்ல வேண்டுமாயின் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் அதற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வரலாற்று எதார்த்தம் அப்படியாக இருக்கும் பொழுது அண்டைய நாட்டில் அப்படியொரு மாபெரும் இயற்கைச் சீற்றம் நிகழ்ந்து 170 மில்லியன் மக்களில் 60 விழுக்காடுகளுக்கும் மேலாக பாதிக்கப்பட்ட நிலையில் உலக நாடுகளின் முன்னால் கெஞ்சிக் கொண்டிருக்கிறது உதவி கேட்டு, இந்தியா ஏன் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அந்த நாட்டின் மீதான தனது அரசியல் நிலைப்பாடுகளைத் தாண்டி மக்களின் மனங்களில் நல்லெண்ணங்களை கோலோச்சும் வழியாக ஐந்து மில்லியன் டாலர்களைத் தாண்டி தனது உதவிக் கரங்களை நீட்டியிருக்கக் கூடாது? என்பதே அவரின் கேள்வி.

அதனையொட்டி எப்படி உலக அரங்கில் உலக நாடுகளின் அரசியல் நிலைப்பாடுகள் சாதா மக்களின் அன்றைய அவலத் தேவைகளைத் தாண்டியும் கோணல் பார்வையில் அந்தச் சூழலை கடந்து செல்ல வைக்கிறது என்று பேசிக் கொண்டோம்.

ஒரு வியாபாரிக்கு தன்னிடம் இருக்கும் சரக்கை வித்து தீர்க்க வேண்டுமாயின் என்ன தேவையாக இருக்கிறது. சந்தையில் அந்தச் சரக்கின் தேவை. அந்தத் தேவை அதிகரிக்க அதிகரிக்க விலையும் அதனையொட்டியே தீர்மானிக்கப் படுகிறது. அப்படி அந்த வியாபாரி கையிருப்பு அதிகமாக வைத்திருக்கும் பட்சத்தில் ஒரு தற்காலிக வறட்சியை ஏற்படுத்தி பின்பு லாப நோக்கில் வெளியிட்டு அதிக முதலீட்டை திரும்பப் பெற எத்தனிக்கிறான். அதே போர்வையில்தான் எது போன்ற சூழலாக ஒரு அண்டைய நாட்டின் அவலம் அமைந்து போனாலும், உள் நாட்டு அரசியல் வாதிகளும் கண்களை இறுக மூடிக் கொண்டு வாய்ப்புகளை தெரிந்தே நழுவ விட்டு விடுகிறார்கள். எந்த அண்டைய நாட்டுடனும் மற்றொரு நாடு மிகவும் தோழமையுடன் இருந்து போக எத்தனித்தாக தெரியவில்லை. ஏனெனில், பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் தனக்குத் தேவையான (தன் தலை தப்பியிருக்க தேவையான) பொழுது பிரச்சினை இருப்பதாக அண்டைய நாட்டுடனான உறவுச் சிக்கலைப் பேசி, தன் உள்நாட்டு குழப்பங்களை தற்காலிமாக மறக்கடிக்க சாதா மக்களுக்கு போதையூட்டு கைச்சித்திரமாக காட்சியப் படுத்த முடியும்; என்ற வாக்கில் எனது வாதத்தினை வைத்தேன்.

இதனை எழுத அமர்வதற்கு முன்னால், இன்னும் காத்திரமாக எனது கருத்துக்களை வைக்க வேண்டுமென்றேதான் நினைத்திருந்தேன். ஆனால் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியை படிக்கும் பொழுது கொடுத்த ஐந்து மில்லியன் டாலர்களைக் கூட பாகிஸ்தான் அரசு பெற்றுக் கொள்வதா வேண்டாமா என்று பரிசிலீத்துக் கொண்டிருக்கிறது என்றும், ஓபாமா அரசு இந்தியாவின் உதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறும் சிபாரிசு பண்ணுமளவிற்கும் இருக்கிறது நிலமை என்று படித்ததும் தான் நான் மேலே குறிப்பிட்ட அரசியல் உள் லாப நிலை பல்லிளித்துக் கொண்டிருக்கிறது என்று ஊர்ஜித படுத்திக் கொள்ள முடிந்தது.

இரண்டு நாடுகளும் இத்தனை வறுமைக் கேடுகளை கொண்டிருப்பினும் தனது பாதுகாப்பிற்கென தன்னுடைய நாடுகளின் எல்லைகளுக்குள் அத்தனை இராணுவ தளவாடங்களையும், வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட டுப்பாக்கி, வானூர்தி, டேங்குகள் என்றும் பல்லாயிரக்கணக்கில் காவல் பணியில் ஈடுப்பட்டிருக்கும் மனித உயிர்கள் என்றும் பல செலவுகளை கோடிகளில் செய்து கொண்டிருந்தாலும், இன்று நாட்டு முழுமைக்குமே பேராபத்து இயற்கைச் சீற்றத்தால் என்று வரும் பொழுது தன்னுடைய அத்துனை resourcesகளையும் பயன் படுத்தி மக்களை காப்பாற்றி அதன் மூலமாக இவர்கள் எதற்காக அத்தனை பொருளையும் செலவு செய்து காக்கிறார்களோ அந்த செலவீனங்களை மட்டுறுத்தி நிறுவிக் கொள்ள முடியாதா? மக்களின் மனங்களில் அமைதி, சகோதர பாசம் என்ற விதைகளை இது போன்ற அவல நிலைகளின் மூலமாக தங்களுடைய இருப்பைக் காட்டி, கண்களுக்கு புலப்படாத பாசக் கயிற்றைக் கொண்டு கட்டி நீண்ட தூர தீர்விற்கு வழிவகை செய்து கொள்ள முடியாதா...

நாமும் பேருந்து விட்டுப் பார்க்கிறோம். கிரிக்கெட் விளையாண்டு பார்க்கிறோம். பிற நாடுகளுக்குச் சென்று பேச்சு வார்த்தை நிகழ்த்திக் கொள்கிறோம். இருப்பினும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் பக்கத்து பக்கத்து கதவுகளைக் கொண்ட அண்டைய வீட்டுக்காரர்களுக்கு ஒன்றென்றால் ஓடிப் போய் கை கொடுக்கும் வாய்ப்புகளை எல்லாம் உள் அரசியல் லாப நோக்கிற்காக தட்டிக் கழித்துக் கொண்டே எந்த அமைதியை வளர்க்க இவர்கள் பாடுபடுகிறார்கள்? இதெல்லாம் அரசியல் சித்து விளையாட்டுக்களன்றி வேறென்ன? ஏன், சாதா மக்களான நாம் அதனைப் பற்றி யோசிப்பதே இல்லை?

லார்ட் ஆஃப் வார் Nicholas Cage நடித்து வெளி வந்த படம் அதனில் மிகத் தெளிவாக காட்டுவார்கள் எப்படி வளர்ந்த நாடுகளில் உற்பத்தியாகும் இராணுவ விளை பொருட்கள் வளரும் நாடுகளில் விற்பனையாகிறது அதற்கு எப்படியாக வளரும் நாடுகளில் பிரச்சினைகள் உருவாக்கப் பட்டு எண்ணெயிட்டு வளர்த்தெடுத்து பிரச்சினை ஓய்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது என்ற ரேஞ்சிற்கு கதை நகரும்; அதுவே உண்மையும் கூட. அதனையும் தாண்டி இன்று நம் அரசியல் வாதிகளுக்கு உள் நாட்டு பிரச்சினையிலிருந்து தப்பிக்க வேண்டுமாயின் அண்டைய நாடு தொட்டுக் கொள்ள ஊறுகாயாக வேண்டும் என்பதே அடிப்படை நாதம். அதற்கு மக்கள் உயிரொன்றும் பெரிய விலையல்ல! யாருக்கு வேண்டும் தொலை தூர அமைதியும், தென்றல் காற்றும்...




பி.கு: இதில பெரிய ஜோக் என்னத் தெரியுமா பாகிஸ்தான்ல இப்ப அடிச்சு முடிச்சிருக்கிற வெள்ளத்திற்கு இந்தியாவும், அமெரிக்காவும்தான் காரணமாம். இயற்கையை திசை திருப்பி அங்க ஏவி விட்டாங்களாம். மக்கள ஏமாத்தி போதையிலேயே வைச்சிக்க இதை விட பெரிய கேணத்தனமான சப்பைக் காரணங்களை கூறி தன் நாட்டு மக்களையே முட்டாள்களாக காட்டிக் கொள்ள வேறு யாரும் அஞ்ச மாட்டாங்க இந்த அரசியல் வியாதிகளை விட்டால்.


Photo Courtesy: Net

Friday, August 20, 2010

இத படிக்காம விட்டுடுங்க பார்ப்போம் - :)

ஒருத்தரு கவின் ஜாலங்கிற பேர்ல தனியா ஒரு கடை திறந்து பட்டைய கிளப்பிட்டு இருக்காரு. சிகரெட்டிற்கும் அதனுடன் உறவு கொண்டாடுவருக்குமான நெருக்கம் அது சொல்லி விளங்கக் கூடியதல்ல... ஆனால் அதன் பின்னணியில் எது போன்ற நட்பாக இருக்கிறதின்னு சொல்லி கவி பாடி இருக்காரு பாருங்க நீங்களே...




...புகைத்துக் கொல்லும்

`நான்கு அங்குல’ தீவிரவாதி..


புற்று நோயின்

அழகிய அந்தரங்க காரியதரிசி


வெள்ளை உடுத்தி வரும்

இவள்..

உண்மையில்

பல உயிர்களைக் கொள்ளையிடும்
ச(ர்)ம்பல் கொள்ளைக்காரி!...


Tuesday, August 10, 2010

ஃபேஷன் ஷோவில் காமிராப் பார்வை: Fashion Show Photographs

இப்படி ஒரு இன்ப நிகழ்ச்சியும் கலந்ததுதான் இன்னிக்கு நான் கலந்துகிட்ட ஷோவின்னு தெரியாமயே டவுண்ட்டவுன் ஜியார்ஜியா காங்கிரஸ் செண்டருக்கு நண்பர்கள் கூப்பிட்டுருந்தாங்கன்னு போயிருந்தேன். அங்கே பார்த்தா... அட நான் என்னாத்த சொல்லுறது நீங்களே பார்த்துக்கோங்க...

இங்கதான் அந்த நிகழ்ச்சி நடந்துச்சு...




# 1 - அள்ளி முடிஞ்ச கொண்டையோட...





# 2 - இது என்ன பார்வையோ; ரொம்ப நேரம் நின்னுருப்பேனோ...



#3 - தலையில வாசமில்லாப் பூவோட...




#4 - என்ன மூட் பாருங்க படத்தில...






#5 - ம்ம்ம் வீட்டில எதையோ மறந்து வைச்சிட்டு வந்திருப்பாங்களோ...




#6 - அந்தப் பார்வை என்னய நோக்கி வந்ததுதான்... ஜஸ்ட் மிஸ்ட் ;)



# 7 - ஏன்ன்ன்ன்ன்...



#8 - தலைக் கோபுரத்திற்காக இந்தப் படம்...



#9 - புகைப்படத்தின் பின்னணி நல்லாருக்கில்ல...



#10 - இது கொசுரு, அங்கன மூணு அக்காக்க ஆடுனிச்சு இதுக்கு மேலே இங்க சரியா வராதுன்னு பிடிச்சி வைச்சிக்கிட்டேன்... முடியல்ல ரேஞ்ச் அதெல்லாம் :)

Related Posts with Thumbnails