Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Saturday, July 27, 2019

Dragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்

1870கள் அமெரிக்காவிற்கு ரொம்ப முக்கியமானதொரு பத்தாண்டு. ஒரே நேரத்தில் இரு வேறு கரைகளிலிருந்து இரு வேறு இனங்களுக்கு இடையேயான
போராட்டத்தை வாசிப்பனுபவத்தின் மூலமாகப் பெற முடியுமா? முடியும் என்கிறது இரு வேறு வித்தியாசமான தளங்களைக் கொண்ட புத்தகங்கள்.
இதில என்ன முக்கியமானதொரு விசயம்னா- ஒரு புத்தகம் முழுக்க முழுக்க வரலாற்று உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் சிவப்பிந்தியர்களின் பார்வையிலிருந்து எழுதப்பட்டது (Bury My Heart At Wounded Knee by Dee Brown).
மற்றுமொன்று நம்ம ஜுராசிக் பார்க், ப்ரே, நெக்ஸ்ட், மைக்ரோ போன்ற பிரபலமான நாவல்களை கொடுத்த மைக்கேல் க்ரிக்டன் எழுதிய Dragon Teeth என்ற புனைவு நூல்.
சிவப்பிந்தியர்களை பற்றிய புத்தகத்தில் நாம் அவர்களுடன் திறந்த வெளியில், பனியில், மலைகளின் குடைவிடங்களில், பள்ளத்தாக்குகளில் அவர்களுடன் அவர்களது எருது தோலில் கட்டப்பட்ட குடிசையில் உண்டு, படுத்துறங்கி, குதிரையில் பயணித்து நட்ட நடு இரவில் காலனி காலத்தைய அரசு அதிகாரிகளுக்காக காத்திருந்து, நீட்டும் இடத்தில் கையெழுத்திட்டதை சாட்சியாக இருந்து பார்ப்பதாகட்டும்...
அவ்வாறு பெற்றுக் கொண்ட நிலத்திற்கு இணையாக அவர்களுக்கு ரேஷன் முறையில் கொடுக்கப்படும் காபி, சீனி, கம்பளி மற்றும் துப்பாக்கி வெடி பொருள் கொடுப்பதை தாமதப் படுத்தி அதன் மூலமாக ஏற்படும் பிரச்சினைகளில் ஒருவனாக நின்று பார்ப்பதுதாகட்டும்...
தங்களுக்கென ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட நிலத்திற்குள் உள்ள மலைகளில் தங்கம் கிடைப்பதாக செய்தி பரவி, ஒப்பந்தத்தையும் மீறி அப்பொழுதே புதிதாக கட்டப்பட்ட புகை வண்டி பயணத்தின் மூலமாக மேற்கத்திய பயணம் எளிமை பட, திபுதிபுவென் கூட்டம் சிவப்பிந்தியர்களின் நிலத்திற்குள் படையெடுக்க ஆரம்பித்ததும் அவர்களுக்குள் நடைபெற்ற மன சஞ்சலங்களை கேட்டவாறு, புகை வண்டியை மறித்து பொருட்களை கொள்ளையடிக்க குதிரைச் சவாரி செய்வதில் ஒருவனாக ட்ரைனை விரட்டிச் செல்வதுமாக சென்று...
அவ்வாறு அடிக்கடி நிகழும் பொழுது அவர்களைத் தேடி அழிக்க வரும் காலனி படை வீரர்களை தந்திரமாக சுற்றி வளைத்து கொன்று போடுவதாகட்டும்...
பின்பொரு நாள் அவர்களது கிராமங்களுக்குள் காலனி படை வீரர்கள் வந்து குடும்பம் குடும்பமாக கொன்று தலைத் தோலோடு வெட்டிப் போடுவதை நடுங்கிய உடலோடு கண்ணுருவதாக இருக்கட்டும்... சிவப்பிந்தியர் வாசிப்பு நம்மை அவர்களில் ஒருவனாக இருந்து அந்த போராட்டத்திற்கான நீதிகளை பார்க்க வைக்கும்.
அதே நேரத்தில் மைக்கேல் க்ரிக்டனோட புனைவில் அந்த வெள்ளையர்களின் பூட்டிய இரயில் பெட்டியின் அறைக்குள் இருந்து நம்மை எது போன்ற உரையாடல் நடைபெறுகிறது சிவபிந்தியர்களை பற்றி என கேட்கும் வாய்ப்பைக் கொடுக்கிறது.
அந்த புகை வண்டி உரையாடல்கள் டைனோசார்களின் புதை படிமங்களை தேடிச் செல்லும் அறிவியலாளர்களுக்கிடையே நடைபெறும் பேச்சுக்களுக்கிடையே சிவப்பிந்தியர்கள் பற்றியான அச்சம், அன்றைய போரில் எந்த ஜெனரல் கொல்லப்பட்டார் என்றும், மணிக்கு 10 கி.மீ வேகத்திலே நாள் கணக்கில் நம்மை அந்த புகை வண்டியில் கூட்டிச் செல்கிறார்கள்.
இதில் வரும் ஆண்டுகளும், சம்பந்த்தப்பட்ட இடங்களும், இரண்டு இனங்களில் முக்கியமான மனிதர்களின் பெயர்களுகும் சிறிதும் மாற்றமில்லாமல் கொடுப்பதை வாசிக்கும் போது, மாறி மாறி நாம் குதிரையின் மீதேறி அமர்ந்தவாறு அந்த புகை வண்டியை தடுத்து நிறுத்த திட்டமிடுவதாகவும், புகை வண்டிக்குள்ளிருந்து உணவின் விலையைப் பற்றிய குறைகூறலும், கடந்து போகும் ஸ்டேசன்களிலிருந்து எங்கே சிவப்பிந்தியர்கள் தாக்கி விடுவார்களோ என்ற பயத்துடன் பயணம் செய்வதாகவும் எடுத்துச் செல்வது ஒரு வித்தியாசமான வாசிப்பனுபவம்.
இரண்டு புத்தகத்திற்கும் பேக் ரெஃபரன்ஸ்ல் கடுமையான உழைப்பு தெரிகிறது. புனைவுதானே என்று க்ரிக்டனும் விட்டுவிடவில்லை...

Tuesday, April 09, 2019

ரஜினிக்கு ஒரு கடிதம்: நதிநீர் இணைப்பு

பாஜக ஆட்சிக்கு வந்தால் உடனே நதிகளை இணைக்க வேண்டும் - ரஜினி காந்த்.

அளவிற்கு மீறிய புகழ், பணம், அதிகாரம் இது எல்லாமே ஒரு நிலையில் காலம் ஒருவருக்கு வைத்த செக்மேட் அல்லது சாபம் எனக் கொள்ளலாம்.

இவைகள் அனைத்தும் கிடைத்தும் ஒருவருக்கு தன்னுடைய லிமிட், டிலிமிட் அறிந்து கொள்ளத் தேவையான தனக்கென நேரம் செலவழிப்பு, நல்ல புத்தகங்கள் வாசிக்கத் தேவையான மன நிலை, தன்னுடைய நிலைக்கென தன்னிடம் பழகும் மனிதர்களைத் தாண்டிய நட்பு பேணும் மனநிலை அமைவது என்பது சிம்ம சொப்பனமே!

உண்மையான "டவுன் டு எர்த் பர்சன்" என்பது அதுவாகத்தான் இருக்க முடியும். எளிமை, பணிவு, பக்குவம் என்பதும் அந்த உலகத்தின் கூரையில் தான் இருக்கிறோம் என்றாலும், இடம், பொருள் தன்னுடைய அறிவிற்கு இதைச் சொல்வது பொருத்தமானதா என்று அறிந்து பேசுவதில் இருக்கிறது.

இந்த நதிநீர் இணைப்பை பற்றி இந்த சூப்பர் ஸ்டார் தொடர்ந்து தன்னுடைய மட்டித் தனமான வாதத்தை வைக்கிறாரே, இவர் இந்த பூமியுனுடைய இரண்டு பில்லியன் ஆண்டுகளின் படிமலர்ச்சிப் பற்றி ஏதாவது வாசித்திருப்பாரா?

கடந்த 600 மில்லியன் ஆண்டுகளுக்குள் எது போன்ற கரடு முரடான வளர்ச்சிகளை இந்த பூமி முகம் கொடுத்து வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் செலுத்தி இருப்பாரா? ஏன் அவ்வளவு தூரம் போகிறோம் பெர்மியன், ட்ரையாசிக், ஜுராசிக், க்ரேட்டேசியஸ் என்ற பூகோள கால க்ரமத்தில் என்னவெல்லாம் இந்த பூமி மேலோடு மாற்றங்களை சந்தித்திருக்கிறது என்று அவருக்கு யாராது சொல்லி இருப்பார்களா?

300 மில்லியன் ஆண்டுகள் வரைக்குமே கண்டங்களே இல்லாமல் ஒன்றாக பாஞ்சியா (Pangea) என்ற முழுப் தரைப்பகுதியாகத்தான் இந்த பூமி இருந்திருக்கிறது. ஒரே கடல்தான்.

டைனோசார்கள் கோலுச்சிக் கொண்டிருந்த காலத்தில்தான் நிலப்பரப்பு பிய்த்துக் கொண்டு தனித்தனியாக கண்டங்களாக நகர்ந்திருக்கிறது. அப்பொழுது ஏற்கெனவே ஓடிக் கொண்டிருந்த நதிகள், ஆறுகளுக்கெல்லாம் என்ன வாகி இருக்கும்?

இருந்த பெரிய ஆறுகள் காணாமல் போயிருக்கும் அத்துடன் அதனையொட்டி வாழ்ந்த உயிரினங்கள் மெல்ல மெல்ல அழிந்துப் பட்டிருக்கும். பூமியின் மோலோடு மாற்றி அமைக்கப்பட்டதால் புதிய ஆறுகள் அதனதன் வழியை கண்டுபிடித்து உருவாகி இருக்கும். அதனையொட்டிய நிலப்பரப்பில் அதனையொட்டிய சுற்றுச்சுழலுக்கு தகுந்த தகவமைவுகளுடன் உயிரினங்கள் உருவாகி படிமலர்ச்சி அடைந்து கொண்டிருக்கும்.

இவை எதுவுமே ஒரே இரவில் அடைந்த மாற்றங்கள் கிடையாது.
கோடிக்கனக்கான ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. இந்த பின்னணியில் வைத்து நம்மை பார்த்தால், நாம் யார் இந்த பூகோளத்தின் வரைபடத்தை திருத்தி எழுதிக் கொள்ள? அப்படி நதிகளின் வழியை திருத்தி அமைக்கும் பொழுது எது போன்ற நீண்ட கால மாற்றங்களை இந்த சுற்றுப் புறச் சூழல் முகம் கொள்ளும் என்று சிந்தித்தது உண்டா, மிஸ்டர். சூப்பர் ஸ்டார்?

அன்று தழைத்து, கொழித்து வாழ்ந்து வந்த டைனோசார்கள் இன்று எங்கே? எதனால் அவைகள் அழிந்து பட்டிருக்கக் கூடும்? நீரும், உணவும் தானே அடிப்படை ஆதாரம் அனைத்து உயிரினத்திற்கும் ஆறுகள் தன்னியல்பில் தனது பாதை கண்டு கடலில் கலப்பது தானே காலச் சக்கரம் அதற்கு வழங்கிய இயல்பு. இதில் உங்க ஒரு கோடி ரூபாய் கொண்டு வேண்டுமானால் இருக்கும் குளம், குட்டை, ஆறுகளை தூர் வார கொடை அளியுங்கள்.

போகாத ஊருக்கு வழி காட்டாதிங்க. செலவு மிச்சம்னு.

யாரோ சொல்கிறார்கள் என்பதால் லாஜிக் இல்லாத தன்னுடைய அறிவிற்கு எட்டாத விசயத்தை எல்லாம் உளரி வைக்கக் கூடாது. தானே தேடிப் படித்து, சிந்தித்து பெரும் பெரும் பிரச்சினைகள் பொருத்து வாயை விட வேண்டும்.

உங்களுக்கு ஒரு புத்தகம் சிபாரிசு செய்கிறேன். ஆராய்ச்சிக்கான புத்தகமே ஆனாலும் ஒரு சினிமாவிற்கு உண்டான பிரமாண்டம் இருக்கிறது. உங்களது வாழ் நாளுக்குள் வாசியுங்கள். பிறகு நதிநீர் இணைப்பு பற்றி பேச கொஞ்சம் யோசிப்பீர்கள்.

The Rise and Fall of the Dinosaurs: A New History of a Lost World by Stephen L. Brusatte

Friday, March 15, 2019

வெறுப்பின் எச்சமே அழிவு: Hatred Is Self-destruction


நியூசிலண்ட்ல இரு வேறு துப்பாக்கிசூடுகள். ஆனா, இரண்டிற்கும் அடிப்படை காரணம் ஒன்றே. அது வெறுப்பு! மனித மனம் எப்போதும் எதிர்மறை எண்ணங்களின் மீது அதீதமான பிடிப்பு உள்ளதைப் போல நடிக்கும். இருப்பினும் ஓர் ஓரத்தில் நம்முடைய எதிர் முனையில் இருக்கும் நேர்மறை நாட்டாமையின் மீது கண் வைத்தவாரே, முதலில் அது ஒரு சிறு உவப்பு இல்லாத விசயத்தை செய்து பார்க்கும்.
நாம் உடனே விழித்துக் கொண்டு அதட்டி அது இருக்க வேண்டிய இடத்தில் சுருட்டி அமர வைத்து விட்டால் விளைச்சல் நிலத்தில் ஊடுருவும் களைகள் பெருகி பயிரின் விளைவு குறைவாகிவிடுவதைப் போல குறைந்து விடும்.
தவிர்த்து, எதிர்மறை எண்ணங்களை தொடர்ந்து கேட்டும், பார்த்தும் தவறான வாசிப்புகளும் செய்து வந்தால் அது காட்டுத்தீ போல மட்டுக்குள் கொண்டு வர முடியாத வாக்கில் வளர்ந்து காடு, மேடு, பள்ளம், குழந்தை, முதியோர், நான், நீங்கன்னு பார்க்காம எல்லாரையும் அழித்து விடும்.
இந்த ஐந்து வருட ஆட்சியில் இந்தியா முழுமைக்கும் வெறுப்பு விதைக்கப்பட்டு மெதுவா அது அனைவர் புத்தியிலும் ஊடுருவச் செய்யப்பட்டிருக்கிறது. அது கொளுந்து விட்டு எரிந்து வாழும் வீட்டையே எரித்து சாம்பாலாக்கிக் கொள்வதற்கு முன்னால் விழித்துக் கொண்டால் அனைவருக்கும் நலம்.
இந்த வெறுப்பு, தூய்மை வாதம் பேச வைக்கிறது. குறுகிய சாளரங்களை திறந்து விடுகிறது. அவன் வடுகன், முஸ்லீம், க்ரிஸ்டியன், தாழ்த்தப்பட்ட சாதி என்று இல்லாத ஒன்றை வைத்து அடையாளப் படுத்தி குறுக்கிக்கொள்ளச் செய்கிறது. இன்று ஒரு குழுவை, ஓர் அடையாளப்படுத்தி அவனை அதற்குள் குறுக்கும் அதே மனது நாளை வேறொரு குழுவை இன்னொரு பாட்டிலிலுக்குள் அடைத்துப் பார்க்காது என்று என்ன நிச்சயம்.
நான் தமிழன் என்று அடையாளப்படுத்திக் கொண்டே இரவோடு இரவாக தங்களை தற்காப்பு செய்து கொள்வதற்குக் கூட ஆற்றல் இல்லாத ஒரு தாயையும், இரண்டு குழந்தைகளையும் இரத்தச் சகதியில் வெட்டிப் போட்டு விட்டு தலை மறைவாகி விடுபவர்களும் அதே தமிழர்கள் தான். காரணம் உயர் சாதியாம், அவர்கள் தாழ்ந்த சாதியாம். இந்த லட்சணக் கட்டையில் அரசாட்சியை அவர்கள் கையில் கொடுத்து விட்டால் அனைவரும் ஒரே இரவில் ஒரு தாய் பிள்ளைகளாக ஆகி விடுவார்களாம். இதெல்லாம் என்ன மாதிரியான கதை?
பெரியாரும் வந்தேறி, கலைஞரும் வந்தேறி, சு. வெங்கடேசனும் வந்தேறி என்றால் நீ மட்டும் அப்போ யாரு? நீ உன்னுடய நிலப்பரப்பையும் அடையாளத்தையும் குறுக்கக் குறுக்க உன்னுடய இருப்பையே கேள்வி குறியாக்கி விடும் இயற்கையே அது தெரியுமா உனக்கு. வனத்தில் பரந்து விரிந்த காடுகளில் மட்டுமே ஆரோக்கியமான வழியில் பல்லுயிர் பேணல் நடந்தேறுகிறது.
இலங்கையில் நடந்த இனப்போரை காரணம் காட்டுகிறார்கள். அதற்கு பின்னான வரலாற்று சூழ்ச்சி அறிவாயா? அதே பிரித்தாளும் சூழ்ச்சியால்தான் நீ சாதிப் பெருமை பேசி வடுகன், வந்தேறி என்று உன்னுடைய இனத்தின் அடையாளத்தையே குறுக்கி அதே பாதையில் செல்லத் துணிகிறாயா? நீ யாருக்கு இரையாகிக் கொண்டிருக்கிறாய் என்று சற்று நிதானித்துப் பார் உண்மை விளங்கும்.
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள் அதுதான் நம்முடைய மந்தை கூட்டத்திற்கு நடந்தேறுவது. கூட்டத்தை சிதறடித்தால் வேட்டையாடும் ஊண் உண்ணிக்கு வேட்டையாடல் எளிது. எளிய மூளை உடனடி பயன்பாட்டினை எண்ணித் திளைக்கிறது. திறனுடைய மூளை நீண்ட கால அறுவடையின் மீது கண் வைக்கிறது. நீ யாராக இருக்க வேண்டும்?
ஒரு ஜனநாயகத்திற்கு சீமான், வேல்முருகன் போன்றவர்கள் பேசும் அரசியலும் தேவைதான். அது சாப்பாட்டிற்கு தொட்டுக்கொள்ள பயன்படுத்தும் ஊறுகாய் அளவோட நிப்பாட்டிக் கொள்வது நல்லது. மிஞ்சினால் நஞ்சாகி, ஓர் இலங்கைப் போரைப் போன்று வீட்டிற்கே வரவழைத்து கொள்ளும் அனைத்து சாத்தியங்களையும் கொண்டது என்பதை உணருங்கள்.
பெரிய எண்ணங்களை, வெறுப்பை விதைவிக்காத, நிதானமாக நின்று முடிவெடுக்கும் மனித மாண்பு போற்றுபவர்களை தேர்ந்தெடுங்கள். எல்லாவற்றிற்கும் தெருவில் நின்று போராட்டம் நடத்தும் நிலையிலிருந்து மாறி, பதட்டமான சூழலிலிருந்து வெளிவந்து அனைவரும் மென்மேலும் ஒரு மகிழ்வான சமூதாயத்தை பெற்று வாழ்க்கை அமைதியாக நகர அது வழி நடத்தும்.

Saturday, March 02, 2019

நரி மனிதர்கள் ஒரு சிறுகதையின் ஊடாக நிகழ்கால அரசியல்!

சில கதைகள் படிக்கும் போதே தெரியும் இவை நம்மை நிலை குலைய வைத்து உலுக்கப் போகிறது என்று. அந்த வகையில் சற்றுமுன் ஒரு சிறு கதை ஒன்று வாசித்தேன். சாகித்திய அகாதெமி பிரசுரத்தில் வெளியான “ஆச்சரியம் என்னும் கிரகம்” என்ற தமிழ் தொகுப்பிலிருந்து ‘கோன் இச்சி வீடுமலை’ எனும் சிறுகதை.
தொடக்கத்தில் சிறுவர் கதை போன்று ஆரம்பித்து நமது இருமையின் ஓலத்தை உள்ளே செல்லச் செல்ல அதிகரிக்கச் செய்தது அச்சிறுகதை. கதை, கோன் இச்சி என்ற நரியைச் சுற்றி சுழல்கிறது. அந்த நரி தனது குடும்பத்துடன் மகிழ்வோட வாழ்ந்ததுதான். ஆனால், இடையில் தனது தினசரி நரி வாழ்வு மனச்சோர்வு ஊட்டி நகர வாழ்வு வாழ ஆசைப்படுகிறது. தனது காட்டின் அருகே அமைந்து போன காஃல்ப் தளத்திற்கு விளையாட வரும் பெரிய மனிதர்களைப் பார்த்து தானும் மனிதனாக வேண்டுமென்று உந்தப்படுவதே அதற்குக் காரணம்.
அங்கு வாழும் நரிகளுக்கு ஒரு சிறப்பு வரம் இருக்கிறது. ஓக் இலை ஒன்றை உச்சஞ்தலையில் வைத்தவாறு ஒரு மந்திரத்தை உச்சரித்தால் அது எதுவாக ஆக வேண்டுமென்று ஆசைப்படுகிறதோ அப்படியே ஆகிக்கொள்ள முடியும். ஆனால், மாறியது மாறியதுதான் மீண்டும் பழைய படியாக நரியாக திரும்ப வரவே முடியாது.
அம்மாவிடம் தனது விருப்பத்தை கோன் இச்சி தெரிவிக்கிறது. அம்மா அதனைக் கேட்ட உடனேயே மிகுந்த வருத்தம் கொண்டு,முன்னால் நம்மில் சில பேர் இப்படி மாறிச் சென்றிருக்கிறார்கள், ஆனால் அவர்களால் திரும்ப வரவே முடியவில்லை. மேலும் நீ நினைப்பது போல மனித பிழைப்பு ஒன்றும் அவ்வளவு சுலபமில்லை என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேக்காமல் மனிதனாகிவிட்டது.
தான் ஆசைபட்டவாரே கோட், சூட், டை அணிந்து, நகர வீதியில் இறங்கி நடந்து அங்கே முதலில் பார்த்த ஒரு வேலைக்கான விளம்பரத்தைப் பார்த்து உள்ளே செல்கிறான் கோன் இச்சி. விண்ணப்ப மனு என்றால் என்ன என்று கூடத் தெரியாமல், அப்பாவியாக நிறுவனரிடமே திரும்பக் கேக்கிறான். அவர் வித்தியாசமான ஆளாக இருக்கிறானே என்று மேலும் விசாரித்து தான் ஒரு வனமகனென்றும், முகவரியே கூட வனத்தையொட்டி புனைந்து கொடுத்த பெயர்களை கொடுப்பதையும் கண்டு ஆர்வ மூட்ட தனது கம்பெனியும் “மயிர்த்தோல் ஆடை” நிறுவனம் தானே என்றும் இவன் மலைப்பிரதேச ஆளாக இருப்பதால் பொருத்தமாக இருக்கும் என்று வேலை கொடுக்கிறார்.
ஆனால், கோன் இச்சிக்கு நிறுவனத்தின் பெயர் வித்தியாசமாக இருக்கிறதே என்றளவிலேயே ஞானம் இருந்ததே ஒழிய உண்மையாக அது எது போன்ற வேலை என்று புரிந்து கொள்ள முடியவில்லை.
பெரிய வீடு, கை நிறையச் சம்பளம், ஆசைப்பட்ட படி ஒரு கம்பெனிக்கு அதிகாரி என்று பெருமிதம் கொள்கிறான். தானும் நிச்சயமாக ஒரு நாள் காஃல்ப் நமது பழைய வீட்டிற்கு அருகில் இருக்கும் புல் தளத்தில் விளையாடுவோம் என்ற கனவோடு உறங்கிப் போகிறான்.
மறுநாளிலிருந்து தனது உழைப்பை தீவிரப்படுத்தி அனைத்தையும் மிக வேகமாக கற்று, முதலாளியே இவனை ஒரு முன் உதாரணமாக காட்டி மற்றவர்களை வேலை வாங்கும் அளவிற்கு நல்ல பெயர் எடுத்து மென்மேலும் பதவி உயர்வு, சம்பளமென்று உயர்ந்தபடியே அவனது வாழ்க்கை நகர்கிறது. மாத மாதம் தனது நரியாக இருக்கும் அம்மாவிற்கு முயல், பன்றி இறைச்சி என்று நிறைய வாங்கிக் கொண்டுச் சென்று சந்தித்து விட்டு வருவான்.
அப்படியான ஒரு சந்திப்பில் அம்மா, கோன் இச்சியை தனது கடந்த கால வாழ்வு நரி என்பதை மறந்து விடுமாறு கூறுகிறாள்; அப்பொழுதுதான் மேலும் நீ மகிழ்வாக இருக்க முடியுமென்றும் எடுத்துச் சொல்கிறாள். ஆனால், கோன் இச்சிக்கு அப்பொழுது ஏன் சொல்கிறாள் அம்மா என்று விளங்கவில்லை.
வேலை இடத்தில் முன் பனி பருவகாலத்தில் நன்றாக விலை போகக் கூடிய தோல் ஆடைகளின் கையிருப்பு குறைவாக இருப்பதும், நிறுவனத்திற்கு அதன் மூலம் கிடைக்கும் உபரி வருமானம் குறையக் கூடுமென்றும் எண்ணுகிறான். அது வரையிலும் தொழிற்சாலை பக்கம் எட்டிப்பார்க்காதவன் உள்ளே நுழைகிறான். அங்கே கரடி, முயல், மான், அணில், நரி என்று அனைத்து வித விலங்குகளும் கொல்லப்பட்டு, தோல் குழு குழுவாக தொங்கவிடப்பட்டிருப்பதை முதன் முதலாக கண்ணுருகிறான்.
தலை ஒரு நிமிடம் சுற்றி நிற்கிறது. கதறி அழுகிறான் அவைகள் நம்மையே உற்றுப் பார்ப்பதாக அவனுக்குத் தோன்றுகிறது. குற்ற உணர்வு பீரிட தள்ளாடிபடியே வெளியே வந்து வீடு சேர்கிறான். இரவெல்லாம் உறக்கம் கொள்ள முடியாத படிக்கு அவனுக்கு நினைவு அதனைச் சுற்றியே வட்டமிடுகிறது.
மறுநாள் முதலாளி இவனை அழைத்து விடுகிறார். பாராட்டு பத்திரம் வாசித்து விட்டு, வரும் பருவ காலத்தில் நிறுவனத்திடம் தோலின் கையிருப்பு குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறார். அதற்கு அவரே ஒரு தீர்வையும் கொடுக்கிறார். கோன் இச்சியை மலைக்குச் சென்று வேட்டையாடி நிறைய தோல்களை சேகரித்து வருமாறு பணிக்கிறார். கோன் இச்சி ஒரு நிமிடம் ஆடிப்போகிறான். முதலாளி தொடர்ந்து அப்படியாக செய்தால் பணி உயர்வும், மேலும் சம்பளத்தை உயர்த்திக் கொடுப்பதாகவும் கூறுவதை கேட்டதும் அனைத்தையும் மறந்து மகிழ்ச்சியில் திளைத்து ஒத்துக் கொள்கிறான்.
தனது வேட்டைக் குழுவுடன் இவனும் கையில் ஒரு துப்பாக்கியுடன் மலைக்குச் செல்கிறான். காடு அதிர அதிர வேட்டை நாய்களை அனுப்பி மிருகங்களை இவர்கள் பக்கம் அனுப்பி சுட்டு தோல்களை சேகரிக்கிறார்கள். இச்சி கோனும் தன் பங்கிற்கு மிக அழகான பளபளப்பான ஒரு நரியை தூரத்தில் மற்றுமொரு விலங்கை துரத்திச் செல்வதைக் கண்டு, அந்த நரியை சுட்டு எடுத்து வருகிறான்.
வேட்டையின் போக்கை காண வந்த முதலாளி கோன் இச்சி வேட்டையாடிய நரியின் அழகை மிகவும் பாராட்டி இது போன்றதொரு அழகான, பளபளப்பான தோலை நான் கண்டதே இல்லை என்று புகழ்கிறார். அப்பொழுதே அவன் அந்த நரியை பக்கமாக கொண்டு வந்து மிக அருகில் வைத்து முகத்தை பார்க்கிறான்.
முகம் வெளிரி, கால்கள் கிடுகிடுக்கிறது கையில் பிடித்திருந்த துப்பாக்கியும், நரியும் நழுவி பூமியில் விழுகிறது. கதறி அம்மா என்றழைத்தாவாறு, காட்டிற்குள் ஓட்டம் பிடிக்கிறான். எதிர்படும் மரங்களின் மீது மோதியவாறும், வேர்களில் இரடி கீழே விழுந்து எழுந்தும் ஓடுகிறான்.
அவன் வேட்டையாடியது வேறு யாருமல்ல. அவனது அம்மாவைத்தான். அதற்கு பிறகு நடப்பது நம் அனைவருக்கும் தெரியும். மனிதர்களை வெறுக்கிறான். யாரையும் பார்க்க பிடிக்காமல் தனது அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டது அதற்குப் பிறகு என்ன ஆனதென்றே தெரியவில்லை என்பதாக கதை முடிகிறது.
நீதி: இது கதையா? இது பாடம். வாசிக்கும் போது எனக்கு சமநோக்கில் இப்பொழுது உள்ள அதிமுக மந்திரி சபைதான் தொடர்ந்து மனதிற்குள் ஓடிக் கொண்டே இருந்தது. வரலாறும் தெரியாமல், தங்களின் கையில் இருக்கும் அதிகாரத்திற்கு பின்னால் இருக்கும் உழைப்பு, வியர்வை அதன் மகிமையும் உணராமல் ஏதோ தனக்கு இன்று இதமாக இருக்கிறது என்று கடும் உழைப்பின் பெயரில் ஈட்டிய உரிமைகளை எல்லாம் தாரை வார்த்து கொடுப்பதை பார்த்தால் அந்த கோன் இச்சிதானோ இவர்கள் என்று நினைக்க தோன்றவில்லை.
அதிலும் குறிப்பாக மாஃபா பாண்டியராஜனும், செங்கோட்டையனும் செய்து வருவது இச்சி கோன் செய்யத் துணிந்த அதே ”அம்மா நரியை” வேட்டையாடலை ஒத்த குழந்தைகளின் கல்வி உரிமையை பறிப்பது என்றால் மிகையாகுமா?
ஜப்பானிய மூலம்: ஷிஞ்ஜி தாஜிமா
தமிழில் : வெங்கட் சாமிநாதன்.

Tuesday, February 26, 2019

போர் ஒரு வியாபாரம்! War Business

அமெரிக்காவிற்கு போர் என்பது ஒரு வர்த்தகம். அவர்களுக்கு அது பொருளாதாரத்தை வளர்தெடுக்கும் ஓர் அங்கம். அப்படி பார்க்கும் அவர்களுக்கே சில நேரத்தில் தங்களுடைய பொருளாதாரத்தின் அடிமடியிலேயே கை வைத்துக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டு விடுவதுண்டு. உதாரணம் அண்மைய கால ஆஃப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியா போர்கள்.

அங்கிருந்தெல்லாம் பெரிய அளவில் எதிர்பார்த்த அளவிற்கு போட்ட பணம் திரும்ப வரவில்லை. நாட்டின் படை வீரர்களின் இழப்பும் அதிகம். அமெரிக்க பொது மக்களுக்கு பொருளாதார இடர் பாடுகளைத் தாண்டி உயிருக்கு அச்சுறுத்தல் பயம் கூட இல்லை. ஏன்னா, பூகோள ரீதியா ரொம்ப பாதுகாப்பான தொலைவில இருக்குற ஒரு நாடு.

இந்த நிலையில் நம்முடைய நிலப்பரப்பிற்கு வருவோம். இத்தனை பெரிய நெருக்கடியான மக்கள் தொகையை ஒரு குறுகிய இடத்திற்குள் வைத்துக் கொண்டு, சும்மா போர் போர் என்று இரண்டு பக்கமும் மார்தட்டினால் இழப்பு என்னவோ அனைத்து விதத்திலும் இரண்டு பக்கத்திற்கும்தான்; இரண்டு விதத்திலும், பெரும் பொருளாதார மற்றும் உயிர் சேதத்தை சந்திப்போம்.

உண்மையான போர் என்று வரும் போது இரண்டு நாட்டு நிலப்பரப்பிற்குள் வான்வழி தாக்குதல் நிகழ்த்தினால், எந்த எடை கொண்ட குண்டுகள் போட்டுக் கொண்டாலும் எதுவும் பயனற்று போகப் போவதில்லை. எங்கு விழுந்தாலும் பாரிய சேதத்தை உண்டு பண்ணும். அதனை யார் அனுபவிப்பது?

போருக்கு பின்னால் நம்முடைய திறமையைப் பார்த்து, நம்மை விட குட்டி நாடுகள் உங்களுடைய போர் தளவாடங்களில் நாலு அதில், பத்து இதிலன்னு ஆர்டர் கொடுத்து பிசினெஸ் செய்து கொள்ள உதவப் போகிறதா?

இப்படி நடக்கவே வாய்ப்பற்ற, தேவையற்ற ஒன்றை வைச்சு அரசியல் லாபத்திற்காக ஹாலிவுட் படக் கதை ரேஞ்சிற்கு செஞ்சா நம்முடைய நம்பிக்கையை, மானத்தை நாமே பன்னாட்டு மேடையில இழந்துடுவோம்.

ஆல்ரெடி, இந்தியாவில படிச்சு வாங்கின பட்டங்களை ஒரு பயலும் வெளியில மதிக்கிறதே இல்லை. அதிலே இந்த மாதிரியெல்லாம் சுய சொரிதல் செஞ்சா ...ஹ்ம்ஹும்.

ஆனா ஒன்னு மட்டும் தெரியுது...

நம்மை ஆள்பவர்களுக்கு பன்னாட்டு மேடையில் இந்தியாவை ஓர் உயர்வான இடத்தில் வைத்துப் பார்க்கும் எந்தவிதமான உண்மையான அக்கறையும் கிடையாது. இருந்திருந்தால் இந்தியா என்றோ அனைத்து துறைகளிலும் தன்னிறைவை எட்டியிருக்க முடியும்.

அவர்கள் யாருக்கும் இந்திய கான்ஸ்டிடியூஷன் மீது எந்த விதமான நம்பிக்கையுமில்லை, மரியாதையுமில்லை. 🙄

பார்த்து பொழச்சிக்கிடக்கிற வழியப் பார்ப்போம்!

Monday, February 25, 2019

முதல் கோணல் முற்றும் கோணல்: Sinking Ship PMK

நானும் அந்த ”பாமக சின்னய்யா” சம்பவத்தை பார்த்தேன் 🤓. என்ன சொல்லுறதுன்னே
தெரியல! இப்படி ஒரு (சாதிக்) கட்சியை கருத்தரிச்சு, அதை அடை காத்து தன் சமூக மக்களுக்காகவாவது சிறுக ஆசைப்பட்டு பெரும் வாழ்வு வாழ்ந்திருக்கலாம். நீங்க என்னதான் அழி ரப்பர் வைச்சு அழிச்சு நாங்க சாதிக் கட்சி இல்லன்னு இனிமே நிரூபிக்க நின்னாலும் எடுபடாது. தமிழக தமிழர்களையே காப்பாத்தறேன் அளவிற்கெல்லாம் யோசிச்சு நீங்க இப்படி இறங்கி இருக்க வேண்டாம்.
யாரையோ நம்பி இப்படி இத்தனை ஆபத்தான ஒரு சூறாவளியில சிக்கிச் சின்னாபின்னமாகிட்டீங்களே.
உங்க உழைப்பெல்லாம் இப்படி அவசரப்பட்டு இந்த கால கட்டத்தில அதுவும் தமிழகம் கொந்தளிச்சு போயி கிடக்கிற நேரத்தில போயி, அவிங்களோட சேர்ந்து உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணான்னு சோலியை முடிச்சிக்கிட்டீங்க.
சரி போறதுதான் போறேன் கொஞ்சம் டேமேஜ் செஞ்சிப்புட்டு போவோம்னு...
திராவிட நாடு கோரிக்கையை நிறைவேற்றினாங்களா, அதுக்காக எத்தனை பேரு சுடுகாடு போனாங்கன்னு- சம்பந்தா சம்பந்தமில்லாம எந்த கால கட்டத்தில இருந்த விசயத்தை எந்த கால கட்டத்தோட இணைச்சு டேக் டைவர்ஷன் போட்டு கோர்த்து விடப் பார்த்தீங்க 🙄.
அண்ணா எந்த காரணங்களுக்காக அதை சுருட்டி ஓர் ஓரத்தில வைச்சார்னு ஏன் எங்கயும் படிக்கலயா? ஏன் ஒரு புரட்டு வரலாற்றை தாங்களே வாசித்து அறிந்து கொள்ள விருப்பமில்லாத ஒரு கூட்டத்திற்கு ஊட்ட நிக்கிறீங்க.
நாம வாழற காலம் என்ன பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் உயிரைப் பணயம் வைத்து போராடி இயக்கம் வளர்த்த காலமா? என்ன பெரிசா தியாங்களை செஞ்சு இன்றைக்கு இப்படி நாமல்லாம் வெள்ளையும் சொள்ளையுமா ஃபைவ் ஸ்டார் விடுதியில பத்திரிக்கை சந்திப்பு நடத்துர அளவிற்கு வளர்ந்திருக்கோம்.
எத்தனை ஆண்டுகள் நமக்கு முன்னோடிகளாக இருந்தவர்கள் சிறைச்சாலைகளில் தங்களுடைய பொன்னான காலத்தை கழித்திருப்பார்கள். எத்தனை ஹார்ட்கோர் போராட்டங்களை முன்னின்று வழி நடத்தி இருப்பார்கள். நமக்கு ஒரு மூன்று தேர்தலுக்காக உழைத்த உழைப்பு பலன் கொடுக்க வில்லை என்றவுடன் இத்தனை ஆயாசத்துடன் சாணக்கியன் ஆகுகிறேன் என்று சகுனி வேலை செய்ய தயார் ஆகிவிட்டீர்களே நீங்கள். சரியா?
திராவிட நாடேதான் வேண்டுமென்றால் மற்றுமொரு ஈழத்தை இங்கே அவர் கொண்டு வந்திருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? மாநில சுய ஆட்சிக்கான அழுத்தத்தை கொடுத்து காரியம் சாதித்துக் கொள்ள எடுத்த வியூகத்தை, நடக்கவே முடியாத விசயத்திற்காக எத்தனை பேர் சுடுகாடு போனார்கள் என்று கேக்குறீர்கள். எது மாதிரியான தர்க்கமிது?
அன்று அண்ணா சாதுர்யமாக காய் நகர்த்த வில்லை என்றால் இன்றைக்கு உங்களுக்கு இந்த மேடையே கிடையாது என்பதை உணருங்கள். ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கக் கூடாது. நாமதான் முழுந்துறோம்னா கூடவே இரண்டு பேரை சேர்த்து கூட்டிட்டு போவோம்னு நினைக்கக் கூடாது. Come up with some other valid argument, the one you uttered is utter nonsense!

Thursday, February 21, 2019

5, 8th STD பொதுத்தேர்வு குலக்கல்விக்கான நுழைவுவாசல்!

நியூஸ் 18ல குணசேகரன் 5 மற்றும் 8 வகுப்பிற்கு பொதுத் தேர்வு தேவையான்னு தலைப்பு வைச்சு அழகான கேள்விகளோட நகர்த்தும் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். ஒரு பதினைந்து நிமிடம் தான் அதுவும் அந்த உலகமகா மேதாவி பத்ரி வாய திறக்கிற வரைக்கும்தான் முடிஞ்சது.
தெரியாமத்தான் கேக்குறேன் அதெப்படிடா ஊருக்கே ஒத்து வராத ஒரு விசயம் உங்களுக்கு மட்டும் சரின்னு படுது? எங்கிருந்து உங்க மாதிரி ஆளுங்களுக்கு மட்டும் இத்தனை அறிவு பொத்துகிட்டு மண்டைக்குள்ளற இறங்குது.
ஒரு பத்து வயது பிள்ளைக்கு ஐந்தாவதுல இருக்குடி உன்னோட வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏத்தன்னு மிரட்டி மிரட்டியே பள்ளிக்கு அனுப்பினா அந்தப் பிள்ளை விளங்குமா? நீயெல்லாம் அமெரிக்காவில வந்து என்னாத்தை நொட்டிட்டு போயி அங்க சமூக காராச்சேவை ஆற்றப் போயிருக்க? பிள்ளைகளின் குழந்தமையை முளையிலேயே கிள்ளி போட்டுட்டு அப்படி என்ன மாதிரி வாழ்க்கையை வாழ கத்துக் கொடுக்கிறீங்க?
ஃபெயில் செஞ்சு மீண்டும் அதே வகுப்பிற்கு அனுப்பினா ஒவ்வொரு நாளும் எவ்வளவு அசிங்கமாக ஃபீல் செய்யும் அந்த பிஞ்சு மனசு. படுக்கையை விட்டு எழ ஆர்வம் வருமா? ஏன் பத்தாவது, பணிரெண்டாவது பிள்ளைங்க மதிப்பெண் அழுத்தத்தில தங்களை தற்கொலைக்கு தள்ளிக்கிறது போதாதா? அதையும் இன்னும் குறைத்து 10 வயசிலயே யோசிக்க சொல்லுறீங்களா?
இப்படி மிரட்டி பள்ளிக்கு அனுப்பினா அந்த மனசு எப்படியான பயங்களோட தன்னை வளர்த்தெடுத்து அடுத்த நிலைக்கு எடுத்துட்டுப் போகும்? பத்ரி கேக்குறார், ஏன் அப்போ பத்தாவது, பணிரெண்டாவது பிள்ளைங்களுக்கு பொதுத் தேர்வு வைக்கணும், ஏன் கல்லூரியிலயே வைக்கணும் அதுங்களும் பிள்ளைங்க தானே, அதுங்க என்ன பாவம் பண்ணுச்சின்னு கிண்டல் மசிறு வேற ...மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுற கணக்கா. இதெல்லாம் இன்னும் எத்தனை வக்கிரத்தை உள்ளர போட்டு பூட்டி வைச்சிக்கிட்டு சாந்த சொரூபியா குரலை தனிச்சு, முடியல!
மிடில் ஸ்கூல் வரைக்குமே வகுப்பறையில் குழந்தைகளை கவனிச்சு அவுங்களுக்கு என்ன தேவைன்னு கவனிச்சு, ஆசிரியர்கள் மாணவர்களுக்கிடையே இருக்கக் கூடிய பரஸ்பர நம்பிக்கையை எப்படி வளர்க்கிறது, அதன் மூலம் எட்டக் கூடிய தன்னம்பிக்கையை எப்படி அதீதப்படித்தி தாங்கள் கற்றுக்கொள்ளும் விசயங்களை தன்னெழுச்சியா உள்வாங்கி பிற்காலத்தில் அவனவனும் சொந்தமா சிந்திச்சு அவனவன் துறையில சிறக்கும் படியா facilitate செய்ய முடியுங்கிற வழியப் பாருங்க.
அதை விட்டுட்டு அந்த குழந்தைகளோட சிரிப்பையும் வாழ்க்கையையும் திருட நிக்காம. எனக்கு புரியுது அவிங்களுக்கு கை நிறைய வேலைய கொடுக்கிற மாதிரி குழந்தைகளோட பெற்றோர்களுக்கும் அள்ளி வைச்சிட்டா நீங்க பிற்காலத்தில் செய்யப்போற அயோக்கியத்தனம் ஒன்னுக்கும் ஒருத்தனும் தெருவிற்கு வர மாட்டான்... அதுக்கும் சேர்த்து ஓர் ஆப்பு அடிச்ச மாதிரி இருக்கு 5, 8, 10, 11 அண்ட் 12. சரியா போச்சா மக்களே!
சில மூஞ்சிகளை நினைச்சாவே குமட்டிக் கொண்டு வருகிறது. உங்களோடெல்லாம் இன்றைய என்னுடைய இருப்பை பகிர்ந்துக்க நேர்ந்ததை நினைச்சாவே கேவலமாக இருக்கிறது. இதெல்லாம் ஒரு பிழைப்பா!?

https://www.youtube.com/watch?v=eYBWJxMDHnI&fbclid=IwAR3WgI4e65bbzpSUJt6-V0KHFlynvJeyUFQA5nux-5UYw6jOJIz_x7-xOZ8

Wednesday, November 07, 2018

அரை வேக்காட்டு சர்கார்: Crews with a mission!

இந்த இட ஒதுக்கீடும், இலவசங்களும்தான் தமிழகத்தை முன்னேற விடாமல் பிகாருக்கும், உத்திரபிரதேசத்திற்கும் சொல்லப் போனால் மேலைய நாடுகளையொத்த வாழ்க்கைத் தரத்தில் வாழும் வட இந்திய மாநிலங்களை விட படு கேவலமாக பொருளாதார, சுகாதார, கல்வி மேம்பாடுகளில் பின் தங்கிக் கிடக்க காராணமாகி இருக்கிறது; என்பதைப் போல பல பிள்ளை பிடிக்கிகள் கூறி நெருங்குவார்கள்...
இந்த இனிப்பு தடவிய நச்சு லேகியத்தை எவன் கொடுத்தாலும் அவர்களுடைய வாயிக்குள்ளரயே வைச்சு திணிச்சிடறது மேலும் அந்த லேகியம் பரவலைத் தடுக்கும்.
கேள்வி: இலவசங்கள் ஏழைகளை காப்பாற்றவா அல்லது, அவர்களை மேலும் சோம்பேறிகளாக்கவா?
பதில்: இந்த கேள்விக்கு தானே பதிலைடைஞ்சிகணும்னா, உண்மையான சமூக அறிவியலும் அதனையொட்டிய இயலாத மக்களின் உளவியலையும் ஒரு சேர உள்வாங்கினா பதில் கிடைக்கும்.
எப்படின்னா, தனிமனிதனை (குடும்பத்தை) ஆற்றல்படுத்துவது (empowering) என்பது ஒரு நாள் மட்டும் மேடை போட்டு மக்களை உற்சாகப் படுத்துவதோ அல்லது பள்ளி, கல்லூரி மேடைகளை ஆக்ரமித்து ராமாயண, மகாபாரதக் கதைகளை ஒப்பித்து சிறார்களை மூளைச் சலவை செய்வது போலவோ அல்ல!
சமூக சமன்பாட்டு நிலையை எட்டுவது என்பது மக்களின் தினப்படி வாழ்க்கையில் சில உளவியல் மாற்றங்களை உருவாக்கத்தக்க சொல்லாடல்களை ஏற்படுத்திக் கொடுப்பது, அதற்கான உபகரணங்களை எட்டும் தூரத்தில் நகர்த்தி வைப்பதுமாகும்.
இந்த சாத்தியங்கள் ஒரு நாள் ச்சீயர் லீடிங் செய்து விட்டு நகர்ந்து போய்விடுவது கிடையாது. தினப்படி வாழ்க்கை பயன்பாட்டில் இரண்டர கலப்பதால், கூட்டு சமூகத்தின் உளவியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அவ்வாறு ஒரு சமூகமே அந்த திசையில் பயணிக்க ஆரம்பிக்கும் பொழுது அதன் வெளிப்பாடாக சுகாதார, கல்வி ஏனைய சமூக முன்னேற்றம் சார்ந்த விடயங்களில் மக்கள் விழிப்புணர்வடையும் சாத்தியக் கூறுகளை நோக்கி நகரும்படியாக கதவு திறந்து விடப்படுகிறது.
இலவசங்கள், உண்மையில் அது இலவசங்கள் கிடையாது. மக்களின் வெல்ஃபர் சார்ந்த நலத்திட்டங்களை நேரடியாக மக்களுக்கு எடுத்துச் சென்று சேர்க்கும் ஓர் அரசின் அணுகுமுறைதான்.
இப்போ தமிழகம் எந்த அளவில் ஏனைய இந்திய மாநிலங்களைக் காட்டிலும் அடிப்படை கட்டமைப்பு துறைகளில் பின் தங்கிக்கிடக்கிறது? இவையெல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது.
கூறாய்ந்து பார்த்து நீங்களே கண் திறந்து பார்த்தால் ஒரு தேசமாக உலகரங்கில் உயரவும், மற்ற மாநிலங்களையும் சற்றே நாகரீகமடைந்த மாநிலங்களாக்கி மேலெழுப்பிக் கொள்ளவும் உதவலாம்.

Monday, May 07, 2018

ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்: மனிதர்களைக் கற்போம்!

என்ன படித்து, எத்தனை நாடுகள் சுற்றி, எவ்வளவு சாமி கும்பிட்டு என்ன பயன். என்றேனும் ஒரு நாள் நாம் ஒரு சராசரி மிருக குணங்களைக் கொண்ட மனிதன் தான் என்று தன்னைப் பற்றிய சுவடை விட்டு விட்டுச் செல்லும் நாளும் வருகிறது தானே!
நான் ஒரு முறை கருப்பர்களும், செவ்விந்தியர்களும் தாங்கள் எதற்காக இத்தனை வலிகளுனூடாக அலைக்கழிக்கப்பட்டு கொல்லப்படுகிறோம் என்று தெரியாமல் செத்து மடிந்த வரலாற்று பாதையின் ஊடாக பயணம் ஒன்று மேற்கொண்டேன்.
அந்தப் பயணத்தின் இறுதி இலக்காக அமைந்து போனது க்ராண்ட் கன்யான், அரிசோனா. அந்த பூகோளத்து மலைச் சுவடுகளின் மீதாக நின்று கொண்டு பரந்து விரிந்து கிடந்த பள்ளத் தாக்குகளை நடுக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது மாலை மங்கி, சூரியன் கூடடையும் நேரத்தில் அங்கு வந்திருந்த ஒரு சிவப்பிந்தியர் புல்லாங்குழல் ஒன்றை வைத்து வாசித்து பெரும் பாரத்துடன் அந்த சூரியனை வழி அனுப்பினார்.
அது மேலும் சுமையை இரட்டிப்பாக்கியது. மற்றுமொரு சிவப்பிந்திய பெண்ணுடன் பேசும் பொழுது, எங்கெல்லாம் இந்தப் பரப்பில் உங்களுடைய முன்னோடிகள் வாழ்ந்தார்கள் என்று வினவினேன். அதற்கு அந்தம்மா, அவர்கள் எல்லா இடங்களிலும் இருந்திருப்பார்கள், இருக்கிறார்கள் என்றார். அதாவது அந்த பள்ளத்தாக்கின் சரிவான மலைப் பிளவுகளில் கூட வாழ்ந்திருக்கிறார்கள் என்றார். என்னால் என்னுள் எழுந்த மலைப்பை விலக்கி வைக்கவே முடியவில்லை.
எதனை அவர்கள் தங்களுக்குப் பின்னால் விட்டுப்போக இப்படி ஒரு கடினமான தட்ப வெப்ப சுற்றுப் புறச் சூழலில் வாழத் தலைப்பட்டிருக்க முடியும் என்ற எண்ணம் என்னை வதைக்கத் தொடங்கியது? அவர்களைப் பற்றி மென்மேலும் வாசிக்க வாசிக்க அவர்கள் வரலாற்றில் செய்த மிகப் பெரிய பிழை, அன்னிய மனிதர்களை நம்பியதும், இயற்கையை அளவுக்கு மீறி காதலித்ததுமே காரணமென்பதாக இருந்தது. நிலத்தின் மீது சிறிதும் பற்றற்று அத்தனை பெரிய நிலப்பரப்பில் வாழ்ந்திருக்கிறார்கள்.
பிரிதொரு நாள் வெள்ளையர்கள் வந்து, மூத்த குடிமக்களிடம் நிலச் சுரண்டல் செய்ய ஆரம்பித்து, எழுதி வாங்க பேனா நீட்டும் போது கூட நகைத்துக் கொண்டே “சுப்ரீம் ஃஸ்பிரிட்டோட” இடத்தை யார், யாருக்கு எழுதி கொடுப்பது என்று எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.
இது போன்ற ஒரு கூட்டம் இந்த பூமிப் பந்தில் இருக்க தகுதியானதா? விட்டு வைப்பார்களா? இடப் பற்றாக் குறையாலும், மக்கள் தொகை பெருக்கத்தாலும், வறுமை, நோய், பசி, பட்டினி என்று மரணித்துக் கொண்டிருக்கும் ஒரு காடையர் கூட்டம், அனைத்தும் லாகவமாக அமைந்து போன ஒரு புதிய இடத்தை கண்டதும், இது போன்ற அப்பாவி மனிதர்கள் இதனை அனுபவிப்பதைப் பற்றி என்ன நினைத்திருக்கக் கூடும்? சூழ்ச்சியாலும், வஞ்சகத்தாலும் கூடிப் பழகியும், பிரிந்து சூழ்ந்தும் அழிதொழித்து விட்டார்கள்.
இயற்கையோடு ஒன்றித்து பேராசை எனும் பேயை அடக்கி வாழ்ந்த ஒரு பெரும் கூட்டம் தன்னுடைய அழிவின் விளிம்பில் கண்டதெல்லாம், வலி, வலி, வலி மற்றும் சாக்காடு.
போலவே, நம்முடைய நிலப்பரப்பிலும் அப்படியானதொரு கூட்டம் கூடி களித்து, சேர்ந்து, பிரிந்து என்று பல அரிதாரங்களை பூசி வரலாறு தோரும் கூடவே நடந்து வருகிறது. சூழ்ச்சியும், வஞ்சகமும் எப்படியோ ஒரு மூலையில் எச்சமாக இருந்து கருகருவென காலத்திற்காக காத்திருந்து நம்பிப் பழகுபவர்களை சாய்த்து விடுகிறது. வரலாற்று புத்தகங்களை புரட்டும் பொழுது டையரி குறிப்புகளாக கிடைக்கும் வலி மிகுந்த முனகல்களை, வரிகளுக்கிடையே வாசிக்கும் பொழுது நமக்கு அவைகள் ஒரு சங்கேத குறிப்பாக கிடைக்கப்பெறுகிறது.
இன்று நாம் அழுது புலம்பும் அத்தனையும் ஏற்கெனவே அந்த வஞ்சகத்திற்கும், சூழ்ச்சிக்கும் இரையாகிப் போன நம் முன்னோடிகளின் வலி மிகுந்த முனங்கல்தான். மீண்டும் மீண்டும் அதே பாசத்தில் வழிக்கி வழிக்கி விழுந்து கொண்டே இருக்கிறோம். ஏனெனில் அந்த நோயின் மூலக் கூறு நானோ பார்டிகில்ஸ்களுக்கு இணையானது. உள்ளிருந்தே மெள்ளக் கொல்லக் கூடிய வாக்கில் பாவனையாக்கப்பட்டிருக்கிறது.
ஒரு எதிரியின் குணம் தன்னிருப்பை அறிவித்து விட்டு நேருக்கு நேராக சந்திப்பது. ஒரு ஒட்டுண்ணியின் குணம் சார்ந்திருந்து மெல்ல அனுபவித்துக் கொண்டே கொல்லுவது. இதில் இரண்டாவது ரகம் நம்மை ஆரோக்கியமாக வாழவே விடாது. நோஞ்சானாக நம்மை வைத்து தனக்குத் தேவையானதை அடைந்து கொள்வதற்கான அத்தனை தகவமைவுகளையும் பெருக்கிக் கொள்ளும். நோய் கூறு அறிந்தாலே ஒழிய இதற்கு வைத்தியமே இல்லை.
நம்முடைய சமூகத்தின் சாபக்கேடு இது. சிவப்பிந்தியர்கள் ஓரளவிற்கு நேராடியான எதிரியை நிராயுதபானிகளாக சந்தித்தார்கள். போராடினார்கள், மாண்டார்கள். ஆனால், நாம் எதிர் கொள்ளும் ஒட்டுண்ணிகளோ பச்சோந்தித் தனமானது, கூடவே இருந்து நிறத்தை மாற்றி இரண்டர கலந்து விட்டது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சற்றே தனது இருப்பை புரண்டு காமித்தாலும், மீண்டும் தேவையானதை அடைந்து கொண்டு ஹைபர்னேசன் மோடிற்கு சென்று விடுகிறது. என்னதான் செய்வது.
விசயத்திற்கு வாரேன். பல ஆண்டுகளாக நானும் ப்ரீ மெச்சூர்டாக வயசுக்கு வந்திட்டதாக அறிவிச்சிக்க வேண்டாம்னு காலம் கொடுத்து கொடுத்து ஒவ்வொரு கதவா தட்டித் தட்டி மாதிரி எடுத்துப் பார்க்கிறேன், ஒண்ணு சொன்ன மாதிரியே அந்த குணம் ஏதோ ஒரு பாயிண்டுல வெளிக்காமிச்சிடுது.
இப்பொழுது நீட், நுழைவுத் தேர்வு, வெறுப்பு அரசியல், காவேரி நதி நீர் பங்கீட்டு விசயம்னு நடக்கிற அனைத்து சமூக நீதி சார்ந்த விசயத்திலும் கொலகாரத்தனமாக எதுவுமே தவறாக தெரியாமல், முட்டுக் கொடுத்து ஒண்ணுமே தெரியாத அப்பாவிகளாக அதே நேரத்தில் தெளிவா எடுக்கிற நிலையைப் பார்த்து, நான் வயசுக்கு வந்துட்டேன்னு அறிவிச்சு கதவை இழுத்து சாத்திக்கலாம்னு ஒரு முடிவிற்கு வந்திருக்கேன்.
அன்பர்களே, நீங்கள் எனக்கு நிறைய கத்துக் கொடுத்திருக்கீங்க. அதெல்லாம் பெரும் வாசிப்பினாலே நீங்களே எடுத்த முடிவா, இல்ல நான் டவுசர் போட்டுக்கிட்டு நாலாப்பு படிக்கும் போது, அதே வகுப்பில நீங்க இருந்தாலும் பத்தாப்பு படிக்கிற அளவிற்கு உலகறிவு புகுத்தப்பட்டு வெளிக்கிடுறீங்களான்னு தெரியாது. ஆனா, இது நானாவே விரலை சுட்டுச் சுட்டு கத்துகிட்டது. நாய் வால நிமிர்த்த முடியாதுன்னு!
சிவப்பிந்தியர்களுக்கும் நம் முன்னோடிகளுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிது. ஆனா, அது காலவதியாகிப் போனது. மூளையை பலப்படுத்தணும், சூழ்ச்சி வெல்லும்!

Friday, May 04, 2018

புதன் கெரகத்திற்கு ஆள் எடுக்கிறோம்: கொச்சைப் பதிவு!

ஊர்க்காட்டில ஒரு சொலவடை உண்டு ”பிச்சை எடுத்துச்சாம் பெருமாளு அதை தட்டிப்பிடிங்கினிச்சாம் அனுமாருன்னு.” அப்படி இருக்கிறது கதை.
ஒரு காலத்தில் சென்னையில அமெரிக்கன் கன்சூலேட்லயே வைச்சு நிரந்தரமா அமெரிக்காவிற்கு குடியேற்றதிற்கும் நேர்க்காணல் செஞ்சு விசா கொடுத்தாங்க. இப்போ அந்த சர்வீசை சென்னையில நிப்பாட்டிட்டு மும்பாய்க்கு எடுத்திட்டு போயிட்டாங்க.
ஏற்கெனவே அமெரிக்கா குடியுரிமை வழங்கும் கன்சூலேட் மற்றும் எம்பசிகளில் நம்மை போன்ற சப்ஹூயுமன் பிறவிகளை ஒரு மசிரும் மதிக்கிறதில்ல. தெருவிலயே நிப்பாட்டி வைச்சு வதைத்துத்தான் உள்ளரயே கூப்பிடுவாய்ங்க.
அப்படி அடி உதை, சொரணைய விட்டுக்கொடுத்து போறதுக்கு தயாராக நிக்கிற கூட்டம் தன்னோட நாட்டு மக்களை மரியாதையோட நடத்தணும்னு எதிர்பார்த்தா கவைக்கு ஆகுமா?
ஏன் இதையெல்லாம் சொல்லுறேன்னா, நாம எல்லாத்தையும் நகல் எடுத்தே பழகிப்போன கூட்டம். தன்னைச் சுத்தி என்ன நல்லது கெட்டது கெடக்கின்னு கூட ஊன்றிப் பார்க்காம கிடைக்கிறதையெல்லாம் அப்படியே திண்ணு வைக்கிறது.
இப்போ அதிகாரத்தை கையில வைச்சுக்கிட்டு தலைகால் புரியாம ஆடுற கூட்டம் தன்னை என்னவோ தொட முடியாத உசரத்தில இருக்கிறதா நினைச்சிக்கிட்டு ஆடுதுங்க.
அதுங்க என்னமோ அகதிகளை நடத்துறது மாதிரித்தான் நடந்துகிறதா இந்த நீட் சம்பந்தமான பிரச்சினையை பார்க்கிறேன். முதல்ல ஒரு தேசமா தனக்கு வேணுங்கிற துறைகள்ல தன்னிரைவை நீக்கமுற எப்படி அடைஞ்சிக்கிறதுங்கிற தொலை நோக்கு கொஞ்சமும் இல்லாம, அடுத்தவன்கிட்ட இருந்து அடிச்சு பிடிங்கித் திங்க பார்க்கிறது. இந்தியா என்ன அமெரிக்காவாடா? அமெரிக்காவில இருக்கிற மாதிரியா இங்கே மக்கட் தேசத்தை (demographic, community structure) கொண்டிருக்கிறது?
கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் அறைகுறை பசங்க ‘ஓவர் நைட்ல’ பணம் மூட்டை ஒன்றை கண்டெடுத்து அதை வைக்கிற முறை தெரியாமல் ஆடுவது போல, ஒரு தேசம், ஒரு மொழி கத்திரிக்க வெண்டைக்கான்னு, பக்கர்ஸ். அவனவன் மொழியில தன்னுடைய பிராந்திய மக்களுக்கு நோய், நொடி இல்லாம இருக்க சொந்த உழைப்பில கட்டி எழுப்பின சோர்சஸை வைச்சு கல்வி பழகி உயர்ந்து வர்றானுங்கன்னா, அதை ஒரு ரோல் மாடலுக்கான மூலமாக வைத்து உங்க உங்க பிராந்தியங்கள்ல உருவாக்கிக் கொள்வீர்களா, அதனைத் தவிர்த்து முழு தேசதுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு மசிரு மட்டைன்னு அதுவும் ஒண்ணாப்புல இருந்து சி.பி.எஸ்.இன்னு பெரிய புடுங்கி சிலபஸ்ல படிக்க வைச்சேன்னு பிகில் விட்டு படிக்க வைக்கிறவிங்க சிலபஸ்ல இருக்கிற கேள்விகளை கொண்டு போய் அரசாங்க பள்ளி கூடங்கள்ல படிக்கிறவன்கிட்ட திணிச்சு ஏண்ட வன்புணர்வு செய்றீங்க (வேற என்னவாம் அது?)
கேட்டா மனனம் செஞ்சு படிக்கிறதுன்னு ஒரு நொன்னை வாதம். சரி நீங்க சி.பி.எஸ்.இல நொட்டி எத்தனை நோபல் பரிசும், அண்டத்தில புதுக் கோள்கலையும், நட்சத்திரத்தையும் உருவாக்கி வைச்சிருக்கீங்க?
இப்படிச் சுரண்டித் திங்கிறதெல்லாம் ஒரு பொழப்பாடா? இந்த கருமாந்திர பிடிச்ச செயல்பாட்டில வேற நுழைவுத் தேர்வு நடத்துர ஹால்ஸ் கண்டிபிடிக்கிறதில வேற குளறுபடி. நல்ல கெட்ட கெட்ட வார்த்தையா வாயில வருது, ஆனா, ரொம்ப நல்லவிங்க கோவிச்சுக்குவாய்ங்களேன்னு அடக்கி வாசிச்சு எழுதுறேன்.
எவனாவது இப்படித்தான் அமெரிக்காவில ஒரு முறை நான் எக்சாம் எழுதப் போக ஐந்து மணி நேரம் ட்ராவல் செஞ்சு போனேன், அப்படி இப்படின்னு வந்தீங்க, கம்னாட்டி பயலுகளான்னு திட்டிப் புடுவேன்.
ஒரு எக்சாம் ஹால் கண்டுபிடிச்சு அதுக்குத் தேவையான வசதிகளை அமைச்சிக்க எத்தனை மணி நேரம்டா முறையா செஞ்சா தேவைப்படும்? அப்போ தமிழ்நாட்டில இது வரைக்கும் நடத்தப்பட்ட தேர்வுகள் அனைத்தும் தில்லுமுல்லு செஞ்சுதான் உருவாக்கினாங்கன்னு சொல்ல வாரீங்களா? சட்டியில இருக்கிறதுதானே அகப்பையில வரும்... உங்களோட நாள் பட்ட சீழ் பிடிச்ச புத்திப்படிதானே மூளையும் வேலை செய்யும்?
என்னமோ வேற்று கிரகத்திற்கு ஆள் எடுக்கிற தோரனை மசிருல ஒரு தேவையற்ற நுழைவுத் தேர்வு அதுக்கு இத்தனை பில்டப். காதுக்குள்ளர லைட்டு அடிச்சி என்னடா செக் செஞ்சீங்க போன ஆண்டு? காக்லீயா இருக்கான்னா பார்க்கவா? முண்டக் கலைப்பைகளா? சட்டை கிழிச்சு, முடியை வெட்டி கரும்புள்ளி செம்புள்ளி மட்டும்தாண்டா குத்தி ஏண்டா படிக்கிறீங்கன்னு கேக்கல. உங்களோட இந்த பூமிய பகிர்ந்துக்கிறதுக்கே கேவல மசிரா வருது.
இதில வேற அமெரிக்காவில இருக்கேன், அண்டார்டிக்காவில இருக்கேன்னு ஒரு வாழ்க்கை மசிரு வேற. கூட இருக்க கூட்டத்தை ஒரு மனுசப்பிறவிகளா மதிச்சு கூட்டிக்கிட்டு தானும் உயர ஒரு மனசில்ல பின்ன என்ன மரியாதை மசிரு தேவைப்படுதுங்கிறேன்.
இதெல்லாம் ஒரு பிரச்சினைன்னு உச்ச நீதி மன்ற தீர்ப்பு வேற. முடியலடா. இந்த கூத்தையெல்லாம் பார்த்துக்கிட்டு நாமளும் ஒரு மனுசப் பொறப்புன்னு சொல்லிக்க. ஏண்டா, உங்களுக்கெல்லாம் வெக்கம், மனசாட்சிங்கிற மசிரே இருக்காதா?

Wednesday, May 02, 2018

வாயால் வடை சுடுவது எப்படி?

முதலில் 2020ல் இந்தியாவை சூப்பர் பவராக வளர்த்தெடுப்போம் என்றார்கள். ஆனால், இப்பொழுதோ நம்மைச் சுற்றி நடந்தேறும் நிகழ்வுகளை காணும் பொழுது 1920களுக்கு முன்பிருந்த காலத்திற்கு முன்பாக நம்மை கடத்திச் சென்று விட்டார்கள் என்பது கண்கூடாகத் தெரிகிறது.
வாயால் வடை சுட முடியுமா? முடியும் என்கிறார்கள் முழித்துக் கொண்டே கனவு காணச் சொல்பவர்கள். கடந்த நான்கு வருடங்களில் என்ன மாதிரியான அடிப்படை கட்டமைப்புகள் அனைவரும் பயன்பெறும் வண்ணம் சென்றடைந்திருக்கிறது.
எந்தப் பக்கம் திரும்பினாலும் எதிர் மறையான செயல்பாடுகளும் அதனையொட்டிய ஓலங்களும் தான் காதில், கண்ணில் விழுகிறது. வெற்று மாயையைக் கொண்டு ஊதிப் பெருக்குவதால் யாருக்கு லாபம்? அவர்களைச் சுற்றி உடனடியாக லாபமடையும் ஒரு சில சதவிகிதத்தினரைத் தவிர. அது உண்மையான வளர்ச்சியா, நிலைக்குமா? வந்த மாதிரியே ஒரு நாள் அதற்கும் கூடுதலாக பிய்த்துக் கொண்டு சென்று விடாதா?
அப்படிச் சமச்சீரற்ற ஒரு வளர்ச்சிக்குள் வாழ எத்தனிப்பவர்களும் அதே நிலப்பரப்பையும் இயற்கை வளங்களையும், சாலைகளையும் தானே பகிர்ந்து கொண்டு ஒரு தேசத்து மக்களாக வாழ வேண்டும். எப்படி ஆயிரம் ஆண்டு காலங்களாக அதே மனிதமற்ற முறையில் மேல் கீழ் என மக்களை பிரித்து, பகிர்ந்து கொண்டு வாழ மனமற்ற மடையர்களாக வாழ்ந்தோமோ அப்படியே மீண்டும் இந்த நவீன காலத்திலும் எப்படி ஒப்பேத்த முடியும்?
நடிப்பும், பொய்யும் புரட்டும் செய்து மக்களை என்னவோ நேற்றே அமேசான் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட காட்டு வாசிகளைப் போல நினைத்துக் கொண்டு அத்தனை சூழ்ச்சிகளோடு தங்களுக்கு வேண்டியதை இன்று அரசு அதிகாரம் தங்கள் கைகளில் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக எப்படிச் சுரண்டி வஞ்சிக்க முடியும்?
இது அனைவருக்குமான தேசமில்லையா? எப்படி வெக்கமே இல்லாமல் நாடு நாடாக சென்று அதுவும் தனிவொரு விமானத்தில் பறந்து ஏதோ வேற்றுக் கிரகத்திலிருந்து இறங்கி வரும் தேவ தூதனைப் போல கைகளை ஆட்டிக் கொண்டே உலாவித் திரிய முடிகிறது?
நீ வரும் ஊரிலிருந்துதானே பத்து வயதிற்கும் குறைந்த வயதுடைய சிறுமிகளை கூட்டு வன்புணர்வு செய்கிறார்கள்? இன்னொரு இடத்தில் இன்னொரு சிறுமியை வன்புணர்ந்து கொன்றவனுக்கு தண்டனையாக ஆறு மாதம் தண்ணீர் சப்ளை செய்யச் சொல்வதும், மாட்டுக்கறி வைத்திருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் அடித்துக் கொல்வதும், தன் மதம் சாரா தன்னுடைய நாட்டு குடிமக்களை வேற்றொரு நிலத்து மக்களாக பாவிக்கச் சொல்லி வெறுப்பு அரசியல் பேசுவதும், அனைவருக்கும் சென்றடைய வேண்டிய கல்வியை தட்டிப் பறித்து நுழைவுத் தேர்வு என்ற பெயரில் பிற மாநில கல்வி திட்டத்தில் படித்து தேர்ந்த மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கி இத்தனை பெரிய மக்கட் தொகை கொண்ட தேசத்தில் எது போன்ற கூட்டு பங்களீப்பு கடைசி கிராமம் வரை சென்றடையும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற வாக்கில் செய்து முடித்திருக்க முடியும்.
மோடியைப் பற்றி இது வரையிலும் நேரடியான எது போன்ற விமர்சனங்களும் என்னிடமிருந்து வைத்தது கிடையாது. ஆனால், இப்பொழுது வைக்கிறேன். இது வரையிலும் ஊதிப் பெருக்கிய அளவிற்கு கட்டியெழுப்பப் பட்ட பிம்பத்திற்கு பைசாவிற்கும் உபயோகமற்ற ஒரு பிரதமரே இவர். தன்னுடைய தேசம் பொருத்தும், அதன் பிரச்சினைகள் குறித்தும், தன்னையொத்த பிற்படுத்தப்பட்ட மிகவும் கீழ் நிலையில் வாழும் சக தேச மனிதர்களைப் பற்றியும் கிஞ்சித்தும் அறிவற்ற ஒரு மூடராகத்தான் ஓடித் தேய்கிறார்.
நல்ல உடைகளையும், உணவையும் வழங்கி, எழுதிக் கொடுப்பதை பல நாள் பழக்கிக் கொண்ட (எரிச்சலூட்டும்) உடல் மொழியைக் கொண்டு வழங்குவதற்காக, ஒரு வாடகைக்கு அமர்த்திக் கொண்ட உள்ளீடற்ற ஒரு மனிதராகாத்தான் இவரை என்னால் பார்க்க முடிகிறது.
நாம் 1980களிலேயே கவர்ச்சி அரசியல் என்றால் என்ன அதன் விளைவுகள் எது போன்றது என்பதனை எம்.ஜி.ஆரிடமிருந்து கற்றுக் கொண்டோம். இவர் இப்பொழுதே இந்த இணைய பலூனை நம்பி சாலையை பெருக்கிறார். கங்கையை சுத்தம் செய்கிறார். கழிவரைக்கு குழி தோண்டி செங்கல் வைத்து சிமெண்ட் பூசுகிறார். கிழவிக்கு செருப்பு போட்டு விடுவது என்று காலாவதியாகிப் போன மயக்க அரசியல் அதுவும் உலகம் விழித்துக் கொண்ட வேலையில் செய்து வருகிறார். இது யாரை ஏமாற்ற? தன்னையே ஏமாற்றிக் கொள்கிறோமே ஒரு பிரதமராக என்று ஒரு நொடி மின்னலாக தோன்றி மறையாதா?
அத்தனையும் வெற்று வார்த்தைகள். அண்மையில் வந்த ஒரு செய்தி- உலகில் வாழ
லாயக்கற்ற அதி மாசுப்பட்ட நகரங்களில் 15ல், பதினான்கு நகரங்கள் இந்தியாவில் இருக்கிறது என்று ஓர் அறிக்கை தெரிவித்திருக்கிறது. அனைத்தும் இவருடைய ஆட்கள் ஆளும் மாநிலங்கள். இப்படி தலை வெட்டுப்பட்ட கோழி போல ஓடும் திசையறியாமல் ஓடிக் கொண்டும், தன்னுடைய மக்களுக்கிடையே வெறுப்பு அரசியலை விதைத்து “கொள்ளிக்கட்டையால் தலையை சொறிந்து கொள்வதற்கு” இணையாக அரசியல் செய்து கொண்டிமிருந்தால், அவைகள் கடைசியாக நம்மை எங்கே கொண்டு நிறுத்தும்?

ஆஃப்கனிஸ்தான், பாகிஸ்தனுக்கும் கீழே... அதி விரையில் அது சாத்தியமே. வரும் 2019ல் மட்டும் வெற்றியை அவர் தலையில் தூக்கி வைத்து விட்டால், புரோகிதர் இல்லாமலே காரியம் செய்து விடுவார்கள்.

Sunday, April 15, 2018

நிர்மலா தேவி, யார் அந்த பெரிய இடம்?

நிர்மலா தேவி, யார் அந்த பெரிய இடம்? இதற்கான பதிலில் இது போன்ற அவலங்களுக்கான தீர்வு இருக்கிறது.
விருதுநகர் கல்லூரியின் விரிவுரையாளர் நிர்மலா தேவி என்பவர் இன்றைய இந்தியாவின் நவீன சுரண்டல் அமைப்பின் ஒரு குறியீடு என்றளவிலேயே இதனை அணுக வேண்டியதாக இருக்கிறது. இந்த செய்திகளின் அடிப்படை அணுகுமுறையிலேயே ஒரு தவறு இருக்கிறது.
நாம் யாரும் அதனை நோக்கி கேள்வி எழுப்பவோ, கவனிக்கவோ நம்மை தயார்படுத்தவில்லை. அந்த ஒலிக்கோப்பு முழுதுமாக கேட்டால், நிர்மலா, தான் ஓர் அம்பு மட்டுமே எய்தவர்கள் நம்மை விட பெரிய இடத்தில் உள்ளவர்கள், நம்முடைய வாழ்க்கையையேப் புரட்டிப் போடும் அதிகாரத்தைக் கொண்டவர்கள் என்று கை சுட்டும் இடம் மிகப் பெரிய அதிகார மையமாக இருக்கிறது.
எந்த ஊடகமாவது, யார் அந்த பெரிய தலை? எது போன்ற அதிகார மையமது? இதற்கு பதில் தேடி அதனை நோக்கி தங்களுடைய துப்பு துலக்கும் ஊடகப் பணியை மேற்கொள்ளும் நிழல் கேள்விகளை எழுப்பியதா? இல்லைதானே? அப்படியெனில் டிஸ்கவரி சானலில் நாம் ஒரு வித அச்சத்தினூடும், வெறுப்போடும் அதே நேரத்தில் விரும்பிப் பார்க்கும் புலி ஒரு புள்ளி மானின் குட்டியை துரத்தி குரல்வளையை கடித்து சாகடிக்கும் ஒரு நிகழ்வை பார்க்கும் அதே வக்கிரத்தோடுதானே இதனையும் ரசித்து ஒரு சாஃப்ட் போர்ன் ஒலி அளவில் கேட்டு அதிர்ச்சியுறுவது போல மகிழ்ந்து கேட்டு நகர்கிறோம்?
இந்த ஊழலை, மாசுபாட்டை நிர்மலா என்ற ஒற்றை நபருடன் சுருக்கிவிட முடியுமா? இதற்கு பின்னான காரணிகளை நாம் அரசியல், சமூக, மக்கட்பெருக்க நிலை, அதிகார முறைகேடு இத்தியாதிகளுடன் தொடர்பு படுத்தி எப்படி இதனை நேர்கொள்ள வேண்டுமென்று எண்ண வேண்டாமா?
ஒலிக்கோப்பிில் அந்த நிர்மலா மிகத் தெளிவாக கூற வருவதில் இவை அனைத்தும் அடங்கி இருக்கிறது. அவர் வார்த்தைகளிலே ஓரிரு இடங்களை மேற்கோள் காட்டுகிறேன் - இது ஒன்றும் புதிதல்ல, எங்கும் நடக்காததும்அல்ல. உங்களுக்கே தெரிந்திருக்கும். உங்களுடைய எதிர்காலம் நீங்கள் ஆசைப்படும் இடத்திற்கு கொண்டு செல்ல அந்த ‘பெரியவர்கள், அதிகார மையம்’ அனைத்தையும் கடந்து உதவி செய்யும்.
அதற்குள் இருக்கும் பொருள் பொதிந்த, கையாலாகாத , மிரட்டல் தொனியும் நாள்பட்ட வியாதித்தன்மையின் அயற்சியுமாகத்தான் எனக்கு நிர்மலாவின் உரையாடல் புரியத் தந்தது.
நான் கல்லூரிகளில் படிக்கும் பொழுதே சக மாணவிகளுக்கு இது போன்ற நூல் விட்டுப் பார்த்தல் நடந்து கொண்டு வருவதாகத்தான் அறிகிறேன். இத்தனை மக்கட் தொகை கொண்ட தேசத்தில் இது போன்ற நிகழ்வுகள், அழைப்புகள், முறைகேடுகள் நடக்காமல் இருந்தால்தான் விந்தை. படி, படி, படி நல்ல மதிப்பெண் எடுத்தால்தான் வாழ்க்கை என்று நான்கு வயதில் ஆரம்பித்து 26 வயது வரைக்குமே அந்த மதிப்பெண்கள் என்ற குத்தூசி வைத்து விரட்டும் பொழுது அங்கே மாசுபாடு ஏற்படாமல் போகுமா?
இதற்கிடையில் அப்பாடு பட்டு நல்ல மதிப்பெண்களுடன் தேர்வாகி விட்டால் கூட உடனடியாக அந்த போட்டிக்கிடையே வேலைதான் கிடைத்து விடுகிறதா? ஒரு அரசாங்க காலி இடத்திற்கு ஒரு லட்சம் விண்ணப்பம் வருகின்ற சூழலில் எப்படித்தான் பின்னே தங்களை முன்னிறுத்திக் கொள்வது என்ற அயர்ச்சி வரத்தானே செய்யும். அதனைத்தான் நிர்மலாக்களின் மூலமாக ’அதிகார மையங்கள்’ ஆசை வார்த்தைகளைக் கூற வைத்து ஆள் பிடிக்கும் அவலத்திற்கு தள்ளி விடுகிறது.
நிர்மலாக்களுக்கு குறுக்கு வழியில் தாங்கள் இனிமேல் இழக்க ஒன்றுமேயில்லை எனவும், போட்டியில் தனது சக துறைசார் தோழமைகளிலிருந்து துருத்தி நிற்க அவர்களும் இந்த மாசுநிலைக்குள் தள்ளிவிடப்பட்டு பிரிதொரு நாள் அனுபவ பின்புலத்தில் ஆள் சேர்ப்பு பணிக்கும் எத்தனிக்கும் நிலைக்கு சென்று விடுகிறார்கள்.
இங்கே இந்த மாசுபாட்டின் ஆணி வேர், தோற்றுவாய் எங்கே இருக்கிறது என்று யாருமே பேசவில்லையே! நம்முடைய விரல் சுட்டு அது வரையிலும் நீளாத வரை இவைகளை நாம் அடைக்க முடியாது. கசிந்து கொண்டே தான் இருக்கும். ஏனெனில் இன்றைய போட்டி நிலை அப்படி. ஏதோ ஒன்றை தொற்றிக் கொண்டு தான் தங்களை அந்த இடங்களுக்கு நகர்த்திக் கொள்ள வேண்டிய அபத்த நிலை. அது பணமாக, அதிகார சேகரிப்பாக, வலைபின்னும் நோக்கமாகவென பல அவதாரங்களாக பரிணமிக்கிறது.
இது நமது சமூகச் சூழலில் எந்த துறைக்கும் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும்.

Monday, April 09, 2018

தம்பிகளே இழப்பதற்கு இங்கே ஏராளமிருக்கிறது!

ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னா மெய் ஆகிடுமா? காமராசர் காலத்திற்கு பிறகு வளர்ச்சியே இங்கே இல்லையென்றால் எதனைச் சுரண்ட கட்டி எழுப்பிய அரசு கல்வி நிறுவனங்களை பட்டப் பகலில் ஜோப்படி செய்ய முயற்சிக்க வேண்டும்? ஒரு மாநில அரசே அந்த ஊர் மக்களின் உழைப்பில் உருவாக்கிய மருத்துவக் கல்லூரிகளில் எது போன்ற தேர்வுகளை நடத்தி மாணவர் சேர்க்கை செய்ய வேண்டுமென்ற உரிமையில் தலையை நுழைக்க வேண்டும்?
அரசாட்சி நடத்தவே தகுதியற்ற ஒருவருக்கு சரியான நேரத்தில் கோர்ட் தீர்ப்புகளை வழங்காமல் தள்ளிப் போட்டு, தேர்தலில் வெற்றியை வழங்கி, பிறகு அவரது மரணத்திற்கு பின்னாக, மீன் வலை போட்டு அள்ளியது போல அரசியல் ஞானமற்ற, அறமற்ற, எதிர்கால திட்டங்கள் ஏதுமற்ற பல சில்லுண்டித் திருடர்களை கொத்தாக வைத்துக் கொண்டு திரைமறைவு அரசியல் செய்வதா? அரசியல் அறம், மரபு?
இதனைச் செய்வதற்கு சிறிதும் அஞ்சாதவர்கள் மக்களாட்சியை எந்த குழிக்குள்ளும் தள்ளி புதைக்க மாட்டார்கள் என்பதில் என்ன சந்தேகம் இருந்திட முடியும்? ஒரு மாநிலம் கிடைத்த வளத்தைக் கொண்டு தன்னாலான அளவு வளர்ச்சியைக் காட்டி பிற மாநிலங்களோடு ஒப்பிடும் வாக்கில் சற்றே உயரத்தை காட்டியிருக்கிறது என்றால், அதனை மாடலாகக் கொண்டு தாங்கள் ஆளும் மாநிலங்களில் அவற்றை பின்பற்றி உயர்த்த நினைப்பார்களா அல்லது பிற பின் தங்கிய மாநிலங்களின் வரிசையில் அதனையும் வைத்து அழகு பார்க்க எண்ணுவார்களா?
பொய்களை பரப்பியே ஒரு சிறந்த நிர்வாகத்தை வழங்கிட முடியும் என்று யார் இவர்களுக்கு பாடம் எடுத்தது? வளர்ச்சி என்பது தன்னைச் சுற்றி நிகழ் காலத்தில் நாம் அனுபவிக்கும் வசதிகளைக் கொண்டு கண்டுணரும் ஒரு விடயம். அது கல்வி வசதியாகட்டும், மருத்துவ, சுகாதார வசதியாகட்டும் எல்லாவற்றையுமே சிறிது சிறிதாக கடினமான உழைப்பின் பெயரில் ஈட்டிக் கொள்வது. அதற்கு பல வருடங்கள் பிடிக்கும். பணத்தைக் கொட்டி ஊடகங்களில் போலியான பரப்புரைகளின் மூலம் அடைவது கிடையாது.
ஒரு நாட்டை கட்டியெழுப்பும் பொழுது, அது வரையிலும் சமூக சமநீதியற்ற ஒரு சமூதாயத்தில் அடையப்படாத விடயங்களான அணைகள், பள்ளிகள், மருத்துவம் ஏனைய வசதிகளுக்கென அடித்தளம் போடுவது என்பது ஓர் இயல்பான விடயம். அதுவும் போர்க்கால அடிப்படையில் சில துறைகள் பீரிட்டு வளர்த்தே எடுக்கப்பட வேண்டியதாக இருக்கும்.
உதாரணமாக கோயபல்ஸ் முறையில் தொடர்ந்து பரப்பப்படும் காமராசர் காலத்து பொற்கால துறைகளான அணைகட்டுகள் மற்றும் பள்ளிகள் திறப்பு. அதற்குப் பிறகு இத்துறைகள் எந்த மாற்றத்தையும் அடையவே இல்லை போன்ற ஒரு பிம்பத்தை கட்டி எழுப்புகிறார்கள். இது எத்தனை வடிகட்டிய முட்டாள்தனமான வாதம்? ஒரு மாநிலத்திற்கு முக்கிய அணைகட்டுக்களாக எத்தனை அணைக்கட்டுக்கள் தேவைப்படும். கிடைக்கும் நில அமைப்பு, வன வளம் அதனில் பெறப்படும் நீர் வரத்து, அந்த பூமியத்தை சுற்றியுள்ள மக்களின் வாழ்விடமென்று எத்தனையோ காரணிகளைக் கொண்டே ஒரு முக்கியமான அணைக்கட்டிற்கான அடித்தளம் அமைகிறது.
போகிற போக்கில் நினைத்த இடத்திலெல்லாம் அணைக்கட்டுக்கள் அமைத்து விட முடியுமா என்ன? இது எது போன்ற வாதம்? தெரிந்துதான் பேசுகிறோமா அல்லது மக்கள் அனைவரும் முட்டாள்கள், அடிப்படை அறிவே அற்றவர்கள் என்ற முறையில் பொய்யிலே அரசியல் அறமற்று தன் உடல் வளர்க்க பேசும் பேச்சா?
அந்த கால கட்டத்திற்கு பிறகு எந்த அரசும் எதுவுமே செய்யாமல் தான் நாம் உயிர் வாழ்ந்து, கல்வியறிவு பெற்று இன்று இப்படி வீண் வம்படித்து பிளவுகளை உருவாக்கி நம்முடைய வளங்களை வேற்று மாநிலத்து மக்கள் சூழ்ச்சியின் பால் பிடிக்க வழி கோலுகிறோமா?
ஒரு விடயத்தை பகிர்வதற்கு முன் அதில் எந்தளவிற்கு உண்மைத் தன்மை இருக்கிறது என்று அறிந்து கொள்ள குறைந்த பட்ச உழைப்பையாவது போட வேண்டாமா?
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க இப்பொழுது எந்த அரசியல் அறமுமற்று பொய் பிரச்சாரங்களை பரப்புவதற்கே பெரிய அளவில் தங்களுடைய நேரத்தையும், பணத்தையும் போட்டு அரசியல் வளர்க்கும் சூழலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழலிற்கு நாம் நகர்ந்திருக்கிறோம்.
கிடைத்த ஐந்து வருடங்களில் உங்களுடைய நாற்பது காலத்து கடின உழைப்பின் பெயரில் கட்டியெழுப்பிய, கோரிப் பெற்ற பல உரிமைகள் திரைக்கு பின்பாகவும், நம்முடைய கண்களுக்கு முன்பாகவும் கோமாளி அரசைக் கொண்டு பிடிங்கிக் கொண்டு செல்வதைக் காண்கிறோம்.
உணர்ச்சி வயத்தில் கூட்டத்தோடு சூழ்ச்சிக்கு இரையாகி பின்னால் திரும்பிப் பார்க்கும் பொழுது, இழந்ததை மீட்டெடுக்கவே மீண்டும் பல பத்தாண்டுகள் தேவைப்படலாம். முதலில் எதிரியை அடையாளம் காணுங்கள். யாரை அமர வைத்தால் தவறுகளை திருத்திக் கொண்டு சுயமான வளர்ச்சிக்கு நம்மை இட்டுச் செல்வார்களோ அவர்களை ஆதரியுங்கள். பிறகு உங்களுடைய பங்காளிச் சண்டையை வைத்துக் கொள்ளலாம்.

Wednesday, March 07, 2018

பெரியார் எப்போது யாருக்காக சாதி வெறியர் ஆனார்?: Periyar

தொலைக்காட்சி விவாதங்களில் அபாண்டமாக ஓர் உண்மைக்கு எதிராக பரப்பப்படும் பிரச்சார வாதங்களை சொல்லிவிட்டு, அதனை எதிர் தரப்பினர் அவர்கள் எத்தனை பொய்யர்கள் என்பதாக சான்றோடு எதிர் வாதம் வைக்கும் பொழுது- பொய்யர்களுக்கு ச்சீ இதுவும் ஒரு பொழப்பா என்று கூனிக் குறுகும் உடல் மொழியை காண்பதில் ஒரு சுவராசியம் இருக்கிறது.
அப்படியான ஒரு விவாதத்தை புதிய தலைமுறையில் கண்டேன். பெரியார் ஒரு சாதி வெறியர் என்றும், சாமி சிலைகளை உடைத்தார் என்றும் அப்பட்டமான ஒரு பொய்யை தான் சாமார்த்தியமாக எடுத்து வைப்பதாக வைத்து விட்டு நகர்ந்தார். அதற்கு பதிலுரைக்கும் விதமாக தொல். திருமா அவர்கள் மிக அழகான விதத்தில் அந்த உண்மையை எடுத்து வைத்தார். அப்பொழுது அந்த மய்யநிலையாளர் அவசரமாக தண்ணீர் எடுத்து அருந்திய விதம் பார்க்க கண் கோடி வேண்டுமென்பதாக இருந்தது.
பெரியார் சாதி வெறியை ஊட்டி வளர்த்திருப்பாராயின் எதற்காக அவரை நீங்கள் எதிர்த்திருக்க வேண்டும்? உங்களுடைய அரசியலே சாதிய கருத்தாக்கத்தில், பிரித்தாளும் சூழ்ச்சியின் அடிப்படையில் தானே ஆயிரம் ஆண்டு காலங்களாக ஒப்பேறி வருகிறது. அதற்கு வெடி வைக்க வேண்டித் தானே, அதன் ஆணி வேரான இறை நம்பிக்கை என்ற பெயரில் மனிதனை பிரித்தாளும் இடமான நீங்களே நம்பாத அந்த கடவுளர்கள் சன்னிதிக்குள் நீங்கள் விரும்பாத பிற இந்து மனிதர்களையும் அழைத்துக் கொண்டு நுழைய வேண்டி வந்தது.
அந்த ஊரில் உள்ள அனைத்து ஹோமோ செப்பியன்ஸ்ம் ஆலயத்திற்குள் நுழைய வேண்டுமென்றவர் எப்படி ஒரு சாதி வெறியர் ஆகிப்போனார்? பெரியார் என்ன நாட்டில் உள்ள அனைவரும் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக்க வேண்டுமென்றா ஓர் இயக்கத்தை நடத்தினார்? ஒரு முட்டாளுக்கு கூடத் தெரியும் அது எந்த நாட்டிலும் முடியாத விடயமென்று.
ஏனெனில் அதனின்று விடுபட சில அடிப்படை அறிவு விரிவாக்க பயிற்சி தேவைப்படுகிறது. மனத்திண்மை தேவைப்படுகிறது. எதனையும் கேள்விக்குள்ளாக்கும் ஆராய்ச்சி மனோபாவம் தேவைப்படுகிறது. இயல்பாக நமக்கு வருவது எந்த வித சலனமுமில்லாத தன் முயற்சியற்ற மரவட்டை வாழ்க்கை. அந்த ஓட்டத்தில் இத்தனை ஆழமாக சிந்திக்க திராணி ஏது?
எனவே பெரியார் நம் எல்லாரும் துணுக்குற்று முழித்துக் கொள்ளும் வகையில் எதனை எதிர்த்தால் கவனத்தைப் பெற முடியுமோ அந்த இடத்தை கேள்விக்குள்ளாக்கினார். அதிலொன்றுதான், தானே காசு கொடுத்து வாங்கி போட்டுடைத்த பிள்ளையார் சிலை உடைப்பு. அதனை அன்றைய நீதி மன்றமே கூட அவரிடத்தில் கேள்வி எழுப்பும் பொழுது என்னுடைய காசு நான் வாங்கி உடைத்தேன் என்றாராம்.
வரலாற்றிலிருந்து எதனை யாரிடமிருந்து மறைப்பதற்காக இத்தனை பொய்களை, இத்தனை அதிகார பீடத்திலிருந்து இயக்குகிறார்கள்? அப்படியாயின் யார் எதனைப் பெறக்கூடாது? இது இன்று நேற்று தொடங்கியதாக தெரியவில்லை. வீழ்ந்து கிடக்கும் ஒவ்வொரு 300, 500 வருடங்களையும் தாக்கு பிடித்து மீண்டும் மீண்டும் மனித மேன்மைக்கு எதிரான துரு பிடித்து நாசியை துளைக்கும் கேவலத்தை அரங்கேற்ற துடிக்கிறார்கள்.
அதற்கு உதவியாக ஜீன்ஸும், டிஷர்ட்டும் போட்ட புது யுக இளைஞ, இளைஞிகளும், கமலும், ரசியினும் இன்னும் புதுப்புது வேடமணிந்து தொடர் மனித மேம்பாட்டிற்கு எதிரான காட்டுமிராண்டி அடிமை தனத்திற்கு தெரிந்தோ தெரியாமலோ துணை போவது மனித இன அவலமன்றி வேறென்ன?

Thursday, February 22, 2018

பிக் பாஸின் நட்ட நடு செண்டர் மய்யம் ஓஆர்ஜி: Maiam

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம்னு ஒளி வெள்ளத்திற்கு கீழே நிற்கும் மாய நட்சத்திரங்களெல்லாம் இன்று ”ஒரு மாதிரி பேராசையில்” கிளம்பி வந்திருக்கிறது. அப்படி ஆசை வரவில்லை என்றால் தான் ஆச்சரியப்பட வேண்டும் என்றாகிவிட்டது.

காந்தி சென்னார் என்று தீவிர நடுநிலை வாதியான கமல் சார் மேற்கோள் காட்டியது, ”மனிதனின் தேவைகளுக்கு வேண்டுமானால் இந்த பூமி தன் வளங்களை வழங்கலாம் ஆனால் பேராசைக்கு வழங்க முடியாது.” இது கமலுக்கே பொருத்தமான ஒன்றுதானே! சரிதான். இவரின் சிறிய வயது ஆசையான நடிப்பு உலகில் தான் ஓர் இடத்தை அடைய வேண்டுமென்று உழைத்து அவராலான அளவில் புகழையும் ஈட்டி திருப்தி அடைந்து விட்டார்.

இப்பொழுது எந்த இசங்களையும் பின் பற்றி மக்களுக்கான பொதுச் சேவை ஆற்ற வேண்டிய நிலையில் இந்த நாடும், நாட்டு மக்களும் இல்லை, வெறும் ஊழலற்ற(?) அரசாட்சி மட்டுமே வழங்கினாலே போதுமானது என்று புதுப் படம் எடுப்பதனைப் போன்று ஒரு கட்சியையும், அதற்கான கொடியையும் ஏற்றி ஸ்ரீப்ரியா, ஸ்நேகன், பரணி, வையாபுரி போன்ற மொழி போராட்ட மற்றும் பொருளாதார மேதைகளை மேடையேற்றி இன்னொரு “பிக் பாஸ்” பாணியில் மக்களாட்சியில் பணியாற்ற தொடங்கி இருக்கிறார்.

இத்தனை ஆண்டுகள் இஞ்ச் பை இஞ்சாக நகர்த்தி இன்று நாம் அடைந்திருக்கும் இந்த ஜனநாயக உரிமைகளை எல்லாம் ஜஸ்ட் லைக் தட் புறந்தள்ளி மின்னும் ஒளி வெள்ளத்தின் கீழ் ஊழலாக சுருக்கி நீட், காவேரி நதி நீர் பங்கீடு, இயற்கை வளங்களை புரட்டி போட்டு சாமியார் வளம் பேணல், ந்யூட்ரினோ திட்டம் என்பனவற்றை புட்டியில் அடைத்து கடலில் வீசி விட்டு மூளைச் சலவை செய்ய எத்தனிக்கிறார்.

யாரை வேண்டுமானாலும் நம்பலாம் ஆனால் தனக்கு நடிப்பு நன்றாக வரும் என்ற ஒற்றை காரணத்தை முன் வைத்து வரலாற்றை மறக்கடித்து கண்ணுக்கு முன்னால் அடைந்திருக்கும் வளர்ச்சிகளை குறுக்கி, மற்றுமொரு பீகாராகவும், உத்திர பிரதேசமாகவும் எல்லா துறைகளையும் பின்னுக்கு இழுத்துப் போக நினைப்பவர்களுக்கு துணை நின்று “மதுரை டயலக்” பேசி ஓட்டு அரசியல் பண்ணி விடலாம் என்று நினைப்பது எந்த விதத்தில் சேர்ப்பது?

மக்களை எந்த அளவிற்கு குறைத்து மதிப்பிட்டிருந்தால் இப்படியான ஒரு “மேனாமினிக்கி” அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு கட்சி தொடங்க ஆசை வந்திருக்கக் கூடும்?

ரசினியும் சரி கமலும் சரி இரண்டும் வேறுவேறல்ல ஒரே குட்டை மட்டைதான். வரலாற்று ரீதியாக, சரியாக இந்தியாவில் தமிழகத்தின் நிலை எங்கிருந்து எங்கு நகர்ந்து வந்திருக்கிறது என்று பிடிபடாத அந்த அப்பாவி மக்களை ஒரு பிள்ளை பிடிப்பவனின் சாதுர்யத்துடன் இவர்களை பிஜேபி உள்ளே நுழைந்து கிடைச்ச வரையும் லாபம் என்ற நோக்கில் சுருட்ட நினைக்கிறது.

இது போன்ற ஒரு சூழல் வந்ததிற்கு இது வரையிலும் ஆட்சி செய்து வந்த கழகங்களே காரணம். தேசிய அளவில் தமிழகத்தின் உண்மையான வளர்ச்சி என்ன அது எப்படி சாத்தியமானது, எது போன்ற போராட்டங்களை முன்னெடுத்து நம்மால் இந்த நிலையை அடைய முடிந்தது போன்ற விடயங்களை கட்சி பாராபட்சமின்றி எடுத்து கொண்டு சேர்க்காததே முதன்மையான காரணம்.

கழக ஆட்சி மட்டும் 1969க்கு பிறகு தோன்றாமல் இருந்திருந்தால் நான் இன்று அடைந்து இருக்கும் இடத்தை இன்னும் இரண்டு பிறப்பு எடுத்தாலும் அடைந்திருக்க முடியாது. என்னை போன்றுதான் இங்குள்ள அரிதி பெரும்பாண்மையான தமிழக மக்களுக்கும் என்றே நினைக்கிறேன்.

இல்லையென்றால் பிகாரிகளும், ராஜாஸ்தானிகளும் உத்திரபிரதேசக்காரர்களும், ஹர்யானகாரர்களைப் போன்றும் நானும் தேடித் தேடி மாமிசம் உண்பவர்களையும், காதலர் தினத்தன்று ஜோடியாக நடந்து செல்பவர்களை சாலையோரத்திலும், உணவு விடுதிகளிலும் ஏன் எதற்கு என்று தெரியாமலேயே அடித்துக் கொன்று போடுபவர்களில் ஒருவனாக ஒரு படிப்பறிவற்ற காட்டுமிராண்டியைப் போல வாழ்ந்து கொண்டிருப்பேன். இந்த வேலையில் என்னை நாகரீக மடைந்தவனாக மடைமாற்றம் செய்த பகுத்தறிவாத முன்னோடிகளுக்கு நன்றி செலுத்தாமல் வேறு எந்த சூழ்நிலையில் செய்வேன்.

இன்னமும் கமல் போன்றவர்களை இத்தனை உயரத்தில் வைத்து அண்ணார்ந்து பார்க்கும் நிலையில் நாம் இருக்கிறோம் என்றால் இன்னமும் நாம் போக வேண்டிய தொலைவு மிச்சமிருக்கிறது என்றுதானே புரிந்து கொள்ள முடிகிறது.

இவர் மிகச்சரியாக அரசியல் செய்ய வேண்டிய இடம் பிகார். கேஜ்ரிவாலை அழைத்துக் கொண்டு அடுத்த பிரதம மந்திரியாக தயாராகிக் கொண்டிருக்கும் யோகி, இன்றைய வாய்ச்சவடால் மோடிக்கு எதிராக பிற மாநிலங்களில் சென்று குறைந்த பட்சம் நாகரீகமாக உலக அரங்கில் முன் நிறுத்தி செல்ல அந்த மக்களுக்குத் தேவையான அடிப்படை கல்வியறிவு, வாழ்வாதரங்களை அமைத்து கொள்ள வகுப்பு எடுக்கட்டும்.

இது தமிழகத்திற்கு தேவையற்றது! இப்பொழுது என்னால் யூகிக்க முடிகிறது இது போன்ற ஓநாய் கூட்டங்களுக்கு இடையே இத்தனை ஆண்டுகள் ஓர் இயக்கத்தை வழி நடத்தி சென்றிருக்க வேண்டுமானால் எத்தனை சாதுர்யம் தேவைப்பட்டிருக்கும். விழித்தெழு!

Tuesday, February 13, 2018

அறநிலையத்துறையை தனியார்மயமாக்குதல் = Deprogressive Move!

கடந்த கால சமூக நீதிக்கு எதிரான விடயங்களை போரட்டாங்களின் வழியாக கை வரப் பெற்ற சமூக நீதி சட்டங்களை மீண்டும் திருத்துவது என்பது நாகரீகமடைந்த ஒரு சமூகத்தை மீண்டும் அந்த கற்காலத்திற்கே எடுத்துச் செல்லுவதற்கு ஒப்பானதாகும்.

அண்மைய காலங்களில் அவசர கோலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக சில மத அரசியல் கட்சிகள் கொண்டு வரும் பிரச்சினைகளின் வீச்சத்தைப் பார்த்தால் அதற்கான முயற்சியாகவே படுகிறது.

என்னவோ ஒரு சமூகத்தினர் மட்டுமே பன்னெடும் காலமாக சமூக சீர் திருத்தத்தையும், பொருளாதார முன்னேற்றத்தையும், சமூக ஏற்றத் தாழ்வுகளை நீக்கி நாட்டில் பாலாறும் தேனாறும் ஓட உழைத்த உத்தம புத்திரர்களாக தங்களை வரலாற்றில் தூக்கி நிறுத்திக் கொள்ள எத்தனிக்கிறார்கள்.

ஆனால், உண்மை என்னவோ அதே வரலாற்று பாதையில் ஓடும் பேருந்தால் நசுங்கி மாண்ட ஒரு வன விலங்கைப் போல மரணித்துக் கிடக்கிறது

ஒரு நாகரீமடைந்த சமூகம் என்பது நாட்டில் வாழும் அனைவரையும் சமமாக பாவித்து அவர்களை அடுத்த கட்டத்திற்கு கூட்டாக அழைத்துச் செல்வது. அதனைத் தவிர்த்து ஏதோ ஒரு காலத்தில் சொரண்டி தின்று உடல் வளர்த்தோம் என்பதால் இந்த நவீன காலத்திலும் அந்த இத்துப்போன கோட்பாடுகளை நடை முறை படுத்த எண்ணுவது எத்தனை சாபக்கேடு ஒரு சமூகத்திற்கே?

சரி பிரச்சினைக்கு வருவோம். ஓர் இரண்டு தினங்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தினுள் தீ, எந்த பொது இடமாகினும் அங்கே விபத்து நடப்பதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளதுதானே? தீ விபத்து ஏதோச்சையாக நடந்தது என்றே வைத்துக் கொள்வோம், அறநிலையத்துறையும் மெத்தனமாகவே இருந்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்... அதற்காக உடனே அந்த அறநிலையத் துறைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அனைத்து அறநிலையத்துறைக்கு கீழே வரும் கோவில்களையும் தனியார் மயம் ஆக்கி பழைய பஞ்சாங்கப்படி ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்த ஒப்படைக்க வழிவகை செய்து கொடுக்க தடி எடுப்பீர்களா?

கோவில் என்பது ஜஸ்ட் ஒரு கோவில் வளாகம் மட்டும்தானா? எதற்காக அந்த காலத்திலயே அத்தனை போராட்டதிற்கிடையே பெரிய கோவில்களை இந்த "அறநிலையத்துறைக்கு" கீழாக ஒரு அரசாங்கம் கொண்டு வந்தது,அந்த துறைக்கு கீழ் வருவதற்கு முன்பாக நாமெல்லாம் அந்த கோவிலுக்குள் நுழைந்து அறிய முடிந்ததா?

அந்த கோவிலின் நிர்வாகம் யாரிடமிருந்தது, அங்கு விழும் காணிக்கைகளை யார் எண்ணினார்கள், எந்த வாசப்படி வழியாக அது யாருடைய காஜானவிற்கு சென்றடைந்தது என்று நமக்குத் தெரியுமா?

ஒரு டேட்டா வந்தது. ஒரு பெரிய கோவில் அது அறநிலையத் துறைக்கு கீழ் வருவதற்கு முதல் வருடம் வெறும் 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருமானம் வருவதாக காட்டப்பட்டதாகவும், அடுத்த வருடமே அது 40 லட்ச ரூபாயாக உயர்ந்ததாகவும் அறிந்தோம். அது எப்படி சாத்தியம் மக்களே? கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், கடவுளுக்கு வெகு அருகமையில் இருப்பவர்கள் இப்படியாக ஆயிரம் ஆண்டுகளாக கணக்கு காமித்து வந்திருக்கிறார்கள்.

அது மட்டுமா? ஒரு கிராமத்திற்குள்ளாகவே வாழும் மனிதர்களை பிரித்து இவன் உள்ளே வரலாம், வரக்கூடாது என்று பிரித்து ஆண்டதும் நடக்கிறது, நடந்து வந்திருக்கிறது.

இவற்றையெல்லாம் களைந்து ஒரு சமூக சமன் பாட்டை கொண்டு வர எண்ணி உருவாக்கப்பட்டதுதான் "அறநிலையத் துறை." இது எத்தனை பெரிய புரட்சி? சமூக சீர் திருத்த எட்டல்??

இதனையெல்லாம் சீர் படுத்த ஒரு அரசாங்கம் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து முறைமைப்படுத்துவது எப்படி தவறாகும்? அந்தத் துறை இன்றைக்கு சற்றே சீர் குலைந்து அதனில் நிர்வாகச் சீர் கேடுகள் நடக்கிறது என்றால் உடனே ஊசி காதுக்குள் ஒட்டகத்தைத் திணிப்பது போல மீண்டும் கோவில்களை பழைய சுரண்டலுக்கே தனியார் வசம் ஒப்படைத்து விடுங்கள் என்று சந்தில் சிந்து பாடுவது யார்? எதற்காக?

எது எப்படியோ மக்கள் சிந்திப்பதற்கேனும் இது போன்ற நாகரீகமடைந்த ஒரு சமூகத்தில், இன்னமும் அந்த இடத்திற்கு தங்களை நகர்த்திக் கொள்ள முயற்சிக்காத கயவர்களை அடையாளம் காணவும், இந்த பிரச்சினையை ஒட்டி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்றவுமாவது இது உதவுகிறதே என்ற வகையில் அந்த பொய்யர்களுக்கு இந்த தருணத்தில் ஓர் நன்றி!

Thursday, February 08, 2018

பக்கோடா பட்டாதாரிகள்: Pakoda Politics!

துணை ஜனாதிபதி வெங்கட்டு நல்ல டாக்டரை பார்க்கச் சொல்லிருவாரோன்னு பக்குன்னு வருது.

ஒரு போஸ்ட் படிச்சேன். அம்பூட்டு மண்டைக்காரனும் அந்த முகாம்லதான்யா அடைஞ்சு கிடக்காய்ங்க.  ஒரு சில வரிகளை அந்த போஸ்ட்ல இருந்து இங்கே கட் அன்ட் பேஸ்ட் செஞ்சுருக்கேன், நமக்கு பேசு பொருளா இருக்கட்டும்னு.

// *மதுரை வீதிகளில் பானிபுரி விக்கிறவன் எல்லோரும் வடஇந்தியர்கள் தான். ஒரு நாளைக்கு குறையாமல் ₹ 2000 க்கு வருமானம் பார்க்கிறான். அவனுக்கு படிப்பறிவே கிடையாது. ஆனால் அவன் பிள்ளைகள் உயர்தர பள்ளிகளில் படிக்கின்றனர்.

மண்ணின் மைந்தன் BE.. BA.. Bsc படித்து விட்டு 5000 ஓவாவுக்கு வேலையை தேடி செய்றான். இல்லாமல் போனால் வேலை தேடி வெளியூருக்குப் போறான்.

ஏன் ? படித்தப் படிப்பை வைத்து இங்கேயே பிழைக்க முடியலே!* //

இதில இருக்கிற உள்பொருளில் இருக்கக் கூடிய முரண் கூட
தெரியாம இதனை ஒரு பேசு பொருளாக எப்படி முன் வைக்க முடியும்?

ஏற்கெனவே ஒரளவிற்கேனும் விழிப்புணர்வுற்று பள்ளிகளுக்கு அனுப்பி தங்களுடைய குழந்தைகளை தன்னை விட ஓர் உயர்ந்த நிலையில் வைத்து பார்க்க வைக்கத்தானே உயர் படிப்பு கடன உடன வாங்கி படிக்க வைக்கிறது.

B.Tech., B.E (ஆயிரத்தெட்டு உட்பிரிகளில் உள்ள துறைக் கல்விகள்), M.Scல (வைரலாஜி, மைக்ரோபயோலஜி, செல் பையாலஜி, வைல்ட்ஃலைப்) லொட்டு லொசுக்கின்னு படிச்சு திரும்பவும் தன்னோட அப்பன் சுட்டுக்கிட்டு இருக்கிற பக்கோடாவை திருப்பி போடவா 23 வருஷம் செலவு செஞ்சு திரும்பவும் அதே  இடத்திற்கு கொண்டு வருவாங்க.

சரி அந்த படிப்பை எட்ட வைக்க எத்தனை கடன் சுமை இருக்கும்? எத்தனை சிரமப் பட்டிருப்பாங்க படிச்சு முடிக்க. ஒரு படிப்பை படிச்சு அதுக்கு தகுந்த மாதிரி வேல வாய்ப்புகளை உருவாக்கித் தர முடியாதது யாரோட தவறு? படித்த துறையில் தன்னோட திறமையை வளர்த்தெடுத்து நாட்டிற்கும், தனது வீட்டிற்கும் கொடுக்கும் வயதில் தெண்டச் சோறு, தடிமாடு என்று திட்டு வாங்கிக் கொண்டு சுவாசித்து திரிவது அத்தனை எளிதா என்ன?

சரி இங்கே ஒரு லாஜிகல் கேள்வி, அந்த பானிபூரி, பக்கோடா விற்கும் படிப்பறிவற்ற வட இந்தியர்கள் தங்களுடைய மாநிலம், கிராமம், மக்கள், மொழி தான்டி ஏன் இத்தனை தொலைவு வந்து ஒரு நாளைக்கு 2000ரூபாய் சம்பாதித்து அந்த பணத்தை கொண்டு என்ன செய்யப் போகிறார்? ஏன் அவர்களின் மாநிலத்தில் வாழ்வாதார வளர்ச்சிப் பணிகள் எங்கே போனது? இதே தமிழர்கள் இருபது வருடங்களுக்கு முன்பு செய்ய ஆரம்பித்த வேலையைத் தானே அதே படிப்பறிவற்ற வட மாநிலத்துக் காரர் தன்னுடைய குடும்பத்திற்கு செய்ய எத்தனிப்பார்: ஒரு வீடு, பிள்ளைகளுக்கு படிப்பு இத்தியாதிகள்.

// *ஒரு காலத்தில் TVS. Madura coats,, Fenner, Sitalakshmi mills, Meenakshi mills,, Thiagarajar mills, Visalakshi milll, மற்றும் ஏராளமாக Powerloom,, Handloom .. சில்வர் பட்டறை தொழில்களென பெருந்தொழில் மற்றும் சிறுதொழில் என கொழித்த மதுரை இன்று எல்லா தொழிலையும் தொலைத்து விட்டு சிரம பூமியாக மாறியுள்ளது.

மதுரை க்காரனுக்கு பொறுப்புணர்ச்சியில்லாமல், தொழில் வளம் பெருக செய்யும் எண்ணம் இல்லாமல், ஜல்லிக்கட்டுக்கு மட்டும் போராடி திருப்தி அடைகிறான்.

விவசாயம் முன்னேற கட்டப்பட்ட வைகை அணை, இன்றைய தினம் குடிநீருக்கு மட்டும் திறக்கப் படுகிறது.
இதனால் விவசாயமும் காலி.
ஆனால் நம்ம தமிழன் தான் விவசாயிக்கு சப்போர்ட் செய்து பேஸ்புக், வாட்ஸ்அப் ல் பொங்குவான்* .//

ஏன் இந்த தொழில்கள் எல்லாம் நலிவடைஞ்சு மூடினார்கள்? குடிநீர் பிரச்சினைக்கான காரணம் என்ன, யார் இதனில் அரசியல் செய்வது? ஏன் மக்கள் சமூக வலைத்தளங்களில் வந்து பொங்க வேண்டும், இந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு எது காரணியாக இருந்திருக்கக் கூடும்? எதற்காக ஜல்லிக்கட்டு ஒரு பிரச்சினையாக மாற்றப்படணும்? எதற்காக மக்கள் தெருவிற்கு வந்து போராடணும்?

அப்போ தண்ணீர் பிரச்சினை, மாநிலங்களுக்கிடையேயான நீர் பங்கீடு, விவசாயத் துறையில் வளர்ச்சி குறித்த முன்னெடுப்புகள் எல்லாம் சிறு பிரச்சினைகள் ஆனால் ஜல்லிக்கட்டு விசயம் முதலில் கையாளப்பட வேண்டியது என்று ஒரு அரசாங்கமே அதனில் கை வைக்க எண்ணியதா?

எதற்காக பக்கோடா விற்ற ஒரு தலைமுறையின் பிள்ளைகள் மீண்டும் இருபது வருடங்கள் கழித்து பக்கோடா, பஜ்ஜி விற்க கடை விரிக்க வேண்டும்? சரி தெருவிற்கு எத்தனை பக்கோடா கடைகள் வேண்டும்?

ஏன்டா இதனையெல்லாம் ஒரு ஆர்க்யூமென்டாக எடுத்துட்டு வாரீங்களே உங்களுக்கெல்லாம் ஏதாவது அடிப்படை அறிவோ அல்லது குறைந்த பட்சம் இரக்கமோ கூட இல்லையா? ஒரு படித்தவன் தன்னுடைய படிப்பிற்கு பிறகு என்னவாக ஆக வேண்டுமென்பது அவனுடைய தேர்வாக இருக்க வேண்டுமே ஒழிய நீங்க சொல்வது போல, எப்படி வயிறு வளர்ப்பதுன்னு நீங்க சொல்லி அவன் செய்யும் நிலையில் இருந்தால் அரசாங்கத்தை இழுத்து மூடி விட்டு நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் முக்கு கடையில் டீ க்ளாஸ் கழுவி, பக்கோட வித்து காமிங்க ஏனைய குடும்பங்கள் தங்களுடைய பிள்ளைகளை B.E., டிகிரியுடன் டீ கடை வைக்க அனுப்புவார்கள்.

நீங்களும் உங்க வாதமும். கடுப்பு டாசா வருது!

Friday, February 12, 2016

வால்பாறையிலிருந்து மான்ஹட்டனுக்கு: மரங்களடர்வு -2



மலையணில்களின் நீண்ட தூரிகையையொத்த அந்த மழைக்காடுகளினூடாக நின்றுநிதானித்துக் காட்டு பூனைகளின் பாதச் சுவடுகள், விட்டைகள், காட்டெருமைகளின் சாணம் மற்றும் அவைகளின் இருப்பு என்று அவதானித்தவாறே
வேலைகளை முடித்த கையோடு, கிடைக்கும் சிற்றோடைக்கு அருகில் பாறையென்றின்மீதாக சப்பணமிட்டவாரு பல மதியங்கள் கழிந்திருக்கிறது.

கண்ணாடிப்  படிகமென சன்னமாக உருண்டோடும் நீராக அத்தனை சுத்தமான தண்ணீர்.
அதன் மீதாக உந்தித் திரியும் ஸ்கிட்டர்ஸ். காய்ந்த சருகொன்றின் மீதாக தொத்தி டைட்டானிக் ஜாக்காக மிதந்து திரியும் எறும்பு. நீர் படிகத்தின் கீழாக என்னையும் கொஞ்சம் பார் என்றபடி ஊர்ந்து நடக்கும் நண்டு. தண்ணீரின் வண்ணத்துடன் இயைந்து போகும் மீன் குஞ்சுகள். ஒன்று மற்றொன்றை விஞ்சும் பேரழகுடன் அணி வகுத்து எனை சுவாசிக்க மறக்கடிக்கும் ஒருரம்மியமான சூழலில் கட்டி போட்டு வைத்திருந்தது அந்த மேற்கு மலை மழைக் காடுகள்.

திரும்பிய பக்கமெல்லாம் மழையில் நனைந்து அடர் கருப்பில் பருத்த அடிப்பகுதியை கொண்ட மரங்களின் அடர்த்தி. பெரும்பகுதியான நேரங்களில் என்னைச் சுற்றிலும் அது என்ன விதமான நேரம் என்று கூட அறிந்து கொள்ள முடியாத வாக்கில் சூரியக் கதிர்களும் கூட காட்டின் தரை தொட அஞ்சி நிற்கும் அடர்வு கொண்ட உச்சிகளையும், உயரங்களையும் கொண்ட மரங்கள். அந்த

மரங்களில் பலவும் என்னை விட பல மடங்கு அதிக வயது கொண்டவை.சற்றே உற்றுக்கேட்டால் நிறைந்த நிசப்தத்தில் பேரமைதியை கற்றுத் தந்தன.


சில் வண்டுகள் மட்டுமே அவ்வப்பொழுது யாரோ ஒருவர் சன்னமான சப்தத்தில் தொடங்க அங்கே இங்கேயென பேரிரைச்சலாக நூற்றுக்கணக்கில் ஒன்று சேர்ந்து ரீங்காரமிட்டு யாரோ ஒரு சிம்ஃபெனி இசைத் தொகுப்பாளர் கையசைத்து திடும்மென ஒரே நேரத்தில் நிறுத்துவதையொத்து நிறுத்திக் கொள்ளும். எங்கோ தூரத்து எதிரொலியாக ஒரு மலபார் விஸ்ஸிங் த்ரஸோ, காட்டுக் கோழியோ அல்லது மரகதப் புறாவோ சப்தமெழுப்பி அந்த அடர் வனமே அதிரச் செய்யும். மதிய உறக்கத்திலிருந்து அப்பொழுதே நெட்டி முறித்து, வாய் பிளந்து கொட்டாவி உதிர்த்து, உயரக் கிளைகளில் ராஜ மிடுக்குடன் ஒரு சிங்கத்தின் கம்பீரத்துடன் மரக் கிளைகளின் தண்டுகளில் நடந்து திரியும் சிங்கவால் குரங்குகள்.

திடும்மென எங்கிருந்தோ அடித்து விரட்டிக் கொண்டு வந்த ஒரு பெரும் கரு 
மேகத் திரள் சூரியக் கதிர்களை மறைத்த படி ஜமுக்காளம் விரிக்க, காடு மேலும் கரிய இருளுக்குள் விழுந்து, அத்தச் சூழலையும் மாற்றிக் காண்பித்து இருக்கிறாயா, அல்லது உன்னையும் சேர்த்து எங்களுடன் இணைத்து கொள்ளவா என்று உருமிக் கடந்து செல்லும்.

பல பொழுதுகள் அதன் மிரட்டலுக்கு அஞ்சாமல் உள்ளிருக்க, இடியுடன் தன் மடி அவிழ்த்து கொட்டிய மழையாக பொழிந்து கொட்டும். குளிர் மழையில் விசிறியாக பரந்து விரிந்த மரத் தண்டுகளின் ஓரமாக அந்தச் சூழலில் ஒதுங்கி கொள்வதும் உண்டு. இல்லையென்றால் தொப்பலாக நனைந்து மேடேறி, நாகரீகமடைந்தால் கடந்து போகும் பேருந்து ஓட்டுநர் பாதி தூரம் போயும் பக்கக் கண்ணாடியில் பார்த்து நிறுத்தி ஏற்றிக் கொள்ளும் பொழுது “சார், அட்டை பார்த்தீங்களா,” உள்ளே ஏத்திறப் போறீங்கன்னு கேட்டபடி வாகனம் நகர்த்துவார். 

இங்கு எங்குமே உணவு பற்றி பேசாததிற்கு காரணமிருக்கிறது. காலையில் கெட்டிச் சட்னி வைத்து வாங்கிய இரண்டு இட்லிகள் மதியம் மூன்று மணிக்கு பிரித்தால் என்ன வாசனையுடன் கிடைத்து விடக் கூடும். அத்தனை நடைக்குப் பிறகு பொட்டலத்தைப் பிரித்து கிள்ளிக் கிள்ளி சாப்பிடும் பொழுது அதன் சுவையே எந்த காண்டினெண்டல் உணவிலும் கிடைக்காத அளவில் உளத்தையும், வயிற்றையும் ஒரு சேர நிரைக்கும். 

வெளியில் வந்தால் மலைவாழ் தேயிலைத் தொழிலாளிகளின் தேநீர்க் கடையில் சில சமயம் ஈக்கள் முதல் போணி செய்யாத போண்டாவோ, வடையோ நல்ல சிவப்பேறிய தேநீருடன் உணவுக்குழாயை வருடியபடி இரைப்பையை நிரப்பும். அரவமற்ற வனப்பகுதிகளுக்குச் செல்ல நேர்ந்தால் பசியால் கண்களில் வண்ணத்துப் பூச்சிகள் சிறகசைக்க சிவப்பேறிய கண்களுடன் கூடடைவோம்

Related Posts with Thumbnails