Friday, May 04, 2018

புதன் கெரகத்திற்கு ஆள் எடுக்கிறோம்: கொச்சைப் பதிவு!

ஊர்க்காட்டில ஒரு சொலவடை உண்டு ”பிச்சை எடுத்துச்சாம் பெருமாளு அதை தட்டிப்பிடிங்கினிச்சாம் அனுமாருன்னு.” அப்படி இருக்கிறது கதை.
ஒரு காலத்தில் சென்னையில அமெரிக்கன் கன்சூலேட்லயே வைச்சு நிரந்தரமா அமெரிக்காவிற்கு குடியேற்றதிற்கும் நேர்க்காணல் செஞ்சு விசா கொடுத்தாங்க. இப்போ அந்த சர்வீசை சென்னையில நிப்பாட்டிட்டு மும்பாய்க்கு எடுத்திட்டு போயிட்டாங்க.
ஏற்கெனவே அமெரிக்கா குடியுரிமை வழங்கும் கன்சூலேட் மற்றும் எம்பசிகளில் நம்மை போன்ற சப்ஹூயுமன் பிறவிகளை ஒரு மசிரும் மதிக்கிறதில்ல. தெருவிலயே நிப்பாட்டி வைச்சு வதைத்துத்தான் உள்ளரயே கூப்பிடுவாய்ங்க.
அப்படி அடி உதை, சொரணைய விட்டுக்கொடுத்து போறதுக்கு தயாராக நிக்கிற கூட்டம் தன்னோட நாட்டு மக்களை மரியாதையோட நடத்தணும்னு எதிர்பார்த்தா கவைக்கு ஆகுமா?
ஏன் இதையெல்லாம் சொல்லுறேன்னா, நாம எல்லாத்தையும் நகல் எடுத்தே பழகிப்போன கூட்டம். தன்னைச் சுத்தி என்ன நல்லது கெட்டது கெடக்கின்னு கூட ஊன்றிப் பார்க்காம கிடைக்கிறதையெல்லாம் அப்படியே திண்ணு வைக்கிறது.
இப்போ அதிகாரத்தை கையில வைச்சுக்கிட்டு தலைகால் புரியாம ஆடுற கூட்டம் தன்னை என்னவோ தொட முடியாத உசரத்தில இருக்கிறதா நினைச்சிக்கிட்டு ஆடுதுங்க.
அதுங்க என்னமோ அகதிகளை நடத்துறது மாதிரித்தான் நடந்துகிறதா இந்த நீட் சம்பந்தமான பிரச்சினையை பார்க்கிறேன். முதல்ல ஒரு தேசமா தனக்கு வேணுங்கிற துறைகள்ல தன்னிரைவை நீக்கமுற எப்படி அடைஞ்சிக்கிறதுங்கிற தொலை நோக்கு கொஞ்சமும் இல்லாம, அடுத்தவன்கிட்ட இருந்து அடிச்சு பிடிங்கித் திங்க பார்க்கிறது. இந்தியா என்ன அமெரிக்காவாடா? அமெரிக்காவில இருக்கிற மாதிரியா இங்கே மக்கட் தேசத்தை (demographic, community structure) கொண்டிருக்கிறது?
கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் அறைகுறை பசங்க ‘ஓவர் நைட்ல’ பணம் மூட்டை ஒன்றை கண்டெடுத்து அதை வைக்கிற முறை தெரியாமல் ஆடுவது போல, ஒரு தேசம், ஒரு மொழி கத்திரிக்க வெண்டைக்கான்னு, பக்கர்ஸ். அவனவன் மொழியில தன்னுடைய பிராந்திய மக்களுக்கு நோய், நொடி இல்லாம இருக்க சொந்த உழைப்பில கட்டி எழுப்பின சோர்சஸை வைச்சு கல்வி பழகி உயர்ந்து வர்றானுங்கன்னா, அதை ஒரு ரோல் மாடலுக்கான மூலமாக வைத்து உங்க உங்க பிராந்தியங்கள்ல உருவாக்கிக் கொள்வீர்களா, அதனைத் தவிர்த்து முழு தேசதுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு மசிரு மட்டைன்னு அதுவும் ஒண்ணாப்புல இருந்து சி.பி.எஸ்.இன்னு பெரிய புடுங்கி சிலபஸ்ல படிக்க வைச்சேன்னு பிகில் விட்டு படிக்க வைக்கிறவிங்க சிலபஸ்ல இருக்கிற கேள்விகளை கொண்டு போய் அரசாங்க பள்ளி கூடங்கள்ல படிக்கிறவன்கிட்ட திணிச்சு ஏண்ட வன்புணர்வு செய்றீங்க (வேற என்னவாம் அது?)
கேட்டா மனனம் செஞ்சு படிக்கிறதுன்னு ஒரு நொன்னை வாதம். சரி நீங்க சி.பி.எஸ்.இல நொட்டி எத்தனை நோபல் பரிசும், அண்டத்தில புதுக் கோள்கலையும், நட்சத்திரத்தையும் உருவாக்கி வைச்சிருக்கீங்க?
இப்படிச் சுரண்டித் திங்கிறதெல்லாம் ஒரு பொழப்பாடா? இந்த கருமாந்திர பிடிச்ச செயல்பாட்டில வேற நுழைவுத் தேர்வு நடத்துர ஹால்ஸ் கண்டிபிடிக்கிறதில வேற குளறுபடி. நல்ல கெட்ட கெட்ட வார்த்தையா வாயில வருது, ஆனா, ரொம்ப நல்லவிங்க கோவிச்சுக்குவாய்ங்களேன்னு அடக்கி வாசிச்சு எழுதுறேன்.
எவனாவது இப்படித்தான் அமெரிக்காவில ஒரு முறை நான் எக்சாம் எழுதப் போக ஐந்து மணி நேரம் ட்ராவல் செஞ்சு போனேன், அப்படி இப்படின்னு வந்தீங்க, கம்னாட்டி பயலுகளான்னு திட்டிப் புடுவேன்.
ஒரு எக்சாம் ஹால் கண்டுபிடிச்சு அதுக்குத் தேவையான வசதிகளை அமைச்சிக்க எத்தனை மணி நேரம்டா முறையா செஞ்சா தேவைப்படும்? அப்போ தமிழ்நாட்டில இது வரைக்கும் நடத்தப்பட்ட தேர்வுகள் அனைத்தும் தில்லுமுல்லு செஞ்சுதான் உருவாக்கினாங்கன்னு சொல்ல வாரீங்களா? சட்டியில இருக்கிறதுதானே அகப்பையில வரும்... உங்களோட நாள் பட்ட சீழ் பிடிச்ச புத்திப்படிதானே மூளையும் வேலை செய்யும்?
என்னமோ வேற்று கிரகத்திற்கு ஆள் எடுக்கிற தோரனை மசிருல ஒரு தேவையற்ற நுழைவுத் தேர்வு அதுக்கு இத்தனை பில்டப். காதுக்குள்ளர லைட்டு அடிச்சி என்னடா செக் செஞ்சீங்க போன ஆண்டு? காக்லீயா இருக்கான்னா பார்க்கவா? முண்டக் கலைப்பைகளா? சட்டை கிழிச்சு, முடியை வெட்டி கரும்புள்ளி செம்புள்ளி மட்டும்தாண்டா குத்தி ஏண்டா படிக்கிறீங்கன்னு கேக்கல. உங்களோட இந்த பூமிய பகிர்ந்துக்கிறதுக்கே கேவல மசிரா வருது.
இதில வேற அமெரிக்காவில இருக்கேன், அண்டார்டிக்காவில இருக்கேன்னு ஒரு வாழ்க்கை மசிரு வேற. கூட இருக்க கூட்டத்தை ஒரு மனுசப்பிறவிகளா மதிச்சு கூட்டிக்கிட்டு தானும் உயர ஒரு மனசில்ல பின்ன என்ன மரியாதை மசிரு தேவைப்படுதுங்கிறேன்.
இதெல்லாம் ஒரு பிரச்சினைன்னு உச்ச நீதி மன்ற தீர்ப்பு வேற. முடியலடா. இந்த கூத்தையெல்லாம் பார்த்துக்கிட்டு நாமளும் ஒரு மனுசப் பொறப்புன்னு சொல்லிக்க. ஏண்டா, உங்களுக்கெல்லாம் வெக்கம், மனசாட்சிங்கிற மசிரே இருக்காதா?

0 comments:

Related Posts with Thumbnails