Wednesday, June 06, 2012

உள்ளொளி

Candle light - Reflection



நான் உனையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தேன்
முதலில் யார் கண் சிமிட்டுவதென
தூரத்தில் நின்றபடியே நீ வியர்த்து அடிபெருக்கும்
பொழுதெல்லாம்
நான் உயரத்தில் குறைந்திருந்தேன்

கருமையை நீ உண்டு கொண்டிருக்கும் வேளையில்
உனதிருப்பை நான் அழகாக்கிக் கொண்டிருந்தேன்

உனையுருக்கி உன் வாதையின் உக்கிரக் குழி பறிக்கையில்
அப்பொழுதும் அசையாமல் உன் அகம் காட்டியிருந்தேன்

தரை துடைத்து ஊண் திரட்டி பலமாக பெருமூச்செறிந்தாய்
கரும்புகை நாசிதொட புறவுலகம் முகம்சுழிக்க
போதுமென
புன்னகைத்தே இருள்துழாவி எனதுடலாக்கினேன்!


P.S: Discussion in Buzz ...ULLoLi...

Related Posts with Thumbnails