Friday, July 27, 2007

தண்ணியடிச்சா *கொசு* அதிகமா கடிக்குமா!!

நம்மளும் இந்த கொசு கடியில இருந்து தப்பிக்க என்னவெல்லாமோத்தான் செய்து பார்க்கிறோம். ஆனால், அவைகள் விட்ட பாடு இல்லையே. கும்மிருட்டாக இருந்தாக் கூட கூடி வந்து சிம்பொனி போட்டு ரசிச்சு கடிக்கிதுக.

எப்படி இந்த கொசுக்கள் மிகச் சரியாக நம்மள இருட்டுக்குள் கண்டுபிடிச்சு கடிக்குதுங்க அப்படின்னா, இங்க நிறைய பேருக்கு தெரிஞ்சுருக்கும் இருந்தாலும் ரெண்டு வரிகளில் சொல்லிப் புடுவோம். நம்ம உடம்புச் சூட்டை வைத்தும், சுரக்கும் லாக்டிக் அமிலத்தைக் கொண்டும், கரியமிலாவாயுவைக் கொண்டும் இந்த குட்டி ஹெலிகாப்டர்கள் மிகச் சரியாக நம்மீது குறி வைத்து தரையிறங்குகிறதாம்.

பொதுவாக நம்மிடத்தெ ஒரு ஆசை இருக்கலாம், ஏதாவது வாசத்தை வைத்து இவைகளை விரட்டியடிக்க முடியாதா அப்படின்னு. இந்த முறை எனது ஊருக்கு போயிருந்த பொழுது ஒரு முறை கரண்ட் போயிவிட்டது, இரவு நேரம் தூங்க முடியாத அளவிற்கு புழுக்கம், கொசுக்களின் தொல்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை. நானும் ஆராய்ச்சியில் இறங்கி விட்டேன். எனக்கு கிடைத்தது, பாண்ட்ஸ் ட்ரிம் ஃப்ளவர் டால்கம் பவுடர்தான். உடம்பு முழுக்க விபூதிச் சாமீயார் மாதிரி அள்ளி அப்பிக் கொண்டு தூங்க முயற்சித்தேன். ஆனால், எனது ஆராய்ச்சி தோல்வியில் முடிவடைந்தது. எல்லோரையும் சிரிக்க வைத்ததுதான் மிச்சம் :-).

ஆனால், இன்னும் கொஞ்சம் விபரமறிந்தவர்கள் பூண்டு(Garlic) நிறைய சாப்பிட்டா கொசுக்கள் கிட்ட நெருங்காதுன்னு நம்பியிருக்காங்க. அப்படி யாராவது நம்பின மக்கள் இங்க இருக்கீங்களா? இருந்தா, உங்களுக்குத்தான் இந்தப் பதிவு.

சரி இது எந்தளவிற்கு உண்மைன்னு தெரிஞ்சுக்கணுமில்லையா, அதற்காக கனெடிகட் பல்கலை கழகத்தில உள்ள உடல் சுகாதார மையத்தில ஒரு ஆராய்ச்சி நடத்தி இருக்காங்க. நம்ம கூட செஞ்சுப் பார்த்திருக்கலாம். அவ்வளவு ஈசியான செய்முறை.

ஒரு குரூப் மக்களுக்கு நிறைய பூண்டுகளை சாப்பிடக் கொடுத்திருக்காங்க, இன்னொரு குரூப்க்கு அது மாதிரியே இருக்கிற பூண்டு இல்லாத(placebo) விசயத்தை சாப்பிட வைச்சுட்டு, அவங்க ரெண்டு பேரையும் கொசு கடி வாங்க விட்டு ஒப்பீட்டு பார்த்தப்ப ஒரு வித்தியாசமுமில்லையாம். இதில இருந்து பூண்டுக்கும் கொசு கடிக்கும் சம்பந்தமில்லைன்னு தெரிஞ்சுக்கிட்டாச்சு.

ஆனா, பாருங்க தண்ணி அடிச்சிருந்தோமின்ன அன்னிக்கு நம்ம சுத்தியும் சிம்பொனி அதிக மிருக்குதாம் :( அதே போன்ற இரண்டு குரூப் மக்களை வைச்சு ஆராய்ச்சிப் பண்ணப் பட்ட போது இது தெரிய வந்திருக்கு. அப்ப நம்மூர்ல சொல்லவே வேண்டியதில்லை. கொசு கடியை மறந்து நிம்மதியா தூங்க, கொஞ்சம் நாக்கில தடவிக் கிட்டு படுத்தா, அவருதான் நல்லா சாப்பாடு நிறைய பேருக்கு அன்னிக்கு இரவு போடப் போறார்னு வச்சிக்க வேண்டியதுதான்.

National Geography Vs Mel's Apocalypto!!!

என்னுடைய பதிவில் "அபோகலிப்டோ என் பார்வையில்: Apocalypto...!" இது போன்ற சர்ச்சைக்குரிய வரலாற்றுப் படத்தின் மூலமாக எப்படி ஒரு சாதாரண ஒரு பிரஜைக்கு தவறான புரிதல் தொன்மை வாய்ந்த நாகரீகங்களின் மீதாக வைத்து மக்களிடத்தே திணிக்கப் படுகிறது என்பதனை பற்றி பதிந்திருந்தேன். அதற்கு நல்ல பின்னூட்டங்களும் அமைந்து அந்தப் பதிவுதனை நிறைவுறச் செய்தது.

இப்பொழுதுதான் எனக்குத் தெரிய வந்தது உலகப் பிரசித்திப் பெற்ற மாதந்திர இதழும், ஆராய்ச்சி நிறுவனமுமான 'நோஷனல் ஜியோக்ரஃபி' இந்த ஹாலிவுட் படத்தினைப் பற்றி விமர்சனமாக உண்மையை திரித்து கூறியதாக, அந்தத் துறையை சார்ந்தவர்களின் பேட்டியின் மூலமாக வைத்திருப்பது தெரியவந்தது.

அதனை இங்கு பதிந்து வைப்பது பிரயோசனமாக இருக்கும் என்று எண்ணி அப்படியே பதிந்து வைக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள், மேற் கொண்டு படிக்கலாம்.

"Apocalypto" Tortures the Facts, Expert Says

Stefan Lovgren
for National Geographic News

December 8, 2006
Mel Gibson says Apocalypto, his new movie set during the collapse of the Maya Empire, should not be seen as a historical document.

At least one expert couldn't agree more.

Though it gave rise to awe-inspiring architecture and surprisingly advanced science, the Maya civilization—which thrived in what are now Mexico, Guatemala, Belize, and Honduras—began declining around A.D. 800 (map of Central and North America).

Archaeological evidence points to a multitude of factors that could have led to this decline, including internecine warfare, the loss of trade routes, drought, and disease.

But before the fall, the Maya ruled the region from seats of power in dozens of cities. It is this so-called Classic period [A.D. 250 to 900], and especially its end, that the film most resembles, though no date is specified in Apocalypto.

To find out what the Maya Empire was really like, Stefan Lovgren checked in with Zachary Hruby, a Maya expert at the University of California, Riverside.

(Related video: "'Apocalypto' Exaggerates Maya Violence, Expert Says.")

In Apocalypto, the hero, Jaguar Paw, lives in an idyllic hunting village set deep in the jungle. Would this have been typical?

During Classic times the Maya were an agricultural people. They hunted, but wild game was a relatively small percentage of the diet, and meat in general may have been seen as more of a luxury item.

At that time, it appears that almost all the forest was maintained, manicured, and owned by somebody, and [the fact] that you have a Maya group [in Apocalypto] that doesn't practice agriculture is virtually impossible.

Would Maya villagers have lived in stick huts, as they do in Apocalypto?

Although houses may have been of perishable materials, they had stone foundations and were often built in cleared plazas but certainly not in the wild jungle. House lots were planned and intensively managed spaces where fruits, vegetables, and medicinal plants were grown and where some domesticated animals were raised.

[In Maya artwork] women are traditionally shown in conservative dress, in huipiles, which covered their breasts. Also, ceramic vessels were ubiquitous.

The villagers are attacked and captured by men from a Maya metropolis. While the male captives are to be used in sacrificial rituals, the women are sold as slaves.

There's no evidence that innocent women and men were harvested from the hinterlands and sold into slavery or to provide flesh for sacrifice. Generally captives appear to have been taken during war between polities.

Jaguar Paw and the other captives who are brought to the city have never heard of such a place.
During the Classic period Maya settlement was so widespread that you lived at least within 10 to 20 kilometers [6 to 12 miles] of a large community. Pyramids were never more than 20 kilometers away from anywhere in the Maya world.

There was a great sense of political connectedness between different groups. Even small villages in the hinterlands of large cities were connected to some political center.

The city is depicted as one of both great wealth—with a lot of people wearing jade jewelry—and great poverty.

Jade was usually reserved for royal families. Even in cases of relatively impoverished sites … the king would wear false jade beads made of painted ceramic, indicating that the veneer of wealth was crucial no matter what the reality.

Jade was the symbol of royal power and wealth. You don't find these goods in commoner graves and even very rarely in nonroyal elite burials.

The Maya civilization is impressive for a number of reasons—a fully developed writing system, amazing architecture, and a complex political system. But life expectancy was low.

Near the time of the collapse, people were generally undernourished, which is reflected in their bones, and they had bad problems with their teeth.

The city features dazzling pyramids but is also seen to be in a great state of disrepair.

It may be modeled after Tikal in Guatemala, a great Mayan city. But it is more of a combination of architectural features from both the southern and northern lowlands on the Yucatán Peninsula.

If Apocalypto is meant to to show the terminal Classic—the Classic Maya collapse—then it may have looked in a state of disrepair. The decline in social organization may have made the upkeep of public buildings a difficult economic and political endeavor.

Jaguar Paw and the other captives are to be sacrificed on a column-shaped stone to appease the gods and avert a drought.

This type of sacrifice resembles one that may have been carried out by the Mexica [an Aztec-related group] in central Mexico.

The Aztecs [who presided over an empire in Mexico in the 15th and 16th centuries] used a column-shaped stone on which the captive would be splayed out, back arched, allowing the sacrificer to more easily access the heart from beneath the rib cage to make a heart sacrifice.

This type of sacrifice is unknown within the Maya area.

In the movie hundreds of people appear to be sacrificed at once.

The Aztecs are known to have sacrificed large numbers of people, though according to the archaeological record, we are unsure of how many would be sacrificed at one time.

There are no data to support that the Maya carried out sacrifice on such a large scale.

The evidence we have suggests that sacrifice was a very personal thing, and so even the captives were personal objects. Even after death, the bones of those captives were owned [by the sacrificer].

Another form of [nonlethal] sacrifice to the Maya is auto-sacrifice, or bloodletting, which was carried out by males by perforating the penis and by women who would pull ropes through their tongues. This blood was used in ancestor veneration and other rituals.

The movie suggests that the Maya relished torturing their captives.

The captives the Maya wanted were the elites from opposing polities, because they represented competition.

Capture, humiliation, and torture of an elite warrior meant usurpation of their goods and resources. The Maya didn't necessarily relish torture and violence, but they relished making their political opponents suffer.

Fingernails were torn out, genitalia and breasts exposed, and starvation was common.

In the movie the king is shown as a bystander to two other individuals during the sacrificial ritual.

Most monuments depict the king as the central figure—dancing, bloodletting, scattering incense.

The king was the one who supposedly conducted rituals in front of a large audience. He played a major ceremonial role.

The Maya kings were seen as potent mediums in terms of communicating with their own ancestors, and the king would also impersonate deities. By doing so, the king could replay important mythological scenes that connected to events that were happening in the city at the time.

It was a combination of religion and politics, but not in the sense that we think of an Egyptian pharaoh as a living god.

A solar eclipse plays a pivotal part in the movie.

There are hieroglyphs to suggest that the Maya observed the eclipse.

The Maya calendar supposedly ends in 2012, and people have hypothesized that [the Maya thought] the world will end at that time. But even in Mayan creation mythology, there is no explicit connection between the end of the Maya calendar and the end of the world.

The movie suggests that there were several reasons for the Maya collapse.

There are many causes for the fall of that form of Classic-period social organization. Multiple historical, economic, and environmental factors were in play simultaneously at that time.

It was a time of particularly bad drought. There was heavy deforestation. The ancient Maya overused their land and were no longer producing the amount of food they needed.

At the same time, populations were going through the roof. There were too many people, and the pie simply wasn't big enough.

There was also increased warfare in some areas. Royals were trying to kill off each other. This appeared to have occurred over a 100- to 150-year period, so it wasn't one single event. And it occurred largely in the southern Maya lowlands.

In some areas in the north, the construction of pyramids and other buildings continued unimpeded [after A.D. 900].

It is important to remember that the Maya didn't disappear. They reorganized. So we should think of it more as a social reorganization than a collapse.

By the time the Spaniards arrived, the social problems associated with the Classic period collapse, as portrayed in Apocalypto, did not exist.

Spoiler warning: Readers who would like to keep the ending of Apocalypto a surprise should stop reading here.

In terms of historical accuracy, the arrival of the Spaniards is a problem in itself, right?

The movie ends with the Spaniards coming [which didn't happen in Mexico until long after the Classic Maya collapse]. So basically we're looking at a 400-year difference in architectural style and history.

The movie is mixing two vastly different time periods. This Classic form of kingship ended around 900 A.D.

Monday, July 23, 2007

அபோகலிப்டோ என் பார்வையில்: Apocalypto...!


மெல் க்ப்சனின் படமென்றாலே கொஞ்சம் திரையைத் தாண்டியும் இரத்த வாசம் கசிந்து நம் நாசிகளை வருடிச் செல்லும் என்பதற்கேற்ப அவரின் முன்னய படங்களான Brave Heart and Passion of the Christ போன்றவைகளை பார்த்திருந்தால் தெரியும். அது போலவே இந்த Apocalyptoவும் அந்த தாக்கத்தை விட்டுச் செல்ல தவறவில்லை.

இந்த படத்தை இப்பொழுதுதான் ஒரு இரண்டு நாட்களுக்கு முன்பு டி.வி.டியில் எடுத்துப் பார்த்தோம். அன்று இரவு தூக்கத்தை தொலைத்ததை மறுப்பதற்கில்லை. இருந்தாலும், மறுநாளும் பார்க்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டியது. பார்த்தும் வைத்தேன்.

இந்தப் படத்தைப் பற்றிய முழுமையான விமர்சனம் நம்ம கப்பியார் இங்கு கொடுத்திருக்கிறார் கதைக்கு அங்கு சென்று படியுங்கள்.

ஆனால் நான் பேசப் போகும் விசயம் வேறு. இந்தப் படத்தின் கதைக் கரு கொஞ்சம் சர்ச்சைக்குறியது. எகிப்தின் மம்மிகளைப் போன்று தோண்டி எடுக்க எடுக்க கதையாக வரலாற்றை எழுதுவதற்கும் (மேலும் மம்மிகளை தொடர்ந்து பல சுவற்றில் எழுதி வைக்கப்பட்டுள்ள படக் குறியீடுகளை கொண்டும்), இந்த தென் அமெரிக்காவில் இருந்து வந்த மாயா இன நாகரீகத்துக்கு அடையளமாக சில எஞ்சி நிற்கும் கட்டடங்கள், இன்னமும் அகழ்வாரயச்சியில் தோண்டி அதுவும் வனப்பகுதிகளில் எடுத்த சில விசயங்களைக் கொண்டும் இப்படி ஒரு படம் எடுத்திருப்பது இன்னும் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் என்பதனைப் பொருத்து ஆச்சர்யப் படுவதற்கு ஒன்று மில்லைதான்.

இதில் வனத்தினுள் வாழும் மக்கள் எப்படி அங்கு கிடைக்கும் உணவுகளைக் கொண்டு நாகரீகமாக வாழக் கற்றுக் கொண்டார்கள் என்பதிலிருந்து தொடங்கி, வெட்ட வெளியில் முன்னமே அதனை விட நாகரீகமடைந்தாகவும், கட்டடக் கலையிலும் மற்றும் அடிமைகளை கையாண்டு எப்படி தனது நாகரீகத்தை உச்சத்திற்கு எடுத்துச் சென்று வாழ்பவர்கள், அவர்களாகவே அவர்களது நாகரீகம் அழிந்து நாசமாவததுற்கு காரணமாகிறார்கள் என்பதனை சற்றே மிகைப் படுத்தப் பட்ட காட்சி அமைப்புகளுடன், காட்டு மிராண்டிகளாக ஒரு தொன்மையான நாகரீகம் காட்டப் படுகிறது deliberately right from the beginning.

காட்சியின் இறுதி கட்டத்தில் தான் எனக்கு, ஏன் அந்த மாதிரியான ஒரு கதையமைப்பே தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதனைப் பொருத்து கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. மெல் க்ப்சனின் பக்தி மாலை, என்னாடா நரி அம்மணமாக போகிறது என்று யோசித்துக் கொண்டிருந்த எனக்கு பிடிபட்டது என்னான்னா - காட்டு வாசி ஹீரோவை நாகரீமடைந்த மாயா வீரர்கள் துரத்திப் பிடித்து வெட்டிக் கொல்ல எத்தனிக்கும் பொழுது வருகிறது நமது "சொர்க்கத்திற்கு ஆள் சேர்க்கும் படை" கப்பல்கள் கட்டிக்கொண்டு.

அந்த காட்சி அமைப்பின் மூலமாக நான் புரிந்து கொண்டது, மெல் க்ப்சனின் பார்வையில் இந்த மாயா இனமே ஒரு காட்டு மிராண்டிக் கூட்டமாகவும், இந்த ஸ்பானியார்ட்ஸ் மக்களும் அவர்களின் மிஷனின் மூலமாகத்தான் எஞ்சியிருந்த மக்களை அறிவூட்டி, பண்பாடு புகுத்தி, உண்மையான நாகரீகம் கத்துக் கொடுக்கிறவங்க அப்படிங்கிற மாதிரியும் படம் முழுக்க ரத்தமும், சதையுமா காமிச்சு, கடைசியில் கடவுளின் தூதர்களை அனுப்பிச்ச மாதிரி ஒரு diffuser lense போட்டு காமிச்சதெ வைச்சுப் பார்த்தா அட மெல் க்ப்சனா கொக்காங்கிற மாதிரி இருந்துச்சு (இதே மாதிரியே இங்க ஒரு வரலாற்றுப் பேராசிரியர் உணர்ந்திருக்கிறார் பாருங்க.... ).

வேற யாராவது அப்படி இந்தப் படம் பார்த்து முடிஞ்சவுடன் இப்படி நினைக்கத் தோணுச்சா? இல்லை எனக்குத்தான் இப்படியெல்லாம் அஷ்ட கோனலா எல்லாம் தெரியுதா?










பி.கு: இது தொடர்பாக நம்ம "நோஷனல் ஜியோக்ரஃபி' என்ன நினைக்கிறது என்பதனை இங்கு பதிந்து வைத்திருக்கிறேன் - National Geography Vs Mel's Apocalypto...!

Thursday, July 19, 2007

ஒரே குழந்தையும் நோய் எதிர்ப்பு சக்தியும்...!!

இன்றைய தினத்தில் நம் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகளில் இந்த கட்டுக்கடங்காத மக்கள் தொகை பெருக்கமும் ஒரு பெரிய பேசப் பட வேண்டிய விசயமே. இதனை தவிர்க்கும் பொருட்டு கொஞ்சம் பொறுப்பானவர்கள், ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு பெற்றுக் கொள்ளும் சில பெற்றோர்கள், அதீதமாக தாம் குழுந்தைகளின் மேல் கவனம் எடுத்து வளர்க்கிறேன் பேர்வழி என்று பொத்தி பொத்தி வளர்க்கிறார்கள் (மற்றுமொரு குழந்தை back upக்கு இல்லையே என்று, அந்த காலம் மாதிரி).

இச் சூழலில் அன்மைய மருத்துவ ஆராய்சிகள் சொல்கிறது, இயற்கையிலேயே அதுவும் தாயிக்கு முதல் குழந்தை எனும் பட்சத்தில் இந்த நோய் எதிர்ப்பு (immune system) சக்தி குறைவாகவே காணப்படுகிறதாம் அக் குழந்தைகளுக்கு. அதாவது, முதல் குழந்தைக்கும் மூன்றாவதாக பிறக்கும் குழந்தைக்கும் உள்ள வித்தியாசத்தை அவைகளின் தொப்புள் கொடியில் உள்ள immunoglobulin E (IgE) அளவை கொண்டு ஆஸ்த்மா மற்றும் இதர ஒவ்வாமை தொடர்பான வியாதிகளால் பீடிக்கும் வாய்ப்பை ஒப்பீடு செய்து பார்க்கும் பொழுது முதலாவதாக பிறக்கும் குழந்தைக்கு இந்த immunoglobulin E (IgE) அளவு அதீதமாக இருப்பதால் அவைக்களுக்கு இந்த ஒவ்வாமை சார்ந்த வியாதிகள் அதிகரிக்க வாய்ப்பு அதிகமாம்.

ஆனா பாருங்க இந்த மாதிரி முதல் குழந்தைகள் மற்ற (தனது சகோதர, சாகோதரி, இதர) குழந்தைகளுடன் ஓடியாடி கலக்கும் பொழுது இயற்கையாகவே மற்ற கிருமிகளிடத்தே அறிமுகம் கிட்டி மெதுவாக இந்த குழந்தைகளும் சுயமாக நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்து கொள்ளுதுகளாம்.

இப்ப வாரேன் பாருங்க விசயத்துக்கு. இது இப்படி இருக்கும் பொழுது இந்த அதீத கவனம் எடுத்துக் கொள்ளும் அப்பா, அம்மாக்கள் பள்ளிகளுக்கு தனது குழந்தைகளை அனுப்பி வைப்பதோடு முடிந்ததாக நினைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தால், வெளியே அனுப்பி சிறிது உடற் பயிற்சி கிட்டும் வண்ணம் விளையாடக் கூட அனுப்ப முடியாமல் இன்னும் நிறைய வேலைகளை குழந்தைகளின் மீது சுமர்த்தி, கோடை விடுமுறையின் போது கூட தனது உறவினர்களின் (உ.தா: தாத்தா, பாட்டி) அண்டைய ஊர்களுக்கு அனுப்பி அங்குள்ள தண்ணீர், மற்றும் இதர உணவு வகைகளை உண்டு இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கா வண்ணம் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறார்கள் இந்த காலத்தில்.

அக் குழந்தைகளுக்கு சதா மாத்திரை மருந்துகளை ஊட்டி சிறு, சிறு ஜலதோஷம், சிறு காய்ச்சல் போன்றவைகளுக்கும் கூட வீட்டு அணுகு முறையை தவிர்த்து மாத்திரைகளை சோறு போல ஊட்டுவதால் பிரிதொரு காலத்தில் எது போன்ற சக்தி உள்ள மாத்திரைகளை கொடுத்தாலும் கூட அதிக சக்தி உள்ள மருந்துகளை கொடுப்பது மாதிரியும், அந்த மருந்து மாத்திரைகளே இருக்கும் கொஞ்ச நஞ்ச நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைத்து வாழ் நாள் முழுதும் மருந்து மாத்திரைகளை நம்பியே (medicine dependent life) ஓட்டும் நிலைக்குத் ஆளாகிப் போகிறார்கள்.

பெரியோர்களுக்கு இயற்கை முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை உற்பத்திக்க தினமும் கொஞ்ச நேரம் உடற் பயிற்சி செய்தாலே நிறைய கிடைப்பதாக அறியப்படுகிறது. பெண்களின் மார்பக புற்று நோயிலிருந்து, இதயக் கோளாருகள் வரை இதன் பொருட்டு தவிர்க்கப் படுவதாக தெரிகிறது. யோகவும் இந்த வகையில் ஒரு கூடுதலான பரிசு நமக்கு.

எனவே பொற்றொர்களே, பெரியோர்களே குழந்தைகளுக்கு ஒரு வாய்ப்பளியுங்கள் இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள. 'ஹும்' என்றால் உடனே பார்மாவுக்கு சென்று மாத்திரை வாங்கிக் கொடுப்பதில் மட்டுமல்ல உங்கள் அன்பு வெளிப்பாடு அதனையும் தாண்டி என்ன இருக்கிறது என்று தேடிப் பார்த்து நிலையானதொரு தீர்வை கொடுங்கள் உங்க அன்புச் செல்வங்களுக்கு.

Tuesday, July 17, 2007

*சுன்னத்* முறை: Circumcision Re-Considered!!!

சுன்னத்(circumcision) செய்வது என்பது மதச் சடங்காகவும், மருத்துவர்களின் சில வித நோய்களை தீர்க்கும் தீர்வாகவும் நடை பெற்று வருவது யாவரும் அறிந்ததே. ஆனால், தென்கிழக்கு ஆசியா நாடுகளிலும், பரவலாக சில தென் அமெரிக்கா மற்றும் ஆஃப்பிரிக்கா போன்ற வளரும் நாடுகளிலும் அவ்வளவாக அமுலில் இல்லை.

இப்பொழுது வளரும் நாடுகளில் இது போன்ற சுன்னத் செய்யும் மக்களின் எண்ணிக்கையும் பெருமளவிற்கு குறைய ஆரம்பித்திருப்பதாக செய்திக் குறிப்புகள் வர ஆரம்பித்திருக்கிறது. உதாரணத்திற்கு, 1960களில் அமெரிக்கா போன்ற வளரும் நாடுகளில் மட்டும் 90 சதவீத குழந்தைகள் சுன்னத் முறையை தழுவ நேர்ந்ததாம். ஆனால் அது அண்மைய காலங்களில், அதாவது 2000ங்களில் அதுவே 50 சதவீதமாக குறைந்து போனதாம்.

என்ன காரணமாக இருக்கும் என்றால், இந்த சுகாதார ரீதியாக நம்பப் பட்ட அதாவது சுன்னத் செய்து கொள்வதின் மூலமாக தவிர்கப்படும் புற்று நோய், சிறுநீரக தொற்று வியாதிகள், எய்ட்ஸ் மற்றும் பாலியல் தொடர்பான மற்ற நோய் தாக்கத்தினை குறைத்துக் கொள்ள வழி வகை செய்வதாக நம்பப்பட்டது. இன்னமும் சில மருத்துவர்கள் இதனை முன் மொழிகிறார்களாம்.

இது இப்படி இருக்க, இப்பொழுது அன்மைய மருத்துவ ஆய்வுகள் இது போன்ற மருத்துவ காரணங்கள் சரியான படி முழுதுமாக ஏற்றுக் கொள்ள தக்க வகையில் இல்லை எனவும், அது போன்ற மேற் சென்ன சுகாதார விசயங்கள் சுன்னத் செய்யப் பட்டவர்களுக்கும், பண்ணப் படாதவர்களுக்கும் எந்த பாகுபாடுமில்லாமலேயே வியாதியால் பீடிக்கப் படுகிறார்கள் என்று அந்த ஆய்வாரிக்கை இந்த சுன்னத் முறையின் நம்பகத் தன்மையை கேள்வியில் ஆழ்த்தியிருக்கிறது.

இதன் பொருட்டு இப்பொழுதைய பொற்றோர்கள் தனது குழந்தைகளுக்கு பிறந்தவுடனேயே இப்படி ஒரு வலியூனுடே அங்க இழப்பு செய்ய நிர்பந்திப்பது இயற்கைக்கு முரணானது என்று தவிர்த்து வருவதாகவும் அவ்வறிக்கை சுட்டுகிறது.

எனக்கு என்ன தோனுதுன்னா இதில வேற ஏதாவது ஏடா கூடமா வெவரம் தெரிஞ்சவுங்க இந்த சுன்னத் முறையை மதங்களின் ஊடாக வைச்சு தைச்சு அமுல் படுத்தியிருப்பாங்களோ முன்னமேன்னு. ஆனால், சில ஹாஸ்பிடல்களில் இங்க அமெரிக்காவில் தாய்பாலுக்குப் பதிலாக புட்டிப் பால் கொடுப்பதை மருத்துவர்களே அங்கீகரிக்கும் வண்ணம் ஊக்குவிப்பதும் ஒரு வித வியபாரத் தந்திரமே (i.e., promoting the sales of formulas).

அது போல அன்மைய காலங்களில் இந்த குழந்தைகளை துன் புறுத்தும் சுன்னத் முறை இதுக்கு மேலும் கடைபிடிப்பது ஹாஸ்பிடலுக்கு வேண்டுமானல் ஒரு துண்டு பில் போட உதவலாம் போல. அதுவும் இந்த ஆய்வறிக்கையின் ஊடாக காணும் பொழுது. அப்படியா?



பி.கு: Removes the Most Sensitive Parts <=== இந்த பக்கத்தில் படிக்க வேண்டி நிறைய இருக்கிறது.
......Circumcision Removes the Most Sensitive Parts of the PenisA sensitivity study of the adult penis in circumcised and uncircumcised men shows that the uncircumcised penis is significantly more sensitive. The most sensitive location on the circumcised penis is the circumcision scar on the ventral surface. Five locations on the uncircumcised penis that are routinely removed at circumcision are significantly more sensitive than the most sensitive location on the circumcised penis.In addition, the glans (head) of the circumcised penis is less sensitive to fine touch than the glans of the uncircumcised penis. The tip of the foreskin is the most sensitive region of the uncircumcised penis, and it is significantly more sensitive than the most sensitive area of the circumcised penis. Circumcision removes the most sensitive parts of the penis. This study presents the first extensive testing of fine touch pressure thresholds of the adult penis. The monofiliment testing instruments are calibrated and have been used to test female genital sensitivity.
Sorrells, M. et al., “Fine-Touch Pressure Thresholds in the Adult Penis,” BJU International 99 (2007): 864-869.....

Thursday, July 12, 2007

ஓடி ஒளியும் நாளைய பிணங்கள்!!!





நேற்று இறந்து போனவர்களின்

கல்லறையில்

காகிதப் பூக்களை

சொருகிவிட்டு

இன்று

நடந்து திரியும்

நாளைய "பயந்த" பிணங்கள்!!!

Saturday, July 07, 2007

*மாயன்*, நாசர் இவர்களுடன் தெகா...!

மாயன்(வலைப்பதிவர் ) அவர்கள் "நாசர்" குறித்தும், மெதுவாக நகரும் படங்களை குறித்தும் தனது பார்வையை இந்தப் பதிவில் "நடிப்புக் கடவுளால் நாசமாகும் தமிழ்சினிமா -அவதாரம் எடுக்கிறார் நாசர்" பின்னூட்டங்களின் மூலமாக தனது எண்ணங்களை வெளிக்கொணர்ந்திருந்தார். அதற்கு நானும் இரண்டு பின்னூட்டங்களை இட்டு எனது எண்ணங்களை அதன் பொருட்டு பகிர்ந்துள்ளேன். அதற்கு ஒரு பின்னூட்டத்திற்கு இட்டது தனிப் பதிவிற்குறிய அந்தஸ்தை (என் பார்வையில் :-) பெற்றதால் தனியாக இங்கே.

இதுதான் மாயனின் பின்னூட்டம்:

மக்களை சினிமாவால் கரையேற்ற முடியும் என்று நம்பும் அப்பாவியாய் இருக்கிறீர்களே.. தெகா..

விவாதம் இரசிப்பு தன்மையைப் பற்றி.. வெளிநாட்டு ஆட்கள் இங்கே வந்து நமது கிராமத்து கலைகளையும், இந்திய தேசத்தில் விரவிக்கிடக்கும் கலைகளையும் கவர் பண்ணிட்டு இருக்கான்.. நாம மேற்கத்திய சினிமாவையும், இலக்கியத்தையும் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கோம்...
//ச்சும்மா விசிலடிச்சான் குஞ்சுகளாகவே தேக்கமுற வைச்சிருப்போம், சரிதானே, மாயன். .\//
விசிலடிச்சான் குஞ்சாய் இல்லாமல் அமைதியாய் நாசரின் உலக படங்களை பார்க்கும் படி செய்து விட்டால் சினிமா சமூகத்தை காப்பாற்றுமா..? இன்னைக்கு ரஜினியும், விஜய்யும் கொண்டு போறதை நாளைக்கு நாசர் கொண்டு போவார்... அவ்வளவு தான்..

உலக சினிமாவின் ரசிப்பு தன்மை நம்மாட்களிடம் இருக்கா இல்லையானு விவாதம் வரும் போது அதை பத்தி மட்டும் தானே பேசனும்.. ஏன் தெகா சம்மந்தம் இல்லாம சமூக முன்னேற்றத்தையும் பத்தியும், கரையேத்தறதையும் பத்தி பேசறீங்க..

சனி, ஜூலை 07, 2007 4:01:00 PM

பின் வருவது இந்த அப்பாவி அதாவது சினிமா ஊடகத்தின் வாயிலாக சமுதாய பண்பாட்டு கலைகளை காக்க முடியுமென்று அனியாயமாக நம்பும் தெகாவின் பதில்...

மாயா,

அப்படி என்றால் ஏன் உலக பல்கலை கழகங்களும், பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனங்களும் தென் மாநில நாட்டுப் புற கலைகளின் மீதோ அல்லது தொன்மை வாய்ந்த புராண கால நாடங்களின் மீதோ ஆராய்ச்சி செய்து பாதுகாக்க வேணுமென்ற சிரத்தை எடுத்துக் கொள்கிறது?

நமக்கு காலம் காலமாய் இந்த நாட்டுப்புற பாடல்களும், ஒப்பாரிப் பாடல்களும் அதன் மூலமாக சொல்லப்படும் விசயமும் ஒரு தலை முறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு எப்படி கீழிறக்கம் செய்யப் பட்டு வருகிறது? கலப்பிடமேதுமன்றி. அதன் மூலம் ஒரு சமுதாயம் என்னாத்தை பெறுகிறது?

கால வெள்ளத்திலிருந்து அவைகளை பாதுகாத்து, வரும் சந்ததிகளுக்கு சிறிதேனும் விட்டுச் செல்வது ஒரு சமூக பொறுப்பல்லவா? அதெப்படி பொறுப்பற்ற தன்மையாகும். சினிமா என்ற ஊடகம் மிகவும் சக்தி வாய்ந்தது. மிகவும் பொருளாதாரத்தை மட்டுமே முன் நிறுத்தி நடத்தப்படும் ஒரு தொழில்தான், என்றாலும், ஒரு கலைவாணர் தன்னாலானதை அவ் ஊடகத்தின் ஊடாக கொடுத்து எதுவும் விட்டுச் செல்ல வில்லையா?

எப்படி அகழ்வாரய்ச்சி செய்து பலங் கால கட்டிடங்களையும், விலங்குகளையும் கண்டுடெடுத்து அவைகளின் மூலமாக நாம் நம்முடைய வரலாற்று இருப்பை தெரிந்து கொள்கிறோமோ அது போலவே இது போன்ற டப்பாங்குத்து படங்களையும் தாண்டி அமைதியாக அமர்ந்து சிறிது சமூக கண்ணோட்டத்துடன் ஆராய்ச்சி செய்து எடுக்கபடும் படங்களையும் பார்த்து ப்ரக்ஞையுருவதும், அதன் பொருட்டு சிறிது அக்கரை காட்டுவதும் இளைஞர்களாகிய நமது கடமைதானே?

என்னுடைய பார்வையில் இது போன்ற எதார்த்த வாழ்வை பற்றி (Satyajit ray, Thakazhi Sivasankara Pillai, Adoor Gopalakrishnan போன்றவர்களும், தமிழகத்தில் இருந்தவர்களும்... இன்று தலையெடுக்க எத்தனிக்கும் சேரன்களையும், பச்சான்களையும், பாலாக்களையும் இந்த காட்டாற்று வெள்ளத்தில் போக விட்டுவிடாமல் சிறிது நம்பிக்கை அளிப்பதும் நமது கடமையே..) சித்தரிக்கும் படங்களும் பெருமளவில் ஊக்குவிக்கப்படுவதின் ஊடாக ஒரு சமூகத்தின் கிடைக்கற்கரிய விசயங்கள் போற்றி பாதுகாக்கப் படுகிறது என்பேன்.

கீழே Satyajit Ray பற்றி மற்ற ஒருவரும், அவரும் கூறுவது இது போன்ற மெதுவாக நகரும் படங்களைப் பற்றி...

... Like Renoir and DeSica, Ray sees that life itself is good no matter how bad it is. It is difficult to discuss art which is an affirmation of life, without fear of becoming maudlin. But is there any other kind of art, on screen or elsewhere? "In cinema," Ray says, "we must select everything for the camera according to the richness of its power to reveal...

Pauline Kael, Film Critic.


படித்தவர்களே நாம் இப்படி சிந்திக்கும் பொழுது, பிறகு எப்படி அந்த ப்ரக்ஞைகளிலிருந்து அப்பாற்பட்டு நிற்கும் ஒரு சாதாரண குடிமகனுக்கு விழிப்புணர்வேற்ற முடியும்? இந்த டின்சல் சினிமா உலகினை ஒரு பணம் பண்ணும் தொழிற்சாலையாக மட்டும் எண்ணாமல் அவ்வப்பொழுது சமூக நோக்கோடு குறைந்தப்பட்சம் போசவோ, அல்லது சிறிது செயலிலும் காட்ட எத்தனிக்கும் பொழுது, ஆஹா! எது போன்ற விமர்சனங்களையெல்லாம் சமாளித்து மேலே எழும்ப வேண்டியிருக்கிறது... இதுவும் இதில் தான் அடங்குமோ...



P.S: இது தொடர்பான தருமியின் சுட்டியில் பயணித்து கண்டிப்பாக அவரது பதிவையும் படித்து விடுங்கள்.

ரொம்ப பிரயோசனமான பதிவு... "8 M.G.R.>ரஜினி>விஜய்..??? "

Tuesday, July 03, 2007

எப்பொழுதும் ஏழரை இப்ப *எட்டு* பாகம் - II

இன்னும் எட்டுல மூணே முடிக்கலைல்லே, அப்புறம் எப்படி நான் நாலுக்குப் போறது. என்னது இன்னும் அந்த மூணே படிக்கலையா அப்ப இங்கே ஏறி அங்கே இறங்கி சமர்த்தா படிச்சிட்டு வந்திருங்க, ப்ளீஸ்.

என்னடா இவன் மூணைப் போட்டு இந்த இழு இழுக்கிறானேன்னு நினைக்காதீங்க. அதிலதாங்க நிறைய திருப்பு முனையான விசயங்கள் என் வாழ்க்கையில் நடந்துச்சு. இப்ப விசயத்துக்கு வருவோம். அப்படியே படிச்சி கிடிச்சு ஃபெயிலாப் போன அந்த ஒரு பாடத்தையும் எழுதி பாஸு பண்ணி வைச்சிருந்தேன்.

இதற்கிடையில் என்னத்தடா இனிமே படிச்சி வேலை தேடின்னு நினைக்க வைக்கிற மாதிரி கொஞ்சம் வீட்டுக்குள்ள வேற அடுத்தடுத்தப் பசங்க ரெடியாகிட்டானுங்க. கல்லூரி வாசல மிதிக்க. நான் அவங்களுக்கு இடம் கொடுக்கலாமின்னு நினைச்சு, என் முடிவ என் அண்ணன் கிட்ட சொன்னேன், அவரும் முதல் முறையா என் வாழ்க்கையே திருப்பிப் போடுற மாதிரி ஒரு அறிவுரை கூறினார். தம்பி இப்ப இருக்கிற குடும்ப கஷ்டத்தப் பாத்து பயந்து கிடைக்கிறதெ விட்டுறாதே, மேலே படி அதுவும் ஏதாவது வித்தியாசமான்னு சொன்னாரு.

திரும்பவும் எனக்கு வந்துருச்சு வேகம். அந்த வருசம் தி ஹிண்டுவில வந்த அத்துனை வெளி மாநில கல்லூரிகளுக்கும், பல்கலை கழகங்களுக்கும் வித்தியாச வித்தியாசமான முதுகலை பட்டப் படிப்பு என்ன இருக்கோ அதுவாப் பார்த்து அப்ளை பண்ண ஆரம்பிச்சேன். அதில் ஒரு பஞ்சாப் கல்லூரியும், திருப்பதி பல்கலை கழகமும் அடக்கம் (Microbiology, Virology etc.,). அவ்ளோ த்தீ உள்ளர.

திடீர்னு ஒரு நாள் மயிலாடுதுறை ஏ.வி.சி.சி கல்லூரியில இந்த மாதிரி எம்.எஸ்ஸி wildlife biology முதுகலை பட்டப் படிப்பு இருக்காமான்னு விளம்பரம் வந்துச்சு. சரி விடுன்னு விண்ணப்பம் தருவிச்சு அனுப்பியிருந்தேன். நுழைவுத் தேர்வு எழுத கூப்பிட்டுருந்தார்கள். நான் போன பேருந்திலேயே என்னோட இன்னொரு +2 படிச்சவரும் இருந்தார், அவரும் அங்கேதான் போயிட்டு இருக்கார்.

எழுதினோம் இரண்டு பேரும். தேர்ந்தெடுத்தாங்க. அது தாங்க எனக்கு பிள்ளையார் சுழி போட்ட மாதிரி. அன்னைக்கு என் காலில் கட்டிய சக்கரம்தான் மேற்குமலைத் தொடர்களின் எல்லா வாசல்களிலும் நுழைந்து இந்தியாவின் எல்லை வரை எடுத்துட்டுப் போயி, வால்பாறையில் வைத்து ஒரு வெள்ளைக் காரியுடன் ஒரு காட்டுத் தனமான காதலில் விழுந்து அது பிறகு உலகின் சில இடங்களுக்கு செல்லுமளவிற்கு இட்டுச் சென்றது அந்தச் சக்கரம்.

இப்ப ஞாபகம் இருக்கா இந்தக் காட்டான் எ,பி,சி,டி கிணத்துக்குள்ளே இருந்து மக்கடிச்சவன் ஒரு பி.எச்டி தீசிஸ் எழுதுற வரைக்கும் வளர்ந்துட்டான் இந்த பாயிண்ட்ல. இதில ஆங்கிலத்திலதான் பேசிவேங்கிற மாதிரி ஒரு சின்ன குட்டிப் பையன் வேற. எம்பூட்டுத் தூரம் போயாச்சு. திரும்பிப் பார்த்தா 2200மீட்டர் பெருங்குன்றை உட்காராம ஒரே மூச்சுல ஏறி முடிச்ச மாதிரியில்ல இருக்கு.

(நாலு). எம்.எஸ்சிக்கு ஒரு ஆறு மாசம் களப்பணி உண்டு நான் படிச்ச வனவியல் படிப்புக்கு. அதுக்கு டாப்ஸ்லிப் ஏரியாவை தேர்ந்தெடுத்து, காட்டெருமைகள் மேல ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்தேன். அங்கே வைச்சுத்தான் ஒரு நாள் எதார்த்தமா என் வருங்கால ப்பி.எச்டி அட்வைசரை (டாக்டர் அஜித் குமார், அப்ப அவரு யாருன்னே தெரியாது எனக்கு), அவரு அவரோட டேராதூன் மாணவர்களுடன் களப்பணிக்கு வந்திருக்கும் பொழுது சந்திக்க நேர்ந்தது. சும்மா ஆர்வக் கோளாறு வந்து எனக்குள்ள சந்தேகத்த யாரோ என் அறைக்கு வெளியே இருந்து நம்ம சப்ஜெக்ட் பேசுறாங்களேன்னு போயி பார்த்தா இவரு உட்கார்ந்து இருந்தார். என் சந்தேகத்தை கேட்டேன். அவரும் ஆர்வமா விளக்கினார்.

பின்னாலே இரண்டு வருஷம் கழிச்சு நான் தேசீய அளவில நடந்த Jனியர் ஆராய்ச்சி மாணவன் நுழைவுத்தேர்வுல கலந்துகிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டப்ப யாருடா அதுக்கு முதன்மை அறிவியலர் (principle scientist)ன்னு பார்த்தா நான் ஏதோச்சையாக சந்திச்ச நம்ம டாப்ஸ்லிப் ஆசான். அவருக்கும் ஆச்சர்யம் நேர்முக தேர்வில் என் பின்புலத்தை கேட்டப்ப. டாப்ஸ்லிப் சந்திப்பு கண்டிப்பாக அவரின் மனதை விட்டும் அகலவில்லை.

(ஐந்து). முதுகலை முடிச்சுட்டு வீட்டுக் போன முடிஞ்சது கதைன்னு, ஒரு சீனியர் மூலமாக கெஞ்சிக் கூத்தாடி பொள்ளாச்சியில மையமாக கொண்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான "டைகர் நேச்சர் கிளப்"ல என்னைய Ecologistஆ தள்ளிவிட்டாங்க. அதனை நடத்தின அந்த நபர் ஒரு டூபக்கூர் பார்ட்டின்னு பின்னாலே தான் தெரிய வந்தது. என்னைய பொள்ளாச்சியில இருக்கிற முக்கிய வர்த்தக இடங்களுக்கெல்லாம் கூட்டிட்டுப் போய் அந்த நிறுவனத்தின் உறுப்பினர் கிட்டயெல்லாம் இவருதான் நம்ம நிறுவனத்தின் சயிண்டிஸ்ட்ன்னு:-P அறிமுகப் படுத்திவைச்சுட்டு, வசுல அவரு கரெக்டா பாக்கெட் பண்ணிக்குவார் போல.

எனக்கு டாப்ஸ்லிப்ல எப்படியோ தங்க ஒரு இடம் வன அதிகாரிங்கிட பேசி பிடிச்சுக் கொடுத்தார். அங்க உள்ள மெஸ்ஸில சாப்பிட்டுக் கோங்க நான் அக்கவுண்டை கவனிச்சிக்கிறேன்னு சொல்லிட்டு ஆளு எஸ்கேப்பூ. அங்க பணம் கொடுப்பாரோ இல்லையோ, தினமும் பொள்ளாச்சியில இருந்து வார பேருந்துல டைகர் நேச்சர் கிளப்பின் சயிண்ட்டிஸ்க்கு (யாரு நம்மதான்) தவறாம, இருக்கிற அத்துனை நாளிதழ்கள், வார, இரு வார மகஜின்கள் என்று தினமும் சப்ளை நடந்தது.

கீழே இருந்து திருப்பூர் பனியன் கம்பெனி வாலாக்களிலிருந்து மத்த கவுண்டர் குடும்ப ஆட்கள் வரை மேலே வரும் பொழுது என்னை "கைடு" வேலைக்கு அட நம்ம நிறுவன சயிண்ட்டிஸ்ட்னு அள்ளிப் போட்டுக் கொண்டு அங்குள்ள ஜீவராசிகளை சுட்டிக் காட்ட அழைத்துச் செல்வார்கள்.
இவ்வளவுக்கும் சம்பளம் ரூபாய் 500. இன்னமும் டாப்ஸ்லிப் ரேஞ்சர் எல்லார்கிட்டயும் சொல்லி சிரிக்கிறாராம் நான் அங்க இருந்தப்ப இரண்டு மாத மெஸ் பாக்கின்னு. இது கூட எனக்கு இப்ப ஒரு இரண்டு மாதங்களுக்கு முன்னால் சென்றப்பத்தான் தெரிய வந்தது.

அந்த "தங்களின்" போதுதான் எனக்கு "தனிமையின்" அவசியம் புரிய ஆரம்பித்தது. பெரும்பாலான நேரங்களில் தனியாகவே கரியஞ்சோலையின் வழியாக நடந்து சென்று அங்குள்ள வாட்ச் டவரில் நிறைய நேரம் அருகமையே உள்ள ஒரு சின்ன நீர் தொட்டியை(water hole) இலக்காகப் பார்த்து அமர்ந்து விடுவதுண்டு. கோடையில் விலங்குகள் தண்ணீர் பற்றாக்குறையின் போது அங்குதானே வரும், அங்கு வைத்துப் பார்ப்பதற்கு ஏதுவாக அந்த தொட்டி. அந்த அனுபவம் எத்துனை கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்கறிய. அது மற்றுமொரு உந்துதல் பலகையாக பின்னாலில் அமைந்தது என்றால் அது தான் உண்மை.

கொஞ்ச நாட்கள் கழிச்சு இது சரிப்பட்டு வராதுப்பான்னு என்னாட வழி இதிலிருந்து மீண்டு கொஞ்சம் நல்லபடி இருக்கன்னு பார்த்தப்பத்தான். முதுமலையில இருக்கிற IISC., CES களப்பணி மையத்தில இருந்து களப்பணியாற்றுவதற்கு ஒரு ஆள் தேவைப்பட்டது தெரிஞ்சது. தலை தெறிக்க ஓடி அங்ஙன விழுந்தேன்.

(ஆறு). அங்கதான் இரண்டாவது(எங்க லைன்ல) பெரிய ஆள இந்தியாவில சந்திச்சேன். முதல்ல நான் டாப்ஸ்லிப்ல சந்திச்ச என் ப்பி.எச்டி அட்வைசர் டாக்டர். அஜித் குமார் இவர் காம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில இருந்து இந்திய சிங்க வால் குரங்குகளின் மீது ஆராய்ச்சி பண்ணி ப்பி. எச்டி பண்ணவர். ஒரு பெரிய குரங்கு ஆராய்ச்சி நிபுணர் இந்தியாவிலிருந்து - உலகத்தில எல்லாருக்கும் தெரியும் இந்த லைன்ல இருக்கவங்களுக்கு. இந்த IISC., களப்பணியில சேர்ந்தப்ப அங்க இரண்டாவது பெரிய ஆள் யானைகளின் மீது ஆராய்ச்சி நடத்துரவர் டாக்டர் சுகுமாரை சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது.

இதுக்கிடையில் சும்மா கை பரபரக்க எ.ஜே.ட்டி ஜான்சிங், ஆசாட் ரஹ்மானின்னு, ஈஸ்வர் ப்ரகாஷ் யாரெல்லாம் இந்தியாக்குள்ள பெரிய வனவாழ் ஜீவராசிகள் ஆராய்ச்சியாளர்கள் இருக்காங்களோ அவங்களுக்கு நான் யாரு, எவருன்னு சொல்லி வேலை கேட்டோ இல்லைன்னா நான் தனியாக குஜாராத்தில் இருக்கும் சவுக்கு நில காட்டுக் கழுதைகளின் மீது ஆராய்ச்சி செய்யணுமின்னு ப்ரியப் படுறேன் எனக்கு நிதி உதவி கிடைக்குமான்னு கல்லெறிஞ்சு பார்க்கிறது சொந்தக் கடுதாசி மூலமாக. பிரிதொரு நேரத்தில் அவங்கெல்லாம் எங்காவது நான் சந்திக்க நேரும் பொழுது கண்டிப்பாக என் பெயரை கேக்கும் பொழுது ஞாபகத்தில் நிக்கிற மாதிரி அந்த கடுதாசி இருந்ததை சொல்லி கேட்டதுமுண்டு.

இதினாலே என்னாடா தெகான்னு கேட்டா. அட, அய்யாக்களா இவங்கள எல்லாம் சந்திச்சப்ப நான் தெரிஞ்சுக்கிட்ட விஷயம், எளிமை இவ்வளவு பேரு எடுத்துருந்தாலும், பொண்டாட்டியோட சமையல் கட்டுல நின்னு உதவி பண்றது. தான் சாப்பிட்ட தட்டை தானே கழுவி வைக்கிற டீசன்சி. தன் குழந்தைகள குளிப்பாட்டி விடுறதுன்னு வாழ்க்கையை வாழவும் கத்துக் கொடுத்தாங்க. அது.

(ஏழு). இப்ப நம்ம காதல் கதை. நம்மூர்ல, இருக்கிற ஜாதிக்குள்ள இன்னமும் உப ஜாதியா இருந்தாக் கூட இல்லவே இல்லைன்னு மறுத்து திருமணத்துக்கு ஒத்துக்காத காலக் கட்டத்தில நான் போயி இனம் விட்டு இனம்(race) திருமணம் பண்ண சம்மதிக்க வைக்கணுமின்ன ச்சும்மாவா. ஆத்தாவும், அம்மாவும் விட்டேனா பாருங்க, நான் சின்ன வயசில ஸ்கூலுக்கு இழுத்துட்டுப் போறப்ப எடுத்துகிட்ட கடிக்கிற டிரைனிங் ;-), கிணத்துக்குள்ள இறங்கி எ.பி.சி.டி படிச்ச கெட்டிக்காரத்தனமெல்லாம் பயன்படுத்தினதுனாலே, அந்த நேரத்தில வெற்றி நம்ம பக்கம்தான். பிறகு எல்லோரும் குடும்பத்தோட "மார்ஸ் அட்டாக்" படம் பார்த்திட்டு வெளியே வந்தப்ப அம்மா பயந்து மிரண்டு போயி தம்பி நீ எப்படிடா தனியாள போயி அங்கே(அமெரிக்காவில) சமாளிக்கப் போறேன்னு கேட்டு பீதியக் கெளப்புற அளவுக்கு உண்மையான காட்டானகவே இருந்திருக்கேன்.

இருந்தாலும் என் அம்மாவும் அப்பாவும் போன பிறவியில வெள்ளைக் காரய்ங்களா பொறந்துருப்பாங்களோன்னு அப்பப்ப சந்தேகம் வருது. நான் அடிக்கிற கூத்துக்கெல்லாம் உடன் பட்டு, என்னைய விட்டுப் பார்த்து அதில இருந்து கிடைக்கிறதெ பகிர்ந்துக்கிற அளவிற்கு முதிர்ச்சி எங்கேயிருந்து வந்தது? இன்னமும் கேட்டுக் கிட்டுத்தான் இருக்கேன் அந்தக் கேள்விய. அந்த விசயத்தில் நான் கொடுத்து வைச்சவன். I do love my parents dearly.

இந்த திருமணத்தில என்ன சாதனைன்னா, "சுய பரிசோதனை"ங்கிறது ஒவ்வொருவருக்கும் எவ்ளோ முக்கியமின்னு தெரிஞ்சுக்கிட்டதுதான். எல்லாத்தையும் எனக்கு நானே சொல்லிக் கொடுத்துக்கிட்டு தெரிஞ்சுக்கணுமின்னு, ஏதோ ஒண்ணு என்னை பிடிச்சு தள்ளிக்கிட்டே இருந்துச்சு. இன்னும் அந்த "தனம்" இருக்கு. இந்த கரடு முரடான பாதையின் மூலமாக எனக்கு கிடைச்ச ஒரு சந்தோஷம் என் மகன். :-). இதுவும் சாதனைதானே?

(எட்டு). நான் அமெரிக்கா வந்தப்பெல்லாம் இம்பூட்டு சாஃப்ட்வேர் மக்கள்ஸ் இல்லை இங்க. இப்பத்தான் எங்கே நான் இருக்கேன்னு தெரியாத அளவிற்கு நிறைய இளம்தாரி புள்ளைகள பார்க்க முடியுது. என் முதல் வேலை இங்க வந்தவுடன் பார்த்தது ஒரு விரைவு உணவகத்தில் அதுவும் கடை மூடுற ஷிஃப்ட், விடிகாலை மூன்று மணிக்கு துடைச்சு, மொழுகி, கடையடைச்சுட்டு பனிக்காலங்களில் மிதிவண்டி அழுத்த முடியாதாகையால் கால்நடையாக சில நேரங்களில் முழங்கால் முழுக சரக் சரக்கென்று கொட்டிக் கிடக்கும் snowவின் ஊடே நடந்தே வீடு சேர்வது. சேர்ந்த புதிதில் நிறைய நின்று வேலை செய்தும், டேபில் துடைச்சு பழக்கமில்லாததாலும் இந்திய அசட்டுத் தனத்தில், பாத்ரூம் உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டு அழுததுண்டு.

இப்பொழுது நினைத்தால் நான் எவ்வளவு spoilt bratஆக இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன் என்று புரிகிறது. ஆனால் அந்த வேலையின் மூலமாக நான் எப்படி corporate(capitalistic) america வேலை செய்கிறது என்பதனை அறிந்து கொண்டேன்.

வந்த புதிசில இங்க உள்ள நிறைய பல்கலை கழங்களுக்கு போக வாய்ப்பும் கிடைத்தது. அப்படி கிடைச்சப்ப என் தீஸிஸ் எழுத நிறைய ரிபஃரென்ஸ்க்கு அங்குள்ள நூலகங்களையும் பயன் படுத்திக்க முடிஞ்சுச்சு. எப்படி உண்மையான அறிவியல் உலகம் இந்த உலகத்தில் இயங்குகிறதென கண்கூடாக பல அறிவியல் கான்ஃபரென்ஸ்களில் காண நேர்ந்தது.
இங்கும் அதே பல்லவியே பாடப்பட்டது (brown nosing, internal politics, references etc., etc.,). விடாது இந்திய வன ஆராய்ச்சித் துறையில் முனைவர் பட்டத்துடன் இங்கு கணிதத்தை தவிர வேறு எது கொடுத்தாலும் அடித்து விளையாடும் சொந்த நாட்டுக் காரர்களுடன் பேசிச் ஜெயிப்பது என்பது கொம்பாகவே எனக்குப் பட்டது. சிறிது காலங்கள் மோதி விட்டு, எனது ஆர்வத் துறையிலிருந்து நிறைய மாற வேண்டி இருந்ததால்(compromise), துறைசார் வேலையை கொஞ்சம் தள்ளிப் போட்டு விட்டு இப்பொழுது எனக்கு நானே சம்பளம் கொடுத்துக் கொள்வதாக வாழ்வை அமைத்துக் கொண்டது.

சரி முடிச்சுடறேன். இதிலிருந்து என்ன தெரிஞ்சுக் கிட்டேன் வாழ்க்கையைப் பற்றின்னா. ரொம்பச் சிம்புல். நீ யாரோ அதுவாகவே இரு. பேப்பர் ரோஸ்டை (அட தோசைங்க) அமெரிக்காவில் இருக்கிறேன் என்பதற்காக fork and knifeவைத்து சாப்பிட்டு உன்னையே காமெடியன் ஆக்கிக்கொள்ளதே :-). படிப்பு என்பது உன் கண்களை திறந்து காட்டி, சிந்திக்க வைப்பதற்கு மட்டுமே அந்த பட்டையங்களை ஈன்று விட்டதின் மூலமாக நான் அதி புத்திசாலியாகிவிட்டதாக பொருள் கிடையாது. அடக்கம் அமரருள் உய்க்கும்.

அட ஆமாமில்ல எட்டு பேர நான் பரிந்துரைக்கணுமில்ல:

மதி கந்தசாமி
நவன்
சுந்தர வடிவேல்
குமரன்(Kumaran)
செல்வ நாயகி
ஞானசேகர்
மங்கை
சுகா

யம்மாடியோவ். தண்ணீ ப்ளீஸ்.

Monday, July 02, 2007

தருமிக்கு ஓர் வாழ்த்துச் செய்தி...!

இன்று திருமண நாள் காணும் திரு சாம் என்ற தருமிக்கு என் மனமார்ந்த *திருமண நாள்* வாழ்த்துக்கள்.
























தம்பதியர் வாழ்க! வாழ்க!! பல்லாண்டு வாழியவே... என்று வாழ்த்தும் மாணவர்களின் ஒருவன் --- காட்டான்ஸ்.

எப்பொழுதும் ஏழரை இப்ப *எட்டு* பாகம் - I

இதுக்கு மேலேயும் நான் காத்துகிட்டு இருந்தேன்னு வைச்சுக்கோங்க ஏதாவது பார்சல்ல எனக்கு அனுப்பி வைச்சுடப் போறாங்க இந்த ஜோதியில கலந்துக் கொள்ளச் சொல்லி கூப்பிட்டுருந்தவர்கள்.

அது என்னமோ தெரியலை என்னையும் மனசில நிறுத்தி மூணு பேரு கூப்பிட்டு இருக்காங்கப்பா. முதலில் கப்பிப் பய கத்தியிருந்தார் இங்கே, பிறகு கவிதா கூவியிருந்தார் இங்கே, கடைசியா நம்ம தருமி கர்ஜித்து இதுதான் உனக்கு மருவாத அம்புட்டுத்தேன், வந்து உள்ளேன் அய்யா சொல்லிட்டு ஓடிப்போன்னு சொன்னதுக்கப்புறமும் வரலைன்னா சரியா வருமா வராது அதான் வந்துட்டேன். இனிமே இது உங்கப் பாடு.

(ஒண்ணு). எங்கே ஆரம்பிக்கிறதுன்னே தெரியலையே. சரி நான் செத்து பொழச்சவண்டாங்கிறதில இருந்து ஆரம்பிப்போம். ஏன்னு கேளுங்க நான் பொறந்தப்பா உசிரோட இருப்பனான்னே நிறைய பேருக்கு சந்தேகமா இருந்துச்சாம். என் பாட்டி சொல்லும் மண்டை மட்டும்தான் இருந்துச்சு மரைக்கா மாட்டமின்னு (தலைபிரட்டை மாதிரி - பாருங்க அப்பவே நான் இயற்கை நேசியா இருந்திருக்கேன் :-) ).

எப்படியோ, அப்படி இப்படின்னு தட்டி கிட்டி அந்த தலைபிரட்டை ஸ்டேஷ்ல இருந்து "துணைவன்" ஸ்டேஷ்க்கு கொண்டுவந்து விட்டுடாங்க. ஏன் துணைவனா, இதுக்கப்பறம் இவன் பிழைச்சா தம்புரான் செயல்னு முருகன்டே நேந்துக்கிட்டாங்களாம். அதான் அந்தப் பட்டப்(பட்டுப் போன?!) பெயர். அந்த பேருக்கு மரியாதை கொடுக்கும் வண்ணம் பின்னாலே என் மண வாழ்க்கையும் அமைஞ்சுச்சு அதனையும் சொல்றேன்.

(இரண்டு). பள்ளிப் பருவத்தப் பத்தி சொல்றதா இல்லையா. சொல்லாம விட்டா நிறைய விட்டுப் போகுமில்லை. சரிங்க, ஒன்னாப்புல இருந்து மூனாப்பு வரைக்கும் யாரும் என் கிட்ட நெருங்கி ஸ்கூலுன்னு சொல்லவே பயப்படுவாங்களாம். அப்படியே இருந்தாலும் ரெண்டு பேரு தரத்தரன்னு இழுத்து கொண்டுபோய் விடணுமாம், அப்ப இரண்டு பக்கமும் திரும்பி திரும்பி கடிச்சி எல்லாம் வைப்பேனாம்.

பள்ளிக்கூடம் சும்மா பேருக்குத்தான் "அரசாங்க ஆரம்பச் சீரணிப் பள்ளியோ" என்னமோ பேரு. இப்ப என்ன, சொல்லிப்பிடறேன், யாராவது என்னைய தம்பி உனக்கு எ.பி.சி,டி தெரியுமாடான்னு கேட்டுப் புட்டா அடுத்த முறை அவரு என்ன பார்க்க பல மாதங்கள் ஆகலாம். ஒரு முறை என் மாமா ஒருத்தர் பிடிங்கடான்னு என் தம்பியையும், என் சகோதரியையும் விட்டு 500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஓடுற கணக்கா ஓடுன என்னைய துரத்திப் பிடித்துக் அமுக்கி கொண்டுவந்து அவரு கையில ஒப்படைச்சாங்க. அன்னிக்கு கொஞ்ச நேரம் கூடையில அமர்த்தி கிணத்துக்குள்ள இறக்கி வைச்சாங்க, மனப்பாடம் பண்ணேன், 26 லெட்டர்ஸையும். சாதனை, இல்லையா.

பிறகு பத்தாம் வகுப்பு பரிட்சை. தகிடு தத்தம் போட்டு கடம் அடிச்சி, அடிச்சி பாஸுக்கு மேல பண்ணிப்புடுவேன்னு எழுதி இருந்ததிலே, முதல் நாள் சாயந்திரம் வந்த "மாலை முரசில" எப்படியோ 75ல இருந்து 80க்கு கிடையில் போட வேண்டிய ஹைஃபென்(-) இல்லாம போனதால நான் பெயிலு. இரவு பதினோரு மணி வரைக்கும் வீட்டுக் போறதா வேண்டாமான்னு உட்கார்ந்து இருக்கும் பொழுது அப்பா வந்து "அட வாடா இதுக்கு போயி அலட்டிக்கெல்லாமான்னு" வீட்டுக்கு கூட்டிட்டுப் போயி எல்லோரும் வெளிய படுத்திட்டு என்னைய மட்டும் பத்திரமா உள்ளேயே வச்சுப் பார்த்துக்கிட்டாங்க.

இருந்தாலும் மறுநாள் காலையில ஒரு சின்ன நம்பிக்கை, எங்க மத்த நாளிதழ்களெ எப்படி இருக்குன்னுப் பார்ப்போமின்னு "தினகரன்" வாங்கிப் பார்த்தா... பார்த்தா.... ஆத்தா நான் பாஸாகிட்டேன்னு வயல் வரப்பில ஓடிட்டு சொல்ற கணக்கா நான் கண்ணு முண்ணு தெரியாமா மிதிவண்டிய அழுத்திகிட்டே போயி எங்க கடையில இருந்த அத்தனை கஸ்டமருக்கும் யோவ் அப்பா எல்லோருக்கும் இலவச ட்டீய போட்டுக் கொடுக்கச் சொல்லுமய்யான்னு ஆர்டர் போடுற அளவிற்கு இன்ப அதிர்ச்சியில மிதந்ததை சொல்லவா.

கணக்க நினைச்சாலே கண்ணு கட்டுனதுனால +2வில ப்யூர் சயின்ஸ்தான் படிப்பேன்னு, ITIதான் உன் வசதிக்கு முடியுமின்னு படிச்சவங்க என்ன சுருட்டிப் போட நினைச்சும், அழுது புரண்டு +2வும் சேர்ந்தாச்சு. அப்பத்தான் அய்யாவுக்கு பர்சனாலிட்டி ப்ரக்ஞை துளிர்விட ஆரம்பிச்ச நேரம் (வயசுக்கு வந்தாச்சில்ல:-).

உடனே ஒடம்ப தேத்தணுமின்னு தமிழ்வாணன் பிரசுரத்தில இருந்து அயிரம் எப்படிகளிலிருந்து "கரத்தே கற்றுக் கொள்ளுங்கள்" VPP மூலமாக தருவிச்சு பணம் டெலிவரியப்ப கொடுக்கிற மாதிரி செஞ்சுருந்தேன். புத்தகமும் வந்துச்சு. அப்பா தான் கடையில இருந்தார். புத்தகத்தையும் பிரிச்சு பார்த்தார். பணத்தை கொடுத்துட்டு, கடுப்பாகி "புல்தடுக்கிப் பயில்வான் மாதிரி இருந்துக்கிட்டு ஏண்டா உனக்கு இந்த வேலை" அப்படின்னுட்டு என்கிட்ட கொடுத்துட்டார். உள்ளர சந்தோஷம் இருந்திருக்கமலா இருந்திருக்கும், அப்பாவுக்கு.

அது என் நண்பர்கள் வட்டத்திற்கு வர இன்னமும் ஊர்ல சில பேர் என்ன செல்லம கூப்பிடுற பேரு "புல்தடுக்கி பயில்வான்." பிறகு சாயந்திர வேளைகளில் ஆ, ஊன்னு கை கால்களை மாத்தி, மாத்தி காத்தில் உதைப்பதை பார்த்து எங்க பாட்டி (ஆத்தா)விலிருந்து, வீட்டுக் கோழிவரை என் பக்கமே வராமல் "அடியே ஒமவனுக்கு என்னமோ ஆயிப்போச்சுடின்னு" சொல்லிக்கிட்டு திரியற அளவிற்கு பாடி பில்டிங் நடந்துச்சு ஒரு நாலு வாரத்துக்கு.

(மூணு). படிப்ப சீரியச எடுக்க அரம்பிச்சது கொஞ்சம் +2விலதான்னு நினைக்கிறேன். ஆனால் அது நாள் வரைக்கும் இங்கிலிபீஸ்னாவே வேப்ப மரந்தான் என் ஞாபகத்துக்கு வந்தது. பள்ளிய முடிச்சுப் போட்டு திருச்சிப் பக்கம் கொண்டு போய் தள்ளிவிட்டுட்டு வந்திட்டாங்க பட்டப் படிப்பிற்கென.

அங்கேயும் கணிதமில்லாத பாடந்தே வேணுமின்னு விலங்கியல் எடுத்தேன். ஆனால், ஆங்கில வழி கல்வியாப் போச்சே. சமாளிச்சேன். அங்கேதான் வாழ்க்கையைப் பற்றிய ப்ரக்ஞை கொஞ்சம் எட்டிப் பார்க்க ஆரம்பிச்சது. ஹாஸ்டல் கிடைக்காம மன்னார்புரத்தில குமார் லாட்ஜில் தங்கி, சாப்பாட்டுக்கு இங்கயும் அங்கயும் அலைஞ்சு, அதுக்கிடையிலேயே, என். எஸ்.பி ரோடு போயி கலர் பார்த்து, ஐஸ்க்ரீம் சாப்பிட கத்துகிட்டு, விடாம குரூப் குரூப்பா சினிமா போயி யாரையும் சினிமா பார்க்கவிடாம தருதலத்தனம் பேசி...

இப்படியே போயிக்கிட்டுருந்த வாழ்க்கை கடைசி செமஸ்டர்ல அலட்சியமா மரபியல், சைட்டோலஜி மற்றும் பரிணாமப் பேப்பர்ல ஜஸ்ட் மிஸ்ஸிடு மூணு மார்க் ரீதியில ஃபெயிலாப் போயி, வீட்டுல ஒரு வருசம் உட்காரப் போயி, நிஜம் இன்னமும் சுட ஆரம்பிச்சது. அடுத்தது என்னான்னு புரியலை. வீட்டுல ஏற்கெனவே ஒரு எம்.எஸ்சி குத்த வைச்சு உட்கார்ந்து இருக்க அதே சமயத்தில் இப்ப நான் வேற. அப்பத்தான் உணர ஆரம்பிச்சேன், ஆங்கிலம் இல்லைன்னா உலகத்தில ஒண்ணுமில்லையோன்னு. ஆங்கில கிறுக்கு பிடிக்க ஆரம்பிச்சுச்சு.

ஊரில் வந்த தி ஹிண்டு, ஸ்போர்ட்ஸ் ஸ்டார், Fரண்ட் லைன், பழைய ரீடர்ஸ் டைசஸ்ட்னு அப்பா சக்திக்கும் மீறி தினமும் பரிட்சைக்கு படிக்கிற மாதிரி ஆங்கில டிக்சனரியும் கையுமாய் ஒரு நாளைக்கு நான்கு ஐந்து மணி நேரம் மேய ஆரம்பித்தேன் ஒரு வேப்ப மரத்தடிக்கு கீழே அமர்ந்து.

பிறகு இரவு முழுக்க ரேடியோவை தலைக்கு பக்கத்தில வைச்சுக்கிட்டு, voice of america, radio masco அப்படி இப்படின்னு sw2ல போட்டு விடிய விடிய கேக்கிறது. திரும்பவும் ஆத்தாதான் எல்லார்கிட்டயும் பொழம்பித் தள்ளும், எங்கடி அவன் தூங்கிறான் ரா முழுக்க என்னாதான் அந்த ரோடியோ பொட்டியில இருக்கோ அதப் பிடிச்சு நோண்டிக் கிட்டே இருக்கான்னு சொல்லும். அதனை இன்னமும் அப்பாவும், அம்மாவும் எனது கடின உழைப்பிற்கு கீழே அந்த நாட்களை சேர்த்துக் கொள்வார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலம் பிரியற மாதிரி இருந்துச்சு.

பிறகு ஒரு மன நோயாளி கணக்கா கொல்லைக்கு போறப்ப, வாரப்ப, தனியா நடந்து திரியறப்பன்னு எனக்கு நானே ரெண்டு காரெக்டர்வச்சுக்கிட்டு (hi, how are you - i am fine) கேள்வியும் நானே பதிலும் நானேன்னு பேச்சு ஆங்கிலத்த வளர்த்துக்க பேசித் திரிவேன்.

இருந்தாலும் பாருங்க, உச்சரிப்பு இன்னமும் கைகூடலை. அதுவும் நம்ம ரேடார்ங்கிற ப்ரக்ஞைக்கு கீழே வராத நேரம். அது தொடர்ப நிறைய அசிங்கப் பட்டதுமுண்டு.அதுக்கு ஒரு உதாரணம் Pony Horseக்கு Bony Horseன்னு சொல்லி எல்லாரையும சிரிக்க வைச்சது. அது எல்லாருக்கும் சிரிப்பு எனக்கு நெருப்பா இருந்துச்சு. அது எதுக்காக சிரிக்கிறாங்கன்னு தெரியலை. முட்டி மோதி தெரிஞ்சிக்கிட்டப்ப கையில the oxford dictionary pronunciationக்கு உதவி பண்ண வந்துச்சு...

மிச்சத்தை அடுத்த அடுத்தப் பதிவில சொல்லிக்கிட்டே வாரேன்... பதிவு பெருசாப் போயிக்கிட்டே இருக்கு, உடைச்சு உடைச்சுத் தாரேன்...

தொடரும் பாகம் - 2ல.

Related Posts with Thumbnails