Saturday, October 22, 2005

புலம்பெயரவைக்கும் குழந்தை தத்தெடுப்பு முறை-1

சுனாமி போன்ற இயற்கை சீரழிவுகளாலும் ஏனைய பிற சூழ்நிலை காரணங்களாலும் சிறுவர் சிறுமியர் அனாதையாக்கப் பட்ட நிலையில் அவர்கள் அனாதை காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டோ அல்லது தானகவோ தஞ்சம் புகுகின்றனர். இச் சூழ்நிலையிக்கு உட்பட்டு போன அக்குழந்தைகளின் எதிர் காலம் அவர்கள் எது போன்ற நிறுவனத்தில் சென்று அடைகிறார்கள் என்பதனை பொறுத்துதான் அமைகிறது. அண்மையில் ஒரு அனாதை விடுதியிலிருந்து கிளம்பிய சர்ச்சை யாவரும் அறிந்திருக்கக் கூடும். குழந்தைகளை ஆடு மாடுகளை சந்தையில் விற்பது போலவே பணத்திற்காக
விற்று போலி ஆவணங்களையும் தயார் செய்து வெளி நாடுகளுக்கு தத்து கொடுக்கப்படும் குழந்தை எங்கு சென்று எச் சூழ்நிலையில் யாருடன் வாழப் போகிறது என்ற எந்த விதமான ஆராய்சிகளும் அற்ற நிலையில் விலைக்குப் போகும் இந்த பிஞ்சு குழந்தைகள் தான் பெரியவனாக(ளாக) மற்றுமொரு கலாச்சார சூழ்நிலையில் வளர்ந்து, ஒரு நேரத்தில் வந்த பாதையை சற்றே நின்று நிதானித்து பார்க்கும் தருணத்தில் எத்தனை விதமான குழப்ப நிலைகளை கடந்து வந்திருப்பதும், இன்னும் தன்னைப் பற்றிய அடையாள தன்னுணர்வு தாக்கம் மேலோங்கியே இருப்பதையும் உணர்வது மறுக்க முடியாத உண்மை.

இக் குழந்தைகள் வெளிநாட்டு சூழ்நிலையில், வளர்க்கப் படுமிடமும் சிறு ஊராக இருந்து, பெற்றோரும் பொறுப்பற்றவர்களாக அமைந்து, தன்னையொத்த (தோற்றத்தில், நிறத்தில்) சிறுவர் சிறுமிகளும் அற்ற நிலையில் தான் ஒரு காட்சிப் பொருளாக போகுமிடமனைத்தும் உணரவைக்கப் பட்டு பின்னாளில் பல நிலைகளில் தன்னைப் பற்றி மேலும் அறிய நடத்தும் மனப் போரட்டம், தான் யார் என்ற சுய சிந்தனை தன்னை ஒத்த இனத்தவர்களை பார்க்கும் பொழுது மனதில் எழும் உணர்ச்சி, அதனை தொடர்ந்து தனக்கு மட்டும் ஏன் இப்படி நடந்தது என்று காலம் தோரும் உரக்க சப்தம்மிடும் தன் மனச் சினேகிதி(தன்) என்று தனது வாழ் நாள் முழுதும் ஒரு போரட்டமே வாழ்வாக அமைந்து விடுகிறது இவர்களுக்கு.

நாம் பேசிக் கொண்டிருப்பது ஒரு சில குழந்தைகள் தான் தத்தெடுக்கும் பொழுது ஒரளவிற்கேனும் விபரம் தெரியும் வயதில் அப்படி புலம் பெயர்ந்திருந்து தன் விட முயற்சியின் பொருட்டு தனக்கு முன்னமே பரிச்சாயமான மொழியையும் ஏனைய பிற விடயங்களையும் மனக் கண் முன் நிறுத்தி பின்னாளில் கரை சேர்வபவர்களைப் பற்றி.

அவற்றுக்கு மாறாக குழப்ப நிலையிலேயே லயித்து தன் வாழ்வை சூன்யமாக்கி கொண்டவர்களை பற்றியும், அது போன்ற இன்னல்களை நமது அரசங்கமும் ஏனைய காப்பக நிறுவனங்களும் தடுப்பதற்கான வழி முறைகள் என்ன என்பதையும் எனது அடுத்தப் பதிப்பில் பார்ப்போம்.

...தொடரும்.

இதன் இரண்டாம் பாகம் ===> புலம்பெயரவைக்கும் குழந்தை தத்தெடுப்பு முறை-2

1 comments:

கவிதா | Kavitha said...

ஆமா இந்த போஸ்ட் நீங்க எப்ப எழுதநீங்க?

இப்பத்தான் ஆரம்பம் போலவே.. தொடருங்கள் படிப்போம்.. :)

Related Posts with Thumbnails