Tuesday, October 11, 2005

உதவாக்கரை பட்டாதாரிகள்...!

Only musings and more musings from my side until I drain down to the core of my depth...

எனக்கு அடிக்கடி இப்படித் தோணுவது உண்டு வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்ற நியதி மாறி வீட்டிற்கு ஒரு உதவாக்கரை பட்டாதாரி உருவாக்குகிறோமோ என்று. கல்லுரி சென்று ஏதோ "எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு சென்றார்" என்ற தொனியில் கனவுகள் பல சுமந்து தனது சிரமத்தையும்பாராமல் பெற்றோர்கள் அனுப்பும் பணத்தில் ஊர் சுற்றி திரிந்து, தம் அடித்து, வாழும் தெய்வங்களாய் வணங்கப்படும் சினிமா நட்சத்திரங்களின் படங்கள் தோரும் ஒன்று விடாமல் பார்த்து பிறகு ஏதோ தர்மத்திற்கு கிடைக்கும் just pass மதிப்பெண்களை பெற்று பிறகு சுவற்றில் அடித்த பந்தாக மூன்றாவது ஆண்டு முடித்து வீடு வந்து சேரும் இந்த சராசரி (loser)இளைஞனின் எதிர்கால சூன்யத்தை பற்றியது இந்த வலைப்பதிப்பு.

இந்த வகையான இளைஞர்கள் குறைந்த பட்சம் "கலெக்டர்" வேலைக்கு குறைந்து வேறு எந்த வேலையும் செய்ய முடியாது என்று சத்தியமாய் கூறி ஊர்வலா வரும் இவர்கள் ஒரு ஐந்திலிருந்து எட்டு வருடங்கள் வெட்டியாய் இருக்கும் நிலையில் இடை இடையே தான் சொந்த தொழில் தொடங்குவதாய் கூறி வட்டிக் கடையோ அல்லது ஒரு வெட்டிக் கடையோ திறந்து அதனை நண்பர்களின் சாயந்திர நேரக் குழுமுமிடமாகவும் மாற்றி பிறகு அதுவே "Bar" ஆக மாறும் அபாயத்தையும் உண்டுபண்ணிவிடுவார்கள்.

இதற்கிடையே இந்த நவீன நிதி திர(ரு)ட்டு வல்லுனர்கள் திருமண வயதையும் அடைந்து விட்டதால் பெற்றோர்களின் அடுத்த தலைவலி ஆரம்பிக்கிறது. நெட்டையோ குட்டையோ, நொண்டியோ நொடமொ நல்ல வர(ராத)தட்சிணை கொடுக்கும் இடமாய் பார்த்து நம்ம கதாநாயகனை கலுவேற்றியும் வைத்து விடுவார்கள். பிறகென்ன இவர்களையும் நமது சமுதாயம் ஈர்த்து தன்னிலை கொண்டுவிடும்.

இவர்களுக்கும் பிள்ளை குட்டி என்று பிறந்து (ஒன்றுக்கு மூன்றாக மூன்றும் பெண்ணாகிப் போனால் ஆஸ்திக்கென்று ஒரு ஆண் வாரிசு வேண்டுமென்று இடையில் ஒரு இரண்டு மூன்று முறை கருக்கலைப்பும் நடத்தி, ஒரு நான்காவதாகவோ அல்லது ஐந்தாவதாகவோ ஒரு இளவரசனும் பிறப்பான்) இவர்களும் தமது கிடைத்தற்கறியா அறிவையெல்லாம் கொட்டி தனது வாரிசுகளை அச்சு பிறழாமல் தனது தாய் திரு நாட்டிற்கு வழங்கி தான் பெற்றோர்களுக்கு இழைத்த துன்பங்களை எல்லாம் தானும் பெற்று இதுதான் வாழ்க்கை என்று நம்பிச் சாவும் மனிதச் சிம்பன்சிகள்.

இங்கு நான் மனிதச் சிம்பன்சிகள் என்று இவர்களை அழைத்ததற்கு காரணமுண்டு. சிம்பன்சிகள் கூட ஆய்வுக் கூடங்களில் வைத்து நீண்ட நாட்கள் மொழி சார்ந்த கோட்பாடுகளை கற்பிக்கும் பொருட்டு அவைகள் ஒரிரு வார்த்தைகளையும் படம் சார்ந்த குறீயிட்டு உணவு வகைளையும் சுட்டிக் காட்ட கற்றுக்கொண்டு விடுகிறது.

ஆனால் இவர்கள் தனது அண்டை வீட்டு முதியவர் ஒருவர் தனக்கு முன்பே ஒரு ஆண் வாரிசு வேண்டி ஏழு பெண்களை பெற்று எட்டாவதாக ஒரு பையனையும் பெற்று அந்த அப்பா மூன்றாவது பெண்னை கட்டிக் கொடுக்க அலைந்து நாக்கு வெளியே தள்ளி இறந்த கதை தெரிந்தும் அந்தப் பெரியவரின் இளவரசன் இப்பொழுது நாயாகி வீடு வீடாக ஏரி கட்ட பஞ்சாயத்து நடத்தி நடை பிணமாய் வாழும் அந்த பையனை பற்றி அறிந்தும், ஏன் இப்படி?

இது போன்ற hands on அனுபவங்கள் அருகாமையே இருந்தும் எது நம்வர்களை தன்னிலை மறந்து விட்டில் பூச்சிகள் போல் மீண்டும் மீண்டும் அதே தவற்றை இழைக்க வைக்கிறது? எது தூண்டுகோளாய் அமைகிறது? கல்வியறிவா? சமுதாய நோக்கு அற்ற நிலையினாலா? தன் பொறுப்பற்ற நிலையாலா? அல்லது நமது சமுதாய கோட்பாடுகளாலா (ஆண் பிள்ளை ஒன்று வேண்டும் கடைசி காலத்தில் கொல்லி போட) ?

பிறகு இவர்களே பேருந்தில், சினிமா கொட்டகையில், ஜவுளி மற்றும் நகைக் கடைகளில் விழி மிரள வைக்கும் ஜனத்திரளை கண்டு "அப்பப்பா என்ன கூட்டம் என்ன கூட்டம்" என்று அங்களாய்க்கும் இவர்கள் என்றாவது ஏன் இப்படி என்று தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொண்டதுண்டா, எல்லோரும் கேட்டுக் கொண்டால் we can avoid a human disaster which is "POPULATION EXPLOSION" in the future.

1 comments:

சுரேகா.. said...

கலக்கலா எழுதி இருக்கீங்க!

சூப்பரு!

(உள்குத்து எனக்கு புரிஞ்சதால சுவாரசியம் அதிகமா இருந்தது உண்மை)

Related Posts with Thumbnails