Sunday, December 13, 2020

நீட், மீத்தேன், ஜிஎஸ்டி - யார் தவறு?

 அணுவை பிளக்க முடியும்னு அவன் ஏன் யோசித்தான்?! சோ, நாங்க அணுகுண்டு தயாரிச்சோம்... 😁

அப்படி இருக்கு இந்த பின் வரும் வாதம்.

யார் மீத்தேன், நீட், ஜிஎஸ்டி போன்றவைகளை ஜிந்திச்சா அல்லது நடை முறைப் படுத்த முயற்சித்தான்னு கேக்கிறது என்ன மாதிரியான அறிவுடை வாதம்? 🙄

படித்தவர்கள், நாட்டை பொருளாதார ரீதியாகவும் அறிவுடைய கருவூலமாகவும் ஆக்கிப் பார்க்க அந்தந் துறை நிபுணத்துவம் உள்ளவர்களின் மூளையில் உதிப்பதும், அதனையொட்டி வரைவுகள் உருவாக்கிப் பார்ப்பதும் இயல்பானது. பிறகு எதற்கு எட்டு மணி நேரம் தானும் வேலைக்குப் போகிறேன் என்று சென்று வருவது?

சரி காங்கிரஸ் ஆட்சியில் மூளைக் குழந்தையாக கருத்தரித்து, அங்கொன்றும் இங்கொன்றுமாக மாதிரித் திட்டங்களை செய்து பார்க்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

மீத்தேனோ, நீட்டோ பின் வரும் நாட்களில் பாதகத்தை தரக் கூடியது என்றறியும் நாளில் குப்பைத் தொட்டியில் கடாசுவது தானே நியாயம். ஆனால், சிந்தித்ததே தவறு என்று எந்த அறிவுடை நம்பியாவது பேசுவானா?🙈 

அதுவும் வாதமென்று சூத்தில் அடித்தான் பல்லு போச்சு என்ற வாதம் செய்கிறார்களே!

எனவே, நீட் நுழைவுத்தேர்வு, டெல்டா மீத்தேன் என்பவை மாதிரிக்கென சிந்தித்தவன் எழுதிப் பார்த்தான் அது தளத் தேவைகளில் அவசியமற்றதுன்னு அறிந்து கொண்ட நாளில் ஓரங்கட்டப்படுவதே அறிவுடமை! 

தாண்டித் திணிப்பேன் என்றால்... அதனை எப்படி புரிந்து கொள்வது என்பதை உங்களுடைய முடிவிற்கே விட்டுவிடுகிறேன்!!

0 comments:

Related Posts with Thumbnails