Thursday, December 31, 2020

இருபது ஆண்டுகள் பின்தங்கியுள்ள சமஸ்!

 ...2014 வரை தமிழகம் குறித்து மிக மோசமாகவே எழுதி வந்தேன். அந்த ஆண்டு 2014ல் இந்தியா முழுதும் சுற்றுப்பயணம் செய்தேன். அதன் பிறகுதான் 50 ஆண்டுகள் இந்தியாவை விட தமிழ்நாடு முன்னாடி இருப்பதை அறிந்து கொண்டேன். - எழுத்தாளர் சமஸ்...

இந்தக் கணக்கை வைத்துப் பார்த்தால் சமஸ் 20 ஆண்டுகள் என்னை விட பின் தங்கி இருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில், நான் இந்தியாவை 1994லயே சுத்த ஆரம்பித்து விட்டேன். அப்பவே வயசுக்கும் வந்துட்டேன்! 😁
அப்போ நான் வடக்கில் பார்த்த காட்சிகள் உடனடியா நாம எவ்வளவு ஸ்பாய்ல் செய்யப்பட்டு இருக்கோம்னு உணர வைச்சிருச்சு. முதல் விசயம் உ.பி_ல ஒரு ஊருக்கு போக நான்கு மணி நேரத்திற்கு மேல பேருந்துக்காக காத்துக்கிடந்தது. பேருந்துகளின் நிலை, சாலை கட்டமைப்பு. கங்கையில என்னோட முன்னாள் வெள்ளைக்காரி பார்ட்னரோட சங்கிகள் செய்த அலுச்சாட்டியோத்தோட மல்லுக்கட்டினதுன்னு ஒரு புத்தகம் போடுற அளவிற்கு விசயம் இருக்கு.
அது ஒரு சமுகமாக நாம எவ்வளவு தூரம் நாகரீகமடைந்து வித்தியாசப்பட்டு நிற்கிறோங்கிறதை உடனடியாக கண்ணைத் திறந்து விடக் கூடிய பயணமாக அமைந்தது.
அதனை சாத்தியப் படுத்திக் கொடுத்த திரவிடச் சிந்தனையாளர்களுக்கே அனைத்து க்ரீடிட்டும் செல்லும்.
பத்திரிக்கையாளர், அரசியல் விமர்சகர் சமஸின் மனசாட்சியை ஒரு சிறு குறுக்கு வெட்டு செய்து பார்ப்போமா? நேற்று நீயா நானா_வில் தோன்றி 2014ம் ஆண்டில், தான் செய்த வட இந்தியப் பயணமே, இந்தியாவை விட தமிழ்நாடு 50 ஆண்டுகள் முன்னேறிய நிலையில் இருப்பதை உணர்த்தியது என்று கூறினார். அதிலும் கவனிக்கத்தக்க வகையில் அதற்கு திராவிடக் கட்சிகளின் திட்டங்களே அடிப்படைக் காரணம் என்று அழுத்தம் திருத்தமாக கூறுவதைக் கூட தவிர்த்து விட்டார்.
அதற்கு முன்பு இவர் மிகக் கறராக காங்கிரஸையும், திமுகவையும் விமர்சித்து வந்திருப்பதாகத் தெரிகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 2016ல், திமுக தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் அந்தக் கட்சியின் "அஸ்தமனம் தொடங்கிவிட்டதாக" ஆருடம் வேறு சொல்லி இருக்கார்.
இவர் மிகவும் அடர்த்தியாக தனது சிந்தனையை முன் வைத்து நகரும் ஒரு படிப்பாளியாகவும் தெரிகிறார். வீட்டிற்கு நான்கு தினசரிகளை வரவைத்து தினமும் வாசிப்பதாகவும் அவரே நீயா நானா நிகழ்ச்சியின் போது கூறினார்.
இந்த நிலையில், தன்னுடைய 40வது வயதிலேயே தமிழ்நாடு பிற மாநிலங்களை விட சமுகநீதியின் வழியாக ஒரு முன்னோடி மாநிலமாக இருப்பதை அறிந்து கொண்டேன் என்பதாகக் கூறும் கூற்று உண்மையாக இருக்க முடியுமா?
நான் அப்படி இருக்க வாய்ப்பில்லை என்கிறேன். எதன் அடிப்படையில் என்றால்-
ஒரு நண்பரின் அவதானிப்பு...
👉🏿//சமஸ்ஸோட பதிவுகள்ல எனக்கு நிறைய இடத்துல முரணிருக்கும்.
Many a times i felt like he is wanna be paapan based on his writings. Don't have much regards to him. //
ஏன் அப்படி முரணாக எழுதி பேசி வந்திருக்கிறார்?
இது ஓர் அடையாளச் சிக்கல் என்பதோடு, வளரும் பருவத்தில் இருப்பவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ எடுக்கும் ஒரு நிலை. சமஸ் மாதிரி ஆட்கள் தெரிந்தே அப்படி ஒரு நிலையை எடுத்திருக்க வாய்ப்புண்டு (Trying to be inclusive, so that their personal growth will go in the desired direction without any hurdle. A mere opportunistic strategy!).
ஏன்னா, ஒரு சமுகத்தினுடைய உளவியலையே புட்டுப் புட்டு போடுகிறவர் பிற இந்திய நிலப்பரப்பில் என்ன அரசியல் முன்னெடுப்புகள் எடுத்து கையாளப்படுகிறது என்று தெரியாமல் இருந்து இருப்பார் என்று சொல்வதை நம்புவதற்கில்லை. அதிலும் ஒரு நாளைக்கு நாலைந்து தினசரிகளை வீட்டிற்கு போட வைச்சுப் படிக்கிறவர். பத்திரிக்கையாளர். ஒப்பீட்டுளவில் ஒரு திட்டத்தின் சாதக பாதகங்களைப் பற்றியும் எழுதக் கூடியவர்.
இவர் தன்னுடைய மாநில மக்களின் ஒட்டு மொத்த சமுகநீதி நலனுக்காக இன்னும் உண்மையாக இருக்கலாம்.
விடலைப்பசங்களுக்குத்தான் அடையாளச் சிக்கல் வரணும் இவ்வளவு சிக்கலான விசயங்களைப் பற்றி எழுதும், பேசும் எழுத்தாளருக்கு அல்லவே!



0 comments:

Related Posts with Thumbnails