Monday, July 03, 2006

அன்பு நாமக்கல்லாருக்கு...

இந்த காதல் காவியத்தை எனது நண்பர் நாமக்கல்லாருக்கு(ம் *அவரது நயனுக்கும்*) அன்புடன் படைக்கிறேன்...

ஒரு வார்த்தை கேக்க ஒரு வருஷம் காத்திருந்தேன்~~~~~
இந்த பார்வை பாக்க பகலிரவா பூத்திருந்தேன்~~~~

மனமாலை ஒண்ணு பூ பூவா கோத்திருந்தேன்~~~
அந்த சேதிக்காக நொடி நொடியா வேத்திருத்தேன்~~~

சூரியன சூரியென சுருக்குப்பையில்~~~~~
நான் அள்ளி வர அள்ளி வர ஆசைப்பட்டேன்~~~

சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா~~~
என் சின்னச் சின்ன கம்மலுக்குள் பூட்டி வைச்சேன்~~~

தண்ணிக்குள்ளெ ரெட்டத் தாமரைச் கொடி
வெப்ப குளத்தையே குடிச்சுருந்தேன்~~~

அந்த ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம்
தயங்கி நின்னேன்~~~~

அந்த பார்வை பார்க்க முடியாம
நான் ஒதுங்கி நின்னேன்~~~

ஊருக்குள்ளே ஒடும் தெருவில்
பாதத் தடங்கள் ஆயிரமிருக்கும்~~~

நீ நடந்த சுவடுகளிரிருந்தால்
எந்தன் கண்கள் கண்டுபிடிக்கும்~~~

நீ கிடைக்க வேண்டுமென்று
துண்டு சீட்டு எழுதிப் போட்டேன்~~~

பேச்சியம்மன் கோவில் சாமீ
பேப்பர் சாமீ ஆனதென்னெ~~~

கண்ணுக்குள்ளெ ஓடின உன்னை துரத்த
மனசுக்குள் நீ வந்து ஒளிஞ்செ~~~

மனசுக்குள் ஒளிஞ்சுடும் உன்னை விரட்ட
உசிருக்குள் நீ மெல்ல நுழைஞ்ச~~~

நீ கொடுத்த கல் கூட
செங்கல் சாமீ ஆனதய்யா~~~

அடுத்த வீட்டு கல்யாணத்தின்
பத்திரிக்கை பார்க்கும் பொழுது~~~

நமது பெயரை மணமக்களாக
மாற்றி எழுதி ரசித்துப் பார்த்தேன்~~~

கட்டபெம்மன் உருவம் போல
உன்னை வரைந்தே மறைத்தே வைத்தேன்~~~

தேசப்பற்று ஓவியமென்று
வீட்டுச் சுவற்றில் அப்பா மாட்டெ~~~

அணைக்கட்டு போலவே இருக்கும் மனசு
நீ தொட்டு ஒடைஞ்சதுதென்ன~~~
புயலுக்கு பதில் சொல்லும் எந்தன் இதயம்
பூ பட்டு சரிஞ்சதுதென்ன~~~

வேப்பம் மரம் சுத்தி வந்தேன்
அரச மரமும் பூத்தாதய்யா~~~~~~~~~~~~~~~~`



பி.கு: ஏதோ என்னாலெ ஆனாது, "இன்பச் சந்தோஷமா" இந்நாளை ஆரம்பிங்கய்யா... :-)

4 comments:

நாமக்கல் சிபி said...

//அணைக்கட்டு போலவே இருக்கும் மனசு
நீ தொட்டு ஒடைஞ்சதுதென்ன~~~
புயலுக்கு பதில் சொல்லும் எந்தன் இதயம்
பூ பட்டு சரிஞ்சதுதென்ன~~~
//

ரொம்ப நன்றி தெகா!

இந்தப் பாட்டு எனக்கா! எனக்கேவா! எனக்கே எனக்கா!

தெகா....! ஆனந்தத்தில் அழுக வெச்சிட்டீரே!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

(அது சரி! என்னைச் சாக்கா வெச்சி நீர் பாட்டு பாடி பார்ட்டிய பிக் அப் பண்ணுற எண்ணமெல்லாம் இல்லையே :)
)

நாமக்கல் சிபி said...

//இந்த காதல் காவியத்தை எனது நண்பர் நாமக்கல்லாருக்கு(ம் *அவரது நயனுக்கும்*) அன்புடன் படைக்கிறேன்...
//

தலைவா! எனக்கு மட்டும் படைச்சா போதும். மீதிய நான் பார்த்துக்கறேன்!

நாமக்கல் சிபி said...

தெகா! தங்களுக்கு பதில் மரியாதை செய்யும் பொருட்டு எனது பாணியில் தங்களை சிரிக்க அழைக்கிறேன்.

Thekkikattan|தெகா said...

இந்தப் பாட்டு எனக்கா! எனக்கேவா! எனக்கே எனக்கா!

தெகா....! ஆனந்தத்தில் அழுக வெச்சிட்டீரே!


யான் பெற்ற இன்பம் பெருக எமது நண்பனும்ங்கிற நல்ல எண்ணத்தில் தான். உண்மையில் இந்த பாட்டை நான் கேக்கும் பொழுதெல்லாம், பக்கத்து காரில் அமர்ந்து என்னை கண்ணாடி வழியாக பார்த்தால் பையனுக்கு ஏதோ அருள் வந்து தலையை அசைக்கிறார் போல என்று, கையெடுத்து கும்பிடும் அபாயமுண்டு. இதே பாடலை நீங்களும் ரசித்தீர்கள் என்று கேட்டவுடன் சக பக்தன் ஒருவருக்கு "அர்பணிப்பதில்" என்ன இருக்கிறது.

அனுபவி ராசா அனுபவி! :-)))

Related Posts with Thumbnails