Thursday, September 29, 2011

கழுகமைவு...


கசிந்தொழுகி முழங்கிக்கொட்டிய
மழை மரணிப்பின்
ஒரு பின் மாலைப்பொழுதில்
வெளுப்பேறிப்போன மென் தோல்
உதறிய உள் மனதுடன்
அவன் சாலையோரத்தில் அமர்ந்திருந்தான்...

ங்கோ வட்டமிட்டபடியே
கொழுத்த வார்த்தை ரணமேறிய
மனித மன ஊன் உண்ணும்
பூமி பார்ந்திருந்த பட்சியொன்று
அவனருகில் சிறகு சுருட்டி
வந்தமர்ந்து, நிமித்தமாய்
மனவாய் கிளறியது...

ஒப்புவிக்க ஒப்புவிக்க
ரணமருந்தியபடியே
கற்றறிந்த வித்தையின் 
இலக்கணப்படி
அவசரமாய்
சொற்களுக்குள் 
செருகிக் கொண்டிருந்தது...

சூலுற்றிருந்த கருவை இறக்கும் 
நாழிகையை எண்ணியபடி...

பட்சி அறிந்திருக்கவில்லை
தான் உண்டு தரிசித்தது
நொடிப்பொழுதைய
உதிரக் குழம்பையென...

எலும்பு மஜ்ஜை இன்னமும் மிச்சமிருக்கிறது...


P.S: Discussion in Buzz ...Kazhugamaivu...

1 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நிமித்தமாய்
மனவாய் கிளறியது...
//

அருமை..

Related Posts with Thumbnails