Tuesday, August 30, 2011

துளியளவு தொங்கல் - w/photo

The Kin is Within_Rain Drop


எப்பொழுதும் வெடித்துவிடுவேனென்று
நுனிக்கிளையில் தொங்கியவாறே
என்னுள் பூமியை விரித்துக்கொண்டிருந்தேன்

இப்பொழுதோ அப்பொழுதோ
என்மீது விழும்
மற்றுமொரு மழைத் துளியொன்று
காரணமேயின்றி
என் உலகத்தை
சிதைக்க
என்னைச் சுற்றிலும் விழுந்து
கரைந்து கொண்டிருக்கின்றன...

தூரத்திலொருவர் தனது
நீண்ட நெடிய ஆசையாக
வீடொன்றை
நிதானமாக என்னுள்
எழுப்பிக் கொண்டிருந்தார்
எனதிருப்பையறியாது!

8 comments:

ராமலக்ஷ்மி said...

படமும் கவிதையும் மிக அருமை.

புலவர் சா இராமாநுசம் said...

வலை வந்து கருத்துரை வழங்
கினிர் நன்றி
கடுமையான முதுகுவலி
காரணமாக அமர்ந்து கருத்துரை
வழங்க இயலவில்லை மன்னிக்க!

பின்னர் எழுதுகிறேன்
புலவர் சா இராமாநுசம்

ராஜ நடராஜன் said...

யாரு!நீங்களா!கேமிராவா!

பொட்டிக்கடைய இழுத்து மூடிட்டு படம் புடிக்கிற வழியப் பாருங்க:)

Thekkikattan|தெகா said...

ராம,

நன்றி-

*********************

புலவரே,

உடம்பை பார்த்துக்கோங்க. பிறகு எழுதுங்க. நன்றி-

******************

ராஜ நட,

பொட்டிக்கடைய இழுத்து மூடிட்டு படம் புடிக்கிற வழியப் பாருங்க:)//

தெரிஞ்சோ தெரியாமலோ மிகச் சரியா ஒரு அறிவுரை சொல்லுயிருக்கீங்க... வீட்டுக்காரிகிட்ட காமிச்சேன் முறைக்கிறா :)

புலவர் சா இராமாநுசம் said...

நீர்க்குமுழி வாழ்க்கையென
நினையுங்கள் வாழ்க்கையென
நீர்க்குமுழி படம்போட்டீர்
நீள்கிளையை காட்டினரோ

புலவர் சா இராமாநுசம்

தவறு said...

ராஜ நடாவை வழிமொழிகிறேன் தெகா..

கவிதையும் புகைப்படமும் கலக்கல்

முகுந்த் அம்மா said...

Wow, Romba nalla irukku photo plus kavithai

Thekkikattan|தெகா said...

தவறு - நன்றி!

**************

முகுந்தம்மா, எப்படி இருக்கீங்க நலமா?- நன்றி.

Related Posts with Thumbnails