Monday, August 01, 2011

மனித’கம்...



எட்டியும் எட்டாததுமாக
வாழ்வுப்படிகள் எட்டியே
வெளிக்கிடும் கணம்தோறும்
கொள்ளளவைக் கொண்டே
கிரகித்து வந்தேன்...

போர்வை விலக்கி
எட்டிப் பார்த்த அந்திமத்தில்
இருளடைந்த அகத்தைத்தாண்டி
அப்போதே
உள்ளே மலர்ந்து கொண்டிருந்தேன்...

அழையா நட்பென
திடுமென என் தோள்பற்றி
உலுக்கி உள்ளிழுத்தது மரணம்.


P.S: Photo Courtesy: Net


19 comments:

ஓலை said...

Nice one.

vasu balaji said...

அருமை தெ.கா.

Bibiliobibuli said...

தெகா, கவிதை முகம் நல்லாத்தானிருக்கு. அந்த கடைசி வரிகள் படித்து முடித்தபோது ஒரு கணம் உள்ளுக்குள் உறையவைத்தது.

அந்த, " அழையா நட்பென...." வரிகள் தான் நிறைய யோசிக்க வைக்குது.

Thekkikattan|தெகா said...

நன்றி ஓலை-

நன்றி வானம்பாடிகள்- :)

Thekkikattan|தெகா said...

ரதி,

//அந்த, " அழையா நட்பென...." வரிகள் தான் நிறைய யோசிக்க வைக்குது.//

அப்படியா! எப்படியெல்லாம் யோசிக்க வைக்கிது சொல்லுங்க தெரிஞ்சிக்குவோம் :) ...

சாந்தி மாரியப்பன் said...

//அழையா நட்பென
திடுமென என் தோள்பற்றி
உலுக்கி உள்ளிழுத்தது மரணம்.//

அருமை...

ராமலக்ஷ்மி said...

மிக நன்று.

vetha (kovaikkavi) said...

அழையா நட்பென
திடுமென என் தோள்பற்றி
உலுக்கி உள்ளிழுத்தது மரணம்.


Oh! shock...diffrent thought..
Vetha.Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com

http://thavaru.blogspot.com/ said...

அழையும் நட்பென மரணத்தை வரவேற்பது எங்ஙனம் தெகா...

Thekkikattan|தெகா said...

அமைதிச்சாரல் - வணக்கமுங்க. நட்சத்திர வாரத்தில் நிறைய எதிர்பார்க்கிறோம் :) ...

ராமலக்ஷ்மி - நன்றி.

கவிதை - ஊக்கங்களுக்கு நன்றி.

cheena (சீனா) said...

அன்பின் தெ.கா - புரிந்த மாதிர்யும் புரியாத மாதிரியுமாக கவிதை எழுதத் துவங்கியாச்சா .... அழையா நட்பு .... ம்ம்ம்ம்ம்ம்ம் -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Thekkikattan|தெகா said...

வணக்கம் மோகன் - வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!

***************

அழையும் நட்பென மரணத்தை வரவேற்பது எங்ஙனம் தெகா...//

வணக்கம் தவறு,

The technique is very simple... ஒவ்வொரு நிமிடமும் நம்மை கடந்து செல்லும் பொழுதும் நாம் இறந்து பிறக்கிறோம் என்பதனை ஞாபகத்தில் கொண்டாலே, பழகிப்போன மரணம், அழைக்கும் நண்பனாகி விடுவான் :))) ... அதுக்காக என்கிட்ட அனுப்பி வைக்காதிங்க அவனை :p

இராஜராஜேஸ்வரி said...

உள்ளே மலர்ந்து கொண்டிருந்தேன்...

அழையா நட்பென
திடுமென என் தோள்பற்றி
உலுக்கி உள்ளிழுத்தது மரணம்.//

மலர்ந்த கணத்தில் மரணம் கொடுமைதான்.

Thekkikattan|தெகா said...

புரிந்த மாதிர்யும் புரியாத மாதிரியுமாக கவிதை எழுதத் துவங்கியாச்சா ..//

வாங்க சீனா, புரியாம எழுதினாத்தான் அது கவிதையாம். கொஞ்சும் புரிஞ்சும் புரியாம எழுதினா அது கவிஜா(பேரு அழகா இருக்கில்ல) ;) ... நன்றி சீனா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\அப்போதே உள்ளே// ந்னா தாமதமான புரிதலோ..

Thekkikattan|தெகா said...

இராஜராஜேஸ்வரி - தொடர்ந்த ஊங்கங்களுக்கு நன்றி :)

*******************
முத்து,

\\அப்போதே உள்ளே// ந்னா தாமதமான புரிதலோ... //

கடைசியா ஒரு வழியா புரிஞ்சிருச்சா :) ? தாமதம்னா தாமதம் it is too late அப்படின்னு சொல்லுவோம்ல அவ்ளோ தாமதம் :) - நன்றி!

ஜோதிஜி said...

அன்பின் தெ.கா - புரிந்த மாதிர்யும் புரியாத மாதிரியுமாக கவிதை எழுதத் துவங்கியாச்சா

இதுக்கு பேரு தான் கும்மாங்குத்து ஓய்.............. இனி கவிதையைப் பற்றி நினைப்பியா நினைப்பியா நினைப்பியா?

Anonymous said...

மரணம் பற்றிய பார்வை வித்தியாசமான வரிகளில்...

வாழ்த்துக்கள் நண்பரே!

Thekkikattan|தெகா said...

ஷீ-நிசி said...

மரணம் பற்றிய பார்வை வித்தியாசமான வரிகளில்...//

நன்றி, நண்பரே!

Related Posts with Thumbnails