Friday, December 03, 2010

பூமி பாக்டீரியம் சொல்கிறது வேற்றுக் கிரகத்தில் உயிர் : GFAJ-1

இரவு வானத்தை அண்ணாந்து பார்த்தா சும்மா கற்பனைக் குதிரை மண்டைக்குள்ளர இருக்கிற அறிவைக் கொண்டு அது பாட்டுக்கு இலக்கில்லாம பறந்து திரியும். அப்போ இப்படி விரிஞ்சி கெடக்கிர வானக் கம்பளத்தில நம்ம பூமிய ஒரு தடவ திரும்பி பார்த்தா ஒரு தூசியின் அளவை விட சிறிசா ஒண்ணுமில்லாம போயிடும். அந்த அளவிற்கு இந்த அண்டவெளி நம் கற்பனைக்கும் எட்டாத விரிதலை உள்ளடக்கியது.

நம்ம சூரியன் இருக்கிற பால்வீதி (Milky Galaxy) மாதிரியே பல பில்லியன் பால்வீதிகள் இந்த வெளியில மிதந்து திரிகிறது. அந்த ஒவ்வொரு பால்வீதியிலும் மில்லியன்ஸ் அண்ட் மில்லியன்ஸ் நம்ம சூரியனையொத்த ஸ்டார்கள் இருக்கின்றன. அவைகளைச் சுற்றியும் நம் சூரியக் குடும்பத்திற்கென அமைந்த கிரகங்களையொட்டி கிரகங்களும் உள்ளன.

அந்த கிரகங்களில் நமக்கு கிடைத்த தட்பவெப்ப சூழல்களைக் கொண்டு உயிரினங்கள் உருவாகி பல்கி பெருகியிருக்கக் கூடுமே என்ற கருதுகோளின் படி நாம பல பத்தாண்டுகளாக வானத்தை அளந்து வருகிறோம். வேற்று கிரக வாசிகளிடமிருந்து ஏதாவது சமிக்கைகள் மிதந்து வந்து அடைகிறதாவென (SETI).

இப்படியான சூழ்நிலையில் நேத்து அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா நடத்தி வந்த ஓர் ஆராய்ச்சியில் அது போன்ற வேற்று கிரகங்களில் உயிர்கள் இருப்பதற்கான நிகழ்தகவுகள் ரொம்பவே சாத்தியம் என்று கட்டியம் கூறும் வாக்கில் ஒரு சான்று கிடைத்துள்ளது.

கேட்ட நேரத்தில இருந்து அண்டவெளி உயிரின ஆராய்ச்சியாளர்களுக்கு (Astrobiologist) சந்தோஷம் நிலைகொள்ள வில்லையென அமெரிக்கா தொலைகாட்சிகளின் செய்திகள் அலறி அடித்துக் கொண்டு அந்தத் துறை சார்ந்தவர்களை அழைத்து நேர்முகம் காண்பதிலிருந்து விளங்கிக் கொள்ள முடிந்தது.

பொதுவாக இந்தப் பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் ஆறு விதமான அடிப்படை உயிரின வேதியப் பொருட்களின் மூலக்கூறுகளைக் கொண்டே கட்டமைக்கப்பெற்றிருக்கிறது (கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்.பரஸ் மற்றும் சல்.பர்).

இதனில் முக்கியமாக பாஸ்.பரஸ் நமது மரபணு சமிக்கைகளை கடத்திச் செல்லும் டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏக்களின் உயிர்ச் செல் கட்டமைப்பில் முக்கியமான பங்காற்றுகிறது.

இந்த பின்னணியில் நமக்கெல்லாம் அறிமுகமாகி இருக்கிற வேதிய அட்டவணையில் இந்த பாஸ்.பரஸின் பண்புகளையொத்த அளவில் ஆர்சினிக் என்ற வேதிய தனிமம் மட்டுமே இருக்கிறது. ஆனால், இது பூமிய உயிர் அனைத்திற்கும் உடலில் சாரும் பொழுது நச்சுத்தன்மையை வழங்கி, வளர்சிதை மாற்றம் அளவில் பாதிப்பை வழங்கும் தன்மையைக் கொண்டது. எனவே, ஆர்சினிக் வந்து பூமியில் வாழும் உயிர் அனைத்திற்கும் a big no no வேதியற் கூறு.

ஆனா, இயற்கையின் விளையாட்டப் பாருங்க. அறிவியல் புனைவுகளில் கன்னாபின்னான்னு கற்பனைக்கு எட்டிய மாதிரியெல்லாம் வேற்று கிரகங்களில் கிடைக்கிற வேதியற் கூறுகளையும், சுற்றுச் சூழலையும் கொண்டு உயிரினங்கள் வாழ்ந்து வருவதாக அள்ளிக் கட்டி எழுதுவாங்க. படிக்க படிக்க நாமும் கற்பனை உலகில் அந்த ஜீவராசி கூட்டத்தோட கூட்டமா ஒரு மனுச ஜீவராசியாவே திரிவோம்.

அந்த இட்டுக்கட்டு கதைமாதிரிக்கு, நாசாவின் புதிய பாக்டீரியம் கண்டுபிடிப்பு அது போன்ற கதைகள் எவ்வாறு உண்மையாகலாம்னு சான்று சொல்லி நிக்கிது. கலி.போர்னியா மகாணத்தில உள்ள ஓர் ஏரியில ஆராய்ச்சி செஞ்சிகிட்டு இருந்திருக்காங்க. அந்த ஏரிக்கு பேரு மோனோ ஏரி (Mono Lake). அந்த ஏரியை தேர்ந்தெடுத்ததற்கு காரணமே 50 வருஷத்திற்கு மேல மற்ற புதுத் தண்ணியோட கலக்காம கெடக்கிறதுனாலே அதில எக்கச்சக்கமான உப்பும், அமிலத் தன்மையும் மற்றும் இந்த ஆர்சினிக் நச்சுத் தன்மையும் இருக்குங்கிறதுனாலே தொழவி பார்த்துருக்காங்க ஏதாவது சிக்குதான்னு. அப்போதான் இந்த புதுவிதமான பாக்டீரியம் நம்ம பூமி உயிரி கட்டமைப்பு வேதிய மூலக்கூறுகளுக்கு எதிராக அமைந்த ஆர்சினிக்கைக் கொண்டு உயிர்வாழும் புது வகையான நுண்ணுயிரி வாழ்வது தெரிய வந்திருக்கு. அதுக்கு பேரும் வைச்சாச்சு GFAJ-1 அப்படின்னு.

சரி எப்படி நிரூபிச்சாங்க? ஆய்வுக் கூடத்தில வைச்சு இந்த பாக்டீரியத்தை வளர்த்திருக்காங்க. பாஸ்.பரஸை கொஞ்சமும், ஆர்சினிக்கை தாராளமாகவும் வழங்கி அதில இந்த பாக்டீரியம் ஆர்சினிக்கை ஊட்டமாக கொண்டு செழித்து வளர்ந்திருக்கு.

இந்த ஒத்த புது வகையான நுண்ணுயிரியை கண்டுபிடிச்சதின் மூலமா மொத்த உயிரியல் பாடப் புத்தகங்களையும் திரும்ப எழுதுற மாதிரி ஆகிப்போச்சு. அதுக்கெல்லாம் மேல இந்த அண்டவெளியில் இருக்கிற கோடான கோடி, கோடி, கோடி கிரகங்களில் எது போன்ற வேதிய மூலக்கூறுகளைக் கொண்டும் உயிர்கள் கட்டமைக்கப்படுமென்றால் கண்டிப்பாக வேற்று கிரக உயிர்கள் திளைச்சு வாழணும்மப்போய்னு உறுதியாகிப் போச்சல்ல.

இயற்கையின் விந்தையில் எதுவும் சாத்தியமேன்னு சொல்லி நிக்கிது இந்த ஆர்சினிக்கை காதலிக்கும் பாக்டீரியம். எந்த வெளி கிரகத்திலே எந்த பத்து தலை டைனோசரோ, இல்ல நாலு கால் மனுசன் பொய் பேச ஒரு மூஞ்சி, உண்மை பேச ஒரு மூஞ்சின்னு கரியமிலா வாயுவை சுவாசிச்சிட்டு நடந்து திரியுறானோ, I cant wait to get that news! :-)



பி.கு: நம்ம நண்பர் கையேடு கூட இது பொருத்து ஒரு கட்டுரை எழுதியிருக்கார் - வேறொரு உயிர்

- Photo Courtesy: Net

202 comments:

RMS Danaraj said...

//உயிர்கள் இருப்பதற்கான நிகழ்தகவுகள் ரொம்பவே சாத்தியம் என்று கட்டியம் கூறும் வாக்கில் ஒரு சான்று கிடைத்துள்ளது.//
நல்ல பதிவு.போற போக்கை பார்த்தால் வேறு கிரகத்தில் உயிரினக்கள் இருப்பது உண்மையாகிவிடும் வாய்ப்பு அதிகமாகிறது.

எல்லா மத்வாதிகளும் இதனை ஏற்கெனெவே முஅறிவிக்கப் பட்டது என்று ஒரு விளக்கம் தயாரித்து வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கோள்ளப் படுகிறார்கள்.

//பொய் பேச ஒரு மூஞ்சி, உண்மை பேச ஒரு மூஞ்சின்னு கரியமிலா வாயுவை சுவாசிச்சிட்டு //
இந்த மாதிரி ஆக்சிஜன் சுவாசிக்கற ஆளுங்களே இருக்காங்க
வாழ்த்துகள்.

Anonymous said...

Was looking @ the live NASA news coverage yesterday here!

the possibility of extraterrestrial life this discovery unleashes is quite exiting

கும்மி said...

//எல்லா மத்வாதிகளும் இதனை ஏற்கெனெவே முஅறிவிக்கப் பட்டது என்று ஒரு விளக்கம் தயாரித்து வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கோள்ளப் படுகிறார்கள்.//

இப்பொழுது அதனை செய்ய மாட்டார்கள். அறிவியல் இன்று கண்டுபிடித்ததை நாளை மாற்றிச் சொல்லும். அதனால், அதனை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று இப்பொழுது கூறுவார்கள். அப்படியே எந்த வசனத்தை திரிக்கலாம் என்று ஆராய்ந்துகொண்டிருப்பார்கள். சில வருடங்களுக்கு பிறகு அறிவியல் உறுதிப்படுத்தியதும், அந்த வசனத்தை எடுத்துப்போட்டு, பார்த்தீர்களா எங்கள் புத்தகத்தில் 1400 வருடத்திற்கு முன்னரே சொல்லப்பட்டுள்ளது என்று அள்ளிவிடுவார்கள். :-)

Thekkikattan|தெகா said...

RMS Danaraj said...

நல்ல பதிவு.போற போக்கை பார்த்தால் வேறு கிரகத்தில் உயிரினக்கள் இருப்பது உண்மையாகிவிடும் வாய்ப்பு அதிகமாகிறது.//

சந்தேகமே வேண்டாம் இருக்காங்க! இருக்காங்க!!. அவிங்களாவது சந்தோஷமா இருக்கட்டும்... :)

//எல்லா மத்வாதிகளும் இதனை ஏற்கெனெவே முஅறிவிக்கப் பட்டது என்று ஒரு விளக்கம் தயாரித்து வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கோள்ளப் படுகிறார்கள்.//

அதெல்லாம் புதிசா தயார் செய்ய வேண்டியதில்லை. ஏற்கெனவே இருக்கின்னு பக்க எண்ணோட காமிச்சிருவாங்க :)

ஆனா, இதில பாருங்க அப்படி ஒரு ட்ராவல் பண்ண அனைத்து தொழிற்நுட்பமும் கிடைச்சு, வேற்று கிரகத்திலும் நம்மை காட்டிலும் தொழிற் நுட்பத்துடனும், அவிங்க கிரக உருண்டைக்கும் ஏன் இந்த ப்ரபஞ்ச முழுமைக்குமேன்னு நான் ஒருத்தன் மட்டுமே கடவுள் ரேஞ்சிற்கு ஏனைய பிரஜைகளை நம்ப வைச்சு தீரன் புஷ் மாதிரி ஓர் ஆளு இருந்து போயி இங்கிருந்து நாம் அங்கே அவர்கிட்ட சொல்லுறோம்னு வைச்சிக்கோங்க ...ஏலியன் அண்ணாச்சி, ஏலியன் அண்ணாச்சி எங்கூர்ல சோ.. அண்ட் சோ தான் கடவுளுன்னு அந்தாளுக்கு என்னயக் காட்டிலும் இந்த பிரபஞ்சதிலேயே வேற கடவுளா டாய்னுட்டு கண்ணை நேருக்கு நேர் சந்திச்சாலே நாம பஸ்பம் ஆகிற ரேஞ்சிற்கு இருந்தா என்னாகும் :))...

//இந்த மாதிரி ஆக்சிஜன் சுவாசிக்கற ஆளுங்களே இருக்காங்க

வாழ்த்துகள்.//

சொல்ல வந்ததை மிகச் சரியா பிடிச்சிட்டீங்க :). முதல் வருகை நன்றி தனராஜ்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆரம்பிச்சிட்டீங்களா.. சும்மா வா
சொன்னாங்க சாமி இல்லைங்கறவங்க தான் அதிகமா சாமிய நினைக்கிறாங்கன்னு :)

அந்த கிரகத்துல ஆட்கள் இருந்தா என்பது நல்ல சுவாரசியமான விசயம்..

தருமி said...

//சாமி இல்லைங்கறவங்க தான் அதிகமா சாமிய நினைக்கிறாங்கன்னு :)//

ஏம்'பா! இப்படி இருக்கீங்க ! :(

மங்கை said...

////பொய் பேச ஒரு மூஞ்சி, உண்மை பேச ஒரு மூஞ்சின்னு கரியமிலா வாயுவை சுவாசிச்சிட்டு //

மாற்று கிரகத்துலயாவது உண்மை முகத்தோட இருக்கட்டுமே... அங்கேயுமா பொய் முகம்? இங்க தான் எல்லாமே பொய்யா இருக்கு

Thekkikattan|தெகா said...

கும்மி,

நண்பர் தனராஜ் கூட உங்க லைன்லேயேதான் சொல்லியிருந்தார். இருக்கிற இடத்தை விட்டு நகராம அறிவியல் புனைவுகள் ரேஞ்சிற்கு அகண்ட முறையில ஏதாவது சொல்லி வைச்சிட்டு பின்னாடி இதோ ‘இங்கு’ இருக்கு பாருங்கன்னு சொல்லுறதுதான் நெசம் ;-)

அறிவியல் புனைவுகள்ள வர்ற மாதிரி ஒரு நிகழ்வு நடந்தா எப்படி இருக்குமின்னு தனராஜ்க்கு சொல்லியிருந்தேன். அது மாதிரி வேற கிரகத்தில, பயணம் செய்ற நேரம் நம்மைக் காட்டிலும் ரொம்பச் சுருங்கி பூமி சுற்றளவையே 10 நிமிஷத்திற்கும் குறைச்சலா சுத்தி வார மாதிரி தொழிற்நுட்பம் அவிங்க ஒரு 2000 வருஷத்திற்கு முந்தி எட்டியிருந்தா இத்தனை (மதச்) சாமிகள் பூமியில இருக்கிற மாதிரி அங்கே இருக்குமா?

இங்கிருந்து நம்ம அங்கே பழகப் போக நம்ம கான்செப்ட் சொன்னா விளங்குமா? அப்படியே அங்க உள்ள ஒத்தை சாமீ (போதை) நம்ம விட அதிகமா இருந்தா என்னாகும் :))

யோசிச்சு இத அடிப்படையா வைச்சு ஒரு புதினம் எழுதுங்க, கும்மி - ஹிஹிஹி.

Thekkikattan|தெகா said...

Anonymous said...

Was looking @ the live NASA news coverage yesterday here!

the possibility of extraterrestrial life this discovery unleashes is quite exiting//

Indeed, Anony பின்னே இருக்காதா? ஒட்டு மொத்தமா நாம இது வரைக்கும் அறிஞ்சு வைச்சிருக்கிற விசயங்கள் அனைத்தையிம் தவிடு பொடியாக்கிட்டு கூடுதலா இன்னும் என்னவெல்லாம் நமக்கு தெரிஞ்சிக்க வாய்ப்பா இருக்கும்.

Thekkikattan|தெகா said...

முத்து,

சாமி இல்லைங்கறவங்க தான் அதிகமா சாமிய நினைக்கிறாங்கன்னு :)//

அப்படியா நினைக்கிறீங்க. நானும் தருமி சொன்னதையே வழிமொழிஞ்சிக்கிறேன் அப்போ ஏம்'பா! இப்படி இருக்கீங்க ! :(

//அந்த கிரகத்துல ஆட்கள் இருந்தா என்பது நல்ல சுவாரசியமான விசயம்..//

அது விசயம்! அப்படி மட்டும் செய்தி வந்திருச்சு. அப்புறமில்ல இருக்க நம்ம பார்வை... :-). மற்ற பின்னூட்டக் கதைகளையும் வாசிங்க அது எப்படி சுவாரசியமாகும்னு ஒரு சிறிய glimpse.

கும்மி said...

//யோசிச்சு இத அடிப்படையா வைச்சு ஒரு புதினம் எழுதுங்க, கும்மி - ஹிஹிஹி. //

என்னை மாட்டிவிடுறதுல உங்களுக்கு அப்படியென்ன ஒரு குஷி! :-)

நீங்கள் சொன்ன கான்செப்ட் ஒத்த ஒரு புதினம் உள்ளது. எண்டமூரி வீரேந்திரநாத் எழுதியது. 12 ஆண்டுகளுக்கு முன் வாசித்தது. பெயர் நினைவில்லை. யோசித்து சொல்லுகிறேன்.

அதில், வேறொரு கிரகத்தினர் தங்கள் பயன்பாட்டின் தேவை பொருட்டு, பூமியை அழிக்க முடிவு செய்திருப்பர். இங்கிருந்து செல்லும் ஒரு குழு, பூமியை ஏன் அழிக்கக்கூடாது என அவர்களோடு வாதாடி, பூமியைக் காப்பாற்றும்.

தொழில்நுட்பம் உள்ளிட்ட பலவற்றிலும் அந்த கிரகத்தினர் நம்மை விட முன்னேறிய நிலையில் இருப்பதாக அக்கதையில் வரும்.

மங்கை said...

//பாஸ்.பரஸை கொஞ்சமும், ஆர்சினிக்கை தாராளமாகவும் வழங்கி அதில இந்த பாக்டீரியம் ஆர்சினிக்கை ஊட்டமாக கொண்டு செழித்து வளர்ந்திருக்கு.//

எவல்யூஷனையே ரீகன்ஸிடர் பண்ணனுமா...இப்ப இந்த மாதிரி உயிரனங்கள் இன்னும் எங்க இல்லாம் இருக்கும்னு பார்க்கனும்...

more than one way life can exist அப்படினு நினக்கறதுக்கே ஆச்சிரியமா இருக்கே...அது நிரூபிக்கப்பட்டால்?..

Thekkikattan|தெகா said...

எவல்யூஷனையே ரீகன்ஸிடர் பண்ணனுமா.//

மங்கை, பரிணாமத்தை இதில மறு பரிசோதனைப் பண்ணி பார்க்க ஒன்றுமே இல்லை. எந்தச் சூழலில் உயிர் தோன்றினாலும் அது பரிணாமத்தை அடிப்படையாகக் கொண்டே உயர் நிலையையிம், அந்த புறச் சுற்றுப் புற சூழலுக்குத் (niche) தகுந்த மாதிரியான உயிர்களையிம் ஆமோத்தி பல்கி பெருக்கிக் கொள்ளப் போகிறது. எனவே அதனில் பெரும் கோட்பாட்டு ரீதியான வேறு கோணங்கள் இருக்க வாய்ப்பில்லை.

உயிரியியல் பாடப் பிரிவில் மாற்றங்கள் வரும் அது எந்த வகையிலென்றால், இது போன்ற அடிப்படை வேதிய தேவைகளைக் கொண்டு இயங்கும் உயிரினங்களின் உடற் செயற்பாடுகளை அறிந்து கொள்வதும், மேலும் அதன் பொருட்டான விரிவான பகுதிகளும் இணைக்க வேண்டி வரும்.

//more than one way life can exist அப்படினு நினக்கறதுக்கே ஆச்சிரியமா இருக்கே...அது நிரூபிக்கப்பட்டால்?...//

ஹ்ம்ம்ம்... அந்த லைனில் யோசிச்சுப் பார்த்தீங்கன்ன, நம்முடைய இருப்பையே கேள்விக்குள்ளாக்கிற மாதிரியான அழுத்தமான விசயமாகிப் போயிடும். இங்கே பூமியில எல்லா மத, இன, மொழி வேறுபாடுகளைத் தாண்டி ஒத்த உயிரினமாக தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளும் நிலைக்கும் தள்ளப்படலாம். ஆஹா! நினைக்கவே சந்தோஷமா இருக்கு! அதுவும் வேறு கிரகத்து உயிரி நம்மை விட அறிவிலும், ஆற்றலிலும் சிறந்தோங்கினால், நாம் நம்முடைய தத்துபித்து தனங்களை விலக்கி அவர்களிடம் கற்றுக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவோம்... அப்பொழுது ஒற்றுமையிம், புரிதலும் நமக்குள்ளரயே அவசியாமகிப்புடும் :)

நல்ல கேள்வி - மங்கை நன்றி!

கும்மி said...

//பெயர் நினைவில்லை. யோசித்து சொல்லுகிறேன். //

அந்தப் புதினம் - கண்சிமிட்டும் விண்மீன்கள்.

அந்தப் புதினம் பற்றிய சில பதிவுலக விமர்சனங்கள் இங்கேயும், இங்கேயும்.

The Analyst said...

Just managed to read the actual article. It makes you wonder when life originated how many different life forms took off. I wonder what kind of biochemistry this bacteria's ancesters' had. I read somewhere that this lake is pretty young, geologically speaking. WOuld be interesting to see whether they chnaged their biochemistry with the environment.

It would also be intereting to see if more complex organisms can thrive with biochemistry.

Sorry about the English, had to write this quickly. I really like the way you write, especially science stuff in Tamil. I wish I have at least a fraction of this skill.

Thekkikattan|தெகா said...

//அந்தப் புதினம் - கண்சிமிட்டும் விண்மீன்கள். //

கும்மியண்ணா, ரெண்டு பதிவுகள் பக்கமும் போயி படிச்சேன். குதுகலத்தில மிதந்திருக்காங்க. ஆனா, அங்க வந்த பின்னூட்டங்களை வாசிச்சா எல்லாரும் இப்போ அந்தப் புத்தகத்தை வலை போட்டு தேடுறாங்கன்னு தெரிய வருது. பதிப்பில இப்போ இல்லையாம.

யாராவது, அந்த புத்தகப் பிரதி வைச்சிருக்கவங்க அத கணினியில ஏத்தி மின் புத்தகமா ஆக்கினா தமிழ் கூறு நல்லுலகு நன்றியுடையதாகிப் போகும். கும்மி இந்த நல்ல புராஜெக்டை நீங்க எடுத்து செய்ங்கப்பா :)

நன்றி கும்மி! தொடுப்புகள் தேடித்தந்தமைக்கு!!

Thekkikattan|தெகா said...

வாங்க அனலிஸ்ட்,

கடைசிய தேடி கண்டுபிடிச்சிட்டீங்களா? :-)

//It makes you wonder when life originated how many different life forms took off.//

உண்மைதான். என்னுடைய அனுமானம் என்னான்னா, ஆரம்ப கால கட்டத்தில மிக மிக மெதூஊஉவாத்தான் உயிரின பன்முக பெருக்கம் இருந்திருக்கணும். ஏன்னா, கிடைக்கும் வாழ்விடமும் அவ்வளவு உயிரின-நண்பக சூழ்நிலையில அமையாம பெரிசா ஊக்குவிக்கும் வகையாக ஒரு சூழல் அமைஞ்சிருந்திருக்காது.

அதுக்கு ஓர் உதாரணமா இரண்டு பேரழிவு காலங்களுக்கு (great extinctions) பிறகான கட்டத்தில மீண்டும் பன்முக உயிரின பெருக்கம் மிக மெதுவாத்தான் தாவ ஆரம்பிச்சி இருந்திருக்கு இல்லையா?

காரணிகள் என்னவா இருக்கலாம்? டைனோசார்கள் சுத்த துடைத்தழிப்பிற்கான பிறகுதானே பாலூட்டிகளே தாவிக் குதிச்சு பரிணாமச் சக்கரத்தை அதி வேகமா சுழட்டி அடுத்த கட்ட நகர்வை நோக்கி நகர்த்தி நம்ம தயாரிச்சிருக்கு.

இதில இருந்து நாம பூமியப் பரப்பில் நிகழ்த்தும் மாற்றங்களையிம் உள்ளடக்கி அதன் இயக்கத்தில் அடுத்த கட்டம் எதுவாக இருக்குமின்னு திசையை அறிந்து கொள்வதின் பொருட்டு ஒரே ஆர்வமா இருக்கு...

உங்களுக்கு எட்டினா பகிர்ந்துக்கோங்க... ஹிஹி!

//It would also be intereting to see if more complex organisms can thrive with biochemistry. //

போதுமான காலமும், அதற்கான தேவையிமிருந்தா மேலே சொன்ன மாதிரி காம்ப்லெக்ஸ் உயிரினங்கள் அதே உடலியல் சார்ந்த (biochemistry) மாற்றங்களை பெற்று பல்கி உயர்ந்த இடத்தை அடையாம எங்கே போயிருந்திருக்கப் போவுது. அதற்கான தேவையிம் போதுமான ஒத்த சூழலும் பெரும் பகுதியில் இங்கே பூமியில் இல்லாததால் அது போன்ற சிக்கலான புத்திசாலி உயிரினங்கள் தோன்றியிருக்காமல் இருக்கலாம்... இல்லையா?

// I really like the way you write, especially science stuff in Tamil.//

அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைங்க. பழகிக்கிறதுதான். இன்னும் நல்லா செய்யலாம். நீங்களும் முயற்சி பண்ணுங்க, முடியும். நானெல்லாம் ரொம்ப அவரேஜ், புரியற மாதிரி சொல்லணும்னா கடைசி பெஞ்ச் :D

கையேடு said...

எளிமையா நல்லா எழுதிருக்கீங்க.

சுட்டிக்கும் நன்றி.

கும்மி said...

//கும்மி இந்த நல்ல புராஜெக்டை நீங்க எடுத்து செய்ங்கப்பா :)//

ஏன் இப்படி...!

முகுந்த் அம்மா said...

தெகா

ரொம்ப நாளைக்கு அப்பறம் உங்க தளத்தில நான்.

இதனை பற்றிய ஒரு டாகுமெண்டரி டிஸ்கவரியில பார்த்திருக்கேன்.

இதில என்ன ஜோக்ன்னா வேற்று கிரகத்தில ஜீவனுங்க இருக்கு அப்படின்னு சொன்னவுடனெ சிலர் :))உங்களைப்போலவே சாமி இல்லை அப்படின்னு சொல்லுறது தான்.

நீங்க The Universe Season 2, Astrobiology தொடர் பாருங்க சார்.

சில கேள்விகள் வரும். நாமெல்லாம் டிஎன்ஏ, அமினோ அசிட் ல இருந்து தான் வந்திருக்கோம்.

ஏன் டிஎன்ஏ வையோ அல்லது அமினொஅசிட் யோ நீங்க லேப் ல ப்ரிபேர் பண்ணலாம், ஆனா அவை எல்லாம் funtional ஆ work ஆகாது. அதற்க்கு தகுந்த சூழ்நிலை அமையனும். எதோ ஒரு spark வரனும்ங்க அது funtional ஆக, என்னை பொருத்தவரை அந்த spark தான் கடவுள். இதில் நிரைய மாற்று கருத்து வரலாம். ஆனால் சாமி இல்லை சொல்லுரவங்க முதல்ல நாம எங்க இருந்து வந்தோம் அல்லது எங்க போக போறோம்னு சொல்லுங்கப்பா :)))

Thekkikattan|தெகா said...

கையேடு said...
எளிமையா நல்லா எழுதிருக்கீங்க.

சுட்டிக்கும் நன்றி!//

உங்க கட்டுரைக்கு பின்னாடிதானே எனக்கு இதை தனியா போடணும்னு தோணிச்சு, சோ, உங்களுக்கும் என்னோட நன்றி ;-)
****************

கும்மி, என்ன ஏன் இப்படி... கமான் மேன் ஜஸ்ட் டூ இட் :D

கையேடு said...

//முதல்ல நாம எங்க இருந்து வந்தோம் அல்லது எங்க போக போறோம்னு சொல்லுங்கப்பா :))//

எங்கிருந்து வந்தோம் எங்கே போகப்போறோம்ன்றது மனிதனுக்கு மட்டுமே தோன்றும் ஒரு ஆர்வமூட்டும் கேள்வி.
மண்ணிலிருந்து வந்தோம், மண்ணுக்குள்ளேயே போகப்போறோம், அவ்வளவுதான் இந்த எளிய விடையே போதுமானதாக இருக்கிறது ( எனக்கு)?

முதலில் கொஞ்சம் அறிவியலோடு இதை அனுகிப் பார்க்கலாம், உங்களுக்கு நன்கு அறிந்தவற்றையே எழுதியிருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்.

பொதுவாக இறப்பு என்பது பிறப்போடு தொடர்புடையதாக இருந்திருக்கவில்லை அல்லது பிறக்கின்ற எல்லாம் இறப்பதில்லை.

இறப்பு என்பதும் இனப்பெருக்க அடிப்படையிலான தொரு பெரும் மாற்றத்தில் பின்னர் உள்நுழைந்த ஒரு நிகழ்வாகவே குறிப்பிடுகிறார்கள் சில இம்மியுனாலஜிஸ்ட்ஸ். அதாவது இனப்பெருக்கத்திற்காக தன்னைத்தானே பிரதியெடுத்தல் முறையிலிருந்து, கலவி, அதாவது ஜீன்பரிமாற்றம் என்ற யுக்தியைச் செல்கள் கையாளத் துவங்கியபோதுதான் இறப்பு எனும் இயற்கை நிகழ்வு தவிர்க்க இயலாத ஒரு நிகழ்வாக உயிரிகளுக்குள் புகுந்திருக்கிறது என்று (Sex and Origin of Death) என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார் வில்லியம் ஆர்.க்ளார்க். இதை இயற்கையின் அடிப்படைப் பண்புகளில் ஒன்றான குறைந்த ஆற்றல் செலவீடு அடிப்படையில் விளக்குகிறார்.

அதே சமயம், புற்றுநோய்ச் செல்களும், நமது உடலுக்குள்ளேயே இருக்கும் கிருமிச் செல்கள் சிலவும் இவ்விறப்பு எனும் நிகழ்வைப் பெறாத செல்களாக இருக்கின்றன. அவை தங்களது வாழ்க்கைக் கடிகாரத்தை மறுசுழற்சிக்கு உட்படுத்திக்கொள்பவையாக இருக்கின்றன. இதுவே இறந்த உடல் அழுகுவதற்கான முக்கியப் பங்கு வகிக்கின்றன.

ஆக ஒரு செல்வகையிலிருந்து தோன்றிய நாம் வேறொரு செல் வகையாக மாறுகிறோம்.

இது மண்ணிலிருந்து தோன்றிய உயிர் வகை மீண்டும் மண்ணுக்குள்ளேயே செல்லும், தத்துவத்தின் அறிவியல் பார்வைப் போன்றதுதான்.

கையேடு said...

எனக்கும் நம்பிக்கையாளர்களிடம் கேட்க இரண்டு கேள்வி இருக்கு..

1.கடவுளை ஏன் நம்பணும்?

2.தற்போது உழைத்து, உண்டு உறங்கி வாழ்ந்து வரும் ஒரு எளிய வாழ்வை சிறுமைப்படுத்தாத ஆன்மீகத் தத்துவம் ஏதாவது உண்டா?

தருமி said...

முகுந்த் அம்மா,

//எதோ ஒரு spark வரனும்ங்க அது funtional ஆக, //

இப்படி சொல்லியிருக்கீங்க; ஆனால் உங்க ஆங்கிலப் பதிவில் ..//Powered by the synthetic genome, that microbial cell began replicating and making a new set of proteins.//
- இப்படி சொல்லியிருக்கீங்க. இங்க அந்த spark எப்படி வந்திச்சி?

தருமி said...

//முதல்ல நாம எங்க இருந்து வந்தோம் அல்லது எங்க போக போறோம்னு சொல்லுங்கப்பா :))//

இதை ஒரு சமய நம்பிக்கைவாதி கேட்கும்போது, அந்தக் கேள்விக்குப் பின்னால் 'உன்னைப் படைத்தது சர்வ வல்லமை பொருந்திய கடவுள்; நீ இறுதியில் அவரைப் போய்ச்சேரவே படைக்கப்பட்டுள்ளாய்' என்கிற (ஆன்மீகத்) தத்துவம் நிற்பதுதான் வாடிக்கை. இங்கும் இந்தக் கேள்வியின் பின்னால் அந்தக் கேள்வி இருப்பதாக எண்ணி, என் கேள்வியை அதற்குப் பதிலாக எழுப்புகிறேன்: மனிதன் கடவுளால் படைக்கப்பட்டான். அவன் மரணத்திற்கு / ஜென்மங்களுக்குப் பிறகு கடவுளிடம் சேரவேண்டும். என் வீட்டு நாய்க்குட்டி என்ன ஆகவேண்டும். அதுவும் கடவுளிடம் சேரணுமா? சேரணும்னா அது பாவம் இந்தப் பிறவியில் ஒண்ணும் தெரியாதஜென்மமாக இருக்கிறதே .. பாவம் என்ன செய்யும் அது?

கையேடு கொடுத்த பதில் எனக்கு பிடிக்குது. நான் செத்த பிறகும், என் நாய் செத்த பிறகும் //மண்ணிலிருந்து வந்தோம், மண்ணுக்குள்ளேயே போகப்போறோம், அவ்வளவுதான் இந்த எளிய விடையே போதுமானதாக இருக்கிறது ( எனக்கு)?//

கையேடு said...

...தொடர்ச்சி -மேலே விட்ட பின்னூட்டத்திற்கு கூடுதல் இணைப்பாக...

---புற்றுநோய்ச் செல்கள் இச்சமிஞ்சைய எப்படி தாண்டிவருகின்றன என்பது மிகவும் ஆர்வமூட்டும் ஒரு செய்தியாகவே இருக்கிறது. இது குறித்து பின்னர் தேவைப்பட்டால் பேசலாம்.

அறிவியல் ரீதியாக மேலே சொல்லியிருந்தாலும், சமூகத்தளத்தில் ஆன்மீகத்தையும், கடவுளையும் நான் ஏன் நிராகரிக்கிறேன் என்று விளக்க முயற்சிக்கிறேன்.
கடவுள் கொள்கை மனிதனின் ஆகப்பெரிய பலவீனம் ஆகும்.

மனிதனின் தனிச்சிறப்பாகக் கருதிக்கொள்ளும் சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒன்றாகவே கடவுள் கருத்து இருக்கிறது.
அமினோ அமிலங்களுக்குக் கிடைக்கும் ஒரு ஒளிவெட்டுதான் கடவுள் என்றால், அதற்கு மேல் உரையாட ஒன்றுமேயில்லை. சிந்தனைக்கும் உரையாடலுக்கும் ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். கடவுள் கருத்து என்பது கியுரியாஸிடி பேசிஃபையராகவே இருக்கிறது சிலருக்கு. இதற்கு மேல் கடினப்பட்டு சிந்திக்க வேண்டாம் என்று தனக்குத்தானே வைத்துக் கொள்ளும் ஒரு எல்லையாகவே இருக்கிறது. அது தவறும் கிடையாது ஆனால், அதுதான் எல்லை, அதுதான் அனைவருக்குமான எல்லையாக இருக்க வேண்டும், என்பதுதான் சிக்கலுக்கான விதையாக இருக்கிறது.

Thekkikattan|தெகா said...

Thekkikattan|தெகா said...
//அதாவது இனப்பெருக்கத்திற்காக தன்னைத்தானே பிரதியெடுத்தல் முறையிலிருந்து, கலவி, அதாவது ஜீன்பரிமாற்றம் என்ற யுக்தியைச் செல்கள் கையாளத் துவங்கியபோதுதான் இறப்பு எனும் இயற்கை நிகழ்வு தவிர்க்க இயலாத ஒரு நிகழ்வாக உயிரிகளுக்குள் புகுந்திருக்கிறது என்று (Sex and Origin of Death) என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார் வில்லியம் ஆர்.க்ளார்க். இதை இயற்கையின் அடிப்படைப் பண்புகளில் ஒன்றான குறைந்த ஆற்றல் செலவீடு அடிப்படையில் விளக்குகிறார்.//

கையேடு, இங்க எனக்கே ஒரு கேள்வி. சுவாசிக்கும் நிலையிலுள்ள எந்த ஓர் உயிரினமும் வளர்சிதை மாற்றத்திற்கு உட்பட்டதே என அறிகிறோம். அதாவது அதற்கென வளர்ச்சிப் பருவங்கள் உண்டு, அதனின் வளர்சிதை ஆற்றலுக்கென பயன் படுத்திக்கும் சக்தியைப் பொருத்து தனது உடல் உறுப்புகளும் (அதனை கட்டமைக்கும் செல்களும், புதுப்பித்து, மரணித்து...) அத்துடனே செயல் இழக்கும் தன்மையை அடையிம் பொருட்டு முன்னோக்கியே செல்கிறது.

புற்று நோய்ச் செல்களை எடுத்துக் கொண்டாலும் அதன் தீவிரம் பல்கிப் பெருகும் தன்மையைக் கொண்டே அந்த தனிப்பட்ட செல்கள் மென்மேலும் தனது வளர்ச்சியை அதீதப் படுத்திக் கொள்ளலாம். ஆனால், புற்று நோய்ச் செல்களுக்கு தனிப்பட்ட ரீதியில் மரணிப்பே கிடையாதா? புரியவில்லை?!

இருந்தாலும் இப்படிச் சொல்லி இருக்கீங்க, ... அவை தங்களது வாழ்க்கைக் கடிகாரத்தை மறுசுழற்சிக்கு உட்படுத்திக்கொள்பவையாக இருக்கின்றன. இதுவே இறந்த உடல் அழுகுவதற்கான முக்கியப் பங்கு வகிக்கின்றன.

கையேடு said...

அந்த இடத்தில் கொஞ்சம் குழப்பியிருக்கிறேன் உண்மைதான்.

புற்றுநோய்ச் செல்கள் தனித்த வகையான செல்கள் அல்ல என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒரு குறிப்பிட்ட செல்வகை அதீத செல் வளர்ச்சிக்கு உட்பட்டு பல்கிப் பெருகும் போது, அவற்றுக்கான உணவும் ஆற்றலும், அதைத் தாங்கிக்கொண்டிருக்கும் ஆதார விலங்கிடமிருந்தே எடுத்துக்கொள்கிறது. அதனால் அவை ஆதார விலங்கு இறக்கும்போது இறந்து போகிறது.

ஆனால், இந்த கடிகாரத்தை மீண்டும் துவக்கிக்கொள்ளும் பண்பு சில கிருமிச் செல்களுக்கு இருக்கிறது என்று குறிப்பிடுகிறார்.
இதைத்தான் அவர் உடல் அழுகுதலுக்கான முக்கியக் காரணியாகச் சொல்கிறார்.

நான் இரண்டையும் ஒரே இடத்தில் சுட்டிக் காட்டி குழப்பியிருக்கிறேன்.

முகுந்த் அம்மா said...

கையேடு அவர்களுக்கு

//மண்ணிலிருந்து வந்தோம், மண்ணுக்குள்ளேயே போகப்போறோம், அவ்வளவுதான் இந்த எளிய விடையே போதுமானதாக இருக்கிறது ( எனக்கு)?//

சரி மண் எங்கிருந்து வந்தது?.
இந்த கேள்விக்கி நீங்க உடனே பிக் பாங்க் தியரியை துணைக்கு இழுக்க வேண்டி வரும். அதன்படி நாமெல்லாம் ஒரு சூன்யதிலிருந்து வந்திக்கோம்.

we all came from nothing.

இது பல கோடி வருடங்களுக்கு முன்பே இந்து மதத்தில் கூற பட்டுள்ளது. இன்னும் கூட பல தியான வகுப்பிலும் ஒரு சூன்யத்தை நோக்கி தியானம் செய்ய சொல்வது இதனாலெயே.


தொடரும்...

Thekkikattan|தெகா said...

சரி மண் எங்கிருந்து வந்தது?.
இந்த கேள்விக்கி நீங்க உடனே பிக் பாங்க் தியரியை துணைக்கு இழுக்க வேண்டி வரும். அதன்படி நாமெல்லாம் ஒரு சூன்யதிலிருந்து வந்திக்கோம்.//

இந்த விடயத்தை தொட்டு பேசினாலே இன்னும் கூடுதலாக எல்லாவிதமான இயக்கங்களையும் இயற்கை என்ற கட்டற்ற இயக்கவியலுக்குள் அடங்கியாதாகவே பார்க்கத் தோன்றுகிறது.

நுயிப்லா விலிருந்து தோன்றிய சூரியன், அதனின்று விலகிய (எஞ்சிய) இதர வாயுவும், ஏனைய பொருட்களுமாக இணைந்து பூமி போன்ற திட கிரகங்களையிம், மற்ற வாயு நிலை கிரகங்களையிம் கட்டமைத்து கொள்கிறது என அறிகிறோம்.

பின்பு படிப்படியாக பல வேதிய மாற்றங்களை எட்டியெட்டி நம் கிரகத்தைப் போல உயிர்களை சிருஷ்டிக்கும் நிலையையிம் அடைகின்றது என்றும் அறிகிறோம். நம் உடம்பில் இருக்கும் அத்தனை கட்டுமானப் பொருட்களும் இந்த அண்டவெளியிலிருந்தே எடுத்துக் கொள்ளப்பட்டது. மீண்டும் அதுவாகவே மறுசுழற்சியில் சென்றடைகிறது.

இந்த நிலையை எட்ட எத்தனை கோடான கோடி மில்லியன் வருடங்களை எடுத்துக் கொண்டு ஒரு பரிணாம சங்கிலியாகவே எல்லாமே நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. கொசுவிலிருந்து இன்று பரிணாமத்தின் உச்சத்தில் இருக்கும் மனிதன் வரைக்கும் இயங்குதள உடலுறுப்புகள் அனைத்திற்கும் இனப்பெருக்கம் செய்யவும் கழிவுகளை நீக்கவும் தேவையாகவே இருக்கின்றன.

----தொடரும்...

Thekkikattan|தெகா said...

--தொடர்ச்சி...1

இதனில் மூளையின் அமைப்பில் கொஞ்சம் காம்ப்லெக்ஸிடியை தீட்டித்தந்த இயற்கை மனிதனை மட்டும் ஒரு புனித ஜந்துவாக ஆக்கிக் கொண்டதாக அவர்களை நம்ப வைக்கிறதே ஏன்? டைனோசர்களுக்கு முன்பு எங்கே இருந்தோம் நாம்?

மனிதனுக்கு மிக அருகே மரபணு சார்ந்து கிட்டே வரும் போனோபோஸ்களும் கிட்டத்தட்ட tool using and makingல் தனக்குத் தேவையான உணவை தேடிக் கொள்கிறது. நம்ம மனித இனம் மட்டும் இந்த பூமியப் பரப்பிலிருந்து ஏதோ ஒரு காரணத்திற்காக தொடைத்தெடுதுக் கொண்டதிற்கு பிறகாக, இந்த போனோபோஸ்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் என்னாகும்? அடிப்படை உணவைத் தேடி வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்து பூமியில் செழித்தோங்குவது மட்டும் அடிப்படை நிலையென்றால்...

கொடுத்த கால கட்டத்தில் இன்னும் காம்ப்லெக்ஸாக சங்கிலித் தொடர் போன்ற கற்றல், அதனை மெருகேற்றல் என்ற தொடர்வினையே இன்னும் கூடுதலான அவைகளின் முதன்மை intelligence நிலைக்கு தள்ளி முன்னேற்றாதா?

The Analyst said...

This is a critical analysis of the paper by a microbiologist - quite interesting

Thekkikattan|தெகா said...

Analyst,

நானும் பாதிக்கு மேல நீங்க கொடுத்த இணைப்பில உள்ள பேப்பர் விசயங்களை படிச்சேன். பிறகு கொஞ்சம் அங்கே உள்ள மறுமொழிகளையிம் வாசிச்சேன். வாசிச்சிட்டே வந்தப்போ எனக்கு இந்தக் கேள்விதான் தோணுச்சு : இந்த பாக்டீரியம் பாஸ்பேட்டையோ அல்லது ஆர்சனேட்டையோ சில குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் உண்டு வளர்வதில் மாற்றம் காமித்தாலும்...

ஆர்சனேட்டை உண்டு கொண்டு வளர்வதால் மற்ற நாம் அறிந்த பூமி உயிர்களைக் காட்டிலும் இந்த பாக்டீரியம் வித்தியாசமானது என்றே தோணச் செய்கிறது. அப்படி இருப்பின் அதன் இயங்கு செல்களும் அதற்கு தகுந்ததது போலத்தானே கட்டமைக்கப் பெற்றிருக்கும்... உங்களுத் தெரிஞ்சா கொஞ்சம் விளக்குங்களேன். தெரிஞ்சிக்கிறோம்.

The Analyst said...

I completely agree with கையேடு + தெகா

"அதற்க்கு தகுந்த சூழ்நிலை அமையனும். எதோ ஒரு spark வரனும்ங்க அது funtional ஆக, என்னை பொருத்தவரை அந்த spark தான் கடவுள். "

Are you using the term "god" in a metaphorical way?

கடவுள் இருப்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை எனும் போது குறிப்பிடும் கடவுள்: எல்லாம் வல்ல, எல்லாம் தெரிந்த, எங்கும் இருக்கும், எமது அன்றாடச் செயல்களை மதிப்பிட்டு, கணக்கு வைத்து பின் தண்டனைகளும் தரும் ஒருவர். ‍ அவ்வாறு ஒருவர் இருப்பதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. அதோடு there are many logical flaws with that definition.

Keeping with the spirit of the season, as somebody said, god seems like the santa claus for adults.

முகுந்த் அம்மா said...

தருமி அவர்களுக்கு

//இப்படி சொல்லியிருக்கீங்க; ஆனால் உங்க ஆங்கிலப் பதிவில் ..//Powered by the synthetic genome, that microbial cell began replicating and making a new set of proteins.//
- இப்படி சொல்லியிருக்கீங்க. இங்க அந்த spark எப்படி வந்திச்சி?//

நிறைய பேர் உங்களைப்போலவே synthetic genome பத்தி குழம்பி இருக்காங்க.

முதல்ல குலோனிங் னா என்னன்னு கொஞ்சம் பார்ப்போம். இந்த முறைப்படி நமக்கு தேவையான DNA products ஐ வெட்டி அதனை எதோ ஒரு வைரல் அல்லது பிலாஸ்மிட் வெக்டர்ல ஒட்டி அந்த பிலாஸ்மிட் ஐ தன்னை தானே நகல் எடுக்க விடுவது..இது தான் பொதுவா நடக்கிற குலோனிங் முறை.

இந்த பிலாஸ்மிட் அல்லது வைரஸ் ம் ஒரு உயிரினம் தான்.

பாக்டீரியா முதல் பாலூட்டிகள் வரை அனைத்திலும் இந்த டிஎன்ஏ நகல் எடுப்பது நடக்குது.

அது போலவே பல டிஎன்ஏ பாகத்தை இனைச்சு நகல் எடுத்தது தான் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு ஜினோமே தவிர லாப் ல ஜஸ்ட் லைக் தட் உருவாக்கினது அல்ல.

முகுந்த் அம்மா said...

கையேடு, அனலிஸ்ட் மற்றும் தெகா அவர்களுக்கு

டிஎன்ஏ வோ அல்லது ப்ரோடீன் ஓ எல்லாமெ ஹைட்ரொகார்பன் ல இருந்து தான் வந்திருக்கு.

அதன் பேசிக் C, H, O அது தவிர மற்ற சில தனிமங்களும் சேர்ந்து நமக்கு ஒரு அமினோஅசிடோ அல்லது ஒரு பெப்டைடோ கிடைக்கலாம். ஆனால் அது ஒரு பெப்டை செயின் ஆக மட்டுமே இருக்கும்..அது ஒரு செயல் படுற புரோடீன் ஆகனும்னா 3D structure ஆகனும் fold ஆக சூல்நிலை அமையனும் அதை தான் ஒரு spark அப்படின்னு குறிபிட்டேனே ஒழிய அது ஒரு ஒளிக்கற்றை என்று குறிப்பிடவில்லை.

அந்த spark என்பது எதாவது ஒரு வகை எனெர்ஜி ஃபொர்ம் ஆக இருக்கலாம்.

இதனை நீங்கள் இயற்க்கை என்று சொல்லுகிரீர்களா அதுவும் சரி தான். எனென்றால் அதுவும் ஒரு வகையான நம்பிக்கை தான் Paganism. So, எதொ ஒரு சக்தி நம்மை எல்லாம் ஆட்டுவிக்கிறது என்று நம்பினாலே நீங்கள் எல்லாம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாகி விடுகிறீர்கள்.

முகுந்த் அம்மா said...

//Are you using the term "god" in a metaphorical way?

கடவுள் இருப்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை எனும் போது குறிப்பிடும் கடவுள்: எல்லாம் வல்ல, எல்லாம் தெரிந்த, எங்கும் இருக்கும், எமது அன்றாடச் செயல்களை மதிப்பிட்டு, கணக்கு வைத்து பின் தண்டனைகளும் தரும் ஒருவர். ‍ அவ்வாறு ஒருவர் இருப்பதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. அதோடு there are many logical flaws with that definition.

Keeping with the spirit of the season, as somebody said, god seems like the santa claus for adults.//

கடவுள் நம்பிக்கை, மதம் எல்லாம் மனித இனம் தன்னை நெறி படுத்திக்கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு வழிமுறை.

பொய் சொன்னா கடவுள் கண்ணை குத்திடுவார் அப்படின்னு குழந்தைகளுக்கு பயமுறுத்துற மாதிரி. நீ பாவம் செய்தா கடவுள் கணக்கு வச்சிருபார் அப்படின்னு சொல்லுறது. அந்த பயத்திலயாவது தப்பு பண்ணாம இருப்போமே அப்படிங்கிற நினைப்பில சிறு குழந்தைகளுக்கு சொல்லுற மாதிரி சொல்லுறது தவிர வேறு எதுவும் இல்லை.

மனிதனை நெறிப்படுத்த உருவாக்கப்பட்ட மதம் கடவுள் என்பதெல்லாம் இப்போது பல வழிகளில் சிதைக்கப்பட்டு தீவிர மதவாதிகளால் திசை திருப்பபட்டிருக்கிறது என்பது வருந்ததக்க உண்மை.

தவறு said...

ஆரோக்கியமான கருத்துபரிமாற்றம் செய்த தெகா,கையேடு மற்றும் முகுந்தஅம்மா அவர்கட்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.

தெகா கையேடு வெளுத்து வாங்குறீங்க இதையே தனிபதிவாக பதிவிட தெகா அவர்களை அன்புடன் வேண்டுகிறேன்.

கையேடு said...

//இதனை நீங்கள் இயற்க்கை என்று சொல்லுகிரீர்களா அதுவும் சரி தான். எனென்றால் அதுவும் ஒரு வகையான நம்பிக்கை தான் Paganism.//

இல்லை அந்த இடத்தில் எனக்கு பதில் தெரியாது என்று சொல்லுவேன்.

//இது பல கோடி வருடங்களுக்கு முன்பே இந்து மதத்தில் கூற பட்டுள்ளது. இன்னும் கூட பல தியான வகுப்பிலும் ஒரு சூன்யத்தை நோக்கி தியானம் செய்ய சொல்வது இதனாலெயே.//

பல கோடி ஆண்டுகள் என்பதை பழமைக்கான அலங்கார வார்த்தையாகக் கொள்கிறேன். ஏன்னா அப்போ மதம் இருந்ததா தெரியலை.

இரு பற்றி ஏற்கனவே கொஞ்சம் பேசியிருக்கேன். பகுதிகளாக வெளியிடுகிறேன்.

“ஆன்மீகம்” - முழுமையை நோக்கிய தேடல், ஒருமுகப்பட்ட சிந்தனை, அல்லது வெறுமையை நோக்கிய பயணம், ஆன்மாவின் உன்னதத் தேடல், ஒரு வகையான உயரிய உணர்வு, பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் இயக்கத்தையும் நடத்தும் ஒற்றைச் சக்தி மூலத்தை உணர்தல், நமக்கும் அண்டவெளிக்குமிடையே ஒரு தொடர்பை உணரச்செய்பவை, மனித வாழ்க்கையைச் செம்மைப்படுத்தி, செழுமைப்படுத்தும், முழுமைப்படுத்தும் ஒரு உணர்வு ... என அடுக்கிகொண்டே போகலாம். இவ்வார்த்தையின் வாழ்வாதாரமே அது தெளிவான வரையறையற்றிருப்பதுதான் அல்லது வரையறுக்கமுடியாதது என்ற வரையறையைச் சுமந்து கொண்டிருக்கும் ஒரு முரண்.

இங்கே இருக்கு - http://kaiyedu.blogspot.com/2008/08/i.html

கையேடு said...

பகுதி 2: -
ஆன்மீகத்தில் ஆற்றல் குறித்த கதையாடல் எப்போதும் ஒளிவடிவமாக வர்ணிக்கப்படுவதைக் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. இப்புள்ளியில் ஆன்மீகம் பேசும் “ஆற்றல்” மனிதனின் சூழல் குறித்தான கிரகிப்புத்தன்மையில் (perception) விளைந்தது என்பது தெளிவாகிறது. ஆன்மீகம் என்பதும் வளர்சூழலிருந்து தோன்றிய ஒன்றாகயிருப்பதால் சூழல் குறித்தான நிகழ்வுகளையும், விளைவுகளையும் அடிப்படையாகக் கொண்டு விளைந்தவையாகவேயிருக்கின்றன. அதனாலேயே ஆற்றல் குறித்தான ஆன்மீகக் கதையாடல் அனைத்தும் கண்ணுறு ஒளிவடிவமாகவே ஆற்றலை உருவகப்படுத்துகின்றன. ஆனால், அறிவியல் பல வகை ஆற்றல்களைப் பற்றிய புரிதல் கொண்டுள்ளது. ஆன்மீகம் பேசும் ஆற்றல் என்பது எப்போதும் கண்ணுறு ஒளிவடிவமாகவேயிருப்பதற்கான முக்கியக் காரணிகளில் ஒன்று ஆதிகால மனிதனின் ஆற்றல் குறித்தான கிரகிப்புத்தன்மை சார்ந்தது. இவை ஒரு வகையான கட்டமைப்பின் அடிப்படையில் பழக்கப்படும்/பழக்கப்படுத்தப்படும் நிகழ்வுகள். இது வெறும் விவாதத்திற்கான எடுத்துக்காட்டு மட்டுமே.

ஆனால், மனிதனது மூளையின் செயல்பாடுகளுள் பல இப்படியான கிரகிப்புகளின் அடிப்படையில் இயங்குவதுதான். இதனடிப்படையிலேயே நமது மூளை தொடர்பற்ற நிகழ்வுகளைத் தொடர்புபடுத்திப் பொருளறிந்து பார்த்து, தமக்கான முடிவுகளை ஏற்றுக் கொண்டு சமாதானமடையும் ஒரு கருவியாகவேயிருக்கிறது. இதனடிப்படையிலேயே ஆன்மீகம் பெரும்பாலும், பொருண்மை குறித்த கதையாடலைத் துவங்குகிறது. ஆதாவது மூளை என்னும் பொருண்மையில் தோன்றும் மனது/சிந்தனை மற்றும் அதன் செயல்பாடுகளினது ஆற்றலானது இப்பிரபஞ்ச இயக்கம் மற்றும் அவ்வாற்றல் மூலத்திற்குமான தொடர்பு, குறித்தான கதையாடலாகயிருக்கிறது.

இக்கூற்றுகளில் எதுவும் தவறிருப்பதுவாகத் தெரியாது, ஏனெனில் மனித மூளையில் தோன்றும் மனது என்பது உருவமற்றது (மனது என்ற கருத்தே கேள்விக்குறியாகிக் கொண்டுதானிருக்கிறது). மனித மூளையின் செயல்பாடுகளிலிருந்து வெளிப்படும் மின் மற்றும் காந்த சமிஞ்சைகள் குறித்து அறிவியல் பேசியதால், இதைத்தான் ஆன்மீகம் குறிப்பிடுகிறது என்று எளிமையாகத் தொடர்புபடுத்த முடிந்தது. இம்மனதிலிருந்து தோன்றும் ஆற்றலானது இப்பிரபஞ்சத்தின் ஆற்றல் மூலத்துடன் நம்மைத் தொடர்புபடுத்துவதாகவும் எளிதாகத் தொடர்பு படுத்த முடிந்தது. அப்படித் தொடர்பு படுத்துவது என்ன தவறா? எப்படியானாலும் அதைத்தானே அறிவியலும் சொல்கிறது என்பதுதான் மனித மூளையின் உடனடிச் செயல்பாடு. இது, ஒரு வகையில் மனிதனின் சிந்தனைத் திறத்தினால் எழும் வேட்கையினைத் தணிப்பதற்காக உருவாக்கிக்கொள்ளும் ஒரு அனுமானம் அல்லது முடிவு.

http://kaiyedu.blogspot.com/2008/08/iii.html

கையேடு said...

பகுதி 3 -

இப்புள்ளியில் மேம்போக்காக வெறும் கருத்தாகப் பார்த்தால் அறிவியலும் ஆன்மீகமும் இணையத்தான் செய்கின்றன. ஆனால், அறிவியல் மூளையிலிருந்து மின் மற்றும் காந்த விசைகளின் செயல்பாடுகளைக் குறித்துப் பேசினாலும் அதோடு நின்றுவிடுவதில்லை. மூளை எனும் மின்வேதிமக்கலனில் இருக்கும் நியூரான்கள் அணுக்களாலும் மூலக்கூறுகளாலும் ஆனவை. ஒருவர் தியானம் அல்லது அமைதியான வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் போது, நமது மூளையில் உருவாகக் கூடிய சில வேதி மாற்றங்கள் மற்றும் நியூரான்களின் இணைப்புகளின் மாற்றத்தினால் ஏற்படும் செயல்பாட்டு மின்னழுத்தம் 0.0005 - 0.0015 வோல்டுகளாகவும், இவ்வகை மின்சமிஞ்சைகளின் வீச்சு 0.000010 - 0.000050 வோல்டுகளாகவும், இருப்பதாக அளவிடப்பட்டிருக்கிறது. மூளையில் நிகழும் அயனி இயக்கங்களின் நிகழ்வுகளால் ஏற்படும் மின் மாற்றங்களை மனிதனின் மண்டையோட்டு எலும்புகளுக்கு வெளியே அளவிடுவது இயலாத காரியம். ஆனால், இவ்வகை அயனிகளின் இயக்கங்களினால் ஏற்படும் காந்தப்புலம் அளவிடக் கூடியது. இப்படி அளவிடப்பட்ட காந்தப்புலமானது ஏறத்தாழ ~10ன் அடுக்கு -15 டெஸ்லா (காந்தப் புலத்தின் அலகு). இக்காந்தப்புலத்தின் எண்மதிப்பு பூமியின் காந்தப் புலத்தைவிட(~10-6T)ஏறத்தாழ ஒன்பது அடுக்குகள்(ஒன்பது மடங்குகள் அல்ல ஒன்பது அடுக்குகள்) குறைந்தது. இவ்வலிமை குறைந்த புலத்தை பூமியின் புறவிசைகளிலிருந்து தனித்து அளக்க வேண்டுமெனில் அது அவ்வளவு எளிதான காரியமல்ல.[1]

இப்படிப்பட்ட அமைதிநிலையில் தியானித்திருக்கும் ஒருவர், பூமியுடன் சேர்ந்து மணிக்கு 1,038 மைல்கள் வேகத்தில் சுழன்று கொண்டும், சூரியனைச் சுற்றி வினாடிக்கு 18.5 மைல்கள் வேகத்திலும், பால்வழியிண்டத்தின் மையத்தைச் சுற்றி வினாடிக்கு 150 மைல்கள் வேகத்தில் சுற்றிக் கொண்டும், பேரண்டவெளியில் ஏறத்தாழ வினாடிக்கு 1000 மைல்கள் வேகத்தில் நகர்ந்து கொண்டுமிருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் மனிதனது மூளையிலிருந்து வெளிப்படும் இவ்வலிமை குறைந்த காந்த விசையின் செறிவு, மற்றும் அவ்விசைகளின் பாயம் செயல்படும் வெளியின் அளவு, ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால், இப்பேரண்டத்தின் ஏதோ ஒரு புள்ளியில் இருப்பதாக நம்பப்படும் ஒரு ஆற்றல் மூலத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டிருப்பது சாத்தியமா..??[1]

முழுவதும் இங்கே - http://kaiyedu.blogspot.com/2008/08/iii.html

கையேடு said...

பகுதி - 4: உணர்வு

ஆன்மீகம், மனிதனின் வளர்சூழல் சார்ந்த பார்வையினடிப்படையில் எழும் உணர்வு ரீதியான தேடல் என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது. ஆனால், ஆன்மீக உணர்வுகள் வளர்சூழல் சார்ந்த கிரகிப்புகளினடிப்படையில் பழக்கப்படுத்திக்கொள்பவை என்ற கண்ணோட்டத்தில் அது இயற்கையிலேயே பிறக்கும்போது தோன்றுமோர் உணர்வல்ல. வளர்சூழலில் தோன்றியதாயிருந்தாலும் ஆன்மீகமும் மனிதனின் சிந்தனைத்திறத்தால் உருவாகும் ஓர் உணர்வே.

இவ்வுணர்வு ரீதியினாலான தேடலும், கடுமையான பயிற்சியின் மூலமே சாத்தியப்படுத்தப் படமுடியும் என்பதாக நம்பப்படுகிறது. மேலும், இப்பிரபஞ்ச இரகசியத்தை நோக்கிய ஒரு உண்ணதத் தேடல் என்றும், அத்தேடலின் விளைவால் அறிந்த உண்மைகளின் உதவியோடு சமூக வாழ்விலிருந்து மனிதனை உய்விப்பதையே தனது தலையாயக் கடமையாக வரிந்துக்கொள்கிறது ஆன்மீகம். மேலும், மனதை சுத்தப்படுத்துதல், அழிவில்லாத ஆன்மா, பிரபஞ்ச இரகசியத்தை உணர்தல் என்பன போன்ற கதையாடலாக சமூகத்தினுள் நுழைந்து தனது இருத்தலுக்கான அவசியத்தையும், நியாயத்தையும் கற்பிக்கிறது. இதனடிப்படையிலேயே ஆன்மீகத் தேடல் ஒருவனது வாழ்வினை முழுமைப்படுத்துவதாகவும், மனிதனின் பிறப்பே இத்தேடலுக்காக, போன்ற கருத்துக்கள் நம்பிக்கைகளாகின்றன. இவ்வகையான தத்துவ அடிப்படைகள் மெல்ல உடலைத் தாழ்த்தி, ஆன்மாவை முதன்மைப் படுத்து முனைகின்றன. இவ்வகையான தத்துவ அடிப்படைகளைக் கொண்ட இனக்குழுக்களின் உளவியல் எப்படியிருக்கிறது, அல்லது அதன் விளைவாகச் சமூகச் சூழல் எப்படி உருமாறியிருக்கிறது என்பது கருத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்று.

ஆன்மாவையும், மனதையும் முதன்மைபடுத்தி உடலை வருத்திக்கொள்ளும் அல்லது தாழ்த்திக்கொள்ளும் இனக்குழுக்களிடம் இருக்கும் பொதுவான பண்புகளில் சில:

1. குழந்தைகளுக்கு தண்டனையாக உடலில் வலியை ஏற்படுத்துதல்.

2. சமூகத் தண்டனைகளாக உடல் வன்முறைகளை அதிகமாகப் பயன்படுத்துதல்.

3. பெண்களை, ஒரு பொருளாகக் கருதுதல். மேலும், உடல்குறித்தான கட்டுப்பாடுகளை முன்னிறுத்தி பெண்களை ஒடுக்குதல். இதன் மூலம் திருமணங்களை ஒரு வியாபாரம் போல பாவித்து, பொருள் கொடுத்துப் பெண்ணின் உடலைக் கொள்ளுதல். (இது நமது சமூகத்தில் இன்னும் மோசமாகயுள்ளது, பெண்ணை ஒரு பயனுள்ள பொருளாகக் கூடக் கருதாமல், பெண்ணையும் பொருளையும் சேர்த்துக் கொடுத்தல்.)

4. இவ்வகைச் சமூகத்தின் இளைய தலைமுறையினருக்கு உடல் ரீதியான கட்டுப்பாடுகள் அதிகமாக இருப்பதால், மது, போதை ஆகியப் பழக்கங்களில் ஆர்வம் காட்டுதல்.

5. மணவாழ்க்கைக்கு வெளியே (குறிப்பாகப் பெண்கள்) உடலுறவு வைத்துக் கொள்ளுதல், உயிரை எடுக்கும் அளாவிற்கான குற்றமாகக் கருதுதல்.

6. ஆயுதம் தாங்கியக் கடவுளரை வழிபடுதல்

முழுவதும் இங்கே - http://kaiyedu.blogspot.com/2008/10/iv.html

கையேடு said...

பகுதி 5:-

முற்றிலும் துறத்தல் என்பதில் துவங்கிய தத்துவங்கள் பின்னர் தங்களது இறை வடிவத்தில் கூட நிர்வாணத்தை ஏற்றுக் கொள்ளாதது, இயற்கை குறித்தான கருத்துக்களில் மனித விலங்கின் சமூக வாழ்விலிருந்து விலகி, பேரண்டம், பிரபஞ்சத்தின் தோற்றம், உண்மை அல்லது தோன்றவைத்து இயக்கிக் கொண்டிருக்கும் ஆற்றல்/சக்தி குறித்த கதையாடல்களுக்குள் நுழைந்தது, என தொடர்ச்சியாக உயிரும் பொருண்மையும் சிறுமைப்படுத்தப்பட்டதை உணர்தல் அவசியம்.

வளர்சூழலின் கிரகிப்பினடிப்படையில் தோன்றிய ஓர் உணர்வாகயிருந்தாலும், இப்படியானதொரு உணர்வை மறுப்பதற்கில்லை. சிந்தனைத் திறனால் ஏற்படும் அறிதல் வேட்கைக்கான ஒரு வடிகாலாகவே இவ்வகையுணர்வு செயல்படுகிறது. இவ்வுணர்வும், ஒருவகை போதைக்கிணையான ஒன்றாகவே நோக்கலாம். இவ்வகைச் செயல்பாடுகளின் போது மூளை எனப்படும் உயிர்வேதிக்கலனில் நடக்கும் வேதியியல் மாற்றங்களால் சுரக்கும் ஒரு வகைத் திரவம் அளிக்கும் சுகானுபவமே இவ்வுணர்வும். ஆன்மீகம் இவ்வகையானச் செயல்பாடே என்பதைச் செயற்கையாகத் தியானத்தின் உணர்வை ஒருவரின் மூளையின் சில பகுதிகளை மின் தூண்டியதன் மூலம் அறிவியல் நிரூபித்திருக்கிறது.[1,2] உணர்வுகளின் ஒன்றான வலியை முதன்முதலாக அருதியிட்டு எண்மதிப்பில் அளப்பதற்கான படிநிலையை அடைந்திருக்கின்றன ஆய்வுகள்[3]. வரும் காலங்களில் உணர்வுகள் உணரப்படவேண்டியவை போன்ற சொற்றொடர்கள் வழக்கொழிந்து போகலாம்.

ஆன்மீகம் எனும் உணர்வு குறித்த மதிப்பீடுகள் தனிமனித உரிமை சார்ந்தது. ஆனால், அது மனிதனின் பிறப்பின் போது இயற்கையாகத் தோன்றும் ஒரு உணர்வல்ல. அதுவே, சித்தாந்தமாக மாறி பின்னர் நம்பிக்கைகளாகச் சமூகக் கலாச்சாரத்தினுள் நுழைந்து இயற்கையான மற்றவுணர்வுகளைச் சிறுமைப்படுத்தும் ஏற்றத்தாழ்வு அரசியல் மற்றும் அதன்வழிப் பெருகும் உளவியல் வன்முறைகள் ஆகியவை கேள்விக்குட்படுத்தி அவற்றை மீள்பரிசோதனைக்குட்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

http://kaiyedu.blogspot.com/2008/10/iv.html

கையேடு said...

பகுதி 6:-

இப்பூமியில் உயிர் தோன்றியிருந்தாலும் அல்லது தோன்றாவிட்டாலும் பொருண்மை மற்றும் ஆற்றல் உறவினடிப்படையில் பிரபஞ்சங்கள் தோன்றிக் கொண்டும் அழிந்துகொண்டுமிருக்கும். இப்பிரபஞ்சம் ஏதோவொரு நோக்கத்தினடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கிறது, அல்லது இப்படியியக்கிக் கொண்டிருக்கும் ஆற்றல் குறித்த புரிதலில் ஒருவேளை ஆன்மீகத்தில் விடைகிடைத்தாலும் சூரியன் தன் அழிவை நிறுத்திவைத்துக் கொள்ளப் போவதில்லை. மேலும், இப்பிரபஞ்ச நிகழ்வுகள் அனைத்தும் ஒரு நோக்கத்துடன் நிகழ்கின்றன என்ற உணர்வே மனிதனின் சுயார்வத்தினால் விளைந்த கேள்விக்கான தேடுதல் வேட்கையைத் தணிப்பதற்கான அனுமானமேயன்றி, பூமிக்குச் சூரியனைச் சுற்றுவதற்கோ அல்லது தனது பரப்பில் உயிரைத் தோற்றுவித்திக் கொள்ளவேண்டுமென்ற நோக்கமோ எண்ணமோ கிடையாது.

http://kaiyedu.blogspot.com/2008/10/iv.html


நான் மேலே அளித்திருக்கும் பின்னூட்ட பகுதிகள் அனைத்தும் இங்கே பேசப்படுபவனோடு தொடர்புடையதாகவே கருதுகிறேன்.
அப்படியில்லாமல் தொடர்பற்ற கருத்துக் குப்பைகளாகத் தோன்றினால்.. மன்னிக்கவும்.

Thekkikattan|தெகா said...

நான் மேலே அளித்திருக்கும் பின்னூட்ட பகுதிகள் அனைத்தும் இங்கே பேசப்படுபவனோடு தொடர்புடையதாகவே கருதுகிறேன்.

அப்படியில்லாமல் தொடர்பற்ற கருத்துக் குப்பைகளாகத் தோன்றினால்.. மன்னிக்கவும்.//

கையேடு, என்ன இவ்வளவு விசயங்களை அள்ளித் தெளித்துவிட்டு கருத்துக் குப்பைன்னு சொல்லிப்போட்டீய. அருமை, அருமை. கடைசி பின்னூட்டம், ‘அது பாட்டுக் இயங்கிக் கொண்டிருக்கிறது’ என்று குறிப்பிட்ட மறுமொழி செம போங்க... மேலும் வாரேன்.

Thekkikattan|தெகா said...

//நீ பாவம் செய்தா கடவுள் கணக்கு வச்சிருபார் அப்படின்னு சொல்லுறது. அந்த பயத்திலயாவது தப்பு பண்ணாம இருப்போமே அப்படிங்கிற நினைப்பில சிறு குழந்தைகளுக்கு சொல்லுற மாதிரி சொல்லுறது தவிர வேறு எதுவும் இல்லை.//

முக்கியமான கேள்வியிது!

முகுந்தம்மா இந்த பத்தியை வைத்து தனியாகவே கட்டுரை ஒன்று கொடுக்கிற அளவிற்கு விசயமிருக்கின்னு நினைக்கிறேன் அது தனியா செய்வோம் ஒரு நாள்.

இதில பார்த்தோம்னா சிம்பன்சிகளில் அவைகளின் மூளை இயங்கும் அடிப்படையைக் கொண்டும், கற்றுக் கொள்ளும் ஆற்றலைக் கொண்டும் கண்டறியப்பட்டது அவைகள் நன்கு ஓர் அடல்ட் பருவத்தை எட்டிய போதும் மனித குழந்தைகளில் உள்ள நான்கு வயது மூளை அறிவு சார் வளர்ச்சியோடவே நின்று விடுவதாக அறிகிறோம்.

இருப்பினும் ஆய்வுக் கூடங்களில் வைத்து சொல்லிக் கொடுக்கும் பொழுது அவைகளுக்கு conditioned behavior விசயங்களை அறிந்து கொள்ளக் கூட நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்வதில்லை.

அப்படியாக இருக்கும் பொழுது காலம் தோரும் நம் மூளை அமைப்பிலும், கற்றுத் தேரும் திறனிலும் அதிக சாத்தியங்களை கொண்டிருக்கும் நாம் எப்படி ஒரு conditioned behavioral நிலையான ‘பயத்தின்’ அடிப்படையிலேயே பகுத்து அறியிம் மூளையின் வளர்ச்சியை மனிதர்களுக்கு வழங்கி மேற்கொண்டு கேள்விகளை கேட்டறிந்து நமக்கு உகந்தது எது என்று கேட்டறியும் நிலைக்கு எதிரான இந்த ‘பய நிலையே’ போதுமானதாக இருக்க முடியும்?

குழந்தைகளுக்கு வேண்டுமானால் அந்த பய உணர்வு தற்காலிகமாக உதவலாம் என்ற நிலையில்.

தருமி said...

//கடவுள் நம்பிக்கை, மதம் எல்லாம் மனித இனம் தன்னை நெறி படுத்திக்கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு வழிமுறை. //

நானும் இதையே சொல்லியுள்ளேன் ..இருக்கும்போது உன்னையும் என்னையும் 'மனிதம் உள்ள மனிதனாக' வைத்திருக்க வந்ததே மதமும், கடவுளும். இந்த 'வெளிச்சத்திற்கு'(இதைத்தான் enlightenment? என்கிறார்களோ?) வந்த பின், இல்லாத கடவுள் மனிதனுக்கு எதற்கு?

முகுந்த் அம்மா said...

கையேடு மற்றும் தெகா அவர்களுக்கு

முடிந்தால் http://www.fritjofcapra.net/shiva.html என்ற சுட்டியையும் அதற்க்கு தொடர்ப்பான புத்தகமான THE TAO OF PHYSICS
http://www.dgswilson.com/pdf/taophysics.pdf பார்க்கும்மாறு கேட்டுக்கொள்கிறேன்.

CERN எனப்படும் ஐரோப்பிய ஆரய்ச்சி கூடத்தில் நடராஜர் சிலையை காணலாம். particle physics ம் நடராஜரின் ருத்திரதாண்டவமும் இனையும் இடம் இது.

தொடரும்...

வருண் said...

***ஏன் டிஎன்ஏ வையோ அல்லது அமினொஅசிட் யோ நீங்க லேப் ல ப்ரிபேர் பண்ணலாம், ஆனா அவை எல்லாம் funtional ஆ work ஆகாது.***

Suppose, HIV protease நான் லாபில் ப்ரிப்பேர் செய்தால் அது natural HIV protease போல வொர்க் ஆகாதா?

If I hook up all the 99 amino acids with correct absolute stereochemistry? அந்த ப்ரோட்டீன் வேலை செய்யாதா?

இல்லை நீங்க சொல்ல வர்றது வேறயா?

நான் கடவுள் இருக்காரா இல்லையாங்கிற விசயத்துக்கு தாவ இஷ்டப்படலை. :)

The Analyst said...

"ஆர்சனேட்டை உண்டு கொண்டு வளர்வதால் மற்ற நாம் அறிந்த பூமி உயிர்களைக் காட்டிலும் இந்த பாக்டீரியம் வித்தியாசமானது என்றே தோணச் செய்கிறது. அப்படி இருப்பின் அதன் இயங்கு செல்களும் அதற்கு தகுந்ததது போலத்தானே கட்டமைக்கப் பெற்றிருக்கும்... உங்களுத் தெரிஞ்சா கொஞ்சம் விளக்குங்களேன். தெரிஞ்சிக்கிறோம்."

After reading many reviews from leading scientists and reading over the original article in science very carefully, it does seem that the research has lots of holes in it and they actually haven't proven their claims.

The fact that இந்த பக்டீரியம் கூடுதலானளவு ஆசனிக் உள்ள சூழலில் வாழ்கிறது என்பது புதுச் செய்தியல்ல. இது சில வருடங்களுக்கு முன்பே தெரிந்துவிட்டது. இந்த பக்டீரியாக்கள் ஒளித்தொகுப்பு செய்யும் வல்லமை உடையவை. அதற்குக் கூட தாவரங்காளைப் போல் நீரைப் பயன்படுத்தாது இவை ஆசனிக்கையே பயன்படுத்துகின்றன என 2008 கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாராய்ச்சியாளர்க்கள் புதிதாகக் கண்டுபிடித்ததாகக் கூறுவது இந்த பக்டீரியம் தனது DNA முதுகெலும்பில் பொஸ்பேற்றுக்குப் பதிலாக ஆசனிக்கை பயன்படுத்துகிறது என்பதே, which would be really cool, IF it's true. உண்மையாக இருக்கலாம். ஆனால் அவர்களின் பரிசோதனைகளின் மூலம் என்னும் நிரூபிக்கவில்லை.

Oops. Got to run. Sorry. I'll definitely write more on why it seems to be the case, hopefully later today.

Thekkikattan|தெகா said...

அனலிஸ்ட், நான் கேட்ட கேள்விக்கு நீங்க நேரம் எடுத்துக்கிட்டப்போவே எனக்கு விளங்கினிச்சு நீங்க ஓடி, ஓடி படிச்சி ஊர்ஜிதப் படித்தி கொண்டுருக்கிங்கன்னு :)...

//இந்த பக்டீரியம் தனது DNA முதுகெலும்பில் பொஸ்பேற்றுக்குப் பதிலாக ஆசனிக்கை பயன்படுத்துகிறது என்பதே, which would be really cool, IF it's true.//

நானும் அப்படியே நம்புறேன்.

//ஆனால் அவர்களின் பரிசோதனைகளின் மூலம் என்னும் நிரூபிக்கவில்லை. //

அப்படியா?!! ஹ்ம்ம்ம். இருப்பினும் the end result would be more interesting ...

வாங்க, வாங்க வந்து நேரமிருக்கும் போது மிச்சத்தையிம் எங்களோட பகிர்ந்துக்கோணும். இல்லன்னா உங்களுக்கு அந்த படிச்ச சாப்ட்டார் செரிக்காது சொல்லிட்டோம்பா :)

முகுந்த் அம்மா said...

//Suppose, HIV protease நான் லாபில் ப்ரிப்பேர் செய்தால் அது natural HIV protease போல வொர்க் ஆகாதா?

If I hook up all the 99 amino acids with correct absolute stereochemistry? அந்த ப்ரோட்டீன் வேலை செய்யாதா?

இல்லை நீங்க சொல்ல வர்றது வேறயா?
//

No லாப் ல ப்ரிபேர் செய்யப்படுற உங்களோட HIV protease வேலை செய்யாது..அப்படி வேலை செய்து இருந்தா இன்னேறம் எய்ட்ஸ் க்கு மருந்து கண்டு பிடிச்சு இருப்பாங்களே :)))

எந்த ப்ரொடீன் ஒடவும் 3 டி கன்ஃபொர்மேஸன் ரொம்ப முக்கியம் அது செயல்பட.

அதுவும் HIV protease பத்தி கேட்கவே வேண்டாம்..அதிக volatile மூலக்கூறு அது...தனக்குள்ளாற mutation செய்து கொண்டு ரொம்ப சீக்கிரம் தன்னோட 3 டி structure ஐ மாற்றிக்கொள்ளும் ரொம்ப clever.

The Analyst said...

Why NASA's claims are more like 'I've identified a tumour suppresor gene (பொதுவாக செல்கள் வளர்வதை வேறு வேரு முறைகளில் தடுக்கும் மரபணுக்கள்), bingo - I've cured cancer" kind of claim.

1. DNA ஜ பக்டீரியத்திடமிருந்து பிரித்தெடுக்க அவர்கள் சாதாரணமாகப் பயன்படுத்தும் phenol-chloroform extraction முறையை உபயோகித்துள்ளனர். இதன் மூலம் DNA ஒரு நிறமற்ற ஜெலி மாதிரி precipitate பண்ணும். அதை பின் நீரில் கரைத்து பரிசோதனையின் அடுத்த கட்டத்திற்குப் பயன் படுத்துவோம். இவர்களும் அவ்வாறே செய்துள்ளனர். இதில் என்ன பிரச்சனை என்றால், பொஸ்பேற்றை முதுகெலும்பாகக் கொண்ட DNA நீரில் உறுதியாக இருக்கும். ஆனால் ஆசனேற்றை முதுகெலும்பாகக் கொண்ட DNA நீரில் மிக வேகமாக உடைந்து விடும். ஆனாலும் அவர்கள் கொடுத்துள்ள gel image இல் ஆசனிக்கில் வளர்க்கப்பட்ட பக்டீரியாவின் DNA சிறு சிறு துண்டுகளாக இல்லாமல் பெரிய ஒரு தனி band ஆகவே காட்டப்பட்டுள்ளது. ஏன் அது உடைந்து துண்டு, துண்டுகளாக இல்லை. ஒரு அசனேற்‍‍ DNA ஜ இவ்வாறு காட்ட இயலாது. அதற்கு அவர்கள் ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை.


2. இவ்வாறு DNA ஜ‌ gel ல் ஓடவிட்டு, பின் gel லிருந்து பிரித்தெடுத்து அதில் என்னென்ன மூலகங்கள் இருக்கென ஆராயும் போது ஆசனிக் கூடிய ஊடகத்தில் வளர்ந்த பக்டீரியாவின் DNA ல், பொஸ்பரஸ் இருந்த ஊடகத்தில் வளர்ந்த பக்டீரியாவின் DNA ஜ விடக் கூடியளவு ஆசனிக் இருந்தது. இதன்படி அவர்கள் ஆசனிக்கில் வளர்ந்த பக்டீரியா, ஆசனேற்றை அதன் DNA முதுகெலும்பில் வைத்துள்ளதெனக் கூறியுள்ளனர். ஆனால் ஆசனெற் மிகவும் ஒட்டும் தன்மை வாய்ந்தது. The fact that இந்த பக்டீரியா ஆசனிக் கூடுதலாகவுள்ள ஊடகத்தில் வளர்ந்த்து makes it possible that ஆசனிக் அதன் DNA இலும் ஒட்டியிருக்க. கட்டாயம் DNA இன் முதுகெலும்பில் ஆசனேற் இருந்தால் தான் இந்த result வந்திருக்குமென்றில்லை, கூடுதலான ஆசனிக், DNA ல் சும்மா ஒட்டியிருந்தாலும் இதே முடிவையே அந்தப் பரிசோதனை கொடுத்திருக்கும்.

As a negative control, அவர்கள் செய்த பரிசோதனையோடு கூடுதலாக ஒரு DNA முதுகெலும்மில் பொஸ்பேற் உள்ளதென்று நிச்சயம் செய்யப்பட்ட‌ பக்டீரியாவை ஆசனிக் கூடுதலாக உள்ள ஊடகத்தில் விட்டு, பின் அந்த பக்டீரியாவிலிருந்து DNA ஜத் தனிப்படுத்தி மேற்சொன்ன பரிசோதனையைச் செய்து அந்த DNA ல் ஆசனேற் இல்லை என்று காட்டினார்களேயானால் மேற் சொன்ன முடைவை ஓரளவு நம்பலாம். ஆனால் காட்டவில்லை. Negative controls are very very important to make sure that the resutls you see are true.

3. அதோடு அவர்களின் ஆசனிக் கூடுதலான ஊடகத்தில் பொஸ்பரஸ் முற்றாக இல்லாமல் இல்லை. ~3 micromolar (10-6 moles/litre) பொஸ்பரஸ் இருந்தது. அது ஊடகத்தில் உள்ள contaminant என அவர்கள் சொன்னாலும், அந்தளவு பொஸ்பரஸ் இந்த பக்டீரியாவிற்கு DNA உருவாக்கக் காணாதென்று இவர்கள் எப்படி முடிவு செய்தார்கள். Apparently, Sargasso கடலில் (North Atlantic ocean க்கு நடுவில் உள்ளது) பொஸ்பேற் அளவு 10 nanomolar (10-9 moles/litre) இலும் குறைவானதாம். ஆனால் அங்கும் நிறைய நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. அவற்றின் DNA ன் முதுகெலும்பில் பொஸ்பேற்றே உள்ளது. அவை தமது lipids இலிருந்து பொஸ்பேற்றை நீக்கி DNA உருவாக்குவதற்குப் பயன்படுத்துகின்றன. அதனால் பக்டீரியாக்களிற்கு மிகவும் குறைவான பொஸ்பேற் உள்ள ஊடகத்தில் அதே பொஸ்பேற்றைக் கொண்டு DNA உருவாக்கி வாழ முடியும். அதோடு இவர்கள் இந்த பக்டீரியாக்களை எடுத்த mono lake இலும் கூடுதலான ஆசனிக்குடன் தேவையானளவு பொஸ்பரசும் உண்டு. அதனால் இவைக்கு தமது biochemistry ஜ மாற்ற வேண்டிய அவசியமில்லை.

அதனால் அநேகமாக reasonable விளக்கம், இந்த பக்டீரியாக்கள் கூடுதலான ஆசனிக்கைத் தாங்கக் கூடிய சக்தி வாய்ந்தவை. ஆனால் அவர்களுக்கு அவர்கள் வாழுமிடத்தில் இருக்கும் பொஸ்பரஸ் அவர்களின் DNA உருவாக்குவதற்குப் போதுமானது.

இந்த criticisms எல்லாத்தையும் அவர்கள் அந்த DNA sequences ஜ MALDI-TOF MS எனும் முறையால் ஆராய்ந்து அது பொஸ்பேற்றுக்குப் பதிலாக ஆசனிக்கையே கொண்டுள்ளதென சுலபமாகக் கூறலாம். ஆனால் செய்யவில்லை.

அதனால் ஆசனேற் கொண்டுள்ள DNA க்கு உறுதியான ஆதரங்கள் எதுவும் இன்னும் இல்லை.

I hope what I've written is understandable. I am still learning to explain scientific concepts to general audience. I am pretty hopeless at doing it in Tamil. அதனால் விளங்காவிட்டால் சொல்லுங்கோ, திரும்பவும் முயற்சி செய்கின்றேன்.

Thekkikattan|தெகா said...

@ அனலிஸ்ட்

//பின் அந்த பக்டீரியாவிலிருந்து DNA ஜத் தனிப்படுத்தி மேற்சொன்ன பரிசோதனையைச் செய்து அந்த DNA ல் ஆசனேற் இல்லை என்று காட்டினார்களேயானால் மேற் சொன்ன முடைவை ஓரளவு நம்பலாம். ஆனால் காட்டவில்லை. Negative controls are very very important to make sure that the resutls you see are true.//

I still hope the Nasa's Mono Lake project must have been conducted for a period where they can cross check with negative controls experiments in order to nullify any omissions...

இருப்பினும் நீங்க கொண்டு வந்த விசயங்களை வைச்சி பார்க்கும் போது நிறைய ஓட்டைகள் இருப்பதனைப் போல இருக்கிறது.

//...அது ஊடகத்தில் உள்ள contaminant என அவர்கள் சொன்னாலும், அந்தளவு பொஸ்பரஸ் இந்த பக்டீரியாவிற்கு DNA உருவாக்கக் காணாதென்று இவர்கள் எப்படி முடிவு செய்தார்கள்.//

நல்ல கேள்வி...

//இந்த criticisms எல்லாத்தையும் அவர்கள் அந்த DNA sequences ஜ MALDI-TOF MS எனும் முறையால் ஆராய்ந்து அது பொஸ்பேற்றுக்குப் பதிலாக ஆசனிக்கையே கொண்டுள்ளதென சுலபமாகக் கூறலாம். ஆனால் செய்யவில்லை.//

உங்கள் கூற்றைக் கொண்டு பார்க்கும் பொழுது, இந்த புரொஜெக்டிற்கென்று போதுமான கால அவகாசம் எடுத்து செய்திருக்கும் பட்சத்தில், மிக அடிப்படையான டெஸ்ட் ஒன்றை ஓட்டி ஏன் அதிகார பூர்வமாக சந்தேகங்களை தீர்த்து வைக்கவில்லை. ... ஹ்ம்ம்

// I am still learning to explain scientific concepts to general audience. I am pretty hopeless at doing it in Tamil. அதனால் விளங்காவிட்டால் சொல்லுங்கோ, திரும்பவும் முயற்சி செய்கின்றேன்.//

Hmm... thank you so much for your effort in trying to bringforth this much information in tamil.

தமிழில் முதன் முறையாக ஒரு டிபிகல் ஆய்வுக் கட்டுரை படிச்ச மாதிரி ஹிக்கா இருக்குங்கோவ். நம்மதாங்க அறிமுகப் படுத்தணும். இன்னும் தமிழில் சொல்லிக்கிற மாதிரி ஆராய்ச்சி ஜர்னல் எல்லாம் வரணும்ல. :) By the way, Anna we love your tamil :), azhagana thamizh!

முகுந்த் அம்மா said...

Nice article Analyst.. But I have a major doubt

//இந்த criticisms எல்லாத்தையும் அவர்கள் அந்த DNA sequences ஜ MALDI-TOF MS எனும் முறையால் ஆராய்ந்து அது பொஸ்பேற்றுக்குப் பதிலாக ஆசனிக்கையே கொண்டுள்ளதென சுலபமாகக் கூறலாம். ஆனால் செய்யவில்லை.//

I never thought that DNA sequencing can be done using MALDI-TOF..

MALDI-TOF is mainly used in protein mass spectrometry...and not DNA sequencing I believed.
If u want to do DNA sequencing other methods like Sanger sequencing or NExtGen sequencing are available.

கையேடு said...

உரையாடல் தீவிரமான உயிரியல் பார்வையில் போய்க்கொண்டிருப்பதால், இடையில் புகாமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறேன்.

//முடிந்தால் http://www.fritjofcapra.net/shiva.html என்ற சுட்டியையும் அதற்க்கு தொடர்ப்பான புத்தகமான THE TAO OF PHYSICS
http://www.dgswilson.com/pdf/taophysics.pdf பார்க்கும்மாறு கேட்டுக்கொள்கிறேன்.//

காப்ராவின் ஒப்புமைகள் உண்மை என்று எதனடிப்படையில் ஏற்றுக் கொள்வது.

//CERN எனப்படும் ஐரோப்பிய ஆரய்ச்சி கூடத்தில் நடராஜர் சிலையை காணலாம். particle physics ம் நடராஜரின் ருத்திரதாண்டவமும் இனையும் இடம் இது.
//

So what?

முக்கியமான உயிரியல் உரையாடல் ஒரு முடிவுக்கு வரட்டும் காப்ராவின் உரையாடலை முன்வைத்து தொடரலாம்.

கையேடு said...

முகுந்த் அம்மா அவ்ர்களுக்கு இன்னொரு விசயமும் வெளிப்படையாக உறுதிப்படுத்திக் கொள்கிறேன்.

காப்ராவை முன்வைத்து உரையடலைத் தொடர்வதற்கு ஆர்வமும் நேரமும் இருந்தால் சொல்லுங்கள், தொடரலாம். இல்லையென்றால் வேறொரு புள்ளியில் சந்திக்கலாம்.

என்னுடனான விளையாட்டை எனது பூனை விரும்புகிறதா என்பதை அறியாமல் அதனோடு விளையாட விருப்பமில்லை என்று எடிசன் சொன்னதைப் போல ஆகிவிடக் கூடாது இல்லையா. ( இதை உண்மையிலேயே எடிசன் தான் சொன்னாரா என்று தெரியலை)

வருண் said...

***No லாப் ல ப்ரிபேர் செய்யப்படுற உங்களோட HIV protease வேலை செய்யாது..அப்படி வேலை செய்து இருந்தா இன்னேறம் எய்ட்ஸ் க்கு மருந்து கண்டு பிடிச்சு இருப்பாங்களே :)))***

நெறைய எச் ஐ வி ப்ரூட்டியேஸ் இன்ஹிபிட்டர்ஸ், ரிவேஸ் ட்ரண்ச்க்ரிப்டேஸ் இன்ஹிபிடொர்ஸ் எல்லாம் தயாரிச்சுட்டாங்கங்க.

***எந்த ப்ரொடீன் ஒடவும் 3 டி கன்ஃபொர்மேஸன் ரொம்ப முக்கியம் அது செயல்பட.***

HIV P exists as homodimer. I believe the sythetic one can be dimerizeed and will give exactly the same 3D conformation of natural one.

**அதுவும் HIV protease பத்தி கேட்கவே வேண்டாம்..அதிக volatile மூலக்கூறு அது...**

நீங்க "வாலடைல்"னு எதை மீன் பண்ணுறீங்கௌ தெரியலை :)

***தனக்குள்ளாற mutation செய்து கொண்டு ரொம்ப சீக்கிரம் தன்னோட 3 டி structure ஐ மாற்றிக்கொள்ளும் ரொம்ப clever.**

மியூட்டேஷன் இஸ் எ ப்ராப்லெம்தான். It happens over the time. That I accept :) They are trying to resolve that too.

முகுந்த் அம்மா said...

கையேடு அவர்களுக்கு

உங்களுகான விளக்கமான பதிலை நேற்றே தந்து இருக்க வேண்டும், நேரமின்மை என்று சொல்ல வேண்டும்.

இன்று தருகிறேன்.

முகுந்த் அம்மா said...

வருண் அவர்களுக்கு

முதல்ல எப்படி ஒரு 3டி structure கண்டுபிடிக்கிறாங்கன்னு பார்க்கலாம்.

எந்த ப்ரொடீனோட 3டி structure தெரியனுமோ அதை அந்த உயிரினத்திடம் இருந்து பிரித்து அதனை crystallize பன்னுவாங்க..அதனால நீங்க நினைக்கிறது போல HIV P structure லாப் இல் synthesize செய்தது அல்ல..

அந்த உயிரினம் கொல்லப்படும் போது உருவாக்கின ப்ரோடீன் தான் அது..அதனை கொண்டே ப்ரொடீன் structure கண்டுபிடிகிறாங்க..I hope now you can get a difference .

அப்படி அந்த உயிரினம் கொல்லப்படும் போது இருக்கும் ப்ரோடீன் structure க்கு தான் எச் ஐ வி ப்ரூட்டியேஸ் இன்ஹிபிட்டர்ஸ், தயாரிச்சங்க...ஆனா எச் ஐ வி ரொம்ப சாமர்தியமா தன்னோட structure ஐ மாத்திகிட்டே இருக்கு
அதனால தான் நிறைய எச் ஐ வி ப்ரூட்டியேஸ் இன்ஹிபிட்டர்ஸ் தயாரிக்க வேண்டி இருக்கு...


ஆனா இதெல்லாம் ஒரு உயிரினதில இருந்து பிரித்தெடுக்கப்படும் போது இருக்கும் ப்ரோடீன் கொண்டு உருவாக்கப்படும் structure தானெ தவிர லாப் இல் synthesize செய்தது அல்ல

The Analyst said...

Thanks Mukund Amma.

"MALDI-TOF is mainly used in protein mass spectrometry...and not DNA sequencing I believed.
If u want to do DNA sequencing other methods like Sanger sequencing or NExtGen sequencing are available."


Apparently, MALDI-TOF can definitely be utilised to analyse the chemical content of DNA. Please refer to this article. It says that MALDI-TOF can also be used for sequencing. But the sequencing methods wouldn't be able to analyze the actual chemical content of the DNA, can it?

I don't have much experience with these techniques, so I might be wrong. Please let me know if I am.

The Analyst said...

"இந்த புரொஜெக்டிற்கென்று போதுமான கால அவகாசம் எடுத்து செய்திருக்கும் பட்சத்தில், மிக அடிப்படையான டெஸ்ட் ஒன்றை ஓட்டி ஏன் அதிகார பூர்வமாக சந்தேகங்களை தீர்த்து வைக்கவில்லை."

இது நல்ல கேள்வி.

Have they been having a difficult time recently? Seems like they were desparate for some positivity. But they did blow this out of proportion.

அதையும் விட science journal இதுக்கு ஒத்துப்போயிருக்கவே கூடாது. இப்ப தான் பாத்தனான். அவர்கள் தமது கட்டுரையை science க்கு 1st of September கொடுத்துள்ளார்கள். They have accepted it for publicaiton on the 8th of November. Doesn't seem like the article has gone through a thorough peer-review process.

இதுவே என்னை மாதிரி ஒரு post-doc வேறொரு பல்கலைக்கழகத்திலிருந்து இதே கட்டுரையை science க்கு அனுப்பியிருப்பின் நிச்சயமாக இன்னும் பல பரிசோதனைகளைச் செய்து valid ஆன proof உடன் வரச்சொல்லி நிச்சயமாக அனுப்பியிருப்பார்கள். And that's how it should have been.

அப்படிச் செய்திருப்பார்களேயானால் இது இரு மாதங்களில் publish பண்ணியிருக்கமாட்டார்கள்.

எனது ஒரு study உம் traditional ஆக ஆய்வாளர்கள் (immunologists in this case) நினைத்திருந்ததிற்கு மாறான‌ ஒரு (not as big as this one, not even close :)) ஒரு முடிவைத் தந்திருந்தது. அதை நான் publish பண்ணிய journal ஜ‌ convince பண்ண எனக்கு ஒரு வருடத்திற்கும் மேல் எடுத்தது. ஒவ்வொரு முறையும் அவர்கள் சொன்ன additional experiments செய்யும் போதும் எனது முதல் முடிவிற்கு சாதகமாகவே results வந்தன. It was very exciting. ஆனால் அதை நான்கு தனிப்பட்ட ஆய்வாளர்கள் கணித்தர்கள் (in four rounds). It's time consuming, but that's how it should be, especially for a claim as big as this.

Thekkikattan|தெகா said...

//அதையும் விட science journal இதுக்கு ஒத்துப்போயிருக்கவே கூடாது. இப்ப தான் பாத்தனான். அவர்கள் தமது கட்டுரையை science க்கு 1st of September கொடுத்துள்ளார்கள். They have accepted it for publicaiton on the 8th of November. Doesn't seem like the article has gone through a thorough peer-review process.//

இந்த ரகசியத்தையெல்லாம் இப்படி பகிர்ந்துகலாமா :)). எல்லாம் அப்படித்தேய்ன். தெரிஞ்ச விசயம்தானே!!? குறைந்த பட்சம் மூன்றிலிந்து ஆறு மாசமாவது வேணுமே.

//இதுவே என்னை மாதிரி ஒரு post-doc வேறொரு பல்கலைக்கழகத்திலிருந்து இதே கட்டுரையை science க்கு அனுப்பியிருப்பின் நிச்சயமாக இன்னும் பல பரிசோதனைகளைச் செய்து valid ஆன proof உடன் வரச்சொல்லி நிச்சயமாக அனுப்பியிருப்பார்கள். And that's how it should have been.//

அது ஒரு நிலையை எட்டும் வரைக்கும் அப்படி இருக்குமின்னு நினைக்கிறேன். நல்லா தொடர்ந்து கொடுத்து ரெகுலர் கஸ்டமர் ஆயீட்டா பேரை பார்த்தவுடன் கிடுகிடுன்னு ப்ரிண்ட்ல ஏறிடுமோ ;-)

எனக்கு நீங்க சொன்னவுடன் என்னோட இரண்டு பேப்பருக்கு கொடுத்த குடைச்சல் ஞாபத்திற்கு வருது. முதல் ரிவ்வியூலயே நான் கண்டறிஞ்சிருந்த மூஞ்சுரு இனம் அங்க இருக்க வாய்ப்பில்லைன்னு, திரும்பவும் அடையாள படுத்தச் சொல்லியே எனக்கு ரெக்கமெண்ட் செஞ்சிருந்தாங்க. இத்தனைக்கும் அது நீல்கிரீஸ் துணை இனத்தில வருகிற மூஞ்சுரூ [suncus niger(montanus)]. பிறகு என்னாச்சு நான் இங்க உட்கார்ந்திட்டு தீசிஸ் முழுக்க அப்படியே குறிப்பிட்டு எழுதியிருக்கும் ஒரு மூஞ்சுரை இவன் ஃப்ளோரிடாவில உட்கார்ந்திட்டு கேள்வி எழுப்புறான், உடனடியா அங்கே (இந்தியா) போக எனக்கு வாய்பில்லாமல் போக... அட்வைசருக்கு அனுப்பிய வாக்கிலேயே தூங்க போட்டாச்சு...

அப்படித்தான் முட்டி மோதுறதெல்லாம் :))... ஆனா, இங்க (நாசா) கதை வேற.

//ஒவ்வொரு முறையும் அவர்கள் சொன்ன additional experiments செய்யும் போதும் எனது முதல் முடிவிற்கு சாதகமாகவே results வந்தன. It was very exciting. ஆனால் அதை நான்கு தனிப்பட்ட ஆய்வாளர்கள் கணித்தர்கள் (in four rounds).//

நீங்க விடக்கண்டி கொடாக் கண்டியாக இருந்து அசத்திருக்கீங்க. வெரி இன்ரஸ்டிங்! Good luck on that paper!!

The Analyst said...

"அதன் பேசிக் C, H, O அது தவிர மற்ற சில தனிமங்களும் சேர்ந்து நமக்கு ஒரு அமினோஅசிடோ அல்லது ஒரு பெப்டைடோ கிடைக்கலாம். ஆனால் அது ஒரு பெப்டை செயின் ஆக மட்டுமே இருக்கும்..அது ஒரு செயல் படுற புரோடீன் ஆகனும்னா 3D structure ஆகனும் fold ஆக சூல்நிலை அமையனும் அதை தான் ஒரு spark அப்படின்னு குறிபிட்டேனே ஒழிய அது ஒரு ஒளிக்கற்றை என்று குறிப்பிடவில்லை."

Yes. but peptide fold க்குரிய சூழலை எப்படி எதோவொரு சக்தி என்று சொல்கிறீர்களென விளங்கவில்லை. They need the right solvant, pH, amounts of salts, teperature, etc,etc for correct folding. அந்தச்சூழல் இல்லாவிட்டால் ஒழுங்காக மடிபடாது. அதற்கும் supernatural power க்கும் என்ன தொடர்பு? For many things we haven't figured out the exact ingredients needed to do it in the lab. ஆனால் எம்மால் இன்னும் முடியவில்லை என்பதற்காக வேறொரு சக்தி இருக்கிறதென எப்படிச் சொல்லலாம்? உதாரணத்திற்கு, PCR (polymerase chain reaction)ஜ எடுக்கலாம். எமது உடலில் தேவையான எல்லா ingredients (the enzymes, nucleotides, chaperones, etc, etc) உம் இருப்பதால் ஒரு DNA molecule 37 degrees இலேயே மிக இலகுவாக இரண்டாக்கப்படும் (when cells divide). ஆனால் உடலுக்கு வெளியில் எல்லாம் அப்படியே உருவாக்கவியலாவிட்டாலும் ஒரேயொரு enzyme ஜ மட்டும் கொண்டு nucletides and salts கொடுத்து வெப்பநிலைகளை மாற்றி மாற்றி கிட்டத்தட்ட உடல் செய்வது மாதிரி நாமும் DNA ஜப் பெருக்குகிறோமே?

"இதனை நீங்கள் இயற்க்கை என்று சொல்லுகிரீர்களா அதுவும் சரி தான். எனென்றால் அதுவும் ஒரு வகையான நம்பிக்கை தான் Paganism. So, எதொ ஒரு சக்தி நம்மை எல்லாம் ஆட்டுவிக்கிறது என்று நம்பினாலே நீங்கள் எல்லாம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாகி விடுகிறீர்கள்."

No. Paganism is still based on worship and in ancient times most often sacrifices humans or animals to for example sun gods, believeing that sun will give us what we asked for.

உதாரணத்திற்கு I accept கோள்கள் இருக்கின்றன, அவற்றிற்கு தனித்தனி ஈர்ப்பு விசைகள் உண்டு. But there are no evidence that even remotely suggests that it effects my day to day life. அதையும் விட முக்கியம், தற்சமயம் effect பண்ணுமென்டாலும், it doesn't have a mind of its own. அதனால் நான் சனீஸ்வரனுக்கோ வெள்ளிக்கோ புதனுக்கோ கற்பனைக்கோள்களான ராகு, கேதுவுக்கோ மன்றாடி எனக்கு ஒரு பலனும் கிடைக்கப்போவதில்லை.

The Analyst said...

"நான் இங்க உட்கார்ந்திட்டு தீசிஸ் முழுக்க அப்படியே குறிப்பிட்டு எழுதியிருக்கும் ஒரு மூஞ்சுரை இவன் ஃப்ளோரிடாவில உட்கார்ந்திட்டு கேள்வி எழுப்புறான், உடனடியா அங்கே (இந்தியா) போக எனக்கு வாய்பில்லாமல் போக... அட்வைசருக்கு அனுப்பிய வாக்கிலேயே தூங்க போட்டாச்சு..."
Oh No! Is it not possible for any others in the Indian team to do it?

The Analyst said...

Here is one that is a bit newsworthy: Reproductive scientists create mice from 2 fathers

Would not recommend it for humans unless we are on the verge of extinction (even then, may be - mmm got to think about that). :)

ஜோதிஜி said...

கொஞ்சம் மேலோட்டாமத்தான் படிச்சேன். மீண்டும் வந்து படிக்கோனும். ஆனா படிச்சு முடித்து இது போன்ற விசயங்களுக்கு மக்கள் எப்படி விமர்சனம் கொடுக்க முடியும்ன்னு நினைத்தால் மக்கள் கதக்களியே ஆடியிருக்காங்க. வர வர வலைபதிவுகளில் அக்கிரமம் அக்கிரமம் அதிகமாத்தான் இருக்கும். கடந்த ஒரு மாதமாக இது போன்ற நிறைய நல்ல பதிவுகள் நல்ல விமர்சனங்களோடு பகிர்ந்து கொள்வதைப் பார்க்கும் இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்று இதில் பதில் அளித்த ஒவ்வொருவரையும் கேட்க தோன்றுகிறது.

ஜோதிஜி said...

அப்புறம் இது போன்ற விசயங்கள் தமிழ்நாட்டு இந்திய அரசியல்வாதிகளுக்கு தெரியவந்தால் அங்கே போய் இடம் பிடிக்கனும்ன்னு வரிசை கட்டி நிற்பாங்களே? அதற்கு ஏதும் கைவசம் விசயம் (விஷமம்) வைத்திருக்கீங்களா?

முகுந்த் அம்மா said...

அனலிச்ஸ்ட் அவர்களுக்கு

//Yes. but peptide fold க்குரிய சூழலை எப்படி எதோவொரு சக்தி என்று சொல்கிறீர்களென விளங்கவில்லை. They need the right solvant, pH, amounts of salts, teperature, etc,etc for correct folding. அந்தச்சூழல் இல்லாவிட்டால் ஒழுங்காக மடிபடாது. அதற்கும் supernatural power க்கும் என்ன தொடர்பு? For many things we haven't figured out the exact ingredients needed to do it in the lab. ஆனால் எம்மால் இன்னும் முடியவில்லை என்பதற்காக வேறொரு சக்தி இருக்கிறதென எப்படிச் சொல்லலாம்? //

சரிங்க அது சூப்பர் நாட்சுரல் பவர் இல்லைங்க..எல்லாராலும் நடக்கிற காரியம் என்று வைத்துக்கொள்வோம்.. லாப்பில் ஒரு ப்ரோடீன் மாலிகூளையோ அல்லது டிஎன்ஏ மாலிக்கூளையோ அமினோஆசிட் இல் இருந்து அல்லது நியூக்லியோடைடில் இருந்து அதன் செயல் படுகிற ஃபொர்ம் க்கு synthesize செய்து கொண்டுவர முடியுமா சொல்லுங்கள்.


//உதாரணத்திற்கு, PCR (polymerase chain reaction)ஜ எடுக்கலாம். எமது உடலில் தேவையான எல்லா ingredients (the enzymes, nucleotides, chaperones, etc, etc) உம் இருப்பதால் ஒரு DNA molecule 37 degrees இலேயே மிக இலகுவாக இரண்டாக்கப்படும் (when cells divide). ஆனால் உடலுக்கு வெளியில் எல்லாம் அப்படியே உருவாக்கவியலாவிட்டாலும் ஒரேயொரு enzyme ஜ மட்டும் கொண்டு nucletides and salts கொடுத்து வெப்பநிலைகளை மாற்றி மாற்றி கிட்டத்தட்ட உடல் செய்வது மாதிரி நாமும் DNA ஜப் பெருக்குகிறோமே?//

PCR என்பது மெக்கானிக்கல் இனைப்பு hybridization technique. பாசிடிவும் நெகடிவும் இனையிர மாதிரி அதற்க்கு நீங்கள் ஒரு டெம்ப்லேட் primer தர வேண்டி இருக்கும். அதனை பிடிச்சிகிட்டு வேற ஒரு strand ஐ பெருக்க முடியும். எந்த ஒரு டெம்ப்லேட்டும் இல்லாமல் PCR வேலை செய்யாது.

முகுந்த் அம்மா said...

முதலில் நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான்

நான் மதங்களின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கையை எப்போதும் ஆதரித்ததில்லை.

ஜாதகம்..ஜோசியம்..பலி என்பதெல்லாம் தீவிர மதவாதிகளால் உருவாக்கப்பட்ட ஒரு அடிமைத்தனம்

ஆனால் இந்த சாதி வேறுபாடுகளையும் மூட பழக்கவழக்கங்களையும் முன் வைத்து கடவுள் இல்லை என்று எப்படி முடிவுக்கு வர முடியும்..

மனிதன் ஹோமோசேப்பியன்ஸ் ஆக மாற ஆரம்ப்பித்த பிறகு...தன்னை சுற்றி என்ன நடக்கிறது..என்று கேள்வி கேட்க ஆரம்பித்த பிறகு இது தான் உலகம் என்று நிறைய அனுமானம் செய்ய ஆரம்பித்தான்.
தான் யோசித்து அறிந்தவற்றை எழுதி வைத்தான்.

நம்முடைய முன்னோர்கள் எழுதி வைத்த சில இலக்கியங்களை படிக்கும் போது வியக்க தோன்றுகிறது..

”ஆக்கம் அழிவு இறுதி இல்லாய்” இது திருவாசகத்தில் இருக்கும் ஒரு சொற்றொடர்..

இது conservation of energy தத்துவம்.
இந்த எனெர்ஜி தத்துவத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்து இருக்கிறார்கள்.

”அணுவுக்குள் அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்”

இது ஒளவையாரின் வினாயகர் அகவல். இதன் பொருள் என்னவென்று விளக்க வேண்டியதில்லை.

அறிவியல் உலகில் வெறும் இருனூறு ஆண்டுகளுக்கு முன்புதான் அணுவை பிளக்க முடியும் என்று கண்டறிந்தனர்.

ஆனால் ஒளவைப்பாட்டி எப்போதோ எழுதி வைத்து விட்டார்கள்.

..தொடரும்

வருண் said...

முகுந்த் அம்மா!

மதம் சாதியை எல்லாம் சொல்லி கடவுள் இல்லைனு சொல்ல முடியாதுதான்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களில் பலர் தங்களால் கடவுளை உணரமுடியாத்தால்தான். அதி நீங்க விதண்டாவாதம்னு சொல்ல முடியாது.

பொதுவாக அறிவியல் துறையில் உள்ளவங்களுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் இல்லாததைப் பார்க்கலாம். அவங்க கடவுள் இல்லைனு நிரூபிக்க முயல்வது இல்லை. கடவுளை ரொம்ப தொந்தரவு செய்யாமல் தன் வேலையை பார்க்கிறார்கள்.

கடவுளை உணரமுடியாதது அறியாமைனு சொல்ல முடியாது. அப்படி சொன்னால் கடவுளை உணருவதும் அரியாமைதான்.

முகுந்த் அம்மா said...

கடவுள் மறுப்பாளர்களுக்கு நான் முன்பு ஒரு கேள்வி முன் வைத்தேன்..அதற்கு நிறைய கேள்விக்கனைகள் வந்து விழுந்தன..

நான் கேட்டது ஒரு அடிப்படை கேள்வி..

சரி மேலும் சில கேள்விகள் உங்களுக்கு..

பூமி என்ற இடத்தில் இருந்து வின்வெளியில் எதோ ஒரு இடத்திற்கு நான் சென்று விட்டேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்..நான் இருக்கும் coordinates என்ன..

சூரியகுடும்பம்,மில்கி வேய்...அப்புறம்..என்ன

எனக்கு மேலே கீழே என்ன இருக்கிறது...

3 டி coordinates எல்லாம் பூமியில் மட்டுமெ கணக்கில் உண்டு...அதற்க்கு பிறகு...

நீங்கள் இங்கே டைம் ஐ ஒரு coordinate ஆக கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்..உங்கள் இருப்பை குறியிட..ஆனாலும் உங்களுக்கு ஒரு பாயிண்ட் அஃப் ரெஃபெரென்ஸ் வேண்டும்..

அதாவது பூமியில் இருந்து இந்த கோளுக்கு இத்தனை தூரம் என்று..அந்த பாயிண்ட் அஃப் ரெஃபெரென்ஸ் இல்லாமல் யோசிக்க நம்முடைய ஆறிவுக்கு தெரியாது...

சரி அண்ட வெளியை விட்டு விடுவோம்

முகுந்த் அம்மா said...

அணுவுக்குள் செல்லுவோம்..

முதலில் அணு என்பது சிறியதாக இருந்தது..அதன் பின்னர் எலெட்ரொன் நியுட்ரான் ...சிறியதாக இருந்தது...

இப்போது sub-atomic particles சிறியதாக இருக்கிறது..அது தான் நாமா..அப்பொ நாமெல்லாம் sub-atomic particles ஆல் உருவானவர்களா..

முதலில் எலெக்ட்ரொனின் இருப்பையே quantum physics ன் படி இங்கெ இருக்கலாம் அல்லது அங்கே இருக்கலாம்..என்று probability ஆக தான் கணக்கிடுகிறார்களே தவிர..இங்கு தான் இருக்கும் என்று உறுதியாக சொல்ல மாட்டார்கள்..முடியாது..

முகுந்த் அம்மா said...

இதனை தான் ஒளவை பாட்டி

“அணுவுக்கு அணுவாய்..அப்பாலுக்கு அப்பாலாய்” அப்படின்னு ஒரே போடா போட்டாங்க..

நம் அறிவு என்பது வெறும் எறும்பு மாதிரி...ஆனால் நம்மை சுற்றி இருக்கும் உலகம் பெரிய யானை போன்றது...

நம்முடைய அறிவுக்கு தகுந்த மாதிரி இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாம் என்று அனுமானிக்கலாம்..அல்லது உணர முயற்ச்சிக்கலாம்..

இதனை எல்லாம் நீங்கள் இயற்கை அல்லது அது பாட்டுக்கு நடக்குது என்று அலங்கார வார்த்தைகளாக சொல்லி கொள்ளுங்கள்..அதே நடவுகளை நான் இது கடவுள் என்று சொல்லிக்கொள்கிறேன்..

இருவரும் தண்டவாளத்தின் இரு கோடுகள் போல பயணித்து கொண்டிறுப்போம்..

கையேடு said...

உண்மைதாங்க முகுந்த் அம்மா. உருவமுள்ள கடவுள்,மதம், மூட நம்பிக்கைகளை புறந்தள்ளிவிட்டு ஆன்மீகம் அறிவியல் இவை இரண்டும் இணையும் மற்றும் முரண்படும் புள்ளிகள் பற்றி பேசுவோம், அவ்வப்போது காப்ராவையும் பேசுவோம்.

இங்கிருந்து துவங்குகிறேன்..

//”ஆக்கம் அழிவு இறுதி இல்லாய்” இது திருவாசகத்தில் இருக்கும் ஒரு சொற்றொடர்..

இது conservation of energy தத்துவம்.//

இது குறிப்பிடுவது ஆற்றல் அழிவின்மைத் தத்துவம் என்று அறிவியல் படித்த உங்களுக்குத் தெரியும், ஆனால் அறிவியல் படிக்காதவர் இந்த வாக்கியத்தை எப்படி அனுகுவார் என்று நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

ஆனால், அறிவியலில் குறிப்படும், ஆற்றல் அழிவின்மை விதி ஒருவித காறார்தன்மையோடு, அனைவருக்கும் ஒரே புரிதலைத் தருமாறு இருக்கிறது.

இதுதான் தத்துவம்/இலக்கியத்தில் இருக்கும் குறைபாடு அல்லது சிறப்பு.
ஒரு வார்த்தையை வாசிக்கும் ஒவ்வொருவரும் அதை ஒவ்வொரு விதமாக உள்வாங்க முடியும். ஆனால், இறுதிவரை ஆசிரியன் வந்து தனது பார்வையை விளக்காவிட்டால் அது அவரவர் பார்வையே.. ஆன்மீக ஈடுபாடு உள்ள உங்களுக்கு ஜெ.கேவின் சொற்றொடர் தெரிந்திருக்கும்.
நிகழ்வின் புரிதலில் தெரிவது பார்வையாளனேயன்றி, நிகழ்வல்ல என்பது.
ஆக இலக்கியப் படைப்புகள் பெரும்பான்மையாக இப்படிப்பட்ட அணுகுமுறைதான் உண்டு. அவை காலத்தை வென்று நிற்கும் சிறப்பியல்பை குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. அதற்கான பாராட்டையும் அங்கீகார்த்தையும் அவ்விலக்கியத்திற்கு வழங்க வேண்டும் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் அவை இதைத்தாதன் குறிப்பிடுகின்றன என்ற யாரும் இறுதிமுடிவாக அறிவிக்க முடியாது.
ஒருவேளை அப்படி யாராவது தங்களது பார்வையை விளக்கினாலும் அதனை உண்மை என்று சோதித்துப் பார்க்கவோ அல்லது நிரூபனம் செய்யவோ வாய்ப்பில்லை.

//”அணுவுக்குள் அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்”//

இந்த வரியை பலரும் தமிழரின் அணு அறிவை சிலாகிக்கப் பயன்படுத்துகிறார்கள். ஒரு பெருமிதத்தைக் கட்டமைத்துக்கொள்ளவும் செய்கிறார்கள்.

ஆனால் நாம் பழந்தமிழரின் அளவுச் சொற்களோடு பார்க்கும் போது அணு என்ற சொல்லுக்கு இணையாக பழந்தமிழர் பயன்படுத்தும் அளவும் இன்றைக்கு நவீன அறிவியல் பயன்படுத்தும் அளவும் ஒன்றாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்,
அந்த வாக்கியத்தைச் சரியாகத்தான் எடுத்தாண்டிருப்பீர்கள் என்று நம்பித் தொடர்கிறேன்.

அணுவுக்குள் ஒரு அணு இருக்க முடியுமா? அறிவியலில் அதற்கு இடமுண்டா?

அடுத்தடுத்து குவாண்டம் இயற்பியல் மற்றும் காப்ராவை முன்வைத்துத் தொடருவோம்.

The Analyst said...

முகுந்த் அம்மாவிற்கு,

I've loved this quote since I've first read it. I'll just take this chance as an excuse to write it.

Is God willing to prevent evil, but not able? Then he is not omnipotent. Is he able, but not willing? Then he is malevolent. Is he both able and willing? Then whence cometh evil? Is he neither able nor willing? Then why call him God?
— Epicurus, philosopher (c. 341-270 BCE)



"ஆனால் இந்த சாதி வேறுபாடுகளையும் மூட பழக்கவழக்கங்களையும் முன் வைத்து கடவுள் இல்லை என்று எப்படி முடிவுக்கு வர முடியும்."
1. கடவுள் இருப்பதற்கான ஆதரங்கள் எதுவும் இல்லை.
2. கடவுளால் அருளப்பட்டன எனச் சொல்லப்படும் புத்தகங்களிலேயே சாதிவேறுபாடுகளுக்கான ஆதாரங்களையும் பல வன்முறையைத் தூண்டும் வகையான கருத்துக்களையும் காணலாம்.


"மனிதன் ஹோமோசேப்பியன்ஸ் ஆக மாற ஆரம்ப்பித்த பிறகு...தன்னை சுற்றி என்ன நடக்கிறது..என்று கேள்வி கேட்க ஆரம்பித்த பிறகு இது தான் உலகம் என்று நிறைய அனுமானம் செய்ய ஆரம்பித்தான்.
தான் யோசித்து அறிந்தவற்றை எழுதி வைத்தான்.

நம்முடைய முன்னோர்கள் எழுதி வைத்த சில இலக்கியங்களை படிக்கும் போது வியக்க தோன்றுகிறது."


ok. அப்படிப் பல civilizations இலிருந்து உதாரணங்கள் காட்டலாம். ஆனால் இதுக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு?


”அணுவுக்குள் அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்”

இது ஒளவையாரின் வினாயகர் அகவல். இதன் பொருள் என்னவென்று விளக்க வேண்டியதில்லை.

அறிவியல் உலகில் வெறும் இருனூறு ஆண்டுகளுக்கு முன்புதான் அணுவை பிளக்க முடியும் என்று கண்டறிந்தனர்."


இதை வாசித்ததும் எனக்கு பல வருடங்களுக்கு முன் (high school times) இலங்கையில் எதோ ஒரு பத்திரிகையில் கண்ணனின் பத்து அவதாரங்களையும் பரிணாமத்தையும் தொடர்புபடுத்தி ஒரு கட்டுரை வாசித்த ஞாபகம் வந்தது. At that time I was completely in awe of that possible connection.

ஒளவையார் என்ன அர்த்தத்தில் எழுதினார்களோ எமக்குத் தெரியாது. எமக்கு அதனால் எந்தப் பலனும் வரவில்லை.எமது கண்டுபிடிப்புகளுக்கு அவை உதவியதும் இல்லை. பல‌ ஆண்டுகளுக்கு முன் நாம் கண்டுபிடித்த பிறகே திரும்பவும் போய் ஆயிரமாயிரமாண்டுகளுக்கு முன் இருந்த இலக்கியங்களை ஆராய்ந்து தொடர்பு காண முயற்சிக்கிறோம். ஏன் எப்பவுமே இந்த process இப்படி backwords ஆயிருக்குது. ஒளவையார் அணுவைப் பிளக்க முடியுமென்ற அர்த்தத்தில் எப்பவோ சொல்லியிருப்ப்து எமக்கு விளங்கியிருந்தால் Rutherford கஸ்டப்பட்டிருக்கத்தேவையில்லையே.

கையேடு said...

காப்ராவின் புத்தகத்தில் இருந்து ஆன்மீகத்தை துவங்குவது என்பது நவீனகால உரையாடல் உத்தி.

கடற்கரையில் அமர்ந்து ஒரு துகள் இயற்பியல் ஆய்வாளர் காஸ்மிக் நடனத்தத உள்வாங்குவது என்பது அச்சர்யமூட்டும் நிகழ்வல்ல. இது அறிவியல் துறையில் பணிபுரியும் பலரும் உணரும் ஒரு ஒத்திசைவு/பிரமிப்புதான்.
அதிலும் அவர் துகள் முடுக்கியில் கிடைத்த ஒரு புகைப்படத்தின் மேலே நடராஜரை பொதித்திருக்கும் விதம் பார்வையாளனைக் கழுத்தைத்திருப்பி இப்படிப் பார் என்பது போல இருக்கு.

நடராஜரின் நடனம் பற்றி தத்துவார்த்தமாக அல்லது மத ரீதியாக நீங்கள் விளக்கினால், காஸ்மிக் நடனம் பற்றி புரிந்து கொள்ள எனக்கு எளிதாக இருக்கும்.

காப்ராவின் புத்தகத்தை நான் எப்படி பார்க்கிறேன் என்று முதலில் கூறிவிடுகிறேன். படைப்பாளி இறந்துவிட்டான் என்ற சொற்றொடரை பதிவுலகில் நீங்கள் அதிகம் கேட்டிருக்கலாம். அந்த அடிப்படையிலேயே காப்ராவின் ஒப்புமைகளைப் பார்க்கிறேன்.
ஒரு உபநிடத வாசகத்திற்கோ அல்லது பவுத்த வாசகத்திற்கோ அல்லது இருமையை முன்மொழியும் சீனத் தத்துவத்திற்கோ ஒரு பொருளைச் சொல்வது பார்வையாளனேயன்றி அத்தத்துவம் அல்ல. அதனை எழுதியவர் எதை முன்வைத்து எழுதினார் என்பதை உறுதி செய்யும் வழிமுறையோ வாய்ப்போ இல்லாத சூழலில், காப்ரா எடுத்தாண்டிருக்கும், பகுதிகளுக்கு பலவாயிரம் அர்த்தங்கள் கற்பிக்க முடியும். இது அதிலிருக்கும் நடைமுறைச் சிக்கல். அதே சமயம் பல இடங்களில் அவர் பலவந்தமானதொரு ஒப்புமையைச் செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

The Analyst said...

கையேடு, நீங்கள் மிக நன்றாக எழுதுகிறீர்கள்.

கையேடு said...

நன்றிங்க அனாலிஸ்ட்..

நான் மேலே குறிப்பிட்ட நடைமுறைச்சிக்கலை காப்ராவும் உணர்ந்துதான் இருக்கிறார். அதனால், அவர் அதையும் தனது புத்தகத்தில் குறிப்பிடவே செய்கிறார், அதாவது ஒரு பெரிய இலக்கியப்புத்தகத்தில் இருந்து ஓரிரு வாக்கியங்களை எடுத்தாள்வது என்பது சிக்கலான விடயம் என்றும், யார் எந்தப் பகுதியை எடுத்தாள்கிறார்கள் என்பதும் கேள்விக்குறியது என்பதை தெளிவாகவே குறிப்பிடுகிறார்.

நிற்க..

நான் மேலே கொடுத்த ஆன்மீகம் தொடர்பான நான்காம் பாகத்தை நீங்கள் முழுவதும் வாசித்தீர்களா தெரியவில்லை, இருந்தாலும் காப்ராவின் எடுகோள்களும் அதனை நிரூபிப்பிக்கின்றன என்றுதான் சொல்லவேண்டும்.

அதாவது ஞானத்தில் உயர்ந்தது தாழ்ந்தது என்று இந்து மதம் குறிப்பிடுவதாகவும், உயரிய ஞானமாக இப்படியான ஆன்ம ஞானத்தையும், மற்றயவையெல்லாம், குறைந்த அல்லது தாழ்ந்த ஞானமாகச் சித்தரிக்கிறது என்று குறிப்பிடுகிறார்.

அதே சமயம் பவுத்த மார்க்கத்திலும் ஞானத்தில் பிரிவுகள் உண்டு, ஆனால் அது சார்பு ஞானமாகவும், எல்லைகடந்த ஞானமாகவும் சித்தரிக்கப்படுகிறது.

இது குறித்து அவர் தனிப்பட்ட விமர்சனங்கள் எதுவும் வைக்கவில்லை. ஆனால், இது குறித்து சமூக தளத்தில் முன்வைக்கப்பட வேண்டிய விமர்சனத்தைதான், எனது நான்காம் பாகத்திற்கான சுட்டியில் குறிப்பிட்டுள்ளேன்.

சமூகதளத்தை இங்கே விட்டுவிடுவோம் ஏனெனில் அது வேண்டாம் என்று நாம் முடிவு செய்தாயிற்று. அறிவியலை முன்னிறுத்தியே தொடருவோம்ம் காப்ராவைப் போலவே...

இதுவரை உரையாடியதில் உங்களுக்கு ஏதாவது சொல்லத் தோன்றினால் சொல்லுங்கள் அதன் பின் குவாண்டம் இயற்பியலுக்குள் நுழைவோம்.

கையேடு said...

மற்றவை உங்கள் பதிலுரை கண்டு.

கையேடு said...

//நீங்கள் இங்கே டைம் ஐ ஒரு coordinate ஆக கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்..உங்கள் இருப்பை குறியிட..ஆனாலும் உங்களுக்கு ஒரு பாயிண்ட் அஃப் ரெஃபெரென்ஸ் வேண்டும்..
//

இங்கே எனக்கொரு கேள்வி இருக்கு. இதே கேள்வியை ஒரு சூன்யப் புள்ளியை நோக்கி தியானம் செய்யச் சொன்ன தியான ஆசிரியரிடம் கேட்டீர்களா? அந்தச் சூன்யப் புள்ளி எங்கிருப்பதாகச் சொன்னார்.

வருண் said...

***இருவரும் தண்டவாளத்தின் இரு கோடுகள் போல பயணித்து கொண்டிறுப்போம்..

December 10, 2010 4:49 AM***

இது ரொம்ப நல்லாயிருக்குங்க! Let us respect each others thought and move on what we find as comfortable to us! :)

வருண் said...

***“அணுவுக்கு அணுவாய்..அப்பாலுக்கு அப்பாலாய்” அப்படின்னு ஒரே போடா போட்டாங்க.***

ஒளவையார்க்கு ஒரு நல்ல "விஷன்" இருந்து இருக்குனுதான் நான் சொல்லுவேன். :)

------------

இப்போ இன்னொரு கேள்வி,

"அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்"னும் ஒள்வையார் சொல்லி இருக்கார்.

நான் கேள்விப்பட்ட்து என்னனா மும்பையில் ஒரு சில ஏழைத்தாய் மார்கள் தன் குழந்தைகளையே பிச்சை எடுக்க விடுறாங்களாம். அப்புறம் தன் குழந்தையை கார்க்கு முன்னாலே தூக்கி எறிந்து, கார்ல குழந்தை அடிபட்டால், அதைச் சொல்லி மிரட்டி பணக்கார கார் ட்ரைவரிடம் பணம் வாங்குவாங்களாம். நான் கேள்விப்பட்டது. நான் இதை சொன்னவரிடம், 'அப்படியெல்லாம் அம்மா இருக்க மாட்டாங்க"னுதா சொன்னேன்.. But he looked at me as if I am a fool and ignorant.

சரி, அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்பதெல்லாம் ஒரு சிலருக்கு சரிப்பட்டு வராது னு சொல்ல வர்றேன்.

ஒருவர் சொன்னது சரியாவும் காலத்தால் அழியாததாகவும் இருக்கலாம், காலத்தால் அழிவதாகவும் இருக்கலாம். ஒளவையாரும் ஒரு ஹூமன் பீயிங் தானே? அவர் சொல்வது சரியாக இருக்கும்போது எடுத்துக்குவோம். ஒரு சில சூழ்நிலைகளில் தவறுதலா இருக்கவும்தானே செய்யுது?

Let us be a believer or non believer, it is better to have an open-mind. As long as we have that there is no harm done.

Thekkikattan|தெகா said...

guys மிக அருமையாக, பொறுப்பாக, பொறுமையினைக் கொண்டு இந்த உரையாடலை எடுத்துச் செல்வதற்கு நன்றிகள் பல!

காப்ராவின் புத்தகத்தை ’’கையேடுவை’’ முழுதுமாக வாசிக்க வைத்து இங்கு உரையாடலில் கலந்து கொள்ள வைத்தது முகுந்தம்மாவையே சாரும் :). அதுக்கு அவங்களுக்கு ஒரு சிறப்பு நன்றி இத்தருணத்தில்.

எனக்கும் விளங்காத ஒரு விசயம் என்னவென்றால் கையேடு கேட்டுக் கொண்டதுபடியே ...நடராஜரின் நடனம் பற்றி தத்துவார்த்தமாக அல்லது மத ரீதியாக நீங்கள் விளக்கினால், காஸ்மிக் நடனம் பற்றி புரிந்து கொள்ள எனக்கு எளிதாக இருக்கும்... அதனை ஏதோ இரு தளங்களில் (அறிவியல்/தத்துவம்) ஒன்றின் மீதாக விளக்கினால் விளங்கிக் கொள்ள முடியும் என்று நானும் கருதுகிறேன்.

அடுத்து எப்பொழுதுமே நமது முன்னோர்கள் ”ஞான உணர்வின் படி” (touching the super conscious filed) பல விசயங்களையிம் சொல்லி வைத்து விட்டு சென்று இருக்கிறார்கள் என்று அறிவியல் கூற்றுகளின் படி இப்பொழுது நமக்கு பரிச்சயமான விசயங்களை கொண்டு, நம்ம பண்டைய இலக்கியங்களிலிருந்து ஒரு வாக்கியத்தை பிரித்து அதினின்று வைத்து இதுதான் அதுவாக சொல்லப்பட்டிருக்கிறது என்கிறோம்.

அதுவும் நன்றாக இன்றைய சூழலில் அந்த நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை நன்கு உள் வாங்கப்பட்ட நிலையில் அவ்வாறாக எடுத்து முன் வைக்கிறோம். ஆனால், அதுக்கு முன்னாக எப்படி காலம் காலமாக சும்மா வாசித்து எதன் அடிப்படையில் படித்து உள்வாங்கி கடந்து சென்றிருக்கிறோம்.

கையேடு கூறுவதனைப் போன்று ‘அணு’ என்பதன் அளவீடு அந்த கால கட்டத்தில் பெரும் (கண்ணுரும் வாக்கில் அமைந்த) நிறுத்தல் அடிப்படை குறியீடு அல்லவா? பின்பு ”அப்பாலுக்கு அப்பால் என்றால்,” நம் காணும் பொருட்களுக்கு அப்பால் விசயங்கள் இருக்கிறது என்று கூட எடுத்துக் கொள்ளலாமே...

எனவே நம் வாசிப்பின், நமக்கு கிடைத்த exposureகளைக் கொண்டே நாம் interpret பண்ணிக் கொள்ளும் திறனும் மாறுகிறது என்றாகிவிடுகிறதல்லவா??

தருமி said...

நேற்று இப்பதிவு தொடர்பான ஓர் அறிவியல் வலைப்பூவைக்காண ஒரு வாய்ப்பு. அதில் பல பின்னூட்டங்கள். எல்லாமே மிகவும் பொருத்தமான கேள்விகளும் விளக்கங்களும். எல்லாம் ஆங்கிலத்தில். இப்படி தமிழில் ஒரு நிலை வராதா என்று நேற்று ஏங்கினேன். இன்று அந்த ஏக்கம் போய்விட்டது.

எல்லோருக்கும் மிக்க நன்றி.
அதிலும் //கையேடு, நீங்கள் மிக நன்றாக எழுதுகிறீர்கள்.// என்று சொல்லும் the analyst நீங்களும் கையேடு போலவே மிக நன்றாக எழுதுகிறீர்கள்.

வலைப்பூக்களை 'அடுத்த தளத்திற்கு' எடுத்துச் சென்ற தெக்ஸுக்கும், முகுந்த் அம்மாவிற்கும் என் பாராட்டுகள்.

தொடருங்கள் ...

Sethu said...

நீங்களே ஒருத்தருக்கு ஒருத்தர் பாராட்டிகிரதப் பார்த்தா,
படிக்கிற எங்களுக்கு வெட்கமா இருக்கு.

அதனால் நானும் உங்க எல்லோரையும்,
ஒரு முதிர்வான தெளிந்த விவாதத்திற்கு ,
எனது மனமார்ந்த பாரட்டுகளை தெரிவிக்கிறேன்.

முழுவதும் படிக்க முடியல,
ஆற அமர உட்க்கார்ந்து படிக்கிற மாதிரி,
பெரிய விஷயங்களா இருக்கு.

நன்றி.

முகுந்த் அம்மா said...

ப்விரிவான விளக்கத்திற்கு இப்போது நேரமில்லை...


ஆனால் தருமி அய்யா சொல்வதை ஆமோதித்தே ஆக வேண்டும்..

கையேடு அவர்களும்..அனலிஸ்ட் அவர்களும்..மிக அழகாக தமிழில் எழுதுகிறீர்கள்.

எனக்கு நிறைய நேரம் தோனும் கேள்விகள் எல்லாம் தமிழில் எப்படி எழுதுவது என்று தெரியாததால் எனக்குள்ளே மக்கி போயிருக்கின்றன..ஆனால் கையேடு அவர்களின் தமிழ் அசர வைக்கிறது..

அனலிஸ்ட் அவர்களின் தமிழ் ஆய்வுக்கட்டுரையும் என்னை மகிழ வைத்தது..

இருவருக்கும் வாழ்த்துக்கள்

கையேடு said...

//விரிவான விளக்கத்திற்கு இப்போது நேரமில்லை...//

இங்கே உரையாடும் நாம் அனைவரும் தொழில்முறை எழுத்தாளர்களோ அல்லது ஆன்மீகப் பிரதிநிதிகளோ கிடையாது. அதனால் விரிவான உரையாடலுக்கான கால அவகாசம் பற்றி உங்களின் நிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனாலும், இங்கே இவ்வுரையாடலைப் பின்தொடரும் சிலருக்காகவும், சாவகாசமாக நீங்களும் பின்னர் வாசிக்கும் பொருட்டும், இங்கே எழுதி வைத்துவிடுகிறேன். எனக்கும் ஏதோ ஒரு இடத்தில் இதைப் பதித்து வைத்தது போலவும் இருக்கும்.

இங்கு ஒரு காத்திரமான
உரையாடலை மேற்கொள்ளத் தூண்டிய உங்களுக்கும் நன்றிகள்.

முகுந்த் அம்மா said...

நம்முடைய முன்னோர்கள் அவர்கள் காலத்தில் எல்லாம் தன்னை சுற்றி இருக்கும் இயற்கையை தன்னுடைய சிந்தனையில் எப்படி அனுமானித்தார்களே அப்படியே எழுதி வைத்தனர்..அவர்களுக்கு எந்த peer review process ஓ அல்லது scientific journal இல் நம்மை போல publish செய்ய வேண்டிய கட்டாயமோ இருந்திருக்கவில்லை.

அதனாலெயே என்னமோ அவர்கள் எதனையும் quantify செய்யவில்லை..

தன்னை சுற்றி இருக்கும் அந்த காஸ்மிக் எனெர்ஜியை அல்லது அந்த உணர்வை கடவுள் என்றறிவித்து எழுதி வைத்தனர்.

அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாள் என்று சொல்வது போல இறைக்கும் சொல்லி இருக்கிறார்கள்..எந்த measuring யூனிட்டும் அவர்கள் பயண்படுத்தவில்லை.

இதில் நீங்கள் கேட்ப்பது போல அது இப்போது இருக்கும் அணுவைத்தான் குறிப்பிடுகிறார்கள் என்று எப்படி சொல்ல முடியும் என்ற கேள்விக்கு என்னுடைய விளக்கம்..இப்போது அறிவியல் படி நீங்கள் உணர்ந்திருக்கும் அணுவைப்பற்றி ஒளவைபாட்டி குறிப்பிடவில்லை..அவர்கள் எதனை அணு என்று உணர்ந்தார்களோ அதனை குறிப்பிட்டார்கள்.

இதனை சொல்லும் போது எனக்கு ஒரு quote தான் ஞாபகம் வருகிறது..

ஒளிக்கற்றையின் duality ஐ பற்றி கூறும் போது “எப்படி ஒளி ஒரே நேரத்தில் அலைவடிவாகவும் துகள் வடிவாகவும் இருக்க முடியும்?....இந்த இரண்டு பண்புகளும் நம்முடைய அறிவுக்கு எட்டிய வரை செய்த ஆராய்ச்சிகள் கொண்டு வரையருக்கப்பட்டது..இன்னும் கூட ஒளிக்கு நிறைய பண்புகள் இருக்கலாம்..அவை எல்லாம் இன்னும் அறிந்து கொள்ளும் அளவு நம்முடைய அறிவு வளரவில்லை.

என்று நான் படித்த “Dancing Wu Li Masters" புத்தகத்தின் ஒரு quote ஞாபகம் வருகிறது.

அவர்கள் அணு என்று உணர்ந்ததை கடவுள் என்று அறிவித்து..அந்த கடவுளின் பண்புகளில் ஒன்றாக ஆக்கம் அளவு இறுதி இல்லாய் என்று எழுதி வைத்து சென்றார்கள்.

வருண் said...

***அவர்களுக்கு எந்த peer review process ஓ அல்லது scientific journal இல் நம்மை போல publish செய்ய வேண்டிய கட்டாயமோ இருந்திருக்கவில்லை.***

அன்றும், ஏன் இன்றும் நம்மிடம் உள்ள மிகப்பெரிய குறை, documentation and proper record-keeping with dates. இதனால் எவ்வளவோ நம்க்கு பாதிப்புனு சொல்லாம்!

Sethu said...

"நம்முடைய முன்னோர்கள் அவர்கள் காலத்தில் எல்லாம் தன்னை சுற்றி இருக்கும் இயற்கையை தன்னுடைய சிந்தனையில் எப்படி அனுமானித்தார்களே அப்படியே எழுதி வைத்தனர்.."

-உண்மை. அவர்கள் பார்த்து பயந்தவற்றை அல்லது அறிந்து கொள்ள முடியாதவற்றை, தனக்கும் மீறிய ஒரு சக்தி இருப்பதாக அறிவித்தனர். அதை கடவுள் என்றும் அறிமுகப் படுத்தினர். தான் சொல்லுவதற்கு மேலாக சிந்திப்பவர்களை தனிமைப் படித்தினர்.

அது ஒவ்வொன்றாக விஞ்ஞானம் மூலம் அறியத் தொடங்கியவுடன், அது என்னவேன்ற தேடல் அதிகமாகி வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது.

இன்றைய கால கட்டத்தில் கடவுள்,மதம் மற்றும் பிறவும், மனிதர்களை அடக்கி ஆள்வதற்கும், பிரித்தும், அடித்துக் கொண்டும் வாழ்வதற்கான ஒரு அடி பணியும் சாதனமாகத் தான் பயன் படுத்தப் படுகிறது. அது தேவையா? அதை ஆதரிக்க வேண்டுமா அல்லது தனிமைப் படுத்த வேண்டுமா?

அதே முன்னோர் தான் 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்றனர். ஆனா எங்கே கூடி வாழ முடிகிறது. எல்லா விதத்திலும் பிரித்து வைக்கக் கூடிய சாதனமா கடவுள், சாதி, மதம் எல்லாம் இருக்கு.

PS: உங்க விவாதங்களில் ரொம்ப interest ஆனது ஒரு சாதாரண மனிதரின் வார்த்தைகளில் அடக்கி விடாமல், தாங்கள் படித்துள்ள தங்கள் படிப்பு, அறிவு, விஞ்ஞானம் அனைத்தையும் உபயோகித்து இது உண்டு இல்லை என்று நிரூபிக்க நீங்கள் நடத்தி வரும் விவாதம், ரொம்ப நன்றாக இருக்கு. We are Excited. Thanks.

கையேடு said...

//நம்முடைய முன்னோர்கள் அவர்கள் காலத்தில் எல்லாம் தன்னை சுற்றி இருக்கும் இயற்கையை தன்னுடைய சிந்தனையில் எப்படி அனுமானித்தார்களே அப்படியே எழுதி வைத்தனர்.//

ஆமாம் இதிலே மாற்றுக் கருத்தில்லை.

ஆனால், ஏற்கனவே அனைத்தும் அறிந்து வைத்திருந்தனர் என்பதை எதனடிப்படையில் ஏற்றுக் கொள்ளமுடியும்.

//அதனாலெயே என்னமோ அவர்கள் எதனையும் quantify செய்யவில்லை..//

நாம் இப்போது பெரும்பாலும் உரையாடுவது ஆன்மஞானத்தைப் பற்றியது. இதனை அப்போதில்லை, இப்போதும் எண்மதிப்பில் தரமுடியாத சூழலே இருக்கிறது.

அதனால், உணர்வு மயமான ஒன்றை எண்மதிப்பில் இருந்தால்தான் அதை ஏற்றுக் கொள்ளமுடியும் என்பதல்ல என் வாதம்.

அதன் பின்னிருக்கும் புரிதல் இன்றைக்கிருப்பது போல் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றுதான் குறிப்பிடுகிறேன்.

Thekkikattan|தெகா said...

உங்களின் வாதத்தினை என்னால் முழுதுமாக புரிந்து கொள்ள முடிகிறது, முகுந்தம்மா. இருப்பினும், அது போன்ற தனி மனித நிலையில் உணர்ந்த விசயங்களை வெறும் வாக்கியமாக ஒரு அகண்ட கம்பளத்தனமாக முன் வைக்கும் பொழுது அதனை அவரவர்களின் வளர்ச்சிற்கு ஏற்ப புரிந்து கொள்கிறோம்.

அது எந்தளவிற்கு இன்றைய இந்த புற வயமான தேவைகளை நிறைவேத்தி கொடுக்க வல்லதாக அமைந்து விடவில்லைதானே.

//அவை எல்லாம் இன்னும் அறிந்து கொள்ளும் அளவு நம்முடைய அறிவு வளரவில்லை.//

மேற் கூறியது போலவே எல்லா விடயமுமே இங்குதான் புதையுண்டு இருக்கிறது. அதனை விடாது தேடி வெளிக் கொணர வேண்டுமெனில் முற்று முழுதாக ஏதோ ஒரு சக்திதான் இயக்குகிறது என்ற மூடிய நிலையில் நம்மை தேக்கிக் கொண்டால் இன்று நமக்கு கிடைத்திருக்கும் இன்றைய அனைத்து சாத்தியங்களும் நிகழ்ந்திருக்காமலேயே போயிருக்கும், அல்லவா? தனி மனித நிலையில் வள்ளுவரோ, அவ்வை பிராட்டியோ தன்னுள்ளே நிகழ்த்திய தேடல் வேட்கையே கூட அவர்களை தனிப்பட்ட நிலையில் அமைதி கொண்டவர்களாகவும், மனிதம் நேசிப்பவர்களாகவும் அமைத்திருந்தால் கூட அது அவர்களின் உழைப்பே!

ஆனால், அவர்கள் கூறிய விசயங்கள் அனைத்தையிம் எந்த சந்தர்ப்பத்திலும் உள்வாங்கப்படாமல், சுய உழைப்பையிம், தேடலையிம் தொடங்கிக் கொள்ளாமல் நாம் உறங்கிப் போவதில் யாருக்குமே லாபமில்லாமலேயே போயி விடுகிறதே.

//இருவரும் தண்டவாளத்தின் இரு கோடுகள் போல பயணித்து கொண்டிறுப்போம்...//

இது மாதிரி சொல்லி விலகிப் போவதில்தான் பெரும் அபாயமிருக்கிறது. அப்படியாகத்தான் நூற்றாண்டுகள் தோரும் தவறாகவே உள்வாங்கப்பட்ட சித்தாந்தங்கள், கோட்பாடுகள் அவரவர்களுக்கு எட்டிய மாதிரி திரிக்கப்பட்டு ”சேது” அவர்கள் குறிப்பிட்ட மாதிரி அத்தனை பிளவுகளுக்கும் காரணமாகி அதன் நிலை இழந்து காலவதி ஆகிப் போன மாதிரி ஆகிவிட்டது. இதன் மீதியை நான் சேது பின்னூட்டம் வழியாக பேசுகிறேன் :) ....

ரவிச்சந்திரன் said...

இந்த தகவல் எனக்கு புதிது என்பதால் பொறுமையாக வார இறுதியில் படிக்கலாம் என்று எண்ணி படிக்க வந்தால்... மக்கள் பின்னூட்டத்தில் ஒரு கதகளியே ஆடியிருக்காங்க:) நான் ஒரு நாள் லீவு போட்டுத்தான் படிக்கனும் போலிருக்கு:(

எம்.எம்.அப்துல்லா said...

நம்பூரு பயபுள்ள (தெ.கா) இம்புட்டு அறிவா இருக்குறது சந்தோஷமாகீது :))

The Analyst said...

Thanks heaps Dharumi sir and Mukund amma. That meant alot.

"எனக்கு நிறைய நேரம் தோனும் கேள்விகள் எல்லாம் தமிழில் எப்படி எழுதுவது என்று தெரியாததால் எனக்குள்ளே மக்கி போயிருக்கின்றன."

எனக்கும் அதே பிரச்சனையே. அதுவும் A/L science தமிழிலேயே இலங்கையில் படித்திருந்தும் A/L க்குப் பின் அச்சொற்களை ஒருபோதும் பயன்படுத்தவில்லை என்பதால்அநேகமான முன் தமிழில் படித்த‌ அறிவியற் சொற்களே மறந்து விட்டது. :(

"ஆனால் கையேடு அவர்களின் தமிழ் அசர வைக்கிறது."

I second that.

Capra வின் புத்தகத்தைப் பற்றிய மிக விரிவான ஆய்வை இக்கட்டுரையும் கொடுக்கிறது.

சந்தோஷ் = Santhosh said...

Intha mathiri post podratha vittu.. Kathai Kavithai ellam thevaya?

கையேடு said...

காப்ராவின் புத்தகத்தைச் சிறப்பாக விமர்சனம் செய்கிறது அனாலிஸ்ட்டின் சுட்டி... சுட்டிக்கு நன்றிங்க அனாலிஸ்ட்.

அப்போ இதோட தற்காலிகமா முற்றும் போட்டுகலாமா.. ??.. :)

கும்மி said...

//அப்போ இதோட தற்காலிகமா முற்றும் போட்டுகலாமா.. ??.. :) //

மிகவும் அருமையான அறிவியல் உரையாடலை மேற்கொண்ட கையேடு, The Analyst, தெகா, முகுந்த் அம்மா மற்றும் வருண் ஆகிய அனைவருக்கும் என் வணக்கங்களும், நன்றியும். மீண்டும் இதுபோன்ற உரையாடல்கள் நடைபெறும் நாட்களை எதிர்பார்க்கின்றேன்.

Thekkikattan|தெகா said...

தவறு - இன்னும் விரிவான உரையாடல் மேலும் பயனுள்ளதாக ஆக்கியிருக்கும். நன்றி!
**********************

தருமி - நீங்க கொடுத்த சுட்டி வளர்ந்த, வளரும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது.
*************************

ஜோதிஜி,

//ஒரு மாதமாக இது போன்ற நிறைய நல்ல பதிவுகள் நல்ல விமர்சனங்களோடு பகிர்ந்து கொள்வதைப் பார்க்கும் இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்று இதில் பதில் அளித்த ஒவ்வொருவரையும் கேட்க தோன்றுகிறது.//

அப்படியா நினைக்கிறீங்க. இந்தச் சூழல் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டேதான் இருக்கு. இருந்தாலும், ratio கொஞ்சம் சமச்சீரற்ற தன்மையில இருக்கிறதுதான் பிரச்சினை. திறந்த நிலையில் கிடையாதா, உரையாடலுக்கு வாய்ப்பே இல்லாமா போயிடறது. நன்றி, ஜி!

Thekkikattan|தெகா said...

வருண் - நீங்களும் மேற்கொண்டு சில விசயங்களை வெளிக் கொண்டு வர காரணமானதிற்கு என்னுடைய நன்றிகள்!

********************

சேது - உங்களது பாராட்டுக்களை பெற்றுக் கொண்டோம் :).

//இன்றைய கால கட்டத்தில் கடவுள்,மதம் மற்றும் பிறவும், மனிதர்களை அடக்கி ஆள்வதற்கும், பிரித்தும், அடித்துக் கொண்டும் வாழ்வதற்கான ஒரு அடி பணியும் சாதனமாகத் தான் பயன் படுத்தப் படுகிறது. அது தேவையா? அதை ஆதரிக்க வேண்டுமா அல்லது தனிமைப் படுத்த வேண்டுமா?//

மிக முக்கியமான கேள்வி. இன்றைய கால கட்டத்தில ஒரு கிரகமாக நாம் well informed இனமாகத்தான் இருக்கிறோம்; ஒரு விலங்கு இன பின்னணியில் வைத்து பேசும் பொழுது. நம்முடைய இருத்தலின் சூழல் தெரியும். அதனைத் தொடர்ந்து இருக்கும் நிச்சயமற்ற தன்மை, ஒரு 2000 வருடங்களுக்கு முன்பாக இருந்த மனிதன் இன்று நாம் இல்லை பலபடிகள் மேலேறி வந்திருக்கிறோம். இருப்பினும் நாம் இன்னும் அந்த ‘காட்டுமிராண்டித் (நாடுகளுக்கிடையே போர் நடாத்தி)’தனத்திலே இருந்து வெளிவந்துவிட்டதாக தெரியவில்லையே. அதன் பின்னணியில் சமூக-பொருளாதார காரணங்கள் இருந்தாலும் பிரதானமாக நான் அவதானித்து வருவது இந்த மதங்கள் சார்ந்ததும், தன்னை படைத்த கடவுளை இவர்கள் காப்பாற்றும் நிலையிலும் ஆயிப்போனதாலே ‘கடவுள் கான்செப்டே’ தன் அடிப்படை நோக்கமே இழந்து நிற்கிறது.

அப்போ நீங்க கேட்ட கேள்வியை அழுத்தமாக ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ள வேண்டும்.... ஆதரிப்பதா - தனிமை படுத்துவதா??

//அதே முன்னோர் தான் 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்றனர். ஆனா எங்கே கூடி வாழ முடிகிறது. எல்லா விதத்திலும் பிரித்து வைக்கக் கூடிய சாதனமா கடவுள், சாதி, மதம் எல்லாம் இருக்கு.//

இப்போ எங்கே ‘கூடி’ வாழுறாங்க, கூடி கூடி விரட்டி, அடிச்சிக்கிட்டுதான் வாழுறாங்க :))

Thekkikattan|தெகா said...

வெட்டிக்காட்டாரே,

// நான் ஒரு நாள் லீவு போட்டுத்தான் படிக்கனும் போலிருக்கு//

மெதுவா வைச்சிப் படிங்க. எ