Friday, December 03, 2010

பூமி பாக்டீரியம் சொல்கிறது வேற்றுக் கிரகத்தில் உயிர் : GFAJ-1

இரவு வானத்தை அண்ணாந்து பார்த்தா சும்மா கற்பனைக் குதிரை மண்டைக்குள்ளர இருக்கிற அறிவைக் கொண்டு அது பாட்டுக்கு இலக்கில்லாம பறந்து திரியும். அப்போ இப்படி விரிஞ்சி கெடக்கிர வானக் கம்பளத்தில நம்ம பூமிய ஒரு தடவ திரும்பி பார்த்தா ஒரு தூசியின் அளவை விட சிறிசா ஒண்ணுமில்லாம போயிடும். அந்த அளவிற்கு இந்த அண்டவெளி நம் கற்பனைக்கும் எட்டாத விரிதலை உள்ளடக்கியது.

நம்ம சூரியன் இருக்கிற பால்வீதி (Milky Galaxy) மாதிரியே பல பில்லியன் பால்வீதிகள் இந்த வெளியில மிதந்து திரிகிறது. அந்த ஒவ்வொரு பால்வீதியிலும் மில்லியன்ஸ் அண்ட் மில்லியன்ஸ் நம்ம சூரியனையொத்த ஸ்டார்கள் இருக்கின்றன. அவைகளைச் சுற்றியும் நம் சூரியக் குடும்பத்திற்கென அமைந்த கிரகங்களையொட்டி கிரகங்களும் உள்ளன.

அந்த கிரகங்களில் நமக்கு கிடைத்த தட்பவெப்ப சூழல்களைக் கொண்டு உயிரினங்கள் உருவாகி பல்கி பெருகியிருக்கக் கூடுமே என்ற கருதுகோளின் படி நாம பல பத்தாண்டுகளாக வானத்தை அளந்து வருகிறோம். வேற்று கிரக வாசிகளிடமிருந்து ஏதாவது சமிக்கைகள் மிதந்து வந்து அடைகிறதாவென (SETI).

இப்படியான சூழ்நிலையில் நேத்து அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா நடத்தி வந்த ஓர் ஆராய்ச்சியில் அது போன்ற வேற்று கிரகங்களில் உயிர்கள் இருப்பதற்கான நிகழ்தகவுகள் ரொம்பவே சாத்தியம் என்று கட்டியம் கூறும் வாக்கில் ஒரு சான்று கிடைத்துள்ளது.

கேட்ட நேரத்தில இருந்து அண்டவெளி உயிரின ஆராய்ச்சியாளர்களுக்கு (Astrobiologist) சந்தோஷம் நிலைகொள்ள வில்லையென அமெரிக்கா தொலைகாட்சிகளின் செய்திகள் அலறி அடித்துக் கொண்டு அந்தத் துறை சார்ந்தவர்களை அழைத்து நேர்முகம் காண்பதிலிருந்து விளங்கிக் கொள்ள முடிந்தது.

பொதுவாக இந்தப் பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் ஆறு விதமான அடிப்படை உயிரின வேதியப் பொருட்களின் மூலக்கூறுகளைக் கொண்டே கட்டமைக்கப்பெற்றிருக்கிறது (கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்.பரஸ் மற்றும் சல்.பர்).

இதனில் முக்கியமாக பாஸ்.பரஸ் நமது மரபணு சமிக்கைகளை கடத்திச் செல்லும் டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏக்களின் உயிர்ச் செல் கட்டமைப்பில் முக்கியமான பங்காற்றுகிறது.

இந்த பின்னணியில் நமக்கெல்லாம் அறிமுகமாகி இருக்கிற வேதிய அட்டவணையில் இந்த பாஸ்.பரஸின் பண்புகளையொத்த அளவில் ஆர்சினிக் என்ற வேதிய தனிமம் மட்டுமே இருக்கிறது. ஆனால், இது பூமிய உயிர் அனைத்திற்கும் உடலில் சாரும் பொழுது நச்சுத்தன்மையை வழங்கி, வளர்சிதை மாற்றம் அளவில் பாதிப்பை வழங்கும் தன்மையைக் கொண்டது. எனவே, ஆர்சினிக் வந்து பூமியில் வாழும் உயிர் அனைத்திற்கும் a big no no வேதியற் கூறு.

ஆனா, இயற்கையின் விளையாட்டப் பாருங்க. அறிவியல் புனைவுகளில் கன்னாபின்னான்னு கற்பனைக்கு எட்டிய மாதிரியெல்லாம் வேற்று கிரகங்களில் கிடைக்கிற வேதியற் கூறுகளையும், சுற்றுச் சூழலையும் கொண்டு உயிரினங்கள் வாழ்ந்து வருவதாக அள்ளிக் கட்டி எழுதுவாங்க. படிக்க படிக்க நாமும் கற்பனை உலகில் அந்த ஜீவராசி கூட்டத்தோட கூட்டமா ஒரு மனுச ஜீவராசியாவே திரிவோம்.

அந்த இட்டுக்கட்டு கதைமாதிரிக்கு, நாசாவின் புதிய பாக்டீரியம் கண்டுபிடிப்பு அது போன்ற கதைகள் எவ்வாறு உண்மையாகலாம்னு சான்று சொல்லி நிக்கிது. கலி.போர்னியா மகாணத்தில உள்ள ஓர் ஏரியில ஆராய்ச்சி செஞ்சிகிட்டு இருந்திருக்காங்க. அந்த ஏரிக்கு பேரு மோனோ ஏரி (Mono Lake). அந்த ஏரியை தேர்ந்தெடுத்ததற்கு காரணமே 50 வருஷத்திற்கு மேல மற்ற புதுத் தண்ணியோட கலக்காம கெடக்கிறதுனாலே அதில எக்கச்சக்கமான உப்பும், அமிலத் தன்மையும் மற்றும் இந்த ஆர்சினிக் நச்சுத் தன்மையும் இருக்குங்கிறதுனாலே தொழவி பார்த்துருக்காங்க ஏதாவது சிக்குதான்னு. அப்போதான் இந்த புதுவிதமான பாக்டீரியம் நம்ம பூமி உயிரி கட்டமைப்பு வேதிய மூலக்கூறுகளுக்கு எதிராக அமைந்த ஆர்சினிக்கைக் கொண்டு உயிர்வாழும் புது வகையான நுண்ணுயிரி வாழ்வது தெரிய வந்திருக்கு. அதுக்கு பேரும் வைச்சாச்சு GFAJ-1 அப்படின்னு.

சரி எப்படி நிரூபிச்சாங்க? ஆய்வுக் கூடத்தில வைச்சு இந்த பாக்டீரியத்தை வளர்த்திருக்காங்க. பாஸ்.பரஸை கொஞ்சமும், ஆர்சினிக்கை தாராளமாகவும் வழங்கி அதில இந்த பாக்டீரியம் ஆர்சினிக்கை ஊட்டமாக கொண்டு செழித்து வளர்ந்திருக்கு.

இந்த ஒத்த புது வகையான நுண்ணுயிரியை கண்டுபிடிச்சதின் மூலமா மொத்த உயிரியல் பாடப் புத்தகங்களையும் திரும்ப எழுதுற மாதிரி ஆகிப்போச்சு. அதுக்கெல்லாம் மேல இந்த அண்டவெளியில் இருக்கிற கோடான கோடி, கோடி, கோடி கிரகங்களில் எது போன்ற வேதிய மூலக்கூறுகளைக் கொண்டும் உயிர்கள் கட்டமைக்கப்படுமென்றால் கண்டிப்பாக வேற்று கிரக உயிர்கள் திளைச்சு வாழணும்மப்போய்னு உறுதியாகிப் போச்சல்ல.

இயற்கையின் விந்தையில் எதுவும் சாத்தியமேன்னு சொல்லி நிக்கிது இந்த ஆர்சினிக்கை காதலிக்கும் பாக்டீரியம். எந்த வெளி கிரகத்திலே எந்த பத்து தலை டைனோசரோ, இல்ல நாலு கால் மனுசன் பொய் பேச ஒரு மூஞ்சி, உண்மை பேச ஒரு மூஞ்சின்னு கரியமிலா வாயுவை சுவாசிச்சிட்டு நடந்து திரியுறானோ, I cant wait to get that news! :-)



பி.கு: நம்ம நண்பர் கையேடு கூட இது பொருத்து ஒரு கட்டுரை எழுதியிருக்கார் - வேறொரு உயிர்

- Photo Courtesy: Net

202 comments:

RMD said...

//உயிர்கள் இருப்பதற்கான நிகழ்தகவுகள் ரொம்பவே சாத்தியம் என்று கட்டியம் கூறும் வாக்கில் ஒரு சான்று கிடைத்துள்ளது.//
நல்ல பதிவு.போற போக்கை பார்த்தால் வேறு கிரகத்தில் உயிரினக்கள் இருப்பது உண்மையாகிவிடும் வாய்ப்பு அதிகமாகிறது.

எல்லா மத்வாதிகளும் இதனை ஏற்கெனெவே முஅறிவிக்கப் பட்டது என்று ஒரு விளக்கம் தயாரித்து வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கோள்ளப் படுகிறார்கள்.

//பொய் பேச ஒரு மூஞ்சி, உண்மை பேச ஒரு மூஞ்சின்னு கரியமிலா வாயுவை சுவாசிச்சிட்டு //
இந்த மாதிரி ஆக்சிஜன் சுவாசிக்கற ஆளுங்களே இருக்காங்க
வாழ்த்துகள்.

Anonymous said...

Was looking @ the live NASA news coverage yesterday here!

the possibility of extraterrestrial life this discovery unleashes is quite exiting

உமர் | Umar said...

//எல்லா மத்வாதிகளும் இதனை ஏற்கெனெவே முஅறிவிக்கப் பட்டது என்று ஒரு விளக்கம் தயாரித்து வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கோள்ளப் படுகிறார்கள்.//

இப்பொழுது அதனை செய்ய மாட்டார்கள். அறிவியல் இன்று கண்டுபிடித்ததை நாளை மாற்றிச் சொல்லும். அதனால், அதனை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று இப்பொழுது கூறுவார்கள். அப்படியே எந்த வசனத்தை திரிக்கலாம் என்று ஆராய்ந்துகொண்டிருப்பார்கள். சில வருடங்களுக்கு பிறகு அறிவியல் உறுதிப்படுத்தியதும், அந்த வசனத்தை எடுத்துப்போட்டு, பார்த்தீர்களா எங்கள் புத்தகத்தில் 1400 வருடத்திற்கு முன்னரே சொல்லப்பட்டுள்ளது என்று அள்ளிவிடுவார்கள். :-)

Thekkikattan|தெகா said...

RMS Danaraj said...

நல்ல பதிவு.போற போக்கை பார்த்தால் வேறு கிரகத்தில் உயிரினக்கள் இருப்பது உண்மையாகிவிடும் வாய்ப்பு அதிகமாகிறது.//

சந்தேகமே வேண்டாம் இருக்காங்க! இருக்காங்க!!. அவிங்களாவது சந்தோஷமா இருக்கட்டும்... :)

//எல்லா மத்வாதிகளும் இதனை ஏற்கெனெவே முஅறிவிக்கப் பட்டது என்று ஒரு விளக்கம் தயாரித்து வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கோள்ளப் படுகிறார்கள்.//

அதெல்லாம் புதிசா தயார் செய்ய வேண்டியதில்லை. ஏற்கெனவே இருக்கின்னு பக்க எண்ணோட காமிச்சிருவாங்க :)

ஆனா, இதில பாருங்க அப்படி ஒரு ட்ராவல் பண்ண அனைத்து தொழிற்நுட்பமும் கிடைச்சு, வேற்று கிரகத்திலும் நம்மை காட்டிலும் தொழிற் நுட்பத்துடனும், அவிங்க கிரக உருண்டைக்கும் ஏன் இந்த ப்ரபஞ்ச முழுமைக்குமேன்னு நான் ஒருத்தன் மட்டுமே கடவுள் ரேஞ்சிற்கு ஏனைய பிரஜைகளை நம்ப வைச்சு தீரன் புஷ் மாதிரி ஓர் ஆளு இருந்து போயி இங்கிருந்து நாம் அங்கே அவர்கிட்ட சொல்லுறோம்னு வைச்சிக்கோங்க ...ஏலியன் அண்ணாச்சி, ஏலியன் அண்ணாச்சி எங்கூர்ல சோ.. அண்ட் சோ தான் கடவுளுன்னு அந்தாளுக்கு என்னயக் காட்டிலும் இந்த பிரபஞ்சதிலேயே வேற கடவுளா டாய்னுட்டு கண்ணை நேருக்கு நேர் சந்திச்சாலே நாம பஸ்பம் ஆகிற ரேஞ்சிற்கு இருந்தா என்னாகும் :))...

//இந்த மாதிரி ஆக்சிஜன் சுவாசிக்கற ஆளுங்களே இருக்காங்க

வாழ்த்துகள்.//

சொல்ல வந்ததை மிகச் சரியா பிடிச்சிட்டீங்க :). முதல் வருகை நன்றி தனராஜ்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆரம்பிச்சிட்டீங்களா.. சும்மா வா
சொன்னாங்க சாமி இல்லைங்கறவங்க தான் அதிகமா சாமிய நினைக்கிறாங்கன்னு :)

அந்த கிரகத்துல ஆட்கள் இருந்தா என்பது நல்ல சுவாரசியமான விசயம்..

தருமி said...

//சாமி இல்லைங்கறவங்க தான் அதிகமா சாமிய நினைக்கிறாங்கன்னு :)//

ஏம்'பா! இப்படி இருக்கீங்க ! :(

மங்கை said...

////பொய் பேச ஒரு மூஞ்சி, உண்மை பேச ஒரு மூஞ்சின்னு கரியமிலா வாயுவை சுவாசிச்சிட்டு //

மாற்று கிரகத்துலயாவது உண்மை முகத்தோட இருக்கட்டுமே... அங்கேயுமா பொய் முகம்? இங்க தான் எல்லாமே பொய்யா இருக்கு

Thekkikattan|தெகா said...

கும்மி,

நண்பர் தனராஜ் கூட உங்க லைன்லேயேதான் சொல்லியிருந்தார். இருக்கிற இடத்தை விட்டு நகராம அறிவியல் புனைவுகள் ரேஞ்சிற்கு அகண்ட முறையில ஏதாவது சொல்லி வைச்சிட்டு பின்னாடி இதோ ‘இங்கு’ இருக்கு பாருங்கன்னு சொல்லுறதுதான் நெசம் ;-)

அறிவியல் புனைவுகள்ள வர்ற மாதிரி ஒரு நிகழ்வு நடந்தா எப்படி இருக்குமின்னு தனராஜ்க்கு சொல்லியிருந்தேன். அது மாதிரி வேற கிரகத்தில, பயணம் செய்ற நேரம் நம்மைக் காட்டிலும் ரொம்பச் சுருங்கி பூமி சுற்றளவையே 10 நிமிஷத்திற்கும் குறைச்சலா சுத்தி வார மாதிரி தொழிற்நுட்பம் அவிங்க ஒரு 2000 வருஷத்திற்கு முந்தி எட்டியிருந்தா இத்தனை (மதச்) சாமிகள் பூமியில இருக்கிற மாதிரி அங்கே இருக்குமா?

இங்கிருந்து நம்ம அங்கே பழகப் போக நம்ம கான்செப்ட் சொன்னா விளங்குமா? அப்படியே அங்க உள்ள ஒத்தை சாமீ (போதை) நம்ம விட அதிகமா இருந்தா என்னாகும் :))

யோசிச்சு இத அடிப்படையா வைச்சு ஒரு புதினம் எழுதுங்க, கும்மி - ஹிஹிஹி.

Thekkikattan|தெகா said...

Anonymous said...

Was looking @ the live NASA news coverage yesterday here!

the possibility of extraterrestrial life this discovery unleashes is quite exiting//

Indeed, Anony பின்னே இருக்காதா? ஒட்டு மொத்தமா நாம இது வரைக்கும் அறிஞ்சு வைச்சிருக்கிற விசயங்கள் அனைத்தையிம் தவிடு பொடியாக்கிட்டு கூடுதலா இன்னும் என்னவெல்லாம் நமக்கு தெரிஞ்சிக்க வாய்ப்பா இருக்கும்.

Thekkikattan|தெகா said...

முத்து,

சாமி இல்லைங்கறவங்க தான் அதிகமா சாமிய நினைக்கிறாங்கன்னு :)//

அப்படியா நினைக்கிறீங்க. நானும் தருமி சொன்னதையே வழிமொழிஞ்சிக்கிறேன் அப்போ ஏம்'பா! இப்படி இருக்கீங்க ! :(

//அந்த கிரகத்துல ஆட்கள் இருந்தா என்பது நல்ல சுவாரசியமான விசயம்..//

அது விசயம்! அப்படி மட்டும் செய்தி வந்திருச்சு. அப்புறமில்ல இருக்க நம்ம பார்வை... :-). மற்ற பின்னூட்டக் கதைகளையும் வாசிங்க அது எப்படி சுவாரசியமாகும்னு ஒரு சிறிய glimpse.

உமர் | Umar said...

//யோசிச்சு இத அடிப்படையா வைச்சு ஒரு புதினம் எழுதுங்க, கும்மி - ஹிஹிஹி. //

என்னை மாட்டிவிடுறதுல உங்களுக்கு அப்படியென்ன ஒரு குஷி! :-)

நீங்கள் சொன்ன கான்செப்ட் ஒத்த ஒரு புதினம் உள்ளது. எண்டமூரி வீரேந்திரநாத் எழுதியது. 12 ஆண்டுகளுக்கு முன் வாசித்தது. பெயர் நினைவில்லை. யோசித்து சொல்லுகிறேன்.

அதில், வேறொரு கிரகத்தினர் தங்கள் பயன்பாட்டின் தேவை பொருட்டு, பூமியை அழிக்க முடிவு செய்திருப்பர். இங்கிருந்து செல்லும் ஒரு குழு, பூமியை ஏன் அழிக்கக்கூடாது என அவர்களோடு வாதாடி, பூமியைக் காப்பாற்றும்.

தொழில்நுட்பம் உள்ளிட்ட பலவற்றிலும் அந்த கிரகத்தினர் நம்மை விட முன்னேறிய நிலையில் இருப்பதாக அக்கதையில் வரும்.

மங்கை said...

//பாஸ்.பரஸை கொஞ்சமும், ஆர்சினிக்கை தாராளமாகவும் வழங்கி அதில இந்த பாக்டீரியம் ஆர்சினிக்கை ஊட்டமாக கொண்டு செழித்து வளர்ந்திருக்கு.//

எவல்யூஷனையே ரீகன்ஸிடர் பண்ணனுமா...இப்ப இந்த மாதிரி உயிரனங்கள் இன்னும் எங்க இல்லாம் இருக்கும்னு பார்க்கனும்...

more than one way life can exist அப்படினு நினக்கறதுக்கே ஆச்சிரியமா இருக்கே...அது நிரூபிக்கப்பட்டால்?..

Thekkikattan|தெகா said...

எவல்யூஷனையே ரீகன்ஸிடர் பண்ணனுமா.//

மங்கை, பரிணாமத்தை இதில மறு பரிசோதனைப் பண்ணி பார்க்க ஒன்றுமே இல்லை. எந்தச் சூழலில் உயிர் தோன்றினாலும் அது பரிணாமத்தை அடிப்படையாகக் கொண்டே உயர் நிலையையிம், அந்த புறச் சுற்றுப் புற சூழலுக்குத் (niche) தகுந்த மாதிரியான உயிர்களையிம் ஆமோத்தி பல்கி பெருக்கிக் கொள்ளப் போகிறது. எனவே அதனில் பெரும் கோட்பாட்டு ரீதியான வேறு கோணங்கள் இருக்க வாய்ப்பில்லை.

உயிரியியல் பாடப் பிரிவில் மாற்றங்கள் வரும் அது எந்த வகையிலென்றால், இது போன்ற அடிப்படை வேதிய தேவைகளைக் கொண்டு இயங்கும் உயிரினங்களின் உடற் செயற்பாடுகளை அறிந்து கொள்வதும், மேலும் அதன் பொருட்டான விரிவான பகுதிகளும் இணைக்க வேண்டி வரும்.

//more than one way life can exist அப்படினு நினக்கறதுக்கே ஆச்சிரியமா இருக்கே...அது நிரூபிக்கப்பட்டால்?...//

ஹ்ம்ம்ம்... அந்த லைனில் யோசிச்சுப் பார்த்தீங்கன்ன, நம்முடைய இருப்பையே கேள்விக்குள்ளாக்கிற மாதிரியான அழுத்தமான விசயமாகிப் போயிடும். இங்கே பூமியில எல்லா மத, இன, மொழி வேறுபாடுகளைத் தாண்டி ஒத்த உயிரினமாக தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளும் நிலைக்கும் தள்ளப்படலாம். ஆஹா! நினைக்கவே சந்தோஷமா இருக்கு! அதுவும் வேறு கிரகத்து உயிரி நம்மை விட அறிவிலும், ஆற்றலிலும் சிறந்தோங்கினால், நாம் நம்முடைய தத்துபித்து தனங்களை விலக்கி அவர்களிடம் கற்றுக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவோம்... அப்பொழுது ஒற்றுமையிம், புரிதலும் நமக்குள்ளரயே அவசியாமகிப்புடும் :)

நல்ல கேள்வி - மங்கை நன்றி!

உமர் | Umar said...

//பெயர் நினைவில்லை. யோசித்து சொல்லுகிறேன். //

அந்தப் புதினம் - கண்சிமிட்டும் விண்மீன்கள்.

அந்தப் புதினம் பற்றிய சில பதிவுலக விமர்சனங்கள் இங்கேயும், இங்கேயும்.

Anna said...

Just managed to read the actual article. It makes you wonder when life originated how many different life forms took off. I wonder what kind of biochemistry this bacteria's ancesters' had. I read somewhere that this lake is pretty young, geologically speaking. WOuld be interesting to see whether they chnaged their biochemistry with the environment.

It would also be intereting to see if more complex organisms can thrive with biochemistry.

Sorry about the English, had to write this quickly. I really like the way you write, especially science stuff in Tamil. I wish I have at least a fraction of this skill.

Thekkikattan|தெகா said...

//அந்தப் புதினம் - கண்சிமிட்டும் விண்மீன்கள். //

கும்மியண்ணா, ரெண்டு பதிவுகள் பக்கமும் போயி படிச்சேன். குதுகலத்தில மிதந்திருக்காங்க. ஆனா, அங்க வந்த பின்னூட்டங்களை வாசிச்சா எல்லாரும் இப்போ அந்தப் புத்தகத்தை வலை போட்டு தேடுறாங்கன்னு தெரிய வருது. பதிப்பில இப்போ இல்லையாம.

யாராவது, அந்த புத்தகப் பிரதி வைச்சிருக்கவங்க அத கணினியில ஏத்தி மின் புத்தகமா ஆக்கினா தமிழ் கூறு நல்லுலகு நன்றியுடையதாகிப் போகும். கும்மி இந்த நல்ல புராஜெக்டை நீங்க எடுத்து செய்ங்கப்பா :)

நன்றி கும்மி! தொடுப்புகள் தேடித்தந்தமைக்கு!!

Thekkikattan|தெகா said...

வாங்க அனலிஸ்ட்,

கடைசிய தேடி கண்டுபிடிச்சிட்டீங்களா? :-)

//It makes you wonder when life originated how many different life forms took off.//

உண்மைதான். என்னுடைய அனுமானம் என்னான்னா, ஆரம்ப கால கட்டத்தில மிக மிக மெதூஊஉவாத்தான் உயிரின பன்முக பெருக்கம் இருந்திருக்கணும். ஏன்னா, கிடைக்கும் வாழ்விடமும் அவ்வளவு உயிரின-நண்பக சூழ்நிலையில அமையாம பெரிசா ஊக்குவிக்கும் வகையாக ஒரு சூழல் அமைஞ்சிருந்திருக்காது.

அதுக்கு ஓர் உதாரணமா இரண்டு பேரழிவு காலங்களுக்கு (great extinctions) பிறகான கட்டத்தில மீண்டும் பன்முக உயிரின பெருக்கம் மிக மெதுவாத்தான் தாவ ஆரம்பிச்சி இருந்திருக்கு இல்லையா?

காரணிகள் என்னவா இருக்கலாம்? டைனோசார்கள் சுத்த துடைத்தழிப்பிற்கான பிறகுதானே பாலூட்டிகளே தாவிக் குதிச்சு பரிணாமச் சக்கரத்தை அதி வேகமா சுழட்டி அடுத்த கட்ட நகர்வை நோக்கி நகர்த்தி நம்ம தயாரிச்சிருக்கு.

இதில இருந்து நாம பூமியப் பரப்பில் நிகழ்த்தும் மாற்றங்களையிம் உள்ளடக்கி அதன் இயக்கத்தில் அடுத்த கட்டம் எதுவாக இருக்குமின்னு திசையை அறிந்து கொள்வதின் பொருட்டு ஒரே ஆர்வமா இருக்கு...

உங்களுக்கு எட்டினா பகிர்ந்துக்கோங்க... ஹிஹி!

//It would also be intereting to see if more complex organisms can thrive with biochemistry. //

போதுமான காலமும், அதற்கான தேவையிமிருந்தா மேலே சொன்ன மாதிரி காம்ப்லெக்ஸ் உயிரினங்கள் அதே உடலியல் சார்ந்த (biochemistry) மாற்றங்களை பெற்று பல்கி உயர்ந்த இடத்தை அடையாம எங்கே போயிருந்திருக்கப் போவுது. அதற்கான தேவையிம் போதுமான ஒத்த சூழலும் பெரும் பகுதியில் இங்கே பூமியில் இல்லாததால் அது போன்ற சிக்கலான புத்திசாலி உயிரினங்கள் தோன்றியிருக்காமல் இருக்கலாம்... இல்லையா?

// I really like the way you write, especially science stuff in Tamil.//

அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைங்க. பழகிக்கிறதுதான். இன்னும் நல்லா செய்யலாம். நீங்களும் முயற்சி பண்ணுங்க, முடியும். நானெல்லாம் ரொம்ப அவரேஜ், புரியற மாதிரி சொல்லணும்னா கடைசி பெஞ்ச் :D

கையேடு said...

எளிமையா நல்லா எழுதிருக்கீங்க.

சுட்டிக்கும் நன்றி.

உமர் | Umar said...

//கும்மி இந்த நல்ல புராஜெக்டை நீங்க எடுத்து செய்ங்கப்பா :)//

ஏன் இப்படி...!

முகுந்த்; Amma said...

தெகா

ரொம்ப நாளைக்கு அப்பறம் உங்க தளத்தில நான்.

இதனை பற்றிய ஒரு டாகுமெண்டரி டிஸ்கவரியில பார்த்திருக்கேன்.

இதில என்ன ஜோக்ன்னா வேற்று கிரகத்தில ஜீவனுங்க இருக்கு அப்படின்னு சொன்னவுடனெ சிலர் :))உங்களைப்போலவே சாமி இல்லை அப்படின்னு சொல்லுறது தான்.

நீங்க The Universe Season 2, Astrobiology தொடர் பாருங்க சார்.

சில கேள்விகள் வரும். நாமெல்லாம் டிஎன்ஏ, அமினோ அசிட் ல இருந்து தான் வந்திருக்கோம்.

ஏன் டிஎன்ஏ வையோ அல்லது அமினொஅசிட் யோ நீங்க லேப் ல ப்ரிபேர் பண்ணலாம், ஆனா அவை எல்லாம் funtional ஆ work ஆகாது. அதற்க்கு தகுந்த சூழ்நிலை அமையனும். எதோ ஒரு spark வரனும்ங்க அது funtional ஆக, என்னை பொருத்தவரை அந்த spark தான் கடவுள். இதில் நிரைய மாற்று கருத்து வரலாம். ஆனால் சாமி இல்லை சொல்லுரவங்க முதல்ல நாம எங்க இருந்து வந்தோம் அல்லது எங்க போக போறோம்னு சொல்லுங்கப்பா :)))

Thekkikattan|தெகா said...

கையேடு said...
எளிமையா நல்லா எழுதிருக்கீங்க.

சுட்டிக்கும் நன்றி!//

உங்க கட்டுரைக்கு பின்னாடிதானே எனக்கு இதை தனியா போடணும்னு தோணிச்சு, சோ, உங்களுக்கும் என்னோட நன்றி ;-)
****************

கும்மி, என்ன ஏன் இப்படி... கமான் மேன் ஜஸ்ட் டூ இட் :D

கையேடு said...

//முதல்ல நாம எங்க இருந்து வந்தோம் அல்லது எங்க போக போறோம்னு சொல்லுங்கப்பா :))//

எங்கிருந்து வந்தோம் எங்கே போகப்போறோம்ன்றது மனிதனுக்கு மட்டுமே தோன்றும் ஒரு ஆர்வமூட்டும் கேள்வி.
மண்ணிலிருந்து வந்தோம், மண்ணுக்குள்ளேயே போகப்போறோம், அவ்வளவுதான் இந்த எளிய விடையே போதுமானதாக இருக்கிறது ( எனக்கு)?

முதலில் கொஞ்சம் அறிவியலோடு இதை அனுகிப் பார்க்கலாம், உங்களுக்கு நன்கு அறிந்தவற்றையே எழுதியிருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்.

பொதுவாக இறப்பு என்பது பிறப்போடு தொடர்புடையதாக இருந்திருக்கவில்லை அல்லது பிறக்கின்ற எல்லாம் இறப்பதில்லை.

இறப்பு என்பதும் இனப்பெருக்க அடிப்படையிலான தொரு பெரும் மாற்றத்தில் பின்னர் உள்நுழைந்த ஒரு நிகழ்வாகவே குறிப்பிடுகிறார்கள் சில இம்மியுனாலஜிஸ்ட்ஸ். அதாவது இனப்பெருக்கத்திற்காக தன்னைத்தானே பிரதியெடுத்தல் முறையிலிருந்து, கலவி, அதாவது ஜீன்பரிமாற்றம் என்ற யுக்தியைச் செல்கள் கையாளத் துவங்கியபோதுதான் இறப்பு எனும் இயற்கை நிகழ்வு தவிர்க்க இயலாத ஒரு நிகழ்வாக உயிரிகளுக்குள் புகுந்திருக்கிறது என்று (Sex and Origin of Death) என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார் வில்லியம் ஆர்.க்ளார்க். இதை இயற்கையின் அடிப்படைப் பண்புகளில் ஒன்றான குறைந்த ஆற்றல் செலவீடு அடிப்படையில் விளக்குகிறார்.

அதே சமயம், புற்றுநோய்ச் செல்களும், நமது உடலுக்குள்ளேயே இருக்கும் கிருமிச் செல்கள் சிலவும் இவ்விறப்பு எனும் நிகழ்வைப் பெறாத செல்களாக இருக்கின்றன. அவை தங்களது வாழ்க்கைக் கடிகாரத்தை மறுசுழற்சிக்கு உட்படுத்திக்கொள்பவையாக இருக்கின்றன. இதுவே இறந்த உடல் அழுகுவதற்கான முக்கியப் பங்கு வகிக்கின்றன.

ஆக ஒரு செல்வகையிலிருந்து தோன்றிய நாம் வேறொரு செல் வகையாக மாறுகிறோம்.

இது மண்ணிலிருந்து தோன்றிய உயிர் வகை மீண்டும் மண்ணுக்குள்ளேயே செல்லும், தத்துவத்தின் அறிவியல் பார்வைப் போன்றதுதான்.

கையேடு said...

எனக்கும் நம்பிக்கையாளர்களிடம் கேட்க இரண்டு கேள்வி இருக்கு..

1.கடவுளை ஏன் நம்பணும்?

2.தற்போது உழைத்து, உண்டு உறங்கி வாழ்ந்து வரும் ஒரு எளிய வாழ்வை சிறுமைப்படுத்தாத ஆன்மீகத் தத்துவம் ஏதாவது உண்டா?

தருமி said...

முகுந்த் அம்மா,

//எதோ ஒரு spark வரனும்ங்க அது funtional ஆக, //

இப்படி சொல்லியிருக்கீங்க; ஆனால் உங்க ஆங்கிலப் பதிவில் ..//Powered by the synthetic genome, that microbial cell began replicating and making a new set of proteins.//
- இப்படி சொல்லியிருக்கீங்க. இங்க அந்த spark எப்படி வந்திச்சி?

தருமி said...

//முதல்ல நாம எங்க இருந்து வந்தோம் அல்லது எங்க போக போறோம்னு சொல்லுங்கப்பா :))//

இதை ஒரு சமய நம்பிக்கைவாதி கேட்கும்போது, அந்தக் கேள்விக்குப் பின்னால் 'உன்னைப் படைத்தது சர்வ வல்லமை பொருந்திய கடவுள்; நீ இறுதியில் அவரைப் போய்ச்சேரவே படைக்கப்பட்டுள்ளாய்' என்கிற (ஆன்மீகத்) தத்துவம் நிற்பதுதான் வாடிக்கை. இங்கும் இந்தக் கேள்வியின் பின்னால் அந்தக் கேள்வி இருப்பதாக எண்ணி, என் கேள்வியை அதற்குப் பதிலாக எழுப்புகிறேன்: மனிதன் கடவுளால் படைக்கப்பட்டான். அவன் மரணத்திற்கு / ஜென்மங்களுக்குப் பிறகு கடவுளிடம் சேரவேண்டும். என் வீட்டு நாய்க்குட்டி என்ன ஆகவேண்டும். அதுவும் கடவுளிடம் சேரணுமா? சேரணும்னா அது பாவம் இந்தப் பிறவியில் ஒண்ணும் தெரியாதஜென்மமாக இருக்கிறதே .. பாவம் என்ன செய்யும் அது?

கையேடு கொடுத்த பதில் எனக்கு பிடிக்குது. நான் செத்த பிறகும், என் நாய் செத்த பிறகும் //மண்ணிலிருந்து வந்தோம், மண்ணுக்குள்ளேயே போகப்போறோம், அவ்வளவுதான் இந்த எளிய விடையே போதுமானதாக இருக்கிறது ( எனக்கு)?//

கையேடு said...

...தொடர்ச்சி -மேலே விட்ட பின்னூட்டத்திற்கு கூடுதல் இணைப்பாக...

---புற்றுநோய்ச் செல்கள் இச்சமிஞ்சைய எப்படி தாண்டிவருகின்றன என்பது மிகவும் ஆர்வமூட்டும் ஒரு செய்தியாகவே இருக்கிறது. இது குறித்து பின்னர் தேவைப்பட்டால் பேசலாம்.

அறிவியல் ரீதியாக மேலே சொல்லியிருந்தாலும், சமூகத்தளத்தில் ஆன்மீகத்தையும், கடவுளையும் நான் ஏன் நிராகரிக்கிறேன் என்று விளக்க முயற்சிக்கிறேன்.
கடவுள் கொள்கை மனிதனின் ஆகப்பெரிய பலவீனம் ஆகும்.

மனிதனின் தனிச்சிறப்பாகக் கருதிக்கொள்ளும் சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒன்றாகவே கடவுள் கருத்து இருக்கிறது.
அமினோ அமிலங்களுக்குக் கிடைக்கும் ஒரு ஒளிவெட்டுதான் கடவுள் என்றால், அதற்கு மேல் உரையாட ஒன்றுமேயில்லை. சிந்தனைக்கும் உரையாடலுக்கும் ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். கடவுள் கருத்து என்பது கியுரியாஸிடி பேசிஃபையராகவே இருக்கிறது சிலருக்கு. இதற்கு மேல் கடினப்பட்டு சிந்திக்க வேண்டாம் என்று தனக்குத்தானே வைத்துக் கொள்ளும் ஒரு எல்லையாகவே இருக்கிறது. அது தவறும் கிடையாது ஆனால், அதுதான் எல்லை, அதுதான் அனைவருக்குமான எல்லையாக இருக்க வேண்டும், என்பதுதான் சிக்கலுக்கான விதையாக இருக்கிறது.

Thekkikattan|தெகா said...

Thekkikattan|தெகா said...
//அதாவது இனப்பெருக்கத்திற்காக தன்னைத்தானே பிரதியெடுத்தல் முறையிலிருந்து, கலவி, அதாவது ஜீன்பரிமாற்றம் என்ற யுக்தியைச் செல்கள் கையாளத் துவங்கியபோதுதான் இறப்பு எனும் இயற்கை நிகழ்வு தவிர்க்க இயலாத ஒரு நிகழ்வாக உயிரிகளுக்குள் புகுந்திருக்கிறது என்று (Sex and Origin of Death) என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார் வில்லியம் ஆர்.க்ளார்க். இதை இயற்கையின் அடிப்படைப் பண்புகளில் ஒன்றான குறைந்த ஆற்றல் செலவீடு அடிப்படையில் விளக்குகிறார்.//

கையேடு, இங்க எனக்கே ஒரு கேள்வி. சுவாசிக்கும் நிலையிலுள்ள எந்த ஓர் உயிரினமும் வளர்சிதை மாற்றத்திற்கு உட்பட்டதே என அறிகிறோம். அதாவது அதற்கென வளர்ச்சிப் பருவங்கள் உண்டு, அதனின் வளர்சிதை ஆற்றலுக்கென பயன் படுத்திக்கும் சக்தியைப் பொருத்து தனது உடல் உறுப்புகளும் (அதனை கட்டமைக்கும் செல்களும், புதுப்பித்து, மரணித்து...) அத்துடனே செயல் இழக்கும் தன்மையை அடையிம் பொருட்டு முன்னோக்கியே செல்கிறது.

புற்று நோய்ச் செல்களை எடுத்துக் கொண்டாலும் அதன் தீவிரம் பல்கிப் பெருகும் தன்மையைக் கொண்டே அந்த தனிப்பட்ட செல்கள் மென்மேலும் தனது வளர்ச்சியை அதீதப் படுத்திக் கொள்ளலாம். ஆனால், புற்று நோய்ச் செல்களுக்கு தனிப்பட்ட ரீதியில் மரணிப்பே கிடையாதா? புரியவில்லை?!

இருந்தாலும் இப்படிச் சொல்லி இருக்கீங்க, ... அவை தங்களது வாழ்க்கைக் கடிகாரத்தை மறுசுழற்சிக்கு உட்படுத்திக்கொள்பவையாக இருக்கின்றன. இதுவே இறந்த உடல் அழுகுவதற்கான முக்கியப் பங்கு வகிக்கின்றன.

கையேடு said...

அந்த இடத்தில் கொஞ்சம் குழப்பியிருக்கிறேன் உண்மைதான்.

புற்றுநோய்ச் செல்கள் தனித்த வகையான செல்கள் அல்ல என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒரு குறிப்பிட்ட செல்வகை அதீத செல் வளர்ச்சிக்கு உட்பட்டு பல்கிப் பெருகும் போது, அவற்றுக்கான உணவும் ஆற்றலும், அதைத் தாங்கிக்கொண்டிருக்கும் ஆதார விலங்கிடமிருந்தே எடுத்துக்கொள்கிறது. அதனால் அவை ஆதார விலங்கு இறக்கும்போது இறந்து போகிறது.

ஆனால், இந்த கடிகாரத்தை மீண்டும் துவக்கிக்கொள்ளும் பண்பு சில கிருமிச் செல்களுக்கு இருக்கிறது என்று குறிப்பிடுகிறார்.
இதைத்தான் அவர் உடல் அழுகுதலுக்கான முக்கியக் காரணியாகச் சொல்கிறார்.

நான் இரண்டையும் ஒரே இடத்தில் சுட்டிக் காட்டி குழப்பியிருக்கிறேன்.

முகுந்த்; Amma said...

கையேடு அவர்களுக்கு

//மண்ணிலிருந்து வந்தோம், மண்ணுக்குள்ளேயே போகப்போறோம், அவ்வளவுதான் இந்த எளிய விடையே போதுமானதாக இருக்கிறது ( எனக்கு)?//

சரி மண் எங்கிருந்து வந்தது?.
இந்த கேள்விக்கி நீங்க உடனே பிக் பாங்க் தியரியை துணைக்கு இழுக்க வேண்டி வரும். அதன்படி நாமெல்லாம் ஒரு சூன்யதிலிருந்து வந்திக்கோம்.

we all came from nothing.

இது பல கோடி வருடங்களுக்கு முன்பே இந்து மதத்தில் கூற பட்டுள்ளது. இன்னும் கூட பல தியான வகுப்பிலும் ஒரு சூன்யத்தை நோக்கி தியானம் செய்ய சொல்வது இதனாலெயே.


தொடரும்...

Thekkikattan|தெகா said...

சரி மண் எங்கிருந்து வந்தது?.
இந்த கேள்விக்கி நீங்க உடனே பிக் பாங்க் தியரியை துணைக்கு இழுக்க வேண்டி வரும். அதன்படி நாமெல்லாம் ஒரு சூன்யதிலிருந்து வந்திக்கோம்.//

இந்த விடயத்தை தொட்டு பேசினாலே இன்னும் கூடுதலாக எல்லாவிதமான இயக்கங்களையும் இயற்கை என்ற கட்டற்ற இயக்கவியலுக்குள் அடங்கியாதாகவே பார்க்கத் தோன்றுகிறது.

நுயிப்லா விலிருந்து தோன்றிய சூரியன், அதனின்று விலகிய (எஞ்சிய) இதர வாயுவும், ஏனைய பொருட்களுமாக இணைந்து பூமி போன்ற திட கிரகங்களையிம், மற்ற வாயு நிலை கிரகங்களையிம் கட்டமைத்து கொள்கிறது என அறிகிறோம்.

பின்பு படிப்படியாக பல வேதிய மாற்றங்களை எட்டியெட்டி நம் கிரகத்தைப் போல உயிர்களை சிருஷ்டிக்கும் நிலையையிம் அடைகின்றது என்றும் அறிகிறோம். நம் உடம்பில் இருக்கும் அத்தனை கட்டுமானப் பொருட்களும் இந்த அண்டவெளியிலிருந்தே எடுத்துக் கொள்ளப்பட்டது. மீண்டும் அதுவாகவே மறுசுழற்சியில் சென்றடைகிறது.

இந்த நிலையை எட்ட எத்தனை கோடான கோடி மில்லியன் வருடங்களை எடுத்துக் கொண்டு ஒரு பரிணாம சங்கிலியாகவே எல்லாமே நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. கொசுவிலிருந்து இன்று பரிணாமத்தின் உச்சத்தில் இருக்கும் மனிதன் வரைக்கும் இயங்குதள உடலுறுப்புகள் அனைத்திற்கும் இனப்பெருக்கம் செய்யவும் கழிவுகளை நீக்கவும் தேவையாகவே இருக்கின்றன.

----தொடரும்...

Thekkikattan|தெகா said...

--தொடர்ச்சி...1

இதனில் மூளையின் அமைப்பில் கொஞ்சம் காம்ப்லெக்ஸிடியை தீட்டித்தந்த இயற்கை மனிதனை மட்டும் ஒரு புனித ஜந்துவாக ஆக்கிக் கொண்டதாக அவர்களை நம்ப வைக்கிறதே ஏன்? டைனோசர்களுக்கு முன்பு எங்கே இருந்தோம் நாம்?

மனிதனுக்கு மிக அருகே மரபணு சார்ந்து கிட்டே வரும் போனோபோஸ்களும் கிட்டத்தட்ட tool using and makingல் தனக்குத் தேவையான உணவை தேடிக் கொள்கிறது. நம்ம மனித இனம் மட்டும் இந்த பூமியப் பரப்பிலிருந்து ஏதோ ஒரு காரணத்திற்காக தொடைத்தெடுதுக் கொண்டதிற்கு பிறகாக, இந்த போனோபோஸ்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் என்னாகும்? அடிப்படை உணவைத் தேடி வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்து பூமியில் செழித்தோங்குவது மட்டும் அடிப்படை நிலையென்றால்...

கொடுத்த கால கட்டத்தில் இன்னும் காம்ப்லெக்ஸாக சங்கிலித் தொடர் போன்ற கற்றல், அதனை மெருகேற்றல் என்ற தொடர்வினையே இன்னும் கூடுதலான அவைகளின் முதன்மை intelligence நிலைக்கு தள்ளி முன்னேற்றாதா?

Anna said...

This is a critical analysis of the paper by a microbiologist - quite interesting

Thekkikattan|தெகா said...

Analyst,

நானும் பாதிக்கு மேல நீங்க கொடுத்த இணைப்பில உள்ள பேப்பர் விசயங்களை படிச்சேன். பிறகு கொஞ்சம் அங்கே உள்ள மறுமொழிகளையிம் வாசிச்சேன். வாசிச்சிட்டே வந்தப்போ எனக்கு இந்தக் கேள்விதான் தோணுச்சு : இந்த பாக்டீரியம் பாஸ்பேட்டையோ அல்லது ஆர்சனேட்டையோ சில குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் உண்டு வளர்வதில் மாற்றம் காமித்தாலும்...

ஆர்சனேட்டை உண்டு கொண்டு வளர்வதால் மற்ற நாம் அறிந்த பூமி உயிர்களைக் காட்டிலும் இந்த பாக்டீரியம் வித்தியாசமானது என்றே தோணச் செய்கிறது. அப்படி இருப்பின் அதன் இயங்கு செல்களும் அதற்கு தகுந்ததது போலத்தானே கட்டமைக்கப் பெற்றிருக்கும்... உங்களுத் தெரிஞ்சா கொஞ்சம் விளக்குங்களேன். தெரிஞ்சிக்கிறோம்.

Anna said...

I completely agree with கையேடு + தெகா

"அதற்க்கு தகுந்த சூழ்நிலை அமையனும். எதோ ஒரு spark வரனும்ங்க அது funtional ஆக, என்னை பொருத்தவரை அந்த spark தான் கடவுள். "

Are you using the term "god" in a metaphorical way?

கடவுள் இருப்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை எனும் போது குறிப்பிடும் கடவுள்: எல்லாம் வல்ல, எல்லாம் தெரிந்த, எங்கும் இருக்கும், எமது அன்றாடச் செயல்களை மதிப்பிட்டு, கணக்கு வைத்து பின் தண்டனைகளும் தரும் ஒருவர். ‍ அவ்வாறு ஒருவர் இருப்பதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. அதோடு there are many logical flaws with that definition.

Keeping with the spirit of the season, as somebody said, god seems like the santa claus for adults.

முகுந்த்; Amma said...

தருமி அவர்களுக்கு

//இப்படி சொல்லியிருக்கீங்க; ஆனால் உங்க ஆங்கிலப் பதிவில் ..//Powered by the synthetic genome, that microbial cell began replicating and making a new set of proteins.//
- இப்படி சொல்லியிருக்கீங்க. இங்க அந்த spark எப்படி வந்திச்சி?//

நிறைய பேர் உங்களைப்போலவே synthetic genome பத்தி குழம்பி இருக்காங்க.

முதல்ல குலோனிங் னா என்னன்னு கொஞ்சம் பார்ப்போம். இந்த முறைப்படி நமக்கு தேவையான DNA products ஐ வெட்டி அதனை எதோ ஒரு வைரல் அல்லது பிலாஸ்மிட் வெக்டர்ல ஒட்டி அந்த பிலாஸ்மிட் ஐ தன்னை தானே நகல் எடுக்க விடுவது..இது தான் பொதுவா நடக்கிற குலோனிங் முறை.

இந்த பிலாஸ்மிட் அல்லது வைரஸ் ம் ஒரு உயிரினம் தான்.

பாக்டீரியா முதல் பாலூட்டிகள் வரை அனைத்திலும் இந்த டிஎன்ஏ நகல் எடுப்பது நடக்குது.

அது போலவே பல டிஎன்ஏ பாகத்தை இனைச்சு நகல் எடுத்தது தான் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு ஜினோமே தவிர லாப் ல ஜஸ்ட் லைக் தட் உருவாக்கினது அல்ல.

முகுந்த்; Amma said...

கையேடு, அனலிஸ்ட் மற்றும் தெகா அவர்களுக்கு

டிஎன்ஏ வோ அல்லது ப்ரோடீன் ஓ எல்லாமெ ஹைட்ரொகார்பன் ல இருந்து தான் வந்திருக்கு.

அதன் பேசிக் C, H, O அது தவிர மற்ற சில தனிமங்களும் சேர்ந்து நமக்கு ஒரு அமினோஅசிடோ அல்லது ஒரு பெப்டைடோ கிடைக்கலாம். ஆனால் அது ஒரு பெப்டை செயின் ஆக மட்டுமே இருக்கும்..அது ஒரு செயல் படுற புரோடீன் ஆகனும்னா 3D structure ஆகனும் fold ஆக சூல்நிலை அமையனும் அதை தான் ஒரு spark அப்படின்னு குறிபிட்டேனே ஒழிய அது ஒரு ஒளிக்கற்றை என்று குறிப்பிடவில்லை.

அந்த spark என்பது எதாவது ஒரு வகை எனெர்ஜி ஃபொர்ம் ஆக இருக்கலாம்.

இதனை நீங்கள் இயற்க்கை என்று சொல்லுகிரீர்களா அதுவும் சரி தான். எனென்றால் அதுவும் ஒரு வகையான நம்பிக்கை தான் Paganism. So, எதொ ஒரு சக்தி நம்மை எல்லாம் ஆட்டுவிக்கிறது என்று நம்பினாலே நீங்கள் எல்லாம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாகி விடுகிறீர்கள்.

முகுந்த்; Amma said...

//Are you using the term "god" in a metaphorical way?

கடவுள் இருப்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை எனும் போது குறிப்பிடும் கடவுள்: எல்லாம் வல்ல, எல்லாம் தெரிந்த, எங்கும் இருக்கும், எமது அன்றாடச் செயல்களை மதிப்பிட்டு, கணக்கு வைத்து பின் தண்டனைகளும் தரும் ஒருவர். ‍ அவ்வாறு ஒருவர் இருப்பதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. அதோடு there are many logical flaws with that definition.

Keeping with the spirit of the season, as somebody said, god seems like the santa claus for adults.//

கடவுள் நம்பிக்கை, மதம் எல்லாம் மனித இனம் தன்னை நெறி படுத்திக்கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு வழிமுறை.

பொய் சொன்னா கடவுள் கண்ணை குத்திடுவார் அப்படின்னு குழந்தைகளுக்கு பயமுறுத்துற மாதிரி. நீ பாவம் செய்தா கடவுள் கணக்கு வச்சிருபார் அப்படின்னு சொல்லுறது. அந்த பயத்திலயாவது தப்பு பண்ணாம இருப்போமே அப்படிங்கிற நினைப்பில சிறு குழந்தைகளுக்கு சொல்லுற மாதிரி சொல்லுறது தவிர வேறு எதுவும் இல்லை.

மனிதனை நெறிப்படுத்த உருவாக்கப்பட்ட மதம் கடவுள் என்பதெல்லாம் இப்போது பல வழிகளில் சிதைக்கப்பட்டு தீவிர மதவாதிகளால் திசை திருப்பபட்டிருக்கிறது என்பது வருந்ததக்க உண்மை.

http://thavaru.blogspot.com/ said...

ஆரோக்கியமான கருத்துபரிமாற்றம் செய்த தெகா,கையேடு மற்றும் முகுந்தஅம்மா அவர்கட்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.

தெகா கையேடு வெளுத்து வாங்குறீங்க இதையே தனிபதிவாக பதிவிட தெகா அவர்களை அன்புடன் வேண்டுகிறேன்.

கையேடு said...

//இதனை நீங்கள் இயற்க்கை என்று சொல்லுகிரீர்களா அதுவும் சரி தான். எனென்றால் அதுவும் ஒரு வகையான நம்பிக்கை தான் Paganism.//

இல்லை அந்த இடத்தில் எனக்கு பதில் தெரியாது என்று சொல்லுவேன்.

//இது பல கோடி வருடங்களுக்கு முன்பே இந்து மதத்தில் கூற பட்டுள்ளது. இன்னும் கூட பல தியான வகுப்பிலும் ஒரு சூன்யத்தை நோக்கி தியானம் செய்ய சொல்வது இதனாலெயே.//

பல கோடி ஆண்டுகள் என்பதை பழமைக்கான அலங்கார வார்த்தையாகக் கொள்கிறேன். ஏன்னா அப்போ மதம் இருந்ததா தெரியலை.

இரு பற்றி ஏற்கனவே கொஞ்சம் பேசியிருக்கேன். பகுதிகளாக வெளியிடுகிறேன்.

“ஆன்மீகம்” - முழுமையை நோக்கிய தேடல், ஒருமுகப்பட்ட சிந்தனை, அல்லது வெறுமையை நோக்கிய பயணம், ஆன்மாவின் உன்னதத் தேடல், ஒரு வகையான உயரிய உணர்வு, பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் இயக்கத்தையும் நடத்தும் ஒற்றைச் சக்தி மூலத்தை உணர்தல், நமக்கும் அண்டவெளிக்குமிடையே ஒரு தொடர்பை உணரச்செய்பவை, மனித வாழ்க்கையைச் செம்மைப்படுத்தி, செழுமைப்படுத்தும், முழுமைப்படுத்தும் ஒரு உணர்வு ... என அடுக்கிகொண்டே போகலாம். இவ்வார்த்தையின் வாழ்வாதாரமே அது தெளிவான வரையறையற்றிருப்பதுதான் அல்லது வரையறுக்கமுடியாதது என்ற வரையறையைச் சுமந்து கொண்டிருக்கும் ஒரு முரண்.

இங்கே இருக்கு - http://kaiyedu.blogspot.com/2008/08/i.html

கையேடு said...

பகுதி 2: -
ஆன்மீகத்தில் ஆற்றல் குறித்த கதையாடல் எப்போதும் ஒளிவடிவமாக வர்ணிக்கப்படுவதைக் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. இப்புள்ளியில் ஆன்மீகம் பேசும் “ஆற்றல்” மனிதனின் சூழல் குறித்தான கிரகிப்புத்தன்மையில் (perception) விளைந்தது என்பது தெளிவாகிறது. ஆன்மீகம் என்பதும் வளர்சூழலிருந்து தோன்றிய ஒன்றாகயிருப்பதால் சூழல் குறித்தான நிகழ்வுகளையும், விளைவுகளையும் அடிப்படையாகக் கொண்டு விளைந்தவையாகவேயிருக்கின்றன. அதனாலேயே ஆற்றல் குறித்தான ஆன்மீகக் கதையாடல் அனைத்தும் கண்ணுறு ஒளிவடிவமாகவே ஆற்றலை உருவகப்படுத்துகின்றன. ஆனால், அறிவியல் பல வகை ஆற்றல்களைப் பற்றிய புரிதல் கொண்டுள்ளது. ஆன்மீகம் பேசும் ஆற்றல் என்பது எப்போதும் கண்ணுறு ஒளிவடிவமாகவேயிருப்பதற்கான முக்கியக் காரணிகளில் ஒன்று ஆதிகால மனிதனின் ஆற்றல் குறித்தான கிரகிப்புத்தன்மை சார்ந்தது. இவை ஒரு வகையான கட்டமைப்பின் அடிப்படையில் பழக்கப்படும்/பழக்கப்படுத்தப்படும் நிகழ்வுகள். இது வெறும் விவாதத்திற்கான எடுத்துக்காட்டு மட்டுமே.

ஆனால், மனிதனது மூளையின் செயல்பாடுகளுள் பல இப்படியான கிரகிப்புகளின் அடிப்படையில் இயங்குவதுதான். இதனடிப்படையிலேயே நமது மூளை தொடர்பற்ற நிகழ்வுகளைத் தொடர்புபடுத்திப் பொருளறிந்து பார்த்து, தமக்கான முடிவுகளை ஏற்றுக் கொண்டு சமாதானமடையும் ஒரு கருவியாகவேயிருக்கிறது. இதனடிப்படையிலேயே ஆன்மீகம் பெரும்பாலும், பொருண்மை குறித்த கதையாடலைத் துவங்குகிறது. ஆதாவது மூளை என்னும் பொருண்மையில் தோன்றும் மனது/சிந்தனை மற்றும் அதன் செயல்பாடுகளினது ஆற்றலானது இப்பிரபஞ்ச இயக்கம் மற்றும் அவ்வாற்றல் மூலத்திற்குமான தொடர்பு, குறித்தான கதையாடலாகயிருக்கிறது.

இக்கூற்றுகளில் எதுவும் தவறிருப்பதுவாகத் தெரியாது, ஏனெனில் மனித மூளையில் தோன்றும் மனது என்பது உருவமற்றது (மனது என்ற கருத்தே கேள்விக்குறியாகிக் கொண்டுதானிருக்கிறது). மனித மூளையின் செயல்பாடுகளிலிருந்து வெளிப்படும் மின் மற்றும் காந்த சமிஞ்சைகள் குறித்து அறிவியல் பேசியதால், இதைத்தான் ஆன்மீகம் குறிப்பிடுகிறது என்று எளிமையாகத் தொடர்புபடுத்த முடிந்தது. இம்மனதிலிருந்து தோன்றும் ஆற்றலானது இப்பிரபஞ்சத்தின் ஆற்றல் மூலத்துடன் நம்மைத் தொடர்புபடுத்துவதாகவும் எளிதாகத் தொடர்பு படுத்த முடிந்தது. அப்படித் தொடர்பு படுத்துவது என்ன தவறா? எப்படியானாலும் அதைத்தானே அறிவியலும் சொல்கிறது என்பதுதான் மனித மூளையின் உடனடிச் செயல்பாடு. இது, ஒரு வகையில் மனிதனின் சிந்தனைத் திறத்தினால் எழும் வேட்கையினைத் தணிப்பதற்காக உருவாக்கிக்கொள்ளும் ஒரு அனுமானம் அல்லது முடிவு.

http://kaiyedu.blogspot.com/2008/08/iii.html

கையேடு said...

பகுதி 3 -

இப்புள்ளியில் மேம்போக்காக வெறும் கருத்தாகப் பார்த்தால் அறிவியலும் ஆன்மீகமும் இணையத்தான் செய்கின்றன. ஆனால், அறிவியல் மூளையிலிருந்து மின் மற்றும் காந்த விசைகளின் செயல்பாடுகளைக் குறித்துப் பேசினாலும் அதோடு நின்றுவிடுவதில்லை. மூளை எனும் மின்வேதிமக்கலனில் இருக்கும் நியூரான்கள் அணுக்களாலும் மூலக்கூறுகளாலும் ஆனவை. ஒருவர் தியானம் அல்லது அமைதியான வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் போது, நமது மூளையில் உருவாகக் கூடிய சில வேதி மாற்றங்கள் மற்றும் நியூரான்களின் இணைப்புகளின் மாற்றத்தினால் ஏற்படும் செயல்பாட்டு மின்னழுத்தம் 0.0005 - 0.0015 வோல்டுகளாகவும், இவ்வகை மின்சமிஞ்சைகளின் வீச்சு 0.000010 - 0.000050 வோல்டுகளாகவும், இருப்பதாக அளவிடப்பட்டிருக்கிறது. மூளையில் நிகழும் அயனி இயக்கங்களின் நிகழ்வுகளால் ஏற்படும் மின் மாற்றங்களை மனிதனின் மண்டையோட்டு எலும்புகளுக்கு வெளியே அளவிடுவது இயலாத காரியம். ஆனால், இவ்வகை அயனிகளின் இயக்கங்களினால் ஏற்படும் காந்தப்புலம் அளவிடக் கூடியது. இப்படி அளவிடப்பட்ட காந்தப்புலமானது ஏறத்தாழ ~10ன் அடுக்கு -15 டெஸ்லா (காந்தப் புலத்தின் அலகு). இக்காந்தப்புலத்தின் எண்மதிப்பு பூமியின் காந்தப் புலத்தைவிட(~10-6T)ஏறத்தாழ ஒன்பது அடுக்குகள்(ஒன்பது மடங்குகள் அல்ல ஒன்பது அடுக்குகள்) குறைந்தது. இவ்வலிமை குறைந்த புலத்தை பூமியின் புறவிசைகளிலிருந்து தனித்து அளக்க வேண்டுமெனில் அது அவ்வளவு எளிதான காரியமல்ல.[1]

இப்படிப்பட்ட அமைதிநிலையில் தியானித்திருக்கும் ஒருவர், பூமியுடன் சேர்ந்து மணிக்கு 1,038 மைல்கள் வேகத்தில் சுழன்று கொண்டும், சூரியனைச் சுற்றி வினாடிக்கு 18.5 மைல்கள் வேகத்திலும், பால்வழியிண்டத்தின் மையத்தைச் சுற்றி வினாடிக்கு 150 மைல்கள் வேகத்தில் சுற்றிக் கொண்டும், பேரண்டவெளியில் ஏறத்தாழ வினாடிக்கு 1000 மைல்கள் வேகத்தில் நகர்ந்து கொண்டுமிருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் மனிதனது மூளையிலிருந்து வெளிப்படும் இவ்வலிமை குறைந்த காந்த விசையின் செறிவு, மற்றும் அவ்விசைகளின் பாயம் செயல்படும் வெளியின் அளவு, ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால், இப்பேரண்டத்தின் ஏதோ ஒரு புள்ளியில் இருப்பதாக நம்பப்படும் ஒரு ஆற்றல் மூலத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டிருப்பது சாத்தியமா..??[1]

முழுவதும் இங்கே - http://kaiyedu.blogspot.com/2008/08/iii.html

கையேடு said...

பகுதி - 4: உணர்வு

ஆன்மீகம், மனிதனின் வளர்சூழல் சார்ந்த பார்வையினடிப்படையில் எழும் உணர்வு ரீதியான தேடல் என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது. ஆனால், ஆன்மீக உணர்வுகள் வளர்சூழல் சார்ந்த கிரகிப்புகளினடிப்படையில் பழக்கப்படுத்திக்கொள்பவை என்ற கண்ணோட்டத்தில் அது இயற்கையிலேயே பிறக்கும்போது தோன்றுமோர் உணர்வல்ல. வளர்சூழலில் தோன்றியதாயிருந்தாலும் ஆன்மீகமும் மனிதனின் சிந்தனைத்திறத்தால் உருவாகும் ஓர் உணர்வே.

இவ்வுணர்வு ரீதியினாலான தேடலும், கடுமையான பயிற்சியின் மூலமே சாத்தியப்படுத்தப் படமுடியும் என்பதாக நம்பப்படுகிறது. மேலும், இப்பிரபஞ்ச இரகசியத்தை நோக்கிய ஒரு உண்ணதத் தேடல் என்றும், அத்தேடலின் விளைவால் அறிந்த உண்மைகளின் உதவியோடு சமூக வாழ்விலிருந்து மனிதனை உய்விப்பதையே தனது தலையாயக் கடமையாக வரிந்துக்கொள்கிறது ஆன்மீகம். மேலும், மனதை சுத்தப்படுத்துதல், அழிவில்லாத ஆன்மா, பிரபஞ்ச இரகசியத்தை உணர்தல் என்பன போன்ற கதையாடலாக சமூகத்தினுள் நுழைந்து தனது இருத்தலுக்கான அவசியத்தையும், நியாயத்தையும் கற்பிக்கிறது. இதனடிப்படையிலேயே ஆன்மீகத் தேடல் ஒருவனது வாழ்வினை முழுமைப்படுத்துவதாகவும், மனிதனின் பிறப்பே இத்தேடலுக்காக, போன்ற கருத்துக்கள் நம்பிக்கைகளாகின்றன. இவ்வகையான தத்துவ அடிப்படைகள் மெல்ல உடலைத் தாழ்த்தி, ஆன்மாவை முதன்மைப் படுத்து முனைகின்றன. இவ்வகையான தத்துவ அடிப்படைகளைக் கொண்ட இனக்குழுக்களின் உளவியல் எப்படியிருக்கிறது, அல்லது அதன் விளைவாகச் சமூகச் சூழல் எப்படி உருமாறியிருக்கிறது என்பது கருத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்று.

ஆன்மாவையும், மனதையும் முதன்மைபடுத்தி உடலை வருத்திக்கொள்ளும் அல்லது தாழ்த்திக்கொள்ளும் இனக்குழுக்களிடம் இருக்கும் பொதுவான பண்புகளில் சில:

1. குழந்தைகளுக்கு தண்டனையாக உடலில் வலியை ஏற்படுத்துதல்.

2. சமூகத் தண்டனைகளாக உடல் வன்முறைகளை அதிகமாகப் பயன்படுத்துதல்.

3. பெண்களை, ஒரு பொருளாகக் கருதுதல். மேலும், உடல்குறித்தான கட்டுப்பாடுகளை முன்னிறுத்தி பெண்களை ஒடுக்குதல். இதன் மூலம் திருமணங்களை ஒரு வியாபாரம் போல பாவித்து, பொருள் கொடுத்துப் பெண்ணின் உடலைக் கொள்ளுதல். (இது நமது சமூகத்தில் இன்னும் மோசமாகயுள்ளது, பெண்ணை ஒரு பயனுள்ள பொருளாகக் கூடக் கருதாமல், பெண்ணையும் பொருளையும் சேர்த்துக் கொடுத்தல்.)

4. இவ்வகைச் சமூகத்தின் இளைய தலைமுறையினருக்கு உடல் ரீதியான கட்டுப்பாடுகள் அதிகமாக இருப்பதால், மது, போதை ஆகியப் பழக்கங்களில் ஆர்வம் காட்டுதல்.

5. மணவாழ்க்கைக்கு வெளியே (குறிப்பாகப் பெண்கள்) உடலுறவு வைத்துக் கொள்ளுதல், உயிரை எடுக்கும் அளாவிற்கான குற்றமாகக் கருதுதல்.

6. ஆயுதம் தாங்கியக் கடவுளரை வழிபடுதல்

முழுவதும் இங்கே - http://kaiyedu.blogspot.com/2008/10/iv.html

கையேடு said...

பகுதி 5:-

முற்றிலும் துறத்தல் என்பதில் துவங்கிய தத்துவங்கள் பின்னர் தங்களது இறை வடிவத்தில் கூட நிர்வாணத்தை ஏற்றுக் கொள்ளாதது, இயற்கை குறித்தான கருத்துக்களில் மனித விலங்கின் சமூக வாழ்விலிருந்து விலகி, பேரண்டம், பிரபஞ்சத்தின் தோற்றம், உண்மை அல்லது தோன்றவைத்து இயக்கிக் கொண்டிருக்கும் ஆற்றல்/சக்தி குறித்த கதையாடல்களுக்குள் நுழைந்தது, என தொடர்ச்சியாக உயிரும் பொருண்மையும் சிறுமைப்படுத்தப்பட்டதை உணர்தல் அவசியம்.

வளர்சூழலின் கிரகிப்பினடிப்படையில் தோன்றிய ஓர் உணர்வாகயிருந்தாலும், இப்படியானதொரு உணர்வை மறுப்பதற்கில்லை. சிந்தனைத் திறனால் ஏற்படும் அறிதல் வேட்கைக்கான ஒரு வடிகாலாகவே இவ்வகையுணர்வு செயல்படுகிறது. இவ்வுணர்வும், ஒருவகை போதைக்கிணையான ஒன்றாகவே நோக்கலாம். இவ்வகைச் செயல்பாடுகளின் போது மூளை எனப்படும் உயிர்வேதிக்கலனில் நடக்கும் வேதியியல் மாற்றங்களால் சுரக்கும் ஒரு வகைத் திரவம் அளிக்கும் சுகானுபவமே இவ்வுணர்வும். ஆன்மீகம் இவ்வகையானச் செயல்பாடே என்பதைச் செயற்கையாகத் தியானத்தின் உணர்வை ஒருவரின் மூளையின் சில பகுதிகளை மின் தூண்டியதன் மூலம் அறிவியல் நிரூபித்திருக்கிறது.[1,2] உணர்வுகளின் ஒன்றான வலியை முதன்முதலாக அருதியிட்டு எண்மதிப்பில் அளப்பதற்கான படிநிலையை அடைந்திருக்கின்றன ஆய்வுகள்[3]. வரும் காலங்களில் உணர்வுகள் உணரப்படவேண்டியவை போன்ற சொற்றொடர்கள் வழக்கொழிந்து போகலாம்.

ஆன்மீகம் எனும் உணர்வு குறித்த மதிப்பீடுகள் தனிமனித உரிமை சார்ந்தது. ஆனால், அது மனிதனின் பிறப்பின் போது இயற்கையாகத் தோன்றும் ஒரு உணர்வல்ல. அதுவே, சித்தாந்தமாக மாறி பின்னர் நம்பிக்கைகளாகச் சமூகக் கலாச்சாரத்தினுள் நுழைந்து இயற்கையான மற்றவுணர்வுகளைச் சிறுமைப்படுத்தும் ஏற்றத்தாழ்வு அரசியல் மற்றும் அதன்வழிப் பெருகும் உளவியல் வன்முறைகள் ஆகியவை கேள்விக்குட்படுத்தி அவற்றை மீள்பரிசோதனைக்குட்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

http://kaiyedu.blogspot.com/2008/10/iv.html

கையேடு said...

பகுதி 6:-

இப்பூமியில் உயிர் தோன்றியிருந்தாலும் அல்லது தோன்றாவிட்டாலும் பொருண்மை மற்றும் ஆற்றல் உறவினடிப்படையில் பிரபஞ்சங்கள் தோன்றிக் கொண்டும் அழிந்துகொண்டுமிருக்கும். இப்பிரபஞ்சம் ஏதோவொரு நோக்கத்தினடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கிறது, அல்லது இப்படியியக்கிக் கொண்டிருக்கும் ஆற்றல் குறித்த புரிதலில் ஒருவேளை ஆன்மீகத்தில் விடைகிடைத்தாலும் சூரியன் தன் அழிவை நிறுத்திவைத்துக் கொள்ளப் போவதில்லை. மேலும், இப்பிரபஞ்ச நிகழ்வுகள் அனைத்தும் ஒரு நோக்கத்துடன் நிகழ்கின்றன என்ற உணர்வே மனிதனின் சுயார்வத்தினால் விளைந்த கேள்விக்கான தேடுதல் வேட்கையைத் தணிப்பதற்கான அனுமானமேயன்றி, பூமிக்குச் சூரியனைச் சுற்றுவதற்கோ அல்லது தனது பரப்பில் உயிரைத் தோற்றுவித்திக் கொள்ளவேண்டுமென்ற நோக்கமோ எண்ணமோ கிடையாது.

http://kaiyedu.blogspot.com/2008/10/iv.html


நான் மேலே அளித்திருக்கும் பின்னூட்ட பகுதிகள் அனைத்தும் இங்கே பேசப்படுபவனோடு தொடர்புடையதாகவே கருதுகிறேன்.
அப்படியில்லாமல் தொடர்பற்ற கருத்துக் குப்பைகளாகத் தோன்றினால்.. மன்னிக்கவும்.

Thekkikattan|தெகா said...

நான் மேலே அளித்திருக்கும் பின்னூட்ட பகுதிகள் அனைத்தும் இங்கே பேசப்படுபவனோடு தொடர்புடையதாகவே கருதுகிறேன்.

அப்படியில்லாமல் தொடர்பற்ற கருத்துக் குப்பைகளாகத் தோன்றினால்.. மன்னிக்கவும்.//

கையேடு, என்ன இவ்வளவு விசயங்களை அள்ளித் தெளித்துவிட்டு கருத்துக் குப்பைன்னு சொல்லிப்போட்டீய. அருமை, அருமை. கடைசி பின்னூட்டம், ‘அது பாட்டுக் இயங்கிக் கொண்டிருக்கிறது’ என்று குறிப்பிட்ட மறுமொழி செம போங்க... மேலும் வாரேன்.

Thekkikattan|தெகா said...

//நீ பாவம் செய்தா கடவுள் கணக்கு வச்சிருபார் அப்படின்னு சொல்லுறது. அந்த பயத்திலயாவது தப்பு பண்ணாம இருப்போமே அப்படிங்கிற நினைப்பில சிறு குழந்தைகளுக்கு சொல்லுற மாதிரி சொல்லுறது தவிர வேறு எதுவும் இல்லை.//

முக்கியமான கேள்வியிது!

முகுந்தம்மா இந்த பத்தியை வைத்து தனியாகவே கட்டுரை ஒன்று கொடுக்கிற அளவிற்கு விசயமிருக்கின்னு நினைக்கிறேன் அது தனியா செய்வோம் ஒரு நாள்.

இதில பார்த்தோம்னா சிம்பன்சிகளில் அவைகளின் மூளை இயங்கும் அடிப்படையைக் கொண்டும், கற்றுக் கொள்ளும் ஆற்றலைக் கொண்டும் கண்டறியப்பட்டது அவைகள் நன்கு ஓர் அடல்ட் பருவத்தை எட்டிய போதும் மனித குழந்தைகளில் உள்ள நான்கு வயது மூளை அறிவு சார் வளர்ச்சியோடவே நின்று விடுவதாக அறிகிறோம்.

இருப்பினும் ஆய்வுக் கூடங்களில் வைத்து சொல்லிக் கொடுக்கும் பொழுது அவைகளுக்கு conditioned behavior விசயங்களை அறிந்து கொள்ளக் கூட நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்வதில்லை.

அப்படியாக இருக்கும் பொழுது காலம் தோரும் நம் மூளை அமைப்பிலும், கற்றுத் தேரும் திறனிலும் அதிக சாத்தியங்களை கொண்டிருக்கும் நாம் எப்படி ஒரு conditioned behavioral நிலையான ‘பயத்தின்’ அடிப்படையிலேயே பகுத்து அறியிம் மூளையின் வளர்ச்சியை மனிதர்களுக்கு வழங்கி மேற்கொண்டு கேள்விகளை கேட்டறிந்து நமக்கு உகந்தது எது என்று கேட்டறியும் நிலைக்கு எதிரான இந்த ‘பய நிலையே’ போதுமானதாக இருக்க முடியும்?

குழந்தைகளுக்கு வேண்டுமானால் அந்த பய உணர்வு தற்காலிகமாக உதவலாம் என்ற நிலையில்.

தருமி said...

//கடவுள் நம்பிக்கை, மதம் எல்லாம் மனித இனம் தன்னை நெறி படுத்திக்கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு வழிமுறை. //

நானும் இதையே சொல்லியுள்ளேன் ..இருக்கும்போது உன்னையும் என்னையும் 'மனிதம் உள்ள மனிதனாக' வைத்திருக்க வந்ததே மதமும், கடவுளும். இந்த 'வெளிச்சத்திற்கு'(இதைத்தான் enlightenment? என்கிறார்களோ?) வந்த பின், இல்லாத கடவுள் மனிதனுக்கு எதற்கு?

முகுந்த்; Amma said...

கையேடு மற்றும் தெகா அவர்களுக்கு

முடிந்தால் http://www.fritjofcapra.net/shiva.html என்ற சுட்டியையும் அதற்க்கு தொடர்ப்பான புத்தகமான THE TAO OF PHYSICS
http://www.dgswilson.com/pdf/taophysics.pdf பார்க்கும்மாறு கேட்டுக்கொள்கிறேன்.

CERN எனப்படும் ஐரோப்பிய ஆரய்ச்சி கூடத்தில் நடராஜர் சிலையை காணலாம். particle physics ம் நடராஜரின் ருத்திரதாண்டவமும் இனையும் இடம் இது.

தொடரும்...

வருண் said...

***ஏன் டிஎன்ஏ வையோ அல்லது அமினொஅசிட் யோ நீங்க லேப் ல ப்ரிபேர் பண்ணலாம், ஆனா அவை எல்லாம் funtional ஆ work ஆகாது.***

Suppose, HIV protease நான் லாபில் ப்ரிப்பேர் செய்தால் அது natural HIV protease போல வொர்க் ஆகாதா?

If I hook up all the 99 amino acids with correct absolute stereochemistry? அந்த ப்ரோட்டீன் வேலை செய்யாதா?

இல்லை நீங்க சொல்ல வர்றது வேறயா?

நான் கடவுள் இருக்காரா இல்லையாங்கிற விசயத்துக்கு தாவ இஷ்டப்படலை. :)

Anna said...

"ஆர்சனேட்டை உண்டு கொண்டு வளர்வதால் மற்ற நாம் அறிந்த பூமி உயிர்களைக் காட்டிலும் இந்த பாக்டீரியம் வித்தியாசமானது என்றே தோணச் செய்கிறது. அப்படி இருப்பின் அதன் இயங்கு செல்களும் அதற்கு தகுந்ததது போலத்தானே கட்டமைக்கப் பெற்றிருக்கும்... உங்களுத் தெரிஞ்சா கொஞ்சம் விளக்குங்களேன். தெரிஞ்சிக்கிறோம்."

After reading many reviews from leading scientists and reading over the original article in science very carefully, it does seem that the research has lots of holes in it and they actually haven't proven their claims.

The fact that இந்த பக்டீரியம் கூடுதலானளவு ஆசனிக் உள்ள சூழலில் வாழ்கிறது என்பது புதுச் செய்தியல்ல. இது சில வருடங்களுக்கு முன்பே தெரிந்துவிட்டது. இந்த பக்டீரியாக்கள் ஒளித்தொகுப்பு செய்யும் வல்லமை உடையவை. அதற்குக் கூட தாவரங்காளைப் போல் நீரைப் பயன்படுத்தாது இவை ஆசனிக்கையே பயன்படுத்துகின்றன என 2008 கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாராய்ச்சியாளர்க்கள் புதிதாகக் கண்டுபிடித்ததாகக் கூறுவது இந்த பக்டீரியம் தனது DNA முதுகெலும்பில் பொஸ்பேற்றுக்குப் பதிலாக ஆசனிக்கை பயன்படுத்துகிறது என்பதே, which would be really cool, IF it's true. உண்மையாக இருக்கலாம். ஆனால் அவர்களின் பரிசோதனைகளின் மூலம் என்னும் நிரூபிக்கவில்லை.

Oops. Got to run. Sorry. I'll definitely write more on why it seems to be the case, hopefully later today.

Thekkikattan|தெகா said...

அனலிஸ்ட், நான் கேட்ட கேள்விக்கு நீங்க நேரம் எடுத்துக்கிட்டப்போவே எனக்கு விளங்கினிச்சு நீங்க ஓடி, ஓடி படிச்சி ஊர்ஜிதப் படித்தி கொண்டுருக்கிங்கன்னு :)...

//இந்த பக்டீரியம் தனது DNA முதுகெலும்பில் பொஸ்பேற்றுக்குப் பதிலாக ஆசனிக்கை பயன்படுத்துகிறது என்பதே, which would be really cool, IF it's true.//

நானும் அப்படியே நம்புறேன்.

//ஆனால் அவர்களின் பரிசோதனைகளின் மூலம் என்னும் நிரூபிக்கவில்லை. //

அப்படியா?!! ஹ்ம்ம்ம். இருப்பினும் the end result would be more interesting ...

வாங்க, வாங்க வந்து நேரமிருக்கும் போது மிச்சத்தையிம் எங்களோட பகிர்ந்துக்கோணும். இல்லன்னா உங்களுக்கு அந்த படிச்ச சாப்ட்டார் செரிக்காது சொல்லிட்டோம்பா :)

முகுந்த்; Amma said...

//Suppose, HIV protease நான் லாபில் ப்ரிப்பேர் செய்தால் அது natural HIV protease போல வொர்க் ஆகாதா?

If I hook up all the 99 amino acids with correct absolute stereochemistry? அந்த ப்ரோட்டீன் வேலை செய்யாதா?

இல்லை நீங்க சொல்ல வர்றது வேறயா?
//

No லாப் ல ப்ரிபேர் செய்யப்படுற உங்களோட HIV protease வேலை செய்யாது..அப்படி வேலை செய்து இருந்தா இன்னேறம் எய்ட்ஸ் க்கு மருந்து கண்டு பிடிச்சு இருப்பாங்களே :)))

எந்த ப்ரொடீன் ஒடவும் 3 டி கன்ஃபொர்மேஸன் ரொம்ப முக்கியம் அது செயல்பட.

அதுவும் HIV protease பத்தி கேட்கவே வேண்டாம்..அதிக volatile மூலக்கூறு அது...தனக்குள்ளாற mutation செய்து கொண்டு ரொம்ப சீக்கிரம் தன்னோட 3 டி structure ஐ மாற்றிக்கொள்ளும் ரொம்ப clever.

Anna said...

Why NASA's claims are more like 'I've identified a tumour suppresor gene (பொதுவாக செல்கள் வளர்வதை வேறு வேரு முறைகளில் தடுக்கும் மரபணுக்கள்), bingo - I've cured cancer" kind of claim.

1. DNA ஜ பக்டீரியத்திடமிருந்து பிரித்தெடுக்க அவர்கள் சாதாரணமாகப் பயன்படுத்தும் phenol-chloroform extraction முறையை உபயோகித்துள்ளனர். இதன் மூலம் DNA ஒரு நிறமற்ற ஜெலி மாதிரி precipitate பண்ணும். அதை பின் நீரில் கரைத்து பரிசோதனையின் அடுத்த கட்டத்திற்குப் பயன் படுத்துவோம். இவர்களும் அவ்வாறே செய்துள்ளனர். இதில் என்ன பிரச்சனை என்றால், பொஸ்பேற்றை முதுகெலும்பாகக் கொண்ட DNA நீரில் உறுதியாக இருக்கும். ஆனால் ஆசனேற்றை முதுகெலும்பாகக் கொண்ட DNA நீரில் மிக வேகமாக உடைந்து விடும். ஆனாலும் அவர்கள் கொடுத்துள்ள gel image இல் ஆசனிக்கில் வளர்க்கப்பட்ட பக்டீரியாவின் DNA சிறு சிறு துண்டுகளாக இல்லாமல் பெரிய ஒரு தனி band ஆகவே காட்டப்பட்டுள்ளது. ஏன் அது உடைந்து துண்டு, துண்டுகளாக இல்லை. ஒரு அசனேற்‍‍ DNA ஜ இவ்வாறு காட்ட இயலாது. அதற்கு அவர்கள் ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை.


2. இவ்வாறு DNA ஜ‌ gel ல் ஓடவிட்டு, பின் gel லிருந்து பிரித்தெடுத்து அதில் என்னென்ன மூலகங்கள் இருக்கென ஆராயும் போது ஆசனிக் கூடிய ஊடகத்தில் வளர்ந்த பக்டீரியாவின் DNA ல், பொஸ்பரஸ் இருந்த ஊடகத்தில் வளர்ந்த பக்டீரியாவின் DNA ஜ விடக் கூடியளவு ஆசனிக் இருந்தது. இதன்படி அவர்கள் ஆசனிக்கில் வளர்ந்த பக்டீரியா, ஆசனேற்றை அதன் DNA முதுகெலும்பில் வைத்துள்ளதெனக் கூறியுள்ளனர். ஆனால் ஆசனெற் மிகவும் ஒட்டும் தன்மை வாய்ந்தது. The fact that இந்த பக்டீரியா ஆசனிக் கூடுதலாகவுள்ள ஊடகத்தில் வளர்ந்த்து makes it possible that ஆசனிக் அதன் DNA இலும் ஒட்டியிருக்க. கட்டாயம் DNA இன் முதுகெலும்பில் ஆசனேற் இருந்தால் தான் இந்த result வந்திருக்குமென்றில்லை, கூடுதலான ஆசனிக், DNA ல் சும்மா ஒட்டியிருந்தாலும் இதே முடிவையே அந்தப் பரிசோதனை கொடுத்திருக்கும்.

As a negative control, அவர்கள் செய்த பரிசோதனையோடு கூடுதலாக ஒரு DNA முதுகெலும்மில் பொஸ்பேற் உள்ளதென்று நிச்சயம் செய்யப்பட்ட‌ பக்டீரியாவை ஆசனிக் கூடுதலாக உள்ள ஊடகத்தில் விட்டு, பின் அந்த பக்டீரியாவிலிருந்து DNA ஜத் தனிப்படுத்தி மேற்சொன்ன பரிசோதனையைச் செய்து அந்த DNA ல் ஆசனேற் இல்லை என்று காட்டினார்களேயானால் மேற் சொன்ன முடைவை ஓரளவு நம்பலாம். ஆனால் காட்டவில்லை. Negative controls are very very important to make sure that the resutls you see are true.

3. அதோடு அவர்களின் ஆசனிக் கூடுதலான ஊடகத்தில் பொஸ்பரஸ் முற்றாக இல்லாமல் இல்லை. ~3 micromolar (10-6 moles/litre) பொஸ்பரஸ் இருந்தது. அது ஊடகத்தில் உள்ள contaminant என அவர்கள் சொன்னாலும், அந்தளவு பொஸ்பரஸ் இந்த பக்டீரியாவிற்கு DNA உருவாக்கக் காணாதென்று இவர்கள் எப்படி முடிவு செய்தார்கள். Apparently, Sargasso கடலில் (North Atlantic ocean க்கு நடுவில் உள்ளது) பொஸ்பேற் அளவு 10 nanomolar (10-9 moles/litre) இலும் குறைவானதாம். ஆனால் அங்கும் நிறைய நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. அவற்றின் DNA ன் முதுகெலும்பில் பொஸ்பேற்றே உள்ளது. அவை தமது lipids இலிருந்து பொஸ்பேற்றை நீக்கி DNA உருவாக்குவதற்குப் பயன்படுத்துகின்றன. அதனால் பக்டீரியாக்களிற்கு மிகவும் குறைவான பொஸ்பேற் உள்ள ஊடகத்தில் அதே பொஸ்பேற்றைக் கொண்டு DNA உருவாக்கி வாழ முடியும். அதோடு இவர்கள் இந்த பக்டீரியாக்களை எடுத்த mono lake இலும் கூடுதலான ஆசனிக்குடன் தேவையானளவு பொஸ்பரசும் உண்டு. அதனால் இவைக்கு தமது biochemistry ஜ மாற்ற வேண்டிய அவசியமில்லை.

அதனால் அநேகமாக reasonable விளக்கம், இந்த பக்டீரியாக்கள் கூடுதலான ஆசனிக்கைத் தாங்கக் கூடிய சக்தி வாய்ந்தவை. ஆனால் அவர்களுக்கு அவர்கள் வாழுமிடத்தில் இருக்கும் பொஸ்பரஸ் அவர்களின் DNA உருவாக்குவதற்குப் போதுமானது.

இந்த criticisms எல்லாத்தையும் அவர்கள் அந்த DNA sequences ஜ MALDI-TOF MS எனும் முறையால் ஆராய்ந்து அது பொஸ்பேற்றுக்குப் பதிலாக ஆசனிக்கையே கொண்டுள்ளதென சுலபமாகக் கூறலாம். ஆனால் செய்யவில்லை.

அதனால் ஆசனேற் கொண்டுள்ள DNA க்கு உறுதியான ஆதரங்கள் எதுவும் இன்னும் இல்லை.

I hope what I've written is understandable. I am still learning to explain scientific concepts to general audience. I am pretty hopeless at doing it in Tamil. அதனால் விளங்காவிட்டால் சொல்லுங்கோ, திரும்பவும் முயற்சி செய்கின்றேன்.

Thekkikattan|தெகா said...

@ அனலிஸ்ட்

//பின் அந்த பக்டீரியாவிலிருந்து DNA ஜத் தனிப்படுத்தி மேற்சொன்ன பரிசோதனையைச் செய்து அந்த DNA ல் ஆசனேற் இல்லை என்று காட்டினார்களேயானால் மேற் சொன்ன முடைவை ஓரளவு நம்பலாம். ஆனால் காட்டவில்லை. Negative controls are very very important to make sure that the resutls you see are true.//

I still hope the Nasa's Mono Lake project must have been conducted for a period where they can cross check with negative controls experiments in order to nullify any omissions...

இருப்பினும் நீங்க கொண்டு வந்த விசயங்களை வைச்சி பார்க்கும் போது நிறைய ஓட்டைகள் இருப்பதனைப் போல இருக்கிறது.

//...அது ஊடகத்தில் உள்ள contaminant என அவர்கள் சொன்னாலும், அந்தளவு பொஸ்பரஸ் இந்த பக்டீரியாவிற்கு DNA உருவாக்கக் காணாதென்று இவர்கள் எப்படி முடிவு செய்தார்கள்.//

நல்ல கேள்வி...

//இந்த criticisms எல்லாத்தையும் அவர்கள் அந்த DNA sequences ஜ MALDI-TOF MS எனும் முறையால் ஆராய்ந்து அது பொஸ்பேற்றுக்குப் பதிலாக ஆசனிக்கையே கொண்டுள்ளதென சுலபமாகக் கூறலாம். ஆனால் செய்யவில்லை.//

உங்கள் கூற்றைக் கொண்டு பார்க்கும் பொழுது, இந்த புரொஜெக்டிற்கென்று போதுமான கால அவகாசம் எடுத்து செய்திருக்கும் பட்சத்தில், மிக அடிப்படையான டெஸ்ட் ஒன்றை ஓட்டி ஏன் அதிகார பூர்வமாக சந்தேகங்களை தீர்த்து வைக்கவில்லை. ... ஹ்ம்ம்

// I am still learning to explain scientific concepts to general audience. I am pretty hopeless at doing it in Tamil. அதனால் விளங்காவிட்டால் சொல்லுங்கோ, திரும்பவும் முயற்சி செய்கின்றேன்.//

Hmm... thank you so much for your effort in trying to bringforth this much information in tamil.

தமிழில் முதன் முறையாக ஒரு டிபிகல் ஆய்வுக் கட்டுரை படிச்ச மாதிரி ஹிக்கா இருக்குங்கோவ். நம்மதாங்க அறிமுகப் படுத்தணும். இன்னும் தமிழில் சொல்லிக்கிற மாதிரி ஆராய்ச்சி ஜர்னல் எல்லாம் வரணும்ல. :) By the way, Anna we love your tamil :), azhagana thamizh!

முகுந்த்; Amma said...

Nice article Analyst.. But I have a major doubt

//இந்த criticisms எல்லாத்தையும் அவர்கள் அந்த DNA sequences ஜ MALDI-TOF MS எனும் முறையால் ஆராய்ந்து அது பொஸ்பேற்றுக்குப் பதிலாக ஆசனிக்கையே கொண்டுள்ளதென சுலபமாகக் கூறலாம். ஆனால் செய்யவில்லை.//

I never thought that DNA sequencing can be done using MALDI-TOF..

MALDI-TOF is mainly used in protein mass spectrometry...and not DNA sequencing I believed.
If u want to do DNA sequencing other methods like Sanger sequencing or NExtGen sequencing are available.

கையேடு said...

உரையாடல் தீவிரமான உயிரியல் பார்வையில் போய்க்கொண்டிருப்பதால், இடையில் புகாமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறேன்.

//முடிந்தால் http://www.fritjofcapra.net/shiva.html என்ற சுட்டியையும் அதற்க்கு தொடர்ப்பான புத்தகமான THE TAO OF PHYSICS
http://www.dgswilson.com/pdf/taophysics.pdf பார்க்கும்மாறு கேட்டுக்கொள்கிறேன்.//

காப்ராவின் ஒப்புமைகள் உண்மை என்று எதனடிப்படையில் ஏற்றுக் கொள்வது.

//CERN எனப்படும் ஐரோப்பிய ஆரய்ச்சி கூடத்தில் நடராஜர் சிலையை காணலாம். particle physics ம் நடராஜரின் ருத்திரதாண்டவமும் இனையும் இடம் இது.
//

So what?

முக்கியமான உயிரியல் உரையாடல் ஒரு முடிவுக்கு வரட்டும் காப்ராவின் உரையாடலை முன்வைத்து தொடரலாம்.

கையேடு said...

முகுந்த் அம்மா அவ்ர்களுக்கு இன்னொரு விசயமும் வெளிப்படையாக உறுதிப்படுத்திக் கொள்கிறேன்.

காப்ராவை முன்வைத்து உரையடலைத் தொடர்வதற்கு ஆர்வமும் நேரமும் இருந்தால் சொல்லுங்கள், தொடரலாம். இல்லையென்றால் வேறொரு புள்ளியில் சந்திக்கலாம்.

என்னுடனான விளையாட்டை எனது பூனை விரும்புகிறதா என்பதை அறியாமல் அதனோடு விளையாட விருப்பமில்லை என்று எடிசன் சொன்னதைப் போல ஆகிவிடக் கூடாது இல்லையா. ( இதை உண்மையிலேயே எடிசன் தான் சொன்னாரா என்று தெரியலை)

வருண் said...

***No லாப் ல ப்ரிபேர் செய்யப்படுற உங்களோட HIV protease வேலை செய்யாது..அப்படி வேலை செய்து இருந்தா இன்னேறம் எய்ட்ஸ் க்கு மருந்து கண்டு பிடிச்சு இருப்பாங்களே :)))***

நெறைய எச் ஐ வி ப்ரூட்டியேஸ் இன்ஹிபிட்டர்ஸ், ரிவேஸ் ட்ரண்ச்க்ரிப்டேஸ் இன்ஹிபிடொர்ஸ் எல்லாம் தயாரிச்சுட்டாங்கங்க.

***எந்த ப்ரொடீன் ஒடவும் 3 டி கன்ஃபொர்மேஸன் ரொம்ப முக்கியம் அது செயல்பட.***

HIV P exists as homodimer. I believe the sythetic one can be dimerizeed and will give exactly the same 3D conformation of natural one.

**அதுவும் HIV protease பத்தி கேட்கவே வேண்டாம்..அதிக volatile மூலக்கூறு அது...**

நீங்க "வாலடைல்"னு எதை மீன் பண்ணுறீங்கௌ தெரியலை :)

***தனக்குள்ளாற mutation செய்து கொண்டு ரொம்ப சீக்கிரம் தன்னோட 3 டி structure ஐ மாற்றிக்கொள்ளும் ரொம்ப clever.**

மியூட்டேஷன் இஸ் எ ப்ராப்லெம்தான். It happens over the time. That I accept :) They are trying to resolve that too.

முகுந்த்; Amma said...

கையேடு அவர்களுக்கு

உங்களுகான விளக்கமான பதிலை நேற்றே தந்து இருக்க வேண்டும், நேரமின்மை என்று சொல்ல வேண்டும்.

இன்று தருகிறேன்.

முகுந்த்; Amma said...

வருண் அவர்களுக்கு

முதல்ல எப்படி ஒரு 3டி structure கண்டுபிடிக்கிறாங்கன்னு பார்க்கலாம்.

எந்த ப்ரொடீனோட 3டி structure தெரியனுமோ அதை அந்த உயிரினத்திடம் இருந்து பிரித்து அதனை crystallize பன்னுவாங்க..அதனால நீங்க நினைக்கிறது போல HIV P structure லாப் இல் synthesize செய்தது அல்ல..

அந்த உயிரினம் கொல்லப்படும் போது உருவாக்கின ப்ரோடீன் தான் அது..அதனை கொண்டே ப்ரொடீன் structure கண்டுபிடிகிறாங்க..I hope now you can get a difference .

அப்படி அந்த உயிரினம் கொல்லப்படும் போது இருக்கும் ப்ரோடீன் structure க்கு தான் எச் ஐ வி ப்ரூட்டியேஸ் இன்ஹிபிட்டர்ஸ், தயாரிச்சங்க...ஆனா எச் ஐ வி ரொம்ப சாமர்தியமா தன்னோட structure ஐ மாத்திகிட்டே இருக்கு
அதனால தான் நிறைய எச் ஐ வி ப்ரூட்டியேஸ் இன்ஹிபிட்டர்ஸ் தயாரிக்க வேண்டி இருக்கு...


ஆனா இதெல்லாம் ஒரு உயிரினதில இருந்து பிரித்தெடுக்கப்படும் போது இருக்கும் ப்ரோடீன் கொண்டு உருவாக்கப்படும் structure தானெ தவிர லாப் இல் synthesize செய்தது அல்ல

Anna said...

Thanks Mukund Amma.

"MALDI-TOF is mainly used in protein mass spectrometry...and not DNA sequencing I believed.
If u want to do DNA sequencing other methods like Sanger sequencing or NExtGen sequencing are available."


Apparently, MALDI-TOF can definitely be utilised to analyse the chemical content of DNA. Please refer to this article. It says that MALDI-TOF can also be used for sequencing. But the sequencing methods wouldn't be able to analyze the actual chemical content of the DNA, can it?

I don't have much experience with these techniques, so I might be wrong. Please let me know if I am.

Anna said...

"இந்த புரொஜெக்டிற்கென்று போதுமான கால அவகாசம் எடுத்து செய்திருக்கும் பட்சத்தில், மிக அடிப்படையான டெஸ்ட் ஒன்றை ஓட்டி ஏன் அதிகார பூர்வமாக சந்தேகங்களை தீர்த்து வைக்கவில்லை."

இது நல்ல கேள்வி.

Have they been having a difficult time recently? Seems like they were desparate for some positivity. But they did blow this out of proportion.

அதையும் விட science journal இதுக்கு ஒத்துப்போயிருக்கவே கூடாது. இப்ப தான் பாத்தனான். அவர்கள் தமது கட்டுரையை science க்கு 1st of September கொடுத்துள்ளார்கள். They have accepted it for publicaiton on the 8th of November. Doesn't seem like the article has gone through a thorough peer-review process.

இதுவே என்னை மாதிரி ஒரு post-doc வேறொரு பல்கலைக்கழகத்திலிருந்து இதே கட்டுரையை science க்கு அனுப்பியிருப்பின் நிச்சயமாக இன்னும் பல பரிசோதனைகளைச் செய்து valid ஆன proof உடன் வரச்சொல்லி நிச்சயமாக அனுப்பியிருப்பார்கள். And that's how it should have been.

அப்படிச் செய்திருப்பார்களேயானால் இது இரு மாதங்களில் publish பண்ணியிருக்கமாட்டார்கள்.

எனது ஒரு study உம் traditional ஆக ஆய்வாளர்கள் (immunologists in this case) நினைத்திருந்ததிற்கு மாறான‌ ஒரு (not as big as this one, not even close :)) ஒரு முடிவைத் தந்திருந்தது. அதை நான் publish பண்ணிய journal ஜ‌ convince பண்ண எனக்கு ஒரு வருடத்திற்கும் மேல் எடுத்தது. ஒவ்வொரு முறையும் அவர்கள் சொன்ன additional experiments செய்யும் போதும் எனது முதல் முடிவிற்கு சாதகமாகவே results வந்தன. It was very exciting. ஆனால் அதை நான்கு தனிப்பட்ட ஆய்வாளர்கள் கணித்தர்கள் (in four rounds). It's time consuming, but that's how it should be, especially for a claim as big as this.

Thekkikattan|தெகா said...

//அதையும் விட science journal இதுக்கு ஒத்துப்போயிருக்கவே கூடாது. இப்ப தான் பாத்தனான். அவர்கள் தமது கட்டுரையை science க்கு 1st of September கொடுத்துள்ளார்கள். They have accepted it for publicaiton on the 8th of November. Doesn't seem like the article has gone through a thorough peer-review process.//

இந்த ரகசியத்தையெல்லாம் இப்படி பகிர்ந்துகலாமா :)). எல்லாம் அப்படித்தேய்ன். தெரிஞ்ச விசயம்தானே!!? குறைந்த பட்சம் மூன்றிலிந்து ஆறு மாசமாவது வேணுமே.

//இதுவே என்னை மாதிரி ஒரு post-doc வேறொரு பல்கலைக்கழகத்திலிருந்து இதே கட்டுரையை science க்கு அனுப்பியிருப்பின் நிச்சயமாக இன்னும் பல பரிசோதனைகளைச் செய்து valid ஆன proof உடன் வரச்சொல்லி நிச்சயமாக அனுப்பியிருப்பார்கள். And that's how it should have been.//

அது ஒரு நிலையை எட்டும் வரைக்கும் அப்படி இருக்குமின்னு நினைக்கிறேன். நல்லா தொடர்ந்து கொடுத்து ரெகுலர் கஸ்டமர் ஆயீட்டா பேரை பார்த்தவுடன் கிடுகிடுன்னு ப்ரிண்ட்ல ஏறிடுமோ ;-)

எனக்கு நீங்க சொன்னவுடன் என்னோட இரண்டு பேப்பருக்கு கொடுத்த குடைச்சல் ஞாபத்திற்கு வருது. முதல் ரிவ்வியூலயே நான் கண்டறிஞ்சிருந்த மூஞ்சுரு இனம் அங்க இருக்க வாய்ப்பில்லைன்னு, திரும்பவும் அடையாள படுத்தச் சொல்லியே எனக்கு ரெக்கமெண்ட் செஞ்சிருந்தாங்க. இத்தனைக்கும் அது நீல்கிரீஸ் துணை இனத்தில வருகிற மூஞ்சுரூ [suncus niger(montanus)]. பிறகு என்னாச்சு நான் இங்க உட்கார்ந்திட்டு தீசிஸ் முழுக்க அப்படியே குறிப்பிட்டு எழுதியிருக்கும் ஒரு மூஞ்சுரை இவன் ஃப்ளோரிடாவில உட்கார்ந்திட்டு கேள்வி எழுப்புறான், உடனடியா அங்கே (இந்தியா) போக எனக்கு வாய்பில்லாமல் போக... அட்வைசருக்கு அனுப்பிய வாக்கிலேயே தூங்க போட்டாச்சு...

அப்படித்தான் முட்டி மோதுறதெல்லாம் :))... ஆனா, இங்க (நாசா) கதை வேற.

//ஒவ்வொரு முறையும் அவர்கள் சொன்ன additional experiments செய்யும் போதும் எனது முதல் முடிவிற்கு சாதகமாகவே results வந்தன. It was very exciting. ஆனால் அதை நான்கு தனிப்பட்ட ஆய்வாளர்கள் கணித்தர்கள் (in four rounds).//

நீங்க விடக்கண்டி கொடாக் கண்டியாக இருந்து அசத்திருக்கீங்க. வெரி இன்ரஸ்டிங்! Good luck on that paper!!

Anna said...

"அதன் பேசிக் C, H, O அது தவிர மற்ற சில தனிமங்களும் சேர்ந்து நமக்கு ஒரு அமினோஅசிடோ அல்லது ஒரு பெப்டைடோ கிடைக்கலாம். ஆனால் அது ஒரு பெப்டை செயின் ஆக மட்டுமே இருக்கும்..அது ஒரு செயல் படுற புரோடீன் ஆகனும்னா 3D structure ஆகனும் fold ஆக சூல்நிலை அமையனும் அதை தான் ஒரு spark அப்படின்னு குறிபிட்டேனே ஒழிய அது ஒரு ஒளிக்கற்றை என்று குறிப்பிடவில்லை."

Yes. but peptide fold க்குரிய சூழலை எப்படி எதோவொரு சக்தி என்று சொல்கிறீர்களென விளங்கவில்லை. They need the right solvant, pH, amounts of salts, teperature, etc,etc for correct folding. அந்தச்சூழல் இல்லாவிட்டால் ஒழுங்காக மடிபடாது. அதற்கும் supernatural power க்கும் என்ன தொடர்பு? For many things we haven't figured out the exact ingredients needed to do it in the lab. ஆனால் எம்மால் இன்னும் முடியவில்லை என்பதற்காக வேறொரு சக்தி இருக்கிறதென எப்படிச் சொல்லலாம்? உதாரணத்திற்கு, PCR (polymerase chain reaction)ஜ எடுக்கலாம். எமது உடலில் தேவையான எல்லா ingredients (the enzymes, nucleotides, chaperones, etc, etc) உம் இருப்பதால் ஒரு DNA molecule 37 degrees இலேயே மிக இலகுவாக இரண்டாக்கப்படும் (when cells divide). ஆனால் உடலுக்கு வெளியில் எல்லாம் அப்படியே உருவாக்கவியலாவிட்டாலும் ஒரேயொரு enzyme ஜ மட்டும் கொண்டு nucletides and salts கொடுத்து வெப்பநிலைகளை மாற்றி மாற்றி கிட்டத்தட்ட உடல் செய்வது மாதிரி நாமும் DNA ஜப் பெருக்குகிறோமே?

"இதனை நீங்கள் இயற்க்கை என்று சொல்லுகிரீர்களா அதுவும் சரி தான். எனென்றால் அதுவும் ஒரு வகையான நம்பிக்கை தான் Paganism. So, எதொ ஒரு சக்தி நம்மை எல்லாம் ஆட்டுவிக்கிறது என்று நம்பினாலே நீங்கள் எல்லாம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாகி விடுகிறீர்கள்."

No. Paganism is still based on worship and in ancient times most often sacrifices humans or animals to for example sun gods, believeing that sun will give us what we asked for.

உதாரணத்திற்கு I accept கோள்கள் இருக்கின்றன, அவற்றிற்கு தனித்தனி ஈர்ப்பு விசைகள் உண்டு. But there are no evidence that even remotely suggests that it effects my day to day life. அதையும் விட முக்கியம், தற்சமயம் effect பண்ணுமென்டாலும், it doesn't have a mind of its own. அதனால் நான் சனீஸ்வரனுக்கோ வெள்ளிக்கோ புதனுக்கோ கற்பனைக்கோள்களான ராகு, கேதுவுக்கோ மன்றாடி எனக்கு ஒரு பலனும் கிடைக்கப்போவதில்லை.

Anna said...

"நான் இங்க உட்கார்ந்திட்டு தீசிஸ் முழுக்க அப்படியே குறிப்பிட்டு எழுதியிருக்கும் ஒரு மூஞ்சுரை இவன் ஃப்ளோரிடாவில உட்கார்ந்திட்டு கேள்வி எழுப்புறான், உடனடியா அங்கே (இந்தியா) போக எனக்கு வாய்பில்லாமல் போக... அட்வைசருக்கு அனுப்பிய வாக்கிலேயே தூங்க போட்டாச்சு..."
Oh No! Is it not possible for any others in the Indian team to do it?

Anna said...

Here is one that is a bit newsworthy: Reproductive scientists create mice from 2 fathers

Would not recommend it for humans unless we are on the verge of extinction (even then, may be - mmm got to think about that). :)

ஜோதிஜி said...

கொஞ்சம் மேலோட்டாமத்தான் படிச்சேன். மீண்டும் வந்து படிக்கோனும். ஆனா படிச்சு முடித்து இது போன்ற விசயங்களுக்கு மக்கள் எப்படி விமர்சனம் கொடுக்க முடியும்ன்னு நினைத்தால் மக்கள் கதக்களியே ஆடியிருக்காங்க. வர வர வலைபதிவுகளில் அக்கிரமம் அக்கிரமம் அதிகமாத்தான் இருக்கும். கடந்த ஒரு மாதமாக இது போன்ற நிறைய நல்ல பதிவுகள் நல்ல விமர்சனங்களோடு பகிர்ந்து கொள்வதைப் பார்க்கும் இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்று இதில் பதில் அளித்த ஒவ்வொருவரையும் கேட்க தோன்றுகிறது.

ஜோதிஜி said...

அப்புறம் இது போன்ற விசயங்கள் தமிழ்நாட்டு இந்திய அரசியல்வாதிகளுக்கு தெரியவந்தால் அங்கே போய் இடம் பிடிக்கனும்ன்னு வரிசை கட்டி நிற்பாங்களே? அதற்கு ஏதும் கைவசம் விசயம் (விஷமம்) வைத்திருக்கீங்களா?

முகுந்த்; Amma said...

அனலிச்ஸ்ட் அவர்களுக்கு

//Yes. but peptide fold க்குரிய சூழலை எப்படி எதோவொரு சக்தி என்று சொல்கிறீர்களென விளங்கவில்லை. They need the right solvant, pH, amounts of salts, teperature, etc,etc for correct folding. அந்தச்சூழல் இல்லாவிட்டால் ஒழுங்காக மடிபடாது. அதற்கும் supernatural power க்கும் என்ன தொடர்பு? For many things we haven't figured out the exact ingredients needed to do it in the lab. ஆனால் எம்மால் இன்னும் முடியவில்லை என்பதற்காக வேறொரு சக்தி இருக்கிறதென எப்படிச் சொல்லலாம்? //

சரிங்க அது சூப்பர் நாட்சுரல் பவர் இல்லைங்க..எல்லாராலும் நடக்கிற காரியம் என்று வைத்துக்கொள்வோம்.. லாப்பில் ஒரு ப்ரோடீன் மாலிகூளையோ அல்லது டிஎன்ஏ மாலிக்கூளையோ அமினோஆசிட் இல் இருந்து அல்லது நியூக்லியோடைடில் இருந்து அதன் செயல் படுகிற ஃபொர்ம் க்கு synthesize செய்து கொண்டுவர முடியுமா சொல்லுங்கள்.


//உதாரணத்திற்கு, PCR (polymerase chain reaction)ஜ எடுக்கலாம். எமது உடலில் தேவையான எல்லா ingredients (the enzymes, nucleotides, chaperones, etc, etc) உம் இருப்பதால் ஒரு DNA molecule 37 degrees இலேயே மிக இலகுவாக இரண்டாக்கப்படும் (when cells divide). ஆனால் உடலுக்கு வெளியில் எல்லாம் அப்படியே உருவாக்கவியலாவிட்டாலும் ஒரேயொரு enzyme ஜ மட்டும் கொண்டு nucletides and salts கொடுத்து வெப்பநிலைகளை மாற்றி மாற்றி கிட்டத்தட்ட உடல் செய்வது மாதிரி நாமும் DNA ஜப் பெருக்குகிறோமே?//

PCR என்பது மெக்கானிக்கல் இனைப்பு hybridization technique. பாசிடிவும் நெகடிவும் இனையிர மாதிரி அதற்க்கு நீங்கள் ஒரு டெம்ப்லேட் primer தர வேண்டி இருக்கும். அதனை பிடிச்சிகிட்டு வேற ஒரு strand ஐ பெருக்க முடியும். எந்த ஒரு டெம்ப்லேட்டும் இல்லாமல் PCR வேலை செய்யாது.

முகுந்த்; Amma said...

முதலில் நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான்

நான் மதங்களின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கையை எப்போதும் ஆதரித்ததில்லை.

ஜாதகம்..ஜோசியம்..பலி என்பதெல்லாம் தீவிர மதவாதிகளால் உருவாக்கப்பட்ட ஒரு அடிமைத்தனம்

ஆனால் இந்த சாதி வேறுபாடுகளையும் மூட பழக்கவழக்கங்களையும் முன் வைத்து கடவுள் இல்லை என்று எப்படி முடிவுக்கு வர முடியும்..

மனிதன் ஹோமோசேப்பியன்ஸ் ஆக மாற ஆரம்ப்பித்த பிறகு...தன்னை சுற்றி என்ன நடக்கிறது..என்று கேள்வி கேட்க ஆரம்பித்த பிறகு இது தான் உலகம் என்று நிறைய அனுமானம் செய்ய ஆரம்பித்தான்.
தான் யோசித்து அறிந்தவற்றை எழுதி வைத்தான்.

நம்முடைய முன்னோர்கள் எழுதி வைத்த சில இலக்கியங்களை படிக்கும் போது வியக்க தோன்றுகிறது..

”ஆக்கம் அழிவு இறுதி இல்லாய்” இது திருவாசகத்தில் இருக்கும் ஒரு சொற்றொடர்..

இது conservation of energy தத்துவம்.
இந்த எனெர்ஜி தத்துவத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்து இருக்கிறார்கள்.

”அணுவுக்குள் அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்”

இது ஒளவையாரின் வினாயகர் அகவல். இதன் பொருள் என்னவென்று விளக்க வேண்டியதில்லை.

அறிவியல் உலகில் வெறும் இருனூறு ஆண்டுகளுக்கு முன்புதான் அணுவை பிளக்க முடியும் என்று கண்டறிந்தனர்.

ஆனால் ஒளவைப்பாட்டி எப்போதோ எழுதி வைத்து விட்டார்கள்.

..தொடரும்

வருண் said...

முகுந்த் அம்மா!

மதம் சாதியை எல்லாம் சொல்லி கடவுள் இல்லைனு சொல்ல முடியாதுதான்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களில் பலர் தங்களால் கடவுளை உணரமுடியாத்தால்தான். அதி நீங்க விதண்டாவாதம்னு சொல்ல முடியாது.

பொதுவாக அறிவியல் துறையில் உள்ளவங்களுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் இல்லாததைப் பார்க்கலாம். அவங்க கடவுள் இல்லைனு நிரூபிக்க முயல்வது இல்லை. கடவுளை ரொம்ப தொந்தரவு செய்யாமல் தன் வேலையை பார்க்கிறார்கள்.

கடவுளை உணரமுடியாதது அறியாமைனு சொல்ல முடியாது. அப்படி சொன்னால் கடவுளை உணருவதும் அரியாமைதான்.

முகுந்த்; Amma said...

கடவுள் மறுப்பாளர்களுக்கு நான் முன்பு ஒரு கேள்வி முன் வைத்தேன்..அதற்கு நிறைய கேள்விக்கனைகள் வந்து விழுந்தன..

நான் கேட்டது ஒரு அடிப்படை கேள்வி..

சரி மேலும் சில கேள்விகள் உங்களுக்கு..

பூமி என்ற இடத்தில் இருந்து வின்வெளியில் எதோ ஒரு இடத்திற்கு நான் சென்று விட்டேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்..நான் இருக்கும் coordinates என்ன..

சூரியகுடும்பம்,மில்கி வேய்...அப்புறம்..என்ன

எனக்கு மேலே கீழே என்ன இருக்கிறது...

3 டி coordinates எல்லாம் பூமியில் மட்டுமெ கணக்கில் உண்டு...அதற்க்கு பிறகு...

நீங்கள் இங்கே டைம் ஐ ஒரு coordinate ஆக கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்..உங்கள் இருப்பை குறியிட..ஆனாலும் உங்களுக்கு ஒரு பாயிண்ட் அஃப் ரெஃபெரென்ஸ் வேண்டும்..

அதாவது பூமியில் இருந்து இந்த கோளுக்கு இத்தனை தூரம் என்று..அந்த பாயிண்ட் அஃப் ரெஃபெரென்ஸ் இல்லாமல் யோசிக்க நம்முடைய ஆறிவுக்கு தெரியாது...

சரி அண்ட வெளியை விட்டு விடுவோம்

முகுந்த்; Amma said...

அணுவுக்குள் செல்லுவோம்..

முதலில் அணு என்பது சிறியதாக இருந்தது..அதன் பின்னர் எலெட்ரொன் நியுட்ரான் ...சிறியதாக இருந்தது...

இப்போது sub-atomic particles சிறியதாக இருக்கிறது..அது தான் நாமா..அப்பொ நாமெல்லாம் sub-atomic particles ஆல் உருவானவர்களா..

முதலில் எலெக்ட்ரொனின் இருப்பையே quantum physics ன் படி இங்கெ இருக்கலாம் அல்லது அங்கே இருக்கலாம்..என்று probability ஆக தான் கணக்கிடுகிறார்களே தவிர..இங்கு தான் இருக்கும் என்று உறுதியாக சொல்ல மாட்டார்கள்..முடியாது..

முகுந்த்; Amma said...

இதனை தான் ஒளவை பாட்டி

“அணுவுக்கு அணுவாய்..அப்பாலுக்கு அப்பாலாய்” அப்படின்னு ஒரே போடா போட்டாங்க..

நம் அறிவு என்பது வெறும் எறும்பு மாதிரி...ஆனால் நம்மை சுற்றி இருக்கும் உலகம் பெரிய யானை போன்றது...

நம்முடைய அறிவுக்கு தகுந்த மாதிரி இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாம் என்று அனுமானிக்கலாம்..அல்லது உணர முயற்ச்சிக்கலாம்..

இதனை எல்லாம் நீங்கள் இயற்கை அல்லது அது பாட்டுக்கு நடக்குது என்று அலங்கார வார்த்தைகளாக சொல்லி கொள்ளுங்கள்..அதே நடவுகளை நான் இது கடவுள் என்று சொல்லிக்கொள்கிறேன்..

இருவரும் தண்டவாளத்தின் இரு கோடுகள் போல பயணித்து கொண்டிறுப்போம்..

கையேடு said...

உண்மைதாங்க முகுந்த் அம்மா. உருவமுள்ள கடவுள்,மதம், மூட நம்பிக்கைகளை புறந்தள்ளிவிட்டு ஆன்மீகம் அறிவியல் இவை இரண்டும் இணையும் மற்றும் முரண்படும் புள்ளிகள் பற்றி பேசுவோம், அவ்வப்போது காப்ராவையும் பேசுவோம்.

இங்கிருந்து துவங்குகிறேன்..

//”ஆக்கம் அழிவு இறுதி இல்லாய்” இது திருவாசகத்தில் இருக்கும் ஒரு சொற்றொடர்..

இது conservation of energy தத்துவம்.//

இது குறிப்பிடுவது ஆற்றல் அழிவின்மைத் தத்துவம் என்று அறிவியல் படித்த உங்களுக்குத் தெரியும், ஆனால் அறிவியல் படிக்காதவர் இந்த வாக்கியத்தை எப்படி அனுகுவார் என்று நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

ஆனால், அறிவியலில் குறிப்படும், ஆற்றல் அழிவின்மை விதி ஒருவித காறார்தன்மையோடு, அனைவருக்கும் ஒரே புரிதலைத் தருமாறு இருக்கிறது.

இதுதான் தத்துவம்/இலக்கியத்தில் இருக்கும் குறைபாடு அல்லது சிறப்பு.
ஒரு வார்த்தையை வாசிக்கும் ஒவ்வொருவரும் அதை ஒவ்வொரு விதமாக உள்வாங்க முடியும். ஆனால், இறுதிவரை ஆசிரியன் வந்து தனது பார்வையை விளக்காவிட்டால் அது அவரவர் பார்வையே.. ஆன்மீக ஈடுபாடு உள்ள உங்களுக்கு ஜெ.கேவின் சொற்றொடர் தெரிந்திருக்கும்.
நிகழ்வின் புரிதலில் தெரிவது பார்வையாளனேயன்றி, நிகழ்வல்ல என்பது.
ஆக இலக்கியப் படைப்புகள் பெரும்பான்மையாக இப்படிப்பட்ட அணுகுமுறைதான் உண்டு. அவை காலத்தை வென்று நிற்கும் சிறப்பியல்பை குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. அதற்கான பாராட்டையும் அங்கீகார்த்தையும் அவ்விலக்கியத்திற்கு வழங்க வேண்டும் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் அவை இதைத்தாதன் குறிப்பிடுகின்றன என்ற யாரும் இறுதிமுடிவாக அறிவிக்க முடியாது.
ஒருவேளை அப்படி யாராவது தங்களது பார்வையை விளக்கினாலும் அதனை உண்மை என்று சோதித்துப் பார்க்கவோ அல்லது நிரூபனம் செய்யவோ வாய்ப்பில்லை.

//”அணுவுக்குள் அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்”//

இந்த வரியை பலரும் தமிழரின் அணு அறிவை சிலாகிக்கப் பயன்படுத்துகிறார்கள். ஒரு பெருமிதத்தைக் கட்டமைத்துக்கொள்ளவும் செய்கிறார்கள்.

ஆனால் நாம் பழந்தமிழரின் அளவுச் சொற்களோடு பார்க்கும் போது அணு என்ற சொல்லுக்கு இணையாக பழந்தமிழர் பயன்படுத்தும் அளவும் இன்றைக்கு நவீன அறிவியல் பயன்படுத்தும் அளவும் ஒன்றாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்,
அந்த வாக்கியத்தைச் சரியாகத்தான் எடுத்தாண்டிருப்பீர்கள் என்று நம்பித் தொடர்கிறேன்.

அணுவுக்குள் ஒரு அணு இருக்க முடியுமா? அறிவியலில் அதற்கு இடமுண்டா?

அடுத்தடுத்து குவாண்டம் இயற்பியல் மற்றும் காப்ராவை முன்வைத்துத் தொடருவோம்.

Anna said...

முகுந்த் அம்மாவிற்கு,

I've loved this quote since I've first read it. I'll just take this chance as an excuse to write it.

Is God willing to prevent evil, but not able? Then he is not omnipotent. Is he able, but not willing? Then he is malevolent. Is he both able and willing? Then whence cometh evil? Is he neither able nor willing? Then why call him God?
— Epicurus, philosopher (c. 341-270 BCE)



"ஆனால் இந்த சாதி வேறுபாடுகளையும் மூட பழக்கவழக்கங்களையும் முன் வைத்து கடவுள் இல்லை என்று எப்படி முடிவுக்கு வர முடியும்."
1. கடவுள் இருப்பதற்கான ஆதரங்கள் எதுவும் இல்லை.
2. கடவுளால் அருளப்பட்டன எனச் சொல்லப்படும் புத்தகங்களிலேயே சாதிவேறுபாடுகளுக்கான ஆதாரங்களையும் பல வன்முறையைத் தூண்டும் வகையான கருத்துக்களையும் காணலாம்.


"மனிதன் ஹோமோசேப்பியன்ஸ் ஆக மாற ஆரம்ப்பித்த பிறகு...தன்னை சுற்றி என்ன நடக்கிறது..என்று கேள்வி கேட்க ஆரம்பித்த பிறகு இது தான் உலகம் என்று நிறைய அனுமானம் செய்ய ஆரம்பித்தான்.
தான் யோசித்து அறிந்தவற்றை எழுதி வைத்தான்.

நம்முடைய முன்னோர்கள் எழுதி வைத்த சில இலக்கியங்களை படிக்கும் போது வியக்க தோன்றுகிறது."


ok. அப்படிப் பல civilizations இலிருந்து உதாரணங்கள் காட்டலாம். ஆனால் இதுக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு?


”அணுவுக்குள் அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்”

இது ஒளவையாரின் வினாயகர் அகவல். இதன் பொருள் என்னவென்று விளக்க வேண்டியதில்லை.

அறிவியல் உலகில் வெறும் இருனூறு ஆண்டுகளுக்கு முன்புதான் அணுவை பிளக்க முடியும் என்று கண்டறிந்தனர்."


இதை வாசித்ததும் எனக்கு பல வருடங்களுக்கு முன் (high school times) இலங்கையில் எதோ ஒரு பத்திரிகையில் கண்ணனின் பத்து அவதாரங்களையும் பரிணாமத்தையும் தொடர்புபடுத்தி ஒரு கட்டுரை வாசித்த ஞாபகம் வந்தது. At that time I was completely in awe of that possible connection.

ஒளவையார் என்ன அர்த்தத்தில் எழுதினார்களோ எமக்குத் தெரியாது. எமக்கு அதனால் எந்தப் பலனும் வரவில்லை.எமது கண்டுபிடிப்புகளுக்கு அவை உதவியதும் இல்லை. பல‌ ஆண்டுகளுக்கு முன் நாம் கண்டுபிடித்த பிறகே திரும்பவும் போய் ஆயிரமாயிரமாண்டுகளுக்கு முன் இருந்த இலக்கியங்களை ஆராய்ந்து தொடர்பு காண முயற்சிக்கிறோம். ஏன் எப்பவுமே இந்த process இப்படி backwords ஆயிருக்குது. ஒளவையார் அணுவைப் பிளக்க முடியுமென்ற அர்த்தத்தில் எப்பவோ சொல்லியிருப்ப்து எமக்கு விளங்கியிருந்தால் Rutherford கஸ்டப்பட்டிருக்கத்தேவையில்லையே.

கையேடு said...

காப்ராவின் புத்தகத்தில் இருந்து ஆன்மீகத்தை துவங்குவது என்பது நவீனகால உரையாடல் உத்தி.

கடற்கரையில் அமர்ந்து ஒரு துகள் இயற்பியல் ஆய்வாளர் காஸ்மிக் நடனத்தத உள்வாங்குவது என்பது அச்சர்யமூட்டும் நிகழ்வல்ல. இது அறிவியல் துறையில் பணிபுரியும் பலரும் உணரும் ஒரு ஒத்திசைவு/பிரமிப்புதான்.
அதிலும் அவர் துகள் முடுக்கியில் கிடைத்த ஒரு புகைப்படத்தின் மேலே நடராஜரை பொதித்திருக்கும் விதம் பார்வையாளனைக் கழுத்தைத்திருப்பி இப்படிப் பார் என்பது போல இருக்கு.

நடராஜரின் நடனம் பற்றி தத்துவார்த்தமாக அல்லது மத ரீதியாக நீங்கள் விளக்கினால், காஸ்மிக் நடனம் பற்றி புரிந்து கொள்ள எனக்கு எளிதாக இருக்கும்.

காப்ராவின் புத்தகத்தை நான் எப்படி பார்க்கிறேன் என்று முதலில் கூறிவிடுகிறேன். படைப்பாளி இறந்துவிட்டான் என்ற சொற்றொடரை பதிவுலகில் நீங்கள் அதிகம் கேட்டிருக்கலாம். அந்த அடிப்படையிலேயே காப்ராவின் ஒப்புமைகளைப் பார்க்கிறேன்.
ஒரு உபநிடத வாசகத்திற்கோ அல்லது பவுத்த வாசகத்திற்கோ அல்லது இருமையை முன்மொழியும் சீனத் தத்துவத்திற்கோ ஒரு பொருளைச் சொல்வது பார்வையாளனேயன்றி அத்தத்துவம் அல்ல. அதனை எழுதியவர் எதை முன்வைத்து எழுதினார் என்பதை உறுதி செய்யும் வழிமுறையோ வாய்ப்போ இல்லாத சூழலில், காப்ரா எடுத்தாண்டிருக்கும், பகுதிகளுக்கு பலவாயிரம் அர்த்தங்கள் கற்பிக்க முடியும். இது அதிலிருக்கும் நடைமுறைச் சிக்கல். அதே சமயம் பல இடங்களில் அவர் பலவந்தமானதொரு ஒப்புமையைச் செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

Anna said...

கையேடு, நீங்கள் மிக நன்றாக எழுதுகிறீர்கள்.

கையேடு said...

நன்றிங்க அனாலிஸ்ட்..

நான் மேலே குறிப்பிட்ட நடைமுறைச்சிக்கலை காப்ராவும் உணர்ந்துதான் இருக்கிறார். அதனால், அவர் அதையும் தனது புத்தகத்தில் குறிப்பிடவே செய்கிறார், அதாவது ஒரு பெரிய இலக்கியப்புத்தகத்தில் இருந்து ஓரிரு வாக்கியங்களை எடுத்தாள்வது என்பது சிக்கலான விடயம் என்றும், யார் எந்தப் பகுதியை எடுத்தாள்கிறார்கள் என்பதும் கேள்விக்குறியது என்பதை தெளிவாகவே குறிப்பிடுகிறார்.

நிற்க..

நான் மேலே கொடுத்த ஆன்மீகம் தொடர்பான நான்காம் பாகத்தை நீங்கள் முழுவதும் வாசித்தீர்களா தெரியவில்லை, இருந்தாலும் காப்ராவின் எடுகோள்களும் அதனை நிரூபிப்பிக்கின்றன என்றுதான் சொல்லவேண்டும்.

அதாவது ஞானத்தில் உயர்ந்தது தாழ்ந்தது என்று இந்து மதம் குறிப்பிடுவதாகவும், உயரிய ஞானமாக இப்படியான ஆன்ம ஞானத்தையும், மற்றயவையெல்லாம், குறைந்த அல்லது தாழ்ந்த ஞானமாகச் சித்தரிக்கிறது என்று குறிப்பிடுகிறார்.

அதே சமயம் பவுத்த மார்க்கத்திலும் ஞானத்தில் பிரிவுகள் உண்டு, ஆனால் அது சார்பு ஞானமாகவும், எல்லைகடந்த ஞானமாகவும் சித்தரிக்கப்படுகிறது.

இது குறித்து அவர் தனிப்பட்ட விமர்சனங்கள் எதுவும் வைக்கவில்லை. ஆனால், இது குறித்து சமூக தளத்தில் முன்வைக்கப்பட வேண்டிய விமர்சனத்தைதான், எனது நான்காம் பாகத்திற்கான சுட்டியில் குறிப்பிட்டுள்ளேன்.

சமூகதளத்தை இங்கே விட்டுவிடுவோம் ஏனெனில் அது வேண்டாம் என்று நாம் முடிவு செய்தாயிற்று. அறிவியலை முன்னிறுத்தியே தொடருவோம்ம் காப்ராவைப் போலவே...

இதுவரை உரையாடியதில் உங்களுக்கு ஏதாவது சொல்லத் தோன்றினால் சொல்லுங்கள் அதன் பின் குவாண்டம் இயற்பியலுக்குள் நுழைவோம்.

கையேடு said...

மற்றவை உங்கள் பதிலுரை கண்டு.

கையேடு said...

//நீங்கள் இங்கே டைம் ஐ ஒரு coordinate ஆக கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்..உங்கள் இருப்பை குறியிட..ஆனாலும் உங்களுக்கு ஒரு பாயிண்ட் அஃப் ரெஃபெரென்ஸ் வேண்டும்..
//

இங்கே எனக்கொரு கேள்வி இருக்கு. இதே கேள்வியை ஒரு சூன்யப் புள்ளியை நோக்கி தியானம் செய்யச் சொன்ன தியான ஆசிரியரிடம் கேட்டீர்களா? அந்தச் சூன்யப் புள்ளி எங்கிருப்பதாகச் சொன்னார்.

வருண் said...

***இருவரும் தண்டவாளத்தின் இரு கோடுகள் போல பயணித்து கொண்டிறுப்போம்..

December 10, 2010 4:49 AM***

இது ரொம்ப நல்லாயிருக்குங்க! Let us respect each others thought and move on what we find as comfortable to us! :)

வருண் said...

***“அணுவுக்கு அணுவாய்..அப்பாலுக்கு அப்பாலாய்” அப்படின்னு ஒரே போடா போட்டாங்க.***

ஒளவையார்க்கு ஒரு நல்ல "விஷன்" இருந்து இருக்குனுதான் நான் சொல்லுவேன். :)

------------

இப்போ இன்னொரு கேள்வி,

"அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்"னும் ஒள்வையார் சொல்லி இருக்கார்.

நான் கேள்விப்பட்ட்து என்னனா மும்பையில் ஒரு சில ஏழைத்தாய் மார்கள் தன் குழந்தைகளையே பிச்சை எடுக்க விடுறாங்களாம். அப்புறம் தன் குழந்தையை கார்க்கு முன்னாலே தூக்கி எறிந்து, கார்ல குழந்தை அடிபட்டால், அதைச் சொல்லி மிரட்டி பணக்கார கார் ட்ரைவரிடம் பணம் வாங்குவாங்களாம். நான் கேள்விப்பட்டது. நான் இதை சொன்னவரிடம், 'அப்படியெல்லாம் அம்மா இருக்க மாட்டாங்க"னுதா சொன்னேன்.. But he looked at me as if I am a fool and ignorant.

சரி, அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்பதெல்லாம் ஒரு சிலருக்கு சரிப்பட்டு வராது னு சொல்ல வர்றேன்.

ஒருவர் சொன்னது சரியாவும் காலத்தால் அழியாததாகவும் இருக்கலாம், காலத்தால் அழிவதாகவும் இருக்கலாம். ஒளவையாரும் ஒரு ஹூமன் பீயிங் தானே? அவர் சொல்வது சரியாக இருக்கும்போது எடுத்துக்குவோம். ஒரு சில சூழ்நிலைகளில் தவறுதலா இருக்கவும்தானே செய்யுது?

Let us be a believer or non believer, it is better to have an open-mind. As long as we have that there is no harm done.

Thekkikattan|தெகா said...

guys மிக அருமையாக, பொறுப்பாக, பொறுமையினைக் கொண்டு இந்த உரையாடலை எடுத்துச் செல்வதற்கு நன்றிகள் பல!

காப்ராவின் புத்தகத்தை ’’கையேடுவை’’ முழுதுமாக வாசிக்க வைத்து இங்கு உரையாடலில் கலந்து கொள்ள வைத்தது முகுந்தம்மாவையே சாரும் :). அதுக்கு அவங்களுக்கு ஒரு சிறப்பு நன்றி இத்தருணத்தில்.

எனக்கும் விளங்காத ஒரு விசயம் என்னவென்றால் கையேடு கேட்டுக் கொண்டதுபடியே ...நடராஜரின் நடனம் பற்றி தத்துவார்த்தமாக அல்லது மத ரீதியாக நீங்கள் விளக்கினால், காஸ்மிக் நடனம் பற்றி புரிந்து கொள்ள எனக்கு எளிதாக இருக்கும்... அதனை ஏதோ இரு தளங்களில் (அறிவியல்/தத்துவம்) ஒன்றின் மீதாக விளக்கினால் விளங்கிக் கொள்ள முடியும் என்று நானும் கருதுகிறேன்.

அடுத்து எப்பொழுதுமே நமது முன்னோர்கள் ”ஞான உணர்வின் படி” (touching the super conscious filed) பல விசயங்களையிம் சொல்லி வைத்து விட்டு சென்று இருக்கிறார்கள் என்று அறிவியல் கூற்றுகளின் படி இப்பொழுது நமக்கு பரிச்சயமான விசயங்களை கொண்டு, நம்ம பண்டைய இலக்கியங்களிலிருந்து ஒரு வாக்கியத்தை பிரித்து அதினின்று வைத்து இதுதான் அதுவாக சொல்லப்பட்டிருக்கிறது என்கிறோம்.

அதுவும் நன்றாக இன்றைய சூழலில் அந்த நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை நன்கு உள் வாங்கப்பட்ட நிலையில் அவ்வாறாக எடுத்து முன் வைக்கிறோம். ஆனால், அதுக்கு முன்னாக எப்படி காலம் காலமாக சும்மா வாசித்து எதன் அடிப்படையில் படித்து உள்வாங்கி கடந்து சென்றிருக்கிறோம்.

கையேடு கூறுவதனைப் போன்று ‘அணு’ என்பதன் அளவீடு அந்த கால கட்டத்தில் பெரும் (கண்ணுரும் வாக்கில் அமைந்த) நிறுத்தல் அடிப்படை குறியீடு அல்லவா? பின்பு ”அப்பாலுக்கு அப்பால் என்றால்,” நம் காணும் பொருட்களுக்கு அப்பால் விசயங்கள் இருக்கிறது என்று கூட எடுத்துக் கொள்ளலாமே...

எனவே நம் வாசிப்பின், நமக்கு கிடைத்த exposureகளைக் கொண்டே நாம் interpret பண்ணிக் கொள்ளும் திறனும் மாறுகிறது என்றாகிவிடுகிறதல்லவா??

தருமி said...

நேற்று இப்பதிவு தொடர்பான ஓர் அறிவியல் வலைப்பூவைக்காண ஒரு வாய்ப்பு. அதில் பல பின்னூட்டங்கள். எல்லாமே மிகவும் பொருத்தமான கேள்விகளும் விளக்கங்களும். எல்லாம் ஆங்கிலத்தில். இப்படி தமிழில் ஒரு நிலை வராதா என்று நேற்று ஏங்கினேன். இன்று அந்த ஏக்கம் போய்விட்டது.

எல்லோருக்கும் மிக்க நன்றி.
அதிலும் //கையேடு, நீங்கள் மிக நன்றாக எழுதுகிறீர்கள்.// என்று சொல்லும் the analyst நீங்களும் கையேடு போலவே மிக நன்றாக எழுதுகிறீர்கள்.

வலைப்பூக்களை 'அடுத்த தளத்திற்கு' எடுத்துச் சென்ற தெக்ஸுக்கும், முகுந்த் அம்மாவிற்கும் என் பாராட்டுகள்.

தொடருங்கள் ...

Unknown said...

நீங்களே ஒருத்தருக்கு ஒருத்தர் பாராட்டிகிரதப் பார்த்தா,
படிக்கிற எங்களுக்கு வெட்கமா இருக்கு.

அதனால் நானும் உங்க எல்லோரையும்,
ஒரு முதிர்வான தெளிந்த விவாதத்திற்கு ,
எனது மனமார்ந்த பாரட்டுகளை தெரிவிக்கிறேன்.

முழுவதும் படிக்க முடியல,
ஆற அமர உட்க்கார்ந்து படிக்கிற மாதிரி,
பெரிய விஷயங்களா இருக்கு.

நன்றி.

முகுந்த்; Amma said...

ப்விரிவான விளக்கத்திற்கு இப்போது நேரமில்லை...


ஆனால் தருமி அய்யா சொல்வதை ஆமோதித்தே ஆக வேண்டும்..

கையேடு அவர்களும்..அனலிஸ்ட் அவர்களும்..மிக அழகாக தமிழில் எழுதுகிறீர்கள்.

எனக்கு நிறைய நேரம் தோனும் கேள்விகள் எல்லாம் தமிழில் எப்படி எழுதுவது என்று தெரியாததால் எனக்குள்ளே மக்கி போயிருக்கின்றன..ஆனால் கையேடு அவர்களின் தமிழ் அசர வைக்கிறது..

அனலிஸ்ட் அவர்களின் தமிழ் ஆய்வுக்கட்டுரையும் என்னை மகிழ வைத்தது..

இருவருக்கும் வாழ்த்துக்கள்

கையேடு said...

//விரிவான விளக்கத்திற்கு இப்போது நேரமில்லை...//

இங்கே உரையாடும் நாம் அனைவரும் தொழில்முறை எழுத்தாளர்களோ அல்லது ஆன்மீகப் பிரதிநிதிகளோ கிடையாது. அதனால் விரிவான உரையாடலுக்கான கால அவகாசம் பற்றி உங்களின் நிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனாலும், இங்கே இவ்வுரையாடலைப் பின்தொடரும் சிலருக்காகவும், சாவகாசமாக நீங்களும் பின்னர் வாசிக்கும் பொருட்டும், இங்கே எழுதி வைத்துவிடுகிறேன். எனக்கும் ஏதோ ஒரு இடத்தில் இதைப் பதித்து வைத்தது போலவும் இருக்கும்.

இங்கு ஒரு காத்திரமான
உரையாடலை மேற்கொள்ளத் தூண்டிய உங்களுக்கும் நன்றிகள்.

முகுந்த்; Amma said...

நம்முடைய முன்னோர்கள் அவர்கள் காலத்தில் எல்லாம் தன்னை சுற்றி இருக்கும் இயற்கையை தன்னுடைய சிந்தனையில் எப்படி அனுமானித்தார்களே அப்படியே எழுதி வைத்தனர்..அவர்களுக்கு எந்த peer review process ஓ அல்லது scientific journal இல் நம்மை போல publish செய்ய வேண்டிய கட்டாயமோ இருந்திருக்கவில்லை.

அதனாலெயே என்னமோ அவர்கள் எதனையும் quantify செய்யவில்லை..

தன்னை சுற்றி இருக்கும் அந்த காஸ்மிக் எனெர்ஜியை அல்லது அந்த உணர்வை கடவுள் என்றறிவித்து எழுதி வைத்தனர்.

அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாள் என்று சொல்வது போல இறைக்கும் சொல்லி இருக்கிறார்கள்..எந்த measuring யூனிட்டும் அவர்கள் பயண்படுத்தவில்லை.

இதில் நீங்கள் கேட்ப்பது போல அது இப்போது இருக்கும் அணுவைத்தான் குறிப்பிடுகிறார்கள் என்று எப்படி சொல்ல முடியும் என்ற கேள்விக்கு என்னுடைய விளக்கம்..இப்போது அறிவியல் படி நீங்கள் உணர்ந்திருக்கும் அணுவைப்பற்றி ஒளவைபாட்டி குறிப்பிடவில்லை..அவர்கள் எதனை அணு என்று உணர்ந்தார்களோ அதனை குறிப்பிட்டார்கள்.

இதனை சொல்லும் போது எனக்கு ஒரு quote தான் ஞாபகம் வருகிறது..

ஒளிக்கற்றையின் duality ஐ பற்றி கூறும் போது “எப்படி ஒளி ஒரே நேரத்தில் அலைவடிவாகவும் துகள் வடிவாகவும் இருக்க முடியும்?....இந்த இரண்டு பண்புகளும் நம்முடைய அறிவுக்கு எட்டிய வரை செய்த ஆராய்ச்சிகள் கொண்டு வரையருக்கப்பட்டது..இன்னும் கூட ஒளிக்கு நிறைய பண்புகள் இருக்கலாம்..அவை எல்லாம் இன்னும் அறிந்து கொள்ளும் அளவு நம்முடைய அறிவு வளரவில்லை.

என்று நான் படித்த “Dancing Wu Li Masters" புத்தகத்தின் ஒரு quote ஞாபகம் வருகிறது.

அவர்கள் அணு என்று உணர்ந்ததை கடவுள் என்று அறிவித்து..அந்த கடவுளின் பண்புகளில் ஒன்றாக ஆக்கம் அளவு இறுதி இல்லாய் என்று எழுதி வைத்து சென்றார்கள்.

வருண் said...

***அவர்களுக்கு எந்த peer review process ஓ அல்லது scientific journal இல் நம்மை போல publish செய்ய வேண்டிய கட்டாயமோ இருந்திருக்கவில்லை.***

அன்றும், ஏன் இன்றும் நம்மிடம் உள்ள மிகப்பெரிய குறை, documentation and proper record-keeping with dates. இதனால் எவ்வளவோ நம்க்கு பாதிப்புனு சொல்லாம்!

Unknown said...

"நம்முடைய முன்னோர்கள் அவர்கள் காலத்தில் எல்லாம் தன்னை சுற்றி இருக்கும் இயற்கையை தன்னுடைய சிந்தனையில் எப்படி அனுமானித்தார்களே அப்படியே எழுதி வைத்தனர்.."

-உண்மை. அவர்கள் பார்த்து பயந்தவற்றை அல்லது அறிந்து கொள்ள முடியாதவற்றை, தனக்கும் மீறிய ஒரு சக்தி இருப்பதாக அறிவித்தனர். அதை கடவுள் என்றும் அறிமுகப் படுத்தினர். தான் சொல்லுவதற்கு மேலாக சிந்திப்பவர்களை தனிமைப் படித்தினர்.

அது ஒவ்வொன்றாக விஞ்ஞானம் மூலம் அறியத் தொடங்கியவுடன், அது என்னவேன்ற தேடல் அதிகமாகி வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது.

இன்றைய கால கட்டத்தில் கடவுள்,மதம் மற்றும் பிறவும், மனிதர்களை அடக்கி ஆள்வதற்கும், பிரித்தும், அடித்துக் கொண்டும் வாழ்வதற்கான ஒரு அடி பணியும் சாதனமாகத் தான் பயன் படுத்தப் படுகிறது. அது தேவையா? அதை ஆதரிக்க வேண்டுமா அல்லது தனிமைப் படுத்த வேண்டுமா?

அதே முன்னோர் தான் 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்றனர். ஆனா எங்கே கூடி வாழ முடிகிறது. எல்லா விதத்திலும் பிரித்து வைக்கக் கூடிய சாதனமா கடவுள், சாதி, மதம் எல்லாம் இருக்கு.

PS: உங்க விவாதங்களில் ரொம்ப interest ஆனது ஒரு சாதாரண மனிதரின் வார்த்தைகளில் அடக்கி விடாமல், தாங்கள் படித்துள்ள தங்கள் படிப்பு, அறிவு, விஞ்ஞானம் அனைத்தையும் உபயோகித்து இது உண்டு இல்லை என்று நிரூபிக்க நீங்கள் நடத்தி வரும் விவாதம், ரொம்ப நன்றாக இருக்கு. We are Excited. Thanks.

கையேடு said...

//நம்முடைய முன்னோர்கள் அவர்கள் காலத்தில் எல்லாம் தன்னை சுற்றி இருக்கும் இயற்கையை தன்னுடைய சிந்தனையில் எப்படி அனுமானித்தார்களே அப்படியே எழுதி வைத்தனர்.//

ஆமாம் இதிலே மாற்றுக் கருத்தில்லை.

ஆனால், ஏற்கனவே அனைத்தும் அறிந்து வைத்திருந்தனர் என்பதை எதனடிப்படையில் ஏற்றுக் கொள்ளமுடியும்.

//அதனாலெயே என்னமோ அவர்கள் எதனையும் quantify செய்யவில்லை..//

நாம் இப்போது பெரும்பாலும் உரையாடுவது ஆன்மஞானத்தைப் பற்றியது. இதனை அப்போதில்லை, இப்போதும் எண்மதிப்பில் தரமுடியாத சூழலே இருக்கிறது.

அதனால், உணர்வு மயமான ஒன்றை எண்மதிப்பில் இருந்தால்தான் அதை ஏற்றுக் கொள்ளமுடியும் என்பதல்ல என் வாதம்.

அதன் பின்னிருக்கும் புரிதல் இன்றைக்கிருப்பது போல் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றுதான் குறிப்பிடுகிறேன்.

Thekkikattan|தெகா said...

உங்களின் வாதத்தினை என்னால் முழுதுமாக புரிந்து கொள்ள முடிகிறது, முகுந்தம்மா. இருப்பினும், அது போன்ற தனி மனித நிலையில் உணர்ந்த விசயங்களை வெறும் வாக்கியமாக ஒரு அகண்ட கம்பளத்தனமாக முன் வைக்கும் பொழுது அதனை அவரவர்களின் வளர்ச்சிற்கு ஏற்ப புரிந்து கொள்கிறோம்.

அது எந்தளவிற்கு இன்றைய இந்த புற வயமான தேவைகளை நிறைவேத்தி கொடுக்க வல்லதாக அமைந்து விடவில்லைதானே.

//அவை எல்லாம் இன்னும் அறிந்து கொள்ளும் அளவு நம்முடைய அறிவு வளரவில்லை.//

மேற் கூறியது போலவே எல்லா விடயமுமே இங்குதான் புதையுண்டு இருக்கிறது. அதனை விடாது தேடி வெளிக் கொணர வேண்டுமெனில் முற்று முழுதாக ஏதோ ஒரு சக்திதான் இயக்குகிறது என்ற மூடிய நிலையில் நம்மை தேக்கிக் கொண்டால் இன்று நமக்கு கிடைத்திருக்கும் இன்றைய அனைத்து சாத்தியங்களும் நிகழ்ந்திருக்காமலேயே போயிருக்கும், அல்லவா? தனி மனித நிலையில் வள்ளுவரோ, அவ்வை பிராட்டியோ தன்னுள்ளே நிகழ்த்திய தேடல் வேட்கையே கூட அவர்களை தனிப்பட்ட நிலையில் அமைதி கொண்டவர்களாகவும், மனிதம் நேசிப்பவர்களாகவும் அமைத்திருந்தால் கூட அது அவர்களின் உழைப்பே!

ஆனால், அவர்கள் கூறிய விசயங்கள் அனைத்தையிம் எந்த சந்தர்ப்பத்திலும் உள்வாங்கப்படாமல், சுய உழைப்பையிம், தேடலையிம் தொடங்கிக் கொள்ளாமல் நாம் உறங்கிப் போவதில் யாருக்குமே லாபமில்லாமலேயே போயி விடுகிறதே.

//இருவரும் தண்டவாளத்தின் இரு கோடுகள் போல பயணித்து கொண்டிறுப்போம்...//

இது மாதிரி சொல்லி விலகிப் போவதில்தான் பெரும் அபாயமிருக்கிறது. அப்படியாகத்தான் நூற்றாண்டுகள் தோரும் தவறாகவே உள்வாங்கப்பட்ட சித்தாந்தங்கள், கோட்பாடுகள் அவரவர்களுக்கு எட்டிய மாதிரி திரிக்கப்பட்டு ”சேது” அவர்கள் குறிப்பிட்ட மாதிரி அத்தனை பிளவுகளுக்கும் காரணமாகி அதன் நிலை இழந்து காலவதி ஆகிப் போன மாதிரி ஆகிவிட்டது. இதன் மீதியை நான் சேது பின்னூட்டம் வழியாக பேசுகிறேன் :) ....

Ravichandran Somu said...

இந்த தகவல் எனக்கு புதிது என்பதால் பொறுமையாக வார இறுதியில் படிக்கலாம் என்று எண்ணி படிக்க வந்தால்... மக்கள் பின்னூட்டத்தில் ஒரு கதகளியே ஆடியிருக்காங்க:) நான் ஒரு நாள் லீவு போட்டுத்தான் படிக்கனும் போலிருக்கு:(

எம்.எம்.அப்துல்லா said...

நம்பூரு பயபுள்ள (தெ.கா) இம்புட்டு அறிவா இருக்குறது சந்தோஷமாகீது :))

Anna said...

Thanks heaps Dharumi sir and Mukund amma. That meant alot.

"எனக்கு நிறைய நேரம் தோனும் கேள்விகள் எல்லாம் தமிழில் எப்படி எழுதுவது என்று தெரியாததால் எனக்குள்ளே மக்கி போயிருக்கின்றன."

எனக்கும் அதே பிரச்சனையே. அதுவும் A/L science தமிழிலேயே இலங்கையில் படித்திருந்தும் A/L க்குப் பின் அச்சொற்களை ஒருபோதும் பயன்படுத்தவில்லை என்பதால்அநேகமான முன் தமிழில் படித்த‌ அறிவியற் சொற்களே மறந்து விட்டது. :(

"ஆனால் கையேடு அவர்களின் தமிழ் அசர வைக்கிறது."

I second that.

Capra வின் புத்தகத்தைப் பற்றிய மிக விரிவான ஆய்வை இக்கட்டுரையும் கொடுக்கிறது.

Santhosh said...

Intha mathiri post podratha vittu.. Kathai Kavithai ellam thevaya?

கையேடு said...

காப்ராவின் புத்தகத்தைச் சிறப்பாக விமர்சனம் செய்கிறது அனாலிஸ்ட்டின் சுட்டி... சுட்டிக்கு நன்றிங்க அனாலிஸ்ட்.

அப்போ இதோட தற்காலிகமா முற்றும் போட்டுகலாமா.. ??.. :)

உமர் | Umar said...

//அப்போ இதோட தற்காலிகமா முற்றும் போட்டுகலாமா.. ??.. :) //

மிகவும் அருமையான அறிவியல் உரையாடலை மேற்கொண்ட கையேடு, The Analyst, தெகா, முகுந்த் அம்மா மற்றும் வருண் ஆகிய அனைவருக்கும் என் வணக்கங்களும், நன்றியும். மீண்டும் இதுபோன்ற உரையாடல்கள் நடைபெறும் நாட்களை எதிர்பார்க்கின்றேன்.

Thekkikattan|தெகா said...

தவறு - இன்னும் விரிவான உரையாடல் மேலும் பயனுள்ளதாக ஆக்கியிருக்கும். நன்றி!
**********************

தருமி - நீங்க கொடுத்த சுட்டி வளர்ந்த, வளரும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது.
*************************

ஜோதிஜி,

//ஒரு மாதமாக இது போன்ற நிறைய நல்ல பதிவுகள் நல்ல விமர்சனங்களோடு பகிர்ந்து கொள்வதைப் பார்க்கும் இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்று இதில் பதில் அளித்த ஒவ்வொருவரையும் கேட்க தோன்றுகிறது.//

அப்படியா நினைக்கிறீங்க. இந்தச் சூழல் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டேதான் இருக்கு. இருந்தாலும், ratio கொஞ்சம் சமச்சீரற்ற தன்மையில இருக்கிறதுதான் பிரச்சினை. திறந்த நிலையில் கிடையாதா, உரையாடலுக்கு வாய்ப்பே இல்லாமா போயிடறது. நன்றி, ஜி!

Thekkikattan|தெகா said...

வருண் - நீங்களும் மேற்கொண்டு சில விசயங்களை வெளிக் கொண்டு வர காரணமானதிற்கு என்னுடைய நன்றிகள்!

********************

சேது - உங்களது பாராட்டுக்களை பெற்றுக் கொண்டோம் :).

//இன்றைய கால கட்டத்தில் கடவுள்,மதம் மற்றும் பிறவும், மனிதர்களை அடக்கி ஆள்வதற்கும், பிரித்தும், அடித்துக் கொண்டும் வாழ்வதற்கான ஒரு அடி பணியும் சாதனமாகத் தான் பயன் படுத்தப் படுகிறது. அது தேவையா? அதை ஆதரிக்க வேண்டுமா அல்லது தனிமைப் படுத்த வேண்டுமா?//

மிக முக்கியமான கேள்வி. இன்றைய கால கட்டத்தில ஒரு கிரகமாக நாம் well informed இனமாகத்தான் இருக்கிறோம்; ஒரு விலங்கு இன பின்னணியில் வைத்து பேசும் பொழுது. நம்முடைய இருத்தலின் சூழல் தெரியும். அதனைத் தொடர்ந்து இருக்கும் நிச்சயமற்ற தன்மை, ஒரு 2000 வருடங்களுக்கு முன்பாக இருந்த மனிதன் இன்று நாம் இல்லை பலபடிகள் மேலேறி வந்திருக்கிறோம். இருப்பினும் நாம் இன்னும் அந்த ‘காட்டுமிராண்டித் (நாடுகளுக்கிடையே போர் நடாத்தி)’தனத்திலே இருந்து வெளிவந்துவிட்டதாக தெரியவில்லையே. அதன் பின்னணியில் சமூக-பொருளாதார காரணங்கள் இருந்தாலும் பிரதானமாக நான் அவதானித்து வருவது இந்த மதங்கள் சார்ந்ததும், தன்னை படைத்த கடவுளை இவர்கள் காப்பாற்றும் நிலையிலும் ஆயிப்போனதாலே ‘கடவுள் கான்செப்டே’ தன் அடிப்படை நோக்கமே இழந்து நிற்கிறது.

அப்போ நீங்க கேட்ட கேள்வியை அழுத்தமாக ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ள வேண்டும்.... ஆதரிப்பதா - தனிமை படுத்துவதா??

//அதே முன்னோர் தான் 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்றனர். ஆனா எங்கே கூடி வாழ முடிகிறது. எல்லா விதத்திலும் பிரித்து வைக்கக் கூடிய சாதனமா கடவுள், சாதி, மதம் எல்லாம் இருக்கு.//

இப்போ எங்கே ‘கூடி’ வாழுறாங்க, கூடி கூடி விரட்டி, அடிச்சிக்கிட்டுதான் வாழுறாங்க :))

Thekkikattan|தெகா said...

வெட்டிக்காட்டாரே,

// நான் ஒரு நாள் லீவு போட்டுத்தான் படிக்கனும் போலிருக்கு//

மெதுவா வைச்சிப் படிங்க. என்ன அவசரம். நம்மோட நோக்கம் நம்ம குழந்தைகளுக்கு வித்தியாசமான படிப்புசார் தளங்களை அறிமுகப்படுத்துவது ரொம்ப இயல்பா பயமுறுத்தாமே. அவ்வளவுதான். எஞ்சாய்!!
*******************

வாங்க அப்துல்லா,

//நம்பூரு பயபுள்ள (தெ.கா) இம்புட்டு அறிவா இருக்குறது சந்தோஷமாகீது :))//

ஹிஹிஹி... அது இப்போதான் தெரியுமா ;)) - மண்டை வீங்கி வெடிச்சிரும் போலிருக்குங்க. வாசிப்பிற்கு நன்றிங்க அப்துல்லா!
*********************

The Analyst,

இந்தப் பதிவில நீங்கதான் ’ஸ்டாரு’ அடிச்சு விளையாண்டுட்டீங்க :).

// முன் தமிழில் படித்த‌ அறிவியற் சொற்களே மறந்து விட்டது. :(//

கவலையை விடுங்க. அது போன்ற அறிவியல் சார்ந்த தமிழ்ச் சொற்களை ஞாபக பேங்கில இருந்து மீட்டெடுக்கணும்னா தமிழ் பாட நூல்கள் இந்தத் தளம் நான் இங்கே கொடுப்பதற்கு முன்பாக பரிசோதித்துப் பார்த்தேன், அப்பொழுது டவுன் என்று நினைக்கிறேன். திறக்க வில்லை. ஆனால், அங்கு நீங்கள் மேல்நிலை பள்ளி அளவிலான அத்தனை பாடப் புத்தகங்களையிம் தமிழில் படிக்கக் காணலாம். It helps a big time in keeping up with things... :)

//"ஆனால் கையேடு அவர்களின் தமிழ் அசர வைக்கிறது."

I second that.//

அவரு ஒரு புத்தகமே இது சார்ந்து போடுற அளவிற்கு தயார் ஆகிட்டு வாராருங்க :)...

நீங்கள் வழங்கிய அனைத்து சுட்டிகளுக்கும் மிக்க நன்றி, நிறைய விசயம் புதிதாக இந்தப் பதிவின் மூலமாக எனக்கு கிடைச்சது.

CorTexT (Old) said...

செய்தியை ஏற்கனவே படித்தும் பார்த்தும் இருந்தாலும் தமிழில் படிப்பதும் ஒரு சுகம் தான்! நன்றி தெகா! பின்னூட்டங்கள் அனைத்தையும் முழுமையாக படிக்கவில்லை என்றாலும் எனது சில எண்ணங்கள்:

ஒரு காலத்தில் உயிருள்ளவைகளுக்கு ஒரு மாயமான உயிர் சக்தி (its latest version is spark) உள்ளது என்று மனிதன் நினைத்தான். ஆன்மா என்ற கருத்தும் அப்படியே வந்திருக்கலாம். இன்று நாம் அறிந்து கொண்டது: உயிர் என்பது தொடர்ந்து நிகழும் ஒருவகை சிக்கலான வேதிவினைகளின் தொகுப்பு. அதற்கு எந்த மாய சக்தியும் தேவை இல்லை. அதில் பல பாகங்களை இன்று செயற்கை செய்ய முடியும்; நாளை மற்றவையும் முடியலாம். அதற்கு ஒருவகை மாய சக்தி தேவை என்று இன்றும் கூறுவோர், அதன் சிக்கலமைப்பில் இன்னும் தடுமாறுபவர்களே (அப்படிபட்ட பல மருத்துவ நண்பர்கள் எனக்கு உண்டு. அவர்கள் வெளிப்பாடு (Emergence) பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். ஆனால், வெளிப்பாடு முற்றிலும் விளங்க கணிதம், கணினியியல், இயற்பியல் போன்ற அறிவு தேவைபடுகின்றது. அவர்கள் உயிரியல் படித்தவர்கள்)


மதம், கடவுள் பற்றி பேசுபவர்கள் பல்வேறு விசயங்களை பலவாறு பேசி குழப்பி கொள்கின்றனர். அனைத்து மதநூல்களையும் எழுதியது மனிதன். அவற்றில் நல்லதும் கெட்டதும், அறிவும் கற்பனையும் கலந்தே உள்ளது. இன்றைய காலகட்டத்திற்கு அதில் எந்த உலகமகா யாருக்கும் தெரியாத அறிவு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அறிவியல் கண்டுபிடிப்பில் ஏதாவது ஒன்று சிறிதேனும் ஒத்து போனால், உடனே என் மதநூலில் அது ஏற்கனவே இருக்கு என்று பீற்றி கொள்வதை தவிர. இதை அனைத்து மதத்தினரும் செய்கின்றனர். எல்லாம் Nostradamus மாதிரியான கண்டு பிடிப்புகள் தான். அறிவு என்பது சும்மா சரியா தவறா என்று சொல்வதற்கு மட்டுமல்ல; ஒன்றின் பண்புகள், செயல்பாடுகள், கார-காரியங்கள் பற்றி தெரிவதும் அதை எப்படி மாற்றலாம், பயன்படுத்தலாம் என்பதும், அதன் மூலம் புதியவற்றை கண்டுகொள்வதும் (புவியீர்ப்பு விசை மூலம் புதிய கோள்களை அறிந்தது, Anti-matter, De Broglie waves அறிந்தது போல்) தான்! உன் மதநூலில் இன்று தெரியாத புதிய அறிவு ஏதாவது இருந்தால் அதை உலகிற்கு சொல்லுங்கள், பயன்படும் (உன் மதநூலை ஒருமுறை கூட நீ முழுவதுமாக படிக்கவில்லை என்பது என்கு தெரியும். நீ புரிந்து படித்தாயா என்பது வேறு விசயம்); எல்லாம் தெரிந்த பிறகு பொருத்தம் பார்க்கும் Nostradamus கண்டுபிடிப்புகள் தேவையில்லை.

நமக்கு தெரியாதது பல உண்டு. அதிலும் இவ்வுலகின் மூலம் ஒரு ஆழ்ந்த புதிர் தான். ஆனால் அதை கடவுள் படைத்தார் என்பது ஒரு விடையே அல்ல. ஏனெனில் இப்பொழுது ஒன்றுக்கு பதில் இரண்டு புதிர்கள். கடவுள் என்பது யார்? அவர் எங்கிருந்து வந்தார்? இதை எப்படி படைத்தார்? ஏன் படைத்தார்? நிதானமாக யோசித்து பார்: கடவுள் என்பது நீ எந்த புதிரை விளக்க நினைக்கின்றாயோ அதை விட மிகப் புதிரானது.

http://icortext.blogspot.com/2008/12/blog-post_02.html

Indian said...

A meaningful post and fantastic exchange of thoughts. Well done guys. Kudos to all that particpated in the discussion.

Admittedly, some of the replies went over my head. I would need some more iterations of reading to digest them.

வருண் said...

***கடவுள் என்பது யார்? அவர் எங்கிருந்து வந்தார்? இதை எப்படி படைத்தார்? ஏன் படைத்தார்? நிதானமாக யோசித்து பார்: கடவுள் என்பது நீ எந்த புதிரை விளக்க நினைக்கின்றாயோ அதை விட மிகப் புதிரானது.***

கடவுளை உருவாக்கியவன் மனிதன்னே வச்சுக்குவோம்.

* ஏன் உருவாக்கினான்?

அவனுக்கு கடவுள் (கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்) தேவைப்பட்டது. அதனால்தான் உருவாக்கினான்.

* கடவுள் ஏன் தேவைப்பட்டார்?

மனிதன், பலஹீனமானவன். திடீர்னு தன் அன்புக்குரியவர்கள ஒரு விபத்திலோ, கேன்சர் வந்தோ இழக்கும்போது, அவர்களால் அந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதைத் தாங்கிக்கொள்ளும் சக்தி இல்லை! உதவி தேவை! மனச்சாந்தி தேவை. ட்ரக் எடுக்காமல் தூக்கம் தேவை. நம்பிக்கை தேவை. ஒரு அர்த்தமில்லாத முடிவு, விளக்க முடியாத முடிவில் எந்த மீனிங்கும் இல்லை. ஆனால் கடவுள் என்கிற ஒரு "கற்பனை" யால் அவனுக்கு அர்த்தமுள்ள ஒரு முடிவாக அதை அவன் கற்பனைத்திறனால் மாற்றமுடியுது.

* கர்மாவாக இருக்கலாம்

* முன் ஜென்மத்தில் செய்த பாவம்

* சொர்க்கம், நரகம்.

இப்படி பலவிதமாக உருவாக்கி மனச்சாந்தி அடைந்தான் மனிதன்.

இதிலென்ன தப்பு? People have fantasies, imagination. Nobody lives just with FACTS. I mean NOBODY including you! So, you fantasize which will never happen, you imagine which you could never achieve, way off from reality. So what is the big deal if people imagine about God? Esp such fantasies help them get PEACE which you CAN NEVER PROVIDE them?

I dont see a problem with that! The concept of God is needed and that is why created. There is no puzzle here. Because life is more puzzling that God. The way life ends is much more puzzling that concept of God! or NOT?

வருண் said...

***I dont see a problem with that! The concept of God is needed and that is why created. There is no puzzle here. Because life is more puzzling that God. The way life ends is much more puzzling that concept of God! or NOT?**

This should read as,

I don't see a problem with that! The concept of God is needed and that is why created. There is no puzzle here. Because life is more puzzling than God. The way life ends is much more puzzling than that of concept of God! or NOT?

CorTexT (Old) said...

கடவுள் என்பது மனிதன் தன் மனவியல் காரணங்களுக்காக உருவாக்கிய ஒன்று என்பதை ஏற்று கொள்ளும் போது இருவித வாதங்களுக்கு இடையே உள்ள பெரும்பான்மையான முரண்பாடுகள் தீர்ந்து போகின்றன. இப்பொழுது மற்றவற்றை அறிவுப்பூர்வமான முறையில் எளிதாக அனுகமுடியும்.

உயிர்/வாழ்கை கடவுளை விட புதிரானதா?
உயிரை பற்றி அறிய பரிணாமம், வேதியில், உயிரியல், வேதி-உயிரியல், அறிவியல் முறைகள் என பலவகை அறிவு தேவைப்படுகின்றது. ஆனால் கடவுளை குழந்தைகள் கூட புரிந்து கொள்ளும். ஆக உயிர் கடவுளை விட புதிரானது என்று தோணும். இது வெறும் குழந்தைதனமான தவறு (kind of tautological error). இது நம் மூளையின் பலவீனம். அறிவியல் கார-காரியங்களின் படி பார்த்தால், கடவுள் மிக மிக மிகப் புதிரானது. உண்மையில் அது புதிர் என்று சொல்லும் அளவிற்கு கூட தகுதியான விளக்கம் அல்ல ("It is not even wrong").

//The way life ends is much more puzzling//
இதிலுள்ள புதிர் என்ன? விளக்கவும்.

கடவுளில் பல நன்மைகள் உண்டு. அதை நம்புவதில் என்ன தப்பு?
அதில் நன்மைகள் மட்டுமிருந்தால் அது சரிதான்; அதைப் பற்றி நாம் பேசவே தேவையில்லை. அதில் பல தீமைகளும் உண்டு என்பதே. சாராயம், புகை பிடித்தலிலும் நன்மைகள் உண்டு; ஆனால் அது தற்காலிகமானது; அது பல தீமைகளையும் கொண்டது. கடவுளின் நன்மைகளும் அப்படியே. ஒரு காலத்தில் அறியாமையில் அடிமைப்பட்ட மனிதன் இன்னும் மீண்டு வர போராடி கொண்டுள்ளான். கடவுளை விட பல நல்ல புதிய மனவியல் முறைகள் உண்டு; மேலும் புதியவற்றை நாம் கண்டறிய முடியும். ஆனால், அதை உண்மைக்கு எதிராக சென்று அடையமுடியாது என்பது என் கருத்து.

http://icortext.blogspot.com/2010/08/blog-post.html

வருண் said...

***//The way life ends is much more puzzling//
இதிலுள்ள புதிர் என்ன? விளக்கவும்.***

Life is NOT fair lot of times.

Let me go with few examples here.

1) Someone is doing research on mustard gas to check the toxicity. He injects a rabbit in small amounts first (tortures) and studies the toxicity for the benefit of humans. Finally he gives a dosage that kills the rabbit. He does not care about the pain the rabbit goes through. Nobody does.

Who gave the right to the bloody human beings to kill a poor rabbit like this? I wonder. I would not like to experimented like that. I dont want a rabbit to be experimented like that either. But human beings do the worst things for their benefits.

2) Someone neuter or sterilize his dog and keep the dog impotent but he loves sex. He cant live without sex but he controls the dog.

What is all these nonsenses human beings doing?

Please explain! Thanks.

I will take you to the next level of more complex questions after you give me satisfactory explanation here!

-to be continued

Thekkikattan|தெகா said...

தமிழில் தனது கருத்தை வைத்தால் ஆங்கிலம் படிக்க சிரமப்படுபவர்களும் புரிந்து கொண்டு தங்கள் அறிந்ததையிம் பகிர்ந்து கொள்ள முடியிம். வருண், முயற்சித்துப் பாருங்கள்!

கணினி மாற்றினால் தமிழ் எழுதி கிடைக்காததால் ஆங்கிலத்தில் தட்டச்ச நேர்ந்தால் நிறைய தளங்கள் அப்படியே தமிழ் எழுதி மென்பொருள் நிறுவப்படாமலேயே நேரடியாக தட்டி வெட்டி ஒட்டலாம்.

எல்லாருக்கும் உங்க கருத்து போகணும்னா, தமிழில் எழுதுங்க!

Thekkikattan|தெகா said...

ஓர் இனத்தின் வெற்றிகரமான ’இருத்தல்’ அது இயற்கையில் எப்படியாக தன்னை நிருவிக் கொள்கிறது என்பதனைப் பொருத்தே அமைகிறது.

அந்த வகையில் டைனோசர்களிலிருந்து, இன்றைய பூனை (canidae) இனங்களில் வரும் சிங்கம், புலி, சிறுத்தை வகையராவிலிருந்து, இன்னும் சிறியளவில் இயங்கி வரும் அனைத்து ஜீவராசிகளும் இயற்கையமைவில் ஏதோ ஒரு முறையில் உணவுச் சங்கிலியையிம், தனது இருப்பின் பொருட்டான சமச்சீர் தன்மையையிம் (Prey-predator relationship, demographical control etc.,) நன்கே பராமரித்து வாழ்ந்தாலே ஒழிய அவைகள் பரிணாம ரீதியில் வாழ தகுதியற்றதாகி பின் தங்கி மாண்டொழிந்து போகலாம்.

அது போன்றதே புது புது விதமான வியாதிகளின் பெருக்கத்தினையொட்டி நாமும் நம் இருப்பை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள தன்னைச் சுற்றி உள்ள இயற்கையமைவுகளை ஓரளவிற்கு sensible வழியிலே பயன் படுத்தி ஒரு வெற்றிகரமான இனமாக தலையெடுப்பது இயற்கை ரீதியாகவே மிக இயல்பாக அமைந்தது.

புலி ஒரு மான் குட்டியியை விரட்டிச் சென்று கவ்விக் கொள்கிறதெ என்று அந்த மான் குட்டியை நாம் ஒவ்வொரு முறையிம் காப்பாதி விடுகிறோம் என்றால், அங்கே நாம் இயற்கையின் வழித் தோன்றலுக்கு குறுக்காக நின்று மான்களின் பெருக்கத்தை வளர்த்து, புலிகளின் இருப்பை கேள்விக்கு உட்படுத்துவதாக அமைந்து போகும். அதுவே இது போன்ற கேள்விகளுக்கும் பதிலாகவும் அமையலாம்.

உயிர்களை கொள்வதே பாவம் என்றால் நாம் சுவாசிப்பதை உடனடியாக நிப்பாட்டிக் கொள்வதுதான் நிரந்தர விடுதலைக்கான வழி... :-)

Anna said...

Thanks Heaps Theka! The site still says that its under construction, but will definitely check it out when it becomes active!

Anna said...

Just after the previous comment I googled it to make sure that the link is correct. You are missing "www". :) The site is active. It's cool. Thank you so much.

வருண் said...

***உயிர்களை கொள்வதே பாவம் என்றால் நாம் சுவாசிப்பதை உடனடியாக நிப்பாட்டிக் கொள்வதுதான் நிரந்தர விடுதலைக்கான வழி... :-)***

இதென்ன வாதம்???

அந்த முயலை சித்ரவதை பண்ணாமல், நாயை ஆண்மையிழக்க வைக்காகாமல் வாழவிட்டால், மனித இனம் எல்லாம் செத்துரும்னு சொல்றீங்களா?

ஆமா நம்ம வாழ்த்து என்னத்தை கிழிக்கப்போறோம்?

Thekkikattan|தெகா said...

//இதென்ன வாதம்???//

கேக்கவே கஷ்டமா இருக்கா? சரி, இந்த இயற்கை படைப்பில் தாவரங்களிலிருந்து, நுண்ணுயிரிகளிலிருந்து, கரப்பான் பூச்சி, கொசு வரைக்கும் எல்லாமே பல்கிப் பெருகி தன்னினத்தை தக்கவைத்துக் கொள்ளவே போராடி வருகிறது. நாம் அவைகளை ஏன் உண்டு, கொன்று, கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள எத்தனிக்கிறோம்.

’கொல்லாமை’ என்பது எந்தளவிற்கு நடைமுறை சாத்தியம் என்று விளக்க முடியுமா? நாம் வாழும் அமெரிக்காவில் பல விலங்குகளையிம் ஒரு குறிப்பிட்ட எண்ணளவில் வேட்டையாடுவதற்கு வருடந்தோரும் லைசென்ஸ் கொடுக்கிறார்கள், ஏன் என்று தெரியுமா? அதனில் பல பாலூட்டிகளும் அடக்கம் (மான், முயல், காயோட்டி, பாசம், நரி etc.,) ஏன் அப்படியாக வலிந்து சென்று கொள்வதனைப் போன்று இரக்கமற்று செய்கிறார்கள்.

பின்னாலில் ஒரு பதிவாக கொண்டு வர எண்ணமிருக்கிறது; அங்கே இதன் பொருட்டு விளக்கமாக பேசுவோம்.

//ஆமா நம்ம வாழ்த்து என்னத்தை கிழிக்கப்போறோம்?//

அது எனக்கே தெரியாம நிகழ்ந்திருச்சு. எனவே குறைந்தபட்சம் எனக்கு மன நிறைவாக இருக்குமாறு திளைத்து, சந்தோஷித்து, துக்கப்பட்டு வாழணும்னு மண்டையை வைச்சிட்டு வாழ்கிறேன். பெரிசா என்னாத்தை கிழிச்சோம்னா, இங்கே எந்த உயிரினமும் பெரிசா கிழிப்பது கிடையாது. எனவே நானும் ஒரு பாக்டீரியா, காட்டெருமை மாதிரி மனுச உயிரி :) ...

பாக்டீரியா, காட்டெருமை தற்கொலை பண்ணிக்குமா? ;)

Thekkikattan|தெகா said...

The Analyst said...

Just after the previous comment I googled it to make sure that the link is correct. You are missing "www". :) The site is active. It's cool//

அப்படிங்களா? நான் wwwபோட்டு இணைக்கும் பொழுது அது என்னோட தளத்திற்கே எடுத்திட்டு வந்துச்சு. பொறகு http://போட்டு முயற்சி பண்ணேன் இணைப்பு சரியான முகவரியை காமிச்சிச்சு ஆனா உடைந்த பகுதியா இருந்திருக்கு. ஹ்ம்ம்ம்... எனிவே, அங்கே அடிப்படை அறிவியல் சொற்களைக் காணக் கிடைக்கலாம்.

Enjoy, Analyst! மேலும் கலக்கப் போறீங்கன்னு சொல்லுங்க :))

CorTexT (Old) said...

நான் ஏதோ மரணத்தை பற்றி அலசுகின்றீர்கள் என நினைத்தேன். நீங்கள் நன்நெறி முறைகளை பற்றி பேசுகின்றீர்கள். (உயிரின் அடிப்படை அறிவியல் பற்றிய) இப்பதிவிற்கும் இதற்கும் ஏன் முடிச்சு போட்டீர்கள் என தெரியவில்லை. இருப்பினும் என்னுடைய 2 பைசா கருத்துக்கள்.

இயற்கையில் நியாயமானது என்று எதும் பெரிதாக இருப்பதாக தெரியவில்லை. ஆனாலும் மனிதன் முடிந்தவரை நியாயத்திற்காக போராடலாம். ஆனால் பல நன்நெறி முறைகள் எளிதான சரி-தவறு என்று இரண்டை மட்டுமே கொண்ட கருப்பு-வெள்ளை அல்ல என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். பல கோடி குழந்தைகளை போலியோவிலிருந்து காப்பாற்ற சில குரங்குகளை, ஏன் மனிதர்களையே சோதனைக்கு உட்படுத்தினோம். இது சரியா தவறா? இன்று பலவகையான சோதனைகளுக்கு எலிகள் பயன்படுத்த படுகின்றன. இவை பெரும்பாலும் மரபியல் தொழிற்நுட்பத்தில் சோதனைகளுக்காகவே உருவாக்கப் பட்டவை. இயற்கையில் இந்த மரபணுக்களை கொண்ட எலிகள் உருவாவதில்லை. இதை பயன்படுத்தி செய்யபடும் ஆராய்ச்சிகள் பல கோடி மக்களுக்கு உதவுகின்றது. இது சரியா தவறா? (சோதனையில் சாக போகின்ற எலி என்றாலும், அதை எதற்காகவது பட்டினி போட வேண்டும் என்றால், அதற்கு விளக்கமும் தேவையான அனுமதி பெறவேண்டும். அது தெரியுமா?)

காட்டில் வாந்த நரியை வீட்டில் அடைத்து செயற்கை-தெர்வு-முறையில் (Artificial Selection) நாயாக மாற்றி மனிதன் பயன்படுத்தி கொண்டது சரியா தவறா? காட்டி மாட்டை வீட்டு மாடாக மாற்றி அதை ஏர் இழுக்க செய்வது சரியா தவறா? செயற்கை-தெர்வு-முறையில் பசுவை பால் கொடுக்கும் இயந்திரம் போல் (அதனால் தாங்க முடியாத, ஒழுங்காக நடக்க முடியாத பெரிய முளைகாம்புகளுடன்) ஆக்கியது சரியா தவறா? (சும்மா அதை கும்பிட்டுவிட்டு, அதன் மூத்திரத்தை குடித்து விட்டால் எல்லாம் சரியாகி விடுமா?)

Anna said...

CorTexT

"இயற்கையில் நியாயமானது என்று எதும் பெரிதாக இருப்பதாக தெரியவில்லை. ஆனாலும் மனிதன் முடிந்தவரை நியாயத்திற்காக போராடலாம். ஆனால் பல நன்நெறி முறைகள் எளிதான சரி-தவறு என்று இரண்டை மட்டுமே கொண்ட கருப்பு-வெள்ளை அல்ல என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்."

நன்றாகக் கூறியுள்ளீர்கள்.

"பசுவை பால் கொடுக்கும் இயந்திரம் போல் (அதனால் தாங்க முடியாத, ஒழுங்காக நடக்க முடியாத பெரிய முளைகாம்புகளுடன்) ஆக்கியது சரியா தவறா?"

Exactly. I think இப்போது எம்மால் செய்யகூடியதெல்லாம் மனிதன் உண்ணும் மிருகங்களின் வாழ்க்கைமுறையையும் அவற்றின் இனப்பெருக்க முறைகளையும் அவற்றை கொல்லும் முறைகளையும் மிக மனிதாபிமான முறையில் செய்வதே.

வருண் said...

***இயற்கையில் நியாயமானது என்று எதும் பெரிதாக இருப்பதாக தெரியவில்லை. ஆனாலும் மனிதன் முடிந்தவரை நியாயத்திற்காக போராடலாம்.***

யாருடைய நியாத்திற்கு? மனிதனுக்கு நியாயம்னா என்னனு தெரியுமா? அது என்ன அது???

வருண் said...

***CorTexT said...

நான் ஏதோ மரணத்தை பற்றி அலசுகின்றீர்கள் என நினைத்தேன்.***

முயல் மரணத்தை பத்தித்தான் கேட்டேன். நான் சாகிறதுக்கும் முயல் சாகிறக்கும் என்ன பெரிய வித்தியாசம்??? ரெண்டுமே விலங்குகள்தான். ஒருவருடைய் உணர்ச்சிகளைப்பத்தி இன்னொருவருக்கு கவலையில்லை!

வருண் said...

***மனிதாபிமான முறையில் செய்வதே.***

மனிதாபிமானம்???

யாரு அதை வரையுறுக்கிறது???

சும்மா காமெடி பண்ணாதீங்க! :))))

வருண் said...

***இயற்கையில் நியாயமானது என்று எதும் பெரிதாக இருப்பதாக தெரியவில்லை. ***

Sterilizing a dog is NATURAL? According to who? YOU??

வருண் said...

***CorTexT said...

நான் ஏதோ மரணத்தை பற்றி அலசுகின்றீர்கள் என நினைத்தேன். நீங்கள் நன்நெறி முறைகளை பற்றி பேசுகின்றீர்கள். (உயிரின் அடிப்படை அறிவியல் பற்றிய) இப்பதிவிற்கும் இதற்கும் ஏன் முடிச்சு போட்டீர்கள் என தெரியவில்லை. இருப்பினும் என்னுடைய 2 பைசா கருத்துக்கள்.

இயற்கையில் நியாயமானது என்று எதும் பெரிதாக இருப்பதாக தெரியவில்லை. ஆனாலும் மனிதன் முடிந்தவரை நியாயத்திற்காக போராடலாம். ஆனால் பல நன்நெறி முறைகள் எளிதான சரி-தவறு என்று இரண்டை மட்டுமே கொண்ட கருப்பு-வெள்ளை அல்ல என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். பல கோடி குழந்தைகளை போலியோவிலிருந்து காப்பாற்ற சில குரங்குகளை, ஏன் மனிதர்களையே சோதனைக்கு உட்படுத்தினோம். இது சரியா தவறா? இன்று பலவகையான சோதனைகளுக்கு எலிகள் பயன்படுத்த படுகின்றன. இவை பெரும்பாலும் மரபியல் தொழிற்நுட்பத்தில் சோதனைகளுக்காகவே உருவாக்கப் பட்டவை. இயற்கையில் இந்த மரபணுக்களை கொண்ட எலிகள் உருவாவதில்லை. இதை பயன்படுத்தி செய்யபடும் ஆராய்ச்சிகள் பல கோடி மக்களுக்கு உதவுகின்றது. இது சரியா தவறா? (சோதனையில் சாக போகின்ற எலி என்றாலும், அதை எதற்காகவது பட்டினி போட வேண்டும் என்றால், அதற்கு விளக்கமும் தேவையான அனுமதி பெறவேண்டும். அது தெரியுமா?)

காட்டில் வாந்த நரியை வீட்டில் அடைத்து செயற்கை-தெர்வு-முறையில் (Artificial Selection) நாயாக மாற்றி மனிதன் பயன்படுத்தி கொண்டது சரியா தவறா? காட்டி மாட்டை வீட்டு மாடாக மாற்றி அதை ஏர் இழுக்க செய்வது சரியா தவறா? செயற்கை-தெர்வு-முறையில் பசுவை பால் கொடுக்கும் இயந்திரம் போல் (அதனால் தாங்க முடியாத, ஒழுங்காக நடக்க முடியாத பெரிய முளைகாம்புகளுடன்) ஆக்கியது சரியா தவறா? (சும்மா அதை கும்பிட்டுவிட்டு, அதன் மூத்திரத்தை குடித்து விட்டால் எல்லாம் சரியாகி விடுமா?)***

I brought up TWO specific scenarios. You left them both and start talking about how drinking "piss"! LOL

Can't you answer a question STRAIGHT without bringing up all these nonsense??

Unknown said...

இதுவரை ஒவ்வொரு உயிரினமும் தான் வாழ்வதற்கு இன்னொரு உயிரை தின்று தான் வாழ்கிறது. இதில் யாரும் வேறுபட முடியாது.

தாவரங்களும் உயிரினம் தான்.

தாவரங்களை தின்றும் உயிரினம் விலங்குகள் முயல், மான், மாடு, மனிதன் ...

விலங்குகளைத் தின்று வாழும் உயிரினம் புலி, சிங்கம், மனிதன், ...

இதுவரை ஒன்றை அழித்து தான் இன்னொன்று வாழ்ந்து வருகிறது.

மனிதர்களைப் பிரித்து ஆள்வதற்கு வேண்டுமானால் இதற்க்கு சாதி மத சாயம் பூசி பாவ புண்ணியம் எல்லாம் விவாதம் செய்யலாம். ஆனால் இயல்பில் நடப்பது வேற.

வருண் said...

****Sethu said...

இதுவரை ஒவ்வொரு உயிரினமும் தான் வாழ்வதற்கு இன்னொரு உயிரை தின்று தான் வாழ்கிறது. இதில் யாரும் வேறுபட முடியாது.

தாவரங்களும் உயிரினம் தான்.

தாவரங்களை தின்றும் உயிரினம் விலங்குகள் முயல், மான், மாடு, மனிதன் ...

விலங்குகளைத் தின்று வாழும் உயிரினம் புலி, சிங்கம், மனிதன், ...

இதுவரை ஒன்றை அழித்து தான் இன்னொன்று வாழ்ந்து வருகிறது.

மனிதர்களைப் பிரித்து ஆள்வதற்கு வேண்டுமானால் இதற்க்கு சாதி மத சாயம் பூசி பாவ புண்ணியம் எல்லாம் விவாதம் செய்யலாம். ஆனால் இயல்பில் நடப்பது வேற.***

கொன்றால் பாவம் தின்றால் போச்சு ங்கிறது ஓ கே ங்க.தட் இஸ் லஃப் சைக்கிள்!

நான் இங்கே சொல்றது வேற விசயம். சித்ரவதை செய்றதைப்பத்தி. இது கொஞ்சம் வேற மேட்டர்! :)

Thekkikattan|தெகா said...

வருண்,

உம்முடைய கேள்விகளுக்கு இப்பொழுது நான்கு பேர் சேதுவையிம் சேர்த்து பதில் சொல்லி விட்டார்கள். என்ன விளங்கவில்லை என்று கூறுங்கள். ஏன் கொஞ்சம் கூட புலிகள், சிங்கங்கள் இப்படி துரத்தி, துரத்தி ஒன்றுமறியாத இளங் குட்டிகளை துடிக்க, துடிக்க கொல்கிறது. அவைகள் இது போன்று அவைகளுக்குள்ளரயே உரையாடல் செய்து கொள்ளுமா?

நாம் செய்து கொள்ளுகிறோமே, அதுவே ஒரு இனமாக நாம் ஏனைய உயிரினங்களின் இருத்தலை வைத்துக் கொள்வதும், துடைத்துக் கொள்வதற்குமான அத்தனை சாத்தியங்களையிம் பெற்றவர்களாகி விட்டோம் விரும்பியோ, விரும்பாமலோ.

இங்கு அனலிஸ்ட் சொன்ன மாதிரி நம்மால் முடிந்தததெல்லாம் அந்த பொறுப்பை உணர்ந்து... I think இப்போது எம்மால் செய்யகூடியதெல்லாம் மனிதன் உண்ணும் மிருகங்களின் வாழ்க்கைமுறையையும் அவற்றின் இனப்பெருக்க முறைகளையும் அவற்றை கொல்லும் முறைகளையும் மிக மனிதாபிமான முறையில் செய்வதே.

வருண் said...

***வருண்,

உம்முடைய கேள்விகளுக்கு இப்பொழுது நான்கு பேர் சேதுவையிம் சேர்த்து பதில் சொல்லி விட்டார்கள்.***

நாலு பேரும் பதில் சொல்லல. உங்களுக்கு கேள்வியே புரியலை. நான் லைஃப் சைக்கிள் பத்தி இங்கே பேசவில்லை.

நான் பேசுறது மனிதன் தாந்தான் பெரிய "மேதாவி"னு நெனைத்துக்கொண்டு தன்னைவிட பலஹீனமான உயிர்களை இரக்கமே இல்லாமல் சித்ரவதை செய்வதைப்பத்தி. இதெல்லாம் உங்களுக்கு புரியிற மாதிரியே தெரியலை. இதெல்லாம் புரியிறவங்ககிட்டத்தான் நான் இதைப்பத்தி பேசனும், விவாதிக்கனும். உங்ககிட்ட பேசி என்ன செய்ய?

சரி, நீங்க தொடருங்கள். இன்னும் 10 பேரு எதையாவது பதில்னு சொல்லீட்டு, வருணுக்கு தமிழும்தெரியலை ஆங்கிலமும் தெரியலைனு ஒரு முடிவுக்கு வருவீங்க! இதெதுக்கு வம்பு! :))))

தயவுசெய்து தொடருங்கள் உங்க பாதையில்! :)

CorTexT (Old) said...

//யாருடைய நியாத்திற்கு? மனிதனுக்கு நியாயம்னா என்னனு தெரியுமா? அது என்ன அது???//

கண்டிப்பாக உங்களுடைய நியாயத்திற்கு அல்ல. கண்டிப்பாக உங்களுக்கு தெரிவதாக தெரியவில்லை. மொத்தத்தில் இந்த கேள்விகள் எல்லாம் எதற்கு என்றே தெரியவில்லை. மனதில் கேள்வின் நாயகன் என்றோ "மேதாவி" என்றோ நினைத்து கொண்டு கேட்கின்றீர்களா என்றும் தெரியவில்லை.

இவை யாருக்கும் தெரியாத கேள்விகள் அல்ல. இது போன்ற தற்சார்புடைய விசயங்கள், கேள்விகள் பல இருக்கு. அவை தற்சார்புடையவை என்பதால், ஒருவருக்கொருவர், ஒவ்வொரு உயிரினத்திற்கு... ஏற்ப அது மாறுபடும். அதனால் முடிந்தவரை வெளிச்சார்புடைய ஒரு வரையரையை ஏற்படுத்தலாம் (மற்ற உயிர்களையும் கணக்கில் கொண்டு தான்). நம்முடைய சட்டதிட்டங்களெல்லாம் அப்படி உருவான ஒன்று தான்.
http://ecortext.blogspot.com/2009/11/roots-of-beliefs.html (கீழே உள்ள இரண்டாம் பகுதியை பார்க்கவும்; அதை நான் இன்னும் தமிழ் படுத்தவில்லை, மன்னிக்கவும்). சிலர் அவர்களுக்கு பிடிக்காத ஒன்றை சொல்லி விட்டால், உடனே யாருக்கும் உதவாத கடைகோடிக்கு சென்று உச்ச-தத்துவம் (Extreme Philosophy) பேசுவார்கள்.

மனிதன் எதை, ஏன் நியாயமாக நினைக்கின்றான் என்பதை பரிணாம், நரம்பியல் கொண்டு விளக்க முடியும். எப்படிப்பட்ட நெறிமுறைகள் மனிதனுக்கும் மற்ற உயிர்களும் ஏற்றதாக இருக்கலாம் என்பதை பல வல்லுனர்கள் இப்பொழுது அந்த அறிவின் படி யோசிக்கின்றனர். வேண்டுமென்றால் அவற்றை படித்து பாருங்கள். பரிணாமத்தில் tit-for-tat strategy என்ற ஒன்று உள்ளது; முடிந்தால் அதையும் படியுங்கள்.

வருண் said...

***//யாருடைய நியாத்திற்கு? மனிதனுக்கு நியாயம்னா என்னனு தெரியுமா? அது என்ன அது???//

கண்டிப்பாக உங்களுடைய நியாயத்திற்கு அல்ல. கண்டிப்பாக உங்களுக்கு தெரிவதாக தெரியவில்லை. ***

அதாவது நியாம்னா உங்களுக்குத்தான் தெரியும். மத்தவன் எல்லாம் நீங்க சொல்றதைக்கேட்டு, ஆமா, ஆமா, ரொம்ப நல்லா பேசுறீங்க னு சொல்லனுமா?

***மனிதன் எதை, ஏன் நியாயமாக நினைக்கின்றான் என்பதை பரிணாம், நரம்பியல் கொண்டு விளக்க முடியும்.***

மறுபடியும், பரிணாம் யாருடைய தியரி? சுயநல்த்தில் ஊறிய மனிதனுடைய தியரி.

Please give me a decent scientific article reference in Science or nature where EVOLUTION justifies what is RIGHT and WRONG as you CLAIM here.

I challenge you here. I dont think you can. Even if you, it can be disputed easily by several others!

CorTexT (Old) said...

//EVOLUTION justifies what is RIGHT and WRONG as you CLAIM here.//

நீங்கள் பதில் எழுதும் வேகத்தை பார்த்தால், நிதானமாக படிப்பதாகவும் தெரியவில்லை, யோசிப்பதாகவும் தெரியவில்லை (ஒரு வேளை நீங்கள் மேதாவியாக இருக்கலாம். அப்படி என்றால் மன்னித்து விடுங்கள்).

"மனிதன் எதை, ஏன் நியாயமாக நினைக்கின்றான் என்பதை பரிணாம், நரம்பியல் கொண்டு விளக்க முடியும்" - இங்கு பரிணாமம் எதையாவது நியாயப்படுத்தி இருக்கின்றது என்றா உள்ளது? ஏன் சிலவற்றை நாம் நியாயமாக நினைக்கின்றோம் என்பதை விளக்க முடியும் என்றல்லவா உள்ளது. ஏன் குழந்தைகள், குரங்குகள் கூட சில நியாய முறையை எதிர்பார்க்கின்றன? அவை எங்கிருந்து வந்தது?

மனிதனின் ஒவ்வொரு சிந்தனைகளின் (நியாய அநியாயங்கள் உட்பட) அடிப்படை காரணம் பரிணாமம். அது நம் மூளையில் எழுதப்பட்டுள்ளது. அப்படியே நாம் செயல்படுகின்றோம் (சில ஆதி மனிதன் சிந்தனைகளின் தொடர்ச்சியாக இருக்கலாம் - மெம்கள்). பிறகு என்ன, அவை வானத்திலிருந்து தானாக குதித்து வந்ததென்று நினைக்கின்றீர்களா?

// I challenge you here.//
அதெல்லாம் எதற்கு, நீங்களே வெற்றி பெற்றதாக வைத்து கொள்ளுங்கள். என் நோக்கம் அதுவல்ல.

Anna said...

"நான் பேசுறது மனிதன் தாந்தான் பெரிய "மேதாவி"னு நெனைத்துக்கொண்டு தன்னைவிட பலஹீனமான உயிர்களை இரக்கமே இல்லாமல் சித்ரவதை செய்வதைப்பத்தி."

இப்படிச் செய்வது சரியென்று யாரும் இங்கு சொல்லவில்லையே.

அநேகமான நாடுகளில் மிருகங்களின் சித்திரவதைக்கெதிராகச் செயற்படும் சங்கங்களும் சட்டங்களும் உண்டு. அவர்கள் இயலுமான வரை முயன்று கொண்டுதான் இருக்கிறார்கள். அதோடு மக்களும் தாங்கள் சாப்பிடும் உணவு எங்கிருந்து எப்படி வருகிறதென யோசித்து, விலங்குகளை மனிதாபிமானமின்றி வளர்த்து, பெருக்கி, உணவாக்கும் இடங்களிலிருந்து வரும் உணவுகளை தவிர்க்கத் தொடங்கின் இச்சித்திரவதைகள் குறையலாம். ஆராய்ச்சிக‌ளுக்குச் வில‌ங்குக‌ளைப் ப‌ய‌ன்ப‌டுத்த‌வும் CorText கூறியது போல் ப‌ல‌ க‌ட்டுப்பாடுக‌ள் உள்ள‌ன‌. The ethics committee normally consists of many people of several walks of life who judge the application as critically as possible before giving the go ahead.

மனிதன் இயற்கையிலேயே ஒரு அனைத்துமுண்ணி. எல்லா மனிதரும் தாவரவுண்ணியாக வேண்டுமென நினைக்கிறீர்களா?

வருண் said...

***நம்முடைய சட்டதிட்டங்களெல்லாம் அப்படி உருவான ஒன்று தான்.***

நம்ம யாரு இங்கே? நாட்டுக்கு நாடு சட்டம் மாறுது.

Have you heard of Michael Vick's dog fight? Tell me why was he punished?

வருண் said...

***மனிதன் இயற்கையிலேயே ஒரு அனைத்துமுண்ணி. எல்லா மனிதரும் தாவரவுண்ணியாக வேண்டுமென நினைக்கிறீர்களா?***

நான் தாவரவுண்ணி கெடையாது. அதுக்காக நான் செய்வதெல்லாம் தவிர்க்க முடியாத ஒண்ணு என்றோ சரி என்றோ சொல்வதில்லை!

You can always put yourself in an accused stand and analyze the truth! Because we are just cheap human beings!

வருண் said...

***CorTexT said...

//EVOLUTION justifies what is RIGHT and WRONG as you CLAIM here.//

நீங்கள் பதில் எழுதும் வேகத்தை பார்த்தால், நிதானமாக படிப்பதாகவும் தெரியவில்லை, யோசிப்பதாகவும் தெரியவில்லை (ஒரு வேளை நீங்கள் மேதாவியாக இருக்கலாம். அப்படி என்றால் மன்னித்து விடுங்கள்).

"மனிதன் எதை, ஏன் நியாயமாக நினைக்கின்றான் என்பதை பரிணாம், நரம்பியல் கொண்டு விளக்க முடியும்" - இங்கு பரிணாமம் எதையாவது நியாயப்படுத்தி இருக்கின்றது என்றா உள்ளது? ஏன் சிலவற்றை நாம் நியாயமாக நினைக்கின்றோம் என்பதை விளக்க முடியும் என்றல்லவா உள்ளது. ஏன் குழந்தைகள், குரங்குகள் கூட சில நியாய முறையை எதிர்பார்க்கின்றன? அவை எங்கிருந்து வந்தது?

மனிதனின் ஒவ்வொரு சிந்தனைகளின் (நியாய அநியாயங்கள் உட்பட) அடிப்படை காரணம் பரிணாமம். அது நம் மூளையில் எழுதப்பட்டுள்ளது. அப்படியே நாம் செயல்படுகின்றோம் (சில ஆதி மனிதன் சிந்தனைகளின் தொடர்ச்சியாக இருக்கலாம் - மெம்கள்). பிறகு என்ன, அவை வானத்திலிருந்து தானாக குதித்து வந்ததென்று நினைக்கின்றீர்களா?

// I challenge you here.//
அதெல்லாம் எதற்கு, நீங்களே வெற்றி பெற்றதாக வைத்து கொள்ளுங்கள். என் நோக்கம் அதுவல்ல.**

I wonder what will you do if you were selected as one of a jurors and asked to judge an accused. Will you keep lecturing about what humans do and so? Or you have any ability to see what is what?

Your lectures dont help for concluding anything. it just goes on and on and gets nowhere!

கோவி.கண்ணன் said...

நல்ல பகிர்வு.

கோவி.கண்ணன் said...

கையேடு கலக்கல்

Anna said...

"நான் தாவரவுண்ணி கெடையாது. அதுக்காக நான் செய்வதெல்லாம் தவிர்க்க முடியாத ஒண்ணு என்றோ சரி என்றோ சொல்வதில்லை!"

நான் தாவரவுண்ணியே, எனது பெற்றோரும் தாவரவுண்ணிகளாதலால் நான் அவ்வாறே வளர்க்கப்பட்டேன். ஆனால் எனது துணைவன் ஒரு அனைத்துமுண்ணி. ஒரு போதும் நான் தாவரங்களை மட்டுமே சாப்பிடவேண்டுமெனக் கட்டாயப்படுத்தியது கிடையாது. ஆனால் மாமிசமோ முட்டையோ வாங்கும் போது free range ஆக மட்டுமே வாங்கச் சொல்வேன் and அதோடு என்னால் இயலுமானளவு பசுப் பாலால் செய்யப்படும் உணவுகளைத் தவிர்க்கவும் தொடங்கியுள்ளேன் as I don't like some of the things they do + have issues with one of the major dairy company here. It's the least I can do.

மாமிசம் உண்பது தவறல்ல. Unethical bredding, mass production and inhumane treatment of animals are wrong.

வருண் said...

மறுபடியும் சொல்றேன் நான் வெஜிட்டேரியன், நான் வெஜிட்டேரியன் பத்தி இங்கே பேசவில்லை.

I am told by an american that the tastiest veal is made by growing a baby cow in a cage!

http://www.britishmeat.com/veal.html

-to be contd

வருண் said...

///Solitary Confinement
The veal crate is a wooden restraining device that is the veal calf's permanent home. It is so small (22" x 54") that the calves cannot turn around or even lie down and stretch and is the ultimate in high-profit, confinement animal agriculture.(1) Designed to prevent movement (exercise), the crate does its job of atrophying the calves' muscles, thus producing tender "gourmet" veal.

"Feeding" Time
The calves are generally fed a milk substitute intentionally lacking in iron and other essential nutrients. This diet keeps the animals anemic and creates the pale pink or white color desired in the finished product. Craving iron, the calves lick urine-saturated slats and any metallic parts of their stalls. Farmers also withhold water from the animals, who, always thirsty, are driven to drink a large quantity of the high-fat liquid feed.

Because of such extremely unhealthy living conditions and restricted diets, calves are susceptible to a long list of diseases, including chronic pneumonia and "scours," or constant diarrhea. Consequently, they must be given massive doses of antibiotics and other drugs just to keep them alive. (The antibiotics are passed on to consumers in the meat.) The calves often suffer from wounds caused by the constant rubbing against the crates.

A Fate Worse Than Death
About 14 weeks after their birth, the calves are slaughtered. The quality of this "food," laden with chemicals, lacking in fiber and other nutrients, diseased and processed, is another matter. The real issue is the calves' experience. During their brief lives, they never see the sun or touch the Earth. They never see or taste the grass. Their anemic bodies crave proper sustenance. Their muscles ache for freedom and exercise. They long for maternal care. They are kept in darkness except to be fed two to three times a day for 20 minutes. The calves have committed no crime, yet have been sentenced to a fate comparable to any Nazi concentration camp.///

This is as ABUSE by Human ANIMALS! I dont want to hear the lecture of why humans do this nonsense and blah blah BS. I am saying it is WRONG!

தருமி said...

வருண்
//The concept of God is needed and that is why created. There is no puzzle here. //

அட .. இந்த தத்துவம் வந்திருச்சின்னா பிறகு என்ன கடவுள், மதம் ... எல்லாம் போயே போயிரும்னு நானும் ஏற்கெனவே சொல்லியாச்சே. கொஞ்சம் அதையும் பாருங்களேன். லின்க் கொடுத்திருக்கேன்.

தருமி said...

வருண்,

நீங்கள் பேசியவைகளில் எனக்கு "மிகவும் பிடித்த" வரிகளைக் கொடுத்துள்ளேன்.

Can't you answer a question STRAIGHT without bringing up all these nonsense??

உங்களுக்கு புரியிற மாதிரியே தெரியலை. இதெல்லாம் புரியிறவங்ககிட்டத்தான் நான் இதைப்பத்தி பேசனும்,

தயவுசெய்து தொடருங்கள் உங்க பாதையில்! :)

அதாவது நியாம்னா உங்களுக்குத்தான் தெரியும். மத்தவன் எல்லாம் நீங்க சொல்றதைக்கேட்டு, ஆமா, ஆமா, ரொம்ப நல்லா பேசுறீங்க னு சொல்லனுமா?

I challenge you here


Have you heard of Michael Vick's dog fight? Tell me why was he punished? (எனக்கு இது தெரியாதுங்க; சொல்லிக்கொடுங்களேன்)

நல்லா எழுதுறீங்க ... so sad to go thru your comments and language. better you mind them a little more.

CorTexT (Old) said...

//I wonder what will you do if you were selected as one of a jurors and asked to judge an accused. Will you keep lecturing about what humans do and so? Or you have any ability to see what is what?

Your lectures dont help for concluding anything. it just goes on and on and gets nowhere!
//

எதுக்கு இப்படி குரங்கு மாதிரி அங்கே இங்கேனு இந்த மண்டை தாவுதுன்னு ஆச்சர்யமா இருக்கு. அறிவியல் பற்றிய பத்தியில் விளக்கம் கொடுக்காமா, இவரு Jury duty பார்ப்பாரு. Jury duty-ல உட்கார்ந்துகிட்டு அப்படியே தாவி, செத்து போனவனுக்கே மரண தண்டை வாங்கி தருவாரு. உனக்கு இந்த lecture வேண்டாமா? யார் உன்னை பிடித்து இங்கு உட்கார வைத்தது? முதலில் உங்க அம்மாகிட்ட போய், நாகரிகமாக எப்படி அடுத்தவரிடம் உரையாட வேண்டும் என்பதை கற்று கொள்.

நான் உன்னை போன்ற மேதாவி அல்ல, என் முடிவுகளை அடுத்தவரிடம் திணிக்க. நான் இங்கு உரையாடுவது, கருத்துக்களை பகிர்ந்து கொள்ள மட்டுமே.

CorTexT (Old) said...

மனிதனின் எண்ணங்கள் தான் எப்படி ஓடுகின்றன. ஆர்சினிக்கை காதலிக்கும் பாக்டீரியத்திற்கும் - நாயை ஆண்மையிழக்க வைப்பதற்கும் எப்படி முடிச்சு விழுந்தது; ஆச்சர்யம் தான். இது ஒவ்வொருவருடைய மூளையின் நரம்பணு-வலை இணைத்த எண்ணங்களின் சிந்தனை வலை.

ஆர்சினிக்கை காதலிக்கும் பாக்டீரியம் --> மற்ற கிரகவாசிகள் --> மதவாதிகள் --> சாமி --> உயிருக்கு Spark வேண்டும் --> வெதி-உயிரியல் செய்திகள் --> கடவுள் உண்டு/இல்லை --> கடவுள்/மதம் நெறிபடுத்தும் ஒரு வழிமுறை --> மூட நம்பிக்கைகள் --> இயற்கை = கடவுள்? --> கடவுள் தருக்க முறை --> மரண புதிர் --> நாயை ஆண்மையிழக்க வைத்தல் --> நியாயங்கள் --> சித்திரவதை --> மேதாவி மனிதன் --> பரிணமான நியாயம் --> challenge --> அனைத்துமுண்ணி vs. தாவரவுண்ணி --> Jury duty --> Mind your language --> lecture --> முடிவு vs. பகிர்தல் --> சிந்தனை வலை.

Anna said...

"ஆர்சினிக்கை காதலிக்கும் பாக்டீரியம் --> மற்ற கிரகவாசிகள் --> மதவாதிகள் --> சாமி --> உயிருக்கு Spark வேண்டும் --> வெதி-உயிரியல் செய்திகள் --> கடவுள் உண்டு/இல்லை --> கடவுள்/மதம் நெறிபடுத்தும் ஒரு வழிமுறை --> மூட நம்பிக்கைகள் --> இயற்கை = கடவுள்? --> கடவுள் தருக்க முறை --> மரண புதிர் --> நாயை ஆண்மையிழக்க வைத்தல் --> நியாயங்கள் --> சித்திரவதை --> மேதாவி மனிதன் --> பரிணமான நியாயம் --> challenge --> அனைத்துமுண்ணி vs. தாவரவுண்ணி --> Jury duty --> Mind your language --> lecture --> முடிவு vs. பகிர்தல் --> சிந்தனை வலை."

LOL :)

Thekkikattan|தெகா said...

//ஆர்சினிக்கை காதலிக்கும் பாக்டீரியம் --> மற்ற கிரகவாசிகள் --> மதவாதிகள் --> சாமி --> உயிருக்கு Spark வேண்டும் --> வெதி-உயிரியல் செய்திகள் --> கடவுள் உண்டு/இல்லை --> கடவுள்/மதம் நெறிபடுத்தும் ஒரு வழிமுறை --> மூட நம்பிக்கைகள் --> இயற்கை = கடவுள்//

அது வரைக்கும் விடயங்கள் ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கித்தான் ஓடியிருக்கு. அந்த ஸ்பார்க் விசயம் ரொம்ப நாளாவே பேசணும்னு இருந்தது. இங்கே ஓரளவிற்கு தொட்டு பேசியிருக்கோம்.

அதுக்குபிறகான ஓட்டம் மண்டை தாவித் தாவி எங்ககொங்கோ கூட்டிக்கிட்டு போயிருக்கு. சம்பந்தமில்லாத கோபம் சில நேரத்தில sit back and enjoy ரகத்தை சார்ந்ததுங்கிறதாலே ரசிச்சிட்டு
இருந்தேன் :)

@கார்டெக்ஸ்ட் - இப்படித்தான் அப்ஸ்ராக்ட் எழுதணும்னு அழகா முழுப்பதிவிலிருந்து ஆரம்பிச்சு பூரா பின்னூட்டத்தையிம் சுருக்கி கத்துக் கொடுத்திருக்கீங்க -ஹிஹிஹி. Nice! ;-)

வருண் said...

***எதுக்கு இப்படி குரங்கு மாதிரி அங்கே இங்கேனு இந்த மண்டை தாவுதுன்னு ஆச்சர்யமா இருக்கு. ***

நான் கேட்ட கேள்வி, மிருகங்களின் வலிக்கும் உணர்வுகளுக்கும் மனிதன் ஏன் முக்கியத்துவம் கொடுப்பதில்லை? தனக்குனு வரும்போது தீண்டாமையை எதிர்க்கிறான், ஆண்மா ஆத்மா என்று எதையெதையோ உளருகிறான், ஆனால் இன்னொரு உயிரை சித்ரவை பண்ணுவதை இவனால் உணர முடியவில்லை??

உம்முடைய பதிலில் ஒரு பகுதி!!

/// சும்மா அதை கும்பிட்டுவிட்டு, அதன் மூத்திரத்தை குடித்து விட்டால் எல்லாம் சரியாகி விடுமா? ///

இந்த மாதிரி மூடத்தனமான எதையோ பதிவில் எழுதி உளறிவிட்டு, ஏதோ நான் குரங்கு மாதிரி தாவுறேன் என்ற குற்றச்சாட்டு வேற??

கேக்கிற கேள்விக்கு புரிந்துகொண்டு பதில் ஒழுங்கா சொல்லத்தெரியாத ஒரு ஆளிடம் என்னதை விவாதம் செய்றது? உங்கலால் இன்னொரு உயிர் படும் வலியைக்கூட புரிஞ்க்க முடியலை, பக்கம பக்கமா பரிணாம் வைத்து அதை விளக்குவேன் இதை விளக்குவேன் கிழிப்பேன்னு பேசுறீங்க?

தேவையே இல்லாமல் "குரங்கு"னு சொல்றது, "மூத்திரம்' குடிப்பதை பத்தி பேசுறது? இதுதான் உமது விதாதம்!

We have "mismatch" here. You need to find bunch of 'like-minded-geniuses" who think just like you are (who lack feelings for other lives and compassion) and appreciate each other. அதுதான் உங்களுக்கு நல்லது.

வருண் said...

****ஆர்சினிக்கை காதலிக்கும் பாக்டீரியம் --> மற்ற கிரகவாசிகள் --> மதவாதிகள் --> சாமி --> உயிருக்கு Spark வேண்டும் --> வெதி-உயிரியல் செய்திகள் --> கடவுள் உண்டு/இல்லை --> கடவுள்/மதம் நெறிபடுத்தும் ஒரு வழிமுறை --> மூட நம்பிக்கைகள் --> இயற்கை = கடவுள்? --> கடவுள் தருக்க முறை --> மரண புதிர் --> நாயை ஆண்மையிழக்க வைத்தல் --> நியாயங்கள் --> சித்திரவதை --> மேதாவி மனிதன் --> பரிணமான நியாயம் --> challenge --> அனைத்துமுண்ணி vs. தாவரவுண்ணி --> Jury duty --> Mind your language --> lecture --> முடிவு vs. பகிர்தல் --> சிந்தனை வலை.****


//The way life ends is much more puzzling//
***இதிலுள்ள புதிர் என்ன? விளக்கவும்.***

நீர்தானே விளக்கச் சொன்னீர், பாக்டீரியாவிலிருந்து தாவி???

வாழ்க்கை முடிவது பற்றி உள்ள புதிரைப் பற்றி கேள்வி கேட்டது நீர்.

சரி, நீங்க எந்த லெவெலில் இருக்கீங்கனு பார்க்க நான் சில மனித கட்டுமிராண்டித்தனத்தை சுட்டிக்காட்டினேன்.

அதை எப்படி உம்மால் பார்க்க முடிகிறது என்று புரிந்துகொள்ள, உடனே நீங்க "மூத்திரம் குடிப்பதை" ப்த்டி பேச ஆரம்பிச்சுட்டீங்க!

இதிலிருந்து உம்மால் சில விசயங்களை உணரமுடியாத பரிதாப நிலையில் இருக்குறீர் என்று தெரிந்து கொண்டேன்.

எதுக்கெடுத்தாலும் பரிணாம நரம்பியல் வச்சு விளக்கலாம் விளக்கலாம் என்றும். இல்லனா சம்மந்தா சமம்தம் இல்லாம மூத்திரம் குடிப்பதை பத்தி பேசுற
உங்கள்ட்ட நான் என்ன எழவை விவாதிக்கிறது?

Unknown said...

ALL:

Please don't get into personal fight.

I would leave it as it is. I would Leave everyone to have their own opinion.

Words can be easily manipulated and twisted, will go on endless.

Again don't get into personal.

Thekkikattan|தெகா said...

இல்லனா சம்மந்தா சமம்தம் இல்லாம மூத்திரம் குடிப்பதை பத்தி பேசுற
உங்கள்ட்ட நான் என்ன எழவை விவாதிக்கிறது//

வருண், எல்லாம் புரிதலில் உள்ள இடைவெளிதான் காரணம். ஏன் மனதை வருத்திக் கொள்கிறீர்கள்?! Cortext சொல்ல வந்த ’மூத்திரம் குடிப்பது’ நம்மோட ethical stand and being compassionate இடத்திற்கு இடம், சூழலுக்கு சூழல் மாற்றியமைத்து கொள்ளும் முறையை சுட்டிக் காமிக்கும் எண்ணத்தில் முன் வைத்திருக்கிறார் என்று நான் புரிந்து கொண்டேன். நீங்க எப்படி புரிந்து கொண்டீர் என்று எமக்கு தெரியவில்லை.

விலங்குகள் வதை பற்றியா இங்கே பேச வந்தோம்?

மட்டையடி அடிக்கணும்னா எனக்கும் தான் பேசத் தெரியுது... அதுக்கு ஒரு உதாரணம் பாருங்க. கடவுள் எல்லா உயிர்களையிம் படைத்தார் சோபித்து வாழ, ஆனா சில பேருக்கு கேன்சர் மாதிரியான உயிர் போகும் வலிகளைத் தரக் கூடிய வியாதியை ஏன் வழங்கி வாழும் பொழுதே செத்து, செத்து, வதைப் படுத்தி சாவடிக்கிறார்? ஏன் சுனாமி மாதிரி இயற்கைச் சீற்றத்தை உண்டு பண்ணி குஞ்சு, குளுப்பான்னு பார்க்காம லட்சங்களில் மனித உயிர்களை பறிக்கிறார்... அவருக்கு இரக்கமே இல்லையா, அப்போ?

வருண் said...

***வருண், எல்லாம் புரிதலில் உள்ள இடைவெளிதான் காரணம். ஏன் மனதை வருத்திக் கொள்கிறீர்கள்?! Cortext சொல்ல வந்த ’மூத்திரம் குடிப்பது’ நம்மோட ethical stand and being compassionate இடத்திற்கு இடம், சூழலுக்கு சூழல் மாற்றியமைத்து கொள்ளும் முறையை சுட்டிக் காமிக்கும் எண்ணத்தில் முன் வைத்திருக்கிறார் என்று நான் புரிந்து கொண்டேன். ***

அது ரொம்ப இந்த விவாதத்திற்கு அவசியம்? நம்ம?? யார் அது? நான் ஒரு ஆள்தான் எதிர் தரப்பில் இருக்கேன். எனக்கு கடவுள் நம்பிக்கையே இல்லை? மூதிரம் குடிப்பஹ்டி நம்பிக்கை இருக்குனு சொன்னேனா?

Thega: If you want to act as a moderator you need to know who is talking nonsense here. IMHO, it was so unnecessary to bring up ethical bullshit which I dont believe in. Simply taking sides with someone who shares your opinion and fingering at others wont help!

வருண் said...

***Have you heard of Michael Vick's dog fight? Tell me why was he punished? (எனக்கு இது தெரியாதுங்க; சொல்லிக்கொடுங்களேன்)***

திரு தருமி: ந்ம்ம ஊர்ல கோழிச் சண்டை மாதிரி அமெரிக்காவில் நாய்களை சண்ணை போடவிட்டு வேடிக்கை பார்த்தார் இந்த அமெரிக்க ஃபுட் பால் ப்ளேயர், மைக்கேல் விக்!

பிடிச்சு உள்ள போட்டுட்டாங்க! கொஞ்ச நாள் ஜெயில்ல இருந்துட்டு வெளிய வந்தார்! :)

CorTexT (Old) said...

/like-minded-geniuses
//
இப்பொழுது IQ விட EQ அறிவின் முக்கியத்துவம் குறிப்பிடப்படுகின்றது. அதற்கு நிதானம், பக்குவம், முதிர்ச்சி போன்றவையெல்லாம் வேண்டும். உண்மைதான், எனக்கு அப்படிபட்ட geniuses கூடதான் உரையாட/விவாதிக்க விருப்பம். இந்த இணையதள உலகில் முற்றிலும் அப்படி அமைவது கடினம்தான். முடிந்தவரை நாற்றம் வரும் இடங்களிலிருந்து தள்ளிதான் செல்கின்றேன்.

//எதுக்கெடுத்தாலும் பரிணாம நரம்பியல் வச்சு விளக்கலாம்
//
உயிரின் பரிணாம வளர்ச்சி, அண்டத்தின் பரிணாம வளர்ச்சி, யோசனைகளின் பரிணாம வளர்ச்சி (மெம்கள்), ஒரு நிருவனத்தின் பரிணாம வளர்ச்சி, மதத்தின் பரிணாம வளர்ச்சி (Dan Dennett அழகான புத்தகம் எழுதியுள்ளார்), ஏன் மூளை கற்று கொள்ளும் உத்தியிலும் பரிணாம வளர்ச்சி....! நம்முடைய ஒவ்வொரு குறிக்கோள்களும், நடத்தைகளும், எண்ணங்களையும் (சிலரின் எண்ணங்கள் ஏன் குரங்கு மாதிரி அங்கே இங்கேனு தாவுது என்பது உட்பட) எப்படி வந்தது என்று தெரியவேண்டுமானால் பரிணாம பார்வை தேவை. மேலும் உயிரியல் பற்றிய இந்த பதிவில் பரிணாமம் பேசாமல் Juru Duty பற்றியா பேச வேண்டும்?

(மூத்திரம் முக்கிய வியசமாகக் கூடாதென்று அடைப்புக் குறிக்குள் () வைத்திருந்தேன், யாரோ அதை வெளியில் எடுத்து தெருவெல்லாம் தெளித்து விளையாடி கொண்டுள்ளனர். அதை குடிப்போரை அன்றி, மற்றவர்கள் தள்ளி செல்லுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றார்கள்!)

CorTexT (Old) said...

சிந்தனை வலையை கொண்டு ஒரு கதை. தெகா இதை அனுமதிப்பார் என்று நினைக்கின்றேன்.

ஒரு ஊரில் ஒரு பாக்டீரியம் இருந்தது. அதற்கு ஆர்சினிக்கின் மேல் காதல். ஆனால் ஒரு நாய்க்கு பாக்டீரியத்தின் மீது காதல் (ஆமாங்க அதே முக்கோண காதல் கதைதான்). ஒரு நாள், நாயின் இந்த ஒருதலை காதல் ஊருக்கு தெரிந்து விட்டது. இப்படிப்பட்ட காதல் சாமி குத்தமென்று அதன் ஆண்மையை இழக்க வைக்க வேண்டுமென்று மதவாதிகள் கூறினார்கள். கடவுளை நம்பாதவர்களோ, அது மூடநம்பிக்கை என்றும், அப்படிப்பட்ட காதலின் வேதி-உயிரியல், பரிணாம விளக்கங்களை கொடுத்து வாதாடி நாயை காப்பாற்ற பார்த்தார்கள். ஆனால் மதவாதிகளோ, பாக்டீரியம் தாவரமும் அல்ல விலங்கும் அல்ல, பிறகு ஏன் அது அணைத்துண்ணியாக உள்ளது என வாதாடினார்கள். இது என்ன வாதம் என்று கடவுளை நம்பாதவர்கள் குழம்பி போனார்கள். மதவாதிகள் அவர்களின் பெரும்பான்மையை கொண்டு நாயின் ஆண்மையை இழக்க வைத்து விட்டனர். என் பெயரில் இப்படி தவறு செய்கின்றார்களே என்று கடவுளுக்கு கோபம் வந்து, மதவாதிகளை மாட்டு மூத்திரம் குடிக்கும் படி தண்டையிட்டார். நாயிக்கு பதில் மாடா என மதவாதிகள் கடவுளை கேட்க, நீங்கள் குழப்பியது போல் இதுவும் என்று சொல்லி மறைந்து விட்டார். நாயின் இந்த நிலையை கண்ட பாக்டீரியம், ஆண்மையில்லை என்றாலும் பரவாயில்லை என்று நாயை ஆட்கொண்டது. சுபம்.

Indian said...

On second thoughts....

Indian said...

//சிந்தனை வலையை கொண்டு ஒரு கதை.//

LOL

CorTexT (Old) said...

// தெகா...
அந்த ஸ்பார்க் விசயம் ரொம்ப நாளாவே பேசணும்னு இருந்தது.//

நன்று. உங்கள் எண்ணங்களை படிக்க ஆவலாகவும் உள்ளது.

Thekkikattan|தெகா said...

உங்கள் எண்ணங்களை படிக்க ஆவலாகவும் உள்ளது.//

அச்சச்சோ! அதைப் பொருத்தெல்லாம் பெரிய அளவில பேசுற அளவிற்கு என்கிட்ட ஒண்ணுமில்ல. இங்க மக்கள்கிட்டயிருந்து அவர்களின் படிப்பு, ஞான, அறிவியல் விசயங்களைக் கொண்டு எப்படியெல்லாம் கருத்துக்களை வைப்பாங்கன்னு தெரிஞ்சிக்கத்தான்.

அந்த ஸ்பார்க் மேட்டர் என்ன எது வரைக்கும் தெரிஞ்சு வைச்சிருக்கோம்னு புரிஞ்சிக்க. யாராவது ஆரம்பிச்சு வைச்சாக் கூட வசதியா இருக்கும்னு சொன்னேன்... :)

வருண் said...

***//எதுக்கெடுத்தாலும் பரிணாம நரம்பியல் வச்சு விளக்கலாம்
//
உயிரின் பரிணாம வளர்ச்சி, அண்டத்தின் பரிணாம வளர்ச்சி, யோசனைகளின் பரிணாம வளர்ச்சி (மெம்கள்), ஒரு நிருவனத்தின் பரிணாம வளர்ச்சி, மதத்தின் பரிணாம வளர்ச்சி (Dan Dennett அழகான புத்தகம் எழுதியுள்ளார்), ஏன் மூளை கற்று கொள்ளும் உத்தியிலும் பரிணாம வளர்ச்சி....! நம்முடைய ஒவ்வொரு குறிக்கோள்களும், நடத்தைகளும், எண்ணங்களையும் (சிலரின் எண்ணங்கள் ஏன் குரங்கு மாதிரி அங்கே இங்கேனு தாவுது என்பது உட்பட) எப்படி வந்தது என்று தெரியவேண்டுமானால் பரிணாம பார்வை தேவை. ***

* Tell me why all the natural proteins are all made of L-amino acid and none of them using D-amino acid?

Can whatever-evolution can explain this?

Let us talk science and cut your crappy story (that is the worst story I have ever read- my honest opinion LOL!

வருண் said...

I believe genius knows the difference between "enantiomers" (D and L). I am sure he does!

வருண் said...

Thega: YOu can also answer. There is another way to answer by picking one of these #s

1) Yes, I know

2) No, I don't know

3) I dont have a clue!

Now you must answer here! LOL

Thekkikattan|தெகா said...

don't you give up yet...

//3) I dont have a clue!//

I dont have a clue what you are talking about :)

LOLனா என்னான்னே எனக்குத் தெரியாது... :))

சோ, விட்டுடுங்க!! பாவம் பொழச்சிப்போறேன்!

இந்தப் பதிவு நிறைய நல்ல விசயங்களை உள்ளடக்கி இருக்கு. இத்தோட விட்டுருவோம்.

வருண் said...

I dont thin you understand my question yet.

Cortext claims that he can explain everything. I believe him/her.

Now I am asking a simple question. That is, all the natural enzymes and proteins are made of one kind of amino acid called L.

I am asking WHY it is SO?

Why not with D- amino acid at all??? I really dont know the background of people I am talking to. It looks like I can get answer for any question from cotext.

So, I am here to find out the answer for this simple question! :)

CorTexT (Old) said...

//Tell me why all the natural proteins are all made of L-amino acid and none of them using D-amino acid?//

அடுத்த கிளைக்கு தாவியாச்சா? இதையும் பரிணாமத்தில் விளக்க முடியும் என்றாலும், ஒரு பேச்சுக்கு முடியாதென்றே வைத்து கொள்வோம். இதற்கும், பலவற்றை பரிணாமத்தில் விளக்க முடியும் என்பதற்கும் என்ன தொடர்பு. இதை விளக்கினால், அப்பறம் 2+3=5 என்பதை பரிணாமத்தில் விளக்கு என்பாய்.

(//Cortext claims that he can explain everything//
//EVOLUTION justifies what is RIGHT and WRONG as you CLAIM here.//
இப்படியெல்லாம் யார் சொன்னது? பொருமை, நிதானம் வேண்டும் அப்பனே!
)

உங்களுக்கு அந்த கதை பிடிக்க வில்லையா? ஆச்சர்யம் தான்! கதையின் நோக்கம் LOL. அதற்கு நன்றி.

உண்மையிலே சொல்கின்றேன், உங்களை தோற்கடிப்பது என் நோக்கம் அல்ல. மற்றவர் யாருக்கும் அப்படிப்பட்ட நோக்கம் இருப்பதாக தெரியவில்லை.

வருண் said...

CorTexT said...

//Tell me why all the natural proteins are all made of L-amino acid and none of them using D-amino acid?//

அடுத்த கிளைக்கு தாவியாச்சா? இதையும் பரிணாமத்தில் விளக்க முடியும் என்றாலும், ஒரு பேச்சுக்கு முடியாதென்றே வைத்து கொள்வோம்.

Really?

Now I am learning about your HONESTY. LOL

Seriously, Explain me by evolution. I am ready to listen and UNDERSTAND your explanation.

Again I am challenging you CAN NOT explain this by your "evolution" and that you are LYING as your ego seems like BIG!!! LOL

வருண் said...

***அடுத்த கிளைக்கு தாவியாச்சா? இதையும் பரிணாமத்தில் விளக்க முடியும் என்றாலும், ஒரு பேச்சுக்கு முடியாதென்றே வைத்து கொள்வோம்.***

I REPEAT! Explain me, PLEASE, as you claim you CAN!

I am listening...

CorTexT (Old) said...

//you are LYING as your ego seems like BIG//
என் குட்டை வெளிபடுத்தி விட்டீர்கள். நீங்கள் கண்டுபிடித்தது போல் எனக்கு பெரிய ego தான். என் தோழ்வியை ஒத்துக் கொள்கின்றேன். ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு LOL வேண்டாம், வாய் கிழிந்துவிட போகின்றது!

தெகா, இதை இன்னும் தொடர்வதற்கு மன்னிக்கவும். இதுவே இந்த பதிவிற்கு என் கடைசி பின்னூட்டம்.

Thekkikattan|தெகா said...

I REPEAT! Explain me, PLEASE, as you claim you CAN!

I am listening...//

வருண், இப்போ இங்கே என்ன போட்டி நடக்கிதுன்னு இவ்வளவு அவசரம். கொஞ்சம் வும்ம டோன்ன கவனிச்சிப்பாருங்களேன். எவ்வளவு அவசரமிருக்கின்னு மீ... மீ...மீ இங்க யாராவது ‘கேடயம்’ வாங்குற அவசரத்தில இருக்கிறாங்களா?

பல துறை மக்கள கொண்டுவந்துதான் இங்கு கலந்துரையாடல் செஞ்சிட்டு இருக்கோம். ஒரு விசயம் நமக்குத் தெரியுதா அதை எப்படி வைக்கிறோங்கிறதிலும் மேற்கொண்டு இந்தாளோட பேசுவோமா இல்ல கோடி கொட்டிக் கொடுத்தாலும் வேண்டாமய்யான்னு விலகிப் போறதுமிருக்கு, நம்ம தேர்வு செய்ற வார்த்தைகளை வைச்சு... சோ, சும்மா challenge பண்ணுறேன், என்னய வீழ்த்தி காமிங்கிற ரேஞ்செல்லாம் என்னாத்த சொல்ல ‘சின்னப்புள்ளத்’தனமா இருக்கப்போய், வருண்.

வருண் said...

cortext: இந்த கேள்விக்கு பதில், அதாவது இயற்கை ஏன் ஒரு "மிரர் இமேஜ" ஜை ப்ரிஃபெர் பண்ணியது. பண்ணினாலும், அது எப்படி "chiral discrimination" செய்ய முடிந்தது என்பது எனக்குத் தெரிந்த வரை யாருக்குமே இதுவரை தெரியாது.

உங்களுக்கு தெரியும், ஆனா எதுக்குனு விட்டுட்டுப் போறதா சொன்னீங்க.

உங்களால் உண்மையிலேயே விளக்க முடிந்தால், இது ஒரு "Nature" or "Science" paper. நிச்சயம் நீங்க இதை எளிதா பப்ளிஷ் பண்ணிவிடலாம். I am pretty serious here!

அதனாலதான் கேட்டேன். உலகில் உள்ள விஞ்ஞானிகளுக்கெல்லாம் தெரியாதுனு நான் சொல்வது அபத்தம். உங்களுக்குத் நிச்சயம் தெரிந்து இருக்கலாம்.

இந்த டிஸ்கசனை நான் பாஸிட்டிவாகதான் ஆக்கினேன். அதனால்தான் உங்க "விளக்கத்தை" ஆவலுடன் எதிர் பார்த்தேன்.

உங்களுக்கு தெரியலைனா தெரியலலைனு சொல்லி இருப்பீங்க. உங்க நேர்மையை நான் பாராட்டி இருக்ப்பேன், ஆனால் தெரியும் எதுக்கு விளக்க? என்பது உங்களுக்குத் தெரியும் என்றுதான் அர்த்தம். இந்த சப்ஜெக்ட்டை பொறுத்தவரையில் நீங்க கொடுக்கும் விளக்கத்தைப் புரிந்து கொள்ளுமளவுக்கு எனக்கு அறிவு இருக்கு. அதனால்தான் உங்க பதிலை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

Sure, you can take all your time (even life time) and call discuss with experts and eventually, please come here and give the ANSWER ONE DAY. I would really appreciate that.

I wish that day comes soon! :)

வருண் said...

***Thekkikattan|தெகா said...

I REPEAT! Explain me, PLEASE, as you claim you CAN!

I am listening...//

வருண், இப்போ இங்கே என்ன போட்டி நடக்கிதுன்னு இவ்வளவு அவசரம். ***

ஒண்ணும் அவசரமில்லை, நான் என் வாழ்நாள் பூராம் காத்திருக்கத் தயார். மேலே உள்ள என் பின்னூட்டத்தையும் பாருங்க! :)

கையேடு said...

//அது எப்படி "chiral discrimination" செய்ய முடிந்தது என்பது எனக்குத் தெரிந்த வரை யாருக்குமே இதுவரை தெரியாது.//

ஆஹா... என்னங்க இப்படி ஒரு ஆர்வமூட்டும் ஒரு கேள்விய கேட்டுட்டுப் போயிட்டீங்க..

கரிமவேதியல் ஆய்வகங்கள்ள இடஞ்சுழியும் வலஞ்சுழியும் கலந்திருக்கும் மூலக்கூறுகளை எப்படி தனியா பிரிச்செடுக்கிறாங்க.. ஒருவேளை அந்தப் படிநிலைகள்ள இரகசியம் ஒழிஞ்சிருக்குமோ.. முடிஞ்சா இதப்பத்தி தனியா விரிவா எழுதுங்களேன்..

வருண் said...

ஒரு காலத்தில், முதல் முதலா கொலெஸ்டிரால் ஆர் பி வுட்வேர்ட் எழுபதுல சிந்ததைஸ் செய்யும்போது, +/- ரெண்டையும் சேர்த்துத்தான் பண்ணினார். ஆனால் இந்த 40 வருடங்களில் நெறையவே முன்னேற்றம்ங்க.

இப்போலாம் டெஸ்டாஸ்டீரோன் போன்ற ஹார்மோன்களை (+) டெஸ்டாஸ்டீரோன் (100% ப்யூர்), இயற்கையில் உருவாவது மற்றும் (-) டெஸ்டாஸ்டீரோன் (அதனுடைய மிரர் இமேஜ், இயற்கை தயாரிக்காத ஒண்ணு) போன்றவைகளை 100% ப்யூரிட்டியோட குடுவையில் செய்யலாம்.

தலிடோமைட் னு ஒரு ட்ரக் மார்னிங் சிக்னெஸ்க்காக 1950ல சாப்பிட்டார்கள்.முதலில் இந்த ட்ரக்ல ரெண்டு ஆப்டிகல் ஐசோமர்களுமே இருந்தன. இதுல ஒரு ஆப்டிகல் ஐசோமெர் ஹார்ம்லெஸ். அதனுடைய "எனண்டியோமெர்" என்ன செய்ததுனா குழந்தைகளுக்கு "பர்த் டிஃபெக்ட்ஸ்" உண்டுபண்ணுதுனெ ரொம்ப நாள் கழிச்சுத்தான் உணர்ந்தாங்க. இந்த "சனியனால்" பாதிக்கப்பட்டோர் பலர். அதுக்கப்புறம்தான் இந்த ட்ரக்கை நிறுத்தி ரொம்ப கவனமா ஆனாங்க.

இந்த லின்க் பாருங்க!

http://en.wikipedia.org/wiki/Thalidomide

---------------

ஆனால் சில பேசிக்ஸ்தான் ரொம்ப காம்ப்லெக்ஸ். All the enzymatic reactions are in a "chiral environment" ஏன்னா என்சைம் எல்லாமே எல் அமினோ ஆசிட்களை கொண்டது.

முதல்முதலா அதாவது very first L-amino acid எப்படி உருவானது? என்பது UNKNOWN!

Generally scientists are very humble and not arrogant at all because there are SO MANY UNKNOWNS for the experts too. How many "I dont know" everyone says every day?

However, I would not say God made the first L-amino acid! I find that amusing. I would just say, "I dont know".

நான் எதையுமே விளக்க முடியும்னு சொல்வது மடமைங்க! புரியாதது எல்லாம் கடவுளுக்குத் தெரியும் என்பது மடமைதான்!

கையேடு said...

நன்றிங்க வருண்,
நீங்க சொல்றது லேசாப் புரியுது.. இன்னும் கொஞ்சம் உழைக்கணும்னு நினைக்கிறேன் நீங்க சொல்றத முழுசாப் புரிஞ்சிக.

வருண் said...

பொதுவாக எனக்கு அறிவியல் பேசுறதே பயம்ங்க. ஏன் என்றால், ஒருவருக்கு நல்லாத் தெரிந்த ஒண்ணை நான் எடுத்துச் சொல்வது அவ்ருக்கு எரிச்சலைத்தரும். யாருடைய பேக் க்ரவுண்டும் எனக்குத் தெரியாது. தமிழில் எழுதுறதுல உங்க அளவுக்கு எனக்கு திறமையும் இல்லை.

சரி, இப்போ L (-) & D (+) alanine எப்படி இருக்கும். அதுக்கு ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் னு பார்ப்போம்,

உங்க கைகளை வணங்குவதுபோல் சேர்த்து வைங்க, அப்புறம் அதை ஒரு ரெண்டையும் ஒரு ஒரு 5 இன்ச்க்கு பிரிங்க.

இப்போ இடது கையும் வலது கையும் மிரர் இமேஜெஸ். கண்ணாடியில் உங்க இடது கையை உள்ளங்கையை பாத்தால் எப்படித் தெரியுமோ அதுபோல்தான் உங்க வலது கை தெரியும். உங்க இடது கை எல் அமினோ ஆசிட். வலது கை டி அமினோ ஆசிட்.

இப்போ இடது கையை வலது கைமேல் வச்சு,(வணங்குவதுபோல் அல்லாமல் புறங்கைமேல், உள்ளங்கையை வைக்கனும்) பெருவிரலை பெருவிரல்மேல், சுண்டுவிரலை சுண்டுவிரல்மேல் வச்சீங்கனா உங்களால் அப்படி வைக்க முடியாது. அதை super impose பண்ண முடியாது. They are "non superimposable" mirror images!

வருண் said...

அது ரெண்டும் வேற வேற. இதுபோலதான் எல் அலனின் (அமினோ ஆசிட்) மற்றும் டி அலனின். ரெண்டும் பார்க்க ஒரே மாதிரி இருக்கும். ஆனால் they are "non superimposable" mirror images!

இன்னொரு உதாரணம் என்னனா ஒரு இடது கை க்ளவ், வலது கை க்ளவ் எடுத்துக்கிட்டா, உங்க வலது கையை இடது கை க்ளவ் ல ஃபிட் பண்ண முடியாது. இது ரெண்டும் டி, எல் அமினோ ஆசிட் ஐசோமர்கள் போல ஒரே மாதிரி இருக்கும் வேற வேற மூலக்கூறுகள்.

ஆனால் Physical properties all will be the same, ஸ்பெக்ட்ரம் HMR, IR, CMR, மற்றும் Melting point, boiling point எல்லாமே இவை இரண்டுக்கும் ஒண்ணாத்தான் இருக்கும் ஆனால் இவர் இரண்டும் வேற வேற. When you pass a plane polarized light thru this molecules, it can differentiate. That is the only way you could see a difference. :)

If L analine deflects the plane polarized light in left direction, the D-alanin will do it in opposite direction (right).

But when it comes to enzymes, THOSE two (D and L alainie) are completely different. ஏன்னா என்சைம் எல்லாமே ள் அமினோ ஆசிட் (லெஃப்ட் ஹாண்ட் க்ளவ்) ஆல் ஆனவைகள். அவைகளுக்கு D-அலனினும், ல்-அலனினும் சம்மந்தமே இல்லாத ஒண்ணு. They bind completely different manner!

கையேடு said...

விரிவான விளக்கத்திற்கு நன்றிங்க வருண்.

//But when it comes to enzymes, THOSE two (D and L alainie) are completely different. ஏன்னா என்சைம் எல்லாமே ள் அமினோ ஆசிட் (லெஃப்ட் ஹாண்ட் க்ளவ்) ஆல் ஆனவைகள்.//

ம்ம்.. அப்போ இது ஏன்னு ஏதாவது ஹைபோதஸிஸ் இருக்கா.. இல்ல அப்படியே புதிராதான் இருக்கா.

Thekkikattan|தெகா said...

வருண் நீண்ட விளக்கத்திற்கு நன்றி. நிறைய புரிந்து கொள்ள முடிகிறது. இதைத்தான்யா எதிர்பார்க்கிறோம் இங்கே. இதுதான் டோன்...

இப்போ கையேடு கேட்ட அதே கேள்வி ஏன் இந்த L and K அமினோ அமிலங்கள் இப்படி புரியாத புதிராக எதிர் எதிர் திசைகளில் அமையப் பெற்றிருக்கிறது? ஏதாவது கருதுகோள் வைத்திருக்கிறார்களா அது போன்ற அமைவிற்கு? கண்டிப்பா புதிரை அவிழ்க்க முயற்சி எடுத்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

நேத்து ஒரு டாகுமெண்டரி பார்த்தேன் அதில ஒரு mathematical formulaவின் படி இயற்கையின் அத்தனை படைப்புகளும் ஒரு குறிப்பிட்ட அளவீடப்படும் முறையிலேயே அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டுவதாக அந்த டாகுமெண்டரி சென்றது.

எனக்கு ஆர்வமூட்டும் விதமாக அமைந்தது ஒரு மரத்தின் கிளையமைவு எப்படியாக உச்சியை நோக்கி போகப் போக ரிப்ளிகாக அதன் தடிமன் அளவு குறைந்திருந்திருந்தாலும் அமைவு என்னவோ முன் உள்ள கிளையமைவில் அமைந்தது மாதிரி ஒட்டு மொத்த மரத்திற்கும் அமைந்திருப்பதாகவும் அதனைக் கொண்டு ஒரு மரத்தில் எத்தனை இலைகள் இருக்கலாம், அதனில் ஒரு இலையின் கரியமிலா வாயுவின் உட்கிரகிப்பு எவ்வளவாக இருக்கலாமென்று கணக்கிட முடியுமெங்கிற வாக்கில் பேசிக் கொண்டே சென்றார்கள்.

It is truely a mind boggling info. அப்படியாக பார்க்கும் பொழுது ஒரு வனத்தினுள்ள மரங்களின் அடர்த்தியையிம் அவை முழுதுமாக எவ்வளவு கரியமிலாவாயுவை கிரகிக்கக் கூடும் என்பதனை துள்ளியமாக கணக்கிடலாம் என்று அறிந்து கொள்ளும் பொழுது... ம்ம் இன்ரஸ்டிங்க்.

இது போனறு சிந்திக்க சிந்திக்கத்தான் அறிவியலும் விரிந்து கொண்டே செல்கிறது விடைகளை அவிழ்த்துக் கொண்டே... கண்டிப்பாக ஒரு நாள் L and K அமினோ அமிலங்கள் ஏன் இவ்வாறு அமைந்திருக்கிறது என்பதற்கும் விடை கிடைக்கலாம்.

பார்ப்போம்! thanks again!

வருண் said...

இல்லங்க இதெல்லாம் ஒரு 3-டி மாடல் வச்சு பார்த்தால் அழகா நமக்கேப் புரியும்.

எந்த ஒரு என்சைமேடிக் வினையும் அந்த ட்ரக், என்சைம் (ப்ரொட்டீன்) ல போய் ஆக்டிவ் சைட் னு ஒரு இடத்தில் பைண்ட் ஆகும்.

இந்த "மார்னிங் சிக்னெஸ் ட்ரக்கும்" தலிடோமிட்ம் ஒரு ப்ரோட்டீனில் போய் பைண்ட் ஆகும். இப்போ இந்த ட்ரக்ல ரெண்டு ஐசோமெர்ஸ் இரண்டு மூலக்கூறுகள் இருந்ததால் (லெஃப்ட் அண்ட் ரைட் ஹாண்ட் க்ளவ் போல), ஒண்ணு பைண்ட் பண்ணுகிற இடம் (பைண்டின் சைட்) வேறயா இருக்கும், இன்னொன்னு பைண்ட் பண்னுற இடம் வேற யா இருக்கும்.

நீங்க இதை மாடல் செய்து வச்சுப் பார்த்தால் அழகா பார்க்கலாம். ஒண்ணு ஃபிட் ஆவதுபோல இன்னொரு மிரர் இமேஜ் ஃபிட் ஆகாது. ட்ரக் பைண்ட் பண்ணுற பைண்டிங் சைட் மாறும்போது, வினையும் மாறும், எல்லாமே மாறி, நாம் எதிர்பார்க்காத ஒரு விளைவு (கெட்ட விளைவு) வரலாம். அப்படி ஆனதுதான் "பெர்த் டிஃபெக்ட்ஸ்".

இதெல்லாம் நல்லா ஸ்டடி பண்ணீட்டாங்கங்க. If the protein structure known (like HIV protease), then it can be studied easily but sometimes for some studies, the protein structure is not known then people come up with lots of theories. There is something called GABA A receptors, இதில் எங்களுக்கு பைண்டிங் சைட்டே தெரியாது. ஏன் னா ப்ரோட்டீன் ஸ்டக்ச்சர் இன்னும் சரியா தெரியாது. இதை எல்லாம் வருகிற ரிசல்ட்ஸ் வச்சு, யானையை குருடன் தடவுற மாதிரி தடவி ஒரு நல்ல ட்ரக் கேண்டிடேட் தேடி கண்டு பிடிக்க முயலுவோம். இதில் இன்னைக்கு நெனச்சது, நாளைக்கு வேறனு ஆயிடும். :))) Like I said there is lot of unknowns. Lots of surprises. People will just say, "I dont understand what is going on". :) It goes on like that :)

CorTexT (Old) said...

ஆச்சர்யம் தான், ஆனாலும் பொதுஅறிவுக்கு சாதாரணமாக தெரிய வேண்டிய சில விசயங்கள் திரும்ப திரும்ப (Pattern) வருவதை காணலாம். அதை நாம் (மீண்டும்) கண்டுகொள்ள ஒரு நல்ல சந்தர்ப்பம்; அதனால் என் வாக்குறுதியை மீறி இந்த பின்னூட்டம்.

ஏதோ ஒன்றில் (மதம், கடவுள், கலாச்சாரம், மூடநம்பிக்கை, நம்பிக்கை, பழக்கம்,...) பழகி/நம்பி போன மனிதன், அதன் குறைபாட்டை சுட்டி காட்டும் போது, அதை நியாயப் படுத்த போராடுகின்றான். அது ஏன் என்பது சிக்கலான கேள்விதான் என்றாலும், அதை எப்படி நியாயப் படுத்த முயலுகின்றான் என்பதை எளிதாக கண்டுகொள்ளலாம். அதில் இரு முறைகள் திரும்ப திரும்ப வருவதை காணலாம். முறை-1: உனக்கு (அல்லது அறிவியலுக்கு) எல்லாம் தெரியாது. அதனால் பொத்தி கொண்டு போ. பல சமயம் அதற்காக முடிச்சுப் போடும் காரணங்கள் நல்ல காமடியாகவும் இருக்கும் (இங்குள்ள பின்னூட்டங்களிலே அதற்கு பல உதாரணங்கள் உண்டு). முறை-2: எனக்கு(ம்) நிறைய தெரியும் (இதில் பலவகை பரிமாணங்கள் உண்டு; பெரிய உதாரணங்கள், பட்டங்கள் போன்றவை பயன்படுத்த படலாம்). அதனால் பொத்தி கொண்டு போ. முறை-1: நீ எவ்வளவு சின்னது பார், முறை-2: நான் எவ்வளவு பெரியது பார் - என மாயத்தை உண்டு பண்ணும் உளவியல் முறைகள். இவ்விரண்டு முறைகளிலும் உண்மையான விசயம் நேரடியாக அலசப்படுவதில்லை என்றாலும், பலநேரம் உளவியல் சக்தியில் அறிவு ஏமாந்து போய்விடுவதுண்டு.

உண்மையான அறிவு ஆரம்பிக்கும் இடம், இரண்டு துணிவான வார்த்தைகள்: எனக்கு தெரியாது! (http://icortext.blogspot.com/2009/08/blog-post.html). அப்படி இல்லையென்றால் பாட்டன்கள் சொன்ன கட்டுக்கதைகளை நம்பியோ, மதநூல்கள் சொன்ன கற்பனைகளை நம்பியோ இருந்து விடலாம். எனக்கு தெரியாது என்ற துணிச்சல் கொடுத்த அறிவு தான், உயிரையும் அதன் 400 கோடி வருட பரிணாம வளர்ச்சியையும், அண்டத்தையும் அதன் 1400 கோடி வருட பரிணாம வளர்ச்சியையும் நாம் அறிய உதவியது. ஆனால் அந்த அறிவுக்கு தலைகணமோ, அகங்காரமோ இருந்ததில்லை. ஏனெனில், எல்லாம் தெரிந்தது போல், அடுத்தவரை சபிப்பதும் இல்லை, நரகத்தில் எரிப்பதும் இல்லை.

CorTexT (Old) said...

அறிவியல் வெளிசார்புடனான ஒரு தேடல். அந்த தேடலின் நிலையை, சரி/தவறு, தெரியும்/தெரியாது, புரிந்தது/புரியாதது, விளக்கலாம்/விளக்க முடியாது, புதிர், வெறும் தியரி என பல்வேறு தற்சார்புடைய வார்த்தைகளை கொண்டு குறிக்கின்றோம். நன்றாக நிரூபிக்கப் பட்ட உயிர்களின் பரிணாமத்தையும் தியரி என்கின்றோம், எவ்விதத்திலும் நிரூபிக்கப்படாத M-theory (string theory) யையும் தியரி என்கின்றோம். உலகின் மூலக்காரணத்தையும் புதிர் என்கின்றோம், ஒரு வேதி-மூலக்கூறின் அமைப்பையும் புதிர் என்கின்றோம். இதில் சாதாரண மக்கள் குழம்பியே போய்விடுகின்றனர். அதனால் தான், அறிவியலை வெறுமே அறிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளுதலின் அவசியம். ஆனாலும் எல்லோராலும் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடியாது. அதனால் வெளிசார்புடனான ஒரு அளவுகோளை உருவாக்க முன்பு ஒருநாள் முனைந்தேன் (முடிக்கவில்லை). பெரும்பான்மையான நேரங்களில் தெரியாதது, புதிர் என்று சொல்லப்படுபவை உண்மையில் சிக்கலமைப்பில்-தெரியாததாக (Complexity Unknown) இருக்கும். இதற்கும் தெரியாதது என்பதும் பெரிய வேறுபாடு உண்டு (யோசித்து பாருங்கள், உயிர்கள் எவ்வளவு சிக்கலாக இருந்தாலும், எத்தனை முறை உயிரியல் அறிவு, நம் அடிப்படை இயற்பியல் அறிவை மாற்றி அமைத்தது என்று).
http://sites.google.com/site/artificialcortext/others/miscellaneous/un-known-objective-relative-scale (ஆரம்ப கட்டுமான நிலை)

CorTexT (Old) said...

//தெகா
அச்சச்சோ! அதைப் பொருத்தெல்லாம் பெரிய அளவில பேசுற அளவிற்கு என்கிட்ட ஒண்ணுமில்ல.
//

பெரிய அளவில பேசுற அளவுக்கு எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. உயிர் பொறி என்பது மேஜிக் மாதிரி. கீழே உள்ள மேற்கோள் போல், நீங்கள் என்ன சொன்னாலும் அது உண்மையான மேஜிக்காக சிலர் ஒத்துக்கொள்ள போவதில்லை.

Lee Siegel (in his book NET of MAGIC): "I'm writing a book on magic," I explain, and I'm asked, "Real magic?" By real magic people mean miracles, thaumaturgical acts, and supernatural powers. "No," I answer: "Conjuring tricks, not real magic."

Real magic, in other words, refers to the magic that is not real, while the magic that is real, that can actually be done, is not real magic.

http://thavaru.blogspot.com/ said...

நீண்ட ஆரோக்கியமான கருத்துபரிமாற்றத்தில் கையேடு , தெ.கா , முகுந்தஅம்மா, The Analyst முற்பகுதியை ஆக்கிரமிக்க பிற்பகுதியை வருண்,Cortext ஆட்சி செய்ய வினை ஊக்கி தெகா அவர்களுக்கும் வருண் சொல்ல வந்ததை ஒரு வினாவை எழுப்பி பிடித்த கையேடு அவர்கட்க்கு நன்றியும் வாழ்த்துகளும்.

Unknown said...

தவறு: நீங்க தருமி ஐயாவ வுட்டுப்புட்டது தவறு.

வருண் said...

CorTexT said...

ஆச்சர்யம் தான், ஆனாலும் பொதுஅறிவுக்கு சாதாரணமாக தெரிய வேண்டிய சில விசயங்கள் திரும்ப திரும்ப (Pattern) வருவதை காணலாம். அதை நாம் (மீண்டும்) கண்டுகொள்ள ஒரு நல்ல சந்தர்ப்பம்; அதனால் என் வாக்குறுதியை மீறி இந்த பின்னூட்டம்.***

ஒரு விவாதத்தில் ஒரு நிலையில் வெளியேறுவதும் பிறகு வந்து தன் கருத்தை பகிர்வதிலும் யாரும் குறை சொல்லப்போவதில்லை. விதாத்தில் பங்குகொள்ளும் பலருக்கும் இது எளிதாகப் புரியும்.

வருண் said...

***ஏதோ ஒன்றில் (மதம், கடவுள், கலாச்சாரம், மூடநம்பிக்கை, நம்பிக்கை, பழக்கம்,...) பழகி/நம்பி போன மனிதன், அதன் குறைபாட்டை சுட்டி காட்டும் போது, அதை நியாயப் படுத்த போராடுகின்றான். ***

மறுபடியும் மதத்துக்கு தாவுறீங்க? I really have serious problem understanding your intentions here.

உண்மையிலேயே நீங்க என்னதான் சொல்ல வர்றீங்க?

வருண் said...

***அது ஏன் என்பது சிக்கலான கேள்விதான் என்றாலும், அதை எப்படி நியாயப் படுத்த முயலுகின்றான் என்பதை எளிதாக கண்டுகொள்ளலாம். அதில் இரு முறைகள் திரும்ப திரும்ப வருவதை காணலாம். முறை-1: உனக்கு (அல்லது அறிவியலுக்கு) எல்லாம் தெரியாது. அதனால் பொத்தி கொண்டு போ. பல சமயம் அதற்காக முடிச்சுப் போடும் காரணங்கள் நல்ல காமடியாகவும் இருக்கும் (இங்குள்ள பின்னூட்டங்களிலே அதற்கு பல உதாரணங்கள் உண்டு). முறை-2: எனக்கு(ம்) நிறைய தெரியும் (இதில் பலவகை பரிமாணங்கள் உண்டு; பெரிய உதாரணங்கள், பட்டங்கள் போன்றவை பயன்படுத்த படலாம்). அதனால் பொத்தி கொண்டு போ. முறை-1: நீ எவ்வளவு சின்னது பார், முறை-2: நான் எவ்வளவு பெரியது பார் - என மாயத்தை உண்டு பண்ணும் உளவியல் முறைகள். இவ்விரண்டு முறைகளிலும் உண்மையான விசயம் நேரடியாக அலசப்படுவதில்லை என்றாலும், பலநேரம் உளவியல் சக்தியில் அறிவு ஏமாந்து போய்விடுவதுண்டு.***

இதெல்லாம் இப்போ எதுக்கு???? உங்களுக்கு நெறையாவே ரசிகர்கள் இருக்காங்க, தெகா மற்றும், அனலிஸ்ட் போன்றவர்கள்.

ஆனால் எனக்கு உங்க விவாதமே சுத்தமாக புரியமாட்டேன்கிது.

I am a "bottom-line" guy. I dont like a teacher giving a long answer but IT NEVER answered my question. Lots of people love such. I never could. I look at the bottom-line and do the best to improve it.

மதவாதிகளாலும், சாதிகளாலும் பாதிக்கப்பட்டு இருக்கீங்க போல இருக்கு. அதனால் யாரப்பார்த்தால் மதவாதியாகத் தோனுதா என்னனு புரியலை எனக்கு?

எனக்கு மதவாதிகளெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. அப்படி யாரும் இந்த விவாத்த்தில் இன்னும் பார்க்கவில்லை!

சாதி! என்னை ஒருவன் அவன் வீட்டுக்குள்ல விட யோசித்தால், அந்த நாயை என் வீட்டுக்குள் ஒரு போதிலும் விடமாட்டேன். அவ்ளோதான். அவன் விட்டுக்குள் என்னை விடனும்னு போராடுகிற முட்டாள் இல்லை நான். I KNOW, I am not inferior to ANYBODY including all the debaters here. :)

Dealing with religious fanatics and "so called high class" idiots is not a BIG DEAL for me. So I want you to stop this right here!

W

வருண் said...

The way I approach a problem is that I wnat my co-workers to be

1) HONEST

2) Not manipulative

3) Just record what you observe, not what you anticipate.

4) If you make a blunder, just tell me, dont cook-up something to save your butt! That is a BIG mistake! I keep off from such manipulative spineless "scientists" as they are not my type.

Those things only help me in doing science.

So,

1) I dont know a lot of things. I can shamelessly say that to anybody!

2) I say "I dont know" at least few times a day.

3) I realize though we have achieved plenty in science, we are still unable to answer some basic questions. We only know very little.

Those are my concluding remarks. Thanks guys.

Take care! :)

CorTexT (Old) said...

// So I want you to stop this right here!//

நீங்க challenge பண்ணினால் பதில் சொல்லனும், நீங்க Stop சொன்னால் உடனே நிறுத்திடனும். நல்ல கூத்துதான் :-) (ஆசை தீர உங்கள் கணினியுடன் அப்படி விளையாடுங்கள்)

நான் இட்ட பின்னூட்டங்கள் உங்களுக்கானவை என்று நீங்கள் நினைத்து கொண்டால், அதற்கு யார் பொருப்பு?

வருண் said...

You dont have to. It is upto you! :)

BUt you could answer me,

எதுக்காக மதவாதிகளோட விவாதிப்பதுபோல் விவாதிக்கிறீங்க??? அதை நிறுத்துங்கனு சொன்னேன்.

Why are you having a NOTION that you are debating with religious fanatics here???

வருண் said...

***முறை-1: உனக்கு (அல்லது அறிவியலுக்கு) எல்லாம் தெரியாது. அதனால் பொத்தி கொண்டு போ.

முறை-2: நான் எவ்வளவு பெரியது பார் - என மாயத்தை உண்டு பண்ணும் உளவியல் முறைகள். இவ்விரண்டு முறைகளிலும் உண்மையான விசயம் நேரடியாக அலசப்படுவதில்லை என்றாலும், பலநேரம் உளவியல் சக்தியில் அறிவு ஏமாந்து போய்விடுவதுண்டு.***

இதுபோல் இந்த விவாதத்தில் யாருமே நினைப்பதா எனக்கு தெரியலை.

நீங்களா கற்பனை இதுல் முறை 1, முறை 2 னு சொல்லலையா?

யார் உங்ககிட்டு வந்து மதம்தான் பெருசு, கடவுள்தான் பெருசு, நீங்க ஒண்ணுமில்லைனு சொன்னா?

அது உங்க கற்பனைதானே???

CorTexT (Old) said...

வருண்,
ஒருவரின் கற்பனை மற்றவரின் நிதர்சனம். அது பெரிய விசயம் அல்ல. பிரச்சனைகளின் ஆரம்பம், சிலருக்கு ஏன் "கனி இருப்ப, காய் கவர்ந்தற்று" என்பது தான். உண்மையிலே உங்கள் மேல் எனக்கு எந்த கோபமோ, ஆதங்கமோ இல்லை. அப்படிபட்ட விச மரத்தை நான் எப்பொழுதுமே வளர்ப்பதில்லை. ஏனெனில் அது என்னையும் அழித்துவிடும் என்பதை நான் அறிவேன். மேலும் சுவையான கனியிருக்க காய் எதற்கு? உங்களிடம் பல நல்ல விசயங்கள் உள்ளது. நானும் அதை ஆவலுடன் அறிந்து கொள்ள ஆசைபடுகின்றேன். ஆனால் அடுத்தவர் கருத்துக்களை கனி மொழியில் அலசுங்கள்.

என்றும் அன்புடன்,
CorTexT

வருண் said...

நீங்க மதம்பற்றி பேசப்பேச, நான் மதவாதிபோலவும் நீங்கள் பகுத்தறிவுவாதிபோலவும் இந்த விவாதம் போவதாக எனக்கு தோன்றியது. நான் என்னுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவே இந்தக் கேள்வி.

இந்தக்கேள்வியால் என் நிலைப்பாட்டை நான் பலருக்கும் உணர்த்தியுள்ளேன்.


இந்த கனி காய் மேட்டர் எல்லாம் எனக்குப் புரியலை.

குறை சொல்வதென்றால் மாத்தி மாத்தி சொல்லலாம். உதாரணமாக், விவாதத்தில் நீங்க "நீ" (நீங்களுக்கு பதிலா) என்று "ஒருமை" அடிக்கடி பயன்படுத்துறீங்க. நீ, உனக்கு எல்லாம் "க்ளோஸ் நண்பர்களை'தான் விளிக்கனும். ஆனால் நீங்க சிரமப்பட்டு 100 சதம் தமிழில் , எழுதுவதால் உங்க "நீ" யைக்கூட நான் "நீங்களா" த்தான் பாவித்தேன். ஏன் கனியிருக்க காய் என்று சொல்லவில்லை :)

நீங்க என் மேல் கோவிச்சுக்கிட்டாலும், பெரிய மனது செய்து மன்னித்துவிட்டாலும் நான் விவாதிப்பது இப்படித்தான். But It is never personal, just "business". I dont want you to think that I am mad at you or something. This is just a debate, that is all.

As for as I know, this is how all the on-line debates go. If you get into it, it is impossible to control the way it turns. It takes all sort of wild turns. As long as I know about who I am, it hardly matters to me what people think of me as who I am based on how I debated. :)

Anyway, that is all I wanted to say :)

CorTexT (Old) said...

// இந்த கனி காய் மேட்டர் எல்லாம் எனக்குப் புரியலை.//
அதற்கு சுவை அரும்புகள் தேவை.

//உங்க "நீ" யைக்கூட நான் "நீங்களா" த்தான் பாவித்தேன்//
மிக்க நன்றி!

//It is never personal, just "business"//
If you think, your "business" dealings just stay business, what else can I say?

Thekkikattan|தெகா said...

As for as I know, this is how all the on-line debates go. If you get into it, it is impossible to control the way it turns. It takes all sort of wild turns.//

அப்படியா நினைக்கிறீங்க, வருண். நான் அப்படித்தான் முடியணும்னு ஒரு நியதி இல்லைன்னு நம்புறேன். நாம எப்படியா அந்த ஊடாடல் சென்றடையணுங்கிறதை தீர்மானிக்கிறோம் நம்மோட சொல்லாடல்களைக் கொண்டுன்னு நினைக்கிறேன். வலையுலகில் கார்டெக்ஸ்டை அடிக்கடி என்னுடைய கலாச்சார பதிவிற்கு முன்பாக கண்டதுமில்லை, கேட்டதுமில்லை, இல்லையா?

அவர் எந்த எதிர்பார்ப்புகளுமில்லாமல் அவர் பாட்டுக்கு அவர் தளத்தில் மிக்க தரமான எழுத்து நடையில் தனக்கு ரொம்ப பரிச்சியமான தளத்தில் வரும் எண்ணங்களை பதிந்து வைத்து வருகிறார். எதார்த்தமாக ஒரு நாள் அவர் தளத்தில் எரடி விழப் போக அவரின் அறிமுகம் கிட்டியது. அவரை இங்கே கொணர்ந்தோம்.

ஆனா, நான் கவனித்த வரையில் அதிகமாக nonsense, idiot, என்று பேசிக் கொண்டிருப்பவர்களை provoke பண்ணுவது மாதிரியான சொல்லடால் வார்த்தைகளை முதலில் விட்டரிந்தது நீங்களாகத்தான் அவதானித்து வருகிறேன்.

அதுனாலே இந்தப் பதிவிலேயே ‘தருமி’ முதற்கொண்டு உங்கள் வார்த்தை பிரயோகங்களை ஹைலைட் செய்து காமித்து இருக்கிறார்கள். உங்களுக்கு உங்கள் சப்ஜெக்ட் சார்ந்து நிறைய அனுபவமும், படிப்பறிவும் இருந்தாலும் எப்படி பக்குவமாக அதனைக் கடத்தி கடைநிலையில் இருக்கும் ஒருவருக்கு புரிய வைக்கிறோம் என்பதே அந்தக் கற்றலின் முக்கியத்துவம் நிறைவடைகிறது என்பதையிம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் எல்லோரும் ஏதோ ஒரு விதயத்தை தேடித்தான் இது போன்ற பகிர்தலில் ஈடுபடுகிறோம். அப்படி இருக்கையில் ஒத்த அலைவரிசையில் எல்லோரும் அமைய வேண்டுமென்ற அவசிமில்லை, இருப்பினும் எல்லா பதிவுகளையிம் இந்த வலையுலகில் முடிப்பதனைப் போன்று முடிப்பதில் என்ன நாம் விட்டுச் செல்கிறோம். It is not a healthy trend either... thereby we should work harder to harness our egoistic tone reigning over what we were discussing about...

அவ்வளவுதான் நான் சொல்ல வருவது, சேர்ந்து கற்றுத் தெளிவோம்!

வருண் said...

***//It is never personal, just "business"//
If you think, your "business" dealings just stay business, what else can I say?***

The business here is SCIENCE. What have we learned.

* It is still unknown how L-amino acids were preferred by nature and how.

* We had a chance to discuss about D- and L amino acids and proteins

* We leaned about the drug (thalidomide) which was taken for morning sickness but it had cruel side effects.

* We had a chance to discuss about drug-protein interaction.

I am saying this is the "business".

But all you two care about it different. I find thega and his advices always funny.

As far as I am concerned this is what you get out of discussion.

It is not the question of HOW NICELY we please EACH other saying, you are GREAT to each other. It is immaterial to me! :)

---------


By the say,

***CorTexT said...

// இந்த கனி காய் மேட்டர் எல்லாம் எனக்குப் புரியலை.//
அதற்கு சுவை அரும்புகள் தேவை.***

Look at your attitude!!! You realize how rude you are, here.
But always try act like this in this discussion and PROVOKE people in a venomous way?

What are you trying to say, YOU ARE THE BEST in the world and who has "சுவை அரும்புகள்"

So be it.

Live in your own world and BE A KING! :))))

வருண் said...

***// இந்த கனி காய் மேட்டர் எல்லாம் எனக்குப் புரியலை.//
அதற்கு சுவை அரும்புகள் தேவை.***

I must say cortext you have FILTHY attitude!!!

This is a wonderful example to show how venomous you are in putting down others but pretending to be very innocent!

வருண் said...

Thega: If you are moderating, CLEAN UP all my posts like a gentleman. Stop advising me, PLEASE!!!!

Thekkikattan|தெகா said...

Thega: If you are moderating, CLEAN UP all my posts like a gentleman. Stop advising me, PLEASE!!!!//

Hey Varun, do me a favor if I am amusing to you just IGNORE my post and dont even bother to open and read! How about that... big boy!

Now again I am activating moderation :).

I do NOT want us to show up to this entire world that - we are still டவுசர் பாண்டீஸ். Enjoy and interact with people who make you to think serious not amusing :D

Thekkikattan|தெகா said...

கார்டெக்ஸ்ட்,

இன்றுதான் நீங்க கொடுத்த “அறிவு பேசினால்” கவிதை மாதிரி படித்தேன். எந்த வரிகளை ஹைலைட் செய்வது, எதனை விடுவது என்பது மாதிரியான அக, புற மனதின் இயல்புகளை பிரிச்சு மேஞ்சிருக்கீங்க. அதில இந்த வரிகள் ரொம்பவே மனசிலே உட்கார்ந்துக்கிச்சு...


...//அழிவுகாணும் அணுகுண்டுகள் செய்ய! - ஆனால்
அது உன் விலங்கின் உணர்ச்சி;
அது உன் மடமையின் கிளர்ச்சி;
சண்டையிட்டு போர்களம் காண! - ஆனால்
உன் கண்களை திற,
என்னுடன் சிகரம் ஏறு! - அங்கே
நான் அமைதியை காட்டுவேன்! - ஏனெனில்
ஆழ்ந்த அறிவு சமாதானம்!
உண்மையான நிர்வானம்!
...


nicely imposed... உணர்ந்து கூறப்பட்ட வரிகள். Enjoyed reading it, thanks

CorTexT (Old) said...

//Thekkikattan|தெகா said...
இன்றுதான் நீங்க கொடுத்த “அறிவு பேசினால்” கவிதை மாதிரி படித்தேன்...
//

மிக்க நன்றி தெகா!

நம் மூளையின் அமைப்பு உள்ளிருந்து வெளியாக பல அடுக்குகளாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. நாம் காட்டில் விலங்குகளாக இருந்தது போது வளர்ச்சி அடைந்த உள்-மூளை (hard-coded; மாற்ற முடியாதது) நம் உணர்ச்சிகளை கொடுக்கின்றது. அது கொடுப்பது தான் நம் கோபம், சீற்றம், சண்டை முதலியன (நாம் இப்பொழுது காட்டில் வாழ்வதில்லை என்பது அதற்கு தெரியாது. அதனால், இணையதளத்தில் உரையாடும் போதும், அது மிக எளிதாக வெளிப்படுகின்றது). அதற்கு அடுத்த கட்டமாக வளர்ச்சி அடைந்த வெளி-மூளை (soft-coded; மாற்ற முடிந்தது) நாம் சிந்தித்து நம் உள்-மூளையின் செயல்களை தேவையானபடி கட்டுபடுத்துகின்றது. அதனால், நம் அறிவு வளர வளர (கற்றல்), நம் விலங்கு உணர்ச்சிகள் குறைந்து, நாம் சமாதானம் காண முயற்சிக்கின்றோம். ஆனால், அந்த அறிவு முறையாக எல்லோரையும் சென்றடையாத போது, அறிவில் அறிந்த அணுசக்தி, நல்ல ஆற்றலுக்கு பயன்படாமல், சிலரின் உணர்ச்சிகளுக்கு வடிகாலாகிப் போய்விடலாம்.

Indian said...

//நம் மூளையின் அமைப்பு உள்ளிருந்து வெளியாக பல அடுக்குகளாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. நாம் காட்டில் விலங்குகளாக இருந்தது போது வளர்ச்சி அடைந்த உள்-மூளை (hard-coded; மாற்ற முடியாதது) நம் உணர்ச்சிகளை கொடுக்கின்றது. அது கொடுப்பது தான் நம் கோபம், சீற்றம், சண்டை முதலியன (நாம் இப்பொழுது காட்டில் வாழ்வதில்லை என்பது அதற்கு தெரியாது.//

Do these emotions have any basis on the traits suggested in DISC behaviour?

CorTexT (Old) said...

// Indian...
Do these emotions have any basis on the traits suggested in DISC behaviour?
//

அதுவும். ஆனால் மனிதனின் குணங்களை மொத்த மூளையும் நிர்ணயிக்கின்றது. Hard-coded vs. Soft-coded; பிறப்பு vs வளர்ப்பு; Nature vs Nurture; நம் மரபணுக்கள் vs சுற்றுசூழல்கள் - இவையெல்லாம் கிட்டதட்ட ஒன்றை தான் குறிக்கின்றன. இப்பொழுது நாம் அறிந்து கொண்டது: நம்மை நம் மரபணுக்கள், சுற்றுசூழல்கள், மேலும் மரபணுக்களுக்கும் சுற்றுசூழல்களுக்கும் இடையேயான தொடர்ந்த தொடர்புகள் (Epigenetics) நிர்ணயிக்கின்றன. நம் வளர்ச்சி ஒரு மீள்சுருளாக (Recursive) நடப்பதால், ஆரம்ப கட்ட நிலைகளின் (மரபனுக்கள், கருவளர்ச்சி, குழந்தை பருவம்) விளைவுகள் பிறகு ஏற்படும் விளைவுகளை விட முக்கியதுவமானது.

மூன்றுவகை ஒளி கூம்புகளை கொண்டு அனைத்து நிறங்களையும் அறிவது போல், நான்கு பண்புகளை கொண்டு மனித குண வகைகளை அறிய முற்படும் ஒரு மாதிரி DISC. அது எந்த அளவு வெற்றிகரமான மாதிரி என்று எனக்கு தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன் அதை நான் பயன்படுத்தி இருக்கின்றேன். இதை நீங்கள் பயன்படுத்தி இருக்கின்றீர்களா? உங்கள் எண்ணங்கள் என்ன?

Related Posts with Thumbnails