Sunday, August 20, 2006

Spiritual Masters Are Schizophrenic? : எனது பார்வையில்...

புதுமை விரும்பி அவர்கள் இங்கு ஒரு பதிவை "ராம கிருஷ்ண பரமகம்சர், ஓஷோ - Are these spiritual masters schizophrenic?" என்ற தலைப்பில் எழுதி ஒரு வினா எழுப்பியிருந்தார். அங்கு சென்று முழுதும் படித்துவிட்டு பின்னூட்ட மிட ஆரம்பித்தேன், தெகா பாணியில் சொல்வதானால் ஒட்டகச் சிவிங்கி கணக்க நீநீண்ண்ண்டு போச்சுங்க, அதனால அந்த பின்னூட்டத்தை இங்கு உங்களின் பார்வைக்கு கொணர்கிறேன்.

எனது பின்னூட்டத்தினை படிப்பதற்கு முன்பு அவரது பதிவினை இங்கு சென்று படித்து விட்டு வந்து தொடருங்கள். நன்றி!


புதுமை விரும்பி,

நல்ல ஹூம்... என்ன சொல்றது, நமக்கே 'தெரிந்த' அல்லது 'எட்டிய' ஒரு பரிமாணப் (Dimension) புரிதலை இங்கு கொணர்ந்தமைக்கு, நன்றி!

//என்னை இது ஓசோவின் ஆரோக்கியமான மன நிலையைச் சந்தேகப்படவைத்தது. //

சரி இப்பொழுது விசயத்திற்கு போவோம். பரமஹம்சருக்கும், ஒஷோவிற்கும் schizophrenia என்று அழைக்க முற்படுபவர் எந்த அளவுகோலின் படி, அதனை நிறுபிக்க அல்லது புரிந்து கொள்ள எத்தனிக்கிறார் என்று முதலில் பார்க்கலாம்.

யார் யாரை மன நலம் குன்றியவர் என்று நிர்ணயிப்பது? உதாரணத்திற்கு ஒரு 100 பேர் இருக்கும் இடத்தில் 99 பேர் தினமும் காலையில் எழுந்து, என்ன மத்த 99 பேர் செய்கிறார்களோ அதனை தினமும் செய்து வீட்டிற்கு வந்து, கதவை சாத்தியற்கு பிறகு என்ன வேண்டுமானலும் அடுத்தவர்களின் பார்வைக்கு அப்பால் செய்யலாம், ஆனால் அடுத்த நாள் அந்த அரிதிப் பெருபாண்மை 99 பேர்களுடன், இணக்முற்றுப் போனால், மன ஆரோக்கியம் உள்ளவன் உலகப் பார்வையில், இல்லையா (என்று நினைத்துக் கொள்கிறோம்) ?

சரி இதனையே இப்படிப் பாருங்கள். அந்த 99 பேரின் மன வளர்ச்சி மற்றுமொரு பரிமாணத்திற்கு (Dimension or Plane of thinking) செல்ல முடியாமல் தேக்க முற்று, மன நலம் குன்றிய நிலையில் ;-) தன்னை யாரும் பைத்தியம் என்று கூப்பிட்டு விடக் கூடாதே என்று சுய சிந்தனைக்கு அணைபோட்டு மூளை மழுங்கி "மன அழுத்தத்தில்" வாழ நேர்ந்து போனால். இப்பொழுது புரிகிறதா என்ன நடக்கிறதுதென்று? அதுதான் நானும் நீங்களும் அந்த 99 பேரில் ஒருவராக இருந்து கொண்டு அந்த 1 நபருக்கு பெயர் கொடுக்க எத்தனிக்கின்றோம். மன அழுத்தத்தில் மூழ்கிப் போய்.

இங்கு யார் destructive ideaவான சிந்தனைகளை அதிகமாக வெளிக்கொணர்கிறோம், இந்த இரு பாலரில்?

நாம் தானே? இந்த அழிவு சிந்தனை மன நலம் பாதிக்கப் பட்டவர்களுக்குரிய அறிகுறி அல்லவா? இப்பொழுது அவ்வாறு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தன்னைத்தானே வருத்திக்கொள்ளலாம் (Self-wounding, hurting others physically etc.,), தற்கொலை செய்து கொள்ளலாம், அல்லது வெளிப்புறத்தில் அதன் தாக்கத்தை வேறு சில வழிகளில் கொணரமுடியும் அல்லவா? இப்பொழுது நம்மிடையே நடக்கும் அணைத்து இயற்கை மற்றும் போர்கள் சார்ந்த அழிவுகளும் இம் மன நிலை குன்றியவர்களால் கொணரப்பட்டதே... அதாவது இந்த 99 பேர்களால்.

இருப்பினும் அது போன்ற மற்றொரு பரிமாணத்திற்கு பயணித்தவர்களால் அல்லவே. எனவே, நாம்தான் முதலில் மன நல மருத்துவரை அணுக வேண்டும் (அப்படின்னு ஒருத்தர் இருக்கிறாரா?), அப்படியெனில் யார் அந்த மன நல மருத்துவராக இருக்க முடியும்? மீண்டும் அந்த பரமஹம்சரும், ஒஷொவையும் தவிற வேறு யார்... அன்பையும் உலக அமைதியையும் போதிக்கும் "மனித பரிணமிகள்."

Therefore, I consider these evolved human beings are our next evolutionary proto-types. We are far behind them to understand, why the way they are. That is the truth!

பி.கு: இந்த பின்னூட்டத்தை தனிப்பதிவாக என்னுடைய பக்கத்தில் உங்களுடைய சுட்டியின் இணைப்புடன் இடலமென நினைத்துள்ளேன். நன்றி!!

48 comments:

Sivabalan said...

இது நல்ல் விசயத்திற்காக...1

Sivabalan said...

தெகா,

நல்ல பதிவு

Sivabalan said...

இது நல்ல் விசயத்திற்காக...2

Sivabalan said...

தெகா,

//ீண்டும் அந்த பரமஹாம்சரும், ஒஷொவையும் தவிற வேறு யார்... அன்பையும் உலக அமைதியையும் போதிக்கும் "மனித பரிணமிகள்." //

நல்லா சொல்லியிக்கீங்க...

நன்றி

Unknown said...

தெகா மிக நல்ல பதிவு, மனிதன் தன்னை வளப்படுத்திக்கொள்ள மனிதனாலேயே உருவாக்கப் பட்ட வாழ்வியல் தத்துவங்கள் ஆன்மீகம் அதை கடவுள் எனும் ஒரு கண்ணாடி வழியே பார்க்கும்போது இது போல எதைப் பார்த்தாலும் மனநிலை பிறழியவர்கள் போல் தோன்றும் . வாழ்வியல் தத்துவத்தை கண்ணுக்கு புலப்படாத (தன்னிடம் இருக்கும் ஒன்றை) ஒரு இடத்தில் தேடிக்கொண்டிருப்பவர்கள்தான் இது போல குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள். நீங்கள் சொல்லும் அந்த 99 பேரும் அவர்களே. புத்தர் தன்னை தழுவியபோது அதை நிராகரித்த விதம் அவருக்கு ஒஷோ மேல் சந்தேகம் கொள்ள வைத்ததாம் . இந்த ஒருவரியிலேயே அவர் புத்தரைவெரும் உருவமாக மட்டும் தான் பார்கிறார் என்பது தெளிகிரது. புத்தரின் தத்துவங்களின் சமகால உறுவம் ஓஷோ . ஓஷோ ஒதுக்கியது அவர்(புத்த)ரின் உறுவத்தை ததுவங்களை அல்ல உருவகம் எனும் வார்த்தை சரியாக இருக்கும் ஒரு அடயாளம் போல். ராமகிருஷ்ணர் பற்றி எனக்கு அதிகம் தெரியாததால் அதில் தலை நுழைக்க வில்லை

Unknown said...

//யார் யாரை மன நலம் குன்றியவர் என்று நிர்ணயிப்பது? உதாரணத்திற்கு ஒரு 100 பேர் இருக்கும் இடத்தில் 99 பேர் தினமும் காலையில் எழுந்து, என்ன மத்த 99 பேர் செய்கிறார்களோ அதனை தினமும் செய்து வீட்டிற்கு வந்து, கதவை சாத்தியற்கு பிறகு என்ன வேண்டுமானலும் அடுத்தவர்களின் பார்வைக்கு அப்பால் செய்யலாம், ஆனால் அடுத்த நாள் அந்த அரிதிப் பெருபாண்மை 99 பேர்களுடன், இணக்முற்றுப் போனால். மன ஆரோக்கியம் உள்ளவன் உலகப் பார்வையில், இல்லையா (என்று நினைத்துக் கொள்கிறோம்) ?///


இது மட்டுமே இப் பதிவுக்கு போதும் என்று நினைக்கிறேன்.

Thekkikattan|தெகா said...

சிவா,

நேரம் கிடைத்தால் இன்னும் கொஞ்சம் விளக்கமாக எங்களுடன் எந்த பகுதி உங்களுக்கு நிரம்பப் பிடித்திருக்கிறது, ஏன் என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாத, சிவா? :-)

Thekkikattan|தெகா said...

இது நல்ல் விசயத்திற்காக...1

This too look good...!!! :-)))

Thekkikattan|தெகா said...

மகி,

//ஓஷோ ஒதுக்கியது அவர்(புத்த)ரின் உறுவத்தை ததுவங்களை அல்ல உருவகம் எனும் வார்த்தை சரியாக இருக்கும் ஒரு அடயாளம் போல். //

மிக அருமையாக விளக்கி கூறியுள்ளீர்கள், எனக்கு அப்பவே தெரியும் ஏதோ ஒரு பவர் உங்களுக்கு இருக்கிறது என்று. நல்ல புரிதல். அருமையான விளக்கம்.

சரி, இங்கு மீண்டும் ஒரு கேள்வி உங்களுக்கு.

Does a mind (consciouness) has a limitation for thinking? If not, then we can not define which is which, unless we tasted that schzophrenic experience itself to say right from wrong, isn't so? Because how we can say something that we are not even know it does exist in our experiential plane without experiencing it???

Unknown said...

தெகா நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு விடை இதோ.
Does our mind (consciouness) has a limitation for thinking?
இல்லை
If not, then we can not define which is which, unless we tasted that schzophrenic experience itself to say right from wrong, isn't so
மிகச் சரி
Because how we can say something that we are not even know it does exist in our experiential plane without experiencing it???

மிக மிக மிகச் சரி

பெரியாரை ஒருமுறை நிருபர்கள்: கடவுள் இல்லை என்கிறீர்களே இருப்பதை கண்டால் என்ன செய்வீர்கள்?

பெரியார்: இருக்கிறார்ன்னு சொல்லுவேன் அது மாதிரிதான் இதை உணர்ந்தவர்கள் மட்டுமே சந்தேகங்களை யும் கேள்விகளியும் எழுப்பமுடியும் இல்லாவிட்டால் அவர் சொன்னது போல இவர்கள் மன நோய் கொண்டவர்கள் என்று முடிவுகட்டி விடுவார்கள்

Thekkikattan|தெகா said...

மகி,

ஏன் இங்கு மக்கள் ஆன்மீகத்தையும் மதக் கோட்பாடுகளையும் ஒருங்கே போட்டு குழப்பிக் கொள்கிறார்கள்?

அது வேறு, இது வேறு... அதனை எப்படி நான் உணர்ந்திருக்கிறேன் என்பதற்கான சுட்டி இங்கே... அதனையும் சிறிது செக் அவுட் பண்ணிப் பாருங்களேன்... பிடித்திருக்கலாம்...

http://orani-sittingby.blogspot.com/2006/06/religion-and-spirituality-could-ever.html

Thekkikattan|தெகா said...

புதுமை விரும்பி said...

தெகா,

வருகைக்கு நன்றி.

// யார் யாரை மன நலம் குன்றியவர் என்று நிர்ணயிப்பது. உதாரணத்திற்கு ஒரு 100 பேர் இருக்கும் இடத்தில் 99 பேர் தினமும் காலையில் எழுந்து, என்ன மத்த 99 பேர் செய்கிறார்களோ அதனை தினமும் செய்து வீட்டிற்கு வந்து, கதவை சாத்தியற்கு பிறகு என்ன வேண்டுமானலும் அடுத்தவர்களின் பார்வைக்கு அப்பால் செய்யலாம், ஆனால் அடுத்த நாள் அந்த அரிதிப் பெருபாண்மை 99 பேர்களுடன், இணக்முற்றுப் போனால். மன ஆரோக்கியம் உள்ளவன் இல்லையா (என்று நினைத்துக் கொள்கிறோம்)? //


ஒரு அளவிடுதல் செய்யும் பொழுது, அளவுகோலின் முக்கியத்துவம் பற்றி மிகச்சரியாக பேசியிருக்கிறீர்கள்.
அதிகப்படியானோர் சேர்ந்து முடிவு செய்வதே அளவுகோல் என்பது சில விசயங்களுக்கு சரிதான். இந்த
இடங்களில், அளவுகோல் மாறக்கூடியது. The scale is relative. ஆனால், அறிவியல், மருத்துவத் துறைகளில் பயன்படுகிற
அளவுகோல்கள் இப்படியானவை அல்ல. உதாரணமாக, வெப்ப நிலை மானி போன்றவைகளைச் சொல்லலாம். Here, the scales are absolute. அதனால்,
மனவியல் அறிவியலில், ஒரு மனிதன் மன நோயாளி என்றால், அவன் மன நோயாளி தான். எந்த தளத்தில் இருந்து
பார்ததாலும் கூட.

Thekkikattan|தெகா said...

//The scale is relative. ஆனால், அறிவியல், மருத்துவத் துறைகளில் பயன்படுகிற
அளவுகோல்கள் இப்படியானவை அல்ல. உதாரணமாக, வெப்ப நிலை மானி போன்றவைகளைச் சொல்லலாம். //

கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது... அது போன்ற அறிவியல் சார்ந்த விசயங்களுக்கு கிடைப்பது Quantitative Dataவை வைத்து நாம் அறியிட்டு சொல்லிவிடலாம்.

//Here, the scales are absolute. அதனால்,
மனவியல் அறிவியலில், ஒரு மனிதன் மன நோயாளி என்றால், அவன் மன நோயாளி தான். எந்த தளத்தில் இருந்து
பார்ததாலும் கூட.//

ஆனால் நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் விசயம், மனத்தளவில் ஒருவர் எந்த நிலையை எட்டியிருக்கிறார் என்பதனை பொருத்தல்லவா...Qualitative தன்மையைக் கொண்டு... அங்குதான் வருகிறது... இது போன்ற கேள்விகளும், இதனையும் செக் அவுட் செய்து பாருங்கள்... http://orani-sittingby.blogspot.com/2006/06/does-soul-has-evolution.html

Unknown said...

ஸாரி தெகா உங்களோட அந்த வீடுக்கு போனனா அங்க எல்லா ரூமையும் சுத்திபாக்க நேரமாச்சி இன்னும் பூரா படிக்கலை அப்புறமா சொல்றேன் கருத்து

Sivabalan said...

இது நல்ல விசயத்திற்காக-3

புதுமை விரும்பி said...

தெகா,

உறங்கும் நேரம் வந்துவிட்டது. உங்கள் கேள்விகளுக்கு, கூடிய விரைவில் பதிலளிக்கிறேன். நிச்சயம் உங்கள்
பதிவிலும், எனது விளக்கத்தைச் சேர்ப்பிக்கிறேன்.

புதுமை விரும்பி said...

தெகா,

உறங்கும் நேரம் வந்துவிட்டது. உங்கள் கேள்விகளுக்கு, கூடிய விரைவில் பதிலளிக்கிறேன். நிச்சயம் உங்கள்
பதிவிலும், எனது விளக்கத்தைச் சேர்ப்பிக்கிறேன்.

Thekkikattan|தெகா said...

//ஸாரி தெகா உங்களோட அந்த வீடுக்கு போனனா அங்க எல்லா ரூமையும் சுத்திபாக்க நேரமாச்சி இன்னும் பூரா படிக்கலை அப்புறமா சொல்றேன் கருத்து//

போனீங்கள அங்கே, அது ஒரு பேய் அடைஞ்ச வீடு மாதிரி, யாருமே வரத்துப் போக்கு இல்லாமே. இருந்தாலும் அப்பப்ப கொஞ்சம் ஆட்கள் வந்து போறாங்க.

படிச்சுப் பாருங்க, எல்லாமே பொதுவான பதிவுகள் தான். உங்களுக்கு பிடிச்சிருக்கலாம்.

Thekkikattan|தெகா said...

//ஸாரி தெகா உங்களோட அந்த வீடுக்கு போனனா அங்க எல்லா ரூமையும் சுத்திபாக்க நேரமாச்சி இன்னும் பூரா படிக்கலை அப்புறமா சொல்றேன் கருத்து//

போனீங்கள அங்கே, அது ஒரு பேய் அடைஞ்ச வீடு மாதிரி, யாருமே வரத்துப் போக்கு இல்லாமே. இருந்தாலும் அப்பப்ப கொஞ்சம் ஆட்கள் வந்து போறாங்க.

படிச்சுப் பாருங்க, எல்லாமே பொதுவான பதிவுகள் தான். உங்களுக்கு பிடிச்சிருக்கலாம்.

Thekkikattan|தெகா said...

//உறங்கும் நேரம் வந்துவிட்டது. உங்கள் கேள்விகளுக்கு, கூடிய விரைவில் பதிலளிக்கிறேன்.//

வாங்க புதுமை விரும்பி, வந்து சொல்லுங்க கேப்போம். நன்றி!

Thekkikattan|தெகா said...

//எனது கேள்வியே, நீங்கள் பேரானந்த நிலை என்பதை எப்படி வரையறுக்கிறீர்கள் என்பதே. நிறைய
சாமியார்கள், தாங்கள் எப்பொழுதும் பேரானந்த நிலையில் இருப்பதாகவும், சமாதி நிலையில் இருப்பதாகவும்
சொல்வது எந்த அளவிற்கு உண்மை? //

புதுமை விரும்பி, தாங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? அதிலிருந்து பேரனந்த நிலை எப்படி இருக்கலாம் என்பதனை அறிந்து கொள்ளவே (ஒரு சாமனியனுக்கு அது மட்டுமே சாத்தியம் - அதனையும் அனுபவித்து பார்த்திருந்தால் தான் அதனைப் பற்றியும் பேசமுடியும்), இப்படி ஒரு கேள்வியை கேட்டு வைத்திருக்கிறேன். தவறாக எண்ண வேண்டாம்.

அப்படி இல்லையெனில் ஏதாவது ஒரு நல்ல மனத்தை தொட்ட பாடல் கேக்கும் பொழுது தாங்களை அறியாமல் மயிர் கூச்சொரிந்ததுண்டா...? ஏதாவது ஒரு சூழல் தன்னை மறந்த நிலையில் அத்துடனே லயித்து இருந்த அனுபவமாவது பெற்றீரிக்கிறீர்களா, இல்லையெனில்... ஹும்... வாழ்வை ஈசியாக எடுத்துக் கொண்டு மீண்டும் ஒரு முறை நட்சத்திரம் நிரம்பிய இரவு வானத்தை படித்ததை நினைவுக்கு கொண்டுவர முயற்சிக்கமால், Just be there and be it! Without any thoughts mixing in. Can you experience a momentum without any thought?

Before we question anyone about the fact, at least we should try to walk the path and experience what they were trying to say. Do you practice meditation at any point of your life? Do you calm down your body with regular stretches of Yoga? Are you experiencing any of it in everyday life? Let us do it, for X number of years before we diagnose someone with western terminology throguh an psycho-analysis.

In fact, calming down our mind and body is not detrimental to our mental and physical health. Therefore, try to catch up with that experience by walking into that path. Then let us discuss about this complicated subject.

If you are already practicing those, then let me know. And we would not be discussing the importance of those arts of living technique. Anyway, share your thoughts with me. Let me learn, I hope I have not expressed my view points in any harsh way, if I do please take it lightly.

Anonymous said...

இது நல்ல விசயத்திற்காக... 3

Anonymous said...

இதுவும் ரொம்ப நல்ல விஷயத்திற்காக - 4

புதுமை விரும்பி said...

தெகா அவர்களே,

நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு இதோ விரிவான பதில்.

நான் சிறு வயதிலிருந்தே ஆன்மிக விசயங்களில் மிகுந்த ஈடுபாட்டோடு இருந்தேன். அதற்கு முக்கிய
காரணம், நான் என் 18ம் வயதில் முழுவதுமாய் படித்திருந்த மூர்த்தியின் மனோசக்தி என்ற புத்தகமாகும்.
எனது பழைய புத்தகங்களின் நடுவே இந்த புத்தகத்திலிருந்து நான் எடுத்த குறிப்புகள் இன்னும்
இருக்கின்றன. அப்பொழுதே எனக்கு, கிபனடிசம், மெஸ்மெரிசம் போன்ற விசயங்கள் மிகவும் புரிந்துபோன
விசயங்கள். அதன் பின், நான் படித்த ஆன்மிகவாதிகளாக,இராமகிருஷ்ண பரமகம்சர், விவேகானந்தர்,
ரமண மகரிஷி, ஓசோ, கிருஷ்ணமூர்த்தி ஆகியவர்களைச் சொல்லலாம். நான் கடைசியாக, சந்தித்த
ஆன்மிகவாதியாக யு. ஜி. கிருஷ்ண மூர்த்தியைச் சொல்லலாம். இவரது, சில கருத்துக்கள், ஆன்மிக
அனுபவங்கள் பற்றிய எனது எண்ணங்களை ஒரு கலக்கு கலக்கியது ஒரு மறுக்க முடியாத உண்மை. அவரது Mystique of Enlightenment என்ற
படைப்பை நீங்களும் ஒரு முறை படித்துப் பாருங்களேன்.

அடுத்த பின்னூட்டத்தில் இன்னும் பதில்
தொடர்கிறது.

Thekkikattan|தெகா said...

//அடுத்த பின்னூட்டத்தில் இன்னும் பதில் தொடர்கிறது.//

தாங்களின் அடுத்தப் பின்னூட்டத்தையும் படித்து விட்டு நமது புரிதல்களை பகிர்ந்து கொள்வோம், புதுமை விரும்பி. காத்திருக்கிறேன், தொடருங்கள்...

புதுமை விரும்பி said...

தெகா, இது யு. ஜி. கிருஷ்ணமூர்த்தியின் ஆன்மிக வாழ்க்கை அநுபவத்தின் சில பகுதிகள்.

T.G.Krishnamurti (U.G.'s grandfather) was meditating one day when his great granddaughter, a little baby, started to cry for some reason. The child's wailing interrupted the old man's meditation. This infuriated him. He came down and thrashed the child brutally. 'There must be something funny about the whole business of meditation,' said U.G. to himself, as he helplessly witnessed his grandfather savaging his own great granddaughter: 'Their lives are shallow and empty. They talk marvelously. But there is a neurotic fear in their lives. Whatever they preach does not seem to operate in their lives. Why?' This was the beginning of his search, a search that lasted till his forty- ninth year.

U.G. had not experienced sex but he says that even then he seemed to know what the sex experience was. Since his aim in those days was to become an ascetic or a monk, he did not entertain the thought of marriage. He saw for himself that though he thought of gods and goddesses he had wet dreams. He questioned why he felt guilty about this when he had no control over it. His meditation, his discipline and his study of holy books had not helped him with this issue. Even his staying away from salt, chillies and all kinds of spices had not worked.

U.G.'s Yoga Master, Sivananda, was startled when U.G. caught him devouring some hot pickles behind closed doors. 'How can this man deceive himself and others, pretending to be one thing, while doing another. He has denied himself everything in the hope of getting something but he cannot control himself. He is a hypocrite. This kind of life is not for me.' So U.G. gave up his Yoga practice and left Sivananda.

Between the ages of fourteen and twenty-one, U.G. undertook all kinds of spiritual exercises. He practiced all the austerities. U.G. recited Shiva mantra three thousand times a day, every day, everywhere he went.


While practicing Yoga and meditation, U.G. had every kind of experience talked about in the sacred books--samadhi, super samadhi, nirvikalpa samadhi. 'Thought can create any experience you want--bliss, beatitude, ecstasy, melting away into nothingness--all those experiences. But this can't be the thing, because I have remained the same person, mechanically doing these things. This is not leading me anywhere,' thought U.G. to himself.


தெகா அவர்களே,

இப்பொழுது சொல்லுங்கள். நீங்கள் சொலவது மாதிரி, நானும் ஆன்மிக அநுபவங்களுக்கான எல்லா முயற்சிகளையும்
செய்துவிட்டு, எனது 40வது வயதில் எல்லாமே பொய் என்று உணர்வேனானால், எனது நிலை எப்படி இருக்கும்?

புதுமை விரும்பி said...

தெகா, இது யு. ஜி. கிருஷ்ணமூர்த்தியின் ஆன்மிக வாழ்க்கை அநுபவத்தின் சில பகுதிகள்.

T.G.Krishnamurti (U.G.'s grandfather) was meditating one day when his great granddaughter, a little baby, started to cry for some reason. The child's wailing interrupted the old man's meditation. This infuriated him. He came down and thrashed the child brutally. 'There must be something funny about the whole business of meditation,' said U.G. to himself, as he helplessly witnessed his grandfather savaging his own great granddaughter: 'Their lives are shallow and empty. They talk marvelously. But there is a neurotic fear in their lives. Whatever they preach does not seem to operate in their lives. Why?' This was the beginning of his search, a search that lasted till his forty- ninth year.

U.G. had not experienced sex but he says that even then he seemed to know what the sex experience was. Since his aim in those days was to become an ascetic or a monk, he did not entertain the thought of marriage. He saw for himself that though he thought of gods and goddesses he had wet dreams. He questioned why he felt guilty about this when he had no control over it. His meditation, his discipline and his study of holy books had not helped him with this issue. Even his staying away from salt, chillies and all kinds of spices had not worked.

U.G.'s Yoga Master, Sivananda, was startled when U.G. caught him devouring some hot pickles behind closed doors. 'How can this man deceive himself and others, pretending to be one thing, while doing another. He has denied himself everything in the hope of getting something but he cannot control himself. He is a hypocrite. This kind of life is not for me.' So U.G. gave up his Yoga practice and left Sivananda.

Between the ages of fourteen and twenty-one, U.G. undertook all kinds of spiritual exercises. He practiced all the austerities. U.G. recited Shiva mantra three thousand times a day, every day, everywhere he went.


While practicing Yoga and meditation, U.G. had every kind of experience talked about in the sacred books--samadhi, super samadhi, nirvikalpa samadhi. 'Thought can create any experience you want--bliss, beatitude, ecstasy, melting away into nothingness--all those experiences. But this can't be the thing, because I have remained the same person, mechanically doing these things. This is not leading me anywhere,' thought U.G. to himself.

தெகா அவர்களே,

இப்பொழுது சொல்லுங்கள். நீங்கள் சொலவது மாதிரி, நானும் ஆன்மிக அநுபவங்களுக்கான எல்லா முயற்சிகளையும்
செய்துவிட்டு, எனது 40வது வயதில் எல்லாமே பொய் என்று உணர்வேனானால், எனது நிலை எப்படி இருக்கும்?

Thekkikattan|தெகா said...

//நீங்கள் சொலவது மாதிரி, நானும் ஆன்மிக அநுபவங்களுக்கான எல்லா முயற்சிகளையும்
செய்துவிட்டு, எனது 40வது வயதில் எல்லாமே பொய் என்று உணர்வேனானால், எனது நிலை எப்படி இருக்கும்?//

புதுமை விரும்பி, தாங்கள் கூறுவதில் உண்மைகள் இருந்தாலும், நம்மால் பட்டுணர முடியாத ஒரு மூன்றாவது entity மூலமாக அனுபவ பட்ட கூற்றை ஏன் தாங்கள் உண்மையென பெற்றுக்கொள்ள வேண்டும். அது திரு U.G அவர்களின் உழைப்பால் அவருக்கென எழுந்த கேள்விகளை தேடிக் கிடைத்த விடைதான், புத்தகமாக நானும், நீங்களும் இன்று படிப்பது இல்லையா.

முதலில் நாம் எதுவை காண இந்த யோகா, தியானமெல்லாம் செய்கிறொம்? யாரயாவது உருவமாக காணும் பொருட்டா அல்லது நமக்கு ஒரு அமைதியான வாழ்வுச் சூழல் கிடைக்க வேணும் என்ற ஆவவின் பொருட்டா?

அவ்வாறு தீவிரமாக நாம் எதனையோ அடைய வேண்டும் என்ற உந்துதலில் இல்லாத ஒன்றை கால நிர்ணயப்படுத்தி, அடைய எத்தனிக்கும் பொழுதுதான் இந்த Frustratration and dissappointments வருகிறது, அவ்வாறு வருவதும் இயல்பு தானே. இந்த இரு Emotional Upheavels எதனால் வருகிறது, முதலில், ஏதோ யாரோ எழுதி வைத்த அனுபவத்தை படித்தோ அல்லது கேட்டோ அதன் படி தனக்கும் அனுபவம் கிட்ட வேண்டும்மென்ற ஆசையல்லாவ அந்த இரு இமோஷனல் தாக்கங்களையும் எதிர்கொள்ள வைக்கிறது.

U.Gக்கு குழந்தையின் அழுகையை நிப்பாட்டுவதைக்காட்டிலும் எதனையோ அவசர கதியில் கண்டுபிடிக்க எத்தனித்து தியானத்தில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு பிரம்மையை எனக்கு ஏற்படுத்தியது. அப்படியெனில் அவர் புரிந்து கொண்ட "சுயமறிதல்" கோட்பாடு எதனையோ முன்னுருத்தி செயல்பட்டதாக அல்லவா அமைகிறது.

சுயத்தேடல் சுவாமி மகரிஷி கூறியபடி, அங்கு தேடுவதற்கு ஒன்றேமெ அற்ற நிலையல்லவா, ஏனெனில் சுயம் என்பது... அன்பின் சொரூபம் தானே, எதனிடத்தும்...

தொடர்வோம்...

Thekkikattan|தெகா said...

//T.G.Krishnamurti (U.G.'s grandfather) was meditating one day when his great granddaughter, a little baby, started to cry for some reason. The child's wailing interrupted the old man's meditation. This infuriated him. //

*******U.Gக்கு குழந்தையின் அழுகையை நிப்பாட்டுவதைக்காட்டிலும் எதனையோ அவசர கதியில்********

அது திரு U.G அவர்களின் தாத்தா திரு TGK - குழந்தையின் மேல் கோபம் காட்டியதை தவறுதலாக திரு U.G காண்பித்தாக எழுதி விட்டேன்... திருத்திப் படிக்கவும்... நன்றி..

புதுமை விரும்பி said...

தெகா,

உங்களின் கருத்துக்களுக்கு நன்றி.

//
*******U.Gக்கு குழந்தையின் அழுகையை நிப்பாட்டுவதைக்காட்டிலும் எதனையோ அவசர கதியில்********

அது திரு U.G அவர்களின் தாத்தா திரு TGK - குழந்தையின் மேல் கோபம் காட்டியதை தவறுதலாக திரு U.G காண்பித்தாக எழுதி விட்டேன்... திருத்திப் படிக்கவும்...//

நானே, இது பற்றி உங்களிடம் சொல்லலாம் என்று இருந்தேன்.

மீண்டும், கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்வோம்.

Thekkikattan|தெகா said...

//U.G.'s Yoga Master, Sivananda, was startled when U.G. caught him devouring some hot pickles behind closed doors. 'How can this man deceive himself and others, pretending to be one thing, while doing another.//

இங்குதான் புதுமை விரும்பி "நாக்கும், சுவையும்" பெற்ற நம்மை போன்ற மனிதர்களையே ஒரு நிலையில் நிறுத்தி, அவர்கள் கண்டுணர்ந்த ஒரு விசயம் உதாரணமாக அதீக தித்திப்பும், காரமும் நல்ல சிந்தனைக்கு ஓவ்வாது என்று கூறியிருக்கலாம். அதுவும் விஞ்ஞான பூர்வமாக உண்மையாக இருக்கலாம். அப்படி ஒருவர் கூறிவிட்டு அவரே அதனை உண்கிறாரே என்று ஏன் நாம் மனம் வெம்பி போக வேண்டும்.

ஒரு மருத்துவர் புகைபிடிப்பது நலம் பயக்கா என்று நம்மிடம் கூறிவிட்டு அவர் புகைபிடித்தால் நாம் என்ன செய்கிறோம். ஏன், அது போன்று சுவாமி சிவானந்தா (அப்படியே செய்திருந்தாலும்) செய்திருந்தாலும் எடுத்துக் கொள்ள முடிவதில்லை. உடல் என்று வந்து விட்டல் தினமும் நடக்கும் செயல்கள் நடந்து தானே ஆக வேண்டும்.

ஏன் நாம் அவர்களை தெய்வமாக்கி, திரைமறைவிற்கு அனுப்பி இது போன்ற செயல்களை செய்ய நாமே காரணமாக இருக்க வேண்டும். So, what we have is the "conditioned expectation" on those holy people, அப்படித்தானே? இமெஷ் என்று வந்து விட்டால் நம்மால் நார்மலாக இருக்க முடியுமா?

சுவாமி சிவானந்தவுடனான U.G அனுபவம் படிக்கும் பொழுது, அவருக்கே நெருடல் கொடுக்கும்படி புறச் சூழல் எப்பொழுதும் அமைந்திருக்கிறது நம் எல்லோரைச் சுற்றிலும் என்பது விளங்குகிறது. Is that mean less noticed, is lot more closer to ever be blissful and truthful to him/herself?

இது எனக்கு ஒரு நல்ல புரிதல்... :-)

Thekkikattan|தெகா said...

நான் இது போன்ற சிந்தான வாதிகளை "மனிதப் பரிணமிகள்" என்றழைத்ததை இப்படியாக கொண்டால் என்ன புதுமை விரும்பி, நம்மால் எட்ட முடியாத பரிமாணங்கள் கூட அவர்களுக்கு கைப்பெற்று, அது எந்த முறையினாலும் இருக்கலாம். Mindக்கு ஒரு பவர் உண்டு என்பதில் உங்களுக்கு எந்த ஆட்சோபமும் இல்லை என்றே கருதுகிறேன்.

அப்படியெனில், அவர்கள் மனத்தை குவித்து நம்மால் எட்டமுடியாத இலக்கை அடைய வாய்ப்புகள் உண்டல்லவா? அவர்கள் கொடுக்கும் அணுகுமுறை அவர்களுக்கு work out ஆனாது என்பதனால் நமக்கும் ஆக வேண்டுமென்ற கட்டாயம் கிடையாதே.

எனது சிந்தனையில் மனிதர்களின் அடுத்த பரிணாமம் என்றால் அது மூளையின், நமது சிந்தனையின் அதீத வளர்ச்சிதான். அது இயற்கையாகவே வசப்படும், இப்பொழுது சில நம் கூட வாழ்ந்த மனிதர்களுக்கு வசப்பட்டது போலவே... நமக்கு காலப்போக்கில்.

ஆனால், இந்த human proto-types என்பவர்கள் நம்முடன் வாழ்ந்த ஒரு contemporary homo sapiensதானே. அதனால், மற்ற சிறு அவர்களின் திரு விளையாடல்களையெல்லாம் மறந்து விடுவோம். மனத்தின் ஆற்றலை ஆராய்வோம், என்பதே எனது நிலை.

Sivabalan said...

இது நல்ல் விசயத்திற்காக...3

Sivabalan said...

//எனது சிந்தனையில் மனிதர்களின் அடுத்த பரிணாமம் என்றால் அது மூளையின், நமது சிந்தனையின் அதீத வளர்ச்சிதான். //

ஏற்க கூடிய சிந்தனைதான்..

Sivabalan said...

இது நல்ல விசயத்திற்காக....4

புதுமை விரும்பி said...

தெகா,

//சுவாமி சிவானந்தவுடனான U.G அனுபவம் படிக்கும் பொழுது, அவருக்கே நெருடல் கொடுக்கும்படி புறச் சூழல் எப்பொழுதும் அமைந்திருக்கிறது நம் எல்லோரைச் சுற்றிலும் என்பது விளங்குகிறது. Is that mean less noticed, is lot more closer to ever be blissful and truthful to him/herself?

இது எனக்கு ஒரு நல்ல புரிதல்... :-)//

அதனால் தானோ என்னவோ, பிரசித்தி பெற்ற மனிதர்கள் சில காலம் இமயமலைக்குள் அல்லது கண்காணாத ஒரு தீவில் வாழ்ந்துவிட்டு வர விரும்புகிறார்கள் போலும்.

Thekkikattan|தெகா said...

//அதனால் தானோ என்னவோ, பிரசித்தி பெற்ற மனிதர்கள் சில காலம் இமயமலைக்குள் அல்லது கண்காணாத ஒரு தீவில் வாழ்ந்துவிட்டு வர விரும்புகிறார்கள் போலும்.//

இமயலத்திற்கு சொல்கிறோம் இல்லை, எதிர்பார்ப்புகளை குறைத்திக்கொண்டலே நிறைய விசயங்களில் தீர்வு காணலாம், நமக்கு நாமே என்று நான் எண்ணுகிறேன்.

ஏதாவது உண்மையான diagnose செய்யப்பட்ட schizophrenic மன நோயாளியுடன் நேரம் செலவழித்ததுண்டா...?

சரி, புதுமை விரும்பி இப்பொழுது நடக்கும் இந்த கருத்துப் பரிமாற்றங்களின் மூலம் தாங்களுக்கு ஏதாவது கிடைத்ததா?

புதுமை விரும்பி said...

தெகா,

//ஏதாவது உண்மையான diagnose செய்யப்பட்ட schizophrenic மன நோயாளியுடன் நேரம் செலவழித்ததுண்டா...?//

எனது மிக நெருங்கிய சொந்தம் ஒருவருக்கு இந்த மன நோய் இருந்தது. அவர், குடிப்பழக்கத்தை திடுமென்று விட்டதனால், இந்த நோய் வந்தது என்று சொன்னார்கள். அவருக்கு, இந்த நோய் இரண்டு வருடங்களுக்கும் மேலாக இருந்தது. அது மறக்கமுடியாத அநுபவம். இப்பொழுது அவர் மிக நன்றாக இருக்கிறார்.

//சரி, புதுமை விரும்பி இப்பொழுது நடக்கும் இந்த கருத்துப் பரிமாற்றங்களின் மூலம் தாங்களுக்கு ஏதாவது கிடைத்ததா?//

முடிவாக, இந்த விவாதத்தை முடித்து வைப்பதற்கு, இது பற்றிய மருத்துவ அறிவியலின் விளக்கம் என்ன என்று பார்க்கவேண்டும். இப்பொழுது பேரானந்த நிலை பற்றி நரம்பியல் (Nueroscience) என்ன சொல்கிறது என்று படித்துக்கொண்டிருக்கிறேன். கொஞ்சம் புரிந்ததும், உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அப்புறம் இந்த பரிமாற்றங்களுக்கு ஒரு முடிவுரை எழுதி விடலாம். சரி தானே?

Thekkikattan|தெகா said...

//எனது மிக நெருங்கிய சொந்தம் ஒருவருக்கு இந்த மன நோய் இருந்தது. அவர், குடிப்பழக்கத்தை திடுமென்று விட்டதனால், இந்த நோய் வந்தது என்று சொன்னார்கள். அவருக்கு, இந்த நோய் இரண்டு வருடங்களுக்கும் மேலாக இருந்தது. அது மறக்கமுடியாத அநுபவம். இப்பொழுது அவர் மிக நன்றாக இருக்கிறார்.//

இந்த வித மன நோய திடீரென்று ஒரு முன்னிரவில் தோன்றுவது கிடையாதே, புதுமை விரும்பி. இது மனோதத்துவியலில் படிப்படியாக ஒரு வண்ணத்துப் பூச்சி வளர்சிதை மாற்றமுறுவது போல படிப்படியாக தொடங்கி அவ் நிலையின் உச்சத்தை அடைவதாக கூறுகிறது.

Thekkikattan|தெகா said...

//இப்பொழுது பேரானந்த நிலை பற்றி நரம்பியல் (Nueroscience) என்ன சொல்கிறது என்று படித்துக்கொண்டிருக்கிறேன். //

இருப்பினும், சிக்மன் ஃப்ராய்டுக்கும், கார்ல் ஜங்குக்கும் இதில் பெரிய அடிதடியே நடந்திருக்கிறது. கார்ல் ஜங்க் இந்த வித மனவியாதியை வேறு மாதிரி ஒரு கோணத்தில் தொட்டுப் போனதை நான் எங்கோ படித்திருக்கிறேன், ஆனால் அந்த தளம் எனக்கு ஞாபகத்தில் இல்லை.

தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை, அதனால் தான் இத்தனை சுனக்கம், உங்களுக்கு பின்னூட்ட மிடுவதற்கு... கீழ் காணும் சுட்டியில் பயணித்து கார்ல் ஜங்குடன் சிறிது உரையாடி வாருங்கள்...

கார்ல் ஜங்

புதுமை விரும்பி said...

தெகா,

//இந்த வித மன நோய திடீரென்று ஒரு முன்னிரவில் தோன்றுவது கிடையாதே, புதுமை விரும்பி. இது மனோதத்துவியலில் படிப்படியாக ஒரு வண்ணத்துப் பூச்சி வளர்சிதை மாற்றமுறுவது போல படிப்படியாக தொடங்கி அவ் நிலையின் உச்சத்தை அடைவதாக கூறுகிறது.//

உங்கள் கருத்துக்களோடு முழுவதும் ஒத்துப்போகிறேன். அதாவது குடிப்பழக்கத்தை அல்லது போதைப்பழக்கத்தை முறைப்படி நிறுத்தவேண்டும். அப்படியில்லாமல், திடுமென்று நிறுத்தும்போது தொடர்ந்த depressed மன நிலை ஏற்படுகிறது. இதைக் கவனித்து சரிசெய்யாமல் விட்டு விட்டால், மன நோயாக மாறிவிடுகிறது. இப்படித் தான் என் சொந்தக் காரருக்கு schizophrenia நோய் ஏற்பட்டது. அவர் வயல்புரங்களில் இரவில் கேட்கும், சந்தங்களை எல்லாம் தனக்கு எதிரான மனிதர்களின் சதி என்று சந்தேகப்படுமளவிற்கு, வீட்டிலுள்ள குத்தீட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் பாயுமளவிற்கு, அந்த நோயின் கொடூரம் இருந்தது.

புதுமை விரும்பி said...

தெகா,

//கீழ் காணும் சுட்டியில் பயணித்து கார்ல் ஜங்குடன் சிறிது உரையாடி வாருங்கள்...

கார்ல் ஜங் //

தகவலுக்கு நன்றி. படித்துவிட்டு வருகிறேன்.

Thekkikattan|தெகா said...

//அப்புறம் இந்த பரிமாற்றங்களுக்கு ஒரு முடிவுரை எழுதி விடலாம். சரி தானே?

ஐயோ. வேண்டாமே. அதற்குள் என்ன அவசரம்?

இந்த மாதிரியான நல்ல பதிவுகள் தொடர்ந்த கற்றலை தரவேண்டும்.//

புதுமை விரும்பி, ம்யூஸ் சொல்வதுதான் சரி, இருப்பினும் தாங்களின் புரிதல் என்ற கோணத்தில் இந்த கருத்து பரிமாற்றத்தில் என்ன கிட்டியது என்பதனை வேண்டுமானல் இங்கு நீங்கள் கொணரலாம். என்பது எனது கருத்து.

Thekkikattan|தெகா said...

//அவர் வயல்புரங்களில் இரவில் கேட்கும், சந்தங்களை எல்லாம் தனக்கு எதிரான மனிதர்களின் சதி என்று சந்தேகப்படுமளவிற்கு, வீட்டிலுள்ள குத்தீட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் பாயுமளவிற்கு, அந்த நோயின் கொடூரம் இருந்தது.//

இப்பொழுது அவர் எவ்வாறு இருக்கிறார், எது போன்ற சிகிச்சை அவருக்கு பயனளித்தது? அவ்வாறு அவர் மனம் குன்றிய நிலையில் இருந்த பொழுது தாங்கள் அவரிடத்தில் சம்பாஷனை செய்ததுண்டா? அவ்வாறு பேசியிருந்தால் இது போன்ற கடவுள் இருப்பு, இறையாண்மை பற்றியெல்லாம் பேசியதுண்ட்டா?

முடிந்தால் இங்கு பகிர்ந்து கொள்ளலாமே...

Thekkikattan|தெகா said...

//அவர் வயல்புரங்களில் இரவில் கேட்கும், சந்தங்களை எல்லாம் தனக்கு எதிரான மனிதர்களின் சதி என்று சந்தேகப்படுமளவிற்கு, வீட்டிலுள்ள குத்தீட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் பாயுமளவிற்கு, அந்த நோயின் கொடூரம் இருந்தது.//

இப்பொழுது அவர் எவ்வாறு இருக்கிறார், எது போன்ற சிகிச்சை அவருக்கு பயனளித்தது? அவ்வாறு அவர் மனம் குன்றிய நிலையில் இருந்த பொழுது தாங்கள் அவரிடத்தில் சம்பாஷனை செய்ததுண்டா? அவ்வாறு பேசியிருந்தால் இது போன்ற கடவுள் இருப்பு, இறையாண்மை பற்றியெல்லாம் பேசியதுண்ட்டா?

முடிந்தால் இங்கு பகிர்ந்து கொள்ளலாமே...

புதுமை விரும்பி said...

தெகா அவர்களே,

//இப்பொழுது அவர் எவ்வாறு இருக்கிறார், எது போன்ற சிகிச்சை அவருக்கு பயனளித்தது? அவ்வாறு அவர் மனம் குன்றிய நிலையில் இருந்த பொழுது தாங்கள் அவரிடத்தில் சம்பாஷனை செய்ததுண்டா? அவ்வாறு பேசியிருந்தால் இது போன்ற கடவுள் இருப்பு, இறையாண்மை பற்றியெல்லாம் பேசியதுண்ட்டா?

முடிந்தால் இங்கு பகிர்ந்து கொள்ளலாமே...

Only if you want to... :-)//

கொஞ்சம் ஊர் சுற்றி விட்டு வந்ததால், தங்களுக்கு உரிய நேரத்தில் பதில் சொல்ல இயலவில்லை. விரைவில், தனிமடலில் உங்களுக்கு இது பற்றிய விவரங்களைக் கொடுக்கிறேன்.

ஆவி அம்மணி said...

ஆவிகள் உலகம் தங்களை அன்போடு வரவேற்கிறது.

ஆவி அம்மணி said...

வந்தது வந்துட்டேன். இதோ என்னால முடிஞ்சது ஒரு 50. ஹி.ஹி.

Related Posts with Thumbnails