Thursday, June 29, 2006

ஐயப்பன் சாமியும் "தீட்டுப்" பெண்களும்...

இது சம்பந்தமான எனது தெளிவினை இங்கு ஆங்கிலத்திலும் இட்டு வைத்திருக்கிறேன், அன்பர்கள் என்னை தவறாக கணிப்பதற்கு முன்பு அங்கும் சென்று வந்து விட்டு விடுங்கள். நன்றி!

இப்பொழுது செய்திக்கு போவோம்...

இது ரொம்ப நாட்களா எனக்கு பிடிபடவே இல்லை. நான் சின்ன பையனா இருக்கிறப்ப, எங்க பார்த்தாலும் நிறைய ஆத்மாக்கள் திடீர்னு மகாத்மாவ ஆயி காவி வேஷ்டியும் நெத்தி நிறைய சந்தனப் பட்டையுமா திரியறதைப் பார்க்கிறது உண்டு. ஆனா, ஆண்கள் மட்டும்தான் அந்த ஆட்டத்தில சேர்த்தி, பெண்களுக்கு கிடையாது, ஏன்னு கேட்டேன் அப்ப சொன்னப்ப புரியல (தீட்டு அது இதுன்னு... இப்பவும் கூடத்தான்).

இதிலென்ன இன்னொரு முக்கியமான விசயமுன்னா பட்டை (இந்த பட்டை அந்தப் பட்டை இல்லைங்கோவ்..) அடிக்கிற ஆசாமிகள் எல்லாம் அத நிறுத்திப் புட்டு நல்ல புள்ளையா சங்கதியா நேரம் தவறாம சாப்பிட்டு குளிச்சு என்னன்னமோ செய்வாங்க, அந்த நேரத்திலே (இப்போ ஐயப்பன் சாமீ கொஞ்சம் அது மாதிரியான ரூல்ஸைக் கூட தளர்த்திக்கிட்டு வாரதா கேள்வி). எப்படியோ நல்லா இருந்தா சரி!

வந்த விசயத்தை விட்டுப்புட்டு நான் எதையோ பேசிகிட்டு இருக்கிறேன். நேத்தைக்கு ஒரு செய்தி யாரோ ஒரு கன்னட நடிகை ஐயப்பா சாமியை சபரிமலையில வைச்சு தொட்டு கும்பிட்டு தீட்டு பண்ணிப்புட்டாராம்.

இப்போ ஐயப்பன் டென்ஷன்ல ஆம்பிளை பக்தர்களை பார்த்து இதெல்லாம் அதட்டி உருட்டி கேட்க மாட்டீங்களப்பா அப்படின்னு கேட்டதற்கு, நம்ம ஆளுங்க சாமி சார்பா, சாமீயை இந்தம்மா தீட்டு பண்ணிப் புடுச்சு அப்படின்னு சொல்லி கோர்ட்ல கேஸ் எல்லாம் போடப் போறதாக் கேள்வி.

அது சரி, இது என்ன சாமீ ஆம்பிளைக்கு ஒரு ரூல்ஸ் அப்புறம் பெண்களுக்கு ஒரு ரூல்ஸ் வைச்சுருக்காரு... இது என்னிக்காவது பிரட்சினையாகப் போகுதுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன், இந்த அம்மா அதத் தொடங்கி வைச்ச மாதிரி இருக்கு இப்போ. இந்த பெண் உரிமை மீறல் அது இதுன்னு என்னமோ சொல்லிக்கிட்டு இருக்கிற அம்மாக்கள் எல்லாம் என்ன பண்ணப் போறங்க இந்த விசயத்திலே பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

இங்கு கூட இதனைப் பற்றி பேசி வருகிறார்கள்...

52 comments:

துளசி கோபால் said...

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானா(ரா)ம் ......?

Thekkikattan|தெகா said...

துள்சிங்க,

ஹி...ஹி...ஹி அப்படித்தான் தெரியுது, பார்க்கலாம் என்ன நடக்கப் போகுதுன்னு. எத்தனை பேரு அந்த காட்டு வழியா போயி ஐயப்பனை தரிசிக்க காத்துகிடக்காங்க (பெண்கள் ;-)

VSK said...

இதைப் பற்றி நபிக்கையோ, அல்லது சம்பந்தமோ இல்லாத உங்களுக்கு ஏன் இதில் இவ்வளவு அக்கறை!
சம்பந்தப்பட்டவர்கள் இதை நேர்கொள்ளட்டும்.
இது மாதிரி ஏதாவது எழுதி பிறகு என்னவாவது நடந்ட்தால் 'அதிகம்' வருத்தப்படப் போவது நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தாரோகத்தான் இருக்கும்!
தேவையா உங்களுக்கு?
இதில் ஒன்றைக் கவனித்தீர்களா?
இதைச் சொன்னவர் ஒரு ப்ரஸ்னக்காரர், அதாவது குறி சொல்பவர்.
சொன்னது ஐயப்பன் சன்னிதானத்தில்.
அவர் துல்லியமாகச் சொன்ன பின்னரே, இந்த நிகழ்வு வெளி வந்திருக்கிறது.
ஒத்துக்கொண்டு சொன்னவரும் கடவுள் மேல் நம்பிக்கையும் பயமும் உள்ள ஒரு பெண்.
தெரியாமல், எப்போதோ நடந்த ஒரு நிகழ்வு வெளிபட்டுவிட்ட அச்சத்தில், தெய்வ குற்றம் வந்து விடக் கூடாதே என அவரும் சொல்லியிருக்கிறார்.
இதைப் பற்றி ஆய்வுகளும், விவாதங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த நேரத்தில், கொஞ்சம் அமைதி காத்து, "உங்களையும் காத்துக் கொள்ளுமாறு", ஐயப்ப பக்தன் என்ற முறையில், உங்களையும், "மற்றவரையும்" பணிவோடு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

Thekkikattan|தெகா said...

எஸ்.கே அவர்களே,

நான் யாரையும் புண்படுத்தும் என்னத்துடன் இதனை எழுதவில்லை. இது ஒரு செய்தி விமர்சனமே.

சன் ட்டி.வியிலும் ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்படும் ஒரு விசயத்தை இங்கு இட்டு வைத்திருக்கிறேன். அவ்வளவே.

கடவுள் எந்த நேரத்திலும் எல்லோரையும் கருணையுடன் வழி நடத்தி செல்பவனே என்பது எனது நம்பிக்கை... முடிந்தால் இங்கும் சென்று பாருங்கள்,

http://orani-sittingby.blogspot.com/2006/06/religion-and-spirituality-could-ever.html

இன்னும் நீங்கள் உங்கள் பதிவில் இட்டிருந்த எனது கேள்விக்கு பதில் வழங்கவில்லையே, ஐயா!

Thekkikattan|தெகா said...

/இதைப் பற்றி நபிக்கையோ, அல்லது சம்பந்தமோ இல்லாத உங்களுக்கு ஏன் இதில் இவ்வளவு அக்கறை! //

நீங்களே என்னைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்து விட்டது மாதிரி தெரிகிறதே, இங்கு என்ன நடக்கிறது என்பதே சில நேரங்களில் எனக்கு விளங்குவது கிடையாது. அது அப்படி இருக்க நீங்கள் வேற அக்கறை அது இதுவென்று கூறுகிறீர்கள்...

மீண்டும் ஒரு முறை உங்களுக்காக "நான் கடவுளை நேசிப்பவன்," "கடவுளை கண்டு பயப்படுபவன் இல்லை."

இப்பொழுது நீங்கள் கூறிவிட்டீர்கள் கூறாமல் "மதம்" என்பது வேறு "ஆன்மீகம்" என்பது வேறு என்பதனை. நன்றி!

Anonymous said...

ஐ,,,யப்பா.... கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி தினமணில 'சபரி மலைக்கு வாருங்கள் சகோதரிகளே' ன்னு ஒரு கட்டுரை வந்தது... சபரிமலைக்கு சிறுமிகளும், தீட்டு ( !?) தீர்ந்து போன வயதான பெண்களும் மட்டுமே செல்லவேண்டும் என்னும் முட்டாள்தனத்துக்கு எதிராக. கிடைத்தால் வாசியுங்கள். புத்தி தெளியும். புலிப்பால் விரும்பும் ஐயப்பன் பெண்பால் என்றால் புலம்புவது ஏனென்று தெரியாமல்.....

வானவராயன்

Thekkikattan|தெகா said...

D and D

//செய்திகள்-ல அந்த நடிகையோட பேட்டிய பாத்தேன். அவங்க ஒண்ணும் அச்சத்திலயோ, தெய்வ குற்றம் வந்து விடக் கூடாதேன்னு நெனச்சோ சொல்லற மாதிரி தெரியலை. ஏதோ பப்ளிசிட்டி தேட முயற்ச்சிக்கறார்ன்னு தான் தோணுது. //

நானும் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன் ட்டி.வியெல. இங்கு அதனை முன் வைத்தற்கு நன்றி.

சாமியை பார்த்து பயந்தால் பிறகு எதற்கு காத்தும், கருப்பும் vs தெய்வமும்?

மறு பிறப்பின் நோக்கம் என்ன? தன்னுள் Universal Consciousness உணர்ந்து மூலத்திடன் கலப்பதற்குத் தானே? ஒரே குழப்பமா இருக்குங்க?

VSK said...

நான் சொன்னதை நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டு இருக்கிறீர்கள்.
ஆன்மீகமும் மதமும் வேறு வேறுதான்.
ஆனால், ஏதோ ஒரு புள்ளியில் இரண்டும் அவ்வப்போது வந்து தொட்டுச் செல்லும்.
ஏனெனில், மதங்கள் பிறந்ததே ஆன்மிகத்தை ஒரு முறையாகச் சொல்லலாமே, பழகலாமே என்ற நல்லெண்ணத்தில்ல்தான்.
பிறகு, அவையெல்லாம் வழிதவறிப் போனது ஒரு பெரிய சோகம்.
தெய்வத்தைக் கண்டு பயப்படச் சொல்லவில்லை நான்.
"நேசிப்பவருக்குக்" கொடுக்கவேண்டிய மரியாதையைக் கொடுங்கள் என்றுதான் சொல்லுகிறேன்

ஏதோ,என்னவோ நடந்து கொண்டிருக்கிறது இந்த நிகழ்வில்.
அவசரப்பட்டோ, தேவையின்றியோ, இதில் ஒரு கருத்து என்பதைச் சொல்லி குழப்ப வேண்டாமே என்ற நல்லெண்ணத்தில்தான் அவ்வாறு சொன்னேன்.
பிடிக்கவில்லையெனில் விட்டுவிடவும்..

[பி.கு.] உங்கள் கேள்விக்கு நேரமின்மையால் எழுதமுடியவில்லை. இந்த 3 விடுமுறை நாட்களில் எழுதி விடுகிறேன்.

Boston Bala said...

சபரிமலை கோவிலை யார் நிர்வாகம் செய்யப் போகிறார்கள் என்னும் உள் அரசியல் போல் தெரிகிறது. ஜெயமாலாவுக்கு சிவப்பு உதட்டுச்சாயம் நன்றாக இல்லை. நடிப்பில் முதிர்ச்சி தேவை.

இலவசக்கொத்தனார் said...

தெக்கி,

கடவுள் அனைவருக்கும் சமம், அதில் ஏன் இந்தப் பாகுபாடுன்னு நீங்க கேட்க வரீங்க என்பதுதான் எனது புரிதல்.

இந்த மாதிரி மத சம்பந்தப்பட்ட பதிவுகள் எழுதும் போது அதிகம் அடுத்தவங்க மனது புண்படறதுக்கும் உணர்ச்சி வசப்படறதுக்கும் வாய்ப்புகள் அதிகம். இதுனால கவலை இல்லைன்னு எழுதறவங்க எப்படி வேணா எழுதலாம்.

ஆனா அடுத்தவங்க உணர்வுகளுக்கு (அது சரியோ தப்போ)மதிப்பு குடுக்கறவங்க, தான் சொல்ல வரும் விஷயத்தை கொஞ்சம் நிதானமா நாசூக்கா சொல்ல முயல்வாங்க.

நீங்க எந்த பிரிவில் சேரணுமுன்னு உங்களுக்கு ஆசைன்னு எனக்கு தெரியது. ஆனா நான் நினைச்ச வரையில் நீங்க இரண்டாவது லிஸ்ட்தான்.

ஆனா இந்த பதிவு போடும் போது கொஞ்சம் அவசரப் பட்ட மாதிரிதான் தெரியுது.

கேரளா கோவில்களில் பல விதிமுறைகள் இருக்கின்றன. ஆண்கள் சட்டை அணியக்கூடாது, வேஷ்டி அணிய வேண்டும், பெண்கள் மேல்நாட்டு வகை ஆடைகள் அணியக்கூடாது, ஏன் இந்து தவிர மற்ற இனத்தவர் வரக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

இதெல்லாம் சரியா தவறா என்பது பற்றிய விவாதங்கள் நடந்து அவ்விதிகள் மாறும் வரை அவைகள்தான் விதிகள். அவற்றை நாம் மதித்துதான் ஆகவேண்டும். அல்லது தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாக வேண்டியதுதான். அவ்விதிகளை மதிக்காமல் மீறினால் அது தவறுதான். அதற்கான நடவடிக்கைகள் எடுத்துதானாக வேண்டும். இதுதான் நடந்து கொடிருக்கிறது.

ஏன் இவ்விதிகள் செய்யப்பட்டன, அக்காரணங்கள் இந்நாளில் தேவையானவைதானா என்றெல்லாம் விவாதிக்காமல் கிண்டலாக அந்நம்பிக்கை உடையோரைப் புண்படுத்தும் விதமாகவே இப்பதிவு வெளிவந்துவிட்டதாவே எனக்குத் தோன்றுகிறது.

அதனால்தான் எஸ்.கே. போன்ற ஆன்மீக அன்பர்கள் இவ்வளவு வருத்தமும் கோபமும் அடைந்துள்ளார்கள் எனவே தோன்றுகிறது. அதுமட்டுமில்லாமல் இது வேறு சிலரிடமிருந்து எதிர்பார்ப்பதே. ஆனால் உங்களிடமிருந்து அல்ல என்பது அவ்வருத்தத்தை மேலும் கூட்டுவதாக அமைந்துள்ளது.

அரோக்கியமான விவாதங்களின் ஆரம்பம் அனைவரையின் சிந்தனையைத் தூண்டுவதாகவே அமைய வேண்டுமே தவிர கோபத்தைத் தூண்டுவதாக இல்லை.

இது என் கருத்து. நண்பரென்ற முறையில் சொல்ல வேண்டுமெனத் தோன்றியது. சொல்லிவிட்டேன். இதனால் நீங்கள் மனம் வருந்தினீர்கள் என்றால் எனது வருத்தங்களும் கூட.

VSK said...

புரிதலுக்கும், அருமையான விளக்கப் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி, இ.கொ.

Sivabalan said...

தெகா

இன்னும் கொஞ்சம் பொருமையாக இருங்கள்.... இந்த சபரிமலை பற்றி ஜாலியான செய்தி நிறையாக வரும்..

படிப்போம்... சிரிப்போம்... சிந்திப்போம்...

நாகை சிவா said...

இலவச கொத்தனார், மிக விரிவாக எடுத்து கூறி விட்டார். ஆனால் அவர் போல் வருத்தம் எல்லாம் தெரிவிக்க போவது இல்லை. உங்களுக்கு சரியன பட்டதை தாங்கள் கூறும் போது, எங்களுக்கு சரி என படுவதையும் தாங்கள் காது குடுத்து கேட்பீர்க்கள் என எண்ணுவதால்.

Thekkikattan|தெகா said...

இங்கு எனக்கு என்ன புரியவில்லையென்றால், கடவுள் பாரபட்சமின்றி எல்லோருக்கும் எல்லா திசைகளிலும் அருள் புரிகிறான் என்றால் ஏன் இத்தனை கட்டுப் பாடுகள், பிரிவினைகள்?

இந்த கட்டுபாடுகளும் பிரிவினைகளும் தானே மற்ற ஏனையவற்றிர்கும் அடி கோலிடுகிறது. நான் வயதில் சிறியவன் அனுபவங்களையும், வாழ்வு நடைமுறைகளையும் கவனித்து வளரும் பொருட்டு எனக்கு எழும் வாழ்வியல் சார்ந்த முரண்பாடுகளை இங்கு கொணரக் கூடாதா?

அப்படிக் கொணர்ந்தாலும் விபரம் தெரிந்தவர்கள் முறையான வழியில் இது ஏன் அப்படி என்று எடுத்துரைப்பதில் என்ன வந்து விடுகிறது. அப்படி வினா எழுப்புவதே "தெய்வக் குற்றமாகிவிடும்" என்று ஒற்று வார்த்தையில் அமுக்கி வைத்து விட்டால் கிடைப்பது தெளிவா, அல்லது குழப்பமா?

நான் மதங்களுக்கு எதிராளி கிடையாது. அவர்களின் உணர்வுகளை மதிப்பவன் தான், இருப்பினும் முரண்பாட்டு கோட்பாடுகளை நானே எனது வாழ்வில் சந்திக்கும் பொழுது கண்ணை மூடிக் கொண்டு குருடன் காட்டுக்குள் நடப்பதை போல மீண்டும் மீண்டும் சொல்லமல் இருக்க கேள்விகள் கேட்டு தெளிவுறுவது தவறா?

வன்முறை கூடவே கூடாது என்று மதங்கள் போதிக்கின்றன, இதனையேத்தான் நாமும் நமது குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறோம்... ஆனால் மற்றொரு முனையில் மதம் என்ற போர்வையில் ஏன் இவ்வளவு இரத்தம் சிந்தப் படுகிறது? முரண்பாடுதானே?

உண்மையிலேயே நான் புரியாமல் தான் இதனை இங்கு கேட்டு வைக்கிறேன்.

நம்முடன் சேர்ந்து அனைத்திலும் பங்கு கொள்ளும் அம்மா, சகோதரி, மகள், துணைவி அன்றாட வாழ்க்கையில் கூடவே வரும் அவர்களிடத்தேயும் பிணக்கங்களை எழுப்பும் இது போன்ற "சமாச்சாரங்களை" அந்த கடவுள்தான் எழுப்பச் சொன்னரா?

அரசியல் எல்லா இடத்திலும் நடத்தினால் வாழ்க்கையை யார் நடத்துவது?

Thekkikattan|தெகா said...

//ஆன்மீகமும் மதமும் வேறு வேறுதான்.//

இந்த தெளிவை வழங்கியதற்கு நன்றி. எஸ்.கே. இனிமேல் நான் ஒரு "ஆன்மீகன்." உண்மையை நாடுபவன் மட்டுமே.

//ஆனால், ஏதோ ஒரு புள்ளியில் இரண்டும் அவ்வப்போது வந்து தொட்டுச் செல்லும்.//

இதனையும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் "அவ்வப்போது" மட்டுமே என்பது பெரிய இழப்பு தானே எஸ்.கே, ஐயா.

நான் ஒரு கோவிலுக்கு போகும் பொழுது அங்கு என்னிடம் பொருள் இருந்தால்தான் அர்ச்சனையோ அல்லது தட்டில் பணமோ போட முடியும், அது இல்லாத பட்டசத்தில் வெறுமானே கடவுளை எனக்குச் சென்று வணங்க உரிமை உள்ளதா, இல்லையா?

அவ்வாறு சென்று தரிசிக்கும் பொழுது நான் "பிரிக்கப்படுவது ஏன்," தட்டில் தட்சினை போடவில்லையென்றால் ஏன் அடுத்த முறை போகும் பொழுது ஏற இறங்க பார்க்கப்படுகிறேன். அச் சூழலில் என் கண்களுக்கு முன்னால் எது நிற்கிறது?

//"நேசிப்பவருக்குக்" கொடுக்கவேண்டிய மரியாதையைக் கொடுங்கள் என்றுதான் சொல்லுகிறேன்..//

கொடுக்கிறேன், கொடுத்துக் கொண்டும் உள்ளேன். இங்கு ஒரு சிறு கதையும் ஞாபகத்தில் வந்து போகிறது.

இது ஒரு புத்த மதத்தை சார்ந்தது. ஆனால் பொருள் இருக்கிறது. சில புத்த சீடர்கள் நீண்ட தொலைவு நடந்து கலைத்து ஒரிடத்தில் தங்கி ஒய்வெடுக்கலாம் என்று சுற்றி முற்றியும் பார்க்கும் பொழுது, அவர்கள் கண்ணில் பட்டது ஒரு புத்தக் கோவில் அங்கு சொன்று இடம் தேடினார்கள் படுத்துகொள்வதற்காக. அப்படி தேடும் பொழுது எல்லா திசைகளிலும் புத்தச் சிலையா நின்று கொண்டிருந்தது, எந்த திசையில் தலைவைத்து படுத்தாலும் கால் மற்றொரு புத்தச் சிலையை நோக்கியே இருந்ததை கண்டு என்ன செய்வது என்று தெரியாமல், அதில் ஒருவர் கோவிலிருந்து வெளிப்பட்டு வெளியே வந்தார். கடும் குளிரும் கூட, வெளியே.

அப்படி வந்த பொழுதுதான் தூரத்தில் ஒருவர் நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டிருந்தது தெரிந்தது. அவரிடத்தில் சென்று பார்க்கும் பொழுது அவர் மரத்தாலான புத்தர் சிலைகளை உடைத்து வைத்துக் கொண்டு நெருப்பில் போட்டு குளிர் காய்வதற்கு பயன்படுத்துவது தெரிய வந்தது. நமது சீடர் அரண்டு போய் சுவாமி என்னா செய்கிறீர்கள்... இப்படி கொஞ்சம் கூட புத்தரின் மேல் மரியாதையும் பயமில்லாமல் இப்படி ஒரு பாதகச் செயலில் ஈடுபட்டு இருக்கிறீர்களே என்று அவரிடம் வினாவும் பொழுது அவர், ரொம்ப அமைதியாக கூறியிருக்கிறார், சுவாமி, புத்தர் எல்லா இடத்திலும் நிறைந்திருக்கிறார் தானே, அப்படியெனில் தாங்கள் காட்டும் மரியாதையின் நிமித்தம் நீங்கள் எதுவுமே தினப்படி செய்யும் செயல்களை கூட செய்ய முடியாது அல்லவா?

எனவே அவர் கூறிய கருந்து, புத்தர் மனத்திற்குள் உண்மையான பக்தியுடன் வீற்றிருந்தாலே நீங்கள் செய்யும் புற வேலைகளைப் பற்றி ஐயமுற வேண்டியதில்லை என்பதே. அதற்காக நடுங்கும் குளிரில் வதைப்பட்டு சாவு என்று அந்த கடவுளின் புரிதல் நன்று அன்று.

எல்லா ஜீவ ராசிகளும் மகிழ்வுடன் இருப்பதற்கே எத்தனிக்கின்றன, அதனை எப்படி அடைவது என்பதில்தான் இத்தனை நடைமுறை சிக்கல்களும். தன்னையறிந்து சுயத்தை அடைவது என்பது, மிகவும் எளிமையான ஏற்றுக் கொள்ளதக்க வழிமுறையாக எனக்குப் படுகிறது.

Santhosh said...

//அரசியல் எல்லா இடத்திலும் நடத்தினால் வாழ்க்கையை யார் நடத்துவது?//

இது ஒரு நல்ல கேள்வி ஆனா பதில் தான் தெரியலை தெ.கா. இந்து மதத்தின் பலம்/பலவீனமே நிறைய விஷயங்களை தெய்வ குற்றம் என்ற பெயரில் மறைத்து வைப்பது தான். வெங்கட்ரமணன் என்று நினைக்கிறேன் அவர் தன்னுடைய ராமாயணம் குறித்த பதிவில் இதற்கு பதில் அளித்துள்ளார் படிச்சித்தான் பாருங்களேன்.

இலவசக்கொத்தனார் said...

தெக்கி,

//நான் ஒரு கோவிலுக்கு போகும் பொழுது அங்கு என்னிடம் பொருள் இருந்தால்தான் அர்ச்சனையோ அல்லது தட்டில் பணமோ போட முடியும், அது இல்லாத பட்டசத்தில் வெறுமானே கடவுளை எனக்குச் சென்று வணங்க உரிமை உள்ளதா, இல்லையா? //

எல்லாருக்கும் அந்த உரிமை உள்ளது. ஆனால் கடவுளை வியாபாரமாக்கும் இடங்களில் பணம்தான் பேசும். எத்தனையோ கோவில்களில் ஆள்வராமல் நீங்கள் சென்றாலே மகிழும் நிலமையில் இருக்கிறார்களே. அங்கு நீங்கள் சென்றால் நல்ல மரியாதை கிடைக்குமே.

நான் அதிகம் கூட்டம் இருக்கும் ஆலயங்களுக்கு செல்வது இல்லை. ஏனென்றால் அங்கு எனக்கு கடவுளிடம் பேசத் தேவையான அமைதி இருப்பதில்லை.

கடவுளின் முன் நிற்கும் பொழுது எதற்காக எந்த விதமான மரியாதையை எதிர்பார்க்க வேண்டும். அப்படி ஒரு சூழலில் நமக்கு தான் என்ற அகந்தை இருக்கக்கூடாதென்பதற்காக அவன் செய்யும் செயலாக இதை ஏன் நினைக்கக் கூடாது?

எதோ சில இடங்களில் நடந்த நிகழ்வுகளால் நீங்கள் இப்படி நடக்கும் எல்லாமே தவறென்பது மூட்டைப்பூச்சிக்காக வீட்டையே கொளுத்துவது போலத்தான் இருக்கிறது.

வஜ்ரா said...

தேக்கிட்டான்,

சிறப்பு...சொல்ல வந்ததை சிறப்பாகச் சொல்லியதற்கு...

எங்கே...இதே அளவு கோலுடன் ஜுமா மசூதியில் ஜுமாவின் போது "தீட்டு" காரணமாக பெண்கள் அனுமதிப்பதில்லை. அல்லது, அவர்கள் தனியாக எங்கோ தூரத்தில் பிரார்த்திப்பதைப் பற்றி ஒரு பதிவு போட்டு உங்கள் மதச்சார்பின்மையை நிலைநாட்டிவிடுங்கள்... இல்லை என்றால் என்னைப் போன்ற மதவாத இந்துத்வாவாத இந்து அடிப்படைவாத மிருகங்கள் உங்களை சும்மா விடாது...!

Thekkikattan|தெகா said...

வஜ்ரா,

//எங்கே...இதே அளவு கோலுடன் ஜுமா மசூதியில் ஜுமாவின் போது "தீட்டு" காரணமாக பெண்கள் அனுமதிப்பதில்லை. அல்லது, அவர்கள் தனியாக எங்கோ தூரத்தில் பிரார்த்திப்பதைப் பற்றி ஒரு பதிவு போட்டு உங்கள் மதச்சார்பின்மையை நிலைநாட்டிவிடுங்கள்....!//

என் வீட்டிற்குள் ஏன் இப்படி நிறையெ விசயங்கள் இருக்கு, ஆனா எதுக்கு இருக்குன்னு தெரியலேயே அப்படின்னு தெரிஞ்சுகிறதுக்கு முன்னாடி, நீங்க வேற என்னன்னோமோ சொல்றீங்க...

//இல்லை என்றால் என்னைப் போன்ற மதவாத இந்துத்வாவாத இந்து அடிப்படைவாத மிருகங்கள் உங்களை சும்மா விடாது...!//

என்னங்க இப்படி வந்து சொல்றீங்க... நான் எல்லா மனுஷனிலும் இறைவனை காண முடியும்தானே அதுதானே எல்லா மதமும் சொல்லுதுன்னு ஒரு அடிப்படையான புரிதலெ வைச்சுகிட்டு இங்கன ஒரு கேள்வியெ கேட்டா நீங்க... மிருகம் அப்படி இப்படின்னு சொல்லி பயமுறுத்திறீங்க...

நான் என் வீட்டாண்ட நடக்கிற விசயத்தை மட்டும்தான் பேசிகிட்டு இருக்கேங்க...

உங்க விளையாட்டுக்கு நான் வரலே... அந்த அளவிற்கு நமக்கு உலக அறிவு பத்தாது. இங்கு இடுவது எல்லாமே ஒரு அடிப்படை புரிதல் சார்ந்த கேள்வியே... என்னை வளர்த்துக் கொள்வதற்கு... மற்றபடி எதுவும் என்னை இன்னும் "பிடி"த்துக் கொள்ளவில்லை.

நன்றி!

வஜ்ரா said...

சாய் சுரேஷ் சிவசுவாமியின் இந்த வலைப்பூ கட்டுரையைப் பார்க்க.


It�s never easy to abandon tradition, especially one that harks back to divine sanction. It�s never easy to be a reformer. Raja Rammohan Roy must have faced the worst opposition imaginable when he set out to abolish Sati, a barbaric act if ever there was one. Even that was given religious sanction.

Everything sanctioned by religion need not be right, or at times even humane. Most of the dictates are mere convenient tradition established by self-seeking upper caste men, the priestly class. To tie something ennobling as religion to such practices does neither the religion, nor its adherents, any good.

Untouchability, and the iniquitous caste system it was part of, was given a religious colour. Does it make the horrible practice any more acceptable?

The poor state of widows was given a religious colour. Does it make their suffering any more acceptable, or does it make the religion abhorrent?

Among all such dogma that abounds in this country, the worst is denying women equality � be it worship at temples, right over property, or something as common as keeping them away as impure during menstruation. I would think if there is a god and that god sanctioned the denial of equality to women, that god must be the most ungodly entity.

Thekkikattan|தெகா said...

பாலா,

//சபரிமலை கோவிலை யார் நிர்வாகம் செய்யப் போகிறார்கள் என்னும் உள் அரசியல் போல் தெரிகிறது. ஜெயமாலாவுக்கு சிவப்பு உதட்டுச்சாயம் நன்றாக இல்லை. நடிப்பில் முதிர்ச்சி தேவை.//

தாங்கள் ஒரு செய்தி தொகுப்பாளர் என்பதனை தனது இரண்டு வரிகளிலேயே காட்டிவிட்டீர்கள். :-)

கொஞ்சம் நகைச்சுவை, நிறையெ உண்மைகள். எங்குதான் அரசியல் இல்லை, ஒருவருடன் ஒருவர் பிணக்குரும் பொழுது சில விசயங்கள் வெளியே வந்து விடுகிறது. அதுதான் இங்கும் நடப்பது போல. நன்றி! உங்களின் பகிர்தலுக்கு.

G.Ragavan said...

தெக்கி, நானும் இது பற்றிப் பதிவு போட வேண்டும் என்று இருந்தேன். விழுந்து எழுந்தப்புறம் கைவலி பாருங்க...உங்க பதிவு பாத்தாச்சுல்ல. பின்னூட்டமாவது போட்டுறலாம்னு வந்தேன்.

உங்க கருத்து நல்ல கருத்துதான். என்னோட கருத்தும் அதுதான். ஆனா நீங்க சொன்ன விதம் சிலர் மனதைப் புண்படுத்தியிருக்குன்னு நினைக்கிறேன். அதுனால சொல்ல வர்ரத நாசூக்கா வாழப்பழத்துல ஊசி ஏத்துற மாதிரி சொன்னா நல்லாயிருக்கும்னு நான் நெனைக்கிறேன்.

சரி. என்னோட கருத்துக்கு வர்ரேன். இந்தப் பெண்கள் போகக் கூடாது. பெண்களுக்குத் தனி வழிபாட்டு இடம்....இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.

கறையான் தின்னா நெருப்பு அணையும்? ஈ குடிச்சா கடல் வத்தும்? உலகத்தையெல்லாம் கடந்தும் அதுக்கு உள்ளும் இருக்கிற கடவுளைக் கேவலம் மனிதன் தொட்டுத் தீட்டாக்க முடியுமா? நமது மனமாயைதான் இது.

சபரிமலைன்னு இல்லை. எல்லாக் கோயில்களிலும் இந்த நிலை மாறனும். கண்டிப்பா மாறனும்.

ஆனா ஜெயமாலா பேசுறது நம்புற மாதிரியே இல்லை. பொய் சொல்ற மாதிரி இருக்கு. சினிமா நடிகைங்குறதால விஷயம் இவ்வளவு பத்திக்கிட்டு எரியுது. இதெல்லாம் லோக்கல் பாலிடிக்ஸ். அது ஏன் சன் டீவீல மட்டும் வருது? ஜெயமாலா ஏன் கன்னடத்துல சொல்லாம, ஒடஞ்ச தமிழ்ல சொல்றாங்க? இவையெல்லாம் கூட நல்ல கேள்விகள் இப்போ.

G.Ragavan said...

இறைவன் அனைவருக்கும் பொதுவானவர். அப்படித்தான் பாக்கனும். அன்போடு அணைத்துக் காப்பதுதான் அவன் கடமை.

இன்னும் நெறைய எழுதனும்னு பாக்குறேன். கைவலிக்குது. முருகா...சீக்கிரமா கைவலி தீத்திரப்பா.

Thekkikattan|தெகா said...

இ.கொ,

நல்லா எழுதுறீரு நீவிர், நல்லது.

//அவ்விதிகளை மதிக்காமல் மீறினால் அது தவறுதான். அதற்கான நடவடிக்கைகள் எடுத்துதானாக வேண்டும். இதுதான் நடந்து கொடிருக்கிறது. //

யாருங்க இந்த "விதி"களையெல்லாம் எழுதுனுது அல்லது முதன் முதலில் அமுல் படுத்தியது.

கடவுளை தரிசிக்கப் போகும் இடத்தில் எதற்கு ஐயா இந்த ஏற்ற இறக்கமெல்லாம்.

எனக்கு என்னமோ கடவுள் இதையெல்லாம் கேட்டு வாங்கி கொண்டது போல தெரியவில்லை.

நண்பர் ராகவன் அவர்கள் மிக்க வலி சிரமங்களுக்கிடையே சில நல்ல விசயங்களை முன் வைத்திருக்கிறார், அதனையும் படித்துப் பார்க்கவும்.

ராகவன் நான் உங்களுக்கு தனியாக பின்னூட்ட மிடுகிறேன், படிக்க படிக்க :-)

துளசி கோபால் said...

தெ.கா,

உங்க 'புத்தர்' கதையைப் படிச்சதும் எனக்கும் ஒரு கதை நினைவுக்கு வருது. அதைச் சொல்லாம
விட்டாப் பாவம் வந்துருமேன்ற பயத்துலே சொல்லிட்டேப் போயிடறேன்:-))))

நம்ம அவ்வையார் இப்படி ஊரூரா நடந்து போய்க்கிட்டு இருந்த காலத்துலே ஓய்வெடுக்க
ஒரு கோயில்லே போய் உக்கார்ந்தாங்களாம். நடந்து நடந்து காலெல்லாம் வலி.

கொஞ்ச நேரம் கண்ணயரலாமுன்னு படுத்தாங்க. அப்ப ஒருத்தர், அங்கே பூஜை செய்யறவர்
பார்த்தார். அவருக்கு ஒரே கோபம்.ஏன்னா ,அவ்வையார் காலை நீட்டி இருந்தது சாமி சிலை
இருந்த திசையில்.

" ஏய் கிழவி. வயசாச்சே தவிர புத்தி இல்லாமப் போச்சே உனக்கு. இப்படியா சாமி இருக்கற
பக்கம் பார்த்துக் காலை நீட்டுறது? ஒரு மரியாதை வேணாமா?"

" ஐய்யய்யோ. மன்னிச்சுக்குங்க பூசாரி ஐயா. கொஞ்சம் சாமி இல்லாத திசையைக் காமிச்சீங்கன்னா
அந்தப் பக்கம் காலை நீட்டிக்கிறேன்"

அப்புறம் என்ன நடந்துருக்கும்ன்றது உங்க ஊகத்துக்கு.

VSK said...

நண்பர் தெ.கா. அவர்களே,
நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான்.
ஆனால், ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்!
ஆன்மீகம் பேசுகிறவற்கு மதம் தேவையில்லை.
ஆனால் மத நம்பிக்கை உடையவற்கு ஆன்மீகம் இன்றியமையாதது.
இதை நீங்களும், ராகவனும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டும் புரிந்தவன், இதைக் கேள்வி கேட்க மாட்டான்.
மதத்தை மட்டும் நம்புபவன், இன்னின்னது, இப்படித்தான் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாய் இருப்பான்.
ஆனால், ஆன்மீகம் மட்டும் போதுமென்பவன், ஏன் நான் சென்று தொடக்கூடாது எனக் கேட்க மாட்டான்.!!!!
ஏனென்றால், அவன் ஆன்மீகத்தை அறிந்து கொண்டவன்!
இந்த இரண்டும் கெட்டான் என்கிறார்களே, அவர்கள்தான் பரிதாபத்துக்கு உரியவர்கள்!


எது ஆன்மீகம், எது மதம், எது மத மறுப்பு, எது சரியான வழி என்று தெரியாமல் குழம்புபவர்!

மதம் வேறு!
ஆன்மீகம் வேறு!
நாத்திகம் வேறு!

நீங்கள், துளசி கோபால் போன்றவர் இது மாதிரி உருவகக் கதைகள் சொல்வதெல்லாம், ஒருவித தப்புவித்தலே!
கண்ணதாசன் அன்று பாடிய பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது!!

"ஓஹோஹோஹோ மனிதர்களே!
ஓடுவதெங்கே சொல்லுங்கள்!
உண்மையை விற்று
பொய்களை வாங்கி
உருப்பட வாருங்கள்!"

பொன்ஸ்~~Poorna said...

// இந்தப் பெண்கள் போகக் கூடாது. பெண்களுக்குத் தனி வழிபாட்டு இடம்....இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.
//

இந்த விஷயத்தில் 100% ராகவனோடு ஒத்துப் போகிறேன்.. 12 வயதுவரை சபரிமலைக்கு வருடம் தவறாமல் சென்று வந்த என்னை அதற்குப் பிறகு வரக் கூடாது என்று தடை விதிக்கப் பட்டதால், எனக்கு ஐயப்பன் மீதும், சபரிமலை மீதும் எந்த அன்பும்/பயமும்/ முக்கியமாக அது ஒரு கடவுள் இருக்கும் இடம் என்னும் எண்ணமும் சுத்தமாக இல்லாமல் போய்விட்டது. ஒருவிதத்தில் என் மதத்தை விட்டு நான் தூரம் சென்றது அந்த நேரம் தான்..

மற்றபடி எந்த நடிகை என்ன சொன்னார் என்று எனக்கு சுத்தமாக தெரியாது.. I am clueless about this news.

வலைஞன் said...

செய்தியைப் படித்தவுடன் இதைப்பதிவாக எழுத எண்ணம் வந்து தட்டச்சு செய்ய ஆரம்பித்தேன். இடையில் வேறு வேலை இருந்ததால் பதியவில்லை. இப்போது பார்த்தால் இந்தப் பதிவு!

ஆகவே என் பதிவை உங்களுக்குப் பின்னூட்டமாகத் தருகிறேன்.

நடிகையால் வந்த தீட்டு

கேரளமாநிலத்தின் மிக முக்கிய திருக்கோவில் சபரிமலை ஐயப்பன் கோவில். இங்கு சில வருடங்களாகவே சில விரும்பத்தகாத சம்பவங்கள் விபத்துகள் முதலியவை நடைபெற்று வருவதால் தெய்வக்குற்றம் ஏதாவது இருக்கிறதா என்று அறிய தேவப்பரஸ்னம் என்ற கணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கண்ணகி சிலை இடமாற்றம் உட்பட ஜெயலலிதாவின் பல செயல்பாடுகளுக்கு காரணமாக கூறப்படும் பிரபல ஜோதிட மாந்திரீக தந்திரியான உண்ணி கிருஷ்ண பணிக்கர் இதை செய்தார். இவரது கணிப்பின் படி 19 ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் கோவிலுக்குள் நுழைந்துள்ளார் எனவும் அதனால் ஏற்பட்ட தீட்டு காரணமாகவே கோவிலின் புனிதத்தன்மை பாதிக்கப் பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம் சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைய முடியாது. குழந்தைகளும் மிக வயது முதிர்ந்தவர்களும் மட்டுமே ஆண்களைப்போல 40 நாட்கள் விரதமிருந்து வரலாம். பிற பெண்கள் நிழையவே முடியாத சபரிமலை கோவிலில் இளம் பெண் ஒருவர் நுழைந்தார் என்பது நம்ப முடியாது என்று அங்குள்ள அர்ச்சகர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

ஆனால் இதன் கிளைமாக்சாக கன்னட நடிகை ஜெயமாலா ஒரு பேட்டியில் 19 ஆண்டுகளுக்கு முன் தான் இளம் நடிகையாக கணவருடன் சபரிமலைக்கு சென்றிருந்ததாகவும் கூட்ட நெரிசலில் சிக்கி ஐயப்பன் கருவறைக்குள் தள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இரண்டாவது கிளைமாக்ஸ் நடிகை சுதாசந்திரன் அதே 19 ஆண்டுகளுக்கு முன் சபரிமலை கோவில் வைத்து "நம்பினோர் கெடுவதில்லை" என்ற திரைப்படத்தின் பாடல் காட்சி எடுக்கப்பட்டபோது தான் ஐயப்பனை தரிசனம் செய்ததாக கூறியுள்ளார்.

பணிக்கரின் கணிப்பை கோவில் சம்பந்தப்பட்டவர்கள் மறுத்துள்ள நிலையில் இரண்டு நடிகைகள் அதை உறுதிப்படுத்துவது போல தெரிவித்துள்ள தகவல் கேரளாவில் பரபரப்பான விஷயமாகி இருக்கிறது.

சபரிமலை கோவிலில் தை முதல் நாள் மகரஜோதி நிகழ்ச்சியின் போது ஐயப்பன் ஜோதியாகி முக்தியடைந்த பொன்னம்பல மேட்டில் ஐயப்ப ஜோதியை ஆண்டு தோறும் பக்தர்கள் கண்டு பரவசமடைவது வழக்கம். அது நிஜமான ஐயப்பஜோதி என்று பக்தர்கள் நம்பியிருந்த நிலையில் ஐயப்பன் இளவரசனாக வளர்ந்த அரச குடும்ப வாரிசுகள் ஐயப்பன் நினைவாக ஏற்றும் தீப ஒளிதான் அது என்று துக்ளக் செய்தியாளர்கள் முன்பு ஒருமுறை நேரில் போய் கண்டறிந்து எழுதியபோது பெரும் பரபரப்பு எழுந்தது.

அதுபோன்ற நிலையில் பக்தர்களின் நம்பிக்கைகளை உரசிப் பார்க்கும் தற்போதைய சர்ச்சையும் பரபரப்பை ஏற்படுத்தத் தவறவில்லை.

Thekkikattan|தெகா said...

சந்தோஷ்,

//இது ஒரு நல்ல கேள்வி ஆனா பதில் தான் தெரியலை தெ.கா. இந்து மதத்தின் பலம்/பலவீனமே நிறைய விஷயங்களை தெய்வ குற்றம் என்ற பெயரில் மறைத்து வைப்பது தான்.//

தெய்வ குற்றம், கண்ண குத்திப் புடும் அப்படின்னு சொல்லி அடி நாதத்திலே கை வைச்சுட்டா அப்புறம் எப்படி சந்தோஷ் அடுத்தக் கட்டத்திற்கு மத வளர்ச்சியா இருக்கட்டும் இல்லெ ஆன்மீக வளர்ச்சியா இருக்கட்டும் கேள்வியில் தானே... ஞானத்தின் மூலமே இருக்கிறது.

அதனை குருத்திலேயே பிடிங்கி விட்டால் அப்புறம் எப்படி கேள்வி கேட்கும் திறன் வளரும்?

எனக்குப் பிடிபடாததையைத் தானே இங்கு கேட்டு வைத்தேன், அதுவும் என்னுடை சிறு வயது தொட்டு ஏன் இப்படி, அந்த கோவிலுக்கு மட்டும் இப்படியெல்லாம். அதற்கான காரணத்தை (தீட்டு) எனக்கு வழங்கும் பொழுது எப்படி அந்த வயதில் நான் அதனை புரிந்து கொள்வது, குழப்பத்தை மட்டுமே வழங்கியது மேலும் பெண்களை பற்றியான ஒரு புதிரையும் சேர்த்து.

சரி அதனை இங்காவது கேட்டுத் தெரிந்து கொண்டு வரும் அன்பர்களிடம் இந்த தொலைக் காட்சியிலேயோ அல்லது எங்காவது படித்துவிட்டோ என்னிடம் வந்து கேட்டு வைத்தால் கொஞ்சம் "சென்சிபில்" ஆகாக ஏதாவது காரணம் கொடுக்க முடியுமே என்ற நப்பசையில் தான் இங்கு முன் வைத்தது.

ஆனால் இங்கும், கடவுள் கண்ண குத்திப் புடுவார், என்னமாவது ஆகாப் போகுது குடும்பத்திற்குன்னா... நான் வாரம் ஒருவரையாவது இங்கு சந்திப்பேன்,,, கர்த்தருடன் என்னை இணைக்க முயற்சிக்கும் அன்பர்களை அவர்கள் நினைத்தது நடக்காப் போவதில்லை என்பது தெரிந்ததும். நீங்கள் கர்த்தரை நம்ப வில்லையெனில் "நரகமே" உங்களுக்கு என்று வேகமாக முதுகு காட்டி மிரட்டிச் செல்வது போலவே இங்கும் உணர்கிறேன்.

இன்னும் நாம் சின்னப் பிள்ளைகள் கிடையாதே, இப்படி மிரட்டி உருட்டி சாமி கும்பிட வைக்க... நம்பிக்கை இருக்கு இருப்பினும் சரியான காரணம் புரிந்துக் கொண்டால் இன்னும் தேனாக தித்திக்குமே என்பதுதான் என்னுடையெ நிலை.

என் மகன் கேள்வி கேக்கிறான் நான் அவனுக்கு பதில் சொல்லனுமப்பா... அந்த காலம் மாதிரி அதெ இதெ சொல்லி சமாளிக்க முடியலெ இப்பொ...

VSK said...

12 வயது வரை ஒருவர் சென்றிருந்தார் என்றால், அவருக்கு அப்போதே தெரிந்திருக்கும் தன் பயணத்தின், தன் எல்லையின், எல்லையை!
அதற்குப் பின் தான் அவருக்கு, அதிலிருந்துதான் அவருக்கு, மத நம்பிக்கை அற்றது என்றால், அவரது முதல் நம்பிக்கையே சந்தேகத்துக்குரியது என்றுதான் பொருள்.
எனது மூன்று மகள்களும் முறையே, 3, 5 4 என்று சபரிமலைக்கு என்னோடு வந்திருக்கிறார்கள்!
வயதுக்கு வந்தவுடன் தானே ஒதுங்கி, ஆனால், இன்றும், ஆம், இன்றும் [2006] எல்லா ஐய்யப்ப பூஜையிலும் தவறாது கலந்து கொண்டு, எல்லாராலும் விரும்பி பாடக் கேட்கும் ஐயப்ப பக்தைகளாகத்தான் இருக்கிறார்கள்!
நான் யாரையும் குறை சொல்ல மாட்டேன்!
ஆனால், நம்பிக்கையை, ...... சொல்லுவேன்!
எழுத்துக்காக என்னவேனும் சொல்லக் கூடாது!

Sivabalan said...

தெகா

எனக்கு ஒன்று தோன்றுகிறது..

நீங்க எல்லாரும் கொஞ்ச நேரம் கடவுள் என்று ஒன்றுமே இல்லை ... கடவுள் கான்சப்ட் நம்ம தான் உருவாக்கினோம்.. என்று நினைத்து அமைதியா யோசிச்சா இங்க பல விசயம் புரியுமுன்னு நான் நினைக்கிறேன்..

Thekkikattan|தெகா said...

வலைஞன்,

உங்களுக்கு முன்னாடி முந்தி கொண்டனோ. எப்படியோ பதில் கிடைத்தால் சரி. அதுதான் இங்கு எதிர் பார்ப்பதும்.

உங்களுடையெ பதிவு பின்னுட்டத்திற்கு நன்றி.

//அது நிஜமான ஐயப்பஜோதி என்று பக்தர்கள் நம்பியிருந்த நிலையில் ஐயப்பன் இளவரசனாக வளர்ந்த அரச குடும்ப வாரிசுகள் ஐயப்பன் நினைவாக ஏற்றும் தீப ஒளிதான் அது என்று துக்ளக் செய்தியாளர்கள் முன்பு ஒருமுறை நேரில் போய் கண்டறிந்து எழுதியபோது பெரும் பரபரப்பு எழுந்தது.//

இன்னொன்னு இங்க எனக்கு தெரிஞ்ச உண்மையை முன் வைக்க வேண்டாம் அப்படின்னு பார்க்கிறென். ஏன்னா, நான் வந்த பாதையை திரும்பி பார்க்காத ஆள் கிடையாது. இருப்பினும் இந்த ஜோதி விசயம் எல்லாம் எப்பவோ நாங்க அந்த மேற்கு மலைத் தொடர்களில் அலைந்து திரிந்த போதே நிறையெ பேசியிருக்கிறோம் பார்த்தும் கேட்டும் இருக்கிறோம்.

பொன்ஸ்~~Poorna said...

//எழுத்துக்காக என்னவேனும் சொல்லக் கூடாது! //

சாரி எஸ்கே, எழுத்துக்காக என்ன வேணாலும் சொல்ல வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. இங்கு சொல்லப்படும் நடிகைகள் போல எனக்கு எந்த விளம்பரமும் கிட்டப் போவதில்லை.

// அதற்குப் பின் தான் அவருக்கு, அதிலிருந்துதான் அவருக்கு, மத நம்பிக்கை அற்றது என்றால், அவரது முதல் நம்பிக்கையே சந்தேகத்துக்குரியது என்றுதான் பொருள்.//
மொத்தமாக அற்றதுன்னு நான் சொல்லவே இல்லை.. மொத்தமா நம்பிக்கை இல்லாம போயிருந்தா இங்க பதிவுகள்ல அங்கங்க இந்துமதத்தை ஒழிக்க வேண்டும் என்னும் விவாதங்களில் அனாவசியமாக மூக்கை நுழைத்துப் பதில் சொல்லிக் கொண்டிருக்க மாட்டேன்.

தூரம் சென்று விட்டேன் என்று தான் சொல்கிறேன்.. உங்க மகள்கள் மாதிரி ஐயப்பன் பூஜையில் கலந்து கொள்ளும் பொறுமையும், நம்பிக்கையும் இல்லாமல் தூரம் சென்று விட்டேன். இன்றும் கோயிலுக்குப் போகிறேன். கோயிலுக்கு வரும் பிற பக்தர்களின் நம்பிக்கையை மதித்து எல்லா நாட்களிலும் கோயிலுக்குப் போவதை எனக்கு நானே தடை செய்து கொள்கிறேன். அப்பாவின் நம்பிக்கையை மதித்து எல்லா நாட்களும் வீட்டுப் பூஜையறையை அணுகாமல் இருக்கிறேன்..
ஆனால் என் நம்பிக்கை எனக்கு. எனக்கு விருப்பமான முருகனை எந்த நேரத்திலும் அழைக்கத் தயங்கியதில்லை. என் விருப்பமான சிவலிங்கங்களை எந்த நாளும் எடுத்துத் தொட்டுப் பார்க்க யோசித்ததில்லை.

முதல் நம்பிக்கையைச் சந்தேகப் பட்டதென்னவோ நியாயம் தான். அப்போ நான் சின்னக் குழந்தை. ஏதோ சம்மர் காம்ப் போல மலைக்குப் போவோம். அது ஒரு பெருமை. எனக்குப் பிடித்த அப்பாவோடு தனித்துப் பயணிக்க ஒரு அற்புதமான வாய்ப்பு.. அப்படியே சாமி பார்க்க வேண்டியது தான். இது தான் இந்து மதம்.. இது தான் உன் வாழ்க்கை நெறி என்று சொல்லித் திணிக்கவேண்டிய அவசியம் இல்லாத வயது. அப்படிச் செய்ய விரும்பாத பெற்றோர். ofcourse, நானும் யாரையும் குறை சொல்லவில்லை.

// ஆனால், நம்பிக்கையை, ...... சொல்லுவேன்!//
இந்தக் கோடிட்ட இடத்தின் விளக்கம் எனக்குப் புரியவில்லை.

VSK said...

யாரையும் குறை சொல்ல மாட்டேன்
ஆனால், நம்பிக்கையை ....குறை ....சொல்லுவேன்!

நல்ல வேளை, நான் வணங்கும் முருகன் அருளால், எதையும் திணிக்க வேண்டிய அவசியம் இல்லாமலே, செய்ய விரும்பாமலேயே, உணர்ந்த பிள்ளைகளைப் பெற்றேன்!

எத்தனைப் பேருக்குக் கிடைக்கும் இந்தப் பேறு!

அதே சமயம், தான், தனது, என பகுத்தறிந்து வளர்ந்த உங்களைக் கண்டு பெருமை அடைகிறேன்1 பொன்ஸ்!

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்!

Anonymous said...

இந்து சமயத்தில் பல வழிபாட்டுமுறைகள் உள்ளன, அவை சில கோயில்களுக்கென தனித்துவமானவையுமாகவுமுண்டு. என் புரிதலின்படி சபரி மலைக்குப் போகவிழைபவர் 40 நாள் கடும் நோன்பிருக்க வேண்டும். மாதவிடாய் அக்கடும் நோன்பை நிறைவு செய்வதற்கு தடங்கலாக இருப்பதாகக் கருதப்படுகிறது (அது மட்டுமல்ல வேறு பல விதிகளும் கடைப்பிடிக்க வேண்டும், ஆகவே இது பெண்களுக்கெதிரில்லை). ஆதலாலே குறிப்பிட்ட அகவைக்குள்ளான பெண்களால் 40 நாள் கடும் நோன்பு கண்டு, சபரிமலைக்குச் செல்லமுடியாமலுள்ளது. சிலருக்கு இம்மாதவிடாய் விசயம் உறுத்தலாயிருக்கலாம், ஆனால் எப்படி சில கோயில்களில் பலி கொடுத்துப் புலால் படைத்து வழிபட விதி வழிசெய்கிறதோ அதுபோல் தான் இதுவும். உங்களுக்குப் பிடிக்காத விதிகளுள்ள கோயில்களுக்குச் செல்லாதீர்கள். விமர்சிக்கவும் முறையிடவும் உரிமையுண்டு. சென்னையில் சில கிளப் நடத்தும் உணவகங்களில் அவர்கள் ஏற்கும் "dress code" இன்றி உள்ளே அனுமதிக்காரில்லையா? அதுபோல் தான் கோயில்களூக்கும் (அரசால் நடத்துவபை தவிர்த்து) யாரை எவ்விதிகளோடு அனுமதிக்க தேர்ந்தெடுக்கும் உரிமையுண்டு. வேண்டுமானால் நீங்களொரு கோயிலைக் கட்டி புதுவிதி செயுங்கள்!:)

அடுத்து இது ஏதொ பெண்களை இந்து மதம் ஒதுக்கிறது என்று சொல்ல முடியாது. ஏனெனில் இந்து சமயத்தில் பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் வழிபாட்டு முறைகளுமுண்டு. எ.கா சுமங்கலிப் பூசை. :)

துளசி கோபால் said...

//நீங்கள், துளசி கோபால் போன்றவர் இது மாதிரி உருவகக்
கதைகள் சொல்வதெல்லாம், ஒருவித தப்புவித்தலே!//


ஆமாம். கதை சொன்னதுக்கா என்னை இப்படி.....?

நான் நாஸ்திகவாதி இல்லை.

என்னப் பொறுத்தவரை 'அன்பே கடவுள்'

VSK said...

நான் அப்படிக் கூறவே இல்லை, துளசி.கோபால்!
உருவகக் கதைகளை வைத்து மட்டும், இது ஒருவகை எஸ்கேப்பிஸம் எனச் சொன்னேன்.
தவறாக எண்ண வேண்டாம்.
நான் என்னுடைய ஒரு பதிவில் சொன்னது போல, இதில் நம்பிக்கை உடையவர்களுக்கு இது ஒரு பிரச்சினையே அல்ல.
நம்பிக்கை இல்லை என்பவர்கள் தேவையில்லாமல் இதில் ஏன், அதுவும் ஆரம்பகட்ட நிலையிலேயே, அவசர அவசரமாகக் கருத்து சொல்ல விழையவேண்டும் என்பதே என் கேள்வி.

கருணாநிதியின் மஞ்சள் துண்டு, பங்களூரில் பேத்தி வீட்டில் பணிக்கரை வைத்து மகனுக்கு விசேஷ பூஜை இவற்றையெல்லாமும் சொல்லலாமே.

நம்பிக்கொண்டு போகுபவனுக்கும் சரி, நம்பவில்லை என ஒதுங்கிப் போகுபவனுக்கும் சரி, குழப்பம் ஏதுமில்லை.
இந்த நடுவில் மாட்டிக்கொண்டு திகைப்பவர்களால் தான் குழப்பங்கள் அதிகமாகின்றன.
தேடுதல் என்றால் விளக்க முற்படலாம்.அப்படி நினைத்தே விளக்கங்கள் வைக்கவும் படுகின்றன.
ஆனால், வழக்கம்போல், இது எப்போது செல்லும் குறுகிய ஒற்றையடிப் பாதையிலேயே போக ஆரம்பிக்கும் போதுதான் சலித்துப் போகிறது.
இதற்கு மேல், இனி இது குறித்து இப்போதைக்கு எழுதுவதாய் இல்லை.
யாருடைய மனமாவது புண்படும்படி பேசியிருந்தால் மன்னிக்கவும்.
நன்றி.

மணியன் said...

தெ.கா,திரு எஸ் கே அவர்கள் கூறுவதை நான் ஏற்கிறேன். இந்து மதக் கோவில்களில் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு வழிமுறை உண்டு. வழிபடும் நேர்த்தியும் உண்டு. கோவிலின் கருவறையில் தென்னகத்தில் நுழைய முடியாது. வடமாநிலங்களில் கருவறையின் கடவுளுக்கு நாமே அபிடேகம் செய்து பூசை புரியலாம். மகாராஷ்ட்ராவில் கார்த்திகேயனை கார்த்திகைமாத பௌர்ணமிதவிர மற்ற நாட்களில் பெண்கள் தரிசிக்கக் கூடாது.

எல்லா கோவில்களிலும் பெண்கள் கோவிலுக்குள் செல்லக்கூடாது என்று விதி இல்லையே. இதனால் இதுதான் பொதுவான விதி என்று எங்கும் கிடையாது. அந்தந்த கோவில்களின் பாரம்பரியத்தில் சில வழிமுறைகள் கடைபிடிக்கப் படுகின்றன. அந்த சம்பிரதாயங்களை நம்பும் பக்தர்கள் அந்த வழிமுறைகளை பின்பற்றவே வேண்டும். இங்கு அதை கடைபிடிக்கவேண்டியவரும் நடைமுறைப்படுத்த வேண்டியவரும் தவறிழைத்துள்ளதாகத் தெரிகிறது. இதில் உண்மை எவ்வளவு பொய் எவ்வளவு என்று தெரியாத நிலையில் மேலே சொல்ல ஒன்றுமில்லை.

Thekkikattan|தெகா said...

திரு. எஸ்.கே,

//நம்பிக்கை இல்லை என்பவர்கள் தேவையில்லாமல் இதில் ஏன், அதுவும் ஆரம்பகட்ட நிலையிலேயே, அவசர அவசரமாகக் கருத்து சொல்ல விழையவேண்டும் என்பதே என் கேள்வி.//

நம்பிக்கை இல்லை என்று எப்பொழுது நீங்கள் என்னைப் பற்றி கணித்தீர்கள் என்பதனை எனக்கு சற்று கூற முடியுமா? எந்த சூழலில் நான் அப்படி தாங்களுக்கு ஒரு உருவகத்தை அளித்தேன்?

என்னை இதிலிருந்து ஒரு பொதுப் படையான முத்திரை குத்தி அறைக்கு வெளியே பிடித்து தள்ளி விட்டால், பெரும் கேள்விகளுக்கு தெளிவுற்றதாக பொருளா?

எனக்கு இன்னும் வயது இருக்கிறது உண்மை எது... பிணையப் பட்டது எது என்று என்னுள்ளேயே சென்று விடையறிந்து வாழ்வை அதீதப் படியான "பிடி"த்தங்கள் ஏதுமின்றி ஓட்டத்தினுடேயே மிதந்து சென்று அந்த "பரம்பொருளை" அடைவதற்கு அவகாசமிருக்கிறது (நாளைக்கு படுக்கையிலிருந்து எழுந்திரருக் வைப்பான் என்ற நம்பிக்கையில்...).

இதற்கிடையில் என்னை பயமுறுத்தும் சில வார்த்தைகளுக்கு பொருள் அறியாவே தாங்களைப் போன்ற அதிக நேரம் இறை நம்பிக்கையுடன் செலவழித்தவர்களிடம், இது போன்ற "இறை சார்ந்த" பயமூட்டல்கள் எந்த அளவிற்கு இறைவனை நேசிக்க உதவும் என்பதனை அறியவே. இவ்விடம் சில தெளிவுரைகள் பெற எத்தனிக்கிறேன்.

இதில் எங்கிருந்து வருகிறது தனிப் பட்ட நபரின் தனித் தாக்குதல்கள். அதனால் பெறப் போவதுதான் என்ன. பிற உயிர்களிடத்தும் மனிதர்களிலும் அன்பு கான் எனும் ஒரு ஆதாரத்
செய்தியுடன் தான் எந்த ஒரு இறை நம்பிக்கையும் மனிதனை அப்பதையில் இட்டுச் செல்கிறது. அது அப்படியிருக்கையில், இவன் அவன் பக்கம், அதனால் தான் இது போன்ற கேள்விகளையெல்லாம் கொண்டு வருகிறான் என்றால்... என்னை Exclusion பண்ணி விட்டல் கேள்விகளுக்கு விடை கிடைத்து விடுமா?

நான் எந்த விதமான நிறக் கண்ணாடியும் என் மூக்குக்கு மேலே அணிந்து கொண்டு இந்த வாழ்வினை உற்று நோக்க வில்லை... கழுத்துக்கு மேலே இருக்கும் தலை எப்பொழுதும் ஒரு வட்ட தட்டு ஆண்டெனா பேலவே சமிக்கைகளை பெற்றுக் கொள்வதற்கு திறந்தே இருக்கிறது.

Thekkikattan|தெகா said...

...தொடர்ச்சி 2

இன்னும் தேக்கமுற்று விடவில்லை. மருத்துவத்தில் Cervical Cancer என்ற புற்று நோய் எல்லா புற்று நோய்களை போலவே ஏதோ ஒரு "கார்சினிக்" ஏஜெண்டால் உருவாகிய நோய் என்றே கருதப் பட்டு வந்தது, ஆனால் பின்னாலில், பாபிலேமா என்ற வைரஸ் கிருமியால், பாலியல் தொற்று நோய் போல் பெண்களுக்கிடையே பரவ வாய்ப்பு இருக்கிறது என்று கண்டு பிடித்து அறிக்கை ஒன்றை வெளியிடும் பொழுது, அதனை உண்மையென ஏற்று கொள்வதில்லையா?

அது போலவேத்தான் நடை முறை முரண்பாடுகளும். "சொல்லப் பட்டிருக்கிறது" என்பதால், யார் மனம் நொந்தாலும் பரவாயில்லை இந்தாப் பிடி என்று பிடிக்காத ஏதோ ஒன்றை சாப்பிடச் சொல்வதற்கு சமம்தான்.

கடவுள் மனிதனை பிரித்துப் பார்க்கச் சொல்லி எங்காவது அதற்காக இரத்தம் பாருங்கள் என்று தனிப்பட்ட "சுய அறிதலில்" கூறியிருக்கிறார? நான் (சுயத்துடன்) என்னுடன் இருக்கும் பொழுது எனக்கு தோன்றுவது எல்லாம் "எல்லோரிடத்தும் அன்பாக" நடந்து கொள் என்பதுவே. இன்று உங்களை ஏதொ ஒரு விதத்தில் புண் படுத்தினேன் என்றால் அதனை சரியாக புரிந்து கொள்ளும் வரையிலும் அதனை என் கருத்தில் நிறுத்துவது, கடவுள் என்னுள்ளும் இருக்கிறான் என்பதாக நான் கருதுகிறேன்.

//ஆனால், வழக்கம்போல், இது எப்போது செல்லும் குறுகிய ஒற்றையடிப் பாதையிலேயே போக ஆரம்பிக்கும் போதுதான் சலித்துப் போகிறது.//

ஐயா, நீங்கள் உணர்ந்ததை எந்த வித "பிடி"ப்புமன்றி எங்களுடன் பகிர்ந்தளிக்கிறீர்கள் என்றால் எதற்காக தனிப்பட்ட முறையில் காயமடைந்தாக எண்ணவேண்டும்.

"பரம் பொருளே" நம்மையெல்லாம் ஒரு கருவியாக கையாண்டு என் மூலம் சில விசயங்களையும், தாங்களின் மூலம் பல விசயங்களையும் வெளிப் படுத்துகிறான் என்ற எண்ணாம் தலைப் பட்டால். நீங்கள் இங்கு வருத்தப் படுவதற்கோ யாரும் உங்களுடைய "நம்பிக்கைய" (some people have failed you) உடைத்து விட்டார்கள் என்று எண்ணம் கொள்ளவோ வேண்டியதில்லை.

பரம் பொருளே எதிலும் அனைத்திலும்... "தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான், உங்களிலும் இருக்கிறான் என்னிலும் இருக்கிறான்."

ராகவன் சொன்ன விசயம் என்னால் அமெரிக்கா நண்பர்களிடத்தே கூட கூறி எந்த பிணக்கமுமில்லாமல் அந்த நாளை இனிய நாளாக ஆக்கிக் கொள்ள முடியும்.

இதோ அவரின் வார்த்தைகள்;

...கறையான் தின்னா நெருப்பு அணையும்? ஈ குடிச்சா கடல் வத்தும்? உலகத்தையெல்லாம் கடந்தும் அதுக்கு உள்ளும் இருக்கிற கடவுளைக் கேவலம் மனிதன் தொட்டுத் தீட்டாக்க முடியுமா? நமது மனமாயைதான் இது...

Thekkikattan|தெகா said...

வஜ்ரா,

இரண்டாவது முறை நீங்கள் கொடுத்த சுட்டியும் அதில் உள்ள விசயங்களுக்கும் ரொம்ப நன்றி.

மற்றொரு உலகத்திற்கு அது என்னை இட்டுச் சென்றது.

G.Ragavan said...

கோயில்களை நடத்துகின்றவர்களுக்கு இந்த மாதிரி சடங்குகளும் நம்பிக்கைகளும் பெரிதென்றால் பிரச்சனையில்லை. அதை மதிப்பவர்களும் நம்புகிறவர்களும் மட்டும் அங்கு செல்லலாம்.

மற்றவர்கள் நமக்காக ஒரு கோயில் கட்டிக் கொள்ளலாம். அதில் தவறில்லை. அப்பொழுது அவர்கள் வந்து இந்தச் சடங்கெல்லாம் செய்ய வேண்டும் என்று அடம் பிடிக்கவும் கூடாது. நான் உன்னை மதிக்கிறேன். என்னை நீ மதி என்று ஒதுங்கிக் கொள்ளலாம்.

அந்தக் கோயிலுக்குச் சென்றால்தான் என்றில்லை. உள்ளக் கோயிலிலே குடியிருப்பவனை அன்பாலும் காணலாம். உங்கள் நம்பிக்கை உண்மையென்றால் உங்களுக்காக உங்கள் விருப்பப்படி உங்களோடு வருவான் இறைவன். பூசலார்க் கோயில் பெரிதா அரசன் கோயில் பெரிதா என்று ஆண்டவன் அன்றே சொல்லிக் காட்டி விட்டான்.

இதுதான் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது. நமக்கு இடமில்லை என்று ஒப்பாரி வைக்கிறவை விட...நமக்கு நாமே நமது நம்பிக்கைகளுக்கு உட்பட்டு வழிமுறைகளைக் கண்டுபிடிப்பதே சாலச் சிறந்தது.

Thekkikattan|தெகா said...

துள்சியம்மா...

உங்களெ "பிரமோட்" பண்ணிட்டேன் :-))

//அதைச் சொல்லாம
விட்டாப் பாவம் வந்துருமேன்ற பயத்துலே சொல்லிட்டேப் போயிடறேன்:-)))) //

உங்க பயம் நியாயமான பயமா இருக்கு. கதைகள் சொல்லித்தானேங்க குழுந்தைகளுக்கு நல்லது எது கெட்டது எதுன்னு சொல்லி கொடுக்கிறோம்? அப்புறம் அது எப்படி "எஸ்கேபிஸம்" ஆகும்? இந்த மாதிரி தெளிவுக் கதைகள் தானே பிற்காலத்தில் நாம் ஏதாவது ஒரு சூழலில் இருக்கும் பொழுது மனச சமாதனப் படுத்தும் ஒரு கருவியா இருக்கு.

ஒரு உ.தா, நான் சொன்ன அந்த புத்தர் சார்ந்த மற்றும் நீங்கள் கூறிய அவ்வை பாட்டிக் கதை (நீங்க சொன்னது ரொம்ப பக்கத்திலே நம் வீட்டிலே நடந்தது மாதிரி இருந்துச்சு), இது போன்ற கதைகள்கெல்லாம் குழந்தைகளுக்கு சொல்லி வைக்கும் பொழுது அதுகளும் தன்னை மதிக்கும் குணத்தையும், குற்ற உணர்ச்சி, அறியாமல் செய்யும் தவறுகளிலிருந்து தன்னை தற்காத்து கொள்ள எவ்வளவு தெளிவான பார்வையை கொடுக்கும்.

உண்மையிலேயே உங்களின் உள்ளத்தையும், துணிவையும் நினைத்து எனக்கு ரொம்ப மலைப்பாக இருக்கிறது (எல்லாவற்றிர்கும் மேலாக உள்ளத்தில் உள்ளதை பட்டதை அப்படியே சொல்லி வைத்து விடும் பாங்கு, சில பல நேரங்களில் அதனை தாங்களிடம் கண்டுள்ளேன்). இந்த ப்ரபஞ்சம் எனக்கும் அது போன்ற உள்ளத்தையும், முதிர்ச்சியையும் அந்த வயதிலும் அப்படியே இருக்கும் படி கொடுத்தருள்வாகுமாக.

Thekkikattan|தெகா said...

நாகை (கருவாட்டுச் ;-) சிவா, >கடலும் கடலைச் சார்ந்த இடத்தில் உள்ளவரே- என்று கருத்தில் கொள்க<,

அதுக்காகத்தானே, இந்த ப்ளாக் என்ற ஒன்றே இங்கு நடைமுறையில் வந்திருக்கிறது.

அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, ஒவ்வொரு புரிதல்களும் வாழ்வின் சுழற்சியில் இடுபட்டு பயணிக்கும் பொழுது நம் உள்ளும் இருக்கும் புரிதல்கள் சற்றே அதனது பாதையிலிருந்து விலகிச் செல்வதையும், நமது வயதிற்கே ஊரிய அனுபவ கிட்டல்களைக்கிடையே வைத்து பார்க்கும் பொழுது இது போன்ற கேள்விகள் எழுவது சகஜமே...

நமது வயது பிள்ளைகள் திறந்த நிலையுடன் இருந்தால்தான் பெற முடிவதை பெற முடியும், எந்த விதமான சாயமும் நாம் பார்க்கும் நடை முறை விரிசல்களுக்கு இப்பொழுதே பூச எத்தனிக்காமல் ...

அன்பே சிவம் (சிவா)

Thekkikattan|தெகா said...

மணியன்,

//இந்து மதக் கோவில்களில் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு வழிமுறை உண்டு. வழிபடும் நேர்த்தியும் உண்டு. கோவிலின் கருவறையில் தென்னகத்தில் நுழைய முடியாது. வடமாநிலங்களில் கருவறையின் கடவுளுக்கு நாமே அபிடேகம் செய்து பூசை புரியலாம். மகாராஷ்ட்ராவில் கார்த்திகேயனை கார்த்திகைமாத பௌர்ணமிதவிர மற்ற நாட்களில் பெண்கள் தரிசிக்கக் கூடாது. //

ஏன் இத்துனை ஏற்ற இறக்கங்கள் என்பதே எனது அடிப்படை கேள்வி. இந்து மதம் என்பது எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து செல்வது என்றல்லாவ நான் அறிந்தாக ஞாபகம். பரமாத்மாவிலிருந்து தோன்றியதுதான் ஜீவாத்துமாக்கள் என்பது உண்மையெனில், எங்கிருந்து வருகிறது, ஆண், பெண், இவன் பெரியவன், அவன் சிறியவன் என்ற வேறுபாடுகள்?

ஒன்றுக்கொன்று முரண்படுகிறது அல்லவா? ஒரு பெரிய உண்மையை அடக்கி பராமத்மாவிலிருந்து ஜீவாத்மா - முடிந்தது அனைத்தும். இதனைக் கொண்டு இந்த உலகத்தையே அன்புடையாதாக்கலாம். ஆனால் நாம் எங்கே இட்டுச் செல்கிறோம்?

கவிதா | Kavitha said...

தேகாஜி, ஆதிபராசக்தி கோயிலில் (திண்டிவனம் அருகில்)பெண்கள் எல்லா சமயங்களிலும் உள்ளே செல்லலாம், அங்கு சாமிக்கு பெண்கள் தான் எல்லா வழிபாடுகளையும் செய்கிறார்கள். இது அந்த கோயிலின் உறுப்பினராக இருக்கும் ஆண் எனக்கு சொன்னது.

குமரன் (Kumaran) said...

http://holyape.blogspot.com/2006/07/5.html

aaradhana said...

இன்று , இப்பொளுது லேட்டஸ்ட் நியூஸ் தெரியுமா, தலைவரே.. இன்னும் ஒரு நடிகை கிரிஜா என்று ஒறு பெண்மணி அய்யப்பன் கோவிலுக்குள் சென்றுள்ளதாக தகவல்.

Anonymous said...

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானா(ரா)ம் ......?

இது மாதிரி ஏதாவது எழுதி பிறகு என்னவாவது நடந்ட்தால் 'அதிகம்' வருத்தப்படப் போவது நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தாரோகத்தான் இருக்கும்!
தேவையா உங்களுக்கு?
இதில் ஒன்றைக் கவனித்தீர்களா?
well, This is just rediculous. a news item appears in the news paper and you people start to comment.
you guys should be thrown into the furnace. how many of you who have commented here do not really give importance to all these so called 'Theettu in your lives. I bet!
if you are really concerned about this you should give a damn to this.
Did Ayyappan ever told you not to bring the ladies to his temple. if so when?
wait. I am busy I will come again to comment on this.

Thekkikattan|தெகா said...

தோழி கவிதா,

//தேகாஜி, ஆதிபராசக்தி கோயிலில் (திண்டிவனம் அருகில்)பெண்கள் எல்லா சமயங்களிலும் உள்ளே செல்லலாம், அங்கு சாமிக்கு பெண்கள் தான் எல்லா வழிபாடுகளையும் செய்கிறார்கள். இது அந்த கோயிலின் உறுப்பினராக இருக்கும் ஆண் எனக்கு சொன்னது.//

தாங்களுடையெ செய்திக்கு நன்றி! வியபாரம் நன்கு நடக்கும் என்ற தொழில் யுக்தியை கருதியோ...? :-)

எனக்குத் தெரியவில்லை.

vasu balaji said...

/நம்ம ஆளுங்க சாமி சார்பா, சாமீயை இந்தம்மா தீட்டு பண்ணிப் புடுச்சு அப்படின்னு சொல்லி கோர்ட்ல கேஸ் எல்லாம் போடப் போறதாக் கேள்வி./

இந்த கேசு ஊத்திக்கிச்சி தெ.கா. மூனு வருசத்துக்குள்ள கேஸ் போட்டிருக்கணும். மூனு வருசமாயி போச்சு. அதனால செல்லாதுன்னு அம்மணி லாயரு போட்ட போட்டுல கோர்ட்ல தள்ளிட்டாங்க:)). மூணு நாள் தீட்டு. மூனு வருசம் லேட்டு:))

Sivamjothi said...

திருவடியும், மகர ஜோதியும், பொன்னாம்பல மேடும் நமது உடலில் உள்ளது.
மேலும் அறிந்துகொள்ள http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html
ஐயப்பனை காண சபரிமலை செல்வதும் நம்மை நாம் அறிவதும் ஒன்று

Related Posts with Thumbnails