Sunday, September 30, 2012

அவள் அப்படித்தான்/மூணு(3) - அரைகுறை பட விமர்சனம்!

இன்று இரண்டு படங்கள் பார்க்கிற வாய்ப்பு கிடைச்சிச்சு. 

*அவள் அப்படித்தான்*

இது வரைக்கும் அந்த படத்தினுடைய ஒரு பாடலை மட்டுமே பார்த்துட்டு இருந்த எனக்கு, அந்தப் படத்தினுடைய சில பாகங்கள் யூட்யூப்ல பார்க்க கிடைச்சதிலே என்னதான் இந்தப் படம் பேச வருதுன்னு முழு படத்தையும் பார்க்கணுங்கிற ஆவல் வந்துச்சு. பார்த்தேன். சும்மா சொல்லக் கூடாது அந்த கால கட்டத்திலேயே இப்படி ஒரு படம் எடுக்க ரொம்பவே துணிச்சல் இருக்கணும்னு தோணச் செஞ்ச படம்.

ஸ்ரீப்ரியா, ரொம்ப இயல்பா அழுத்தமா தனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்துக்குள்ளர வாழ்ந்திருக்கு. ஒரு பெண்ணின் மன உலகம் எப்படியா இயங்கிட்டு இருக்கலாம்னு செய்ற ஓர் அக உலாத்தல்தான் இந்தப் படம். இயக்குனர் ரொம்ப நுட்பமான காட்சிகளின் மூலமாகவும், ஆணித்தரமாக, சிந்தனையை கீறிவிடும் வசனங்களை அதில வர்ற குணாதிசியங்களைக் கொண்டு கட்சிதமாக செஞ்சிருக்கார். நிறைய பேசலாம்.

*மூணு*

வரவர தமிழ் படங்களின் மீதாக இருக்கும் மயக்கம் கூடிட்டே வருது. ரொம்ப இயல்பா திரைக்கதை அமைத்து அதனை படமாக்கவும் ஒரு பெரிய கூட்டமே நம்ம கையில கிடைச்ச மாதிரி நிறைவு கிடைக்க ஆரம்பிச்சிடுச்சு.

இந்தப் படத்தில தனுஷ், ஸ்ருதி ரெண்டு பேரும் போட்டி போட்டுட்டு கலங்கடிச்சிருக்காங்க.  படம் ரொம்ப மெதுவா நகர்ந்து இரண்டாவது பகுதியில தனுஷ்வோட நடிப்பை மட்டுமே கேட்டு நிக்கிற ஒரு கதை. ரொம்ப நல்லா செஞ்சிருக்காப்ல. தனுஷ்க்கு மன பிறழ்வு சம்பந்தமா எந்த கதை கிடைச்சாலும் தைரியமா நடிக்கலாம். நிறைய இடங்களில் கொஞ்சம் மனசை தொடுகிற படியாக பின்னணி இசையும் அமைந்து போனதால் கட்டிப்போட்டுட்டாங்க. படம் நல்லா ஓடலன்னு நினைக்கிறேன். அதுக்கான காரணம் கதை நம்ம பெரும்பாலான சத்தமான வாழ்க்கையில் வாழும் கூட்டத்துடன் ஓட்டியிருக்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.

இரண்டாம் பாதியில் வரும் தனுஷ்விற்கான கதை அமைத்த விதம், மிக அருகாமையில் இருந்து கவனித்து யாருக்கோ நடந்ததை தானே எழுத்தில் வெளிக் கொண்டு வந்தததிற்கான அழுத்தமிருக்கிறது as though nothing is cinematic exaggeration in itங்கிற அளவிற்கு!

மற்றுமொரு மாற்றுப் பார்வை.

3 / Moonu - movie review : Perfectly bipolar


ஆனா, அந்த விமர்சனத்தில் இரண்டாம் பாதியில் ஏன் அப்படியான பைபோலார் மன வியாதி வந்திச்சின்னு அன்னியன், நடுநிசி நாய்கள் படங்களில் சொல்லப்பட்ட மாதிரி அழுத்தமா சொல்லல இதிலங்கிறதை ஒத்துக்க முடியாது. சத்தமா சொன்னாத்தான் உண்மைங்கிற மாதிரி இருக்கு இதுவும். பாதிப்பை கொடுக்கும் மிக மென்மையான விசயங்கள் கூட கவனமா ஒருவனுக்கு மேலாண்மை செஞ்சிக்க பக்குவமில்லாம இருந்தா நிச்சயமா அது போய் முட்டிக்கிட்டு நிக்கிற இடம் மன அழுத்தமாத்தான் இருக்கும்.

அது போன்ற சூழ்நிலையில் கவனிக்கப்படாம விட்டா மேலும் அது இழுத்துக் கொண்டு நிறுத்துகிற இடம்தான் இது போன்ற ஏதோ ஒரு டிஸ்ஆர்டர்.

இந்த கதையில் ரொம்ப subtleஆ அதற்கான காரணத்தை கொடுத்திருக்காங்க. அது மாதிரி சினிமாத்தனமா சொல்லாததால் தான் இந்தப் படம் ஊத்திக்கிச்சின்னு இப்ப விளங்குது. அதில ஆச்சர்யமும் இல்ல. ஆளவந்தான் படத்தில கமல் சொல்ல வந்த விசயம் எத்தனை பேருக்கு புரிஞ்சு ஏத்துக்கிட்டோம் அது போலவேத்தான் இதுவும்.

I enjoyed both the movies, a touchy ones!!

1 comments:

ஜோதிஜி said...

தமிழ் திரையுலகில் தனுஷ் எனக்கு ஒரு ஆச்சரியமான நபரே. நம் வீட்டில் உள்ள ஒருவரைப் போல ரசித்துப் பார்க்கலாம். எந்த வேடத்திலும்.

Related Posts with Thumbnails