Sunday, January 24, 2021

பெரியாரின் பொருளடக்கம்: Periyar In A Nutshell!

நீங்களும் மனிதர்களாகி கொஞ்சமே சிந்திக்க ஆரம்பித்து இதில் ஏதாவது ஒன்றை தொட்டுப் பேசினாலும், வெறுக்கப்படுவீர்கள்.

பெரியார் என்ற மனிதரின் உள்ளடக்கம். 👇
1. இடஒதுக்கீடு,
2. பெண்ணுரிமை,
3. கைம்பெண் மறுமணம், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு,
4. திருக்குறள் மாநாடு,
5. தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் எழுத்து சீரமைப்பு,
6. ஆங்கில மொழியின் அவசியம்,
7. மாநில உரிமைகள்,
8. சாதிய ஒழிப்பு,
9. சமூகநீதிக்காக கடைசி வரையிலும் பாடுபட்டது
10. சுயமரியாதை,
👉11. சனாதன கொள்கையை போட்டுடைத்தது,
12. ஹிந்தி மற்றும் சமஸ்கிருத எதிர்ப்பு.
இத்தனையும் இருக்கும் போது ஏன் பெரியார் "கடவுள் மறுப்பு. (#11)" மட்டுமே பேசினார்னு உருட்டுரானுங்க. அந்த அரசியல் புரிஞ்சிட்டா நீங்க வயசிக்கு வந்திட்டீர் என்று உணர்வீராக!

ட்ரம்ப் அரசவைக்கு பை : Joe Biden's Inauguration!

 "பன்முக கலாச்சாரம் என்பது மட்டுமே அமெரிக்கா அல்ல" - வெளியுறவுத் துறை அமைச்சர், மைக் பாம்பையோ. - செய்தி.

இவர் வெளியேறும் ட்ரம்பு அரசவை அமைச்சர். போறதுதான் போறேன் இந்தா வாங்கிக்கோன்னு அப்படி தன்னோட அக அழுக்கை அவிழ்த்து கொட்டிட்டு போயிருக்கார்.
...Secretary of State Mike Pompeo's tweet that multiculturalism “is not who America is," sent on his last full day at the State Department, infuriated American diplomats who described it as a final insult by the Trump administration...
இன்றும் சரி, அன்றும் சரி அமெரிக்காவை நவீன பொருளடக்கத்தில் "பன்முக கலாச்சாரங்கள் கூடி இரண்டர கலக்கும் (melting pot) நாடு" என்றளவில் தான் புரிந்து கொள்ள முடியும். என்னுடைய 25 ஆண்டு கால வாழ்க்கையில் அப்படியாகத்தான் இந்த நாட்டின் முகம் அறிமுகமாகி அதனை இன்றும் நுகர்ந்து வருகிறேன்.
அப்படியாக இந்த நாடு என்றும் துடிப்போடு இளமையாக இருக்கக் காரணம், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல விதமான எதிர்பார்ப்புகளோடு குடியேறும் மக்களுக்கு அவரவர்களுக்கான ஒரு வாழ்விடச் சூழலை வழங்கி தழுவிக் கொள்கிறது. அவர்களின் அன்றாட பழக்க வழக்கங்களிலும் கூட பெரிதும் தலையிட்டு ஒரு தர்மசங்கடத்தில் தள்ளாமல், அடுத்தவர்களின் மூக்கை தட்டாதவரை ஒகே என்றே பார்த்து பண்புடன் நகருகிறது.
இதுவே இன்றையளவில் நவீன உலகின் நாகரீகக் கூரை எனக் கொள்ளலாம். எனக்கு முதன் முதலில் அறிமுகமான நகரம் நியூயார்க். வாரத்திற்கு இரண்டு நாட்கள் ப்ராடுவேயில் நடந்து திரியத்தக்கதொரு வாய்ப்பு. விதவிதமான மனிதர்கள், மொழிகள் என களைகட்டி பரபரப்பாக இருக்குமொரு இடம்.
ஆனால், அதற்குள்ளும் மைக், ட்ரம்ப் போன்ற மனிதர்களும் தங்களுக்கான வாய்ப்பை எதிர்பார்த்து உறங்கிக் கிடந்திருக்கிறார்கள். அமெரிக்கா என்பது இன்னொரு கிரகத்திற்கு மனிதகுலம் சென்று காலனி ஏற்றம் செய்தால், எப்படியொரு வாழ்வுமுறையை அமைத்துக் கொண்டு அனைவருக்கும் பொதுவான ஒரு அரசை கட்டியெழுப்பி , அங்கு வந்து சேரும் பிற வேற்றுகிரக இனத்தவரையும் அரவணைத்து வாழப் பழகும் ஒரு பயிற்சி கூடத்திற்கு ஒப்பானது.
இங்கு புதிதாக குடியேறிய மக்கள் அந்த அமெரிக்க ஸ்பிரிட்டை புரிந்து கொண்டு கலந்து விடுவது அனைவருக்கும் நல்லது. வெறுப்பில் பேசித் தெரியும் ட்ரம்பை ஒத்தவர்கள் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவர். நம்பி ஏமாந்து சென்று விடாதீர்கள்.
**************************************

வெளியேறும் ட்ரம்ப் பதவியேற்கும் போது, அன்று வந்திருந்த கூட்டத்தின் எண்ணிக்கை கூட பெரியளவில் இல்லை. ஆனால், கூட்டுத்தொகையில் ஏதோ சூடு வைத்து அதீதப் படுத்தி இருந்ததாக நாளிதழ்கள் எழுதின. ஃபோட்டோஷாப்பை வைத்து ஓபாமா பதவியேற்பு விழாவிற்கு நெருக்கமாக கொண்டு வர முயற்சித்தார்கள்.
ஆனால், இன்று அவரின் கரிசனமற்ற, மக்களிடையே வெறுப்பை சம்பாதித்த நிலையில் வெளியேறும் நாளில் சி என் என், Trump departs Washington as a Pariah என்று தலைப்பிட்டு எழுதி இருக்கிறது (எவண்டா, இவிங்களுக்கு அந்தச் சொல்லின் அரசியல் வக்கிரம் புரியாமல் பயன்பாடு சொல்லிக் கொடுத்தது 🙄).
இந்த நிலையில் ஜோ பைடனின் பதவியேற்பு விழாவிற்கு ஹாலிவுட் பிரபலங்களும், பரந்த சிந்தனையாளர்களுமாகிய (லிபரல்ஸ்) டாம் ஹாங்க்ஸ், லேடி காகா, ஜெனிபர் லோபஸ் போன்றவர்கள் வரவேற்பு நிகழ்சி நடத்துகிறார்கள். இதனைக் கவனித்த ட்ரம்ப் தாங்கிக் கொள்ள முடியாமல் "கடுமையான கோபத்தில் உள்ளதாகத் தெரிகிறது."
... Donald Trump is furious that so many top celebrities, including Lady Gaga, Jennifer Lopez and Tom Hanks, are going to feature at president-elect Joe Biden’s inaugural celebrations on Wednesday, in stark contrast to his own event four years ago...
ட்ரம்ப் தனது 2005 மெலோனியாவுடனான திருமணத்தின் போது எல்டன் ஜான், பான் ஜோவி போன்ற பிரபலமான மேற்கத்திய இசை பாடகர்கள் சிறப்பிக்க வாழ்ந்து பார்த்தவர். 2016ல் ஆரம்பித்த அவருடைய அரசியல் அடாவடிகள் பிடிக்காமல், ஹாலிவுட் ஒதுங்கிக் கொண்டது.
இப்பொழுது அவரின் வெளியேற்றத்தை வெளிப்படையாக ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட தயாராகி விட்டது.

Saturday, January 09, 2021

கதம்ப நிகழ்வுகளும் என் எண்ணங்களும் - 1

மக்களாட்சி மீதான வன்முறையும் ட்ரம்பும்: A Failed Coup

இவிங்க எல்லாம் 1650களில் பல்லு விளக்காம கரையேறின பற்களோட, குளிக்காம அழுக்கா, கண்கள் எல்லாம் பஞ்சடைத்துப் போயி, குதிரை மேல ஏறி வழிப்பறி பண்ணிக்கிட்டு திரிவானுங்களே அந்த மாதிரி தங்களை கற்பனை செய்து கொண்ட கற்காலத்து எண்ண மனிதர்கள். வெளியுலகத்தோட தொடர்பே இல்லாம திடீர்னு ஜுமான்சி படத்தில சம்பந்தமே இல்லாத காலத்திய மனிதர்கள் நகரத்திற்குள் புகுந்து ஓடித் திரிவது போன்று ஒரு காட்சி வருமே, அது போல இருந்தது நேற்று பார்த்த காட்சிகள்.

நிறைய பிள்ளைகள் அதிர்ச்சியில் அழுததாகவும் செய்தி வந்தது. கூட்டத்தில்
இருந்தவர்கள் ஏதோ அவுட் ஆஃப் டைமிலிருந்து வந்தவர்களாக புரட்சி நடந்து கொண்டிருக்கிறது என்றும், ஆனா, போலிஸ் பெப்பர் ஸ்பிரே அடித்து விட்டது என்றும் கேவிக் கேவி அழுது கொண்டே நடைய கட்டிக் கொண்டிருந்தார்கள்.
அந்தக் கூட்டத்தில் இருந்த எண்ணப்பாடுகளை ஒத்த மனிதர்களை நான் சந்தித்திருக்கிறேன். இந்தச் சிறிய கூட்டத்தின் உலகமே வேறையப்பா! 12 பேக் பியரும், ஒரு ஷாட் துப்பாக்கியும், கராஜ்க்குள் அமர்ந்து கவ்பாய் வாழ்க்கையை கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையற்ற ஒரு கூட்டமது. நல்ல புத்தியில் உள்ளவனுக்கு அங்கே வேலையில்லை. இது நவீன அமெரிக்க வானில் படர்ந்து மறைந்த ஓரங்க கோமாளி நாடகம்!
                                                            @@@@@@@@@@@
                                                                @@@@@@
மழைக்காடுகள் அழிப்பும் Xவைரஸ்களும்

மழைக்காடுகள் அழிக்கப் படுவதாலே, ஈபோலா போன்ற உயிர்கொல்லி வைரசுகள் விலங்குகளிலிருந்து மனிதனுக்கு தாவும் புதிய திரிபு வைரசுகளாகி தொற்றுகிறது என்கிறது புதிய வகை ஆராய்ச்சிகள்.
எப்படி?
காடுகள் அழிந்து அங்கு வாழும் விலங்குகள் அழியும் பொழுது நம் கூடவும் வாழப் பழகிய எலி, பூச்சி, கொசு போன்றவைகள் அந்த இடத்தை நிரப்பி வைரஸ்களை அங்கிருந்து நம்முடைய இடத்திற்கு நகர்த்துகிறது. இப்பொழுது ஈபோலா போல புது விதமான வைரஸ் ஒன்று மனிதக் கரை ஏறி இருப்பதாக செய்தி கசிந்திருக்கிறது. அதுவும் ஈபோலா வைரஸை கண்டறிந்து அறிவித்த அதே ஆராய்ச்சியாளர் வெளிக் கொண்டு வந்திருக்கிறார்.
எனக்கு இந்தத் தொடர்பு படுத்தல் மிக்க பொருள் உள்ளதாகப் படுகிறது. நம்முடைய செயல்பாடுகளில் சுற்றுச் சூழலைப் பேணும் வாழ்க்கை முறையோடு மாற்றிக் கொள்ளவில்லை என்றால், இந்த நுண் கிருமிகளே மனித குலத்தை அச்சுருத்தும் பெரும் சவலாக அமையும்.
                                                        @@@@@@@@@@
                                                                @@@@@@

100% திரையரங்க நிரப்பல் கொரோனாவிற்கான சிவப்பு கம்பள விரிப்பு! உருமாறிய நுண்மின்னு அலறி தீர்த்தது ஊடகங்கள். இன்று திரையரங்களில் 100% நிரப்பலோட படம் பார்க்கலாங்கிறதிற்கு விளம்பரம்.

இப்படி அரசிற்கும் பொறுப்பில்ல, ஊடகங்களுக்கும் பொறுப்பில்லன்னா, மக்களா பார்த்து தங்களது உசிரையும், குடும்பத்தின் உசிரையும் காப்பாத்திக்கிட்டாத்தான் உண்டு. ஜஸ்ட் பூனை கண்ணை மூடிக்கிட்டதாலே உலகம் இருண்டுவிடுவதில்லை, என்பதற்கிணங்க பணப் பைத்தியங்கள் தங்களது சுயநலத்திற்காக எடுக்கும் முடிவுகளால் தொற்று ஒழிந்து விட்டது என்று முடிவிற்கு போகாதீர்கள் மக்களே!
இன்னும் கொரோனா என்கிற கத்தி நம் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டுதான் உள்ளது. ஞாபகத்தில் நிறுத்தி ஒதுங்கியே இருங்க!

அமெரிக்க மக்களாட்சி உலகிற்குச் சொல்லும் செய்தி என்ன?

 மனிதனுக்கு புகழ் போதையும், கர்வமும் கூடவே கட்டற்ற அறியாமையும் ஒன்றித்து தனக்கு தகுதியற்ற அதிகாரமும் கிடைத்துப் போனால் என்னவாகும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு அதிபர் ட்ரம்ப். இவர் உலகமே அன்னார்ந்து பார்க்குமிடத்தில் இருக்கும் இத்தனை பெரிய மக்களாட்சி அரசாங்கத்திற்கு அதிபரானது ஓர் விபத்து என்றால் மிகையாகாது.

கடந்த நான்கு ஆண்டுகளும் இவர் மைனாரிடிகள் பொருட்டு காட்டி வந்த வெறுப்பு என்பது சொல்லிலடங்காதது. பிறக்கும் போதே வாயில் வெள்ளி ஸ்பூனூடன் பிறந்ததாலோ என்னவோ பிற மனிதர்கள் பொருட்டான கரிசனம் என்பது மருந்துக் கூட இவரிடம் காண முடியாது.


இப்பொழுது தேர்தலில் தான் தோல்வியடைந்தாலும் அதனை நாகரீகமாக ஏற்றுக் கொண்டு நகரும் பண்பு இல்லாத குணத்தால், தான் ஏற்கெனவே ஊட்டி வைத்திருந்த நச்சுக் கூட்டத்திற்கு தூபம் போட்டு உலகமே பார்த்து சிரிக்கும் வகையில் ஒரு கூத்தை அரங்கேற்றி கோமாளி ஆகி நிற்கிறார் உலகரங்கில்.இவரின் பேச்சும் ரசனையும் கொஞ்ச கொஞ்சமாக ஊர்ப்புறம் வாழும் படிக்காத வெள்ளையினத்தவரையும், படித்திருந்தாலும் பிற இன மக்களின் மீது வெறுப்பை வைத்திருப்பவர்களுக்கும் மனதிற்கு நெருக்கமான மனிதராக்கிவிட்டிருந்தது. நான் வாழும் மாகாணத்தில் பார்க்க பண்பாடான மனிதராக இருக்கிறாரே என்று ட்ரம்ப் உதிர்க்கும் வார்த்தைகளை வைத்து, யேய், என்னப்பா இப்படியெல்லாம் பேசுகிறார் என்றால், அதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்பவர்களே அதிகம். அந்தளவிற்கு வெறுப்பு என்ற நச்சை ஊட்டி வந்தார்.

இது அமெரிக்காவிற்கான அவமானமாக நான் பார்க்கவில்லை. ஒரு முட்டாளின் ஆதி அந்தம் தெரியா தற்குறித்தனமான ஒருவரிடத்தில் ஆட்சி அதிகாரம் கையளிக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதையே காட்டக் கூடிய நிகழ்வாகப் பார்க்கிறேன். அந்த இடம் தாமஸ் ஜெஃப்பர்சன், லிங்கன், ரோசவெல்ட், கென்னடி போன்ற சிறந்த மனிதர்கள் வந்து போன இடம், இன்று இப்படி ஒரு மனிதர் அந்த இடத்தை கடந்து சென்றிருக்கிறார்.

ட்ரம்ப் அடித்த அத்தனை அலுச்சாட்டியத்தையும் இவருக்கு முன்னால் வந்து போன
அந்த மனிதர்களின் மாண்பே மக்களாட்சியின் பொருளை காப்பாற்றி இன்று கரை சேர்த்திருக்கிறது. இதுவே உலகத்திற்கு அமெரிக்காவின் ஓர் ஒழுங்குடன் ஒழுகும் டெமாக்ரசி சொல்லும் செய்தி!

இதுவே ஒரு நாள் இந்தியாவிற்கும் டெஸ்டிங் டைமாக வரலாம். இப்பொழுது அந்த திசையை நோக்கித் தான் நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். நல்வாய்ப்பாக அமெரிக்காவின் ஊடகங்களும், நீதித் துறையும் இந்திய அளவிற்கு சிதைந்து போய் விடாமல் இருந்ததால் இன்று அமெரிக்க டெமாக்ரசி மிக்க சேதாரமில்லாமல் மீட்டெடுக்கப்பட்டுக் கொண்டுள்ளது.

ஆனால், நம் நாட்டில் அதற்கும் வாய்ப்பில்லை. இருண்ட காலம் நமக்கு முன்னால் காத்திருக்கிறது. மீட்டெடுப்பு என்பது மற்றுமொரு சுதந்திர போராட்ட நிகழ்வைக் காட்டிலும் மிக்க உழைப்பை கோரி நிற்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை.

Thursday, December 31, 2020

இறைச்சிீ இங்கே வேதகால நாகரீகம் எங்கே?

இப்படி நாம ஒன்னு ஒன்னா சிந்து சமவெளி நாகரீக மக்கள் எப்படியாக வாழ்ந்தார்கள்னு கண்டு பிடிச்சு நிறுவுவதற்குள்ளும் மனிதகுலம், வேற்றுக் கிரகத்திற்கே குடியேறிடுவாய்ங்க போல. அவ்வளவு காலமெடுத்துக்கிறோம்! இப்போதான் நமக்கு அந்த நாகரீக மக்கள் என்ன உணவு சாப்பிட்டார்கள்னு நிறுவத்தக்க சான்று கிடைத்திருக்கிறது.


அவர்களின் உணவில் செம்மறியாடு, மாடு, கால்நடைகள், பன்றிகளின் இறைச்சி அதீதமான அளவில் எடுத்துக் கொண்டிருப்பதாக அவர்கள் பயன்படுத்திய தட்டு, பானைகளில் எஞ்சியிருந்த எச்சங்களின் வழியாக கண்டறிந்திருக்கிறார்கள். மனித குலம் கால்நடையாகவே நடந்து திரிந்த காலங்களில், உணவும், தண்ணீரும் தாராளமாகக் கிடைக்கும் இடத்தில் கிடை போட்டு விலங்குகளை வேட்டையாடி சுட்டு உண்டுருப்பான், இல்லையா?
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு உள்ளாகவே நிலையாக ஓரிடத்தில் தங்கி வேளாண்மை பழகி, சமுகமாக வாழ ஆரம்பித்த கால கட்டத்திலும் கூட, கால்நடைகளின் பங்கு அவர்களின் வாழ்வோடு பெருமளவில் பிண்ணி பிணைந்திருக்கவே வேண்டும். ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும், ஒரு 45 ஆண்டுகளுக்கு முன்பே கூட எங்க வீட்டில் எருதுகளும், காளைகளும், பசுவுமென 10க்கும் மேற்பட்ட கால்நடைகள் இருந்தன. இன்றும் கூட என் அம்மா கோழி வளர்க்கிறார்கள்.
இது போன்ற வயலும் வாழ்வுமாக உள்ளவர்கள் அந்த கால்நடைகளை தனது வாழ்வின் அங்கமாகக் பயன்பாட்டில் கொண்டிருக்கும் போது, அதனை உணவாக உண்டிருக்க 100% வாய்ப்பு இருக்கிறது; ஏனெனில், கால்நடைகளும் பொருளாதார வேளாண்மை செய்வதின் ஓர் அங்கமே!
ஈயடிச்சான் காப்பியாக நாலு வீட்டில் வாங்கிய உணவை ஒன்றாகக் கலந்து, இதுதான் எனது உணவு என்று காட்டுவதைப் போல, தனக்கென்று எந்த வித தொன்மையான வரலாற்றுச் சான்றுகளையும் கொள்ளாத ஓர் இனம், அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த மாவாக- இந்தியத் துணைக் கண்டத்தில் நிகழ்ந்த அன்றைய உணவு பழக்க வழக்கத்தை (புலால் மறுப்பு சார்ந்த இறை நம்பிக்கை) நகலெடுத்து, ஓ! இதுவே இந்த நிலப்பரப்பின் பரந்து பட்ட உணவென்று நம்பி, இயல்பாக தான் உண்ட இறைச்சி உணவையே புறந்தள்ளி 'கொல்லாமை' என்ற சிறைக்குள் தனைப் புகுத்தி இதுவே இந்து மதம் என்று 'நான்கு வீட்டு உணவை' நேற்று வந்தவர்கள் காட்டினார்கள்...
ஆனால், அந்த மக்களுக்கு அன்று தொலை நோக்குச் சிந்தனையில் என்ன தெரியவில்லை என்றால், ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனாலும், பல்லாயிரம் ஆண்டுகள் ஓரிடத்தில் வாழ்ந்து செழித்த ஒரு நாகரீகம் எத்தனை காலச் சுவடுகளை, எதனதன் வடிவுகளில் எல்லாம் எங்கெங்கு விட்டுச் சென்றிருப்பார்கள் அது தொடர்ந்து வெளிக்கிளம்பிக் கொண்டே இருக்குமே அதனை என்ன செய்வது என்று மறந்து போனதுதான்.
அவர்கள் நவீன புரட்டு ஆவணங்களாக எத்தனையோ கதைகளை எழுதி வைத்துக் கொள்ளலாம். இருப்பினும் அறிவியல் அவைகளை போற போக்கில் இதோ இந்த இறைச்சி விசயத்தில் எப்படி பல நூறு புரட்டுக்களை இடது கையால் துடைத்துப் போட்டதோ அப்படி துடைத்தே நகரும். ஆனால், அவர்கள் எழுதி வைத்த அத்தனை ஆயிர புரட்டுக் கதைகளும், பக்கங்களும் கால வெள்ளத்தில் கிள்ளி எறிந்த நகக் துணுக்காகி விடும்.
இனிமே சரஸ்வதி ஆற்றை தோண்டி எடுத்து, அதில் ஒரு சிறு காது ஜிமிக்கியாவது கண்டெடுத்து நம் கண் முன்னால் காண்பித்து, மேலும் இதோ நாங்கள் அன்று பாடியதாக, ஆடியதாக, எழுதியதாக சொன்ன ஒவ்வொன்றிற்கும் சான்று என்று ஒவ்வொன்றாக அகழ்வாயின் மூலம் காட்டுவார்களா பார்ப்போம்.

திராவிடம் என்ன சாதித்தது? : All In One Place

 எப்பொழுதும் அடர்வாக இருக்கக் கூடிய எழுத்துக்கள், பேச்சுக்கள், சிந்திக்கத் தூண்டும் நடைமுறை சார்ந்த விசயங்களை கண்டால் அவைகளைத் தவிர்த்து விட்டு, பொரும்பாலும் நமது மனது வாழைப்பழத்தை உரித்து வாயில் கொடுக்கத் தக்க விசயங்களையே நாடும்.

இது மிகவும் இயல்பானதொன்று! உள்ளடக்கம் இல்லாத இன்றைய அரசியல் தலைமைகளின் பேச்சை நம்பி ஏமாந்து நிற்பதற்கும் அதுவே காரணம். உழைப்பு இல்லாத பெற்ற எதுவும் நிற்காது, சுவைக்காது.
வந்த வழி (வலி) தெரிந்தால்தான் முயன்று பெற்றவைகளை, வாழும் பொழுது வாழ்க்கையில் ரசித்து ருசித்தது போக, பேணி, வரும் தலைமுறைக்கு கடத்திச் சேர்க்க முடியும்.
இல்லைன்னா, எடப்பாடி அன் கோ போன்ற அலிபாபா குழுகிட்ட கொடுத்துட்டு மேலை ஓட்டைப் பார்த்துக்கிட்டு மல்லாக்க படுத்திருக்க வேண்டியதுதான்.
இப்போ வந்த வழி தெரியணுமா, புதியவர்களே பொறுமையா கீழே உள்ள பதிவை படிங்க. நீங்க போட்டிருக்க மேல் சட்டைக்கு யார் காரணமின்னு தெரிஞ்சிக்கலாம்...
🔹️🔹️🔹️🔹️🔹️
1915 இல் கல்வி இலாகாவில் இருந்த மொத்த உத்தியோகங்கள் 518. அந்த 518 இடங்களில் அமர்ந்திருந்த பார்ப்பனர் 399 பேர். கிறித்துவர்களும் ஆங்கிலோ இந்தியர்களும் 23 பேர், முஸ்லிம்கள் 28 பேர், ஆதிதிராவிடர் உட்பட பார்ப்பனரல்லாத இந்துக்கள் 18 பேர்.
1915 இல் அரசுப்பணியாளர் தேர்வாணையம் என்ற ஒன்று கிடையாது. அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பணி நியமனம் வழங்கிக் கொள்வார்கள்.‌
1916 இல் டாக்டர்.சி. நடேச முதலியார், டாக்டர். டி.எம்.நாயர், பி.தியாகராய செட்டியார் ஆகிய மூவரும் சேர்ந்து நீதிக்கட்சி என்று அறியப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தைத் தொடங்குகிறார்கள்.
1920 இல் நீதிக்கட்சி அமைச்சரவை பதவிக்கு வந்தது. இதே ஆண்டில் திருநெல்வேலியில் நடைபெற்ற 26-வது தமிழ் மாகாண காங்கிரஸ் மாநாட்டில் தந்தை பெரியார் வகுப்புரிமை தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
1922 -இல் நீதிக்கட்சி அரசாங்கம் 12 பதவிகள் இருந்தால் அதை 5 பார்ப்பனரல்லாதார், 2 பார்ப்பனர், 2 மகமதியர், 2 கிறிஸ்துவர், 1 தாழ்த்தப்பட்டவர் என பிரித்து வழங்க வேண்டும் என ஒரு அரசாணையை வெளியிட்டது.
1924-இல் மருத்துவக் கல்லூரியில் படிக்க சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்று இருந்ததை, நீதிக் கட்சி அரசாங்கத்தை நடத்திய பனகல் அரசர் நீக்கினார்.
இதே ஆண்டில் நியமனங்களில் வேண்டியவர்களை நியமித்துக் கொள்ளும் முறையை ஒழிக்க, பணியாளர் தேர்வுக் குழுவை இந்தியாவிலேயே முதன் முறையாக ஏற்படுத்தியது நீதிக்கட்சி.
1942- இல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையில் வகுப்புவாரி முறை அமலாக்கப்பட வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.
1947-இல் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அமைச்சரவை வகுப்புவாரி உரிமையை பின்வருமாறு மாற்றி உத்தரவிட்டது.
இதன்படி 14 இடங்கள் இருந்தால் அதில் 6 இடங்கள் பார்ப்பனரல்லாத முன்னேறிய வகுப்பினருக்கும், 2 இடங்கள் பார்ப்பனரல்லாத பின்தங்கிய வகுப்பினருக்கும், 2 இடங்கள் பார்ப்பனர்களுக்கும், 2 இடங்கள் தாழ்த்தப்பட்டோருக்கும், ஒரு இடம் முகமதியருக்கும், ஒரு இடம் கிறிஸ்தவ ருக்கும் ஒதுக்கப்படும்.
1948 - இல் நேரு தலைமையில் அமைந்த இந்திய அரசு "தாழ்த்தப்பட்ட மக்களைத் தவிர வேறு யாருக்கும் இட ஒதுக்கீடு கிடையாது” என சுற்றறிக்கை அனுப்பியது. ஓமந்தூரார் இதனை ஏற்கவில்லை. இதனால் அவரை ”தாடி இல்லாத ராமசாமி” என பார்ப்பனர்கள் அழைத்தனர்.
1950- இல் வகுப்புரிமை இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு புறம்பானது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
1951 காலகட்டத்தில் மாணவர்கள் இன்டர்வகுப்பில் வாங்குகின்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்காணலில் பெறும் மதிப்பெண்கள் இவை இரண்டையும் கூட்டி அதன் சராசரியின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி சேர்க்கை நடைபெற்றது.
இட ஒதுக்கீடு செல்லாது என்று ஆன நிலையில், காங்கிரஸ் ஆட்சியாக இருந்தபோதிலும், அதிகாரம் பார்ப்பனரல்லாத குமாரசாமி ராஜா அவர்கள் கையில் இருந்ததால், 1951-52 கல்வியாண்டில் நேர்காணலுக்கு அதிக மதிப்பெண்களை ஒதுக்கி பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு ஓரளவு நியாயம் வழங்கியது மாகாண அரசு.
இதனால் இந்த ஆண்டில் மொத்தமிருந்த 318 மருத்துவ இடங்களில் 63 இடங்கள் பார்ப்பனர்களுக்கும், 130 இடங்கள் ஜாதி இந்துக்களுக்கும், 125 இடங்கள் மற்றவர்களுக்கும் கிடைத்தது.
1952 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராஜாஜி ஆட்சிக்கு வருகிறார். பார்ப்பனர்களுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் வகையில் ,நேர்காணலுக்கு இருந்த மதிப்பெண்களை 150 லிருந்து 50 ஆக அதிரடியாகக் குறைத்தார். 1952-53 கல்வியாண்டில் மொத்தமிருந்த 318 மருத்துவ இடங்களில் 104 இடங்கள் பார்ப்பனர்களுக்கும், 56 இடங்கள் ஜாதி இந்துக்களுக்கும், 158 இடங்கள் மற்றவர்களுக்கும் கிடைத்தது.
அதாவது மக்கள் தொகையில் 100க்கு 3 பேராக இருந்த பார்ப்பனர்களுக்கு கடந்த ஆண்டைவிட 41 மருத்துவ இடங்கள் கூடுதலாகக் கிடைத்தது. பார்ப்பனரல்லாத ஜாதி இந்துக்களுக்கு கடந்த ஆண்டைவிட 74 இடங்கள் குறைவாகக் கிடைத்தது.
எஞ்சினியரிங் கல்லூரி சேர்க்கையிலும் கடந்த ஆண்டைவிட பார்ப்பனர்கள் 92 இடங்களை அதிகமாகப் பெற்றார்கள்.
பார்ப்பனரல்லாத ஜாதி இந்துக்கள் கடந்த ஆண்டைவிட 88 இடங்கள் குறைவாகப் பெற்றார்கள்.
எஸ்.எஸ்.எல்.சி தேர்விலும் தேர்ச்சி விகிதத்தை 42 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாகக் குறைத்தார். இதனால் கூடுதலாக பாதிக்கப்பட்டது பார்ப்பனர் அல்லாத மாணவர்கள்தான் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை.
10.6.1953 விடுதலையில் வந்த ஒரு செய்தி ” சென்ற ஆண்டில் செலக்ஷன் என்ற பன்னாடை முறை இல்லை. ஆனால் இந்த ஆண்டில் உயர்திரு ஆச்சாரியார் அவர்களின் அதிகார லீலைகளில் ஒன்றாக இந்த வடிகட்டும் முறை புகுத்தப்பட்டது" என்று சொல்கிறது.
பன்னாடை என்றால் வடிகட்டும் துணி. அதைக்கொண்டு வடிகட்டி பலரையும் தூக்கி எறிந்து விடுவார்கள். அதனால்தான் இந்த செலக்ஷன் முறைக்கு இந்தப் பெயர் சொல்லி அழைத்தது விடுதலை.
மூன்றாவது ஐந்தாவது மற்றும் எட்டாவது வகுப்பிற்கு பொதுத்தேர்வை பரிந்துரைக்கும் புதிய கல்விக் கொள்கையின் ஏற்பாட்டையும், மருத்துவ கல்லூரி சேர்க்கையில் உள்ள NEET தேர்வையும் நாம் இந்த பன்னாடை முறையோடு ஒப்பிடலாம்.
இதோடு நிறுத்தவில்லை ஆச்சாரியார், குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தார். அதாவது கிராமத்தில் உள்ள மாணவர்கள் மூன்று மணி நேரம் மட்டும் பள்ளிக்கு சென்றால் போதும். மற்ற நேரங்களில் தந்தையார் செய்யும் தொழிலைச் செய்ய வேண்டும். ஆனால் நகரங்களில் உள்ள மாணவர்களுக்கு இது பொருந்தாது. இந்த அநீதியும் கிட்டத்தட்ட NEET என்ற அநீதிக்கு இணையானதுதான்.
பெரியார் தலைமையில் நடந்த போராட்டங்களின் விளைவாக உண்டான முதல் அரசமைப்புச் சட்ட திருத்தம்தான் இன்று இந்தியா முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள் இட ஒதுக்கீட்டை அனுபவிக்க காரணம்.
இட ஒதுக்கீடும் பணியாளர் தேர்வு வாரியமும் இல்லையென்றால் பதவிகள் அனைத்தும் ஏற்கனவே பதவிகளில் இருப்பவர்களின் உறவினர்களுக்கே சென்று சேரும் என்பதில் ஐயமில்லை.
உதவிய நூல்கள்:
வகுப்புரிமைப் போராட்டம் ( கம்யூனல் ஜி.ஓ) பேராசிரியர் க அன்பழகன், திராவிடர் கழக வெளியீடு.
ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம், பேராசிரியர் அருணன், திராவிடர் கழக வெளியீடு.
Thirunavukarasan Manoranjitham
வழியாக... Thank you!

இருபது ஆண்டுகள் பின்தங்கியுள்ள சமஸ்!

 ...2014 வரை தமிழகம் குறித்து மிக மோசமாகவே எழுதி வந்தேன். அந்த ஆண்டு 2014ல் இந்தியா முழுதும் சுற்றுப்பயணம் செய்தேன். அதன் பிறகுதான் 50 ஆண்டுகள் இந்தியாவை விட தமிழ்நாடு முன்னாடி இருப்பதை அறிந்து கொண்டேன். - எழுத்தாளர் சமஸ்...

இந்தக் கணக்கை வைத்துப் பார்த்தால் சமஸ் 20 ஆண்டுகள் என்னை விட பின் தங்கி இருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில், நான் இந்தியாவை 1994லயே சுத்த ஆரம்பித்து விட்டேன். அப்பவே வயசுக்கும் வந்துட்டேன்! 😁
அப்போ நான் வடக்கில் பார்த்த காட்சிகள் உடனடியா நாம எவ்வளவு ஸ்பாய்ல் செய்யப்பட்டு இருக்கோம்னு உணர வைச்சிருச்சு. முதல் விசயம் உ.பி_ல ஒரு ஊருக்கு போக நான்கு மணி நேரத்திற்கு மேல பேருந்துக்காக காத்துக்கிடந்தது. பேருந்துகளின் நிலை, சாலை கட்டமைப்பு. கங்கையில என்னோட முன்னாள் வெள்ளைக்காரி பார்ட்னரோட சங்கிகள் செய்த அலுச்சாட்டியோத்தோட மல்லுக்கட்டினதுன்னு ஒரு புத்தகம் போடுற அளவிற்கு விசயம் இருக்கு.
அது ஒரு சமுகமாக நாம எவ்வளவு தூரம் நாகரீகமடைந்து வித்தியாசப்பட்டு நிற்கிறோங்கிறதை உடனடியாக கண்ணைத் திறந்து விடக் கூடிய பயணமாக அமைந்தது.
அதனை சாத்தியப் படுத்திக் கொடுத்த திரவிடச் சிந்தனையாளர்களுக்கே அனைத்து க்ரீடிட்டும் செல்லும்.
பத்திரிக்கையாளர், அரசியல் விமர்சகர் சமஸின் மனசாட்சியை ஒரு சிறு குறுக்கு வெட்டு செய்து பார்ப்போமா? நேற்று நீயா நானா_வில் தோன்றி 2014ம் ஆண்டில், தான் செய்த வட இந்தியப் பயணமே, இந்தியாவை விட தமிழ்நாடு 50 ஆண்டுகள் முன்னேறிய நிலையில் இருப்பதை உணர்த்தியது என்று கூறினார். அதிலும் கவனிக்கத்தக்க வகையில் அதற்கு திராவிடக் கட்சிகளின் திட்டங்களே அடிப்படைக் காரணம் என்று அழுத்தம் திருத்தமாக கூறுவதைக் கூட தவிர்த்து விட்டார்.
அதற்கு முன்பு இவர் மிகக் கறராக காங்கிரஸையும், திமுகவையும் விமர்சித்து வந்திருப்பதாகத் தெரிகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 2016ல், திமுக தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் அந்தக் கட்சியின் "அஸ்தமனம் தொடங்கிவிட்டதாக" ஆருடம் வேறு சொல்லி இருக்கார்.
இவர் மிகவும் அடர்த்தியாக தனது சிந்தனையை முன் வைத்து நகரும் ஒரு படிப்பாளியாகவும் தெரிகிறார். வீட்டிற்கு நான்கு தினசரிகளை வரவைத்து தினமும் வாசிப்பதாகவும் அவரே நீயா நானா நிகழ்ச்சியின் போது கூறினார்.
இந்த நிலையில், தன்னுடைய 40வது வயதிலேயே தமிழ்நாடு பிற மாநிலங்களை விட சமுகநீதியின் வழியாக ஒரு முன்னோடி மாநிலமாக இருப்பதை அறிந்து கொண்டேன் என்பதாகக் கூறும் கூற்று உண்மையாக இருக்க முடியுமா?
நான் அப்படி இருக்க வாய்ப்பில்லை என்கிறேன். எதன் அடிப்படையில் என்றால்-
ஒரு நண்பரின் அவதானிப்பு...
👉🏿//சமஸ்ஸோட பதிவுகள்ல எனக்கு நிறைய இடத்துல முரணிருக்கும்.
Many a times i felt like he is wanna be paapan based on his writings. Don't have much regards to him. //
ஏன் அப்படி முரணாக எழுதி பேசி வந்திருக்கிறார்?
இது ஓர் அடையாளச் சிக்கல் என்பதோடு, வளரும் பருவத்தில் இருப்பவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ எடுக்கும் ஒரு நிலை. சமஸ் மாதிரி ஆட்கள் தெரிந்தே அப்படி ஒரு நிலையை எடுத்திருக்க வாய்ப்புண்டு (Trying to be inclusive, so that their personal growth will go in the desired direction without any hurdle. A mere opportunistic strategy!).
ஏன்னா, ஒரு சமுகத்தினுடைய உளவியலையே புட்டுப் புட்டு போடுகிறவர் பிற இந்திய நிலப்பரப்பில் என்ன அரசியல் முன்னெடுப்புகள் எடுத்து கையாளப்படுகிறது என்று தெரியாமல் இருந்து இருப்பார் என்று சொல்வதை நம்புவதற்கில்லை. அதிலும் ஒரு நாளைக்கு நாலைந்து தினசரிகளை வீட்டிற்கு போட வைச்சுப் படிக்கிறவர். பத்திரிக்கையாளர். ஒப்பீட்டுளவில் ஒரு திட்டத்தின் சாதக பாதகங்களைப் பற்றியும் எழுதக் கூடியவர்.
இவர் தன்னுடைய மாநில மக்களின் ஒட்டு மொத்த சமுகநீதி நலனுக்காக இன்னும் உண்மையாக இருக்கலாம்.
விடலைப்பசங்களுக்குத்தான் அடையாளச் சிக்கல் வரணும் இவ்வளவு சிக்கலான விசயங்களைப் பற்றி எழுதும், பேசும் எழுத்தாளருக்கு அல்லவே!



Related Posts with Thumbnails