Saturday, January 09, 2021

கதம்ப நிகழ்வுகளும் என் எண்ணங்களும் - 1

மக்களாட்சி மீதான வன்முறையும் ட்ரம்பும்: A Failed Coup

இவிங்க எல்லாம் 1650களில் பல்லு விளக்காம கரையேறின பற்களோட, குளிக்காம அழுக்கா, கண்கள் எல்லாம் பஞ்சடைத்துப் போயி, குதிரை மேல ஏறி வழிப்பறி பண்ணிக்கிட்டு திரிவானுங்களே அந்த மாதிரி தங்களை கற்பனை செய்து கொண்ட கற்காலத்து எண்ண மனிதர்கள். வெளியுலகத்தோட தொடர்பே இல்லாம திடீர்னு ஜுமான்சி படத்தில சம்பந்தமே இல்லாத காலத்திய மனிதர்கள் நகரத்திற்குள் புகுந்து ஓடித் திரிவது போன்று ஒரு காட்சி வருமே, அது போல இருந்தது நேற்று பார்த்த காட்சிகள்.

நிறைய பிள்ளைகள் அதிர்ச்சியில் அழுததாகவும் செய்தி வந்தது. கூட்டத்தில்
இருந்தவர்கள் ஏதோ அவுட் ஆஃப் டைமிலிருந்து வந்தவர்களாக புரட்சி நடந்து கொண்டிருக்கிறது என்றும், ஆனா, போலிஸ் பெப்பர் ஸ்பிரே அடித்து விட்டது என்றும் கேவிக் கேவி அழுது கொண்டே நடைய கட்டிக் கொண்டிருந்தார்கள்.
அந்தக் கூட்டத்தில் இருந்த எண்ணப்பாடுகளை ஒத்த மனிதர்களை நான் சந்தித்திருக்கிறேன். இந்தச் சிறிய கூட்டத்தின் உலகமே வேறையப்பா! 12 பேக் பியரும், ஒரு ஷாட் துப்பாக்கியும், கராஜ்க்குள் அமர்ந்து கவ்பாய் வாழ்க்கையை கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையற்ற ஒரு கூட்டமது. நல்ல புத்தியில் உள்ளவனுக்கு அங்கே வேலையில்லை. இது நவீன அமெரிக்க வானில் படர்ந்து மறைந்த ஓரங்க கோமாளி நாடகம்!
                                                            @@@@@@@@@@@
                                                                @@@@@@
மழைக்காடுகள் அழிப்பும் Xவைரஸ்களும்

மழைக்காடுகள் அழிக்கப் படுவதாலே, ஈபோலா போன்ற உயிர்கொல்லி வைரசுகள் விலங்குகளிலிருந்து மனிதனுக்கு தாவும் புதிய திரிபு வைரசுகளாகி தொற்றுகிறது என்கிறது புதிய வகை ஆராய்ச்சிகள்.
எப்படி?
காடுகள் அழிந்து அங்கு வாழும் விலங்குகள் அழியும் பொழுது நம் கூடவும் வாழப் பழகிய எலி, பூச்சி, கொசு போன்றவைகள் அந்த இடத்தை நிரப்பி வைரஸ்களை அங்கிருந்து நம்முடைய இடத்திற்கு நகர்த்துகிறது. இப்பொழுது ஈபோலா போல புது விதமான வைரஸ் ஒன்று மனிதக் கரை ஏறி இருப்பதாக செய்தி கசிந்திருக்கிறது. அதுவும் ஈபோலா வைரஸை கண்டறிந்து அறிவித்த அதே ஆராய்ச்சியாளர் வெளிக் கொண்டு வந்திருக்கிறார்.
எனக்கு இந்தத் தொடர்பு படுத்தல் மிக்க பொருள் உள்ளதாகப் படுகிறது. நம்முடைய செயல்பாடுகளில் சுற்றுச் சூழலைப் பேணும் வாழ்க்கை முறையோடு மாற்றிக் கொள்ளவில்லை என்றால், இந்த நுண் கிருமிகளே மனித குலத்தை அச்சுருத்தும் பெரும் சவலாக அமையும்.
                                                        @@@@@@@@@@
                                                                @@@@@@

100% திரையரங்க நிரப்பல் கொரோனாவிற்கான சிவப்பு கம்பள விரிப்பு! உருமாறிய நுண்மின்னு அலறி தீர்த்தது ஊடகங்கள். இன்று திரையரங்களில் 100% நிரப்பலோட படம் பார்க்கலாங்கிறதிற்கு விளம்பரம்.

இப்படி அரசிற்கும் பொறுப்பில்ல, ஊடகங்களுக்கும் பொறுப்பில்லன்னா, மக்களா பார்த்து தங்களது உசிரையும், குடும்பத்தின் உசிரையும் காப்பாத்திக்கிட்டாத்தான் உண்டு. ஜஸ்ட் பூனை கண்ணை மூடிக்கிட்டதாலே உலகம் இருண்டுவிடுவதில்லை, என்பதற்கிணங்க பணப் பைத்தியங்கள் தங்களது சுயநலத்திற்காக எடுக்கும் முடிவுகளால் தொற்று ஒழிந்து விட்டது என்று முடிவிற்கு போகாதீர்கள் மக்களே!
இன்னும் கொரோனா என்கிற கத்தி நம் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டுதான் உள்ளது. ஞாபகத்தில் நிறுத்தி ஒதுங்கியே இருங்க!

0 comments:

Related Posts with Thumbnails