Saturday, January 28, 2012

வியாபிப்பவன்



இரவும் குளிரும்
பனிக்குட திரவ மிதவையில்
பாதுக்காப்பாய் இருந்தயெனை
மஞ்சளொளியான்
ஆற்றின் சலசலப்பினூடே
வெள்ளிக்காசுகளை அள்ளிப்பரப்பி
இனமறியா பல
பறவை ஒலிக்குறிப்புகளுமாக
சங்கீத நாண்பூட்டியபடியே
முற்றத்திற்கு 
அனிச்சையாய் ஈர்த்து
பூனைப் பாதங்களையொட்டி
என்னுள்
அரவமற்று மெதுமெதுவாய்
உள்ளிறங்கி
தன்னையே கரைத்துக் கொண்டிருக்கிறான்.

1 comments:

வவ்வால் said...

theka,

week end hangover kavithai? :-))

Related Posts with Thumbnails