Monday, December 16, 2013

வடுவூரில் எதிர்கால நீச்சல் வீரர்கள்: Potential National Swimmers at Vaduvoor

நேற்று வடுவூர் வடக்கு பகுதியில் உள்ள ஏரிக்கு சென்றிருந்தோம். எங்கெங்கு நோக்கினும் பச்சைப் பசேல் வயற்காடுகளும், அண்மையில் பெய்து வரும் தொடர் மழையால் மரங்கள் நீரை அருந்தி செழுமையை இலைகளில் காட்டியவாறு தனிந்து நின்று குளுமை காட்டிக் கொண்டிருந்தது.

அருகாமையில் உள்ள நீர் நிலையில் இந்தியாவின் potential divers தங்களின் தேசியத் திறன் அறியாது “அண்ணா, அண்ணா எங்களை படம் பிடியுங்கள்” என்று கூறியவாறே அத்தனை நேர்த்தியையும் காட்டி அரை மணி நேரத்திற்கும் மேலாக காற்றில் சுழன்றபடி நீருக்குள் தங்களவு ஆன்மாவை செலுத்திக் கொண்டிருந்தார்கள்.

இரண்டாவது படத்தில் உள்ள சிறுவனின் நீர் புகும் நேர்த்தியைக் காணுங்கள்! இதுவே ஒலிம்பிக் போட்டிகளில் பல வருடப் பயிற்சியில் செய்யும் ஒரு நீச்சல் வீரர் செய்யும் சாகசமென்று ஆ, ஓன்று கூச்சலிடும் (what an entering) ஒரு திறமை. இங்கே தானே பழகியதில் செய்து காட்டுகிறான்.

இப்படியாகத்தான் நமது கிராமப்புறங்களிலிருந்து பல தேசிய விளையாட்டு வீரர்கள் இந்தியா ஒன்று, இரண்டாவதை பின் தள்ளியவாரே தன்னை மண்ணுக்குள் புதைத்து விட்டு அரை ஜட்டி போட்டு 20/20 மட்டுமே விளையாட்டு என்று ச்சீயர் லீடிங் செய்து வருகிறது. எல்லாமே பணம், வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே தூக்கிப் பிடிக்கும் குணம்.

The real talents yet to be found in the heart of India!

1)


2)
3)
4)
5)
6)
7)
8)

3 comments:

வவ்வால் said...

தெ.கா,

கிராமத்து "மைக்கேல் ஃபெல்ப்ஸ்" கள்!!

இதே போல் ஒகேனக்கலில் அவ்ளோ உயரத்தில் இருந்து சர்வ சாதாரனமா டைவ் அடிக்கும் பசங்க இருக்காங்க.

Anonymous said...

செங்கமல புட்பங்கள் சேர்ந்தங்கே பூத்திருக்கும் மந்தாரை கடுவகங்களில் ஒரு நிறைபாட்டில் கோகர்ன சல சலப்பில் சங்குற்றம் இல்லாது அலைந்தாடும் பாசுபத குளிர் தரும் நன்னீர் தடாகங்கள் இருப்பதை இரு விழித் தாமரை பூக்களால் பருகித் திளைப்பதுவே சுட்சம செளந்திர சுகந்தமாகும் என்கிற வேளையில், இது போல் பாரக்கிரமம் பொருந்திய பெளரானியத்துவத்துடன் கூடிய திருப நிமித்தம் காட்டும் இளம் தளிர் கண்டு மனம் அத்தனையும் பொற்பூக்களை சிந்தித்து சிரிக்க வைத்து மாமாங்கமாக்குவது இயலு தானே. கந்தர்வ கோட்டையில் உள்ள கருந்தடாகங்கள் எங்கே..எமது அரசர்கள் தட்டியாண்ட பால்வெளிக் குளங்கள் எங்கே... தேடுகிறோம் கிடைக்கவே இல்லை.
அன்பன்
சையது உசேன்

Anonymous said...

எங்கட கமெண்ட் ஒன்னு தேடி வந்தம் ஞாம் இன்னும் கூடுதல் பதில்நுகர்வோர் கானுதலுக்கு இடுல்லியோ தாங்கள்.

சையது உசேன்

Related Posts with Thumbnails