என்ன இருந்தாலும் இரண்டு பேருக்கு மட்டுமே அந்த வண்டிப் பயணம் என்பது கொஞ்சம் மனதை அறுப்பதாக இருந்தது. சரி, அப்படி என்ன வெரைசா போயி கோவையில பண்ணப்பேனேன் அப்படின்னு யோசிக்கிறீங்களா.
ஏற்கெனவே எனது சில பதிவுகளில் பேசியிருக்கிற நமது நண்பரை

ரொம்ப ஆவலுகளுக்கிடையே நம்ம "குடும்பபக் கொல்வானை (Tata Sumo)" முக்க முனக வைத்து அந்த வேண்டுமென்றே செப்பணிடப்படாத சாலையில் பயணித்து வழியெங்கும் நீலகிரி மற்றும் சிங்க வால் குரங்குகள், இருவாட்சி பறவை அப்படின்னு பயணம் நீண்ண்ண்டு கிட்டே போயி கடைசியா நமது நண்பரை யானை முகாமில் வைத்து சந்தித்தேன். அந்தச் சந்திப்பு சொல்லி வைத்தது போலவும், எனக்காகவே அவர் காத்து இருப்பது போலவும் நிகழ்ந்தேறியது, அவரும் ஏதோச்சையாக அங்கு தனது மகள்களுடன் வந்து நிற்கப்போக.
அது ஒரு எமொஷனல் சந்திப்பு. தன்னைப் போலவே தனது மகளும் இளைத்துப் போய், பல வருடங்கள் தனது உண்மையான இருக்கும் வயதை முன் தள்ளி அவர்களின் உடல் அதனைக் காட்டிலும் முன்னேறியிருந்தை காண முடிந்தது. கட்டியணைத்து அவரின் ஸ்பரிசம் உணர்ந்தேன். கடந்த முறை ஒரு நான்கு வருடங்களுக்கு முன்பு, இரண்டு லுங்கிகளும், நிறைய மெழுகு வர்த்திகளும், அவர் விரும்பும் பீடிக்கட்டுகளுமாய் அவரை நடந்தே சென்று சந்திக்க முயற்சித்து வீண் போய், நான் வாங்கிச் சென்ற வஸ்துகள் அணைத்தும், நாங்கள் அங்குதான் செல்கிறோம் நண்பரிடம் ஒப்படைத்து விடுகிறோம் என்று கூறி பெரிய பொறுப்பில் இருக்கும் ஒரு வன அலுவலரால் கபளீகரம் செய்யப் பட்டதை நினைவில் நிறுத்தி இந்த முறையும் அப்படி நடக்க வாய்ப்புகள் அதிகமிருப்பதை நினைந்து ஒன்றும் வாங்கிச் செல்லவில்லை.

என் மனத்தினுள் மீண்டும் அதே கேள்விக் கணைகள். அந்த புகைப் படத்தில் எங்களுக்கு பின்னால் பரந்து விரிந்து கிடக்கும் மலைதான் 'பெருங்குன்று' அதற்கு கீழே ஜமுக்காளமாக வரகலியார் சோலை. இவைகள் இரண்டும்தான் எனது நண்பரின் இணைபிரிய அடையாளங்கள். இவருக்கு அந்த மலை சாட்சியாகவும், மலைக்கு இவர் சாட்சியாகவும் வாழ்ந்து, வளர்ந்து, தேய்ந்து வருகிறார்கள்.
எனக்கு எழுந்த கேள்வி இந்த பதினோரு வருட பிரிவில், காட்டானாகிய நான் எங்கெங்கோ ஓடித்திரிந்து, என்னத்தையோ கண்டுபிடிச்சு இந்த பூமி உருண்டை சுத்தறதெ ஒரு செகண்டு குறைச்சு ஓட வைக்க முயற்சிக்கிற மாதிரி இங்க ஒட்றேன், அங்க ஓட்றேன், இதப் பேசுறேன், அதப் பேசுறேன்... ஆனா ஒரு மண்ணாங்கட்டியும் நடந்த மாதிரி தெரியலை, ஆனா, இன்னைக்கு நம்ம நண்பரும் அந்த மலையும் எல்லாத்தையும் வேடிக்கைப் பார்த்துகிட்டு செவனேன்னு ஒரு பார்வையாளராக இருப்பதைப் போன்ற தோற்றத்தை எனக்கு வழங்கியது.
இதில் யார் பார்வை 20/20...? யார் முழுமையாக வாழ்ந்தவராகிறார்கள்...??