Friday, January 20, 2017

இனமாதல்: Speciation

இனமாதல்: Speciation

ஒரு நீண்ட நெடிய மழைக்காட்டை நியாபகத்தில் நிறுத்திக் கொள்ளுங்கள். அங்கே பல வகையான குரங்கு, மந்தி, பறவை மற்றும் ஊர்வன வகைகள் வாழ்வதாக கொள்வோம். பல ஆயிரக்கணக்கான வருடங்களாக அவைகள் இயற்கை நிகழ்வுகளாலோ, மனித இடைஞ்சல்களாலோ துண்டு படுத்தப்படாமல் இருப்பதாக கொள்ளும் பட்சத்தில் அங்கே வாழும் உயிரினங்களில் இனமாதல் என்பது மிக குறைந்த அளவிலேயே நடைபெறுகிறது எனக் கொள்வோம். இருப்பினும், அந்த பரந்து விரிந்த நிலப்பரப்பு அதன் லாஞ்சிட்யூட், லாட்டிட்யூட் வித்தியாசங்களைக் கொண்டு உயிரினங்களுக்கிடையே இனமாதல் இயற்கையாகவே நிகழ்ந்து ஆங்காங்கே கிடைக்கும் உணவுகளின் (niche) அடிப்படையில் தகவமைவு கிட்டி வாழப் பழகிக் கொள்கிறது.

இப்பொழுது திடீரென ஒரு பெரிய இயற்கை பேரிடர் அந்த பரந்து விரிந்த காட்டை இரண்டு பெரும் புரிவுகளாகவோ (fragmented) அல்லது பல தீவுகளாகவோ இடையில் நீர் நிலைகளை வைத்து பிரித்து விட்டது எனக் கொள்வோம். ஒரே பகுதியில் வாழ நேர்ந்த ஒரே வகை குரங்கினம் ஒன்று இந்தப் பக்க கரையிலும் அந்த பக்க கரையிலுமாக பிரிய நேர்ந்து விட்டது எனக் கொள்வோம். இருப்பினும் அவைகள் ஒன்றாக இணைந்திருந்த நிலப்பரப்பில் பல விதமான தாவர, மர வகைகளிலிருந்து கிடைக்கும் உணவை உண்டு பழகி இருப்பினும், இந்த நிலப்பிரிவு இப்பொழுது ஒரு கலவையாக இருந்த அந்த காட்டை ஒரு குறிப்பிட்ட மர இனமே அதிகம் உள்ள பகுதியாக மாற்றி விட்டது.

அத்த நிலப்பரப்புடன் துண்டுப் பட்டு போன குரங்கு இனம் அந்த குறிப்பிட்ட மர இனங்களிலிருந்து கிடைத்த உணவு பற்றாக் குறையாகும் பட்சத்திலும், தட்ப வெப்ப நிலை அந்த துண்டுப் பகுதியில் மாறி கிடைத்தற்கொப்ப, பல ஆயிரக்க கணக்கான வருடங்களின் மற்றொரு கரையில் இருக்கும் தன் இன குரங்கு வகையிலிருந்து சிறிது சிறிதாக மாற்றம் கொண்டு அவை ஒரு துணை இனமாக மாறிவிடுகிறது (endemic species). இதையே இனமாதல் இயற்கையமைவில் என்று கருத்தில் கொள்ளுங்கள்.

இப்பொழுது மனிதர்கள் நிகழ்த்திக் கொள்ளும் வீட்டு விலங்குகளாக்குதல் எப்படியாக பிராந்தியத்திற்கு பிராந்தியம் மாறுபட்டு ஒவ்வொரு வீட்டு விலங்குகளும் ஒரு துணை உயிரினமாக்கப்படுகிறது என இதே தியரியின் அடிப்படையில் புரிந்து கொள்ள முடியும்.

நமது மூதாதையர்கள் குகைகளிலிருந்து வாழும் காலந்தொட்டே அவர்களைச் சுற்றி scavenging வகை விலங்குகள் சுற்றியே இருந்தன. காட்டு மான்களும், காட்டெருமைகளின் இயற்கையமைவே இரவு நேரங்களில் வெட்ட வெளி புள் தரை மேடுகளையோ, திறந்த வெளி மைதானங்களையோத்தான் தேர்வாக கொண்டு இரவைக் களிக்கின்றன. பாதுக்காப்பிற்கென!

ஓநாய்களும், காட்டு நாய்களும், மனித நடமாட்டமுள்ள பகுதிகளை தேர்ந்தெடுத்திருப்பதற்கான தலையாய காரணமாக இருந்திருக்க இது போன்ற தாவர பட்சிகள் ஒய்வு எடுக்கும் இடங்களுக்கு நகர்ந்து ஈசியாக தனது இரையை அடிப்பதற்கு ஏதுவாக இருந்திருக்க வேண்டும். பின்பு மனித வசிப்பு இடங்களைச் சுற்றி தாங்கள் உண்பதற்கான மாமிச எச்சங்கள் எப்பொழுது கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமைந்திருக்க வேண்டும். அதுவே நாட்பட மனிதர்களுக்கு பழக்கமாகி சிலவைகள் அந்த உறைவிடங்களிலேயே தங்கி உண்டு, உறங்கி, இனப்பெருக்கம் செய்யுமளவிற்கு habituateஆகி இருக்க வேண்டும்.

புதிதாக முளைத்த குட்டிகள் மேலும் மனிதர்களுக்கு நெருக்கமாக அவன் அவைகளை சுவீகரித்துக் கொள்ள ஆரம்பித்து பின்பு அவைகளை வேட்டைக்கு எனவும், பாதுகாப்பிற்கெனவும், செல்லப்பிராணியாகவும் வளர்த்தெடுத்திறுக்கக் கூடும். இது பிரிதொரு நாளிம் மனித இனம் பல பூகோளப் பரப்பில் வாழும் பகுதிகளிலிருந்தும் அந்தந்த பூமியத்திய ஓநாய் இனங்களை வீட்டு விலங்கிளாக்கி அவைகளை வேறு இன, குழு மக்களுடைய பிராணிகளுடன் இனக் கலப்பு செய்து மென்மேலும் செழுமை படித்தியிருக்கக் கூடும்.

இதனை அப்படியே மனிதனுக்கு மிக பிரயோசனமாகிப் போன கால் நடை பக்கமாக பார்வையைத் திருப்புங்கள். குதிரை, மாடுகள், காட்டுக் கழுதைகளென வேட்டையாடி பிடித்து தங்களின் பரந்து பட்ட அன்றாட தேவைகளுக்கான விவசாயத்திற்கும், பொதிகளை இட மாற்றுவதற்கும், பயணங்களுக்குமென பெருமளவில் பயன்படுத்த வீட்டு விலங்குகளாக்கியிருப்பான் என்பது கண்கூடு.

ஏன் பெருமளவில் பிற காட்டு விலங்குகளை அவன் வீட்டு விலங்குகளாக்கிக் கொள்ளவில்லை என்று கேட்பது, எது அவனுக்கு பிரயோசமான உடனடி தேவைக்கு அத்தியவசமாக இருக்கிறதோ அதனை பழக்கி தன் கூட வைத்துக் கொண்டான். வீட்டில் ஒரு கரடியை, புலியை வளர்ப்பதால் அவனுக்கு என்ன நன்மை?

இதுவே அடிப்படைக் கதை காட்டு விலங்குகள் வீட்டு விலங்குகளானது.

இதில் எங்கிருந்தய்யா அந்த விலங்குகள் ஒரு பழங்குடியின் கலாச்சார, பண்பாட்டு அடையாளமானது என்று கேட்பவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நான் கேட்டுக் கொள்வது அடிப்படை கலாச்சார மானுடவியலின் பண்பாட்டு விழுமியங்கள் எப்படி தான் வாழ்ந்த நிலப்பரப்பின் ஆறுகள், விலங்குகள், மலைகளுடன் பிண்ணி பிணைந்து கிடக்கிறது என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.

வனத்தில் ஒரு ஆயிரத்து ஐநூறு வருடத்திய மரம் இன்னமும் உயிரோடு எழுந்து பரந்து நிற்கிறது என்றால் எத்தனை ஆச்சர்யத்தோடும், ஆன்ம விருப்போடும் அதனடியில் நின்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள தயாராகிறோம்? போலவே, ஒரு இனம் தாங்கள் வாழ்ந்த நிலப்பரப்பில் தாங்கள் கூடவே அந்த இனம் கொழித்து வளர உதவியாக நின்ற ஒரு விலங்கை அவன் விழாக்களில் முதன்மைப் படுத்தி குறைந்த பட்சம் மூவாயிரம் வருடங்கள் கடத்தி கொண்டு வந்து சேர்த்திருக்கிறான் என்றால், அந்த பண்பாட்டு கூட்டு ஒப்பு நோக்கு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வாழ்வியல் அங்கமாகத்தானே இருந்திருக்க முடியும்?

ஒவ்வொரு பிராந்தியத்தில் இருக்கும் ஒவ்வொரு காளை இனமும் அந்தந்த ஊர்களுக்கேற்ற தட்பவெப்ப வேறுபாடுகளை, உண்ணும் உணவுகளைக் கொண்டு தனித்துவமுற்ற ரக மாடாக அந்த மக்களின் வாழ்வோடு பிணைந்திருக்கும் பொழுது அந்த விழாவை, அந்த வாழ்வியலை தேவையற்றது என வேறறுக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயமாகும்? அது அவைகளுடன் தங்களுடைய வாழ்வை பிணைத்துக் கொண்டவர்கள் எடுக்க வேண்டிய முடிவல்லவா?

பன்முகத் தன்மை பேணல் என்பது தாவர, விலங்கினங்கள் தொடங்கி மனித பண்பாட்டு விழுமியங்களுக்கும் பொதுவானது. மனிதன் இயற்கை தேர்ந்தெடுப்பில் இப்பொழுது அதன் உச்சாணிக் கொம்பிலமர்ந்து தனக்கு, தனது பரிணாம முன்னேற்றத்திற்கு எது தேவையோ அதனைத் தழுவி அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செலுத்தும் திறன் மிக்க விலங்கினம். அவனுடைய வாழ்வும் தேய்வும் அவனுடைய சுய நல போக்கின் அச்சாணிக் கொம்பிலேயே மையம் கொண்டு நகர்கிறது!

0 comments:

Related Posts with Thumbnails