Showing posts with label கைகலப்பு. Show all posts
Showing posts with label கைகலப்பு. Show all posts

Sunday, September 28, 2008

உடலுறுப்புகள் தானமா,பதறும் நெஞ்சு : Donation of Organs!

ம்ம்... சரியாக 2001ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், நானும் மாநிலம் மாறி என்னுடைய ஓட்டுநர் உரிமத்தை மாற்றி புதிய மாநிலத்தில் இணைத்துக் கொள்ளும் அவசியத்தில் இருந்தேன். அப்படியாக நானும் அந்த அலுவலகத்தில் என்னுடைய பழைய ஓட்டுநர் உரிம அட்டையை ஒப்படைத்து விட்டு, புதிய மாநில அட்டையை வாங்கும் பொழுதும், புகைப்படம் எடுத்துக் கொண்டு, இதர கேள்விகளுக்கு பதிலுரைத்துக் கொண்டு வரும் பட்சத்தில், ஓரிடத்தில் நிறுத்தி பொறுமையாக "டு யூ வாண்ட் ட்டு பி ஆன் ஆர்கன் டொனர்" என்று கேட்டார்.

அப்படியே ஒரு நிமிடம் ஆடிப் போய் யாரோ பொடீர் என்று செவுட்டில் அடித்ததினைப் போன்று உறைந்து போனேன். அவரிடம் ஒரு நிமிடம் என்று கேட்டுக் கொண்டு, என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு" என்னடா இது இதுபோன்ற ஒரு கேள்வியை என் வாழ் நாளில் நான் கேட்டுக் கொண்டதே இல்லையே இப்படியான சாவுடன் தொடர்படுத்தக் கூடிய கேள்வியை இவ்வளவு சாதாரணமாக கேட்டு சிந்திக்க வைத்திவிட்டாரே என்று ஆட வைத்தது.

இருந்தாலும் மறுபக்கம் வாய் கிழிய எல்லாம் பேசும் நமக்கு சாவு என்றவுடன் சும்ம அதிர்ந்து போகுதே ஏன், இறந்த பிறகு தம்மிடம் பிரயோசனமாக பிறருக்கு உதவும் வாக்கில் உள்ள சில உறுப்புகளை எடுத்துக் கொள்ளட்டுமா என்று கேட்டவுடன் ஏன் உள்ளங்கால் முதல் உச்சந்தலை வறை உதறுதே ஏன்? என்று மனம் குழம்பிப் போனது உண்மை. சுதாகரித்துக் கொண்டு மரண பயத்தை தூரத்தே வைத்துவிட்டு உள்ளுணர்வை எழுப்பி கேட்டவுடன் இயல்பென்ற ஒரு விசயம் கடிவாளத்தை பற்றிக் கொண்டது, நானும் அதன்படியே "எஸ், ப்ளீஸ் ஆட் மீ" என்று கூறிவிட்டேன். அன்றிலிருந்து நானும் ஒரு உடலுறுப்பு பங்களிப்பாளன்.


இதனை எழுத வேண்டுமென நீண்ட நாட்களாகவே ஆசைப் பட்டதுண்டு, ஆனால் பிறரை தர்மசங்கடத்தில் ஆட்படுத்தக் கூடும் என்பதினால் தள்ளிப் போட்டதுண்டு. இன்று தினகரனில் ""உள்ளத்தில் நல்ல உள்ளம்..."" என்ற தலைப்பிட்ட உடலுறுப்பு தானம் எந்தளவில் இந்தியாவில் செயலில் இருக்கிறது என்பதனைப் பற்றி படிக்கும் பொழுது மிகவும் ஆச்சர்யமாக இருந்ததது அங்கே குறிப்பிடப்பட்டிருந்த சில புள்ளியல் சார்ந்த குறியீடுகள்.

உதாரணத்திற்கு அந்தக் கட்டுரையிலிருந்து... "உலக அளவில் ஸ்பெயின்தான் உறுப்பு தானம், உடல் தானத்தில் முதலிடம் வகிக்கிறது. அங்கு வசிக்கும் 4.60 கோடி பேரில் 14500 பேர் முன்வந்து உறுப்பு மற்றும் உடல் தானம் செய்கிறார்கள். ஆனால், 100 கோடி பேர் வசிக்கும் இந்தியாவில் ஆண்டுக்கு 30 முதல் 40 பேர் மட்டுமே உடல் தானம் செய்கிறார்கள்.".... என்று குறிப்பிட்டதை படித்தவுடன், நான் ஏன் அப்படி அது போன்ற ஒரு கேள்வி ப்ரக்ஞையுணர்வே அற்று வாழ்ந்திருக்கிறேன் 2001ம் ஆண்டு வரை என்பது பட்டென புரிந்தது.

ஏன், இத்தனை மக்கள் தொகையுடன் உள்ள ஒரு நாடு, இத்தனை மீடியாக்கள் தங்களுடைய பிழைப்பை ஜரூராக நடத்திக் கொண்டிருக்கும் வேளையில் கூட வெறும் 30 லிரிந்து 40 பேர் மட்டுமே முன் வந்து தானம் செய்யும் நிலை? மதத்தில், இறப்பிற்குப் பிறகு இது போன்ற உடலுறுப்புகளுடன் மேலே வந்தால்தான் மீண்டும் பிறப்பெடுக்கும் பொழுது ஏதுவாக இருக்க முடியும் என்ற முறையில் எழுதப் பட்டுள்ளதா? எனக்குத் தெரிந்தவரையில் இந்து மதத்தில் அப்படிய் அடிக் கோடிட்டு காட்டப்பட்டு குறிப்பிடப் பட்டுள்ளதாக தெரியவில்லை. பிற மதங்களை பற்றி, நோ ஐடியா!

இத்தனை நல்லவர்களை கொண்ட(?!) நம் நாடு ஏன் ஸ்பெயினைக் காட்டிலும் இத்தனை கருமியாக இறப்பிற்குப் பிறகும் கூட மனிதர்களை வைத்திருக்கச் செய்கிறது? எப்படியோ, எல்லா மதங்களும் ஆத்மா என்ற ஒன்று இருப்பதாகவும், அது மட்டுமே நமது மரணிப்பிற்கு பிறகு மேலெழும்பிச் சென்று பிறகு எங்கடைய வேண்டுமோ அங்கடைந்து மறு-சுழற்சி (ரீ-சைக்கிலிங்) செய்யப் படுவதாக அறிகிறேன்.

அப்படி இருக்கும் பொழுது உடலுறுப்பிற்கும், ஆத்மாவிற்கும் என்ன சம்பந்தமிருக்கிறது? எனவே, இந்த உடலுறுப்புச் சார்ந்த விசயத்தில் நிறைய மரண பயமும், கொஞ்சமே மதம் சார்ந்த விசயமும் குறுக்கிடுவதாக நான் கருதுகிறேன். மரணத்தைப் பற்றிய பயத்தை மரணிக்க வைத்துவிட்டால் நீங்களும் குபேரனாக வாழ்ந்து முடித்ததாக இச் சமூகம் உணரும் இந்த "தானாக முன் வந்து உடலுறுப்பு தானம் செய்யும் பொறுட்டு" இல்லையா?

ஆனால், இன்னும் கொஞ்ச காலங்களில் இந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சிகளின் உச்சமாக ஆய்வுக் கூடங்களிலே இது போன்ற டி.என்.ஏ பொறுத்தம் கொண்ட உடலுறுப்புகளை உற்பத்திக்கவும் முனைந்துவிட்டால், மனித பயத்தினையும், மதம் சார்ந்த நம்பிக்கைகளையும் போற்றி பாதுகாத்து கேள்வி நிலைக்கு நம்மை இட்டுச் செல்ல வேண்டிய நிர்பந்தமிருக்காது - அதுவும் ஒன்று.

நம்மூரில் நடிகர் கமல்ஹாசன் தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு தானம் செய்திருப்பதாக அறியும் தருவாயில், அவரின் மீது பன்மடங்கு அறிவுசார் மரியாதை கூடுகிறது.

இதனை வாசிப்பவர்களின் பார்வை எதனைப் பொறுட்டு ஒத்துப் போகிறது, விலகி நிற்கிறது என்பதனை அறிய ஆவலாக இருக்கிறது. பகிர்ந்து கொள்ளுங்கள், நல்லவர்களே!

Thursday, January 10, 2008

யோகா சார்ந்து *பாரி.அரசுக்கு* சில எண்ணப் பகிர்தல்கள்!!

போன வருஷம் நான் "மருத்துவரே வேண்டாம் - *யோகா* செய்யுங்கள்" அப்படிங்கிற தலைப்பில ஒரு பதிவு போட்டிருந்தேங்க. அதுக்கு நம்ம முக்கியமான தலைகள் எல்லாம் வந்து இப்ப என்னய போட்டு கும்முறாங்க. அதிலும், குறிப்பா நம்ம பாரி.அரசு இந்தக் கலையை செய்து கொண்டே எனக்கு தடகள உடற் பயிற்சிக்கும் இந்த யோகாவிற்கும் அவ்வளவு பெரிய வித்தியாசம் தெரியலைன்னு வந்து சொல்லிட்டார்.

நான் இந்தப் பதிவிற்கு சொந்தக் காரன் என்பதால் அதற்கு பதிலுரைக்கும் நிலையில் இருக்கிறேன். இருந்தாலும், இதன் பலன்களை இன்னமும் நிறைவாக தெரிந்தவர்கள் வந்து இங்கே தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன். இரு தரப்பினரும் வருக! ஆதரவு தருக!!

கீழே பாரியோட பின்னூட்டங்க...

பாரி.அரசு said...

......ஒரு அற்புதமான பதிவுக்கு வாழ்த்துக்கள் தெகா!

நான் 10 ஆண்டுகளுக்கு மேலாக யோகா செய்து வருபவன் என்கிற முறையில்...

யோகா ஒரு உடற்பயிற்சி முறை அது இந்திய சூழலில் உருவானது என்பதை தவிர வேறுவிதமான கற்பனை வாதங்கள் தேவையற்றது.

உடற்பயிற்சி என்பது ஆரோக்கியமான உடலுக்கு தேவை, அதை தவிர யோகா செய்வதால் எல்லாவிதமான நோயும் குணமடையும் என்பதெல்லாம் பொய் என்பதோட மட்டுமல்லாமல்...


ஒழுங்கற்ற உடல் இயங்கியல்(disorder) எனப்படும் மருத்துவ சவால்களை யோகா வால் எதுவும் செய்ய இயலாது.

புறப்பொருட்களால் ஏற்படும் (diseases) யோகா செய்வதால் காப்பாற்ற இயலாது.

இப்படி பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம்.

ஆரோக்கியமான உடல் தேவையென்றால் உடற்பயிற்சி அவசியம் அதை வலியுறுத்துங்கள்.
யோகா - இந்திய சூழல் என்றால்
நீச்சல் - ஐரோப்பிய நாடுகளில் அற்புதமான உடற்பயிற்சியாக இருக்கிறது குறிப்பாக ரஷ்யர்கள்.

மரபு சண்டை பயிற்சி கிழக்காசிய நாடுகளில் முக்கிய மன, உடல் பயிற்சியாக இருக்கிறது (சீனா,கொரியா,ஜப்பான்)

யோகா வால் சக்தி கிடைக்கும் (ஒரு புண்ணாக்கும் கிடைக்காது) என்பதெல்லாம் வெறும் கற்பனை! .....

Thursday, January 10, 2008.


அதுக்கு என்னோட பதில ஒரு பின்னூட்டமா நினைச்சித்தான் எழுத ஆரம்பிச்சேன் அது முடியறாப் போல தெரியல உடைச்சிட்டேன் இரண்டாவது பகுதியா. அதுதான் கீழே...

வாங்க பாரி.அரசு,

தாமதமாக வந்தாலும், சூடாக வந்து கொடுத்திருக்கீங்க எனக்கு ஒண்ணு ;).

சில விசயங்களில் உங்களோட நான் ஒத்துப் போகிறேன் என்றாலும், பல விசயங்களில் எழுந்து நிற்க வேண்டியுள்ளது.

ஒவ்வொன்றாக இப்பொழுது பார்ப்போம்.

1) ஒழுங்கற்ற உடல் இயங்கியல்(disorder) எனப்படும் மருத்துவ சவால்களை யோகா வால் எதுவும் செய்ய இயலாது.

நீங்கள் கூற வருவது உடல் சார்ந்த வியாதி முற்றிய நிலை என்று வைத்துக் கொள்வோமா? அதாவது, புற்று நோய், எய்ட்ஸ் போன்ற வியாதிகள் அதுவும் ஒருவரை ஏற்கெனவே பீடித்து முற்றிய நிலையில் அதற்கு கண் கண்ட மருத்துவ முறையாக இந்த கலையை பயன் படுத்த முடியாதுதான்.

இருப்பினும், இந்த இரத்த கொதிப்பு, சுவாச சம்பந்தமான முதல் நிலை இருப்பில் இவைகளை கட்டுக்குள் வைக்கும் பொருட்டேனும் அதன் பிற்கால அவதரிப்புகளான, டாயபெடிஸ், ஆஸ்த்மா போன்ற முழு நிறைவடைந்த வியாதி நிலைகளிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளலாமல்லவா?

இரத்தக் கொதிப்பே 'ஒருவன்' எப்படி தினசரி வாழ்க்கையில் பிறரிடம் நடந்து கொள்கிறானென்பதனை தீர்மானிக்கும் வல்லமையுடையது. அப்படி இருக்கும் பட்சத்தில் பெரும்பாலான இந்த யோகா பயிற்சிகளில் நாம் உடம்பை மட்டுமே முறுக்க வில்லை, அப்பொழுது நாம் சுவாசிக்கும் முறையையும் கவனத்தில் கொள்கிறோம், இல்லையா?

கோபம் தலைக்கேறும் பொழுது நம் முகம் சிவத்து விடுகிறது, மூச்சும் தாருமாறாக எகிறுகிறது அப்பொழுது அங்கே என்ன நடக்கிறது, பாரி? இப்பொழுது நீங்கள் பத்து வருடங்கள் யோகவினை செய்து வந்திருக்கிறீர்களென்றால் முறையாக, கண்டிப்பாக இவையனைத்தும் உங்களுக்கு இந் நேரத்தில் உங்களையுமறியாமல், அதன் தாக்கம் உங்களுக்கு பலனளித்துக் கொண்டுள்ளது என்றே கொள்ளலாம். உங்களுக்கு அடிக்கடி ஜலதோசத் தொந்திரவு முன்புள்ளது போல இப்பொழுது உண்டா? இல்லையெனில், என்ன நடந்திருக்கக் கூடும், உங்கள் உடல் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை தருவித்துக் கொண்டிருக்க இந்தப் பயிற்சியும் உதவி செய்ததாக எடுத்துக் கொள்ளலாம்.

அதே நோய் எதிர்ப்பு சக்தியும் ஒரு பாசிடிவான நிலையில் தன்னை சிறிதே ஆசுவாசப் படுத்திக் கொண்டு தன் சிந்தனையை ஒரு முகப் படுத்தும் பொழுது, மேலும் மனம் தனக்குத் தேவையான சக்தியை பன்முகமாக தருவித்துக் கொடுக்கிறது. இது போன்ற மனப் பயிற்சி தடகளத்தில் பரவலாக இல்லைதானே?

அதற்குச் சான்றாக எய்ட்ஸ் நோயாளிகளில்... எய்ட்ஸ் நோயாளிக்கு முக்கிய பிரச்சனை நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து கொண்டே போவது...யோகாவினால் இந்த எதிர்ப்பு சக்தி அதிகமாகி நோயாளிகளுக்கு CD4 count ஜாஸ்தியாவது அனைவராலும் ஒத்துக்ககொள்ளப்பட்ட ஒன்று... இது வியாதியை குணமாக்கா விட்டாலும் நோயாளி சந்தர்ப்பவாத நோய்களில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள பயன் படுகிறது, இல்லையா? (நன்றி: மங்கை)

இது போன்ற வியாதி முற்றிய நிலையிலேயே உள்ள ஒருவருக்கு அதிக உடல் உழைப்பு தேவையில்லாது சிறிய, சிறிய மூச்சுப் பயிற்சிகளினாலும், சிறிய உடல் முறுக்கேற்று பயிற்சிகளினாலும் இதனைப் பெற வைக்க முடியுமென்றால்... நீங்கள் கூறிய அயற்சியூட்டக் கூடிய நீச்சல் பயிற்சி, தடகள உடற் பயிற்சிகளை எப்படி அவர்களுக்கு நாம் பரிந்துரைக்க முடியும், பாரி?

உடல் வியாதி முற்றிய நிலையில் ஒரு நோயாளி வியாதியிலிருந்து முழுமையாக குணமடைகிறாரோ இல்லையோ அவருக்குத் தேவை ஆறுதலும், பாசிடிவ் எண்ணங்களும் பெரும் பங்காற்றக் கூடும் தன்னை எழுந்து நிற்க வைக்க (மன ரீதியாகவேணும்)... அதனை இந்த யோகா சிறப்பாகவே வழங்குகிறது.

எனக்குத் தெரிந்தே நூயொர்க் நகரத்தில் வீடு இல்லாமல் தெருவோரங்களில் வசிக்கும் ஒரு ஐம்பது பேரைக் கொண்டு ஒரு ஆராய்சி நடத்தப் பட்டது. அவர்களில் நிறைய பேருக்கு எலும்பு மூட்டு (arthiritis) மற்றும் மன ஆரோக்கியம் சார்ந்த நோய்கள் இருந்தன. அவர்களை இரு பிரிவாக பிரித்து ஒருவருக்கு அலோபதி மருத்துவமும், மற்றொரு பிரிவினருக்கு இந்த யோகா பயிற்சியும் வழங்கப் பட்டது.

இதில் முதல் குரூப்பில் இருந்தவர்கள் உடனடி நிவாரணம் பெற்றது போல ஆரம்பித்த காலத்தில் இருந்தாலும், மீண்டும் அந்த சிகிச்சை முறையை விட்டவுடன் அவர்கள் அதே நோயால் பீடிக்கப் பட்டனர்.

ஆனால் இரண்டாவது குரூப் மெதுவாக அதன் பலனன ஈன்ற பெற்றாலும், ஆர்த்ரடிஸ், இரத்தக் கொதிப்பு சார்ந்த உபாதைகள் மற்றும் மன நலத்தில் நல்ல முன்னேற்றம் கண்டு சிலர் அது போன்ற வாழ்க்கை முறையையே கைவிட்டுவிட்டு நல்லதொரு வாழ்வை அமைத்து கொண்டதாக அறியப் பட்டேன்.

இப்பொழுது இந்த இரண்டாவது குரூப்பிற்கு என்னாயிற்று? அவர்களின் தினப்படி பழக்க வழக்கங்கங்களில் சில மாற்றங்களை திருத்தி அமைத்தார்கள். உதாரணமாக, ஒருவர் எழுந்து அமர்ந்தவுடனே, சரியாக அமரும் ஒரு முறையையும், சரியாக சுவாசிக்கும் ஒரு விசயத்தையும் மனத்தை அதன்பால் குவித்து கவனமாக செய்யும் பொழுது, இரத்த ஓட்டமும், சுவாசமும் சரியாக நடைபெறும் பட்சத்தில் அதனையொட்டிய எண்ணவோட்டமும் சீரடைய வாய்ப்புண்டல்லவா? இதற்கு எதற்கு வியர்வை சிந்த வேண்டும்?

இரத்த ஓட்டமும், சுவாசமும் முறைப்படி நடைபெறும் பொழுது தினப்படி நாம் சேகரிக்கும் இந்த மன அழுத்தத்தை அதன் போக்கிலேயே வந்த வழியிலேயே அனுப்பி விட முடியுமென்பது எனது எண்ணம்.

அது போலவே நிறைய சைக்கோலாஜிகள் டிஸ்ஸர்டர்களுக்கு, சில யோக முறைகளும் பரவலாக இப்பொழுது மேற்கத்திய நாடுகளில் 'குணப்படுத்தக் கூடிய தெரபிகளில்" ஒன்றாக சேர்த்துக் கொள்ள ஆரம்பித்தாகி விட்டது.

பாரி, உதாரணமாக உங்களுக்கு 45 வயதாகியும் இன்னமும் கொலஸ்டிரல் மற்றும் இரத்தக் கொதிப்பு தலை வைத்து படுக்க வில்லையென்றால், மறைமுகமாக உங்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ நீங்க செய்யும் அந்த யோகாவும் ஒரு காரணமென்பதை அறிந்து கொள்ளுங்கள்.

மற்றபடி தடகள உடற் பயிற்சிக்கும், யோகாவிற்கு நிறைய வேறுபாடுகளுண்டு. இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்... இப்போதைக்கு இது போதும். பின்னூட்டங்களிலும் மேலும் பேசுவும். நன்றி! வணக்கம்!!

Friday, December 21, 2007

தருமியின் நம்பிக்கையும் நம் இளைஞர்களும் - II

எனது முதல் பதிவில் சொல்லியிருந்தேன் என்னோட சொந்தக் கதைகளையும், என்னை சுத்தி நடந்தவைகளையும் விளாவாரியா பகிர்ந்துக்கிறேன்னு. யோவ், தெகா என்னாத்தையா புதுசா நீ வந்து சொல்லி பொலம்பப் போறேன்னு சொல்றீங்களா, உண்மைதான். நம்ம இயக்குனர் ஷங்கரும் எட்டுப் போடாம, அலுவலக பக்கத்திலேயே போகாம RTOலருந்து லைசன்ஸ் எப்படி வாங்கிறாங்கன்னு அங்கே நடக்கிற ஊழல்களை எடுத்துக் காட்டித்தானே அவரு தன் பையை நிரப்பினாரு. அதுக்காக, நமக்கெல்லாம் அங்கே என்ன நடக்குதுன்னு தெரியாதுன்னா பொருள்.

ஆனா, படத்தில ஒரு ஆளை வைச்சு அடிக்கிற மாதிரி காமிச்சவுடனே நாமளே அந்த குணச்சித்திரமா மாறி குத்தறதா, அடிக்கிறதா பார்த்து சிலாகித்துக் கொள்வதில்லையா? அதே மாதிரி, படத்துக் கதை இல்லாட்டியும் உங்க பக்கத்து வீட்டுக்காரன் பட்ட கஷ்டத்தை சொன்னா கேக்காம போயிடுவீங்களா என்ன? அந்த மாதிரி(அடுத்தவன் வீட்டுக் :-) கதைகளுக்கு எப்பொழுதுமே நல்ல வரவேற்பு இருக்கும் தானே.

வெளி நாட்டிலிருந்து வருகிற எவருக்கும் நம்மூர்ல பளிச்சின்னு தெரியற ஒரு விசயம் அலுவலங்களில் ஏதாவது ஒரு வேலை நடத்த வேண்டுமெனில் அங்கே இருக்கிற நிர்வாகச் சீர்கேடுகள், கட்டுப்பாடுகள், சில்லூண்டி அரசியல், சேம்போறித்தனம், அடிப்படை நாகரீகமற்றத்தன்மை இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம். இதனூடாக மேலிடத்திலேயே அதாவது டெல்லியிலேயே அடி பட்டு நொந்து போனவர்களுக்கு எப்படி பிறகு வரும் நாளில் நாட்டினுள் பிரிதொரு இடங்களை சுத்திப் பார்க்கும் பொழுது நல்லெண்ணம் செழித்தோங்கப் போகிறது.

சேகரித்த அனுபவங்களை எப்படியாக அவர்கள் பின்னாலிள் தான் எழுதும் புத்தகங்களிலும் (உ.தா - லோன்லி ப்ளானட்), சுற்றுலா கட்டுரைகளிலும் வெளிப்படுத்தப் போகிறார்கள். இதற்கு ஒரு உதாரணமாக நான் பட்ட அனுபவத்தை, அவ் வெளி நாட்டவர்களுடன் நின்று பார்க்கும் சந்தர்பம் கிடைத்தது அதனைப் பற்றி சிறிது கூறுகிறேன்.

சிச்சுவேஷன் நெம்பர் ஒன். இடம்: டெல்லி. நான் வெளி நாட்டு கடவுச் சீட்டு வைத்திருப்பவன். இந்தியாவிற்கு நான் வந்து திருமணம் செய்ததால், என் கடவுச் சீட்டு வைத்திருக்கும் நாடு ஒரு நிபந்தனை இட்டது. அப்படி திருமணம் செய்து எனது மனைவியை இங்கு கொணர வேண்டுமெனில், நான் இந்தியாவில் 90 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து தங்கியிருந்ததற்கான சான்றிதழை பெற்று வழங்கினால், டெல்லியிலேயே உள்ள எம்பசியில் மனைவியின் விசாவிற்கு என்னால் மனு தாக்கல் செய்ய முடியுமென்று கூறினார்கள்.

சரி, என்னோட தங்கும் நாட்களும் அந்த 90 நாட்களை தழுவியே வந்ததால் இதில் ஒன்றும் பிரச்சினை இருக்காது அது தொடர்பான சான்றிதழ் ஒன்று வாங்கி, எம்பசிக்கு கொடுப்பதிலென்று அப்பாவியாக நம்பினேன். டெல்லியிலேயே உள்ள மத்திய தலைமை வெளியுறவுத் துறை அலுவலகத்திற்கு சென்றேன்; அங்கேதான் நான் பெற வேண்டிய ஒரு சான்றிதழ் வாங்க வேண்டுமென. அதாவது இந்த தேதியில் நான் இந்தியாவிற்கு வந்து இது நாள் வரையிலும் இங்கேதான் உள்ளேன், என்பதற்கென ஒரு கடிதம் அடித்து தரவேண்டும் அந்த அலுவலகலத்திலிருந்து.

விசாரித்து தெரிந்துகொண்ட பிறகு அந்த முகவரி அறிந்து கொண்டு ஆட்டோ வாலாக்களிடம் பதில் சொல்லி முடித்து வாசலில் வந்து இறங்கும் பொழுது காலை மணி 11 இருக்கும். அதற்குள்ளும் அங்கு கருப்பு, வெளுப்பு, மஞ்சள், வெள்ளை என்று அனைத்து நிறத்தவரும் அடிதடி நடப்பது போல ஒரு மூன்றடி வாசலுக்கு வெளியே குவிந்து கிடந்தார்கள். ஒரு வழியாக ஒரு சீக் மாமாவிடம் பல இடிபாடுகளுக்கிடையே அவரை கண்டெடுத்து ஒரு கேள்வி, ஒரே ஒரு கேள்வி கேட்பதற்கு முன்னாலேயே அவர் போயிட்டு நாளைக்கு வாங்க, இன்னிக்கு பார்க்கப் போறவங்களுக்கு அரை மணி நேரத்திற்கு முன்னவே டோக்கன் கொடுத்து முடிச்சாச்சி, நாளைக்கு வாங்கன்னுட்டார்.

அடப் போங்கப்பான்னு வெறுத்துப் போயி அங்கே நின்னுட்டு இருந்த இன்னொரு கனெடியன் குடியுரிமை பெற்ற இந்தியர்கிட்ட கொஞ்சம் நம்ம சூழ்நிலையை சொல்லி விசாரிச்சா அவர் கேட்டாரு ஒரு கேள்வி. நீங்க இன்னமும் இந்திய கடவுச் சீட்டை கையில வைச்சிருந்தா முதலில் அதனை கொண்டுபோய் இதனோட இன்னொரு கிளை அலுவலகத்தில ஒப்படைச்சிட்டு அங்கிருந்து அந்த ஒப்படைச்சிட்டதிற்கான நகலை இங்க கொண்டு வந்து காமிச்சாத்தான் உங்க கேசையே இந்த அலுவலகத்தில பார்ப்பாங்கன்னு 'நச்'சின்னு சொல்லிட்டார். ஆஹா, பெரிய தகவலாச்சேன்னு வாங்கிட்டு, அடுத்து அந்த கிளை அலுவல முகவரி வாங்கிட்டு அடுத்த நாள் அங்கே போனேங்க.

தெரிஞ்சுப் போச்சு நம்மளை மாதிரியே நிறைய பேரு இங்கே திரியறாங்க நாம மட்டும் ஒண்ணும் ஓவியமில்லன்னு. எதுக்கும் கொஞ்சம் சீக்கிரமாகவே போயிடுவோமின்னு காலையில 7 மணிக்கெல்லாம் அலுவலக வாயிலிள் போய் நின்னாச்சு. எங்களுக்கும் முன்னாலேயே அங்கே இன்னொரு பெரிய கூட்டம் கேட்டுக்குள் போட்டிருந்த ஒரு 20 இருக்கைகளை நிரப்பிட்டு உட்கார்ந்திருக்கு. அதுக்கு பிறகு வந்த நாங்க எல்லாம் வெளியிலே, குச்சியும், துப்பாக்கியும் வைச்சிட்டு நிக்கிற அந்த காவலாளிகள், கேட்டுக்கிட்ட நெருங்கிற ஆட்களை சலோ, சலோன்னு விரட்டிட்டு இருக்கார். கொஞ்சம் குலோஷ் அப்பில் பேசினவர்கிட்டயெல்லாம் என்னமோ சைகையில் இரண்டு விரல்களில் காமிச்சார்.

மணி ஓடிட்டே இருக்கு. நாங்களும் நிக்கிறோம். ஒவ்வொரு அலுவலக பணியாளரா ஆற அமர கையில் லஞ்ச் பேக்குடன் 11.30 மணி வரைக்கும் வந்திட்டே இருக்காங்க. யப்பா, இதெல்லாம் நடக்கிறது கும்மிடிப் பூண்டி வி.யூ.ஓ அலுவலகத்தில இல்லைங்க, மத்திய வெளியுறவுத் துறை அலுவலகத்தில, அதுவும் டெல்லியீல மறந்துடாதீங்க. நாங்க இப்ப வெளியில நின்ன காவலாளிக்கிட்ட சத்தம் போட ஆரம்பிச்சாச்சு, சத்தம் கேட்டு வெளியில டீ குடிக்க வந்த ஒரு அலுவலர், அட விடப்பா அவரன்னு சொல்லிட்டு போனார். சரி, தொலைங்கடான்னு வசுல் பண்ண முடியாததலா முறைச்சிக்கிட்டே உள்ளே விட்டார்.

முதலிள் தவறான கூண்டை நோக்கி படையெடுப்பு ஏன்னா, எதுக்கு எங்கே நிக்கணுங்கிற எந்த ஒரு தகவலுமில்லை. அரைமணி நேரம் அதில காலி. கடைசியில வியர்த்து கொட்டிக்கிட்டு இருந்த அந்த கூண்டாளியை கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டதில, நான் போக வேண்டிய இடம் இரண்டாவது மாடியாம்.

அங்கிருந்து நகர்ந்து அந்த அலுவலகத்துக்குள் போவதற்கு முன்னால், 'சுவற்றில்' ஒரு வாசகம் இங்கே லஞ்சம் யாராவது கேட்டால் 'எங்களிடம்' தெரிவியுங்களென்று :). அங்கே ஒருத்தர் இருந்தாரு, அவரு ஆமை வேகத்தில என்ன வேணுமின்னு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, நான் எங்கே போகணுமின்னு சொல்லி மேலே அனுப்பினார். அந்த அலுவலக அறை அப்படியே எனக்கு 10 வருஷத்திற்கு முன்னே படிச்ச ஆர்.கே. நாரயண் நாவல்களில் வரக் கூடிய அலுவலக அறைக் காட்சிகளான லொடக், லொடக் சத்தத்துடன் ஓடுகின்ற கரை படிந்த மின் விசிறிகள், உரிந்து காலாவதியாகிப் போய் தொங்குகிற சுவற்றுப் பூச்சுகள், பழுப்படித்து மங்கிப் போன காகிதக் கட்டுக்கள், அதற்கெலாம் மேலாக ஊழியர்களின் மன நிலையை கிரகித்துக் கொண்டு எதிரொலிக்கும் தூங்க மூஞ்சி சூழ்நிலையில் அமைந்திருக்கும் மொத்த அறை என அவர் விவரித்த காட்சிகள் அனைத்தும் என் கண் முன் விரிந்தது.

அங்கே சென்ற பொழுது அவ்வளவு பெரிய அறையில் மொத்தமே இரண்டு பேர் அமர்ந்திருந்தார்கள். ஒருவர் ஒரு லோக்கல் மேகசினை கையில் பிடித்துக் கொண்டும், மற்றொருவர் மூஞ்சிக்கு முன்பாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தினசரியை பிடித்த வாக்கில் உள்ளே தூங்கினாரா இல்லை படித்துக் கொண்டிருந்தாரா அந்த சுவற்றுப் பல்லிக்கே வெளிச்சம் என்கிற நிலையில் இருந்தனர். நான் உள்ளே நுழைந்த கையோடு 'எச்சூஸ் மீ' என்று சற்றே உற்சாக குரலில் கத்தி வைக்க, முதலில் மேகசின்காரர் ஸ்லோ மோசனில் தலையை நிமிர்த்தி, என்னாவாம் என்பது போல ஒரு லுக் விட்டார், பாஸ்போர்டை காமித்து இதனை இங்கு ஒப்படைக்கணும் என்றேன்.

அதற்கு சார்! என்று கையில் பல்லி மட்டுமே பார்க்க அமர்ந்திருந்தவரை விளித்து உங்களைத்தான் பார்க்க வந்திருக்கார் என்றார். அவரும் மெதுவாக திரைச் சீலை விளக்கி எனக்கு காட்சியளித்ததுடன், ந்தோ பாரு நாலாவது டேபில் அங்க இருக்கிறவர்தான் இதனை பண்ணிக் கொடுப்பார் அவர் இன்னும் வரலை ஒரு மணி நேரம் கழிச்சி வந்து பாருன்னு, பாஸ்போர்ட்டை இங்கே வைச்சுட்டுப் போயிக்கன்னு சொல்லிட்டாரு. மணியப் பார்த்தா கிட்டத்தட்ட 10.30க்கும் மேலே யாரோ அந்தக் கடவுள் இன்னும் படியேறலை.

வெளியிலேயே உட்கார்ந்து ஈ'விரட்டிட்டு திரும்ப உள்ளே போய் பார்த்தா அந்த டைப் அடிக்கிற ஆள் வந்திருந்தார், நம்ம ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆள் சொல்லச் சொல்ல அவரு அடிக்கிறார் :). இதெல்லாம் என்னாது. சரி லூஸ்ல விடுன்னு, 6x12 இஞ்ச் சிங்கம் போட்ட முத்திரைத்தாளில் எழுதிக் கொடுத்துட்டாங்க ஒரு வழியா. முடிச்சுட்டு நேரத்தைப் பார்த்தா மணி 1.45.

இனிமே என்ன, நாளைக்கு படையெடுப்பு அடுத்த கிளை அலுவலகத்திற்கு... அங்கும் சொல்றேன் எப்படியெல்லாம் நம் மக்கள் efficientஆ வேலை பார்க்கிறாங்க அப்படின்னு, இப்ப வர்ட்டா...

Thursday, December 20, 2007

தருமியின் நம்பிக்கையும் நம் இளைஞர்களும் - I

ஓவ்வொரு முறையும் தருமி ஏதாவது புதிதாக கண்டுபிடித்து அதனை நம்மிடத்தே கொண்டு வந்து சேர்க்கும் கணம் தோறும், எனக்கு அவர் பொருட்டு உள்ள மரியாதை பண் மடங்கு உயர்கிறது. இந்த வயதிலும் அவருக்குள்ள நம்பிக்கை, அளவிற்கரிய!

அவர் இந்த தலைப்பில் "உங்கள் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள்" என்றதொரு நம்பிக்கையூட்டு பதிவிட்டிருக்கிறார். எல்லோரும் இதனை பயன் படுத்திப் பாருங்கள். எந்த அளவிற்கு நமது அரசாங்க இயந்திரம் செயல் படுகிறது என்பதனை கண் கூடாக காணலாம்.

அவர் அங்கு ஒரு சிறு குழந்தைக்கே உரிய மகிழ்ச்சியுடன், நம்பிக்கையூட்டுமிதத்தில் அப்பதிவை இயற்றிருந்தார். ஆனால், என்னுடைய பதிவு சற்றே அவ் நம்பிக்கையை கேள்விக்கு உட்படுத்தி அதிலிருந்து நழுவிச் செல்வதாக இருக்கலாம். அவர் பதிவிலேயே என்னூடைய பின்னூக்கியாக இப்படிச் சொல்லியிருந்தேன்...

...Thekkikattanதெகா said...

//அடிமேல் அடி வைத்துப் பார்ப்போமே என்ற நம்பிக்கைதான்; ஏதாவது நல்லது நடந்துவிடாதா என்ற ஆதங்கம்தான்.//

இந்த நம்பிக்கைங்கிற ஒரு விசயத்திற்கு மதிப்பளித்து எல்லோரும் செய்யணும். ஆனா பாருங்க தருமி, டெல்லியில இருக்கிற Ministry of External Affairs-அலுவலகத்துக்குள்ள நுழைய இன்னமும் நுழைவாயிலிள் நிற்கும் காவலாளிக்கு ரூ 200 அழுதாத்தான் உள்ளே விடுவேன்னு அடம் பிடிக்கிறது இன்னமும் நடக்குதே... இது ஒரு ஆறு மாசத்திற்கு முன்பு நடந்தது.இப்படி இருக்கும் பொழுது வெளிப்பகட்டிற்கென்று திட்டங்களை இயற்றிவிட்டு ஒன்றும் நடைபெறாமல் இருப்பதில் என்ன இருக்கிறது.

Wednesday, December 19, 2007 10:00:00 AM ...

அதற்கு மறுமொழியாக - நம்ம வவ்வால் நிசர்தனத்தை ஒப்புக் கொண்டு இப்படியும்...

வவ்வால் said...

தெகா,நீங்க எதுக்கு டெல்லி வரைக்கும் போறிங்க, இங்கே லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்ல போய் ஒரு கம்பிளெய்ண்ட் கொடுத்து முதல் தகவல் அறிக்கை வாங்க முடியாது காந்தி நோட்டு இல்லாம? அவன் குற்றவாளியைப்பிடித்து நமக்கு நிவாரணம் தருவது அடுத்த விஷயம்...


ஆனா, நம்ம டாக்டர் ...

delphine said...

தெகா மாதிரி ஆளுங்க காசு கொடுப்பதால்தானே லஞ்சம் தலைவிரித்தாடுகிறது?.. no hard feelings thekaa... but thats the truth!
Wednesday, December 19, 2007 10:21:00 AM ... இப்படியும்,

சர்வேயர் வந்து அடிச்சி இப்படியும் ...

SurveySan said...

எல்லாரும் எடுத்து எடுத்து கொடுத்துத்தான பழக்கப் படுத்தியிருக்கோம்? ஒரு ரெண்டு பேர் கொடுக்காம, உள்ள போய் புகார் கொடுத்துப் பாத்தா ப்ரச்சனை சரியாகியிருக்கும் ;)...
Wednesday, December 19, 2007 9:03:00 PM .

பாருங்க, தருமி அவரோட தரப்பு ஒரு விசயத்தை சொல்லிட்டு, இப்படியும் சொல்லியிருந்தார் ... தெக்ஸ் சொல்வது போல் எப்போதும் எங்கும் அப்படி நிமிர்ந்து நிற்க ஆசையாயிருந்தும் அது முடியுமான்னு தெரியாதுதான்... ஒரு அனுபவஸ்தர்ங்கிற முறையில.

அவைகளை எல்லாம் படிச்சிட்டு நான் சொல்லணுமின்னு நினைச்சு தள்ளி தள்ளிப் போட்டு வந்த விசயம் எப்பொழுதும் போலவே தருமியால் இன்னிக்கு இங்கே வந்து சொல்ல வேண்டியாதாப் போச்சுங்க. எல்லா, அடிக்கும் பதில் சொல்றமாதிரி அவர் பதிவுக்கே ஒரு பதில் எழுதினேன், ஆனா, சொல்றதுக்கு அம்பூட்டு இருக்கும் பொழுது ஒரு abstractஆக எழுதினா என்ன அதில இருந்து கிடைக்குமின்னு சொல்ல முடியாம அவர்கிட்ட பேசிட்டு இருக்கும் பொழுதே, சரி தருமி நான் தனிப் பதிவா போட்டு விடுகிறேன்னு சொல்லிட்டு இப்ப இங்க கொண்டாந்து இருக்கேன்.

அந்த பின்னூட்டம் இதுதான்... Thekkikattanதெகா said...
//நீங்க எதுக்கு டெல்லி வரைக்கும் போறிங்க, //


வவ்ஸ், நான் டெல்லியில இருந்து தொடங்கினத்துக்கு ஒரு காரணம் உண்டு. தலை அங்கேதானே இருக்கு. ஒரு திட்டம் உருவமெடுத்து, அதனை சர்வ தேச தரத்திற்கு இயக்கணுமின்னு நினைச்சு தொடங்கிற திட்டங்கள் அங்கேதானே தொடங்கி பிறகு மெல்ல, மெல்ல நிறமிழந்து, ஓடித்தேய்ந்து நமது வட்டத்திற்கும், ஒன்றியத்திற்கும் வந்தடைகிறது.இது இப்படியாக இருக்க, புல்லூருவிகள் அங்கேயே தலை விரித்தாட, இன்னும் கீழே வர, வர அடிப்படை அரசியல் நாகரீகமே தெரியாதவர்கள் எப்படி அதனை கையாளுவார்கள்?

//தெகா மாதிரி ஆளுங்க காசு கொடுப்பதால்தானே லஞ்சம் தலைவிரித்தாடுகிறது?//

டாக், நான் அங்கே லஞ்சம் கொடுத்தேன் என்று கூறவேயில்லையே. அப்படி நடந்ததை கண்ணால் பார்த்ததின் விளைவே இது.இந்த மினிஸ்ட்ரி விஷயமே, ஒன்றும் பெரிதாக அவர்களிடமிருந்து எதிர் பார்த்து சென்றதல்லவே, டாக், என்னூடைய இந்தியக் கடவுச்சீட்டை அவர்களிடம் ஒப்படைக்கத்தான் அங்கே சென்றேன்:-)).

கையூட்டுக்கு எதிர்ப்பாக புதுக்கோட்டை திருமண சர்-பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தன்று பட்டு வேஷ்டியும், கழுத்து மாலையுமாக நின்று தகராறு செய்து, மாவட்ட ஆட்சியரை சந்திக்க நான் தயார் என்று நின்ற காலம் என் கண் முன்னால் இன்று வந்து போகிறது... சரி விடுங்க என்னோட அனுபவத்தை தனிப் பதிவ போட்டுடுறேன் ;)...
Thursday, December 20, 2007 8:27:00 AM .

அடடே, நான் இன்னமும் சொல்ல வந்ததை சொல்ல வருவதற்கு முன்னால் இப்படி நீண்ண்டு கிட்டு போகுதே இந்தத் தொடர்... சரி, நான் எதனைப் பற்றிப் பேசப் போகிறேன் என்பதற்கு முன்னால், நம்மூரில் எந்த அளவிற்கு பணமும், செல்வாக்கும் கொடி கட்டி பறக்கிறது எல்லா நிலைகளிலும் என்ற உண்மையிருக்க, ஆனால், நாம் இன்னமும் இந்த இணையத்தின் மூலமாக ஒரு அரசாங்கத்தையே நடத்த ஆசைப்படுகிறோம் என்ற முரண்பாட்டுடன் நாம் எவ்வளவு தொலைவு போக வேண்டி உள்ளது என்பதனை இந்தப் "பெண்ணாகப் பிறந்தால் by இரா. முருகப்பன்" கட்டுரையைப் படித்தால் வெளிச்சம் போட்டு காமிக்கும், படிச்சிட்டு அப்படியே எல்லோரும் முடிந்தால் தருமி கொடுத்த தளத்தில் ஒரு கம்ளெயிண்ட் கடிதமும் அனுப்பி வையுங்க... கண்டிப்பாக நிறைய பேர் அந்த கட்டுரையை தவற விட்டுருப்பீங்க, அவசியம் படிங்க.

ஏன்னா, நான் பேசப் போற சின்ன சின்ன விசயங்களும் பெரிதாக மாறி பிறகு இதற்கு தொடர்புடையதாக மாறிப்போய் விடுகிறது... பாகம் இரண்டில நான் சந்தித்தவைகளை பகிர்ந்து கொள்கிறேன்...

Thursday, October 11, 2007

தருமி குறிப்பிட்ட இதோ எனது எழுதாத பதிவு...!

நான் பாட்டுக்கு செவனேன்னு நான் உண்டு என் வேலை உண்டுன்னு என் வழியில போயிட்டு இருந்தா, இந்தத் தருமி திடீரென்று தமிழகத்தின் விடி வெள்ளிப் பத்திரிக்கைகளில் ஒன்றானதும், படிப்பதற்கே ஒரு தகுதி வேண்டுமெனவும் நம்பப்படும் ஆ.வியின் ஒரு டிரெண்ட் செட் ஆர்டிகிளை படித்து விட்டு இங்கு நான் ஏதோ அதில் எழுதும் ஒரு "ஞானத்தை" கீழே போட்டு பதிவொன்று எழுதியதாக அவரது இந்தப் பதிவில் என்னை குறிப்பிட்டு எழுதியிருந்தார்.

உண்மையில் நடந்தது என்னான்னா, அந்த சமயத்தில் நிறைய தமிழ் மண பதிவர்கள் அந்த "ஞானத்தை" பத்தி நிறைய எழுதிட்டு இருந்தாங்க, அதுகளை படிச்சிட்டு நானும் ஒரு நாள் தருமிகிட்ட கூகுள் சாட்டில் அரட்டை கொண்டேன். ஆனால், அத்தோட அது மறந்தே போச்சு... ஏன்னா, அது போன்ற பத்திரிக்கைகளும், சன் ட்டி.விக்களும் தானே தமிழக மக்களின் அறிவுக் கண்களை திறந்து அடுத்த கட்டத்திற்கு மக்களை நகர்த்துகிறது. அவர்களுக்கு தெரியாதா எந்த நேரத்தில் எதனை சமுதாயத்திற்கு கொடுக்க வேண்டுமென்று, இதில் நம்ம பெரிசா எழுதி என்னாத்தை சொல்லிடப் போறோமின்னு அத்தோட விட்டுட்டு நான் வயிற்றுப் பொழப்பு பார்க்கப் போயிட்டேன்.

இன்னிக்கு மீண்டும் தருமி என்னய நிசமாலுக்குமே அதனைப் பத்தி எழுத வைச்சுட்டார். எழுதறேன்.

அன்னைக்கு தருமிகிட்ட என்ன சொன்னேன். அய்யா, இந்த "ஞானம்" நிறைய படிச்சிட்டு அவரே கூட அது சம்பந்தமான தியரி ஆட்கள்கிட்ட பேசி தனது சந்தேகங்களை தீர்த்துக் கொண்டு இங்கு அதனை தேனில் குழைத்துக் கொடுத்துக் கொண்டு வரலாம். (அன்னைக்கு சொன்னது மாதிரியே, தருமி, இன்னமும் நான் ஆ.வி படிக்கல). இருக்கட்டும். இருந்தாலும், கேள்விப் பட்டேன், மேலேட்டாமாக மனோத்துவமும், செக்ஸ் கல்வியும் கலக்குமிடத்தில் இருக்கக் கூடிய விசயங்களின் பெயர்களை நுனிப்புல் மேய்ந்தது மாதிரி சொல்லிவிட்டு போனால் பின்னால் அதனை படிக்கும் சாமானியனுக்கு புரிதலில் தவறு நேர்ந்து விட்டால் அது குடும்பத்தினுள் உள்ளவர்களுக்கு குழப்பங்களை விட்டுச் செல்லலாமல்லவா என்றுதான் கேட்டிருந்தேன். அதற்கு உதாரணமாக கீழே காணும் ஒரு விசயத்தையும் உங்களிடத்தே கேட்டிருந்தேன்.

அந்த உதாரணம்:

ஈடிபஸ் மற்றும் எலக்ட்ரா கம்ளக்ஸ் (The Oedipus and Electra complex). இதில் குழந்தைகள் தனது பருவ நிலை குறித்து ஆர்வம் மேலேங்கும் பொருட்டு எதிர் எதிர் பாலின பெற்றோர்களின் மீது சற்று அதிகமாக ஈர்ப்பு ஏற்பட்டு அவர்களிடத்தே அதிகமான ஒட்டுதல் இருப்பதனை காண நேரிடும். இதில் ஆண் குழந்தைகள் தனது அம்மாவின் மீது காட்டும் அதீத அன்பை ஈடிபஸ் என்றும், பெண் குழந்தைகள் தகப்பனின் மீது காட்டும் அக்கறையை எலக்ட்ரா காம்ளக்ஸ் என்றும் வகை பிரித்திருக்கிறார்கள்.

இதனில் கவனிக்கப் பட வேண்டிய விசயம், இந்த வகை பால் ஈர்ப்பு செக்ஸ் சார்ந்த கல்வியூட்டுலிருந்து விலகி மனோ தத்துவ ரீதியாகவும் பார்க்கப் பட வேண்டிய ஒரு விசயமாக போய் விடுகிறது. இந்த விசயம் அரைகுறையாக எழுதப் பட்டு பொது இடத்தில் வைத்தால், தவறாக புரிந்து கொள்ளும் பொற்றோர்களில் ஒருவர் சற்றே அஷ்ட கோணலாக அந்த சிட்டுவேஷனை எடுத்துக் கொண்டால் அந்த வீட்டில் என்ன நடக்கும் என்ற ஆபத்தை கருத்தில் கொண்டுதான் உங்களிடத்தில் நான் தெளிவு பெறும் பொருட்டே அந்த உரையாடலை மேற்கொண்டேன். ஆனால், கலாச்சார குடி"தாங்கியா இருக்கும் நிலையிலிருந்து இல்லை தருமி அவர்களே!

இனி பதிவுக்கு கொஞ்சம் சம்பந்தமில்லாமல் - பிதற்றல்கள்...

இங்கு நிறைய பேர் மிகவும் முற்போக்குத் தனமான சிந்தனைகளுடன் இருக்கிறார்கள், எழுதி வருகிறார்கள். சந்தோஷம்! நம்மில் நிறைய பேர் சிந்தனை ரீதியில் மட்டுமே தேக்கமுற்றிக்கக் கூடும். ஏனெனில் சிந்தனை என்பது ஒரு சங்கிலித் தொடர் போன்ற ரசாயன மாற்றம் மட்டுமே - மூளை சார்ந்து. தான் கூறும், நம்பும் கூற்றினை தனது சுய வாழ்க்கையில் நடைமுறை படித்தி காணும் பட்சத்திலேயே அது எந்த அளவிற்கு தனக்கு சாத்தியம் என்பது விளங்க நேரிடலாம் ஒரு தனிப்பட்ட நபருக்கு.

பெரும் பாலும் நம்மில் பலரும் அந் நிலைக்கு தன்னை இட்டுச் செல்ல அனுமதிப்பது கிடையாது என்றே நினைக்கிறேன். ஏனெனில், தனது வாழ்வை தொலைத்துதான் அது போன்ற பட்டறிவுனை பெற வேண்டுமா என்ற "தப்பித்துக் கொள்ளும்" பொது மனப் பான்மையும், சுய பாதுகாப்புத் தன்மையுமே காரணமாக அங்கே அமைகிறது. அல்லது மற்றொரு தத்துவ கோட்பாட்டு எஸ்கேபிசமாக - அவ அவனுக்கு என்ன தாகம் இருக்கிறதோ அதனை அவன் அவன் விதிப் பயனில் சென்று அருந்தி அனுபவிப்பான் என்ற நோக்கில் விட்டு விலகியிருப்பது.

உதாரணத்திற்கு ஓரினச் சேர்க்கையை பற்றி ஆதரித்துப் அல்லது நிராகரித்துப் பேசுபவர்கள், அது போன்ற ஒரு திருமணத்தில் உள்ள தம்பதிகளுடன் தனது குழந்தைகளை அலைத்துக் கொண்டு வெளியில் சென்று ஒரு உணவு விடுதியில் எதிர் எதிரே அமர்ந்து, அந்த தம்பதிகள் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து உதட்டுடன் முத்தமிட்டுக் கொண்டு இருக்கும் சூழ்நிலையில் தனது குழந்தைகளுடன் அமர்ந்து உணவு உட்கொள்ள நேர்ந்ததுண்டா, அது எது போன்ற ரசாயன மாற்றத்தை நம்மில் ஏற்படுத்தியது என்று உணர்ந்திருக்கிறோமா அல்லது அதற்கான ஒரு வாய்ப்பைத்தான் நமக்கு நாமே வழங்கி பார்த்திருக்கிறோமா?

அதனைப் போலவே தானும் ஒரு பொற்றோர் என்ற நிலையிலிருந்து, தான் பெற்ற பெண் மகளை இன்று நிலவும் இந்த "ஹாங் அவுட்" கலாச்சாரத்திலிட்டு அதனூடாக நமக்குக் கிடைக்கும் ரசாயன மாற்றத்தை உணர்ந்திருக்கிறோமா? எத்தனை பேருக்கு இது போன்ற வாய்ப்புகள் அமைந்தும் தூரவே விலகி நின்றிருக்கக்கூடும், அப்படியாயின் எது போன்ற உணர்வு அவர்களை தடுத்திருக்கக் கூடும்? அடுத்தவன் வீட்டுத் தீ அவன் வீட்டுக் கூறையை வந்து தீண்டும் வரைக்கும் என்ற மன நிலையிலா? அல்லது நமக்கு இந்தப் பிறப்பிற்கு தப்பித்துக் கொண்டோம், இது நமது தியரி மனதை காட்டும் நேரமென்ற மேபோக்குத் தனத்திலா?

புரட்சி எண்ணங்கள் மனத்தினுள் வந்து வந்து போகலாம் அதில் ஒரு சதவீத எண்ணத்தையாவது நடை முறை படித்தினாலே அதற்கு பதில் சொல்லும் பொருட்டு தன் வாழ் நாளையே செலவழித்து விட்டிருப்பது தெரியவந்திருக்கும் வாழ்வின் விளிம்பில் நிற்கும் பொழுது.

இன்னும் என்னன்னமோ சொல்ல வேண்டுமென தோனச் செய்கிறது, ஆனால், சொல்லி யாருக்கு என்ன சொல்ல விளைகிறோமென்பது தெரியாமலேயே விழி பிதுங்குவதால் இத்துடன் நிறுத்தி கொள்கிறேன்.

எனவே வெறுமனே பேசிக் கொண்டிருப்பதை தவிர்த்து கொஞ்சமேனும் தனது வாழ்வில் "அப்ளை" பண்ணி பார்த்து கொஞ்சம் முட்டாளாகவேணும் வெளித் தோற்றத்திற்கு தெரிந்தாலும் தன் நிலையில் தெளிவுற்று வாழ்வதே சாலச் சிறந்தது என்பது எனது வாழ்வின் அணுகுமுறை.

Thursday, August 09, 2007

அனானிக்கு ஓர் உருக்கமான பதில்!!!

யாருங்க இந்த அனானி? இப்படி அருமையான கேள்வியை எல்லாம் கேட்டுப்புட்டு இப்படி முக்காடுப் போட்டுக்கிட்டு ஒளிஞ்சுக்கிறீங்களே.

இந்த கேள்வி உண்மையிலேயே ஒரு சிறந்த பரிசை தட்டிக் கொண்டு செல்வது மாதிரி, ஏன் தவற விடுறீங்க சொல்லுங்க. நான் இப்படி கேட்டுப் புட்டீங்களேன்னு ஒண்ணும் உங்களை தவறாக சொல்லப் போவதில்லை. ஏன்னா, நீங்க கேட்டது ரொம்ப நியாயமான கேள்விங்க...ஆங்ங்ங்ங் உங்க பேரென்னா... சரி பெயரில்லாதவரே. வாங்க உங்க சந்தேகத்தை தீர்த்து வைச்சுடறேன்.

இப்படி கேட்டுருந்தார், பொத்தாம் பொதுவா. ஆனா, இதனை என்னையை மட்டும் கேட்டதாக நான் எடுத்துக் கொண்டு எழுதியிருக்கேன் அவருக்கு.

.....inge blog-la vanthu karuthu sollara pala per - USA-la kuppai kottitikkity irukkanga...

yen avangala ellam india-la velai seithu siru samabalam vaanga vendiyathu thane? :-) summa film kaataatheengapppa!!!! // ....

நான் வெக்கத்தை விட்டு ஒப்புத்துக்கிறேங்க. உண்மையிலேயே நான் பஞ்சம் பொழக்க வந்த ஆண்டிதாங்க. அதனையும் மீறி எனக்கு இங்க ரத்த பந்தம் வேற ஆகிப்போச்சுங்க. இதற்கெல்லாம் மீறி நான் ஒண்ணும் இந்தியாவில அப்படி கையைத் தட்டினால் ஓர் கார் ஓடி வந்து என்னைய ஏத்திட்டுப் போற வீட்டில பிறக்கலைங்க. அது என் தப்புமில்லைங்க.

அதுக்காக என் பெற்றொர்களை திட்டவுமில்லைங்க. ஆனா, கண் கொண்டு என் தகப்பனார் ஒரு பொறுப்பான ஆளா தன் குழந்தைகளை வளர்க்கப் பட்ட கஷ்டத்த என் ஒன்றரை கண்கள் கொண்டு பார்த்திருக்கேங்க. அந்த கஷ்டமெல்லாம் சில பேருக்கு சொன்னாக் கூட புரியாதுங்க. ஏன்னா, உங்க மாதிரி புளிச்ச ஏப்பக் காரர்களா இருந்தா புரியுமா? பசிச்சவன் எப்படி சாப்பாட்டை பார்க்கிறான் அப்படின்னா, சொல்லுங்க.

சரிங்க, இந்தியாவை எனக்கு நெஞ்சுக்குள்ள உசிரு இருக்கிற வரைக்கும் காதலிப்பேங்க. ஏன்னா, எனக்கு அந்த ஊரு ரொம்ப புடிக்குமுங்க. ஐ ஜஸ்ட் லவ் தட் கண்ரிங்க. இருந்தாலும், காலத்தின் கோலமாக இப்ப என் வாழ்க்கை இந்த அமெரிக்காவையும் ஏத்துக்க வைச்சுருக்குங்க. அதுதான் உண்மை. ஆனா, எந்த காரணங்களால் நான் இந்தியாவை காதலிக்கிறேனோ அந்த காரணங்களே அங்கிருந்து களையப்படும் பொழுது என்னால் அதனைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியலங்க. ஏன்னா, எதனை இங்கிருந்து எடுத்துச் சென்று சிறந்ததென அங்கே நிறுவ முயல்கிறார்களோ அது இங்கே விட்டுப் போன தழும்புகளை கண் கொண்டு இரு பக்க தட்டுகளிலும் வாழ்ந்ததினால் என்னால் இந்தியாவில் இருக்கும் சிறப்பு என்னான்னு தெளிவாக பார்க்க முடியுதுங்க. அதுக்காக எல்லாமே இந்தியாவில் சரியாக இருக்கிறது என்று சொல்ல வரலைங்க.

நிறைய நான் பணத்தை மூடைக் கட்டிக் கொண்டு இந்தியாவிற்கு அள்ளிக் கொண்டு செல்ல வேண்டுமென்ற எண்ணத்துடன் இங்கு வாழ்ந்து வரலைங்க. இங்கயும், நான் வாழ்க்கையை முழுதுமாக வாழ்கிறேங்க. அதிலுள்ள நல்லது கெட்டது எல்லாமே உடல் கொண்டும், சுவாசிச்சும் பார்க்கிறேன், நிறை, குறைகள் எல்லாம் பிடிபடுதுங்க. அவ்வாறு பட்டுணர்ந்ததை, அது போன்ற சில அழிவுப் பாதைகளில் சென்றுதான் ஒரு சில விசயங்களை கற்றுக் கொள்ள வேண்டுமென்ற கட்டாயத்தில் இல்லாத நம்மூர் மக்களுக்கு சிறிதேனும் ஏதாவது இங்கிருந்து பார்த்த விசயங்களை இரு பக்க விசயங்களையும் பார்க்க ஒரு வாய்ப்பு கிட்டிய ஆளாக இங்கேயே சிக்குண்டுதால் அதனை அங்கு சொல்லி கொஞ்சமேனும் விழிப்புணர்வு ஏற்ற முடியுமா என்ற ஒரு ஆசையில்தானுங்க அப்படி மக்கள் வந்து இங்கு வாழ்ந்தாலும் நாலு பேரு கூடுற இடத்தில வந்து சொல்லலாங்க, தனது கருத்துக்களை. அதில ஏதாவது தப்பிருக்காங்க.

ரொம்ப நேரம் ஆகாதுங்க நானும் ஒரு Mr. Wolfவாகவோ, Mr. Woodஆகவோ என்னை நானே ஏமாற்றிக் கொண்டு பேசித் திரிவதற்கு. நான் நானாக இருக்க ஆசைப் படுவதால்தான் இங்கே வந்து இப்படி எழுதித்(புலம்பித்) தள்ளுறேங்க. எனக்கும் ஒரு சில்வர் ஸ்பூன் நான் வளர்ந்த சூழ்நிலையில் வாயில் கிடைத்திருந்தால் அங்கேயே கிடந்துருப்பேன். இருப்பினும் இது போன்ற ஒரு பரந்த பார்வை கிட்டியிருக்காதே, அதுவும் ஒன்று இருக்கிறதல்லவா?

அதனால் மற்றவர்கள் எப்படியோ, நான் அவனில்லை :-)). அதனால், அங்கிருக்க, அதாவது இந்தியாவில் மனம் வெதும்பி நடை பிணங்களாக ஏண்டா இங்க பொறந்து சாகுகிறோமின்னு சான்ஸ் கிடைக்கலயேன்னு இருக்கவங்கெல்லாம் ஏதோ நாட்டுப் பற்றினால் கிடைத்த வாய்ப்புகளை நழுவிட்டுவிட்டு இருப்பது போலவும், இங்கு வந்து இருப்பவர்கள் எல்லாம் பணத் திமிரு எடுத்து இங்கு புலம் பெயர்ந்து வந்திருப்பது போலவும் எண்ண வேண்டாம் பெயரில்லாதவரே. ஒவ்வொருத்தர் வாழ்வும் வித்தியாசம் வித்தியாசமாய் அமைந்து விடுகிறது. என்ன செய்வது சொல்லுங்கள். அதற்காக பிறந்த ஊரை துடைத்துதெறிந்து விட முடியுமா, சொல்லுங்க?

எல்லாம் காலத்தின் கோலங்கள். என் இடத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் நான் அங்கு வந்து விடுகிறேன். இது எப்படி இருக்கு.

இந்த வாய்ப்பை வழங்கிய பெயரில்லாதவற்கு நம்ஸ்காரங்கள், பல!!



பி.கு: அனானி உங்க வால்மார்ட் தரமான பொருட்களுக்கு இங்கே இருக்கு பதில்... பரிணாமச் சீர்கேடு ஒர் அறிமுகம்...

Monday, July 02, 2007

தருமிக்கு ஓர் வாழ்த்துச் செய்தி...!

இன்று திருமண நாள் காணும் திரு சாம் என்ற தருமிக்கு என் மனமார்ந்த *திருமண நாள்* வாழ்த்துக்கள்.
























தம்பதியர் வாழ்க! வாழ்க!! பல்லாண்டு வாழியவே... என்று வாழ்த்தும் மாணவர்களின் ஒருவன் --- காட்டான்ஸ்.

Wednesday, December 06, 2006

நவனும், நானும் என் மயானக் கவுஜாவும்...!

நண்பர் நவன், எப்பொழுதோ நான் கவிதை என்று நினைத்து எழுதியிருந்த ஒரு பக்கத்தை படித்து விட்டு மண்டையை பிய்த்துக் கொண்டு எனக்கு என்ன பொருள் என்று பிடிபடவில்லை கொஞ்சம் விளக்க முடியுமா என்று வினவியிருந்தார்...

அந்த கவுஜா இங்கே இருக்கிறது... சென்று பார்த்து படித்து விட்டு நீங்களும் மண்டைய ஸ்கரட்ச் செய்து கொண்டே வந்து மீண்டும் இங்கே வந்து இந்த விளக்க கட்டுரையை படியுங்கள். அப்படியும் பிரியவில்லை என்றால் அந்த கடவுள் தான் என்னை காப்பாற்ற வேண்டும் ;-)


அன்பு நவன்,

எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. எனது பழைய கூடையை கிளரி நீங்கள் எடுத்துப் படிக்கிறீர்கள் என்பதனை எண்ணும் பொழுது. அதற்கு எனது வந்தனங்கள்.!

இந்த கவிதை போன்ற எழுத்தில் நான் நினைத்து சொல்ல வந்தது: மனித வாழ்வு என்பது நெடு நீண்ட தூரப் பயணம் என்பது போல நமக்குப் புலப் பட்டாலும், அது ஒரு சிறிய முடிவுறும் பயணமே... கோவையில் இருக்கும் பொழுது, ஒவ்வொரு முறையும் நான் ஒரு மயானத்தின் வழியாக பயணிப்பதுண்டு, அவ்வாரு செல்லும் பொழுது இது போன்று மனித உடல் ஏதேனும் வேகும் பொழுது எனக்கு வாழ்வின் பொருள் மீண்டும் கண்களின் முன்னால் ஒரு முறை கேள்விக் குறியாக நிலை பெறுவது உண்டு.

மனித வாழ்வு நாம் வாழும் ஒவ்வொரு கனமும் எப்படி வாழ்கிறோம் என்பதனைப் பொருத்து தான் பொருள்ளதாக அமைகிறது என்றால், அதனை எப்படி அனுபவித்து நம் கூடவே வாழ்ந்து வரும் இந்த அப்பா, அம்மா, மற்ற சொந்த பந்தங்களுடன் அனுபவித்து வாழ்வின் சுவையை அதன் நிலையற்ற தன்மையை(மரணம்) கருத்தில் நிறுத்தி... அம்மாவின் புன் முறுவலின் பொருளணர்ந்து தினமும் ஆராதித்து மகிழ்வுடன் வாழ்ந்தால் அதுவே NOWNESS என்பதின் பொருளன்றோ, என்று நினைத்து அப்படி சொல்லி வைத்தேன்...

இன்னும் சில பதிவுகள் இதே லைனில் வெளியிட உள்ளேன். எனக்கு மிகவும் வேண்டிய ஒருவருக்கு இத் தருனத்தில் ஆருதலாக இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்...

நவன், மீண்டும் இங்கு உங்களின் கேள்வியாக என் கவனத்திற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி.

Monday, November 06, 2006

குழந்தைகளும் தனித்துவத்தன்மை பேணலும்...

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களுக்கு பெரும்பங்கு இருப்பினும், தான் சார்ந்து வாழும் சமுதாயமும் அதில் பெரும்பங்கு வகிப்பது யாவரும் அறிந்ததே. இருப்பினும், அந்த சமுதாயமும் தனிப்பட்ட மனிதர்களின் கூட்டு முயற்சியாகத்தான் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. இந்த கட்டமைப்பு இரண்டு வகைகளில் உதவலாம் அல்லது உதவாமலும் போகச் செய்யலாம்; அந்த முழுச் சமுதாயத்தில் உள்ள நபர்கள் யாவரும் பலனை அனுபவிக்கும் வண்ணம்.

முதல் வகையில் தான் நம்பும், இதுதான் வாழ்வு முறை என்ற எண்ண வழி நெறிப் பாதையில், பாரம்பரியமாக முன்னோர்கள் விட்டுவிட்டுச் சென்ற பாதையில் எந்த கேள்வியுமே இல்லாமல் நடந்து செல்வது. அதன் பாணியில் வளர்க்கப்பட்ட குழந்தைகள், தன் பெற்றோர்களால், அவர்களுக்கு வழங்கப்பட்ட செப்பனிடப் பட்ட பாதையிலே நோகாமல், சட்டை கசங்காமல் கடந்து, வாழ்வெனும் மகா சமுத்திரத்தை கடந்து முடிக்கையில் எதனை தன்னுடன் எடுத்துச் செல்கிறார். அது அனுபவப் பொதிகள் மட்டுமேதானகத்தான் இருக்க முடியுமல்லவா?

தன் வாழ்வின் எல்லையில் இருக்கும் பொழுது சற்றே கடந்த வந்த பாதையை மெல்ல அசை போட்டு பார்க்கும் பொழுது தான் எடுத்த முயற்சிகளின் மூலமாக சமூதாயத்திற்கு ஏதேனும் படைப் பங்களிக்களிப்பு அளிக்கப்பட்டிறுக்கிறதா என்று உட்நோக்கும் பொழுது இவைகள் யாவும் வெளி வருகின்றன.

இந்த முதல் வகை வளர்ப்பு முறையில் பெற்றோர்கள் செய்யும் தவறு அல்லது அணுகுமுறை குழந்தை வளர்ப்பில் என்னவெனில், தன்னிடம் உள்ள, தன்னால் இயலாத காரியங்களை தன்னுள் கோட்பாடுகளாக மட்டுமே இருக்கக் கூடிய விசயங்களை, தனது குழந்தைகளின் மேல் திணித்து அதன் படி நடக்கக் கூறியோ அல்லது எந்தவொரு துணிச்சலான காரியத்தையும் தனியே எடுத்து அதனை பட்டறிந்து அறிவதற்கான சாதகமான சூழ்நிலையை மறுத்தோ வளர்ப்பது.

உதாரணத்திற்காக பல விதமான பெற்றோர்களின் மன நிலையை எடுத்துக் கொள்வோம்; படிப்பு, மதம், பயம் மற்றும் பழக்க வழக்கம் சார்ந்து. இவைகள் யாவும் எந்த ஒரு தனிப்பட்ட மனிதருக்கும் தனது பால்ய வயது முதற்கொண்டே தனது பெற்றோர்களின் மூலமாக கையிறக்கம் பெற்று அதுவும் தலைமுறை தலைமுறையாக பழைய பால் புது கிண்ணத்தில் மாற்றப்படுவது போல, அது தனது குழந்தைகளுக்கு ஊட்டப் படுகிறது.

அதிலும் குறிப்பாக தனது உண்மையற்ற பயம் அதனைத் தொடர்ந்த ஐயப்பாடுகள் தீர்க்கப் படாமல் இருக்கும் பட்சத்தில், அப்படியே எந்த ஒரு வடிகட்டலுமில்லாமல் தனது குழந்தைகளுக்கு மூளைச்சலவையின் மூலமாக சென்றடைகிறது.

மதம் சார்ந்த அத்துனை மூட நம்பிக்கைகளும் இப்படியே சென்றடைவதாக வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் மதம் சார்ந்த ஐயப்பாடுகளும், தனி மனித தேடல்களும், அதற்கான விடைகளும் தேடிப் பெறாத பட்சத்தில் எஞ்சியிருப்பது குழப்பமும் அதனைச் சார்ந்த பயமும் பல நிலைகளில் மனித வன்முறைக்கு வித்திடுகின்றன; பிற்காலத்தில், பல நிலைகளில்.

அது போலவே, இயற்கையாகவே ஒரு குழந்தை அதற்கென தனி இயல்புகளுடன் தனக்கு கிட்டும் சூழலில் வளர்ந்து வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறு அச் சூழலுடன் ஒன்றி வாழும் பொருட்டு, அது அதற்கென பிடித்தமான விசயங்களை கவனித்து அதில் ஆர்வம் காட்டலாம் அல்லது நாமே அந்த பன்முக தோற்றச் சூழலை உருவாக்கிக் கொடுக்கும் பட்சத்தில் அவைகள் எதில் ஆர்வம் அதிகம் செலுத்துகிறதோ அதனை அறிந்து அதன் பொருட்டு வாய்ப்புகளை பெருக்கிக் கொடுத்து ஒத்தாசையாக இருக்கலாம்.

அப்படியாக இருக்கும் பட்சத்தில் அக் குழந்தைகளும் மன நிறைவுடன், எந்தச் சூழ்நிலையிலும் தனக்கு மானசீகமான ஒன்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால் எந்த விதமான மன குன்றுதலுமில்லாமல் வாழ்ந்து வரலாம், பிற்காலத்தில் (மாடு மேய்ப்பவனாக இருந்தாலும் சரி அல்லது இசை மேதையாக இருந்தாலும் சரி - மன நிறைவு அதில் அவனுக்கு கிட்டும் பட்சத்தில்).

அவ்வாறின்றி, பெற்றோர்கள் எந்தத் துறையில் அதிக வாய்பிருக்கின்றதோ (அல்லது சொல்லிக் கொள்வதற்கு பெருமையாக இருக்கும் என்பதால்) அதனை மட்டுமே கருத்தில் கொண்டு, அவர்களின் மீது அந்த முடிவை வைத்துத் திணிக்கும் பொழுது, பெற்றோர்களுக்கு பிறகு பிடிக்காத ஒன்றை 'கடமையே' என்று எந்த பிடித்தமுமில்லாமல் செய்து வாழ்வும் கசந்து தனது பொற்றொர்களின் ஆசையை தனது வாழ்வாக ஏற்று வாழ்ந்து சாக நேரிடும்.

உதாரணமாக, அப்பா மருத்துவத்தில் பெரிய நிபுணர் என்றால் அவரது பிள்ளையும் அதே துறையில் இருப்பது. இது போல, கிளிப் பிள்ளைக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதனைப் போன்று சொல்லிக் கொடுப்பதினால் ஏதாவது Creativity அங்கே துளிர்க்கிறதா என்றால் சாத்தியம் மிகக் குறைவே! அதே சமயத்தில், தன் ஆர்வத்தில் ஒருவர் அந்தத் துறையை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் தனது முழுத் திறமையும் அதில் போட முடிகிறது, ஏனெனில் தனக்கு என்ன இயல்பாக இருப்பதை போல செய்ய முடிகிறதோ அதில் முயற்சி இன்றியே இயல்பாய் பல சாதனைகள் ஏற்படுத்தப் படுகின்றன.

இதில் கஷ்டகாலம் என்னவென்றால், பெற்றோர் தான் வாழ்நாளில் தான் செய்யும் காலவதியாகிப் போன வாழ்வியல் சார்ந்த அணுகுமுறையினை தனது சந்ததிகளுக்கு கண்ணாடியில் 'தூசி படர்வதைப்' போன்று கொஞ்சம் கொஞ்சமாக தனது வாழ் நாளின் பெரும் பகுதியில் அவர்களுக்கு ஏற்றி வைத்துவிட்டுச் செல்வதுதான்.

பிற்காலத்தில் அக் குழந்தை பெரியவனாகி தன் கற்றுக் கொண்ட முரண்பாடுகளை, தனது சம காலத்தில் சோதனைப் படுத்திப் பார்க்கும் பொழுது மிக்க உபத்திரவங்களுக்கிடையே தன்னைத் தானே திருத்திக் கொள்ள வேண்டியதாகி விடுகிறது.

அப்படி மாற்றியமைத்துக் கொள்ள பெரும்பாலும் முன் வராத பட்சத்தில் தான் தனி மனித வெளிப்பாடாக தோன்றிய ஒரு குறிப்பிட்ட "தூசியேற்றப்படுத்தல்" ஒரு முழு சமூதாயத்திற்குமே அமையப் போய், அது இரு வேறுபட்ட சமூகங்களுக்கிடையே வன்முறையில் கொண்டு போய் விட்டு விடுகிறது. உதாரணத்திற்கு மதம், ஜாதி சார்ந்த வன்முறைகள் இதில் அடக்கம்.

எனவே, குழந்தை வளர்ப்பில் பெற்றொர்கள் வன்முறையை கையாளாமல், குழந்தைகளின் இயல்பிற்கு விட்டு, அதற்கென உள்ள தனித் திறமையையும், ஆர்வத்தையும் கண்டறிந்து அதனை ஊக்கப் படுத்தினால், என்றைக்கும் அவர்கள் உங்களின் நினைவுகளினூடேயே (நன்றியுணர்வுடன்) வாழ்வார்கள்.

இளம் வயதிலேயே சுயமாக வாழ்வதின் அத்தியாவசியமென்ன, கூட்டுக் குடும்பம் என்ற முறையில் மொக்கையாக ஒட்டுண்ணி வாழ்வு வாழ்ந்து சமூதாயத்தை சவக் குழியில் தள்ளாமல் இருப்பதற்கு எப்படி வழிகோணுதல் வேண்டும் என்ற அடிப்படை அறிவை முதலில் தான் பெற்றுக் கொள்வது குழந்தை வளர்ப்பில் மிக்க நலம் பயக்கலாம். இல்லையெனில் "உதவாக்கரை பட்டாதாரிகள்...! போன்ற ஒரு இளைஞனை நம்மிடையே நாம் உருவாக்க நேரிடலாம். அப்படி எண்ணற்ற மக்களை உருவாக்கிய பட்சத்தில் ஒரு சமூதாயமும் அசனைச் சார்ந்த கூட்டமைப்பான நாடும் எந்த நிலையில் இருக்கும் என்பதனை இங்கும் அதனைப் பற்றிய பேச்சு இருக்கிறது.

மற்றும் இங்கே தருமி அவர்கள் "ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை" என்ற தலைப்பில் எழுதியிருக்கும் மதமும் மற்ற விசயங்களும் எப்படி மெது மெதுவாக மூளை சலவை செய்யப் பெற்று சிறுவர்களின் மனத்தில் ஏற்றமுறச் செய்யப்படுகிறது என்பதனை, தனது சொந்த அனுபவத்தின் மூலமாக சில சிந்தனைகளை அங்கு வைத்திருக்கிறார். முடிந்தால் அங்கும் சென்று வாருங்கள்.

Tuesday, October 31, 2006

அமெரிக்காவில் இந்தியர்கள் : தருமியின் கவனத்திற்கு...!

எனக்கு எத பகிர்ந்துக்கிறது எதனை பகிர்ந்துக்ககூடாதுன்னு இன்னும் ஒரு தெளிவு பிறக்காத இந்த காலக் கட்டத்தில், தருமி இங்கே அமெரிக்கத் துளிகள் அப்படின்னு ஒரு பதிவு போட்டதினாலே இதனை பகிர்ந்து கொண்டேயாக வேண்டும் என்று தோன்றியதால் இந்த பதிவு. உங்களின் பார்வைக்கு.

எனக்கும் அமெரிக்கா வந்த புதிதில் தருமி கவனித்த விசயங்கள் மனதில் பசக்கென்று ஒட்டிக்கொண்டு கேள்விகணைகளாக துளைத்தெடுத்தது உண்டு, மறுப்பதற்கில்லை. ஏன், சக இந்தியர்களை பொது இடங்களில் பார்த்தால் ஒரு நட்புணர்வுடன் கூடிய புன்முறுவல் பெறுவது ஒரு பெரிய விசயமாக இருக்கிறது? ஆரம்ப காலங்களில், அப்படி எதிர்பார்த்து மூக்குடை பட்டதுமுண்டு, மறுப்பதற்கில்லை.

இது ஒரு நல்ல மனோ தத்துவம் சார்ந்த ஆராய்ச்சிக்கு உகந்த விசயமாக படவில்லையா? எனக்கு அப்படித்தான் தெரிகிறது. இருந்தாலும் எனக்கு கிடைத்த சில சொந்த அனுபவங்களை கொண்டு, இது போல் மற்றவர்களுக்கும் அப்படி நடந்திருந்தோ அல்லது காது வழி செய்தியாக கேட்டிருந்தோ சற்று முன்னெச்சரிகையாக அப்படி இருகிய முகம் கொண்டவர்களாக மாறிப் போய் நடந்து திரிகிறோமோ என்ற எண்ணத்தின் தாக்கம் இந்த பதிவுனை பதிவிட தூண்டியது.

கீழே பகிர்ந்து கொள்ளப்பட்ட ஒரு பின்னூட்டம் 1997ல் நடந்தது. அதிலிருந்து எனக்கு கிடைத்த செய்தி, ஒரு மனிதருடைய அணுகு முறை அவரின் பிறப்பும், வளர்ப்பும், கல்வியும் மற்ற புற சூழ்நிலைகளை பொருத்தே அமைகிறது. இந்தியர்கள் பார்பதற்கு ஒரே மாதிரியான உருவமைப்பு வெளி நாட்டவர்களுக்கு காணக் கிடைத்தாலும், தனிப்பட்ட மனிதருக்கு அவரின் சொந்த மொழி, ஜாதி, படிப்பு, அந்தஸ்து மற்றும் இத்தியாதிகள் அவருடனேயே நாடுகள் தாண்டியும் ஒட்டிக் கொண்டு வருவது தவிர்க்க முடியாத ஒரு விசயமாக, அது ஒரு firmly embedded behaviorஆக பரிணமித்துக் கொண்டேதான் உள்ளது.

இப்பொழுது அந்த பழைய பின்னூட்டத்தைப் படியுங்கள்:

Thekkikattan said... Deiva,

ஓ, அந்த அனுபவம்பத்தி இங்கே கொஞ்சம் பகிர்ந்துக்க சொல்லிறீங்களா... செய்றேனே,

நான் அமெரிக்கா வந்த புதிதில் நான் இருந்த இடம் கொஞ்சம் அதீதமா வெள்ளைக்காரங்க வசிக்கும் பகுதி (long island, New York) , அதனால இந்தியர்களெ பார்க்கிறதே கொஞ்சம் கஷ்டமின்னு வச்சுக்கங்ளேன். அந்த மாதிரியான ஒரு சூழ்நிலையிலெ ஒரு நாள் மிதிவண்டி போட்டு ஊர்வலம் வந்துகிட்டு இருக்கிறப்ப திடீர்னு ஒரு இந்தியா ஆள் ஒருத்தர் நம்ம சாயல்லே வீட்டுக்கு வெளியில ச்சேர் ஒண்ணு போட்டு உட்கார்ந்திருந்தார்.

எனக்கு அவரை பார்த்தவுடன் ரொம்ப உற்சாகமாகி மிதிவண்டிய அப்படியே சாச்சி போட்டுட்டு ஓடிப் போயி அய்யா, நீங்க இந்தியாவன்னு மூச்சிறைக்க கேட்டேன். அவரும் நிதானம மேலே கீழே பார்த்துப்புட்டு ஊருக்குப் புச்சா அப்படின்னு ஆங்கிலத்தில கேட்டுப்புட்டு நான் ஒரு மலையாளி, நீங்க தமிழா, அப்படின்னா, தமிழ் பேசுற மக்கள் இருக்கிற பக்கம போயி ஆத்மாவை கண்டுப் பிடிச்சுங்கன்னு சொல்லிட்டு பேச்ச முடிச்சுக்கிட்டாரு.

எனக்கு என்னட இதுன்னு ஆகிப்போச்சு, எவ்ளோ பேசவேண்டியிருக்கிற இடத்தில ஒரு மொழி வந்து புகுந்து காலிபண்ணிப் புடிச்சே அப்படின்னு ஒரே ஏமாத்தமா போயிருச்சு, இவ்வளவுக்கும் அவரு வீட்டுக்கும் நான் இருக்கிற வீட்டுக்கும் நடந்து போற தொலைவுதான்னு வச்சுக்கங்க.

அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா எனக்கு உலக அறிவு கிட்ட ஆரம்பிச்சு எப்படி நாம் மனிதர்கள் நமக்குள்ளேயே நிறைய பிளவுகளை வச்சுக்கிட்டு வெளியில வாழ்ந்துகிட்டு இருக்கிறோம். வெளுத்தது எல்லாம் பால் இல்லை என்கிற குழந்தை தனமான எண்ணத்திலிருந்து அடெல்ட் உலகத்துக்கு வந்துட்டேன் (அதிக மனிதனாக இராதே... உன் ஃபீலிங்க்ஸ் எல்லாம் கடலுக்கு அப்பாலே வச்சுக்கோ).

அதற்கு பிறகும் சில டெஸ்ட்களும் செஞ்சுட்டுத்தான், குஜாராத்தி மக்களோட இன்னபிற குரூப் இப்பிடி...

இப்ப எனக்கு நானே ஒரு நாடு, அதிலெ நானே எவெரித்திங்...

பி.கு: இதில் மாணவ உலகத்திற்கும், சாப்ட் வேர் மக்களுக்கும் பொருந்தாது.

இது அடெல்ஸ் ஒன்லி. ;-))

Monday, May 22, 2006


மேலே பேசப் பட்ட மனிதர் முதல் தலைமுறை, தனது உறவுமுறை அடிப்படையில் அமெரிக்கா குடிபெயர்ந்தவராக இருக்கலாம். அதனால் அவருக்கு ஏற்கெனவே இந்தியாவில் நல்ல உலக நடப்புகள் தெரிந்த நட்பு வட்டங்கள், கல்வி சார்ந்த உலகம் சுற்றும் நண்பர்கள் கிடைத்திருக்க வாய்ப்பில்லாமல் இருந்திருக்கலாம். அச் சூழலில் அவருடன் நான் கூறிய அத்துனை firmly embedded behaviorகளும் பயணித்து, காது வழி செய்திகளை கொண்டு, பிற இந்தியர்களை சந்தித்தால் keep it short என்ற அறிவுரையின் படி நடந்து கொண்டிருக்கலாம்.

புதிதாக வந்தவர்களுக்கு கொஞ்சம் மன ஆருதலும், சில நேரங்களில் சொந்த வீட்டு நிர்வாகத்திற்குகென (பலசரக்கு சாமான்கள் வாங்கும் கடை, அல்லது அங்கு சென்று வருவதற்கென வாகன வசதி இப்படி) பல ரூபங்களில் இன்னல்கள் இருக்கலாம். அப்படி அவர்கள் நெருங்கி வரும் பட்சத்தில் எப்படி பதிலுரைப்பது என்ற எண்ணமே கூட இருக்கலாம்.

இதிலும் இங்கு நீண்ட காலங்கள் வசிப்பவருக்கு, அது போன்ற சில சூழ் நிலைகள் அமையப் பெற்று அதற்கென இறங்கி வேலையும் பார்த்த பட்சத்தில் என்ன இருதியில் கிடைக்கிறது. கசப்பான அனுபவங்களாக கூட இருந்திருக்கலாம்.

எனக்கு சில அப்படியும் இப்படியும் கிட்டியது. அவைகளிலிருந்து சில. எனக்கு Long Islandல் இருந்த காலத்தில் ஒரு குஜாரத்தி குடும்பம் அறிமுகமானது, அதுவும் பேருந்து பிரயாணத்தின் போதுதான். அந்த மனிதர் தனது 50களின் தொடக்கத்தில் தனது பொறியாளர் வேலையையும், தனது துணைவியாரின் மேல் நிலை ஆசிரியப் பணியையும் இந்தியாவில் துறந்து விட்டு, தனது ஒரே மகனுக்கென அமெரிக்கா குடிபெயர்ந்தவர்கள். மிக்க கஷ்டம் இங்கே.

ஆரம்பத்தில் தனது சகோதரியின் வீட்டில்தான் இருந்தார்கள், ஆனால் எவ்வளவு நாட்களுக்கு ஒரு குடும்பத்திற்கே கார் ஓட்டி, தட்டு முட்டு சாமான்கள் வாங்குவதற்கு எடுத்துக் கொண்டு திரிய முடியும் இன்னொரு host குடும்பத்திற்கு. வந்த மூன்று மாதங்களிலேயே வெளியே வரும் சூழ்நிலை.

அந்த நேரத்தில்தான் என்னுடைய அறிமுகம் கிடைத்தது. பிறகு கிட்டத்தட்ட அந்த அறிமுகம் இரண்டு வருடம் தொடர்ந்தது. அவருக்கு வேலை முடிந்து வரும் பொழுது காரில் ஏற்றி வீட்டுக்குக் கொண்டு போய் இறக்கி விடுவது, ஞாயிற்றுக் கிழமைகளில் கோவிலுக்குச் செல்லவும், பலசரக்கு சாமான்கள் வாங்கவும் என்று லிஸ்ட் கொஞ்சம் நீண்டுதான் இருந்தது.

இருப்பினும் நான் அங்கு இருந்த வரையிலும் பார்த்துக் கொண்டேன். பிறகு அங்கிருந்து இன்னொரு மாநிலத்திற்கு நாங்கள் வந்து விட்டதால், என்ன அவர்களுக்கு ஆனது என்று தெரியவில்லை. எனக்கு நடந்ததை மற்றவர்கள் அறிந்து கொள்ளும் பொழுது - இப்படியாக நடக்கலாம் என்ற அனுமானம் மற்றவர்களுக்கு.

பிறகு இப்பொழுது மிக அண்மையில் நடந்தது. இங்கு ஜியார்ஜியாவில், ஒரு நாள் என்றுமில்லாமல் பெட்ரோல் பங் ஒன்றில் ஒரு கோப்பை தேநீர் வாங்காலமென்று சென்ற பொழுது இந்திய இளைஞர் ஒருவர் காரில் அமர்ந்த படி செல் பேசியில் இருந்தார், அவரும் என்னை பார்த்திருந்ததால் கையசைத்துவிட்டு கடையினுள்ளே சென்று கொண்டிருந்தேன். ஆனால் அவர் பின்னால் வந்து தமிழிலேயே, நீங்கள் தமிழா என்று வினாவினார். நானும் ஆமாம் என்று ஆரம்பித்து அடுத்த பத்து நிமிடங்கள் தொலை பேசி எண்கள் பரிமாறிக்கொண்டு அன்று மாலை சந்திப்பதாக பிரிந்தோம்.

அவர் நான் இருக்கும் டவுனில் வேலை பார்பதற்காக வந்திருப்பதாகவும், தங்குவதற்கு இடம் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். நானும் எனது வீட்டில் தற்சமயத்திற்கு எனது தம்பியுடன் மட்டுமே இருப்பதால், வெளியில் தங்குவதற்கு பதிலாக எனது வீட்டிலேயே கொடுக்கும் வாடகையை கொடுத்துவிட்டு தங்கலாமே என்று கூறினேன். ஆனால், பார்ட்டி உஷார் பார்ட்டி போல (என்ன உஷாரோ, நானும் திருந்தாத ஜன்மம் :-)

பின்னால், அவர் வேலையில் ஏற்பட்ட பெரும் மன உளைச்சலுக்கு ஆட்பட்டு வேலையை வேண்டாமென்று எழுதி கொடுத்துவிட்டு (வேண்டாமய்யா என்று நாங்கள் சொல்லியும்), இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அதே அலுவலத்திற்கு செல்லும் பொழுது, போலீசாரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப் பட்டிருக்கிறார். அங்கிருந்து எனக்கு தொலைபேசி வருகிறது. என்னை விட்டால் அவருக்கு என்ன செய்வது என்று தெரிய வில்லை என்றும், எப்படியாவது தன்னை பெயிலில் வெளியே எடுக்குமாறும் கலக்கமுற்ற நிலையில் தொலை பேசினார்.

எனக்கு ஒரே படபடப்பு என்னாடா இது இப்படி ஆகிப் போகிவிட்டதே என்று. பிறகு இங்கிருக்கும் மக்களிடம் பேசி சிறிது அறிவு அது சார்ந்து பெற்றுக் கொண்டு பெயிலில் எடுத்தும் ஆகிவிட்டது. அவருக்கு இங்கு அமெரிக்காவில் இருக்கும் பட்சத்திலும் தனது ஜாதி பொருட்டு ரொம்பவே பெரிமிதம் உண்டு, ஒரு முறை என்னை அவரின் பெயருடன் ராஜாவை இணைத்து அழைக்கச் சொன்னதிற்கு நான் அழித்த மறுமொழியை 'காட்டான்' பாணியில், அவரின் வாழ்வில் மறக்க வாய்ப்பில்லை.

வீட்டிருக்கு சாப்பிட அழைத்தாலும் என்ன நினைப்பாரோ தெரியாது, ஏதோ நாம் அவரிடமிருந்து எதிர்பார்த்துதான் அழைக்கிறோமென்று ஒரு தடுமாறல் இருக்கும். பிறகு அந்த அரெஸ்ட்டுக்கு பிறகு அவரது பேச்சில் ஒரு மாற்றம் தெரிந்தது. எங்கள் வீட்டிலும் வந்து தங்கித்தான் இருக்க வேண்டுமென்ற சூழ்நிலை.

எனக்கு ஏதோச்சையாக சந்தித்த சந்திப்பில் கிடைத்த சில நல்ல நண்பர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதிலும் மதுரைக்காரர்கள் ரொம்ப பாசக் காரங்கப்பா. எல்லாத்தையும் அப்படியே, சிதம்பர ரகசியமாகவே இருந்தாலும் பகிர்ந்துப்பாங்க. வெள்ளாந்தியான மனசு.

சரி, எப்படியோ நான் கூறிய விசயங்களிலிருந்து சில உண்மைகள் கிடைத்திருக்கக் கூடுமென்று நினைக்கிறேன். அப்படி கிடைத்திருந்தால் கூட்டிக் கழிச்சு அவங்க அவங்களும் அவுக அவுகளுக்கு எது சரின்னு படுதோ அது படி வாழ்கையில சோதனைகள் மேற்கொண்டு அனுபவிச்சு பார்த்திட வேண்டியதுதான்.

கடன் அன்பை முறிக்கும் :-)

Monday, October 23, 2006

காகிதப் புலிகளும் *வச்சிபார்க்கத் தெரியாத* கமலும்!!

இது போன்ற ஒரு பதிவ போடணுமின்னு எனக்கு எப்ப "விருமாண்டி" கேசட் வெளியீட்டு விழாவும் அதனைத் தொடர்ந்த அரசல் புரசலான குரு (கே. பாலசந்தர்) - சிஷ்ய (கமல் ஹாசன்) பந்தம் கொஞ்சம் விரிசலாகி அனல் கணந்ததைக் காண முடிந்தலிருந்து கமலின் உள்ளத்தில் உள்ள சில சிந்தனைகளை உணர முடிந்தது.

இந்த பதிவை இப்பொழுது கொணர்ந்தற்கு காரணம், அவரது குருவான இயக்குனர் பாலசந்தர் பல புரட்சிகரமான கருத்துள்ள படங்களை கமலைக் கொண்டும், ஏனைய கதாபாத்திரங்களை கொண்டும் தமிழ் கூறு சமூதாயத்திற்கு சொல்லியிருக்கிறார் என்பதனை கேள்விப் பட்டிருக்கின்றேன். இருந்தாலும், அப்படிபட்ட படங்களை இந் நாள் வரையிலும் காண கொடுத்து வைக்கவில்லை.

இருப்பினும் நமது தமிழ் மணத்தில் அண்மையில் சத்தியப் ப்ரியன் எழுதிய கமல் - ஒரு சகாப்தம் என்ற பதிவின் மூலம் பல திரைப்படங்களின் சிறப்பு தொகுப்பு ஒரே இடத்தில் கிடைத்தது. அதுவும் ஒரு காரணம் இந்த பதிவை துரிதப் படுத்தி எண்ணங்களை இங்கு பகிர்ந்து கொள்வதற்கு.
விதவை மறுகல்யாணம், விபச்சாரியை(?!) பட நாயகன் காதலித்து மணப்பது இப்படி பலப்பல என திரைப்படங்களின் மூலம்(மட்டுமே) பல புரட்சிகள் முன் வைக்கப்பட்டதாக கேள்விபட்டதுண்டு.

ஆனால், இன்று கமலுக்கு நல்ல நண்பர்கள் அருகமையில் இல்லாமல் இருப்பதால்தான், யாரும் இடித்துக் கூறுவதற்கு இல்லையெனவும், அதனால்தான் அவரும் தனக்கு அமைந்த மனைவிமார்களில் ஒருவரையேனும் தன்னுடன் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்றும் கருத்துச் சொல்லி மேடையில் சொல்லாமல் சொல்லி தனது குரு, விருமாண்டி பட கேசட் விழாவில் பொறுப்பாக இடித்துக் கூறிவிட்டார்.

அன்றுதான் கமலின் மறு முகத்தை காண முடிந்தது. பொதுவாகவே, கமல் தனது சொந்த குடும்ப விசயம் குறித்து பொதுவில் பேசுவதை விரும்பவது கிடையாது (அடுத்தவர்களும்). அப்பச்சத்தில் அப்படி ஒரு வசனத்தை, மேடையேறி போட்டுடடைத்ததால், அவரும் சற்றே சினம் சீண்டப் பட்டவராக அதற்கு பதிலிருக்கும் தொனியில் கூறியது.

சமூகத்தில் நல்ல (புரட்சி) கருத்துக்களை கூறுபவர்கள் யாரும் தனது சொந்த வாழ்வில் முயன்று சோடை போவது கிடையாது. அவர்கள் பாதுகாப்பான வலையின் மேல் இருந்துதான் தனது புரட்சிக் கருத்துக்களை முன் வைக்கிறார்கள்.

விதவை திருமணத்தை ஆதரித்து கருத்தும் கூறும் ஒருவர் தனது சொந்த வாழ்க்கையில் அப்படி ஒரு வாழ்வை அமைத்துக் கொள்வது கிடையாது. இது போன்றே ஏனைய கருத்துக்களும் (ஏன் அப்படி? உடனே அதற்கு நாம் கூறும் மறுமொழி, அது அது அவரவர்களின் சொந்த விருப்பத்தை பொறுத்தது, அதில் நாம் யார் நம் மூக்கை நுழைக்க என்று... நான் முயன்று தோற்றவன் என்ற முறையில் கேக்கிறேன் இங்கு). இப்படியாக தனது சொந்த வாழ்வில் என்ன நடந்து கொண்டிருக்கக் கூடும் என்பதனை அந்த "காகிதப் புலிகளுக்கு" சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தார் கமல் அன்று. எவ்வளவு புரிதலுக்கென உள்ள இடைவெளி என்று பாருங்கள்.

இதிலிருந்து சில விசயங்கள் எனக்குப் புரிய வந்தது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், அது போன்ற புரட்சிகரமான கருத்துக்களை சொல்லி பேரும், பணமும், புகழும் வேண்டுமானால் அள்ளி குவித்திருக்கலாம் வெள்ளித் திரைகளின் மூலமாகவும் அல்லது புதினங்களின் மூலமாகவும், தனது சொந்த வாழ்வில் யாரேனும் தன்னை அர்பணித்துக் கொண்டிருக்கிறார்களா இந்த காகிதப் புரட்சியாளார்கள் என்பது எனக்குத் தெரிந்து தெரியவில்லை (இருக்கலாம் சில அங்கொன்றும் இங்கொன்றுமாக). உதாரணத்திற்கு, குழந்தைகளின் தத்தெடுப்பை பற்றிய கருத்தைச் சொல்லி படம் எடுக்கும் ஒருவர், தனக்கென்று ஒரு குழந்தையேனும் தத்தெடுத்து தனது வீட்டிலேயே வைத்து வளர்க்கிறாரா? அதில் உள்ள கஷ்ட நஷ்டங்களை உணர்வுப் பூர்வமாக அறிந்து கொள்ள?

சரி, கமல் என்ன செய்திட்டார் தனக்கு அப்படி "வைத்துப் பார்த்துக் கொள்ள தெரியாதவர்" என்ற பெயரை ஈட்டிக் கொள்ள. புரிகிறது, அவரது சொந்த வாழ்வை பற்றி நாம் தர்க்கவிப்பது நாகரீகமற்ற செயல் என்பது. இப் பொழுது கமலும் ஒரு நடிகர் இல்லாத பட்சத்தில் ஒரு சராசரி நபராக இருந்திருந்தால் இப்பொழுது அவரது வாழ்வு விமரிசனத்திற்கு ஆளாகி இருப்பதைப் போல ஆகியிருக்குமா?

அவர் பொது வாழ்வில் இருப்பதால் மட்டும் தனக்கென்று சொந்த விருப்பு, வெறுப்புகள் தன் வாழ்வில் இருக்காதா? அல்லது அப்படியே இருந்தாலும் தான் ஒரு "ரோல் மாடலாக" மற்றவர்களுக்கு இருக்க வேண்டுமென்ற சமூதாய கட்டாயத்தின் பேரில் தனது சொந்த சந்தோஷத்தை தொலைத்து தியாகியாகி விட வேண்டுமென்ற கட்டாயாமா, என்ன? இதில் எது?

அவரை ஒரு தனிப்பட்ட மனிதராக அணுகும் பட்சத்தில் நம்மிடையே இந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் மறையும் பொழுது, ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சுய பரிசோதனை தன் வாழ்வை பொருட்டும் நிகழ்த்திப் பார்க்க முடியும் அது எதுவெனினும்.

சமூகம் ஒரு கட்டமைப்பை வைத்து திணித்து, இப்படித்தான் வாழ வேண்டும் என்ற அளவுகோலினை நிர்யிணத்திருந்தால் தனிமனித தேடல்களுக்கு அவசியமில்லாமல் போய் விடுகிறது அல்லவா? அதுவும் கமல் போன்றவர்கள் "லைம் லைட்"க்கு கீழ் இருந்து போவதால், அதிகம் பாதிக்கப்படுவது அவர்கள் போன்றவர்கள்தான். ஒரு சதாரண மனிதனுக்கு கிடைக்கக் கூடிய சுதந்திரம் கூட அவர்களுக்கு கிடைப்பதில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

Friday, August 04, 2006

ஏன் கோயம்புத்தூர் மாவட்டம் வெற்றியடைந்தது...?

இது போன்ற ஒரு கட்டுரையை என்னை எழுத தூண்டிய விசயம் நண்பர் *செல்வம்* கோக் ஃபாக்டரிகளை தனது சொந்த மண்ணுக்கு அனுப்புங்கள் நாங்கள் எப்பொழுதும் போல புத்திசாலிகளாக பிழைத்துப் போகிறோம் என்று கிண்டல் அடிக்கும் தொனியில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார்.

அதனை படித்ததும் எனக்குள் ஆயிரமாயிரம் கேள்விகள் துளைத்தெடுத்தன. பிறகு அதுவே ஒரு நேரத்தில் இந்தப் பதிவினை இடுமளவிற்கு என்னை கொணர்ந்தது.

ஏன் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் அவ்ளவாக தொழில் புரட்சி வெற்றியடையவில்லை என்பது, வெறுமனே மக்களின் அணுகுமுறையும், இயற்கை எல்லா நல்ல மூளை உள்ள மக்களையும் கொங்கு நாட்டில் இருக்குமாறும், ஏனையோரை மற்ற மாவட்டங்களில் தூக்கி அடித்ததாலும் இது நிகழ்ந்து விட்டது போல எனக்கு அந்தக் கட்டுரை ஒரு பரிமாணத்தை வழங்கியது.

சற்றே நான் அதனை உள் வாங்கிகொண்டு சிந்திக்கும் பொழுது, உண்மை அதுவல்லவே என்பது விளங்கியது. கோவைக்கு இயற்கையாகவே பல ப்ளஸ்கள் அமைந்திருக்கின்றன. இயற்கை, அம் மாவட்டத்தை தனது மடியில் கிடத்தி தாலாட்டும் அன்னையினை போல ஊட்டி வளர்க்கத் தக்கவாக அமைந்த மழைக்காடுகள், அதனையொட்டி கோவை மாநிலத்தில் கிடைக்கும் மழையளவு, வெப்ப நிலை மற்றும் ஏனைய பிறவற்றை கொடுத்து சீராட்டி வைத்திருக்கிறது.

இது போன்ற ஒரு இயற்கைச் சூழல் தமிழகத்தில் மற்ற எந்த மாவட்டத்திற்கும் ஒருமித்து அமைந்தாக எனக்குத் தெரியவில்லை. அப்படியே திருநெல்வேலியை ஒட்டி அமைந்திருந்தாலும், புவியல் அமைப்பில் கோவைக்கு மேலும் கிடைத்திருப்பது பல நன்மைகளே... மற்ற பெரும் நகரங்களுக்கான சமீபம், போக்குவரத்து வசதி etc.,

மனித சக்தி மூலமாக உற்பத்தி திறன் பெருக வேண்டுமாயின் அந்த இடத்தின் சீதோஷ்ண நிலையிம் பெருமளவிற்கு உதவ வேண்டும். அப்பொழுதுதான், உடல் சோர்வு அடையும் பாங்கு அங்கு சற்றே ஒத்தி வைக்கப்படுவதால் உற்பத்தி திறனும், வேலை பார்ப்பதற்கு புத்துணர்ச்சியும் கிடைக்கிறது.

அது கோவைக்கு இயற்கையாகவே அமைந்திருப்பது ஒரு வரப்பிரசாதம் தானே? இதில் எங்கிருந்து வருகிறது, எவர் புத்திசாலி மக்கள் எவர் இழிச்சவாயர்களென்று? பாலைவனத்தில் வசிப்பவன் இழிச்சவாயன், மலையும் மழையும் சார்ந்த இடங்களில் வசிப்பவர்கள் புத்திசாலிகளா?

சரி அப்படியே பார்த்தாலும் அவ் புத்திசாலி பூமியும் இயற்கை சார்ந்து தானே தொழில் நடத்தி வருகிறது?

சரி ஏன் கோயம்புத்தூர் எந்த கோக் மாதிரி தண்ணீர் அருந்தும் கம்பெனிகளையும் தனது மாவட்டத்தில் இணைத்துக்கொள்ள வில்லை? கண்டிப்பாக மற்ற இடங்களுக்கு செல்வதற்கு முன்னால் தொழில் புரட்சியில் முன்னேற்றத்தில் உள்ள மாவட்டத்தை அணுகியே இருப்பார்கள், இல்லையா?

எவ்விடத்தில் சொன்று எது போன்ற தொழிலமைத்தாலும் அங்கு நிகழும் இயற்கை சார்ந்த குறிப்புகளை கருத்தில் கொள்ளாமலா தொழில் தொடங்குவார்கள்.

அது அப்படி இருப்பின் இயற்கையை மொட்டையடித்து மொட்டையடித்து, சுரண்டிச் சுரண்டி பணம் சேர்க்கும் இவ் அணுகு முறை எத்துனை நாட்களுக்கு நகரும்? சுரண்டுவதற்கு ஒன்றுமற்ற நிலையில் இயற்கை வளங்களை உருகி ஒன்றுமே அற்ற நாள்தானே? அதுவும் வெகு தூரத்தில் இல்லை என்பது நமக்கும் தெரியும் தானே?

Wednesday, August 02, 2006

*அசுரனின்* கோக் பதிவும் தெகாவின் பார்வையும்...

அசுரனின் கோக் பதிவை படித்ததும் என் மனதில் பட்டதை அவருக்கு பின்னூட்டமாக வழங்கியதை இங்கு உங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

அவர் தனது பதிவில் கோக் குளிர்பான கம்பெனி எப்படி தாமிரபரணி போன்ற ஜீவ நதிகளைச் சுருங்கச் செய்துகிறது என்பது பற்றியும், இந்தியாவிலும் நிலத்தடிநீர் மிக விரையில் காணாமல் போய் கொண்டிருப்பதைப் பற்றியும் ஏனைய கோக் சார்ந்த விஷம வியாபார உக்திகளையும் படம் பிடித்து தனது பதிவில் இட்டுள்ளார்.

தயவு செய்து எல்லோரும் ஒருமுறை அந்தப் பதிவினை இங்கு சொடுக்கி சென்று படித்துப் பாருங்கள்.

இந்தியாவின் நிலத்தடிநீர் எங்கே? ஏன் இவ்வளவு விரைவில் பாலைவனவாக்கம் நடந்தேறுகிறது? தென்னிந்தியாவிலும் மற்றும் பல இந்திய மாநிலங்களிலும் இதே நிலையே... !

இதோ என்னுடைய பின்னூட்டம் அவருடைய பதிவிற்கு;

அசுரா,

மற்றொரு சிந்தனையூட்டு, அபாயமணி அடிக்கும் கட்டுரை உங்களிடமிருந்து.

எத்துனை பேர் இதனை படிக்கிறார்கள்? சிந்திக்கிறார்கள். நிலத்தடி நீரை மாசுபடுத்தி, அதனை நச்சாக்கி, அந்த நீருக்கு ஒரு நிறத்தையூட்டி மக்களை புத்தியிழக்கச் செய்து, இயற்கையை சுரண்டும் இந்த மறுகாலனியாதிக்கம் மிக விரைவாக உலகத்தை சுருட்டி விடும் போலிருக்கிறது.

எழுதுவதற்கு எவ்வளவோ இருக்கிறது. படித்து சிந்திப்பதற்குத்தான் ஆட்களை காணோம்!

நீங்கள் கொடுத்த சுட்டிகளின்றி, மற்றொரு விசயமும் விஷமாக பரவிக்கொண்டுள்ளது bio-technology and genetical engineering என்ற பெயர்களில், அங்கும் நடப்பதனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை லாபத்தை முன்னெறுத்தியே அன்றி வேறன்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இவர்களின் கை, விதை தானியாங்களுடன் நின்று போகவில்லை, இப்பொழுது மீன் வகைகளிலும் கைவரிசை காட்ட ஆரம்பித்திருப்பது அறிவீர்களா?

பத்து வருடங்களுக்கு முன்பாகவே, டிலெபியா என்ற வகை மீன் மரபணு-மாற்று தொழில் உக்தில், இயற்கையில் கிடைக்கும் டிலெபியாவைவிட எடை ஆதிகமாகவும், கட்டற்று உண்டு பெருப்பதை போலவும் மாற்றங்களை அவ்வகை மீனின் மரபணுவில் சொருகி, அவைகளின் இனப்பெருக்க, பழக்க வழக்க மரபணு விசயங்களை உருவி, அந்த மலட்டு மீன்களை இயற்கையினுல் திணிப்பதனால் ஒரிஜினல் மீன் வகைகள் அவற்றுடன் போட்டியிட முடியாது காணாமலே இவ்வுலகத்தை விட்டு அகற்றப் படுகிறது... உங்களுக்கு புரிகிறதா இந்த வியாபார யுக்தி?

இந்த மறுகாலனியாதிக்கத்தின் உக்தி, உலக சந்தையை தன் கைக்குள் கொண்டுவருவது, அது ஒன்றுதான் அதன் குறிக்கோளாக முன் நிக்கிறது. மற்றபடி இயற்கையோ, மனித சுகாதாரமோ அவைகளின் பன்மைத்தன்மையோ கருத்தில் கொள்ளப்படவே இல்லை.

இது ஒரு இருட்டடிப்பு உண்மை. நாம் எங்கு செல்கிறோம்...? எனக்கு கவலையாக இருக்கிறது... அசுரா!!

Sunday, July 30, 2006

எனது தூசி தட்டப்பட்ட நூலகம்...

என் கண்களில் சிக்கிய சில புத்தகங்களை அலமாரி தட்டுகளிலிருந்து ஓவ்வொன்றாக உருவி இங்கு ஏத்தி வைக்கும் முயற்சியுடன் இந்தப் பதிவு.

இப்பொழுதெல்லாம் என்ன புத்தகம் வாங்கினோம், இரவல் கொடுத்தோமா இல்லைய, நம்முடன் இருக்கிறதா இல்லையா, இது போன்ற கேள்விகளுக்கு உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் புரட்டிப் பார்க்க ஏதுவாகவும், திரும்பவும் வாங்கிய புத்தகங்களை வாங்கி விடாமல் இருக்கவும் உதவவே இந்த பதிவு.

இங்கு ஏத்தப் பட்டிருக்கும் புத்தகங்கள் அதனை மீண்டும் பார்க்கும் பொழுது ஞாபகத்தில் வந்து போனவைகளை கொண்டு அவ் நண்பர்களை இங்கு ஏற்றுவதா வேண்டாமா என்பதனை கருத்தில் கொண்டே பதிந்து வைக்கிறேன்.

நிறைய புத்தகங்கள் கணக்கில் வராமலும் இருக்கலாம். தெகா இம்புட்டுத்தானா இல்ல இன்னும் வைச்சிருக்கியான்னு கேக்கிற ஆட்களுக்கு நம்ம படிச்சது சம்பந்தம இருக்கிற புத்தகங்கள் அது பாட்டுக்கு அந்த பக்கம் உட்கார்ந்து என் வாழ்க்கையை வேடிக்கப் பார்த்துகிட்டு இருக்காங்க. அவனுங்கள ஆட்டத்தில சேர்க்கல.

எது எப்படியோங்க, எனக்கு புத்தகம் படிக்கிற வெறிய தூண்டி விட்டது என்னுடைய ஒரு நண்பன் அவன் பெயர் சுரேஷ் தி.ஜா எழுதின மோக முள் அப்படிங்கிற புத்தகம் படிக்க படிக்க என்னுள் பத்திகிட்டு எரிஞ்சுது , அப்ப நான் +2 படிச்சுக்கிட்டு இருந்தேன் கேக்கவா வேணும் (பலான புத்தகமெல்லாம் பல மைல் தூரம் தள்ளி நண்பர்களுடன் சேர்ந்து போயி பார்த்துப்புட்டு அங்கேயே தலையை சுத்தி தூக்கிப் போட்டுட்டு வந்திடறது....)

பிறகு சாண்டில்யன் பைத்தியம் இப்படியே நான் பரிணமித்து பரிணமித்து இப்ப கீழே இருக்கிற ஆட்களோடவும் கைபிடிச்சுட்டு நடந்தாச்சு.

இப்போ போகலம் லிஸ்ட்க்கு வாங்க:

இப்போதைக்கு இது தான் எனது உலக அரிச்சுவடி :-

1. Atlas of world history (From the origin of mankind to the present day) Edited by Kate Saton and Liz Mckay.

1a. South-East Asia On a Shoe String - Lonely Planet - (அதிலும் இந்த கைடு ரொம்பவேவேவே உதவுனுச்சுங்க தனியா நான் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து எல்லாம் சுத்திப் பார்க்கும் பொழுதெல்லாம், இன்னமும்...)

2.Teach Yourself Photography - Lee Frost (முயற்சி திருவினையாக்கும் புத்தகங்கள்)

3. Understanding Exposure - Bryan Peterson

4. The Explorer II World Atlas - Ronald McNally.

5. The Oxford English Dictionary - (அசடு வழியிறதிலிருந்து காப்பாத்திக்க)

6. The Universe in a Nutshell - Stephen Hawking

7. The Illustrated Brief History of Time - Stephen Hawking

7a. Parallel Universes (The Search for Other Worlds) - Fred Alanwolf

8. Practical Skywatching - The Nature Companions

ரொம்ப அவசியம படிக்க வேண்டிய புத்தகங்கள்...

9. அக்குனிச் சிறகுகள் (சுய சரிதம்) - எ.பி.ஜே. அப்துல் கலாம், அருண்

10. திவாரிஇந்தியா 2020 - எ.பி.ஜே. அப்துல் கலாம்

11. நான் துணிந்தவள்! - கிரண் பேடி (வரலாறு)

அப்புறம் இந்த அகராதி இன்னமும் வாங்கவில்லையென்றால் வாங்கி முயற்சித்துப் பாருங்கள் - "அடச் ச்சீ" என்ற பேச்சு வழக்க தமிழ் வார்த்தைக்கு கூட ஆங்கிலத்தில் எப்படி கூற முடியும்மென்பதிலிருந்து... நிறைய அருமையான தமிழ் வார்த்தைகள் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
நான் அதிகமாக, தமிழ் எழுதும் பொழுது எழுத்துப் பிழை செய்வதால் இதுதான் எனக்கு தமிழ் வாத்தியார்...

12. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகாராதி

கீழே அடுக்கப்பட்டுள்ள நண்பர்கள் மற்றும் மனிதம் உணர்ந்தவர்கள் எல்லாம் "அடெ ரொம்ப அலட்டிக்காதே தெகா... எல்லாம் சரியா வந்துடுமின்னு" எதார்த்த வாழ்கையை எனக்கு எப்பவெல்லாம் பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கோ அப்பவெல்லாம் இவங்க என்னோட நடக்க வந்திடுவாங்க....

13. நான் நேசிக்கும் இந்தியா - ஓஷோ
14. அன்பெனும் ஓடையிலே... ஓஷோ
15. வெற்றுப் படகு-1 - ஓஷோ
16. வெற்றுப் படகு-2 - ஓஷொ
17. ஞானத்தின் பிறப்பிடம் - ஓஷோ
18. ஞானக் கதைகள் - ஓஷோ
19. மிகவும் தவறாகக் கருதப்படும் மனிதர் - ஒஷோ
20. தந்தரா - ஓஷோ
21. நாரதரின் பக்தி சூத்திரம் - ஓஷோ
22. தேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும் - ஓஷோ
23. நம்பிக்கை நட்சத்திரமாய் - ஓஷோ
24. கடவுள் உங்கள் உள்ளேதான் இருக்கிறார் - ஓஷோ
25. புல் தானகவே வளர்கிறது - ஓஷோ
26. புல் மீண்டும் தானகவே வளர்கிறது - ஓஷோ
26a. தம்பதம் - ஒஷோ
27b. வாழும் கலை - ஒஷோ
27. ராஜ யோகம் - சுவாமி விவேகானந்தர்
28. கர்ம யோகம் - சுவாமி விவேகானந்தா
29. பக்தி யோகம்- சுவாமி விவேகானந்தா
30. ஞான யோகம் - சுவாமி விவேகானந்தா
40. விவேகானந்த இலக்கியம் - சகோதர சகோதரிகளே
41. மனவாசம் - கவிஞர் கண்ணதாசன்
42. கடவுள் இருக்கிறாரா? சுஜாதா
43. ராமாயாணம் - ராஜாஜி
44. மகாபாரதம் - ராஜாஜி
45. திருக்குறள் - கலைஞர் உரை
46. சந்தேகம் தெளிதல் பாகம் 1 & 2 - சுவாமி சித்பவானந்தர்
47. வாரம் ஒரு தகவல் பாகம் 1 & 2 - தென்கச்சி கோ. சுவாமிநாதன்

சில கவிதை புத்தகங்கள், நான் ரசித்து படித்தவர்களின் தொகுப்பிலிருந்து சில....

48. ஞானிகளின் தோட்டம் - கலீல் ஜிப்ரான்
49. தீர்கத்தரிசி - கலீல் ஜிப்ரான்
50. மணலும் நுரையும் - கலீல் ஜிப்ரான்
50a. ஞானக் களஞ்சியம் - கலீல் ஜிப்ரான்

51. பால்வீதி - அப்துல் ரகுமான்

52. கனவுக் குதிரகைகள் - மு. மேத்தா
53. ஒரு வானம் இரு சிறகு -மு. மேத்தா
54. ஊர்வலம் - மு. மேத்தா
55. இதயத்தில் நாற்காலி - மு. மேத்தா

56. வைரமுத்து கவிதைகள் - கி.பி 2000 வரை எழுதிய கவிதைகளின் தொகுப்பு
57. தண்ணீர் தேசம் - வைரமுத்து
58. காவி நிறத்தில் ஒரு காதல் - வைரமுத்து
59. கல்வெட்டுக்கள் - வைரமுத்து

60. ஆயுத பூசை - ஜெயகாந்தன்

61. இனிது இனிது காதல் இனிது - பாலகுமாரன்

மீண்டும் ஆங்கிலத்தில் வாழ்வியல் சார்ந்த ஐயங்களுக்கு இவர்களின் புரிதல்களின் மூலமாக ஏதாவது எனக்கு கிடைக்குமா என்று...

62. An Autobiography of M. K. Gandhi
62a. Apostle of Peace by Swami Satchidananda
63. Autobiography of a Yogi - Paramahansa Yogananda
64. Ageless Body Timeless Mind - Deepak Chopra
65. Buddhism Plain and Simple - Steve Hagen
66. Buddhism - The Global Spirit Libray
67. Conscious Immortality - Sri Ramana Maharshi
68. Cosmology and Creation - the spiritual Significance of -contemporary cosmology by Paul Brockelman
69. Ethics for the New Millennium by Dalai Lama
69a. Encounter the Enlightened by Jaggi Vasudev
70. Ecstatic Flight into Himalayas - G.R. Venkatraman
71. Kailash Journal -Pilgrimage into the Himalayas by Sri Swami Satchidananda
72. Light of Yoga - B.K.S Iyengar
73. None High; None Low by Gandhi
74. Nothing is Impossible - Christopher Reeve
75. Oh, Mind Relax Please - Swami Sukhabodhanada
76. Reason For Hope - A spritual journey by Jane Goodall
77. Richard Hittleman's Yoga
77a. Science of Being And Art of Living (Transcendetal Meditaiton) - Maharishi Mahesh Yogi
78. Shaving The Inside of your skull (Crazy wisdom for discovering who you really are) by Mel Ash.
79. Science and Spirituality Pilani v. Krishnamurthy
80. The Master's Touch - Swami Satchidananda
80a. The Book (On the Taboo Against Knowing Who You Are) by Alan Woods
81. The Goldern Present - Swami Satchidananda
82. Total Freedom - J. Krishnamurthy
83. The Voices of Heaven by Frederik Poh
84. The Master's Touch - Swami Satchidananda
85. The Mind of God - Paul Davies
86. The Art of Happiness - Dalai Lama
87. The Tao of Health, Longevity, and Immortality by Chung and Lu
88. The Way of the Wizard - Deepak Chopra
88a. Ageless Body, Timeless Mind: The Quantum Alternative to Growing Old - Deepak Chopra

89. The Path to Love - Deepak Chopra

90. The Alchemist - Paulo Coelho
90a. By the River Piedra I Sat Down and Wept by Paulo Coelho
90b. Veronica Decides to Die by Paulo Coelho
90c. Zahir by Paulo Coelho
91. The Future of the Body (Exploration into Further Evolution of Human Nature)- Michael Murphy
92. The Ultimate Journey (A Retracing Journey Made Hsuan Tsang) -Richard Bernstein
93. Voice of Himalayas - Swami Sivananda
94. Why Religion Matters - Huston Smith
95. Yoga the Iyengar Way - Silva, Mira and Shyam
95a. The City of Joy by Dominique Lapierre

இப்பெலாம் சும்மா காதல் நவரசம் சொட்டும் காதல் கதைகள், அப்புறம் கத்தியால குத்தினது யாருன்னு கண்டுபிடிக்கிற கதைகள் மேல இருந்த கவர்ச்சி எல்லாம் போய்டுச்சுங்க... இப்ப இந்த மாதிரி சமூக அக்கரை உள்ள அல்லது அறிவியல் விசயங்களைப் பத்தி பேசுற நாவல்கள் மட்டும்தான் வீட்டுக்குள்ள அனுமதி... அவைகளிலிருந்து சில உங்களின் பார்வைக்கு;

96. Out of India (Selected Short Sotries) - Ruth Prawer Jhabhavala
97. Shiva Dancing -by Bharti Kirchner
98. Disclosure by Michael Crichton
99. Timeline by Michael Crichton
100. Airframe - Michael Crichton
100a. The Next - Michael Crichton
101. Tyrannosaur Canyon- Douglas Preston
102. Heat and Dust - Ruth Prawer Jhabvala
103. The Prey by Michael Crichton
104. David Copperfield by Charles Dickens
105. The Great Novels of Thomas Hardy
106. The God of Small Things - Arundhati Roy
107. My Dateless Diary, The Guide, Swami and Friends, The Banyan Tree, Malgudi Tiger - R. K. Narayan (இவரு எழுதின இன்னும் ஒரு சில நாவல்கள் இருக்கு எப்பவேண படிக்கலாம்)
108. The Old Man and the Sea - Earnest Hemingway
108a. The Pearl by John Steinbeck
109b. East, West by Salman Rushdie
109c. Fatal Deception (The untold story of Asbestos) by Michael Bowker

உலகம் போற போக்கை தெரிஞ்சுகிறதுக்கும், அப்புறம் சுற்றுப் புறச் சூழல் மாசுபாடு அதனில் நமது பங்கு பத்தி அறிஞ்சுகிறதுக்கு வீட்டில் உள்ள சில புத்தகங்கள்....

109. Born to Work (Child Labor in India - Neera Burra
110. Siva & Her Sisters (Genders, Caste, and Class in Rural S. India - Karin Kapadia)
111. The World is Flat - Thomas Friedman
112. Longitudes and Attitudes - Thomas L. Friedman
113. Discordant Harmonies (A New Ecology for the Twenty-First Cnetuary)
114. Elephant Days and Night -Dr. R. Sukumar
115. Wild Sex (All ABout Birds and Bees)- Susan Windybank
116. Global Warming - The Green Peave Report Edited by Jeremy L
117. Megatrends Asia - John Naisbitt
118. Thunder From the East - Nicholas D. Kristof & Sheryl WuDnn
119. India Seen Afar - Kathleen Raine
120. The Third Chimpanzee - Jared Diamond
120a. Guns, Germs and Steel - Jared Diamond
120b. Collapse (How Societies Choose To Fall or Succeed - Jared Diamond
121. Health for Peace- Suresh Kulkarni
122. Growing up with two languages - Una Cunningham et al.,
123. The Moral Animal (Why We are the way we are) - Robert Wright
123a. Biopiracy: the plunder of Nature and Knowledge by Vandana Shiva
123b. Fast Food Nation (The dark side of all-american Meal) by Eric Schlosser

யாருக்காவது எப்பாவது உதவுமேன்னு (உதவிடுச்சு முன்னமே...இனிமேலும் பயன்படுமின்னு) வாங்கி படிச்ச புத்தகங்கள்...

124. The Dissociative Identity Disorder - Deborah Bray Haddock
125. Trust After Trauma: A Guide to Relationships for Survivors and Those Who Love Them by Aphrodite Matsakis
126. Men Are from Mars, Women are from Venus - John Gray Ph.D
127. The Wounded Women by Linda Schierse Leonard
128. The Hunger for Ectasy - Jalaja Boheim, Ph.D

சில ஆங்கில தத்துவ ஞானிகளின் புத்தகங்கள் கவிதை வடிவில்...

129. Tears and laughter- Kahlil Gibran
130. Mirrors of the Soul - Kahlil Gibran
131. The Wisdom of Kahlil Gibran
132. Selected Poems of Rainer Maria Rilke

இது மட்டுமில்லாமல் National Geography, Smithsonian Magazineம் மற்றும் Conservation Societyயும் ரெகுலராக வீட்டிற்கு வரும் விசயங்கள், படிக்கத்தான் நேரமில்லை.

மொத்த "என்சைக்கிளோபீடியா பிரிட்டானிக்காவும்," 1956லிருந்து வாங்கப்பட்ட "நேஷனல் ஜியோகிராஃபியும்" எங்களது நூலகத்தில் அடக்கம். இவைகளை மெதுவாக இந்தியாவிற்கு நகர்த்திக் கொண்டு இருக்கிறேன்... அங்கு ஒரு பொது நூலகம் ஒன்று அமைக்கலாம் என்ற எண்ணத்துடன்...

இன்னும் படிப்பதற்கு எவ்வளவோ இருக்கிறது... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சவாரிச் சுமையெல்லாம் இறக்கி வைச்சுபுட்டு அப்புறம் புத்தகங்களோட குடித்தனம் நடத்தணும்மின்னு ஆசையிருக்கு...

கற்றது கைமண்ணளவு... இம்புட்டையும் படிச்சுப்புட்டு எனக்கு கிடைச்ச செய்தி - அன்பு ஒண்ணுதான் அழியாதது அப்படிங்கிறதுதான்.

பி.கு: இப் பதிவு இந்தப் பதிவின் தாக்கமென்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அப்பதிவின் மூலம் ஓர் அழைப்பு விடுத்து, எனக்கு ஞாபகம் மூட்டி இது போன்ற ஒரு பதிவிட வழிகோணியதற்கும், தூசு தட்டி பிறகு அடுக்குவதற்கும் அப்பதிவிட்டவருக்கு எனது நன்றிகள்.

Sunday, May 14, 2006

பின்னூட்ட போராட்டங்கள்...!?

இங்கு வலைப்பதியும் அனைத்து அன்பர்களும் இதனை தயவு செய்து படித்துப் பாருங்கள்...சீனியர், சூனீயர் பாகுபாடின்றி... இமேஜை தள்ளிவைத்துவிட்டு உள்ளே வாருங்கள் அன்பர்களே...

1) இதற்கென ஒரு பதிவு பதிய வேண்டுமென கொஞ்ச நாட்களாகவே எண்ணியிருந்தேன். நானும் சில நல்ல ப்ளாக்குகள் சென்று படித்து வருகிறேன், அங்கெல்லாம் பதிவர் தனது எண்ணங்களை பதிப்பித்த பின், அதற்கு வரும் பின்னூட்டங்கள்தான் அப்பதிவை நிறைவு செய்கிறது. ஆனால்...

2) ஈமெயில் ஐ.டி கொடுத்து தாங்களுக்கு பின்னூட்டமிட மன்மில்லையெனில், the choice is yours. இதில் என்ன இருக்கிறது, அவர் பயன்படுத்தும் சேவையில் அது போன்று வடிவமைத்திருந்தால் அது அப்படியே பயன் படுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கலாம். அதற்காக அவர்களை கீழே தள்ளி பேசுவது நலம் பயக்கா...

3) பின்னூட்டமென்பது ஒரு addictive விசயமல்ல என்பதனை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும், தெரிந்தவர்களின் பதிவுகளை மட்டுமே படிப்பது பின்னூட்டமிடுவது, புதியவர்களாக இருப்பின் நல்ல விசயங்களை முன் நிறுத்தினாலும் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவது, இது போன்ற விசயங்கள் அடி வடிகட்டிய பசலித்தனம் எனலாம்.

4) ஒரு நல்ல விசயத்தை படித்ததும் மனதில் முதலில் என்ன தோன்றுகிறதோ அதனை அப்படியே இங்கே கொட்டி பகிர்ந்து கொள்வதின் மூலம் எழுதியவருக்கும் வாசிப்பவருக்குமிடையே கருத்து பரிமாற்றத்தின் மூலம் தன்னை உள் நோக்கி பார்த்துக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமைகிறது.

5) இங்கு இருக்கும் சில சீனியர் எழுத்தாளர்கள் எல்லா இடங்களில் சிக்கியுள்ள அரசியல், Image பிரச்சனைகள் போல மாட்டிக் கொண்டு உழண்டு கொண்டுள்ளாதாகப் எனக்குப்படுகிறது. இங்கும் அது போன்ற பாகுபாடுகள் தேவைதானா? நாம் ஏன் இப்படி இருக்கிறோம், எனக்குப்புரியவில்லை...

6) அது போல ஒரு மாயை வலையில் சிக்கியிருப்பது நல்ல படைப்பாளிகளை நாம் இழப்பதற்கு வழிகோலளாம். சில நல்ல உள்ளங்களும் இங்கு இருப்பதை மறுப்பதற்கில்லை.

7) இந்த பின்னூட்ட விசயம் பொருட்டு ஒரு தனிப் பதிவிட வேண்டுமென்பது எனது அண்மை காலத்திய எண்ணம், நீங்கள் இங்கு தனிப் பதிவிட்டிருப்பதால் இங்கும் தனிப்பதிவாகவும் (மேலும் சில கருத்துகளுடன் என் பதிவிலும் விட்டுச் செல்கிறேன்.) சீனியர்களும் இமெஜையை சற்று ஒரங்கட்டி வைத்துவிட்டு, எல்லோரையும் வளர்த்து தானும் வளர வேணுமாய் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்ளும் பெயரளவில் உள்ள காட்டான்.

அன்புடன்,

தெக்கிக்காட்டான்.

Monday, May 08, 2006

என்னை புதைக்கிறதா இல்லெ எரிக்கிறதா...?

இந்தப் பதிவு மீண்டும் உங்கள் பார்வைக்கு வைக்க காரணம், இந்த மாதம் நிறைய மத நல்லிணக்க செயல்கள் நிகழ்வதாக உள்ளது... மற்ற மதத்தவர்கள் தன் மதம் சாராத விசயங்களையும் கேள்விகளாக வைத்து தெளிவுரை பெறும் இப்பட்சத்தில், இந்த சமூகம் சார்ந்த பதிவினையும் எல்லா மதத்தினரும் பாரபட்சமின்றி படித்து தாங்களது எண்ணவோட்டத்தை இங்கு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளவே இப் பதிவு மீண்டும் உயிர் ஊட்டப்பட்டு இங்கு கொணரப்பட்டது.

மத நல்லிணக்க வாதிகளே...! வாருங்கள், வந்து தாங்களின் கருத்துக்களையும் படையுங்கள், தெரிந்து தெளிந்து கொள்வோம்...!


இதோ செய்தி:

இன்னைக்கு இன்னொரு முக்கியமான கேள்வி இது ரொம்ப நாளா எனக்குள்ள அரிச்சிக்கிட்டு இருக்கிற கேள்விதான். இங்க இன்னிக்கு கேட்டு வைக்கிறேன். ஆனா, எல்லாருகிட்டயும் இப்பவே அழுத்தம் திருத்தமா ஒண்ணெ சொல்லிடறேன், இது எந்த மத சம்பந்தப் பட்ட விசயமும் இல்லவே இல்லை...

ஒரு சுற்றுச் சூழல் மற்றும் எதிர் கால மக்கட் தொகை பெருக்கம் இவைகளை கருத்தில் கொண்டே இந்தக் காட்டான், இதனை உங்க முன் வைக்கிறேன்.

இப்போ என்ன விசயமுன்னா, நாம எல்லோரும் என்னைக்காவது ஒரு நாள் பொசுக்குன்னு மண்டையை போட்டுடுறோம். அப்போ, மத ரீதியா பொதுவா நாமலோட விருப்பு வெறுப்பின்றி அதப் பின்பற்றி புதைக்கவோ இல்ல எரிக்கப்பட்டோ விடுறோம். இல்லையா?

இதில என்னடா இருக்குகிறீங்கா, இருங்க சொல்றேன், எனக்கு என் உடம்பை எரிக்கிறது தான் நல்ல சுகாதாரமான, பிற்காலத்தில் இடச் சிக்கல் இல்லாம பார்த்துகிறதுக்கும் அம் முறை உதவுதுன்னு கொஞ்சம் நடைமுறைப் படி சிந்திச்சு பார்த்தா தோணுது.

அடடா, எப்படிடா உனக்கும் மட்டும் இந்த மாதிரி சிந்தனை ஓட்டமெல்லாம் வருதுங்கிறீங்களா, சீரியஸ்லி, இது மாதிரி நான் யோசிச்சதிற்கு ஒருத்தரு காரணங்க. அவரு என்னொட எக்ஸ்.மாமனார் (அதென்னடா, எக்ஸ் வொய்ஃப் கேள்வி பட்டிருக்கோம், இது எக்ஸ்.மாம்ஸ், அதானே இது என் எக்ஸ் வோட அப்பா, அப்போ அவரு எனக்கு...:), அவரு சாவுறத்துக்கு முன்னாடி தன்னோட ஆசையா இந்த கோரிக்கையை எங்க முன்னாடி வைச்சுட்டு அதற்கு என்னக் காரணம் அப்படிங்கிறதையும் சொல்லிட்டு செத்துப் போனாரு.

இது நடந்தது அமெரிக்காவில, அவரு ஒரு வெள்ளைக்காரர். பொதுவா இங்கே எல்லோரும் தன்னை புதைக்கறதத்தான் விரும்புவாங்க, இல்லையா. கொஞ்சம் படிச்சவங்க, விபரம் தெரிஞ்சவங்க இப்படித்தான் தன் வாயலேயே தன்னோட உடம்பை எரிக்கிறதா இல்ல புதைக்கிறதா அப்படின்னு சொல்லி வைச்சுடறங்க.

ஐ லைக் தட் ஸ்டைல்! அவரு சொன்ன காரணத்தையே இங்க உங்ககிட்ட சொல்றேனே, மாம்ஸ் சொன்னாரு நம்மை புதைக்கிறதுக்கு ஒரு இடத்த பணம் கொடுத்து ஆசையா வாங்றோம், அங்க வைச்சாச்சுன்னா அப்புறம் எத்தனை செஞ்சுரி ஆனாலும் என் பேரக் குழந்தைங்க அங்கேயிருந்து என் கல்வெர்ட்-அ நகர்த்த விடமாட்டங்க எதிர்காலத்தில என்ன வச்ச ஊர் எவ்ளோ வளர்ச்சி அடைஞ்சாலும். அப்போ, நான் செத்துப் போயும் மத்தவங்களுக்கு இடைஞ்சலாத்தனே இருக்கேன் அப்படின்னு, ஒரு நியாயமான கேள்விய கேட்டு வைச்சாரு. எனக்கும் நியாயமா பட்டுது.

இப்ப ஒரு சின்ன தீவு மாதிரி இடங்களா எடுத்துக்குவோம், சரி, நியு Zலாந்த எடுத்துக்களாம், அப்பதான் நாம்மோட நண்பர் துள்சிங்க வந்து சொல்வாரு அங்கே என்ன பண்றங்க பெரும்பாலும் அப்படின்னு. அந்த மாதிரியான தீவுகளில் இப்படி கல்லறைங்களா நிறைய இடங்கள் ஆகிப் போன அப்புறம் எப்படி பின்னாலில் வளர்ச்சிப் பணிகள் எல்லாம் பார்துப்பாங்க? இடப் பற்றாக்குறை வராதா?

இப்ப நான் இருக்கிற ஊர் ஒரு சின்ன டவுனா இருந்துச்சு ஒரு ஐந்து வருசத்துக்கும் முன்னாலே வரைக்கும் இப்ப ஜன நெரிசல் தாங்கலே, அட ஆளுக்கு ஒரு காரவைச்சுகிட்டுதான், ட்ராபிக் ஜாம் எங்க பார்த்தாலும், சினிமால காட்டும் போதும், இந்தியாவிலிருந்து பார்க்கும் போதும் ஆசையா இருந்துச்சு ஆனா அத செஞ்சு பார்க்கும் போது பகப் பகன்னு உடம்பெல்லாம் பத்திக்கிட்டு எரியுது, தினமும் பண்ணும் போது.

நான் போயிட்டு வந்துகிட்டு இருக்கிற சாலை வந்து நான்கு லேன் சாலை, இரண்டு ஒவ்வொரு வழியிலும், இப்ப அது பத்தலெ, சாலையை விரிவு படுத்துறாங்க, அப்படிப் படுத்தும் பொழுது ஒரே ஒரு சிக்கல் ஒரு இடத்துல மட்டும். ஒரு அரை கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு graveyard இருக்கு நிறைய கல்லறைங்களோட. அங்ஙன வந்தவுடன் அப்படியே வேலை நின்னுப் போயிகிடக்கு. நாங்க ட்ராபிக் ஜாம்ல, ஹாய்ய ஏ.சி போட்டுகிட்டு 3 டாலருக்கு பெட்ரோல் (1 காலன்) போட்டு எரிச்சுகிட்டு மூணு மைல கடக்க 25 நிமிஷத்துக்கு மேல எடுத்துக்கிட்டு (எந்த ஈராக் புள்ளை சாவுதோ அதுக்கு, நமக்கென்ன).

அங்கதான் தோன்றினது, இந்த கேள்வி இன்னும் அழுத்தமா, இங்க கொண்டுவந்து அத எழுப்புற வரைக்கும். அந்த காலத்து இந்தியர்கள் ரொம்ப சுமார்ட் மக்கள்னு நினைக்கிறேன். ரொம்ப யோசிப்பாங்க போல, பிராக்டிகலா!

அட நீங்க என்னங்க நினைகிறீங்க, இதைப் பத்தி...

Related Posts with Thumbnails