இந்த சதுப்பு நிலக் காட்டில் காணப்படும் மர வகைகள் தில்லை (Exoecaria agallocha) நரிக்கந்தல் (Aegicerous corniculatum) , நீர்முள்ளி, அலையாத்தி (Avicennia marina) மற்றும் தண்டல். இவைகளில் அலையாத்தி மற்றும் தில்லை மர வகைகளே மிகவும் அதிகமாக காண முடிந்தது. இருப்பினும் இந்தக் காட்டிலும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் சேர்த்து 61 வகையான தாவர வகைகள் அறியப்பட்டுள்ளதாம். (இங்க எப்படி வந்துச் சேர்ந்தோமென்று புரியாம, முழிச்சிங்கன்னா முதல்ல இதப் படிச்சிட்டு வாங்க ... முத்துப்பேட்டை லகூன் இயற்கையின் ஓர் அதிசயம்: Muthupettai Lagoon)
அங்கு வாழும் தாவரங்களின் வேர் அமைப்பு, நாம் சாதாரணமான நிலப் பரப்பில்
காணும் தாவரங்களின் வேர் அமைப்பைக் காட்டிலும் முற்றிலுமாக வேறுபட்ட முறையில் அமைந்திருப்பதனைக் காணலாம். நீரும், சேறுமாக எப்பொழுதும் வேர்ப் பகுதி மூழ்கிய நிலையில் இருப்பதால் உபரியாக அந்த தாவரங்கள் வேர்களை வெளிச் செலுத்தி (stilt roots) சுவாசிப்பதற்கெனவும், தேவையான போஷாக்குகளை பெறுவதற்கெனவும் அமைத்துக் கொள்கிறது. இது போன்ற வேர்கள் அந்த வனங்களின் தரைப் பரப்பு முழுவதிலும் வெளிக் கிளம்பி இருப்பதே கண்ணுக்கு விருந்தாகவும், மனதிற்கு எல்லையற்ற ஆச்சர்யத்தை
வழங்குவதாகவும் அமையக் கூடும்.
அவைகள் மட்டுமின்றி (13 வகையான) பாலூட்டி இன விலங்குகளில் ஜக்கால் (நரி), காட்டு முயல், கீரிப் பிள்ளை இங்கு அடிக்கடி காணப் படும் விலங்குகள்.
'தலைமை முனை' என்ற இடத்தில் அமைக்கப் பட்டிருந்த ஓய்வு மேடைக்குப்
பக்கத்தில் ஒரு திறந்த வெளி இருப்பதனைக் கண்டு, சற்று நேரம் அதனைப் பார்த்தவாறு அமர்ந்து விட்டுச் செல்வோம் என்று கூறி அமைத்திருந்த பெஞ்சில் நான் கட்டையை சாய்த்து விட்டேன். எனக்குள்ளர ஒரு சின்ன ஆசை; அதிர்ஷடமிருந்து ஏதாவது நரி வெளியே வந்தா இந்த திறந்த வெளியில வைச்சுப் பார்க்கலாமேன்னு.
அப்படி இப்படின்னு படகு ஓட்டின மீனவர் மற்றும் வாட்சர் ரெண்டு பேரும் நாங்க உட்கார்ந்திருக்கிற இடத்தில இருந்து ஈழ பூமி எத்தனை தூரம் என்ற வாக்கில் எங்களிடம் பேசப் போக அது எங்கங்கோ நகர்ந்து அப்படியே எப்படி சாமான்ய மக்கள் இந்த ஈழம் சார்ந்த நம் துரோகங்களை அவதானித்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கிணங்க 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு' உதாரணமாக பேசியவற்றை கேட்ட படியே சற்று இளைப்பாறினோம்.
அப்படி இப்படின்னு படகு ஓட்டின மீனவர் மற்றும் வாட்சர் ரெண்டு பேரும் நாங்க உட்கார்ந்திருக்கிற இடத்தில இருந்து ஈழ பூமி எத்தனை தூரம் என்ற வாக்கில் எங்களிடம் பேசப் போக அது எங்கங்கோ நகர்ந்து அப்படியே எப்படி சாமான்ய மக்கள் இந்த ஈழம் சார்ந்த நம் துரோகங்களை அவதானித்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கிணங்க 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு' உதாரணமாக பேசியவற்றை கேட்ட படியே சற்று இளைப்பாறினோம்.
திடீரென்று வாட்சர், "சார் நரி... சார் நரி" வந்து
எட்டிப் பார்த்துச்சு அங்கே... அங்கேன்னு ஹஸ் பண்ணினார். வாரிச் சுருட்டி கேமராவை ட்ரைபாட்டில் பொருத்தி விட்டு, எல்லார் வாயய்க்கும் என் வாயாலேயே ஒரு அமைதி பிளாஸ்திரி ஒன்னு போட்டுட்டு அந்தத் திசையை நோக்கி ஆவலோடு எதிர்பார்த்துட்டு இருந்தோம். நரித் தலைவரு, மெதுவா பொறுமையா இருந்து, இருந்து பார்த்திட்டு இவிங்க இப்போதைக்கு தொலைய மாட்டாய்ங்கப்பான்னுட்டு மெதுவா எட்டிப் பார்த்துச்சு. பிறகென்ன, கேமராக் கண்களைக் கொண்டு பொடெர், பொடெர்னு அவரோட ஒவ்வொரு இயக்கத்தையும் சுட்டு எடுத்துட்டேன்ல.
தலைவரு, நண்டை ஓடி ஓடித் தேடினார். அங்குமிங்குமா,எனக்கு மட்டும் அப்பப்போ நிமிர்ந்து போஸ் கொடுத்துட்டே. எல்லார் முகத்திலும் ஒரே சந்தோஷம்!
தலைவரு, நண்டை ஓடி ஓடித் தேடினார். அங்குமிங்குமா,எனக்கு மட்டும் அப்பப்போ நிமிர்ந்து போஸ் கொடுத்துட்டே. எல்லார் முகத்திலும் ஒரே சந்தோஷம்!"சார், எத்தனையோ முறை வந்திருக்கோம், ஆனா, இது மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சதில்ல உங்களுக்கு செம லக் சார்" அப்படின்னு வேறச் செல்லி உசுப்பு ஏத்தினாங்க இரண்டு பேருமா சேர்ந்து. இருந்தாலும், கேமராவிற்குள் எனக்கு செம வசுல். மற்றதை புகைப்படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க.
பதிவை முடிக்கிறதுக்கு முன்னாடி சில ஃபாக்ட்ஸ். இந்த சதுப்பு நிலக்காடுகள் இயற்கையின் அமைப்பில (eco system) ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் வாழ்விடமும் அதனைச் சார்ந்து வாழும் உயிரினங்களுக்கும், மனிதர்களுக்குமென பல வகையில் உபயோகமாக இருக்கிறது. அண்மையில் நடந்தேறிய சுனாமியின் பாதிப்பு கூட எங்கெல்லாம் இந்தக் காடுகளின் அடர்த்தி அதிகமாக இருக்கிறதோ அங்கே சற்றே சுனாமி அலைகளின் தாக்கம் குறைவாகவே இருந்திருப்பதாக அறியப்படுகிறது.
கண்டிப்பாக மக்களாகவே இந்த வனங்களின் முக்கியத்துவம் அறிந்து, அவைகளைப் பாதுகாக்க முன் வர வேண்டும்.
நான் லகூனில் மிதக்கச் சென்ற நாளன்று என் கண்ணில் சிக்கிய பறவைகளின் பட்டியல்:
1. Common Hoopoe (Upupa epops)
2. Koel (Eudynamys scolopacea)
3. Indian Roller (Coracias benghalensis)
4. Small Blue Kingfisher (Alcedo atthis)
5. White-breasted Kingfisher (Halcyon smyrnensis)
6. Small Bee-eater (Merops orientalis)
7. Rose-ringed Parakeet (Psittacula krameri)
8. Asian Palm Swift (Cypsiurus balasiensis)
9. Spotted Dove (Streptopelia chinensis)
10. Red-wattled Lapwing (Vanellus indicus)
11. Brahminy Kite (Haliastur indus)
12. Large Egret (Casmerodius albus
13. Cattle Egret (Bubulcus ibis)
14. Indian Pond Heron (Ardeola grayii)
15. House Crow (Corvus splendens)
16. Black Drongo (Dicrurus macrocercus)
17. Common Myna (Acridotheres tristis)
18. Red-vented Bulbul (Pycnonotus cafer)
19. White-headed Babbler (Turdoides affinis)
20. House Sparrow (Passer domesticus)
21. Large Pied Wagtail (Motacilla maderaspatensis)
22. Indian Cormorant (Phalacrocorax fuscicollis)
23. Little Cormorant (Phalacrocorax niger)
P.S: Further reading:


அதுவே எனது முதல் கழிமுகத்துவார நீர் நிலை மற்றும் தாவர வகைகளுக்கூடான படகுப் பயணம். இருப்பினும் என்னுடைய முந்தைய வாசிப்புகளும், சதுப்பு நிலக் காடுகளைப் பற்றியான பொது அறிவும் ஏற்கெனவே அந்த இடங்களுக்குள் பிரயாணித்ததனைப் போன்ற பிரமையை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும், ஒவ்வொரு முறையும் இயற்கை வனங்களுக்குள் பிரவேசிக்கும் பொழுதும் ஆச்சர்யங்களுக்கு அளவில்லை என்பதனால், மனம் எதனை நாம் இந்தப் பயணத்தின் மூலம் இன்று சந்திக்கவிருக்கிறோமோ என்ற எதிர்பார்ப்பை தூவாமல் இல்லை.