Wednesday, November 07, 2018

அரை வேக்காட்டு சர்கார்: Crews with a mission!

இந்த இட ஒதுக்கீடும், இலவசங்களும்தான் தமிழகத்தை முன்னேற விடாமல் பிகாருக்கும், உத்திரபிரதேசத்திற்கும் சொல்லப் போனால் மேலைய நாடுகளையொத்த வாழ்க்கைத் தரத்தில் வாழும் வட இந்திய மாநிலங்களை விட படு கேவலமாக பொருளாதார, சுகாதார, கல்வி மேம்பாடுகளில் பின் தங்கிக் கிடக்க காராணமாகி இருக்கிறது; என்பதைப் போல பல பிள்ளை பிடிக்கிகள் கூறி நெருங்குவார்கள்...
இந்த இனிப்பு தடவிய நச்சு லேகியத்தை எவன் கொடுத்தாலும் அவர்களுடைய வாயிக்குள்ளரயே வைச்சு திணிச்சிடறது மேலும் அந்த லேகியம் பரவலைத் தடுக்கும்.
கேள்வி: இலவசங்கள் ஏழைகளை காப்பாற்றவா அல்லது, அவர்களை மேலும் சோம்பேறிகளாக்கவா?
பதில்: இந்த கேள்விக்கு தானே பதிலைடைஞ்சிகணும்னா, உண்மையான சமூக அறிவியலும் அதனையொட்டிய இயலாத மக்களின் உளவியலையும் ஒரு சேர உள்வாங்கினா பதில் கிடைக்கும்.
எப்படின்னா, தனிமனிதனை (குடும்பத்தை) ஆற்றல்படுத்துவது (empowering) என்பது ஒரு நாள் மட்டும் மேடை போட்டு மக்களை உற்சாகப் படுத்துவதோ அல்லது பள்ளி, கல்லூரி மேடைகளை ஆக்ரமித்து ராமாயண, மகாபாரதக் கதைகளை ஒப்பித்து சிறார்களை மூளைச் சலவை செய்வது போலவோ அல்ல!
சமூக சமன்பாட்டு நிலையை எட்டுவது என்பது மக்களின் தினப்படி வாழ்க்கையில் சில உளவியல் மாற்றங்களை உருவாக்கத்தக்க சொல்லாடல்களை ஏற்படுத்திக் கொடுப்பது, அதற்கான உபகரணங்களை எட்டும் தூரத்தில் நகர்த்தி வைப்பதுமாகும்.
இந்த சாத்தியங்கள் ஒரு நாள் ச்சீயர் லீடிங் செய்து விட்டு நகர்ந்து போய்விடுவது கிடையாது. தினப்படி வாழ்க்கை பயன்பாட்டில் இரண்டர கலப்பதால், கூட்டு சமூகத்தின் உளவியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அவ்வாறு ஒரு சமூகமே அந்த திசையில் பயணிக்க ஆரம்பிக்கும் பொழுது அதன் வெளிப்பாடாக சுகாதார, கல்வி ஏனைய சமூக முன்னேற்றம் சார்ந்த விடயங்களில் மக்கள் விழிப்புணர்வடையும் சாத்தியக் கூறுகளை நோக்கி நகரும்படியாக கதவு திறந்து விடப்படுகிறது.
இலவசங்கள், உண்மையில் அது இலவசங்கள் கிடையாது. மக்களின் வெல்ஃபர் சார்ந்த நலத்திட்டங்களை நேரடியாக மக்களுக்கு எடுத்துச் சென்று சேர்க்கும் ஓர் அரசின் அணுகுமுறைதான்.
இப்போ தமிழகம் எந்த அளவில் ஏனைய இந்திய மாநிலங்களைக் காட்டிலும் அடிப்படை கட்டமைப்பு துறைகளில் பின் தங்கிக்கிடக்கிறது? இவையெல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது.
கூறாய்ந்து பார்த்து நீங்களே கண் திறந்து பார்த்தால் ஒரு தேசமாக உலகரங்கில் உயரவும், மற்ற மாநிலங்களையும் சற்றே நாகரீகமடைந்த மாநிலங்களாக்கி மேலெழுப்பிக் கொள்ளவும் உதவலாம்.

வியக்க வைத்த டாக்டர் கலைஞர்: A rare of a kind


ஓர் அதி சிறந்த மூளையால் என்ன செய்து விட முடியும்? சமூகத்தில் நிகழும் ஏற்றத்தாழ்வுகளை, அதன் தேவைகளை நுட்பமாக அவதானிக்க முடியும். அதற்குப் பிறகு மிகக் கடுமையான உழைப்பிற்குப் பின்னால் தன்னை படிப்படியாக நகர்த்தி ஒரு சமூகத்தையே எதிர் காலத்தில் புரட்டிப் போடும் திட்டங்களை 18 மணி நேர கடின உழைப்பின் பேரில் திட்டம் தீட்டி அதனை மனதிற்குள் அடைகாத்து வைத்து தனக்கு கிடைக்கும் சொற்ப காலத்திற்குள் அதற்கு செயல் வடிவம் கொடுக்கும்.
ஆனால், அதற்கும் ஏகப்பட்ட தடைக்கற்கல் போடப்படும் நேரடியாகவும்மறைமுகமாகவும் என்பதனை மறந்து விடக் கூடாது. எப்போதாவது நீங்கள் யோசித்தது உண்டா? தொலை நோக்கு பார்வையோடு பரந்து பட்டு எல்லா மனிதர்களுக்கும் சென்றடையும் திட்டங்களை இயற்றும் எந்த ஒரு தலைவனும் நிகழ்காலத்தில் அதிகமாக வெகுஜன மக்களை சென்றடைவது கிடையாதே அது ஏன்? என்று கேள்வி கேட்டுக் கொண்டதுண்டா?
மேம்போக்கான மனிதர்களை சென்றடையும் "லாலிபப்" திட்டங்கள் ஓர் உடனடி நிறைவுத் தன்மையை எட்டி, அதனை விட இன்னும் பெருமளவிலான திட்டங்களை எட்டுவதை மட்டுப்படுத்துவதற்கான ஒரு கால விரைய தலைவர்களை கொண்டு சமூகத்தையே பின்னோக்கி இழுத்து பிடித்து வைத்திருக்கவும் முடியும் என்பதையும் நாம் உணர வேண்டும்.
அதுதான் புர்ச்சி தலைவரும், தலைவியும் செய்த அரசியல். இன்றைய எடுபுடி தலைவர் அளவிற்கு தரம் தாழ்ந்து விடாமல் இருக்க அந்த புர்ச்சி தலைவர்களை, அந்த நுட்பங்களை உணர்ந்த அதி மூளை, அவர்களை பாதையில் கொஞ்சமேனும் ஒட்டி நடக்க வழி நடத்தி இருக்க முடியும் என்பதையும் நாம் உள்வாங்கி கொள்ள வேண்டும்.
ஏனெனில் நீங்கள் ஒரு நிழல் அரசாங்கத்துடன் சமரிட்டுக் கொண்டே உங்களுடைய இலக்கை அடைய முயற்சிக்கிறீர்கள் என்பதை மறந்து விடக் கூடாது.
இத்தனை சூழ்ச்சிகளுக்கிடையிலும் தன்னை தக்க வைத்துக் கொண்டு ஓரளவிற்கு இன்று நீங்கள் இருக்குமிடத்திற்கு நகர்த்தி வைத்திருக்க உதவிய அந்த அதி சிறந்த மூளைதான் கலைஞர்.
உதாரணத்திற்கு, அவரால் சிந்தித்து ஆசியாவிலேயே ஒரு சிறந்த கால் நடைகளுக்கான ஆராய்ச்சி மையத்தை, தமிழுக்கான ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தை, மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரிகள் என அடிப்படை கட்டுமானத்தை உருவாக்கித் தரத்தான் முடியும்.
அதனை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்வது என்பது, அவரின் தொலை நோக்குப் பார்வையை உள்வாங்கிக் கொண்ட மக்களாகிய நம்முடைய பொறுப்பு.
வாட்சப் மட்டுமே ஜர்னல்ஸ், என்சைக்ளோபீடியா, அரசியல் திறனாய்வுக் கட்டுரைகளை வழங்கும் மாபெரும் வாசிப்பிற்கான ரிசோர்ஸ் என்று கருதி, பொய் பரப்புரைகளுக்கு தானும் இரையாகி அடுத்தவர்களையும் இரையாக்க தூண்டுவது அறியாமையின் உச்சம்.
அது அரசியல் அரிச்சுவடியே இன்னும் கையில் ஏந்தவில்லை என்பதற்கான லிட்மஸ் என்பதாக புரிந்து கொள்கிறேன்.

முட்டிக்கொண்டு நிற்கும் தமிழ் தேசியம்!


பெரியாரும், அண்ணாவும் தனி நாடு அடைகிறோம்னுதிராவிடஅடையாளச் சொல்லை தவறாக பயன்படுத்தி தெலுங்கர்களும், கன்னடியர்களும், மலையாளிகளுக்கும் பயன்படும் வண்ணம் செய்து விட்டு தமிழர்களை வஞ்சித்து விட்டார்கள்; என்பதாக, தமிழ் தேசியம் பேசுபவர்கள், அடைந்திருக்கும் உயரங்கள் அனைத்தையும் கேலியும், கிண்டலும் பேசி ஆரியத்தை சுத்தமாக துடைத்தெரிய வேண்டியவர்கள் இன்று ஒன்றாக குடித்தனம் நடத்துகிறார்களே என்ற அளவிலே புலம்புகிறார்கிறார்களே... எனக்கு என்ன புரியலன்னா, இவர்களுக்கு என்னதான் வேண்டும். ஈழம் போன்ற ஓர் உள்நாட்டு யுத்தமா?
தமிழ் தேசியத்தை எப்படி அடைவது? இந்தியா என்ற யூனியனுக்கு கீழே இருந்து கொண்டே? தனி நாடு அமைப்பதா? அமைப்பதெனில் எப்படி? தனிப் படை அமைத்து இஸ்ரேல்/அமெரிக்காவிலிருந்து ஆயுதங்கள் இறக்குமதி செய்து மேற்கு மலைத் தொடர்ச்சி மழைக்காடுகளிலிருந்து யுத்தம் செய்து அடையலாமா?
நடைமுறையில் எப்படி ஆரியம் இரண்டாயிரம் ஆண்டுகள் "அகண்ட" பாரதத்தில் உங்களையும், என்னையும் மூளைச் சலவை செய்து இப்போது அடைந்திருக்கும் உயரத்தைக் கூட அடையவிடாமல் வைத்திருந்தது? அந்த சூழ்ச்சியை விட எதிர் அரசியலுக்காக இனக்கலப்பின் வழி நிறம்மாறி இருந்தாலும், ஓரளவிற்கேனும் இன்னும் சில மரபணுக்களை தூக்கிச் சுமக்கும் நமக்கு பிழைத்துக் கிடக்க வேணும் இந்த அடையாள அரசியல் தேவை இல்லையா?
சிலோன் அளவிற்கெல்லாம் இப்பொழுது மாஸ் பர்ரியல் செய்து கொள்வது உகந்தது அல்லவே. கொஞ்சம் யோசித்து காலத்திற்கு தகுந்தது மாதிரி பிழைக்கிற வழிய கொஞ்சம் சொல்லிக் கொடுங்க.
This is what the most recent evolutionary biological studies suggest...
...It is not the strongest of the species that survive, nor the most intelligent, but the one most responsive to change.
~Charles Darwin

Monday, May 07, 2018

ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்: மனிதர்களைக் கற்போம்!

என்ன படித்து, எத்தனை நாடுகள் சுற்றி, எவ்வளவு சாமி கும்பிட்டு என்ன பயன். என்றேனும் ஒரு நாள் நாம் ஒரு சராசரி மிருக குணங்களைக் கொண்ட மனிதன் தான் என்று தன்னைப் பற்றிய சுவடை விட்டு விட்டுச் செல்லும் நாளும் வருகிறது தானே!
நான் ஒரு முறை கருப்பர்களும், செவ்விந்தியர்களும் தாங்கள் எதற்காக இத்தனை வலிகளுனூடாக அலைக்கழிக்கப்பட்டு கொல்லப்படுகிறோம் என்று தெரியாமல் செத்து மடிந்த வரலாற்று பாதையின் ஊடாக பயணம் ஒன்று மேற்கொண்டேன்.
அந்தப் பயணத்தின் இறுதி இலக்காக அமைந்து போனது க்ராண்ட் கன்யான், அரிசோனா. அந்த பூகோளத்து மலைச் சுவடுகளின் மீதாக நின்று கொண்டு பரந்து விரிந்து கிடந்த பள்ளத் தாக்குகளை நடுக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது மாலை மங்கி, சூரியன் கூடடையும் நேரத்தில் அங்கு வந்திருந்த ஒரு சிவப்பிந்தியர் புல்லாங்குழல் ஒன்றை வைத்து வாசித்து பெரும் பாரத்துடன் அந்த சூரியனை வழி அனுப்பினார்.
அது மேலும் சுமையை இரட்டிப்பாக்கியது. மற்றுமொரு சிவப்பிந்திய பெண்ணுடன் பேசும் பொழுது, எங்கெல்லாம் இந்தப் பரப்பில் உங்களுடைய முன்னோடிகள் வாழ்ந்தார்கள் என்று வினவினேன். அதற்கு அந்தம்மா, அவர்கள் எல்லா இடங்களிலும் இருந்திருப்பார்கள், இருக்கிறார்கள் என்றார். அதாவது அந்த பள்ளத்தாக்கின் சரிவான மலைப் பிளவுகளில் கூட வாழ்ந்திருக்கிறார்கள் என்றார். என்னால் என்னுள் எழுந்த மலைப்பை விலக்கி வைக்கவே முடியவில்லை.
எதனை அவர்கள் தங்களுக்குப் பின்னால் விட்டுப்போக இப்படி ஒரு கடினமான தட்ப வெப்ப சுற்றுப் புறச் சூழலில் வாழத் தலைப்பட்டிருக்க முடியும் என்ற எண்ணம் என்னை வதைக்கத் தொடங்கியது? அவர்களைப் பற்றி மென்மேலும் வாசிக்க வாசிக்க அவர்கள் வரலாற்றில் செய்த மிகப் பெரிய பிழை, அன்னிய மனிதர்களை நம்பியதும், இயற்கையை அளவுக்கு மீறி காதலித்ததுமே காரணமென்பதாக இருந்தது. நிலத்தின் மீது சிறிதும் பற்றற்று அத்தனை பெரிய நிலப்பரப்பில் வாழ்ந்திருக்கிறார்கள்.
பிரிதொரு நாள் வெள்ளையர்கள் வந்து, மூத்த குடிமக்களிடம் நிலச் சுரண்டல் செய்ய ஆரம்பித்து, எழுதி வாங்க பேனா நீட்டும் போது கூட நகைத்துக் கொண்டே “சுப்ரீம் ஃஸ்பிரிட்டோட” இடத்தை யார், யாருக்கு எழுதி கொடுப்பது என்று எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.
இது போன்ற ஒரு கூட்டம் இந்த பூமிப் பந்தில் இருக்க தகுதியானதா? விட்டு வைப்பார்களா? இடப் பற்றாக் குறையாலும், மக்கள் தொகை பெருக்கத்தாலும், வறுமை, நோய், பசி, பட்டினி என்று மரணித்துக் கொண்டிருக்கும் ஒரு காடையர் கூட்டம், அனைத்தும் லாகவமாக அமைந்து போன ஒரு புதிய இடத்தை கண்டதும், இது போன்ற அப்பாவி மனிதர்கள் இதனை அனுபவிப்பதைப் பற்றி என்ன நினைத்திருக்கக் கூடும்? சூழ்ச்சியாலும், வஞ்சகத்தாலும் கூடிப் பழகியும், பிரிந்து சூழ்ந்தும் அழிதொழித்து விட்டார்கள்.
இயற்கையோடு ஒன்றித்து பேராசை எனும் பேயை அடக்கி வாழ்ந்த ஒரு பெரும் கூட்டம் தன்னுடைய அழிவின் விளிம்பில் கண்டதெல்லாம், வலி, வலி, வலி மற்றும் சாக்காடு.
போலவே, நம்முடைய நிலப்பரப்பிலும் அப்படியானதொரு கூட்டம் கூடி களித்து, சேர்ந்து, பிரிந்து என்று பல அரிதாரங்களை பூசி வரலாறு தோரும் கூடவே நடந்து வருகிறது. சூழ்ச்சியும், வஞ்சகமும் எப்படியோ ஒரு மூலையில் எச்சமாக இருந்து கருகருவென காலத்திற்காக காத்திருந்து நம்பிப் பழகுபவர்களை சாய்த்து விடுகிறது. வரலாற்று புத்தகங்களை புரட்டும் பொழுது டையரி குறிப்புகளாக கிடைக்கும் வலி மிகுந்த முனகல்களை, வரிகளுக்கிடையே வாசிக்கும் பொழுது நமக்கு அவைகள் ஒரு சங்கேத குறிப்பாக கிடைக்கப்பெறுகிறது.
இன்று நாம் அழுது புலம்பும் அத்தனையும் ஏற்கெனவே அந்த வஞ்சகத்திற்கும், சூழ்ச்சிக்கும் இரையாகிப் போன நம் முன்னோடிகளின் வலி மிகுந்த முனங்கல்தான். மீண்டும் மீண்டும் அதே பாசத்தில் வழிக்கி வழிக்கி விழுந்து கொண்டே இருக்கிறோம். ஏனெனில் அந்த நோயின் மூலக் கூறு நானோ பார்டிகில்ஸ்களுக்கு இணையானது. உள்ளிருந்தே மெள்ளக் கொல்லக் கூடிய வாக்கில் பாவனையாக்கப்பட்டிருக்கிறது.
ஒரு எதிரியின் குணம் தன்னிருப்பை அறிவித்து விட்டு நேருக்கு நேராக சந்திப்பது. ஒரு ஒட்டுண்ணியின் குணம் சார்ந்திருந்து மெல்ல அனுபவித்துக் கொண்டே கொல்லுவது. இதில் இரண்டாவது ரகம் நம்மை ஆரோக்கியமாக வாழவே விடாது. நோஞ்சானாக நம்மை வைத்து தனக்குத் தேவையானதை அடைந்து கொள்வதற்கான அத்தனை தகவமைவுகளையும் பெருக்கிக் கொள்ளும். நோய் கூறு அறிந்தாலே ஒழிய இதற்கு வைத்தியமே இல்லை.
நம்முடைய சமூகத்தின் சாபக்கேடு இது. சிவப்பிந்தியர்கள் ஓரளவிற்கு நேராடியான எதிரியை நிராயுதபானிகளாக சந்தித்தார்கள். போராடினார்கள், மாண்டார்கள். ஆனால், நாம் எதிர் கொள்ளும் ஒட்டுண்ணிகளோ பச்சோந்தித் தனமானது, கூடவே இருந்து நிறத்தை மாற்றி இரண்டர கலந்து விட்டது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சற்றே தனது இருப்பை புரண்டு காமித்தாலும், மீண்டும் தேவையானதை அடைந்து கொண்டு ஹைபர்னேசன் மோடிற்கு சென்று விடுகிறது. என்னதான் செய்வது.
விசயத்திற்கு வாரேன். பல ஆண்டுகளாக நானும் ப்ரீ மெச்சூர்டாக வயசுக்கு வந்திட்டதாக அறிவிச்சிக்க வேண்டாம்னு காலம் கொடுத்து கொடுத்து ஒவ்வொரு கதவா தட்டித் தட்டி மாதிரி எடுத்துப் பார்க்கிறேன், ஒண்ணு சொன்ன மாதிரியே அந்த குணம் ஏதோ ஒரு பாயிண்டுல வெளிக்காமிச்சிடுது.
இப்பொழுது நீட், நுழைவுத் தேர்வு, வெறுப்பு அரசியல், காவேரி நதி நீர் பங்கீட்டு விசயம்னு நடக்கிற அனைத்து சமூக நீதி சார்ந்த விசயத்திலும் கொலகாரத்தனமாக எதுவுமே தவறாக தெரியாமல், முட்டுக் கொடுத்து ஒண்ணுமே தெரியாத அப்பாவிகளாக அதே நேரத்தில் தெளிவா எடுக்கிற நிலையைப் பார்த்து, நான் வயசுக்கு வந்துட்டேன்னு அறிவிச்சு கதவை இழுத்து சாத்திக்கலாம்னு ஒரு முடிவிற்கு வந்திருக்கேன்.
அன்பர்களே, நீங்கள் எனக்கு நிறைய கத்துக் கொடுத்திருக்கீங்க. அதெல்லாம் பெரும் வாசிப்பினாலே நீங்களே எடுத்த முடிவா, இல்ல நான் டவுசர் போட்டுக்கிட்டு நாலாப்பு படிக்கும் போது, அதே வகுப்பில நீங்க இருந்தாலும் பத்தாப்பு படிக்கிற அளவிற்கு உலகறிவு புகுத்தப்பட்டு வெளிக்கிடுறீங்களான்னு தெரியாது. ஆனா, இது நானாவே விரலை சுட்டுச் சுட்டு கத்துகிட்டது. நாய் வால நிமிர்த்த முடியாதுன்னு!
சிவப்பிந்தியர்களுக்கும் நம் முன்னோடிகளுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிது. ஆனா, அது காலவதியாகிப் போனது. மூளையை பலப்படுத்தணும், சூழ்ச்சி வெல்லும்!

Friday, May 04, 2018

புதன் கெரகத்திற்கு ஆள் எடுக்கிறோம்: கொச்சைப் பதிவு!

ஊர்க்காட்டில ஒரு சொலவடை உண்டு ”பிச்சை எடுத்துச்சாம் பெருமாளு அதை தட்டிப்பிடிங்கினிச்சாம் அனுமாருன்னு.” அப்படி இருக்கிறது கதை.
ஒரு காலத்தில் சென்னையில அமெரிக்கன் கன்சூலேட்லயே வைச்சு நிரந்தரமா அமெரிக்காவிற்கு குடியேற்றதிற்கும் நேர்க்காணல் செஞ்சு விசா கொடுத்தாங்க. இப்போ அந்த சர்வீசை சென்னையில நிப்பாட்டிட்டு மும்பாய்க்கு எடுத்திட்டு போயிட்டாங்க.
ஏற்கெனவே அமெரிக்கா குடியுரிமை வழங்கும் கன்சூலேட் மற்றும் எம்பசிகளில் நம்மை போன்ற சப்ஹூயுமன் பிறவிகளை ஒரு மசிரும் மதிக்கிறதில்ல. தெருவிலயே நிப்பாட்டி வைச்சு வதைத்துத்தான் உள்ளரயே கூப்பிடுவாய்ங்க.
அப்படி அடி உதை, சொரணைய விட்டுக்கொடுத்து போறதுக்கு தயாராக நிக்கிற கூட்டம் தன்னோட நாட்டு மக்களை மரியாதையோட நடத்தணும்னு எதிர்பார்த்தா கவைக்கு ஆகுமா?
ஏன் இதையெல்லாம் சொல்லுறேன்னா, நாம எல்லாத்தையும் நகல் எடுத்தே பழகிப்போன கூட்டம். தன்னைச் சுத்தி என்ன நல்லது கெட்டது கெடக்கின்னு கூட ஊன்றிப் பார்க்காம கிடைக்கிறதையெல்லாம் அப்படியே திண்ணு வைக்கிறது.
இப்போ அதிகாரத்தை கையில வைச்சுக்கிட்டு தலைகால் புரியாம ஆடுற கூட்டம் தன்னை என்னவோ தொட முடியாத உசரத்தில இருக்கிறதா நினைச்சிக்கிட்டு ஆடுதுங்க.
அதுங்க என்னமோ அகதிகளை நடத்துறது மாதிரித்தான் நடந்துகிறதா இந்த நீட் சம்பந்தமான பிரச்சினையை பார்க்கிறேன். முதல்ல ஒரு தேசமா தனக்கு வேணுங்கிற துறைகள்ல தன்னிரைவை நீக்கமுற எப்படி அடைஞ்சிக்கிறதுங்கிற தொலை நோக்கு கொஞ்சமும் இல்லாம, அடுத்தவன்கிட்ட இருந்து அடிச்சு பிடிங்கித் திங்க பார்க்கிறது. இந்தியா என்ன அமெரிக்காவாடா? அமெரிக்காவில இருக்கிற மாதிரியா இங்கே மக்கட் தேசத்தை (demographic, community structure) கொண்டிருக்கிறது?
கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் அறைகுறை பசங்க ‘ஓவர் நைட்ல’ பணம் மூட்டை ஒன்றை கண்டெடுத்து அதை வைக்கிற முறை தெரியாமல் ஆடுவது போல, ஒரு தேசம், ஒரு மொழி கத்திரிக்க வெண்டைக்கான்னு, பக்கர்ஸ். அவனவன் மொழியில தன்னுடைய பிராந்திய மக்களுக்கு நோய், நொடி இல்லாம இருக்க சொந்த உழைப்பில கட்டி எழுப்பின சோர்சஸை வைச்சு கல்வி பழகி உயர்ந்து வர்றானுங்கன்னா, அதை ஒரு ரோல் மாடலுக்கான மூலமாக வைத்து உங்க உங்க பிராந்தியங்கள்ல உருவாக்கிக் கொள்வீர்களா, அதனைத் தவிர்த்து முழு தேசதுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு மசிரு மட்டைன்னு அதுவும் ஒண்ணாப்புல இருந்து சி.பி.எஸ்.இன்னு பெரிய புடுங்கி சிலபஸ்ல படிக்க வைச்சேன்னு பிகில் விட்டு படிக்க வைக்கிறவிங்க சிலபஸ்ல இருக்கிற கேள்விகளை கொண்டு போய் அரசாங்க பள்ளி கூடங்கள்ல படிக்கிறவன்கிட்ட திணிச்சு ஏண்ட வன்புணர்வு செய்றீங்க (வேற என்னவாம் அது?)
கேட்டா மனனம் செஞ்சு படிக்கிறதுன்னு ஒரு நொன்னை வாதம். சரி நீங்க சி.பி.எஸ்.இல நொட்டி எத்தனை நோபல் பரிசும், அண்டத்தில புதுக் கோள்கலையும், நட்சத்திரத்தையும் உருவாக்கி வைச்சிருக்கீங்க?
இப்படிச் சுரண்டித் திங்கிறதெல்லாம் ஒரு பொழப்பாடா? இந்த கருமாந்திர பிடிச்ச செயல்பாட்டில வேற நுழைவுத் தேர்வு நடத்துர ஹால்ஸ் கண்டிபிடிக்கிறதில வேற குளறுபடி. நல்ல கெட்ட கெட்ட வார்த்தையா வாயில வருது, ஆனா, ரொம்ப நல்லவிங்க கோவிச்சுக்குவாய்ங்களேன்னு அடக்கி வாசிச்சு எழுதுறேன்.
எவனாவது இப்படித்தான் அமெரிக்காவில ஒரு முறை நான் எக்சாம் எழுதப் போக ஐந்து மணி நேரம் ட்ராவல் செஞ்சு போனேன், அப்படி இப்படின்னு வந்தீங்க, கம்னாட்டி பயலுகளான்னு திட்டிப் புடுவேன்.
ஒரு எக்சாம் ஹால் கண்டுபிடிச்சு அதுக்குத் தேவையான வசதிகளை அமைச்சிக்க எத்தனை மணி நேரம்டா முறையா செஞ்சா தேவைப்படும்? அப்போ தமிழ்நாட்டில இது வரைக்கும் நடத்தப்பட்ட தேர்வுகள் அனைத்தும் தில்லுமுல்லு செஞ்சுதான் உருவாக்கினாங்கன்னு சொல்ல வாரீங்களா? சட்டியில இருக்கிறதுதானே அகப்பையில வரும்... உங்களோட நாள் பட்ட சீழ் பிடிச்ச புத்திப்படிதானே மூளையும் வேலை செய்யும்?
என்னமோ வேற்று கிரகத்திற்கு ஆள் எடுக்கிற தோரனை மசிருல ஒரு தேவையற்ற நுழைவுத் தேர்வு அதுக்கு இத்தனை பில்டப். காதுக்குள்ளர லைட்டு அடிச்சி என்னடா செக் செஞ்சீங்க போன ஆண்டு? காக்லீயா இருக்கான்னா பார்க்கவா? முண்டக் கலைப்பைகளா? சட்டை கிழிச்சு, முடியை வெட்டி கரும்புள்ளி செம்புள்ளி மட்டும்தாண்டா குத்தி ஏண்டா படிக்கிறீங்கன்னு கேக்கல. உங்களோட இந்த பூமிய பகிர்ந்துக்கிறதுக்கே கேவல மசிரா வருது.
இதில வேற அமெரிக்காவில இருக்கேன், அண்டார்டிக்காவில இருக்கேன்னு ஒரு வாழ்க்கை மசிரு வேற. கூட இருக்க கூட்டத்தை ஒரு மனுசப்பிறவிகளா மதிச்சு கூட்டிக்கிட்டு தானும் உயர ஒரு மனசில்ல பின்ன என்ன மரியாதை மசிரு தேவைப்படுதுங்கிறேன்.
இதெல்லாம் ஒரு பிரச்சினைன்னு உச்ச நீதி மன்ற தீர்ப்பு வேற. முடியலடா. இந்த கூத்தையெல்லாம் பார்த்துக்கிட்டு நாமளும் ஒரு மனுசப் பொறப்புன்னு சொல்லிக்க. ஏண்டா, உங்களுக்கெல்லாம் வெக்கம், மனசாட்சிங்கிற மசிரே இருக்காதா?

Related Posts with Thumbnails