Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Sunday, April 23, 2023

நெறிமுறையற்ற விளையாட்டுத் தளமே வரலாறு: Sapiens - 5

இன்று உலக புத்தக தினம். 

முகநூலில் இதுவரை எழுதிவந்த #சேப்பியன்ஸ் தொடரைப் பற்றிய பதிவுகளை இங்கு அறிமுகம் செய்கிறேன்.

நிறைய வாசிப்போம்..நாம் கடந்து வந்த பாதையை புரிந்து உலகை நேசிப்போம்.

சேப்பியன்ஸ் - 1

https://m.facebook.com/story.php?story_fbid=10216266244002319&id=1639793180

சேப்பியன்ஸ் - 2

https://m.facebook.com/story.php?story_fbid=10216165801571321&id=1639793180

சேப்பியன்ஸ் - 3

https://m.facebook.com/story.php?story_fbid=10216225088013445&id=1639793180

சேப்பியன்ஸ் - 4

https://m.facebook.com/story.php?story_fbid=10216240898848706&id=1639793180


நெறிமுறையற்ற விளையாட்டுத் தளமே வரலாறு: Sapiens - 5


ஹோமோ சேப்பியன்ஸ் நூல் எனக்கு என்னவோ மலிவு விலையில் பதிப்பிக்கப்பட்டு பள்ளி மேற்படிப்பு படித்த அனைவரும் கட்டாயமாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகமாகப்படுகிறது.

இப்பொழுது நான் அந்த புத்தகத்தின் எட்டாவது அத்தியாயம் வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாகரீகங்களுக்குள்ளும் எப்படி சமூக அடுக்கதிகார முறை கட்டமைக்கப்படுகிறது, அது எதன் பொருட்டு வளர்த்தெடுக்கப்படுகிறது, அதன் பயன்பாடு என்ன என்று தெள்ளத் தெளிவாக விளக்குகிறது.

அந்த பக்கங்கங்களை வாசிக்கும் பொழுது எதற்காக இந்த சமூகம் இப்படி ஏற்றத் தாழ்வுகளுடன் இயங்குகிறது என்ற எளிய கேள்விக்கு பதிலுரைக்கிறது. முதல் கட்ட அறிதலின் பொருட்டு வாசிப்பை நாடுபவர்களுக்கு இது ஒரு முக்கியமான அத்தியாயம். 

வரலாறு தோறும் இந்த ஏற்றத் தாழ்வுகளை ஓரளவிற்கேனும் சமப்படுத்த பல அவதார புருஷர்கள் வர வேண்டியத் தேவைதான் என்ன, எதன் பொருட்டு அவர்கள் தொடர்ந்து பேசி, சண்டை செய்ய வேண்டியுள்ளது என்பது அனைத்தும் நமக்கு  விளங்கிவிடும் இந்தப் பக்கங்களை நாம் கடந்துவிடுவதற்குள்.

சமூக அடுக்கு "ஆண்டான் அடிமை" என்ற எளிய கட்டமைப்பில் அதற்குள் பல அடுக்குகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பயன் உயர் அடுக்கில் இருப்பவர்கள் கீழ் அடுக்கில் உள்ளவர்களை சுரண்டி கொழுத்து வாழ்வதற்கென உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை நிறுவி அதன் பயன்பாட்டினை அறுவடை செய்ய பல கட்டுக்கதைகள் தேவைப்படுகிறது. அதனயொட்டிய புனைக் கதைகள் மனிதர்களின் ஆழ் மனதில் நம்பிக்கை நச்சுக்களாக விதைக்கப்பட்டோ (வர்ணாஷ்ரம), சட்டங்களாக இயற்றியோ (வெள்ளையர்களும், கருப்பினத்தவர்களும் சமமல்ல, ஏழை, பணக்காரர்களின் வாழ்வமைவு ஆசீர்வதிக்கப்பட்டது) காலப்போக்கில் ஏற்றுக் கொண்டு வாழும் ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.


இந்த கட்டமைப்பை விளக்க முற்படும் போது இந்த நூல் மிக தாராளமாக இந்து மதத்தின் பால் பிறந்த சாதிய சமூக அடுக்கு யாரால், எதற்கு உருவாக்கிக் கொள்ளப்பட்டது, அது எவருக்கு பயனளிக்கும் விதத்தில் இன்றும் இயக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை சமகால இந்திய அரசியலமைப்பைக் கொண்டு மிகத் தெளிவாக விளக்க எடுத்து கையாண்டுள்ளார் இந்த நூலின் ஆசிரியர்.

இந்த புத்தகம் உலகம் முழுதிலும் மில்லியன் கணக்கில் விற்பனையாகி இருக்கிறது. இந்த அத்தியாயத்தில் சமூக அடுக்கு உருவாக்கத்திற்கு பின்னான அயோக்கியத்தனங்களை, சூழ்ச்சிகளை அப்பட்டமாக அடிக்கோடிட்டு இந்த உலகத்திற்கே புரிய வைக்க இந்துக்களின் சாதியக் கட்டமைப்பை பயன் படுத்திக் கொண்டுள்ளார். 

தீட்டு, தீண்டாமை, தூய்மை, மோலோன், கீழோன் அனைத்தும் ஒருவனை தரம் பிரித்து எவனை எந்தளவிற்கு வளர்ந்து வர இடம் கொடுக்க வேண்டும் என்று அறிந்து கொள்வதற்கும், ஒவ்வொரு முறையும் பின்புலத்தை தோண்டித் துருவி அறிந்து கொள்வதற்கு பதிலாக கூட்டு அடுக்களைக் கொண்டு பிரித்து வைத்து விட்டால் பொதுப் புத்தியில் அதற்குண்டான புத்திகளை இவன் உள்ளடக்கியவன் என்ற கற்பிதங்களையும் நம்ப வைத்து அவர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயங்க வைக்க முடியும் என்பதே இதன் ஏற்பாடு.

இப்பொழுது உதாரணமாக ஒன்று பார்ப்போம். வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான். நல்ல திறமையானவன் ஏதோ ஒன்று அவனுடைய இரத்தத்திலோ அல்லது மரபணுவிலோ இருக்கிறது அதனால் தான் கருப்பர்களை விட அதி புத்திசாலிகளாக, பல அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டறியும் அறிஞர்களாக இருக்கிறார்கள் என்ற வாதம்.

இரண்டு, நம்ம ஊரில் ஒரு குறிப்பிட்ட சாதி இனங்களில் பிறந்த குழந்தைகள் இசையிலும், நாட்டியத்திலும் மிக்க திறமை உள்ளவர்களாக இருக்கக் காரணம் இறைவனால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டு அந்த குலத்தில் பிறப்பதால் தான் என்றொரு வாதம்.

ஆனால், இந்த இரண்டு கதைகளுக்குப் பின்னாலும் மாபெரும் உழைப்புச் சுரண்டலும், சூழ்ச்சியும் புதைந்து கிடக்கிறது என்கிறார் இந்த நூலாசிரியர். பிறக்கும் போது எல்லா குழந்தைகளும் ஏதோ ஒரு வகையில் மெருகேற்ற மெருகேற்ற அவைகளை நம்மால் வார்த்தெடுத்துக் கொள்ளும் திறமைகளை உள்ளடக்கியே பிறக்கிறது, ஆனால் அதற்குரிய வசதி, வாய்ப்பு அதற்குண்டான நேரத்தை எப்படி வழங்குவது?

இங்குதான் அந்த சமூக அடுக்கமைவு ஒரு சாரருக்கு எளிய வழியையும், அங்கீகரிப்பையும் கொடுத்து மெருகேற்றிக் கொள்ள, மேல் நிலைக்கு செல்லும் படியாக கட்டமைக்கப்பட்டு பயனளிக்கிறது. பயனளிக்காமல் போகக் கூடிய அந்த போர்வை சாதி'யம் கொண்டு மற்றவர்களிடத்தே கண்டறியப் படுகிறது.

இந்த சாதிய கட்டமைப்பு உடையாமல் கட்டிக் காக்கப்படுவதின் சூட்சுமம் இதுதான். இப்போ சாதி மறுப்பு மணங்கள் பெருகும் போது இந்த அடித்தளம் சுக்கு நூறாக தகர்ந்து விடுமல்லவா? தகர்ந்து விடாமல் பார்த்துக் கொள்வதில் தான் ஏனைய சமூக அநீதிகள் அடங்கி இருக்கிறது.

இப்போ புரிகிறதா இந்த நவீன தீண்டாமை உலகில் நீட், கேட் என்ற வடிகட்டல்கள் எதற்கு என்று? அவதாரப் புருஷர்கள் இத்தனை வரலாற்று ரீதியாக சக்தி படைத்த ஒரு சூழ்ச்சிக் கூட்டத்தை வெற்றியடைய வேண்டுமாயின் எத்தனை பெரிய பரந்து பட்ட பொது நோக்கும், கட்டற்ற பரிவும், விசாலமான பார்வையும் கொண்டிருக்க வேண்டும். 

நமக்கு அந்த முழுப் பயன்பாடும் வந்து கிட்டுவதற்கு முன்னதாகவே பல கட்டுக்கதைகளின் மூலமாக அவர்களுடைய பங்களிப்பு முடக்கப்படுகிறது. அந்த அரசியலை நாம் புரிந்து கொள்ள ஆரம்பிக்கும் பொழுது போராட்டம் மீண்டும் ஒன்றாவது படிக்கி சறுக்கி வந்து நின்றிருக்கும்.

வரலாற்று புத்தகங்களை எந்த

கரையிலிருந்து நின்று கொண்டு மீள் வாசிப்பு செய்கிறோமென்பதும், இது போன்ற மானுடவியல் சார்ந்த புத்தகங்களை வயதோடு வாசித்து அவரவர்கள் நிலையில் தெளிவடைதும் முக்கியமாகிறது.

ஏனெனில் வரலாற்றில் எப்படி விளையாண்டோம் என்பது ஒரு பொருட்டே அல்ல! பிழைத்து அடுத்த கட்டத்திற்கு நமது பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழ்வுச் சூழலைக் கொடுத்துச் செல்கிறோமா என்பதே படிமலர்ச்சியில் நம்மை படியெடுக்க இந்த இயற்கை வைத்திருக்கும் ஒரே ரூல்ஸ்!


#சாப்பியன்ஸ் - 5

#Homosapiens book

Sunday, February 26, 2023

கலைஞரின் சற்கர நாற்காலியும் கமலின் ஏகாடியமும்!

கமலோட சக்கர நாற்காலி ஏகடியம் அவருக்கேயான மிக இயல்பான வளர்ப்பிற்கு பின்னான சிறுமையின் எச்சம். அவரோட நிதானத்தையும் தாண்டி இப்படியான வன்மம் பொங்கி வழிகிறது என்றால், இன்னும் சொற்களாக பேசப்படாத, வக்கிர எண்ணங்கள் எவ்வளவு இருக்கக் கூடும்?

அம்பேத்கர், காந்தி, பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் எதனை உணர்ந்து கொண்டதால் சாதரணர்களைக் காட்டிலும் பன்மடங்கு உழைக்க தழைப்பட்டார்கள்? மரணித்த நொடிகளுக்கு முன்பு கூட அய்யோ செய்ய இன்னும் இவ்வளவு இருக்கும் போது, பாதியிலேயே விட்டுவிட்டுச் செல்லும் படி ஆகிவிட்டதே என்ற வேதனையே அவர்களிடையே தங்கியிருக்கக் கூடும்.

பெரியாரும், கலைஞரும் அந்தப் பரிதவிப்பை தனது உடல் உபாதைகளைப் புறந்து தள்ளி களத்தில் நின்றதே அதற்குச் சான்று. ஒரு தனி மனித வளர்த்தெடுப்பு என்பது, எத்தனை பிரயத்தனங்களை உள்ளடக்கியது? தொடர் பயணம், சமூக உள்வாங்கல், அது தொடர்பான ஊடாடல்கள், போராட்டக் களங்கள், வரலாற்று வாசிப்பு, இலக்கிய அறிமுகங்கள், அது தொடர்பான எழுத்துப் பணி என்று எத்தனை அனுபவம் அவர்களால் சேகரிக்கப்பட்டிருக்கும். அந்த நிறை மனிதர்களின் சமூகம் சார்ந்த ஆழ்ந்த புலமையை, தான் நேசிக்கும் மக்களோட பகிர்ந்து கொள்ள ஒவ்வொரு மணித்துளிகளையும் செலவு செய்திருக்கிறார்கள் என்றால், எத்தனை ஆழ்ந்த மனித நேய passion இருந்திருக்க வேண்டும்.

இத்தனை அறிவும் ஒருவர் மரணிக்கும் போது அவரோடு சேர்ந்தே பேசப்படாத, வழங்கப்படாத பகுதிகளும் மறைந்து விடுகிறது. காலத்தின் நிலையின்மை உணர்ந்தவன் எப்படி அதனை வீணடிப்பான்? எனவே, ஒரு மனிதரின் நினைவு தவறும் நொடிகளுக்கு முன்பு வரை கூட, ஏரணத்தோடு விசயங்களை தொடர்பு படுத்தி பேசும் திறன் இருக்கும் வரையிலும் அந்த மூளை அந்தச் சமூகத்திற்கு தேவைதான். 

சக்கர நாற்காலியில் அமர்ந்த படியே ஸ்டீவன் ஹாகின்ஸ் போன்ற அறிவியலாளர்களின் வாழ்நாள் சாதனைகளையும் அறிந்தவரே கமல். புரியாமல் எல்லாம் கலைஞர் பொருட்டு பேசி இருப்பார் என்று நான் நம்பத் தயாரில்லை. கமலையொத்த குடும்பங்களின் பேச்சு முழுக்க தமிழ்நாட்டின் இன்றைய நிலைக்கு யார் காரணம் என்று, குறுக்கி வந்தடைந்த புள்ளிதான் இந்தத் திராவிடத் தலைவர்கள். அவர்களின் சப்கான்ஸியஸ் மனம் எப்பொழுதும் இவர்களைச் சுற்றியே இயங்குகிறது.

கமல் பகடியாக பேசியது போல் மற்றுமொரு சிறுமைத் தனமே மோடியை வைத்து, கலைஞரின் இறுதி நாட்களில் அவர் தோளின் மீது கை வைத்து நலம் விசாரிப்பது போல, கலைஞரை திகிலூட்டுவதாக நினைத்து தங்களது வக்கிரப் பகுதியை அவர்கள் சொரிந்து கொண்டதும் என்பேன். அந்தப் புகைப்படத்தை சற்றே உள்வாங்கி ஆராய்பவர்களுக்கு புரியும், துரைமுருகன், கலைஞர் உடற்மொழியை கவனித்தல் பொருட்டு. ஒருவர் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது, ஏதாவது பேசி அது ஒரு மகிழ்வான தருணத்திற்கு இட்டுச் சென்றிருந்தால், அது மோடியின் தோள் தொடுதலுக்கான நட்பு உணர்ச்சி போல் வெளிப்பட்டிருக்க வாய்ப்புண்டு. ஆனால், நான் இந்தச் சூழலை ஒரு திட்டமிட்ட எக்ஸ்ப்ரசனாகப் பார்க்கிறேன்.

கமலின் சக்கர நாற்காலி ஏகடியத்திற்கு இணையானதே மோடி குழாமின் தோள் தொடுதலும். இங்கு மறைமுகமாக இவர்கள் அனைவரையும் இயக்குவது சித்தாந்தச் சமரே!

Sunday, February 05, 2023

அறநிலையத்துறையை தனியார்மயமாக்குதல்!

 = கற்காலமாக்குதலியம்!

கடந்த கால சமூக நீதிக்கு எதிரான விடயங்களை போரட்டாங்களின் வழியாக கை வரப் பெற்ற சமூக நீதி சட்டங்களை மீண்டும் திருத்துவது என்பது நாகரீகமடைந்த ஒரு சமூகத்தை மீண்டும் அந்த கற்காலத்திற்கே எடுத்துச் செல்லுவதற்கு ஒப்பானதாகும்.

அண்மைய காலங்களில் அவசர கோலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக சில மத அரசியல் கட்சிகள் கொண்டு வரும் பிரச்சினைகளின் வீச்சத்தைப் பார்த்தால் அதற்கான முயற்சியாகவே படுகிறது.

என்னவோ ஒரு சமூகத்தினர் மட்டுமே பன்னெடும் காலமாக சமூக சீர் திருத்தத்தையும், பொருளாதார முன்னேற்றத்தையும், சமூக ஏற்றத் தாழ்வுகளை நீக்கி நாட்டில் பாலாறும் தேனாறும் ஓட உழைத்த உத்தம புத்திரர்களாக தங்களை வரலாற்றில் தூக்கி நிறுத்திக்   கொள்ள எத்தனிக்கிறார்கள்.

ஆனால், உண்மை என்னவோ அதே வரலாற்று பாதையில் ஓடும் பேருந்தால் நசுங்கி மாண்ட ஒரு வன விலங்கைப் போல மரணித்துக் கிடக்கிறது

ஒரு நாகரீமடைந்த சமூகம் என்பது நாட்டில் வாழும் அனைவரையும் சமமாக பாவித்து அவர்களை அடுத்த கட்டத்திற்கு கூட்டாக அழைத்துச் செல்வது. அதனைத் தவிர்த்து ஏதோ ஒரு காலத்தில் சொரண்டி தின்று உடல் வளர்த்தோம் என்பதால் இந்த நவீன காலத்திலும் அந்த இத்துப்போன கோட்பாடுகளை நடை முறை படுத்த எண்ணுவது எத்தனை சாபக்கேடு ஒரு சமூகத்திற்கே?

சரி பிரச்சினைக்கு வருவோம். ஓர் இரண்டு தினங்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தினுள் தீ, எந்த பொது இடமாகினும் அங்கே விபத்து நடப்பதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளதுதானே? தீ விபத்து ஏதோச்சையாக நடந்தது என்றே வைத்துக் கொள்வோம், அறநிலையத்துறையும் மெத்தனமாகவே இருந்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்... அதற்காக உடனே அந்த அறநிலையத் துறைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அனைத்து அறநிலையத்துறைக்கு    கீழே வரும் கோவில்களையும் தனியார் மயம் ஆக்கி பழைய பஞ்சாங்கப்படி ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்த ஒப்படைக்க வழிவகை செய்து கொடுக்க தடி எடுப்பீர்களா?

கோவில் என்பது ஜஸ்ட் ஒரு கோவில் வளாகம் மட்டும்தானா? எதற்காக அந்த காலத்திலயே அத்தனை போராட்டதிற்கிடையே பெரிய கோவில்களை இந்த "அறநிலையத்துறைக்கு" கீழாக ஒரு அரசாங்கம் கொண்டு வந்தது,அந்த துறைக்கு  கீழ் வருவதற்கு முன்பாக நாமெல்லாம் அந்த கோவிலுக்குள் நுழைந்து அறிய முடிந்ததா?

அந்த கோவிலின் நிர்வாகம் யாரிடமிருந்தது, அங்கு விழும் காணிக்கைகளை யார் எண்ணினார்கள், எந்த வாசப்படி வழியாக அது யாருடைய காஜானவிற்கு சென்றடைந்தது என்று நமக்குத் தெரியுமா?

ஒரு டேட்டா வந்தது. ஒரு பெரிய கோவில் அது அறநிலையத் துறைக்கு கீழ் வருவதற்கு முதல் வருடம் வெறும் 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருமானம் வருவதாக காட்டப்பட்டதாகவும், அடுத்த வருடமே அது 40 லட்ச ரூபாயாக உயர்ந்ததாகவும் அறிந்தோம். அது எப்படி சாத்தியம் மக்களே? கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், கடவுளுக்கு வெகு அருகமையில் இருப்பவர்கள் இப்படியாக ஆயிரம் ஆண்டுகளாக கணக்கு காமித்து வந்திருக்கிறார்கள்.


அது மட்டுமா? ஒரு கிராமத்திற்குள்ளாகவே வாழும் மனிதர்களை பிரித்து இவன் உள்ளே வரலாம், வரக்கூடாது என்று பிரித்து ஆண்டதும் நடக்கிறது, நடந்து வந்திருக்கிறது. 

இவற்றையெல்லாம் களைந்து ஒரு சமூக சமன் பாட்டை கொண்டு வர எண்ணி உருவாக்கப்பட்டதுதான் "அறநிலையத் துறை." இது எத்தனை பெரிய புரட்சி? சமூக சீர் திருத்த எட்டல்??

இதனையெல்லாம் சீர் படுத்த ஒரு அரசாங்கம் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து முறைமைப்படுத்துவது எப்படி தவறாகும்? அந்தத் துறை இன்றைக்கு சற்றே சீர் குலைந்து அதனில் நிர்வாகச் சீர் கேடுகள் நடக்கிறது என்றால் உடனே ஊசி காதுக்குள் ஒட்டகத்தைத் திணிப்பது போல மீண்டும் கோவில்களை பழைய சுரண்டலுக்கே தனியார் வசம் ஒப்படைத்து விடுங்கள் என்று சந்தில் சிந்து பாடுவது யார்? எதற்காக?

எது எப்படியோ மக்கள் சிந்திப்பதற்கேனும் இது போன்ற நாகரீகமடைந்த ஒரு சமூகத்தில், இன்னமும் அந்த இடத்திற்கு தங்களை நகர்த்திக் கொள்ள முயற்சிக்காத கயவர்களை அடையாளம் காணவும், இந்த பிரச்சினையை ஒட்டி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்றவுமாவது இது உதவுகிறதே என்ற வகையில் அந்த பொய்யர்களுக்கு இந்த தருணத்தில் ஓர் நன்றி!


#மீள்

#AdmkFails _2018

Wednesday, February 01, 2023

ஏன் பேனா சினைவுச் சின்னம்

ஒரு பேனா இத்தனை பேரை அலற வைக்க முடியுமா? முடியுமென்றால் அந்தச் சமூகத்தில் ஏதோ பெரியளவில் சம்பவம் நிகழ்த்தப் பெற்றிருக்கிறது என்று தானே புரிந்து கொள்ள முடியும்?


பேனா என்ற ஓர் அடையாளம் எதனையெல்லாம் சுமந்து நிற்க முடியும்? பேனா - மனித குலத்தின் நாகரீக திசையறியும் திசைகாட்டி. ஒரு சமூகத்தின் மாண்பு! உண்மையை செதுக்கி வைக்கும் உளி. குரலற்றோருக்கு உரக்க குரல் கொடுக்கும் ஓர் ஒலி பெருக்கி. இருட்டின் அடர்வையொத்த பொய்களுக்குள் புதைந்திருக்கும் ஓர் பேரொளி.

பேனாவிற்கு ஏது வேலி, முகம்? ஒரு சமூகத்தில் ஒரு பேனா ஒரு தனி மனிதனின் முகத்தை உன் நெஞ்சிற்குள் ஈட்டியாக இறக்குகிறது என்றால் அந்த முகத்திற்கான சொந்தக்காரன் ஒரு சம்பவத்தை அந்தச் சமூகத்தில் செய்து இருக்கிறான் என்றல்லவா பொருளாகிறது.

எடுத்துக்காட்டாக நான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். முதல் முறையாக வேறொரு நாட்டிலிருந்து விமான மார்க்கமாக அந்த பேனா எழுந்து நிற்கும் கடற்கரையோரமாக பறந்து தரை இறங்குகிறேன் என்று வைத்துக் கொள்வோம்.

இப்பொழுது அந்தப் பேனா எனக்கு தரும் செய்தி என்னவாக இருக்கும்? எனக்கு அந்தச் சமூகத்தில் புழங்கிய எந்த ஒரு தனிப்பட்ட முகங்களும் பரிச்சயமில்லை எனும் போது, பொதுவான ஓர் ஐடியாவான பேனா - அதனையொட்டிய பெரும் மதிப்பு அந்தச் சமூகத்தின் பொருட்டு இயல்பாகவே ஏற்படுவதை என்னால் தவிர்க்க முடியாது இல்லையா?

ஏனெனில், வரலாறு தோறும் பேனாவிற்கான இடமப்படி. பேனாவின் மதிப்பு என்பது ஒளவையின் "கற்றாரை கற்றாரே காமுறுவர் என்பதற்கு ஒப்பான" ஓர் அண்டத்தின் குறியீடு!

இந்த தமிழ்நாட்டுப் பேனா உங்களுக்கு கலைஞரின் முகத்தை நினைவு படுத்துகிறது என்றால் அது மிகச் சரியாக அவரது விரலிடுக்களில் சுழன்று தன் கடமையை செவ்வனே செய்திருக்கிறது என்று விளங்குகிறது. 

அது வரும் தலைமுறையினருக்கும் இடம் சுட்டி பொருள் விளக்கியபடியே நிற்கும். நீங்கள் இன்னும் பலமாக ஓலமிட்டு கதறிக் கொண்டே இருங்கள்!


#பேனா_கலைஞர்

#நினைவுச்சின்னம்

#மீள்

Wednesday, April 14, 2021

தமிழ் புத்தாண்டு தை மாதமா, சித்திரையா? Know Your Tamil New Year!

 தமிழ்ப்புத்தாண்டு தை மாதமா? சித்திரை மாதமா? 

ஒருமுறை நாரதர், 'கடவுள்' கிருஷ்ணரைப் பார்த்து, "நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டாராம். 

அதற்குக் கிருஷ்ணர், "நான் உடன் இல்லாமல், வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தாராம்.

ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி "நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்" என்றாராம்.

கிருஷ்ணர் நாரதரை "யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்" எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினாராம் . பின் 'கடவுள்' கிருஷ்ணருடன் அறுபது வருடம் உடலுறவு கொண்டு , அறுபது மகன்களைப் பெற்றாராம். அவர்கள் பிரபவ தொடங்கி அட்சய முடிய என பெயர் பெற்றார்களாம்.

இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமாகும் வரம் பெற்றார்களாம். இதுதான் சித்திரையை புத்தாண்டு என்று சொல்வதற்கு சொல்லப்படும் புராணக்கதை. 

அப்படியாகக் கிருஷ்ணர் நாரதரை 35 வது ஆண்டில் கூடிப் பெற்ற பிள்ளைதான்  இன்று பிறந்த பிலவ ஆண்டு. இந்தக் கதைக்கு ஆதாரம் எது?

சென்னை பச்சையப்பா கல்லூரியில் தமிழ் பண்டிதராகப் பணியாற்றிய ஆ.சிங்காரவேலு முதலியாரால் தொகுக்கப்பட்டு, இராமநாதபுரம் சேதுபதி பரம்பரையில் வந்த பாண்டித்துரை தேவர் உதவியால் 1910 வெளியிடப்பட்ட நூல் அபிதான சிந்தாமணி.

அபிதான சிந்தாமணி நூலின் 1392 ம் பக்கத்தில் தான், வருடப்பிறப்பு குறித்த, மேற்கூறப்பட்ட இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது. 

60 பெயர்களில் பிரபவ தொடங்கி அட்சய வரை எதுவும் தமிழ் பெயர் இல்லை.

1. பிரபவ 2. விபவ 3. சுக்கில 4. பிரமோதூத 5. பிரஜோத்பத்தி 6. ஆங்கீரஸ 7. ஸ்ரீமுக 8. பவ 9. யுவ 10. தாது 11. ஈஸ்வர 12. வெகுதான்ய 13. பிரமாதி 14. விக்கிரம 15. விஷு 16. சித்ரபானு 17.சுபாணு 18. தாரண 19. பார்த்திப 20. விய 21. சர்வகித்து 22.சர்வதாரி 23. விரோதி 24. விக்ருதி 25. கர 26. நந்தன 27. விஜய 28. ஜய 29. மன்மத் 30. துர்முகி 31. ஹேவிளம்பி 32. விளம்பி 33. விகாரி 34. சார்வரி 35. பிலவ 36. சுபகிருது 37. சோபகிருது 38. குரோதி 39. விசுவாசு 40. பராபவ 41. பிலவங்க 42. கீலக 43. செமிய 44. சாதரண 45. விரோதிகிருது 46. பரிதாபி 47. பிரமாதீச 48. ஆனந்த 49. ராஷஸ 50. நள 51. பிங்கள 52. காளயுக்தி 53. சித்தாத்திரி 54. ரெத்திரி. 55. துன்பதி 56. துந்துபி 57. ருத்ரோகாரி 58. ரக்தாஷி 59. குரோதன 60. அக்ஷய.


சித்திரையை ஆண்டின் தொடக்கமாக கருதுபவர்கள் இதைக் கொண்டாடிவிட்டுப் போவதில் பிரச்சனையில்லை. உலகில் பலபகுதிகளில் பலவிதமான ஆண்டு தொடக்கங்கள் கொண்டாடப்பட்டே வருகிறது. இதை தமிழ் புத்தாண்டு என்று சொல்வதில் தான் பிரச்சனை எழுகிறது.

எனவே தான் தமிழறிஞர்கள் பலகாலங்களில் கூடி தொடர் விவாதங்கள் நடத்தி, ஆய்வு செய்து, தை மாதமே தமிழ்ப்புத்தாண்டு என அறிவித்தார்கள். தமிழறிஞர்கள் யார்?

01. மறைமலை அடிகளார் (1921)

02. தேவநேயப் பாவாணர்

03. பெருஞ்சித்திரனார்

04. பேராசிரியர் கா.நமசிவாயர்

05. இ.மு. சுப்பிரமணியனார்

06. மு.வரதராசனார்

07. இறைக்குருவனார்

08. வ. வேம்பையனார்

09. பேராசிரியர் தமிழண்ணல்

10. வெங்காலூர் குணா

11. கதிர். தமிழ்வாணனார்

12. சின்னப்பத்தமிழர்

13. கி.ஆ.பெ. விசுவநாதர்

14. திரு.வி.க

15. பாரதிதாசனார்

16. கா.சுப்பிரமணியனார்

17. ந.மு.வேங்கடசாமியார்

18. சோமசுந்தர் பாரதியார்

19. புலவர் குழுவினர் (1971)


மலையகத்தில்...

01. கோ.சாரங்கபாணியார்

02. சா.சி. குறிஞ்சிக்குமரனார்

03. அ.பு.திருமாலனார்

04. பேராசிரியர் இர.ந. வீரப்பனார்

05. கம்பார் கனிமொழி குப்புசாமி

06. மணி. வெள்ளையனார்

07. திருமாறன்

08. இரெ.சு.முத்தையா

09. இரா. திருமாவளவனார்

10. இர. திருச்செல்வனார்

இவர்களோடு 500க்கும் அதிகமான தமிழறிஞர்கள் கூடி விவாதித்து இதை ஆரிய திணிப்பு என முடிவு செய்தனர். எனவே சித்திரை வருடப்பிறப்பினை விடுத்து தை முதல் நாளே தமிழாண்டின் தொக்கம் என்றார்கள். தை தொடக்கம் என்பதற்கான ஆய்வு என்ன? 

உச்சபட்சக் குரலெடுத்து பாவேந்தர் பாரதிதாசன் பாடினார்.

நித்திரையில் இருக்கும் தமிழா!

சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு

அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே

அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்

தரணி ஆண்ட தமிழனுக்கு

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!

என்றார்.

தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாள் என்பதை ஆறு சிறு பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தார்கள். 

1.வைகறை

2.காலை

3.நண்பகல்

4.எற்பாடு

5.மாலை

6.யாமம்

ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன.

(1 நாழிகை - 24 நிமிடங்கள்

60 நாழிகை - 1440 நிமிடங்கள்

இதனை இன்றைய கிருத்தவ கணக்கீட்டின் படி பார்த்தால்

1440 நிமிடங்கள்  என்பது

24 மணித்தியாலங்கள்

24 மணித்தியாலங்கள் -1 நாள்.

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள்.

ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ,  ஆண்டுக்குரிய தமது வாழ்வை, *ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்*.

1. இளவேனில் - (தை---மாசி)

2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை)

3. கார் - (வைகாசி - ஆனி)

4. கூதிர் - (ஆடி - ஆவணி)

5. முன்பனி (புரட்டாசி - ஐப்பசி)

6. பின்பனி (கார்த்திகை - மார்கழி)

மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை-  வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு.

சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள். 

காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகிறான். 

பண்பாட்டுப் பெருமைகொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள்.

தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டுத் தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம். சித்திரையை கொண்டாடுவதில் பிரச்சனையில்லை. ஆனால் அது தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாட இயலாது.

அபிதான சிந்தாணி கூறுவதன் படி,

நாரதரும், கிருஷ்ணரும் கூடிப்பெற்ற 60 பிள்ளைகளில், இன்று தொடங்கியிருக்கிற 35 வது ஆண்டுக்கு பிலவ என்று பெயர்.

பிலவ என்ற வடமொழிச் சொல்லுக்கு கீழறை என்று பொருள். கீழறை என்றால் பொந்து என்போமே அதுதான்.

அனைவருக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துகள்.

by Surya Xavier

🔹️🔶️🔹️🔶️🔹️🔶️🔹️

தமிழ்ப் புத்தாண்டு என்றால்...

*தெலுங்கில் எப்படி விளம்பி இருக்கு?

*கன்னடத்தில் எப்படி விளம்பி இருக்கு?

*ஹிந்தியில் எப்படி விளம்பி இருக்கு?

*இதன் மூலக் களவாணி, Sanskrit-இல் ஏன் விளம்பி/ विलंबी இருக்கு?

இது विलंबी = தமிழா?

இதுக்கு, புத்தாண்டு வாழ்த்துக்கள் வேற ஒரு கேடா?

🔻 அடுத்த புத்தாண்டு கொண்டாடப் போகும் 12 ராசி அன்பர்களே...

இதோ, புத்தாண்டின் Sanskrit பொருள்!

#சார்வரி / शार्वरी = "பலாத்கார எழுச்சி" (இதை கணிச்சி தான் ரஜினி எழுச்சி உண்டாக்க சொன்னாரா)

பயப்படாதீங்க!:)

அடுத்த வருசம் நல்ல பேரு அமையும்!

👉🏿 பிலவ / प्लव = "கீழ் ஓட்டை"

காமுகர்கள் எழுதிய சாஸ்திரங்களை..

புனிதம் என பூஜித்துக் கொண்டே இருங்கள்🤦‍♂️

வருஷப் பிறப்பு!

60 ஹிந்து (Sanskrit) வருஷங்களில்..!

👉🏿 பிராமண வருஷங்கள்= 15

👉🏿 க்ஷத்ரிய வருஷங்கள்= 15

👉🏿 வைஸ்ய வருஷங்கள்= 15

👉🏿சூத்திர வருஷங்கள்= 15

இவற்றில், சூத்திர வருஷங்களுக்கு, இழி பெயர்களே!

🔹️விகாரி= அசிங்கமான

🔹️சார்வரி= பலாத்கார எழுச்சி

🔹️பிலவ= கீழ் ஓட்டை

🔹️குரோதி= வன்மம் பிடித்தவள்

🔹️சார்வரி/ शार्वरी = தமிழ்ப் புத்தாண்டு எனில்..

*எப்படிச் சிங்களத்தில் அதே பெயர்?

*எப்படித் தெலுங்கில் அதே பெயர்?

*எப்படி ராஜஸ்தானத்தில் அதே பெயர்?

இந்த ஒரு கேள்வியைக் கேளுங்கோ!

பிறகு தெரியும்...

சார்வரி= தமிழ்ப் புத்தாண்டா? சம்ஸ்கிருதப் புத்தாண்டா? என்று!

சம்ஸ்கிருதம் தெரியுமா?

இல்லையேல், வாய்மூடி இருங்கள்!

விகாரி/ विकारि = அசிங்கம்

'எழில் மாறல்' -ன்னு தூய தமிழில் எழுதினா

அழகு போயிருச்சி-ன்னு தான்யா பொருள்!

அசிங்கம் இல்லைன்னு ஆயிருமா?

சார்வரி/ शार्वरी = வீறி எழல்

என்னா எழல்? எது வீறி எழல்?

பலாத்கார எழுச்சி இல்லைன்னு ஆயிருமா??

by

 Sirpi Rajan

Friday, April 09, 2021

தம்பீகளே இழப்பதற்கு இங்கே ஏராளமிருக்கிறது!


ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னா மெய் ஆகிடுமா? காமராசர் காலத்திற்கு பிறகு வளர்ச்சியே இங்கே இல்லையென்றால் எதனைச் சுரண்ட கட்டி எழுப்பிய அரசு கல்வி நிறுவனங்களை பட்டப் பகலில் ஜோப்படி செய்ய முயற்சிக்க வேண்டும்? ஒரு மாநில அரசே அந்த ஊர் மக்களின் உழைப்பில் உருவாக்கிய மருத்துவக் கல்லூரிகளில் எது போன்ற தேர்வுகளை நடத்தி மாணவர் சேர்க்கை செய்ய வேண்டுமென்ற உரிமையில் தலையை நுழைக்க வேண்டும்?
அரசாட்சி நடத்தவே தகுதியற்ற ஒருவருக்கு சரியான நேரத்தில் கோர்ட் தீர்ப்புகளை வழங்காமல் தள்ளிப் போட்டு, தேர்தலில் வெற்றியை வழங்கி, பிறகு அவரது மரணத்திற்கு பின்னாக, மீன் வலை போட்டு அள்ளியது போல அரசியல் ஞானமற்ற, அறமற்ற, எதிர்கால திட்டங்கள் ஏதுமற்ற பல சில்லுண்டித் திருடர்களை கொத்தாக வைத்துக் கொண்டு திரைமறைவு அரசியல் செய்வதா? அரசியல் அறம், மரபு?
இதனைச் செய்வதற்கு சிறிதும் அஞ்சாதவர்கள் மக்களாட்சியை எந்த குழிக்குள்ளும் தள்ளி புதைக்க மாட்டார்கள் என்பதில் என்ன சந்தேகம் இருந்திட முடியும்? ஒரு மாநிலம் கிடைத்த வளத்தைக் கொண்டு தன்னாலான அளவு வளர்ச்சியைக் காட்டி பிற மாநிலங்களோடு ஒப்பிடும் வாக்கில் சற்றே உயரத்தை காட்டியிருக்கிறது என்றால், அதனை மாடலாகக் கொண்டு தாங்கள் ஆளும் மாநிலங்களில் அவற்றை பின்பற்றி உயர்த்த நினைப்பார்களா அல்லது பிற பின் தங்கிய மாநிலங்களின் வரிசையில் அதனையும் வைத்து அழகு பார்க்க எண்ணுவார்களா?
பொய்களை பரப்பியே ஒரு சிறந்த நிர்வாகத்தை வழங்கிட முடியும் என்று யார் இவர்களுக்கு பாடம் எடுத்தது? வளர்ச்சி என்பது தன்னைச் சுற்றி நிகழ் காலத்தில் நாம் அனுபவிக்கும் வசதிகளைக் கொண்டு கண்டுணரும் ஒரு விடயம். அது கல்வி வசதியாகட்டும், மருத்துவ, சுகாதார வசதியாகட்டும் எல்லாவற்றையுமே சிறிது சிறிதாக கடினமான உழைப்பின் பெயரில் ஈட்டிக் கொள்வது. அதற்கு பல வருடங்கள் பிடிக்கும். பணத்தைக் கொட்டி ஊடகங்களில் போலியான பரப்புரைகளின் மூலம் அடைவது கிடையாது.
ஒரு நாட்டை கட்டியெழுப்பும் பொழுது, அது வரையிலும் சமூக சமநீதியற்ற ஒரு சமூதாயத்தில் அடையப்படாத விடயங்களான அணைகள், பள்ளிகள், மருத்துவம் ஏனைய வசதிகளுக்கென அடித்தளம் போடுவது என்பது ஓர் இயல்பான விடயம். அதுவும் போர்க்கால அடிப்படையில் சில துறைகள் பீரிட்டு வளர்த்தே எடுக்கப்பட வேண்டியதாக இருக்கும்.
உதாரணமாக கோயபல்ஸ் முறையில் தொடர்ந்து பரப்பப்படும் காமராசர் காலத்து பொற்கால துறைகளான அணைகட்டுகள் மற்றும் பள்ளிகள் திறப்பு. அதற்குப் பிறகு இத்துறைகள் எந்த மாற்றத்தையும் அடையவே இல்லை போன்ற ஒரு பிம்பத்தை கட்டி எழுப்புகிறார்கள். இது எத்தனை வடிகட்டிய முட்டாள்தனமான வாதம்? ஒரு மாநிலத்திற்கு முக்கிய அணைகட்டுக்களாக எத்தனை அணைக்கட்டுக்கள் தேவைப்படும். கிடைக்கும் நில அமைப்பு, வன வளம் அதனில் பெறப்படும் நீர் வரத்து, அந்த பூமியத்தை சுற்றியுள்ள மக்களின் வாழ்விடமென்று எத்தனையோ காரணிகளைக் கொண்டே ஒரு முக்கியமான அணைக்கட்டிற்கான அடித்தளம் அமைகிறது.
போகிற போக்கில் நினைத்த இடத்திலெல்லாம் அணைக்கட்டுக்கள் அமைத்து விட முடியுமா என்ன? இது எது போன்ற வாதம்? தெரிந்துதான் பேசுகிறோமா அல்லது மக்கள் அனைவரும் முட்டாள்கள், அடிப்படை அறிவே அற்றவர்கள் என்ற முறையில் பொய்யிலே அரசியல் அறமற்று தன் உடல் வளர்க்க பேசும் பேச்சா?
அந்த கால கட்டத்திற்கு பிறகு எந்த அரசும் எதுவுமே செய்யாமல் தான் நாம் உயிர் வாழ்ந்து, கல்வியறிவு பெற்று இன்று இப்படி வீண் வம்படித்து பிளவுகளை உருவாக்கி நம்முடைய வளங்களை வேற்று மாநிலத்து மக்கள் சூழ்ச்சியின் பால் பிடிக்க வழி கோலுகிறோமா?
ஒரு விடயத்தை பகிர்வதற்கு முன் அதில் எந்தளவிற்கு உண்மைத் தன்மை இருக்கிறது என்று அறிந்து கொள்ள குறைந்த பட்ச உழைப்பையாவது போட வேண்டாமா?
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க இப்பொழுது எந்த அரசியல் அறமுமற்று பொய் பிரச்சாரங்களை பரப்புவதற்கே பெரிய அளவில் தங்களுடைய நேரத்தையும், பணத்தையும் போட்டு அரசியல் வளர்க்கும் சூழலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழலிற்கு நாம் நகர்ந்திருக்கிறோம்.
கிடைத்த ஐந்து வருடங்களில் உங்களுடைய நாற்பது காலத்து கடின உழைப்பின் பெயரில் கட்டியெழுப்பிய, கோரிப் பெற்ற பல உரிமைகள் திரைக்கு பின்பாகவும், நம்முடைய கண்களுக்கு முன்பாகவும் கோமாளி அரசைக் கொண்டு பிடிங்கிக் கொண்டு செல்வதைக் காண்கிறோம்.
உணர்ச்சி வயத்தில் கூட்டத்தோடு சூழ்ச்சிக்கு இரையாகி பின்னால் திரும்பிப் பார்க்கும் பொழுது, இழந்ததை மீட்டெடுக்கவே மீண்டும் பல பத்தாண்டுகள் தேவைப்படலாம். முதலில் எதிரியை அடையாளம் காணுங்கள். யாரை அமர வைத்தால் தவறுகளை திருத்திக் கொண்டு சுயமான வளர்ச்சிக்கு நம்மை இட்டுச் செல்வார்களோ அவர்களை ஆதரியுங்கள். பிறகு உங்களுடைய பங்காளிச் சண்டையை வைத்துக் கொள்ளலாம்.

Friday, February 26, 2021

கமல் அரசியல் அபத்தங்கள் - சக்கர நாற்காலி/கிராமசபை கூட்டம்

சக்கர நாற்காலியில் அமர்ந்து சொந்திரவு தரமாட்டேன்!

லெட் மீ கெஸ், கமல் தட்டை தூக்கிட்டு தளபதிகிட்ட போயிருக்கணும். அவரு தம்பி நீ அதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டே, அப்படி ஓரமா போயி விளையாடுன்னு சொல்லி அனுப்பிட்டார். மிதி தாங்க முடியாம, வெளியில வந்து உலக்கை தன்னோட முன்னோர்கள் வழியில் புத்தியை காட்டி இருக்கும்.

இவனுங்க பூராப்பயலும் காரிய வாதிகள். காரியம் ஆக என்ன வேணா செய்வானுங்க. காலப் பிடிச்சு அதில இருந்து ஒரு படி மேலே பொயிட்டான்னா, அடுத்தப் படிக்கான ஆளை பிடிச்சிருவான், ஏறிவர உதவினவனை எள்ளவு கூட மதிக்கமாட்டானுங்க. இவன மாதிரி ஆளுங்களுக்காக கலைஞர் "#பலிபீடம்_நோக்கி"ன்னு ஒரு சிறிய நூல் எழுதி வைச்சிருக்கார்.
வயசாகி இவனோட மூட்டு கழண்டு போகும் போது தானே கழுத்தை நெரிச்சிக்கிட்டு செத்துடுவான் போல. இவனுக்கெல்லாம் மரியாதை ஒரு கேடு!
Art Courtesy: Gokula Varadharajan

பி.கு: மின்நூல் வேண்டும் என்பவர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியை விட்டுச் செல்லவும். வெறும் 30 பக்கங்களுக்கும் குறைவான நூல். நன்றி!

@@@@@****@@@@@

நான் தான் கிராமசபை கூட்டம் கண்டுபிடித்தேன்:

கமல் எல்லாம் அரசியல் பழகலேன்னு இப்போ யார் அழுதா? இப்போ என்ன நடந்திட்டு இருக்கு இவரு என்ன பேசிகிட்டு அரசியல் செய்றோம்னு பேர் போட்டுகிட்டு திரியறார்?

ஆட்சியில இல்லாத ஓர் எதிர் கட்சியை நோண்டுறதில உள்ள லாபம், தனக்கு சம்பளம் போடுற மத்திய அரசை நேரடியா விமர்சனம் பண்ற துணிச்சலும் நேர்மையும் இல்லையே, ஏன்? ஏன் அழுத்தமா கிள்ளி வைச்சாத்தான் அடுத்த நகர்விற்கான பேமெண்ட்னு சொல்லிட்டாங்களா?  

உள்ளாட்சி தேர்தல் முறையாக நடத்தப்பெற்றிருந்தா இந்த கிராமக் கூடுதல்கள் தேவையா? முறைபடுத்தப்பட்ட அரசு உள்ளாட்சி கட்டமைப்பு 1000 பேர் வாழும் ஒரு வார்டிலிருந்து 8000 பேர் வாழும் ஊராட்சி வரைக்கும் வீதி பை வீதியாக சென்று பிரச்சினைகளை கண்டறிந்து கொண்டு வந்து சேர்த்து விடும் அமைப்பில்தானே இருந்தது. ஏன் தேர்தல் நடத்தலேன்னு கேக்கணும். யார் செஞ்சா என்ன வேலையானா சரித்தானே? இதிலென்ன போட்டி வேண்டிக்கிடக்கு. அதுவும் கை கறைபடாத ஒரு சொக்கத் தங்கமான நீங்க இப்படி பேருக்கு ஆசைபடலாமா?

அப்படி எடுத்துக்கிட்டு போறதை விட்டுப்போட்டு, என்னமோ தன்னையே தேவ தூதரா கருதிகிட்டு தானே கிராம சபைகளை இந்தியக் கிராமங்களில் அறிமுகப்படுத்தியது போல பேசுவதை எதனில் சேர்ப்பது...

அப்போ கீழே புகைப்படத்தில் உள்ள, இது போன்ற கூட்டங்களை நடத்தியதையெல்லாம் என்ன பெயர், செயலென்று பெயரிடுவது மிஸ்டர் மய்யம். 😂🙄😏

முதல் கோணல் முற்றும் கோணல்! PMK's Election Stunt

 நானும் அந்த ”பாமக சின்னய்யா” சம்பவத்தை பார்த்தேன். என்ன சொல்லுறதுன்னே தெரியல! இப்படி ஒரு (ஜாதிக்) கட்சியை கருத்தரிச்சு, அதை அடை காத்து தன் சமூக மக்களுக்காகவாவது சிறுக ஆசைப்பட்டு பெரும் வாழ்வு வாழ்ந்திருக்கலாம். நீங்க என்னதான் அழி ரப்பர் வைச்சு அழிச்சு நாங்க ஜாதிக் கட்சி இல்லன்னு இனிமே நிரூபிக்க நின்னாலும் எடுபடாது. தமிழக தமிழர்களையே காப்பாத்தறேன் அளவிற்கெல்லாம் யோசிச்சு நீங்க இப்படி இறங்கி இருக்க வேண்டாம். 

யாரையோ நம்பி இப்படி இத்தனை ஆபத்தான ஒரு சூறாவளியில சிக்கிச் சின்னாபின்னமாகிட்டீங்களே.

உங்க உழைப்பெல்லாம் இப்படி அவசரப்பட்டு இந்த கால கட்டத்தில அதுவும் தமிழகம் கொந்தளிச்சு போயி கிடக்கிற நேரத்தில போயி, அவிங்களோட சேர்ந்து உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணான்னு சோலியை முடிச்சிக்கிட்டீங்க.

சரி போறதுதான் போறேன் கொஞ்சம் டேமேஜ் செஞ்சிப்புட்டு போவோம்னு...

திராவிட நாடு கோரிக்கையை நிறைவேற்றினாங்களா, அதுக்காக எத்தனை பேரு சுடுகாடு போனாங்கன்னு- சம்பந்தா சம்பந்தமில்லாம எந்த கால கட்டத்தில இருந்த விசயத்தை எந்த கால கட்டத்தோட இணைச்சு டேக் டைவர்ஷன் போட்டு கோர்த்து விடப் பார்த்தீங்க.

அண்ணா எந்த காரணங்களுக்காக அதை படமெடுக்க விட்டர், பின்பு சுருட்டி ஓர் ஓரத்தில வைச்சார்னு ஏன் எங்கயும் படிக்கலயா? ஏன் ஒரு புரட்டு வரலாற்றை  தாங்களே வாசித்து அறிந்து கொள்ள விருப்பமில்லாத ஒரு கூட்டத்திற்கு ஊட்ட நிக்கிறீங்க.

நாம வாழற காலம் என்ன பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் உயிரைப் பணயம் வைத்து போராடி இயக்கம் வளர்த்த காலமா? என்ன பெரிசா தியாங்களை செஞ்சு இன்றைக்கு இப்படி நாமல்லாம் வெள்ளையும் சொள்ளையுமா ஃபைவ் ஸ்டார் விடுதியில பத்திரிக்கை சந்திப்பு நடத்துர அளவிற்கு வளர்ந்திருக்கோம்.

எத்தனை ஆண்டுகள் நமக்கு முன்னோடிகளாக இருந்தவர்கள் சிறைச்சாலைகளில் தங்களுடைய பொன்னான காலத்தை கழித்திருப்பார்கள். எத்தனை ஹார்ட்கோர் போராட்டங்களை முன்னின்று வழி நடத்தி இருப்பார்கள். நமக்கு ஒரு மூன்று தேர்தலுக்காக உழைத்த உழைப்பு பலன் கொடுக்க வில்லை என்றவுடன் இத்தனை ஆயாசத்துடன் சாணக்கியன் ஆகுகிறேன் என்று சகுனி வேலை செய்ய தயார் ஆகிவிட்டீர்களே நீங்கள். சரியா?

திராவிட நாடேதான் வேண்டுமென்றால் மற்றுமொரு ஈழத்தை இங்கே அவர் கொண்டு வந்திருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? மாநில சுய ஆட்சிக்கான அழுத்தத்தை கொடுத்து காரியம் சாதித்துக் கொள்ள எடுத்த வியூகத்தை, நடக்கவே முடியாத விசயத்திற்காக எத்தனை பேர் சுடுகாடு போனார்கள் என்று கேக்குறீர்கள். எது மாதிரியான தர்க்கமிது? 

அன்று அண்ணா சாதுர்யமாக காய் நகர்த்த வில்லை என்றால் இன்றைக்கு உங்களுக்கு இந்த மேடையே கிடையாது என்பதை உணருங்கள். ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கக் கூடாது. நாமதான் முழுந்துறோம்னா கூடவே இரண்டு பேரை சேர்த்து கூட்டிட்டு போவோம்னு நினைக்கக் கூடாது. Come up with some other valid argument, the one you uttered is utter nonsense!

பி.கு: இந்தப் பதிவு 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போது எழுதியது.

கமலஹாசன் சிறுமையின் எச்சம்: Wheelchair Speech

கமலோட சக்கர நாற்காலி ஏகடியம் அவருக்கேயான மிக இயல்பான வளர்ப்பிற்கு பின்னான சிறுமையின் எச்சம். அவரோட நிதானத்தையும் தாண்டி இப்படியான வன்மம் பொங்கி வழிகிறது என்றால், இன்னும் சொற்களாக பேசப்படாத, வக்கிர எண்ணங்கள் எவ்வளவு இருக்கக் கூடும்?

அம்பேத்கர், காந்தி, பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் எதனை உணர்ந்து கொண்டதால் சாதரணர்களைக் காட்டிலும் பன்மடங்கு உழைக்க தழைப்பட்டார்கள்? மரணித்த நொடிகளுக்கு முன்பு கூட அய்யோ செய்ய இன்னும் இவ்வளவு இருக்கும் போது, பாதியிலேயே விட்டுவிட்டுச் செல்லும் படி ஆகிவிட்டதே என்ற வேதனையே அவர்களிடையே தங்கியிருக்கக் கூடும்.
பெரியாரும், கலைஞரும் அந்தப் பரிதவிப்பை தனது உடல் உபாதைகளைப் புறந்து தள்ளி களத்தில் நின்றதே அதற்குச் சான்று. ஒரு தனி மனித வளர்த்தெடுப்பு என்பது, எத்தனை பிரயத்தனங்களை உள்ளடக்கியது? தொடர் பயணம், சமூக உள்வாங்கல், அது தொடர்பான ஊடாடல்கள், போராட்டக் களங்கள், வரலாற்று வாசிப்பு, இலக்கிய அறிமுகங்கள், அது தொடர்பான எழுத்துப் பணி என்று எத்தனை அனுபவம் அவர்களால் சேகரிக்கப்பட்டிருக்கும். அந்த நிறை மனிதர்களின் சமூகம் சார்ந்த ஆழ்ந்த புலமையை, தான் நேசிக்கும் மக்களோட பகிர்ந்து கொள்ள ஒவ்வொரு மணித்துளிகளையும் செலவு செய்திருக்கிறார்கள் என்றால், எத்தனை ஆழ்ந்த மனித நேய passion இருந்திருக்க வேண்டும்.
இத்தனை அறிவும் ஒருவர் மரணிக்கும் போது அவரோடு சேர்ந்தே பேசப்படாத,
வழங்கப்படாத பகுதிகளும் மறைந்து விடுகிறது. காலத்தின் நிலையின்மை உணர்ந்தவன் எப்படி அதனை வீணடிப்பான்? எனவே, ஒரு மனிதரின் நினைவு தவறும் நொடிகளுக்கு முன்பு வரை கூட, ஏரணத்தோடு விசயங்களை தொடர்பு படுத்தி பேசும் திறன் இருக்கும் வரையிலும் அந்த மூளை அந்தச் சமூகத்திற்கு தேவைதான்.
சக்கர நாற்காலியில் அமர்ந்த படியே ஸ்டீவன் ஹாகின்ஸ் போன்ற அறிவியலாளர்களின் வாழ்நாள் சாதனைகளையும் அறிந்தவரே கமல். புரியாமல் எல்லாம் கலைஞர் பொருட்டு பேசி இருப்பார் என்று நான் நம்பத் தயாரில்லை. கமலையொத்த குடும்பங்களின் பேச்சு முழுக்க தமிழ்நாட்டின் இன்றைய நிலைக்கு யார் காரணம் என்று, குறுக்கி வந்தடைந்த புள்ளிதான் இந்தத் திராவிடத் தலைவர்கள். அவர்களின் சப்கான்ஸியஸ் மனம் எப்பொழுதும் இவர்களைச் சுற்றியே இயங்குகிறது.
கமல் பகடியாக பேசியது போல் மற்றுமொரு சிறுமைத் தனமே மோடியை வைத்து, கலைஞரின் இறுதி நாட்களில் அவர் தோளின் மீது கை வைத்து நலம் விசாரிப்பது போல, கலைஞரை திகிலூட்டுவதாக நினைத்து தங்களது வக்கிரப் பகுதியை அவர்கள் சொரிந்து கொண்டதும் என்பேன். அந்தப் புகைப்படத்தை சற்றே உள்வாங்கி ஆராய்பவர்களுக்கு புரியும், துரைமுருகன், கலைஞர் உடற்மொழியை கவனித்தல் பொருட்டு. ஒருவர் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது, ஏதாவது பேசி அது ஒரு மகிழ்வான தருணத்திற்கு இட்டுச் சென்றிருந்தால், அது மோடியின் தோள் தொடுதலுக்கான நட்பு உணர்ச்சி போல் வெளிப்பட்டிருக்க வாய்ப்புண்டு. ஆனால், நான் இந்தச் சூழலை ஒரு திட்டமிட்ட எக்ஸ்ப்ரசனாகப் பார்க்கிறேன்.
கமலின் சக்கர நாற்காலி ஏகடியத்திற்கு இணையானதே மோடி குழாமின் தோள் தொடுதலும். இங்கு மறைமுகமாக இவர்கள் அனைவரையும் இயக்குவது சித்தாந்தச் சமரே!

Wednesday, February 24, 2021

சமூக ஊழலைப் பேசாத சகாயம்!

தமிழ்நாட்டிற்கான அடுத்த அன்னா ஹசாரேவை அனுப்பி இருக்கானுங்க. குழம்பிய குட்டையில் மீன் பிடிச்ச வரைக்கும் லாபம் என்பதே கணக்கு. இந்த மண்டகாசயம் அவ்வளவு நாணயஸ்தராக இருந்திருந்தால், தன் கண்ணுக்கு முன்னால் நடந்த ஒரு ஊழல் திட்டத்தை வைத்தே, பதவி விலகி அதனை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பேன் என்றல்லவா செய்திருக்க வேண்டும்?

அவ்வாறு இல்லாமல் அந்த அரசாங்கத்திடமிருந்தே இத்தனை ஆண்டுகள் சம்பளம் பெற்றுக் கொண்டு, தேர்தலுக்கு இரண்டு மாதத்திற்கு முன்பாக பதவி விலகி இப்படி "#பண_ஊழலே" இந்த #சமூகத்தின் ஏனைய பிரச்சினைகளுக்குமான #பிணி என்று வெற்று கோசம், கமலைப் போல செய்யப் போவது ஏன்?
👉🏿மதத்தை அரசியலோடு கலக்கிறார்களே அது ஊழல் கணக்கில் வராதா?
👉🏿கல்விக்கு செல்லக் கூடிய நிதியை, அனைவரும் கல்வி கற்கும் சூழலை கண்ணிற்கு புலப்படாத இடங்களிலெல்லாம் வைத்து கதவை அடைக்கிறார்களே அது ஊழலில் வராதா?
👉🏿தன் மாநிலத்திற்குள் இயங்கும் மக்கள் சேவை நிறுவனங்களிலெல்லாம் மொழி தெரியாத வெளி மாநிலத்தவர்களை வைத்து நிரைக்கிறார்களே அது ஊழலில் வராதா?
👉🏿மாநில மொழியை தவிர்த்து ஹிந்தி மொழியை உங்க துறைக்குள்ளாகவே திணிக்கிறார்களே அது ஊழலில் வராதா...
👉🏿மக்களாட்சியின் மாண்பையே குலைக்கும் விதமாக வெற்றிப்பெற்ற பிற கட்சி எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கிறார்களே அது ஊழலில் வராதா?

இவற்றையெல்லாம் யார் பேசுவது. இதெல்லாம் யாருடைய பிரச்சினைகள்?
சகயம், இதெல்லாம் எங்க பேசி ஆரம்பிங்க பார்ப்போம். நீங்க அரசியல் கட்சி தொடங்கிறீங்களா இல்லை டிட்டேரியல் கல்லூரி தொடங்கிறீங்களான்னு தெரிஞ்சிடும்.
ஏன்யா! கொடுத்த உத்தியோகத்தில நேர்மையா இருக்கிறது ஒரு தகுதியாய்யா இப்படி ஊரை ஏமாத்த? மனசாட்சின்னு ஒரு விசயம் இருந்தா இந்த நேரத்தில நீங்க இதை செய்ய மாட்டீர்?







ஏன் கலைஞர் கருணாநிதி வெறுக்கவைக்கப்பட்டார்?

 எப்போதுமே நமது மனது புறவயமான மயக்கத்தில் கட்டுண்டு கிடப்பதிலேயே பெரும் உவகை கொள்கிறது. அதற்கென காட்சிப் படுத்தலும், மாயவாத செயல்பாடுகளை காணும் போதும் நாம் வெகு எளிதாக அந்த சூழ்ச்சிகளுக்குள் விழுந்து விடுகிறோம். துப்பாக்கிச் சூடு நடத்திய, பொள்ளாச்சி கூட்டு வன்புணர்வுக்கு காரணமாகிய ஓர் ஆளுங்கட்சி, தேர்தல் கால ஸ்டண்டாக கெடா வெட்டி விருந்து வைத்தாலும், அந்த ஒரு வேளை உணவிற்குப் பின்னாக தாங்கள் இழந்த, இழக்கவிருக்கிற உரிமைகளை எண்ணிப் பார்க்காமல் கை அலம்புகிறோம்.

ஆனால், என்று நாம் ஒரு சமூகமாக மனிதர்கள் பொருட்டு தீர்க்கமான ஆராய்ச்சியின் பால் காரண காரியங்களை கண்டடைகிறோமோ, அன்று கடைசி நேர மாயவாத மயக்களுக்கு நாம் செவி சாய்க்க மாட்டோம்.
எப்படி இவ்வளவு கோமாளித்தனங்களை அரங்கேற்றிய படியே அதிமுக_வால் தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் யாரால் அமரவைக்கப்பட்டு அழகு பார்க்கப்படுகிறது?
ஏன் கலைஞர் கருணாநிதி வெறுக்க வைக்கப்பட்டார்? யாரால் அது போன்ற ஒரு கருத்து, காட்சி கட்டமைக்கப்பட்டது, அவ்வாறு செய்வதற்குபின்னான லாபம் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்போ மேலே வாசிங்க!
🔹️🔹️🔹️🔹️🔹️
எனது முகநூல் பக்கத்திலும், பொதுவான விவாதங்களிலும்...
நீங்கள் கருணாநிதி நல்லவர், வல்லவர் என்கிறீர்கள், ஆனால் மக்கள் அவரை மீண்டும் தேர்ந்தெடுக்கவில்லையே...
நீங்கள் குறை கூறும், அதிமுகவைத் தானே மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கின்றனர்!
ஏன் என்ற கேள்வியை முன் வைப்பார்கள்!!!
நியாயமான கேள்வி, அதற்கான பதிலும் நான் கூறிவிடுவேன்,
இருந்தாலும் ஏற்க மறுப்பார்கள், அது அவர்களது உரிமை என்று அடுத்து விவாதம் செய்ய மாட்டேன்!!!
ஏன் கலைஞரை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கவில்லை!!
காரணம்,
அதிகார பரவலை, பொருளாதார பரவலை, சாதிய ஏற்றத் தாழ்விண்மையை, மாநில உரிமைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்த முயன்றார்!
1. நிலங்களை எல்லோருக்கும் பகிர்ந்தளித்தார்!
2. பேருந்துகளை எல்லோருக்கும் பொதுவாக்கினார்!
3. இடஒதுக்கீட்டை 40% (SC 15%+ BC25%) 48% உயர்த்தி எல்லோருக்கும் கல்வி மற்றும் அரசு வேலைகளை பொதுவாக்கி அதனை உறுதி படுத்தினார்!
4. குடிசை மாற்று வாரியம் மூலமாக, குடிசைகளில் கிடந்தவர்களை அண்ணா நகரில் அடுக்கு மாடிகளில் குடியமர்த்தினார்!
5. குடிசைகளில் வாழ்ந்த பறையர்கள், பள்ளர்கள் சமூக மக்களைப் மக்களைப் பார்த்து "அய்யோ பாவம்" என்று கூறி மகிழ்ந்த குடியானவர்களுக்கு முன்பு, அவர்களை ஓட்டு வீட்டில் வாழ வைத்தார்!
6. உயர்கல்வியை கிராமத்தில் உள்ளவர்களும் படிக்க ஏதுவாக, சென்னை பல்கலைக்கழகத்தை (Madras University) பிரித்து பல பல்கலைக்கழகங்கள் அமைத்து, நிறைய கல்லூரிகளை நிறுவினார்!
7. தாழ்த்தப்பட்டவர்கள் படிக்க ஏதுவாக விடுதிகளை கட்டி விட்டார்!
8. நகரத்தில் மட்டுமே இருந்த வசதிகளை கிராமப்புறங்களுக்கும் விரிவுபடுத்தி விட்டார்! அதனால் நகரத்திற்கு செலவு செய்ய நிதி குறைவாக இருந்தது!
9. பெற்றோர்கள் சொத்தில் பங்கு மற்றும் கல்வி, வேலைவாய்ப்பில் 30% இடஒதுக்கீடு என்று பெண்களுக்கு, அதிகாரத்தை அள்ளி வழங்கி விட்டார்! உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு என்று அரசியலில் பெண்களை முன்னிலை படுத்திவிட்டார்!
10. இந்தியாவிலேயே, உயர் சாதி மக்கள் மட்டுமே கோலோச்சிய நீதிமன்றத்தில், ஒரு பறையர் சமூகத்தைச் சேர்ந்தவரை நீதிபதியாக நியமனம் செய்தார்!
11. சாதிய படிகளில் கீழ் நிலையில் இருந்த கருணாநிதி முதலமைச்சராகி விட்டார்!
12. கட்சியின் மாவட்ட செயலாளர், மாவட்ட ஆட்சியருக்கு இணையானவர் என்று சுதந்திரம் கொடுத்து விட்டார்!
13. மாநில உரிமைகளை பெற, ராஜமன்னார் கமிட்டி அமைத்து, திருமதி இந்திரா அமைச்சரவையிலேயே அதனை சமர்ப்பித்தார்!
14. ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த ஊடகத்துறையில் (சினிமா, அச்சு) தனது ஆளுமையை செலுத்தினார்!
15. எல்லாவற்றுக்கும் மேலாக...
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டத்தை இயற்றி விட்டார்!
விளைவு...
ஊழல் குற்றச்சாட்டு, தனிமனித தாக்குதல்!!!
அதனைத் தொடர்ந்து கலைஞர் ஆட்சிக்கு வரவிடாமல் பார்த்து கொண்டனர்!
சரி, பயனடைந்த மக்கள்........
அவர்கள் பாவம், அறியாமையிலேயே இருப்பவர்கள்!!

Post- Thanks:
Kandasamy Mariyappan
Art Courtesy:
Gokula Varadharajan

Sunday, January 24, 2021

பெரியாரின் பொருளடக்கம்: Periyar In A Nutshell!

நீங்களும் மனிதர்களாகி கொஞ்சமே சிந்திக்க ஆரம்பித்து இதில் ஏதாவது ஒன்றை தொட்டுப் பேசினாலும், வெறுக்கப்படுவீர்கள்.

பெரியார் என்ற மனிதரின் உள்ளடக்கம். 👇
1. இடஒதுக்கீடு,
2. பெண்ணுரிமை,
3. கைம்பெண் மறுமணம், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு,
4. திருக்குறள் மாநாடு,
5. தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் எழுத்து சீரமைப்பு,
6. ஆங்கில மொழியின் அவசியம்,
7. மாநில உரிமைகள்,
8. சாதிய ஒழிப்பு,
9. சமூகநீதிக்காக கடைசி வரையிலும் பாடுபட்டது
10. சுயமரியாதை,
👉11. சனாதன கொள்கையை போட்டுடைத்தது,
12. ஹிந்தி மற்றும் சமஸ்கிருத எதிர்ப்பு.
இத்தனையும் இருக்கும் போது ஏன் பெரியார் "கடவுள் மறுப்பு. (#11)" மட்டுமே பேசினார்னு உருட்டுரானுங்க. அந்த அரசியல் புரிஞ்சிட்டா நீங்க வயசிக்கு வந்திட்டீர் என்று உணர்வீராக!

ட்ரம்ப் அரசவைக்கு பை : Joe Biden's Inauguration!

 "பன்முக கலாச்சாரம் என்பது மட்டுமே அமெரிக்கா அல்ல" - வெளியுறவுத் துறை அமைச்சர், மைக் பாம்பையோ. - செய்தி.

இவர் வெளியேறும் ட்ரம்பு அரசவை அமைச்சர். போறதுதான் போறேன் இந்தா வாங்கிக்கோன்னு அப்படி தன்னோட அக அழுக்கை அவிழ்த்து கொட்டிட்டு போயிருக்கார்.
...Secretary of State Mike Pompeo's tweet that multiculturalism “is not who America is," sent on his last full day at the State Department, infuriated American diplomats who described it as a final insult by the Trump administration...
இன்றும் சரி, அன்றும் சரி அமெரிக்காவை நவீன பொருளடக்கத்தில் "பன்முக கலாச்சாரங்கள் கூடி இரண்டர கலக்கும் (melting pot) நாடு" என்றளவில் தான் புரிந்து கொள்ள முடியும். என்னுடைய 25 ஆண்டு கால வாழ்க்கையில் அப்படியாகத்தான் இந்த நாட்டின் முகம் அறிமுகமாகி அதனை இன்றும் நுகர்ந்து வருகிறேன்.
அப்படியாக இந்த நாடு என்றும் துடிப்போடு இளமையாக இருக்கக் காரணம், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல விதமான எதிர்பார்ப்புகளோடு குடியேறும் மக்களுக்கு அவரவர்களுக்கான ஒரு வாழ்விடச் சூழலை வழங்கி தழுவிக் கொள்கிறது. அவர்களின் அன்றாட பழக்க வழக்கங்களிலும் கூட பெரிதும் தலையிட்டு ஒரு தர்மசங்கடத்தில் தள்ளாமல், அடுத்தவர்களின் மூக்கை தட்டாதவரை ஒகே என்றே பார்த்து பண்புடன் நகருகிறது.
இதுவே இன்றையளவில் நவீன உலகின் நாகரீகக் கூரை எனக் கொள்ளலாம். எனக்கு முதன் முதலில் அறிமுகமான நகரம் நியூயார்க். வாரத்திற்கு இரண்டு நாட்கள் ப்ராடுவேயில் நடந்து திரியத்தக்கதொரு வாய்ப்பு. விதவிதமான மனிதர்கள், மொழிகள் என களைகட்டி பரபரப்பாக இருக்குமொரு இடம்.
ஆனால், அதற்குள்ளும் மைக், ட்ரம்ப் போன்ற மனிதர்களும் தங்களுக்கான வாய்ப்பை எதிர்பார்த்து உறங்கிக் கிடந்திருக்கிறார்கள். அமெரிக்கா என்பது இன்னொரு கிரகத்திற்கு மனிதகுலம் சென்று காலனி ஏற்றம் செய்தால், எப்படியொரு வாழ்வுமுறையை அமைத்துக் கொண்டு அனைவருக்கும் பொதுவான ஒரு அரசை கட்டியெழுப்பி , அங்கு வந்து சேரும் பிற வேற்றுகிரக இனத்தவரையும் அரவணைத்து வாழப் பழகும் ஒரு பயிற்சி கூடத்திற்கு ஒப்பானது.
இங்கு புதிதாக குடியேறிய மக்கள் அந்த அமெரிக்க ஸ்பிரிட்டை புரிந்து கொண்டு கலந்து விடுவது அனைவருக்கும் நல்லது. வெறுப்பில் பேசித் தெரியும் ட்ரம்பை ஒத்தவர்கள் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவர். நம்பி ஏமாந்து சென்று விடாதீர்கள்.
**************************************

வெளியேறும் ட்ரம்ப் பதவியேற்கும் போது, அன்று வந்திருந்த கூட்டத்தின் எண்ணிக்கை கூட பெரியளவில் இல்லை. ஆனால், கூட்டுத்தொகையில் ஏதோ சூடு வைத்து அதீதப் படுத்தி இருந்ததாக நாளிதழ்கள் எழுதின. ஃபோட்டோஷாப்பை வைத்து ஓபாமா பதவியேற்பு விழாவிற்கு நெருக்கமாக கொண்டு வர முயற்சித்தார்கள்.
ஆனால், இன்று அவரின் கரிசனமற்ற, மக்களிடையே வெறுப்பை சம்பாதித்த நிலையில் வெளியேறும் நாளில் சி என் என், Trump departs Washington as a Pariah என்று தலைப்பிட்டு எழுதி இருக்கிறது (எவண்டா, இவிங்களுக்கு அந்தச் சொல்லின் அரசியல் வக்கிரம் புரியாமல் பயன்பாடு சொல்லிக் கொடுத்தது 🙄).
இந்த நிலையில் ஜோ பைடனின் பதவியேற்பு விழாவிற்கு ஹாலிவுட் பிரபலங்களும், பரந்த சிந்தனையாளர்களுமாகிய (லிபரல்ஸ்) டாம் ஹாங்க்ஸ், லேடி காகா, ஜெனிபர் லோபஸ் போன்றவர்கள் வரவேற்பு நிகழ்சி நடத்துகிறார்கள். இதனைக் கவனித்த ட்ரம்ப் தாங்கிக் கொள்ள முடியாமல் "கடுமையான கோபத்தில் உள்ளதாகத் தெரிகிறது."
... Donald Trump is furious that so many top celebrities, including Lady Gaga, Jennifer Lopez and Tom Hanks, are going to feature at president-elect Joe Biden’s inaugural celebrations on Wednesday, in stark contrast to his own event four years ago...
ட்ரம்ப் தனது 2005 மெலோனியாவுடனான திருமணத்தின் போது எல்டன் ஜான், பான் ஜோவி போன்ற பிரபலமான மேற்கத்திய இசை பாடகர்கள் சிறப்பிக்க வாழ்ந்து பார்த்தவர். 2016ல் ஆரம்பித்த அவருடைய அரசியல் அடாவடிகள் பிடிக்காமல், ஹாலிவுட் ஒதுங்கிக் கொண்டது.
இப்பொழுது அவரின் வெளியேற்றத்தை வெளிப்படையாக ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட தயாராகி விட்டது.

Related Posts with Thumbnails