Showing posts with label சீரழிவு. Show all posts
Showing posts with label சீரழிவு. Show all posts

Sunday, February 05, 2023

அறநிலையத்துறையை தனியார்மயமாக்குதல்!

 = கற்காலமாக்குதலியம்!

கடந்த கால சமூக நீதிக்கு எதிரான விடயங்களை போரட்டாங்களின் வழியாக கை வரப் பெற்ற சமூக நீதி சட்டங்களை மீண்டும் திருத்துவது என்பது நாகரீகமடைந்த ஒரு சமூகத்தை மீண்டும் அந்த கற்காலத்திற்கே எடுத்துச் செல்லுவதற்கு ஒப்பானதாகும்.

அண்மைய காலங்களில் அவசர கோலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக சில மத அரசியல் கட்சிகள் கொண்டு வரும் பிரச்சினைகளின் வீச்சத்தைப் பார்த்தால் அதற்கான முயற்சியாகவே படுகிறது.

என்னவோ ஒரு சமூகத்தினர் மட்டுமே பன்னெடும் காலமாக சமூக சீர் திருத்தத்தையும், பொருளாதார முன்னேற்றத்தையும், சமூக ஏற்றத் தாழ்வுகளை நீக்கி நாட்டில் பாலாறும் தேனாறும் ஓட உழைத்த உத்தம புத்திரர்களாக தங்களை வரலாற்றில் தூக்கி நிறுத்திக்   கொள்ள எத்தனிக்கிறார்கள்.

ஆனால், உண்மை என்னவோ அதே வரலாற்று பாதையில் ஓடும் பேருந்தால் நசுங்கி மாண்ட ஒரு வன விலங்கைப் போல மரணித்துக் கிடக்கிறது

ஒரு நாகரீமடைந்த சமூகம் என்பது நாட்டில் வாழும் அனைவரையும் சமமாக பாவித்து அவர்களை அடுத்த கட்டத்திற்கு கூட்டாக அழைத்துச் செல்வது. அதனைத் தவிர்த்து ஏதோ ஒரு காலத்தில் சொரண்டி தின்று உடல் வளர்த்தோம் என்பதால் இந்த நவீன காலத்திலும் அந்த இத்துப்போன கோட்பாடுகளை நடை முறை படுத்த எண்ணுவது எத்தனை சாபக்கேடு ஒரு சமூகத்திற்கே?

சரி பிரச்சினைக்கு வருவோம். ஓர் இரண்டு தினங்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தினுள் தீ, எந்த பொது இடமாகினும் அங்கே விபத்து நடப்பதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளதுதானே? தீ விபத்து ஏதோச்சையாக நடந்தது என்றே வைத்துக் கொள்வோம், அறநிலையத்துறையும் மெத்தனமாகவே இருந்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்... அதற்காக உடனே அந்த அறநிலையத் துறைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அனைத்து அறநிலையத்துறைக்கு    கீழே வரும் கோவில்களையும் தனியார் மயம் ஆக்கி பழைய பஞ்சாங்கப்படி ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்த ஒப்படைக்க வழிவகை செய்து கொடுக்க தடி எடுப்பீர்களா?

கோவில் என்பது ஜஸ்ட் ஒரு கோவில் வளாகம் மட்டும்தானா? எதற்காக அந்த காலத்திலயே அத்தனை போராட்டதிற்கிடையே பெரிய கோவில்களை இந்த "அறநிலையத்துறைக்கு" கீழாக ஒரு அரசாங்கம் கொண்டு வந்தது,அந்த துறைக்கு  கீழ் வருவதற்கு முன்பாக நாமெல்லாம் அந்த கோவிலுக்குள் நுழைந்து அறிய முடிந்ததா?

அந்த கோவிலின் நிர்வாகம் யாரிடமிருந்தது, அங்கு விழும் காணிக்கைகளை யார் எண்ணினார்கள், எந்த வாசப்படி வழியாக அது யாருடைய காஜானவிற்கு சென்றடைந்தது என்று நமக்குத் தெரியுமா?

ஒரு டேட்டா வந்தது. ஒரு பெரிய கோவில் அது அறநிலையத் துறைக்கு கீழ் வருவதற்கு முதல் வருடம் வெறும் 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருமானம் வருவதாக காட்டப்பட்டதாகவும், அடுத்த வருடமே அது 40 லட்ச ரூபாயாக உயர்ந்ததாகவும் அறிந்தோம். அது எப்படி சாத்தியம் மக்களே? கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், கடவுளுக்கு வெகு அருகமையில் இருப்பவர்கள் இப்படியாக ஆயிரம் ஆண்டுகளாக கணக்கு காமித்து வந்திருக்கிறார்கள்.


அது மட்டுமா? ஒரு கிராமத்திற்குள்ளாகவே வாழும் மனிதர்களை பிரித்து இவன் உள்ளே வரலாம், வரக்கூடாது என்று பிரித்து ஆண்டதும் நடக்கிறது, நடந்து வந்திருக்கிறது. 

இவற்றையெல்லாம் களைந்து ஒரு சமூக சமன் பாட்டை கொண்டு வர எண்ணி உருவாக்கப்பட்டதுதான் "அறநிலையத் துறை." இது எத்தனை பெரிய புரட்சி? சமூக சீர் திருத்த எட்டல்??

இதனையெல்லாம் சீர் படுத்த ஒரு அரசாங்கம் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து முறைமைப்படுத்துவது எப்படி தவறாகும்? அந்தத் துறை இன்றைக்கு சற்றே சீர் குலைந்து அதனில் நிர்வாகச் சீர் கேடுகள் நடக்கிறது என்றால் உடனே ஊசி காதுக்குள் ஒட்டகத்தைத் திணிப்பது போல மீண்டும் கோவில்களை பழைய சுரண்டலுக்கே தனியார் வசம் ஒப்படைத்து விடுங்கள் என்று சந்தில் சிந்து பாடுவது யார்? எதற்காக?

எது எப்படியோ மக்கள் சிந்திப்பதற்கேனும் இது போன்ற நாகரீகமடைந்த ஒரு சமூகத்தில், இன்னமும் அந்த இடத்திற்கு தங்களை நகர்த்திக் கொள்ள முயற்சிக்காத கயவர்களை அடையாளம் காணவும், இந்த பிரச்சினையை ஒட்டி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்றவுமாவது இது உதவுகிறதே என்ற வகையில் அந்த பொய்யர்களுக்கு இந்த தருணத்தில் ஓர் நன்றி!


#மீள்

#AdmkFails _2018

Wednesday, February 24, 2021

சமூக ஊழலைப் பேசாத சகாயம்!

தமிழ்நாட்டிற்கான அடுத்த அன்னா ஹசாரேவை அனுப்பி இருக்கானுங்க. குழம்பிய குட்டையில் மீன் பிடிச்ச வரைக்கும் லாபம் என்பதே கணக்கு. இந்த மண்டகாசயம் அவ்வளவு நாணயஸ்தராக இருந்திருந்தால், தன் கண்ணுக்கு முன்னால் நடந்த ஒரு ஊழல் திட்டத்தை வைத்தே, பதவி விலகி அதனை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பேன் என்றல்லவா செய்திருக்க வேண்டும்?

அவ்வாறு இல்லாமல் அந்த அரசாங்கத்திடமிருந்தே இத்தனை ஆண்டுகள் சம்பளம் பெற்றுக் கொண்டு, தேர்தலுக்கு இரண்டு மாதத்திற்கு முன்பாக பதவி விலகி இப்படி "#பண_ஊழலே" இந்த #சமூகத்தின் ஏனைய பிரச்சினைகளுக்குமான #பிணி என்று வெற்று கோசம், கமலைப் போல செய்யப் போவது ஏன்?
👉🏿மதத்தை அரசியலோடு கலக்கிறார்களே அது ஊழல் கணக்கில் வராதா?
👉🏿கல்விக்கு செல்லக் கூடிய நிதியை, அனைவரும் கல்வி கற்கும் சூழலை கண்ணிற்கு புலப்படாத இடங்களிலெல்லாம் வைத்து கதவை அடைக்கிறார்களே அது ஊழலில் வராதா?
👉🏿தன் மாநிலத்திற்குள் இயங்கும் மக்கள் சேவை நிறுவனங்களிலெல்லாம் மொழி தெரியாத வெளி மாநிலத்தவர்களை வைத்து நிரைக்கிறார்களே அது ஊழலில் வராதா?
👉🏿மாநில மொழியை தவிர்த்து ஹிந்தி மொழியை உங்க துறைக்குள்ளாகவே திணிக்கிறார்களே அது ஊழலில் வராதா...
👉🏿மக்களாட்சியின் மாண்பையே குலைக்கும் விதமாக வெற்றிப்பெற்ற பிற கட்சி எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கிறார்களே அது ஊழலில் வராதா?

இவற்றையெல்லாம் யார் பேசுவது. இதெல்லாம் யாருடைய பிரச்சினைகள்?
சகயம், இதெல்லாம் எங்க பேசி ஆரம்பிங்க பார்ப்போம். நீங்க அரசியல் கட்சி தொடங்கிறீங்களா இல்லை டிட்டேரியல் கல்லூரி தொடங்கிறீங்களான்னு தெரிஞ்சிடும்.
ஏன்யா! கொடுத்த உத்தியோகத்தில நேர்மையா இருக்கிறது ஒரு தகுதியாய்யா இப்படி ஊரை ஏமாத்த? மனசாட்சின்னு ஒரு விசயம் இருந்தா இந்த நேரத்தில நீங்க இதை செய்ய மாட்டீர்?







Saturday, January 09, 2021

அமெரிக்க மக்களாட்சி உலகிற்குச் சொல்லும் செய்தி என்ன?

 மனிதனுக்கு புகழ் போதையும், கர்வமும் கூடவே கட்டற்ற அறியாமையும் ஒன்றித்து தனக்கு தகுதியற்ற அதிகாரமும் கிடைத்துப் போனால் என்னவாகும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு அதிபர் ட்ரம்ப். இவர் உலகமே அன்னார்ந்து பார்க்குமிடத்தில் இருக்கும் இத்தனை பெரிய மக்களாட்சி அரசாங்கத்திற்கு அதிபரானது ஓர் விபத்து என்றால் மிகையாகாது.

கடந்த நான்கு ஆண்டுகளும் இவர் மைனாரிடிகள் பொருட்டு காட்டி வந்த வெறுப்பு என்பது சொல்லிலடங்காதது. பிறக்கும் போதே வாயில் வெள்ளி ஸ்பூனூடன் பிறந்ததாலோ என்னவோ பிற மனிதர்கள் பொருட்டான கரிசனம் என்பது மருந்துக் கூட இவரிடம் காண முடியாது.


இப்பொழுது தேர்தலில் தான் தோல்வியடைந்தாலும் அதனை நாகரீகமாக ஏற்றுக் கொண்டு நகரும் பண்பு இல்லாத குணத்தால், தான் ஏற்கெனவே ஊட்டி வைத்திருந்த நச்சுக் கூட்டத்திற்கு தூபம் போட்டு உலகமே பார்த்து சிரிக்கும் வகையில் ஒரு கூத்தை அரங்கேற்றி கோமாளி ஆகி நிற்கிறார் உலகரங்கில்.இவரின் பேச்சும் ரசனையும் கொஞ்ச கொஞ்சமாக ஊர்ப்புறம் வாழும் படிக்காத வெள்ளையினத்தவரையும், படித்திருந்தாலும் பிற இன மக்களின் மீது வெறுப்பை வைத்திருப்பவர்களுக்கும் மனதிற்கு நெருக்கமான மனிதராக்கிவிட்டிருந்தது. நான் வாழும் மாகாணத்தில் பார்க்க பண்பாடான மனிதராக இருக்கிறாரே என்று ட்ரம்ப் உதிர்க்கும் வார்த்தைகளை வைத்து, யேய், என்னப்பா இப்படியெல்லாம் பேசுகிறார் என்றால், அதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்பவர்களே அதிகம். அந்தளவிற்கு வெறுப்பு என்ற நச்சை ஊட்டி வந்தார்.

இது அமெரிக்காவிற்கான அவமானமாக நான் பார்க்கவில்லை. ஒரு முட்டாளின் ஆதி அந்தம் தெரியா தற்குறித்தனமான ஒருவரிடத்தில் ஆட்சி அதிகாரம் கையளிக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதையே காட்டக் கூடிய நிகழ்வாகப் பார்க்கிறேன். அந்த இடம் தாமஸ் ஜெஃப்பர்சன், லிங்கன், ரோசவெல்ட், கென்னடி போன்ற சிறந்த மனிதர்கள் வந்து போன இடம், இன்று இப்படி ஒரு மனிதர் அந்த இடத்தை கடந்து சென்றிருக்கிறார்.

ட்ரம்ப் அடித்த அத்தனை அலுச்சாட்டியத்தையும் இவருக்கு முன்னால் வந்து போன
அந்த மனிதர்களின் மாண்பே மக்களாட்சியின் பொருளை காப்பாற்றி இன்று கரை சேர்த்திருக்கிறது. இதுவே உலகத்திற்கு அமெரிக்காவின் ஓர் ஒழுங்குடன் ஒழுகும் டெமாக்ரசி சொல்லும் செய்தி!

இதுவே ஒரு நாள் இந்தியாவிற்கும் டெஸ்டிங் டைமாக வரலாம். இப்பொழுது அந்த திசையை நோக்கித் தான் நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். நல்வாய்ப்பாக அமெரிக்காவின் ஊடகங்களும், நீதித் துறையும் இந்திய அளவிற்கு சிதைந்து போய் விடாமல் இருந்ததால் இன்று அமெரிக்க டெமாக்ரசி மிக்க சேதாரமில்லாமல் மீட்டெடுக்கப்பட்டுக் கொண்டுள்ளது.

ஆனால், நம் நாட்டில் அதற்கும் வாய்ப்பில்லை. இருண்ட காலம் நமக்கு முன்னால் காத்திருக்கிறது. மீட்டெடுப்பு என்பது மற்றுமொரு சுதந்திர போராட்ட நிகழ்வைக் காட்டிலும் மிக்க உழைப்பை கோரி நிற்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை.

Thursday, December 31, 2020

ஜாதியவாதிகளை பகடி செய்வது தகுமா?

படிக்கிற வயசில போராட்டம், அரசியல் தேவையா?

அரசியல் ஒரு சாக்கடை. படிக்கிற வயசில என்னாத்திற்கு கொள்கை, போராட்டம், ஆர்பாட்டம்னு "அதே கண்கள்" ரேஞ்சிற்கு நம்ம அந்நியன் சங்கர் பட அரசியல் டயலாக் மாதிரி, மத்யமர் மாதிரி குழுக்கள்ல ஓடும்.

இதோ கீழே ஒரு மாதிரி-
...கடை வியாபாரம் செய்வதற்கானது, அரசியல் பேசுவதற்கான இடமல்ல என்றார்.
மிகவும் சரியாகச் சொன்னீர்கள்.
கல்லூரிகளும் கல்வி கற்பதற்காகவே உருவாக்கப் பெற்றவை, அரசியல் பேசுவதற்கோ ஆர்பாட்டம் செய்வதற்கோ அது சட்டப்படியான இடமல்ல.
எனவே கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கல்லூரிக்குள் இருந்து கொண்டு அரசியல் பேசக்கூடாது, அரசியல் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது.
கல்லூரிகள் கற்பதற்கான இடம், அரசியல் செய்வதற்கான இடமல்ல. ஆசிரியர்கள் கற்பிப்பதற்கானவர்கள்.
அரசியலில் கொள்கை ரீதியான எதிர்ப்பு உள்ளதா ? கல்லூரிகளை விட்டு வெளியேறி வந்து நான்றாகப் போராடலாம் என்றேன்.
எனது நண்பருக்கு எனது இந்தப் பதிலில் திருப்தியில்லை.
நண்பர்களே உங்களுக்கு எனது பதில் சரியென்று தோன்றுகிறதா?
●●●●●●●●
அங்கே என்னோட ஒரு கமெண்ட் 👇. அப்படி கேட்டவர் ஒரு முனைவர், பேராசிரியர் என்பது கூடுதல் தகவல்.
அப்போ political science, law படிக்கும் வயசு என்ன? படிக்கும் வயதில் இந்திய constitutional rightsலிருந்து, இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு, யார் வந்தா போனான்னு பண்டைய கால வரலாறு என்று அனைத்தும் சொல்லிக்கொடுக்கப்படணும்.
ஓட்டுப் போடுற வயசு என்ன? அவர்களை இன்று அரசியல் படுத்தினாத்தானே படித்த இளைஞர்களை நாளை நம்மால் அடையாளம் காண முடியும். பின்பு ஏன் பெரும் பெரும் பல்கலைக்கழகங்களில் இடது, வலது (ABVP) போன்றவகளை புழங்க விடுகிறார்கள்? நம் வாழ்க்கையில் எதில் அரசியல் குறுக்கிடாமல் இருக்கிறது? எல்லாவற்றிலும் அரசியல் உண்டு. ஏதோ அடிச்சி விட்டுட்டு வந்திருக்கீங்க. @@@@@@@@@

ஜாதியக் கருவத்தில் அறியாமையின் உட்சத்தில், அறிவியல் உண்மைக்கு மாறாக, இன்னா ஜாதியில் பிறந்தவருக்கு இசை வரும், பணம் பண்ண வரும், வீரம் வரும், மலம் அள்ள வரும் என்று ஒரு நாகரீமடைந்த சமுகத்தில் சொல்லித் திரிபவர்களை கிண்டல் செய்யும் தொனியில் "நீயா நானாவில்" TRPக்காக செய்வது மனித செயலற்றது என்ற ரேஞ்சிற்கு இரக்கப்படுவது சரியா?
சரியில்லை. ஏன்? ஒரு கிராமத்திலிருந்து முதன் முறையாக விமானத்தில் பயணிக்கும் ஒருவர் தடுமாறுவதோ, அல்லது எஸ்கலேட்டர் ஏறப் பயப்படுவதோ புரிந்து கொள்ளக் கூடியது. நாமே நமக்கு பழக்கமில்லாத குளியலறையில் தண்ணீர் திறந்து விடும் புதிய திறப்பான்களை தடவி முழித்து கொண்டிருப்பதில்லையா, அது போலத்தான். அங்கே நவீன வாழ்வின் பொருட்டு ஒருவருக்கு கிடைக்காத, பொருட்கள் சார்ந்த அறிமுகமின்மை; உடனடியாக திருத்திக் கொள்வோம். அது சூழலின் பொருட்டு அமைவது அதனை கிண்டல் செய்தால், பகடி செய்பவரின் வெளி உலக ஊடலும் அடுத்தவர் பொருட்டு கரிசனமும் அற்ற நிலையை காட்டத்தக்கது.
அதே நேரத்தில் ஜாதிய மனநிலை என்பது திமிரின், மன நோயுற்ற நிலையின் உச்சத்தில் வருவது. அது சக மனிதனை தன்னை விட குறுக்கிப் பார்க்கும் புத்தியை தனக்குள்ளாகவே வளர்த்தெடுத்து போகும் போக்கில் அடுத்தவர்களை அந்த கண்ணோட்டத்தில் வைத்து பார்க்கச் சொல்லுவது. அவர்களுக்குத் தேவை திடுக் விளிப்பே...! அந்த "கர்வக்குமிழியை" சிறிதே நெருடி யோசிக்க வைப்பது. எனவே தவறாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

Tuesday, April 09, 2019

ரஜினிக்கு ஒரு கடிதம்: நதிநீர் இணைப்பு

பாஜக ஆட்சிக்கு வந்தால் உடனே நதிகளை இணைக்க வேண்டும் - ரஜினி காந்த்.

அளவிற்கு மீறிய புகழ், பணம், அதிகாரம் இது எல்லாமே ஒரு நிலையில் காலம் ஒருவருக்கு வைத்த செக்மேட் அல்லது சாபம் எனக் கொள்ளலாம்.

இவைகள் அனைத்தும் கிடைத்தும் ஒருவருக்கு தன்னுடைய லிமிட், டிலிமிட் அறிந்து கொள்ளத் தேவையான தனக்கென நேரம் செலவழிப்பு, நல்ல புத்தகங்கள் வாசிக்கத் தேவையான மன நிலை, தன்னுடைய நிலைக்கென தன்னிடம் பழகும் மனிதர்களைத் தாண்டிய நட்பு பேணும் மனநிலை அமைவது என்பது சிம்ம சொப்பனமே!

உண்மையான "டவுன் டு எர்த் பர்சன்" என்பது அதுவாகத்தான் இருக்க முடியும். எளிமை, பணிவு, பக்குவம் என்பதும் அந்த உலகத்தின் கூரையில் தான் இருக்கிறோம் என்றாலும், இடம், பொருள் தன்னுடைய அறிவிற்கு இதைச் சொல்வது பொருத்தமானதா என்று அறிந்து பேசுவதில் இருக்கிறது.

இந்த நதிநீர் இணைப்பை பற்றி இந்த சூப்பர் ஸ்டார் தொடர்ந்து தன்னுடைய மட்டித் தனமான வாதத்தை வைக்கிறாரே, இவர் இந்த பூமியுனுடைய இரண்டு பில்லியன் ஆண்டுகளின் படிமலர்ச்சிப் பற்றி ஏதாவது வாசித்திருப்பாரா?

கடந்த 600 மில்லியன் ஆண்டுகளுக்குள் எது போன்ற கரடு முரடான வளர்ச்சிகளை இந்த பூமி முகம் கொடுத்து வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் செலுத்தி இருப்பாரா? ஏன் அவ்வளவு தூரம் போகிறோம் பெர்மியன், ட்ரையாசிக், ஜுராசிக், க்ரேட்டேசியஸ் என்ற பூகோள கால க்ரமத்தில் என்னவெல்லாம் இந்த பூமி மேலோடு மாற்றங்களை சந்தித்திருக்கிறது என்று அவருக்கு யாராது சொல்லி இருப்பார்களா?

300 மில்லியன் ஆண்டுகள் வரைக்குமே கண்டங்களே இல்லாமல் ஒன்றாக பாஞ்சியா (Pangea) என்ற முழுப் தரைப்பகுதியாகத்தான் இந்த பூமி இருந்திருக்கிறது. ஒரே கடல்தான்.

டைனோசார்கள் கோலுச்சிக் கொண்டிருந்த காலத்தில்தான் நிலப்பரப்பு பிய்த்துக் கொண்டு தனித்தனியாக கண்டங்களாக நகர்ந்திருக்கிறது. அப்பொழுது ஏற்கெனவே ஓடிக் கொண்டிருந்த நதிகள், ஆறுகளுக்கெல்லாம் என்ன வாகி இருக்கும்?

இருந்த பெரிய ஆறுகள் காணாமல் போயிருக்கும் அத்துடன் அதனையொட்டி வாழ்ந்த உயிரினங்கள் மெல்ல மெல்ல அழிந்துப் பட்டிருக்கும். பூமியின் மோலோடு மாற்றி அமைக்கப்பட்டதால் புதிய ஆறுகள் அதனதன் வழியை கண்டுபிடித்து உருவாகி இருக்கும். அதனையொட்டிய நிலப்பரப்பில் அதனையொட்டிய சுற்றுச்சுழலுக்கு தகுந்த தகவமைவுகளுடன் உயிரினங்கள் உருவாகி படிமலர்ச்சி அடைந்து கொண்டிருக்கும்.

இவை எதுவுமே ஒரே இரவில் அடைந்த மாற்றங்கள் கிடையாது.
கோடிக்கனக்கான ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. இந்த பின்னணியில் வைத்து நம்மை பார்த்தால், நாம் யார் இந்த பூகோளத்தின் வரைபடத்தை திருத்தி எழுதிக் கொள்ள? அப்படி நதிகளின் வழியை திருத்தி அமைக்கும் பொழுது எது போன்ற நீண்ட கால மாற்றங்களை இந்த சுற்றுப் புறச் சூழல் முகம் கொள்ளும் என்று சிந்தித்தது உண்டா, மிஸ்டர். சூப்பர் ஸ்டார்?

அன்று தழைத்து, கொழித்து வாழ்ந்து வந்த டைனோசார்கள் இன்று எங்கே? எதனால் அவைகள் அழிந்து பட்டிருக்கக் கூடும்? நீரும், உணவும் தானே அடிப்படை ஆதாரம் அனைத்து உயிரினத்திற்கும் ஆறுகள் தன்னியல்பில் தனது பாதை கண்டு கடலில் கலப்பது தானே காலச் சக்கரம் அதற்கு வழங்கிய இயல்பு. இதில் உங்க ஒரு கோடி ரூபாய் கொண்டு வேண்டுமானால் இருக்கும் குளம், குட்டை, ஆறுகளை தூர் வார கொடை அளியுங்கள்.

போகாத ஊருக்கு வழி காட்டாதிங்க. செலவு மிச்சம்னு.

யாரோ சொல்கிறார்கள் என்பதால் லாஜிக் இல்லாத தன்னுடைய அறிவிற்கு எட்டாத விசயத்தை எல்லாம் உளரி வைக்கக் கூடாது. தானே தேடிப் படித்து, சிந்தித்து பெரும் பெரும் பிரச்சினைகள் பொருத்து வாயை விட வேண்டும்.

உங்களுக்கு ஒரு புத்தகம் சிபாரிசு செய்கிறேன். ஆராய்ச்சிக்கான புத்தகமே ஆனாலும் ஒரு சினிமாவிற்கு உண்டான பிரமாண்டம் இருக்கிறது. உங்களது வாழ் நாளுக்குள் வாசியுங்கள். பிறகு நதிநீர் இணைப்பு பற்றி பேச கொஞ்சம் யோசிப்பீர்கள்.

The Rise and Fall of the Dinosaurs: A New History of a Lost World by Stephen L. Brusatte

Thursday, February 21, 2019

5, 8th STD பொதுத்தேர்வு குலக்கல்விக்கான நுழைவுவாசல்!

நியூஸ் 18ல குணசேகரன் 5 மற்றும் 8 வகுப்பிற்கு பொதுத் தேர்வு தேவையான்னு தலைப்பு வைச்சு அழகான கேள்விகளோட நகர்த்தும் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். ஒரு பதினைந்து நிமிடம் தான் அதுவும் அந்த உலகமகா மேதாவி பத்ரி வாய திறக்கிற வரைக்கும்தான் முடிஞ்சது.
தெரியாமத்தான் கேக்குறேன் அதெப்படிடா ஊருக்கே ஒத்து வராத ஒரு விசயம் உங்களுக்கு மட்டும் சரின்னு படுது? எங்கிருந்து உங்க மாதிரி ஆளுங்களுக்கு மட்டும் இத்தனை அறிவு பொத்துகிட்டு மண்டைக்குள்ளற இறங்குது.
ஒரு பத்து வயது பிள்ளைக்கு ஐந்தாவதுல இருக்குடி உன்னோட வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏத்தன்னு மிரட்டி மிரட்டியே பள்ளிக்கு அனுப்பினா அந்தப் பிள்ளை விளங்குமா? நீயெல்லாம் அமெரிக்காவில வந்து என்னாத்தை நொட்டிட்டு போயி அங்க சமூக காராச்சேவை ஆற்றப் போயிருக்க? பிள்ளைகளின் குழந்தமையை முளையிலேயே கிள்ளி போட்டுட்டு அப்படி என்ன மாதிரி வாழ்க்கையை வாழ கத்துக் கொடுக்கிறீங்க?
ஃபெயில் செஞ்சு மீண்டும் அதே வகுப்பிற்கு அனுப்பினா ஒவ்வொரு நாளும் எவ்வளவு அசிங்கமாக ஃபீல் செய்யும் அந்த பிஞ்சு மனசு. படுக்கையை விட்டு எழ ஆர்வம் வருமா? ஏன் பத்தாவது, பணிரெண்டாவது பிள்ளைங்க மதிப்பெண் அழுத்தத்தில தங்களை தற்கொலைக்கு தள்ளிக்கிறது போதாதா? அதையும் இன்னும் குறைத்து 10 வயசிலயே யோசிக்க சொல்லுறீங்களா?
இப்படி மிரட்டி பள்ளிக்கு அனுப்பினா அந்த மனசு எப்படியான பயங்களோட தன்னை வளர்த்தெடுத்து அடுத்த நிலைக்கு எடுத்துட்டுப் போகும்? பத்ரி கேக்குறார், ஏன் அப்போ பத்தாவது, பணிரெண்டாவது பிள்ளைங்களுக்கு பொதுத் தேர்வு வைக்கணும், ஏன் கல்லூரியிலயே வைக்கணும் அதுங்களும் பிள்ளைங்க தானே, அதுங்க என்ன பாவம் பண்ணுச்சின்னு கிண்டல் மசிறு வேற ...மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுற கணக்கா. இதெல்லாம் இன்னும் எத்தனை வக்கிரத்தை உள்ளர போட்டு பூட்டி வைச்சிக்கிட்டு சாந்த சொரூபியா குரலை தனிச்சு, முடியல!
மிடில் ஸ்கூல் வரைக்குமே வகுப்பறையில் குழந்தைகளை கவனிச்சு அவுங்களுக்கு என்ன தேவைன்னு கவனிச்சு, ஆசிரியர்கள் மாணவர்களுக்கிடையே இருக்கக் கூடிய பரஸ்பர நம்பிக்கையை எப்படி வளர்க்கிறது, அதன் மூலம் எட்டக் கூடிய தன்னம்பிக்கையை எப்படி அதீதப்படித்தி தாங்கள் கற்றுக்கொள்ளும் விசயங்களை தன்னெழுச்சியா உள்வாங்கி பிற்காலத்தில் அவனவனும் சொந்தமா சிந்திச்சு அவனவன் துறையில சிறக்கும் படியா facilitate செய்ய முடியுங்கிற வழியப் பாருங்க.
அதை விட்டுட்டு அந்த குழந்தைகளோட சிரிப்பையும் வாழ்க்கையையும் திருட நிக்காம. எனக்கு புரியுது அவிங்களுக்கு கை நிறைய வேலைய கொடுக்கிற மாதிரி குழந்தைகளோட பெற்றோர்களுக்கும் அள்ளி வைச்சிட்டா நீங்க பிற்காலத்தில் செய்யப்போற அயோக்கியத்தனம் ஒன்னுக்கும் ஒருத்தனும் தெருவிற்கு வர மாட்டான்... அதுக்கும் சேர்த்து ஓர் ஆப்பு அடிச்ச மாதிரி இருக்கு 5, 8, 10, 11 அண்ட் 12. சரியா போச்சா மக்களே!
சில மூஞ்சிகளை நினைச்சாவே குமட்டிக் கொண்டு வருகிறது. உங்களோடெல்லாம் இன்றைய என்னுடைய இருப்பை பகிர்ந்துக்க நேர்ந்ததை நினைச்சாவே கேவலமாக இருக்கிறது. இதெல்லாம் ஒரு பிழைப்பா!?

https://www.youtube.com/watch?v=eYBWJxMDHnI&fbclid=IwAR3WgI4e65bbzpSUJt6-V0KHFlynvJeyUFQA5nux-5UYw6jOJIz_x7-xOZ8

Sunday, April 15, 2018

நிர்மலா தேவி, யார் அந்த பெரிய இடம்?

நிர்மலா தேவி, யார் அந்த பெரிய இடம்? இதற்கான பதிலில் இது போன்ற அவலங்களுக்கான தீர்வு இருக்கிறது.
விருதுநகர் கல்லூரியின் விரிவுரையாளர் நிர்மலா தேவி என்பவர் இன்றைய இந்தியாவின் நவீன சுரண்டல் அமைப்பின் ஒரு குறியீடு என்றளவிலேயே இதனை அணுக வேண்டியதாக இருக்கிறது. இந்த செய்திகளின் அடிப்படை அணுகுமுறையிலேயே ஒரு தவறு இருக்கிறது.
நாம் யாரும் அதனை நோக்கி கேள்வி எழுப்பவோ, கவனிக்கவோ நம்மை தயார்படுத்தவில்லை. அந்த ஒலிக்கோப்பு முழுதுமாக கேட்டால், நிர்மலா, தான் ஓர் அம்பு மட்டுமே எய்தவர்கள் நம்மை விட பெரிய இடத்தில் உள்ளவர்கள், நம்முடைய வாழ்க்கையையேப் புரட்டிப் போடும் அதிகாரத்தைக் கொண்டவர்கள் என்று கை சுட்டும் இடம் மிகப் பெரிய அதிகார மையமாக இருக்கிறது.
எந்த ஊடகமாவது, யார் அந்த பெரிய தலை? எது போன்ற அதிகார மையமது? இதற்கு பதில் தேடி அதனை நோக்கி தங்களுடைய துப்பு துலக்கும் ஊடகப் பணியை மேற்கொள்ளும் நிழல் கேள்விகளை எழுப்பியதா? இல்லைதானே? அப்படியெனில் டிஸ்கவரி சானலில் நாம் ஒரு வித அச்சத்தினூடும், வெறுப்போடும் அதே நேரத்தில் விரும்பிப் பார்க்கும் புலி ஒரு புள்ளி மானின் குட்டியை துரத்தி குரல்வளையை கடித்து சாகடிக்கும் ஒரு நிகழ்வை பார்க்கும் அதே வக்கிரத்தோடுதானே இதனையும் ரசித்து ஒரு சாஃப்ட் போர்ன் ஒலி அளவில் கேட்டு அதிர்ச்சியுறுவது போல மகிழ்ந்து கேட்டு நகர்கிறோம்?
இந்த ஊழலை, மாசுபாட்டை நிர்மலா என்ற ஒற்றை நபருடன் சுருக்கிவிட முடியுமா? இதற்கு பின்னான காரணிகளை நாம் அரசியல், சமூக, மக்கட்பெருக்க நிலை, அதிகார முறைகேடு இத்தியாதிகளுடன் தொடர்பு படுத்தி எப்படி இதனை நேர்கொள்ள வேண்டுமென்று எண்ண வேண்டாமா?
ஒலிக்கோப்பிில் அந்த நிர்மலா மிகத் தெளிவாக கூற வருவதில் இவை அனைத்தும் அடங்கி இருக்கிறது. அவர் வார்த்தைகளிலே ஓரிரு இடங்களை மேற்கோள் காட்டுகிறேன் - இது ஒன்றும் புதிதல்ல, எங்கும் நடக்காததும்அல்ல. உங்களுக்கே தெரிந்திருக்கும். உங்களுடைய எதிர்காலம் நீங்கள் ஆசைப்படும் இடத்திற்கு கொண்டு செல்ல அந்த ‘பெரியவர்கள், அதிகார மையம்’ அனைத்தையும் கடந்து உதவி செய்யும்.
அதற்குள் இருக்கும் பொருள் பொதிந்த, கையாலாகாத , மிரட்டல் தொனியும் நாள்பட்ட வியாதித்தன்மையின் அயற்சியுமாகத்தான் எனக்கு நிர்மலாவின் உரையாடல் புரியத் தந்தது.
நான் கல்லூரிகளில் படிக்கும் பொழுதே சக மாணவிகளுக்கு இது போன்ற நூல் விட்டுப் பார்த்தல் நடந்து கொண்டு வருவதாகத்தான் அறிகிறேன். இத்தனை மக்கட் தொகை கொண்ட தேசத்தில் இது போன்ற நிகழ்வுகள், அழைப்புகள், முறைகேடுகள் நடக்காமல் இருந்தால்தான் விந்தை. படி, படி, படி நல்ல மதிப்பெண் எடுத்தால்தான் வாழ்க்கை என்று நான்கு வயதில் ஆரம்பித்து 26 வயது வரைக்குமே அந்த மதிப்பெண்கள் என்ற குத்தூசி வைத்து விரட்டும் பொழுது அங்கே மாசுபாடு ஏற்படாமல் போகுமா?
இதற்கிடையில் அப்பாடு பட்டு நல்ல மதிப்பெண்களுடன் தேர்வாகி விட்டால் கூட உடனடியாக அந்த போட்டிக்கிடையே வேலைதான் கிடைத்து விடுகிறதா? ஒரு அரசாங்க காலி இடத்திற்கு ஒரு லட்சம் விண்ணப்பம் வருகின்ற சூழலில் எப்படித்தான் பின்னே தங்களை முன்னிறுத்திக் கொள்வது என்ற அயர்ச்சி வரத்தானே செய்யும். அதனைத்தான் நிர்மலாக்களின் மூலமாக ’அதிகார மையங்கள்’ ஆசை வார்த்தைகளைக் கூற வைத்து ஆள் பிடிக்கும் அவலத்திற்கு தள்ளி விடுகிறது.
நிர்மலாக்களுக்கு குறுக்கு வழியில் தாங்கள் இனிமேல் இழக்க ஒன்றுமேயில்லை எனவும், போட்டியில் தனது சக துறைசார் தோழமைகளிலிருந்து துருத்தி நிற்க அவர்களும் இந்த மாசுநிலைக்குள் தள்ளிவிடப்பட்டு பிரிதொரு நாள் அனுபவ பின்புலத்தில் ஆள் சேர்ப்பு பணிக்கும் எத்தனிக்கும் நிலைக்கு சென்று விடுகிறார்கள்.
இங்கே இந்த மாசுபாட்டின் ஆணி வேர், தோற்றுவாய் எங்கே இருக்கிறது என்று யாருமே பேசவில்லையே! நம்முடைய விரல் சுட்டு அது வரையிலும் நீளாத வரை இவைகளை நாம் அடைக்க முடியாது. கசிந்து கொண்டே தான் இருக்கும். ஏனெனில் இன்றைய போட்டி நிலை அப்படி. ஏதோ ஒன்றை தொற்றிக் கொண்டு தான் தங்களை அந்த இடங்களுக்கு நகர்த்திக் கொள்ள வேண்டிய அபத்த நிலை. அது பணமாக, அதிகார சேகரிப்பாக, வலைபின்னும் நோக்கமாகவென பல அவதாரங்களாக பரிணமிக்கிறது.
இது நமது சமூகச் சூழலில் எந்த துறைக்கும் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும்.

Monday, April 09, 2018

தம்பிகளே இழப்பதற்கு இங்கே ஏராளமிருக்கிறது!

ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னா மெய் ஆகிடுமா? காமராசர் காலத்திற்கு பிறகு வளர்ச்சியே இங்கே இல்லையென்றால் எதனைச் சுரண்ட கட்டி எழுப்பிய அரசு கல்வி நிறுவனங்களை பட்டப் பகலில் ஜோப்படி செய்ய முயற்சிக்க வேண்டும்? ஒரு மாநில அரசே அந்த ஊர் மக்களின் உழைப்பில் உருவாக்கிய மருத்துவக் கல்லூரிகளில் எது போன்ற தேர்வுகளை நடத்தி மாணவர் சேர்க்கை செய்ய வேண்டுமென்ற உரிமையில் தலையை நுழைக்க வேண்டும்?
அரசாட்சி நடத்தவே தகுதியற்ற ஒருவருக்கு சரியான நேரத்தில் கோர்ட் தீர்ப்புகளை வழங்காமல் தள்ளிப் போட்டு, தேர்தலில் வெற்றியை வழங்கி, பிறகு அவரது மரணத்திற்கு பின்னாக, மீன் வலை போட்டு அள்ளியது போல அரசியல் ஞானமற்ற, அறமற்ற, எதிர்கால திட்டங்கள் ஏதுமற்ற பல சில்லுண்டித் திருடர்களை கொத்தாக வைத்துக் கொண்டு திரைமறைவு அரசியல் செய்வதா? அரசியல் அறம், மரபு?
இதனைச் செய்வதற்கு சிறிதும் அஞ்சாதவர்கள் மக்களாட்சியை எந்த குழிக்குள்ளும் தள்ளி புதைக்க மாட்டார்கள் என்பதில் என்ன சந்தேகம் இருந்திட முடியும்? ஒரு மாநிலம் கிடைத்த வளத்தைக் கொண்டு தன்னாலான அளவு வளர்ச்சியைக் காட்டி பிற மாநிலங்களோடு ஒப்பிடும் வாக்கில் சற்றே உயரத்தை காட்டியிருக்கிறது என்றால், அதனை மாடலாகக் கொண்டு தாங்கள் ஆளும் மாநிலங்களில் அவற்றை பின்பற்றி உயர்த்த நினைப்பார்களா அல்லது பிற பின் தங்கிய மாநிலங்களின் வரிசையில் அதனையும் வைத்து அழகு பார்க்க எண்ணுவார்களா?
பொய்களை பரப்பியே ஒரு சிறந்த நிர்வாகத்தை வழங்கிட முடியும் என்று யார் இவர்களுக்கு பாடம் எடுத்தது? வளர்ச்சி என்பது தன்னைச் சுற்றி நிகழ் காலத்தில் நாம் அனுபவிக்கும் வசதிகளைக் கொண்டு கண்டுணரும் ஒரு விடயம். அது கல்வி வசதியாகட்டும், மருத்துவ, சுகாதார வசதியாகட்டும் எல்லாவற்றையுமே சிறிது சிறிதாக கடினமான உழைப்பின் பெயரில் ஈட்டிக் கொள்வது. அதற்கு பல வருடங்கள் பிடிக்கும். பணத்தைக் கொட்டி ஊடகங்களில் போலியான பரப்புரைகளின் மூலம் அடைவது கிடையாது.
ஒரு நாட்டை கட்டியெழுப்பும் பொழுது, அது வரையிலும் சமூக சமநீதியற்ற ஒரு சமூதாயத்தில் அடையப்படாத விடயங்களான அணைகள், பள்ளிகள், மருத்துவம் ஏனைய வசதிகளுக்கென அடித்தளம் போடுவது என்பது ஓர் இயல்பான விடயம். அதுவும் போர்க்கால அடிப்படையில் சில துறைகள் பீரிட்டு வளர்த்தே எடுக்கப்பட வேண்டியதாக இருக்கும்.
உதாரணமாக கோயபல்ஸ் முறையில் தொடர்ந்து பரப்பப்படும் காமராசர் காலத்து பொற்கால துறைகளான அணைகட்டுகள் மற்றும் பள்ளிகள் திறப்பு. அதற்குப் பிறகு இத்துறைகள் எந்த மாற்றத்தையும் அடையவே இல்லை போன்ற ஒரு பிம்பத்தை கட்டி எழுப்புகிறார்கள். இது எத்தனை வடிகட்டிய முட்டாள்தனமான வாதம்? ஒரு மாநிலத்திற்கு முக்கிய அணைகட்டுக்களாக எத்தனை அணைக்கட்டுக்கள் தேவைப்படும். கிடைக்கும் நில அமைப்பு, வன வளம் அதனில் பெறப்படும் நீர் வரத்து, அந்த பூமியத்தை சுற்றியுள்ள மக்களின் வாழ்விடமென்று எத்தனையோ காரணிகளைக் கொண்டே ஒரு முக்கியமான அணைக்கட்டிற்கான அடித்தளம் அமைகிறது.
போகிற போக்கில் நினைத்த இடத்திலெல்லாம் அணைக்கட்டுக்கள் அமைத்து விட முடியுமா என்ன? இது எது போன்ற வாதம்? தெரிந்துதான் பேசுகிறோமா அல்லது மக்கள் அனைவரும் முட்டாள்கள், அடிப்படை அறிவே அற்றவர்கள் என்ற முறையில் பொய்யிலே அரசியல் அறமற்று தன் உடல் வளர்க்க பேசும் பேச்சா?
அந்த கால கட்டத்திற்கு பிறகு எந்த அரசும் எதுவுமே செய்யாமல் தான் நாம் உயிர் வாழ்ந்து, கல்வியறிவு பெற்று இன்று இப்படி வீண் வம்படித்து பிளவுகளை உருவாக்கி நம்முடைய வளங்களை வேற்று மாநிலத்து மக்கள் சூழ்ச்சியின் பால் பிடிக்க வழி கோலுகிறோமா?
ஒரு விடயத்தை பகிர்வதற்கு முன் அதில் எந்தளவிற்கு உண்மைத் தன்மை இருக்கிறது என்று அறிந்து கொள்ள குறைந்த பட்ச உழைப்பையாவது போட வேண்டாமா?
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க இப்பொழுது எந்த அரசியல் அறமுமற்று பொய் பிரச்சாரங்களை பரப்புவதற்கே பெரிய அளவில் தங்களுடைய நேரத்தையும், பணத்தையும் போட்டு அரசியல் வளர்க்கும் சூழலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழலிற்கு நாம் நகர்ந்திருக்கிறோம்.
கிடைத்த ஐந்து வருடங்களில் உங்களுடைய நாற்பது காலத்து கடின உழைப்பின் பெயரில் கட்டியெழுப்பிய, கோரிப் பெற்ற பல உரிமைகள் திரைக்கு பின்பாகவும், நம்முடைய கண்களுக்கு முன்பாகவும் கோமாளி அரசைக் கொண்டு பிடிங்கிக் கொண்டு செல்வதைக் காண்கிறோம்.
உணர்ச்சி வயத்தில் கூட்டத்தோடு சூழ்ச்சிக்கு இரையாகி பின்னால் திரும்பிப் பார்க்கும் பொழுது, இழந்ததை மீட்டெடுக்கவே மீண்டும் பல பத்தாண்டுகள் தேவைப்படலாம். முதலில் எதிரியை அடையாளம் காணுங்கள். யாரை அமர வைத்தால் தவறுகளை திருத்திக் கொண்டு சுயமான வளர்ச்சிக்கு நம்மை இட்டுச் செல்வார்களோ அவர்களை ஆதரியுங்கள். பிறகு உங்களுடைய பங்காளிச் சண்டையை வைத்துக் கொள்ளலாம்.

Tuesday, February 13, 2018

அறநிலையத்துறையை தனியார்மயமாக்குதல் = Deprogressive Move!

கடந்த கால சமூக நீதிக்கு எதிரான விடயங்களை போரட்டாங்களின் வழியாக கை வரப் பெற்ற சமூக நீதி சட்டங்களை மீண்டும் திருத்துவது என்பது நாகரீகமடைந்த ஒரு சமூகத்தை மீண்டும் அந்த கற்காலத்திற்கே எடுத்துச் செல்லுவதற்கு ஒப்பானதாகும்.

அண்மைய காலங்களில் அவசர கோலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக சில மத அரசியல் கட்சிகள் கொண்டு வரும் பிரச்சினைகளின் வீச்சத்தைப் பார்த்தால் அதற்கான முயற்சியாகவே படுகிறது.

என்னவோ ஒரு சமூகத்தினர் மட்டுமே பன்னெடும் காலமாக சமூக சீர் திருத்தத்தையும், பொருளாதார முன்னேற்றத்தையும், சமூக ஏற்றத் தாழ்வுகளை நீக்கி நாட்டில் பாலாறும் தேனாறும் ஓட உழைத்த உத்தம புத்திரர்களாக தங்களை வரலாற்றில் தூக்கி நிறுத்திக் கொள்ள எத்தனிக்கிறார்கள்.

ஆனால், உண்மை என்னவோ அதே வரலாற்று பாதையில் ஓடும் பேருந்தால் நசுங்கி மாண்ட ஒரு வன விலங்கைப் போல மரணித்துக் கிடக்கிறது

ஒரு நாகரீமடைந்த சமூகம் என்பது நாட்டில் வாழும் அனைவரையும் சமமாக பாவித்து அவர்களை அடுத்த கட்டத்திற்கு கூட்டாக அழைத்துச் செல்வது. அதனைத் தவிர்த்து ஏதோ ஒரு காலத்தில் சொரண்டி தின்று உடல் வளர்த்தோம் என்பதால் இந்த நவீன காலத்திலும் அந்த இத்துப்போன கோட்பாடுகளை நடை முறை படுத்த எண்ணுவது எத்தனை சாபக்கேடு ஒரு சமூகத்திற்கே?

சரி பிரச்சினைக்கு வருவோம். ஓர் இரண்டு தினங்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தினுள் தீ, எந்த பொது இடமாகினும் அங்கே விபத்து நடப்பதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளதுதானே? தீ விபத்து ஏதோச்சையாக நடந்தது என்றே வைத்துக் கொள்வோம், அறநிலையத்துறையும் மெத்தனமாகவே இருந்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்... அதற்காக உடனே அந்த அறநிலையத் துறைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அனைத்து அறநிலையத்துறைக்கு கீழே வரும் கோவில்களையும் தனியார் மயம் ஆக்கி பழைய பஞ்சாங்கப்படி ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்த ஒப்படைக்க வழிவகை செய்து கொடுக்க தடி எடுப்பீர்களா?

கோவில் என்பது ஜஸ்ட் ஒரு கோவில் வளாகம் மட்டும்தானா? எதற்காக அந்த காலத்திலயே அத்தனை போராட்டதிற்கிடையே பெரிய கோவில்களை இந்த "அறநிலையத்துறைக்கு" கீழாக ஒரு அரசாங்கம் கொண்டு வந்தது,அந்த துறைக்கு கீழ் வருவதற்கு முன்பாக நாமெல்லாம் அந்த கோவிலுக்குள் நுழைந்து அறிய முடிந்ததா?

அந்த கோவிலின் நிர்வாகம் யாரிடமிருந்தது, அங்கு விழும் காணிக்கைகளை யார் எண்ணினார்கள், எந்த வாசப்படி வழியாக அது யாருடைய காஜானவிற்கு சென்றடைந்தது என்று நமக்குத் தெரியுமா?

ஒரு டேட்டா வந்தது. ஒரு பெரிய கோவில் அது அறநிலையத் துறைக்கு கீழ் வருவதற்கு முதல் வருடம் வெறும் 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருமானம் வருவதாக காட்டப்பட்டதாகவும், அடுத்த வருடமே அது 40 லட்ச ரூபாயாக உயர்ந்ததாகவும் அறிந்தோம். அது எப்படி சாத்தியம் மக்களே? கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், கடவுளுக்கு வெகு அருகமையில் இருப்பவர்கள் இப்படியாக ஆயிரம் ஆண்டுகளாக கணக்கு காமித்து வந்திருக்கிறார்கள்.

அது மட்டுமா? ஒரு கிராமத்திற்குள்ளாகவே வாழும் மனிதர்களை பிரித்து இவன் உள்ளே வரலாம், வரக்கூடாது என்று பிரித்து ஆண்டதும் நடக்கிறது, நடந்து வந்திருக்கிறது.

இவற்றையெல்லாம் களைந்து ஒரு சமூக சமன் பாட்டை கொண்டு வர எண்ணி உருவாக்கப்பட்டதுதான் "அறநிலையத் துறை." இது எத்தனை பெரிய புரட்சி? சமூக சீர் திருத்த எட்டல்??

இதனையெல்லாம் சீர் படுத்த ஒரு அரசாங்கம் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து முறைமைப்படுத்துவது எப்படி தவறாகும்? அந்தத் துறை இன்றைக்கு சற்றே சீர் குலைந்து அதனில் நிர்வாகச் சீர் கேடுகள் நடக்கிறது என்றால் உடனே ஊசி காதுக்குள் ஒட்டகத்தைத் திணிப்பது போல மீண்டும் கோவில்களை பழைய சுரண்டலுக்கே தனியார் வசம் ஒப்படைத்து விடுங்கள் என்று சந்தில் சிந்து பாடுவது யார்? எதற்காக?

எது எப்படியோ மக்கள் சிந்திப்பதற்கேனும் இது போன்ற நாகரீகமடைந்த ஒரு சமூகத்தில், இன்னமும் அந்த இடத்திற்கு தங்களை நகர்த்திக் கொள்ள முயற்சிக்காத கயவர்களை அடையாளம் காணவும், இந்த பிரச்சினையை ஒட்டி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்றவுமாவது இது உதவுகிறதே என்ற வகையில் அந்த பொய்யர்களுக்கு இந்த தருணத்தில் ஓர் நன்றி!

Tuesday, January 08, 2013

வன்புணர்வு - சமூக உளச்சிதைவின் ஓர் குறியீடு!

வன்புணர்வு கலாச்சாரம் பற்றிய இக் கட்டுரையை எங்கிருந்து தொடங்குவது என்பதே ஓர் இடியாப்பச் சிக்கலைப் போன்றது. டெல்லி வன்புணர்வு சம்பவத்தை தொடர்ந்து பலரும் அதிலும் குறிப்பாக மத வழிபாட்டாளர்கள் தீர்வாக முன் வைக்கும் விடயங்கள் மிக அபத்தமானதாகவும், விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டியதாகவும் இருக்கிறது. பிரசித்தி பெற்ற தினமணி தலையங்கத்தில் ஒரு பெரியவர் தனது வீட்டுக்குள் தனது பெண்டீர்களுக்கு வழங்கும், தற்காப்பு கலையை உலக மக்களும் பார்த்து உய்ய தனது சொற்பொழிவினை அச்சில் ஏற்றி நமது பார்வைக்கும் கொண்டு வந்திருந்தார். அவர்களின் தீர்வு வெகு எளிமையானது -

 1) பெண்கள் நிறைய தோல் தெரிய உடை உடுத்தி இருட்டு தட்டிய பின் வெளியில் சுற்றித் திரிவதை தவிர்க்க வேண்டும் ...

 2) ஆண்கள் பொருளீட்டும் பொழுது, பெண்கள் வீட்டிற்குள் இருந்து லக்‌ஷமண் போட்ட கோட்டைத் தாண்டாமல் குடும்ப பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் ...

 3) வன்புணர்வாளர்களிடம் சிக்கிக் கொண்டால் கையெடுத்து கும்பிட்டு இறைவனை இறைஞ்ச வேண்டும், சகோதரர்களே என்று விளிக்க வேண்டும், முடியாத பட்சத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்...

அவரவர்களின் மன வளர்ச்சிக்கேற்ப இப்படி பக்கம் பக்கமாக தீர்வு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்துமே ஓர் ஆணின் பார்வையில் அல்லது அவர்களின் தாக்கத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட ஆணியவாதப் - பெண்களின் வாக்குமூலங்களாக நம்மை வந்தடைகிறது.

இத்தனை அல்லோல கல்லோலங்களுக்கும் பின்னான சமூக உளவியல் எங்கோ படுத்து மதிய நேரத்து துயில் கொண்டிருக்கிறது. அதனைத் தேடிச் செல்வது இந்த கட்டுரையின் நோக்கம். நம்மூர் வழக்கத்தில் ஒரு சொலவாடை உண்டு. பஞ்சையும் நெருப்பையும் தள்ளித் தள்ளிதான் வைக்கணும்... இதுக்கு பின்னான சமூக அணுகுமுறை ஒரு ஆண்/பெண்ணுக்கான உலகத்தை இரண்டாக பிளந்து பிரித்து வைக்கக் கூடிய அத்தனை சாத்தியங்களையும் உருவாக்கி வைத்துவிடுகிறது.

 இந்த ஆண்/பெண் என்ற உடல் கூறே எங்கிருந்து முளைத்து வருகிறது? அம்மாவின் உடலும் ஒரு பெண்ணின் உடல் குறியீடுகளை உள்ளடக்கி உள்ளதுதானே! முதலில் அவள்தானே மற்ற பெண்களின் உடல்/மன உலகத்தை காணுவதற்கான அறிமுகச் சாவியை ஓர் ஆணின் கையில் ஒப்படைக்கும் பொறுப்பை பெற்றிருக்கிறாள். இங்கே பெண் என்பவள் போற்றுதலுக்கும், வணங்குவதற்கும், காக்கும் பூமித் தாய் அளவிற்கு வானுயர ஏற்றி வைத்தும் பேசுவதாக அமைந்துள்ளது. இப்படியாக பேசும் சமூகத்தில்தான் கண்ணால் கண்டு, உதட்டைச் சுழித்து, கண் சிமிட்டினாலே போதை கொண்டு புணர்விற்கு தயாராகி விடும் நாணலைப் போன்றவளாகவும் மனத் திரையில் அவளுக்கென விருப்பு/வெறுப்புகள் உண்டு என்று கிஞ்சித்தும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு வேட்டை ஓநாய்களை போல ஆகிவிடும் ஒரு ஆண் சமூகத்தையும் நம்மைச் சுற்றி புடைசூழ வைத்திருக்கிறது. இது எப்படி சாத்தியமாகிப் போனது?

எனது பார்வையில் வீட்டிற்குள் தடை பட்டுப் போன உரையாடலும், உடற் மொழி அன்பு வெளிப்பாடுகளுமே இதற்கு முதன்மைக் காரணமாகப்படுகிறது. ஒரு காட்டு விலங்கை முறைப்படி பழக்கி உட்காரு என்றால் உட்காரவும், கரணம் அடிக்கவும் பழக்கப்படுத்த தெரிந்த நமக்கு நமது மனதை பக்குவப்படுத்திக் கொள்வதின் அனுகூலங்களையும், அடுத்தவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு விலகிச் செல்லும் மனப் பக்குவத்தையும் சிறு வயதிலேயே ஆழ பதிக்க முடியாமல் போனதிற்கு எதுவெல்லாம் காரணிகளாக அமைந்திருக்க முடியும்? வீட்டிற்குள் நடக்கும் கலாச்சார முன் நிறுத்தல்களே இது போன்ற சாலையோர முரட்டு சமூக வன்முறை வெளிப்பாடுகளுக்கு காரணம்.

முறையாக பேசி எதிர் பாலினத்தவரின் மீதான வன்முறை எண்ணங்களை பண்பூக்கம் (tame) செய்ய கற்றுக் கொடுக்காததே ஒரு காரணி. அதுவே ஆழ் மன வறட்சி நிலையில், கிடைக்கும் சூழலில் அத்துமீற எத்தனிக்கும் கூட்டு சமூக வெளிப்பாடுயாகி விடுகிறது எனலாமா? வீட்டிற்குள் அம்மா, அப்பா, சகோதர மற்றும் சகோதரிகளுக்கிடையே நிகழ்த்தும் உடற்மொழி கலாச்சாரத்தின் கட்டமைப்பு போதாமை, இது போன்ற கூட்டுச் சமூக வன்புணர்வு எண்ண வெளிப்படுதல்களுக்கும் வன்புணர்வு  மனிதர்களை உருவாக்கி தெருவிற்குள் பிரவேசிக்க வைக்கும் ஒரு காரணியாக அமைகிறது. 

சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதியை வாஞ்சையுடன் இறுக கட்டியணைத்து உச்சி முகர்ந்த நிலையில் ஒரு புகைப்படம் வெளி வந்திருந்ததைக் கண்டு நமது கலாச்சார கண்ணாடிகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பி இது போன்று ஒரு தவறான முன்னுதாரணமாகவும், வாழ்க்கையைப் படங்களில் நடிப்பதனைப் போலவும் செய்கிறார் என்ற மிகை கலாச்சார அதிர்வு உந்தல்களால் பலவாறாக தங்களது உளச் சிதைவுகளை முன் வைத்திருந்தார்கள்.

அப்பொழுதும் இப்பொழுதும் எப்பொழுதும் எனக்கு நமது கலாச்சாரப் பின்னணியில் புரியாமல் போகிற விசயம் எப்படி மிருக நிலையிலேயே நம்மால் தசை கூறுகளைக் கொண்டே எல்லா உறவு நிலைகளிலும் கூட நிறக் கண்ணாடி கொண்டு பார்க்க முடிகிறது? அப்படியாக காணும் ஒரு நிலைக்கு நாம் நகர்ந்திருந்தால் அது பிறழ்வுற்ற/சிதைவுற்ற ஒரு கூட்டுச் சமூகமாகத்தானே இருக்க முடியும்? எப்படி நம்முடைய அம்மாவை இறுக கட்டி அணைத்துக் கொள்ளும் பொழுது நமது திசுக்கள் வேறு விதமாக சமிக்கையை அனுப்பி கிளர்வுறச் செய்யும்? போலவே, மகள்/மகன்/சகோதரன்/சகோதரி கூடவும் அப்படியாக நிகழ்ந்தால் அங்கே ஏதோ ஒன்று கழண்ட நிலையில்தான் உள்ளது என்பதாக எடுத்துக் கொண்டு மன நல வைத்தியரை அல்லவா அணுக வேண்டி வரும்.

ஆனால், கூட்டுச் சமூகமாக இந்த மனச் சிதைவை நாம் எப்படி அணுகுகிறோம். அப்படியாக நடந்து விடுவது ரொம்ப இயல்பு, அதனால் தாயா இருந்தாலும் பிள்ளையா இருந்தாலும் தள்ளித் தள்ளிதான் வைக்கணுங்கிற அளவில பஞ்சையும் நெருப்பையும் தள்ளி வைக்கச் சொல்லுகிறோம். அதற்கு மாறாக, நாம் உரையாடல் நிகழ்த்த தயாராக இல்லை. இங்கேதான் ஓர் அம்மாவிற்கும் பிள்ளைக்கும், ஒரு தகனுப்பனுக்கு மகளுக்கும், ஒரு சகோதரனுக்கும் சகோதரிக்குமான பொன்னான வாய்ப்புகள் கை நழுவி தெருவோர வன்முறையாளர்களை உருவாக்கி வைக்கும் பங்கை ஒரு கலாச்சாரமாக செய்து வைத்து விடுகிறோம்.

அன்பான தொடுதல்கள், வருடல்களுக்கும் காமத்தின் இச்சைக்கு எட்டிச் செல்லும் தொடுதல்கள், வருடலுக்குமான வித்தியாசம் அதற்கான ஏற்பாடுகள் எப்படியாக வித்தியாசம் கண்டறிந்து கொள்வது? அதனை எங்கிருந்து யார் முதல் கல்வியூட்டுவது? அது போன்ற மென் உணர்வு சார் விசயங்களை எப்படியாக இனம் காண்பது? அதற்காக என்ன வீட்டிலேயே ஆரம்பித்து வைக்கச் சொல்லுறீங்களான்னு கேக்கக் கூடாது. நாம் செல்ல விருக்கும் இடம் வேறு. ஒரு அம்மாவின்/சகோதரியின் நெருக்கம் அதனையொட்டிய உரையாடல் ஒரு ஆணுக்குள் இருக்கும் புறம் சார்ந்த சீண்டல்களை பண்பூக்கம் செய்ய வித்திட வாய்ப்பாக அமையலாம். அவன் இயல்பாகப் பார்க்க கற்றுக் கொள்ளலாம். உடல் சார்ந்த திறப்பு என்பது முதலில் மனத் திறப்பு என்பதுதான் என்று அவன் உணர்ந்து, உடல் சார்ந்த வயப்படலிலிருந்து வெளி வர இந்த உடற்மொழி வெளிப்பாடுகள் உதவச் செய்யலாம்.

இது போன்ற தெருவோர வன்புணர்வு மனச் சிதைவு ஒரு மனதின் அன்பற்ற எதிர்பாலினத்தின் புரிதலைப் பற்றிய வறட்சியை நோக்கியே நம்மை இட்டுச் செல்கிறது. புறம் சார்ந்த கிளர்ச்சியுறு நிலை என்பது இருபாலினத்திற்கும் ஓர் ஆரோக்கியமான உடற் செயல்பாட்டையே சுட்டி நின்றாலும், அது கட்டுக்குள் வைக்கும் பொறுப்பு பக்குவமடைந்த சமூகத்தின் ஒரு வெளிப்பாடே என்பதனை நாம் இங்கே புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கேதான் நாம் ஒரு கேள்வியை கேட்டுக் கொள்ள வேண்டும். மேற்கு நாடுகளில் ஏன் இது போன்ற தெருவோர/பொது இட வக்கிரச் சீண்டல்கள், வன்புணர்வுகள் இல்லை (அதற்காக முற்றாகவே இல்லை என்று இங்கு நான் நிறுத்தற் குறி இடவில்லை). நம் சமூகம் மற்ற சமூகங்களைக் காட்டிலும் தொன்மையான, மிக நீண்ட வரலாற்றைக் கொண்டதாகவும், உலகளவில் விவாகரத்து பெறும் புள்ளியலில் மிக குறைந்த எண்ணிக்கையை கொண்டதாகவும், பெற்றோர்களே தங்களது பிள்ளைகளுக்கு வரன் பார்த்து அமைத்து கொடுக்கும் ஓர் உன்னத கலாச்சாரத்தை உள்ளடக்கியது எனவும் நம்புகிறோம்.  வரன் பார்த்து வைக்கும் வரை முப்பது வயதை எட்டிய யுவதியும்/யுவனும் உடற் ரீதியில் வறட்சி நிலையில் தனித் தனி தீவுகளாக வாழ்ந்தாலும், ஒழுக்க நெறியுடன் இன்னமும் தனக்கு பரிட்சியமான ஏழு வயது சிறுமியோ/சிறுவனோ என்ற நிலையில் பெரியவர்கள் அவர்கள் உலகத்தில் நம்பிக் கொண்டு கலாச்சார கண்ணாடிகளாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இப்படி மட்டற்ற பெருமையை கொண்ட ஒரு சமூகத்தில், எப்படி இத்தனை வக்கிரமான சமூகத்தில் உளச் சிதைவை கொண்ட மக்களும் பெருகி இருக்கிறார்கள்?

மேற்குலகில் பெற்றோர்கள் ஒரு கடவுளர்கள் அளவிற்கு மேலே வைத்து தொழும் இடத்திற்கு தங்களை நகர்த்தி வைத்துக் கொள்வது கிடையாது. உரையாடலுக்கான அத்தனை சாளரங்களையும் திறந்த நிலையிலேயே வைத்திருக்கிறார்கள். முதல் தடை நம்முடைய சமூகத்தில் இங்கே இருக்கிறது. இரண்டாவதாக மேற்குலகில் ஆண்/பெண் நண்பர்களை அவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்குள் அமைத்துக் கொண்டு சகஜமாக பழகும் நிலைக்கு தங்களை நகர்த்திக் கொள்ளவில்லை என்றால் கவலையுறுகிறார்கள். ஆனால் நாமோ, நமது மனச்சிதைவின் காரணமாக அந்த யுவ/யுவதிகளின் உடற் கூற்றை மட்டுமே கண்டு கற்பனையால் துணுக்குற்று கொண்டிருப்போம். ஆனால், அந்த பழகல்களின் மூலமாக அவர்கள் வாழ்க்கைக்கு தேவையான தனிமனித விருப்பு/வெறுப்புகள், வரம்பு மீறாமை போன்ற அடிப்படை நாகரீகத்தை கற்றுக் கொள்கிறார்கள் என்பதனை பார்க்க மறுக்கிறோம். சிதைவுப் பார்வையின் வழியாக நம் கலாச்சார மாண்பு பேசியே சமூக உளவியலைக் காணத் தவறுகிறோம்.

அதே மேற்குலகில் வயதிற்கு வந்தவர்கள் புணர்ச்சி நிமித்தம் தடுமாறிப் போய் சாலையில் போவோரை வருவோரை கையை பிடித்து இழுக்கும் நிலைக்கு போகாமல், தங்களை பண்புடனான நிலையில் வைத்துக் கொள்ள பல சமூக நோக்கு அணுகுமுறை அவர்களுக்கு கை கொடுக்கிறது. நமக்கு எல்லாம் ஒரு காலத்தில் மேற்குலகு என்றாலே ஃப்ரீ செக்ஸ், எப்படி வேணாலும் யார் யாருடனும் இருப்பார்கள் என்ற சமூக கூட்டு அழுக்கு பார்வை இருந்தது. ஆனால், உண்மையில் நடந்தது, நடந்து கொண்டிருப்பது என்ன வென்றால் உண்மையை உண்மையாக, தங்களுக்கு தாங்களே கல்வியூட்டிக் கொண்டு, எதனையும் மறுக்காமல் ஏதோ ஒரு உறவில் தங்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி பொது இடங்களில் கோவில், பேருந்து, புகைவண்டி, எந்த ஒரு கூட்ட நெரிசல் சந்தர்ப்பங்களின் போதும் எதிர்பாலினத்தை துழாவ வேண்டுமென்ற பொது புத்தி பெற்றிருக்கவில்லை. எத்தனை பெரிய வேறுபாடு!

இப்படியாக கூட்டு ஒத்துழைப்பின் மூலமாக வாழ்க்கை கல்வி சமமாக பரவும் பொழுது தெருவோர பிரச்சினைகள் ஓர் ஒழுங்கிற்கு வருகிறது. இத்தனையும் மீறி அத்து மீறல்கள் வரலாம், மிக குறைந்த சதவிகிதத்தில் வெளி வரும் பொழுது அவர்களுக்கு உடனடியாக சட்டம் தன் பங்கை ஆற்றி மற்ற பக்குவமற்ற/வறட்சி மனங்களை கட்டுக்குள் வைத்துக் கொள்கிறது.

இங்கே மற்றுமொரு சிந்தனைக்கான கேள்வி. இரு வயதிற்கு வந்தவர்கள் தங்களுக்கு பிடித்த மாதிரியான வாழ்க்கையை எப்படியோ தங்களது இச்சையை மட்டுக்குள் வைத்துக் கொள்ளும் விதமாக வாழ்ந்து முடிக்கும் பொழுது எந்த விதத்தில் அது நமது குடும்பத்தை மகனை/மகளை சிதைக்கிறது. அவர்கள் எப்படியோ இருந்து விட்டு போகட்டும், நமக்கென்ன? ஒரு நாட்டின் கலாச்சாரத்தை முன் நிறுத்த உங்கள் வீட்டுப் பிள்ளைகளையும் பலி கொடுக்க தயாராகி விட்டீர்களா, அல்லது பக்குவமற்ற தனிமனித தேடல்களை அவர்களுக்கு தெரிந்த முறையில் வெளிப்படுத்தி வாழ அனுமதி வழங்கி ஒதுங்கி நின்று தனி குடும்ப நிம்மதியை பேணிக் கொள்வீர்களா?  

இந்த வக்கிர தெருவோர சீண்டல்களிலிருந்து தப்பித்து  வீட்டிற்கு வெளியே போன பிள்ளைகள் பாதுகாப்பாக வந்து சேருவார்களா என்று கெதக்கென்று இருப்பது நமது தினப்படி நிம்மதியை சிதைக்கிறதா, இல்லை கலாச்சார கண்ணாடிகளின் கூற்றுப்படி எங்களது கலாச்சாரம் உலக அளவில் பிரசித்திப் பெற்றது என்று ஒரு பெரும் போர்வையை கொண்டு உண்மையை மறைத்து வைத்து விட்டு பொது இடங்களில் வக்கிரம் காட்டி மனதிற்குள் அழுது கொண்டு திரிந்து ஒரு நாள் இது போன்று கொலை அளவிற்கும் தங்களை முன் நிறுத்திக் கொள்வது நம் நிம்மதியை குலைக்கிறதா? எது நாகரீகமடைந்த கலாச்சாரம்/சமூகம் இங்கே??

எனவே மனிதருக்கான அத்தனை சமூக பண்படுத்தலுக்கான விடயங்களும் ஒரு வீட்டிற்குள்ளயே உள்ளடக்கி இருக்கிறது. அதனை நடைமுறைப் படுத்தி உரையாடலைத் தீவிரப்படுத்தி நுண் உணர்வுகளை தங்களது குடுப்பத்தாருடன் பகிர்ந்து கொள்ளுவோம். பேருந்தில் சீண்டலை முகம் கொடுத்தீர்களா, அது எத்தனை மன வலியை, முக சுழிப்பை உருவாக்கியது என்பதனை உணர்வுப் பூர்வமாக குடும்பத்தாருடன் குறிப்பாக பிள்ளைகளுடன் ஒரு பெண்ணின் பார்வையில் பகிர்ந்து கொள்ளுங்கள். மனசிற்கும், உடற் செயல்பாட்டிற்கும் இருக்கும் நெருங்கிய தொடர்பை ஆழ விதைக்கலாம். தன் வீட்டுப் பெண்டிர்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தொடர்பான உடல் உபாதைகளை மிக இயல்பாக ஏனைய வீட்டு நபர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். வரும் வழியில் மாதவிடாய் பேட் வாங்கி வரச் செய்யுங்கள். அது பிற்காலத்தில் பெண்களை கீழானவர்களாக, ஒரு நுகர்வுப் பண்டமாக பார்க்கும் பார்வையை மாற்றியமைக்க உதவும்.

இது குழந்தைகளிடமிருந்துதான் தொடங்க முடியும். ஒரு சமூகமாக இந்த புற்றுக் கட்டியை அகற்றி கொள்ளும் நேரமிது. ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் இருக்கிறது, அறுவை சிகிச்சைக்கான ஆயுதம் - உரையாடல் மூலமாக வெளிப்படும் மென்னுணர்வு, அதன் மூலமாக வெளிப்படுத்தும் கரிசனம், உள்ளார்ந்த அன்பு வறட்சியற்ற ஆரோக்கியமான சமூகம்.

Tuesday, September 13, 2011

இயற்கையின் தேர்ந்தெடுப்பு சாதீக்கலவரம்...

பரமக்குடி, எனது ஊரிலிருந்து இரண்டு மூன்று மணி நேர பேருந்து பயணிப்பில் போய் சேர்ந்து விடக்கூடிய தூரத்தில் அமைந்திருக்கிறது. அது ஒரு வேலிக்கருவை மரங்கள் நிரம்பிய, தண்ணீரற்ற ஒரு வறண்ட பாலையூர்.

அதனை ஒற்றி அமைந்ததே எனது ஊரும். எனவே அந்த ஊருக்கும் எனது ஊருக்கும் பெரியளவில் சிந்தனை வேறுபாடுகளோ மனிதர்களின் ஓநாய்த்தனமான மனத் திண்மைக்கு வித்தியாசமிருந்து விட முடியாது. இந்த புகைப்படத்தை நான் காண நேர்ந்தது. இரண்டு மூன்று நாட்களாக இந்த சாதீக் கலவரம் தொடர்பாக எங்கும் பரப்பரப்பு ஒத்திக் கொண்டு அனலாக தகிக்கிறது.

ஒவ்வொரு முறையும் இந்த காட்டுமிராண்டித் தனத்தின் வக்கிரம் எண்ணிடலங்கா வழிகளில் முகம் தரித்தே காண்பித்து விட்டு ஓடி ஒளிந்து கொள்கிறது, மனித ஓநாய்களின் போலிப் புன்னகைகளுக்கு பின்னே. மீண்டும் சரியான நேரத்தில் தன் கோரப்பற்களை துருத்திக் காட்டுவதும் வாடிக்கையாக இருக்கிறது. இதனை பார்த்து வளர்ந்தவர்களுக்கு இதுவு’ம் ஒரு மற்றுமொரு தினசரிச் செய்தியாகிப் போய் விடுகிறது.

ஆங்கிலேயன் இண்டு இடுக்களிலெல்லாம் வெறும் பத்தாயிரம் பேருக்கும் குறைவாக இங்கு கொண்டு வந்து இத்தனை பெரிய பரப்பை அவனால் கட்டி ஆளமுடிந்ததெனில் அதற்கு காரணம் இந்த காட்டுமிராண்டித்தனத்தின் ரேகைகளே காரணமாக இருந்தது 300 வருடங்களுக்கு முன்பும். அவர்களும் வந்தார்கள், அடிமைகளான வாழ்வை நாமும் சுவைத்தோம்.

ஆனால், அதிலிருந்து இந்த தேசமென அழைத்துக் கொள்ளும் கூட்டு தேச இந்தியா ஏதாவது பாடம் கற்றுக் கொண்டாதா? அது போன்ற சாதீய வேறுபாடுகளை களைவதற்கு எத்தனை வலிமையான சட்டங்களை பாய்ச்சி மாக்களை மக்களாக்கி வைத்திருக்கிறது? காலம் நகர்ந்திருக்கிறதே ஒழிய, ஏதாவது மனித மனங்களில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா? அதனையொட்டிய கற்றறிந்தவர்களின் உழைப்பெங்கே? ஏன் அந்த லைம் லைட்டில் அமர்ந்திருக்கும் பெருசுகள் இதனைப் பற்றி அலட்டிக் கொள்வதே இல்லை?

இப்படி குழுமங்களாக வாழ்வது ஆஃப்ரிகா சமவெளிகளில் 50 ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக நம்மை நரி அடித்து தின்றுவிடாமல் இருக்கவும், பிற காட்டுமிராண்டி கூட்டமும் தான் உண்ணும் உணவையும், நிலத்தையும் அபகரித்து கொள்வதினிலிருந்து தற்காத்து வைத்து கொள்ள தேவைப்பட்டிருக்கலாம். காட்டுமிராண்டித் தோல் இருக்கின்னு உணர நினைத்தால் இங்கே அழுத்தி படிச்சிப்போம் மேலே.

ஆனால் இன்றுதான் நாம் நவீன காட்டுமிராண்டிகளாகிவிட்டோமே, நமக்கென்று அழைத்துக் கொள்ள ஒரு நாடு, அரசாங்கம், சட்டம் என்று இருக்கிறது. ஒருவன் வாய்க்குள் போட்ட சோற்றை மற்றொருவன் பிடிங்கி தின்று விட முடியாது, பாதுகாப்பு இருக்கிறது. அதனைத் தவிர்த்து எதனை நாம் தற்காத்து வைத்து அடுத்த தலைமுறைக்கு கடத்திச் செல்ல இப்படி 500 மீட்டர் இடைவெளிக்குள் இருக்கும் உனது வீட்டில் இருப்பவனும் அவன் வீட்டில் இருப்பவனும் இப்படி மூர்க்கமாக தாக்கிக் கொள்கிறீர்கள்?

சரி மேல்தட்டில் அமர்ந்திருக்கும் அந்தக் குழு குடிக்கும் தண்ணீரும், சுவாசிக்கும் காற்றும் என்ன புதன் கிரகத்திலிருந்து இறக்குமதி செய்து குடித்து, சுவாசிக்கிறார்களா? இரண்டு பேரும் பொது இடத்தில் மலம், ஜலம் கழித்து அவை இரண்டற கலந்து நாம் அனைவரும் தானே மீண்டும் உள்ளே தள்ளி உணவாக உண்கிறோம். வளர்கிறோம். அதெப்படி, ஒருத்தனில் இருந்து மற்றொருவன் உயர்வாகிவிடுகிறான்?

யார் நமது ஒற்றுமையை விளக்க பாடம் எடுப்பது? சைனாக்காரனா? இல்லை இயற்கை பேரழிவா? எனக்கு இப்பொழுது இதுதான் தோன்றுகிறது. பூமியில் அதுவும் குறிப்பாக இந்தியாவில் ஜனத்தொகை வீங்கி வெடிக்கிறது. இயற்கையாகவே ஒரு வழியை கண்டடைந்தாலே ஒழிய இதனை கட்டுக்குள் கொண்டு வர முடியாத ஒரு இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். அமெரிக்காவில் ஒரு சதுர கிலோமீட்டரில் 35 மக்கள் வாழ்கிறார்கள் என்றால் நமது தேசத்தில் சராசரியாக 350 பேர்களை கொண்டிருக்கிறோம்.

அதனையொட்டிய இயற்கைசார் தேவைகளை கொண்டே பார்த்தால் கூட, குடிநீருக்கும், சுத்த காத்திற்கும் கூட பெரும் அடிதடி தேவைப்படப் போகிறது. இந்த லட்சணத்தில் அவன் இவனை செத்த சிவப்பாய் இருக்கிறான், என் மூக்கு நீளம் அவனது சிறுசின்னு அதே சாக்கடைக்குள் கிடந்து கொண்டு ஒருத்தன் மீது இன்னொருவன் கல்லை விட்டெறிந்து கொண்டு நாம் இன்னமும் ஒரு லட்சம் வருடத்திற்கு முன்பு வாழ்ந்த அதே ஹோமோ எரெக்டஸ் குரங்கேதான் என்று நிரூபிக்கிறோமே? இதனை எதனில் சேர்ப்பது?

சரி இயற்கையே இப்படி ஒரு மக்கள் தொகை ஒழிப்பை தேர்ந்தெடுக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதாவது, நமது மூளையின் செயல்பாடுகளையொற்றி நமக்கு நாமே குழி பறித்து கொள்வது. அதன் எதிர் முனையில் நின்று மிருக நிலையில் இருக்கும் நம் புத்தி செயல்பாட்டை எப்படி மனித நிலைக்கு நகர்த்துவது என்று ஏன் கிஞ்சித்தும் எண்ணுவது கிடையாது.

அந்த புகைப்படத்தில் பார்த்தோமானல், ஒரு மனிதனை. நாயை விடக் கேவலமான முறையில் அவன் வாழ்ந்த வீதியிலேயே வைத்து நடத்தப்பெறுவதாக தெரிகிறது. எனக்கு அந்த ஒரு அசையா படத்தினை பார்க்கும் பொழுதே, ஈழத்தில் தமிழர்கள் பட்டிருக்கக் கூடிய சிதைவு நினைவுக்கு பளிச்சென மின்னி மனத்திரையில் வெட்டி மறைகிறது.

அங்கு சிங்களவன் - தமிழன் என்ற இனவெறி இருக்கிறது. இங்கே என்ன கேடு, உங்களுக்கு? அங்கே ஏறி மிதித்து கொண்டு வரும் சிங்களவன் ஒரு நாள் சைனாக்காரனுடன் சேர்ந்து நம்மை பிடரியில் மிதித்தால் அப்பொழுதும் நாம் இருவரும் கம்புச் சண்டை போட்டு நம்முள்ளரயே அடித்துக் கொண்டு செத்துக் கொண்டிருப்போமா? அல்லது அவனை சந்திக்க தயாராவோமா? எவன் நமக்கு சரியான பாடத்தை நம் எருமை மூளையில் உறைக்கும்படி உணர வைப்பான்?

இல்ல மொத்தமா இயற்கையின் நகர்வின் பாதையிலேயே சென்று இப்படி வீதிக்கு வீதி, வீட்டிற்கு வீடு அடித்துக் கொண்டு சிறுகச் சிறுக முடித்துக் கொள்வோமா? அதுதான் இயற்கையின் திட்டமுமோ? சிந்திக்க மறுப்பின் எருமை மாட்டு நிலையிலேயே உழண்டு மிருக நிலையிலேயே மரணிப்பும் நிகழ்ந்து, நிகழ்ந்து மீண்டும் மீண்டும் மீசை முறுக்கிக் கொண்டே திரிந்து விடலாமா?

ஒரு குரங்கு எழுந்து வெட்ட வெளியில் நின்று பார்க்க எத்தனித்ததின் விளைவே இன்று புதன் கிரகத்திற்கு ரோபாட் அனுப்பி தண்ணீர் இருக்கிறதா என்று சிந்திக்கும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியது. ஆனால், நம்மில் இன்னும் பலபேர் வெட்டவெளியில் நின்றபடியே உறைந்து விட்டோம்... பிற மனிதர்களோட சமமாக பயணிக்க திராணியற்று. விளைவு, மனித பிணங்கள். வீட்டுக்கு வீடு தலையணைக்கு கீழ் அருவாள்கள் வைத்துக் கொண்டு குரங்கு மூதாதையர்கள் மாதிரியே வாழ்க்கையை நகர்த்த சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தியா 2020 அல்ல இன்னும் 1000 வருடமானாலும் அங்கயேதான் நாம் தேங்கிக் கிடப்போம். போலோ, நைக்கி ஷு, டையும் மனிதனை வெளிப்புறத்தில்தான் மாற்றியிருக்கிறது பெயருக்கு பின்னான வெறீஈஈஈ ஷெட்டி, நாயர், ஐயர், புதிதாக வன்னி... போன்ற அடைமொழிகளுக்கு உள்ளாக ஒளிந்து கிடக்கிறது நம் பரிணாம ஓநாயின் கூரான, கோரமான பற்கள்.



பி.கு: இந்த பதிவினை எழுதுவதற்கான ஜுவலை இங்கிருந்து கிடைச்சது. அதையெல்லாம் முழுசா படிச்சா நானும் பின்னோக்கி 50 ஆயிரம் வருஷம் நடக்கணும். அதுனாலே முழுசா படிக்கல இருந்தாலும்... ஒரு முறை பாத்து வைங்க. ஒரு தேசத்தின் எதிர்காலம் எங்கே ஒளிந்திருக்கிறது என்பதனையாவது அறிந்து கொள்ளலாம்.

Wednesday, June 15, 2011

கொலைக் களம் : இவிங்களும் மனுசங்களாம்!!

கொஞ்ச காலங்களுக்கு இங்கு எழுதுவதை நிறுத்தி வைப்பதாக எண்ணியிருந்தேன். ஆனால், இந்த சானல் நான்கு நேற்று ஒளிபரப்பிய ஈழ இனப்படுகொலை பற்றிய காணொளி பார்த்ததிலிருந்து மேலும் இந்த உலகம் பற்றியும், பணப் பேய்களின் உளம் பற்றியும் அறியும் பொழுது அவ நம்பிக்கையும், அயற்சியும் இவர்களுடன் இன்னமும் இதே காற்றை சுவாசித்து மாண்டொழியும் நாளை எதிர் பார்த்து வயிற்றுப் பிழைப்பு நடத்தி வருகிறோமே என்று நினையும் பொழுது அவமானமாக இருக்கிறது; அதனையொட்டியே இந்த பதிவினை முன் வைக்க வேண்டி வந்திருக்கிறேன்.

இந்த படுகொலையை சந்தித்தவர்களின் கடைசி மணி துளிகளை நினைத்து பார்க்கும் பொழுது இரவு தூக்கம் காணாமல் போவது மிகச் சாதாரணம். அதன் வீரியம் புரியாமலும், புரிந்தும் மனதிற்குள் சிரித்துக் கொள்பவர்களும் இதே நிகழ்வு நாளை நம்மையும், தன் குடும்பத்தாரையும் முற்றுகையிட்டால்... என்ற தொனியில் ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள் மனதின் ஓர் ஓரத்தில் இரக்கம் சுரக்கலாம்.

அவசியம் கீழே உள்ள காணொளியை நெஞ்சை இறுக்கி பிடிச்சிகிட்டு பார்த்து முடிச்சுடுங்க. அப்படியே கையோட அதுக்கு கீழே காணும் இணைப்பில் சென்று ஐக்கிய நாட்டு சபையின் மூத்தவர் பான் கீ மூனுக்கு வெளியான போர் குற்ற ஆதாரங்களை கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு உள்ள விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து அனுப்புங்க.

அதில் இரண்டே விசயங்கள்தான் கேட்கப்படுகிறது. உங்கள் பெயரும், மின்னஞ்சல் முகவரியும். எனவே பயப்பிடாம மனசாட்சிக்கு பயந்தாவது செய்யுங்க, மக்களே! நன்றி!!


பகுதி ஒன்று:



பகுதி இரண்டு:



பகுதி மூன்று:




யூ. என் தளத்திற்கு சென்று விண்ணப்பம் செய்ய:

I just signed a petition urging Ban Ki Moon, UN Secretary-General (UNSG) to investigate allegations of war crimes before an international war crimes tribunal. Please share this important petition with your friends and family. If you are on Facebook, Bebo, MySpace or any other social network please put a post up giving others the link to the petition. Also if you run a website or blog please encourage others to support this urgent campaign. SIGN YOUR PETITION HERE

This message was sent from the Sri Lanka Peace Campaign website, www.srilankacampaign.org. Please report any abuse of this service.

Thursday, April 07, 2011

துடைத்தழிக்கப்படும் நெல், தான்ய விதைகள்:GM Pollution!

இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நம்மாழ்வாரின் ஒரு காணொளி பார்த்ததிலிருந்து அவரிடத்தின் மீது எனக்கு அளவற்ற ஈர்ப்பை உருவாக்கியிருக்கிறது. அதற்கு முன்னால் நவதான்ய என்றமைப்பின் நிர்வாகியும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு எதிராக முழங்கி வரும் டாக்டர். வந்தனா சிவா மீதும் இருந்த அதே கவனம் இப்பொழுது இவர் மீதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. மேலாக அவரை இந்த முறை ஊருக்கு வரும் பொழுது எப்படியாவது சந்தித்து விட வேண்டும் என்ற ஆவலை வளர்த்து விட்டிருக்கிறது.

இந்த நிலையில் பஸ்ஸில் ஒரு இழை ஓடிக் கொண்டிருந்தது. அங்கு பார்வையாளனாக மட்டுமே அந்த இழையை பின் தொடர்ந்து வந்தேன். அதில் நமது தஞ்சாவூரான் என்ற விவசாயி இப்படியாக தனது ஆதங்கத்தை இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை பயன்படுத்துவதின் பொருட்டு பேசிக் கொண்டே செல்லும் பொழுது இப்படியாக ஒரு விசயத்தை முன் வைத்தார்...

...தட்டான், ஈசல், மண்புழு, பிள்ளைப்பூச்சி, பாப்பாத்தி (செவப்பா கரும்புள்ளியோட இருக்கும்), குசுவினிபூச்சி, சில வகை எறும்புகள், தண்ணிபாம்பு, சாரை பாம்பு, பச்சை கொம்பேறிமூக்கன், வண்ணத்துப்பூச்சி, சிட்டுக்குருவி, அணில், ஓணான், அரணை, உடும்பு, தேரை, சாம்பிரானி, பால்நண்டு, நட்டுவாக்காளி, கூழைப்பாம்பு, பச்சைக்கிளி, மரங்கொத்தி, கொக்கு, நாரை, மடையான், மணிப்புறா, காடை, கவுதாரி, குயில், நரி, காட்டுப்பூனை - இது எல்லாமே வயக்காடு, கொல்லைக்காட்டுலேருந்து மறைஞ்சுபோச்சுண்ணே ;( ...

அதனை படித்த பின்பும் என்னால் ஒரு பார்வையாளனாக இருக்க முடியவில்லை. எனது புரிதலாக இயற்கையமைப்பில் எப்படி இந்த மரபணு மாற்ற தொழில் நுட்பம் பல பில்லியன் ஆண்டுகளாக இயற்கை எடுத்து செயல் படுத்தி சிறுகச் சிறுக கட்டியெழுப்பி வரும் உயிரின பன்முகத் தன்மையை, சூழலமைவை (ecosystem) ஒரு சில ஆண்டுகளிலியே துடைத்தெரிய தக்கது என்பதாக எனது கருத்தினை வைத்தேன். அங்கு கூறிக் கொண்டிருக்கும் பொழுதே தனிப்பதிவாக கொண்டு வருவதின் அவசியமும் உணர்ந்தேன்.

ஏற்கெனவே 2006, 07லிலுமாக இரண்டு பதிவுகளில் பல விசயங்கள் பின்னூட்டங்களின் மூலமாக அலசப் பட்டிருக்கிறது. இந்த பதிவில் பேசப்படாத விசயங்கள் அங்கே காணப்படலாம்.

அ) பரிணாமச் சீர்கேடு ஓர் அறிமுகம்

ஆ) இந்தியாவிற்கு வால்மார்ட் அவசியமா?


இப்பொழுது கொஞ்சம் விரிவாக எப்படி இந்த சர்வதேச பண முதலைகள் தன்னிறைவுடன் ஓடிக் கொண்டிருக்கும் தனியொரு விவசாயின் உயிர்வாதார பிழைப்பிலும், நேரடியாக கை வைத்து தங்களது பணப் பேராசையை தீர்த்துக் கொள்ள முயல்கிறார்கள் என்பதை லட்சக்கணக்கில் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் இந்த கால கட்டத்தில் பேசுவது உகந்ததாக இருக்கும்.

இயற்கையின் அமைவில் உணவு சுழற்சி என்பது தன்னியல்போடு ஓடிச் சேர்வது. அது காலங் காலமாக இயற்கை தேர்ந்தெடுப்பின் பொருட்டாக கிடைக்கும் சுற்றுப்புறச் சூழல் காரணிகளை கொண்டு மரபணு பண்புகளை கூட்டி குறைத்துக் கொண்டு அந்த சார்ந்து வாழும் ஊரின் மண்ணியல்போடு தொடர்பு கொண்டதாக பரிணமித்து வளர்கிறது. பெரிய படத்தில் சற்றே விரித்து பார்த்தால் அந்த மண்ணில் வாழும் ஆயிரக் கணக்கான நுண்ணுயிர்களையும் அந்த சுழற்சியில் பங்கேற்க வைத்து அவைகளையும் தழைத்து, செழிக்க வைத்து ஏனைய சார்பு உயிரினங்களையும் உய்வித்து வளர்ந்து வரும் சூழலியல் 'வானம்' அந்த நிலமும் அதனில் விளையும் பயிரும், உணவுப் பொருட்களும்.

எப்படி ஒரு குழந்தை உருவாவதில் ஒரு பெண்ணின் சார்பில் கரு முட்டையும், ஆணின் பங்காக ஒரு விந்தணுவும் மட்டுமே இயற்கையமைவில் போதுமானதாக இருக்கிறதோ, அது போலவே தாவர உணவு பொருட்களை சுய சுழற்சி செய்து கொள்ள நம்மிடம் இயற்கை எதிர்பார்க்கும் ஒரே விசயம் அதன் இயல்பில் கை வைக்காமல் விட்டு விடுவதுதான். ஏனெனில் ஒரு விதையின் வழியாக நமக்குத் தேவையான எதிர்கால உணவு உற்பத்திக்கான கருவையும் உள்ளடக்கியே விளைச்சலில் கொடுத்து நிற்கிறது. மாறாக மரபணு மாற்றமுற்ற விதையில் பூச்சிக் கொல்லியை முன்னமே வைத்து தைத்து கொடுத்து சமச்சீரை உடைப்பது மாதிரி இல்லாமல்.

அந்த இயற்கையின் அமைப்பை உடைத்து, சார்பு நிலையையும், அடிமை தனத்தையும் வளர்க்கும் மரபணு மாற்றமுற்ற மலடி விதைகளை விளைவித்து உண்டது போக மீண்டும் கார்ப்பரேட் கம்பெனிகள் ஆய்வகத்தில் உருவாக்கித் தரும் விதைகளுக்கு கையேந்தி நிற்பதில் எத்தனை சுதந்திரம் ஒரு விவசாயிக்கு இருந்து விட முடியும். இதுவும் இன்றைய கால கட்டத்தில் பெட்ரோலிய விலை நிர்ணயம் பண்ணக் கூடிய ஒரு சார்பு பொருளாதார நிலைக்கு நாளை நம்மை இந்த உணவு உற்பத்தி திறன் சார்ந்து எடுத்துச் சென்று விடாதா?

பணத்தை மட்டுமே இலக்காக கொண்டு செயற்படுத்தப் படும் மலடி ரக விதைகளை ஊக்குவிக்கும் மரபணு தொழில் நுட்பம், ஒரு நாட்டின் ஒட்டு மொத்த விவசாயிகளின் உரிமையை மட்டும் பரித்து எடுத்துக் கொள்ள முயலவில்லை, ஒரு தேசத்தின் உணவு தன்னிறைவையும், அதன் உணவுசார் பாரம்பர்யத்தையும், வாழையடி வாழை விவசாய அறிவையும் பிடுங்கிக் கொள்ள முயற்சிக்கிறது என்பதனை ஏன் நம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை?

இது வரையிலும் நாம் இந்த தொழில் நுட்பத்தின் வழியாக இழக்கும் அரசியல்/சமூக/பொருளாதார சுதந்திரத்தை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம்! இதே செய்கை எப்படி பெரியளவில் சுற்றுப் புறச் சூழலையே சிதைத்து நாம் பார்த்து வளர்ந்த நமது கிராம பூமியையே கோரமாக்கிக் காட்டும் என்பதற்கு மேலே தஞ்சாவூரானின் பின்னூட்டமே சாட்சி. ஓர் ஊரில் வாழும் தாவர விலங்குகளுக்கும் அங்கு விளையும் உணவிற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எங்காவது ஒரு மாற்றம் அதனில் ஏற்படுமாயின் மொத்த வாழ்வுச் சங்கிலியுமே அறுபட்டு போகிறது.

ஐரோப்பாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விளை நிலத்தின் பக்கமாக வந்து போகும் வண்ணத்து பூச்சிகளின் எண்ணிக்கை 40% சதவீதம் குறைந்து போனதாகவும், ஸ்கைலார்க் எனும் பறவையின் வரத்து போக்கும் சுத்தமாகவே நின்று போனதாகவும் பக்கத்து பக்கத்து வயல்காடுகளில் மரபணு மாற்றமுறச் செய்த விளைபயிர்களையும், இயற்கை முறையில் சாகுபடியாகும் வயல்களுக்கிடையில் செய்த ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது. இதனில் கீழே சிந்திய இயற்கை பயிர்களினான விதைகள் மீண்டும் முளைக்கும் சாத்தியமிருப்பதால் அதனையொட்டிய ஜீவராசிகளின் வரத்து போக்கிற்கான காரணமாக தெரிய வந்திருக்கிறது.

இந்த மரபணு மாற்று பயிர்களுக்கென தூவப்படும் உரங்கள் பயிர்களுக்கான போஷாக்கை தருவதற்கெனவே என்ற வகையில் பாவித்தாலும் மண்ணை நாட்போக மலட்டுத் தன்மைக்கு இட்டுச் செல்கிறது. மண்ணும் சுவாசிக்கிறது என்பதனை இந்த இடத்தில் மறந்து போகிறோம்! பூச்சிக் கொல்லிகள் பயிர்களை தாக்கும் தேவையற்ற பூச்சிகளை கட்டுபாட்டில் வைத்துக் கொள்ளவே என்ற போதிலும் இயற்கையிலேயே அங்கு வாழும் மற்ற ஜீவராசிகள் அதனதன் வேலைகளை செய்வதிலிருந்து முற்றிலுமாக விளக்கி விடுவதால் நன்மை தரும் பூச்சி, பட்டுகள் கூட காலப்போக்கில் சுத்தமாக துடைத்தெரியப் படுகிறது. அல்லது அவைகளிலும் ஏதோ ஒரு வகையில் மரபணு மாற்றத்தை முடுக்கி விட்டு சூப்பர், டூப்பர் வகையில் புது விதமான நச்சு வகையாக மாறிப் போய் விடும் அபாயமாகவும் ஆகிவிடுகிறது. இந்த ரசயானங்களும், பூச்சி கொல்லிகளும் விளைந்த உணவுகளின் ஊடாக நமக்கு வந்தடைகிறது என்று சொல்லிதான் விளங்கிக் கொள்ள வேண்டுமென்று இல்லை.

புதிதாக நம் உடம்பிற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத பல வேதிய பொருட்களின் இருப்பு (chemical traces) இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது இரு வேறு கால அவகாசங்களில் ஒரே மனித உடலில் இருக்கும் வேதிய tracesகளின் மூலமாக உறுதி படுத்தப்பட்டுள்ளது. இது எப்படி நிகழ்ந்திருக்கக் கூடும்? இது போன்ற புற வேதிய பொருட்கள் உடலில் எகிரும் பொழுது புதிது புதிதாக வியாதிகளின் வருகையும் அதிகரிப்பதினில் என்ன ஆச்சர்யமிருக்கக் கூடும். செயற்கையாக கரவை மாடுகளில் வளர்ச்சியைச் தூண்டும் மாற்று மரபணு வளர்ச்சிக் ஹார்மோன்களை உட்செலுத்தி அதிக பாலை பெறும் முயற்சியில் நமக்கு கிடைக்கும் உபரி - (IGF-1- இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணி) அந்த பாலின் மூலமாக கிடைக்கப் போய் அதுவே புற்று நோயைத் தூண்டுவதாக அமைந்து விடுகிறது.

நாமே மரபணு மாற்றங்களை உருவி, சொருவி தேவையானதை சிருஷ்டித்து கொள்வதின் மூலம் உடனடி லாபம் ஈட்டினாலும், இயற்கையில் நிகழ்வுறும் பரிணாம சங்கிலித் தொடர் மாற்றங்கள் நிகழ்வுருவதை சிதைத்தவர்களாகிறோம்.

மேலும் இயற்கையில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் இந்த இயற்கை சுற்று சூழலியியல் பின்னணியில் பின்னி பிணைந்து கிடப்பது. ஒரு சில பூச்சிகள் ஒரு சில தாவரங்களை மட்டுமே உண்டு அவைகளின் இனப்பெருக்கத்தையும், பரவலையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதாக இருக்கலாம். ஒரு சில பூச்சிகள், ஒரு சில தாவரங்களில் மட்டுமே அழிவைக் கொடுக்கும் பூச்சிகளின் லார்வாக்களை உண்டு அந்த பூச்சிகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் இயற்கையமைவு இது.

எல்லாவற்றிற்கும் மேலாக இயற்கையின் பன்முகத் தன்மை போற்றி பாதுக்காக்கபட வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம், ஏனெனில் அந்தந்த சுற்றுப் புறச் சூழ்நிலையில் தமக்கேயான மருத்துவ குணங்களுடன் உள்ள indigenous, ethnollogically முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்கள் இயற்கை நமக்கு கொடுத்த கொடை, அதனை பேணி பாதுகாப்பதும் நமது எதிர் கால தலைமுறையினருக்கு நாம் விட்டுச் செல்லும் சொத்தே!

Selective breeding is wiping out the natural biodiversity! which is not good in the long run - full stop!

தஞ்சாவூரானின் ஊர் வயல் காடுகளில் அவர் பார்க்கும் சாதாரண ஜீவராசிகள் இவ்வளவு சீக்கிரமாக அவரின் பார்வையிலிருந்து காணாமல் போனதிற்கு ஒரு விளக்கமாக இதனையும் கொள்ளலாம். இந்த மறைந்து போனதிற்கு பின்னணியில் கூட நான் மேலே சொன்ன பரிணாமச் சங்கிலி (உணவுச் சங்கிலியும்) சிதைவுற்றதும் ஒரு காரணமாக இருக்கலாம். உதாரணமாக, நாம் தடைசெய்யப் பெற்ற ஒரு பூச்சிக் கொல்லியை நம் வயலில் பயன்படுத்துகிறோமென்று வைத்துக் கொள்வோம் அது அங்கு வாழும் தவளைகள், நண்டுகள் போன்றவற்றை நேரடியாக பாதிக்கிறது அடுத்த முறை அவைகளின் இனப்பெருக்க முறையில் பெரிய மாற்றமெனில் அவைகளையே உணவாக கொள்ளும் மற்ற பறவைகள், விலங்கினங்களின் நிலை என்னவாக இருக்கும்...? இதுவே மாற்று மரபணு தாவரங்களுக்கும் பொருந்தும், அந்த தாவரங்கள் அந்த லோகல் இயற்கை உணவுச் சங்கிலியை அறுப்பதாக இருக்கலாம் அப்படி அது சிதைவுரும் பொழுது நம்பி உள்ள ஏனைய பிராணிகளும், பூச்சிகளும் உடனடியாக பாதிக்கப்பட்டு மாண்டழியலாம்... :(.

இந்த பரிணாம மாசுபாட்டையும், இயற்கையின் சுழற்சியில் தலையிட்டு ஊடறுப்பையும் நிறுத்திக் கொள்வது எல்லா முட்டையையும் ஒரே கூடையில் போட்டு ஒரு நாள் போட்டு உடைத்து கொள்வதனை போலல்லாமல், தப்பி பிழைத்துக் கொள்ள சிந்தித்து செயல் படுவோம்! இதுவே ஒரு தேசத்தின் உணவு தன்னிரைவிற்கும், அமைதிக்கும், தனி மனித சுதந்திரத்திற்கும் குறியீடான ‘முளை விதை’ பொருள் சொல்லி நிற்கட்டும்.

முற்றிலுமாக நமது பன்முக உணவுத் தாவர விதைகளை இழந்ததிற்கு பின்பாக குய்யோ, முறையோ என்று கதறிக் கொண்டு எங்கோ செயற்கையாக விதைகளை உற்பத்தித் தரும் ஆய்வுக் கூடங்களை நம்பியே கையேந்தி நிற்பதில் பொருளொன்றுமிருக்காது.

அப்படியே இந்த காணொளியையும் பார்த்து விசயத்தின் வீரியத்தையும், தீவிரத்தையும் உணர்ந்து கொள்ளுவோம்...




Wednesday, March 16, 2011

ஜப்பான் அணு உலைக்குள் உலகத்திற்கான செய்தி: Nuclear Reactor!!

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியான ஜப்பான் இயற்கை கொடுத்த தொடர் அடியினை சந்தித்து தடுமாறி நிற்கும் இந்த சூழ்நிலையில் அணு சக்தி தொழில் நுட்பத்தை பற்றி மறு பரிசீலனை உலகம் தழுவிய முறையில் செய்வது நமக்கெல்லாம் அவசியமாகிறது.

ஜப்பான் தனது பூமிய இருப்பில் அதிகளவு பூகம்பத்தையும், தொடர்பாக ஆழிப்பேரலையையும் சந்திக்கும் ஓரிடத்தில் அமைந்து போய் தனது இருப்பை நகர்த்தி வருகிறது. அவர்கள் இந்த இயற்கை சார்ந்த பேரழிவினை கடந்த கால அனுபவத்தைக் கொண்டு மிக்க ஆயத்தத்துடன் எதிர் நோக்கும் தன்மை இருப்பினும், இந்த சமீபத்திய பூமியச் சிலிர்ப்பு அவர்களை எதிர்பாராத நிலைகுலைவில் இருத்தி வைத்திருக்கிறது.

நில அதிர்வு ஏற்பட்ட அடுத்த நிமிடத்திலேயே ஆழிப்பேரலையின் பயணம் தொடங்கி விடுகிறது. அதன் வேகமும், நிகழ்த்தப் போகும் சேதாரமும் எதனை ஒத்ததாக இருக்கப் போகிறது என்பது, நாம் கரைப் பகுதியில் அமைத்து வைத்திருக்கும் தொழிற்நுட்பங்களையும், நம்மிடம் இருக்கும் மக்கட் தொகையையும் கொண்டே இறுதியில் கணித்து தெரிந்து கொள்வதாக இருக்கிறது.

அத்தனை பெரிய அனுபவத்தையும், தொழில் நுட்பத்தையும், பொருளாதாரத்தையும், முன் ஏற்பாடுகளையும், நேர்மையாக மக்களுக்கென இயங்கும் அரசாங்க எந்திரத்தையும் கொண்டிருக்கும் ஒரு நாடே இப்படியான ஒரு அவல நிலையில் இந்த அணு சக்தி உலைகளுக்கு நிகழ்ந்த நிகழ்வினால் நிலை குலைந்து நிற்கும் பொழுது ஏனைய மூன்றாம் தர நாடுகளுக்கு இது போன்ற எதிர்பாராத ஒரு இயற்கை பேரழிவினையொட்டி அணு உலை விபத்து நிகழ்ந்தால் என்னவாகும் என்று நினைக்கும் பொழுது மண்டை கிறு கிறுக்கிறது. அதிலும் குறிப்பாக நமது சுரண்டல் அரசாங்கத்தை கொண்ட நாட்டில் எப்படியெல்லாம் விளைவை சந்திப்போம்?

கல்பாக்கத்தில் அமைந்திருக்கும் அணு உலை கண்டிப்பாக 35+ வருடங்களுக்கு முன்பாக கட்டமைக்கப்பட்டிருப்பதாகத்தான் இருக்க முடியும். இந்த கால இடைவெளியில் அதன் கட்டமைப்பே கலகலத்துத்தான் போயிக்கொண்டிருக்கும். அங்கே இது போன்ற ஒரு பூகம்பத்தாலோ அல்லது ஏதோ ஒரு தொழிற்நுட்பக் காரணத்தாலோ வெடிப்பு நிகழ்ந்து கதிரியக்கம் நிகழப்படுமாயின் எது போன்ற தற்காப்பு முன்னெடுப்புகள் கை வசத்தில் உள்ளன? அந்த திட்டத்தில், மக்களையும் பங்கு கொள்ள வைத்து தயார் நிலையில் அறிவூட்டி நாம் திட்டங்களை தீட்டி வைத்திருக்கிறோம். இத்தனை மக்கட் தொகையையும் உள்ளடக்கி கொண்டு, சரிவர அவர்களுக்கு இந்த கதிரியக்கத்தின் சாதக பாதகங்களை அறிவுறுத்தி வைக்காமல் எப்படி கண்களை மூடிக் கொண்டு மேலும் மேலும் அணு உலைகளை நாட்டின் இதரப் பகுதிகளுக்கும் பரப்பி வைக்க நம்மால் முடியும்?

குறைந்த பட்சம் இருக்கும் மக்கட் தொகையினை கருத்தில் கொண்டாவது இயற்கை-நண்ப தொழிற்நுட்ப வழியில் இது போன்ற மின் சக்திக்கென அணு உலைகளை பயன்படுத்தி பிற்காலத்தில் அதன் கழிவுகளாலும், விபத்துக் காலங்களில் நடந்தேறும் கதிர் வீச்சுக் கோரங்களை கணக்கில் கொண்டு மாற்றுத் திட்டங்களான காற்று, நீர், சூரிய வெப்பத்தினைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் உக்தியினை சொடுக்கி ஒரு பழக்கமாக ஆக்கிக் கொண்டால்தான் என்ன.

இப்பொழுது ஜப்பானில் அணு உலை வெடித்த இடத்திலிருந்து 250 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கூட கதிரின் தாக்கம் இருப்பதாக அறியப்படுகிறது. இது போன்றதொருதளவில் நமது நாட்டில் கல்பாக்கத்திலோ அல்லது கூடான் குளத்திலோ நடந்தேறினால் கதிரியக்கத்தின் தாக்கம் எது வரைக்கும் சென்றடையும்? எப்படி மக்களை அப்புறப்படுத்தி எந்த மாநிலத்தில் கொண்டு போய் விடுவோம்? எந்த வீட்டை அது போன்ற ஒரு கதிர் வீச்சு நடைபெறும் நாளில் அடைத்து காற்று கூட உட்புக முடியாதவாறு பூட்டிக் கொண்டு உள்ளயே இருப்போம்?

ஒன்று தெரியுமா? இது போன்ற கதிர்களிலிருந்து வரும் கழிவுப் பொருட்கள் 10 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் வருடங்கள் கூட தனது வீரியத்தை இழக்காமல் கதிர் வீச்சை வெளிப்படுத்துகிறதாம். இதனை வைத்து பாதுகாப்பதற்கே இடம் தேடி வருகிறோம், அதாவது கழிவினைக் கூட எப்படி ஜப்பான் அணு உலையினுள் குளிர்ந்த நீரைச் செலுத்தி வெப்பத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள போராடியதோ அதனைப் போன்றே இந்த கழிவினையும் வைத்து கண்ணும், கருத்துமாக பாதுகாத்து வரவேண்டும்.

நம்ம பிச்சாத்து போபால் விபத்திலேயே பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை பலி கொடுத்துவிட்டு ஒண்ணுமே நடக்காத மாதிரி துடைச்சி போட்டுட்டு மறந்து போனவிங்க நாம. இனிமே வரப் போறதுக்கு மட்டும் அலட்டிக்கவா போறோம். ஆனா, இந்த அணு கதிர் வீச்சில என்னவொரு மறுக்க முடியாத தடயத்தை விட்டுக்கிட்டே போகுமின்னா நான்கு தலைமுறைக்கும் தள்ளி பிறக்கும் குழந்தைகளில் கூட குறைபாடுகளை மரபணுக்களின் வழியாக வெளிப்படுத்தி நான் இன்னும் உசிரோடதான் இருக்கேன்னு சொல்லிகிட்டே இருக்கும்.

ஜப்பானில் இப்பொழுது நிகழ்ந்திருக்கும் விபத்தின் பிரமாண்டத்தைக் கண்டு சைனாவே எல்லா அணு உலைகளுக்கும் போட்டிருந்த எதிர்கால ஒப்பந்தத்தை கடாசப் போகிறதாம். எனவே, நாம சைனாவை பார்த்துத்தானே சூடு போட்டுக்குவோம், இப்போ அவங்கள நகல் படுத்தி ஒரு நல்ல சூடு போட்டுக்குவோம் வாங்க!


கதிர்வீச்சின் நீள அகலத்தை புரிந்து கொள்ள இந்த படத்தை பார்த்து புரிஞ்சிக்குவோம். இது இப்பொழுது ஜப்பானில் நிகழ்ந்த அணு உலை வெடிப்பினையொட்டிய projection ...



Photo Courtesy: Net

Related Posts with Thumbnails