Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Sunday, March 02, 2025

ஆசானுக்கு ஓர் அஞ்சலி: A Tribute To My Beloved Mentor Dr. Ajith Kumar

இன்றைய காலை இப்படி ஒரு செய்தியுடன் விடிந்திருக்க வேண்டாம். என்னுடைய இளமை காலத்தில் என்னிடம் மண்டிக்கிடந்த பல பொதுப்புத்தி கட்டமைப்புகளை தகர்க்க போதுமான இடமளித்து மனிதனாக வார்த்துக் கொள்ள தனது வீட்டுக் கதவை திறந்து விட்டவர்; இயற்கையோடு கலந்துவிட்டார். 

முனைவர் அஜித்குமார் என்னுடைய Ph.D ஆராய்ச்சி படிப்பிற்கான ஆலோசகர். அவர் தன்னுடைய முனைவர் பட்டத்தை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திலிருத்து பெற்றவர். நான் ஒரு முறை ஏதோச்சையாக என்னுடைய முதுகலை பட்டப்படிப்பு ஆராய்ச்சி நாட்களில், டாப்சிலிப்ல் தங்கி பைசன் பற்றிய ஆய்வில் இருந்த போது, இவரை அவரோட டேராடூன் Wildlife Institute of India மாணவர்களோட வைத்து சந்தித்தேன். இவர் வனவுயிரின ஆராய்ச்சி, பேராசிரியர் என்று அவர்களுக்குள் உரையாடிக் கொண்டதை வைத்து அறிந்து கொண்டேன்.

பிறகு நானே என்னை அவரிடத்தில் அறிமுகப் படித்திக் கொண்டேன். என் ஆராய்ச்சி சார்ந்த என்னிடமுள்ள சில சந்தேககங்களை அவரிடத்தில் கேட்டு தெளிவு படுத்திக்கொண்டேன். அதுவே என்னை இவரிடத்தில் பிற்காலத்தில் கொண்டு சேர்க்கும் ஓர் சந்திப்பாக அமையுமென்று அன்று கனவிலும் நினைக்கவில்லை.

மறு ஆண்டு, கோவையில் அமைந்திருக்கும் சலீம் அலி பறவையியல் ஆராய்ச்சி நிலையத்தில் (SACON) பல Junior Research Fellowsக்கான ஆட்கள் தேடிய நிலையில் முதுகலை முடித்திருந்த நான் அந்த ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய அனைத்திந்திய தேர்வில் கலந்து கொண்டேன். அதுவே என் வாழ்வெனும் வறண்ட பூமியில் விழுந்த முதல் மழை!

தேர்வாகி இருந்தவர்களின் பட்டியலில் என்னுடை பெயரை எப்படியோ நினைவில் வைத்திருந்த அஜித் சார், அவருடைய ஆராய்ச்சிக்கென அவருடைய முதல் இரண்டு மாணவர்களில் என்னையும் ஒருவனாக இணைத்துக் கொண்டு பயணிக்க தந்தியின் மூலமாக என்னை அழைந்திருந்தார்.

அன்று எனக்கு 23 வயதாக இருந்திருக்கலாம். அவருடனான உரையாடல்கள், பயணங்கள், கேளிக்கையான நேரங்கள், அடர்ந்த மழைக்காடுகளிக்கிடையே நட்சத்திரங்கள் கொத்தாக தொங்கி மினுமினுக்கும் நீண்ட இரவின் மடியில் முகாம் தீ எரிய ஓல்ட் மாங்குடன் உலகைப் பற்றியான பொது உரையாடல்கள் இன்றும் பசுமையாக என்னுள் உறைந்து கிடக்கிறது..

இது அத்தனையும் எனக்கு அறிமுகப் படுத்தி கொடுத்த எனது ஆசான் NO MORE. எனக்கே இது வரையிலும் வாழ்ந்த அத்தகைய வாழ்வின்பம் இத்தனை மன நிறைவை கொடுத்திருக்கிறது என்றால், அவருக்கு எத்தகைய நிறைவை கொடுத்திருக்கக் கூடும் என்று உணர முடிகிறது. I am sure he must have lived the fullest and given utmost of his best! Such a great human being ever I come across. Long live his scientific achievement in the academic arena.

An add on - I remember this day, after a long gap one day I called you and you took the call like I just spoken to you a half hour before without any void and allowed me to update, and we discussed about Indian political climate how rapidly it is plunging into abysmall darkness. Fondingly you pointed out that you still crack jokes about me in field trips that how I came up with "Menstrual Symptoms" theory in men and pointed out to me how hilariosly true it is! நன்றி! என்றென்றும் உங்கள் நினைவுடன் - அ. பிரபாகர்.

P.S: என்னுடன் தங்கி அஜித்குமார் சாருக்கு கீழ் மற்றுமொரு ஆராய்ச்சி மாணவராக இயங்கிய முனைவர் உமாபதி எழுதிய பதிவில் இரங்கல் பின்னூட்டமாக எழுதியது ...

I have no words to express my gratitude to my advisor - friend Dr Ajith Kumar, he was one of  my earliest times inspiration who helped me to shape myself up to be the person who I am today. I am so fortuanate and proud to call myself I was one of his first hatchlings of Ph.Ds.

I have so much to share about our fondings during those days! My Ph. D colleague Dr Govindhaswamy Umapathy has already elaboarated his academic achievements. He was a prominent and unavoidable icon in the field of Indian primatology and widlife biology; a rainforest conservation expert with profound knowledge of its ecology, with outstanding floral and faunal field identification skills. My deepest condolences to his family, friends, colleagues and I feel terribly sorry that I couldn't be there to bid final good bye! 😪🫡🙏🏽



Art Courtesy: Dr Gokula Varadharajan

Sunday, February 26, 2023

கலைஞரின் சற்கர நாற்காலியும் கமலின் ஏகாடியமும்!

கமலோட சக்கர நாற்காலி ஏகடியம் அவருக்கேயான மிக இயல்பான வளர்ப்பிற்கு பின்னான சிறுமையின் எச்சம். அவரோட நிதானத்தையும் தாண்டி இப்படியான வன்மம் பொங்கி வழிகிறது என்றால், இன்னும் சொற்களாக பேசப்படாத, வக்கிர எண்ணங்கள் எவ்வளவு இருக்கக் கூடும்?

அம்பேத்கர், காந்தி, பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் எதனை உணர்ந்து கொண்டதால் சாதரணர்களைக் காட்டிலும் பன்மடங்கு உழைக்க தழைப்பட்டார்கள்? மரணித்த நொடிகளுக்கு முன்பு கூட அய்யோ செய்ய இன்னும் இவ்வளவு இருக்கும் போது, பாதியிலேயே விட்டுவிட்டுச் செல்லும் படி ஆகிவிட்டதே என்ற வேதனையே அவர்களிடையே தங்கியிருக்கக் கூடும்.

பெரியாரும், கலைஞரும் அந்தப் பரிதவிப்பை தனது உடல் உபாதைகளைப் புறந்து தள்ளி களத்தில் நின்றதே அதற்குச் சான்று. ஒரு தனி மனித வளர்த்தெடுப்பு என்பது, எத்தனை பிரயத்தனங்களை உள்ளடக்கியது? தொடர் பயணம், சமூக உள்வாங்கல், அது தொடர்பான ஊடாடல்கள், போராட்டக் களங்கள், வரலாற்று வாசிப்பு, இலக்கிய அறிமுகங்கள், அது தொடர்பான எழுத்துப் பணி என்று எத்தனை அனுபவம் அவர்களால் சேகரிக்கப்பட்டிருக்கும். அந்த நிறை மனிதர்களின் சமூகம் சார்ந்த ஆழ்ந்த புலமையை, தான் நேசிக்கும் மக்களோட பகிர்ந்து கொள்ள ஒவ்வொரு மணித்துளிகளையும் செலவு செய்திருக்கிறார்கள் என்றால், எத்தனை ஆழ்ந்த மனித நேய passion இருந்திருக்க வேண்டும்.

இத்தனை அறிவும் ஒருவர் மரணிக்கும் போது அவரோடு சேர்ந்தே பேசப்படாத, வழங்கப்படாத பகுதிகளும் மறைந்து விடுகிறது. காலத்தின் நிலையின்மை உணர்ந்தவன் எப்படி அதனை வீணடிப்பான்? எனவே, ஒரு மனிதரின் நினைவு தவறும் நொடிகளுக்கு முன்பு வரை கூட, ஏரணத்தோடு விசயங்களை தொடர்பு படுத்தி பேசும் திறன் இருக்கும் வரையிலும் அந்த மூளை அந்தச் சமூகத்திற்கு தேவைதான். 

சக்கர நாற்காலியில் அமர்ந்த படியே ஸ்டீவன் ஹாகின்ஸ் போன்ற அறிவியலாளர்களின் வாழ்நாள் சாதனைகளையும் அறிந்தவரே கமல். புரியாமல் எல்லாம் கலைஞர் பொருட்டு பேசி இருப்பார் என்று நான் நம்பத் தயாரில்லை. கமலையொத்த குடும்பங்களின் பேச்சு முழுக்க தமிழ்நாட்டின் இன்றைய நிலைக்கு யார் காரணம் என்று, குறுக்கி வந்தடைந்த புள்ளிதான் இந்தத் திராவிடத் தலைவர்கள். அவர்களின் சப்கான்ஸியஸ் மனம் எப்பொழுதும் இவர்களைச் சுற்றியே இயங்குகிறது.

கமல் பகடியாக பேசியது போல் மற்றுமொரு சிறுமைத் தனமே மோடியை வைத்து, கலைஞரின் இறுதி நாட்களில் அவர் தோளின் மீது கை வைத்து நலம் விசாரிப்பது போல, கலைஞரை திகிலூட்டுவதாக நினைத்து தங்களது வக்கிரப் பகுதியை அவர்கள் சொரிந்து கொண்டதும் என்பேன். அந்தப் புகைப்படத்தை சற்றே உள்வாங்கி ஆராய்பவர்களுக்கு புரியும், துரைமுருகன், கலைஞர் உடற்மொழியை கவனித்தல் பொருட்டு. ஒருவர் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது, ஏதாவது பேசி அது ஒரு மகிழ்வான தருணத்திற்கு இட்டுச் சென்றிருந்தால், அது மோடியின் தோள் தொடுதலுக்கான நட்பு உணர்ச்சி போல் வெளிப்பட்டிருக்க வாய்ப்புண்டு. ஆனால், நான் இந்தச் சூழலை ஒரு திட்டமிட்ட எக்ஸ்ப்ரசனாகப் பார்க்கிறேன்.

கமலின் சக்கர நாற்காலி ஏகடியத்திற்கு இணையானதே மோடி குழாமின் தோள் தொடுதலும். இங்கு மறைமுகமாக இவர்கள் அனைவரையும் இயக்குவது சித்தாந்தச் சமரே!

Sunday, February 05, 2023

ஜம்தாரா (Jamtara): கடன் அட்டை திருட்டு

இந்திய சினிமாவிற்கு நெட்ப்ளிக்ஸ் வந்ததிலே ஒரு சிறப்பான சம்பவம் நடந்திருக்கின்னா அது பரவலாக பேசப்படதா விசயங்களை பேச வைக்கிற படங்களை கொடுப்பதுதான். நமக்கு இது வரைக்கும் ஹிந்திப்படங்கள் என்றாலே பளபளப்பான பெரிய பெரிய அரண்மனை போன்ற வீடுகளில் ஐட்டம் பாடல்களை ஒத்தப் பின்னணியில் வண்ண வண்ண பெண்டீரையும், இசையையும் தவழ விட்டு நம்மை மயக்கி படம் காட்டுவார்கள்.



ஆனா, இதற்கு நேர்மாறாக இன்று நெட்ப்ளிக்ஸ் வேறு மாதிரியான ஒரு சினிமா அனுபவத்தை நமக்கு வழங்கி வருகிறது. இது வரைக்கும் நான் பார்த்த ஒரு சில படங்களையும், தொடர்களையும் வைத்து இணைத்துப் பார்த்தால், இந்தியா ஏன் மோடி, அமிச்சா, நிர்மலா போன்றவர்களுடன் மாரடித்துக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஏற்கெனவே "தெ ஒயிட் டைகர்" என்ற படத்தைப் பற்றி பேசி ஒரு பகுப்பாய்வு செய்தோம்.

அதன் தொடர்ச்சியாக அமைந்திருக்கிற "#ஜம்தாரா (Jamtara)" என்ற தொடரைப் பார்த்தேன். வேலையில்லா இளைஞர்கள் ஒரு சிறு கிராமத்திலிருந்து அலைபேசியைப் பயன்படுத்தி வங்கி அட்டைகளின் செய்திகளைப் வாடிக்கையாளர் களிடமிருந்து கறந்து (Phising) நூதன திருட்டு செய்கிறார்கள் என்பதே படத்தின் ஒன்லைனர். அந்த திருட்டில் ஈடுபடும் மனிதர்கள் வாழும் இடமும், சமூக கட்டமைப்பும் அவர்களுக்கிடையேயான உறவாடலும் எத்தகையது என்பதை கடத்துவதில் தான் இந்த தொடர் சிக்ஸர் அடித்திருக்கிறது எனலாம்.

அப்படியே இன்றைய வட இந்தியாவின் ஒரு மினி சிற்றூரும், சிறு நகரமும் அதிலுள்ள மக்களின் வாழ்வமைவையும் தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. வட இந்தியா ஏன் தென் மாநிலங்களை விட மிகவும் பின் தங்கி இருக்கிறது? படை படையாக ஊரையே காலி செய்து கொண்டு புலம் பெயர என்ன காரணம்? ஏன் கொலை, கொள்ளை, திருட்டில் அதிகமாக ஈடுபடுகிறார்கள்? இவை அனைத்தையும் இந்தத் தொடரில் இணைக்கும் புள்ளி ஒன்று இருக்கிறது.

அந்தத் தொடரைப் பார்க்கும் போதே எனக்குத் தோன்றியது, இன்றையத் தமிழ்நாடு அவர்களின் பார்வைக்கு ஒரு மினி சிங்கப்பூராகத்தான் காணக் கிடைக்க வேண்டும். நாம் நிலச்சுவாந்தார்களை கடந்து விட்டோம். மகாபாரத சூழ்ச்சி வாய்ப்பாடுகளை தினசரி வாழ்வில் தொடர்பு படுத்தி செய்யப்போகும் படுபாதக செயல்களுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டு செய்யும் தனத்திற்கு என்றென்றைக்கும் தொடர்பற்று இருந்திருக்கிறோம். ஆனால், இவை அனைத்தும் வட மாநிலங்களில் இன்னமும் இருப்பதாகத் தெரிகிறது.


இந்தத் தொடரில் ஜாதிய கட்டமைப்பு மிகப் பெரிய பூதமாக எழுந்து நிற்கிறது. ஒரு பிராமண நிலச்சுவாந்தார் அந்த ஊரையே ஆட்டி வைக்கிறார். அனைத்து அதிகாரமும் ஓரிடத்தில் ஒடுங்கிக் கிடக்கிறது. மக்களும், காவல்துறையும் அவரின் கடைக்கண் பார்வையில் கட்டுண்டுக் கிடக்கிறது. அந்த கதாபாத்திரம் வட இந்தியாவின் சமூக நோய்மைத் தன்மையின் மூல ஊற்றை பேசிச் செல்கிறது.

உழைக்கும் வயதில் உள்ள இத்தனை பெரிய மக்கட்தொகையைக் கொண்ட ஒரு நாட்டில் வேலையில்லா திண்டாட்டமும், வறுமையும், பேராசையும் ஒன்று சேர்ந்தால் என்னாகும் என்பதற்கு இந்த அலைபேசி வழி வாடிக்கையாளர்களிடம் நடத்தப்படும் கொள்ளையேச் சான்று. நைச்சியமாக ஆசை காட்டி வாடிக்கையாளர்களின் கார்டுகளில் இருக்கும் 16 இலக்க எண்ணைப் பெற்று எப்படியாக பணத்தை பரிமாற்றிக் கொள்கிறார்கள் அத்தனை சிறிய சிற்றூரிலிருந்து என்பது ஆச்சர்யமோ ஆச்சர்யம்.

அதுவும் அந்த வாழ்வுப் பின்னணியோடு லட்சக்கணக்கில் இப்படிச் சுருட்டும் போது பயமாக வருகிறது. தொடர்ந்து மன்மோகன் சிங் கூறிய "முறைப்படுத்தப்பட்ட சுருட்டல்" என்ற பதம், அவர்கள் யார் யாரையோ ஒவ்வொரு முறையும் வங்கிக்கு கூட்டிச் சென்று பணத்தை எடுக்கும் போதும், ஓ! இதற்காகத்தன் நாட்டு மக்களையே பாடாய் படுத்தி வங்கிக் கணக்கு தொடங்கச் சொன்னார்களோ என்பதை நினைவூட்டியதை மறக்க முடியாது.

அண்மைய காலத்திய பணச் சுருட்டலில் இது போல பல திட்டங்களில் மக்களுக்கு சென்றடைய வேண்டிய வங்கிக் கடன்கள் யார் யாருடைய இயக்கப்படாத வங்கிக் கணக்குகளிலெல்லாம் வரவு வைத்து பெரியளவில் ஸ்கேம் செய்திருப்பதையும் தினமும் தொலைக்காட்சி செய்திகளில் கேட்டு வருகிறோம். அதனுடைய இன்னொரு வடிவம் தான் இந்த phising.  இது ஓர் உறுபிணி போல வட மாநிலங்களில் பெருகி வருவதாகத் தெரிகிறது. 

வரும் காலங்களில் இடப்பெயர்வின் மூலமாக அடைந்து கொள்ளும் வேலை வாய்ப்புகளைத் தாண்டி, அந்தந்த மாநில அரசுகள் ஏதாவது வாழ்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கிக் கொடுத்து வாழவைத்துப் பார்க்க வில்லை என்றால், மென்மேலும் கூட்டம் கூட்டமாக தெற்கு புறமாக வந்து அள்ளிக் கொண்டு ஓடி மறைந்து கொள்ளும் கூட்டம் பெருகக் கூடும்.

#ஜம்தாரா

#Jamtara_Netflix_Series

Sunday, April 25, 2021

குடும்பக் கட்டுப்பாடு: தமிழ்நாடு பெற்றதும் இழந்ததும்!

ஒரு பிள்ளை போதும் என்ற மனதிற்கு தமிழகம் பெற்றதும் இழந்ததும் என்ன?

1965களில் குடும்பக் கட்டுப்பாடு இந்தியாவில் பெருமளவில் கொண்டு சேர்க்க
ஆரம்பிக்கப்பட்ட ஒரு திட்டமே Family Planning in India. ஒரு கால கட்டத்தில சிகப்பு நிற முக்கோண வடிவ தலைகீழ் சின்னத்தை சுவர்களிலும், பேருந்துகளிலும் பார்த்திருப்போம். அதற்கான வாசகமாக நாமிருவர், நமக்கிருவர் என்றும் பின்னாளில் ஒருவர் என்றும் சுருங்கியது.

இந்த நாற்பது ஆண்டு கால நடையில் தென்னக மாநிலங்கள் மிகத் தீவிரமாக பின்பற்றி, வடக்கு மாநிலங்களோட ஒப்பீடும் பொழுது உண்மையாகவே ஒரு பெண்ணிற்கு சராசரியாக 2 குழந்தைகள் என்ற அளவிற்கு வந்து விட்டோம்.

ஆனால், வட மாநிலங்களில் அது இன்னமும் 4 குழந்தைகளை கொண்டதாகவே இருக்கிறது. அதனால், தென்மாநிலங்கள் இழந்து நிற்பது நிதி ஒதுக்கீட்டில் பெரும் ஓட்டை. அடைய வேண்டியதை அடைந்து கொள்வதில் சுணக்கம்.

இப்பொழுது எது என்னை இதனை எழுத வைத்தது? அன்மையில் நான் கண்ணுரும், கேள்வியுறும் விசயங்கள், எனக்கு தெரிந்தவர்களின் குடும்பங்களிலேயே ஒரு பிள்ளையோடு நிறுத்திக் கொண்டவர்களின் கடைசி காலங்களில், அந்த ஒரு பிள்ளையும் வெளி நாட்டிற்கு எங்காவது செல்ல நேர்ந்து சிக்கிக் கொண்டால், அந்த பெற்றோர்களுக்கு நிகழும் இன்னல்களை பார்த்ததாலே இதனை எழுதத் தூண்டியது.

ஒன்றே போதுமென்று நிறுத்திக் கொள்கிறார்களே அவர்களின் மன வலிமைக்கு நமது மத்திய அரசு கொடுக்கும் நற்சான்றிதழ் என்னத் தெரியுமா? நமக்கு இந்தக் குடும்ப கட்டுப்பாட்டிற்கென வரவேண்டிய உபரி நிதியை பிடித்து வைத்துக் கொண்டதுதான். அது எங்கே போகிறது என்றால் அரசாங்க கனவை எட்டி அனைவருக்கும் ஒரு டீசண்டான வாழ்வுச் சூழலை ஈட்டிக் கொடுப்பதிலிருந்து பின்தங்கி இருக்க நேரிடும் கேட்டில் நிறுத்தி வைக்கிறது.

சொன்ன பேச்சை கேட்டு வளர்ந்து நிற்கும் பிள்ளைக்கு கொடுத்த உறுதியை நிறைவேற்றி, ஊக்குவித்து அடுத்த பிள்ளையையும் ஆர்வத்துடன் அந்தப் பாதையில் வளர உதவுவீர்களா அல்லது சொல்லுப் பேச்சை கேட்டதால் தண்டீப்பீர்களா?

சரி, கீழே இணைத்துள்ள பதிவையும் வாசிங்க, ரொம்ப எளிமையா வடக்கத்தியர்களுக்கும், தென்னியந்திர்களுக்குமான அப்பம் பிச்சிக் கொடுப்பதில் எப்படி மத்திய அரசு கையாள்கிறது என்பதை, குடும்பக் கதை மாதிரி சொல்லி புரிய வைச்சிருப்பாங்க... 

••••••©©©•••••••

மகனே தென்னவா, என் பிள்ளைகள் உங்கள் இருவரையும் ஒன்று போலவே படிக்க வைத்தேன்.

நீ படிப்பில் சிறந்து விளங்கினாய்.பட்டங்கள் பெற்றாய்.பார்ப்போர் பொறாமைப்படும் பணி,பதவிகள் என்று உச்சம் தொட்டாய்.நல்ல வருமானம் திட்டமிட்ட வாழ்வு.அளவோடு இரு குழந்தைகள் அதனால் அளவில்லா மகிழ்ச்சி.


உன் அண்ணன் மூத்தவன் வடமாக்கானை நினைத்து பார்க்கிறேன்.அவனுக்கு படிப்பு துளியும் ஏறவில்லை.அதனால் ஒழுங்கான வேலை கிடைக்கவில்லை.போதிய வருமானமின்றி வாய்க்கும் வயிற்றுக்கும் அல்லாடுகிறான். போதாக்குறைக்கு வெளியில் தான் வேலையில்லை என்று வீட்டில் வத வதவென்று ஒன்பது பிள்ளைகளை வேறு பெற்று போட்டுவிட்டான்.தரித்திரம் அவன் வீட்டில் தாண்டவமாடுகிறது.

என்ன இருந்தாலும் அவன் உன் உடன்பிறந்தான் இல்லையா?அவனும் அவன் பிள்ளைகளும் பசி, பட்டினியின்றி நிம்மதியாய் உறங்க உதவி செய்ய வேண்டியது உன் கடமையல்லவா? பண்டிகை காலங்களில் பரதேசி போல் அல்லாது குடும்பத்தோடு அவன் நல்ல துணி உடுத்துவதும் நீ செய்யும் உதவியில் அல்லவா இருக்கிறது?

ஆகையினால் நான் பெற்ற மகனே உன்னை உரிமையோடு இரண்டு விஷயங்கள் கேட்கிறேன்.

முதலாவது,உன் வருமானத்தில் முக்கால்வாசியை அவன் வசம் ஒப்படைத்து விடு.ஏனென்றால் அவன் உன்னை விட ஏழு பிள்ளைகள் அதிகம் பெற்ற உன் அண்ணன்.

இரண்டாவது நாம் வெளியே செல்லும்போது சப்பாத்தி சாப்பிட வேண்டுமா? இட்லி,தோசை சாப்பிட வேண்டுமா? என்பதையும்,சைவம் சாப்பிடலாமா அல்லது ஆட்டுக்கறி,மாட்டுக்கறி உள்ளிட்ட அசைவம் சாப்பிடலாமா என்பதையும், சினிமாவுக்கு சென்றால் தமிழ் சினிமாவா அல்லது ஹிந்தி சினிமாவா என்பதையும் உன் அண்ணன் வடமாக்கானே முடிவு செய்யட்டும்.எண்ணிக்கையில்   நாங்கள் அதிகம் அல்லவா? ஒன்பது பிள்ளைகள் தம்பதி இருவரோடு என்னையும் சேர்த்தால் பன்னிரண்டு பேராகிவிடுகிறோம்.ஆனால் நீங்களோ இரண்டு பிள்ளைகள் மனைவியோடு நால்வர் தானே? என்ன நான் சொல்வது?

என் அருமை மகனே தென்னவா, படித்தவன்,உலகம் முழுதும் சுற்றி பலவற்றையும் கற்று தேர்ந்தவன்,கை நிறைய சம்பாதிக்கறவன் என்ற இறுமாப்பில் என் வார்த்தையை மீறி உன் அண்ணனை,என்னை அவமதித்து விடாதே.அது நம் கூட்டு குடும்பத்திற்கு மிகப்பெரிய கேவலத்தை தேடித்தரும் என்பதை அறியாதவனா நீ?

கருப்பு வெள்ளை காலத்தில் கூட இப்படி ஒரு சென்டிமெண்ட் வசனத்தை அப்பா ரங்காராவ் பேசினால் மகன் சிவாஜியோ,ஜெமினியோ, ஏவிஎம் ராஜனோ கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

MR ராதா பாணியில் சுத்த நான்சென்ஸ் என்று உதறித்தள்ளிவிட்டு தனிக்குடித்தனம் போய் விடுவார்கள்.

தமிழ்நாட்டு விஷயத்தில் மத்திய ஒன்றிய அரசு இப்படித்தான் நடந்து கொள்கிறது.நீ அரிசி கொண்டு வா நான் உமி கொண்டு வருகிறேன் இரண்டையும் 

கலந்து ஊதி ஊதி சாப்பிடலாம் என்று 

நம் வளங்கள் எப்படி கொள்ளையடிக்கப்படுகிறது?

நாசகார திட்டங்கள் ஏன் இங்கு வலிந்து திணிக்கப்படுகின்றன?

கல்வியிலும்,மருத்துவத்திலும் முன்னேறிய மாநிலம் இப்போது ஏன் திட்டமிட்டு காயடிக்கப்படுகிறது?

உணர்வோமா? தெளிவோமா?

~ FaceBook via  யவன குமாரன்

Friday, February 26, 2021

கமல் அரசியல் அபத்தங்கள் - சக்கர நாற்காலி/கிராமசபை கூட்டம்

சக்கர நாற்காலியில் அமர்ந்து சொந்திரவு தரமாட்டேன்!

லெட் மீ கெஸ், கமல் தட்டை தூக்கிட்டு தளபதிகிட்ட போயிருக்கணும். அவரு தம்பி நீ அதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டே, அப்படி ஓரமா போயி விளையாடுன்னு சொல்லி அனுப்பிட்டார். மிதி தாங்க முடியாம, வெளியில வந்து உலக்கை தன்னோட முன்னோர்கள் வழியில் புத்தியை காட்டி இருக்கும்.

இவனுங்க பூராப்பயலும் காரிய வாதிகள். காரியம் ஆக என்ன வேணா செய்வானுங்க. காலப் பிடிச்சு அதில இருந்து ஒரு படி மேலே பொயிட்டான்னா, அடுத்தப் படிக்கான ஆளை பிடிச்சிருவான், ஏறிவர உதவினவனை எள்ளவு கூட மதிக்கமாட்டானுங்க. இவன மாதிரி ஆளுங்களுக்காக கலைஞர் "#பலிபீடம்_நோக்கி"ன்னு ஒரு சிறிய நூல் எழுதி வைச்சிருக்கார்.
வயசாகி இவனோட மூட்டு கழண்டு போகும் போது தானே கழுத்தை நெரிச்சிக்கிட்டு செத்துடுவான் போல. இவனுக்கெல்லாம் மரியாதை ஒரு கேடு!
Art Courtesy: Gokula Varadharajan

பி.கு: மின்நூல் வேண்டும் என்பவர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியை விட்டுச் செல்லவும். வெறும் 30 பக்கங்களுக்கும் குறைவான நூல். நன்றி!

@@@@@****@@@@@

நான் தான் கிராமசபை கூட்டம் கண்டுபிடித்தேன்:

கமல் எல்லாம் அரசியல் பழகலேன்னு இப்போ யார் அழுதா? இப்போ என்ன நடந்திட்டு இருக்கு இவரு என்ன பேசிகிட்டு அரசியல் செய்றோம்னு பேர் போட்டுகிட்டு திரியறார்?

ஆட்சியில இல்லாத ஓர் எதிர் கட்சியை நோண்டுறதில உள்ள லாபம், தனக்கு சம்பளம் போடுற மத்திய அரசை நேரடியா விமர்சனம் பண்ற துணிச்சலும் நேர்மையும் இல்லையே, ஏன்? ஏன் அழுத்தமா கிள்ளி வைச்சாத்தான் அடுத்த நகர்விற்கான பேமெண்ட்னு சொல்லிட்டாங்களா?  

உள்ளாட்சி தேர்தல் முறையாக நடத்தப்பெற்றிருந்தா இந்த கிராமக் கூடுதல்கள் தேவையா? முறைபடுத்தப்பட்ட அரசு உள்ளாட்சி கட்டமைப்பு 1000 பேர் வாழும் ஒரு வார்டிலிருந்து 8000 பேர் வாழும் ஊராட்சி வரைக்கும் வீதி பை வீதியாக சென்று பிரச்சினைகளை கண்டறிந்து கொண்டு வந்து சேர்த்து விடும் அமைப்பில்தானே இருந்தது. ஏன் தேர்தல் நடத்தலேன்னு கேக்கணும். யார் செஞ்சா என்ன வேலையானா சரித்தானே? இதிலென்ன போட்டி வேண்டிக்கிடக்கு. அதுவும் கை கறைபடாத ஒரு சொக்கத் தங்கமான நீங்க இப்படி பேருக்கு ஆசைபடலாமா?

அப்படி எடுத்துக்கிட்டு போறதை விட்டுப்போட்டு, என்னமோ தன்னையே தேவ தூதரா கருதிகிட்டு தானே கிராம சபைகளை இந்தியக் கிராமங்களில் அறிமுகப்படுத்தியது போல பேசுவதை எதனில் சேர்ப்பது...

அப்போ கீழே புகைப்படத்தில் உள்ள, இது போன்ற கூட்டங்களை நடத்தியதையெல்லாம் என்ன பெயர், செயலென்று பெயரிடுவது மிஸ்டர் மய்யம். 😂🙄😏

கமலஹாசன் சிறுமையின் எச்சம்: Wheelchair Speech

கமலோட சக்கர நாற்காலி ஏகடியம் அவருக்கேயான மிக இயல்பான வளர்ப்பிற்கு பின்னான சிறுமையின் எச்சம். அவரோட நிதானத்தையும் தாண்டி இப்படியான வன்மம் பொங்கி வழிகிறது என்றால், இன்னும் சொற்களாக பேசப்படாத, வக்கிர எண்ணங்கள் எவ்வளவு இருக்கக் கூடும்?

அம்பேத்கர், காந்தி, பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் எதனை உணர்ந்து கொண்டதால் சாதரணர்களைக் காட்டிலும் பன்மடங்கு உழைக்க தழைப்பட்டார்கள்? மரணித்த நொடிகளுக்கு முன்பு கூட அய்யோ செய்ய இன்னும் இவ்வளவு இருக்கும் போது, பாதியிலேயே விட்டுவிட்டுச் செல்லும் படி ஆகிவிட்டதே என்ற வேதனையே அவர்களிடையே தங்கியிருக்கக் கூடும்.
பெரியாரும், கலைஞரும் அந்தப் பரிதவிப்பை தனது உடல் உபாதைகளைப் புறந்து தள்ளி களத்தில் நின்றதே அதற்குச் சான்று. ஒரு தனி மனித வளர்த்தெடுப்பு என்பது, எத்தனை பிரயத்தனங்களை உள்ளடக்கியது? தொடர் பயணம், சமூக உள்வாங்கல், அது தொடர்பான ஊடாடல்கள், போராட்டக் களங்கள், வரலாற்று வாசிப்பு, இலக்கிய அறிமுகங்கள், அது தொடர்பான எழுத்துப் பணி என்று எத்தனை அனுபவம் அவர்களால் சேகரிக்கப்பட்டிருக்கும். அந்த நிறை மனிதர்களின் சமூகம் சார்ந்த ஆழ்ந்த புலமையை, தான் நேசிக்கும் மக்களோட பகிர்ந்து கொள்ள ஒவ்வொரு மணித்துளிகளையும் செலவு செய்திருக்கிறார்கள் என்றால், எத்தனை ஆழ்ந்த மனித நேய passion இருந்திருக்க வேண்டும்.
இத்தனை அறிவும் ஒருவர் மரணிக்கும் போது அவரோடு சேர்ந்தே பேசப்படாத,
வழங்கப்படாத பகுதிகளும் மறைந்து விடுகிறது. காலத்தின் நிலையின்மை உணர்ந்தவன் எப்படி அதனை வீணடிப்பான்? எனவே, ஒரு மனிதரின் நினைவு தவறும் நொடிகளுக்கு முன்பு வரை கூட, ஏரணத்தோடு விசயங்களை தொடர்பு படுத்தி பேசும் திறன் இருக்கும் வரையிலும் அந்த மூளை அந்தச் சமூகத்திற்கு தேவைதான்.
சக்கர நாற்காலியில் அமர்ந்த படியே ஸ்டீவன் ஹாகின்ஸ் போன்ற அறிவியலாளர்களின் வாழ்நாள் சாதனைகளையும் அறிந்தவரே கமல். புரியாமல் எல்லாம் கலைஞர் பொருட்டு பேசி இருப்பார் என்று நான் நம்பத் தயாரில்லை. கமலையொத்த குடும்பங்களின் பேச்சு முழுக்க தமிழ்நாட்டின் இன்றைய நிலைக்கு யார் காரணம் என்று, குறுக்கி வந்தடைந்த புள்ளிதான் இந்தத் திராவிடத் தலைவர்கள். அவர்களின் சப்கான்ஸியஸ் மனம் எப்பொழுதும் இவர்களைச் சுற்றியே இயங்குகிறது.
கமல் பகடியாக பேசியது போல் மற்றுமொரு சிறுமைத் தனமே மோடியை வைத்து, கலைஞரின் இறுதி நாட்களில் அவர் தோளின் மீது கை வைத்து நலம் விசாரிப்பது போல, கலைஞரை திகிலூட்டுவதாக நினைத்து தங்களது வக்கிரப் பகுதியை அவர்கள் சொரிந்து கொண்டதும் என்பேன். அந்தப் புகைப்படத்தை சற்றே உள்வாங்கி ஆராய்பவர்களுக்கு புரியும், துரைமுருகன், கலைஞர் உடற்மொழியை கவனித்தல் பொருட்டு. ஒருவர் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது, ஏதாவது பேசி அது ஒரு மகிழ்வான தருணத்திற்கு இட்டுச் சென்றிருந்தால், அது மோடியின் தோள் தொடுதலுக்கான நட்பு உணர்ச்சி போல் வெளிப்பட்டிருக்க வாய்ப்புண்டு. ஆனால், நான் இந்தச் சூழலை ஒரு திட்டமிட்ட எக்ஸ்ப்ரசனாகப் பார்க்கிறேன்.
கமலின் சக்கர நாற்காலி ஏகடியத்திற்கு இணையானதே மோடி குழாமின் தோள் தொடுதலும். இங்கு மறைமுகமாக இவர்கள் அனைவரையும் இயக்குவது சித்தாந்தச் சமரே!

Wednesday, February 24, 2021

சமூக ஊழலைப் பேசாத சகாயம்!

தமிழ்நாட்டிற்கான அடுத்த அன்னா ஹசாரேவை அனுப்பி இருக்கானுங்க. குழம்பிய குட்டையில் மீன் பிடிச்ச வரைக்கும் லாபம் என்பதே கணக்கு. இந்த மண்டகாசயம் அவ்வளவு நாணயஸ்தராக இருந்திருந்தால், தன் கண்ணுக்கு முன்னால் நடந்த ஒரு ஊழல் திட்டத்தை வைத்தே, பதவி விலகி அதனை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பேன் என்றல்லவா செய்திருக்க வேண்டும்?

அவ்வாறு இல்லாமல் அந்த அரசாங்கத்திடமிருந்தே இத்தனை ஆண்டுகள் சம்பளம் பெற்றுக் கொண்டு, தேர்தலுக்கு இரண்டு மாதத்திற்கு முன்பாக பதவி விலகி இப்படி "#பண_ஊழலே" இந்த #சமூகத்தின் ஏனைய பிரச்சினைகளுக்குமான #பிணி என்று வெற்று கோசம், கமலைப் போல செய்யப் போவது ஏன்?
👉🏿மதத்தை அரசியலோடு கலக்கிறார்களே அது ஊழல் கணக்கில் வராதா?
👉🏿கல்விக்கு செல்லக் கூடிய நிதியை, அனைவரும் கல்வி கற்கும் சூழலை கண்ணிற்கு புலப்படாத இடங்களிலெல்லாம் வைத்து கதவை அடைக்கிறார்களே அது ஊழலில் வராதா?
👉🏿தன் மாநிலத்திற்குள் இயங்கும் மக்கள் சேவை நிறுவனங்களிலெல்லாம் மொழி தெரியாத வெளி மாநிலத்தவர்களை வைத்து நிரைக்கிறார்களே அது ஊழலில் வராதா?
👉🏿மாநில மொழியை தவிர்த்து ஹிந்தி மொழியை உங்க துறைக்குள்ளாகவே திணிக்கிறார்களே அது ஊழலில் வராதா...
👉🏿மக்களாட்சியின் மாண்பையே குலைக்கும் விதமாக வெற்றிப்பெற்ற பிற கட்சி எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கிறார்களே அது ஊழலில் வராதா?

இவற்றையெல்லாம் யார் பேசுவது. இதெல்லாம் யாருடைய பிரச்சினைகள்?
சகயம், இதெல்லாம் எங்க பேசி ஆரம்பிங்க பார்ப்போம். நீங்க அரசியல் கட்சி தொடங்கிறீங்களா இல்லை டிட்டேரியல் கல்லூரி தொடங்கிறீங்களான்னு தெரிஞ்சிடும்.
ஏன்யா! கொடுத்த உத்தியோகத்தில நேர்மையா இருக்கிறது ஒரு தகுதியாய்யா இப்படி ஊரை ஏமாத்த? மனசாட்சின்னு ஒரு விசயம் இருந்தா இந்த நேரத்தில நீங்க இதை செய்ய மாட்டீர்?







ஏன் கலைஞர் கருணாநிதி வெறுக்கவைக்கப்பட்டார்?

 எப்போதுமே நமது மனது புறவயமான மயக்கத்தில் கட்டுண்டு கிடப்பதிலேயே பெரும் உவகை கொள்கிறது. அதற்கென காட்சிப் படுத்தலும், மாயவாத செயல்பாடுகளை காணும் போதும் நாம் வெகு எளிதாக அந்த சூழ்ச்சிகளுக்குள் விழுந்து விடுகிறோம். துப்பாக்கிச் சூடு நடத்திய, பொள்ளாச்சி கூட்டு வன்புணர்வுக்கு காரணமாகிய ஓர் ஆளுங்கட்சி, தேர்தல் கால ஸ்டண்டாக கெடா வெட்டி விருந்து வைத்தாலும், அந்த ஒரு வேளை உணவிற்குப் பின்னாக தாங்கள் இழந்த, இழக்கவிருக்கிற உரிமைகளை எண்ணிப் பார்க்காமல் கை அலம்புகிறோம்.

ஆனால், என்று நாம் ஒரு சமூகமாக மனிதர்கள் பொருட்டு தீர்க்கமான ஆராய்ச்சியின் பால் காரண காரியங்களை கண்டடைகிறோமோ, அன்று கடைசி நேர மாயவாத மயக்களுக்கு நாம் செவி சாய்க்க மாட்டோம்.
எப்படி இவ்வளவு கோமாளித்தனங்களை அரங்கேற்றிய படியே அதிமுக_வால் தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் யாரால் அமரவைக்கப்பட்டு அழகு பார்க்கப்படுகிறது?
ஏன் கலைஞர் கருணாநிதி வெறுக்க வைக்கப்பட்டார்? யாரால் அது போன்ற ஒரு கருத்து, காட்சி கட்டமைக்கப்பட்டது, அவ்வாறு செய்வதற்குபின்னான லாபம் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்போ மேலே வாசிங்க!
🔹️🔹️🔹️🔹️🔹️
எனது முகநூல் பக்கத்திலும், பொதுவான விவாதங்களிலும்...
நீங்கள் கருணாநிதி நல்லவர், வல்லவர் என்கிறீர்கள், ஆனால் மக்கள் அவரை மீண்டும் தேர்ந்தெடுக்கவில்லையே...
நீங்கள் குறை கூறும், அதிமுகவைத் தானே மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கின்றனர்!
ஏன் என்ற கேள்வியை முன் வைப்பார்கள்!!!
நியாயமான கேள்வி, அதற்கான பதிலும் நான் கூறிவிடுவேன்,
இருந்தாலும் ஏற்க மறுப்பார்கள், அது அவர்களது உரிமை என்று அடுத்து விவாதம் செய்ய மாட்டேன்!!!
ஏன் கலைஞரை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கவில்லை!!
காரணம்,
அதிகார பரவலை, பொருளாதார பரவலை, சாதிய ஏற்றத் தாழ்விண்மையை, மாநில உரிமைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்த முயன்றார்!
1. நிலங்களை எல்லோருக்கும் பகிர்ந்தளித்தார்!
2. பேருந்துகளை எல்லோருக்கும் பொதுவாக்கினார்!
3. இடஒதுக்கீட்டை 40% (SC 15%+ BC25%) 48% உயர்த்தி எல்லோருக்கும் கல்வி மற்றும் அரசு வேலைகளை பொதுவாக்கி அதனை உறுதி படுத்தினார்!
4. குடிசை மாற்று வாரியம் மூலமாக, குடிசைகளில் கிடந்தவர்களை அண்ணா நகரில் அடுக்கு மாடிகளில் குடியமர்த்தினார்!
5. குடிசைகளில் வாழ்ந்த பறையர்கள், பள்ளர்கள் சமூக மக்களைப் மக்களைப் பார்த்து "அய்யோ பாவம்" என்று கூறி மகிழ்ந்த குடியானவர்களுக்கு முன்பு, அவர்களை ஓட்டு வீட்டில் வாழ வைத்தார்!
6. உயர்கல்வியை கிராமத்தில் உள்ளவர்களும் படிக்க ஏதுவாக, சென்னை பல்கலைக்கழகத்தை (Madras University) பிரித்து பல பல்கலைக்கழகங்கள் அமைத்து, நிறைய கல்லூரிகளை நிறுவினார்!
7. தாழ்த்தப்பட்டவர்கள் படிக்க ஏதுவாக விடுதிகளை கட்டி விட்டார்!
8. நகரத்தில் மட்டுமே இருந்த வசதிகளை கிராமப்புறங்களுக்கும் விரிவுபடுத்தி விட்டார்! அதனால் நகரத்திற்கு செலவு செய்ய நிதி குறைவாக இருந்தது!
9. பெற்றோர்கள் சொத்தில் பங்கு மற்றும் கல்வி, வேலைவாய்ப்பில் 30% இடஒதுக்கீடு என்று பெண்களுக்கு, அதிகாரத்தை அள்ளி வழங்கி விட்டார்! உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு என்று அரசியலில் பெண்களை முன்னிலை படுத்திவிட்டார்!
10. இந்தியாவிலேயே, உயர் சாதி மக்கள் மட்டுமே கோலோச்சிய நீதிமன்றத்தில், ஒரு பறையர் சமூகத்தைச் சேர்ந்தவரை நீதிபதியாக நியமனம் செய்தார்!
11. சாதிய படிகளில் கீழ் நிலையில் இருந்த கருணாநிதி முதலமைச்சராகி விட்டார்!
12. கட்சியின் மாவட்ட செயலாளர், மாவட்ட ஆட்சியருக்கு இணையானவர் என்று சுதந்திரம் கொடுத்து விட்டார்!
13. மாநில உரிமைகளை பெற, ராஜமன்னார் கமிட்டி அமைத்து, திருமதி இந்திரா அமைச்சரவையிலேயே அதனை சமர்ப்பித்தார்!
14. ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த ஊடகத்துறையில் (சினிமா, அச்சு) தனது ஆளுமையை செலுத்தினார்!
15. எல்லாவற்றுக்கும் மேலாக...
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டத்தை இயற்றி விட்டார்!
விளைவு...
ஊழல் குற்றச்சாட்டு, தனிமனித தாக்குதல்!!!
அதனைத் தொடர்ந்து கலைஞர் ஆட்சிக்கு வரவிடாமல் பார்த்து கொண்டனர்!
சரி, பயனடைந்த மக்கள்........
அவர்கள் பாவம், அறியாமையிலேயே இருப்பவர்கள்!!

Post- Thanks:
Kandasamy Mariyappan
Art Courtesy:
Gokula Varadharajan

Sunday, January 24, 2021

ட்ரம்ப் அரசவைக்கு பை : Joe Biden's Inauguration!

 "பன்முக கலாச்சாரம் என்பது மட்டுமே அமெரிக்கா அல்ல" - வெளியுறவுத் துறை அமைச்சர், மைக் பாம்பையோ. - செய்தி.

இவர் வெளியேறும் ட்ரம்பு அரசவை அமைச்சர். போறதுதான் போறேன் இந்தா வாங்கிக்கோன்னு அப்படி தன்னோட அக அழுக்கை அவிழ்த்து கொட்டிட்டு போயிருக்கார்.
...Secretary of State Mike Pompeo's tweet that multiculturalism “is not who America is," sent on his last full day at the State Department, infuriated American diplomats who described it as a final insult by the Trump administration...
இன்றும் சரி, அன்றும் சரி அமெரிக்காவை நவீன பொருளடக்கத்தில் "பன்முக கலாச்சாரங்கள் கூடி இரண்டர கலக்கும் (melting pot) நாடு" என்றளவில் தான் புரிந்து கொள்ள முடியும். என்னுடைய 25 ஆண்டு கால வாழ்க்கையில் அப்படியாகத்தான் இந்த நாட்டின் முகம் அறிமுகமாகி அதனை இன்றும் நுகர்ந்து வருகிறேன்.
அப்படியாக இந்த நாடு என்றும் துடிப்போடு இளமையாக இருக்கக் காரணம், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல விதமான எதிர்பார்ப்புகளோடு குடியேறும் மக்களுக்கு அவரவர்களுக்கான ஒரு வாழ்விடச் சூழலை வழங்கி தழுவிக் கொள்கிறது. அவர்களின் அன்றாட பழக்க வழக்கங்களிலும் கூட பெரிதும் தலையிட்டு ஒரு தர்மசங்கடத்தில் தள்ளாமல், அடுத்தவர்களின் மூக்கை தட்டாதவரை ஒகே என்றே பார்த்து பண்புடன் நகருகிறது.
இதுவே இன்றையளவில் நவீன உலகின் நாகரீகக் கூரை எனக் கொள்ளலாம். எனக்கு முதன் முதலில் அறிமுகமான நகரம் நியூயார்க். வாரத்திற்கு இரண்டு நாட்கள் ப்ராடுவேயில் நடந்து திரியத்தக்கதொரு வாய்ப்பு. விதவிதமான மனிதர்கள், மொழிகள் என களைகட்டி பரபரப்பாக இருக்குமொரு இடம்.
ஆனால், அதற்குள்ளும் மைக், ட்ரம்ப் போன்ற மனிதர்களும் தங்களுக்கான வாய்ப்பை எதிர்பார்த்து உறங்கிக் கிடந்திருக்கிறார்கள். அமெரிக்கா என்பது இன்னொரு கிரகத்திற்கு மனிதகுலம் சென்று காலனி ஏற்றம் செய்தால், எப்படியொரு வாழ்வுமுறையை அமைத்துக் கொண்டு அனைவருக்கும் பொதுவான ஒரு அரசை கட்டியெழுப்பி , அங்கு வந்து சேரும் பிற வேற்றுகிரக இனத்தவரையும் அரவணைத்து வாழப் பழகும் ஒரு பயிற்சி கூடத்திற்கு ஒப்பானது.
இங்கு புதிதாக குடியேறிய மக்கள் அந்த அமெரிக்க ஸ்பிரிட்டை புரிந்து கொண்டு கலந்து விடுவது அனைவருக்கும் நல்லது. வெறுப்பில் பேசித் தெரியும் ட்ரம்பை ஒத்தவர்கள் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவர். நம்பி ஏமாந்து சென்று விடாதீர்கள்.
**************************************

வெளியேறும் ட்ரம்ப் பதவியேற்கும் போது, அன்று வந்திருந்த கூட்டத்தின் எண்ணிக்கை கூட பெரியளவில் இல்லை. ஆனால், கூட்டுத்தொகையில் ஏதோ சூடு வைத்து அதீதப் படுத்தி இருந்ததாக நாளிதழ்கள் எழுதின. ஃபோட்டோஷாப்பை வைத்து ஓபாமா பதவியேற்பு விழாவிற்கு நெருக்கமாக கொண்டு வர முயற்சித்தார்கள்.
ஆனால், இன்று அவரின் கரிசனமற்ற, மக்களிடையே வெறுப்பை சம்பாதித்த நிலையில் வெளியேறும் நாளில் சி என் என், Trump departs Washington as a Pariah என்று தலைப்பிட்டு எழுதி இருக்கிறது (எவண்டா, இவிங்களுக்கு அந்தச் சொல்லின் அரசியல் வக்கிரம் புரியாமல் பயன்பாடு சொல்லிக் கொடுத்தது 🙄).
இந்த நிலையில் ஜோ பைடனின் பதவியேற்பு விழாவிற்கு ஹாலிவுட் பிரபலங்களும், பரந்த சிந்தனையாளர்களுமாகிய (லிபரல்ஸ்) டாம் ஹாங்க்ஸ், லேடி காகா, ஜெனிபர் லோபஸ் போன்றவர்கள் வரவேற்பு நிகழ்சி நடத்துகிறார்கள். இதனைக் கவனித்த ட்ரம்ப் தாங்கிக் கொள்ள முடியாமல் "கடுமையான கோபத்தில் உள்ளதாகத் தெரிகிறது."
... Donald Trump is furious that so many top celebrities, including Lady Gaga, Jennifer Lopez and Tom Hanks, are going to feature at president-elect Joe Biden’s inaugural celebrations on Wednesday, in stark contrast to his own event four years ago...
ட்ரம்ப் தனது 2005 மெலோனியாவுடனான திருமணத்தின் போது எல்டன் ஜான், பான் ஜோவி போன்ற பிரபலமான மேற்கத்திய இசை பாடகர்கள் சிறப்பிக்க வாழ்ந்து பார்த்தவர். 2016ல் ஆரம்பித்த அவருடைய அரசியல் அடாவடிகள் பிடிக்காமல், ஹாலிவுட் ஒதுங்கிக் கொண்டது.
இப்பொழுது அவரின் வெளியேற்றத்தை வெளிப்படையாக ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட தயாராகி விட்டது.

Thursday, December 31, 2020

இறைச்சிீ இங்கே வேதகால நாகரீகம் எங்கே?

இப்படி நாம ஒன்னு ஒன்னா சிந்து சமவெளி நாகரீக மக்கள் எப்படியாக வாழ்ந்தார்கள்னு கண்டு பிடிச்சு நிறுவுவதற்குள்ளும் மனிதகுலம், வேற்றுக் கிரகத்திற்கே குடியேறிடுவாய்ங்க போல. அவ்வளவு காலமெடுத்துக்கிறோம்! இப்போதான் நமக்கு அந்த நாகரீக மக்கள் என்ன உணவு சாப்பிட்டார்கள்னு நிறுவத்தக்க சான்று கிடைத்திருக்கிறது.


அவர்களின் உணவில் செம்மறியாடு, மாடு, கால்நடைகள், பன்றிகளின் இறைச்சி அதீதமான அளவில் எடுத்துக் கொண்டிருப்பதாக அவர்கள் பயன்படுத்திய தட்டு, பானைகளில் எஞ்சியிருந்த எச்சங்களின் வழியாக கண்டறிந்திருக்கிறார்கள். மனித குலம் கால்நடையாகவே நடந்து திரிந்த காலங்களில், உணவும், தண்ணீரும் தாராளமாகக் கிடைக்கும் இடத்தில் கிடை போட்டு விலங்குகளை வேட்டையாடி சுட்டு உண்டுருப்பான், இல்லையா?
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு உள்ளாகவே நிலையாக ஓரிடத்தில் தங்கி வேளாண்மை பழகி, சமுகமாக வாழ ஆரம்பித்த கால கட்டத்திலும் கூட, கால்நடைகளின் பங்கு அவர்களின் வாழ்வோடு பெருமளவில் பிண்ணி பிணைந்திருக்கவே வேண்டும். ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும், ஒரு 45 ஆண்டுகளுக்கு முன்பே கூட எங்க வீட்டில் எருதுகளும், காளைகளும், பசுவுமென 10க்கும் மேற்பட்ட கால்நடைகள் இருந்தன. இன்றும் கூட என் அம்மா கோழி வளர்க்கிறார்கள்.
இது போன்ற வயலும் வாழ்வுமாக உள்ளவர்கள் அந்த கால்நடைகளை தனது வாழ்வின் அங்கமாகக் பயன்பாட்டில் கொண்டிருக்கும் போது, அதனை உணவாக உண்டிருக்க 100% வாய்ப்பு இருக்கிறது; ஏனெனில், கால்நடைகளும் பொருளாதார வேளாண்மை செய்வதின் ஓர் அங்கமே!
ஈயடிச்சான் காப்பியாக நாலு வீட்டில் வாங்கிய உணவை ஒன்றாகக் கலந்து, இதுதான் எனது உணவு என்று காட்டுவதைப் போல, தனக்கென்று எந்த வித தொன்மையான வரலாற்றுச் சான்றுகளையும் கொள்ளாத ஓர் இனம், அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த மாவாக- இந்தியத் துணைக் கண்டத்தில் நிகழ்ந்த அன்றைய உணவு பழக்க வழக்கத்தை (புலால் மறுப்பு சார்ந்த இறை நம்பிக்கை) நகலெடுத்து, ஓ! இதுவே இந்த நிலப்பரப்பின் பரந்து பட்ட உணவென்று நம்பி, இயல்பாக தான் உண்ட இறைச்சி உணவையே புறந்தள்ளி 'கொல்லாமை' என்ற சிறைக்குள் தனைப் புகுத்தி இதுவே இந்து மதம் என்று 'நான்கு வீட்டு உணவை' நேற்று வந்தவர்கள் காட்டினார்கள்...
ஆனால், அந்த மக்களுக்கு அன்று தொலை நோக்குச் சிந்தனையில் என்ன தெரியவில்லை என்றால், ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனாலும், பல்லாயிரம் ஆண்டுகள் ஓரிடத்தில் வாழ்ந்து செழித்த ஒரு நாகரீகம் எத்தனை காலச் சுவடுகளை, எதனதன் வடிவுகளில் எல்லாம் எங்கெங்கு விட்டுச் சென்றிருப்பார்கள் அது தொடர்ந்து வெளிக்கிளம்பிக் கொண்டே இருக்குமே அதனை என்ன செய்வது என்று மறந்து போனதுதான்.
அவர்கள் நவீன புரட்டு ஆவணங்களாக எத்தனையோ கதைகளை எழுதி வைத்துக் கொள்ளலாம். இருப்பினும் அறிவியல் அவைகளை போற போக்கில் இதோ இந்த இறைச்சி விசயத்தில் எப்படி பல நூறு புரட்டுக்களை இடது கையால் துடைத்துப் போட்டதோ அப்படி துடைத்தே நகரும். ஆனால், அவர்கள் எழுதி வைத்த அத்தனை ஆயிர புரட்டுக் கதைகளும், பக்கங்களும் கால வெள்ளத்தில் கிள்ளி எறிந்த நகக் துணுக்காகி விடும்.
இனிமே சரஸ்வதி ஆற்றை தோண்டி எடுத்து, அதில் ஒரு சிறு காது ஜிமிக்கியாவது கண்டெடுத்து நம் கண் முன்னால் காண்பித்து, மேலும் இதோ நாங்கள் அன்று பாடியதாக, ஆடியதாக, எழுதியதாக சொன்ன ஒவ்வொன்றிற்கும் சான்று என்று ஒவ்வொன்றாக அகழ்வாயின் மூலம் காட்டுவார்களா பார்ப்போம்.

திராவிடம் என்ன சாதித்தது? : All In One Place

 எப்பொழுதும் அடர்வாக இருக்கக் கூடிய எழுத்துக்கள், பேச்சுக்கள், சிந்திக்கத் தூண்டும் நடைமுறை சார்ந்த விசயங்களை கண்டால் அவைகளைத் தவிர்த்து விட்டு, பொரும்பாலும் நமது மனது வாழைப்பழத்தை உரித்து வாயில் கொடுக்கத் தக்க விசயங்களையே நாடும்.

இது மிகவும் இயல்பானதொன்று! உள்ளடக்கம் இல்லாத இன்றைய அரசியல் தலைமைகளின் பேச்சை நம்பி ஏமாந்து நிற்பதற்கும் அதுவே காரணம். உழைப்பு இல்லாத பெற்ற எதுவும் நிற்காது, சுவைக்காது.
வந்த வழி (வலி) தெரிந்தால்தான் முயன்று பெற்றவைகளை, வாழும் பொழுது வாழ்க்கையில் ரசித்து ருசித்தது போக, பேணி, வரும் தலைமுறைக்கு கடத்திச் சேர்க்க முடியும்.
இல்லைன்னா, எடப்பாடி அன் கோ போன்ற அலிபாபா குழுகிட்ட கொடுத்துட்டு மேலை ஓட்டைப் பார்த்துக்கிட்டு மல்லாக்க படுத்திருக்க வேண்டியதுதான்.
இப்போ வந்த வழி தெரியணுமா, புதியவர்களே பொறுமையா கீழே உள்ள பதிவை படிங்க. நீங்க போட்டிருக்க மேல் சட்டைக்கு யார் காரணமின்னு தெரிஞ்சிக்கலாம்...
🔹️🔹️🔹️🔹️🔹️
1915 இல் கல்வி இலாகாவில் இருந்த மொத்த உத்தியோகங்கள் 518. அந்த 518 இடங்களில் அமர்ந்திருந்த பார்ப்பனர் 399 பேர். கிறித்துவர்களும் ஆங்கிலோ இந்தியர்களும் 23 பேர், முஸ்லிம்கள் 28 பேர், ஆதிதிராவிடர் உட்பட பார்ப்பனரல்லாத இந்துக்கள் 18 பேர்.
1915 இல் அரசுப்பணியாளர் தேர்வாணையம் என்ற ஒன்று கிடையாது. அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பணி நியமனம் வழங்கிக் கொள்வார்கள்.‌
1916 இல் டாக்டர்.சி. நடேச முதலியார், டாக்டர். டி.எம்.நாயர், பி.தியாகராய செட்டியார் ஆகிய மூவரும் சேர்ந்து நீதிக்கட்சி என்று அறியப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தைத் தொடங்குகிறார்கள்.
1920 இல் நீதிக்கட்சி அமைச்சரவை பதவிக்கு வந்தது. இதே ஆண்டில் திருநெல்வேலியில் நடைபெற்ற 26-வது தமிழ் மாகாண காங்கிரஸ் மாநாட்டில் தந்தை பெரியார் வகுப்புரிமை தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
1922 -இல் நீதிக்கட்சி அரசாங்கம் 12 பதவிகள் இருந்தால் அதை 5 பார்ப்பனரல்லாதார், 2 பார்ப்பனர், 2 மகமதியர், 2 கிறிஸ்துவர், 1 தாழ்த்தப்பட்டவர் என பிரித்து வழங்க வேண்டும் என ஒரு அரசாணையை வெளியிட்டது.
1924-இல் மருத்துவக் கல்லூரியில் படிக்க சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்று இருந்ததை, நீதிக் கட்சி அரசாங்கத்தை நடத்திய பனகல் அரசர் நீக்கினார்.
இதே ஆண்டில் நியமனங்களில் வேண்டியவர்களை நியமித்துக் கொள்ளும் முறையை ஒழிக்க, பணியாளர் தேர்வுக் குழுவை இந்தியாவிலேயே முதன் முறையாக ஏற்படுத்தியது நீதிக்கட்சி.
1942- இல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையில் வகுப்புவாரி முறை அமலாக்கப்பட வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.
1947-இல் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அமைச்சரவை வகுப்புவாரி உரிமையை பின்வருமாறு மாற்றி உத்தரவிட்டது.
இதன்படி 14 இடங்கள் இருந்தால் அதில் 6 இடங்கள் பார்ப்பனரல்லாத முன்னேறிய வகுப்பினருக்கும், 2 இடங்கள் பார்ப்பனரல்லாத பின்தங்கிய வகுப்பினருக்கும், 2 இடங்கள் பார்ப்பனர்களுக்கும், 2 இடங்கள் தாழ்த்தப்பட்டோருக்கும், ஒரு இடம் முகமதியருக்கும், ஒரு இடம் கிறிஸ்தவ ருக்கும் ஒதுக்கப்படும்.
1948 - இல் நேரு தலைமையில் அமைந்த இந்திய அரசு "தாழ்த்தப்பட்ட மக்களைத் தவிர வேறு யாருக்கும் இட ஒதுக்கீடு கிடையாது” என சுற்றறிக்கை அனுப்பியது. ஓமந்தூரார் இதனை ஏற்கவில்லை. இதனால் அவரை ”தாடி இல்லாத ராமசாமி” என பார்ப்பனர்கள் அழைத்தனர்.
1950- இல் வகுப்புரிமை இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு புறம்பானது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
1951 காலகட்டத்தில் மாணவர்கள் இன்டர்வகுப்பில் வாங்குகின்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்காணலில் பெறும் மதிப்பெண்கள் இவை இரண்டையும் கூட்டி அதன் சராசரியின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி சேர்க்கை நடைபெற்றது.
இட ஒதுக்கீடு செல்லாது என்று ஆன நிலையில், காங்கிரஸ் ஆட்சியாக இருந்தபோதிலும், அதிகாரம் பார்ப்பனரல்லாத குமாரசாமி ராஜா அவர்கள் கையில் இருந்ததால், 1951-52 கல்வியாண்டில் நேர்காணலுக்கு அதிக மதிப்பெண்களை ஒதுக்கி பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு ஓரளவு நியாயம் வழங்கியது மாகாண அரசு.
இதனால் இந்த ஆண்டில் மொத்தமிருந்த 318 மருத்துவ இடங்களில் 63 இடங்கள் பார்ப்பனர்களுக்கும், 130 இடங்கள் ஜாதி இந்துக்களுக்கும், 125 இடங்கள் மற்றவர்களுக்கும் கிடைத்தது.
1952 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராஜாஜி ஆட்சிக்கு வருகிறார். பார்ப்பனர்களுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் வகையில் ,நேர்காணலுக்கு இருந்த மதிப்பெண்களை 150 லிருந்து 50 ஆக அதிரடியாகக் குறைத்தார். 1952-53 கல்வியாண்டில் மொத்தமிருந்த 318 மருத்துவ இடங்களில் 104 இடங்கள் பார்ப்பனர்களுக்கும், 56 இடங்கள் ஜாதி இந்துக்களுக்கும், 158 இடங்கள் மற்றவர்களுக்கும் கிடைத்தது.
அதாவது மக்கள் தொகையில் 100க்கு 3 பேராக இருந்த பார்ப்பனர்களுக்கு கடந்த ஆண்டைவிட 41 மருத்துவ இடங்கள் கூடுதலாகக் கிடைத்தது. பார்ப்பனரல்லாத ஜாதி இந்துக்களுக்கு கடந்த ஆண்டைவிட 74 இடங்கள் குறைவாகக் கிடைத்தது.
எஞ்சினியரிங் கல்லூரி சேர்க்கையிலும் கடந்த ஆண்டைவிட பார்ப்பனர்கள் 92 இடங்களை அதிகமாகப் பெற்றார்கள்.
பார்ப்பனரல்லாத ஜாதி இந்துக்கள் கடந்த ஆண்டைவிட 88 இடங்கள் குறைவாகப் பெற்றார்கள்.
எஸ்.எஸ்.எல்.சி தேர்விலும் தேர்ச்சி விகிதத்தை 42 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாகக் குறைத்தார். இதனால் கூடுதலாக பாதிக்கப்பட்டது பார்ப்பனர் அல்லாத மாணவர்கள்தான் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை.
10.6.1953 விடுதலையில் வந்த ஒரு செய்தி ” சென்ற ஆண்டில் செலக்ஷன் என்ற பன்னாடை முறை இல்லை. ஆனால் இந்த ஆண்டில் உயர்திரு ஆச்சாரியார் அவர்களின் அதிகார லீலைகளில் ஒன்றாக இந்த வடிகட்டும் முறை புகுத்தப்பட்டது" என்று சொல்கிறது.
பன்னாடை என்றால் வடிகட்டும் துணி. அதைக்கொண்டு வடிகட்டி பலரையும் தூக்கி எறிந்து விடுவார்கள். அதனால்தான் இந்த செலக்ஷன் முறைக்கு இந்தப் பெயர் சொல்லி அழைத்தது விடுதலை.
மூன்றாவது ஐந்தாவது மற்றும் எட்டாவது வகுப்பிற்கு பொதுத்தேர்வை பரிந்துரைக்கும் புதிய கல்விக் கொள்கையின் ஏற்பாட்டையும், மருத்துவ கல்லூரி சேர்க்கையில் உள்ள NEET தேர்வையும் நாம் இந்த பன்னாடை முறையோடு ஒப்பிடலாம்.
இதோடு நிறுத்தவில்லை ஆச்சாரியார், குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தார். அதாவது கிராமத்தில் உள்ள மாணவர்கள் மூன்று மணி நேரம் மட்டும் பள்ளிக்கு சென்றால் போதும். மற்ற நேரங்களில் தந்தையார் செய்யும் தொழிலைச் செய்ய வேண்டும். ஆனால் நகரங்களில் உள்ள மாணவர்களுக்கு இது பொருந்தாது. இந்த அநீதியும் கிட்டத்தட்ட NEET என்ற அநீதிக்கு இணையானதுதான்.
பெரியார் தலைமையில் நடந்த போராட்டங்களின் விளைவாக உண்டான முதல் அரசமைப்புச் சட்ட திருத்தம்தான் இன்று இந்தியா முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள் இட ஒதுக்கீட்டை அனுபவிக்க காரணம்.
இட ஒதுக்கீடும் பணியாளர் தேர்வு வாரியமும் இல்லையென்றால் பதவிகள் அனைத்தும் ஏற்கனவே பதவிகளில் இருப்பவர்களின் உறவினர்களுக்கே சென்று சேரும் என்பதில் ஐயமில்லை.
உதவிய நூல்கள்:
வகுப்புரிமைப் போராட்டம் ( கம்யூனல் ஜி.ஓ) பேராசிரியர் க அன்பழகன், திராவிடர் கழக வெளியீடு.
ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம், பேராசிரியர் அருணன், திராவிடர் கழக வெளியீடு.
Thirunavukarasan Manoranjitham
வழியாக... Thank you!

Related Posts with Thumbnails