Showing posts with label தீவிரவாதம். Show all posts
Showing posts with label தீவிரவாதம். Show all posts

Tuesday, February 13, 2018

அறநிலையத்துறையை தனியார்மயமாக்குதல் = Deprogressive Move!

கடந்த கால சமூக நீதிக்கு எதிரான விடயங்களை போரட்டாங்களின் வழியாக கை வரப் பெற்ற சமூக நீதி சட்டங்களை மீண்டும் திருத்துவது என்பது நாகரீகமடைந்த ஒரு சமூகத்தை மீண்டும் அந்த கற்காலத்திற்கே எடுத்துச் செல்லுவதற்கு ஒப்பானதாகும்.

அண்மைய காலங்களில் அவசர கோலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக சில மத அரசியல் கட்சிகள் கொண்டு வரும் பிரச்சினைகளின் வீச்சத்தைப் பார்த்தால் அதற்கான முயற்சியாகவே படுகிறது.

என்னவோ ஒரு சமூகத்தினர் மட்டுமே பன்னெடும் காலமாக சமூக சீர் திருத்தத்தையும், பொருளாதார முன்னேற்றத்தையும், சமூக ஏற்றத் தாழ்வுகளை நீக்கி நாட்டில் பாலாறும் தேனாறும் ஓட உழைத்த உத்தம புத்திரர்களாக தங்களை வரலாற்றில் தூக்கி நிறுத்திக் கொள்ள எத்தனிக்கிறார்கள்.

ஆனால், உண்மை என்னவோ அதே வரலாற்று பாதையில் ஓடும் பேருந்தால் நசுங்கி மாண்ட ஒரு வன விலங்கைப் போல மரணித்துக் கிடக்கிறது

ஒரு நாகரீமடைந்த சமூகம் என்பது நாட்டில் வாழும் அனைவரையும் சமமாக பாவித்து அவர்களை அடுத்த கட்டத்திற்கு கூட்டாக அழைத்துச் செல்வது. அதனைத் தவிர்த்து ஏதோ ஒரு காலத்தில் சொரண்டி தின்று உடல் வளர்த்தோம் என்பதால் இந்த நவீன காலத்திலும் அந்த இத்துப்போன கோட்பாடுகளை நடை முறை படுத்த எண்ணுவது எத்தனை சாபக்கேடு ஒரு சமூகத்திற்கே?

சரி பிரச்சினைக்கு வருவோம். ஓர் இரண்டு தினங்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தினுள் தீ, எந்த பொது இடமாகினும் அங்கே விபத்து நடப்பதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளதுதானே? தீ விபத்து ஏதோச்சையாக நடந்தது என்றே வைத்துக் கொள்வோம், அறநிலையத்துறையும் மெத்தனமாகவே இருந்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்... அதற்காக உடனே அந்த அறநிலையத் துறைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அனைத்து அறநிலையத்துறைக்கு கீழே வரும் கோவில்களையும் தனியார் மயம் ஆக்கி பழைய பஞ்சாங்கப்படி ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்த ஒப்படைக்க வழிவகை செய்து கொடுக்க தடி எடுப்பீர்களா?

கோவில் என்பது ஜஸ்ட் ஒரு கோவில் வளாகம் மட்டும்தானா? எதற்காக அந்த காலத்திலயே அத்தனை போராட்டதிற்கிடையே பெரிய கோவில்களை இந்த "அறநிலையத்துறைக்கு" கீழாக ஒரு அரசாங்கம் கொண்டு வந்தது,அந்த துறைக்கு கீழ் வருவதற்கு முன்பாக நாமெல்லாம் அந்த கோவிலுக்குள் நுழைந்து அறிய முடிந்ததா?

அந்த கோவிலின் நிர்வாகம் யாரிடமிருந்தது, அங்கு விழும் காணிக்கைகளை யார் எண்ணினார்கள், எந்த வாசப்படி வழியாக அது யாருடைய காஜானவிற்கு சென்றடைந்தது என்று நமக்குத் தெரியுமா?

ஒரு டேட்டா வந்தது. ஒரு பெரிய கோவில் அது அறநிலையத் துறைக்கு கீழ் வருவதற்கு முதல் வருடம் வெறும் 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருமானம் வருவதாக காட்டப்பட்டதாகவும், அடுத்த வருடமே அது 40 லட்ச ரூபாயாக உயர்ந்ததாகவும் அறிந்தோம். அது எப்படி சாத்தியம் மக்களே? கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், கடவுளுக்கு வெகு அருகமையில் இருப்பவர்கள் இப்படியாக ஆயிரம் ஆண்டுகளாக கணக்கு காமித்து வந்திருக்கிறார்கள்.

அது மட்டுமா? ஒரு கிராமத்திற்குள்ளாகவே வாழும் மனிதர்களை பிரித்து இவன் உள்ளே வரலாம், வரக்கூடாது என்று பிரித்து ஆண்டதும் நடக்கிறது, நடந்து வந்திருக்கிறது.

இவற்றையெல்லாம் களைந்து ஒரு சமூக சமன் பாட்டை கொண்டு வர எண்ணி உருவாக்கப்பட்டதுதான் "அறநிலையத் துறை." இது எத்தனை பெரிய புரட்சி? சமூக சீர் திருத்த எட்டல்??

இதனையெல்லாம் சீர் படுத்த ஒரு அரசாங்கம் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து முறைமைப்படுத்துவது எப்படி தவறாகும்? அந்தத் துறை இன்றைக்கு சற்றே சீர் குலைந்து அதனில் நிர்வாகச் சீர் கேடுகள் நடக்கிறது என்றால் உடனே ஊசி காதுக்குள் ஒட்டகத்தைத் திணிப்பது போல மீண்டும் கோவில்களை பழைய சுரண்டலுக்கே தனியார் வசம் ஒப்படைத்து விடுங்கள் என்று சந்தில் சிந்து பாடுவது யார்? எதற்காக?

எது எப்படியோ மக்கள் சிந்திப்பதற்கேனும் இது போன்ற நாகரீகமடைந்த ஒரு சமூகத்தில், இன்னமும் அந்த இடத்திற்கு தங்களை நகர்த்திக் கொள்ள முயற்சிக்காத கயவர்களை அடையாளம் காணவும், இந்த பிரச்சினையை ஒட்டி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்றவுமாவது இது உதவுகிறதே என்ற வகையில் அந்த பொய்யர்களுக்கு இந்த தருணத்தில் ஓர் நன்றி!

Wednesday, December 09, 2015

மதங்களும் மனிதர்களும் வெள்ளத்திற்கு முன்னும்/பின்னும்!

 


மதங்களும் மனிதர்களும் வெள்ளத்திற்கு முன்னும்/பின்னும் ! by Prabhakar

ஒரு நான்கு வாரங்களுக்கு முன் அதாவது சென்னை வெள்ளத்திற்கு முன்பு பின்பு என பிரித்துக் கொண்டால், காலம் மனிதர்களின் நாவை, அவர்களுடைய கருதுகோள்களை எப்படியெல்லாம் புரட்டி போட்டு விடுகிறது என்பதாக விளங்கச் செய்யும்.

எல்லாமே நன்றாக போகிறது என்ற நிலையில் ஒரு வகையில் ஒவ்வொருவருக்கும் ஒரு பொழுது போக்குவதற்கென ஏதாவது ஒரு விசயம் வாயில் போட்டு மெல்லும் அவலை போன்று தேவைப் படுகிறது. கொஞ்சம் நன்றாக யோசித்துப் பாருங்கள். மாட்டு இறைச்சி சாப்பிட்டால் மரண தண்டனை, எங்கோ ஒரு நாட்டில் அவனது பிராந்தியத்தில் நடக்கும் அரசியல் குழப்படிகளுக்காக அவன் ஆற்றும் செயலை வைத்து, உனது ஊரில் வாழும் அடுத்த மதத்து ஆட்களுடன் பிரச்சினை. அதனை சகியாது ஒரே வீட்டினுள்ளே வசித்து அனைவரையும் போல, உழைத்து, வருமானம் ஈட்டி, குடும்பம் எடுத்து, பிள்ளைகளை வளர்த்து என்று வாழும் ஒருவர் இங்கு நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு உண்மையான அக்கறையுடன் ஏனையவர்கள் போலவே ஒரு கருத்தை முன் வைத்தாலும் வேற்று மதத்தவர் என்ற ஒரே அடையாளத்தைக் கொண்டு உடனே கிஞ்சித்தும் சம்பந்தமே இல்லாத அண்டைய நாட்டிற்கு அனுப்பத் துடிக்கும் அவலம்.

நாங்கள் அந்த கூட்டத்தினர் அல்ல என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் கொண்டு போய் முட்டுச் சந்தில் நிப்பாட்டி வைத்திருக்கிறீர்கள். இதெல்லாம் சென்னை வெள்ளத்திற்கு முந்திய அவலுக்கான சமாச்சாரங்கள். ஆனால், இரண்டு வாரத்திற்கு முன்பாக நடந்த இயற்கை/செயற்கை பேரிடர் நாம் அனைவர் மனதையும் திருப்பி போட்டு, நம் மீது படிந்த அழுக்கு எண்ணத்தை துடைத்தும் தந்து விட்டு போயிருக்கிறது. பிம்பத்தத்தை கட்டி எழுப்ப முயன்றவர்களின் அத்தனை முயற்சிகளும் இப்பொழுது விழலுக்கு இரைத்த நீராக போய் விட்டது.

மீண்டும் அது போன்ற ஒரு நிலையை கொண்டு வந்து, மக்கள் மனதில் அழுக்கை படிய வைக்க சற்று சிரமப்பட்டே உழைக்க நேரலாம். இது வரைக்கும் படைப்பாற்றலுடன் இயங்கி அதனை கட்டியெழுப்ப முயன்றைதை விட இன்னும் கூடுதலாக இல்லாத மூளையை கசக்கி வேலை செய்தாக வேண்டும்.

எது எப்படியோ எனக்கு பல கேள்விகள் இருக்கிறது. ஒரே ஊரில் பிறந்து வளர்ந்து, அதே
காற்றை சுவாசித்து, நீரை அருந்தி, விளையும் மரக்கறிகளிலிருந்து அரிசி வரையிலும் ஒரே மாதிரி உண்டு, உடுத்தி, அத்தனை வீட்டு விழாக்களிலும் இரு தரப்பும் கை கலந்து வாழும் ஒரு கிராமியப் பின்னணியில் பிணைந்து கிடக்கும் மனிதர்களை உடனே அத்தனை நம்பிக்கைகளையும் கை கழுவி விட்டு விட்டு, அவர்களை எப்படி நீங்கள் சத்திய சோதனையில் இறக்கி தீயின் வழி நடந்து வந்து உன்னை நிரூபித்துக் கொள் என்று பணிப்பீர்கள்?

இன்று அந்த மதத்தவர்கள் இறங்கி வெறும் கைகளால் உங்களது மலத்தையும், சிறு நீரையும், நீங்கள் உண்டு, உடுத்தி விட்டெறிந்த குப்பை கூளங்களையும் அகற்றி தங்களுடைய விசுவாசத்தை நிரூபிக்கும் நிலைக்கு நகர்த்தியிருக்கிறீர்கள். இது அனைத்தும் வெகு இயல்பாக நிகழக் கூடியது. இங்கு பிரித்து வைத்து பார்க்கவோ, பேசவோ வெக்கமாக இருக்கிறது. அவர்கள் உங்கள் வீட்டு அண்டையர்கள். கோவையில் நடந்த ஒரு நிகழ்வை கொண்டு ஒரு பிம்பத்தை எடுத்து கட்டமைக்க விளைந்தாலும், நமது விழுமியச் சாயல்கள் நமது தோலின் நிறத்தையொட்டி இருப்பதனை போலவே, உணர்வுகளாகவும் கலந்துள்ளது. உலகம் திடுக்கிடுகிறது என்பதால், நாமும் நம்மை ஒட்டி மண்ணுடன் கலந்து ஊட்டிக் கொண்ட உணர்வுகளை கொன்று அரசியல் வளர்க்க வேண்டுமென்ற அவசியமில்லை.

ஃபேஸ்புக்கிலும் மற்ற சமூக வலைத் தளங்களிலும் தன் எழுச்சியாக எழுந்த இந்த நிவாரணப் பணியின் மூலமாக ஓர் ஆரோக்கியமான சூழல் நம் முன்னால் விரிந்து கிடக்கிறது. இதனை முறையாக கையாண்டு இழந்த பரஸ்பரமான நம்பிக்கைகளை மறு கட்டமைப்பு செய்து கொள்ளும் நேரமிது. சாக்கடை, மலம், குப்பை அள்ளி தங்களுடைய தேச பற்றையும், ஊர் பற்றையும் காட்டுவதற்கென அவர்களை அக்னிபரிச்சைக்கு தள்ளி இருக்கிறேன் என்று இருமாந்திராதீர்கள். தூய்மை இந்தியா என்று குப்பை இல்லாத சிமெண்ட் ரோட்டில் நான்கு தண்ணீர் போத்தல்களை விட்டெரிந்து ஒரு லட்ச ரூபாய் மனிக்கடிகாரம் அணிந்து செய்வதல்லா வெள்ளத்திற்கு பின்னான கழிவு, பிணம் அகற்றலும் - அது நம்முடைய கற்பனைக்கும் எட்டாத ஒரு செயல்.

கொச்சை செய்து, அவமானப் படுத்துவதை எதிர் வரும் காலத்தில் அரவே நிறுத்திக் கொள்வது நல்லது. மனிதர்களின் மனங்களை புரிந்து கொள்ளுங்கள். இன்று அமெரிக்காவில் இஸ்லாமோஃபோயியா என்ற மன பிறழ்சி நோய் அளவிற்கு அவ நம்பிக்கை பீடித்திருக்கிறது. சென்னையில் நடை பெறும் சம்பவங்களை அமெரிக்காவிற்கு அவர்கள் நேரடி தொலைக்காட்சி செய்து மக்களின் மனங்களில் நன்னம்பிக்கை ஏற்படுத்தும் அளவிற்கான விடயங்கள் மேலே கூறிய நமது மண் சார்ந்த விழுமியங்களின் பால் நடந்தேறி வருகிறது. அது அவர்களால் கிஞ்சித்தும் புரிந்து கொள்ளவே முடியாத ஆழத்தை கொண்டது. இதுவே சர்வ தேசத்திற்கு இன்றைய தேவை. இதனையே மொத்த இந்தியாவும் தன்னை ஒரு சரியான பாதையில் செலுத்திக் கொள்ள வேண்டுமாயின், சென்னையில் வெள்ள நீராக பாய்ந்த மனிதத்தை எடுத்து சேர்ப்பது தலையாயக் கடமை.

Tuesday, January 29, 2013

விஸ்வரூபம் - படத்திற்கான விமர்சனமல்ல!


இந்த கட்டுரை பேசப்போவது கமல்ஹாசனின் விஸ்வரூபமான ”கேளிக்கை” படத்தை பற்றிய விமர்சனமாக இல்லை.  அந்த படத்தை இப்பொழுது என்னால் பார்க்கக் கூடிய வாய்ப்புமில்லை.  தேடி ஓடி பார்க்கும் அத்தனை தீவிரமான சினிமா ரசிகனுமில்லை. ஆனால், சமூக வலைத்தளங்களில் நடக்கும் கட்டிப் புரதல்களை கண்ணுற்று அங்குமிங்குமாக ஓடி என்னுடைய பார்வையை வைத்தும் மனது கேக்காததால் சில விசயங்களை எனக்கு நானே தெளிவு படுத்திக் கொள்ள இங்கு பதிந்து வைக்கிறேன்.

நான் கமலைப் பற்றி பல பதிவுகளில் சிலாகித்தும் அவர் அப்படித்தான் என்ற தனிமனித வெளிப்பாடுகளை பாராட்டியும், அவர் திரையுலகில் தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக் கொள்ள எடுக்கும் மெனக்கெடல்களையும் பாராட்டியே எழுதி வந்திருக்கிறேன். அப்பொழுதும் தனியாகவே நின்றதாக ஓர் உணர்வு, இப்பொழுது இந்த படத்தின் சர்ச்சையை ஒட்டியும் தனித்தே இருப்பதாக ஓர் உணர்வு! ஆனா, இன்று அவருக்கு சேர்ந்திருக்கும் கூட்டம் பெரும் கூட்டம். இங்கேதான் அவர் நின்று நிதானித்து தனது மேற்கொண்ட பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஒருவர் இரண்டு வழிகளில் ஒரு குன்றின் உச்சத்தை அடையாளம். ஒன்று, பழனி மலையில் ஏறுவதற்கு விஞ்ச் ஏற்பாடு செய்து அலுங்காமல், குலுங்காமல் போய் ஆயிரம் ரூபாயை சிறப்பு தரிசனத்திற்கென யார் கையிலாவது வைத்து திணித்து எல்லாரையும் குறுக்காக நடந்து மிடுக்காக போய் அந்த வேலவனைப் பார்த்து கண்ணடித்து விட்டு வரலாம்.  இல்லையென்றால், அரைநாள் முழுக்க வரிசையில் நின்று தனக்கு முன்னாலும், பின்னாலும் இருப்பவர்கள் பேசிக்கொள்ளும் சம்பாஷணைகளை கேட்டுக் கொண்டே ஒவ்வொரு அடியாக முன்னேறி உண்மையான உள்ளொளி பெற்று கடைசியில் உச்சத்தை அடையாளம். அது அவரவர்களின் தேர்வு!

ஆனால், விஞ்சில் போவது சரட்டென்று ஏறி உச்சத்தை அடைந்து விடலாம்தான்.  ஆனால் படியேறி வரிசையில் நின்று போவதின் பல அணுகூலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டாமலே அது செய்து விடும்தானே! அதுவும் நல்ல இயங்கும் உடற் செயல் பாடுகளுடன் இருக்கும் ஒருவருக்கு. விஞ்சில் ஏறும் பொழுது இதுதான் உண்மையென்று பூமியில் நடக்கும் விசயங்கள் அறியாமல் போக நிறைய ஆபத்துகள் நமக்குள்ளேயே குவியும் வாய்ப்புகள் அதிகம் தானே?

இங்கே கமல் உலக ரசிகர்களின் பார்வையை நம் பக்கம் திருப்ப நம் ஊர்லயும் உலகப்பார்வை கொண்ட  ஒரு கலைஞன் இருக்காண்டான்னு உலகத்திற்கு எடுத்து இயம்ப வேண்டுமென்ற நல்ல எண்ணத்தில் இருந்தால் அவர் ஆங்கிலத்திலேயே ஒரு படத்தை ஆஃப்கான், பாலஸ்தைன், நைஜீரியா போன்ற நாடுகளில் சுடச் சுட  உலக தீவிரவாதம் பற்றி பேசி இயக்கி எடுத்து பிறகு அது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வந்தால் ரொம்ப நன்மை பயக்கும் என் ஊருக்கும், உங்கள் ஊருக்கும். உலக தீவிரவாதத்தை வீட்டுவாதமாக உருவேற்றி காமிப்பது மிக்க அபத்தமானது, ஆபத்தானது. இந்த விஷ பரீட்சையை உலக மொழியில் நமக்கு கிஞ்சித்தும் 

சம்பந்தமே இல்லாத மொழியில், உடையில், தெருவில் இருந்து தொடங்குவதாக பேசி ஆரம்பித்தாரென்றால் இந்த கட்டுரைக்கே எனக்கு வேலையில்லை. ஆனால், நமது தெருக்களிலிருந்தும் நாம் இதனை வளர்த்தெடுத்து உலகத்திற்கு வழங்குகிறோம் என்ற சிறு எண்ண விதை விதைத்து அதனை இவரின் உக்கிர மெனக்கெடல் வழியாக வழங்கினால், நம்முடனே வாழ்ந்து வரும் பிற மனிதர்களை மென்மேலும் தனிமைப் படுத்துகிறோம் என்ற அடிப்படை அக்கறையுடன் இருப்பதாக படவில்லை.

உலக அரங்கில் இது வரையிலும் இந்தியாவிலிருந்து வளர்த்தெடுக்கப்பட்ட பூர்வீகமாக கொண்ட குடிமகன்களில் யாரேனும் தீவிரவாதத்தில் தோள் கொடுத்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டதுண்டா? வீட்டினுள் நடக்கும் பிரச்சினைகள் வேறு. ஆனால், அதனை பொறுப்பற்று, தீர்த்துக் கொள்ளும் நிலைக்கு நம்மை நகர்த்தி நமது வாழ்வு சூழலுக்கு தகுந்தாற்போல் தீர்வுகளை கண்டடைந்து கொள்வதனைத் தவிர்த்து, கேளிக்கையின் வழியாக உலக சென்றடைதல் நிகழ்த்துகிறேன் பார் என்று கிளம்பினால், கொள்ளிக்கட்டையால் தலையை பிராண்டிக் கொள்வதாகத்தான் புரிந்து கொள்ள முடிகிறது என்னால். அதிலும் இந்த கால கட்டத்தில்.

உலகிலேயே ரெண்டாவது பெரிய இஸ்லாம் வாழ் மக்களை உள்ளடக்கியது இந்தியா. நாம் ஒன்றும் அமெரிக்கா இல்லை. இங்கே நாம் இரண்டற பின்னி பிணைந்து கிடக்கிறோம். இருவரும் ஒத்திசைவுடன் இயங்குவதின் அவசியம் மிக நுண்மையாக மெதுவாக ஆழப் பதிக்கப்பட வேண்டியதின் அவசியம் உணருதல் ஒன்றே நிரந்தர தீர்வு என்பதனை நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

நம்முடைய உடனடித் தேவை உள்ளூருக்குள் எப்படியாக அனைவருக்கும் எல்லாமும் கிட்டும் ஒரு நிலையை எட்டுவது என்பதாகத்தான் இருக்க வேண்டும். பரம்பரை பரம்பரையாக இங்கே வாழ்ந்து, உண்டு, வளர்ந்து, மடிந்து வாழும் அனைவருக்கும் கல்வியும், வேலையும் நீக்கமற கிடைப்பது போல ஒரு அடிப்படையான வாழ்வாதாரத்தை அமைத்து, எல்லாரையும் போல வாழ அனைவருக்கும் ஒருவாழ்வு அடிப்படையிலேயே கிடைக்க வேண்டிய சூழலை, ஒரு வாய்ப்பை அமைத்து கொடுப்பதே உண்மையானத் தேவை. 

அது போன்ற ஒரு பின்னணியில் வாழும் எந்த இந்திய குடும்பத்தவனும், வலியப் போயி டுப்பாக்கி தூக்குகிறேன் என்று அலையமாட்டார்கள் என்றே நான் நம்புகிறேன். ஏனெனில் நம் சமூக கட்டமைப்பு அப்படி அதற்கான ஊறல்கள் மனிதர்களை இப்படியாக நொதிக்க வைத்து தண்மை படுத்தி விடுகிறது என்ற அடிப்படை நம்பிக்கை கொள்ளல் வேண்டும். மாற்றம் சிறுகச் சிறுகத்தான் விதைக்க முடியும், அதுவே நீண்ட காலத்திற்கு நிற்கவும் செய்யும். இப்படியாகத்தான் இங்கே வாழ்வும் நகர்ந்து வந்திருக்கிறது. இத்துணை வெளிநாட்டு பிரவேசிப்பு, ஆக்கிரமிப்புகளுக்கு பின்னாலும்.

கிராமப்புரங்களில் இன்னும் எத்தனையோ இடங்களில் படித்தும் வேலை கிடைக்காத இளைஞர்கள் தனது பெயர்களுக்கு பின்னால் இருக்கும் மத அடையாளத்தால் வேலைகள் மறுக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒரு நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் சென்று தனது இளமையை தொலைத்து, குடும்பத்தையும் பிரிந்து வாழ்கிறார்கள். அது போன்ற மனிதர்களில் பலரும் மீண்டும் ஊருக்கு திரும்பி கையிலிருக்கும் சொற்ப பணத்தில் தனது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு, மேற்கொண்டு தனது குடும்பத்துடன் ஒரு நிம்மதியான பொருளாதார தன்னிறைவை எட்டி வாழ முடியாத பட்சத்தில் இன்னும் பலரும் இருக்கிறார்கள். 

எங்கள் ஊரில் பெரும்பாலான மக்கள் கருவாட்டுக் கடையும், கறிக்கடையும், காய்கறி/பழக்கடைகளும், பேரீச்சை பழத்திற்கு இரும்பு வாங்கிக் கொண்டும், மிதிவண்டிகளில் ஐஸ்க்ரீம் விற்றுக் கொண்டும் இருப்பவர்களாகவே இருக்கிறார்கள். இவர்களும் ஏனையவர்களைப் போல பெரும்பான்மையுடன் தனது பிள்ளைகளுக்கு எது போன்ற வாழ்வு வேண்டுமென்ற தேர்ந்தெடுப்பு சமூகத்தில் வளர்க்க வேண்டுமென்ற ஆவலை உருவாக்காது போனது யாருடைய குற்றம்?

இப்படியான மறுக்கப்பட்டச் சூழலில் இயல்பாகவே அரசியல் நடத்தும் குருந்தாடி மனிதர்களில் சிலர் ஏதோ சில பல கேள்விகளை அள்ளி வீசி - ஏன் இப்படியாக மாற்றான் தாய் மகன் என்ற முறையிலே நம் பூர்விக மண் என்றாலும் நடத்தப் பெறுகிறோம் என்று கேள்வியே  வீசி குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதனைப் போன்று உருவாக்கும் சூழலுக்கு இட்டு, அவர்களும் மண்டையை குடைந்து கேள்விக்கான பதிலை தேடிக் கொண்டிருக்கும் பொழுது, இந்த கமல்ஹாசன்களின் உலகளாவிய தீவிரவாத எக்ஸ்போர்ட் கல்வியூட்டு செயல்முறை கேளிக்கை படம் தேவையற்றது. அது தன்னை காதலிக்காத பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசு என்ற செயல்முறை வகுப்பு எடுப்பதற்கு ஒப்பானதுதானே!

அவர்களுக்கு முன்னால் வைக்கப்பட்ட தவறான(?!) கேள்விகளுக்கான பதிலை எட்டி நியாயமான கேள்விகளுக்கு முகம் கொடுக்கிறோம் என்ற நிலைக்கு எட்டும் முன்பு எனது பக்கத்து வீட்டு குடும்பத்திற்கும், எனக்கும், நண்பனுக்கு நல்ல வேலை, வசதி வாய்ப்பு தேவை. நான் எங்கும் சென்று பஞ்சம் பிழைக்க புறப்பட்டு செல்லும் இடத்தில் வைத்து என் மூளை சலவை செய்யப்படுவதற்கு முன்பு இது நடந்தாகணும்.

பிரச்சினையை தூண்டி விடும் சலசலப்பான விசயங்கள் தேவை இல்லை.  நமக்கு இந்தச் சூழலில் பிரச்சனையின் ஆணி வேருக்குச் சென்று பேசி அதற்கான தீர்வை நோக்கி மனிதர்களின் மனதில் ஈரத்தை விதைக்கும் அடிப்படையைப் பேசும் படங்களே தேவை. சிறு பிள்ளைத்தனமான படங்களாகவோ அது கேளிக்கைக்கான படங்களாகவோ இருந்தாலும்.

கமலின் கேளிக்கைக்கான படமான இந்த விஸ்வரூபத்தில் கமல் எப்படி குழந்தைகள் தீவிரவாதத்தின் பால் ஈர்க்கப்படுகிறார்கள், எது அவர்களை அது போன்ற ஒரு சூழலில் போடுகிறது, நம்மூர் கிராமப்புறங்கள் வறுமையில் வாழும் குழந்தைகளுக்கும் இப்படியான ஒரு நிலை வந்துவிடக் கூடாதுங்கிற அக்கறையில் நடுநிலையில் நின்று இந்த தீவிரவாதத்திற்கான பரவலை தடுக்க தனது அறிவுஜீவி எண்ணங்களை பயன்படுத்தி இருப்பார் என்று சிலர் நம்பி படத்தை ஆதரிக்கலாம். படத்தைப் பார்த்தபிறகு மற்றொரு பதிவின் மூலமாக இந்த படத்தின் அரசியல் கூறுகளை அலச வாய்ப்பிருக்கிறது அப்பொழுது சந்திப்போம். அதுவரையிலும் இதையே படிச்சிட்டு இருங்க !



பி.கு: என்னுடைய பால்ய காலத்து கல்லூரி படிப்பு திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியிலேயே தொடங்கியது. எனக்கு வாய்த்த அனைத்து நண்பர்களும் அந்த சமூக பின்னணியிலேயே இருந்தார்கள். எனக்கு பரிணாமம் முதல் மரபியல் வரை கல்வியூட்டிய அறிவார்த்தமான பேராசியர்களும், அறிவியர்களும் இவர்களே! எனவே கமல் தொட்டுப் போகும் விசயம் நமது தமிழகத்திற்கு தேவையற்றது. அவர்களுடனான உரையாடலுக்கான சாளரம் எப்பொழுதோ நமது நாட்டில் திறந்து வைத்தாகி விட்டது. அதனை எப்படி நாம் பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதனை பொருட்டே, பின் வரும் காலம் அமையவிருக்கிறது.

Tuesday, January 08, 2013

வன்புணர்வு - சமூக உளச்சிதைவின் ஓர் குறியீடு!

வன்புணர்வு கலாச்சாரம் பற்றிய இக் கட்டுரையை எங்கிருந்து தொடங்குவது என்பதே ஓர் இடியாப்பச் சிக்கலைப் போன்றது. டெல்லி வன்புணர்வு சம்பவத்தை தொடர்ந்து பலரும் அதிலும் குறிப்பாக மத வழிபாட்டாளர்கள் தீர்வாக முன் வைக்கும் விடயங்கள் மிக அபத்தமானதாகவும், விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டியதாகவும் இருக்கிறது. பிரசித்தி பெற்ற தினமணி தலையங்கத்தில் ஒரு பெரியவர் தனது வீட்டுக்குள் தனது பெண்டீர்களுக்கு வழங்கும், தற்காப்பு கலையை உலக மக்களும் பார்த்து உய்ய தனது சொற்பொழிவினை அச்சில் ஏற்றி நமது பார்வைக்கும் கொண்டு வந்திருந்தார். அவர்களின் தீர்வு வெகு எளிமையானது -

 1) பெண்கள் நிறைய தோல் தெரிய உடை உடுத்தி இருட்டு தட்டிய பின் வெளியில் சுற்றித் திரிவதை தவிர்க்க வேண்டும் ...

 2) ஆண்கள் பொருளீட்டும் பொழுது, பெண்கள் வீட்டிற்குள் இருந்து லக்‌ஷமண் போட்ட கோட்டைத் தாண்டாமல் குடும்ப பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் ...

 3) வன்புணர்வாளர்களிடம் சிக்கிக் கொண்டால் கையெடுத்து கும்பிட்டு இறைவனை இறைஞ்ச வேண்டும், சகோதரர்களே என்று விளிக்க வேண்டும், முடியாத பட்சத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்...

அவரவர்களின் மன வளர்ச்சிக்கேற்ப இப்படி பக்கம் பக்கமாக தீர்வு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்துமே ஓர் ஆணின் பார்வையில் அல்லது அவர்களின் தாக்கத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட ஆணியவாதப் - பெண்களின் வாக்குமூலங்களாக நம்மை வந்தடைகிறது.

இத்தனை அல்லோல கல்லோலங்களுக்கும் பின்னான சமூக உளவியல் எங்கோ படுத்து மதிய நேரத்து துயில் கொண்டிருக்கிறது. அதனைத் தேடிச் செல்வது இந்த கட்டுரையின் நோக்கம். நம்மூர் வழக்கத்தில் ஒரு சொலவாடை உண்டு. பஞ்சையும் நெருப்பையும் தள்ளித் தள்ளிதான் வைக்கணும்... இதுக்கு பின்னான சமூக அணுகுமுறை ஒரு ஆண்/பெண்ணுக்கான உலகத்தை இரண்டாக பிளந்து பிரித்து வைக்கக் கூடிய அத்தனை சாத்தியங்களையும் உருவாக்கி வைத்துவிடுகிறது.

 இந்த ஆண்/பெண் என்ற உடல் கூறே எங்கிருந்து முளைத்து வருகிறது? அம்மாவின் உடலும் ஒரு பெண்ணின் உடல் குறியீடுகளை உள்ளடக்கி உள்ளதுதானே! முதலில் அவள்தானே மற்ற பெண்களின் உடல்/மன உலகத்தை காணுவதற்கான அறிமுகச் சாவியை ஓர் ஆணின் கையில் ஒப்படைக்கும் பொறுப்பை பெற்றிருக்கிறாள். இங்கே பெண் என்பவள் போற்றுதலுக்கும், வணங்குவதற்கும், காக்கும் பூமித் தாய் அளவிற்கு வானுயர ஏற்றி வைத்தும் பேசுவதாக அமைந்துள்ளது. இப்படியாக பேசும் சமூகத்தில்தான் கண்ணால் கண்டு, உதட்டைச் சுழித்து, கண் சிமிட்டினாலே போதை கொண்டு புணர்விற்கு தயாராகி விடும் நாணலைப் போன்றவளாகவும் மனத் திரையில் அவளுக்கென விருப்பு/வெறுப்புகள் உண்டு என்று கிஞ்சித்தும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு வேட்டை ஓநாய்களை போல ஆகிவிடும் ஒரு ஆண் சமூகத்தையும் நம்மைச் சுற்றி புடைசூழ வைத்திருக்கிறது. இது எப்படி சாத்தியமாகிப் போனது?

எனது பார்வையில் வீட்டிற்குள் தடை பட்டுப் போன உரையாடலும், உடற் மொழி அன்பு வெளிப்பாடுகளுமே இதற்கு முதன்மைக் காரணமாகப்படுகிறது. ஒரு காட்டு விலங்கை முறைப்படி பழக்கி உட்காரு என்றால் உட்காரவும், கரணம் அடிக்கவும் பழக்கப்படுத்த தெரிந்த நமக்கு நமது மனதை பக்குவப்படுத்திக் கொள்வதின் அனுகூலங்களையும், அடுத்தவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு விலகிச் செல்லும் மனப் பக்குவத்தையும் சிறு வயதிலேயே ஆழ பதிக்க முடியாமல் போனதிற்கு எதுவெல்லாம் காரணிகளாக அமைந்திருக்க முடியும்? வீட்டிற்குள் நடக்கும் கலாச்சார முன் நிறுத்தல்களே இது போன்ற சாலையோர முரட்டு சமூக வன்முறை வெளிப்பாடுகளுக்கு காரணம்.

முறையாக பேசி எதிர் பாலினத்தவரின் மீதான வன்முறை எண்ணங்களை பண்பூக்கம் (tame) செய்ய கற்றுக் கொடுக்காததே ஒரு காரணி. அதுவே ஆழ் மன வறட்சி நிலையில், கிடைக்கும் சூழலில் அத்துமீற எத்தனிக்கும் கூட்டு சமூக வெளிப்பாடுயாகி விடுகிறது எனலாமா? வீட்டிற்குள் அம்மா, அப்பா, சகோதர மற்றும் சகோதரிகளுக்கிடையே நிகழ்த்தும் உடற்மொழி கலாச்சாரத்தின் கட்டமைப்பு போதாமை, இது போன்ற கூட்டுச் சமூக வன்புணர்வு எண்ண வெளிப்படுதல்களுக்கும் வன்புணர்வு  மனிதர்களை உருவாக்கி தெருவிற்குள் பிரவேசிக்க வைக்கும் ஒரு காரணியாக அமைகிறது. 

சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதியை வாஞ்சையுடன் இறுக கட்டியணைத்து உச்சி முகர்ந்த நிலையில் ஒரு புகைப்படம் வெளி வந்திருந்ததைக் கண்டு நமது கலாச்சார கண்ணாடிகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பி இது போன்று ஒரு தவறான முன்னுதாரணமாகவும், வாழ்க்கையைப் படங்களில் நடிப்பதனைப் போலவும் செய்கிறார் என்ற மிகை கலாச்சார அதிர்வு உந்தல்களால் பலவாறாக தங்களது உளச் சிதைவுகளை முன் வைத்திருந்தார்கள்.

அப்பொழுதும் இப்பொழுதும் எப்பொழுதும் எனக்கு நமது கலாச்சாரப் பின்னணியில் புரியாமல் போகிற விசயம் எப்படி மிருக நிலையிலேயே நம்மால் தசை கூறுகளைக் கொண்டே எல்லா உறவு நிலைகளிலும் கூட நிறக் கண்ணாடி கொண்டு பார்க்க முடிகிறது? அப்படியாக காணும் ஒரு நிலைக்கு நாம் நகர்ந்திருந்தால் அது பிறழ்வுற்ற/சிதைவுற்ற ஒரு கூட்டுச் சமூகமாகத்தானே இருக்க முடியும்? எப்படி நம்முடைய அம்மாவை இறுக கட்டி அணைத்துக் கொள்ளும் பொழுது நமது திசுக்கள் வேறு விதமாக சமிக்கையை அனுப்பி கிளர்வுறச் செய்யும்? போலவே, மகள்/மகன்/சகோதரன்/சகோதரி கூடவும் அப்படியாக நிகழ்ந்தால் அங்கே ஏதோ ஒன்று கழண்ட நிலையில்தான் உள்ளது என்பதாக எடுத்துக் கொண்டு மன நல வைத்தியரை அல்லவா அணுக வேண்டி வரும்.

ஆனால், கூட்டுச் சமூகமாக இந்த மனச் சிதைவை நாம் எப்படி அணுகுகிறோம். அப்படியாக நடந்து விடுவது ரொம்ப இயல்பு, அதனால் தாயா இருந்தாலும் பிள்ளையா இருந்தாலும் தள்ளித் தள்ளிதான் வைக்கணுங்கிற அளவில பஞ்சையும் நெருப்பையும் தள்ளி வைக்கச் சொல்லுகிறோம். அதற்கு மாறாக, நாம் உரையாடல் நிகழ்த்த தயாராக இல்லை. இங்கேதான் ஓர் அம்மாவிற்கும் பிள்ளைக்கும், ஒரு தகனுப்பனுக்கு மகளுக்கும், ஒரு சகோதரனுக்கும் சகோதரிக்குமான பொன்னான வாய்ப்புகள் கை நழுவி தெருவோர வன்முறையாளர்களை உருவாக்கி வைக்கும் பங்கை ஒரு கலாச்சாரமாக செய்து வைத்து விடுகிறோம்.

அன்பான தொடுதல்கள், வருடல்களுக்கும் காமத்தின் இச்சைக்கு எட்டிச் செல்லும் தொடுதல்கள், வருடலுக்குமான வித்தியாசம் அதற்கான ஏற்பாடுகள் எப்படியாக வித்தியாசம் கண்டறிந்து கொள்வது? அதனை எங்கிருந்து யார் முதல் கல்வியூட்டுவது? அது போன்ற மென் உணர்வு சார் விசயங்களை எப்படியாக இனம் காண்பது? அதற்காக என்ன வீட்டிலேயே ஆரம்பித்து வைக்கச் சொல்லுறீங்களான்னு கேக்கக் கூடாது. நாம் செல்ல விருக்கும் இடம் வேறு. ஒரு அம்மாவின்/சகோதரியின் நெருக்கம் அதனையொட்டிய உரையாடல் ஒரு ஆணுக்குள் இருக்கும் புறம் சார்ந்த சீண்டல்களை பண்பூக்கம் செய்ய வித்திட வாய்ப்பாக அமையலாம். அவன் இயல்பாகப் பார்க்க கற்றுக் கொள்ளலாம். உடல் சார்ந்த திறப்பு என்பது முதலில் மனத் திறப்பு என்பதுதான் என்று அவன் உணர்ந்து, உடல் சார்ந்த வயப்படலிலிருந்து வெளி வர இந்த உடற்மொழி வெளிப்பாடுகள் உதவச் செய்யலாம்.

இது போன்ற தெருவோர வன்புணர்வு மனச் சிதைவு ஒரு மனதின் அன்பற்ற எதிர்பாலினத்தின் புரிதலைப் பற்றிய வறட்சியை நோக்கியே நம்மை இட்டுச் செல்கிறது. புறம் சார்ந்த கிளர்ச்சியுறு நிலை என்பது இருபாலினத்திற்கும் ஓர் ஆரோக்கியமான உடற் செயல்பாட்டையே சுட்டி நின்றாலும், அது கட்டுக்குள் வைக்கும் பொறுப்பு பக்குவமடைந்த சமூகத்தின் ஒரு வெளிப்பாடே என்பதனை நாம் இங்கே புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கேதான் நாம் ஒரு கேள்வியை கேட்டுக் கொள்ள வேண்டும். மேற்கு நாடுகளில் ஏன் இது போன்ற தெருவோர/பொது இட வக்கிரச் சீண்டல்கள், வன்புணர்வுகள் இல்லை (அதற்காக முற்றாகவே இல்லை என்று இங்கு நான் நிறுத்தற் குறி இடவில்லை). நம் சமூகம் மற்ற சமூகங்களைக் காட்டிலும் தொன்மையான, மிக நீண்ட வரலாற்றைக் கொண்டதாகவும், உலகளவில் விவாகரத்து பெறும் புள்ளியலில் மிக குறைந்த எண்ணிக்கையை கொண்டதாகவும், பெற்றோர்களே தங்களது பிள்ளைகளுக்கு வரன் பார்த்து அமைத்து கொடுக்கும் ஓர் உன்னத கலாச்சாரத்தை உள்ளடக்கியது எனவும் நம்புகிறோம்.  வரன் பார்த்து வைக்கும் வரை முப்பது வயதை எட்டிய யுவதியும்/யுவனும் உடற் ரீதியில் வறட்சி நிலையில் தனித் தனி தீவுகளாக வாழ்ந்தாலும், ஒழுக்க நெறியுடன் இன்னமும் தனக்கு பரிட்சியமான ஏழு வயது சிறுமியோ/சிறுவனோ என்ற நிலையில் பெரியவர்கள் அவர்கள் உலகத்தில் நம்பிக் கொண்டு கலாச்சார கண்ணாடிகளாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இப்படி மட்டற்ற பெருமையை கொண்ட ஒரு சமூகத்தில், எப்படி இத்தனை வக்கிரமான சமூகத்தில் உளச் சிதைவை கொண்ட மக்களும் பெருகி இருக்கிறார்கள்?

மேற்குலகில் பெற்றோர்கள் ஒரு கடவுளர்கள் அளவிற்கு மேலே வைத்து தொழும் இடத்திற்கு தங்களை நகர்த்தி வைத்துக் கொள்வது கிடையாது. உரையாடலுக்கான அத்தனை சாளரங்களையும் திறந்த நிலையிலேயே வைத்திருக்கிறார்கள். முதல் தடை நம்முடைய சமூகத்தில் இங்கே இருக்கிறது. இரண்டாவதாக மேற்குலகில் ஆண்/பெண் நண்பர்களை அவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்குள் அமைத்துக் கொண்டு சகஜமாக பழகும் நிலைக்கு தங்களை நகர்த்திக் கொள்ளவில்லை என்றால் கவலையுறுகிறார்கள். ஆனால் நாமோ, நமது மனச்சிதைவின் காரணமாக அந்த யுவ/யுவதிகளின் உடற் கூற்றை மட்டுமே கண்டு கற்பனையால் துணுக்குற்று கொண்டிருப்போம். ஆனால், அந்த பழகல்களின் மூலமாக அவர்கள் வாழ்க்கைக்கு தேவையான தனிமனித விருப்பு/வெறுப்புகள், வரம்பு மீறாமை போன்ற அடிப்படை நாகரீகத்தை கற்றுக் கொள்கிறார்கள் என்பதனை பார்க்க மறுக்கிறோம். சிதைவுப் பார்வையின் வழியாக நம் கலாச்சார மாண்பு பேசியே சமூக உளவியலைக் காணத் தவறுகிறோம்.

அதே மேற்குலகில் வயதிற்கு வந்தவர்கள் புணர்ச்சி நிமித்தம் தடுமாறிப் போய் சாலையில் போவோரை வருவோரை கையை பிடித்து இழுக்கும் நிலைக்கு போகாமல், தங்களை பண்புடனான நிலையில் வைத்துக் கொள்ள பல சமூக நோக்கு அணுகுமுறை அவர்களுக்கு கை கொடுக்கிறது. நமக்கு எல்லாம் ஒரு காலத்தில் மேற்குலகு என்றாலே ஃப்ரீ செக்ஸ், எப்படி வேணாலும் யார் யாருடனும் இருப்பார்கள் என்ற சமூக கூட்டு அழுக்கு பார்வை இருந்தது. ஆனால், உண்மையில் நடந்தது, நடந்து கொண்டிருப்பது என்ன வென்றால் உண்மையை உண்மையாக, தங்களுக்கு தாங்களே கல்வியூட்டிக் கொண்டு, எதனையும் மறுக்காமல் ஏதோ ஒரு உறவில் தங்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி பொது இடங்களில் கோவில், பேருந்து, புகைவண்டி, எந்த ஒரு கூட்ட நெரிசல் சந்தர்ப்பங்களின் போதும் எதிர்பாலினத்தை துழாவ வேண்டுமென்ற பொது புத்தி பெற்றிருக்கவில்லை. எத்தனை பெரிய வேறுபாடு!

இப்படியாக கூட்டு ஒத்துழைப்பின் மூலமாக வாழ்க்கை கல்வி சமமாக பரவும் பொழுது தெருவோர பிரச்சினைகள் ஓர் ஒழுங்கிற்கு வருகிறது. இத்தனையும் மீறி அத்து மீறல்கள் வரலாம், மிக குறைந்த சதவிகிதத்தில் வெளி வரும் பொழுது அவர்களுக்கு உடனடியாக சட்டம் தன் பங்கை ஆற்றி மற்ற பக்குவமற்ற/வறட்சி மனங்களை கட்டுக்குள் வைத்துக் கொள்கிறது.

இங்கே மற்றுமொரு சிந்தனைக்கான கேள்வி. இரு வயதிற்கு வந்தவர்கள் தங்களுக்கு பிடித்த மாதிரியான வாழ்க்கையை எப்படியோ தங்களது இச்சையை மட்டுக்குள் வைத்துக் கொள்ளும் விதமாக வாழ்ந்து முடிக்கும் பொழுது எந்த விதத்தில் அது நமது குடும்பத்தை மகனை/மகளை சிதைக்கிறது. அவர்கள் எப்படியோ இருந்து விட்டு போகட்டும், நமக்கென்ன? ஒரு நாட்டின் கலாச்சாரத்தை முன் நிறுத்த உங்கள் வீட்டுப் பிள்ளைகளையும் பலி கொடுக்க தயாராகி விட்டீர்களா, அல்லது பக்குவமற்ற தனிமனித தேடல்களை அவர்களுக்கு தெரிந்த முறையில் வெளிப்படுத்தி வாழ அனுமதி வழங்கி ஒதுங்கி நின்று தனி குடும்ப நிம்மதியை பேணிக் கொள்வீர்களா?  

இந்த வக்கிர தெருவோர சீண்டல்களிலிருந்து தப்பித்து  வீட்டிற்கு வெளியே போன பிள்ளைகள் பாதுகாப்பாக வந்து சேருவார்களா என்று கெதக்கென்று இருப்பது நமது தினப்படி நிம்மதியை சிதைக்கிறதா, இல்லை கலாச்சார கண்ணாடிகளின் கூற்றுப்படி எங்களது கலாச்சாரம் உலக அளவில் பிரசித்திப் பெற்றது என்று ஒரு பெரும் போர்வையை கொண்டு உண்மையை மறைத்து வைத்து விட்டு பொது இடங்களில் வக்கிரம் காட்டி மனதிற்குள் அழுது கொண்டு திரிந்து ஒரு நாள் இது போன்று கொலை அளவிற்கும் தங்களை முன் நிறுத்திக் கொள்வது நம் நிம்மதியை குலைக்கிறதா? எது நாகரீகமடைந்த கலாச்சாரம்/சமூகம் இங்கே??

எனவே மனிதருக்கான அத்தனை சமூக பண்படுத்தலுக்கான விடயங்களும் ஒரு வீட்டிற்குள்ளயே உள்ளடக்கி இருக்கிறது. அதனை நடைமுறைப் படுத்தி உரையாடலைத் தீவிரப்படுத்தி நுண் உணர்வுகளை தங்களது குடுப்பத்தாருடன் பகிர்ந்து கொள்ளுவோம். பேருந்தில் சீண்டலை முகம் கொடுத்தீர்களா, அது எத்தனை மன வலியை, முக சுழிப்பை உருவாக்கியது என்பதனை உணர்வுப் பூர்வமாக குடும்பத்தாருடன் குறிப்பாக பிள்ளைகளுடன் ஒரு பெண்ணின் பார்வையில் பகிர்ந்து கொள்ளுங்கள். மனசிற்கும், உடற் செயல்பாட்டிற்கும் இருக்கும் நெருங்கிய தொடர்பை ஆழ விதைக்கலாம். தன் வீட்டுப் பெண்டிர்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தொடர்பான உடல் உபாதைகளை மிக இயல்பாக ஏனைய வீட்டு நபர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். வரும் வழியில் மாதவிடாய் பேட் வாங்கி வரச் செய்யுங்கள். அது பிற்காலத்தில் பெண்களை கீழானவர்களாக, ஒரு நுகர்வுப் பண்டமாக பார்க்கும் பார்வையை மாற்றியமைக்க உதவும்.

இது குழந்தைகளிடமிருந்துதான் தொடங்க முடியும். ஒரு சமூகமாக இந்த புற்றுக் கட்டியை அகற்றி கொள்ளும் நேரமிது. ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் இருக்கிறது, அறுவை சிகிச்சைக்கான ஆயுதம் - உரையாடல் மூலமாக வெளிப்படும் மென்னுணர்வு, அதன் மூலமாக வெளிப்படுத்தும் கரிசனம், உள்ளார்ந்த அன்பு வறட்சியற்ற ஆரோக்கியமான சமூகம்.

Saturday, November 17, 2012

முழிச்சிக்கோங்க : சினிமா டுப்பாக்கி...

இந்தப் படத்தை இயக்குனவர் நிறைய கூகுள்ல ஆராய்ச்சி செய்றவர் போல. எப்படியோ இந்தியாவின் பட்டி தொட்டியெல்லாம் தீவிர தீவிரவாத கண்காணிப்பிற்கு விதையைத் தூவி ஏதோ அவரால் ஆன நாட்டுச் சேவையை ஆத்தி இருக்கார்.

உண்மையான மரணம் வாழும் பொழுதே பயந்து சக மனிதனைக் கண்டு அஞ்சி வாழ்வதுதான். இந்தியாவின் மக்கள் கலப்பு என்பது ரொம்ப சிக்கலானது. அது பல நூற்றாண்டுகளைத் தாண்டிய வரலாற்றை உள்ளடக்கியது.

அதனால் இன்றைய நவீன அமெரிக்கப் பார்வையில் நம் தெருவிற்குள் இந்த உலகளாவிய அரசியலை தெரிந்தோ தெரியாமயோ பரப்புரை செய்வது நன்மை விளைவிப்பதைக் காட்டிலும் அதீத தீமையையே விதைத்துச் செல்லும்.

கீழே இணைத்திருக்கிற புகைப்படம் நான் ஃபேஸ்புக்கில் பார்த்தேன். அதிகம் பேச வேண்டியதில்லை... நீங்களே பார்த்துக்கோங்க.

...ஏன் விஜயகாந்த், அர்ஜூன் வகையறா சினிமா தீவிரவாத ஒழிப்புகளைக் காட்டிலும் முருகதாஸ் வகையறா சினிமா  டுப்பாக்கி சமூக உளவியலுக்கு நச்சு என்பதற்கு கீழ்கண்ட இந்த புகைப்பட ஒருங்கிணைப்பு உதவக் கூடும்.

ரசினி சார் இந்தப் படத்தை இரண்டு முறை பார்த்தாராமா! தீவிரவாத விழிப்புணர்வு கொடுத்துக்கிட்டார் போல...

இன்னும் கரம்பக்குடிக்கு வரலங்கிற அளவில எங்கூர்ல தீவிர தீவிரவாத விழிப்புணர்வு பரவலன்னு நம்புறேன்...


தொடர்புடைய மற்றுமொரு பதிவு - 


ஆஃப்கான் புத்தர் சிலை வெடிப்பு - பாபர் மசூதி இடிப்பு!

http://thekkikattan.blogspot.com/2010/10/blog-post.html

Sunday, November 27, 2011

முல்லை பெரியார் - நீருக்கான போர் - காணொளியுடன்.


இது வரையிலும் இந்த பூகோளம் இரண்டு பெரிய உலக போர்களை சந்தித்திருக்கிறது. மூன்றாவது ஒன்று வர வேண்டும் என்று பரவலாக கனியக் காத்திருக்கும் ஒரு சூழலிலிருக்கிறது. அந்த இனிய சூழலும் இயற்கை வளங்களை யார் சுரண்டி கொழுப்பது என்பதனை ஒட்டியே அமையும் என்று பணம் படைத்தவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அவர்கள் சொல்வது எத்தனை அளவிற்கு உண்மையோ இல்லையோ நமக்குத் தெரியாது. ஆனால், அண்மைய காலங்களில் நடந்தேறும் வனங்களின் விரைந்து அழித்தொழிப்புப் பரவலாக உலகளவில் மழை பெறும் அளவையும், நிலத்தடி நீரின் குறைவும் அப்பட்டமாக செய்தி சொல்லி நிற்கிறது.

உலகின் மொத்த நீர் வளத்தில் 97.5 சதவீதம் கடல் நீரும் மீதமுள்ள 2.5 சதவீதமே நன்னீருமாக நமக்கு இந்த இயற்கை பிச்சையாக வழங்கி நம்மை போன்ற ஒரு முட்டாள் மனித இனத்தை வைத்து அழுது கொண்டிருக்கிறது இந்த பூமி. இதனிலும் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே நாம் எடுத்துக் கொள்ளும் வாக்கில் அந்த நன்னீர் அமைந்திருப்பதாக நாம் அறிகிறோம்.

இந்தச் சூழலில் நமது தென் மாவட்ட நிலமையை சற்றே உற்று நோக்கினால் ஓர் இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்த நீரோட்டம் இப்பொழுது கிடையாது. விரைவான பாலைவனவாக்கம் நடைபெற்று வருகிறது; இயற்கையாகவே. ஐயூசின் ஆய்வறிக்கை கூட இதனையே வழிமொழிந்து 2020ஆம் வருடமாக்கில் கூடுதலாக இந்த பாலையின் கோர முகத்தை நாம் கண்ணுறலாமென்று அபாய மணி வேறு அடித்து வைத்திருப்தாக எங்கோ படித்த ஞாபகம்.

இது ஒரு சுழற்சியாக கூட நடைபெற்று வரலாம். பதினேழாம் நூற்றாண்டு வாக்கில் இந்தியா முழுவதும் ஒரு மாபெரும் வறட்சியும் அதனையொட்டிய பட்டினிச் சாவுகளும் நடந்தேறி இருக்கிறது. அதிலும் நமது பகுதியில் மிகக் கோரத் தண்டாவம் ஆடி முடித்திருக்கிறது. இதற்கு தீர்வாக கண்டடைந்ததுதான் முல்லை பெரியார் அணையும், அதனையொத்த பல மேற்கு மலைத் தொடர்களை ஒட்டிய பல நீர்த்தேக்க அணைகளும். அந்த பாடம் நிச்சயமாக பல உயிர் சேதங்களுக்கு பின்னாக கற்றுக் கொண்டதது.

அப்படியாக அணைக்கட்டுக்கள் கட்டப்பெறும் பொழுது பல சதுர கிலோமீட்டருக்கான மழைக்காடுகள் அழிக்கப்பெற்று அத்துடனேயே பல ஜீவராசிகளின் வாழ்வும் முடிக்கப் பெற்று நமது சுயநலத்திற்கென அணைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இது போன்றே புதிது புதிதாக மென்மேலும் விரிவாக்கம் செய்து கொண்டேச் சென்றால் வனத்தினுள் இருக்கும் பெரிய விலங்குளான யானை, காட்டெருமை ஊருக்குள் நடந்து திரிவதனை காண முடியும். அதனை விட சிறிய விலங்கினங்கள் கண்ணுக்கு எட்டுப்படாமலேயே சுத்தமாக மாண்டொழியும்; அத்துடனே பல அரிய மர, சொடி, கொடி வகைகளும்; அவைகள் அறிவியல் உலகின் பார்வைக்கே வந்திருக்கக் கூட வாய்ப்பில்லாமலே துடைத்தழிக்கப்படலாம்.

இத்தனை சிக்கலை உள்ளடக்கியது இந்த விசயம். இருப்பினும் நமது தேவையை முன் வைத்து ஒரு நூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்பு கேரளத்திலிருந்து உபரியாக வழிந்தோடும் நீரை தேக்கி வைத்து வறட்சிக்கு பெயர் போன தேனி, கம்பம், போடி, திண்டுக்கல், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஏரியாவிற்கு விவசாயம் செய்வதற்கும், குடிநீருக்குமென பயன்படும் வாக்கில் ஓர் அணைக்கட்டு முல்லை பெரியார் என்ற பெயரில் ஒரு ப்ரிட்டிஷ்காரரின் முன்னிலையில் மக்களாவே முன் வந்து பணத்தை போட்டு கட்டியெழுப்பியிருக்கிறார்கள்; கேரளா அரசுடனான 999 வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில்.

திடீரென்று சர்வதேச அரங்கில் எல்லைகளை அடிப்படையாக கொண்டு இரு தேச அரசுகள் விளையாடும் ஓட்டு அரசியல் விளையாட்டை இன்று ஒரு நாட்டிற்குள் அடங்கியிருக்கக் கூடிய மாநில அரசுகள் இது போன்ற நீர் வள ஆதார விசயத்தில் வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்திருக்கிறது - கேவலமான அபாயகரமான விளையாட்டு. இது எப்படி என்றால் எரியும் கொள்ளிக் கட்டையை எடுத்து பரட் பரட் என்று சொறிந்து கொள்வதற்கு சமமாக இருக்கிறது. எத்தனை சென்சிடிவான ஒரு விசயமிது? இதனை வைத்து இரு மாநில மக்களுக்கிடையே பகையுணர்ச்சியை வளர்க்கும் பொருட்டு அந்த மாநிலங்களை ஆளும் அரசுகளே முன்னின்று செய்தால் ஒரு நாடாக எப்படி மேலேழும்பி வல்ல’அரசு ஆகுவது?

கிட்டத்தட்ட தமிழகத்தை சுற்றிலும் உள்ள அனைத்து மாநிலங்களும் இந்த அரசியல் விளையாட்டை முன் வைத்து விளையாடுகிறது. இதன் அபத்தம் புரியாமல் மத்திய அரசு என்று பெயர் வைத்துக் கொண்டு முட்டி கழண்டவர்கள் இதனை சூப்பர்வைசிங் செய்கிறார்கள். இது எங்கே எப்படி போய் முடியப் போகிறது என்ற தொலை தூர பார்வையே அற்று வீங்கி வெடிக்கும் வரைக்கும் பொறுத்திருப்பது யாருக்கு நன்மை பயக்கும் என்று புரியவே இல்லை.

அண்மையில் ஒரு காணொளியை பார்க்க நேர்ந்தது. அந்த ஆவணப்படத்திற்கான இயக்குனரும் பல அனுபவம் வாய்ந்த சீனியர் இஞ்சினியர்களும் ஒருங்கே இணைந்து 17ஆம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பித்து நேற்று வரையில் இந்த முல்லை பெரியார் அணைக்கட்டு விசயமாக என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றதொரு கல்வியூட்டும் விதமாக ஒரு அருமையான விவரண காணொளியை நமக்கு வழங்கியிருக்கிறார்கள்.

இந்த காணொளி கட்டம் கட்டமாக (phase by phase) நகருகிறது. ஒவ்வொருவரும் அவசியம் காண வேண்டிய காணொளி இது. ஏனெனில் இன்றைய கேரளா அரசு மிக முனைப்புடன் இந்த 999 வருட ஒப்பந்தத்தை உடைக்க எண்ணி மிக்க பிரயத்தனப்பேரில் பெரிய பிரச்சாரம் ஒன்றை மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் நாம் குறைந்த பட்சம் இந்த பிரச்சினைக்கு பின்னான உண்மைதான் என்ன என்று தெரிந்து கொள்வது அனைவருக்கும் பொறுப்பான காரியமாகிவிடுகிறது. ஏன்னா, தண்ணீர் இல்லைன்னா நாக்கு வறண்டு செத்து போயிடுவோம்யா... அது நீ கேராளக்காரான இருந்தாலும் இராம்நாட்டில் வாழ்ந்தா உன் வாயிலும் தான் மண்ணு...  


பகுதி - 2

Wednesday, June 15, 2011

கொலைக் களம் : இவிங்களும் மனுசங்களாம்!!

கொஞ்ச காலங்களுக்கு இங்கு எழுதுவதை நிறுத்தி வைப்பதாக எண்ணியிருந்தேன். ஆனால், இந்த சானல் நான்கு நேற்று ஒளிபரப்பிய ஈழ இனப்படுகொலை பற்றிய காணொளி பார்த்ததிலிருந்து மேலும் இந்த உலகம் பற்றியும், பணப் பேய்களின் உளம் பற்றியும் அறியும் பொழுது அவ நம்பிக்கையும், அயற்சியும் இவர்களுடன் இன்னமும் இதே காற்றை சுவாசித்து மாண்டொழியும் நாளை எதிர் பார்த்து வயிற்றுப் பிழைப்பு நடத்தி வருகிறோமே என்று நினையும் பொழுது அவமானமாக இருக்கிறது; அதனையொட்டியே இந்த பதிவினை முன் வைக்க வேண்டி வந்திருக்கிறேன்.

இந்த படுகொலையை சந்தித்தவர்களின் கடைசி மணி துளிகளை நினைத்து பார்க்கும் பொழுது இரவு தூக்கம் காணாமல் போவது மிகச் சாதாரணம். அதன் வீரியம் புரியாமலும், புரிந்தும் மனதிற்குள் சிரித்துக் கொள்பவர்களும் இதே நிகழ்வு நாளை நம்மையும், தன் குடும்பத்தாரையும் முற்றுகையிட்டால்... என்ற தொனியில் ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள் மனதின் ஓர் ஓரத்தில் இரக்கம் சுரக்கலாம்.

அவசியம் கீழே உள்ள காணொளியை நெஞ்சை இறுக்கி பிடிச்சிகிட்டு பார்த்து முடிச்சுடுங்க. அப்படியே கையோட அதுக்கு கீழே காணும் இணைப்பில் சென்று ஐக்கிய நாட்டு சபையின் மூத்தவர் பான் கீ மூனுக்கு வெளியான போர் குற்ற ஆதாரங்களை கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு உள்ள விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து அனுப்புங்க.

அதில் இரண்டே விசயங்கள்தான் கேட்கப்படுகிறது. உங்கள் பெயரும், மின்னஞ்சல் முகவரியும். எனவே பயப்பிடாம மனசாட்சிக்கு பயந்தாவது செய்யுங்க, மக்களே! நன்றி!!


பகுதி ஒன்று:



பகுதி இரண்டு:



பகுதி மூன்று:




யூ. என் தளத்திற்கு சென்று விண்ணப்பம் செய்ய:

I just signed a petition urging Ban Ki Moon, UN Secretary-General (UNSG) to investigate allegations of war crimes before an international war crimes tribunal. Please share this important petition with your friends and family. If you are on Facebook, Bebo, MySpace or any other social network please put a post up giving others the link to the petition. Also if you run a website or blog please encourage others to support this urgent campaign. SIGN YOUR PETITION HERE

This message was sent from the Sri Lanka Peace Campaign website, www.srilankacampaign.org. Please report any abuse of this service.

Wednesday, September 30, 2009

தீவிரவாதத்திற்கு பொறுப்பாளிகள் யார்?

*இது ஒரு மீள் பதிவு! 2006ஆம் ஆண்டு எழுதப்பட்டது, இப்பொழுது வலைப்பதிவுகளில் நடக்கும் சம்பாஷனைகளுக்கு தொடர்புடையதாகப் படுவதால் பின்னூட்டங்களுடன் அமைந்த இப்பதிவு முன்னமே வாசிக்க கிடைக்காதவர்களின் கண்களுக்கும் கிடைக்கட்டுமே என்ற எண்ணத்தில் தூசி தட்டப்பட்டு உங்கள் முன்னால்...

செல்வநாயகி அவர்கள் தனது "வன்முறை வாழ்க்கை" என்ற பதிவில் தனது சில ஆழமான, நியாயமான, சொந்த சுய-சிந்தனைகளை இங்கு வைத்திருக்கிறார்... அதன் தொடர்ச்சியாகத்தான் இந்தப் பதிவு அதன் தாக்கத்தில் இன்று என்னை எழுதத் தூண்டியது. இதுவும் சுயமாக எழுதப்பட்டதுதான்.

நாயகி,

...சமூகம் அப்படியானவர்கள் உருவாவதற்கும் தன் பரப்பின் மீதான நிகழ்வுகள்தான் காரணமாகின்றன என்பதை உணர்ந்து கொள்ளும் முனைப்பிலும், அக்காரண அழிப்பிலும் கவனம் செலுத்தவும் உழைக்க வேண்டும்...

உங்களின் பாணியில் மிகவும் சென்சிடிவான ஒரு விசயத்தை ரொம்பவும் கவனத்துடன் அணுகி அதன் கருவினை தொட்டுச் சென்றீருக்கிறீர்கள். நன்றாக வந்திருக்கிறது.

எனக்கும் இது போன்ற எண்ண வெளிப்பாடுகள் வந்து போவதுண்டு, இங்கு அமெரிக்காவில் பள்ளிகளிலும் (சூட்டீங்), தெருக்களிலும் நடக்கும் ஸ்னைப்பர் சூட்டீங் என்றழைக்கப்படும் நிகழ்ச்சிகளின் போதும், தொடர் கொலைகளின் போதும், சமூகம் அச் சம்பவம் நடத்தியவரைப் பற்றி மேலோட்டமான, சில நேரங்களில் புனையப் பட்ட கருத்துக்களையே ஊடகங்களின் வாயிலாக கொடுத்து, தீவிரவாதமென அறிவித்து கண்டிப்பாக அச் செயலில் இறங்கியவருக்கும் சாவு நாற்காலியோ அல்லது சாவு படுக்கையையோ கொடுத்து கொளரவித்து விடுகிறது. அதற்கென்ற தீர்வு எங்கிருந்து கொண்டுவருவது என்ற பொது பிரக்ஞை இல்லாமலேயே.

இருப்பினும் ஒவ்வொரு சூழல் நடக்கும் பொழுதும் சற்று அந்த நிகழ்ச்சியை நடத்தியவரின் பின்புலத்தை ஆராய்ந்தால், அவர் அதுபோல நடந்து கொண்டதற்கு இந்தச் சமூதாயமே முழுப் பொறுப்பாய் இருப்பது வெட்ட வெளிச்சமாய் இருக்கிறது.

எனக்கும் அது போன்றே ஒவ்வொரு சமயத்திலும் தோன்றச் செய்யும், எது எதுக்கோ பணத்தை செலவழித்து ஆராய்ச்சி செய்யும் இந்த அமெரிக்கா அது போன்ற கொலையாளிகளின் பின்புலத்தை ஆராய்ந்து அதற்கு காரணமாக இருந்த இந்த சமூக அவலத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவர ஏன் தயங்குகிறது.

அது போன்ற தருணங்கள் குடும்பங்களின் இன்றியமையாத் தேவையையும், குழந்தை பருவத்தில் பெற்றோர்களின் பங்கு எந்த அளவிற்கு பிற்காலத்தில் அக் குழந்தைகளுக்கு இந்த சமூகத்தை அணுகுவதற்கு உதவியாய் இருக்கிறது என்பதனையும் எடுத்துக் கூறி மக்களிடத்தே ஒரு விழிப்புணர்வை ஊட்டுவதற்கு அருமையான தருணங்கள் அல்லவா, என எண்ணச் செய்தன.

ஆனால், அச் சமயத்தில் அது போன்ற முறையில் அணுகினால் அந்த கொலையாளிக்கு தப்பித்துக் கொள்ள சாதகமாக அமைந்து விடுமென்பதினால் அது போன்ற அணுகு முறை பயன்படுத்தப் படுவதில்லை போலும். அப்படி இருப்பினும், அது போன்றதொரு அணுகு முறை மக்களிடத்தே ஒரு சரியான விழிப்புணர்வை இட்டுச் செல்வதில்லை என்பதனை ஏன் இந்த வளர்ந்த ஜென்மங்கள் புரிந்து கொள்வதில்லை.

உதாரணத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு மேரிலாண்ட் மாநிலத்தில் நடந்த ஸ்னைப்பர் சூட்டிங்கை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஸ்னைப்பரும் நல்ல படிப்பும், பொறுப்பான பதவியும் வகித்தவர்தான் ஆனால் எந்த சூழ்நிலை அவரின் வாழ்க்கையை ஒரு பொருளற்றதாக எண்ணத் தோன்றி இப்படி ஒரு இரண்டு வாரங்களுக்கு "கொலை வெறியுடன்" அலைந்து 10க்கும் மேற்பட்டடோரை சூரையாடினார்.

அதன் பின்புலத்தில் சமூக சீர்கேடே முன் நின்றது. ஆனால், மீடியாக்கள் தனக்கு வேண்டியதை ஜோடனை செய்து, மக்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டு அமுங்கிப் போனது.

விளைவு, இன்னும் இது போன்ற உடைந்து, விலகிப் போய்க் கொண்டிருக்கக் கூடிய குடும்பம் என்கிற கட்டமைப்பு, மனிதர்கள் தனித்தனியாக தீவுகளாக வாழும் அவலம் இத்தியாதிகள். இதுவான, காரணத்தை விட்டுவிட்டு, விளைவுக்கு மட்டுமே வைத்தியம் செய்யும் தவறான அணுகுமுறை. மென்மேலும் அது போன்ற துர்சம்பவங்கள் நடைபெற காரணமாய் அமைந்துவிடுகின்றன.

தாங்கள் கூற வரும் சங்கதிக்கும், இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இருக்கும் என்றே கருதுகிறேன். எங்கிருந்து கிளம்புகிறது இந்த தீவிரவாதம்? யார் இதற்குப் பொறுப்பாளிகள்...? தீவிரவாதத்தை தீவிரவாதம் கொண்டு அணைத்துவிட முடியுமா? அல்லது தீவிரவாதத்திற்கு மிதவாதம்தான் ஒரு எதிர்த்தீயா (எது ஒரு சரியான Antidote)...?

இப்பொழுது ஒரு உலகம் தழுவிய தீவிரவாதியை சரியானதொரு அணுகுமுறையுடன் அதனை கையாளாமல் ஜஸ்ட் அவனை துடைத்தெறிந்துவிட்டால், நாளை அதுபோல நூறு தீவிரவாதி உருவாக வழி வகுக்காது என்பது என்ன நிச்சயம்? இதில் எந்த அணுகுமுறை சரியான அணுகுமுறை பயத்தை மூட்டி தற்காலிகமான முறையில் பிரச்சனைக்கு தீர்வுகாண்பதா அல்லது மொத்த சமூதாயத்தையே ஒரு விழிப்பு நிலைக்கு எடுத்துச் சென்று காரண, காரணியை கண்டறிந்து அதற்கென நிரந்தர தீர்வு காண்பதா?

கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற நியதி நிரந்தர தீர்வைக் கொணர முடியுமா? முடியும், தற்காலிகமாக அதற்கும் ஒரு கேஸ் வால்வ் போட்டு.

இப்பொழுது நடந்து கொண்டிருக்கிற தேசம் சார்ந்த நிகழ்வுகள் என்ற பிரக்ஞை அற்ற முறையில் இந்த விசயத்தை அணுகி, ஒரு தனிப்பட்ட மனிதன் என்ற நிலையில் இவ் விசயத்தை அணுகும் பொழுது எனக்கு தோன்றும் சிந்தனையே இவைகள்...

...அப்படிக் கொன்று அவர்களைச் சாதியின் பெயரால் தீண்டத்தகாதவர்கள் ஆக்கி வைத்திருந்த சமூகத்தில், அவர்களை அப்படி ஆக்கியவர்களெல்லாம் வன்முறையாளர்கள் இல்லையா?...

ஹும், யாரும் பிறக்கும் பொழுதுதே தீவிரவாதியாகி தன் வாழ்வை தொலைத்துக் கொள்ள வேண்டுமென்று கங்கனம் கட்டிக் கொண்டு பிறப்பது கிடையாதே. தன் வாழும் சமூக கட்டமைப்பே வழி நடத்தி, அவரை அந் நிலைக்கு இட்டுச் செல்கிறது எனக் கொள்ளாலாமா??

****இதுக்கு தொடர்பான மற்றுமொரு தீவிரவாதம் சார்ந்த பதிவு என்னிடமிருந்து- இந்திய துணை கண்டத் தீவிரவாதம் -தெகாவின் பார்வையில்!


பி.கு: நாயகி, இதனையே தாங்களின் பதிவை மேற்கோள் காட்டி தனிப்பதிவாக போடுவதாக உத்தேசித்துள்ளேன்... தவறாக எண்ண வேண்டாம். செய்தி போய்ச் சேர்ந்தால் சரிதான். :-)

Sunday, December 07, 2008

இந்திய துணை கண்டத் தீவிரவாதம் - தெகாவின் பார்வையில்!

சமீபகாலமா பதிவுகள் எழுதவே தோணுவதில்லை. நடைபெறும் நிகழ்வுகளை கொண்டு எனது எண்ணவோட்டத்தை சுடச்சுட பதியும் பொழுது, அந்த ஒட்டு மொத்த நிகழ்வின் பரிமாணமோ வேறு மாதிரியாக நாட்பட நாட்பட வெளிச்சத்திற்கு வருகிறது. அதுவும் இந்தியாவில் நடைபெறும் அரசியல், கலவரங்கள் சார்ந்த நிகழ்வுகள்.

அதற்கு ஒரு உதாரணமாக அண்மையில் அரசு சட்டக் கல்லூரியில் (எல்லா அரசாங்க கல்லூரிகளிலுமே என்று கூட கூறி விட முடியும்) காலங் காலமாக நடைபெற்று வரும் இந்த ஜாதிச் சண்டையின் பின்னணியை ஆர அமர கவனிக்கும் பொழுது யாருக்கும் தெரிய வந்திருக்கும். இதனில் முக்கியமாக கேமராவும் கையுமாக, ஒருவர் தற்கொலைக்காக ஒரு உயரமான நீர்த் தொட்டியின் மீது ஏறி குதித்து உயிரை மாய்த்து கொள்வதனை நேரடி ஒளிப்பரப்பு செய்வதாகட்டும், கல்லூரியில் ஒருவரை ஒருவர் மாட்டடி அடித்துக் கொண்டு அவர்களும் செத்துக் கொண்டு பார்ப்பவர்களுக்கு வன்முறை சார்ந்து இம்யுனிடி கொடுப்பதில் காட்டும் அக்கறையாகட்டும் இந்த வியாபார மீடியாக்களின் பங்கு சகிக்க முடியா அளவிற்கு சந்தை படுத்தப் பட்டிருக்கிறது. அது நம் வளர்ச்சியில் ஒரு அபாயகரமான சந்திப்பில் நின்று தவறான பாதையில் வழி நடத்தப் பட்டுக் கொண்டிருக்கிறோமென்பதற்கான ஒரு வழியாக எனக்குப் படுகிறது.
________________________________

சரி இப்பொழுது பதிவின் கருவிற்குள் செல்வோம். அவந்திகா அண்மையில் நடந்தேறிய மற்றுமொரு ரியல் லைஃப் ஷோ இதுவும் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பெற்றது "மும்பை தீவிரவாத தாக்குதலுக்குக்" காரணம் இந்திய அரசியல்வாதிகளே முழுப் பொறுப்பேற்க வேண்டுமென்றும், சரியான, நேர்மையான அரசியல்வாதிகளை இந்தியா பெற்று விட்டால் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புகள் குறையுமா என்றும் வினவி ஒரு தொடர் விளையாட்டை ஆட அழைத்திருக்கிறார்.

இந்த தீவிரவாத தாக்குதல் அல்லது உலகம் தழுவிய நவீன தீவிரவாத அணுகுமுறை சார்ந்து என் மனதில் எண்ண அலைகள் அவ்வப்பொழுது தீவிர'மாக எழுந்து வீழ்வதுண்டு. இருந்தாலும், இன்றைய பொருளாதார கட்டமைவில் நடைபெறும் சித்து விளையாட்டுக்களும், புவியிருப்பில் அமைந்திருக்கும் நாடுகளின் அரசியல் சார் நகர்வுகளையும் ஒட்டு மொத்தமாக கவனிக்கும் பொழுது, மனித பரிணாம நகர்வில் ஆண்ட்ரோஜனையும், அட்ரீனலின் ஓட்டத்தினையும் கொண்டே எடுக்கப்படும் சுயநலத்தனமான முடிவுகளின் வெளிப்பாடே இந்த நவீன தீவிரவாத விளையாட்டோ என்று என்னை ஒரு கணம் யோசிக்க வைக்கிறது.

காலம் தொட்டே மதங்களின் இருப்பும் மறுப்பும் அவைகளின் நெகிழ்வுறும் தன்மையைக் கொண்டே மக்களால் மானசீகமாக பின்பற்றப் பட்டு தலைமுறையாக கையிறக்கம் பெற்று பல நூறு ஆண்டுகள் மாற்றத்தினூடே தன்னையும் மாற்றியமைத்துக் கொண்டு மக்களின் தேவைக்கும் விட்டுக்கொடுத்து தலை தப்பி நிற்பதாகவும், லாஜிக்கலாகவே இயற்கையின் நியதிப்படியே அதுவே சாத்தியமாகவும் தோணச் செய்கிறது எனக்கு.

ஆனால் இன்றைய நிலவரப்படி அது போன்ற ஒரு பாதையில் எந்தவொரு மதத்தினையும் நாம் பரிணமிக்க போதுமான கால அவகாசம் கொடுப்பதாக தெரியவில்லை, அந்தந்த குழுமங்களும் தங்களின் "கடவுளர்களை" காப்பாற்றி அடுத்த தலை முறைக்கு விட்டுச் செல்வதற்காக போராடுவதாகப் படுகிறது. இச் சூழலில் வன்முறையும் ஒரு வாழ்வின் அங்கமாக தேவைப்படாத நாடுகளின் மீது கூட வைத்து திணிக்கப் படுகிறது.

இப்பொழுது இந்திய துணைக் கண்டச் சூழலுக்கு வருவோம். நம் புவியியல் இருப்பு உலக வரைபடத்தில் உற்று நோக்கினால் ஒரு சூடான பகுதியில் (geo-politicaly we are located in a complex place) இருப்பதனைக் பார்க்கலாம். இச் சூழலில் எந்தவொரு முடிவினையும் நம் நாடு எடுத்தோம் கவிழ்த்தோமென்று தான் தோன்றித் தனமாக எடுத்து அதனை நிறைவேற்றி பார்த்துவிட முடியாது என்றே தோன்றுகிறது.

உண்மை அப்படியாக இருக்க "கொம்பு சீவி" விடப்படுவதினால் கோபம் கொப்பளித்து 'பாடம் கற்பிக்கிறேன் பார்!' என்று மல்லுக்கு நின்றால் தொலைதூரப் பார்வையில் நாம் சந்திக்கவிருக்கும் இன்னல்கள் நம் கற்பனைக்கும் எட்டாதது. எனவே நம்மூர் அரசியல்வாதிகள் அண்டைய நாடுகளுடன் பகை பாராட்டி அதன் மூலம் ஓட்டு அரசியல் வேண்டுமானால் செய்து கொள்ளலாமே தவிர இது நடைமுறைக்கு சாத்தியப் படாத ஒன்று!

இருக்கும் வழி ஒரே வழியே! பொருளாதார வகையில் தன்னிறைவு எட்டி, தன் நாட்டிற்கு போதுமான பாதுகாப்பை, எல்லை கடந்த தீவிரவாதத்தை எல்லையிலேயே தடுத்து நிறுத்தற்குரிய வழிமுறைகளைக் கண்டு, நாட்டின் எல்லைக்குள் வாழும் எல்லாரும் நிறைவாக வாழும் ஒரு வழிவகை கண்டு, பிரிவினை வாத அரசியலை தவிர்த்து நாட்டினை எடுத்துச் செல்வதே வாழும் மக்களுக்கும் ஒரு நம்பிக்கையளிக்கும் கட்டத்தில் இருப்பதாக ஏனைய தீவிரவாத விசயங்களில் கவனத்தை செலுத்தாமல், தான் பயனுறும் உடனடித் தேவைகளில் கவனம் செலுத்த முடியும்.

நாம் வெறுமனே அரசியல்வாதிகளை குறை கூறுவதில் எந்த பொருளும் கிடையாது, என்னமோ அரசியல்வாதிகள் எங்கிருந்தோ குதித்து நம்மிடையே தோன்றிவிட்டதாக நினைத்துக் கொள்வதற்கு! அவர்கள் நம் ஒட்டு மொத்த சமூகத்தின், எண்ணவோட்டத்தின், ஒழுக்க நெறிகளின் பிரதிநிதிகளே! அது அப்படியாகக் கிடையாது என்று கூறினால், கண்டிப்பாக நம்மால் அது போன்ற பொய்யான பிரதிநிதிகளை சகித்துக் கொண்டிருக்க முடியாதல்லவா? மாற்றுத் தலைவர்களை நம் எண்ணங்களின் பிரதிபலிப்பானை தேடிக் கொண்டே இருப்போமே...! இத்தனை கோடி மக்களிருந்தும் நமக்கு கிடைப்பதெல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தாமே எனும் பொழுது என்ன தெரியவருகிறது அதிலிருந்து?

ஒண்ணு மட்டும் நிச்சயம் ஒட்டு மொத்த இந்திய மக்களின் எண்ண வோட்டம் இந்த "சுயநலப்" போக்கு சார்ந்து மாற வேண்டும், அதற்குத் தேவை என்னன்ன அப்படின்னு ஒவ்வொரு தனிமனிதனும் தீவிரமாக யோசிக்க வேண்டும், அப்படி யோசித்து தன்னைத் தானே திருத்திக் கொண்டு பொது வாழ்க்கைக்கும், ஏனைய துறைகளுக்கும் சென்றால் மட்டுமே ஒரு விடிவுகாலம் நம் நாட்டிற்கு கிட்டும் என்பது எனது எண்ணம்.

நானும் இன்னோட பங்கிற்கு ஒரு நாலு பேரை முன்னுரைக்கிறேன்...


1) தருமி

2) சுரேகா

3) சுகா

4) சந்தோஷ்



மேலும் இவங்க இல்லாம யாரெல்லாம் தானும் தன்னோட பார்வையை முன் வைக்கணுமின்னு நினைக்கிறீங்களோ கண்டிப்பா செய்ங்க. நன்றி!




பி.கு: இதுக்கு தொடர்பான மற்றுமொரு தீவிரவாதம் சார்ந்த பதிவு என்னிடமிருந்து - வன்முறை வாழ்க்கைக்கு யார் பொறுப்பு...?

Monday, October 09, 2006

***வன்முறை வாழ்கைக்கு யார் பொறுப்பு...?***

*இது ஒரு மீள் பதிவு! 2006ஆம் ஆண்டு எழுதப்பட்டது, இப்பொழுது வலைப்பதிவுகளில் நடக்கும் சம்பாஷனைகளுக்கு தொடர்புடையதாக படுவதால் பின்னூட்டங்களுடன் அமைந்த இப்பதிவு படிக்காதவர்களின் கண்களுக்கும் கிடைக்கட்டுமே என்ற எண்ணத்தில் தூசி தட்டப்பட்டு உங்கள் முன்னால்...


செல்வநாயகி அவர்கள் தனது "வன்முறை வாழ்க்கை" என்ற பதிவில் தனது சில ஆழமான, நியாயமான, சொந்த சுய-சிந்தனைகளை இங்கு வைத்திருக்கிறார்... அதன் தொடர்ச்சியாகத்தான் இந்தப் பதிவு அதன் தாக்கத்தில் இன்று என்னை எழுதத் தூண்டியது. இதுவும் சுயமாக எழுதப்பட்டதுதான்.

நாயகி,

...சமூகம் அப்படியானவர்கள் உருவாவதற்கும் தன் பரப்பின் மீதான நிகழ்வுகள்தான் காரணமாகின்றன என்பதை உணர்ந்து கொள்ளும் முனைப்பிலும், அக்காரண அழிப்பிலும் கவனம் செலுத்தவும் உழைக்க வேண்டும்...

உங்களின் பாணியில் மிகவும் சென்சிடிவான ஒரு விசயத்தை ரொம்பவும் கவனத்துடன் அணுகி அதன் கருவினை தொட்டுச் சென்றீருக்கிறீர்கள். நன்றாக வந்திருக்கிறது.

எனக்கும் இது போன்ற எண்ண வெளிப்பாடுகள் வந்து போவதுண்டு, இங்கு அமெரிக்காவில் பள்ளிகளிலும் (சூட்டீங்), தெருக்களிலும் நடக்கும் ஸ்னைப்பர் சூட்டீங் என்றழைக்கப்படும் நிகழ்சிகளின் போதும், தொடர் கொலைகளின் போதும், சமூகம் அச் சம்பவம் நடதியவரைப் பற்றி மேலோட்டமான, சில நேரங்களில் புனையப் பட்ட கருத்துக்களையே ஊடகங்களின் வாயிலாக கொடுத்து, தீவிரவாதமென அறிவித்து கண்டிப்பாக அச் செயலில் இறங்கியவருக்கும் சாவு நாற்காலியோ அல்லது சாவு படுக்கையையோ கொடுத்து கொளரவித்து விடுகிறது. அதற்கென்ற தீர்வு எங்கிருந்து கொண்டுவருவது என்ற பொது பிரக்ஞை இல்லாமலேயே.

இருப்பினும் ஒவ்வொரு சூழல் நடக்கும் பொழுதும் சற்று அந்த நிகழ்சியை நடத்தியவரின் பின்புலத்தை ஆராய்ந்தால், அவர் அதுபோல நடந்து கொண்டதற்கு இந்தச் சமூதாயமே முழுப் பொறுப்பாய் இருப்பது வெட்ட வெளிச்சாமாய் இருக்கிறது.

எனக்கும் அது போன்றே ஒவ்வொரு சமயத்திலும் தோன்றச் செய்யும், எது எதுக்கோ பணத்தை செலவழித்து ஆராய்ச்சி செய்யும் இந்த அமெரிக்கா அது போன்ற கொலையாளிகளின் பின்புலத்தை ஆராய்ந்து அதற்கு காரணமாக இருந்த இந்த சமூக அவலத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவர ஏன் தயங்குகிறது.

அது போன்ற தருனங்கள் குடும்பங்களின் இன்றியமையாத் தேவையையும், குழந்தை பருவத்தில் பெற்றோர்களின் பங்கு எந்த அளவிற்கு பிற்காலத்தில் அக் குழந்தைகளுக்கு இந்த சமூகத்தை அணுகுவதற்கு உதவியாய் இருக்கிறது என்பதனையும் எடுத்துக் கூறி மக்களிடத்தே ஒரு விழிப்புணர்வை ஊட்டுவதற்கு அருமையான தருனங்கள் அல்லாவா, என எண்ணச் செய்தன.

ஆனால், அச் சமயத்தில் அது போன்ற முறையில் அணுகினால் அந்த கொலையாளிக்கு தப்பித்துக் கொள்ள சாதகமாக அமைந்து விடுமென்பதினால் அது போன்ற அணுகு முறை பயன்படுத்தப் படுவதில்லை போலும். அப்படி இருப்பினும், அது போன்றதொரு அணுகு முறை மக்களிடத்தே ஒரு சரியான விழிப்புணர்வை இட்டுச் செல்வதில்லை என்பதனை ஏன் இந்த வளர்ந்த ஜன்மங்கள் புரிந்து கொள்வதில்லை.

உதாரணத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு மேரிலாண்ட் மாநிலத்தில் நடந்த ஸ்னைப்பர் சூட்டிங்கை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஸ்னைப்பரும் நல்ல படிப்பும், பொறுப்பான பதவியும் வகித்தவர்தான் ஆனால் எந்த சூழ்நிலை அவரின் வாழ்கையை ஒரு பொருளாற்றதாக எண்ணத் தோன்றி இப்படி ஒரு இரண்டு வாரங்களுக்கு "கொலை வெறியுடன்" அழைந்து 10க்கும் மேற்பட்டடோரை சூரையாடினார்.

அதன் பின்புலத்தில் சமூக சீர்கேடே முன் நின்றது. ஆனால், மீடியாக்கள் தனக்கு வேண்டியதை ஜோடனை செய்து, மக்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டு அமுங்கிப் போனது.

விளைவு, இன்னும் இது போன்ற உடைந்து, விலகிப் போய்க் கொண்டிருக்கக் கூடிய குடும்பம் என்கிற கட்டமைப்பு, மனிதர்கள் தனித்தனியாக தீவுகளாக வாழும் அவலம் இத்தியாதிகள். இதுவான, காரணத்தை விட்டுவிட்டு, விளைவுக்கு மட்டுமே வைத்தியம் செய்யும் தவறான அணுகுமுறை. மென்மேலும் அது போன்ற துர்சம்பவங்கள் நடைபெற காரணமாய் அமைந்துவிடுகின்றன.

தாங்கள் கூற வரும் சங்கதிக்கும், இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறாதா? இருக்கும் என்றே கருதுகிறேன். எங்கிருந்து கிளம்புகிறது இந்த தீவிரவாதம்? யார் இதற்குப் பொறுப்பாளிகள்...? தீவிரவாதத்தை தீவிரவாதம் கொண்டு அணைத்துவிட முடியுமா? அல்லது தீவிரவாதற்கு மிதவாதம்தான் ஒரு எதிர்த்தீயா (எது ஒரு சரியான Antidote)...?

இப்பொழுது ஒரு உலகம் தழுவிய தீவிரவாதியை சரியானதொரு அணுகுமுறையுடன் அதனை கையாளாமல் ஜஸ்ட் அவனை துடைத்தெறிந்துவிட்டால், நாளை அதுபோல நூறு தீவிரவாதி உருவாக வழி வகுக்காது என்பது என்ன நிச்சயம்? இதில் எந்த அணுகுமுறை சரியான அணுகுமுறை பயத்தை மூட்டி தற்காலிகமான முறையில் பிரட்சினைக்கு தீர்வுகாண்பதா அல்லது மொத்த சமூதாயத்தையே ஒரு விழிப்பு நிலைக்கு எடுத்துச் சென்று காரண, காரணியை கண்டறிந்து அதற்கென நிரந்தர தீர்வு காண்பதா?

கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற நியதி நிரந்தர தீர்வைக் கொணர முடியுமா? முடியும், தற்காலிகமாக அதற்கும் ஒரு கேஸ் வால்வ் போட்டு.

இப்பொழுது நடந்து கொண்டிருக்கிற தேசம் சார்ந்த நிகழ்வுகள் என்ற பிரக்ஞை அற்ற முறையில் இந்த விசயத்தை அணுகி, ஒரு தனிப்பட்ட மனிதன் என்ற நிலையில் இவ் விசயத்தை அணுகும் பொழுது எனக்கு தோன்றும் சிந்தனையே இவைகள்...

...அப்படிக் கொன்று அவர்களைச் சாதியின் பெயரால் தீண்டத்தகாதவர்கள் ஆக்கி வைத்திருந்த சமூகத்தில், அவர்களை அப்படி ஆக்கியவர்களெல்லாம் வன்முறையாளர்கள் இல்லையா?...

ஹும், யாரும் பிறக்கும் பொழுதுதே தீவிரவாதியாகி தன் வாழ்வை தொலைத்துக் கொள்ள வேண்டுமென்று கங்கனம் கட்டிக் கொண்டு பிறப்பது கிடையாதே. தன் வாழும் சமூக கட்டமைப்பே வழி நடத்தி, அவரை அந் நிலைக்கு இட்டுச் செல்கிறது எனக் கொள்ளாலாமா??

****இதுக்கு தொடர்பான மற்றுமொரு தீவிரவாதம் சார்ந்த பதிவு என்னிடமிருந்து - இந்திய துணை கண்டத் தீவிரவாதம் -தெகாவின் பார்வையில்!


பி.கு: நாயகி, இதனையே தாங்களின் பதிவை மேற்கோள் காட்டி தனிப்பதிவாக போடுவதாக உத்தேசித்துள்ளேன்... தவறாக எண்ண வேண்டாம். செய்தி போய்ச் சேர்ந்தால் சரிதான். :-)

Related Posts with Thumbnails