Showing posts with label முதுமை. Show all posts
Showing posts with label முதுமை. Show all posts

Sunday, March 02, 2025

ஆசானுக்கு ஓர் அஞ்சலி: A Tribute To My Beloved Mentor Dr. Ajith Kumar

இன்றைய காலை இப்படி ஒரு செய்தியுடன் விடிந்திருக்க வேண்டாம். என்னுடைய இளமை காலத்தில் என்னிடம் மண்டிக்கிடந்த பல பொதுப்புத்தி கட்டமைப்புகளை தகர்க்க போதுமான இடமளித்து மனிதனாக வார்த்துக் கொள்ள தனது வீட்டுக் கதவை திறந்து விட்டவர்; இயற்கையோடு கலந்துவிட்டார். 

முனைவர் அஜித்குமார் என்னுடைய Ph.D ஆராய்ச்சி படிப்பிற்கான ஆலோசகர். அவர் தன்னுடைய முனைவர் பட்டத்தை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திலிருத்து பெற்றவர். நான் ஒரு முறை ஏதோச்சையாக என்னுடைய முதுகலை பட்டப்படிப்பு ஆராய்ச்சி நாட்களில், டாப்சிலிப்ல் தங்கி பைசன் பற்றிய ஆய்வில் இருந்த போது, இவரை அவரோட டேராடூன் Wildlife Institute of India மாணவர்களோட வைத்து சந்தித்தேன். இவர் வனவுயிரின ஆராய்ச்சி, பேராசிரியர் என்று அவர்களுக்குள் உரையாடிக் கொண்டதை வைத்து அறிந்து கொண்டேன்.

பிறகு நானே என்னை அவரிடத்தில் அறிமுகப் படித்திக் கொண்டேன். என் ஆராய்ச்சி சார்ந்த என்னிடமுள்ள சில சந்தேககங்களை அவரிடத்தில் கேட்டு தெளிவு படுத்திக்கொண்டேன். அதுவே என்னை இவரிடத்தில் பிற்காலத்தில் கொண்டு சேர்க்கும் ஓர் சந்திப்பாக அமையுமென்று அன்று கனவிலும் நினைக்கவில்லை.

மறு ஆண்டு, கோவையில் அமைந்திருக்கும் சலீம் அலி பறவையியல் ஆராய்ச்சி நிலையத்தில் (SACON) பல Junior Research Fellowsக்கான ஆட்கள் தேடிய நிலையில் முதுகலை முடித்திருந்த நான் அந்த ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய அனைத்திந்திய தேர்வில் கலந்து கொண்டேன். அதுவே என் வாழ்வெனும் வறண்ட பூமியில் விழுந்த முதல் மழை!

தேர்வாகி இருந்தவர்களின் பட்டியலில் என்னுடை பெயரை எப்படியோ நினைவில் வைத்திருந்த அஜித் சார், அவருடைய ஆராய்ச்சிக்கென அவருடைய முதல் இரண்டு மாணவர்களில் என்னையும் ஒருவனாக இணைத்துக் கொண்டு பயணிக்க தந்தியின் மூலமாக என்னை அழைந்திருந்தார்.

அன்று எனக்கு 23 வயதாக இருந்திருக்கலாம். அவருடனான உரையாடல்கள், பயணங்கள், கேளிக்கையான நேரங்கள், அடர்ந்த மழைக்காடுகளிக்கிடையே நட்சத்திரங்கள் கொத்தாக தொங்கி மினுமினுக்கும் நீண்ட இரவின் மடியில் முகாம் தீ எரிய ஓல்ட் மாங்குடன் உலகைப் பற்றியான பொது உரையாடல்கள் இன்றும் பசுமையாக என்னுள் உறைந்து கிடக்கிறது..

இது அத்தனையும் எனக்கு அறிமுகப் படுத்தி கொடுத்த எனது ஆசான் NO MORE. எனக்கே இது வரையிலும் வாழ்ந்த அத்தகைய வாழ்வின்பம் இத்தனை மன நிறைவை கொடுத்திருக்கிறது என்றால், அவருக்கு எத்தகைய நிறைவை கொடுத்திருக்கக் கூடும் என்று உணர முடிகிறது. I am sure he must have lived the fullest and given utmost of his best! Such a great human being ever I come across. Long live his scientific achievement in the academic arena.

An add on - I remember this day, after a long gap one day I called you and you took the call like I just spoken to you a half hour before without any void and allowed me to update, and we discussed about Indian political climate how rapidly it is plunging into abysmall darkness. Fondingly you pointed out that you still crack jokes about me in field trips that how I came up with "Menstrual Symptoms" theory in men and pointed out to me how hilariosly true it is! நன்றி! என்றென்றும் உங்கள் நினைவுடன் - அ. பிரபாகர்.

P.S: என்னுடன் தங்கி அஜித்குமார் சாருக்கு கீழ் மற்றுமொரு ஆராய்ச்சி மாணவராக இயங்கிய முனைவர் உமாபதி எழுதிய பதிவில் இரங்கல் பின்னூட்டமாக எழுதியது ...

I have no words to express my gratitude to my advisor - friend Dr Ajith Kumar, he was one of  my earliest times inspiration who helped me to shape myself up to be the person who I am today. I am so fortuanate and proud to call myself I was one of his first hatchlings of Ph.Ds.

I have so much to share about our fondings during those days! My Ph. D colleague Dr Govindhaswamy Umapathy has already elaboarated his academic achievements. He was a prominent and unavoidable icon in the field of Indian primatology and widlife biology; a rainforest conservation expert with profound knowledge of its ecology, with outstanding floral and faunal field identification skills. My deepest condolences to his family, friends, colleagues and I feel terribly sorry that I couldn't be there to bid final good bye! 😪🫡🙏🏽



Art Courtesy: Dr Gokula Varadharajan

Sunday, February 26, 2023

கலைஞரின் சற்கர நாற்காலியும் கமலின் ஏகாடியமும்!

கமலோட சக்கர நாற்காலி ஏகடியம் அவருக்கேயான மிக இயல்பான வளர்ப்பிற்கு பின்னான சிறுமையின் எச்சம். அவரோட நிதானத்தையும் தாண்டி இப்படியான வன்மம் பொங்கி வழிகிறது என்றால், இன்னும் சொற்களாக பேசப்படாத, வக்கிர எண்ணங்கள் எவ்வளவு இருக்கக் கூடும்?

அம்பேத்கர், காந்தி, பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் எதனை உணர்ந்து கொண்டதால் சாதரணர்களைக் காட்டிலும் பன்மடங்கு உழைக்க தழைப்பட்டார்கள்? மரணித்த நொடிகளுக்கு முன்பு கூட அய்யோ செய்ய இன்னும் இவ்வளவு இருக்கும் போது, பாதியிலேயே விட்டுவிட்டுச் செல்லும் படி ஆகிவிட்டதே என்ற வேதனையே அவர்களிடையே தங்கியிருக்கக் கூடும்.

பெரியாரும், கலைஞரும் அந்தப் பரிதவிப்பை தனது உடல் உபாதைகளைப் புறந்து தள்ளி களத்தில் நின்றதே அதற்குச் சான்று. ஒரு தனி மனித வளர்த்தெடுப்பு என்பது, எத்தனை பிரயத்தனங்களை உள்ளடக்கியது? தொடர் பயணம், சமூக உள்வாங்கல், அது தொடர்பான ஊடாடல்கள், போராட்டக் களங்கள், வரலாற்று வாசிப்பு, இலக்கிய அறிமுகங்கள், அது தொடர்பான எழுத்துப் பணி என்று எத்தனை அனுபவம் அவர்களால் சேகரிக்கப்பட்டிருக்கும். அந்த நிறை மனிதர்களின் சமூகம் சார்ந்த ஆழ்ந்த புலமையை, தான் நேசிக்கும் மக்களோட பகிர்ந்து கொள்ள ஒவ்வொரு மணித்துளிகளையும் செலவு செய்திருக்கிறார்கள் என்றால், எத்தனை ஆழ்ந்த மனித நேய passion இருந்திருக்க வேண்டும்.

இத்தனை அறிவும் ஒருவர் மரணிக்கும் போது அவரோடு சேர்ந்தே பேசப்படாத, வழங்கப்படாத பகுதிகளும் மறைந்து விடுகிறது. காலத்தின் நிலையின்மை உணர்ந்தவன் எப்படி அதனை வீணடிப்பான்? எனவே, ஒரு மனிதரின் நினைவு தவறும் நொடிகளுக்கு முன்பு வரை கூட, ஏரணத்தோடு விசயங்களை தொடர்பு படுத்தி பேசும் திறன் இருக்கும் வரையிலும் அந்த மூளை அந்தச் சமூகத்திற்கு தேவைதான். 

சக்கர நாற்காலியில் அமர்ந்த படியே ஸ்டீவன் ஹாகின்ஸ் போன்ற அறிவியலாளர்களின் வாழ்நாள் சாதனைகளையும் அறிந்தவரே கமல். புரியாமல் எல்லாம் கலைஞர் பொருட்டு பேசி இருப்பார் என்று நான் நம்பத் தயாரில்லை. கமலையொத்த குடும்பங்களின் பேச்சு முழுக்க தமிழ்நாட்டின் இன்றைய நிலைக்கு யார் காரணம் என்று, குறுக்கி வந்தடைந்த புள்ளிதான் இந்தத் திராவிடத் தலைவர்கள். அவர்களின் சப்கான்ஸியஸ் மனம் எப்பொழுதும் இவர்களைச் சுற்றியே இயங்குகிறது.

கமல் பகடியாக பேசியது போல் மற்றுமொரு சிறுமைத் தனமே மோடியை வைத்து, கலைஞரின் இறுதி நாட்களில் அவர் தோளின் மீது கை வைத்து நலம் விசாரிப்பது போல, கலைஞரை திகிலூட்டுவதாக நினைத்து தங்களது வக்கிரப் பகுதியை அவர்கள் சொரிந்து கொண்டதும் என்பேன். அந்தப் புகைப்படத்தை சற்றே உள்வாங்கி ஆராய்பவர்களுக்கு புரியும், துரைமுருகன், கலைஞர் உடற்மொழியை கவனித்தல் பொருட்டு. ஒருவர் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது, ஏதாவது பேசி அது ஒரு மகிழ்வான தருணத்திற்கு இட்டுச் சென்றிருந்தால், அது மோடியின் தோள் தொடுதலுக்கான நட்பு உணர்ச்சி போல் வெளிப்பட்டிருக்க வாய்ப்புண்டு. ஆனால், நான் இந்தச் சூழலை ஒரு திட்டமிட்ட எக்ஸ்ப்ரசனாகப் பார்க்கிறேன்.

கமலின் சக்கர நாற்காலி ஏகடியத்திற்கு இணையானதே மோடி குழாமின் தோள் தொடுதலும். இங்கு மறைமுகமாக இவர்கள் அனைவரையும் இயக்குவது சித்தாந்தச் சமரே!

Friday, February 26, 2021

கமலஹாசன் சிறுமையின் எச்சம்: Wheelchair Speech

கமலோட சக்கர நாற்காலி ஏகடியம் அவருக்கேயான மிக இயல்பான வளர்ப்பிற்கு பின்னான சிறுமையின் எச்சம். அவரோட நிதானத்தையும் தாண்டி இப்படியான வன்மம் பொங்கி வழிகிறது என்றால், இன்னும் சொற்களாக பேசப்படாத, வக்கிர எண்ணங்கள் எவ்வளவு இருக்கக் கூடும்?

அம்பேத்கர், காந்தி, பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் எதனை உணர்ந்து கொண்டதால் சாதரணர்களைக் காட்டிலும் பன்மடங்கு உழைக்க தழைப்பட்டார்கள்? மரணித்த நொடிகளுக்கு முன்பு கூட அய்யோ செய்ய இன்னும் இவ்வளவு இருக்கும் போது, பாதியிலேயே விட்டுவிட்டுச் செல்லும் படி ஆகிவிட்டதே என்ற வேதனையே அவர்களிடையே தங்கியிருக்கக் கூடும்.
பெரியாரும், கலைஞரும் அந்தப் பரிதவிப்பை தனது உடல் உபாதைகளைப் புறந்து தள்ளி களத்தில் நின்றதே அதற்குச் சான்று. ஒரு தனி மனித வளர்த்தெடுப்பு என்பது, எத்தனை பிரயத்தனங்களை உள்ளடக்கியது? தொடர் பயணம், சமூக உள்வாங்கல், அது தொடர்பான ஊடாடல்கள், போராட்டக் களங்கள், வரலாற்று வாசிப்பு, இலக்கிய அறிமுகங்கள், அது தொடர்பான எழுத்துப் பணி என்று எத்தனை அனுபவம் அவர்களால் சேகரிக்கப்பட்டிருக்கும். அந்த நிறை மனிதர்களின் சமூகம் சார்ந்த ஆழ்ந்த புலமையை, தான் நேசிக்கும் மக்களோட பகிர்ந்து கொள்ள ஒவ்வொரு மணித்துளிகளையும் செலவு செய்திருக்கிறார்கள் என்றால், எத்தனை ஆழ்ந்த மனித நேய passion இருந்திருக்க வேண்டும்.
இத்தனை அறிவும் ஒருவர் மரணிக்கும் போது அவரோடு சேர்ந்தே பேசப்படாத,
வழங்கப்படாத பகுதிகளும் மறைந்து விடுகிறது. காலத்தின் நிலையின்மை உணர்ந்தவன் எப்படி அதனை வீணடிப்பான்? எனவே, ஒரு மனிதரின் நினைவு தவறும் நொடிகளுக்கு முன்பு வரை கூட, ஏரணத்தோடு விசயங்களை தொடர்பு படுத்தி பேசும் திறன் இருக்கும் வரையிலும் அந்த மூளை அந்தச் சமூகத்திற்கு தேவைதான்.
சக்கர நாற்காலியில் அமர்ந்த படியே ஸ்டீவன் ஹாகின்ஸ் போன்ற அறிவியலாளர்களின் வாழ்நாள் சாதனைகளையும் அறிந்தவரே கமல். புரியாமல் எல்லாம் கலைஞர் பொருட்டு பேசி இருப்பார் என்று நான் நம்பத் தயாரில்லை. கமலையொத்த குடும்பங்களின் பேச்சு முழுக்க தமிழ்நாட்டின் இன்றைய நிலைக்கு யார் காரணம் என்று, குறுக்கி வந்தடைந்த புள்ளிதான் இந்தத் திராவிடத் தலைவர்கள். அவர்களின் சப்கான்ஸியஸ் மனம் எப்பொழுதும் இவர்களைச் சுற்றியே இயங்குகிறது.
கமல் பகடியாக பேசியது போல் மற்றுமொரு சிறுமைத் தனமே மோடியை வைத்து, கலைஞரின் இறுதி நாட்களில் அவர் தோளின் மீது கை வைத்து நலம் விசாரிப்பது போல, கலைஞரை திகிலூட்டுவதாக நினைத்து தங்களது வக்கிரப் பகுதியை அவர்கள் சொரிந்து கொண்டதும் என்பேன். அந்தப் புகைப்படத்தை சற்றே உள்வாங்கி ஆராய்பவர்களுக்கு புரியும், துரைமுருகன், கலைஞர் உடற்மொழியை கவனித்தல் பொருட்டு. ஒருவர் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது, ஏதாவது பேசி அது ஒரு மகிழ்வான தருணத்திற்கு இட்டுச் சென்றிருந்தால், அது மோடியின் தோள் தொடுதலுக்கான நட்பு உணர்ச்சி போல் வெளிப்பட்டிருக்க வாய்ப்புண்டு. ஆனால், நான் இந்தச் சூழலை ஒரு திட்டமிட்ட எக்ஸ்ப்ரசனாகப் பார்க்கிறேன்.
கமலின் சக்கர நாற்காலி ஏகடியத்திற்கு இணையானதே மோடி குழாமின் தோள் தொடுதலும். இங்கு மறைமுகமாக இவர்கள் அனைவரையும் இயக்குவது சித்தாந்தச் சமரே!

Sunday, November 15, 2020

Eternity (A Peruvian movie 2017) : முடிவற்ற காலம்!

 ஒரு திரைப்படத்தைப் பார்த்தால் அந்தப் படத்தினுடைய கதாபாத்திரங்கள், கடைசியாக நம்முடன் கூடவே வாழ்ந்து போனவர்களாக உணர வைக்கத்தக்க வகையில் வடிவமைக்கப் பட பல காரணிகள் தேவைப்படுவதாக உள்ளது. திரைப்படத்தின் சூல், திரைக்கதை, படமாக்கப்படப் போகும் இடம், கதாப்பாத்திரங்கள் மற்றும் இயக்குனர்.

என்னுடைய விட்டேத்தியான ஞாபக சக்தி திறமைக்கு ஓர் ஆறு மாதத்திற்கு முன்பாக பார்த்த படத்தின் கருவோ, அதன் பெயரோ கூட நினைவில் நிறுத்த முடியாத ஆள். பார்த்த படத்தையே, கடல் மணலைப் போல கொட்டிக் கிடக்கும் திரைப்படங்களிக்கிடையே மீண்டும் போஸ்டரைப் பார்த்து ஏமாந்து போய், தேர்வு செய்து பத்து நிமிடங்கள் ஓட விட்டுப் பார்க்கப் பார்க்க பார்த்த மாதிரியே இருக்கே என்று வெளி வந்து விடும் அளவிற்கே உண்டு.
மேலும் படங்கள் கிடைக்கிறதே என்று துணிந்து க்ளிக்கி விடும் ஆளும் கிடையாது. பனி படர்ந்த மலைப்பாங்கான வெளி, பெரிய ஏரி, வானம் தொட்டு நீளும் பாலை அல்லது கடல் அதில் ஒரு படகு... இப்படியாக போஸ்டர் அமையும் படி இருந்தால் அந்த தூண்டிலை கண்டிப்பாக கடிக்கும் ரகம் எனது ரசனை.
அப்படியாக இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு போஸ்டர் கண்ணில் சிக்கியது. அந்தப் படத்தை பார்த்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. படத்தின் கதாபாத்திரங்களான ஃபாக்சியும் (நிலா), வில்காவும் (கதிரவன்) பெரு நாட்டின் ஆன்டெஸ் மலை உச்சியில் அவர்களுடைய குடிசையோட மனதை விட்டு அகல்வேணா என்று அடம்பிடித்தபடி அமர்ந்து விட்டார்கள். வேறு வழியே தெரியாமல் இதை எழுதத் துணிகிறேன்.
படத்தின் பெயர் எடெர்னிடி (Eternity) 2017லில் வெளி வந்த படம். படத்தினுடைய கதாபாத்திரங்கள் இரண்டு பேருமே அய்மாரா மொழி பேசும் பழங்குடி முதியோர்கள். முதியோர்கள் என்றால் தங்களது அந்திமத்தின் கடைசி நாட்களை (உண்மையிலும்) வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அந்த இருவரைத் தவிர படத்தில் நான்கு செம்மறியாடுகள், ஒரு லாமா, நாய் உண்டு. இவைகளைத் தவிர்த்து அவர்களோடு நாமும் சேர்ந்து உண்டு, உறங்க, சும்மா கைகளாலேயே கருங்கற்களை கொண்டு அடுக்கப்பட்ட சுவரையும், கோரைப் புற்களால் வேயப்பட்ட கூரையுமான ஒரு குடிசை உண்டு. பின்பு வீட்டை விட்டு வெளியே வந்தால் பச்சைப் பசேல் என நெஞ்சில் ஒட்டும் கண்ணுக்கெட்டிய தூரம் கொண்ட ஈரமான புல்வெளி மேடும், பனிகாலத்தில் அதே மலைகள் உறைபனியை போர்த்தியுமென கதை சொல்லும்.
அந்தத் தம்பதிகளுக்கிடையேயான உரையாடல் எந்த ஒரு மிகைப்படுத்தலுமில்லா மெல்லிய ஓடையைப் போல நகர்கிறது. தங்களைச் சுற்றி பரந்து விரிந்துள்ள இயற்கையை அவர்களுடைய வாழ்வின் ஒரு பகுதியாக, கூடவே சுவாசித்து, உண்டு, உறங்கி எழும் ஏனைய உறுப்பினராக கையாள்கிறார்கள்.
ஒரு ஹைலைட் சொல்கிறேன்- கணவரான வில்கா, சேகரித்த தானியத்தை தனது மனைவியான ஃபாக்சியுடன் தூற்றிக் கொண்டிருக்கிறார். நிற்க முடியாமல் நின்று கொண்டு ஒரு கையால் தானியம் நிரம்பிய மடித்துணியை பிடித்த வாரே, மறு கையால் அள்ளி அள்ளி காற்றுப் பட போடுவார். அப்பொழுது, காற்று குறைந்து விடும். வில்கா உன்னால் தான் காற்றை வரவழைக்க முடியுமே, செய்யேன் என்று கூறுவார். சரி, வில்கா உட்காருங்க என்று கூறியபடியே, பெருக்க வைத்திருந்த துடைப்பத்தை காற்றில் சுழற்றி தூரத்தில் இருக்கும் மலையைப் பார்த்து "மிஸ்ட் அழகி வந்திருக்கா வலிமையான காற்றே ஆடிப்பாடிக்கொண்டு வா" என்று ஆடிப்பாடிக் கொண்டே ஃபாக்சி காற்றை அழைப்பாள்... சற்று நேரத்தில் அந்தத் திசையில் நல்ல வேகமான காற்று வீசும். இதில் என்ன சிறப்புன்னா, அந்த ஃப்ரேம் ஒரே டேக்கில் எடுத்தது போலவே இருக்கும். காற்று கூட அவர்களுடன் பேசிப் புழங்குவதைப் போன்ற ஒரு தோற்றத்தை நம்மிடம் கடத்துவார்கள்.
ஆன்டெஸ் மலையின் 15 ஆயிரம் அடி உயரத்தில் வைத்து படமாக்கப்பட்டிருக்கிறது. வேறு எந்த மக்களின் நடவடிக்கைகளும் காணவில்லை. வயதான காலத்தில் அந்த தட்பவெப்ப சூழலுக்கு தகுந்தவாறு அங்கு வாழ்வதில் அவர்களுக்கு பிரச்சினை மேல் பிரச்சினையாகுகிறது. தன்னுடைய ஒரே மகன், நகரத்திற்கு சென்று விடுகிறான். நகரம் அவனை மொழியை மறக்கச் செய்து விழுங்கிவிட்டதாக அரற்றுகிறார்கள். ஏன் நம்மை இப்படி தனியாக தவிக்க விட்டுவிட்டுச் சென்று விட்டான், என்ன தவறு இழைத்தோமென்று அவர்களின் உரையாடலுக்கிடையே புலம்பலாக வெளிப்படுத்துகிறார்கள், மகனின் பிரிவை. வருவான் என்ற நம்பிக்கையும், அவ நம்பிக்கையுமென எதிர்பார்ப்பில் நம்மையும் கூடவே அமர வைத்து தூரத்து வெளியைப் பார்க்க வைக்கிறார்கள்.
பிரச்சினையின் தீவிரமாக தீக்குச்சிகள் தீரப்போகிறது. ஃபாக்சி தினமும்
தீக்குச்சிகளை எடுத்து எண்ணி எண்ணிப் பார்த்துவிட்டு வில்காவிடம் புலம்பி வருகிறாள். ஒரு நாள் தீர்ந்தும் விடுகிறது. வேறு வழியில்லாமல், தனக்கு வயதாகிவிட்டது என்று மறுத்தாலும் பக்கத்து ஊருக்கு வில்காவை அனுப்பி வைக்கிறாள். அவரும் லாமாவை துணைக்கழைத்துக் கொண்டு செல்லும் வழியில், முடியாமல் சுருண்டு விழுந்து விடுகிறார். கணவர் இரவுதட்டியும் வீடு திரும்புவதற்கான எந்த அடையாளமும் இல்லாததால், ஃபாக்சி தேடிக்கொண்டு செல்கிறாள். பிறகு இருவருமாக தள்ளாடி வீடு வந்தடைகிறார்கள்.
வந்து பார்த்தால், நாய் வேறு காணாமல் போனச் சூழலில் செம்மறியாடுகள் அனைத்தும் ஓநாயால் கொல்லப்பட்டு கிடக்கிறது. இருவரும் அரற்றி அழுகிறார்கள். அந்த ஃபாக்சியின் அழுகுரல் நம்மை எங்கோ கரையானைப் போல அரித்துக் கொண்டே இருக்கிறது. பிறகு தீக்குச்சிகளும் தீர்ந்து போன நிலையில் நெருப்பை காப்பாற்றி வைக்க சிறு ஓட்டில் சேமித்து வைத்த படி தூங்கச் செல்கிறார்கள். எதிர்பாரா விதத்தில் இரவில் தீ பரவி குடிசையும் எரிந்து நாசமாகி விடுகிறது.
பக்கத்தில் கால்நடைகளுக்கு போட்டு வைத்திருந்த குடிசைக்கு நகர்கிறார்கள், எப்படி கணவர் நோய் வாய்ப்பட, மகனாக வளர்த்த ஒரே லாமாவய் பசிக்கும் கணவருக்காக பலியிடத் துணிகிறாள் என்பதும், அதனை சமைத்து அவருக்கு ஊட்டுவதற்கு முன்பாக அவரின் கைகால்கள் காற்றில் உதறியவாரு உயிர் பிரிகிறது என்பதெல்லாம் நாமும் கூடவே அமர்ந்து அனுபவிப்பதைப் போல அவ்வளவு நேர்த்தியாக படைத்திருக்கிறார்கள்...
படத்தில் வந்த முதியோர்கள் இதற்கு முன்னாள் வேறு எந்த படத்திலும் நடித்ததாகத் தெரியவில்லை. அந்த முகங்கள் அந்தப் பள்ளத்தாக்கின் ஒரு பகுதியென அந்த முகமே கதை சொல்கிறது. இசையா மூச்! படத்தில் தாத்தா இசைக்கும் ஒரிரு புல்லாங்குழல் காட்சிகளைத் தவிர இசைக்கு வேலையே இல்லை. எப்படி இந்தப் படத்தை அந்த லெகேஷனில் வைத்து படமாக்கி இருப்பார்கள் என்பதே ஓர் ஆராய்ச்சிக்குறிய விசயம். அழுகாச்சிப் படம்தான். துணையோட பாருங்க, வாழ்வின் பல முரண்கள் கண் முன்னே துகள்களாக உதிர்வதை உணர்வீர்கள்.
ஃபாக்சி, வில்கா பெயர்கள் ஆன்டெஸ் மலைகளைத் தாண்டி நம் காதுகளில் பல நாட்கள் ரீங்காரித்துக் கொண்டிருப்பது உறுதி. A simply awesome movie!

Sunday, January 28, 2018

அப்பாவின் நினைவுச் சுவடுகள்!


என் அப்பாவின் வயது 78. எனக்கும் அவருக்குமான உறவு 1986க்கு பிறகு நண்பர் என்ற முறையிலேயே தொடர்ந்தது. அவர் என்னை ஒரு நண்பர் அளவிற்கு உயர்த்திக் கொண்ட பொழுது எனக்கு வயது 18. போன வருட இறுதியில் நான் வட அமெரிக்காவில் மகிழுந்தின் உதவியுடன் ஒரு சாலைப் பயணம் மேற்கொண்டேன். மொத்த தூரம் 4120 மைல்கள். ஒன்பது மாநிலங்களின் வழியாக அட்லாண்டாவில் இருந்து அரிசோனா மாகாணம் வரையிலுமாக அமைந்தது.

அந்த பயணத்தின் திரும்பலின் போது டெக்சஸ் மாநிலத்தில் ஒரு விடுதியில் இரவு பத்து மணிக்கு அவருடைய அலைபேசி அழைப்பு வந்தது. என்றைக்கும் இல்லாத அளவில் அன்று மிகத் தெளிவாக ஓர் ஒன்றரை மணி நேரம் என்னோடு உரையாடினார். எப்பொழுதும் போலவே அது ஊர் பற்றிய செய்தி பரிமாறல்களிலிருந்து சமகால அரசியல் நிலவரம் வரைக்கும் நீண்டது. அதுவே என் மனதில் கடைசியாக அவர் விட்டுச் சென்ற அழுத்தமான உரையாடலாக அமையுமென்று நான் கிஞ்சித்தும் எண்ணவே இல்லை.

அப்பொழுது என்னை கடிந்து கொள்ளும் விதமாக நீ ஊருக்கு வந்து என்னைப் பார்த்து விட்டு இந்த சாலைப் பயணத்தை நிகழ்த்தி இருக்கலாம் என்று கூறியிருந்தார். நானும் வரும் மார்ச் மாதம் போல் வருகிறேன் என்று உறுதி அளித்தேன். மீண்டும் ஜனவரி ஒன்றாம் தேதி என்னை அழைத்து "பிரபாகர், புத்தாண்டு வாழ்த்துக்கள்" என்று தெரிவித்தார். எனக்கு மனதுக்குள் என்னவோ பிசைந்தது. ஏனெனில் அம்மா அவரின் உடல் நிலை பொருட்டு சமீப காலமாக கூறி வரும் செய்திகள் கலக்கத்தையே ஏற்படுத்தி வந்தன.

இந்த நிலையில் அவருடைய புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த நிலையில் கொஞ்சமே கரிசனத்துடன் இழுத்து, அப்பா, இந்த வருடமும் அனைத்து வருடங்களை போலவே நல்ல செய்திகளுடன் நகர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன் என்று கூறினேன். அதற்கு ஒரு சிரிப்பு மட்டுமே பதிலாக அளித்தார். இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி திங்கள் கிழமை எந்த முன் அறிவிப்பும் அவருக்கு கொடுக்காமல் காலன் அவர் உயிரைப் பறித்துக் கொண்டான். 

அவரின் மரணம் எனக்கு ஈடு செய்ய முடியா ஒரு பேரிழப்பு. என்னை அலைபேசியில் துரத்தி இனிமேல் யார் அழைத்து பேசுவார் அப்பா! செய்தி எனக்கு கிடைக்கும் பொழுது இரவு மணி 1.30. அவர் இருக்குமிடத்தில் இருந்திருந்தால் இன்னுமொரு பத்து வருடங்கள் கூடுதலாக இருந்திருக்கக் கூடும். ஆனால், செய்தி கேட்ட மாத்திரத்தில், என்னால் எதுவுமே இயக்க முடியாத நிலை. அது ஒரு பெரிய அவஸ்தை! கரம்பக்குடி போன்ற ஊரில் இரவு மருத்துவர்களோ, 24 மணி நேர மருத்துவமனைகளோ இல்லாத ஓர் இடத்தில் எது போன்ற முதல் வைத்தியத்திற்கு பரிந்துரைக்க முடியும். கையறு நிலை! தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு அதிர்ச்சியில் உறைந்து நிற்பதைத் தவிர ஒன்றுமே ஓடவில்லை. 

அடுத்த பதினைந்து நிமிடங்களில் அவரின் மரணம் நிச்சயப்படுத்தப்பட்டது. வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் கொடுக்காமல் நானும் எனது சகோதரரும் கிடைத்த ஃப்ளைட்டில் ஏறி ஊர் செல்வது என்று முடிவாயிற்று. இந்த ஊர் திரும்பல் மூன்று வருடங்களாக நான் அவருக்கு கொடுக்க வேண்டி நிலுவையில் இருந்த பயணம். இப்படியான ஒரு சூழலில் ஊர் திரும்புவேன் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.

எனது சகோதரர் என் கூடவே பயணித்ததால் ஒருவருக்கொருவர் சற்றே ஆறுதலாகவும், நிறைய நினைவோடைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் ஏதுவாக அமைந்தது.

அப்பாவைக் காத்திருக்க வைத்து புதன் கிழமை காலையில் ஐஸ் பெட்டியில் தூங்கிக் கொண்டிருக்கும் கோலத்தில் கண்டோம். அமர்ந்திருக்கும் மக்களுக்கிடையே ஏதேதோ சொல்ல வேண்டுமாய் தோன்றியது. ஹீ வாஸ் எ க்ரேட் மேன், லிவ்ட் வெல். மார்ச் மாதத்திற்கு முன்பாகவே முந்திக் கொண்டாரே என்று அங்கலாய்ப்பதைத் தவிர வேறு வார்த்தைகள் தொண்டையில் சிக்கி முடிச்சாகி விட்டது.

மரணித்த காலை அவருக்கு எப்பொழுதும் போலவே ஒரு சுறுசுறுப்பான காலையாகத்தான் இருந்திருக்கிறது. அவருடைய மொபெட் ரைட், ஊருக்கு தரிசனம், தெருவிற்குள் சென்று சில பேருடனான சந்திப்பு என்று முடித்துக் கொண்டு, அம்மாவிற்கு இட்லி கரைத்துக் கொடுத்து விட்டு அடுத்த பத்து நிமிடத்திற்குள் ஓரிரு தொண்டை செருமல்களுடன் தன்னுடைய பூமியப் பயணத்தை நிறைவிற்கு கொண்டு வந்திருக்கிறார். அவர் ஆசை பட்டது போலவே யாருக்கும் சுமையாக இல்லாமல், நான் எப்பொழுதோ ஏதோ ஒரு சூழலில் எழுதிய இந்த கவிதையைப் போல அவருடைய விடை பெறுதலும் நடந்தேறி இருக்கிறது.

 ...பூப்பதும் காய்ப்பதும் உதிர்வதும்
முப்பருவமெனினும்
உதிர்வதை
கனமற்றதாக்கலாம்
பெரு மரத்து
பறவையொன்றின்
ஒற்றை இறகு
சப்தமற்று
தரையிறங்குவதைப் போல!

அப்பா எங்களை வா, போ என்று அழைக்குமளவிற்கு நண்பர்களாக இருக்க, நம்ப வைக்க எது போன்ற நடவடிக்கைகள் செய்தாய் அப்பா. முப்பது வயது பிள்ளைகளாக வளர்ந்து நின்றாலும் மிதி வண்டியில் வைத்து மருத்துவரிடம் அழைத்து சென்றாயே! அதெப்படி முடிந்தது உனக்கு. நீ அதிகம் பள்ளியில் படித்தவனில்லை. பெரிய வாசிப்பாளனுமில்லை. பின்பு எப்படி இத்தனை ஞான ஊற்று உன்னில் பிரவாகமெடுத்தது, அப்பா!

அப்பா உனக்கு நினைவிருக்கிறதா? நான் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த நிலையில் நீ கூறினாயே ”தம்பி, தோலுக்கு மேலே வளர்ந்திட்ட இனிமே உன்னய தட்டி வளர்க்க முடியாது, உன்னுடைய செயல்களுக்கு நீயே பொறுப்பு” என்று... கல்லூரியில் முதல் வருடம் முதல் நாள் கொண்டு போய் என்னை விட வந்த அன்று விளையாட்டுத் துறை கட்டட வாசலில் அமர்ந்து கட்டிக் கொண்டு சென்ற இட்லி பொட்டலத்தைப் பிரித்து எனக்கும் உனக்குமாக வைத்துக் கொண்டே கண்களில் கண்ணீர் துளிர்க்க சாப்பிட்டாயே ஞாபகமிருக்கிறதா? அப்பா.

முதுகலை முடித்து காடோடியாக நான் வாழ்ந்து ஒரு வெள்ளைக்காரியை மணம் முடிக்க எண்ணி அவளை நம்மூர் அழைத்து வந்து உன்னிடம் அறிமுகப் படுத்தும் பொழுது வீடே எதிர்த்துக் கிடக்கையில் நீ என்னை தனியாக அழைத்துச் சென்று தோள் மீது கை போட்டு, "பிரபாகர், நீ இனிமேல் சிறுவன் கிடையாது நன்கு படித்து, நாலும் யோசிக்கத் தெரிந்தவன், எடுக்கும் முடிவுகள் அனைத்திற்கும் நீயே பொறுப்பேற்று எடுத்து நடத்துவாய் என்பதும் எனக்குத் தெரியும். உன்னை நீயே பார்த்துக் கொள்" என்று விலகி நின்று அழகு பார்த்தாயே அப்பா! எப்படியய்யா அது!

நான் கடந்து வந்த பாதையில் உன் உள்ளத்தை சிதைக்கும் எத்தனையோ இடர்பாடுகளை வழங்கிய போதும் அத்தனை வாசிப்பற்ற நீ உன் வழியாக வந்தவன் நான் என்பதால் என் மேல் அத்தனை ஆதிக்கம் செலுத்தாமல் என் வளர்ச்சி அனுபவ சேகரிப்பின் வழித்தடங்களின் ஓர் ஓரத்தில் நண்பனாகவே மட்டுமே நின்று கவனித்துக் கொண்டிருந்தாய்.

உனது எட்டு வயதில் உனது தகப்பன் பொருளாதாரப் பொறுப்பிலிருந்து நழுவிய பொழுது, அந்த குடும்பத்தை உனது தோள்களில் சுமக்க எண்ணி உனது படிப்பை துறந்தாயே அன்றைய வாழ்க்கை கல்வி தானோ உனது பிள்ளைகளுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று பிரிதொரு நாளில் அனைத்தையும் கொடுத்து தள்ளி நின்று பார்க்க கற்றுத் தந்தது. உனது சக்திக்கும் மேற்கொண்டு ஒரே நேரத்தில் இரண்டு பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்பி கட்டணம் கட்ட தடுமாறிய நேரத்தில், ஒரு நாள் நீ எனக்காக பணம் எங்கோ கேட்டு வாங்கச் சென்ற இடத்தில் கன்னத்தில் அறை வாங்கிப் பணத்தைப் பெற்று வந்ததாக கேள்விப்பட்டேனே அப்பா! அத்தனை நெஞ்சுறுதியா அப்பா உனக்கு.

பிறகு வந்த காலங்களில் லட்சங்களில் நீ புரண்டாலும், பணத்தை வைத்து பணம் பண்ணும் பேராசையோ, சொத்துக்களைக் குவிக்கும் எண்ணமோ இல்லாமல், கொடுத்த இடத்தில் திரும்பக் கூட வாங்கத் தெரியாமலேயே வாழ்ந்து முடித்த பெருந்தன்மை எப்படி உனக்கு கைவரப் பெற்றது, அப்பா.

உனை நான் கொண்டாடுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அதிலொன்று உனை வைத்துக் கொண்ட சமூகத்தில் அத்தனை எளிதாக பணம் பண்ணுவதற்காக குறுக்கு வழிகள் இருந்த போதும்,
நீ அந்த வழிகளை நம்பாமல் கடின உழைப்பின் மீது எப்படி இத்தனை பற்று வைத்து உழைத்தாய் என்பதுதான் இன்று வரைக்கும் எனக்கு இருக்கும் ஆச்சர்யம். நீ பழகாத தொழில்தான் என்ன அப்பா!


நீ உழைத்த உழைப்பு உனது குடும்பத்தை மட்டும் மாற்றியமைக்கவில்லை, உனது சுற்று காற்று பட்ட தூரங்களிலெல்லாம் அந்த “தூய விதை” விழுந்து பரிணமித்ததை நல்ல கண் கொண்டவர்கள் உணர்வார்கள். அதுவே உனது பிறப்பிற்கு நீ அளித்துக் கொண்ட கெளரவமென நான் எண்ணுகிறேன்.

நீ மரணித்த வாரத்திலேயே ஒரு நாள் என்னிடம் உன்னுடைய வாழ்க்கையைப் பற்றி யாராவது எழுதுபவர்களிடம் சொல்லி அதனை புத்தகமாக்க வேண்டுமென்று கூறினாயே, அதற்கு கூட நான் கடிந்து கொண்டேனே, அதனை நான் செய்ய மாட்டேனா என்று... அந்த புத்தகத்தை நீயே வாசிக்கும் வரைக்குமாவது வாழ்ந்திருக்கலாமே அப்பா.

உன்னுடைய அமெரிக்கா நாட்களில் உனது நீண்ட கால ஆங்கிலம் பேசி புழங்க வேண்டிய ஆசையும் நினைவுருவாக்கம் ஆனதே ஞாபகமிருக்கிறதா? உன்னுடன் ஒரு ஸ்பானிஷ் மங்கையொருத்தி கை கோர்த்து நடனமாடிய பொழுது வந்த அத்தனை வெக்கத்தையும் எங்கே அப்பா ஒளித்து வைத்திருந்தாய்! 

என்னுடைய அனைத்து நண்பர்களுக்கும் நீ ஒரு பொறாமைக்கான அப்பா என்பது தெரியுமா உனக்கு? அனைத்து வயதினருடனும் மிக இயல்பாக எப்படி உன்னால் புழங்கித் திரிந்திருக்க முடிந்தது? உனது இறுதி விடை பிரிதலுக்கான நாளில் உன்னுடைய பல நண்பர்களை, பல பிரிவுகளிலிருந்தும் வந்திருந்தார்கள். அவர்கள் உனை அப்பாவாகவும், அத்தாவாகவும், மாமாவாகவும், செட்டியாராகவும், அண்ணாமலையாகவும் விளித்துக் கொண்டு அவரவர்களும் தங்களுக்கான தனித்துவமான கதைகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள். விக்கித்து நின்றேன். உன் நிழல் படாத எளிய மனிதர்களுக்கு குறைச்சலே இல்லை அப்பா. உன் வாழ்வுப் பயணத்தில் நீ நிறைய மனிதர்களை சேகரித்திருக்கிறாய்.

நீ மரணிக்க வில்லை அய்யா! உன் நினைவுச் சுவடுகள் எங்கள் மனங்களில் இருக்கும் வரையிலும் நீ உயிர்ப்புடனே உள்ளாய். 

எனக்கு எப்பொழுதுமே ஓர் எண்ணமுண்டு. மனித வாழ்வென்பது நன்றாக சுகித்து, சுவைத்து வாழ்ந்து முடிக்க வேண்டியதொரு மாபெரும் பயணச் சாலை என்றும் மரணிக்கும் நொடிகளில் கண் திறந்து “வாட் எ ரைட்” என்றழைத்து கண் மூடிட வேண்டுமென்று நினைப்பதுண்டு. அந்த எண்ணம் உன் வாழ்க்கைப் பயணத்தைப் பின்னோக்கி செலுத்திப் பார்க்கும் பொழுது எத்தனை உண்மையென்று எனக்கு இன்று புலப்படுகிறது. நீ நன்றாக அழுத்தமாக வாழ்ந்து சென்றிருக்கிறாய்.

அவரைப் பற்றி நினைவு கூறுவதென்றால் என்னுடைய அனைத்து நடவடிக்கைகளிலும் அவருடைய சாயல் படிந்திருப்பதனைக் கொண்டே என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

Tuesday, August 12, 2014

திறக்கப்படாத கதவுகள்! The death of Robin Williams

ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் எனக்கு நமது ஊரின் இளையராஜா எந்த அளவிற்கு வாழ்வெனும் இந்த பெரும் ஆறு காட்டாற்று வெள்ளமாக அடித்து இழுத்துச் செல்ல எத்தனிக்கும் கணம் தோறும் கரையில் அள்ளி வந்து போட்டுவிட்டுச் செல்லும் துடுப்பாக அமைவாரோ, அது போலவே அக்கரையில் வில்லியம்ஸ் எனக்கானவர். அவரின் மரணம் என்னை மிகவும் நெருக்கமாக உணரச் செய்கிறது. எத்தனையோ மரணங்களை கண்ணுற்றும், கேள்வியுற்றும் கடந்து செல்கிறேன். அவைகளை ஒரு மரத்தின் பூப்பதற்கும் உதிர்வதற்கும் ஒப்பானதாகவே எடுத்துக் கொண்டு. எனது உதிர்வையும் ஓர் ஒரத்தில் நிறுத்திக் கொண்டே!

ஹாலிவுட் நடிகர்களில் குறிப்பிடும் படியாக ஒரே நபரை இலக்காக கொண்டு பல படங்கள் பார்த்திருக்கிறேன் என்றால் அது ராபின் வில்லியம்ஸ் நடித்த படங்களாகத்தான் இருக்க முடியும். இவர் பெரும்பாலும் நடித்த அத்தனை படங்களும் மனித மன சிக்கல்களோட வாழத் தலைப்படும் விளிம்பு மனிதர்களுடன் வாழ்வதை ஒத்ததாகவே இருந்திருக்கிறது. மேலோட்டமான ஒரு நகைச்சுவையுணர்வுடன் அழுத்தமான கதைக்களம் கொண்டதாக இருக்கும். குறிப்பிடும் படியாக என்னை மிகவும் பாதித்த படங்களென கூற வேண்டுமானால் - Good Will Hunting, Good Morning Vietnam, House of D, Bicentennial Man, Mrs. Doubtfire இப்படி அடிக்கிக் கொண்டே செல்லலாம்.

ஒவ்வொரு சிரிப்பை வழங்கும் கண்களுக்கு பின்னாலே எங்கோ ஓர் ஒரத்தில் அவர்களே அறியாத தனது சோக பிம்பம் அமர்ந்திருக்கிறதென அறிகிறேன். இவர் எத்தனை சிவப்பு கம்பளங்களையும், பளபளக்கும் கார்களையும், நடிகர்களையும், நடிகைகளையும் உலகின் பெரும் பணக்காரர்களையும், நிலங்களையும் கண்டிருப்பார். 

இவை அத்தனையும், இப்படி தன் தனிமையில் கண்டதாகவோ, இவை எதுவும் தன்னுடைய துயருக்கு மருந்தாகவோ இருக்க முடியாது என்ற நிலையிலேயே தன்னுடைய வாழ்வை எடுத்திருக்க துணிந்திருப்பார். அதுவும் தனது 63வது வயதில்! நல்ல மனித நேயரும் கூட என்பது எனது தோல் உரசும் தூரத்திலிருந்து பழகிய ஒருவரின் சொந்த வாக்குமூலம். அது சார்ந்த புகைப்படங்களையும் பார்த்திருக்கிறேன்.

ஒவ்வொரு மனதிற்குள்ளும் திறக்கப்படாத இன்னும் எத்தனையோ கதவுகள் சிலந்தி வலைகளுடன் தூசி படிந்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆயிரம் பேருக்கிடையிலும் தனிமையை உணர்வது போல! அவைகளில் ஒரு கதவை திறந்து தீர்க்கமாக பிரவேசிக்கும் பொழுது இந்த வாழ்வே சூன்யமாகி விடுகிறது போல.  இந்த இழப்பு தனி மனித ‘தனிமையை’ சுட்டி நிற்கும் கேள்வி வினா? என்ன செய்யப் போகிறோம்... ஆழ்ந்த வலிகளோடு...

சில வருடங்களுக்கு முன் பார்த்த மாத்திரத்தில் கடந்து போக விடாமல் அமரச்செய்து வில்லியம்ஸிற்கு நான் செலுத்திய நன்றியாக ஒரு பதிவு - House of D(the movie that stole my heart).

Friday, January 03, 2014

புதுக்கோட்டையில் ஓர் ஞானாலயம்: Gnalaya P. Krishnamurthy

என் வாழ்நாளில் புதுக்கோட்டையை எத்தனையோ முறை  பேரூந்து வழியே கடந்து சென்றிருப்பேன். எண்ணிக்கையில் அடக்க முடியாது. அதுவும் அந்த மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஞானாலயா இல்லத்தை கடந்துதான் நான் பயணம் செய்த பேரூந்து சென்றிருக்கக் கூடும். ஆனால், இத்தனை ஆயிரம் மைல்கள் கடந்த பிறகு, வாழ்க்கையின் மத்திம பகுதியில் வந்து நிற்கும் எனக்கு சில நாட்களுக்கு முன் ஞானாலயா ஆய்வு நூலகத்தை பார்க்கவும், அதன் நிறுவனர் திரு. பா. கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் உரையாடவும் வாய்ப்பு கிடைத்தது. இவர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், எனது உலகத்தில் இவர்களுக்கான காட்சியளிப்பு எனக்கு நானே வழங்கிக் கொள்ளவும் இப்பொழுதுதான் அமைந்திருக்கிறது.

ஒரு நாள் முழுதும் தங்கி ஐயா ஞானாலயா கிருஷணமூர்த்தி மற்றும் அவருடைய துணைவியாருடன் உரையாடினோம்.  அவர்கள் அளித்த மதிய உணவை முழுதும் உண்ணும் வரையிலும் அருகிலேயே அமர்ந்திருந்து என்னுடைய கொரித்து சாப்பிடும் பழக்கத்தை தற்காலிகமாக தள்ளி வைக்க செய்தார் அம்மா.

மனிதனின் நினைவாற்றல் என்பது ஒருவர் தனது துறை சார்ந்து எது போன்ற இலக்கை சென்றடைய வேண்டுமோ அதற்கென பயன்படுத்தி தன்னை சந்தைப் படுத்தி கொள்வது நடைமுறையில் நாம் காண்பது.

இவர் தான் வாசித்து சுவாசித்த அத்தனை புத்தக, நிஜ மனிதர்களின் நினைவுகளோடும் அவர்களின் கனவுகளோடும் வாழ்ந்து கொண்டிருப்பவரும், பெரியவர்களென தன்னைத் தானே தூக்கி வைத்துக் கொண்டாடும் சிறியவர்களுக்கு முன்னால் ஒரு சொப்பன மனிதர்.

இரண்டு மாடிகளில் உள்ள எந்த புத்தகத்தை தொட்டாலும் அதனைப் பற்றிய சிறப்புகளை எடுத்து வைக்கும் பாங்கு நம்மை கொக்கிப் போட்டு உடனே அந்த புத்தகத்தை வாசித்து விட வேண்டுமென்ற வேட்கையை வளர்த்தெடுக்கிறது.

எத்தனையோ பெரிய கூட்டங்களில் இவர் கலந்து கொண்டு உரையாடி இருக்கக் கூடும். ஆனால் திருப்பூர் ஜோதிஜியுடன் சென்ற போது, எங்களிருவருக்காக இத்தனை ஆர்வத்துடன் தன்னுடை அத்தனை வாழ்பனுவத்தை வருடியும், தேவையான இடத்தில் எங்களின் குறுக்கீடுகளை மன்னித்தும், கலந்து கொள்ளுமாறு எங்களையும் அணைத்து கருத்துகளையும் உள் வைத்து எடுத்துச் சென்றது முதல் ஆச்சரியம் என்றால் அவரின் உரையாடலின் அனுபவத்தை சொல்லாமல் சொல்லிக் கொண்டே சென்றது  என் கண்களை அகல விரிய வைத்தது.

அவர் ஓர் அறிவுச் சுரங்கம். 1800களின் இந்தியாவிலிருந்த வாழ்க்கை முதல்  சமகால அரசியல் நிலையென்று அத்தனை விசயங்களையும் இதுவரையிலும் நாம் வெகுஜன ஊடகம் வழியே அறியாத முக்கியமான தகவல்களாக சொல்லிக் கொண்டே செல்ல எனக்கு கனவா நினைவா? என்று யோசிக்கத் தோன்றியது.  அக்காலத்திய மனிதர்களின் வார்த்தைகளிலிருந்து அவர்களின் கனவுகள் எப்படியாக இன்றைய இந்தியாவில் வெறும் நினைவுகளாகி இருக்கின்றன என்று கூறி அவர் விடுக்கும் ஒரு வெறுப்பு கலந்த வரட்டுப் புன்னகை அவ்வப்பொழுது என் மனதை என்னவோ செய்தது.

அவரின் பார்வையில் காந்தியின் செயல்பாடுகளும் அவரின் தொலை நோக்கு பார்வையும் ஓவ்வொரு வார்த்தைகளின் ஊடாக ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டுமென்று அழுத்தமாக சில சான்றுகளை காந்தியின் வார்த்தைகளிலிருந்தே மேற்கோள் காட்டி சொல்லும் பொழுது “அட, ஆமால்ல” என்றுதான் வாய்பிளக்கச் செய்தது.

ஒரிடத்தில் நம்மை எல்லாம் காந்தியின் சுயசரிதை வாசிப்பிலிருந்து மீண்டு அவரைப் பற்றிய, காந்தியே எழுதிய பிற புத்தகங்களையும் ஆழ்ந்து வாசிக்க அழைக்கிறார். மற்றொரு இடத்தில் மிக அதிகமாக புத்தகங்களின் விற்பனையும், வாசிப்பாளர்களையும் பெற்ற மாவட்டமாக புதுக்கோட்டை விளங்கியதின் பின்னணியை விளக்கும் பொழுது, எப்படி நாட்டுக்கோட்டை செட்டியார்கள் தமிழுக்கென செய்த பெரும் தொண்டுகளை பெயர், வருடம் வாரியாக அட்டவணை இடுகிறார்.

முன்பொரு காலத்தில் தமிழகத்தில் மொத்த பிரசுரங்களே 13 தானாம். அதனில் பத்து பிரசுரங்கள் புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார செட்டியார்களால் நடத்தப் பெற்றவைதானாம். எனவே, இயல்பாகவே அதிகப்படியான புத்தகங்கள் விற்பனை மற்றும் வாசிப்பாளர்களையும் உள்ளடக்கிய மாவட்டமாக அமைந்து போனதாக உபரித் தகவலாக போகிற போக்கில் பெரிய தகவல்களைச் அள்ளித் தெளிக்கிறார்.

பேசப் பேச எனக்கு தோன்றியதெல்லாம், ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை தமிழில் எம்.ஃபில் செய்வதற்கான அத்தனை தகவல்களையும் நம் முன் வைத்து நகருவதாக  ஒரு பிரமிப்பை எனக்குள் விதைத்துக் கொண்டிருந்தார்.

ஞானாலயா நூலகத்தில் உள்ள பல புத்தகங்கள் முதற் பதிப்பு கண்டு அத்துடனே அத்தனை மூலத்தையும் உள்ளடக்கி அதற்கென உரிய புனிதத் தன்மையுடன் நம்மை சற்றே பணிவுடன் வணங்கச் செய்கிறது.

பெரியாரின் 1920களின் விடுதலை செய்தித் தாளை தொடும் பொழுது பயம்மா/மிரட்சியா/அதன் அதிர்வா அல்லது அந்தத் தாளின் இப்பொழுதோ அப்பொழுதோ விரலோடு ஒட்டிக் கொண்டு வந்துவிடுவேங்கிற புனிதம் தோய்ந்த பழமையா ஏதோ ஒன்று அந்த பைண்டிங் தொகுப்பை திறக்கும் பொழுது காலுக்கு கீழ் பூமி நகர்வதாக உணரச் செய்தது.

இத்தனை புத்தங்களையும் ஒரே இடத்தில் வசிக்க வைக்க வேண்டி தனது வளர்ச்சியை ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் அளவிலே வைத்துக் கொண்டிருந்திருக்கிறார். தான் ஆசிரியர் பணியில் இருந்த அனுபவம், புதுக்கோட்டை தவிர வேறு எந்த பகுதிக்கும் செல்ல விரும்பாத காரணத்தால் வந்த பதவி உயர்வை ஏற்றுக் கொள்ளாமல் ஆசிரியராகவே வாழ்ந்த அனுபவம், கடைசியில் தலைமையாசிரியர் பொறுப்பில் இருந்த போது பள்ளியில் உருவாக்கிய சீர்சிருத்தம் என்ற அவர் நிஜவாழ்க்கை சாதனை என்பது தமிழிலில் வந்த சாட்டை படம் போலவே இருந்தது.
ஆனால் எதையும் எவரிடமும் சொல்வதும் இல்லை. எந்த ஆதாயத்தையும் எதிர்பார்த்து செய்யும் பழக்கமும் இல்லாத அவரைப் பார்த்த போது சகமனிதர்களின் குறிப்பாக பணமே சரணம் என்று காட்டு ஓட்டமாக ஓடும் இன்றைய நவீன இந்தியர்களின் மீதாக நான் வைத்திருந்த பார்வையை சற்றே மறு பரிசீலனை செய்யச் சொல்லி இருக்கிறது. சென்ற பள்ளிகளில் எல்லாம் தனது நிர்வாக திறமையால் பல மாற்றங்களையும் செய்திருக்கிறார்.

குறிப்பாக கந்தர்வகோட்டை அரசு தொடக்கப் பள்ளியில் ரஜினி ரசிகர்கள் ஒரு முறை பென்சில் நோட் புத்தகம் வழங்க வந்த பொழுதில் அவர்களை பள்ளியின் சுற்றுச் சுவற்றை வெள்ளையடிக்க பயன்படுத்திக் கொண்ட லாவகம் ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும் கடைபிடிக்க வேண்டிய ஆளுமைத் திறன்.

இன்றைய அரசியல் போகும் போக்கிலும் மக்களின் மனங்களில் ஏற்பட்டிருக்கும் பணத்திற்கு ஓட்டு என்கிற பரிணாம சுழற்சியில் இது போன்ற மனிதர்களும் இவைகளை சகித்துக் கொண்டு எப்படியாக தங்களை இன்னமும் சந்தோஷமாக வைத்துக் கொள்கிறார்கள் என்பது சமூக அறிவியல் - உளவியலுக்கே உரித்தான கேள்வியது.

நம்முடைய வயதை ஒத்தவர்களுக்கு இதுவே வாழ்க்கையென ஓடும் ஓட்டத்தோடு கலந்து கரையேறுவது எளிமையாக இருக்கலாம். ஆனால், நாட்டின் அடிப்படை உரிமைகளை காக்கவும், அதன் கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை கட்டிக் காக்கவென போராடியே வாழ்ந்தவர்களின் வாழ்க்கையின் ஊடாக வாழப் பெற்ற இது போன்ற அறிவார்ந்தவர்களின் அங்காலய்ப்புதான் எதனை ஒத்ததாக அமையக் கூடும்.

இப்பொழுது உள் நாட்டிலும் சரி, உலக அரங்கிலும் சரி எந்த ஒரு முடிவும் தன் நாட்டின் நலனுக்காகவும், மக்களுக்காகவும் சார்ந்து இல்லாமல் வியாபாரிகளின் நலனுக்காகவே நடந்து கொண்டிருக்கின்றது. இந்த நாட்டின் மண்ணை/பாறை முகடுகளைக் கூட கூறு போட்டு விற்கும் நிலைக்கு நகர்ந்து வந்துள்ளோம்.

இத்தனைக்கு நடுவிலும் இத்தனை ஆயிரம் புத்தகங்ளையும் அதனூடாக வசிக்கும் மனிதர்களையும் வாசித்து அவர்களின் கனவுகள் எல்லாம் காற்றில் ஒன்று ஒன்றாக பறக்க விடுவதனையும் கவனத்தில் நிறுத்தி இன்னமும் மனதை விட்டு விடாமல் நேர்மறை எண்ணத்தில் அவருக்கே ஆன வாழ்வை அவரது தத்துவார்த்த நோக்கில் வாழ்வது simply notable and impressive!

அந்த குடிலை விட்டு வெளிக் கிழம்பி வரும் பொழுது நான் விளையாட்டாக சொன்னது எனது நண்பரிடத்தில் “ஏதாவது செய்யணும் பாஸ்.” அங்கே உள்ள அனைத்து புத்தகங்களையும் இண்டஸ்ட்ரியல் இயக்கமாக இயங்கி ஸ்கான் செய்து கணினியில் ஏற்ற வேண்டியது அனைத்து கணினி பயனீட்டர்களான நமது ஒவ்வொருவரின் கடமை.

Friday, August 09, 2013

எனது மறுபக்கம்...: The Flip Side!

எத்தனை அடித்தாலும் நான் திருந்துவதாக இல்லை. இன்னமும் மனுசங்களின் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. எனது அம்மா அடிக்கடி அவளது 67 வருட வாழ்க்கையில் கற்றுக்கொண்ட நடைமுறை வார்த்தை மிகவும் தாமதமாகவே புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது; இருப்பினும் காத்திருப்பதில் பிரயோசனமுள்ளதாக இருக்கிறது its worth a wait. அந்த வார்த்தை- உறவுகளில் சிக்கல்கள் எழுந்து விலகிச் சென்றும், வார்த்தைகளில் அமில மழை பொழிபவர்களைப் பற்றிய நேர்மறை எண்ணமாக எடுத்துக் கொள்வதற்கிணங்க இப்படியாக சொல்வாள்...

 *தெரிந்தா செய்கிறார்கள், என்ன செய்றோம்னு தெரியாமச் செய்றதுதானே! காலம் வரும் பொழுது புரிந்து கொள்வார்கள்* .

இந்த காலம் சில பேருக்கு நாட்களாகவோ, மாதங்களாகவோ, வருடங்களாகவோ ஏன் இந்த பிறப்பிற்கும் எட்டாத ஒரு விசயமாகவோ கூட அமைந்து விடக் கூடும். இருப்பினும் இந்த நேர்மறை எண்ணமாக எடுத்துக் கொளல் தமக்கு தாமே மன அழுத்தத்திலிருந்தும், வெறுப்பு நம்மை ஆட்கொண்டு நமது பொன்னான இக் கணத்தை அனுபவிக்க விடாமல் சிதைத்து விடக் கூடியதிலிருந்தும் நம்மை கரை தூக்கி விடுவதுமாக அமைந்திருக்கிறதாகப்படுகிறது.

நம் வாழ்வில் வந்து போகும் உறவு மனிதர்களையொட்டி எத்தனை பெரிய கால எதிர்மறை செயல்பாடுகள் நடந்தேறும் பொழுதும் இந்த take in நிச்சயமாக உதவுவதாகவே இருக்கிறது.

என்னோட இன்னொரு அம்மா’ [மாமீ’யார் - i hate this term, ஏன்னா அந்த தமிழ் வார்த்தையே பாருங்க மாமி யார் ? என்று போட்டி போடுவதாக அமைந்து பட்டிக்கிறது :) ], அதாவது என்னோட வைஃபை அம்மாகிட்ட இன்னிக்கு ரொம்ப நேரம் காணொளியில் அரட்டை அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவங்களும் அதை ரொம்பவே சிலாகிச்சு பேசினாங்க.

“இந்த மாதிரியான ஒரு கணத்தை நமக்கு இந்த காலம் கொடுத்திருக்கின்னா கிடைக்கற்தக்கன என்று.”

பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக சில கேள்விகளின் மூலமாக அவர்களுடைய இன்றைய வாழ்க்கையை எடுத்துக் கொள்ளும் போக்கை நோக்கி நகர்ந்தது. அம்மாவிற்கு ஆறு ஏழு பிள்ளைகள் எல்லாம் முப்பது வயதைத் தாண்டி. தான் தனக்கு என்று தன் பெற்றோர்கள் அரைத்த மாவை தனக்கென அரைக்க ஆரம்பித்திருக்கும் நிலையில் உள்ளவர்கள்.

அம்மாவின் கணவர் ஓர் மூன்று வருடங்களுக்கு முன்பு மரணித்துவிட்ட நிலையில் தனியாக இவர்கள் வாழ தலைப்பட்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் இவர் விரும்பினால் தன் பிள்ளைகளின் யார் வீட்டிலாவது இருந்து துணையோட இருக்கக் கூடிய கதவை தன் பிள்ளைகள் எப்பொழுதும் திறந்தே வைத்திருக்கிறார்கள். 

இருப்பினும் இந்தம்மாவின் தன்னம்பிக்கையும், அந்த நாகரீகமும் என்னை வெகுவாக கவர்ந்திருக்கிற நிலையில் இந்த கேள்வியை முன் வைத்தேன். ஏன் உங்களுக்கு இத்தனை பிள்ளைகள் இருந்தும் தனியாக வசிக்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள்? என்று கேட்டவுடனேயே வெடித்து சிரித்து தன் அனுபவத்தை முன் வைக்க தயாராகினார்கள்.

“எத்தனைதான் நமக்கு சேவகம் பண்ண, கவனிச்சிக்கன்னு ஆட்கள் இருந்தாலும், நமக்கு பிடிச்ச இடத்தில உட்கார்ந்து எழுந்துன்னு, பிடிச்சதை பிடிச்ச நேரத்தில செஞ்சிகிட்டு வாழுறதுல உள்ள சுகம் கிடைக்குமா தம்பீ” என்பதே அம்மாவினுடைய பதிலாகக் கிடைத்தது.

எத்தனை வாழ்வு அனுபவங்கள் அவர்களை இந்த ஒரு புரிதல் நிலைக்கு நகர்த்தி இருந்தால் தன்னுடைய எழுபதைத் தொட்டு நிற்கும் ஒரு மனுஷியின் எண்ணமாக இது வெளிப்பட்டிருக்கக் கூடும்.

நான் அதன்பால் கட்டுண்டேன். என்னுடைய ஈர்ப்பு- மனிதர்களின்பால் சார்பற்ற நிலையில் மனிதர்களுடன் ஒட்டி ஒழுகுதல், அது வயது நிலைகளையும் கடந்து யார் வெளிப்படுத்தினாலும் அந்த மனிதர்களுக்குள் ஏதோ வெட்டி எடுக்க புதையல் இருப்பதாக கூடுதல் ஒட்டல் ஏற்படும்.

பிறகு அம்மாவின் இந்த நிலைப்பாட்டை பாராட்டி விட்டு, நீங்கள் எடுத்திருப்பதும் ஒரு தேர்வுதான். தனது திருமண நாளிருந்தே, குடும்பம், கணவர், பிள்ளைகள் என்று அடுத்தவர்களுக்காக தன்னுடைய வாழ்வை தோய்த்த நிலையில் கடைசி ஒரு கட்டத்திலாவது தனக்கு பிடித்த மாதிரி வாழ்ந்து தீர்க்கிறேன் என்று எடுத்திருக்கும் இந்த தேர்வை நான் மதிக்கிறேனம்மா.

இருந்தாலும் இன்னும் காலங்கள் நகரும் பொழுது இப்பொழுது இருக்கும் இந்த உள்ளார்ந்த மனசக்திக்கு உடம்பு ஒத்துழைக்காத ஒரு நாளும் வரக் கூடும். அப்படியாக வரும் ஒரு நாளில் அடுத்த ஒரு தேர்வை நீங்கள் எடுக்கும் பொழுது, எனக்கு உங்களைப் பார்த்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பை வழங்குங்கள் என்று கூறினேன்.

ஏனெனில் அந்த வாய்ப்பை வழங்குவதும், வழங்காமல் போவதும் அவர் தேர்ந்தெடுக்கும் சாய்ஸ்களிலே உள்ளது. இது எப்படியாக இருக்கிறது என்று சற்றே உள்ளே புகுந்து யோசித்தால், எந்த வீட்டில் எந்த மனிதர்களுடன் நாம் விருந்தாடப் போகிறோம் என்று வாய்ப்பளித்துப் பார்ப்பதற்கு ஒப்பானாது.

தீர்க்கமாக வாழ்பவர்களுக்கு அங்கே எந்த விதமான சமரசங்களுமில்லை. சுத்தமான தேர்வு மட்டுமே மீதமாகிறது. அங்கே இது போன்ற மனிதர்கள் புகுந்து வெளி வரும் பொழுது விருந்தளிப்பவர்கள் கெளரவிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை.

அதுனாலேயே நான் மிகக் கவனமாக அந்த வார்த்தையை பயன்படுத்தினேன். இன்று ஒரு வாழ்ந்து தீர்த்தவளின் வாயிலிருந்து சில நல்ல வார்த்தைகளை வாழ்த்தாக பெற்றேன். இன்றைய நாள் எனக்கு மிகவும் இனிதான நாளாக அமைந்திருக்கிறது!

சந்தோஷத்திலேயே அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதற்கு ஒப்பான விசயம் வேறொன்றும் இருப்பதாகப் படவில்லை. அது இந்த மிர்சிடீஸ் வகையாறா கார்களையும், சம்ஷாங் s3 and s4 வகை கைபேசிகளையும் விட அதி மன மகிழ்வை ஊட்டுவதாக உள்ளது.

சீக்கிரம் விழித்துக் கொள்பவர்களுக்கு இந்த வாழ்வு ஏதோ ஒரு வகையில் எப்பொழுதுமே மட்டற்ற சந்தோஷத்தை வழங்க காத்துக்கொண்டே இருக்கிறது!

Thursday, February 28, 2013

வாழ்வும் வண்ணங்களும்! Photos




கனவு நினைவுருவாக்கம்
கொள்கையில்
வாழ்வும் முதுமையும்
மிகுதிகளாக...







பரந்த வாழ்வு
பாடகசாலையில்
தூரிகைகளைக்
கொண்டு
வண்ண
திட்டமிடுகையில்
அதனதன்வழியில்
அனைத்தும்
தன்னையே
தீட்டிக்கொண்டது!


Monday, March 15, 2010

பேசாத்துணை



கட்டிய துணைவியும்
சுயநலம்வேண்டி
சுமங்கலியாய்
முன்சென்றோட
பிள்ளைகளோ பிழைப்புத்தேடி
அவசர உலகத்தில்
கரைந்து போக...

ராஜ யோகாசனத்தில்
இன்று நானமர்ந்து பொழுதைக்
கழித்தாலும்
அடுத்தவேளை உணவைத்தேடி
நானெழுந்து அமர்கையில்
அகங்காரமேதுமற்று
பட்டினி நிகழ்த்தாமலும்
பாசத்திற்கு விலைவைக்காமலும்
கூடவே ஒட்டிப்பிறந்தவனாய்
பாரம் சுமக்க காத்துநிற்கும்
கைத்தடி!



குறிப்பு: இதனை என் குரலில் வாசித்து கேக்க-



Thursday, August 27, 2009

குறும்படம் - தருமியின் காட்சிப் பிழை : What is that?

அன்புக்கதைன்னு பொருத்தமா ஒரு தலைப்பு வைச்ச பதிவு ஒண்ணு படிச்சேன். அது ஒரு குறும்படத்தைப் பற்றியது. என்னைத் தவிர்த்து அங்கே பின்னூட்டமிட்டிருந்த அனைவரும் ஏதோ ஒரு வகையில அந்த குறும்படத்தைப் பற்றி தெரிஞ்சு வைச்சிருந்தாங்க. எனக்கு இப்பத்தான் முதன் முறையா பார்க்க கிடைச்சிச்சு. சரி என்னதான் இருக்கும் அதில, அதிலும் 5 நிமிடத்திற்குள்ள அப்படி என்னாத்தை பெரிசா சொல்லிட முடியுங்கிற ஒரு நினைப்போட பொத்தானை அமுக்கிப் பார்க்க ஆரம்பிச்சேன்.

அந்தப் படத்தின் தாக்கத்தால் பார்த்து முடிச்சவுடன் பேசாமே கொஞ்சம் நேரம் அமர்ந்து இருக்கிற மாதிரியாகிடுச்சு. அந்தப் படத்தில வந்த பெஞ்ச், பார்க் மாதிரியான அமைப்பில தனியா நான் அமர்ந்திருக்கிற மாதிரியான ஒரு உணர்வு. அப்படியே பார்த்தாலும் நானெல்லாம் அந்தப் படத்தில வர்ற அந்த மகன் மாதிரி இல்லாம பேச ஆரம்பிச்சா "தம்பீ உனக்கு வாய வலிக்கலையாடா"ன்னு கேட்கிற அளவிற்கு அறுத்து சாச்சர்றது பெத்தவிங்கள. அப்படி இருக்கும் பொழுது இந்த குறும்படத்தை பார்த்தவுடன் மற்ற பெற்றோர்களுக்காகவும், பெரிய வயசானவிங்களையும் நினைச்சு "ஏன் இப்படி"ன்னு மனசு தொங்கிப் போனது.

அந்த நிலையில ஒரே ஃபீலிங்ஸோட ஒரு பின்னூட்டத்தை தட்டி விட்டுட்டு வந்திட்டேன். காலையில போயி பார்த்தப்போ அங்கே நம்ம தருமி ஒரு பின்னூட்டத்தின் மூலமா அந்தப் படத்தில் நெருடலான லாஜிக்கல் சமாச்சாரம் இருப்பதாக இதனைச் சுட்டிக் காட்டியிருந்தார்...

...தருமி said...

சொல்ல வந்த விஷயம் சொல்லப்பட்ட விதம் நல்லா இருக்கு.

ஆனா ஒரு நெருடல்: நினைவின்றி குருவியைத் திரும்பத் திரும்ப கேட்கும் அப்பா தன் டைரியில் எப்படி அவ்வளவு சரியா நல்ல நினைவாற்றலோடு அந்தப் பக்கத்தை எடுத்துக் காண்பிக்கிறார் என்று மனதில் ஒரு நெருடல் ....

8/27/2009 9:21 AM...

தருமிக்கு என்னான்னா எப்படி அந்த நினைவாற்றலற்ற(மாதிரியான - காட்சிப் பிழை அது) அப்பா ஒரு சிட்டுக்குருவியை அது என்னா, அது என்னான்னு கேட்டும் வைச்சிப்புட்டு பின்னே ரொம்ப ஞாபகத்தோட அந்த டயரியை எடுத்து கொடுத்திருக்க முடியுங்கிறார்.

அந்த குறும்படத்தில காட்சி இப்படியாக நகரும் - அதி மும்முரமா செய்தித்தாளில் முங்கிக் கிடக்கும் மகன்கிட்ட கேட்டு, கேட்டு எரிச்சலூட்டும் போது, தன் மகன் கடுப்பாகி எத்தனை முறை சொல்றதுன்னு கத்தியவுடன், அப்பா முகம் வாட்டம் கண்டு எழுந்து வீட்டிற்குள் சென்று அவர் எழுதிய டயரிக் குறிப்பை எடுத்து அதே மகனுக்கு அவன் மூன்று வயதாக இருக்கும் பொழுது எப்படி 21 முறை இதே போன்ற ஒரு நாளில், இதே போன்ற பார்க்கில் அமர்ந்து தன்னிடம் கேட்டான் எனவும், அப்படி கேட்டதிற்கு எப்படி முகம் சுளிக்காமல் ஒவ்வொரு முறையும் பதிலுரைத்து விட்டு அதற்கு போனசாக வேறு கட்டியும் பிடித்தேன் என்பதனைப் போன்று எழுதியிருப்பதை மகனைவிட்டு சத்தமாக படிக்கச் சொல்கிறார் .

இதனை வைத்து தருமி எப்படி இவ்வளவு ஞாபக சக்தியோட இருக்கும் பெரியவருக்கு சிட்டுக் குருவி அடையாளம் மறக்கும் என்பதனைப் போன்ற காட்சியமைப்பில் கொஞ்சம் லாஜிக் இடிப்பதாக முன் வைத்திருக்கிறார்.

அதப் படிச்சிட்டு எனக்கு பக்குன்னு ஆயி என்னடா நம்ம தருமியே தப்பா எடுத்துட்டு இருக்காரேன்னு, அரக்கபரக்க பறந்து நானும் அவரோட கேள்விக்கு பதில் சொல்லுற மாதிரி இப்படி ஒரு பின்னூட்டப் பதிலைக் கொடுத்திருந்தேன்...

....Thekkikattanதெகா said...

//ஆனா ஒரு நெருடல்: நினைவின்றி குருவியைத் திரும்பத் திரும்ப கேட்கும் அப்பா தன் டைரியில் எப்படி அவ்வளவு சரியா நல்ல நினைவாற்றலோடு அந்தப் பக்கத்தை எடுத்துக் காண்பிக்கிறார் என்று மனதில் ஒரு நெருடல் ...//

தருமி, அப்பாங்கிறவர் அந்த இடத்தில ஒரு zen மாதிரி நினைச்சிக்கோங்க, தன் பிள்ளை பார்க்ல இருக்கும் பொழுது அதுவும் தன்னை மாதிரியான அப்பா பக்கத்தில இருக்கும் பொழுது - அங்கே என்ன நிகழணுமோ அதை விட்டுட்டு அப்படி என்ன செய்தித்தாளில் முங்க வேண்டும்.

அந்த வயசிலும் வாழ்க்கைப் பாடம் எடுக்கிறார்னு வைச்சிக்குவோமே... அதே பையன் தன் சிறு குழந்தையை அதே பார்க்குக்கு கூட்டியாந்தாலும் அதே பொறுப்பில்லாத்தனத்தைக் காட்டினா... சோ, அவரு தெரிஞ்சே செய்றார் :))

8/27/2009 6:32 PM...

அதுக்குப் பிறகு நேரடியாவும் பேசும் பொழுது திடீர்னு அவர்கிட்ட பேசின விசயத்தையெல்லாம் ஏன் பொதுப் பார்வைக்கு கொண்டுவரக்கூடாதுன்னு தோணுச்சு, ரெண்டு பேருக்குமே! சரி கொண்டு வந்துருவோம், நமக்கும் ஒரு எண்ணிக்கை கூடினுச்சு, மக்கா நீங்களும் அய்யோடான்னு வந்துட்டுப் போக ஒரு வாய்ப்பா இருக்குமின்னு இங்கன தட்டி வைக்கிறேன்.

இன்றைக்கு பார்த்தோமானால் பலவித காரணங்களாலும், தேவைகளாலும் உண்மையான வாழ்க்கையை தொலைத்துவிட்டு எது எதனையோ தேடிக்கொண்டிருக்கிறோம். வெளிமுகமாக. அதன் உப விளைவாக தவிர்க்க முடியா மன இறுக்கம். அது பெற்ற பிள்ளைகள், பெற்றவர்கள், துணைவி என்று யாரையும் பார்ப்பதில்லை. அதே நேரம் வயதான காலத்தில அது போன்ற வாழ்க்கை முறையில் ஓடித் தேய்ந்து போன பெரியவர்கள், ஒரு காலத்தில் தானும் இளைஞனாக உலக விசயங்கள் அனைத்தும் தினப்படி வண்டி வண்டியாக அறிந்து இது போன்ற ஒரு இறுக்க வாழ்க்கையை வாழ்ந்திருக்கக் கூடும்.

ஆனால், காலப் போக்கில் அவைகளை எல்லாம் வைத்துக் கொண்டு என்ன செய்திருக்கிறோம் என்று இன்று அமர்ந்து யோசிக்கும் பொழுது அவர்களுக்கு அந்தச் செயல் ஒரு நகைப்புக்குரியதாக அமையலாம். அதாவது தன் பிள்ளைகளுடன் கூட சரியான படி நேரத்தை செலவழிக்க முடியாமல், உலக விசயங்களை உள்வாங்கி தன்னால், தன் சக்திக்கு அப்பால் நடைபெறும் விசயங்களை நேரத்தை கொல்லும் பொருட்டு அறிந்து வைத்ததில் என்ன நடந்திருக்கலாம் என்று அனுபவப் பூர்வமாக இன்று தெரிந்து வைத்திருக்கலாம். அடுத்த நாள் வேலை செய்யும் இடத்தில் நண்பர்களோடு எனக்கும் அந்த விசயம் பற்றிய ஞானம் இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லத் தேவையாக இருந்தது, என்கிறளவில மட்டுமே உதவியதாக இன்று அவர்கள் அறிந்து வைத்திருக்கலாமல்லவா?

அப்படி இருக்கும் பொழுது, இன்றைய இளைஞனான தன் மகன் ஒரு படி மேலே போய் தான் செய்ததையே மேலும் இறுக்கம் கொண்டு நன்றாக இன்று வாழும் ஒரு வாழ்க்கையில் எந்தவித ப்ரக்ஞையுமில்லாமல் வாழ்கிறானே என்று அறியும் பொழுது, தன்னை முட்டாளாக்கி கொண்டேனும் அந்த நாலும் தெரிந்த, வளர்ந்த மகனுக்கு உணர்த்தும் நிலையிலேயே ஒரு தகப்பனாக இருக்கலாமல்லவா?

இன்றைய காலக் கட்டத்தில் ஒரே காரில் நாலு பேர் பயணிக்க நேர்ந்தால் அதில் மூன்று பேர் தன் தன் அலைபேசியில் அங்கு இல்லாத நண்பர்களுடன் பேசிக் கொண்டு செல்லும் நிலைக்கு நகர்ந்திருக்கிறது, மனித உணர்வுகள். மேலும் நம் சமூகத்தில் எத்தனை எத்தனையோ பொறுப்பற்ற பிள்ளைகள், தான் பிள்ளைகளை பெற்று விட்டு தனது பெற்றோர்களை விட்டு வளர்க்கும் நிலையில் எத்தனையோ பேர் இருக்கிறோம். இவர்களுக்கு அந்தப் பெரியவர்களின் மனக் கஷ்டத்தை எந்த நாளில் யார் விளக்குவது, தன் பொறுப்பேற்று தனது வாழ்க்கையை வாழ கற்றுக் கொடுப்பதின் பொருட்டு.

இந் நிலையில் தன் மகன் என்ன தொலைக்கிறான் என்பதனை விளக்க அந்த குறும்படத்தில் வந்த அப்பா, தன் மகனிடத்தில் ஏன் அப்படி ஒரு நகர்வை நிகழ்த்தியிருக்கக் கூடாது. பொறுமையும் சகிப்புத் தன்மையின் உன்னதம் விளக்க. ஏனெனில் அந்த மகன் பொருட்டு - அவன் திருமணமானவனா, குழந்தைகளிடத்தில், வேலை பார்க்குமிடத்தில் எப்படி பரபரப்பாக, சிடு மூஞ்சியாக நடந்து கொள்கிறவனா என்கிற போக்கில் எதுவுமே விளக்கப்பட வில்லை.

அந் நிலையில், அந்த ஒரு காட்சியைக் கொண்டு பார்க்கும் தருணத்தில் தன் அப்பா ஏன் அப்படி நடந்து கொள்கிறார், தன் கவனத்தைப் பெறவா என்கிற ( attention seeking strategy - குழந்தைகளும் அப்படித்தானே) ஒரு சிறு எண்ணம் கூட இல்லாமல் நடந்து கொள்ளும் பொழுது, அவரை விட வயதில் சிறிய குழந்தைகளிடம் எப்படியாக நடந்து கொள்வான் அந்த மகன் என்று கருதி இந்தப் பாடத்தை வழங்க வேண்டுமென எண்ணி ஏன் அந்த அப்பா அப்படி ஒரு நாளில் அது போன்ற ஒரு நிகழ்வைக் கொண்டு அரங்கேற்றியிருக்கக் கூடாது என்பதனைப் போலத்தான் என்னால் உள்வாங்கிக் கொள்ள முடிந்தது.

அங்கே அந்தத் தகப்பன் எதனையும் எதிர்பார்த்து அப்படியாக நடந்து கொண்டதாக தெரியவில்லை. நீ என்ன செய்கிறாய் என்பதனை உணர்ந்து கொள் என்பதனை உணர்த்த ஒரு சரியான வாய்ப்பை பயன் படுத்திக்கொண்டார் என்பதாகத்தான் பார்க்க வேண்டும். பெரியவர்கள் எப்படியாக தன் பிள்ளைகள் வளர, வளர ஒதுங்கிக் கொள்கிறார்கள் - பிள்ளைகள் தோளுக்கு மேல் வளர்ந்து விட்டது, சுயமாக நிற்க ஆரம்பித்துவிட்டது, நல்ல வேலையில், சம்பளத்தில் தன்னை விட சில செய்ய முடியாத விசயங்களை எல்லாம் செய்து வருகிறது என்று எண்ணி அந்நியமாக தன்னை தூரமே நிறுத்திக் கொள்கிறார்கள்.

அவ்வாறாக ஒதுங்கிக் கொள்வதற்கு பிள்ளைகளின் நடவடிக்கைகளும் ஒரு காரணமாக அமைந்து போகிறது. இந் நிலையில் சில முக்கியமான விசயங்களை தொலைத்துக் கொண்டிருக்கும் வளர்ந்த பிள்ளைகள் வாழ்வியல் சார்ந்து எல்லாமே அது அறிந்து கொண்டதாக நினைத்து எப்படி வெட்டி விலகி விட முடியும்? மனித உறவுகளின் பொருட்டு, வாழ்வை முன்னமே தனது தனிப்பட்ட சிந்தனையின் வழியாக அணுகி எதன் சாரம் அதிக, நீட்டித்த இன்பத்தை வழங்குகிறது என்று உணர்ந்த தனது பெற்றோர்களின் ஒரு சில டச்'கள் இல்லாமலே எப்படி தான் தோன்றித் தனமாக இது போன்ற வளர்ந்த பிள்ளைகள் வாழ்ந்து காட்டி விட முடியும்?

எனவே, வளர்த்து விட்டபின் பெற்றோர்கள் சுத்தமாக எல்லாமே அவர்களுக்குத் தெரியும் என்று எந்த எதிர்பார்ப்புமில்லாமல் வாழ்கிறேன் பேர்வழி என்று ஒதுங்கி இருப்பதும் தவறு, இன்று இளைஞ(ஞி)னாக, தந்தையாக(தாய்) பொறுப்பெடுத்துக் கொண்டவர்களும் பெரியவர்களை ஒதுக்கித் தள்ளுவதும் தவறாகப் படுகிறது எனது பார்வையில். இது போன்ற பாடங்களை வழங்குவதிலும், பெற்றுக் கொள்வதிலும் எந்த விதமான எதிர்பார்ப்போ, குறுக்கீடோ இல்லையென்றே கருதத் தோன்றுகிறது.

Thursday, January 08, 2009

போலித்தனங்களுக்கு முற்றுப் புள்ளியே முதுமை!

என்னைச் சுற்றி எப்பொழுதும் என் வயதை ஒத்தவர்களைக் காட்டிலும் என்னை விட வயதிற் மூத்தவர்களே நண்பர்களாக அமையப் பெற்றிருக்கிறேன். ஏறக் குறைய 9 வருடங்களுக்கு முன்பு நான் நியு யார்க்கில் இருந்த பொழுது தென் அமெரிக்காவிலிருக்கும் க்கயானா நாட்டிலிருந்து வந்த இந்தியர் ஒருவர் பழக்கமானார், வேலை பார்க்குமிடத்தில். அவருக்கு வயது சுமாருக்கு ஒரு 50 இருக்கலாம் அக் காலக் கட்டத்தில்.

பிறகு நான் இடத்தை மாற்றிக் கொண்டு மின்னஞ்சல் கொடுத்து விட்டு வந்ததோடு சரி. இட மாற்றலுக்குப் பிறகு ஆறு வருடங்களாக எந்தவொரு தொடர்புமில்லை. திடீரென்று ஒரு நாள் அவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல், நலம் விசாரித்து அதன் பிறகு மீண்டும் எங்களோட தொடர்பு இன்றும் தொடர்ந்து கொண்டிக்கிறது. ஆனால், பழகிய காலத்தில் நிறைய பேசியிருக்கிறோம், காலை எட்டுலிருந்து மாலை 7 மணி வரையிலும்.

அவரிடமிருந்து எனக்கு இந்த ஃபார்வேர்ட் மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றேன் இன்று காலை, படித்ததும் பகிர்ந்து கொள்ள வேண்டும் போல தோணியது அதனால் இங்கே உங்களின் பார்வைக்கு. ஆங்கிலதிலிருந்து தமிழுக்கு பிரிதொரு சமயம் மொழி பெயர்க்கலாம். ஏற்கெனவே படிக்க கிடைக்கப் பெற்றவர்கள், லூசுல விட்டுடுங்க :-).

....The other day a young person asked me how I felt about being old. I was taken aback, for I do not think of myself as old. Upon seeing my reaction, she was immediately embarrassed, but I explained that it was an interesting question, and I would ponder it, and let her know.

Old Age, I decided, is a gift.

I am now, probably for the first time in my life, the person I have always wanted to be. Oh, not my body! I sometime despair over my body, the wrinkles, the baggy eyes, and the sagging butt. And often I am taken aback by that old person that lives in my mirror (who looks like my mother!), but I don't agonize over those things for long.

I would never trade my amazing friends, my wonderful life, my loving family for less gray hair or a flatter belly. As I've aged, I've become more kind to myself, and less critical of myself. I've become my own friend. I don't chide myself for eating that extra cookie, or for not making my bed, or for buying that silly cement gecko that I didn't need, but looks so avante garde on my patio. I am entitled to a treat, to be messy, to be extravagant. I have seen too many dear friends leave this world too soon; before they understood the great freedom that comes with aging. Whose business is it if I choose to read or play on the computer until 4 AM and sleep until noon?

I will dance with myself to those wonderful tunes of the 60&70's, and if I, at the same time, wish to weep over a lost love ... I will.

I will walk the beach in a swim suit that is stretched over a bulging body, and will dive into the waves with abandon if I choose to, despite the pitying glances from the jet set. They, too, will get old. I know I am sometimes forgetful. But there again, some of life is just as well forgotten. And I eventually remember the important things.

Sure, over the years my heart has been broken. How can your heart not break when you lose a loved one, or when a child suffers, or even when somebody's beloved pet gets hit by a car? But broken hearts are what give us strength and understanding and compassion. A heart never broken is pristine and sterile and will never know the joy of being imperfect.

I am so blessed to have lived long enough to have my hair turning gray, and to have my youthful laughs be forever etched into deep grooves on my face. So many have never laughed, and so many have died before their hair could turn silver.

As you get older, it is easier to be positive. You care less about what other people think. I don't question myself anymore. I've even earned the right to be wrong.

So, to answer your question, I like being old. It has set me free. I like the person I have become. I am not going to live forever, but while I am still here, I will not waste time lamenting what could have been, or worrying about what will be. And I shall eat dessert every single day (If I feel like it) .

MAY OUR FRIENDSHIP NEVER COME APART ESPECIALLY WHEN IT'S STRAIGHT FROM THE HEART! MAY YOU ALWAYS HAVE A RAINBOW OF SMILES ON YOUR FACE AND IN YOUR HEART FOREVER AND EVER! FRIENDS FOREVER!...
.

Wednesday, October 19, 2005

முதுமை ஒரு சாபக்கேடா...?

முதுமை என்பது ஒரு அழகானதொரு விசயமென்பதை நான் பல சந்தர்ப்பங்களில் கவனித்து அதிசயித்தது உண்டு. அதே சமயத்தில் சில காணக் கூடாத விசயங்களையும் கண்டுணர்ந்தது உண்டு. இன்றைய சமூக அமைப்பு பெரும்பாலும் தன்னிச்சையாக இயங்கும் (கூட்டுக் குடும்ப அமைப்பிலிருந்து விலகிய) குடும்பங்களையே பெரிதும் சார்ந்துள்ளது. இது பல நிலைகளில் அம் மாதிரியான அமைப்பை அங்கீகரிப்பதும் யாவரும் அறிந்ததே.

இச் சூழ்நிலையில் ஒரு காலக் கட்டத்தில் 'திரைகடலோடியும் திரவியம் தேடு' என்பதற்கிணங்க ஒரு சில குடும்பங்களில் உள்ள ஒரு நபரோ அல்லது குடும்பமோ புலம் பெயர்ந்து சென்று அயல் நாடுகளில் அமர்ந்தார்கள், ஆனால் இன்றைய நிலையோ வேறாக இருக்கிறது. இன்று புலம் பெயர்தல் என்பது அயல் நாடுகளுக்குத்தான் என்ற நிலை மாறி இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் செல்வது அத்தியாவசியமாகி வருகிறது.

இதனால் பாதிக்கப் படுவது பெரும்பாலும் முதுமையில் காலம் தள்ளி வரும் வயதான பெற்றோர்கள்தான் என்பது சொல்லித் தெரிவதற்கில்லை. அவர்களை முதியவர்கள் காப்பகத்தில் பிடித்துத் தள்ளி விட்டு விட்டு நாம் right behind our own dreams since we have gotten our own wings.

இவ் விடத்தில் யாரைக் குற்றம் கூறுவது என்று எனக்கு விளங்கவில்லை. புலம் பெயர்தலால் அடையும் நன்மைகள் பலப்பல, அதே தருனத்தில் நாம் நமது பெற்றோர்களுக்கு கொடுக்கும் மன உளைச்சலுக்கும் நிம்மதியின்மைக்கும் அளவில்லைதான்.

வந்த இடத்தில் நன்றாக பணமும், பெயரும், வாழ்க்கைத் துணையும் நமக்கு அமைந்து விட்ட தருனத்தில் நாம் நமது எதிர் கால பத்தாண்டு திட்டத்தில் நம்மை தொலைத்துக் கொண்ட நேரத்தில் குரல் மக்கிப் போன அப்பாவின் ஞாபகம் கொஞ்சம் காணாமல் போனதில் வியப்பில்லைதான்.

இருந்தாலும் அவர்களுக்கென்று நம் வயதில் என்ன கனவு இருந்ததென்று நாம் அவர்களிடத்தே எப்பொழுதாவது வினாவி இருக்கிறோமா? அவர்களின் கனவின் விலையில் நம்முடைய வாழ்க்கை, அது தானே உண்மை.

அம்மாவிற்கு நெஞ்சு வலியென்றால் பணம் மட்டுமே அவரை குணப் படுத்திவிட முடியுமா? அதே சமயத்தில், யாரும் அவர்கள் அருகாமையில் இன்றி குறைந்த அளவிற்கே அவர்களுக்கும் தன் உடல் நலத்தைப் பற்றிய பிரக்ஞை இருக்கும் பட்சத்தில் அவர்களின் கதிதான் என்ன? Ignorant people just leave them alone என்று கூறி மூட்டை கட்டி அனுப்பி விடத்தான் முடியுமா? எப்படி எனக்கு நானே ஆறுதல் அளித்துக் கொள்வேன், ஏதாவது ஒன்று ஏடா கூடமாக நடந்து விட்டால்? அவர்களுக்கென்று கனவு இருந்திருக்காதா, நம் பிள்ளைகள் நம்மை வயதான கலத்தில் பக்கத்திலிருந்து காப்பாற்றுவார்கள் என்று?

இது இப்படியாக இருக்க அருகாமையில் இருக்க வாய்ப்பு கிடைத்தும் பெற்றோரைப் புறக்கணிக்கும் பிள்ளைகளை எந்தக் கணக்கில் சேர்ப்பது? எனக்கு தெரிந்து ஒரு கிராமத்தில் மூன்று பிள்ளைகளுக்கு தகப்பனான ஒரு பெரியவர் தனது இறுதி காலத்தில் தட்டை தூக்கிக் கொண்டு நேரத்திற்கு ஒரு வீட்டில் சோறு என்று அலைந்து திரிந்த கன்றாவியும் எனது சிறு வயதில் பார்க்க நேர்ந்ததுண்டு. இன்றும் இதில் விளங்காத ஒரு விசயம் அம் மூன்றில் ஒருவருக்கு கூடவா வாழ்வியல் சார்ந்த எதார்த்தம் புரியாது போயிருக்குமென்பது தான் அது?

நம் குழந்தை நாம் எப்படி இச் சமுதாயத்தில் வாழ்கிறோம் என்பதனை role model-ஆக நம்மை வைத்துதானே பார்த்துக் கற்றுக் கொள்கிறது "விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்" இதனை ஏன் நாம் மிகவும் தாமதமாகவே விளங்கிக் கொள்கிறோம்?

பி.கு: இங்கே மங்கையும், காட்டாறும் இதே லைனில் ஆளுக்கொரு பதிவும் பதிந்து வைத்திருக்கிறார்கள். (ஆகஸ்ட் 15, 2007 என் ஞாபகத்திற்காக இங்கு இந்த லிங்குகளை இணைத்துக் கொண்டுள்ளேன்).

Related Posts with Thumbnails