Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, February 01, 2023

ஏன் பேனா சினைவுச் சின்னம்

ஒரு பேனா இத்தனை பேரை அலற வைக்க முடியுமா? முடியுமென்றால் அந்தச் சமூகத்தில் ஏதோ பெரியளவில் சம்பவம் நிகழ்த்தப் பெற்றிருக்கிறது என்று தானே புரிந்து கொள்ள முடியும்?


பேனா என்ற ஓர் அடையாளம் எதனையெல்லாம் சுமந்து நிற்க முடியும்? பேனா - மனித குலத்தின் நாகரீக திசையறியும் திசைகாட்டி. ஒரு சமூகத்தின் மாண்பு! உண்மையை செதுக்கி வைக்கும் உளி. குரலற்றோருக்கு உரக்க குரல் கொடுக்கும் ஓர் ஒலி பெருக்கி. இருட்டின் அடர்வையொத்த பொய்களுக்குள் புதைந்திருக்கும் ஓர் பேரொளி.

பேனாவிற்கு ஏது வேலி, முகம்? ஒரு சமூகத்தில் ஒரு பேனா ஒரு தனி மனிதனின் முகத்தை உன் நெஞ்சிற்குள் ஈட்டியாக இறக்குகிறது என்றால் அந்த முகத்திற்கான சொந்தக்காரன் ஒரு சம்பவத்தை அந்தச் சமூகத்தில் செய்து இருக்கிறான் என்றல்லவா பொருளாகிறது.

எடுத்துக்காட்டாக நான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். முதல் முறையாக வேறொரு நாட்டிலிருந்து விமான மார்க்கமாக அந்த பேனா எழுந்து நிற்கும் கடற்கரையோரமாக பறந்து தரை இறங்குகிறேன் என்று வைத்துக் கொள்வோம்.

இப்பொழுது அந்தப் பேனா எனக்கு தரும் செய்தி என்னவாக இருக்கும்? எனக்கு அந்தச் சமூகத்தில் புழங்கிய எந்த ஒரு தனிப்பட்ட முகங்களும் பரிச்சயமில்லை எனும் போது, பொதுவான ஓர் ஐடியாவான பேனா - அதனையொட்டிய பெரும் மதிப்பு அந்தச் சமூகத்தின் பொருட்டு இயல்பாகவே ஏற்படுவதை என்னால் தவிர்க்க முடியாது இல்லையா?

ஏனெனில், வரலாறு தோறும் பேனாவிற்கான இடமப்படி. பேனாவின் மதிப்பு என்பது ஒளவையின் "கற்றாரை கற்றாரே காமுறுவர் என்பதற்கு ஒப்பான" ஓர் அண்டத்தின் குறியீடு!

இந்த தமிழ்நாட்டுப் பேனா உங்களுக்கு கலைஞரின் முகத்தை நினைவு படுத்துகிறது என்றால் அது மிகச் சரியாக அவரது விரலிடுக்களில் சுழன்று தன் கடமையை செவ்வனே செய்திருக்கிறது என்று விளங்குகிறது. 

அது வரும் தலைமுறையினருக்கும் இடம் சுட்டி பொருள் விளக்கியபடியே நிற்கும். நீங்கள் இன்னும் பலமாக ஓலமிட்டு கதறிக் கொண்டே இருங்கள்!


#பேனா_கலைஞர்

#நினைவுச்சின்னம்

#மீள்

Tuesday, February 16, 2016

பெருமரத்து ஒற்றை இறகு!






பூப்பதும் காய்ப்பதும் உதிர்வதும்

முப்பருவமெனினும்

உதிர்வதை

கனமற்றதாக்கலாம்
பெரு மரத்து
பறவையொன்றின்
ஒற்றை இறகு
சப்தமற்று
தரையிறங்குவதைப் போல!









***************************




பெரும் மழைக்காடொன்றில்
அடர் மழை

தொடர் நுணல்கறங்கல்

மலை முகடுகளையும் பரப்பியபடியே

மறுமுனை 
ஆறு ஒன்றின்
கரையை கடந்து கொண்டிருக்கும்
தலைபிரட்டைகள்.

Monday, February 15, 2016

இதயம் பூட்டிய சிறுமி!




விண்மீனுக்கேயான
கதகதப்புடனான
சிறுமியொருத்தி
கதவுகளற்றப் பெருவெளியில்
பாட்டியொருத்தியின்
பாசவெண்பஞ்சின்
நேர்ப்பார்வையுடன்
பேரனைச் சிநேகம்
கொள்கிறாள்...
கனம்பொறுக்காத
வெண்பஞ்சு
அருகே நெருங்கி
நெக்குருகியதில்
அகம் கண்ட சிறுமியின்
உடலெல்லாம் இதயம்!

**************************************






துளிர்த்து பச்சையம் அதீதம் ஊட்டி

விருட்சமாகி
வானைநோக்கி  பரந்து விரிந்து
மொட்டாகி, பூவுமாகி,
காயாகி, கனியுமாக்கி
யாவும் கடந்து
எல்லாம் அறிந்தோமென
நினைவெட்டிய நாளில்
ஒரு மாலையுடைத்த
திடீர் மழையில்
சிலிர்த்தெழுந்தால் மேனியெல்லாம்
மின்மினி பூத்தவாக்கில்
மீண்டும் துளிர்ப்பு!

Thursday, February 28, 2013

வாழ்வும் வண்ணங்களும்! Photos




கனவு நினைவுருவாக்கம்
கொள்கையில்
வாழ்வும் முதுமையும்
மிகுதிகளாக...







பரந்த வாழ்வு
பாடகசாலையில்
தூரிகைகளைக்
கொண்டு
வண்ண
திட்டமிடுகையில்
அதனதன்வழியில்
அனைத்தும்
தன்னையே
தீட்டிக்கொண்டது!


Wednesday, June 06, 2012

உள்ளொளி

Candle light - Reflection



நான் உனையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தேன்
முதலில் யார் கண் சிமிட்டுவதென
தூரத்தில் நின்றபடியே நீ வியர்த்து அடிபெருக்கும்
பொழுதெல்லாம்
நான் உயரத்தில் குறைந்திருந்தேன்

கருமையை நீ உண்டு கொண்டிருக்கும் வேளையில்
உனதிருப்பை நான் அழகாக்கிக் கொண்டிருந்தேன்

உனையுருக்கி உன் வாதையின் உக்கிரக் குழி பறிக்கையில்
அப்பொழுதும் அசையாமல் உன் அகம் காட்டியிருந்தேன்

தரை துடைத்து ஊண் திரட்டி பலமாக பெருமூச்செறிந்தாய்
கரும்புகை நாசிதொட புறவுலகம் முகம்சுழிக்க
போதுமென
புன்னகைத்தே இருள்துழாவி எனதுடலாக்கினேன்!


P.S: Discussion in Buzz ...ULLoLi...

Saturday, January 28, 2012

வியாபிப்பவன்



இரவும் குளிரும்
பனிக்குட திரவ மிதவையில்
பாதுக்காப்பாய் இருந்தயெனை
மஞ்சளொளியான்
ஆற்றின் சலசலப்பினூடே
வெள்ளிக்காசுகளை அள்ளிப்பரப்பி
இனமறியா பல
பறவை ஒலிக்குறிப்புகளுமாக
சங்கீத நாண்பூட்டியபடியே
முற்றத்திற்கு 
அனிச்சையாய் ஈர்த்து
பூனைப் பாதங்களையொட்டி
என்னுள்
அரவமற்று மெதுமெதுவாய்
உள்ளிறங்கி
தன்னையே கரைத்துக் கொண்டிருக்கிறான்.

Thursday, October 06, 2011

கால நிவாரணி...


எல்லாமே கடந்துதான்
வந்துவிடுகிறோம்
நேற்றைய கிளிமஞ்சாரோ
இன்றைய இளைப்பாறலுக்கான
சிறுகுன்றாகிப் போனது
எவரெஸ்ட் ஏறிய பொழுதில்...

மறக்கவே முடியாத
ஏதோவொரு பெருஞ்சுமை
இன்றைய இலவம்பஞ்சுப் பொதி.
மனப் பல்லிடிக்கில் அகப்பட்டு
என்றேனும்
சிரிப்பூனூடே எட்டித் துப்பப்படுகிறது...

சுவாசமென அள்ளி
நெஞ்சுருக அணைத்ததொன்று
மறுநாள்
காத்திராமல் ஏதோ ஒன்றால்
ஹீமோகுளோபினுள் கரைக்கப்பெற்று
பிராணவாயுவாய் மாறி விடுகிறது

சர்வரோக நிவாரணியாய்
காலம் மட்டும்
ஆற்றுதல் படுத்திக் கொண்டே
மூட்டு வலியை
ஆழப் பதிக்கிறது!




In Buzz...

Thursday, September 29, 2011

கழுகமைவு...


கசிந்தொழுகி முழங்கிக்கொட்டிய
மழை மரணிப்பின்
ஒரு பின் மாலைப்பொழுதில்
வெளுப்பேறிப்போன மென் தோல்
உதறிய உள் மனதுடன்
அவன் சாலையோரத்தில் அமர்ந்திருந்தான்...

ங்கோ வட்டமிட்டபடியே
கொழுத்த வார்த்தை ரணமேறிய
மனித மன ஊன் உண்ணும்
பூமி பார்ந்திருந்த பட்சியொன்று
அவனருகில் சிறகு சுருட்டி
வந்தமர்ந்து, நிமித்தமாய்
மனவாய் கிளறியது...

ஒப்புவிக்க ஒப்புவிக்க
ரணமருந்தியபடியே
கற்றறிந்த வித்தையின் 
இலக்கணப்படி
அவசரமாய்
சொற்களுக்குள் 
செருகிக் கொண்டிருந்தது...

சூலுற்றிருந்த கருவை இறக்கும் 
நாழிகையை எண்ணியபடி...

பட்சி அறிந்திருக்கவில்லை
தான் உண்டு தரிசித்தது
நொடிப்பொழுதைய
உதிரக் குழம்பையென...

எலும்பு மஜ்ஜை இன்னமும் மிச்சமிருக்கிறது...


P.S: Discussion in Buzz ...Kazhugamaivu...

Friday, September 16, 2011

காட்சிப்பிழை : A mystic Hanging




நேற்றைய நினைவுகள்
பனிப் புகையாக காற்றில் 
முன் இருப்பை ஞாபகமூட்டி
காலப்பெருவெளியில் கரைந்தபடி
நிழலாடிக் கொண்டிருக்கிறது...


புலன்களுக்குப் பிடிபடாத நாளைய
பயங்களும் நம்பிக்கைகளும்
இழுத்துக் கட்டிய
நுண்ணிழையில் ஊசலாடிக்காட்ட...


இன்றைய நாளோ
அவை மடிதுயிலுறங்கி
நேற்றும் நாளையுமான குவியத்தில்
சூன்யமாக்கி கல்லெறிய
மனக் குளத்தில் அலைகளாக
நினைவுக் கறையான்கள்
மெல்ல முன்னேறி
மென்றுகொண்டிருக்கிறது!


Friday, September 09, 2011

நாழிகைக்கடத்தி... w/photo

Time Machine... நாழிகைக்கடத்தி...

சதா எந்நேரமும் பழுப்பேறியபடி மேகங்கள்
தலைக்குச் சற்றே மேலாக
மிக அருகில் மேலும் மேலுமென
கருக்குளித்துக் கொண்டிருந்தது...

காலக் கடிகாரம்
என்னுள் கிரீச்சிட்டபடியே
மிக மெதுவாக
மூர்ச்சைக்கு அருகில் முன்னேறி
மிக அரிதாக
தனது கண்களை மூடிமூடித் திறந்தது...

கடிகாரம் தொட்டு
இப்படியும் அப்படியுமாக குலுக்கியதில்
ஓரிரு நிமிடம் குளக்கரையில்
அரைஞாண் கயிறு தெரிய
யார் தோட்டத்திலோ திருடிய
வெள்ளரிப் பிஞ்சுகளை குமித்து வைத்துவிட்டு
காலத்தை சுழற்றியடித்து நீந்திக்கொண்டிருந்தோம்...

மறு குலுக்கலில் டையும் கோட்டும் பாவித்தபடி
தினப்படி சாத்தியறைந்த அறைக்கதவிற்கு பின்னாக
வார்த்தைப் போர் நிகழ்வதாக நிழலாடி
வெளியே நிறுத்தியிருக்கும்
பென்ஸ் ஊர்தியின் அடுத்தமாத
தவணையை நினைவூட்டியது...

வெளியேறி ஊர்தியை
செலுத்தத் துவங்குகையில்
சிறுதூறலாக விழுந்து
தெறிக்கும் மழைத்துளிகள்
குளத்துச் சிறுவர்களின் சிரிப்பொலிகளாகி
அரைஞாண்கயிற்றின் ஞாபகமூட்டியபோது
காலக் கடிகாரம் இறந்தே கிடந்தது.

Monday, September 05, 2011

வார்த்தெடுப்பு...



தோலுரிப்பதற்கெனவே
எனைச் சுற்றிலும்
சிதில மனித மனங்கள்
தினப்படி உதிர
சிதிலங்களாக உதிர்ந்து விழும்
எதிர்பார்ப்புக் கோட்டைகள்
அந்த மணல் கோபுரங்களைப் போலவே...

பீராயப்படாத சிதில எச்சங்கள்
எப்பொழுதும் மன அழுக்குகளாக
கசிந்து படர்ந்து கொண்டேயிருக்கிறது...

துடைக்கத் துடைக்க
அகத்தின் மீது படியும்
அந்த கண்ணாடி நீராவியினையொத்தே...

கழட்டி முடிக்கும் நாளில்
புது நாணயமென
திறந்தே கெடக்கிறது
மணல் குழி!

Tuesday, August 30, 2011

துளியளவு தொங்கல் - w/photo

The Kin is Within_Rain Drop


எப்பொழுதும் வெடித்துவிடுவேனென்று
நுனிக்கிளையில் தொங்கியவாறே
என்னுள் பூமியை விரித்துக்கொண்டிருந்தேன்

இப்பொழுதோ அப்பொழுதோ
என்மீது விழும்
மற்றுமொரு மழைத் துளியொன்று
காரணமேயின்றி
என் உலகத்தை
சிதைக்க
என்னைச் சுற்றிலும் விழுந்து
கரைந்து கொண்டிருக்கின்றன...

தூரத்திலொருவர் தனது
நீண்ட நெடிய ஆசையாக
வீடொன்றை
நிதானமாக என்னுள்
எழுப்பிக் கொண்டிருந்தார்
எனதிருப்பையறியாது!





P.S: Discussion in Buzz ...ThuLiyalavu Thongal...

Monday, August 22, 2011

துளிர்ப்பு...




காய்ந்தபடியே மிதந்து கொண்டிருக்கிறேன்
இங்குமங்குமாக இலக்குகளற்று
ஆற்றின் இழுப்பிற்கிணங்க
கடந்து செல்லும் முற்கள்பட்டு
கடந்த வாழ்வின் ரணம் திறக்கிறது
மிதவை மட்டும் நிற்கவேயில்லை...

உதிரச் செல்களின் 
இண்டு இடுக்களிலெல்லாம் நொதித்தலின் 
கனமேற்றியபடியே
ஏதோ ஒரு சுழற்சியொன்று
என் கனமறிந்து உள்வாங்கி
எனதிடம் சென்றடைக்க
கண்ணாடி படிகமாக
வாழ்க்கை!

P.S: Discussion in Buzz ...ThuLirppu...

Thursday, August 04, 2011

சுயநலம்... (Inspired by ராமராஜன் பாடல்)





பரிணாமத்தின் உச்சத்தில்
மனித குலம்
வெற்றிக்கு பின்னான
மரபணுவின் சூலுக்குள்
பால் கறக்கும் முன்பும்
பின்புமாக
கன்றை அவிழ்த்துவிடும்
சூட்சுமத்தில்
கண் சிமிட்டி பறையடிக்கிறது! 

oo00oo




பி.கு: இந்த அரை டவுசர் ராமராசன் சார் பாட்டு ஒண்ணு பார்த்தேன். ரொம்ப பாசத்தோடு அப்படியே ஒரு பால் கறக்கிறவரின் திறமையோட கன்றுக் குட்டியத் தடவி, முத்தமிட்டுன்னு நடிப்பில சொக்க வைச்சு செய்யப் போற திருட்டு வேலைக்கு அச்சாரம் கொடுத்ததை பார்த்தவுடன் தோன்றியதுதான் மேலே உள்ள கவிஜா :). 


எப்படியெல்லாம் நம்மோட வேல நடக்க இந்த மூளை தகிடுதத்தங்களை யோசிச்சு வைச்சிருக்கு :) - அதுவே நம்மை இன்னிக்கு பரிணாம ஏணியின் உச்சத்தில் வைச்சிருக்கிது. இருப்பினும் ஒரு மானை விட, ஒரு புலியை விட நமக்கு உடல் சார்பில் எந்த ஒரு சிறப்பு தற்காப்பு உப உறுப்புகளும் கிடையாது என்பது உண்மைதானே! சுயநலமே உயர்விற்கு வழி :))


அப்படியே இந்த பாட்டையும் பாருங்க... ராஜா அசத்தியிருப்பாரு ...





Monday, August 01, 2011

மனித’கம்...



எட்டியும் எட்டாததுமாக
வாழ்வுப்படிகள் எட்டியே
வெளிக்கிடும் கணம்தோறும்
கொள்ளளவைக் கொண்டே
கிரகித்து வந்தேன்...

போர்வை விலக்கி
எட்டிப் பார்த்த அந்திமத்தில்
இருளடைந்த அகத்தைத்தாண்டி
அப்போதே
உள்ளே மலர்ந்து கொண்டிருந்தேன்...

அழையா நட்பென
திடுமென என் தோள்பற்றி
உலுக்கி உள்ளிழுத்தது மரணம்.


P.S: Photo Courtesy: Net


Monday, September 20, 2010

ஊடுருவி...



கிறுக்கனாக்கிப் போன அந்த
ஒற்றை வார்த்தையின் சுகத்தில்
அடர்வான ஒரு பாடலொன்றை கேட்டவாறு
காலச் சுழிப்பற்ற ஓர் ஆழ்கறுந்துளையின்
வழியாக பயணித்தவாறே அமிழ்ந்து திளைக்கிறேன்...

பெரும் வெடிப்பினைப் போல் எங்கும்
சிதறிய வெண் வண்ணத்தினூடே
கண் முன் குமிழ்ந்த உயிரினங்களுடன் ஒன்றித்து
உட்கொண்ட சங்கீதத்தில் நனைந்தபடி எனை தொலைத்து
வெளியேறுகையில்
வெளியெங்கும் சிதறியொடுங்கிய
வார்த்தை இடிபாடுகள் கிறுக்குநிலையின்
மகத்துவமறிய நிழலாடியது!

Wednesday, September 08, 2010

*வெளி...*


சோம்பலாக தலையுயர்த்தி
அவசரமொன்றும் எனக்கில்லை
என்றுணர்த்திவிட்டு அரைக்கண்ணால்
பார்த்தவாறு தூங்கிப்போனது
தெருநாயொன்று...

கண்ணில் அறையும்
வாஸ்து பார்த்து நிறமூட்டிய
வீடொன்றில் தேக்கிலிழைத்த
மரக் கதவை பிறாண்டியவாறு
தூக்க மருந்து கொடுத்தும்
திமிர்ந்து எழுந்த நாயொன்று
எஜமான் வரவிற்காய்
கோடிட்டு
பொழுதைக் கழிக்கிறது!




P.S: Photo Courtesy - Net

Related Posts with Thumbnails