Sunday, April 25, 2021

குடும்பக் கட்டுப்பாடு: தமிழ்நாடு பெற்றதும் இழந்ததும்!

ஒரு பிள்ளை போதும் என்ற மனதிற்கு தமிழகம் பெற்றதும் இழந்ததும் என்ன?

1965களில் குடும்பக் கட்டுப்பாடு இந்தியாவில் பெருமளவில் கொண்டு சேர்க்க
ஆரம்பிக்கப்பட்ட ஒரு திட்டமே Family Planning in India. ஒரு கால கட்டத்தில சிகப்பு நிற முக்கோண வடிவ தலைகீழ் சின்னத்தை சுவர்களிலும், பேருந்துகளிலும் பார்த்திருப்போம். அதற்கான வாசகமாக நாமிருவர், நமக்கிருவர் என்றும் பின்னாளில் ஒருவர் என்றும் சுருங்கியது.

இந்த நாற்பது ஆண்டு கால நடையில் தென்னக மாநிலங்கள் மிகத் தீவிரமாக பின்பற்றி, வடக்கு மாநிலங்களோட ஒப்பீடும் பொழுது உண்மையாகவே ஒரு பெண்ணிற்கு சராசரியாக 2 குழந்தைகள் என்ற அளவிற்கு வந்து விட்டோம்.

ஆனால், வட மாநிலங்களில் அது இன்னமும் 4 குழந்தைகளை கொண்டதாகவே இருக்கிறது. அதனால், தென்மாநிலங்கள் இழந்து நிற்பது நிதி ஒதுக்கீட்டில் பெரும் ஓட்டை. அடைய வேண்டியதை அடைந்து கொள்வதில் சுணக்கம்.

இப்பொழுது எது என்னை இதனை எழுத வைத்தது? அன்மையில் நான் கண்ணுரும், கேள்வியுறும் விசயங்கள், எனக்கு தெரிந்தவர்களின் குடும்பங்களிலேயே ஒரு பிள்ளையோடு நிறுத்திக் கொண்டவர்களின் கடைசி காலங்களில், அந்த ஒரு பிள்ளையும் வெளி நாட்டிற்கு எங்காவது செல்ல நேர்ந்து சிக்கிக் கொண்டால், அந்த பெற்றோர்களுக்கு நிகழும் இன்னல்களை பார்த்ததாலே இதனை எழுதத் தூண்டியது.

ஒன்றே போதுமென்று நிறுத்திக் கொள்கிறார்களே அவர்களின் மன வலிமைக்கு நமது மத்திய அரசு கொடுக்கும் நற்சான்றிதழ் என்னத் தெரியுமா? நமக்கு இந்தக் குடும்ப கட்டுப்பாட்டிற்கென வரவேண்டிய உபரி நிதியை பிடித்து வைத்துக் கொண்டதுதான். அது எங்கே போகிறது என்றால் அரசாங்க கனவை எட்டி அனைவருக்கும் ஒரு டீசண்டான வாழ்வுச் சூழலை ஈட்டிக் கொடுப்பதிலிருந்து பின்தங்கி இருக்க நேரிடும் கேட்டில் நிறுத்தி வைக்கிறது.

சொன்ன பேச்சை கேட்டு வளர்ந்து நிற்கும் பிள்ளைக்கு கொடுத்த உறுதியை நிறைவேற்றி, ஊக்குவித்து அடுத்த பிள்ளையையும் ஆர்வத்துடன் அந்தப் பாதையில் வளர உதவுவீர்களா அல்லது சொல்லுப் பேச்சை கேட்டதால் தண்டீப்பீர்களா?

சரி, கீழே இணைத்துள்ள பதிவையும் வாசிங்க, ரொம்ப எளிமையா வடக்கத்தியர்களுக்கும், தென்னியந்திர்களுக்குமான அப்பம் பிச்சிக் கொடுப்பதில் எப்படி மத்திய அரசு கையாள்கிறது என்பதை, குடும்பக் கதை மாதிரி சொல்லி புரிய வைச்சிருப்பாங்க... 

••••••©©©•••••••

மகனே தென்னவா, என் பிள்ளைகள் உங்கள் இருவரையும் ஒன்று போலவே படிக்க வைத்தேன்.

நீ படிப்பில் சிறந்து விளங்கினாய்.பட்டங்கள் பெற்றாய்.பார்ப்போர் பொறாமைப்படும் பணி,பதவிகள் என்று உச்சம் தொட்டாய்.நல்ல வருமானம் திட்டமிட்ட வாழ்வு.அளவோடு இரு குழந்தைகள் அதனால் அளவில்லா மகிழ்ச்சி.


உன் அண்ணன் மூத்தவன் வடமாக்கானை நினைத்து பார்க்கிறேன்.அவனுக்கு படிப்பு துளியும் ஏறவில்லை.அதனால் ஒழுங்கான வேலை கிடைக்கவில்லை.போதிய வருமானமின்றி வாய்க்கும் வயிற்றுக்கும் அல்லாடுகிறான். போதாக்குறைக்கு வெளியில் தான் வேலையில்லை என்று வீட்டில் வத வதவென்று ஒன்பது பிள்ளைகளை வேறு பெற்று போட்டுவிட்டான்.தரித்திரம் அவன் வீட்டில் தாண்டவமாடுகிறது.

என்ன இருந்தாலும் அவன் உன் உடன்பிறந்தான் இல்லையா?அவனும் அவன் பிள்ளைகளும் பசி, பட்டினியின்றி நிம்மதியாய் உறங்க உதவி செய்ய வேண்டியது உன் கடமையல்லவா? பண்டிகை காலங்களில் பரதேசி போல் அல்லாது குடும்பத்தோடு அவன் நல்ல துணி உடுத்துவதும் நீ செய்யும் உதவியில் அல்லவா இருக்கிறது?

ஆகையினால் நான் பெற்ற மகனே உன்னை உரிமையோடு இரண்டு விஷயங்கள் கேட்கிறேன்.

முதலாவது,உன் வருமானத்தில் முக்கால்வாசியை அவன் வசம் ஒப்படைத்து விடு.ஏனென்றால் அவன் உன்னை விட ஏழு பிள்ளைகள் அதிகம் பெற்ற உன் அண்ணன்.

இரண்டாவது நாம் வெளியே செல்லும்போது சப்பாத்தி சாப்பிட வேண்டுமா? இட்லி,தோசை சாப்பிட வேண்டுமா? என்பதையும்,சைவம் சாப்பிடலாமா அல்லது ஆட்டுக்கறி,மாட்டுக்கறி உள்ளிட்ட அசைவம் சாப்பிடலாமா என்பதையும், சினிமாவுக்கு சென்றால் தமிழ் சினிமாவா அல்லது ஹிந்தி சினிமாவா என்பதையும் உன் அண்ணன் வடமாக்கானே முடிவு செய்யட்டும்.எண்ணிக்கையில்   நாங்கள் அதிகம் அல்லவா? ஒன்பது பிள்ளைகள் தம்பதி இருவரோடு என்னையும் சேர்த்தால் பன்னிரண்டு பேராகிவிடுகிறோம்.ஆனால் நீங்களோ இரண்டு பிள்ளைகள் மனைவியோடு நால்வர் தானே? என்ன நான் சொல்வது?

என் அருமை மகனே தென்னவா, படித்தவன்,உலகம் முழுதும் சுற்றி பலவற்றையும் கற்று தேர்ந்தவன்,கை நிறைய சம்பாதிக்கறவன் என்ற இறுமாப்பில் என் வார்த்தையை மீறி உன் அண்ணனை,என்னை அவமதித்து விடாதே.அது நம் கூட்டு குடும்பத்திற்கு மிகப்பெரிய கேவலத்தை தேடித்தரும் என்பதை அறியாதவனா நீ?

கருப்பு வெள்ளை காலத்தில் கூட இப்படி ஒரு சென்டிமெண்ட் வசனத்தை அப்பா ரங்காராவ் பேசினால் மகன் சிவாஜியோ,ஜெமினியோ, ஏவிஎம் ராஜனோ கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

MR ராதா பாணியில் சுத்த நான்சென்ஸ் என்று உதறித்தள்ளிவிட்டு தனிக்குடித்தனம் போய் விடுவார்கள்.

தமிழ்நாட்டு விஷயத்தில் மத்திய ஒன்றிய அரசு இப்படித்தான் நடந்து கொள்கிறது.நீ அரிசி கொண்டு வா நான் உமி கொண்டு வருகிறேன் இரண்டையும் 

கலந்து ஊதி ஊதி சாப்பிடலாம் என்று 

நம் வளங்கள் எப்படி கொள்ளையடிக்கப்படுகிறது?

நாசகார திட்டங்கள் ஏன் இங்கு வலிந்து திணிக்கப்படுகின்றன?

கல்வியிலும்,மருத்துவத்திலும் முன்னேறிய மாநிலம் இப்போது ஏன் திட்டமிட்டு காயடிக்கப்படுகிறது?

உணர்வோமா? தெளிவோமா?

~ FaceBook via  யவன குமாரன்

Wednesday, April 14, 2021

தமிழ் புத்தாண்டு தை மாதமா, சித்திரையா? Know Your Tamil New Year!

 தமிழ்ப்புத்தாண்டு தை மாதமா? சித்திரை மாதமா? 

ஒருமுறை நாரதர், 'கடவுள்' கிருஷ்ணரைப் பார்த்து, "நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டாராம். 

அதற்குக் கிருஷ்ணர், "நான் உடன் இல்லாமல், வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தாராம்.

ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி "நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்" என்றாராம்.

கிருஷ்ணர் நாரதரை "யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்" எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினாராம் . பின் 'கடவுள்' கிருஷ்ணருடன் அறுபது வருடம் உடலுறவு கொண்டு , அறுபது மகன்களைப் பெற்றாராம். அவர்கள் பிரபவ தொடங்கி அட்சய முடிய என பெயர் பெற்றார்களாம்.

இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமாகும் வரம் பெற்றார்களாம். இதுதான் சித்திரையை புத்தாண்டு என்று சொல்வதற்கு சொல்லப்படும் புராணக்கதை. 

அப்படியாகக் கிருஷ்ணர் நாரதரை 35 வது ஆண்டில் கூடிப் பெற்ற பிள்ளைதான்  இன்று பிறந்த பிலவ ஆண்டு. இந்தக் கதைக்கு ஆதாரம் எது?

சென்னை பச்சையப்பா கல்லூரியில் தமிழ் பண்டிதராகப் பணியாற்றிய ஆ.சிங்காரவேலு முதலியாரால் தொகுக்கப்பட்டு, இராமநாதபுரம் சேதுபதி பரம்பரையில் வந்த பாண்டித்துரை தேவர் உதவியால் 1910 வெளியிடப்பட்ட நூல் அபிதான சிந்தாமணி.

அபிதான சிந்தாமணி நூலின் 1392 ம் பக்கத்தில் தான், வருடப்பிறப்பு குறித்த, மேற்கூறப்பட்ட இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது. 

60 பெயர்களில் பிரபவ தொடங்கி அட்சய வரை எதுவும் தமிழ் பெயர் இல்லை.

1. பிரபவ 2. விபவ 3. சுக்கில 4. பிரமோதூத 5. பிரஜோத்பத்தி 6. ஆங்கீரஸ 7. ஸ்ரீமுக 8. பவ 9. யுவ 10. தாது 11. ஈஸ்வர 12. வெகுதான்ய 13. பிரமாதி 14. விக்கிரம 15. விஷு 16. சித்ரபானு 17.சுபாணு 18. தாரண 19. பார்த்திப 20. விய 21. சர்வகித்து 22.சர்வதாரி 23. விரோதி 24. விக்ருதி 25. கர 26. நந்தன 27. விஜய 28. ஜய 29. மன்மத் 30. துர்முகி 31. ஹேவிளம்பி 32. விளம்பி 33. விகாரி 34. சார்வரி 35. பிலவ 36. சுபகிருது 37. சோபகிருது 38. குரோதி 39. விசுவாசு 40. பராபவ 41. பிலவங்க 42. கீலக 43. செமிய 44. சாதரண 45. விரோதிகிருது 46. பரிதாபி 47. பிரமாதீச 48. ஆனந்த 49. ராஷஸ 50. நள 51. பிங்கள 52. காளயுக்தி 53. சித்தாத்திரி 54. ரெத்திரி. 55. துன்பதி 56. துந்துபி 57. ருத்ரோகாரி 58. ரக்தாஷி 59. குரோதன 60. அக்ஷய.


சித்திரையை ஆண்டின் தொடக்கமாக கருதுபவர்கள் இதைக் கொண்டாடிவிட்டுப் போவதில் பிரச்சனையில்லை. உலகில் பலபகுதிகளில் பலவிதமான ஆண்டு தொடக்கங்கள் கொண்டாடப்பட்டே வருகிறது. இதை தமிழ் புத்தாண்டு என்று சொல்வதில் தான் பிரச்சனை எழுகிறது.

எனவே தான் தமிழறிஞர்கள் பலகாலங்களில் கூடி தொடர் விவாதங்கள் நடத்தி, ஆய்வு செய்து, தை மாதமே தமிழ்ப்புத்தாண்டு என அறிவித்தார்கள். தமிழறிஞர்கள் யார்?

01. மறைமலை அடிகளார் (1921)

02. தேவநேயப் பாவாணர்

03. பெருஞ்சித்திரனார்

04. பேராசிரியர் கா.நமசிவாயர்

05. இ.மு. சுப்பிரமணியனார்

06. மு.வரதராசனார்

07. இறைக்குருவனார்

08. வ. வேம்பையனார்

09. பேராசிரியர் தமிழண்ணல்

10. வெங்காலூர் குணா

11. கதிர். தமிழ்வாணனார்

12. சின்னப்பத்தமிழர்

13. கி.ஆ.பெ. விசுவநாதர்

14. திரு.வி.க

15. பாரதிதாசனார்

16. கா.சுப்பிரமணியனார்

17. ந.மு.வேங்கடசாமியார்

18. சோமசுந்தர் பாரதியார்

19. புலவர் குழுவினர் (1971)


மலையகத்தில்...

01. கோ.சாரங்கபாணியார்

02. சா.சி. குறிஞ்சிக்குமரனார்

03. அ.பு.திருமாலனார்

04. பேராசிரியர் இர.ந. வீரப்பனார்

05. கம்பார் கனிமொழி குப்புசாமி

06. மணி. வெள்ளையனார்

07. திருமாறன்

08. இரெ.சு.முத்தையா

09. இரா. திருமாவளவனார்

10. இர. திருச்செல்வனார்

இவர்களோடு 500க்கும் அதிகமான தமிழறிஞர்கள் கூடி விவாதித்து இதை ஆரிய திணிப்பு என முடிவு செய்தனர். எனவே சித்திரை வருடப்பிறப்பினை விடுத்து தை முதல் நாளே தமிழாண்டின் தொக்கம் என்றார்கள். தை தொடக்கம் என்பதற்கான ஆய்வு என்ன? 

உச்சபட்சக் குரலெடுத்து பாவேந்தர் பாரதிதாசன் பாடினார்.

நித்திரையில் இருக்கும் தமிழா!

சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு

அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே

அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்

தரணி ஆண்ட தமிழனுக்கு

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!

என்றார்.

தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாள் என்பதை ஆறு சிறு பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தார்கள். 

1.வைகறை

2.காலை

3.நண்பகல்

4.எற்பாடு

5.மாலை

6.யாமம்

ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன.

(1 நாழிகை - 24 நிமிடங்கள்

60 நாழிகை - 1440 நிமிடங்கள்

இதனை இன்றைய கிருத்தவ கணக்கீட்டின் படி பார்த்தால்

1440 நிமிடங்கள்  என்பது

24 மணித்தியாலங்கள்

24 மணித்தியாலங்கள் -1 நாள்.

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள்.

ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ,  ஆண்டுக்குரிய தமது வாழ்வை, *ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்*.

1. இளவேனில் - (தை---மாசி)

2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை)

3. கார் - (வைகாசி - ஆனி)

4. கூதிர் - (ஆடி - ஆவணி)

5. முன்பனி (புரட்டாசி - ஐப்பசி)

6. பின்பனி (கார்த்திகை - மார்கழி)

மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை-  வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு.

சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள். 

காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகிறான். 

பண்பாட்டுப் பெருமைகொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள்.

தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டுத் தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம். சித்திரையை கொண்டாடுவதில் பிரச்சனையில்லை. ஆனால் அது தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாட இயலாது.

அபிதான சிந்தாணி கூறுவதன் படி,

நாரதரும், கிருஷ்ணரும் கூடிப்பெற்ற 60 பிள்ளைகளில், இன்று தொடங்கியிருக்கிற 35 வது ஆண்டுக்கு பிலவ என்று பெயர்.

பிலவ என்ற வடமொழிச் சொல்லுக்கு கீழறை என்று பொருள். கீழறை என்றால் பொந்து என்போமே அதுதான்.

அனைவருக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துகள்.

by Surya Xavier

🔹️🔶️🔹️🔶️🔹️🔶️🔹️

தமிழ்ப் புத்தாண்டு என்றால்...

*தெலுங்கில் எப்படி விளம்பி இருக்கு?

*கன்னடத்தில் எப்படி விளம்பி இருக்கு?

*ஹிந்தியில் எப்படி விளம்பி இருக்கு?

*இதன் மூலக் களவாணி, Sanskrit-இல் ஏன் விளம்பி/ विलंबी இருக்கு?

இது विलंबी = தமிழா?

இதுக்கு, புத்தாண்டு வாழ்த்துக்கள் வேற ஒரு கேடா?

🔻 அடுத்த புத்தாண்டு கொண்டாடப் போகும் 12 ராசி அன்பர்களே...

இதோ, புத்தாண்டின் Sanskrit பொருள்!

#சார்வரி / शार्वरी = "பலாத்கார எழுச்சி" (இதை கணிச்சி தான் ரஜினி எழுச்சி உண்டாக்க சொன்னாரா)

பயப்படாதீங்க!:)

அடுத்த வருசம் நல்ல பேரு அமையும்!

👉🏿 பிலவ / प्लव = "கீழ் ஓட்டை"

காமுகர்கள் எழுதிய சாஸ்திரங்களை..

புனிதம் என பூஜித்துக் கொண்டே இருங்கள்🤦‍♂️

வருஷப் பிறப்பு!

60 ஹிந்து (Sanskrit) வருஷங்களில்..!

👉🏿 பிராமண வருஷங்கள்= 15

👉🏿 க்ஷத்ரிய வருஷங்கள்= 15

👉🏿 வைஸ்ய வருஷங்கள்= 15

👉🏿சூத்திர வருஷங்கள்= 15

இவற்றில், சூத்திர வருஷங்களுக்கு, இழி பெயர்களே!

🔹️விகாரி= அசிங்கமான

🔹️சார்வரி= பலாத்கார எழுச்சி

🔹️பிலவ= கீழ் ஓட்டை

🔹️குரோதி= வன்மம் பிடித்தவள்

🔹️சார்வரி/ शार्वरी = தமிழ்ப் புத்தாண்டு எனில்..

*எப்படிச் சிங்களத்தில் அதே பெயர்?

*எப்படித் தெலுங்கில் அதே பெயர்?

*எப்படி ராஜஸ்தானத்தில் அதே பெயர்?

இந்த ஒரு கேள்வியைக் கேளுங்கோ!

பிறகு தெரியும்...

சார்வரி= தமிழ்ப் புத்தாண்டா? சம்ஸ்கிருதப் புத்தாண்டா? என்று!

சம்ஸ்கிருதம் தெரியுமா?

இல்லையேல், வாய்மூடி இருங்கள்!

விகாரி/ विकारि = அசிங்கம்

'எழில் மாறல்' -ன்னு தூய தமிழில் எழுதினா

அழகு போயிருச்சி-ன்னு தான்யா பொருள்!

அசிங்கம் இல்லைன்னு ஆயிருமா?

சார்வரி/ शार्वरी = வீறி எழல்

என்னா எழல்? எது வீறி எழல்?

பலாத்கார எழுச்சி இல்லைன்னு ஆயிருமா??

by

 Sirpi Rajan

Friday, April 09, 2021

தம்பீகளே இழப்பதற்கு இங்கே ஏராளமிருக்கிறது!


ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னா மெய் ஆகிடுமா? காமராசர் காலத்திற்கு பிறகு வளர்ச்சியே இங்கே இல்லையென்றால் எதனைச் சுரண்ட கட்டி எழுப்பிய அரசு கல்வி நிறுவனங்களை பட்டப் பகலில் ஜோப்படி செய்ய முயற்சிக்க வேண்டும்? ஒரு மாநில அரசே அந்த ஊர் மக்களின் உழைப்பில் உருவாக்கிய மருத்துவக் கல்லூரிகளில் எது போன்ற தேர்வுகளை நடத்தி மாணவர் சேர்க்கை செய்ய வேண்டுமென்ற உரிமையில் தலையை நுழைக்க வேண்டும்?
அரசாட்சி நடத்தவே தகுதியற்ற ஒருவருக்கு சரியான நேரத்தில் கோர்ட் தீர்ப்புகளை வழங்காமல் தள்ளிப் போட்டு, தேர்தலில் வெற்றியை வழங்கி, பிறகு அவரது மரணத்திற்கு பின்னாக, மீன் வலை போட்டு அள்ளியது போல அரசியல் ஞானமற்ற, அறமற்ற, எதிர்கால திட்டங்கள் ஏதுமற்ற பல சில்லுண்டித் திருடர்களை கொத்தாக வைத்துக் கொண்டு திரைமறைவு அரசியல் செய்வதா? அரசியல் அறம், மரபு?
இதனைச் செய்வதற்கு சிறிதும் அஞ்சாதவர்கள் மக்களாட்சியை எந்த குழிக்குள்ளும் தள்ளி புதைக்க மாட்டார்கள் என்பதில் என்ன சந்தேகம் இருந்திட முடியும்? ஒரு மாநிலம் கிடைத்த வளத்தைக் கொண்டு தன்னாலான அளவு வளர்ச்சியைக் காட்டி பிற மாநிலங்களோடு ஒப்பிடும் வாக்கில் சற்றே உயரத்தை காட்டியிருக்கிறது என்றால், அதனை மாடலாகக் கொண்டு தாங்கள் ஆளும் மாநிலங்களில் அவற்றை பின்பற்றி உயர்த்த நினைப்பார்களா அல்லது பிற பின் தங்கிய மாநிலங்களின் வரிசையில் அதனையும் வைத்து அழகு பார்க்க எண்ணுவார்களா?
பொய்களை பரப்பியே ஒரு சிறந்த நிர்வாகத்தை வழங்கிட முடியும் என்று யார் இவர்களுக்கு பாடம் எடுத்தது? வளர்ச்சி என்பது தன்னைச் சுற்றி நிகழ் காலத்தில் நாம் அனுபவிக்கும் வசதிகளைக் கொண்டு கண்டுணரும் ஒரு விடயம். அது கல்வி வசதியாகட்டும், மருத்துவ, சுகாதார வசதியாகட்டும் எல்லாவற்றையுமே சிறிது சிறிதாக கடினமான உழைப்பின் பெயரில் ஈட்டிக் கொள்வது. அதற்கு பல வருடங்கள் பிடிக்கும். பணத்தைக் கொட்டி ஊடகங்களில் போலியான பரப்புரைகளின் மூலம் அடைவது கிடையாது.
ஒரு நாட்டை கட்டியெழுப்பும் பொழுது, அது வரையிலும் சமூக சமநீதியற்ற ஒரு சமூதாயத்தில் அடையப்படாத விடயங்களான அணைகள், பள்ளிகள், மருத்துவம் ஏனைய வசதிகளுக்கென அடித்தளம் போடுவது என்பது ஓர் இயல்பான விடயம். அதுவும் போர்க்கால அடிப்படையில் சில துறைகள் பீரிட்டு வளர்த்தே எடுக்கப்பட வேண்டியதாக இருக்கும்.
உதாரணமாக கோயபல்ஸ் முறையில் தொடர்ந்து பரப்பப்படும் காமராசர் காலத்து பொற்கால துறைகளான அணைகட்டுகள் மற்றும் பள்ளிகள் திறப்பு. அதற்குப் பிறகு இத்துறைகள் எந்த மாற்றத்தையும் அடையவே இல்லை போன்ற ஒரு பிம்பத்தை கட்டி எழுப்புகிறார்கள். இது எத்தனை வடிகட்டிய முட்டாள்தனமான வாதம்? ஒரு மாநிலத்திற்கு முக்கிய அணைகட்டுக்களாக எத்தனை அணைக்கட்டுக்கள் தேவைப்படும். கிடைக்கும் நில அமைப்பு, வன வளம் அதனில் பெறப்படும் நீர் வரத்து, அந்த பூமியத்தை சுற்றியுள்ள மக்களின் வாழ்விடமென்று எத்தனையோ காரணிகளைக் கொண்டே ஒரு முக்கியமான அணைக்கட்டிற்கான அடித்தளம் அமைகிறது.
போகிற போக்கில் நினைத்த இடத்திலெல்லாம் அணைக்கட்டுக்கள் அமைத்து விட முடியுமா என்ன? இது எது போன்ற வாதம்? தெரிந்துதான் பேசுகிறோமா அல்லது மக்கள் அனைவரும் முட்டாள்கள், அடிப்படை அறிவே அற்றவர்கள் என்ற முறையில் பொய்யிலே அரசியல் அறமற்று தன் உடல் வளர்க்க பேசும் பேச்சா?
அந்த கால கட்டத்திற்கு பிறகு எந்த அரசும் எதுவுமே செய்யாமல் தான் நாம் உயிர் வாழ்ந்து, கல்வியறிவு பெற்று இன்று இப்படி வீண் வம்படித்து பிளவுகளை உருவாக்கி நம்முடைய வளங்களை வேற்று மாநிலத்து மக்கள் சூழ்ச்சியின் பால் பிடிக்க வழி கோலுகிறோமா?
ஒரு விடயத்தை பகிர்வதற்கு முன் அதில் எந்தளவிற்கு உண்மைத் தன்மை இருக்கிறது என்று அறிந்து கொள்ள குறைந்த பட்ச உழைப்பையாவது போட வேண்டாமா?
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க இப்பொழுது எந்த அரசியல் அறமுமற்று பொய் பிரச்சாரங்களை பரப்புவதற்கே பெரிய அளவில் தங்களுடைய நேரத்தையும், பணத்தையும் போட்டு அரசியல் வளர்க்கும் சூழலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழலிற்கு நாம் நகர்ந்திருக்கிறோம்.
கிடைத்த ஐந்து வருடங்களில் உங்களுடைய நாற்பது காலத்து கடின உழைப்பின் பெயரில் கட்டியெழுப்பிய, கோரிப் பெற்ற பல உரிமைகள் திரைக்கு பின்பாகவும், நம்முடைய கண்களுக்கு முன்பாகவும் கோமாளி அரசைக் கொண்டு பிடிங்கிக் கொண்டு செல்வதைக் காண்கிறோம்.
உணர்ச்சி வயத்தில் கூட்டத்தோடு சூழ்ச்சிக்கு இரையாகி பின்னால் திரும்பிப் பார்க்கும் பொழுது, இழந்ததை மீட்டெடுக்கவே மீண்டும் பல பத்தாண்டுகள் தேவைப்படலாம். முதலில் எதிரியை அடையாளம் காணுங்கள். யாரை அமர வைத்தால் தவறுகளை திருத்திக் கொண்டு சுயமான வளர்ச்சிக்கு நம்மை இட்டுச் செல்வார்களோ அவர்களை ஆதரியுங்கள். பிறகு உங்களுடைய பங்காளிச் சண்டையை வைத்துக் கொள்ளலாம்.

Related Posts with Thumbnails