| NK Dreams¨‘°ºO™ - Un Perai Sollum .mp3 | ||
| | ||
| Found at bee mp3 search engine |
என்னயப் பத்தி
சிதைந்த வரை
எப்பவும் படிக்கலாம்
- Fetna2009 (2)
- photography (26)
- அமெரிக்கா (9)
- அய்ன் ராண்ட் (2)
- அரசியல் (67)
- அறிவியலும் நானும் (42)
- அனுபவம் (105)
- இந்தியா (28)
- இந்தியா09 (4)
- இயற்கை (35)
- ஈழம் (9)
- உலகம் (25)
- எழுத்தாளர்கள் (27)
- ஒலிம்பிக்ஸ் (1)
- கதம்பம் (2)
- கலைஞர் (7)
- கவிதை (17)
- கவிஜா (34)
- காடும் நானும் (18)
- கீழடி (3)
- கைகலப்பு (16)
- கொரோனா (1)
- சதுப்பு நிலம் (2)
- சமூகம் (129)
- சரணாலயம் (3)
- சிறு கதை முயற்சி (1)
- சினிமா (31)
- சீரழிவு (18)
- செய்தி (42)
- செவ்விந்தியர்கள் (1)
- தஞ்சாவூர் (2)
- தமிழ் (1)
- தமிழ் விழா (2)
- தமிழ்நாடு (7)
- தாமரை (1)
- திராவிடம் (9)
- தீவிரவாதம் (10)
- தூக்குத் தண்டனை (1)
- தெளிதல் சார்ந்து (41)
- தொடரழைப்பு (8)
- நிகழ்வுகள் (109)
- நினைவோடை (19)
- நுண்மி (1)
- நோய் (8)
- படிமலர்ச்சி (14)
- பதிவர் வட்டம் (33)
- பயணம் (16)
- பரிணாமம் (14)
- புகைப்படங்கள் (32)
- புத்தகங்கள் (26)
- பூர்வகுடிகள் (2)
- பெரியார் (1)
- மக்களாட்சி (4)
- மதங்களும் நானும் (11)
- மருத்துவம் (2)
- முதுமை (13)
- மொக்கை (49)
- வலைச்சரம் (6)
- வன்முறை (14)
- வாசிப்பாளன் (36)
- விமர்சனம் (32)
- விளையாட்டு (4)
- வைரமுத்து (2)
- ஜாதி (7)
செம தீணி இங்கயும்
தெக்கிக்காட்டு நேரம்
Friday, July 23, 2010
புது ஃபேஷன் ஷெட்டி, ஐயர், ரெட்டி, மேனன்: Is it fool's identity?
Posted by Thekkikattan|தெகா at 12:10 PM 14 comments
Labels: அனுபவம், உலகம், சமூகம், தெளிதல் சார்ந்து, நிகழ்வுகள், ஜாதி
Monday, July 19, 2010
இன்செப்ஷன் - Inception (the movie)...
ஞாயிற்றுக் கிழமை ஒரு தாத்தாக் கூட பேசிட்டு இருந்தேன். அவரு அறிவியல் புனைவுப் படங்களையும், மெதுவாக நகரும் ட்ராமா சீரிஸ் படங்களையும் விடாம பார்த்திட்டு வந்து என்கிட்ட சிலாகிச்சு பேசுவார். இந்த வாரம் அப்படியாக சிலிர்த்துப் பேசின படம்தான் Inception. நான் ஏற்கெனவே கொஞ்சம் முன் ஓட்டம் பார்த்து வைச்சிருந்தேன். அதில இயற்பியல் சார்ந்த கோட்பாடுகளை உடைக்கிற மாதிரியான சில காட்சி அமைப்புகளும், நம்மோட கனவு நிலையில், உள்ளே புகுந்து நமது subconscious மனதில் இருக்கும் ரகசியங்களை கண்டறிந்து பெரிய பெரிய விசயங்களை திருடுவது மாதிரியான கதையும் பார்த்தே ஆகணும்மப்பாங்கிற ஆர்வத்தை ஊட்டியது.
இப்போ தாத்தா வேற ஆஹா, ஒஹோன்னு ஒரே பாராட்டா பாராட்டி தள்ளிட்டார். அதுவும் என்கிட்ட படத்தோட மேலோட்டமான கதையைச் சொல்லும் போதே, தன்னோட இரண்டு கைகளாலும் தலையை பிடிச்சிட்டு இடமும் வலமுமா ஆட்டின ஆட்டு என்ன நடக்கிதுன்னே தெரியல படத்தில just mind boggling, trying to get into a dream to dream to dream, ideas after ideas அப்படியாக படம் நகருதுன்னு சொல்லி பல முகங்களை ஒரே நேரத்தில காமிச்சார். இப்போ ’மைண்ட் வைரஸ்’ஆ (தொத்து வியாதி கணக்கா) எனக்குள்ளும் விதைக்கப்பட்டுருச்சா. பிறகென்னா, இரண்டரை வருஷங்களுக்குப் பிறகு முதல் முறையா இரவு ஒன்பதரை மணி படம் கடைசி பத்து நிமிடங்களுக்கு முன்னாடியாக முடிவு பண்ணி ஓடிப் போனேன் நான் மட்டும் தனியா பார்க்க.
படம் ரெண்டரை மணி நேரம் ஓடுதுங்க. படத்தில என்ன இல்லைன்னு கேக்கலாம். ஆக்ஷன், ஸ்பெஷல் எஃபெக்ட், தியரி, காதல் அப்படின்னு நேரம் போறதே தெரியாத அளவிற்கு நம்ம டைட்டானிக் படப் புகழ் லியோநார்டோ டிகாப்ரியோ கலக்கி கட்டிப் போடுறாரு. பையனுக்கு செம எதிர்காலம் இருக்குது! படத்தோட முழுக் கதை என்னடா தெக்கின்னு மட்டும் கேட்டுறாதீங்க. செம சுத்து சுத்தியிருக்காய்ங்க, ஒரே குழப்பம். எந்த கனவில இருந்து எந்த கனவுக்குள்ளர புகுறாய்ங்க, எந்த டைமிங்ல திரும்ப எழுப்பப்பட்டு மற்றொரு கனவிற்குள்ளர சுத்திட்டு இருக்காய்ங்கன்னு காட்டுத்தனமா மூளையின் நுயுரான்ஸ்களுக்கு செம வேலை கொடுக்கிறாய்ங்க. படம் ஆரம்பிச்சு முக்கா மணி நேரம் வரைக்கும் என்ன நடக்கிதுன்னே தெரியல!! :))
அதில ஒரு வசனம் பேசுவாங்க, யோசிச்சி பார்த்தப்போ அது எவ்வளவு உண்மை அப்படின்னு தோணுச்சு. உலகத்திலயே குணப்படுத்த முடியாத, வேகமா பரவுற தொற்று எதுன்னு கேட்டுப்பாங்க. அதுக்கு சொல்லுவாங்க, ‘மைண்ட் வைரஸ்.’ ஏன்னா, அது ஒருத்தனுக்குள்ளர முகிழ்ந்து ஒருவனிலிருந்து, மற்றொருவனுக்கின்னு விதைக்கப்படும் பொழுது அந்த எண்ணத்தை சுத்தமா அழிச்சு எடுத்துறவே முடியாது, அதே நேரத்தில மிக விரைவாகவும் பரவுமுன்னு பேசிக்குவாங்க. அது உண்மைதானே! அதுவும், இப்போ இருக்கிற இந்த இணைய தொடர்பில எவ்வளவு விரைவா ஒரு தனிப்பட்ட மனதின் எண்ணங்கள் எங்கிருந்து தொடங்கியதுன்னே தெரியாமயே காட்டுத்தீ மாதிரி உலகம் முழுக்கவுமே பரவும் சாத்தியங்களை கொண்டிருக்கிறதுன்னு கண் கூடாக பார்க்கிறோமே அண்மைய காலங்களில்.
அடுத்து இந்த கனவு நிலையில மற்றவர் உருவாக்கிய உலகத்திற்குள் புகுவது, அதுவும் நம்ம கனவில எப்படியெல்லாமோ உலகம் விசித்திரமா விரிய வைப்போமல்லவா அதையெல்லாம் திரைகாட்சிகளாக கொஞ்சம் ஆக்கி காமிக்க செஞ்சிருக்கிற முயற்சிக்கே இந்தப் படத்தை போயி பார்க்கலாம். அத்தனை காட்சிகள் வாயைப் பிளக்க வைக்கிறது. கனவாக வரும் இயற்பியல் விதிகளுக்கு எதிராக விரியும் தனிப்பட்ட மனதின் வீதிகளும், கட்டடங்களும், நகரங்களுமாக - கலக்கல் மண்டை யார் இந்தப் படத்தை ஸ்கிரிப்டா கொண்டு வந்தாரோ அவருக்கு.
கதாநாயகன் தன்னோட மனைவியை ஏதோ ஒரு கனவு நிலையில் தொலைத்து இருந்தாலும், தான் உருவாக்கிய கனவு உலகில் இன்னமும் வாழ்வதாக எண்ணும் ஒவ்வொரு முறையும் அவனாகவே அபாயம் சூழ்ந்திருக்கக் கூடிய ஒவ்வொரு இடத்திலும் அவளை கொண்டு வந்து அவனின் நிகழ் கால உணர்வு சார்ந்த(?) நிலைக்கே சேலஞ்ச் பண்ணிக் கொள்ளுவதும், அதன் மூலமாக தன்னோட காதல் வாழ்க்கையை சொல்லுவதும், முடியல்ல - ரேஞ்ச்!
படம் விட்டு வீட்டுக்கு வரும் பொழுது நான் என்னவோ என்னோட கனவில உருவாக்கி வைச்சிருந்த நகரத்திற்குள் நடமாடித் திரியற மாதிரி ஒரு ஃபீலின்ஸ் :) . என்னோட தொடர்பில வாரவங்க எல்லாம் என்னோட subconscious mindல உருவாக்கி வைச்சிருக்க நபர்கள்ங்கிற ரேஞ்சிற்கு யோசிக்க வைச்சிருச்சு. படிக்கிற நீங்களும்தாம்பா! பார்க்க முடிஞ்சவுங்க கண்டிப்பா தியேட்டர்ல போய்ப் பாருங்க. கொடுக்கிற காசிற்கு ஒர்த்!!
Posted by Thekkikattan|தெகா at 7:42 PM 8 comments
Labels: சினிமா, பதிவர் வட்டம், மொக்கை
Sunday, July 11, 2010
உலக உதை பந்தாட்டமும் இந்தியாவும் : FIFA Final 2010
இன்று நடந்த முடிந்த உதை பந்து போட்டியின் முடிவில் ஸ்பெயின் மக்களின் முகங்களில்தான் எத்தனை மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. ஸ்பானியார்ட்ஸ்ம் சரி அவர்களுக்கு எதிர்ப்பாக விளையாடிய டச்சுக்காரர்களும் சரி கொஞ்சம் கூட விளையாட்டில் தொய்வே இல்லாதபடிக்கு விறு விறுப்பாக நகர்த்திக் கொண்டிருந்தார்கள். கொடுக்கப்பட்ட எக்ஸ்ட்ரா பதினைந்து நிமிடங்களில் விளையாட்டாக சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஸ்பானியார்டின் Andres Iniesta பந்தை அலேக்காக தூக்கி உள்ளே போட்டு 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற காரணமாகிப் போனார்.
இறுதிகட்ட மேட்ச் என்பதால் அமளிதுமளிக்கு ஒன்றும் குறைச்சலே இல்லாமல் இருந்தது. உதை பந்தாட்ட நடுவர் Howard Webb விளையாட்டு வீரர்களை உச்சந்தலையிலிருந்து பார்த்தபடி கிட்டத்தட்ட 15 மஞ்சள் அட்டைகளையும், ஆட்ட முடிவின் 10 நிமிடத்திற்கு முன்பாக ஒரு சிவப்பு அட்டையையும் வழங்கி தனது இன்றைய தின இறுதி ஆட்டத்தினை கட்டுக்குள் வைத்திருந்தார்.
இது போன்று விளையாட்டுக்களை முன்னிருத்தி சர்வ தேச விழாக் கோலம் பூணும் ஒலிம்பிக்ஸ் மற்றும் சர்வ தேச உதை பந்தாட்டம் போன்றவைகளில் இந்தியாவின் சுவடுகளே தெரிவதில்லை. நான் இது போன்றே புலம்பி கடந்த ஒலிம்பிக்ஸின் போது ஒரு பதிவினை இட்டிருந்தேன். அதே போன்ற நடையில் இப்பொழுது இந்த உதை பந்தாட்டதின் இறுதி நாளில் என்னிடமிருந்து மீண்டும் ஒரு பதிவு வருவது என்னாலேயே தவிர்க்க முடியாததாகி விடுகிறது. ஏன் இது போன்ற எண்ணம் வர வேண்டும். புலம்பித்தான் என்னாவாகிவிடப் போகிறது என்று சமாதானம் கூறிக் கொண்டாலும், ஏன் இத்தனை நான்காண்டு, ஐந்தாண்டு சர்வ தேச விழாக்கள் வந்து போனாலும் நம்மால் கூறிக் கொள்ளும் படியாக எதனையுமே உலக அரங்கில் தனது இருப்பை காட்டிக் கொள்ளும் படியாக எதனையும் சாதித்துக் கொள்ள முடிவதில்லை.
தருமியின் தளத்தில் ஆக்டோபஸ் ஆருடம் பற்றிய பதிவின் கடைசி பத்தியில், ஆக்டோபஸ் கூறியதாக முன் வைத்த வாதங்கள்தான் எத்தனை உண்மையானது. அந்தப் பத்தி இப்படியாக ஓடியிருந்தது...
... தமிழ்ஸ்போர்ட்ஸ்: இந்திய கால்பந்து பற்றி ஏதாவது கணித்து கூற முடியுமா?
கவலைப்படாதப்பா! பிரமாதமான வளர்ச்சி எதிர்காலத்துல இருக்கு.முதல்ல நல்ல ஸ்டேடியங்களை கட்டுங்க.சிறுவர்களை பள்ளிப்பருவத்தில் இருந்தே,கால்பந்து விளையாட பழக்குங்க.உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குங்க.இந்த அரசியல்வாதிகளை கால்பந்து பக்கம் அண்ட விடாதீங்க.முதல்ல அந்த பிரபுல் படேல்ட்ட இருந்து தலைவர் பதவியை பிடுங்கி கால்பந்து மேல உண்மையான பற்று இருக்குறவங்ககிட்ட கொடுங்க.அது ஏன் உங்க நாட்டுல மட்டும் இந்த அரசியல்வாதிகள் கையில் விளையாட்டு இருக்குது?(பால் கேட்ட கேள்விக்கு நம்மட்ட பதில் இல்லை)...
அதனைப் படித்தவுடன் என்னுள் தவிர்க்க முடியாமல் வந்து போன ஒரு எண்ணம் என்னவெனில் 1986ல் மெக்சிகோவில் நடைபெற்ற உலக உதை பந்தாட்டதின் போது பள்ளி தலைமை ஆசிரியரை இரவில் எழுப்பி தொலைக்காட்சிப் பெட்டியை விளையாட்டு மைதானத்திற்கு நகர்த்தி வைக்கச் சொல்லி அவரைப் படுத்திப் பார்த்த காலங்களும், பள்ளி விட்ட மாலை வேளைகளில் உடற்பயிற்சி ஆசிரியரிடம் திட்டு வாங்கியேனும் காற்று இல்லாத பந்தாக இருந்தாலும் கிடைத்த இடத்தில் உருட்டிக் கொண்டு திரிந்த நாட்களும் அச்சு பிறழாமல் மனதில் வந்து போனது. இப்படி ஒவ்வொரு கிராமத்திலும், அது அரசாங்க பள்ளிகளாக இருக்கட்டும், சற்றே பெரிய நகரங்களிலுள்ள தனியார் பள்ளிகளாக இருக்கட்டும் இந்தியா முழுதிற்குமே எத்தனை கோடி மாணவர்கள் ஆர்வத்துடன் இருந்திருக்கக் கூடும் (இன்றும் கூட).
ஏன் இத்தனை மக்கள் தொகையைக் கொண்ட நாட்டில் இத்தனை பஞ்சம் சரியான விளையாட்டு வீரர்களை இனம் கண்டு சர்வ தேச அரங்கில் நிறுத்த. சாப்பாடு சத்து பத்தாமல், ஸ்டெமினா இல்லாமல் நாம் ப்ரைமரி மேட்சிற்குள் கூட நுழைய முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறோமா? இல்லை கிரிக்கெட்டை வைத்துக் கொண்டு அரசியல் பண்ணிக் கொண்டிருப்பதிலேயே காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறோமா? சமச்சீராக ஒரு நாடு உலக சபையில் தன்னை அடையாளம் காண வேண்டுமென்றால் எல்லா விசயங்களிலும் தன்னை முன்னிருத்திக் கொண்டால்தானே கொண்டிருக்கக் கூடிய இடத்திற்கு அழகு! இந்த லட்சணத்தில் இருந்து கொண்டு 2020ல் வல்ல அரசு என்று வேறு கூறிக் கொண்டிருக்கிறோம். மொதல்ல இந்த இத்துப் போன அரசியல் வாதிகளை ஒரு சுனாமி கொண்டு போனாத்தான் உண்டு.Posted by Thekkikattan|தெகா at 10:11 PM 26 comments
Labels: அரசியல், செய்தி, நிகழ்வுகள், விளையாட்டு
Wednesday, July 07, 2010
An Inspiring Speech, deliverance by Sunitha Krishnan
புற வெளிப்பாடுகளுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டு வாழும் நம்மிடையே... இது போன்ற மனிதர்களுக்கிடையேயும் நாமும் பங்கு போட்டுக்கிட்டு இருக்கோம் இந்த உலகத்தைன்னு நினைக்கும் பொழுது மூஞ்ச கொண்டு போயி எங்க வைச்சிக்கிறதின்னே தெரியல... நீங்களே பார்த்து தெரிஞ்சிக்கோங்க.
Posted by Thekkikattan|தெகா at 11:52 AM 5 comments
Labels: சமூகம், நிகழ்வுகள், பதிவர் வட்டம், வன்முறை
Monday, July 05, 2010
அட்லாண்டாவில் வான வேடிக்கை: 4th July Fireworks_Photos
என் வீட்டிற்கு பின்புறம் 1996ல் நடந்த அட்லாண்டா ஒலிம்பிற்கென வடிவமைக்கப்பட்ட சர்வதேச குதிரைகள் பூங்கா ஒன்று உள்ளது. அங்கு வருடா வருடம் ஜுலை 4ம் தேதி அனுசரிக்கப்படும் அமெரிக்கா சுதந்திர தினவிழாவிற்கென வான வேடிக்கை நடைபெறுவது வழக்கம். நான் பல ஆண்டுகள் எனது வீட்டின் கொல்லைப்புறமே நடைபெறும் இந்த நிகழ்ச்சியை ஒரு முறையேனும் சென்று பார்க்க வேண்டுமென ஆர்வம் கொண்டதில்லை.
மற்ற புகைப்படங்கள் இங்கே...
Posted by Thekkikattan|தெகா at 8:38 AM 4 comments
Labels: photography, அமெரிக்கா, அனுபவம், புகைப்படங்கள்
Tuesday, June 29, 2010
திருட்டுப் போன தெக்கி பதிவு: Plagiarism at Loose
Posted by Thekkikattan|தெகா at 10:13 PM 14 comments
Labels: அனுபவம், நிகழ்வுகள், பதிவர் வட்டம்
Tuesday, June 15, 2010
மலையாளம் to தமிழ் மொழி பெயர்ப்புத் தேவை...
எனது நண்பர் கார்த்திக் புகைப்பட துறையில் பரவலாக அறியப்பட்டுக் கொண்டிருக்கும் இளம் கலைஞர். அண்மையில் கூட தி ஹிந்து பத்திரிகையிலும், திருவனந்தபுரம் நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் பத்திரிகையிலும் அவரைப் பற்றியான செய்திகள் வெளியிட்ட நிலையில் இப்பொழுது திருவனந்தபுரம் லோகல் செய்தித் தாள்களிலும் பரவலாக பேசி அவரையே திக்கு முக்காட வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவரின் ஃப்ளிக்கர் அவசியம் விசிட் பண்ணப்பட வேண்டிய ஒரு தளம் இங்கே போயிப் பாருங்க...
ആര്.റിന്സ്
ഈ ഫോട്ടൊഗ്രാഫുകളില് നിറങ്ങളുടെ ആഘോഷങ്ങളില്ല. മിക്ക ചിത്രങ്ങളും കറുപ്പിലും വെളുപ്പിലും. അതിനപ്പുറം, ഈ ചിത്രങ്ങളിലെ കഥാപാത്രങ്ങളുടെ ജീവിതങ്ങള്ക്കും നിറങ്ങളില്ല. എല്ലാ ഫ്രെയ്മിലും മുഖങ്ങള് മാത്രം, നിസഹായതയുടെ മുഖങ്ങള്. ചില മുഖങ്ങളില് പടര്ന്ന ചിരിയില്പ്പോലുമുണ്ട് ദയനീയത. ഈ മുഖങ്ങള് കാര്ത്തിക് രാമലിംഗത്തിന്റെ ക്യാമറയില് പതിഞ്ഞവയാണ്.
ഈ മുഖങ്ങളിലേക്കു കാര്ത്തിക്കിന്റെ ക്യാമറ തിരിഞ്ഞത് ഏഴു വര്ഷങ്ങള്ക്കു മുന്പ്. എന്നാല് അതിനും എത്രയോ മുന്പേ കാര്ത്തിക്കിന്റെ മനസിന്റെ ഫോക്കസ് ഈ വിഷയങ്ങളിലേക്കു തിരിഞ്ഞിരുന്നു. നിസഹായരായ കുറേ വൃദ്ധജീവിതങ്ങളുടെ മുഖങ്ങളിലേക്ക് ക്യാമറ ഫോക്കസ് ചെയ്ത് ലോകത്തിന്റെ സൗന്ദര്യം എവിടെയാണെന്നു ചോദിക്കുന്നു കാര്ത്തിക്. ഓരോ മുഖവും ഓരോ കഥകളാണ് പറയുന്നത്. മുഖത്തെ ചുളിവുകള്, പൊട്ടിച്ചിരി, പുഞ്ചിരി, വിസ്മയം, സംഭാഷണഭാവം, വിശ്വാസം, ആവേശം, അഭിമാനം, നിസംഗത, ഭയം, വേദന, വിശ്വാസതീവ്രത....
സോഫ്റ്റ് വെയര് പ്രൊഫഷണലായ കാര്ത്തിക് രാമലിംഗം തമിഴ്നാട്ടിലെ തഞ്ചാവൂര് സ്വദേശിയാണ്. പോര്ട്രെയ്റ്റ് ഫോട്ടൊഗ്രാഫിയിലാണ് സ്പെഷ്യലൈസ് ചെയ്തിരിക്കുന്നത്. സ്ട്രീറ്റ് ഫോട്ടൊഗ്രഫിയില് പുതിയ പരീക്ഷണങ്ങള് നടത്തുകയാണ് കാര്ത്തിക് ഇപ്പോള്. കുട്ടിക്കാലത്തു തന്നെ സ്ട്രീറ്റ് ഫോട്ടൊഗ്രാഫിയില് അഭിനിവേശം. സ്കൂളിലേക്കുള്ള വഴിയിലെ കാഴ്ചകള് മനസിന്റെ ഫ്രെയ്മില് പകര്ത്തി. മനസിനെ സ്വാധീനിച്ച ആ ജീവിതക്കാഴ്ചകളാണ് പിന്നീട് ഫോട്ടൊഗ്രാഫിയിലേക്കു കാര്ത്തിക്കിനെ വഴിതിരിച്ചുവിട്ടത്.
പിന്നീടൊരു യാത്രയായിരുന്നു. തെരുവോരങ്ങളില് കാണുന്ന മനുഷ്യജീവിതത്തിന്റെ വികാരവിചാരങ്ങളിലേക്ക് കാര്ത്തിക്കിന്റെ ക്യാമറ നിരന്തരം സഞ്ചരിച്ചു. പ്രായമേറിയവരുടെ മുഖങ്ങള് ഒപ്പിയെടുത്തു. 2003 മുതല് പോര്ട്രെയ്റ്റുകള്ക്കു പുറകെ. മനുഷ്യന്റെ വിവിധ ഭാവങ്ങളെ നിരീക്ഷിക്കലായി പിന്നീട്. ഫോട്ടൊഗ്രാഫിയില് ഇതൊരു വേറിട്ട സഞ്ചാരം. ഇത്തരമൊരു ആവിഷ്കാരം അപൂര്വം. തിരുവനന്തപുരത്തെ അലൈന്സ് ഫ്രാഞ്ചെയ്സില് തുടരുന്ന കാര്ത്തിക് രാമലിംഗത്തിന്റെ ഫോട്ടൊ എക്സിബിഷന് “ഫെയ്സസ് ദാറ്റ് ആര് ലൈന്ഡ് വിത്ത് സ്റ്റോറിസ് . വേറിട്ടൊരു അനുഭവമാണു സമ്മാനിക്കുന്നത്. “ ലീവ് മി ‘ എന്നു പേരിട്ടിരിക്കുന്ന ഒരു മുഖചിത്രം. ഏറെപ്പേരെ ആകര്ഷിക്കുന്നു. പൊതുസമൂഹത്തെ നിഷേധിക്കുന്ന ഒരു വൃദ്ധന്റെ മുഖഭാവമാണ് ലീവ് മി. ഇത്തരത്തിലുള്ള ഇരുപത്തിരണ്ടു ചിത്രങ്ങളാണ് പ്രദര്ശനത്തിലുള്പ്പെടുത്തിയിരിക്കുന്നത്.
അലൈന്സ് ഫ്രാഞ്ചെയ്സിന്റെ ട്രാവലിങ് എക്സിബിഷന്റെ ഭാഗമായാണ് തിരുവനന്തപുരത്തും പ്രദര്ശനം ഒരുക്കിയിരിക്കുന്നത്. ഹൈദ്രാബാദിലും ബംഗളുരുവിലും ചെന്നൈയിലും പ്രദര്ശിപ്പിച്ച ശേഷമാണ് കാര്ത്തിക്കിന്റെ മുഖചിത്രങ്ങള് തിരുവനന്തപുരത്തെത്തിയത്.
സ്വന്തം മുത്തച്ഛനോടും മുത്തശിയോടുമുളള ബന്ധമാണ് പ്രായമേറിയവരിലേക്കു ക്യാമറ ഫോക്കസ് ചെയ്യാന് തന്നെ പ്രേരിപ്പിച്ചതെന്നു പറയുന്നു കാര്ത്തിക്. ഫോട്ടൊഗ്രാഫര് ആകണമെന്നത് എന്റെ തീരുമാനമായിരുന്നില്ല. മറിച്ച് എന്റെ ജീവിതത്തിനു ചുറ്റുമുള്ള സംഭവങ്ങള് ഫോട്ടൊഗ്രാഫിയെ ജീവിതത്തിന്റെ ഭാഗമാക്കുകയായിരുന്നു. സ്കൂള് കാലഘട്ടത്തില് ജ്യേഷ്ഠന്റെ 35എംഎം ഫിലിം ക്യാമറ ഉപയോഗിച്ചായിരുന്നു പരീക്ഷണങ്ങള്. ആളുകളെ നിരീക്ഷിച്ച് അവരുടെ ചിത്രങ്ങള് എടുക്കാനായിരുന്നു താത്പ ര്യം. മനുഷ്യന്റെ ഇമോഷന്സാണ് എന്നെ ആകര്ഷിക്കുന്നത്. അവ ഫോക്കസ് ചെയ്യാനാണ് താല്പര്യവും. ഫോട്ടൊഗ്രാഫിയാണോ ഐറ്റി പ്രൊഫഷണല് എന്ന പദവിയാണോ ഏറെയിഷ്ടമെന്നു ചോദിച്ചാല്, ഐടിയിലൂടെ ലഭിച്ച അറിവ് ഫോട്ടൊ ഗ്രാഫിയില് പ്രയോജനപ്പെടുത്താന് ഇഷ്ടം എന്നാണ് എന്റെ മറുപടി.
ഫോട്ടൊഗ്രാഫിയോടു പാഷനാണെങ്കില് പ്രകൃതിയോടു പ്രണയമാണു കാര്ത്തിക്കിന്. ചെന്നൈ ട്രെക്കിങ് ക്ലബിന്റെ ഫോട്ടോഗ്രാഫര് കൂടിയാണ് കാര്ത്തിക്.
Posted by Thekkikattan|தெகா at 2:27 PM 25 comments







