Thursday, December 31, 2020

கலைஞரின் இலவச மின்சாரமும் கமலையும்!

இந்த ஓவியத்தைப் பார்த்ததும் எனது மனது பின்னோக்கி ஓடி, இடை நிலை பள்ளி காலத்தில் உறைந்தது.

பள்ளி சென்று விட்டு வீட்டிற்கு வரும் மாலை வேலைகளில் சில நேரம் அது வரையிலும் எனது அப்பா சால் ஓட்டிக் கொண்டு இருந்தால், நானும் அந்தக் கயிற்றில் ஏறி அமர்ந்து நீர் இறைத்ததுண்டு. நிரம்பப் பொறுமையும், உடல் உழைப்பும் கோரும் வேலை. ஓர் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட, நாம் தொல்குடி வேளாண்மையாளர்களாக இருந்திருக்கிறோம் என்று இப்பொழுது எண்ணிப் பார்க்கும் பொழுது தோன்றச் செய்கிறது.
கலைஞரின் மின்சாரத் திட்டம் வருவதற்கு முன்பே அப்பா வேளாண்மையிலிருந்து விலகி விட்டார். இலவச மின்சாரம் வந்த பிறகு இப்பொழுது அந்த எருதுகளைக் கொண்டு கமலை ஓட்டும் பழக்கம் ஒழிந்தே போய் விட்டது என்றே கூறலாம். எங்குமே காண முடிவதில்லை!
அது மட்டுமல்லாது சிறிய அளவில் விவசாயம் செய்தால் கூட வீட்டில் உள்ள அனைவரின் உழைப்பையும், கவனிப்பையும் திகட்டத் திகட்ட கேட்டு நிற்கும் ஒரு தொழில் அது. பத்து வயது சிறுவனாகவே இருந்தாலும் கூட அவன் செய்வதற்கும் சில வேலைகள் காத்துக் கொண்டிருக்கும்.
இதெல்லாம் ஒரு பக்கம். ஆனா, என் அப்பா கூறுவதுண்டு வேளாண்மையில் பரக்கப் பரக்க பாடுபட்டாலும் படுக்கப் பாய் இருக்காது என்று. அப்படியான ஒரு தொழிலில் மேலும் அவர்களின் வயிற்றில் அடிக்க அம்பானி, அதானிகள் குந்துனாப்ல சுரண்டித் திங்க இந்த புதிய வேளாண் சட்டங்கள் உள்ளே நுழைக்கப் பட்டிருக்கிறது.

ஜாதியவாதிகளை பகடி செய்வது தகுமா?

படிக்கிற வயசில போராட்டம், அரசியல் தேவையா?

அரசியல் ஒரு சாக்கடை. படிக்கிற வயசில என்னாத்திற்கு கொள்கை, போராட்டம், ஆர்பாட்டம்னு "அதே கண்கள்" ரேஞ்சிற்கு நம்ம அந்நியன் சங்கர் பட அரசியல் டயலாக் மாதிரி, மத்யமர் மாதிரி குழுக்கள்ல ஓடும்.

இதோ கீழே ஒரு மாதிரி-
...கடை வியாபாரம் செய்வதற்கானது, அரசியல் பேசுவதற்கான இடமல்ல என்றார்.
மிகவும் சரியாகச் சொன்னீர்கள்.
கல்லூரிகளும் கல்வி கற்பதற்காகவே உருவாக்கப் பெற்றவை, அரசியல் பேசுவதற்கோ ஆர்பாட்டம் செய்வதற்கோ அது சட்டப்படியான இடமல்ல.
எனவே கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கல்லூரிக்குள் இருந்து கொண்டு அரசியல் பேசக்கூடாது, அரசியல் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது.
கல்லூரிகள் கற்பதற்கான இடம், அரசியல் செய்வதற்கான இடமல்ல. ஆசிரியர்கள் கற்பிப்பதற்கானவர்கள்.
அரசியலில் கொள்கை ரீதியான எதிர்ப்பு உள்ளதா ? கல்லூரிகளை விட்டு வெளியேறி வந்து நான்றாகப் போராடலாம் என்றேன்.
எனது நண்பருக்கு எனது இந்தப் பதிலில் திருப்தியில்லை.
நண்பர்களே உங்களுக்கு எனது பதில் சரியென்று தோன்றுகிறதா?
●●●●●●●●
அங்கே என்னோட ஒரு கமெண்ட் 👇. அப்படி கேட்டவர் ஒரு முனைவர், பேராசிரியர் என்பது கூடுதல் தகவல்.
அப்போ political science, law படிக்கும் வயசு என்ன? படிக்கும் வயதில் இந்திய constitutional rightsலிருந்து, இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு, யார் வந்தா போனான்னு பண்டைய கால வரலாறு என்று அனைத்தும் சொல்லிக்கொடுக்கப்படணும்.
ஓட்டுப் போடுற வயசு என்ன? அவர்களை இன்று அரசியல் படுத்தினாத்தானே படித்த இளைஞர்களை நாளை நம்மால் அடையாளம் காண முடியும். பின்பு ஏன் பெரும் பெரும் பல்கலைக்கழகங்களில் இடது, வலது (ABVP) போன்றவகளை புழங்க விடுகிறார்கள்? நம் வாழ்க்கையில் எதில் அரசியல் குறுக்கிடாமல் இருக்கிறது? எல்லாவற்றிலும் அரசியல் உண்டு. ஏதோ அடிச்சி விட்டுட்டு வந்திருக்கீங்க. @@@@@@@@@

ஜாதியக் கருவத்தில் அறியாமையின் உட்சத்தில், அறிவியல் உண்மைக்கு மாறாக, இன்னா ஜாதியில் பிறந்தவருக்கு இசை வரும், பணம் பண்ண வரும், வீரம் வரும், மலம் அள்ள வரும் என்று ஒரு நாகரீமடைந்த சமுகத்தில் சொல்லித் திரிபவர்களை கிண்டல் செய்யும் தொனியில் "நீயா நானாவில்" TRPக்காக செய்வது மனித செயலற்றது என்ற ரேஞ்சிற்கு இரக்கப்படுவது சரியா?
சரியில்லை. ஏன்? ஒரு கிராமத்திலிருந்து முதன் முறையாக விமானத்தில் பயணிக்கும் ஒருவர் தடுமாறுவதோ, அல்லது எஸ்கலேட்டர் ஏறப் பயப்படுவதோ புரிந்து கொள்ளக் கூடியது. நாமே நமக்கு பழக்கமில்லாத குளியலறையில் தண்ணீர் திறந்து விடும் புதிய திறப்பான்களை தடவி முழித்து கொண்டிருப்பதில்லையா, அது போலத்தான். அங்கே நவீன வாழ்வின் பொருட்டு ஒருவருக்கு கிடைக்காத, பொருட்கள் சார்ந்த அறிமுகமின்மை; உடனடியாக திருத்திக் கொள்வோம். அது சூழலின் பொருட்டு அமைவது அதனை கிண்டல் செய்தால், பகடி செய்பவரின் வெளி உலக ஊடலும் அடுத்தவர் பொருட்டு கரிசனமும் அற்ற நிலையை காட்டத்தக்கது.
அதே நேரத்தில் ஜாதிய மனநிலை என்பது திமிரின், மன நோயுற்ற நிலையின் உச்சத்தில் வருவது. அது சக மனிதனை தன்னை விட குறுக்கிப் பார்க்கும் புத்தியை தனக்குள்ளாகவே வளர்த்தெடுத்து போகும் போக்கில் அடுத்தவர்களை அந்த கண்ணோட்டத்தில் வைத்து பார்க்கச் சொல்லுவது. அவர்களுக்குத் தேவை திடுக் விளிப்பே...! அந்த "கர்வக்குமிழியை" சிறிதே நெருடி யோசிக்க வைப்பது. எனவே தவறாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

வேளாண் சட்டமும் விவசாயிகள் போராட்டமும்!

 கடல் அலையைப் போல் இங்கே விவசாயிகள் சாரை சாரையாக ஒரு நகரத்திற்குள் 1 கோடியே 30 லட்சம் எண்ணிக்கையில் படையெடுத்து செல்வதின் பின்னால் உள்ள வலியை, அவர்களின் பயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தனை பேரும் எவ்வளவு இன்னல்களை சகித்துக் கொண்டு இந்தப் போராட்டத்தை நடத்துவார்கள். எத்தனைப் பேருக்கு காய்ச்சல், கொரோனா தொற்றுப் பரவல், பசி, பட்டினி, இயற்கை அழைப்பிற்கு ஒதுங்க இடமில்லாமல் தவித்துக் கொண்டு இந்தப் போராட்டத்தை நடத்துவார்கள்.
ஆனால், குந்துனாப்ல தமிழ்நாட்டு அதிமுக (லாம்ப் போஸ்டுகள்) எம்பிக்கள், வேளாண் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவிக்காதேன்னு சொல்லிட்டு இருக்கும் போதே, ஓட்டுப் போட்டு சட்டத்தை அமுல் படுத்த உதவியாச்சு.
ஆனா, பசு குசுவின மாதிரி தனக்கும் இப்போ நடந்துக்கிட்டு இருக்கப் பிரச்சினைக்கும் சம்பந்தமே இல்லேன்னு பச்சைத் துண்டை கட்டிக்கிட்டு ஃபோட்டோ சூட்டும் பண்ணிக்கிட்டாச்சு.
ஆனா, அங்கே எலும்பைக் கடிக்கும் பனியில் உட்கார்ந்து இரவு பகலாக போராடும் அப்பாவி மக்களின் பாவம் உங்களைச் சும்மா விடாது! @@@@@@

இந்த வேளாண் சட்டங்கள் மட்டும் திரும்பப் பெற வில்லை என்றால், நியாய விலைக்கடைகள், அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள், மற்றும் சிறு வேளாண் குடிகள் உழவர் சந்தைகளுக்கு வந்து போவது எல்லாம் படிப்படியாக காணாமல் போய் விடும்.
எப்படி ஏன் எதற்காக என்று கேட்பவர்கள் மேற்கொண்டு படிங்க-
அம்பானி, அதானி, மோடி, அமித்து மற்றும் இதர குஜ் கேங்க், ருசி கண்ட பூனைகளாகி விட்டன. மக்களின் பொதுப் பணத்தை வைத்தே அரசு செய்யத்தக்க வியபாரத் சந்தையை எல்லாம் ஈசி பணம் செய்து கொழுக்க, அவர்களுக்குள்ளாகவே மடை மாற்றி கொள்கிறார்கள்.
அதன் ஒரு பகுதிதான் இப்பொழுது இந்த வேளாண் துறையிலும் கை வைப்பது.
ஜியோ வந்தப்போ என்ன நடந்தது ஞாபகமிருக்கா? அடிமாட்டு விலைக்கு டேட்டா கொடுத்து, இலவச டாக் டைம் அது இதுன்னு நீங்க எல்லாம், ஏனைய போட்டி ஆட்களை விட்டுவிட்டு வேக வேகாம அவன்கிட்ட வார மாதிரி செஞ்சான். அதற்கு நம்ம பிரதமரே விளம்பரத்தில வந்தார்! ஆண்டு போக என்ன செய்தான் போட்டிக் கம்பெனிகளை எல்லாம் போண்டியாக வைத்து விட்டு தான் மட்டுமே சந்தையில் நின்றான்.
அதேதான் இதனிலும் நடக்கப் போகிறது. நல்ல விலை நாங்களே கொடுத்து வாங்கிக் கொள்கிறோம்னு, ஏனைய போட்டி ஆட்களை எல்லாம் காலி செய்து விட்டு, பின்பு அவன் வைத்து வாங்குவதுதான் விலை. கொடுத்து விட்டு அவன் வைத்து விற்பது தான் விலை நமக்கு.
இதன் மூலமாக அடிப்படை விளை பொருட்களின் விலையை நேரடியாக மக்கள் சந்தையிலும், அதே நேரத்தில் பங்குச் சந்தையிலும் மனிபுலேட் செய்து கொள்ளை லாபம் பார்க்க முடியும்.
இப்பொழுது இது விவசாயிகளுக்குத்தானே பிரச்சினை என்று பொது மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாம், நாளை உங்கள் பைகளுக்கு வெடி வைக்கும் பொழுது இன்று குளிரில் வாடிக் கொண்டிருக்கும் பஞ்சாபிகளின் நினைவு வந்து போகும். என்னவொன்று that would be a bit too late!

எம்.ஜி.ஆரின் உள்ளும் புறமும் by கண்ணதாசன்

 கண்ணதாசன் இந்தப் புத்தகத்தில் முழுக்க முழுக்க சினிமா சார்ந்த எம் ஜி ஆரின் பல்டிகளைப் பற்றி மட்டுமே பேசி இருக்கிறார். அரசியல் சார்ந்து தொடவே இல்லை. சினிமாத்துறையில் எவ்வளவு சில்லரைத் தனமாக இருந்திருக்கிறார் என்பதைப் பற்றியே நேரடியாக விமர்சித்திருக்கிறார்.

MGR அந்தப் போலிப் பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே இந்தப் புத்தகத்தைக் கூட உளவுத்துறை, காவல்துறையைக் கொண்டு சந்தையில் இருந்து துடைத்தொழித்ததோடு, எழுதிய கண்ணதாசனையே அரசவைக் கவியாக பேரம் பேசி இருக்கிறார்.
இப்போ அப்படியே கண்ணாடிய கலைஞர் பக்கம் திருப்பினா, வனவாசம் வனவாசம்னு நேரடியாக கண்ணதாசன், கலைஞரின் பெயரைக் குறிப்பிட்டு சொல்லாததையெல்லாம் பொழிப்புரையாக எடுத்துக்கட்டி அவரின் மீது பழிக்க அந்த நூலை நடுநிலை கொமார்கள் பயன்படுத்தி வந்தன. அந்தப் புத்தகமும் இன்னும் அச்சில் தான் உள்ளது. மடியில் கனமிருந்தால்தான் வழியில் பயமிருக்கும் என்பதற்கிணங்க கலைஞர், காலத்தின் கைகளில் அதனை ஒப்படைத்து விட்டார்.
இதுவே ஒரு பெரிய மனுசனுக்கும், அல்பைகளுக்கும் உள்ள வித்தியாசம். இப்போ இந்தப் புத்தகத்தைக் கூட கலைஞர் நினைச்சிருந்தா பெரிய அளவில் மக்களிடத்தே கொண்டு போய் சேர்த்திருக்க முடியும் தானே? ஏன் அப்படி அவர் செய்யல அதான் கலைஞர். அவர் எல்லோருக்கும் பெய்யும் மழையாக இருந்திருக்கார்! நம்மை கண் திறந்து பார்க்க, பேசப்படாத பல பக்கங்களை விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்.
இப்போ ஏன் உள்ளும் புறமும் புத்தகம் பரபரப்பா பேசப்படுது? ஏன்னா, எல்லாரும் கலைஞர் மாதிரி இருந்திட முடியாது. சினிமாக்காரய்ங்க வேற அதே ஒப்பனையோட மடியில படுத்தேன், தோள்ல தூங்கினேன்னு படுவர் அடிச்சிக்கிட்டு கிளம்ப்பிட்டாய்ங்க!
சரி, எம் ஜி ஆர் பொருட்டு கண்ணதாசன் இதில் சினிமாத் துறையின் ஒரு பகுதியை மட்டுமே பேசி இருக்கார். எம் ஜி ஆரின் முழுப் கோணல் பகுதியும் கீழே உள்ள கட்டுரையில் மிக அழகாக தொகுத்திருக்காங்க... சுமதி விஜயகுமார்! அவசியம் படிங்க.
🔹️🔹️🔹️🔹️🔹️🔹️
பொதுவாகவே தமிழ்நாட்டில் திராவிட ஆட்சியை எதிர்ப்பவர்கள், நேர்மைக்கு எடுத்துக்காட்டாய் முன்னிறுத்துவது காமராஜரை தான். அவருக்கு முன்போ பின்போ நல்லாட்சி செய்த தலைவர்கள் யாருமே இல்லையா என்ற கேள்வியை புறந்தள்ளிவிட்டு பார்த்தால், காமராஜரின் ஆட்சி ஏழை எளிய மக்களுக்கான ஆட்சி என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் இப்போது புதிதாக, திரைத்துறையில் வாய்ப்பிழந்த நடிகைகள் தொலைக்காட்சிக்கு போவது போல் நடிகர்கள் சிலர் அரசியலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அதில் முக்கியமாக கமல் மற்றும் ரஜினி இருவரும் முன்னிறுத்தும் தலைவர் எம்ஜிஆர். உண்மையில் கமல் ரஜினியின் நோக்கம் என்ன , உண்மையான மக்கள் தொண்டிற்காகத்தானா , அப்படியென்றால் அவர்கள் மக்களுக்காக எதனை பிரச்சனைகளில் குரல் கொடுத்தார்கள் , எத்தனை போராட்டங்களை முன்னெடுத்தார்கள் என்பதையும் ஒதுக்கி விடுவோம். அவர்கள் முன்னிறுத்தும் எம்ஜிஆரின் ஆட்சி எவ்வளவு சிறப்பாய் இருந்தது என்பதை பார்ப்போம்.
ஒருவரின் திருமண வாழ்க்கை என்பது அவரவர் விருப்பம். பொது வாழ்க்கைக்கு வந்தாலும் அவரது திருமண வாழ்க்கை பற்றி விமர்சிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனாலும் கலைஞரின் மனைவியை ஒன்று , இரண்டு , மூன்று என்று வரிசை படுத்தும் யாரும் தவறி கூட எம்ஜிஆரின் மனைவியை பற்றி மூச்சு விடுவதில்லை. இரண்டு மனைவிகள் இறந்த நிலையில் எம்ஜியார் ஜானகியை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். அப்பொழுது ஜானகிக்கு திருமணம் ஆகி கணவரும் உயிருடன் தான் இருந்தார். எம்ஜியார் ஜானகிக்கு எழுதிய காதல் கடிதம் கையில் கிடைக்க ஜானகி அம்மையாரின் கணவர் பெரும் பிரச்சனையை உருவாக்கி விட்டார். நள்ளிரவில் தன மகனுடன் வீட்டைவிட்டு கிளம்பிய ஜானகி எம்ஜியாருடனான திருமணத்திற்கு முன்னர் 12 ஆண்டுகள் Living Togetherரில் இருந்தார். (உண்மையில் திருமணமாகி குழந்தையுடன் இருக்கும் பெண்ணிடம் காதல் வயப்பட்டு அவரையே காத்திருந்து திருமணம் செய்து கொண்ட எம்ஜியாரை பாராட்டியே ஆக வேண்டும்)
காங்கிரஸில் பற்று கொண்டு பின்னர் திராவிட கொள்கையால் ஈர்க்கப்பட்ட பல கோடி மக்களில் எம்ஜியாரும் ஒருவர்.திமுகவின் பிரச்சார முகமாகவே இருந்தார் MGR. அண்ணாவின் மறைவிற்கு பின்னர் திமுகவில் இருந்து பிரிந்து வந்த MGR அதிமுகவை துவங்கினார். பின்னர் அது அஇஅதிமுகவானது . எதனால் என்று கேட்டல் ரஜினி கமலுக்கு விடை தெரியுமோ தெரியாதோ தெரியவில்லை. இந்திராகாந்தி கொண்டு வந்த அவசர நிலை காலத்தில், மாநில கட்சிகளை கலைத்து விடுவார் என்கின்ற பயத்தில் அதிமுகவை அகில இந்திய அதிமுகவாக மாற்றிய வீரம் மிக்கவர் தான் திரையில் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆவார். இந்திரா காந்தி என்று இல்லை. மத்தியில் எந்த ஆட்சி இருக்கிறதோ அதற்கு எப்போதும் இணக்கமாகவே நடந்து கொள்வார்.
சர்க்காரியா கமிஷன் அனைவர்க்கும் தெரியும். பால் கமிஷன் மற்றும் ரே கமிஷன் எத்தனை பேருக்கு தெரியும். திருச்செந்தூர் முருகன் கோவிலின் உதவி ஆணையர் சுப்பிரமணியம் மர்மமான முறையில் இறக்க , அதற்கு நீதி கேட்டு கலைஞர் மதுரை இருந்து திருச்செந்தூர் வரை நடை பயணம் மேற்கொண்டார்.அந்த அழுத்தத்தின் காரணமாக எம்ஜியார் CJR Paul தலைமையில் குழு அமைத்தார். அந்த குழு கொடுத்த அறிக்கை அதிமுக அரசுக்கு எதிராக இருந்ததால் அந்த அறிக்கையை MGR வெளியிடவேயில்லை. பின்னர் கலைஞர் அதை வெளியிட்டார். ரே கமிஷன் அதைவிட சுவாரசியமானது.
1974 ஆம் ஆண்டு கலைஞரின் திமுக அரசு மதுவிலக்கை கொண்டு வந்தது.1981ல் MGR மது விலக்கை நீக்கினார். அதற்காக அவர் சொன்ன காரணம், கள்ள சாராயம் அதிகரிக்கிறது அதனால் பலர் இறக்கிறார்கள் என்பதே. மது ஆலை நடத்த ஒரு குறிப்பிட்ட கம்பெனிக்கே கொடுக்கப்பட்டது. உரிமைகள் அனைத்தும் அதிமுக காரர்களுக்கே கொடுக்கப்பட்டது. மது விற்பனையின் மூலம் வரும் excise வரி அதிக அளவில் உயர்ந்தது. அதாவது தன் குடிமக்களுக்கு தங்கு தடையின்றி ஊத்தி கொடுத்தது MGR அரசு. அதனை தொடர்ந்து தமிழக அரசு மற்றும் கேரள அரசு ஒரு ஒப்பந்தம் போட்டது. அதன் படி தமிழக அரசு கெளரவிற்கு 65 லட்சம் லிட்டர் சாராயம் கொடுக்க வேண்டும். 33.50 லட்சம் லிட்டர் அனுப்பிய தமிழக அரசு கையிருப்பு இல்லை என்று நிறுத்தி கொண்டது. காலாவதியான அந்த ஒப்பந்தத்தை வைத்து கொண்டு கேரளா பெரும் புள்ளிகள் தமிழக சாராய உரிமையாளர்களிடம் கள்ள கடத்தலில் சாராயத்தை வாங்கியது. ஒருமுறை அப்படி நடந்த கள்ளக்கடத்தல் கேரளா அரசால் பிடிக்க பட, கடத்தல் கும்பலோ MGRகு 5 கோடி ருபாய் கொடுத்ததாக தெரிவித்தது. சுதாரித்து கொண்ட MGR, கமல் போல விசாரணையே அமைக்க கூடாது என்றெல்லாம் சொல்லாமல், தன் மேல் இருந்த குற்றச்சாட்டிற்கு தானே விசாரணை குழு அமைத்தார். திமுகவின் கடும் போராட்டத்திற்கு பின்னர் அந்த குழு கலைக்கப்பட்டு மத்திய அரசு பாலின் தலைமையின் கீழ் குழு அமைத்தது.
மேற்சொன்ன இரண்டும், நேர்மைக்கும் ஊழலற்ற அரசிற்கும் MGRகும் எந்த தொடர்பும் இல்லை என்பதற்கான எடுத்துக்காட்டுகள். இந்த உத்தமரின் ஆட்சியை தான் தாங்கள் தருவோம் என்று கமலும் ரஜினியும் கூறி வருகிறார்கள். ரஜினியாவது கட்டாயத்தின் பெயரில் வருகிறார் என்றால் காப்பியடிப்பதில் பெயர் போன கமல் இப்போது MGRரை ஏன் காப்பி அடிக்க முயல்கிறார் என்று தான் தெரியவில்லை. மேற்சொன்னவைகள் மட்டும் அல்லாமல் இன்னும் விவசாயிகள் படுகொலை , மீனவர்கள் படுகொலை, வன்னிய இடஒதுக்கீடு படு கொலைகள், கம்யூனிஸ்ட்கள் படு கொலை, மாணவர்கள் படுகொலை என்று MGRரின் ஆட்சி முழுவதும் ரத்த சிதறல்கள் உண்டு.
ஏழை எளிய மக்களின் உழைப்பு அனைத்தையும் சாராய விற்பனை மூலம் உறிஞ்சி எடுத்த MGR கல்வி துறையையும் விட்டு வைக்கவில்லை. நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், MGRக்கு உங்களை பிடித்திருந்தால் போதும் தனியார் பள்ளி கல்லூரிகளை திறந்து கொள்ளலாம். சாராய வியாபாரிகள் பலர் கல்வி தந்தை ஆனது MGR தயவில் தான்.
MGRரின் திரைத்துறை வாழ்க்கை முதல் பாதியில் திராவிட சித்தாந்தத்தை முன் வைத்து எடுக்கப்பட்டது என்றால் இரண்டாம் பாதி அனைத்தும் ஒரு குடும்பமாக பார்க்க முடியாத அளவிற்கு ஆபாசம் நிறைந்ததாகவே இருக்கிறது. ஒரு சில பாடல்கள் எல்லாம் இன்றைய இரண்டாம் தர படங்களை மிஞ்ச கூடியதாகவே இருக்கிறது.
கமலஹாசன் தந்தி தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்த கமல் திமுக, அதிமுக , பிஜேபியிடன் கூட்டணி இல்லை என்பதை சொன்னதும் காங்கிரஸுடனான கூட்டணிக்கு பிடிகொடுக்காமல் நழுவ முயன்றததற்கு என்ன அர்த்தம் என்பதை கமல் தான் விளக்க வேண்டும். ஊழலை ஒழிக்க வந்த கமல் காங்கிரஸ்சுடன் கூட்டணி வைக்க போகிறாரா இல்லை தனித்து போட்டியிட போகிறாரா என்பது கூடிய விரைவில் தெரிந்து விடும்.அவர் பேட்டி கொடுத்த ஓரிரு நாட்களில் புதிய தலைமுறை செய்தியில் இந்தியாவிலேயே குழந்தைகள் இறப்பு விகிதம் மிக குறைவாக உள்ள மாநிலம் தமிழ்நாடு தான் என்றும் அதற்கு காரணம் இங்குள்ள கட்டுமானம் தான் என்றும் செய்தி வெளியானது. அந்த கட்டுமானத்தில் MGRரின் பங்கு என்ன என்பதை கமல் விலகுவாரா என்பதை பொறித்திருந்து தான் பார்க்க வேண்டும்.
திரைத்துறையில் மட்டுமில்லை , அரசியலிலும் MGRருக்கு பொருத்தமான வாரிசாகவே இருப்பார் கமல்.
Coutesy: Thank you, சுமதி. விஜயகுமார்.



செக்கு மாட்டுத் தனம் யாதெனில்? Sapiens

 ஒரு காலத்தில் நாடோடியாக சற்றே முன்னேறி வால் இல்லாத குரங்காக திரிந்த நாம், நம்முடைய சுயநலத்திற்கென பிற விலங்குகளை நம்முடைய தேவைக்கென பழக்கப்படுத்தி நம் வேலைப் பளுவை அதன் மீதி ஏற்றி இளைப்பாறிக் கொண்டோம்.

அதற்கென அவைகளின் வாழும் மொத்த ஆண்டுகளின் எண்ணிக்கையை முழுமையாக வாழ விட்டும், வாழ விடாமலும் நம்முடைய கைகளில் அதன் விதியைக் கொண்டு வந்தோம்.
நாள் முழுவதும் ஒரு வயலில் உழுது விட்டு ஒரு கொட்டகையில் தான் காயடிக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிரும்கிறோம் என்று உணராத மாட்டிற்கும், மூன்று வயதிலிருந்து படிப்பு, குழந்தமை வீணடிப்பு, வேலை, திருமணம், பிள்ளை பேறு, வீடு, கார், கடன்... மீண்டும் பிள்ளைகளின் படிப்பு என்று ஒரு சுழற்சியில்... இன்னுமொரு மாட்டுக் கொட்டகையில் அடைத்து வைத்துக் கொள்ளும் நவீன ஏப்களுமான நமக்கும், அந்த பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகளுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது?
அவைகளை அன்று அந்த கட்டுப்பாட்டிற்குள் ஒரு மொத்த சமூகமாக நாம் கொண்டு வந்தோம். ஆனால் அதே யுக்தியை பயன்படுத்தி இன்று அரசுகள் நம்மை வேறு மாதிரியான கெடையில் சாத்தி விட்டதோ!
கூட்டம் அதிகரிக்க முறைபடுத்தப்பட்ட சமுக கட்டமைப்பு வேண்டும். அதற்கென அமையப்பெற்ற அந்த மக்களதிகார அமைப்பு, நவீன காலத்தில் சிதைவுற்று மக்களாட்சி நீர்த்துப் போகும் அளவிற்கு அப்யூஸ் செய்யப்பட்டு வருகிறது...
I think its too big to handle with such a vast differences.
டார்வினியக் கோட்பாடு சன்னமாக உயிரின இருத்தலின் பொருட்டு எல்லா காலத்திலும் நடந்தேறும் தொடர் நிகழ்வு தானே. அதில் மனிதன் மட்டும் விதி விலக்கா என்ன? இந்தியாவில் இருக்கும் கட்டற்ற மக்கட்தொகையின் பொருட்டு ஏற்கெனவே அந்த கோட்பாடு இயக்கத்தில் தீவிரத் தன்மையுடன் இருக்கிறது என்பதை நான் பல இடங்களில் சுட்டிக் காட்டி எழுதி வருகிறேன். பிராமினியத்தின் அடிப்படை சித்தாந்தமே அந்த அச்சை சுற்றியே கட்டி எழுப்பப் பட்டிருக்கிறது எனலாம்.



கொரோனா தடுப்பூசி எப்படி வேலை செய்கிறது?: Covid 19 Vaccine

 கோவிட் வைரசோட புரதம் எதனால் ஆனதுன்னு நம்முடைய உடம்பிலுள்ள நோய் எதிர்ப்புச் செல்கள் கண்டுபிடிக்க முடியாம முட்டி மோதிக் கொண்டு இருக்கிறதாலே தான் அந்த நோயின் தாக்கம் நம்மை மரணிக்கும் வரைக்கும் எடுத்துட்டுப் போகுது. இங்கே தான் நாம கண்டுபிடிக்கிற இந்தத் தடுப்பூசி நம்மை அதனின்று காப்பாற்றும் அரணாக அமைகிறது. எப்படி?

கோவிட் வைரசோட புரதம் எதனையொத்ததுன்னு நாம கண்டுபிடிச்சு, அதை நம் உடலினுள் செலுத்தி உண்மையான கோவிட் நம்மை தாக்குவதற்கு முன்னால் நமது உடம்பு உள்ளே நாம தடுப்பூசி மூலம் அனுப்பின புரதத்தை தாக்க வைப்பது. இதனால் என்ன ஆகிறது என்றால், உண்மையான கோவிட் கிருமி உள்ளே நுழையும் போது, "இதோட நாம ஏற்கெனவே சண்டை பிடிச்சு வெளியில அனுப்பி இருக்கோமே"ன்னு நம்மோட உடம்பில் கொரோனாவிற்கான எதிர்ப்பு சக்தியை தயார்படுத்தி வைப்பது.
உடம்பின் நோய் எதிர்ப்புச் செல்களின் ஞாபகத்தில் அந்தச் சண்டையைச் சேமித்து வைத்துக் கொள்வதின் மூலம் உண்மையான கோவிட் நம்மை தாக்கும் போது, குறைந்த நேரத்தில் நமது எதிர்ப்புச் சக்தி, "ஓ இவிங்களான்னு" உடனே கண்டுபிடித்து டேமேஜ் அதிகமில்லாமல் பாதுகாத்து நம்மை நோய்வாய் படுவதில் இருந்து காப்பாற்றி விடுகிறது.
எனவே தடுப்பூசி நம் நோய் எதிர்ப்பு சக்திக்கு கை கொடுப்பான் தோழன்!

சங்கப் பாடல்களில் புலி

 நேற்று வனவியல் ஆராய்ச்சியாளரும், இந்திய வனவுயிரி நிறுவனத்தின் இயக்குநருமான (Wildlife Trust of India) டாக்டர் அஷ்ரஃப் அவர்களின் சங்க இலக்கியத்தில் புலியைப் பற்றிய குறிப்புகள் என்று ஒரு ஒன்னரை மணி நேரம் ஜுமில் காணொளி மூலமாக உரையாற்றினார்.

இவருக்கு தமிழில் இருக்கும் ஆர்வமும், வன உயிரிகள் பொருட்டான ஆழமும் ஓர் அரிய கலவை. அசத்தி விட்டார், மனிதர். நிறைய ஸ்லைடுகள் இடையிடையே காண்பித்து மிக எளிதாக புரிந்து கொள்ளும் படியாக சங்க இலக்கியத்தின் மூலமாக புலிகளின் பங்கு தொன்மைய தமிழ் பண்பாட்டில் எப்படியாக குறிப்பிடப் பட்டிருக்கிறது என்பதை விளக்கினார்.
அந்த மெனக்கெடலுக்கு நிரம்ப வாசிப்பு தேவைப்பட்டிருக்கும் என்று புரிந்து கொள்ள முடிந்தது. ஹைலைட்டாக ஒரு சில விசயங்களை அவர் கூறியவற்றில் இருந்து உங்களுடன் பகிர்ந்து கொள்வது எனக்கு மகிழ்வளிக்கும் என்பதால் இங்கே கொண்டு வருகிறேன்.
👉🏿 இந்தியாவிலேயே சங்க இலக்கியத்தில் மட்டுமே புலிகளைப் பற்றிய குறிப்பு அதிகமாக உள்ளதாம்.
👉🏿 புலிகளின் மேல் காணப்படும் வரிகளை வர்ணித்து - கொடுங்கேழ், கொடுவரி, வாள்வரி, குயவரி, பல்வரி, சிறுவரி என்பதாக எழுதப்பட்டிருக்கிறது.
👉🏿 புலிகளுக்கு பல பெயர் உண்டு அவைகள்- உழுவை, வேங்கை, வயம், வயமா(ன்), வல்லியம், கொடுவரி, குயவரி, பல்வரி, சிறுவரி.
👉🏿 பிடித்தமான ஒரு வரி - "கடையல் அம் குரல வாள் வரி உழுவை - அகம். 277" - அதாவது புலியின் உறுமலை சங்கத் தமிழ் பாடல் ஒன்றில், தயிர் கடையும் ஓசையுடன் இணைத்து எழுதி வைத்திருக்கிறார்கள். அதனை அஷ்ரஃப் அவர்கள் மிக அழகாக ஒரு காணொளி துணுக்குடன் இரண்டையும் ஒலிக்க விட்டார். வாவ்!
👉🏿 இருப்பதிலேயே அசத்தலான ஒன்று - வன உயிரிகளை, வனங்களின் பாதுகாப்பு சார்ந்து மண்டை பிளக்கும் விதத்தில் இன்று நாம் ஆராய்ச்சிகளை செய்து, அங்கு வாழும் பூர்வ குடிகள் மீதும், பூமியின் பருவநிலை மாறுபாட்டையும், பனிப்பாறைகள் உருகி வருவதையும், அதீதமான வேட்டையாடலையும் சுட்டிக்காட்டி ஆவணங்கள் தயாரிக்கிறோம்.
ஆனால்...
சங்கப்பாடல் போற போக்கில் இப்படியாக ஆய்ந்தறிந்து முன் வைத்து நகர்கிறது. இரண்டே வரிகள் பல மில்லியன் டாலர் புலிகள் பாதுகாப்பிற்கே வேட்டு வைப்பதனைப் போல...
........புதற்குப் புலியும் வலியே புலிக்குப்
புதலும் வலியாய் விடும்'. (200) ......
அதாவது, காட்டுப் புதரில் (thickets) அடைந்துகொண்டால் புலிக்கு வலிமை. புலி அடைந்திருப்பதால் அந்தக் காட்டிற்கு வலிமை. முடிஞ்சிதா! இதற்கு மேல் என்ன வேணும், Conservation of tiger பற்றிப் பேச.
இப்படியாக டாக்டர் அஷ்ரஃப் மேற்கோள் காட்டி பேசிய அனைத்தும் புதுமை. இந்த ஏரியாவிற்குள் வன உயிரியல், தமிழ் ஆர்வமுள்ள இளம் தலைமுறையை இவர் திருப்ப அநேக வாய்ப்புள்ளது. பயன்படுத்திக் கொள்வோமே! நன்றி
Ashraf Nvk
🙏
பி.கு: இதோ அவருடைய காணொளி இணைப்பு ஒர்த் யுவர் டைம்!

Related Posts with Thumbnails