நேற்று வனவியல் ஆராய்ச்சியாளரும், இந்திய வனவுயிரி நிறுவனத்தின் இயக்குநருமான (Wildlife Trust of India) டாக்டர் அஷ்ரஃப் அவர்களின் சங்க இலக்கியத்தில் புலியைப் பற்றிய குறிப்புகள் என்று ஒரு ஒன்னரை மணி நேரம் ஜுமில் காணொளி மூலமாக உரையாற்றினார்.
என்னயப் பத்தி
சிதைந்த வரை
எப்பவும் படிக்கலாம்
- Fetna2009 (2)
- photography (26)
- அமெரிக்கா (9)
- அய்ன் ராண்ட் (2)
- அரசியல் (67)
- அறிவியலும் நானும் (42)
- அனுபவம் (105)
- இந்தியா (28)
- இந்தியா09 (4)
- இயற்கை (35)
- ஈழம் (9)
- உலகம் (25)
- எழுத்தாளர்கள் (27)
- ஒலிம்பிக்ஸ் (1)
- கதம்பம் (2)
- கலைஞர் (7)
- கவிதை (17)
- கவிஜா (34)
- காடும் நானும் (18)
- கீழடி (3)
- கைகலப்பு (16)
- கொரோனா (1)
- சதுப்பு நிலம் (2)
- சமூகம் (129)
- சரணாலயம் (3)
- சிறு கதை முயற்சி (1)
- சினிமா (31)
- சீரழிவு (18)
- செய்தி (42)
- செவ்விந்தியர்கள் (1)
- தஞ்சாவூர் (2)
- தமிழ் (1)
- தமிழ் விழா (2)
- தமிழ்நாடு (7)
- தாமரை (1)
- திராவிடம் (9)
- தீவிரவாதம் (10)
- தூக்குத் தண்டனை (1)
- தெளிதல் சார்ந்து (41)
- தொடரழைப்பு (8)
- நிகழ்வுகள் (109)
- நினைவோடை (19)
- நுண்மி (1)
- நோய் (8)
- படிமலர்ச்சி (14)
- பதிவர் வட்டம் (33)
- பயணம் (16)
- பரிணாமம் (14)
- புகைப்படங்கள் (32)
- புத்தகங்கள் (26)
- பூர்வகுடிகள் (2)
- பெரியார் (1)
- மக்களாட்சி (4)
- மதங்களும் நானும் (11)
- மருத்துவம் (2)
- முதுமை (13)
- மொக்கை (49)
- வலைச்சரம் (6)
- வன்முறை (14)
- வாசிப்பாளன் (36)
- விமர்சனம் (32)
- விளையாட்டு (4)
- வைரமுத்து (2)
- ஜாதி (7)
செம தீணி இங்கயும்
தெக்கிக்காட்டு நேரம்
Thursday, December 31, 2020
சங்கப் பாடல்களில் புலி
Posted by Thekkikattan|தெகா at 6:34 PM 0 comments
Labels: கீழடி, சமூகம், வாசிப்பாளன், விமர்சனம்
Sunday, December 13, 2020
நீட், மீத்தேன், ஜிஎஸ்டி - யார் தவறு?
அணுவை பிளக்க முடியும்னு அவன் ஏன் யோசித்தான்?! சோ, நாங்க அணுகுண்டு தயாரிச்சோம்... 😁
அப்படி இருக்கு இந்த பின் வரும் வாதம்.
யார் மீத்தேன், நீட், ஜிஎஸ்டி போன்றவைகளை ஜிந்திச்சா அல்லது நடை முறைப் படுத்த முயற்சித்தான்னு கேக்கிறது என்ன மாதிரியான அறிவுடை வாதம்? 🙄
படித்தவர்கள், நாட்டை பொருளாதார ரீதியாகவும் அறிவுடைய கருவூலமாகவும் ஆக்கிப் பார்க்க அந்தந் துறை நிபுணத்துவம் உள்ளவர்களின் மூளையில் உதிப்பதும், அதனையொட்டி வரைவுகள் உருவாக்கிப் பார்ப்பதும் இயல்பானது. பிறகு எதற்கு எட்டு மணி நேரம் தானும் வேலைக்குப் போகிறேன் என்று சென்று வருவது?
சரி காங்கிரஸ் ஆட்சியில் மூளைக் குழந்தையாக கருத்தரித்து, அங்கொன்றும் இங்கொன்றுமாக மாதிரித் திட்டங்களை செய்து பார்க்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
மீத்தேனோ, நீட்டோ பின் வரும் நாட்களில் பாதகத்தை தரக் கூடியது என்றறியும் நாளில் குப்பைத் தொட்டியில் கடாசுவது தானே நியாயம். ஆனால், சிந்தித்ததே தவறு என்று எந்த அறிவுடை நம்பியாவது பேசுவானா?🙈
அதுவும் வாதமென்று சூத்தில் அடித்தான் பல்லு போச்சு என்ற வாதம் செய்கிறார்களே!
எனவே, நீட் நுழைவுத்தேர்வு, டெல்டா மீத்தேன் என்பவை மாதிரிக்கென சிந்தித்தவன் எழுதிப் பார்த்தான் அது தளத் தேவைகளில் அவசியமற்றதுன்னு அறிந்து கொண்ட நாளில் ஓரங்கட்டப்படுவதே அறிவுடமை!
தாண்டித் திணிப்பேன் என்றால்... அதனை எப்படி புரிந்து கொள்வது என்பதை உங்களுடைய முடிவிற்கே விட்டுவிடுகிறேன்!!
Posted by Thekkikattan|தெகா at 10:20 PM 0 comments
Sunday, November 15, 2020
Eternity (A Peruvian movie 2017) : முடிவற்ற காலம்!
ஒரு திரைப்படத்தைப் பார்த்தால் அந்தப் படத்தினுடைய கதாபாத்திரங்கள், கடைசியாக நம்முடன் கூடவே வாழ்ந்து போனவர்களாக உணர வைக்கத்தக்க வகையில் வடிவமைக்கப் பட பல காரணிகள் தேவைப்படுவதாக உள்ளது. திரைப்படத்தின் சூல், திரைக்கதை, படமாக்கப்படப் போகும் இடம், கதாப்பாத்திரங்கள் மற்றும் இயக்குனர்.
தீக்குச்சிகளை எடுத்து எண்ணி எண்ணிப் பார்த்துவிட்டு வில்காவிடம் புலம்பி வருகிறாள். ஒரு நாள் தீர்ந்தும் விடுகிறது. வேறு வழியில்லாமல், தனக்கு வயதாகிவிட்டது என்று மறுத்தாலும் பக்கத்து ஊருக்கு வில்காவை அனுப்பி வைக்கிறாள். அவரும் லாமாவை துணைக்கழைத்துக் கொண்டு செல்லும் வழியில், முடியாமல் சுருண்டு விழுந்து விடுகிறார். கணவர் இரவுதட்டியும் வீடு திரும்புவதற்கான எந்த அடையாளமும் இல்லாததால், ஃபாக்சி தேடிக்கொண்டு செல்கிறாள். பிறகு இருவருமாக தள்ளாடி வீடு வந்தடைகிறார்கள்.
Posted by Thekkikattan|தெகா at 10:04 PM 0 comments
Labels: சினிமா, பூர்வகுடிகள், முதுமை, விமர்சனம்
Wednesday, September 09, 2020
மனிதனின் நாளைய பரிணாமம்: Future of Sapiens
இப்பவும் நாம் படிமலர்ச்சி பாதையில் தான் பயணிக்கிறோங்கிறதிற்கு ஒரு சிறு உதாரணம். இதைப் படிக்கிறவங்க கோவிச்சிக்கப்பிடாது.
பதில்: நாம இன்றைய வாலில்லா குரங்கினங்களிலிருந்து பிரிந்து படிமலர்ச்சியடைய ஆரம்பித்து பல மில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த பரிணாமக் கிளையிலிருந்து பிரிந்து நமக்கு இணையான நமது மூதாதையர்கள் வழிப் பாதையில் பெற்றும், இழந்து மென நடந்த மென் நடையில் இன்று சற்றேறக் குறைய ஒன்னரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய நவீன வடிவை எட்டி, ஜஸ்ட் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கும் குறைவான ஆண்டுகளாகவே நாகரீகமடைந்த கூட்டமாக வாழ்ந்து வருகிறோம்.
இப்போ நீங்க பரிணாமத்தை நம்பல. நான் அறிவியல் பின்னணியில், கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் ஒப்புக்கொள்கிறவன்னு வைச்சிப்போம். இங்கே இரண்டு விதமான மனித குழுக்கள் பிளவுற்ற நிலையில், ஆனால், சைட் பை சைடாக வாழ்கிறது.
இதுவே எதிர்கால பரிணமிப்பு! அப்போ அந்த அழிந்து போன ஆள் எங்கே காட்டு என்று கேட்க முடியுமா? குரூட் பரிணாமக் கால கட்டத்தில், அலை அலையாக கிளம்பிய போதுதான் அந்த ஹோமினிட்ஸ் இன வகைகள் தேவைப்பட்டது (அவைகளில் சில, ஆஸ்ட்ரோல பித்திகஸ் அ•பரென்சிஸ் ↔️ ஹோமோ எரக்டஸ்↔️ஹோமோ ஹாபிலிஸ்↔️ஹோமோ நாலேடி↔️ஹோமோ நியாண்டர்தாலென்சிஸ்,↔️ ஹோமோ சாபியன்ஸ் சாபியன்ஸ்➡️). Posted by Thekkikattan|தெகா at 4:19 PM 0 comments
Labels: அறிவியலும் நானும், இயற்கை, படிமலர்ச்சி, பரிணாமம்
Sunday, September 06, 2020
படிமலர்ச்சிக் கூண்டிற்குள் கடவுள்: Why evolution is true? Part 4
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் திமிங்கிலங்கள் நான்கு கால்களை கொண்ட தரைவாழ் விலங்கிலிருந்துதான் படிமலர்ச்சி அடைந்தது என்பதின் எச்சமாக பின்னங்கால்களும், இடுப்பெலும்பும் முற்றிலும் வளர்ச்சியுறா நிலையில் உடலின் உள்ளாகவே ஏதோ நிலையில் இருந்து விடுகிறது. அது போலவே நம்முடைய தூரத்து உறவுகளான குரங்குகளிருந்துதான் நாம் படிமலர்ச்சியடைந்தோம் என்பதனை சான்றளிக்க குடல்வாலும் (appendix), வால் எலும்பும் (tail bone) முழுமையடையா நிலையில் சான்றுறுப்பாக இருக்கிறது. குடல்வால் நம்முடைய தூஊஊரத்து சொந்தக்காரய்ங்களான இலை சாப்பிடும் குரங்களில் செல்லுலோசை செரிப்பதற்கென வாழும் பாக்டீரியாக்களை கொண்ட குடல் பகுதியாக இருந்திருக்கிறது. இப்பொழுது நமக்கு அது தேவையற்ற ஓர் ஆணி.Posted by Thekkikattan|தெகா at 7:35 PM 0 comments
Labels: அறிவியலும் நானும், இயற்கை, படிமலர்ச்சி, பரிணாமம், புத்தகங்கள், வாசிப்பாளன்
Sunday, August 30, 2020
கரையில் திரிந்த பாலூட்டி திமிங்கலமானது எப்படி? Part 3
இன்றையப் பதிவு. தண்ணீருக்குள் வாழும் பாலூட்டிகள் என்றவுடனே நமக்கு நினைவில் வருபவை திமிங்கலங்கள், டால்பின்கள், கடல்சிங்கம், வால்ரஸ் கடல்பசுக்கள். இவைகள் நிலப்பகுதியில் வாழ்ந்தவைதான் என்றாலும் தண்ணீருக்குள் சென்று வாழப்பழகியது என்பதற்கு என்ன சான்று. அதற்கு நாம உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய விலங்கு, நமக்கு ரொம்ப அறிமுகமான நீர்யானை (hippopotamus - hippopotamus amphibius).
இந்தப் பின்னணியில் திமிங்கலங்களின் மூதாதைகளை வைத்துப் பார்த்தால், அவைகள் (ஒட்டகத்தையொத்த) குளம்பிகளைக் கொண்ட தாவர உண்ணிகளாகத்தான் இருந்திருக்கிறது என்பது புலனாகும். 52 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இன்டுஹையஸ் (Indohyus) என்ற ஒரு தாவர உண்ணி ஓப்பீட்டுளவில் சிறிய மானளவு கொண்ட குளம்பியொன்று தண்ணீரையொட்டியப் பகுதியில் பாதுகாப்பிற்கெனவும், உணவிற்காகவும் திரிந்து கொண்டு, நிலப்பகுதிக்கும் சென்று உண்டு வாழ்ந்திருக்கிறது. அதனுடைய எலும்பு மற்ற பாலூட்டிகளைக் காட்டிலும் அடர்வானதாக இருந்திருக்கிறது. ஏன் அப்படி பருமனுடன் இருந்திருக்க வேண்டும்; நீரில் மூழ்கும் போது மிதந்து விடாமல் இருக்க. பற்களில் ஐசோடோப் சோதனை செய்து பார்க்கும் பொழுது நீரில் உள்ள பிராணவாயுவை உட்கிரகிக்கும் திறனுடனும் இருப்பது தெரியவந்தது.
மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு படிமலர்ச்சியில் வந்த ஆம்புலோசெடஸ் (ambulocetus) என்ற இடைப்பட்ட இனம் கிட்டத்தட்ட முன்னேறி திமிங்கலம் பக்கத்தில் வந்தாலும் இன்னும் நான்கு கால்கள் அதில குளம்புகளோட இருக்கிறது. அதனை வைத்துக் கொண்டு இன்றைய சீல்கள் மாதிரி தரைக்கு வந்து தவழ்ந்து திரிந்து கொண்டிருக்கிறது.Posted by Thekkikattan|தெகா at 10:44 PM 0 comments
Labels: அறிவியலும் நானும், இயற்கை, படிமலர்ச்சி, பரிணாமம், புத்தகங்கள், வாசிப்பாளன்
டைனோசர் பறவையான கதை: Part 2
தண்ணீருக்கும் நிலத்திற்குமாக சென்றுதான் வாழ வேண்டுமென்ற அந்த இரட்டைதன்மை இல்லாது, முழுமையாக நிலத்திலேயே வாழும் ஊர்வனவாக அடுத்து வந்த காலகட்டங்களில் அவைகளில் சில பரபரவென தேவையானவற்றை பெற்றும், இழந்துமென முழுமையான தகவமைவைப் பெறுகிறது. இது வரையிலுமே அவைகள் யாவும் குளிர் இரத்த உயிரினங்களாகவே (cold blooded animal) உள்ளது. அதாவது அவைகளின் உடல் வெப்பம் சுற்றுப்புறச் சூழலுக்குத் தகுந்த மாதிரி மாறாது.
அவற்றில் சில வேகமாக ஓடி முன்னங்கால்களை படக்கென்று காற்றில் வீசி இரையைப் பற்றி வாயிக்கு எடுத்துச் செல்லும் நுட்பம், பறவைகளுக்கு தேவையான அதே தசை கட்டமைப்பை மெல்ல உள்வைத்து நகர்கிறது படிமலர்ச்சி. இதற்கிடையே பறவைகளின் இறகுகளில் இருக்கும் முடியையொத்த ஒரு தகவமைப்பை பெறுகிறது. இது எதற்காக தோன்றியிருக்கக் கூடும் என்பதில் இரண்டு விதமான கருதுகோள்கள் உண்டு: இணையைக் கவர்வதற்கு அல்லது உடலை வெப்பமேற்றி வைத்துகொள்ள.Posted by Thekkikattan|தெகா at 8:02 PM 0 comments
Labels: அறிவியலும் நானும், இயற்கை, படிமலர்ச்சி, பரிணாமம், புத்தகங்கள், வாசிப்பாளன்












