tag:blogger.com,1999:blog-17644371.post2710337464917476652..comments2023-12-12T10:49:24.639-05:00Comments on ஏன் இப்படி...!: சீமான் என்ன செய்யவேண்டும்?Thekkikattan|தெகாhttp://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comBlogger73125tag:blogger.com,1999:blog-17644371.post-21420282822873144562013-05-16T23:51:23.528-04:002013-05-16T23:51:23.528-04:00கல்வெட்டு பெரியார் சுயமரியாதை-சமதர்மம் எஸ்விஆர்-வ...கல்வெட்டு பெரியார் சுயமரியாதை-சமதர்மம் எஸ்விஆர்-வ.கீதா தொகுத்த நூல் கிடைத்தால்/வைத்திருந்தால் வாசித்துப்பாருங்கள். பெரியாரின் பன்முக இயக்கவியல் வீச்சை உணர்ந்து கொள்ள முடியும். இன்று இருப்பது போன்றே ஒரு இருண்மையான சூழலில்தான் பெரியார் அன்று இயங்கியிருக்கிறார். ஆனால் அவரின் சிறப்பு அவர் தீர்க்கமாக சிக்கல்களையும் தீர்வுகளையும் பகுத்தறிந்து இருக்கிறார். அவர் கையாண்ட வழிமுறைகள் இன்றைக்கும் நமக்கு பாடமாக இருக்கின்றது.Zacharyarudhttp://www.mmafb.org/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-38181832208734605072011-01-15T17:17:39.553-05:002011-01-15T17:17:39.553-05:00முத்துகுமரன்,
நான் காணாம போன கொஞ்ச நேர இடைவெளியில...முத்துகுமரன்,<br /><br />நான் காணாம போன கொஞ்ச நேர இடைவெளியில அடிச்சு விளையாண்டுருக்கீங்க. நீண்ட கருத்து பகிர்தலுக்கு நன்றி! இன்னும் இந்தப் பதிவிற்கான உரையாடலை முடிக்கவில்லை. இங்கு பகிர்ந்திருக்கும் விசயங்களை நேர்மறையாக அணுகி அவர்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புவோம்.<br /><br />இந்த கட்டத்தில் இவ்வளவுதான் சொல்லத் தோன்றுகிறது.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-61397127243276583952011-01-14T21:42:48.015-05:002011-01-14T21:42:48.015-05:00சீமான் என்ன செய்ய வேண்டும் என்பதைவிட நான் என்ன செய...சீமான் என்ன செய்ய வேண்டும் என்பதைவிட நான் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்த்திய தானைத்தலைவன் பாசகார பயபுள்ளைக்கும் டீச்சரும் எங்கள் இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்.<br /><br />பொங்கலோ பொங்கல்.<br /><br />14.1.2011ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-80201409351115874902011-01-14T16:33:16.090-05:002011-01-14T16:33:16.090-05:00கல்வெட்டு பெரியார் சுயமரியாதை-சமதர்மம் எஸ்விஆர்-வ...கல்வெட்டு பெரியார் சுயமரியாதை-சமதர்மம் எஸ்விஆர்-வ.கீதா தொகுத்த நூல் கிடைத்தால்/வைத்திருந்தால் வாசித்துப்பாருங்கள். பெரியாரின் பன்முக இயக்கவியல் வீச்சை உணர்ந்து கொள்ள முடியும். இன்று இருப்பது போன்றே ஒரு இருண்மையான சூழலில்தான் பெரியார் அன்று இயங்கியிருக்கிறார். ஆனால் அவரின் சிறப்பு அவர் தீர்க்கமாக சிக்கல்களையும் தீர்வுகளையும் பகுத்தறிந்து இருக்கிறார். அவர் கையாண்ட வழிமுறைகள் இன்றைக்கும் நமக்கு பாடமாக இருக்கின்றது.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-6996536198265476242011-01-14T16:33:12.346-05:002011-01-14T16:33:12.346-05:00கல்வெட்டு பெரியார் சுயமரியாதை-சமதர்மம் எஸ்விஆர்-வ...கல்வெட்டு பெரியார் சுயமரியாதை-சமதர்மம் எஸ்விஆர்-வ.கீதா தொகுத்த நூல் கிடைத்தால்/வைத்திருந்தால் வாசித்துப்பாருங்கள். பெரியாரின் பன்முக இயக்கவியல் வீச்சை உணர்ந்து கொள்ள முடியும். இன்று இருப்பது போன்றே ஒரு இருண்மையான சூழலில்தான் பெரியார் அன்று இயங்கியிருக்கிறார். ஆனால் அவரின் சிறப்பு அவர் தீர்க்கமாக சிக்கல்களையும் தீர்வுகளையும் பகுத்தறிந்து இருக்கிறார். அவர் கையாண்ட வழிமுறைகள் இன்றைக்கும் நமக்கு பாடமாக இருக்கின்றது.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-52952491404238370252011-01-14T16:24:27.859-05:002011-01-14T16:24:27.859-05:00நிச்சயமாக கல்வெட்டு, சீமான் சரியான தளத்தில் பயணிக...நிச்சயமாக கல்வெட்டு, சீமான் சரியான தளத்தில் பயணிக்க வேண்டும் என்பது பெரும்பாலானோரின் எண்ணம். அவர் வீரம் என்பது மறவர்க்கு மட்டுமே உரிய குணம் என்று கருதுகிறாரா என்று யோசிக்க வைக்கிறது. வாய்ப்பிருந்தால் அதை அவரிடம் நேரடியாகவும் கேட்கும் எண்ணமிருக்கிறது. பெரியார் பலரை பலமுறை விமர்சித்து இருக்கிறார் சில முறை ஆதரித்தும் இருக்கிறார். ஆனால் அவைக்குரிய முறையான காரணங்கள் இருந்திக்கிறது. பைனரியாக ஒன்று ஆதரவு இல்லை எதிர்ப்பு என்று இயங்குவது பன்முகத்தன்மையை இல்லாது செய்துவிடும். சீமான் பெரிய எல்லைகளைத் தொட வேண்டுமென்றால் அவருக்கு அத்தியாவசியத் தேவை சுயபரிசோதனை. சீமானின் வாசிப்பு அனுபவக்குறைவே இது மாதிரியான அரைகுறை வார்த்தை பிரயகோகங்களுக்கு காரணமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். தம்பிகளை கூட வைத்திருக்கும் அதே நேரம் அவர் சில அறிவுசார் தளத்தில் இயங்கியவர்களையும் வைத்துக்கொள்ள வேண்டும். அவரைச் சுற்றி இருப்பவர்கள் இது குறித்து அக்கறை செலுத்த வேண்டும் ஆனால் அவருடன் இருப்பவர்களுக்கே தேவர் மயக்கம் இருப்பதாகவே தோன்றுகிறது.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-37276910792871357072011-01-14T16:17:49.081-05:002011-01-14T16:17:49.081-05:00//சீமான் சாதியைத் தாண்டி வரவேண்டும்.//
நான் வேறொர...//சீமான் சாதியைத் தாண்டி வரவேண்டும்.//<br /><br />நான் வேறொரு கோணத்தில் யோசித்திருந்தேன். இரவு பின்னூட்டமிடலாம் என்று நினைத்திருந்தேன். அதற்குள் உங்கள் பதிவு பார்த்ததும் அந்தப் பாடலைப் பற்றிய தகவல்களை தேடிச் சென்றுவிட்டேன். <br /><br />--<br />ராமதாசும், திருமாவும் செய்த ஒரு உருப்படியான விஷயம். வன்னியர்களுக்கும் தலித்களுக்கும் நடைபெறும் மோதலைப் பெருமளவில் குறைத்ததுதான். அதுபோல், சீமான் தேவர் சாதி மக்களை நல்வழிப்படுத்தி தலித்துகளிடம் நல்ல உறவினைப் பேண வழிவகை செய்யலாம் என்று யோசித்தேன். ஆனால், முத்துராமலிங்கத்தை எந்நிலையிலும் முன்னிலைப்படுத்தாமல், தான் முன்னின்று இதனை செய்யலாம். <br /><br />அவருக்கு சாதிப் பற்றை விட, முத்துராமலிங்கம் மேல் இருக்கும் பற்று அதிகமாக இருக்கும் போல. முத்துராமலிங்கத்தின் பெயரைப் பயன்படுத்தும் வரை சாதி வேறுபாடுகள் பெருகிக்கொண்டேதான் இருக்கும்.உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-70837728352356419592011-01-14T16:10:09.198-05:002011-01-14T16:10:09.198-05:00முத்துக்குமரன்,
சுருக்கமாகச் சொன்னாலும் சரியாகவே ச...முத்துக்குமரன்,<br />சுருக்கமாகச் சொன்னாலும் சரியாகவே சொல்லியுள்ளீர்கள்.<br /><br />யோசித்துப்பாருங்கள் விஜயகாந்திற்கு எதிராக/ஆதரவாக இத்தனை உரையாடல்களை நாம் பார்த்திருக்க மாட்டோம். அவரிடம் அரசியல் , தமிழ், தமிழன் பற்றிப் பேச வேண்டுமானல், ... ஜீரோவில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.<br /><br />குறைந்த பட்சம் சீமானிடம் அதைத்தாண்டி கேள்வி கேட்கலாம். சீமான் அதிகம் பேசப்படுவதற்கு காரணம், அவராவது சரியான வழியில் செல்ல வேண்டும் என்ற ஆதங்கமே.<br /><br />சீமான் சாதியைத் தாண்டி வரவேண்டும்.<br /><br />அய்யா முத்துஇராமலிங்கத் தேவரின் வழியில் சென்றால் அதிமுகவிடம்தான் போக வேண்டும். <br /><br />உண்மையில் சீமானுக்கு உண்மை தெரியாத, சின்னப்புள்ளத்தனமான சாதிப் பற்றா? அல்லது எல்லாம் தெரிந்தும், வைரம் பாய்ந்த சாதிய உணர்வா? எது அவரை இடைவிடாமல் அய்யா முத்துஇராமலிங்கத் தேவரை நேசிக்க வைக்கிறது?<br /><br />.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-41598963074495987292011-01-14T15:20:09.690-05:002011-01-14T15:20:09.690-05:00.
அப்பாடா.. ஒரு வழியாக சீமான் அதிமுக விற்கான ஆதரவ....<br /><br />அப்பாடா.. ஒரு வழியாக சீமான் அதிமுக விற்கான ஆதரவிற்கான் காரணங்களைச் சொல்லிவிட்டார்.<br /><br /><b><i> காங்கிரஸை அழிப்பது என்பது தந்தை பெரியாரின் கனவு, அண்ணல் அம்பேத்கரின் கனவு, ஐயா முத்துராமலிங்கத் தேவரின் கனவு -சீமான் </i> </b><br /><br /><b> ஐயா முத்துராமலிங்கத் தேவரின் கனவுகளை நிறைவேற்றச் சரியான இடம் அதிமுக தான். சரியான தேர்வு. சீமான். </b><br /><br />சீமானின் சாகாத சாதிப் பற்று<br />http://kalvetu.blogspot.com/2011/01/blog-post_15.htmlகல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-88010182063384894892011-01-14T12:20:22.230-05:002011-01-14T12:20:22.230-05:00வழக்கம் போல கல்வெட்டு பல்வேறு கேள்விகளுடன் விசாலமா...வழக்கம் போல கல்வெட்டு பல்வேறு கேள்விகளுடன் விசாலமான விவாதத்தை அமைத்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய விசயம். அவை ஒவ்வொன்றும் தனித் தனியே பேச வேண்டிய உள்ளடக்கத்தை கொண்டிருக்கிறது. சீமானை தேவதூதுவனாக எண்ணத்தேவையே இல்லை. நம்மிடையே இருக்கும் ஒரு சக குரல் மேடைக்கு நகர்ந்திருக்கிறது என்ற அளவோடுதான் அவரை அணுக வேண்டும் என்று நினைக்கிறேன். எனது உரையாடல் கோர்வையாக இல்லாது இருக்கிறது என்பதை உணர்ந்தே இருக்கிறேன். நீண்ட நாட்களுக்கு பிறகு பதிலுரைக்கை இந்தக்கட்டுரை உந்தியது.அவ்வளவேமுத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-57409447493743936862011-01-14T12:15:53.500-05:002011-01-14T12:15:53.500-05:00சீமான் ஈழத்தை பற்றிப் பேசுவதை மட்டுமே அவருக்கு எதி...சீமான் ஈழத்தை பற்றிப் பேசுவதை மட்டுமே அவருக்கு எதிர்ப்பானவர்களும் ஆதரவானவர்களும் முன்னிறுத்துவது ஒரு பெரும் சறுக்கலே. அவரின் மற்ற போராட்டங்களுக்கு அவரைச் சார்ந்தவர்களே அதிகம் முக்கியத்துவம் தராத போக்கும் காணப்படுகிறது. இங்கு எல்லாருமே ஒரு தியாகப் பட்டத்தை அடைந்துவிட வேண்டும் என்ற தணியாத மோகத்தோடே திரிகிறோம். அதுதான் ஈழத்து விசயத்தில் அதிகம் நடைபெறுகிறது. சீமானின் சாதியம் மிக அதிகமாக விவாதத்திற்குள் உள்ளாக்கபடும் ஒன்றாக இருக்கிறது. இன்றுவரை அவரிடமே அதற்கு தெளிவான ஒரு புரிதல் இல்லை என்பதாகவே உணர்கிறேன். அவருக்கும் எண்ணிக்கையின் மீதான ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அது போராட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற ஆர்வத்தினாலும் இருக்கலாம். உதாரணமாக பெரியாரின் வழித்தோன்றலாக அவர் தன்னை முன்னிறுத்தும் அதே வேளையில் தாழ்த்தப்பட்டோரையும், சாதி இந்துக்களையும் ஒரு சட்டகத்துக்குள் உட்கொணர முனைகிறார். இது இருபக்க கூர்மையுடைய கத்தியினை கையாள்வது போன்றதாகும். இந்த சமரசம் மிகவும் சிக்கலானது. எதிர்தரப்பில் இருவரை ஓரிடத்தில் ஒரு பொதுப்பண்பில் இணை சேர்க்கலாம் என்பதாக சில முடிவுகளை அவர் எடுக்கும் போது அதற்கான அடிப்படை அறமும் நேர்மையையும் அவர் இழக்காமல் இருக்கிறாரா என்பதை கணிக்க சில காலம் நமக்குத் தேவைப்படும். அந்த காலச் சலுகையை அவருக்கு வழங்கியே விவாதிக்க வேண்டும் என்று நம்புகிறேன்.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-26741559538043466062011-01-14T12:02:26.369-05:002011-01-14T12:02:26.369-05:00உரையாடல்களின் அரசியல் இன்று மிக முக்கியமானதொரு இடத...உரையாடல்களின் அரசியல் இன்று மிக முக்கியமானதொரு இடத்தை வகிக்கிறது. உரையாடுவோரில் ஏறத்தாழ அனைவரும் ஒருவகையான இலக்குகளோடும், தேர்ந்தெடுத்த தாக்குதல்களை மட்டுமே செய்து வருகிறோம். ஒரு பன்முகப் பரிமாணத்தோடு உரையாடல் அமைவது என்பது கானல் நீராகவே இருக்கிறது. இன்னபிற அரசியல் தலைவர்களின் தாவல்களும் சமரசங்களும் அரசியல் ஆளுமை, சாணக்கியத்தனம், ராஜதந்திரம் என்னும் பொட்டலங்களுக்குள் அடைக்கப்படும் அதே நேரம் ஒரு சிலரது மாறுதல்கள் மட்டும் சறுக்கல்கள், சரணாகதியாக, தோல்வியாக சித்தரிக்கப்படுகிறது. அதற்கு இலக்கு ஆவோரின் பொதுவான அடையாளமாக இருப்பது அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின்/இனத்தின் குரலாக இருப்பதை கவனிக்க வேண்டியது அவசியமானதாகும். அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் முதலில் நெரிக்கப்படும் குரல் சீமானுடையதாகத்தான் இருக்கும் என்பதை அவர் நிச்சயம் உணர்ந்தே இருப்பார். ஏனென்றால் அரசுகள் எப்போதும் அரசுகளே.இந்திய ஜனநாயகப் பெருவெளியில் மனிதாபிமானர்களுக்கான இருப்பும் இடமும் மிகவும் மெல்லியதே. இந்த கட்டமைப்புக்குள் ஒருவன் வாழத்தலைப்படும் போதே அவன் பல சமரசங்களுக்கு தன்னை உட்படுத்தியேயாக வேண்டும். இல்லை என்றால் ஒரு கனவுவெளியில் மட்டுமே அவன் இயங்க வேண்டும்.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-79195022819779897162011-01-14T11:53:21.500-05:002011-01-14T11:53:21.500-05:00இன்றைய சூழலில் ஈழம் சார்ந்த பலரின் எண்ணக்குமுறல்கள...இன்றைய சூழலில் ஈழம் சார்ந்த பலரின் எண்ணக்குமுறல்களின் ஒரு பிரதியாகத்தான் சீமான் தன் அரசியல் பயணத்தை அமைத்துக்கொண்டிருக்கிறார்.ஒரு போராளியாக இருப்பதற்கும் அரசியல்வாதியாக இருப்பதற்குமான இடைவெளியையையும் அதன் சாத்திய எல்லைகளை உணர்ந்து விவாதிப்பதே சரியானதாக இருக்க வேண்டும். ஊடக சர்வாதிகாரத்தினால் இன்றைய பொதுப்புத்தி உற்பத்தி செய்யப்படும் சூழலில் மாற்றுக்குரல்களின் தேவை மிக அத்தியாவசியமானதாக இருக்கிறது. தமிழர்களுக்குள் இருந்த ஒரு மனத்தடையை தயக்கத்தை சீமானின் பேச்சுக்கள் உடைத்து வருகிறது. குறைவான எண்ணைக்கையாக இருந்தாலும் சர்வாதிகாரத்துக்கான எதிர்ப்பு குரல்களை ஒன்றுதிரட்டுவதுதான் மாற்றத்திற்கான பயணத்திற்கு/போராட்டத்திற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள வழிவகை செய்கிறது.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-78744244610033381232011-01-14T11:47:19.494-05:002011-01-14T11:47:19.494-05:00நல்ல பகிர்வு தெகா, விரிவான விவாதமாக நகர்த்தியிருக...நல்ல பகிர்வு தெகா, விரிவான விவாதமாக நகர்த்தியிருக்கும் கல்வெட்டு, கும்மி, ஜோதிஜி, மற்றும் பலருக்கும் நன்றிகள். சீமானின் இன்றைய வெற்றி என்பதை குறைந்தபட்சம் சிலரையாவது அவர் பெயரை உச்சரிக்க வைத்திருப்பதும், ஒரு விவாதத்திற்கு காரணியாகவும் இருப்பதுதான். அனுமதிக்கப்பட்ட சட்டகத்துக்குள்ளே நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகளுக்குள்தான் ஜனநாயக நாட்டில் பேச்சுரிமை என்பதாக சுருங்கிவிட்ட அரச இயக்க நடைமுறைகளுக்குள் வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கிறோம். சீமான் தன் வாசிப்பை இன்னும் விரிவுபடுத்திக்கொள்ள வேண்டிய சூழலில்தான் இருக்கிறாரே தவிர இன்னும் முழுமையான புரிதல்கள் அவருக்கு வந்திருக்கிறதா என்பது சந்தேகத்துக்குரியதே ஆனால் இந்த அளவாவது புரிதல்கள் இருக்கிறது என்பது இன்றைய அரசியல்வியாதிகளை ஒப்பிட்டு ஆறுதல் படுத்திக்கொள்ளலாம்.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1716995063213468152011-01-14T09:17:58.671-05:002011-01-14T09:17:58.671-05:00கல்வெட்டு,
//இந்த் கொள்கையில் எந்தக் கொள்கையை வென...கல்வெட்டு,<br /><br />//இந்த் கொள்கையில் எந்தக் கொள்கையை வென்றெடுக்க இப்போது கூட்டணி என்று மட்டும் அறிய ஆவல். உங்களுக்கு தொடர்பு இருந்தால் அவர்கள் இணையத் தளத்திலேயெ வெளியிடச் சொல்லலாம். நல்ல முன் மாதிரியாக் இருக்கும்.//<br /><br />உங்க கேள்விகளுக்கெல்லாம் நான் குருடனாக இருந்து யானையின் வாலைத் தடவி பதில் சொல்லுவதனைக் காட்டிலும் சம்பந்தப்பட்டவர்கள் வந்து சில கேள்விகளுக்கேனும் பதிலுரைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.<br /><br />இணைப்பு அனுப்ப வேண்டியவர்களுக்கு அனுப்பியாச்சு. மக்களின் குரலாக நினைத்து பயன் படுத்திக் கொள்ளும் காலத்தில் பயன்படுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும்.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-89263121185928646412011-01-13T16:16:31.343-05:002011-01-13T16:16:31.343-05:00மீன்துள்ளியான் said...
சீமான் இந்த தேர்தலுக்கு அப...மீன்துள்ளியான் said...<br /><br />சீமான் இந்த தேர்தலுக்கு அப்புறம் ஒரு தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும் . <b>இல்லை என்றால் அவரை நம்புவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்</b>//<br /><br />ஆமா, மீனு! இந்த தேர்தலுக்கு பிறகு அது ஓரளவிற்கு புரிய ஆரம்பிக்கும். <br /><br />ஆனா, ஜுவலை நின்னுகிட்டு இருந்தா அமுல்படுத்தி ஓரளவிற்கேனும் சலசலப்பை ஏற்படுத்தி ஒரு சில விசயங்களாவது நிறைவேத்துற வரைக்கும் நிற்கும்... <br /><br />இயற்பியல் அடிப்படையின் படி பார்த்தா... எரிந்து கொண்டே இருக்கும் சூரியன் ஒரு நாள் வீங்கி, வெடித்து, நீர்த்துப் போய் மீண்டும் டுவார்ஃப்பாக சுருங்கி விடுவதனை போன்றே ;-)Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-31602643198429401732011-01-13T16:11:30.805-05:002011-01-13T16:11:30.805-05:00அருண்மொழிவர்மன் said...
அதிகாரத்தில் இருப்பவர்கள்...அருண்மொழிவர்மன் said...<br /><br />அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் அட்டகாசம் அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் பெரும்பான்மை மக்களின் மெத்தனமும், இப்படித்தான் கோபம் கொண்ட இளைஞர்களை உருவாக்கும்//<br /><br />அந்த கோபம் ஒரு தீக்குச்சியாய் தழல் விட்டு எரிந்து கொண்டே இருக்க வேண்டும் இந்த நாளில் என்பதுதான் நமது எதிர்பார்ப்பு. பெரும்பான்மை மக்களின் மெத்தனம் வீட்டின் கூரையை எட்டி விட்டது, பல நிலைகளில் அவர்களின் புலன்கள் மரத்துப் போக செய்துவிட்டிருக்கிறது... அந்த தூக்க நிலையிலிருந்து தட்டியெழுப்புவர்/மேய்ப்பர் யார்?Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-31382767182173245512011-01-13T12:24:27.875-05:002011-01-13T12:24:27.875-05:00சீமான் குறித்து முன்வைக்கப்படும் தற்போதையக் குற்றச...சீமான் குறித்து முன்வைக்கப்படும் தற்போதையக் குற்றச்சாட்டு, அவரும் சாதீய நிலைப்பாடு கொண்ட ஒரு சராசரி அரசியல்வாதி என்பதாகும். தமிழ் தேசியத்திற்கும் அவருக்கும் தொடர்பில்லை என்னும்போது, தமிழக அரசியல் களத்தில் அவரை வைத்து ஏதேனும் நல்ல விஷயங்கள் நடக்க வாய்ப்புள்ளனவா என்று பார்க்கலாம்.<br /><br />தமிழக அரசியல் களத்தில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அவர் ஒரு தவிர்க்க முடியாத நபர் என்பது பல மட்டங்களிலும் நடைபெறும் உரையாடல்களிலிருந்து தெரிகின்றது. இதனைப் பயன்படுத்தி, இன்று நிலவும் மன்னராட்சி முறைக்கு சாவு மணி அடிக்க முயலவேண்டும். 1967, 1996 தேர்தல்களில் நிலவியது போல் ஆட்சியாளர்களுக்கு எதிரான மன நிலை முழுமையாக இல்லாவிட்டாலும், ஓரளவிற்கு இருக்கின்றது. ஆனால், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால், பிறகு தமிழ்நாட்டின் நிலை எவராலும் காப்பாற்ற முடியாத நிலைக்குச் சென்றுவிடும். <br /><br />எனவே, ஆட்சிக்கு எதிரான மன நிலையை பரவலாக்கவேண்டும். நெல்லுக்குப் பாயும் நீர் ஆங்கே சிறு புல்லுக்கும் பாய்வதைப் போல், கருணாநிதி குடும்பத்திற்கு செல்லும் பணத்தில் சிறு பகுதி மக்கள் நலத் திட்டங்களாக நிறைவேறுவதை, மக்கள் நலத்திட்டங்கள் மூலம் மக்கள் பயன் பெறுவதாக பொய்கள் கட்டமைக்கப்படுகின்றன. ஆனால், மக்கள் நலத் திட்டங்கள் மூலம் மக்களை விட கருணாநிதி குடும்பத்தாரே பயன் பெறுகின்றனர் என்பதை அம்பலப்படுத்த வேண்டும். இவற்றை செய்வதற்கு முறையாக திட்டமிட்டு மக்களிடம் தகவலைக் கொண்டு சேர்ப்பதை முன்னெடுத்தால், கருணாநிதியை ஆட்சியை விட்டு இறக்கும் தற்போதைய நோக்கம் நிறைவேற வாய்ப்புள்ளது. <br /><br />கருணாநிதியின் ஆட்சியை வீழ்த்தும் முதல் நோக்கத்தை வெற்றிகரமாகக் கடந்து, அடுத்து என்ன நிலை எடுக்கிறார் என்று பார்க்கலாம். <br /><br />.உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-17711995968712213092011-01-13T11:17:32.378-05:002011-01-13T11:17:32.378-05:00//...ராஜ நடராஜன் said...
சாலை பராமரிப்பு சரியில்ல...//...ராஜ நடராஜன் said...<br /><br />சாலை பராமரிப்பு சரியில்லை,சுகாதாரம் சரியில்லையென்று மொத்தக் குரல் கொடுத்தால் கூட அதில் சிலரை அள்ளிப் போட்டு சிறையில் வைக்கும் நிலையும்,எப்படி போராடுவது என்று கற்றுக்கொடுக்காத முறையும்,எதுவும் அறியாத,கவலைப்படாத சுயநல வாழ்க்கைச் சூழல் என சமூக சூழலில் இங்கேயாவது விவாதிக்க அல்லது உங்கள் மொழியில் புலம்ப இயலுகிறதே என்று மகிழ்ச்சியடைகிறேன்.<br /><br />Any மாற்றுக்கருத்துக்கள்?//<br /><br />கற்றுக் கொடுக்கப்படவேண்டும்.<br /><br />மந்தைகள் எப்போதும் மந்தைகளாக உணருவது இல்லை . வெளியில் இருந்தே மேய்ப்பர்கள் வரவேண்டியுள்ளது.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-41631907987615721652011-01-13T11:14:48.009-05:002011-01-13T11:14:48.009-05:00//.....கல்வெட்டு!தாமதமாக உங்கள் வரிகளை கண்டேன்.உலக...//.....கல்வெட்டு!தாமதமாக உங்கள் வரிகளை கண்டேன்.உலகின் எந்த மூலையிலிருந்து பின்னூட்டமிடுகிறீர்கள் என்று தெரியவில்லை.//<br /><br />...<br /><br /><br />:-)))))<br /><br /><br />....பொறுப்புகளைத் தூக்கி எறிந்து விட்டு தெருவில் இறங்கிப் போராடத் தயாராக இல்லாத வரையில் சமூக அவலங்களைக் குறித்துப் புலம்பிக் கொண்டிருக்கக் கூடாது......<br /><br /><br />இது நான் சொன்னதல்ல.. மா.சிவக்குமார் என்ற பதிவர். நீங்கள் அவரை வாசித்திருக்கலாம்.<br /><br />@ Thursday, May 21, 2009<br />by Ma. Siva<br /><br />http://masivakumar.blogspot.com/2009/05/blog-post_21.html<br /><br />இங்கே நான் மேற்கோள் மட்டும் காட்டினேன். அவரின் சுட்டியும் ஏற்கனவே கொடுத்துள்ளேன்.<br /><br />.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-60140380792061560362011-01-13T10:54:03.365-05:002011-01-13T10:54:03.365-05:00Santhose said...
I have a different opinion. Seem...Santhose said...<br /><br />I have a different opinion. Seeman should act independently like Periyar. He should not give up his policies at any cost.//<br /><br />அது இன்றைய கால கட்டத்திற்கு சாத்தியமானதென்றா நினைக்கிறீர்கள்? நாம் அதனின்று வெகு தொலைவு நகர்ந்து வந்து விட்டோமென்று நான் கருதுகிறேன். காலத்திற்கேற்ப வியூகங்களை வகுத்து அதன் பாதையில் நடப்பது ஒன்றே இப்போதைக்கு சாத்தியமென்றும் நினைக்கிறேன். ஆனால், அந்தப் பாதையில் காணாமல் போகாமல் தன்னை தக்க வைத்துக் கொள்வது கத்தி மேல் நடப்பதனைப் போன்றது. பார்க்கலாம்.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-35776785006304729502011-01-13T09:53:00.846-05:002011-01-13T09:53:00.846-05:00வாங்க சேது,
//ஒன்றைப் பிடிக்க வில்லை என்றால் அதற்...வாங்க சேது,<br /><br />//ஒன்றைப் பிடிக்க வில்லை என்றால் அதற்கு மாற்றாக இன்னொரு கட்சி, அதுவும் தான் ஆரம்பித்து தான் வர வேண்டும் என்று எதிர் பார்த்தால் இன்னும் ஆயிரக் கணக்கான கட்சிகள் தான் உருவாகும். //<br /><br />ஏற்கெனவே சீறிய சிறுத்தைகளை பழக்கி சர்க்கஸ் கூண்டிற்குள் அடைக்கப்பட்டதை எண்ணி தானும் அது போல ஆகிவிடக் கூடாது, தனித்துவமா நின்று விளையாடுவது அவசியம் என்ற எண்ணத்தால் தனியாக சீறிபார்ப்பதெற்கேனும் தனக்கான கொள்கைகள், கோட்பாடுகளை வைத்துக் கொண்டு முயற்சித்து பார்க்கத்தான். சிறு கூடானாலும் தன் கூடுன்னு சொல்லுவதில்லையா அது மாதிரிதான். :)<br /><br />//தவறு நேரும் பொது அதை உட்கட்சிக்குள் விமர்சனம் செய்துகொண்டு நேர்மையாக வருவதற்கு ஒரு குழு இருக்கக் கூடிய அமைப்பா இருக்கணும்.//<br /><br />அதெல்லாம் நீர்த்து போயிருக்கும். இன்னிக்கு கூடுவாங்க. எதுக்கின்னா, என்ன இருந்தாலும் இப்படி போயி இந்த ஊழல்ல சிக்கி இருக்கக் கூடாதுங்கிறதுக்கும், பெட்டி பிரிச்சிக்கிறதுக்கும் போல :)<br /><br />//தனி மனிதனை முன்னுறுத்தி வரும் கட்சிகள் எல்லாம் அடையாளம் இல்லாமல் போகிவிடுவதைப் பார்க்கலாம். //<br /><br />சோ, அதுனாலே ஆரம்ப கால கட்டத்தில கூட்டு சேரணுங்கிறீங்க :) இல்லன்னா கால வெள்ளமும், பண பலமும் அடிச்சு இழுத்துட்டு போயி இருந்த இடம் தெரியாம பண்ணிடும்னு சொல்ல வாரீங்க :))Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-66725597183690279992011-01-13T09:17:52.497-05:002011-01-13T09:17:52.497-05:00இதனை விட தெருவில் இறங்கி போராடுவதற்கு கூட அரசு அடக...இதனை விட தெருவில் இறங்கி போராடுவதற்கு கூட அரசு அடக்கு முறை ஒன்று இருக்கிறது.ஈழம் கூட வேண்டாம்,சாலை பராமரிப்பு சரியில்லை,சுகாதாரம் சரியில்லையென்று மொத்தக் குரல் கொடுத்தால் கூட அதில் சிலரை அள்ளிப் போட்டு சிறையில் வைக்கும் நிலையும்,எப்படி போராடுவது என்று கற்றுக்கொடுக்காத முறையும்,எதுவும் அறியாத,கவலைப்படாத சுயநல வாழ்க்கைச் சூழல் என சமூக சூழலில் இங்கேயாவது விவாதிக்க அல்லது உங்கள் மொழியில் புலம்ப இயலுகிறதே என்று மகிழ்ச்சியடைகிறேன்.//<br /><br />ராஜ நட, உங்க மறுமொழி விளக்கத்தோட ஒத்துப் போகிறேன். எப்படி முறையாக கட்டுக் கோப்பாக தங்களது தார்மீக உரிமைகளை, கோபங்களை வெளிப்படுத்தும் நேரத்தில் வெளிப்படுத்துவதின் அவசியம் அறிந்து முன் வைப்பது மிக்க அவசியமாகிறது. அதுவே நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கும், தளத்தில் போராடுபவர்களுக்கு ஒரு உந்து சக்தியாக, தேவைப்படும் moral supportஆகவும் பயன்படலாம்.<br /><br />அது உண்மையான அக்கறையுடன் கூடியதாக இருத்தல் அவசியம். வரலாறு தோரும் அது போன்ற குரல்களும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-35048764722445684472011-01-13T08:42:35.562-05:002011-01-13T08:42:35.562-05:00முகுந்தம்மா,
//ஆனாலும் மறுபடியும் இந்த ரெண்டு கட்...முகுந்தம்மா,<br /><br />//ஆனாலும் மறுபடியும் இந்த ரெண்டு கட்சிகளை சுத்தி தான் தமிழ் அரசியல் வாழனுமா...வேற வழியே இல்லையா :(((//<br /><br />அப்படித்தான் தெரிகிறது. அது நம் வாழ்நாள் காலம் பூராவும் தொடர்ந்தாலும் ஆச்சர்யபடுவதற்கு ஒன்றமல்ல. மாற்றத்தை காண்பதற்கேனும் இது போன்ற புது முகங்களை சட்டசபைக்குள் அனுப்பி, படத்தை மாத்திப் பார்ப்போம்னு ஒரு நப்பாசைதான். :)<br /><br />இன்றைய நிலையில் அரசியல் கட்சிகள் என்பது பல கோடிகள் புழங்கும் பெரிய ஸ்தாபனங்கள் என்பதால் பாதுகாப்பாக ஜெயித்து பேர் படுவது என்பது வெகு தொலை போல. மக்கள் முழித்து கொள்ளவும் வாய்ப்பே இல்லை என்பதாகவும் தெரிகிறது. வருத்தமான நிஜம்!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-36134213870808058712011-01-13T08:36:05.212-05:002011-01-13T08:36:05.212-05:00//நம்மால் செய்ய முடியாத ஒன்றை ஆதரித்து எழுதவோ பேசவ...//நம்மால் செய்ய முடியாத ஒன்றை ஆதரித்து எழுதவோ பேசவோ கூடாது. வாழ்க்கையைத் துறந்து துப்பாக்கி தூக்கி வவுனியா காடுகளுக்குப் போகத் தயாராக இல்லாத வரை விடுதலைப் புலிகளை ஆதரித்து சத்தம் போட்டுக் கொண்டிருக்கக் கூடாது.<br /><br />பொறுப்புகளைத் தூக்கி எறிந்து விட்டு தெருவில் இறங்கிப் போராடத் தயாராக இல்லாத வரையில் சமூக அவலங்களைக் குறித்துப் புலம்பிக் கொண்டிருக்கக் கூடாது.//<br /><br />கல்வெட்டு!தாமதமாக உங்கள் வரிகளை கண்டேன்.உலகின் எந்த மூலையிலிருந்து பின்னூட்டமிடுகிறீர்கள் என்று தெரியவில்லை.உலக அரசியல் பின்னுக்கு தள்ளப்பட்டாலும் கூட பூகோளம் என்ற வரையறை இருக்கிறது.அடைப்பானின் முதல் பாராவுக்கு விளக்கம் இது.<br /><br />இதனை விட தெருவில் இறங்கி போராடுவதற்கு கூட அரசு அடக்கு முறை ஒன்று இருக்கிறது.ஈழம் கூட வேண்டாம்,சாலை பராமரிப்பு சரியில்லை,சுகாதாரம் சரியில்லையென்று மொத்தக் குரல் கொடுத்தால் கூட அதில் சிலரை அள்ளிப் போட்டு சிறையில் வைக்கும் நிலையும்,எப்படி போராடுவது என்று கற்றுக்கொடுக்காத முறையும்,எதுவும் அறியாத,கவலைப்படாத சுயநல வாழ்க்கைச் சூழல் என சமூக சூழலில் இங்கேயாவது விவாதிக்க அல்லது உங்கள் மொழியில் புலம்ப இயலுகிறதே என்று மகிழ்ச்சியடைகிறேன்.<br /><br />Any மாற்றுக்கருத்துக்கள்?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com